சகத்வீபம் என்பது ஈரான் நாடா? சங்க இலக்கியத்தில் மர வழிபாடு -1 (Post.10,614)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,614

Date uploaded in London – –    31 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ZOROAASTRIAN CYPRESS IN IRAN,

ஈரான் நாட்டை இந்துக்கள் ‘சக த்வீபம்’ (Saka Dwipa) என்று அழைத்தார்களா? அங்கு சக (Saka Tree) என்னும் மரம் வழிபடப்பட்டதாக இந்துக்கள் சொல்லுவது சரியா ?

காளிதாசனும் சங்க இலக்கிய புலவர்களும் சொல்லும் மர வழிபாட்டிலுள்ள ஒற்றுமை என்ன ? என்பனவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

இந்துக்கள் உலக நிலப்பரப்பை 7 பெரும் பிரிவுகளாகப் பிரித்து அவைகளுக்கு அங்கு முக்கியமாகக் கருதப்படும்  தாவரம் அல்லது பிராணிகளின்  பெயரைச் சூட்டினார்கள். இதை பார்த்து தமிழர்களும் ஐந்து செடிகொடிகள் பெயர்களை நிலத்துக்குச் சூட்டினார்கள்

இந்துக்கள் புஸ்தகங்களில் 7 த்வீபங்கள் (Sapta Dvipas) என்று குச , சால்மலி , ஜம்பு, பிலக்ஷ , கிரெளஞ்ச, சக , புஷ்கர த்வீபங்கள் சொல்லப்பட்டுள்ளன. இதில் நாவல் மரம் சிறப்பாக உள்ள நாவலந்தீவு (சம்ஸ்க்ருதத்தில் ஜம்பூத்வீபம் Jambu Dvipa) ) இந்தியா என்பதில் எவருக்கும் ஐயப்பாடு இல்லை.ஆனால் மற்ற கடல் சூழ்ந்த பகுதிகளை (த்வீபம்) அறிஞர்கள் வேறு வேறாகக் காட்டியுள்ளனர்.

இதை ஒன்பது த்வீபங்களாக வகுத்து கேது மாலா ஆகியவற்றியும் சேர்ப்பதும் உண்டு

Xxx

சக த்வீப குறிப்புகளை முதலில் காண்போம் :-

சக த்வீபத்தில் பெரிய ‘சக மரம்’ இருப்பதாக மஹாபாரதம் கூறுகிறது. அவர்கள் அந்த மரத்தைப் போற்றியதோடு சிவ பெருமானை வழிபட்டதாக பீஷ்ம பருவத்திலிருந்து 9-28  (Bhishma Parva, Mahabharata) அறிகிறோம் சிந்து நதிக்கும் கடலுக்கும் இடைப்பட்ட பகுதி இது என்பது கருத்து. ஆனால் ஈரானில் சிவன் வழிபட்டதற்கான சான்றுகள் இல்லை. அவர்கள் தீயை (Fire Worship) மட்டுமே துவக்கத்தில் வணங்கினர் ; வேதகால இந்துக்கள் அக்கினி வளர்த்து சோம ரசத்தை அதில் ஆஹுதி செய்தது போல பார்ஸி சமய(Parsis)  மக்களும் செய்தனர். பிற்காலத்தில் மாக, மாகி (Magi, Magha) என்ற குருமார்கள் மூலம் சூரிய/ மித்ரா (Mithra Worship) வழிபாடும் அறிமுகப் படுத்தப்பட்டது. இவையும் வேதத்தில் உள்ளவைதான்.

சகர இன மக்கள் இந்தியாவுக்குள் நுழைந்து மூல்டான் , காஷ்மீர், குஜராத் ஆகிய பிரதேசங்களில் சூரியன் கோவில்களை நிர்மாணித்ததற்கு சான்றுகள் (Sun Temples in Kashmir, Gujarat, Multan) உள்ளன. ஆனால் சக தீவு என்பது ஈரான் என்று சொல்ல அதிகம் சான்றுகள் இல்லை. ஈரானில் புதிய மதத்தை – பார்சி மதத்தைப் பரப்பிய ஜராதுஷ்டிரா (Zarathustra – Zoroaster) எனப்படும் ஜொராஸ்டர் அக்கினி தேவன் கோவிலுக்கு முன்னதாக ஒரு சைப்ரஸ் மரத்தை (Cypress Tree) நட்டதாக ஒரு குறிப்பு உள்ளது. இது சக மரமா? இதைத்தான் மஹாபாரதம் சொன்னதா என்பதை ஆராய்வோம்.

