30 ரிக் வேத மேற்கோள்கள்; ஏப்ரல் 2022 நற்சிந்தனை காலண்டர் (Post No.10,797)

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,797

Date uploaded in London – –    31 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேத நாலாவது மண்டல பொன் மொழிகள், மேற்கோள்கள்

பண்டிகை நாட்கள் – ஏப்ரல் 2 யுகாதி /தெலுங்கு வருடப் பிறப்பு ; 10- ஸ்ரீ ராம நவமி; 14- தமிழ் வருடப் பிறப்பு, மஹாவீர் ஜயந்தி ; 16- சித்ரா பெளர்ணமி ;15- புனித வெள்ளி; 18- ஈஸ்டர் திங்கள்

ஏகாதஸி விரத நாட்கள் – 12, 26

16- சித்திரா பெளர்ணமி; 30-அமாவாசை

முகூர்த்த நாட்கள் – ஏப்ரல்  6, 15,21, 25, 29

Xxxx

ஏப்ரல் 1 வெள்ளிக்கிழமை

சமுத்திரத்திலிருந்து இனிப்பான அலை எழுகிறது அது சூரிய ஒளியுடன் அமிர்தமாகிறது -ரிக் வேதம் 4-58-1

XXX

ஏப்ரல் 2 சனிக்கிழமை

நிலத்தின் அதி தேவதையை  நாங்கள் வணங்குகிறோம்.அவன் எங்களுக்கு பசுக்களையும் குதிரைகளையும் அளிப்பானாகுக  -4-57-1

XXX

ஏப்ரல் 3 ஞாயிற்றுக்கிழமை

நிலத்தின் தேவனே , பசுக்கள் பாலைப் பொழி வதைப் போல இனியவற்றை எங்களுக்கு தருவாயாக 4-57-2

XXX

ஏப்ரல் 4 திங்கட் கிழமை

நிலத்திலுள்ள தாவரங்கள் அனைத்தும் எங்களுக்கு இன்பமே நல்குக 4-57-3

XXX

காளைகள் நன்றாக உழுக ; மனிதர்கள் நன்றாக உழைக்கட்டும் ; கலப்பைகள் நன்றாக உழுக; கயிறுகள் நன்றாகக் கட்டட்டும் ; சாட்டைகள் நன்றாக செயல்படட்டும் 4-57-4

XXX

ஏப்ரல் 5 செவ்வாய்க்கிழமை

சுநா ! சீரா ! எங்கள் துதிகள் உங்களை மகிழ்வுறச் செய்யட்டும். நீங்கள் வானத்தில் உண்டாக்கியவை இங்கே பொழியட்டும் ( இவை இரண்டும் உழவர்களுக்கு உதவும் தேவதைகள் அல்லது சூரியன் , உழவுக் கருவிகள் என்பர் )

XXX

ஏப்ரல் 6 புதன் கிழமை

சீதா என்னும் உழவே ! எங்கள் அருகில் வருக; உன்னை நாங்கள் போற்றுகிறோம்.எங்கள் வளம் பெருக ஆசீர்வதி; நல்ல அறுவடை என்னும் கனிகளைக் கொண்டு வா 4-57-6

XXX

ஏப்ரல் 7  வியாழக்கிழமை

கலப்பைக் கொழு நம்முடைய நிலத்தை சுகமாக உழுக காளைகளும் உழவர்களும் சுகமே வாழ்க; மழையும் பொழியட்டும் ; சு நா ! சீரா !  செல்வ மழை பொழியுங்கள் 4-57-8

xxx

ஏப்ரல் 8 வெள்ளிக்கிழமை

மநுவின் சந்ததிகளுக்குச் செல்வம் நல்கும் சவிதா (சூரியன்) எங்களுக்கு மிகச் சிறந்த செல்வத்தை அளிக்கட்டும் -4-54-1

xxx

ஏப்ரல் 9 சனிக்கிழமை

சவிதாவே ! மனிதர்களான நாங்கள் அறிவின்மையாலோ, அகந்தையினாலோ, அலட்சியத்தினாலோ உனக்கோ, ஏனைய கடவுளருக்கோ, மனிதர்களுக்கோ குற்றம் செய்த்திருந்தால் அந்தப் பழியை அகற்றவும் 4-54-3

xxx

ஏப்ரல் 10 ஞாயிற்றுக்கிழமை

ஸவிதாவே , உனக்கு தினமும் மூன்று முறை பொழியப்படும் சோம ரசம் எங்களுக்கு செளபாக்கியத்தை அருளட்டும் 4-54-6

xxx

ஏப்ரல் 11 திங்கட் கிழமை

அதிதியையும் , சிந்துவையும், தேவியான சுவஸ்தியையும் நட்புக்காக மந்திரங்களால் போற்றுகிறேன்.இரவும் பகலும் நாங்கள் விரும்புவதைச்  செய்யட்டும் 4-55-3

xxx

ஏப்ரல் 12 செவ்வாய்க்கிழமை

செல்வங்களைத் தேடுவதற்காக கடல் கடந்து செல்வோர் துதிப்பது போல துதிக்கிறேன். வானமே, பூமியே,, அஹிர் புத்னியோடு உங்களை விரும்பத் தக்க செல்வங்களுக்காக துதிக்கிறேன் 4-55-6

xxx

ஏப்ரல் 13 புதன் கிழமை

உண்மையைப் பேசுபவளும், மிகுந்த செல்வம் படைத்தவளுமான உஷா தேவி , நாங்கள் விரும்பியதை எல்லாம் அருளட்டும் 4-55-9

xxx

ஏப்ரல் 14  வியாழக்கிழமை

இரவு என்னும் சகோதரி சென்ற பின்னர் வானத்தின் புதல்வியான உஷா , ஒளியைப் பரப்புகிறாள். அனைவர்க்கும் ஆனந்தம் அளிப்பவள் உஷை.4-52-1

xxxx

ஏப்ரல் 15 வெள்ளிக்கிழமை

அழகிய குதிரை போல இருப்பவளும், , பிரகாசிக்கும் கிரண ங்களின் தாயும் ஆன உஷை, அஸ்வினி தேவர்களின் தோழி ஆவாள்  4-52-2

xxx

ஏப்ரல் 16 சனிக்கிழமை

வெறுப்பை விலக்கும் உன்னை, உண்மையோடு உறையும் உன்னை, அறிவைத் தரும் உன்னை திருப்பள்ளி எழுச்சி பாடி துதிக்கிறோம் – 4-52-4

xxx

ஏப்ரல் 17 ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு திசையின் இருட்டிலிருந்து எழுகிறாள் அறிவைத் தரும் உஷா.வானத்தின் புதல்வியான அவள் மக்களுக்கு நலனைக் கொண்டு வருகிறாள்.4-51-1

xxx

ஏப்ரல் 18 திங்கட் கிழமை

செல்வம் மிகுந்தோரை வாரி வழங்கத் தூண்டுபவள் உஷா தேவி; கருமித் தனம் படைத்தவர்கள் தூக்கத்திலிருந்து எழாமல் இருக்கட்டும் 4-51-3

xxx

ஏப்ரல் 19 செவ்வாய்க்கிழமை

பிருஹஸ்பதி எந்த வீட்டுக்குச் செல்கிறானோ அவன் சொந்த மனை யிலே  செல்வத்தோடு செழிக்கிறான்.. அவனுக்குப் பூமியானது எல்லாப் பருவங்களிலும் பழம் தருகிறது.4-50-8

xxx

ஏப்ரல் 20 புதன் கிழமை

புகழ்பெற்றவர்களும் , அறிஞர்களும்  ஆன முன் கால ரிஷிக்கள் , பிரகஸ்பதியைத் தங்கள் முன்னே ஸ்தாபித்தார்கள் . அந்த பிரஹஸ்பதி, இனிய நாக்குள்ளவன்; மூவுலகங்களிலும் நாதத்தோடு இருப்பவன்; புவியின் எல்லைகளைத் தாங்குபவன்  4-50-1

xxx

ஏப்ரல் 21 வியாழக்கிழமை

வாயு தேவனே , மனோ வேகமுள்ள 99 குதிரைகள் உன்னை ஏந்தி வருக 4-48-1

xxx

ஏப்ரல் 22 வெள்ளிக்கிழமை

வாயுவே, உனக்கு இந்திரன் தேரோட்டியாகக் கிடைத்துள்ளான் ; நூறாயிரம்/ நியுதம் குதிரைகள் உடைய நீ, எங்களுடைய 100 விருப்பங்களைப் பூர்த்தி செய்ய வா 4-46-2

xxxx

ஏப்ரல் 23 சனிக்கிழமை

தேனுக்காக ஓடிவரும் தேனீக்களை போல எங்கள் வேள்விகளுக்கு விரைந்து வாருங்கள் அசுவினி தேவர்களே 4-45-4

xxx

ஏப்ரல் 24 ஞாயிற்றுக்கிழமை

மற்றவர்களின் பக்தியில் சிக்கி தாமதம் செய்துவிடாதீர்கள் ; நாம் பழைய நட்பினால் கட்டப்பட்டுள்ளோம் 4-44-5

xxxx

ஏப்ரல் 25 திங்கட் கிழமை

சிந்து (கடல் அல்லது நதி) உங்கள் குதிரைகள் மீது நீரைத் தெளிக்கின்றன. சூரிய ஒளியானது உங்கள் தங்க நிறமுள்ள குதிரைகளை செந்நிறப் பறவைகள்  போல பிரகாசிக்கச் செய்கின்றன இதனால் உங்களை அனைவரும் அறிவர் ; அஸ்வினி தேவர்களே இதனால், நீங்கள் சூர்யாவின் புதல்விக்கு அதிபதி ஆனீர்கள்  4-43-6

xxx

ஏப்ரல் 26 செவ்வாய்க்கிழமை

நான் இந்திரன், நான் வருணன் . என் மகிமையால் நான் இருவராய் இருக்கிறேன். நான் பறந்தவையும், ஆழமுள்ளதும் , அழகுள்ளதானதுமான வண்ணமாகவும் பூமியாகவும் உள்ளேன் 4-42-3

xxx

ஏப்ரல் 27 புதன் கிழமை

புகழ் அடைவதற்காக செல்வந்தர்களை நாடும் மக்களைப்போல , யாசகம் செய்யும் பெண்களை போல, என்னுடைய துதிகள் வருகின்றன 4-41-9

xxx

ஏப்ரல் 28  வியாழக்கிழமை

வாயு தேவனே, நியுதம்/ லட்சம்  என்னும் அளவுக்கு குதிரைகள் உடையவனே, பழி ச் சொல்லை நீக்குபவனே , இந்திரனைச் சாரதியாக உடையவனே , ஒளி வீசும் உன் தேரில் சோமரசம் பருக விரைந்து வா- 4-48-2

xxx

ஏப்ரல் 29 வெள்ளிக்கிழமை

இந்திரா- வருணா , பெற்றோர்களைப் போல தாராளமாக அருள் செய்வதால், உங்கள் நட்புறவை நாங்கள் நாடுகிறோம் 4-42-7

xxx

ஏப்ரல் 30 சனிக்கிழமை

இந்திரா, வருணர்களே, நீங்கள் பசுக்களை விரும்பும் காளை  போல எங்கள் துதியை விரும்புங்கள்; ஆயிரம் பால் தாரைகள் இருக்கும் பெரிய பசுவைப்போல எங்களுக்குச் செல்வத்தை பொழிக 4-41-5

