WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,614
Date uploaded in London – – 31 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஈரான் நாட்டை இந்துக்கள் ‘சக த்வீபம்’ (Saka Dwipa) என்று அழைத்தார்களா? அங்கு சக (Saka Tree) என்னும் மரம் வழிபடப்பட்டதாக இந்துக்கள் சொல்லுவது சரியா ?
காளிதாசனும் சங்க இலக்கிய புலவர்களும் சொல்லும் மர வழிபாட்டிலுள்ள ஒற்றுமை என்ன ? என்பனவற்றை இக்கட்டுரையில் காண்போம்.
இந்துக்கள் உலக நிலப்பரப்பை 7 பெரும் பிரிவுகளாகப் பிரித்து அவைகளுக்கு அங்கு முக்கியமாகக் கருதப்படும் தாவரம் அல்லது பிராணிகளின் பெயரைச் சூட்டினார்கள். இதை பார்த்து தமிழர்களும் ஐந்து செடிகொடிகள் பெயர்களை நிலத்துக்குச் சூட்டினார்கள்
இந்துக்கள் புஸ்தகங்களில் 7 த்வீபங்கள் (Sapta Dvipas) என்று குச , சால்மலி , ஜம்பு, பிலக்ஷ , கிரெளஞ்ச, சக , புஷ்கர த்வீபங்கள் சொல்லப்பட்டுள்ளன. இதில் நாவல் மரம் சிறப்பாக உள்ள நாவலந்தீவு (சம்ஸ்க்ருதத்தில் ஜம்பூத்வீபம் Jambu Dvipa) ) இந்தியா என்பதில் எவருக்கும் ஐயப்பாடு இல்லை.ஆனால் மற்ற கடல் சூழ்ந்த பகுதிகளை (த்வீபம்) அறிஞர்கள் வேறு வேறாகக் காட்டியுள்ளனர்.
இதை ஒன்பது த்வீபங்களாக வகுத்து கேது மாலா ஆகியவற்றியும் சேர்ப்பதும் உண்டு
Xxx
சக த்வீப குறிப்புகளை முதலில் காண்போம் :-
சக த்வீபத்தில் பெரிய ‘சக மரம்’ இருப்பதாக மஹாபாரதம் கூறுகிறது. அவர்கள் அந்த மரத்தைப் போற்றியதோடு சிவ பெருமானை வழிபட்டதாக பீஷ்ம பருவத்திலிருந்து 9-28 (Bhishma Parva, Mahabharata) அறிகிறோம் சிந்து நதிக்கும் கடலுக்கும் இடைப்பட்ட பகுதி இது என்பது கருத்து. ஆனால் ஈரானில் சிவன் வழிபட்டதற்கான சான்றுகள் இல்லை. அவர்கள் தீயை (Fire Worship) மட்டுமே துவக்கத்தில் வணங்கினர் ; வேதகால இந்துக்கள் அக்கினி வளர்த்து சோம ரசத்தை அதில் ஆஹுதி செய்தது போல பார்ஸி சமய(Parsis) மக்களும் செய்தனர். பிற்காலத்தில் மாக, மாகி (Magi, Magha) என்ற குருமார்கள் மூலம் சூரிய/ மித்ரா (Mithra Worship) வழிபாடும் அறிமுகப் படுத்தப்பட்டது. இவையும் வேதத்தில் உள்ளவைதான்.
சகர இன மக்கள் இந்தியாவுக்குள் நுழைந்து மூல்டான் , காஷ்மீர், குஜராத் ஆகிய பிரதேசங்களில் சூரியன் கோவில்களை நிர்மாணித்ததற்கு சான்றுகள் (Sun Temples in Kashmir, Gujarat, Multan) உள்ளன. ஆனால் சக தீவு என்பது ஈரான் என்று சொல்ல அதிகம் சான்றுகள் இல்லை. ஈரானில் புதிய மதத்தை – பார்சி மதத்தைப் பரப்பிய ஜராதுஷ்டிரா (Zarathustra – Zoroaster) எனப்படும் ஜொராஸ்டர் அக்கினி தேவன் கோவிலுக்கு முன்னதாக ஒரு சைப்ரஸ் மரத்தை (Cypress Tree) நட்டதாக ஒரு குறிப்பு உள்ளது. இது சக மரமா? இதைத்தான் மஹாபாரதம் சொன்னதா என்பதை ஆராய்வோம்.