ஈரான் நாட்டின் நடுவிலுள்ள யாஸ்ட்(Yazd) மாகாணத்தில் அபார்குக் என்னும் இடத்திலுள்ள சைப்ரஸ் மரத்தை ஜொராஸ்டர் மரம் என்று சொல்லி இன்றும் பாதுகாத்து வைத்துள்ளனர் இது 4000 ஆண்டு பழமை உடையது என்று நம்புகின்றனர். இதனுடைய கிளைகள் காஷ்மீரிலும் நடப்பட்டதாக பிற்கால நூலான ஷா நாமா கூறும் . உலகம் முழுதும் சுமார் 150 வகை சைப்பிரஸ் மரங்கள் உள்ளன. இவை ஊசியிலை (Conifers) மரங்கள் என்று அழைக்கப்படும்

இவை உண்மையில் மஹாபாரதம் சொல்லும் சக மரம் என்றால் 4000, 5000 ஆண்டுப் பழமையை ஒப்புக்கொள்ள முடியும். ஆனால் ஜொராஸ்டர் நட்டு வளர்த்த மரம் என்றால் அவ்வளவு பழமை இருக்க முடியாது.

இந்த மரம் இன்று ஈரானில் இருப்பதாலும், சக மரம் காரணமாக சக  த்வீபம் என்று அந்தப் பகுதி அழைக்கப்பட்டதாவும் கூறப்படுவது கவனிக்கத்தக்கது.

இப்போது ஆப்கானிஸ்தானுக்கும் ஈரானுக்கும் எல்லையாக அமைந்த சய்ஸ்தானின் (Seistan= Saka Sthana)  பழைய பெயர் ‘சக ஸ்தானம்’ என்பதாகும். இதன் பாதி பகுதி இப்போது ஈரானில் உள்ளது. இதுவும் சக த்வீபம்தான் அந்தப் பகுதி என்பதற்கு ஆதாரமாக இருக்கிறது. ஆனால் பழங்காலத்தில் ஒவ்வொரு இன மக்களும் மெதுவாக இடம்பெயர்ந்து வெவ்வேறு இடங்களுக்குச் சென்றதால் இதுதான் அவர்களின் மூலஸ்தானமா என்றும் சொல்வதற்கில்லை . சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் சக என்னும் பகுதி வேறு எந்த இடத்தையும் விட இரான் பகுதியையே சுட்டிக் காட்டுகிறது.

மத்திய கிழக்கில் ஏழு இலைகளைக் கொண்ட ஒரு மரமும் (Seven Leaves= Sapta Parni) சிற்பங்களில் உள்ளது. தமிழ் இலக்கியம் சொல்லும் ஏழிலைப் பாலை என்பது இதுவா என்று ஆராய்வோம். அது உண்மையானால் தமிழர்கள் – மத்திய கிழக்கு  தொடர்பு பற்றி புதிய செய்திகள் கிடைக்கும்

ஏழிலைப் பாலை

IT LOOKS LIKE SOMA STAND IN INDUS SEALS

சாகுந்தலம் 1-25 சப்த பர்ண மர  மேடை

பரி பாடல்  21-13 ஏழிலைப் பாலை (ஏழ் அடுக்கிய நீள் இலைப் பாலை)

சாளுக்கியன் சேந்தளூர் சாசனம் – ஏழாம் நூற்றாண்டு – சப்த பர்ண மரம்

ஏழிலைக் கிழங்கு என்பது மர வள்ளிக்கிழங்கு

7 இலைகளைக் கொண்ட சப்தபரணி மரம் இந்தியாவிலும் ஆசிய கண்டத்தின் பிறநாடுக லும் வளருகிறது தாகூர் ஸ்தாபித்த விஸ்வ பாரதி பல்கலைக் கழகத்தில் இது பட்டமளிப்பு விழாவின் போது மாணவர்க்கு வழங்கப்படுகிறது . தேரவாத புத்தமதப்படி, இதன் கீழ்தான் புத்தருக்கு ஞானோதயம் ஏற்பட்டது

ஏழிலைப் பாலையின் மணம் யானைகளுக்குப் பிடிக்காது என்று ஆனந்த விகடன் அகராதி சொல்கிறது

காளிதாசர் இயற்றிய ரகு வம்சத்தில் 4-23 வரும் பாடலின் பொருள் –

யானையின் மத ஜலம் போல நாற்றமுள்ள எழிலை மரத்தின்  புஷ்பங்கள் மணத்தால் ரகு மஹாராஜாவுடன் வந்த யானைகளும் பொறாமை கொண்டு மத ஜலத்தை 7 அவயங்கள்  வழியாகப் பெருக் கின.