—subham —

Tags– ரிக் வேதம்,  பொன் மொழிகள், மேற்கோள்கள், நாலாவது மண்டலம் , ஏப்ரல் 2022, காலண்டர்

சூரியன் முதலில் உதிக்கும் நாடு! (Post No.10,796)

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,796

Date uploaded in London – –     31 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

29-3-2022 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

சூரியன் முதலில் உதிக்கும் நாடு!

ச.நாகராஜன்

நிப்பன் – சூரியன் உதிக்கும் நாடு!

உலகில் சூரியன் முதலில் உதிக்கும் நாடு என்ற பெருமையைப் பெற்ற நாடு ஜப்பான். இது நிப்பன் என்று உச்சரிக்கப்படும். நிப்பன் என்றால் சூரியன் உதிக்கும் இடம் என்று பொருள்.

ஆகவே, ‘சூரியனின் அருளைச் சிறப்பாகப் பெற்ற மக்கள் நாங்கள் என்று ஜப்பானியர் பெருமைப் படுகின்றனர். ஜப்பானின் தேசீயக் கொடியிலும் சூரியன் இடம் பெற்றிருக்கிறது.

சூரியன் நீடித்த ஆயுளைத் தருபவன் என்று இந்திய அறநூல்கள் குறிப்பிடுகின்றன. அறிவியலும் கூட சூரியன் உலகில் வாழ்கின்ற எல்லா உயிர்களுக்கும் ஆதார சக்தி என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறது.

அது முதலில் உதிக்கும் நாடு என்பதாலோ என்னவோ உலகிலேயே அதிக ஆயுளைப் பெற்றிருப்பவர்கள் ஜப்பானியரே!

பார்க்க வேண்டிய இடங்கள்!

ஜப்பானைப் பற்றிய வியத்தகும் சுவையான செய்திகள் ஏராளம் உள்ளன. பார்க்க வேண்டிய இடங்களும் இங்கு ஏராளம், ஏராளம்!

ஆசியாவில் 6852 தீவுகளைக் கொண்டு விளங்கும் இந்த நாட்டைப் பார்ப்பதற்காக ஆண்டு தோறும் லட்சக் கணக்கில் பயணிகள் வந்து சுற்றிப் பார்த்து மகிழ்கின்றனர். ஜப்பானில் முக்கிய நிலப்பரப்பில் அமைந்துள்ள நான்கு தீவுகள் முதன்மை இடத்தைப் பெறுகின்றன : 1) ஹொக்கிடோ, 2) ஹோன்ஷூ, 3)  க்யூஷூ 4) ஷிகோகு

மவுண்ட் ஃப்யூஜி

ஜப்பான் என்ற உடனேயே அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பது மவுண்ட் ஃப்யூஜி தான். 3776 மீட்டர் (12388 அடி) உயரமுள்ள இந்த மலையை இதன் தலை நகரமான டோக்கியோவிலிருந்தே பார்க்கலாம். இந்த மலையில் ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சம் சுற்றுலாப் பயணிகள் ஏறி மகிழ்கின்றனர். அடிவாரத்திலிருந்தும் ஏறலாம் அல்லது பாதி தூரத்தில் உள்ள ஐந்தாம் நிலையிலிருந்தும் ஏறலாம். இங்கிருந்து சூரிய உதயத்தைப் பார்ப்பதில் ஒரு அலாதி ஆனந்தம் மக்களுக்கு ஏற்படுகிறது.

ட்ரெக்கிங் என்பது உலகளாவிய விதத்தில் அனைவரையும் கவர்வது குறிப்பிடத்தகுந்தது. அதற்கு உகந்த ஒரு இடமாக இந்த மலை அமைகிறது.

டோக்கியோ

டோக்கியோவை அறியாதவர்களே இருக்க முடியாது. பண்டைய பாரம்பரியம் கொண்ட ஜப்பானின் தலை நகரம் இது.

ஆகப்பெரும் உலகின் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் டி வி சீரியலான மணி ஹெய்ஸ்ட் -இன் (Money Heist) முக்கிய கதாபாத்திர பெண்மணி ஒருவருக்குப் பெயர் சூட்டப்பட்டிருப்பது வரை இதன் புகழ் சொல்லி மாளாது.

இங்குள்ள இம்பீரியல் பாலஸின் பல பகுதிகளைப் பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு. இங்கு அனைவரும் விரும்பும் பாலம் நிஜுபஷி பிரிட்ஜ் – தண்ணீரில் பிரதிபலிக்கும் ஒன்று என்பதால் இதை இரட்டைப் பாலம் என்கின்றனர்.

ஷாப்பிங் பிரியர்களுக்கு டோக்கியோ ஒரு சொர்க்கம். ஹை டெக் தயாரிப்புகள், எலக்ட்ரானிக் பொருள்கள், ஃபேஷன், மேக்-அப் பொருள்கள் என எதை வேண்டுமானாலும் வாங்க பத்துக்கும் மேற்பட்ட ஷாப்பிங் மையங்கள் உள்ளன. (அவரவர் நேரத்தையும் பணத்தையும் பொறுத்து) மக்கள் கூட்டம் இங்கு அலை மோதும்.

நிர்ணயிக்கப்பட்ட சுற்றுலா மூலம் டோக்கியோவை ஒரு சுற்று சுற்றி விடலாம். ஹெலிகாப்டரிலிருந்து கூடப் பார்க்கலாம்.

டோக்கியோ டிஸ்னிலேண்ட்

அமெரிக்கா சென்று அங்கு டிஸ்னிலேண்டைப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் கொண்டுள்ளவர்கள் டோக்கியோவில் உள்ள டிஸ்னிலேண்டைப் பார்த்துக் களிக்கலாம். 115ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தீம் பார்க் இது.

ஒஸாகா யுனிவர்ஸல் ஸ்டுடியோ

இதே போல அமெரிக்கா சென்று யுனிவர்ஸல் ஸ்டுடியோவைப் பார்க்க முடியாதவர்கள் ஒஸாகா நகரில் உள்ள யுனிவர்ஸல் ஸ்டுடியோவைக் கண்டு களிக்கலாம்.  இதன் பெருமைகள் சொல்லி  முடியாது!

டிஸ்னிலேண்டும் யுனிவர்ஸல் ஸ்டுடியோவும் மெதுவாகப் பார்த்து அனுபவிக்க வேண்டிய தீம் பார்க்குகள். அவசரமே படக் கூடாது.

ஹிரோஷிமா சமாதான நினைவுப் பூங்கா

இரண்டாம் உலகப் போரின் கொடுமைகளை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. அதன் உச்ச பட்ச கொடுமையாக ஹிரோஷிமா நாகசாகி ஆகிய இரு நகரங்களின் மீது 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அணுகுண்டு போடப்பட்டு லட்சக்கணக்கான  மக்கள் மடிந்ததும் வரலாறு தரும் உண்மை.

இன்னொரு அணுகுண்டு உலகின் எந்தப் பகுதியிலும் எந்தக் காலத்திலும் யாராலும் போடப்படக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. அந்த நல்ல கருத்தை வலியுறுத்தும் வண்ணம் ஹிரோஷிமா சமாதான நினைவுப் பூங்கா திகழ்கிறது.

அணுகுண்டின் பாதிப்பு பற்றிய ஏராளமான செய்திகளை இங்கு உள்ள அருங்காட்சியகத்தில் பார்க்க முடிகிறது.

பாரம்பரிய நகரம் க்யோடோ

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரம் க்யோடோ. ஆண்டுக்கு ஒரு கோடி பேர் இங்கு வந்து இதன் சிறப்பைக் கண்டு மகிழ்கின்றனர். பழங்காலக் கட்டிடங்கள், பழைய வீதிகள் ஒரு புறமிருக்க, சிற்பங்கள், ஓவியங்கள், புத்தமத செல்வாக்கினால் உருவாக்கப்பட்ட கலைக் கட்டிடங்கள் ஜீவனுடன் இன்றும் இலங்குவதைப் பார்ப்பதில் ஒரு தனி மகிழ்ச்சி ஏற்படும்.

இங்கு பார்ப்பதற்கு நிஜோ கோட்டை, மூங்கில் வனம், அரண்மனை உள்ளிட்ட பல இடங்கள் உள்ளன.

ஹிரோஷிமா நகரிலிருந்து பயணப்பட்டு அனைவரும் பார்க்க விரும்பும் இடம் மியாஜிமா தீவாகும். இங்கு இட்சுகுஷிமா ஆலயம் புனிதமான ஒன்று. இங்கு பாரம்பரியமான நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.

கோவில் நகரம் நரா

வரலாற்றுச் சிறப்புக் கொண்ட கோவில்கள் பல கொண்ட கோவில் நகரம் நரா. 

கோஃபுகு-ஜி ஆலயம் உள்ளிட்ட எழு பெரும் ஆலயங்களின் வரலாறு பிரமிக்க வைக்கும் ஒன்று; ஆயிரத்திமுன்னூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தவை இவை. 25 அடி உயரமுள்ள சிலைகள், பிரம்மாண்டமான தூண்கள் என வியக்க வைக்கும் பல அமைப்புகள் உள்ளத்தைக் கவர்ந்து இழுப்பவை.

