பேராண்மை என்பது தறுகண்- வள்ளுவர் குறள்! (Post No.5269)

Compiled by London swaminathan

Date: 29 JULY 2018

 

Time uploaded in London – 17-13  (British Summer Time)

 

Post No. 5269

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

ஆகஸ்ட் மாத 2018 நற் சிந்தனை காலண்டர்

விளம்பி ஆண்டு ஆடி- ஆவணி, 2018

இந்த மாத நற் சிந்தனை காலண்டரில் வீர, தீர, சூரர் பற்றிய 31 பொன் மொழிகள் இடம் பெறுகின்றன

 

 

பண்டிகை நாட்கள்ஆகஸ்ட் 3- ஆடிப் பெருக்கு, 5- ஆடிக் கிருத்திகை, 11- ஆடி அமாவாசை, 13- ஆடிப்பூரம், 14- நாக சதுர்த்தி, நாக பஞ்சமி, சுதந்திர தினம், 21- ஆவணி மூலம், 24- வரலஷ்மி விரதம், 25- ஓணம், ரிக் உபாகர்மா, 26- ரக்ஷா பந்தன், யஜூர் உபாகர்மா, 27- காயத்ரீ ஜபம்

 

சுப முகூர்த்த நாட்கள்– 23, 29, 30.

அமாவாஸை-11; பௌர்ணமி-26; ஏகாதஸி விரதம்– 7, 22

 

 

ஆகஸ்ட் 1  புதன் கிழமை

வீரர்களும் சூரர்களும் பாதியில் எதையும் கைவிட மாட்டார்கள்- கதா சரித் சாகரம்

ஆகஸ்ட் 2  வியாழக் கிழமை

சிங்கம் மேக கர்ஜனையைக் கேட்டு எதிரொலிக்கும்; நரிகள் ஊளையிடுவதைக் கேட்டு ஒலிக்காது- சிசுபாலவதம்.

சிங்கம் பசித்தால் தேரையைக் கொல்லுமா?–தமிழ்ப் பழமொழி

 

ஆகஸ்ட் 3  வெள்ளிக் கிழமை

தைரியசாலிகளுக்கோ, முயற்சியுடையவர்க்கோ அடைய முடியாதது ஏதுமில்லை- கதா சரித் சாகரம்

 

ஆகஸ்ட் 4  சனிக்கிழமை

சில்லறைகளைப் புறக்கணிப்பது பெரியோரின் பெருமையை அதிகரிக்கும் – கதா சரித் சாகரம்

 

ஆகஸ்ட் 5  ஞாயிற்றுக் கிழமை

நெருக்கடியிலும் நிம்மதியாக இருப்போர்க்கு செல்வம் தானாக வரும்- கதா சரித் சாகரம்

 

ஆகஸ்ட் 6  திங்கட்கிழமை

அபாயகாலத்திலும் பிரகாசிக்கும் புத்தியுடையோரே தீரர்கள்– கதா சரித் சாகரம்

 

ஆகஸ்ட் 7  செவ்வாய்க் கிழமை

எந்த வீரனாவது பாதியில் ஒரு பணியைக் கைவிடுவானா?- கதா சரித் சாகரம்

 

ஆகஸ்ட் 8  புதன் கிழமை

வீரர்களுக்கு சுலபமில்லாதது ஏதேனும் உண்டோ? – கிராதார்ஜுனீயம்

 

ஆகஸ்ட் 9  வியாழக் கிழமை

தீரர்களே அபாயத்தைக் கடப்பர்; பலவீனம் உள்ளோர் கடப்பதில்லை-

தீராஸ்தரந்தி விபதம் ந து தீன சித்தாஹா

ஆகஸ்ட் 10  வெள்ளிக் கிழமை

வளமை என்பது வீரத்தைப் பொறுத்தது; துக்கம் உடையோரிடம் இருந்து அது பறந்தோடிப் போகும்- பாரத மஞ்சரி

துக்கிப்யோ ஹி பலாத்யந்தே தைர்யாயத்தா விபூதயஹ

 

ஆகஸ்ட் 11  சனிக்கிழமை

நிலையான புத்தியுடையோருக்கு எதையும் துறப்பது கடினமில்லை- பாகவத புராணம்

துஸ்த்யஜம் கிம் தீராத்மனாம்

 

ஆகஸ்ட் 12  ஞாயிற்றுக் கிழமை

என்னைமுன் நில்லன் மின் தெவ்வீர்- பகைவர்களே! என் தலவன் முன் போர் என்று வந்து நிற்காதீர்கள்- குறள் 771

 

ஆகஸ்ட் 13  திங்கட்கிழமை

தீரர்களே ஆபத்துகளைக் கடப்பார்கள்- காதம்பரி

தீரா ஹி தரந்த்யாபதம்

 