இதே பொருளுள்ள இன்னும் ஒரு பாடல் ரகு வம்சத்தில் 5-48 உள்ளது .காளிதாசனின் சாகுந்தல நாடகத்திலும் இதந்த மரத்தை மேடைக்கு நடுவில் காண்கிறோம்

அசீரிய நாகரீகத்தில் (Nimrud in Iraq)  7 இலைகள் கொண்ட புனித மரம் வழிபடப்படுகிறது.

இவைகளை இராக் நாட்டின் நிம்ருத் நகர சிற்பங்களுடன் ஒப்பிட்டால் பொருத்தமாகவே இருக்கிறது. அங்கும் மரத்தின் புனிதத்தைக் காண்கிறோம். அவை சுமார் 3000 ஆண்டுப் பழமை ஆன சிற்பங்கள் அல்லது படைப்புகள்

சாகுந்தலத்தில் முதல் காட்சியில் இந்த மரம் வருகிறது அதைச் சுற்றி மேடை அமைக்கப்பட்ட செய்தியும் உளது. முக்கிய அல்லது புனித மரங்களைச் சுற்றி மட்டுமே மேடை அமைப்பர். அதன் கீழ் அமர்ந்து கூட்டம் நடத்த, தியானம் செய்ய அது பயன்படும்.

எப்படி கண்வ முனிவர் ஆஸ்ரமத்தில் இதைக் காண்கிறோமோ அதே போல பரிபாடலிலும் புனித திருப்பரங்குன்றத்தில் இந்த மரம் இருப்பதாகப் புலவர் பாடுகிறார்.

சோம ரச தாவரத்தையும் சில ரிக் வேத  பாடல்கள் செம்மரம் என்று வருணிக்கிறது. மேலும் 15 வகை சோமம் பற்றிய குறிப்பும் ஒரு மந்திரத்தில் வருகிறது. பார்சி மத மக்கள் வேறு ஒரு தாவரத்தை சோமம் என்ற பெயரில் பயன்படுத்துகின்றனர். இவைகளை எல்லாம் பின்னணியில் வைத்துப் பார்க்கையில் 7 இலைகள் கொண்ட புனித மரம் ஒன்று எல்லோராலும் வழிபடப்பட்டது தெரிகிறது.

கி.மு 900 ஆண்டு சிற்பங்கள் இதைக் காட்டுவதால் இவை சோமம் அல்லது அதுபோன்ற ஒரு புனித மரம் என்று சொல்ல முடியும். இந்த சிற்பங்கள் உள்ள நிம்ருத் (Nimrud in Iraq) இராக் நாட்டில் உள்ளது.

ரிக் வேதம் ஆல மரத்தை மஹா வ்ருக்ஷம் என்று போற்றுகிறது. ஆனந்த விகடன் அகராதியும் மகா சையம் என்பதை ஆலமரம் என்று இயம்புகிறது.

உபநிஷத்தில் பிப்பலாடன் என்ற பெயர்

சிந்து சமவெளியில் காணப்படும் அரச மரம் புத்தருக்கு ஞானம் அளித்தது. அவர் அந்த மரத்தின் கீழ் தியானம் செய்யக் காரணம் அது இந்துக்களின் புனித மரம் என்பதால்தான். பிப்பலாடன் = அரச மரம் என்ற பெயரில் வேத கால முனிவர்கள் இருந்தனர். மேலும் அரசு, ஆலம், அத்தி ஆகிய மூன்றையும் விஷ்ணுவின் பெயர்களாக விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் காண்கிறோம். இவை மூன்றும் தாவர இயலின் படி ஒரே பைகஸ் FICUS என்னும் பிரிவைச் சேர்ந்தவை!

காளிதாசன் சொல்லும் மர வழிபாடு தமிழ் இலக்கியம் நெடுகிலும் உளது கட்டுரையின் இரண்டாவது பகுதியில் அதைக் காண்போம் .