இப்படி ஏராளமான இடங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

வாழ்க்கைத் தரமும் செலவும்!

ஆங்காங்கே தங்க நல்ல ஹோட்டல் வசதிகளையும் சிறப்பான சுற்றுலா முகமைகளையும் கொண்டுள்ளது ஜப்பான்.

வாழ்க்கைத் தரம் பற்றிச் சொல்லவே வேண்டாம். உலகில் மிக அதிக செலவு ஆகும் இடம் ஜப்பான் என்ற கருத்து உண்டு. ஆனால் அந்தக் கருத்திலிருந்து மாறுபடும் வகையில் இப்போது இது முதலிடத்திலிருந்து பத்தாவது இடத்திற்கு வந்து அனைவரையும் சற்று நிம்மதிப் பெருமூச்சு  விட வைத்திருக்கிறது இப்போது!

செலவினத்தை ஒப்பீடு செய்யும் நிபுணர்கள், இந்தியாவில் இருக்கும் செலவை விட 62 விழுக்காடு அதிகம் செலவு ஜப்பானில் ஆகும் என்று சுலபமாக கூறுகின்றனர்.

ஜப்பானிய நாணய முறை (பணம்) யென் எனப்படுகிறது. (yen)

ஒரு யென்னின் மதிப்பு இந்திய ரூபாயில் எவ்வளவு?

ஒரு யென் = 0.62 ரூபாய்

மக்கள் கடுமையான உழைப்பாளிகள். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்திற்கும் மேலாக உழைக்கும் இவர்கள் அன்பாகவும் பண்புடனும் பாரம்பரியத்துடனும் உபசரிப்பவர்கள்.

தரத்தின் தாயகம்

‘மேட் இன் ஜப்பான்’ என்று முத்திரையிடப்பட்ட பொருள்களை ஏளனமாகச் சிரித்து லாயக்கில்லாத குப்பை என்று சொன்ன காலம் ஒன்று உண்டு. அதை ஏற்க முடியாத ஜப்பானியர் உறுதியான கொள்கை ஒன்றை மேற்கொண்டு எந்தப் பொருளிலும் தரத்தை முன்னேற்ற ஆரம்பித்தனர்.

விளைவு, தரத்தை மேம்படுத்தும் ஏராளமான உத்திகளைக் கண்டு பிடித்தனர். டோடல் க்வாலிடி கண்ட்ரோல், (முழுத் தரக் கட்டுப்பாடு Total Quality Control) ஜஸ்ட்-இன்–டைம் (Just In Time), கான் பான் (Kanban) வழிமுறை, க்வாலிடி சர்க்கிள் எனப்படும் தர வட்டம் (Quality Circle), உள்ளிட்ட ஏராளமான ஜப்பானிய வழிமுறைகளை இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் பின்பற்ற ஆரம்பித்தன.

ஜப்பானில் தயாராகும் கார்கள் உலகத் தரம் வாய்ந்தவையாக விளங்க ஆரம்பித்தன; விளங்கி வருகின்றன.

உலகிலேயே ரொபாட் வடிவமைப்பிலும் உற்பத்தியிலும் முதலிடத்தைப் பிடித்து உலகை அசத்தும் நாடாக ஜப்பான் இன்று இலங்குகிறது.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களையே ஈர்த்து உலகம் சுற்றும் வாலிபனை இயக்கித் தயாரிக்க வைத்த ஈர்ப்பு நாடு ஜப்பான். 1970இலேயே எக்ஸ்போ உலகைக் கவர்ந்தது என்றால் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு ஜப்பானின் முன்னேற்றம் எப்படி இருக்கும் என்பதை எளிதில் ஊகித்து உணரலாம்.

ஜப்பானில் உங்களுக்கு எது வேண்டுமோ அதை வெண்டிங் மெஷினில் பெறலாம். இப்படி நாடெங்கும் 50 லட்சம் வெண்டிங் மெஷின்கள் உள்ளன. பத்திரிகை, உணவுப் பொருள்கள், கறிகாய் என எதை வேண்டுமானாலும் இவற்றிலிருந்து பெற முடியும்.

மலர்களை அலங்காரம் செய்வது ஜப்பானியரின் பாரம்பரிய பழக்கம்.

இங்கு இளைஞர்கள் குறைவு. வயதானவர்கள் அதிகம். நூறு வயதைத் தாண்டியவர்கள் சுமார் ஒரு லட்சம் பேர் உள்ளனர்.

டோக்கியோவில் மட்டும் மூன்றே முக்கால் கோடிப் பேர் உள்ளனர். ஜப்பானின் மொத்த ஜனத்தொகை 12.58 கோடி. பரப்பளவு : 3,77,975 சதுர கிலோ மீட்டர்!

கிரிமினல் குற்றங்கள் குறைவாக உள்ள உலக நாடு ஜப்பான் தான்!

சுத்தம் என்பது கல்விப் பாடத் திட்டத்தின் ஒரு அங்கமாகும். ஒரு கழிவறைக்குச் சென்று வெளியே வருபவர் கூட அதை புதிதாக இருப்பது போல சுத்தமாக்கி விட்டுத் தான் வர வேண்டும் என்பது அங்கு எழுதப் படாத விதி.

பொழுதுபோக்கில் தனி இடத்தைப் பிடிப்பவை ஜப்பானிய அனிமேஷன் படங்கள். இதற்கனவெ 150 பள்ளிகள் உள்ளன.

தாமதம் இல்லாத ரயில்கள்!

ஜப்பானின் புல்லட் ட்ரெயினைப் பார்ப்பதற்காகவே அங்கு ஒரு முறை போகலாம். மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் (பறக்கும்) இவை குறித்த நேரத்தில் விநாடி சுத்தமாக இயங்குபவை. தாமதம் என்றால் எப்போதாவது ஏற்படும்; அதுவும் அதிக பட்ச தாமதம் 18 விநாடிகள் தான்!

புதிய கவிதை!

உலகிற்கே கவிதையில் ஒரு புது வடிவம் கொடுத்தது ஜப்பானே!

ஹை கூ என்ற அந்தக் கவிதை மூன்று அடிகளைக் கொண்டது.

முதல் அடியில் 5 அசை, அடுத்த அடியில் 7 அசை, கடைசி அடியில் 5 அசை என வார்த்தைகளைக் கொண்டிருக்கும். பொருளோ கடல் அளவு இருக்கும்.

எடுத்துக்காட்டிற்கு உலகப் புகழ் பெற்ற இரு ஹை கூ இதோ:-

அமைதியான ஒரு பழைய குளம்

அதில் ஒரு தவளை பாய்ந்து குதித்தது

ப்ளிச்! மீண்டும் அமைதி!

இன்னொன்று :-

பனித்துளி உலகம்!

ஒவ்வொரு பனித்துளியிலும்

ஒரு உலகப் போராட்டம்!

ஹை கூவின் பொருளை ஆழ்ந்து ஓர்ந்து உணர்ந்து அனுபவிக்க வேண்டும்.

இவற்றிற்கான விளக்கவுரைகள் ஏராளம் இருக்கும்!

ஒரு வரியில் ஜப்பான்!

இப்படிப்பட்ட அருமையான நாட்டை ஒரு வரியில் சொல்லி விட முடியுமா? முடியுமே!

உலகின் எந்த நாட்டிலிருந்தாலும் சூப்பராக வாழும் தனது நண்பருக்கு ஒருவர் செய்யும் தொலைபேசி இது தான்:-

“என்ன நண்பரே! பிரமாதமாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன், ஜப்பான் எப்படி இருக்கிறது?!”

****

கட்டுரையாளர் 5000 கட்டுரைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். இவரது 18 நூல்கள் அச்சுப்பதிப்பாகவும் 95 நூல்கள் மின்னணு நூல்களாகவும் வெளி வந்துள்ளன. பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்பவர்.

.tags– ஜப்பான், புல்லட் ட்ரெயின், ஹை கூ

TAMIL ENCYCLOPAEDIA OF WEAVING AND WEAVERS-Part 2 (Post No.10,795)

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,795

Date uploaded in London – –    30 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

The oldest Indian sculpture with a shawl is available from Harappan culture dated between 2500 BCE- and 1700 BCE. The Yogi or Priest king is wearing a shawl with flower designs. This floral design is mentioned in many of the Sangam Tamil verses. Later we see plain shawl on Buddha from 3rd century BCE where the shawl is without floral designs. But Buddha was an ascetic, and the sages and saints wear only plain saffron cloth. Later Buddhists changed it to yellow, probably to differentiate from Hindu ascetics. One sect of Jains wore plain white clothes (Svetambharas). There is a gap of at least 1500 years between Harappan and Buddhist period sculptures.

Talking about floral designs on cloths, following Tamil verses give interesting details:

Pura Nanuru verse 274 by poet Ulochanar sings about the dress of a soldier; that man was wearing a shirt with floral design and a blue colour belt. He also had a peacock feather on his head (like Lord Krishna).

But all the words used are Sanskrit words : Neela, Kacha, Aadai (attire in European languages); poet’s name is also in Sanskrit Su+ Lochana)

(Neelak kachai poovaar aatai- Puram 274)

Puram .verse 393.

Garments were so thin and transparent like the skin of a snake (snakes shed their skin periodically)

Ref. Pornararrupatai – lines 82-83, Puram verse 383

The cloth was as light and thin like smoke or steam says one poet in Perumpanaatruppatai (lines 469/70)

Xxx

Women in assemblies wore bra and a transparent shawl. Most of the verses in Tamil show bare breasts; Malayalees in Kerala wore dress only covering waist till recent days. They did not cover their breasts; We see such pictures in Andaman Islands as well. All the 2300 year old statues in Buddhist sculptures and 1500 year old South Indian temple statues and idols are also bare breasted figures. But Tamil women had flower designs with sandal and other paints drawn on their breasts. They also had ornaments covering their chest.

Ref.Mullaik Kali 11- lines 16/17

Silappadikaram –  13-172

Xxx

But women wore new clothes (saree?) covering up to their face on the wedding day. What happened to a bride during Honey Moon day (first night) is explained in Akananuru Verses 136 and 86. Her body shone like a glittering sword just out of its sheath when the bridegroom removed her new clothes (Koti Kalingam in 86 and Murungaak Kalingam in 136). She was too shy to expose her body. So, she tried to hide it with her long hair and flowers (garlands?)