ஈரான் நாட்டின் நடுவிலுள்ள யாஸ்ட்(Yazd) மாகாணத்தில் அபார்குக் என்னும் இடத்திலுள்ள சைப்ரஸ் மரத்தை ஜொராஸ்டர் மரம் என்று சொல்லி இன்றும் பாதுகாத்து வைத்துள்ளனர் இது 4000 ஆண்டு பழமை உடையது என்று நம்புகின்றனர். இதனுடைய கிளைகள் காஷ்மீரிலும் நடப்பட்டதாக பிற்கால நூலான ஷா நாமா கூறும் . உலகம் முழுதும் சுமார் 150 வகை சைப்பிரஸ் மரங்கள் உள்ளன. இவை ஊசியிலை (Conifers) மரங்கள் என்று அழைக்கப்படும்
இவை உண்மையில் மஹாபாரதம் சொல்லும் சக மரம் என்றால் 4000, 5000 ஆண்டுப் பழமையை ஒப்புக்கொள்ள முடியும். ஆனால் ஜொராஸ்டர் நட்டு வளர்த்த மரம் என்றால் அவ்வளவு பழமை இருக்க முடியாது.
இந்த மரம் இன்று ஈரானில் இருப்பதாலும், சக மரம் காரணமாக சக த்வீபம் என்று அந்தப் பகுதி அழைக்கப்பட்டதாவும் கூறப்படுவது கவனிக்கத்தக்கது.
இப்போது ஆப்கானிஸ்தானுக்கும் ஈரானுக்கும் எல்லையாக அமைந்த சய்ஸ்தானின் (Seistan= Saka Sthana) பழைய பெயர் ‘சக ஸ்தானம்’ என்பதாகும். இதன் பாதி பகுதி இப்போது ஈரானில் உள்ளது. இதுவும் சக த்வீபம்தான் அந்தப் பகுதி என்பதற்கு ஆதாரமாக இருக்கிறது. ஆனால் பழங்காலத்தில் ஒவ்வொரு இன மக்களும் மெதுவாக இடம்பெயர்ந்து வெவ்வேறு இடங்களுக்குச் சென்றதால் இதுதான் அவர்களின் மூலஸ்தானமா என்றும் சொல்வதற்கில்லை . சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் சக என்னும் பகுதி வேறு எந்த இடத்தையும் விட இரான் பகுதியையே சுட்டிக் காட்டுகிறது.
மத்திய கிழக்கில் ஏழு இலைகளைக் கொண்ட ஒரு மரமும் (Seven Leaves= Sapta Parni) சிற்பங்களில் உள்ளது. தமிழ் இலக்கியம் சொல்லும் ஏழிலைப் பாலை என்பது இதுவா என்று ஆராய்வோம். அது உண்மையானால் தமிழர்கள் – மத்திய கிழக்கு தொடர்பு பற்றி புதிய செய்திகள் கிடைக்கும்
ஏழிலைப் பாலை
சாகுந்தலம் 1-25 சப்த பர்ண மர மேடை
பரி பாடல் 21-13 ஏழிலைப் பாலை (ஏழ் அடுக்கிய நீள் இலைப் பாலை)
சாளுக்கியன் சேந்தளூர் சாசனம் – ஏழாம் நூற்றாண்டு – சப்த பர்ண மரம்
ஏழிலைக் கிழங்கு என்பது மர வள்ளிக்கிழங்கு
7 இலைகளைக் கொண்ட சப்தபரணி மரம் இந்தியாவிலும் ஆசிய கண்டத்தின் பிறநாடுக லும் வளருகிறது தாகூர் ஸ்தாபித்த விஸ்வ பாரதி பல்கலைக் கழகத்தில் இது பட்டமளிப்பு விழாவின் போது மாணவர்க்கு வழங்கப்படுகிறது . தேரவாத புத்தமதப்படி, இதன் கீழ்தான் புத்தருக்கு ஞானோதயம் ஏற்பட்டது
ஏழிலைப் பாலையின் மணம் யானைகளுக்குப் பிடிக்காது என்று ஆனந்த விகடன் அகராதி சொல்கிறது
காளிதாசர் இயற்றிய ரகு வம்சத்தில் 4-23 வரும் பாடலின் பொருள் –
யானையின் மத ஜலம் போல நாற்றமுள்ள எழிலை மரத்தின் புஷ்பங்கள் மணத்தால் ரகு மஹாராஜாவுடன் வந்த யானைகளும் பொறாமை கொண்டு மத ஜலத்தை 7 அவயங்கள் வழியாகப் பெருக் கின.