TO BE CONTINUED……………………….

tags- சப்த பர்ண, ஏழிலைப் பாலை, ஈரான் , சக த்வீபம், சக, காளிதாசன்

மர வழிபாடு | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ம…

· 

Deodar (Deva+ Taru) trees of the Himalayas (English word Tree came from Sanskrit Taru). Research Paper written by London swaminathan.


பனை மர வழிபாடு | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ப…

25 Sept 2014 — Tagged with பனை மர வழிபாடு … ஈடுபட்டபோது சங்க இலக்கியத்தில் உள்ள பனைமர வழிபாடு …


அரச மர வழிபாடு | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › அ…

2 Apr 2015 — பிள்ளை பெற அரச மர வழிபாடு. Aswaththa Tree (Peepal/Pipal) Tree Worship. கீழ்கண்ட செய்யுட்களே …


விஜய தசமி நாளில் வன்னி மரத்தை வழிபடுவது …

https://tamilandvedas.com › விஜ…

12 Oct 2016 — ராஜஸ்தானில் ஒரு கோவிலில் எலிகள் வழிபாடு. ஊர் தோறும் மர வழிபாடு.


அஸ்வத்த | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › அ…

மர வழிபாடு வேத காலத்திலேயே உண்டு. … வேத காலத்தில் பிப்பலாடன் (அரச மரம்) என்ற பெயரில் …


மரங்கள் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ம…

· 

this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com. ஹெல்த்கேர் செப்டம்பர் 2021 …


அரசமர வழிபாடு | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › அ…

16 Aug 2013 — Tagged with அரசமர வழிபாடு … இந்துக்கள் வழிபடும் மரம்–அரச மரம்.


மரம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ம…

18 Sept 2020 — tamilandvedas.com, swamiindology.blogspot.com. கோபமாக வந்தார் வைத்தி. மர மண்டை , மர மண்டை என்ன …


உதும்பர | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › உ…

6 Nov 2017 — மர வழிபாடு வேத காலத்திலேயே உண்டு. … உதும்பர மரம் பறிய கதை ஒன்று:–.


September | 2014 | Tamil and Vedas | Page 3

https://tamilandvedas.com › 2014/09

25 Sept 2014 — பனை மர வழிபாடு: மகாவம்ச, … சங்க இலக்கியத்தில் உள்ள பனைமர வழிபாடு இலங்கையில் …


சிவனுக்கும் தமிழர்களுக்கும் மரங்கள்- சுவீகார …

https://tamilandvedas.com › சிவ…

6 Jul 2013 — சிவ பெருமான் ஒரு தேவதாரு மரத்தை மகனாக … இந்து மதத்தில் மர வழிபாடு முக்கிய …


புகழ் பெற்ற புனித மரங்கள் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ப…

10 Apr 2018 — … கருதி (வ்ருக்ஷம்=மரம்வழிபாடு செய்தது- செய்வது- செய்யப்போவது- தமிழர்களே.


பனை | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ப…

·

12 May 2016 — (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com) … பனை மர வழிபாடு: மகாவம்ச, …


இலக்கியத்தில் மரங்கள் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › இ…

Tagged with இலக்கியத்தில் மரங்கள் … இந்து மதத்தில் மர வழிபாடு முக்கிய இடம் பெறுகிறது …

ஆலமரம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ஆ…

பெரிய விதையுடைய பனை மரம் நிழல் தராது. சிறிய விதையுடைய ஆல மரம் மன்னரின் நாற்படைக்கும் …


மரம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ம…

18 Sept 2020 — tamilandvedas.com, swamiindology.blogspot.com … ஒரு ஆல மரம் ஆயிரம் பேர் விடும் மூச்சுக் …


மர மண்டையும் மரத்தின் மகிமையும் (Post. 8702)

http://swamiindology.blogspot.com ›

18 Sept 2020 — tamilandvedas.com, swamiindology.blogspot.com … ஒரு ஆல மரம் ஆயிரம் பேர் விடும் மூச்சுக் …


தென்னை மரம் பற்றிய சுவையான கதை! (Post No.6503)

http://swamiindology.blogspot.com ›

· 

6 Jun 2019 — தென்னை மரம் பற்றிய சுவையான கதை! (Post No.6503) … ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co.


ந்யக்ரோத | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ந…

5 Oct 2012 — வியப்பூட்டும் அதிசய மரங்கள் … உலகிலேயே மரங்களை இன்றும் வழிபடும் ஒரே மதம் …


சென்னை | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ச…

3 Aug 2019 — tamilandvedas.com, swamiindology.blogspot.com … ஆனால் சென்னை வளாகத்தில் உள்ள மரம் அது அல்ல.

Xxxxxxxxxxxxxxxxxxxxxxx

ஐந்து விரல்களின் பெயர் என்ன? சுவையான கதைகள்! (Post No.6571)