Koti, Murungaa= new, Kalingam = dress

Xxx

Kachuka (Sanskrit word )

Kanchuka is like a shirt covering chest of men. Those who worked for government wore uniforms. One can identify a person’s vocation from it. Ministers, foreign/Mlecha body guards, soldiers wore Kanchuka/shirts. But we may assume they were different in designs. Even sages who attended Yuthisthira’s Coronation wore Kanchukas and turbans; it was a ceremonial dress as well as uniform. It covered the body from chest to knee.

Xxx

Women , particularly widows, were doing spinning to spend their time; they must have earned some money by doing this. They were called Cotton Women (Paruthip Pendir).

Ref. Puram verses 125, 326; Narrinai verse 353

Rig Veda also links women with spinning.

Xxx

Wool, silk and rat hair

‘Unspun thread or yarn’ in Tamil meant wool, silk and other sources like rat hair .

Ref. Pathirrupathu 12

Noolaak kalingam – clothes made up of unspun yarn

Xxx

Kunjam/ knotty ends

“Kunjam is any of the several knots made by gathering threads of warp into a knot at the end of the saree after weaving is finished” ; (it is similar to tassel)

-Cre-A Tamil English Dictionary

This kunjam /knotting work is also referred to in Sangam Tamil literature.

Ref.Porunar atruppatai, line 155

Maduraikkanchi – line 514

Xxx

Colour of the clothes also mentioned in some places.

The colour of the cloth looked like Indrakopa insects. It is called cochineal, a small red colour insect or worm. Ancient people of South America made carmine dye from this insect. Probably Tamils also used this insect for dying.

Ref. Tirumurukaattruppatai line 15

Xxx

Tamil Nadu is famous for its silk and cotton sarees from Kanchipuram, Tirubhuvanam, Dharmavaram, Chinnalappatti. The town names have become synonymous with those sarees. The white Dhoti made in Nagerkoil, the Dhotis with Garudalvar border are also famous. Brahmins use the word ‘Soman’ for Dhoti/Veshti. Origin of words like Tunic= Thuni, Soman, Tukil , Kacha, Kanchuka , Mara uri, Varkalai need to be studied in detail.

Xxx

Lines given here are according to English translation of the text; not the number of original line.

RED DRESS

Their legs are round

Their waists are slim, and they have shoulders smooth

Their undyed garments  wrought with flower designs

And resembling insects purple hued

–Tiru Murugaattruppatai (about Tirupparankundram)

Xxxx

LEAF DRESS

Their locks are decked

With fillets made of petals. Round their waist

That shine with waist strings they a leaf-dress wear

—-Tiru Murugaattruppatai (about Kundruthoraadal)

(For leaf dress and reed dress, see my 2012 articles)

Xxx

WHITE SILK

In storeys high where artless dames

At night enjoyed their mates’ embrace

Discarding silks for raiment.

-PATTINAP PAALAI – lines 122/124

Xxx

SNAKE SKIN LIKE DRESS

And gave me clothes whose texture was so fine

Its threads could not be easily traced and worked

With floral forms resembling skins of snakes

Porunaraatrupadai 103-105

Xxx

Ere thou dost do this he will make thee wear

a spotless dress that shines like bamboo bark

–Sirupaanaatruppadai , lines 307/308

Xxx

These waters look like  shining garments white

Kurinjippaattu – line 67

Xxxx

He will give some pretty clothes

Whose fine web is not visible, for thee

To wear in place of rags

—Malaipadu kadaam

Xxxx

This is not an exhaustive list.

Source : for the above Paththup paattu songs, I used J V Chelliah’s translations 1946, Jaffna, Sri Lanka

QUOTATIONS FROM RIG VEDA- APRIL 2022 ‘GOOD THOUGHTS’ CALENDAR (Post No.10,794)

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,794

Date uploaded in London – –    30 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

30 Rig Vedic Quotes are in the April 22 Calendar

Following quotations are from Fourth Mandala of the Rig Veda

Festival Days- 2-Telugu New Year/ Ugadhi;also Gudi Padwa; 10-Sri Rama Navami; 14-  Tamil New Year Day and Mahavir Jayanthi; 16-Chitra Pournami; 15-Good Friday , 18-Easter Monday

Auspicious days – April 6, 15,21, 25, 29

16- Full moon day; New moon day 30

Ekadasi – fasting days – 12,26

APRIL 1 Friday

Forth from the ocean sprang the wave of sweetness; together with the stalk it turned into Amrta. 4-58-1

Xxx

APRIL 2 Saturday

Like rivers, our libations flow together, cleansing themselves in inmost heart and spirit .4-58-6

Xxx

APRIL 3 Sunday

The streams of holy oil pour swiftly downward like the wild beasts that fly before the bowman. 4-58-6

Xxx

APRIL 4 Monday

Like women at a gathering fair to look on and gently smiling, they incline to Agni. 4-58-8

Xxx

APRIL 5 Tuesday

As maidens deck themselves with gay adornment to join the bridal feast, I now behold them.4-58-9

Xxx

APRIL 6 Wednesday

The universe depends upon thy power and might within the sea, within the heart, within all life.

May we attain that sweetly flavoured wave of thine, brought at its gathering, over the surface of the floods 4-58-11

Xxx

APRIL 7 Thursday

As the cow yields milk, pour for us freely, Lord of the Field, the wave that bears sweetness.4-57-2

Xxx

APRIL 8 Friday

Sweet be the plants for us, the heavens, the waters and full of sweets for us be air’s mid region 4-57-3

Xxx

APRIL 9 Saturday

May the Field’s Lord for us be the full of sweetness, and may we follow after him uninsured 4-57-3

Xxx

APRIL 10 Sunday

Happily work our steers and men, may the plough furrow happily 4-57-4

Xxx

APRIL 11 Monday

Suna and Sira, welcome ye this laud and with the milk with which ye have made in heaven

Bedew ye both this earth of ours 4-57-5

Xxx

APRIL 12 Tuesday

Auspicious Sita, come thou near; we venerate and worship thee.

That thou mayst bless and prosper us and bring fruits abundantly

4-57-6

Xxx

APRIL 13 Wednesday

May mighty Heaven and Earth, most meet for honour, be present here with light and gleaming splendours 4-56-1

Xxx

APRIL 14 Thursday

The goddesses with gods, holy with holy, the Two stand pouring out their rain, exhaustless 4-56-2

Xxx

APRIL 15 Friday

Sure in the worlds he was a skilful craftsman, he who produced these Twain the Earth and Heaven.

Wise with his power he brought forth realms, together spacious and deep, well fashioned, unsupported 4-56-3

Xxx

APRIL 16 Saturday

O Heaven and Earth, with one accord promoting, with high protection as of Queens, our welfare

Far reaching ,universal, holy, guard us. May we car-borne, through song be victors ever 4-56-4

Xxx

APRIL 17 Sunday

To both of you, O Heaven and Earth , we bring our lofty song of praise.

Pure ones to glorify you both 4-56-5

Xxx

APRIL 18 Monday

The Housewife goddess Aditi, and Sindhu, the goddess Svasti, I implore for friendship

And may the three goddesses provide us protection night and day 4-55-3

Xxx

APRIL 19 Tuesday

May goddess Aditi with gods defend us, save us the saviour god with care unceasing 4-55-7

Xxx

APRIL 20 Wednesday

From trouble caused by man the Lord preserve us; from woe sent by his friend let Mitra save us.4-55-5

Xxx

APRIL 21 Thursday

If we, men as we are , have sinned against the gods through want of thought, in weakness, or in insolence, absolve us from the guilt and make us free from sin 4-55-3

Xxx

APRIL 22 Friday

What the fair fingered god Savitar brings forth on earth’s expanse or in the height of heaven, that work of his stands sure 4-55-4

Xxx

APRIL 23 Saturday

May Indra Heaven Earth, Sindhu with the waters, Aditi with Adityas, give us shelter. 4-54-6

Xxx

APRIL 24 Saturday

Him who distributes wealth to Manu’s progeny , that he may grant us here riches most excellent 4-54-1

Xxx

APRIL 25 Monday

Dispelling gloom this day the wealthy mornings urge liberal givers to present their treasures

In the un lightened depth of darkness round them let the niggard traffickers sleep un awakened 4-51-3

Xxx

APRIL 26 Tuesday

Him of the pleasant tongue have ancient sages, deep thinking, holy, singers set before them 4-50-1

Xxx

APRIL 27 Wednesday

They have come nigh to you as treasure lovers, like mares, fleet footed, eager for glory 4-41-9

Xxx

APRIL 28 Thursday

So I have glorified with praise strong Dhadhikravan, conquering steed.

Sweet he may make our mouths; may he prolong the days we have to live.4-39-6

Xxx

APRIL 29 Friday

Wealth from the Rbhus is most glorious in renown, that which the Heroes, famed for vigour, have produce. 4-36-5

Xxxx

APRIL 30 Saturday

Gay like a brides man, making him a garland, tossing the dust, champing the reins that holds himself 4-38-6

Xxx

BONUS QUOTATIONS

For you, as Princes, for your ancient kindness, good comrades of the man who seek s for booty

We chose to us for the dear bond of friendship, most liberal heroes bringing bliss like parents 4-41-7

Xxx

Indra and Varuna are most liberal givers of treasures to the men who toil serve them 4-41-3

XXX SUBHAM  XXXX

TAGS_ april 2022, calendar, Rig Veda, quotations

மெல்லின எழுத்துப் பாட்டு! (Post.10,793)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,793

Date uploaded in London – –     30 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ் என்னும் விந்தை!

மெல்லின எழுத்துப் பாட்டு!

ச.நாகராஜன்

சித்திர கவியில் இனவெழுத்துப் பாட்டு  வகையில், மெல்லின

எழுத்துப் பாடலை இப்போது பார்க்கலாம்.

மெல்லினம் என்பது ங, ஞ, ண, ந, ம, ன ஆகிய ஆறு எழுத்துக்களின் இனம் ஆகும்.

இந்த மெல்லினம் மட்டுமே வரும் பாடல் மெல்லின எழுத்துப் பாட்டு எனப்படும்.