இதே பொருளுள்ள இன்னும் ஒரு பாடல் ரகு வம்சத்தில் 5-48 உள்ளது .காளிதாசனின் சாகுந்தல நாடகத்திலும் இதந்த மரத்தை மேடைக்கு நடுவில் காண்கிறோம்
அசீரிய நாகரீகத்தில் (Nimrud in Iraq) 7 இலைகள் கொண்ட புனித மரம் வழிபடப்படுகிறது.
இவைகளை இராக் நாட்டின் நிம்ருத் நகர சிற்பங்களுடன் ஒப்பிட்டால் பொருத்தமாகவே இருக்கிறது. அங்கும் மரத்தின் புனிதத்தைக் காண்கிறோம். அவை சுமார் 3000 ஆண்டுப் பழமை ஆன சிற்பங்கள் அல்லது படைப்புகள்
சாகுந்தலத்தில் முதல் காட்சியில் இந்த மரம் வருகிறது அதைச் சுற்றி மேடை அமைக்கப்பட்ட செய்தியும் உளது. முக்கிய அல்லது புனித மரங்களைச் சுற்றி மட்டுமே மேடை அமைப்பர். அதன் கீழ் அமர்ந்து கூட்டம் நடத்த, தியானம் செய்ய அது பயன்படும்.
எப்படி கண்வ முனிவர் ஆஸ்ரமத்தில் இதைக் காண்கிறோமோ அதே போல பரிபாடலிலும் புனித திருப்பரங்குன்றத்தில் இந்த மரம் இருப்பதாகப் புலவர் பாடுகிறார்.
சோம ரச தாவரத்தையும் சில ரிக் வேத பாடல்கள் செம்மரம் என்று வருணிக்கிறது. மேலும் 15 வகை சோமம் பற்றிய குறிப்பும் ஒரு மந்திரத்தில் வருகிறது. பார்சி மத மக்கள் வேறு ஒரு தாவரத்தை சோமம் என்ற பெயரில் பயன்படுத்துகின்றனர். இவைகளை எல்லாம் பின்னணியில் வைத்துப் பார்க்கையில் 7 இலைகள் கொண்ட புனித மரம் ஒன்று எல்லோராலும் வழிபடப்பட்டது தெரிகிறது.
கி.மு 900 ஆண்டு சிற்பங்கள் இதைக் காட்டுவதால் இவை சோமம் அல்லது அதுபோன்ற ஒரு புனித மரம் என்று சொல்ல முடியும். இந்த சிற்பங்கள் உள்ள நிம்ருத் (Nimrud in Iraq) இராக் நாட்டில் உள்ளது.
ரிக் வேதம் ஆல மரத்தை மஹா வ்ருக்ஷம் என்று போற்றுகிறது. ஆனந்த விகடன் அகராதியும் மகா சையம் என்பதை ஆலமரம் என்று இயம்புகிறது.
உபநிஷத்தில் பிப்பலாடன் என்ற பெயர்
சிந்து சமவெளியில் காணப்படும் அரச மரம் புத்தருக்கு ஞானம் அளித்தது. அவர் அந்த மரத்தின் கீழ் தியானம் செய்யக் காரணம் அது இந்துக்களின் புனித மரம் என்பதால்தான். பிப்பலாடன் = அரச மரம் என்ற பெயரில் வேத கால முனிவர்கள் இருந்தனர். மேலும் அரசு, ஆலம், அத்தி ஆகிய மூன்றையும் விஷ்ணுவின் பெயர்களாக விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் காண்கிறோம். இவை மூன்றும் தாவர இயலின் படி ஒரே பைகஸ் FICUS என்னும் பிரிவைச் சேர்ந்தவை!
காளிதாசன் சொல்லும் மர வழிபாடு தமிழ் இலக்கியம் நெடுகிலும் உளது கட்டுரையின் இரண்டாவது பகுதியில் அதைக் காண்போம் .
TO BE CONTINUED……………………….
tags- சப்த பர்ண, ஏழிலைப் பாலை, ஈரான் , சக த்வீபம், சக, காளிதாசன்
மர வழிபாடு | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ம…
·
Deodar (Deva+ Taru) trees of the Himalayas (English word Tree came from Sanskrit Taru). Research Paper written by London swaminathan.