Written by London Swaminathan

swami_48@yahoo.com


Date: 19 June 2019


British Summer Time uploaded in London –  9-21 am

Post No. 6571

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

‘தஸ்யூ’ என்றால் திருடன்: காளிதாசன் (Post No.3983)

Research article Written by London Swaminathan

 

Date: 8 June 2017

 

Time uploaded in London- 21-14

 

Post No. 3983

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

ரிக் வேதத்தில் ‘தஸ்யூ’ (Dasyu) என்ற சொல் பல இடங்களில் வருகிறது; அதன் பொருள் குற்றம் இழைத்தவன், திருடன் , கொள்ளையன் என்பதாகும். ஆனால் இந்து மதத்தை அழித்து, இந்தியாவைப் பிளக்க வேண்டும் என்று எண்ணிய வெள்ளையர்கள் அந்தச் சொல்லுக்கு பழங்குடி மக்களாக ‘இருக்கலாம்’ அல்லது திராவிடர்களாக ‘இருக்கலாம்’ அல்லது ஆப்கனிஸ்தான்/பாகிஸ்தான் பகுதியில் வாழும் பிரஹுயி மொழி பேசுவோராக ‘இருக்கலாம்’ என்றெல்லாம் கதை கட்டிவிட்டனர். இவற்றில் எந்த உண்மையும் இல்லை என்பதை ரிக் வேதத்துக்குப் பின் எழுந்த ஐதரேய பிராமணம் என்னும் நூலும், நமக்கு இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் வாழ்ந்த உலகப் புகழ் கவிஞன் காளிதாசனும் பறை அறிவித்துள்ளனர்.

 

உலகிலேயே அதிகம் சண்டை போட்டவர்கள் தமிழர்கள்தான். உலக வரலாற்றைப் படித்தோருக்குத் தெரியும் 1500 ஆண்டுகளுக்கும் மேலாக இடைவிடாமல் போரிட்ட இனம் உலகில் தமிழ் இனம் மட்டுமே. சங்க இலக்கியப் பாடல்களில் இப்படி சண்டை போட்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களை வீரர்கள் என்றும் புலவர்கள் போற்றியுள்ளனர். ஆனால் அந்த மூன்று வேந்தர்களையும் யாரும் ஆரியர், திராவிடர், முண்டா இன மக்கள் என்று சொல்லுவதில்லை. இவ்வளவுக்கும் அவர்களிடையே ஜன்மப் பகை! ‘சூ’ என்றால் சண்டைக்கு வருவர். எதிரி மன்னர்களின் மனைவியரின் கூந்தலைக் கத்தரித்து கயிறு திரித்து வெற்றிபெற்ற மன்னரின் ரதத்தை இழுத்துவந்ததாகவும், அவனது அரண்மனைகளைத் தரைமட்டமாக்கி கழுதை பூட்டிய ஏர் கொண்டு உழுது அவமானப் படுத்தியதாகவும் புறநானூற்றுப் புலவர் பாடுவர். அப்படிப் பாடிய போதும் அவர்களை

எவரும் வேற்றினமாகப் பார்க்கவில்லை.

 

ஆனால் இந்துமதத்தில் விஷ விதைகளை ஊன்ற வந்த மாக்ஸ்முல்லர்களும் கால்டுவெல்களும் சாதாரண ஒரு சொல்லுக்குப் பயங்கரப் பொருள் கற்பித்தனர்.