எடுத்துக்காட்டாக ஒரு பாட்டு:

நன்மனமு நாணமு முன்னினு நான்முன்னே

னின்மனமு நின்னாணு மென்னென்னோ- நன்மனமு

நண்ணுமே நன்மாமை நண்ணுமா மெண்ணுமினோ

மண்ணின்மேன் மானன்ன மா

இது யாப்பருங்கலவிருத்தி தரும் பாடல்.

இதற்கான மாறனலங்காரம் தரும் சூத்திரம் இது:

“மெல்லினமுழுதுறன் மெல்லினப் பாட்டே”

மாறனலங்காரம் தரும் எடுத்துக்காட்டுப் பாடல் இது:-

மனமேநினைஞானமன்னாமைமீன

மனமேனமெங்ஙனெனினங்ஙன் – முனமானா

னேமிமான்மாமானினிநீண்மனமான

நேமிமானன்னாமநீ

பாடலின் பொருள் :

மனமே! மீனமும் அன்னமும் ஆமையும் ஏனமும் எப்படியே இருக்கும் என்னில் அப்படியே முன்னர் திருவவதாரமானவன்,

பூமி தேவியாகிய மான் போலும் விழியை உடையாளுக்கும் திருமகளாகிய பெண்ணுக்கும் அவர்கள் மனம் எப்படியோ அப்படி யான ஞான மன்னன், சக்கரத்தை உடையவன், அவனது நல்ல திரு நாமங்களை இடை விடாது நீ நினைப்பாயாக.

இந்த நினைவே ஆன்ம லாபத்தைத் தரும் என்று சொல்ல வரும் மெல்லினப் பாடல் இது.

இப்படிப்பட்ட மெல்லினப் பாடல்கள் தமிழில் ஏராளம் உள்ளன.

தொகுப்பார் தாம் இல்லை!

***

Tags-   மெல்லின , பாட்டு, 

TAMIL ENCYCLOPAEDIA OF WEAVING AND WEAVERS-1 (Post No.10,792)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,792

Date uploaded in London – –    29 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Sangam Tamil literature has 18 books and they are 2000 years old. Tamil epics followed the Sangam literature . Of the five Tamil epics, Silappadiakaram, is the most famous one which contains a Tamil story of chaste woman Kannaki and her unjustly executed husband Kovalan. Two commentaries by Arumpatha Uraiaasiriyar and Adiyarku Nallaar are available. Both  make the epic an encyclopaedia. Though the story contained happened in Sangam period (Second Century CE), the language of Silappadikaram belongs to 5th or sixth century CE. A lot of Sanskrit words, post Sangam Tamil words and supernatural stuff in the 5000 line long epic betrays its age. For the first time we come across words like ‘Narada’, ‘Veena’ etc.

And the two commentaries are about 500 years old. But they contain lot of information which are not available from any other source. 30 words for Cloth are listed at one go by one of them. Clothes made up of rat’s hair is also mentioned!

( I am not repeating what I said I my 2012 articles about Tamil women’s Bra and Reed dress)

xxx

Let us look at details about weavers, weaving and cloths from Sangam period and epic period.

Kovalan , hero of  Tamil epic, was going through different shops in the great city Madurai. The author of the epic Ilango described the shops and the goods sold by them in vivid details.  The cloth/textile shops were selling clothes made up of hair, silk and cotton.

“Kovalan went through the street of cloth merchants, where several kinds of bundles were piled up, each of a hundred  cloths woven of cotton thread, hair or silk thread”.

Atiyaarku nallaar says the ‘hair cloths’ were made up of  rats’ hair. Hair cloths are referred to in another epic Seevaka Chintamani , verse 2686

xxxx

Panju / Panji and Paruthi are the words for Cotton in Tamil, unrelated to Karpasa in Sanskrit. Ilavam Panju is got from the silk cotton tree. Tukil , Kalingam and Aruvai , Pataam were common words for cloth in the olden days, now Thuni and Thundu are more common.

Brahmin priests and orthodox Brahmins wear the Dhoti (Veshti in Sanskrit from Vastra and Vaasa) in a particular style called Panja kacham.

Following is from the Tamil – English Cre-A dictionary:
Panjakacham – a mode of wearing Veshti running one end of it through the crotch and tucking it up in the back.

Thaarppaaychu – wearing a veshti by tucking one end of it behind one’s back (Similar to Panjakacham)

(for this one needs longer dhoti)

Tamils wear pure white Veshti/Dhoti

Kooraip Pudavai- saree, usually in deep crimson colour, worn by the Brahmin brides during wedding rituals ; Kanchi Paramacharya (1894-1994) also mentioned it  and says it may be from the Koorai nadu.

But no one knows whether the Koorai saree gave its name to the area or viceversa.

Naarmadi or Naarpattu– Brahmins observe strict cleanliness with the dress and food.  Children wearing old dress may come and touch them or hug them during religious rituals. To avoid pollution/Theettu /ritual defilement, they ask children to wear Koti/brand new clothes or Pattu/silk or they wear Naarmadi. It is made up of plant fibres

Brand new clothes or cloths are beyond ritual defilement, they believe.

Xxx

Applying starch to clothes

A particular caste of people did the washing for the public. The dhobi or the washerman was called Vannaar and his wife was called Pulaithi or Vannaathi; they not only washed and cleaned the dirt on the cloths, but also applied starch and folded them and delivered them at houses.

The following references from Sangam literature confirm the above details: –

Kurunthokai verse 390,

Narrinai verse 90,

Maduraikanchi – line 721,

Nedunalvaadai- line 134,

Aka naanuuru verse – 387, 34

Pura naanuuru verse- 311

(Tamil quotes are in my Tamil article posted today)

To be continued……………………

 Tags- weaver, washerman, starch, cloths with rat hair, Tamil terms, weaving

எலி மயிரில் ஆடை -2; தமிழர் கண்டுபிடிப்பு -2 (Post No.10,791)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,791

Date uploaded in London – –    29 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

எலி மயிரில் ஆடை -2; தமிழர் கண்டுபிடிப்பு -2

தமிழர்கள் அணிந்த ஆடைகள் , சிந்து சமவெளி யோகி முத்திரையில் காணப்படும் பூ ஆர் ஆடை போல , பூக்கள் நிறைந்ததாக (மலர் டிசைன்) இருந்ததைக் கண்டோம். அவை பல வண்ணங்களில் இருந்த செய்தியையும் சங்க இலக்கியங்கள் நமக்கு தெரிவிக்கின்றன.

இந்திர கோபப் பூச்சி போல சிவப்பு நிற ஆடைகளை  காண்கிறோம்.

கோபத்தன்ன தோயாப்   பூந்துகில் –

முருகு -14

பெரும்பாணாற்றுப் படையில், சிலந்தியின் நூலுக்கு , துகில் நூல் ஒப்பிடப்படுகிறது. அவ்வளவு மெலிதாம்!!.

துணங்கை யம்பூதந்துகிலுடு த்தவை போற்

சிலம்பி வாநூல் வலந்த மருங்கில் ….

-பெரும்பாண் ; வரி-235/6

xxx

பல மலர்களின் நிறத்தையும் வடிவங்களையும் குறிப்பிடும் வரிகள் இதோ :-

போ துவிரி  பகன்றைப் புதுமலர்  அன்ன

அகன்றுமடி கலிங்கம் – புறம். 393

அதே பாட்டில் கோடைப் பஞ்சு மூட்டை போல வயிறு பெருக்கும்படி உணவு தருவாயாக எனறு வேண்டுவதும் குறிப்பிடத்தக்கது. அதே போல பாணர்கள் வறுமை பற்றிப் பாடும்போது கந்தைத் துணிகள் பற்றிய விஷயங்களும் அம்பலத்தில் ஏறுகின்றன.

XXX

பிராமணப் பெண்கள் தாலி காட்டுவதற்கு முன்னால் அணியும் அரக்கு போன்ற சிவப்புநிறப்  புடவை கூறைப் புடவை எனப்படும். இதிலும் நிறம் முக்கியமானது தெரிகிறது.

நார்மடி என்னும் நாரால் செய்யப்பட்ட ஆடையை பிராமணர்கள்  ‘மடி’- ஆக பயன்படுத்திக்கிறர்கள். நார்ப் பட்டு என்றும் இதை அழைப்பர் .

‘மடி’ என்பது, பிறர் அணிந்த தீட்டுத் துணிகளால் பாதிக்கப்படாத என்று பொருள்.இதை ‘கோடி’ என்றும், அதாவது புதுத்துணிகளுக்குத் தீட்டு இல்லை- என்ற பொருளிலும்  சொல்லுவர்.

தார்ப்பாய்ச்சு – வேட்டியின் முன் முனையைப் பட்டையாக மடித்து கால்களுக்கு இடையில் கொடுத்துப்  பின்பக்கம்  இழுத்துச் செருகுதல்

பஞ்சகச்சம் —  வேட்டியை மூன்று முனைகளாக ஆக்கி இரு முனைகளை இடுப்பின் முன்புறத்தில் செருகி மற்றோர் முனையை கால்களுக்கு இடையில் கொடுத்து இடுப்பின் பின்புறத்தில் செருகிக் காட்டும் முறை ; பிராமணர்கள் எல்லா பூஜை முதலிய சடங்குகளில் உடை அணியும் முறை.

(From Cre-A Dictionary)

xxx

உடுக்கை, ஆடை, அறுவை , துகில், கச்சு, கச்சை  போன்ற சொற்கள் சங்க இலக்கியத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் வருகின்றன.

நெசவாளர், தையற்காரர்  என்பதற்குள்ள சொற்கள்:- கைக் கோளர் , அத்த கோளர், காருகர், வேதகார் , வேமையர் , துருவியர் , தந்துவாயர் , சாலியர், பொருத்தர்

தையற்காரர்

தூசுதைப்போர், பொல்லர் , துன்னர், தாந்துவீகர் , தோல் தைப்போர் , செம்மார்

மதுரையில் நெசவு வேலை செய்யும் செளராஷ்டிர சமூகத்தினரை பட்டு நூல்காரர்  என்பார்கள்.