ஆகஸ்ட் 14  செவ்வாய்க் கிழமை

தைரிட்யசாலிகளும் கற்றோரும் கூட தவறு செய்வர் (ஆனைக்கும் கூட அடி சறுக்கும்)

தீரோபி வித்வானபி விமுஹ்யதி- ப்ருஹத் கதா மஞ்சரி

 

ஆகஸ்ட் 15  புதன் கிழமை

அபாயம் என்னும் கடலைக் கடக்க உதவும் பாலம் திட உறுதி- ப்ருஹத் கதா மஞ்சரி

தைர்யம் விபஸ்த்ஸ்பாரஜஜலதேஹே சேதுஹு

 

ஆகஸ்ட் 16  வியாழக் கிழமை

வீரத்தால் விளையாதது என்ன?

தைர்யேன சாத்யதே ஸர்வம் –கதா சரித் சாகரம்

 

ஆகஸ்ட் 17  வெள்ளிக் கிழமை

சாதனைகளுக்கு உதவுவது தீரம்

தைர்யம் ஸர்வத்ர ஸாதனம்

 

ஆகஸ்ட் 18  சனிக்கிழமை

உயார்ந்தோரின் செல்வம் தைர்யம்-

தைர்யதனா ஹி சாதவஹ—காதம்பரி

 

ஆகஸ்ட் 19  ஞாயிற்றுக் கிழமை

துணிவின்றி பயத்திலிருந்து விடுதலை பெற முடியாது — யோக வாசிஷ்டம்

ந ஸ்வதையாத்ருதே கஸ்சிதப்யுதரதி ஸங்கடாத்

 

ஆகஸ்ட் 20  திங்கட்கிழமை

பேராண்மை என்பது தறுகண்- அஞ்சா நெஞ்சத்தை ஆண்மை என்று சொல்வர்- குறள் 773

 

ஆகஸ்ட் 21  செவ்வாய்க் கிழமை

கொந்தளிப்பிலும் அமைதியாக இருப்போரே வீரதீரர்கள்- குமார சம்பவம்

விகாரஹேதௌ ஸதி விக்ரியந்தே யேஷாம் ந சேதாம்ஸி த ஏவ தீராஹா

 

ஆகஸ்ட் 22  புதன் கிழமை

வீரர்கள் முன் வைத்த கால்களைப் பின்வைப்பதில்லை- நீதி சதகம்  ‘ந நிஸ்சிதார்த்தாத்விரமந்தி தீராஹா’

 

ஆகஸ்ட் 23  வியாழக் கிழமை

பெரியோர்கள், நேர்மையான பாதையிலிருந்து ஒரு  அடி கூட விலகமாட்டார்கள் – நீதி சதகம்

ந்யாயாத்பதஹ ப்ரவிசலந்தி பதம் ந தீராஹா

 

ஆகஸ்ட் 24  வெள்ளிக் கிழமை

உறுதியானவர்களுடைய மனதை முதிய வயதும் கலக்காது- ப்ருஹத் கதா மஞ்சரி

வ்ருத்த பாதோ ந சோகேன தீரானாம் ஸ்ப்ருஸதே மனஹ

 

ஆகஸ்ட் 25  சனிக்கிழமை

அச்சமுடையார்க்கு அரண் இல்லை- குறள் 534

பயமுள்ளவனுக்கு பாதுகாப்பு அரணால் பயனில்லை

 

ஆகஸ்ட் 26  ஞாயிற்றுக் கிழமை

வீர சூரனானாலும் முன்படை வேண்டும்- தமிழ்ப் பழமொழி

ஆகஸ்ட் 27  திங்கட்கிழமை

வீரம் பேசிக்கொண்டு எழுந்த சேவகன் வெட்டும் களம் கண்டு முதுகிடலாமா?–தமிழ்ப் பழமொழி

 

ஆகஸ்ட் 28 செவ்வாய்க் கிழமை

ஒலித்தக்கால் என்னாவாம் உவரி எலிப்பகை- கடல் போல எலிகள் என்னும் பகைவர் ஒலித்தால் என்ன பயம்? -763

 

ஆகஸ்ட் 29   புதன் கிழமை

தானை தலை மக்கள் இல்வழி இல்- படைத் தலைவர் இல்லாவிடில் படைக்குப் பெருமை இல்லை- குறள் 770

 

ஆகஸ்ட் 30 வியாழக் கிழமை

உறின் உயிர் அஞ்சா மறவர்- போர் வந்தால் அஞ்சாது போர் புரிபவர் மறவர்- குறள் 778

 

ஆகஸ்ட் 31  வெள்ளிக் கிழமை

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்  — தன் கையில் இருந்த வேலை யானை மீது எறிந்து கொன்று வருபவன்  — குறள் 774

 

–Subham–

 

 

 

Leave a comment

Leave a comment