உலகிலுள்ள எல்லா சமய நூல்களிலும் பழைய இலக்கியங்களிலும் அதே இனத்தைச் சேர்ந்த அல்லது மாற்று இனத்தைச் சேர்ந்த எதிரிகள் வருணிக்கப்படுகின்றனர். இது தவிர திருடர், கொள்ளையர், குற்றவாளிகள் ஆகீயோரும் வருணிக்கப்படுகின்றனர். அர்ஜுனனைப் பார்த்து கிருஷ்ணன் பல இடங்களில் ‘பரந்தப:’ (எதிரிகளை தஹிக்கவைப்பவனே) என்பார் பகவத் கீதையில்; இது போல தமிழ் இலக்கியத்தில் பாலைநில மறவர்கள் எல்லோரையும் கொள் ளையடித்து கொன்ற செய்தியும் உள்ளது ஒன்றுமில்லாத ஒரு பிராமணனைக் கொன்றுவிட்டு ஐயோ இவனைக் கொன்றுவிட்டோமே என்று கையை நொடித்துக் கொண்ட பாடலும் சங்க இலக்கியத்தில் உள்ளது; ஆனால் அவர்களை

வேறு இனமாக நாம் பார்க்கவில்லை. இது போலவே ரிக்வேத காலத்தில் குற்றமிழைத்தவர்களை தஸ்யூக்கள் என்றனர்

 

காளிதாசனில் ஒரு காட்சி

காளிதாசன் எழுதிய சாகுந்தலம் நாடகம் உலகம் முழுதும் பிரசித்தம்; பல ஐரோப்பிய மொழிகளில் நீண்ட காலத்துக்கு முன்னரே மொழி பெயர்க்கப்பட்ட நூல்; 2000 ஆண்டுப் பழமை வாய்ந்தது; அதில் ஒரு காட்சி.

 

ஐந்தாம் காட்சி 21ஆவது ஸ்லோகம்

 

கண்வ மகரிஷியின் வளர்ப்பு மகள் சகுந்தலை; அவள் உலகப் பேரழகி; கானக ரோஜா; கண்வர், ஆஸ்ரம்த்தில் இல்லாத போது துஷ்யந்தன் என்ற மன்னன் அவளை ரஹசியமாகக் கல்யாணம் செய்துகொண்டு கர்ப்பவதி ஆக்கிவிடுகிறான்; அதுமட்டுமல்ல அவளைக் கானகத்திலேயே விட்டு விடுகிறான்; செய்தி அறிந்த கண்வ மஹரிஷி, உரிய காலத்தில் ஒரு சிஷ்யன் மூலமாக துஷ்யந்தனிடம் அனுப்புகிறார். மன்னனோ ஒன்றும் அறியாத அப்பாவி போல நடிக்கிறான். அப்போது கோபமுற்ற கண்வரின் சீடன, ‘ஐயன்மீர்; திருடன் (தஸ்யூ) கொள்ளையிட்ட சொத்தை அவனிடமே திருப்பித் தரவந்துள்ளேன்’ என்று கடிந்துரைக்கிறான். இங்கே திருடனுக்கு காளிதாசன் பயன்படுத்திய சொல் தஸ்யூ. துஷ்யந்தன் திருட்டுத்தனமாக அவளை அனுபவித்து விட்டுப் போனதால் திருடன் கொள்ளையிட்ட சொத்து என்று சகுந்தலா வருணிக்கப் படுகிறாள்; ஆகவே தஸ்யூ என்பதன் உண்மைப் பொருள் திருடன்.

 

ரிக்வேதத்தில் தஸ்யூ

ரிக் வேதத்தில் தஸ்யூவைக் குறிப்பிடும் இடங்களில், அநாஸ (மூக்கு அற்றவர்), அவிரத (உரிய கருமங்களைச் செய்யாதோர்),அதேவ (கடவுளை வணங்காதோர்), அயஜ்ய ( யாகம் செய்யாதோர்) ம்ருதவாக் (கடுஞ் சொல்லுடையோர்) என்றெல்லாம் வருணிக்கப்பட்டுள்ளனர்.

 

திராவிடர்களை மூக்கு இல்லாதவர்கள் என்று எவரும் சொல்லமாட்டார்கள்; மஞ்சள் நிறத் தோலுடைய மங்கோலாய்ட் (Mongoloid) இனத்தினர் (ஜப்பான், சீனா) சப்பை மூக்குடையோர். ஜப்பானியர்களுக்கு மூக்கு இருப்பதே  தெரியாது; மேலும் திராவிடர்களுக்கு போண்டா மூக்கு, சுருட்டை முடி, முட்டைக் கண்கள் என்றெல்லாம் வெள்ளையர்களே எழுதி வைத்துள்ளனர். ஆகவே எதிரிகளைத் திட்டும்போது இப்படிப்பட்ட சொற்கள் வருவது இயல்பே.