சாலியர் பற்றி ‘அபிதான சிந்தாமணி’ ஒரு தகவல் தருகிறது:-

சாலியர் – இவர்கள் வடநாட்டு நெசவுத் தொழிலாளர். இவர்கள் தங்களை சேனாபதிகள் என்பர். பட்டுச் சாலியர், பத்ம சாலியர் என்று இவர்களில்  இரு வகையினர் உண்டு. பட்டுச் சாலியர் பூணுல் தரிப்பர். மாமிசம் சாப்பிட மாட்டார்கள் . பத்மசாலியர் மது, மாமிசம் சாப்பிடுவர். பூணுல் அணியமாட்டார்கள்

துணி என்பதற்கு ஆனந்த விகடன் அகராதி கொடுக்கும் சொற்கள் —

கந்தை, சீலைத் துணி, துண்டு, ஆடை, தொங்கல், மரவுரி, சீலை , கஞ்சுகம் /சட்டை, புடவை.

சங்க காலத்துக்குப் பின்னர் வந்த மணிமேகலை நூலில் புகார் நகர உபவனம் சித்திரத் துணி போர்த்தியது போல விளங்கியதைக் காட்டும்,

வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்

சித்திரச் செய்கை படா அம் — மணி மேகலை 3-168

நூல் நூற்கும் தொழிலில் , வேத காலம் போலவே, தமிழ் நாட்டிலும் பெண்கள்தான் அதிகம் ஈடுபட்டனர். கணவனை இழந்த பெண்கள் இதைச் செய்ததாக சங்கப் புலவர்கள் பாடுகின்றனர்.

பருத்தி என்ற சொல் புறநானூற்றில் மட்டும் 7 இடங்களில் காணப்படுகிறது புறம் 326, புறம் 125 etc.

பஞ்சி, பஞ்சு என்பன குறைந்தது 10 இடங்களில் காணப்படுகிறது. இவை தவிர படாம் போன்ற சொற்களும் துணிகளைக் குறிப்பன ஆகும்.

ஆட்டு ரோமத்தாலும், எலி மயிரினாலும், பட்டு நூலாலும்  நெய்யப்பட்ட  துணிகளை நூலாக்கலிங்கம் என்று அழைத்தனர்.

நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ – பதிற்று.12

சிலப்பதிகார உரை எழுதிய அடியார்க்கு நல்லார் நிறைய விஷயங்களைச் சொல்கிறார்.

ஆடைகளின் ஓரங்களில் அழகிய குஞ்சங்களை அமைப்பதுண்டு. இதை வம்பு நிரை முடினர்– என்ற வரியால்  அறியலாம்.

பட்டுப் புடவைக்குக் குஞ்சம் கட்டுவது பற்றி பொருநர் ஆற்றுப்படையில் படிக்கலாம் :

கொட்டைக்கரைய  பட்டுடை  நல்கி — வரி 155

தாமரை, மல்லிகை, பிச்சி, மாவிலை, மாம்பிஞ்சு வடிவங்களை துணியின் கரைகளில் அமைத்தனராம் ; துகில் என்பது வெண்மை கலந்த சிவப்பு நிறத்திலும், பூந்துகில் என்பதுமலர் வடிவம் வரையப்பட்ட துணி என்றும் அடியார்க்கு நல்லார் உரை செப்பும்.

Xxxx

துணிகளுக்கு கஞ்சி

துணிகளுக்கு கஞ்சி போட்டு, அவைகளை வண்ணார் மனைவியர் , மடித்துக் கொடுத்த செய்தியும் பல சங்க நூல்களில் வருகிறது –

சோறமை  வுற்ற நீருடைக்  கலிங்கம்

வறனில் புலைத்தி எல்லித் தோய்த்த

புகாப்புகார் கொண்ட புன் பூங்கலிங்க மொடு – நற்றிணை 90

கள ரப்படு கூவற் றோண்டி நாளும்

புலைத்தி கழி இய தூ வெள்ளறுவை – புறம் 311

நலத்தகைப் புலத்தி பசை தோய்ந்தெடுத்து – குறுந்.330

பசைகொல் மெல்விரல் பெருந்தோட் புலைத்தி  — அகம் 34

என்ற வரிகளால் துணி வெளுப்போர் தொழில் பற்றியும் அறிகிறோம்.

முடிவுரை:

பெண்களுக்கு முக்கிய வேலை கொடுத்தது நெசவுத் துறை. தமிழ் நாட்டிலுள்ள காஞ்சீபுரம், திருபுவனம், தர்மாவரம் , சின்னாளப்பட்டி சேலைகள் இன்றும் உலகம் முழுதும் பாராட்டப்படுகின்றன. இது போல நாகர்கோவில் வேட்டி , கருடாழ்வார் கரை வேட்டி என்பன துணிமணிகள் சிறப்பை எடுத்து ஓதுகின்றன .

–சுபம் –

TAGS-  சேலைகள், துணிகளுக்கு கஞ்சி, சாலியர், பஞ்சகச்சம், கூறைப் புடவை, தார்ப்பாய்ச்சு, நார்மடி

தாவரம் காப்போம்; பல்லுயிரினம் காப்போம்! (Post.10,790)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,790

Date uploaded in London – –     29 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அகில இந்திய வானொலி நிலையம் சென்னை நிலையத்திலிருந்து 27-3-22 அன்று காலை 6.56 மணிக்கு ஒலிபரப்பாகிய சுற்றுப்புறச்சூழல் பற்றிய ஆறாவது உரை

6

தாவரம் காப்போம்; பல்லுயிரினம் காப்போம்!

ச.நாகராஜன்

இயற்கையோடு இயைந்து வாழ்வது என்பதை அனைத்து நாகரிகங்களும் தலையாய கொள்கையாகக் கடைப்பிடித்து வந்ததை வரலாறு நன்கு கூறுகிறது.

இந்த வகையில் இயற்கை அன்னை அளித்துள்ள தாவரங்களைக் காப்பது நமது தலையாய கடமையாகும். அடுத்து புவியெங்கும் பரவி வாழும் பல்லுயிர்களை, – அவற்றின் இனமே அழிந்துபடாமல் – காப்பதும் ஒரு கடமையாகும்.

பூமியில் மட்டும் மூன்றரை லட்சத்திலிருந்து நான்கு லட்சம் வரை வெவ்வேறு தாவர இனங்கள் உள்ளன என்பதை அறிவியல் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளது.

தாவரங்கள் இன்றி பூமியின் வளம் இல்லை. நமது வாழ்க்கை அமைப்பிற்குத் தாவரமே ஜீவநாடி. சுவாசித்தல், உணவை உட்கொள்ளுதல் உள்ளிட்ட பலவற்றிற்கும் மனித ஆதாரம் தாவரங்களே.

ஒளிச்சேர்க்கையால் சூரிய ஒளியைக் கொண்டு தாவரங்கள் நீர் மூலக்கூறுகளை ஹைட்ரஜனாகவும் ஆக்ஸிஜனாகவும் பிளவு படுத்துகிறது. ஹைட்ரஜன் கார்பன் டை ஆக்ஸைடுடன் இணைந்து குளுகோஸை உருவாக்குகிறது.

மனிதன் உயிர்வாழ இன்றியமையாத ஒன்றாக அமையும் ஆக்ஸிஜன் அல்லது உயிர்வளி இதன் துணை விளைபொருளே (by-product) ஆகும்.

நுண்மையான ஒரு தாவரத்தின் வேர் 20 கெமிக்கல்களை – வேதியல் பொருள்களைப் பிரித்தறியும் பாங்குடையது என்பது எவ்வளவு ஆச்சரியமான ஒரு விஷயம்!

நுண்மையான தாவர வேர்கள் மற்ற உயிரைக் கொல்லும் இனக் கொல்லிகளை (predators) அகற்றி பூந்துகள் சேர்ப்பிகளை (Pollinators) கவர்ந்து இழுக்கிறது. இதனால் உயிரினம் காக்கப்படுகிறது.

90 விழுக்காடு அழிக்கப்பட்டாலும் தம்மைத் தாமே மறுபடி உருவாக்கித் தழைக்கும் தன்மை கொண்டவை தாவரங்கள்.

நீடித்த ஆயுளைக் கொண்டு மனித இனத்தை வாழ வைப்பவை இவை என்றால் அவற்றிற்கு உரிய பாதுகாப்பை மனித இனம் தர வேண்டுமல்லவா!

ஒரு லட்சம் ஆண்டு ஆயுளைக் கொண்ட தாவரங்கள் ஸ்பெயினிலும் 9560 ஆண்டு வயதுள்ள மரம் ஸ்வீடனிலும் பாதுகாக்கப்படுகின்றன என்பது உத்வேகமூட்டும் ஒரு செய்தி!

தாவர இனத்தால் உயிர் வாழும் இனங்களின் பட்டியலுக்கு ஒரு முடிவே இல்லை.

ஒரு முக்கியமான புள்ளி விவரத்தையும் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அறிய வேண்டும். நாம் வாழும் பூமியில் BIOMASS எனப்படும் உயிரினத் தொகுதியில் 82.4 விழுக்காடு தாவரங்களே. 12.8 விழுக்காடு பாக்டீரியா;  0.4 விழுக்காடு மிருகங்கள். வெறும் 0.01 விழுக்காடு மட்டுமே தான் மனித இனம்!

ஆக 82 விழுக்காடு உள்ள பெரும் உயிரினத்தொகுதியாக அமைந்து அனைத்து உயிரினங்களையும் காத்து வரும் தாவரங்களை  0.01 உள்ள மனித இனம் தம்மை அறிந்தும், அறியாமலும் அழிக்க முற்படலாமா?

உணவாகவும், மருந்தாகவும் குளிர்ச்சி தரும் பசுமைக் காவலாகவும், மனித மனதிற்கு சாந்தி தந்து மன இறுக்கத்தைத் தளர்த்தி உற்சாகத்தை ஏற்படுத்தும் இயற்கை வளமாகவும் அமையும் தாவரம் ஒவ்வொன்றையும் காப்போம்; சூழலை இனியதாக ஆக்குவோம்!

**

அகில இந்திய வானொலி நிலையம் சென்னை நிலையத்திலிருந்து 28-3-22 அன்று காலை 6.56 மணிக்கு ஒலிபரப்பாகிய சுற்றுப்புறச்சூழல் பற்றிய ஏழாவது உரை

7

மண் வளம் காக்க மரங்களை நடுவோம்!

ச.நாகராஜன்

சுற்றுப்புறச் சூழலைக் காக்க உதவும் மிக முக்கியமான செய்கைகளில் ஒன்றாக அமைவது மரங்களைக் காப்பதே!

