தவம் பற்றிய முப்பது பொன் மொழிகள் (Post No.5606)
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 30 October 2018
GMT Time uploaded in London – 20-27
Post No. 5606
நவம்பர் 2018 நற்சிந்தனை காலண்டர்
இந்த மாத காலண்டரில் தவம் பற்றிய முப்பது பொன்மொழிகள் இடம் பெறுகின்றன.
பண்டிகை தினங்கள்–
தீபாவளி- நவம்பர் 6 (தமிழ்நாடு), 7 (வட இந்தியா); 8 கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்; 13-கந்த சஷ்டி சூரசம்ஹரம்; 14-குழந்தைகள் தினம்; 23- திருக் கார்த்திகை
அமாவாஸை- 7; பௌர்ணமி-22; ஏகாதஸி விரதம்-3, 19
முஹூர்த்த தினங்கள்-4,5,9,11,14,28
நவம்பர் 1 வியாழக்கிழமை
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு-261 தவம் என்பது தனக்கு வரும் துன்பத்தைப் பொறுத்தல், பிறருக்கு துன்பம் கொடுக்காமல் இருத்தல் ஆகும் நவம்பர் 2 வெள்ளிக் கிழமை |
|
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது-262 |
|
மன வலிமை உடையார்க்கே தவம்; பிறர் முயற்சிப்பது வீண்
நவம்பர் 3 சனிக் கிழமை துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம்-263 |
|
உணவு,உறைவிடம்,உடை ஆகியவற்றை சந்யாசிகளுக்குக் கொடுப்பதற்குத்தான் பல இல்லறத்தார்கள் சந்யாஸி ஆகவில்லை!
நவம்பர் 4 ஞாயிற்றுக் கிழமை |
|
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்- குறள் 264 பகைவரை அழித்தல், நண்பர்களைக் காத்தல்- இரண்டும் தவத்தால் எளிதில் முடியும் நவம்பர் 5 திங்கட் கிழமை வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப்படும் – குறள் 265 தவம் செய்தால் விரும்பியன கிடைக்கும்; உடனே தவம் செய்க. நவம்பர் 6 செவ்வாய்க் கிழமை தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு—266 பற்று இல்லாதவர் செய்வது தவம்; ஏனையோர் செய்வது வீண் முயற்சி நவம்பர் 7 புதன் கிழமை சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு—267 புடம் இடும் தங்கம் மேலும் மேலும் ஒளிவீசும்; தவம் செய்யச் செய்ய தேஜஸ் பிறக்கும் |
|
நவம்பர் 8 வியாழக்கிழமை | |
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்-268 |
268 |
நான் என்ற செருக்கு அழிந்தால் எல்லோரும் அவனைத் தொழுவர்
நவம்பர் 9 வெள்ளிக் கிழமை கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு—269 தவ வலிமையால் எமனையும் /மரணத்தையும் வெல்ல முடியும் நவம்பர் 10 சனிக் கிழமை |
269 |
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்—270 |
பணமில்லாதவர் உலகில் அதிகம்; பணம் படைத்தவர் குறைவு; ஏன்? தவம் செய்யாதவர் அதிகம்.தவம் செய்தவர் குறைவு.அதனாலதான்!
நவம்பர் 11 ஞாயிற்றுக் கிழமை
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்-271 |
|||
பொய்யான ஒழுக்கம் உடையவனைக் கண்டு (போலி சாமியார்)
அவனுள் இருக்கும் பஞ்ச பூதங்களும் சிரிக்கும்
நவம்பர் 12 திங்கட் கிழமை தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று–274 மன வலிமை இல்லாதவன் தவம் செய்வது புதருக்குப் பின்னே |
|||
நின்று பறவைகளை வேட்டையாடுவதைப் போன்றதே
நவம்பர் 13 செவ்வாய்க் கிழமை தவ சீலர்களிடம் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம்- காளிதாஸனின் சாகுந்தல நாடகம் நவம்பர் 14 புதன் கிழமை முனிவர்களின் சாபத்தை யாராலும் மாற்ற முடியாது -பாஷா எழுதிய ப்ரதிமா நாடகம் நவம்பர் 15 வியாழக்கிழமை தவம் மூலம் சக்தி பெறலாம்- பாரத மஞ்சரி நவம்பர் 16 வெள்ளிக் கிழமை தவம் மூலம் கிடைக்கும் ஆனந்தமே நல்லது; ஏனையவை நிலையற்றவை- வால்மீகி ராமாயணம் 7-84-9 நவம்பர் 17 சனிக் கிழமை பாதுகாப்பு இல்லாததால் முனிவர்கள் தங்கள் தபோ சக்தியைப் பயன்படுத்தி சாபம் என்னும் ஆயுதங்களைப் பயன் படுத்துகிறார்கள்; அவர்களுடைய ஆன்மீக சக்தியை விரயம் செய்கிறார்கள் – ரகுவம்ஸம் 15-3 நவம்பர் 18 ஞாயிற்றுக் கிழமை முனிவர்களின் சொற்கள் வீணாவதில்லை- நைஷதீய சரித்ர நவம்பர் 19 திங்கட் கிழமை தவத்துக்கு இடையூறுகளும் தடைகளும் அதிகம்- வால்மீகி ராமாயணம் 3-10-14 நவம்பர் 20 செவ்வாய்க் கிழமை தபோவனங்களுக்குள் செல்கையில் எளிமையான ஆடைகளை அணிந்து செல்லுங்கள்– சாகுந்தலம் நவம்பர் 21 புதன் கிழமை வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம் தான்அறி குற்றப் படின்–272 தெரிந்தும் தவறு செய்பவனுக்கு தவக் கோலம் ஒருபயனும் தராது நவம்பர் 22 வியாழக்கிழமை வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று- 273 |
|||
போலி சாமியார்களின் வேஷம், ஒரு பசு, புலித்தோலைப் போர்த்திக்கொண்டு மேய்வதற்குச் சமம்
நவம்பர் 23 வெள்ளிக் கிழமை கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன வினைபடு பாலால் கொளல்- 279 அம்பு நேராக இருக்கும்; யாழ் கோணலாக இருக்கும்;ஆனால் அம்பு கொடிய செயல் செய்யும்; யாழ் இனிமை தரும்; தோற்றத்தைக் கண்டு மயங்காமல் (சாமியார்களை) செயலால் எடை போடு
|
நவம்பர் 26 திங்கட் கிழமை
சித்தம் போக்கு சிவன் போக்கு, ஆண்டி போக்கு அதே போக்கு- தமிழ்ப் பழமொழி
நவம்பர் 27 செவ்வாய்க் கிழமை
ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்- வெற்றிவேற்கை
நவம்பர் 28 புதன் கிழமை
தவசே அணிகலன், தாழ்மையே மேன்மை- தமிழ்ப் பழமொழி
நவம்பர் 29 வியாழக்கிழமை
தவத்துக்கொருவர், கல்விக்கிருவர்– தமிழ்ப் பழமொழி
நவம்பர் 30 வெள்ளிக் கிழமை
தவத்திலிருந்தால் தலைவனைக் காணலாம்–
தவசுக்குத் தனிமையும் தமிழுக்குத் துணையும்– தமிழ்ப் பழமொழி
–subaham-