 

உண்மையில் தமிழ் அரசர்களை காவல் காத்த யவனர்களைக்கூட ‘கடுஞ்ச் சொல்லுடையோர்’ என்று தமிழ் இலக்கியம் செப்பும்; அது போல இடையர்களைக் கல்லா இடையர் என்று தமிழ்ப் புலவர்கள் பாடுகின்றனர்.

 

ஒரு நல்ல சொல்லும் காலப் போக்கில் அவப் பெயர் பெறுவதும் , ஒரு கெட்ட சொல் காலப் போக்கில் நல்ல பொருள் பெறுவதும் மொழி அறிஞர்களுக்குத் தெரிந்த விஷயமே.

 

 

பறை அறிவிக்கும் அரசு அதிகாரி= பறையன். ஆனால் காலப் போக்கில் தீண்டத்தகாதவன் என்று பொருள் பெற்றது. இன்றும் அதே அர்தத்தில் உலகம் முழுதும் ஆங்கிலப் பத்திரிக்கைகளிலும், டெலிவிஷன் ஸ்டேஷன்களிலும் பயன்படுத்துகின்றனர். வேண்டாத நாடுகளையும் தலைவர்களையும் இன்டெர்நேஷனல் பறையா (International Pariah) என்று ஓலமிடுகின்றனர். ஆக ஆங்கில அகராதியில் இடம்பெற்ற தமிழ் சொல்லுக்கு இவ்வளவு துஷ்பிரயோகம்!

 

பழைய காலத்தில் கழகம் என்றால் சூதாடும் இடம்; இன்று பல அரசியல் கட்சிகள் கழகம் என்று பெயர் வைதுக்கொண்டுள்ளன. மேலே குறிப்பிட்ட தஸ்யூவும் இப்படி பொருள் மாறி வந்து திருடன் என்று மென்மைப் பொருள் பெற்று இருக்கலாம். பூர்வ காலத்தில் அது எதிரி, குற்றவாளி, கெட்டவன் என்ற பொருளுடன் இருந்திருக்கலாம்.

 

இந்திரனை வருணிக்கும் ரிக் வேதப் பாடலும் அவனை தஸ்யூவைக் கொல்பவன் என்று சொல்கிறதே தவிர தாசர்களைக் கொல்பவன் என்று சொல்லவில்லை. ஆக தஸ்யூ என்பது கடுமையான குற்றம் இழைத்தோர் ஆவர்.  அதில் இனம் ஏதும் இல்லை. இந்திரன் கொன்ற 30 அரக்கர்களில் மூன்றே பேருக்குத்தான் தஸ்யூ என்ற சொல் சேர்க்கப் பட்டுள்ளது. ஆகவே எல்லோரும்  இப்படி அழைக்கப்படவில்லை. மேலும் வேதங்களில் தென்னகம் குறிப்பிடப்படவில்லை.; வடக்கில் திராவிடர்கள் இருந்ததும் ஊகமே.

 

–Subham–

 

 

 

காளிதாசன் கண்ட அற்புதத் தபோவனக் காடுகள்! (Post No.3778)

Written by London swaminathan

 

Date: 1 April 2017

 

Time uploaded in London:- 13-46

 

Post No. 3778

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

உலகப் புகழ்பெற்ற கவிஞன் காளிதாசன் தனது ஏழு இலக்கியப் படைப்புகளில் தவ முனிவர்களையும் , அவர்கள் வசிக்கும் தபோவனங்களையும் அற்புதமாக வருணித்துள்ளான். அவைகளைப் படிக்கையில் நாமும் அக்கால முனிவர்கள் வாழ்ந்த காடுகளுக்குச் சென்று, அமைதியான ஆசிரம வாழ்க்கை வாழமாட்டோமா என்ற ஏக்கம் ஏற்படும்.