மரங்களை அழிக்காமல் காப்பது மட்டுமல்லாமல் இழந்த மரங்களின் இழப்பீட்டை சமனப்படுத்தும் வகையில் புதிய மரங்களை நட்டு வளர்ப்பது மனிதர்களின் தலையாய கடமையாக ஆகிறது.

இன்று மண்வளம் குறைந்து கொண்டே போக மரங்களின் அழிவே காரணம் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

மண்ணைச் சுரண்டி சுரண்டி, ஆறுகளை வழக்கம் போலப் பாய விடாமல் ஆக்குவதால், நீடித்த அளவில் நம்மை நாமே அழித்துக் கொண்டவர்களாக ஆகிறோம்.

செழுமை வாய்ந்த மண் வளத்தினாலேயே, பாரம்பரியம் மிக்க இந்திய விவசாயிகள், நூறு கோடிக்கும் அதிகமான இந்திய மக்கள் உணவு பெற வழி வகுக்கிறார்கள்.

உலகில் இதர இடங்களில் உள்ள மண்ணை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இந்திய மண்ணில் ஒரு கியூபிக் மீட்டர் மண்ணில், மைக்ரோ ஆர்கானிஸம் (Micro-organism) எனப்படும் நுண்ணுயிர்கள் மிக அதிக அளவில் காணப்படுவது நமது மண் வளத்தின் பெருமையைப் பறை சாற்றும் ஒரு அரிய உண்மையாகும்.

இப்படிப்பட்ட அரிய வளம் வாய்ந்த மண்ணைப் பாதுகாக்க வேண்டிய நாம் அதற்கு உதவியாக அமையும் மரங்களை மிக அதிக அளவில் ஆங்காங்கே நட்டு, பாதுகாத்து வளர்க்க வேண்டும்.

மரங்கள் வெட்டப்படுவதால் மண் வளம் வீழ்ச்சி அடைகிறது. மண்வளம் வீழ்ச்சி அடைவதால் ஊட்டச்சத்து குறைபாடு உருவாகிறது.  ஆகவே நமது குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களாக வளர்கிறார்கள்.

பருவ மழையை நம்பி இருக்கும் நம் நாடு மழைக்காலத்தில் மழை நீரைச் சேமிப்பதோடு ஆறுகள் வற்றிடாமல் பாய வழி வகுத்தால் மண் வளம் செழிக்கும். ஏரிகள், குளங்கள், சிற்றோடைகள், ஊருணிகள், நீரோடைகள் என அனைத்தையும் பாதுகாத்து அவற்றின் அருகே உள்ள மரங்களையும் மலர்ச் செடிகளையும் பாதுகாத்தால் சூழல் மேம்படும்; நீர் வளம் வருடம் முழுவதும் குறையாது. மண் வளம் மேம்படும். ஊட்டச் சத்து உயரிய நிலையை அடைந்து ஆரோக்கியம் மேம்படும்.

நமது சந்ததியினருக்கு நாம் ஒரு பெரும் பாரம்பரியத்தை விட்டுச் செல்வதோடு மட்டுமல்லாமல் தங்கத்தையோ, பணத்தையோ விட்டுச் செல்வதை விட அருமையான இயற்கை வளத்தை மேம்படுத்தி விட்டுச் சென்றோமெனில் அது அவர்களுக்கு நாம் அளிக்கும் உயரிய உரிய பரிசாக அமையும்.

ஆகவே உத்வேகத்துடன் மண் வளம் காப்போம்; மரங்களைக் காப்போம். மரங்கள் நடுவோம்.

ஆங்காங்கே குழுக்கள் அமைத்து மண்ணைச் சுரண்டுவோர்களை இனம் கண்டு உரிய அதிகாரிகளிடம் எடுத்துரைப்போம்.

–subham–

tags- மரங்கள் , தாவரம் ,நடுவோம், 

WEAVERS in THE RIG VEDA (Post No.10,789)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,789

Date uploaded in London – –    28 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Marxist gangs and Max Muller gangs projected Vedic Hindus as outsiders and nomads. But the information in the Tamil and Sanskrit literature said they were sons of the soil. More over the agricultural terms and the weaving terms tore the faces of those liars. The terms regarding the horses and chariots show highly developed transport system even during Vedic times. Sangam Tamil literature came a few thousand years after the Rig Veda, the oldest book in the world, and they also talk about lovers coming in chariots to meet their lady loves.

Let us look at the weaving details today. There is a beautiful simile which compares weavers producing cloths with poets composing songs. And another poet complaints about the rats damaging the yarn in the loom. These show that the Vedic society had a very active population of weavers.

Xxx

Weaver 1

A hymn on creation 10-130

The sacrifice drawn out  with threads on every side, stretched by a hundred sacred ministers and one-

This do these fathers weave who hitherwards are come; they sit  beside the warp and cry, weave forth and weave back.

The man extends it and the man unwinds it ; even to this vaults of heaven hath he outspun it

These pegs are fastened to the seat of worship: they made their Sama hymns as their weaving shuttles.

Xxx

Weaver 2

RV.10-33

The ribs that compass me give pain and trouble me like rival wives

Indigence, nakedness exhaustion press me sore; my mind is fluttering like a bird’s.

As rats eat weavers’ threads, cares are consuming me, thy singer , Satakratu me

Have mercy on us once , O Indra, Bounteuos Lord: be thou a father unto us.

Xxx

Weaver 3

Atharva Veda 10-7-42/43/44

42.Singly the two young maids of different colours approach the six pegged warp in turns and weave it

The one draws out the threads, the other lays them; they break them not, they reach no end of labour.

43.Of these two , dancing round as it were, I cannot distinguish whether ranks before the other

A male in weaves this web, a male divides it ; a male hath stretched it to the cope of heaven.

44.These pegs have buttressed up the sky. The Samans have turned them into shuttles for the weaving.

Interpretation

This hymn is a glorification of the Supreme Deity embodied, under the name Skambha, the Pillar, the Support or Fulcrum of all existence

( In Tamil, it is Kanthazi in Tolkappiam etc.)

42.Two young Maids: Ushas/Dawn and Night.

Six pegged: stretched over the six regions of the world Dawn weaves the luminous weft of day, and Night removes it from loom.

43.A Male: the first Man or Male , Purusha, Adipurusha, Prajapati.

This web: meaning here the primaeval sacrifice which constitutes creation; The man extends it, and the Man unbinds it .

( I think it is Big Bang and Big Shrink; it is already in Rig Veda 10-130)

Xxx

My Comments

Whether it is a big topic like Creation or an insignificant one like a rat gnawing the weaver’s thread, the Vedic poets used the simile of weaving, because it is understood by everyone. The weaving was so common in Vedic society.

Xxx

RV 10-101

Make pleasant hymns, spin out your songs and praises.

Xxx

RV.1-164

An ignorant fool, I ask in my mind about the hidden footprints of the gods. Over the young calf the poets stretched out seven threads to weave.

Xxx

RV.6-9-2/3

I do not know how to stretch the thread, nor weave the cloth , nor what they weave  as they enter the contest. Whose son could speak here such words that he would be above  and his father below?

He is the one who knows how to stretch  the thread and weave the cloth; he will speak the right words.

Xxx

RV.2-38-4

What was spread out she weaves afresh, re-weaving. The skilfull leaves his labour half-complete

He hath arisen from the rest, and parted seasons

(This is in another Rig Vedic verse as well; dawn and night weaving and un weaving)

Xxx

RV.2-28-5

Loose me from sin as from a bond that binds me; may we swell, Varuna, thy spring of order.

Let not my thread, while I weave the song,  be severed, nor my work’s sum, before the time, be shattered.

Xxx Subham xxx

Tags- Weaving, Weaver, Thread, Shuttle, Spin, a song

எலி மயிரில் ஆடை: தமிழர் கண்டுபிடிப்பு!! (Post No.10,788)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,788

Date uploaded in London – –    28 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Part 2 of  நீலக் கச்சை பூவார் ஆடை; தமிழ்ப் பெண்களின் ‘Bra’ ப்ரா

நூலினு மயிரினும் நுழை நார் பட்டினும்

பால்வகை தெரியாப் பன்னூறடுக்கத்து

நறுமடி செறிந்த வறுவை  வீதியும்

ஊர்காண் காதை , சிலம்பு. வரிகள் 205/7

((கீழே விளக்கம் காண்க))

xxx

நீலக் கச்சை, பூவார் ஆடை – புறம் 274, பாடியவர் உலோச்சனார்

ஒரு மறவன் போர்க்களம் சென்றான். அவன் பூப்போட்ட சட்டை அணிந்திருந்தான். இடுப்பில் நீல நிற கச்சையை / பெல்ட்டை அணிந்திருந்தான் .

உண்பது நாழி; உடுப்பது இரண்டே – புறம் 189; பாடியவர் நக்கீரர் ஆண்டியானாலும் அரசன் ஆனாலும் எல்லோருக்கும் உடம்பு ஒன்றுதான். ஒரு நாழி அளவு தானியம் போதும்; மேலாடை, அரை ஆடை என்ற ரண்டு துண்டுகள் போதும்.

கோட்டம் கண்ணியும் கொடுந்திரை ஆடையும் – புறம் 275

பாடியவர்- ஓரூ உத்தனார்

வளைந்த கண்ணியும் , கடல் அலை போன்ற மெல்லிய ஆடையும் அணிந்த மறவன்.

மேலாடையும் இடுப்பில் கச்சும் அணிவது பற்றி மதுரைக் காஞ்சியும் பாடுகிறது :-

திண்டேற் பிரம்பிற் புரளும் தானை

கச்சம் தின்ற கழல் தயங்கு திருந்தடி

–மதுரை. 435-436

எல்லோருக்கும் ஒரு வகை சீருடை, அதாவது UNIFORM யூனிபார்ம் இருந்தது. இன்று நாம் சட்டை போட்டுக் கொள்கிறோம். ஆனால் அக்காலத்தில் சட்டையில்லை; வேட்டியும், மேல் துண்டும்தான். சபைக்கு வருவோர் மட்டும் ‘கஞ்சசுகம்’  என்ற சட்டை அணிந்திருந்தனர்.