பனை மர வழிபாடு | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ப…
25 Sept 2014 — Tagged with பனை மர வழிபாடு … ஈடுபட்டபோது சங்க இலக்கியத்தில் உள்ள பனைமர வழிபாடு …
அரச மர வழிபாடு | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › அ…
2 Apr 2015 — பிள்ளை பெற அரச மர வழிபாடு. Aswaththa Tree (Peepal/Pipal) Tree Worship. கீழ்கண்ட செய்யுட்களே …
விஜய தசமி நாளில் வன்னி மரத்தை வழிபடுவது …
https://tamilandvedas.com › விஜ…
12 Oct 2016 — ராஜஸ்தானில் ஒரு கோவிலில் எலிகள் வழிபாடு. ஊர் தோறும் மர வழிபாடு.
அஸ்வத்த | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › அ…
மர வழிபாடு வேத காலத்திலேயே உண்டு. … வேத காலத்தில் பிப்பலாடன் (அரச மரம்) என்ற பெயரில் …
மரங்கள் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ம…
·
this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com. ஹெல்த்கேர் செப்டம்பர் 2021 …
அரசமர வழிபாடு | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › அ…
16 Aug 2013 — Tagged with அரசமர வழிபாடு … இந்துக்கள் வழிபடும் மரம்–அரச மரம்.
மரம் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ம…
18 Sept 2020 — tamilandvedas.com, swamiindology.blogspot.com. கோபமாக வந்தார் வைத்தி. மர மண்டை , மர மண்டை என்ன …
உதும்பர | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › உ…
6 Nov 2017 — மர வழிபாடு வேத காலத்திலேயே உண்டு. … உதும்பர மரம் பறிய கதை ஒன்று:–.
September | 2014 | Tamil and Vedas | Page 3
https://tamilandvedas.com › 2014/09
25 Sept 2014 — பனை மர வழிபாடு: மகாவம்ச, … சங்க இலக்கியத்தில் உள்ள பனைமர வழிபாடு இலங்கையில் …
சிவனுக்கும் தமிழர்களுக்கும் மரங்கள்- சுவீகார …
https://tamilandvedas.com › சிவ…
6 Jul 2013 — சிவ பெருமான் ஒரு தேவதாரு மரத்தை மகனாக … இந்து மதத்தில் மர வழிபாடு முக்கிய …
புகழ் பெற்ற புனித மரங்கள் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ப…
10 Apr 2018 — … கருதி (வ்ருக்ஷம்=மரம்) வழிபாடு செய்தது- செய்வது- செய்யப்போவது- தமிழர்களே.
பனை | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ப…
·
12 May 2016 — (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com) … பனை மர வழிபாடு: மகாவம்ச, …
இலக்கியத்தில் மரங்கள் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › இ…
Tagged with இலக்கியத்தில் மரங்கள் … இந்து மதத்தில் மர வழிபாடு முக்கிய இடம் பெறுகிறது …
ஆலமரம் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ஆ…
பெரிய விதையுடைய பனை மரம் நிழல் தராது. சிறிய விதையுடைய ஆல மரம் மன்னரின் நாற்படைக்கும் …
மரம் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ம…
18 Sept 2020 — tamilandvedas.com, swamiindology.blogspot.com … ஒரு ஆல மரம் ஆயிரம் பேர் விடும் மூச்சுக் …
மர மண்டையும் மரத்தின் மகிமையும் (Post. 8702)
http://swamiindology.blogspot.com › …
18 Sept 2020 — tamilandvedas.com, swamiindology.blogspot.com … ஒரு ஆல மரம் ஆயிரம் பேர் விடும் மூச்சுக் …
தென்னை மரம் பற்றிய சுவையான கதை! (Post No.6503)
http://swamiindology.blogspot.com › …
·
6 Jun 2019 — தென்னை மரம் பற்றிய சுவையான கதை! (Post No.6503) … ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co.
ந்யக்ரோத | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ந…
5 Oct 2012 — வியப்பூட்டும் அதிசய மரங்கள் … உலகிலேயே மரங்களை இன்றும் வழிபடும் ஒரே மதம் …
சென்னை | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ச…
3 Aug 2019 — tamilandvedas.com, swamiindology.blogspot.com … ஆனால் சென்னை வளாகத்தில் உள்ள மரம் அது அல்ல.
Xxxxxxxxxxxxxxxxxxxxxxx
You must be logged in to post a comment.