மகாபாரதத்தில் யுதிஷ்டிரர் பட்டாபிஷேகத்துக்கு வந்த ரிஷி முனிவர்கள் இப்படி கஞ்சுகம் அணிந்ததை குறிப்பிடுகிறது ; இதை ஆர்ய தரங்கிணி நூல் எழுதிய ஆ.கல்யாணராமன் குறிப்பிட்டுள்ளார்.இண்டிகோ என்னும் அவுரிச் செடி சாயத்தை இத்தாலிக்கு பழந்தமிழர்கள் ஏற்றுமதி செய்தனர். இந்த இந்திய சாயம் பற்றி பிளினி என்ற ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

சங்க காலத்துக்குப் பின்னர் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில்தான் அதிக விஷயங்கள் கிடைக்கின்றன. பெரும்பாலான ஆடைச் சொற்கள் ஸம்ஸ்க்ருதச் சொற்கள்.

இப்போது பிராமணர்கள் மட்டும் அணியும் பஞ்ச கச்சம் அக்காலத்தில் அரண்மனைக்குச் செல்லும் அதிகாரிகள் போன்றோர் அணிந்த உடை ஆகும்..

கி.வா. ஜகந்நாதன் போன்ற அறிஞர்கள் எப்போதுமே இந்த உடையில்தான் வெளியே வருவார்கள்.

சேரன் செங்குட்டுவன் சபையில் இருந்தான். வேறு பெண்களைப் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தான். மகாராணிக்கு ஊடல் வந்தது. எனக்கு தலை வலிக்கிறது என்று பொய் சொல்லிவிட்டு அந்தப் புரத்துக்குப் போய்விட்டாள். பக்கத்தில் இருந்த மஹாராணி திடீரென்று மறைந்த செய்தி அறிந்த செங்குட்டுவன் அவளைப் பார்க்க விரைந்தான். அப்போது மன்னனை இடைமறித்த பொற்கொல்லன் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டான். அவன் சட்டை போட்டுக்கொண்டு வந்த செய்தியும் சிலப்பதிகாரத்தில் உள்ளது —

மெய்ப்பை புக்கு விலங்குநாட்டைச் செலவின் 

கைக்கோற் கொல்லனைக் கண்டனனாகி

–கொலைக்களக் காதை 107-108

பாண்டியன் அரண்மனையில் வேலை பார்த்த வெளிநாட்டு யவனரும் சட்டை அணிந்து இருந்தனர்

உடம்பின் உரைக்கும் உரையா நாவின் படம்புகு மிலேச்சர்

–முல்லைப்பாட்டு 66-67 வரிகள்.

சம்ஸ்க்ருதம் அல்லது தமிழ் மொழி பேசாதவர்களை ‘மிலேச்சர்’ என்றும் கரடு முரடான சொற்களைப் பேசுவோர் என்றும் தமிழ்ப் புலவர்கள் திட்டுவார்கள். ‘வன் சொல்’ யவனர் என்று ஏசுவர்.

XXX

.சிலப்பதிகாரத்தில் இன்னும் ஒரு செய்தி ….

சஞ்சயன் போன பிறகு , பாண்டிய நாட்டு வீரர்கள் ஆயிரம் பேர், சேரன் செங்குட்டுவனுக்கு திறைப் பொருள் கொண்டுவந்து கொடுத்ததாகவும் அவர்கள் கஞ்சுக யூனிபார்ம்/ சீருடை அணிந்து இருந்ததாகவும் இளங்கோ அடிகள் பாடுகிறார்.

சஞ்சயன் போன பின் கஞ்சுக மாக்கள்

எஞ்சா நாவினர் ஈரைஞ்ஞூற்றுவர்

–சிலம்பு. கால்கோட் 167-68

XXXX

இடையர் போன்றோர் எளிய உடைகளை அணிந்து இருந்தனர் ,

ஒன்றாமற் உடுக்கைக் கூழார் இடையன்

–பெரும்பாண் . வரி 175

உடுக்கை இழந்தவன் கைபோல — என்று வள்ளுவனும் ஆடைக்கு ‘உடுக்கை’ என்று சொல்லுவதை ஒப்பிடலாம்

பெண்கள் இடையில் மட்டும் ஆடை அணிந்து இருந்தனர் . மலையாளத்தில் இப்படிப் பெண்கள் மார்பகத்தை மறைக்காமல் இருந்த படங்களை பழைய புஸ்தகங்களில் இன்றும் காணலாம். மஹாராணி போன்றவர்கள் மார்பகக் கச்சு (BRA) அணிந்தனர். பெண்கள் மார்பகத்தின் மீது சந்தனம் முதலியவற்றால் ஓவியம் வரைந்தனர். இது பற்றி அகத்துறைப் பாடல்களில் நிறைய குறிப்புகள் வருகின்றன ..

ஐய பிதிர்ந்த சுணங்கணி மென்முலை மேல்

தொய்யில் எழுதுகோ

–முல்லைக்கலி 11-16/17

இடையில் மேகலை அணிந்து, அதன்மேல் பூந்துகிலைச் சுற்றிக்கொண்டனர்.

பிறங்கிய  முத்தரை முப்பதிருகாழ்

நிறங்கினர்  பூந்துகில் நீர்மையின் உ டீ இ

–சிலம்பு. கடலாடு காதை 87-88

புண்ணிய நறுமலர் ஆடை போர்த்து

-சிலம்பு .13-172

புதுமணப் பெண்கள் முதலிரவு அறைக்குள் வந்தபோது புத்தாடைகளால் உடலை மூடிக்கொண்டு வந்த செய்தி அகநானூறு திருமணப் பாடலில் -86 வருகிறது

வெண்ணிற ஆடைகளை அணிந்து பெண்கள் பந்தாடிய செய்தியும் கிடைக்கிறது. செக்கர் வானைப் போன்ற செவ்வண்ணம் ஊட்டிய பூத் தொழில் செய்யப்பட்ட ஆடைகள்  , புடவைகள் மதுரையில் விற்கப்பட்டன என்று மாங்குடி மருதப்பினார் பாடுகிறார் – மதுரைக்கு காஞ்சி வரிகள் 431-433; 513

டாக்கா மஸ்லின்

உலகப் புகழ்பெற்ற டாக்கா மஸ்லின், தாகேஸ்வரி தேவி கோவில் கொண்டுள்ள டாக்கா நகரில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. ஒரு மோதிர வளையத்துக்குள் பல நூறு அடி நீளமுள்ள டாக்கா மஸ்லின் துணியைச் சுருட்டி நுழைத்து விடலாம். இது இப்போது அடியோடு அழிந்துவிட்டது. டாக்கா மஸ்லின் துணியை

அழிக்க எண்ணிய வெள்ளைக்கார்கள் அந்த நெசவாளர் ஆயிரம் பேரின் கட்டை விரல்களைத் துண்டாக்கிய செய்தி வரலாற்றில்  நடந்த கொடூரங்களில் ஒன்றாகும்.

இது போன்ற நுண்ணிய ஆடைகளை தமிழர்களும் செய்தனர். பாம்புச் சட்டை போன்ற மெல்லிய ஆடை, கடல் அலை போன்ற மெல்லிய ஆடை, எலி மயிரால் செய்யப்பட்ட ஆடை என்றெல்லாம்  குறிப்புகள்  கிடைக்கின்றன . ஒருவேளை எலி மயிர் போன்ற மிருதுவான, மெ ன்மையான என்ற பொருளில் சொல்லி இருக்கலாம்.

நூலினு மயிரினும் நுழை நார் பட்டினும்

பால்வகை தெரியாப் பன்னூறடுக்கத்து

நறுமடி செறிந்த வறு வை  வீதியும்

ஊர்காண் காதை , சிலம்பு. வரிகள் 205/7

பொருள்

நுண்ணிய பருத்தி நூலினாலும் , எலி மயிரினானும், பட்டு நூலினானும் தத்தம் பகுதிகளால் நெய்யப்பட்டு முற்கூறிய துகில் வருக்கங்களில் ஒவ்வொன்றை நூறாகத் தெரிந்தெடுக்க ப்பட்ட  அடுக்குப் பல நூறாகிய மடிப்பு புடவைக் கடைகளும்

புடவைக்கு கடைகளுக்கு வாசங் கொளுத்துதலின் ‘நறு மடி’ என்றார் .

அந்தக் காலத்தில் கண்ணுக்குப் புலப்படாத மெல்லிய இழைகளால் ஆடைகள் நெய்யப்பட்டன ; அவற்றின் மீது பூக்கள் வரையப்பட்டிருந்தன. . பாம்பின் சட்டையைப் போல மெல்லியதாக இருந்தன. . இதை பொருநர் ஆற்றுப்படையில் காணலாம்

நோக்கு நுழைகல்லா நுண்மைய பூங்கனிந்து

அரவுரி  என்ன அறுவை நல்கி – பொருந. வரி 82-83

அரவு = பாம்பு; அறுவை = துணி

பாம்பின் சட்டை போலும் மூங்கிலின் உட்புறத்தேயுள்ள வெள்ளை நிற தோல் போலவும் அமைந்த பூங்கலிங்கத்தை புறநானூற்றுப் புலவர் மாறோக்கத்து நப்பசலையார் பாடுகிறார் :

பாம்புரியன்ன வடிவின காம்பின்

கழை படு  சொலியின் இழையணி  வாரா

ஒண் பூங்கலிங்கம் உடீ இ — புறம் 383.

புகையைப் போலவும் பாலாவியைப் போலவும் ஆடைகள் விளங்கிற்று —

புகை விரிந்தன்ன பொங்கு துகில் உடீஇ

ஆவியன்ன அவிர் நூற் கலிங்கம் —

பெரும்பாண் . வரிகள் 469/70

சீவ சிந்தாமணியிலலும் மயிரால்  ஆடை நெய்வது குறிப்பிடப்படுவதாக (பாடல் 2686) உ.வே.சாமிநாதையர் எழுதுகிறார் .

To be continued…………………………………..

tags- எலி மயிர், ஆடை, உடுக்கை, பாம்புத் தோல், மெல்லிய , சிலப்பதிகாரம்

நீலக் கச்சை பூவார் ஆடை; தமிழ்ப் பெண்களின் ‘Bra …

https://tamilandvedas.com › நீலக…

20 hours ago — தமிழர்களின் தழை உடை (REED DRESS of TAMILS) பற்றிய இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை 2012-ல் …