 

அவர் சொல்லுவதைப் பார்ப்பதற்கு முன், மின்சார விளக்குகளோ சாலைப் போக்குவரத்து வசதிகளோ, இன்டெர்நெட், மொபைல் வசதிகளோ, ரேடியோ, டெலிவிஷன், டெலிபோன் வசதிகளோ இல்லாத ஒரு அமைதியான காடுகளை நம் மனக் கண்முன் கொண்டு வர வேண்டும்.  அது சண்டை சச்சரவுகள் இல்லாத உலகம். மானும், புலியும் ஒரேதுறையில் பகைமை பாராட்டாது நீர் குடிக்கும் சாந்தி நிலவும் ஒரு உலகம். இதோ காளிதாசன் வாய்மொழியாக அவைகளைக் கேட்போம்:-

 

“சாதகர்ணி என்ற முனிவரின் ஆசிரமம் அடர்ந்த காட்டுக்கு நடுவே இருந்ததாகவும் நான்கு புறங்களும் மேகம் சூழ நடுவேயுள்ள சந்திரன் போல அவருடைய ஆஸ்ரமம் ஜொலித்ததாகவும்” ரகு வம்ச கவியத்தில் கூறுகிறார் (13-39)

 

இன்னும் கொஞ்ச தூரத்தில் சுதீக்ஷ்ணர் என்பவர் ‘பஞ்சாக்னி’ (FIVE FIRES) தவம் செய்கிறார். அதாவது நாலு புறமும் விறகுகளை வைத்து எரிமூட்டி நடுவில் நின்று கொண்டு சூரியனைப் பார்த்து தவம் செய்கிறார். அவர் ‘பெயரில்’ கடுமை இருந்தாலும் செயலில் சாந்தம் மிக்கவர்.(13-41)

 

அவர் ருத்ராக்ஷம் அணிந்து மான்களைத் தடவிக் கொடுக்கிறார். யாகத்திற்கு வேண்டிய தர்ப்பைப் புல் முதலியவற்றைக் கொண்டு வருகிறார். நான் மேலே பறந்து செல்லுவதை அறிந்து, அவர் கைகளை உயரே உயர்த்தி வணக்கம் சொல்லுகிறார். ஆயினும் மவுனத்தைக் கடைப்பிடிக்கிறார் (13-42)

 

அதோ,  அது சரபங்க முனிவரின் ஆசிரமம். அவர் சமித்துக் குச்சிகளால் வெகு காலம் ஹோமம் செய்துவிட்டுத் தன்னையே ஹோமத் தீயில் ஆகுதி செய்து மேலுலகம் சென்றார் அவருடைய தபோவனம் தூய்மையானது. இது மிருகங்களின் சரணாலயம்; அவை இயற்கைப் பகையைவிட்டு சாந்தமாக உலவும் இடம் இது. (13-45)

 

அவர் விருந்தாளிகளை நன்கு உபசரிப்பார்.  இப்போது அவர் இல்லாவிடினும் தந்தை விட்டுச் சென்ற  நற்பணியை, அவரது மகன்கள் செய்வது போல, அவரால் வளர்க்கப்பட்ட இம்மரங்கள் பழங்களை அளித்து அதிதி பூஜை (விருந்து  உபசாரம்) செய்கின்றன!

 

இதோ அதுதான் சித்திரகூட மலை. அங்குள்ள நீர்வீழ்ச்சிகள் எழுப்பும் ஓசை, அதிலுள்ளை குகைகளில் எப்போதும் எதிரொலி செய்த்கொண்டே இருக்கின்றன. சிகரங்களின் உச்சியில் மேகங்கள் தவழ்வது, ஒரு மாட்டின் கால்களில் சேறு பூசியது போல காணப்படுகிறது (13-47)

 

அந்த மலை ஒரு எருது போலக் காட்சி தருகிறது (காளை மாடுகள் மணல் மேடுகளில் கொம்புகளினால் முட்டி சேற்றுடன் காணப்படும். அதை மனதில் கொண்டு கவி இப்படிச் சொன்னார் போலும்)

 

குமார சம்பவ காவியத்தில் சப்தரிஷிகளை வருணிக்கையில் அவர்கள் முத்துச் சரங்களால் ஆன பூணூல்களை அணிந்து தங் கத்தினாலான மரவுரிகளை அணிந்திருந்ததாகக் கூறுகிறார். அவர்கள் வைத்திருந்த ஜபமாலைகள் ரத்தினக் கற்களால் ஆனவையாம் (6-6)

 

காட்டில் தவம் செய்ய, பார்வதி (உமா) , தனது தோழி மூலமாக தந்தையிடம் அனுமதிகேட்டதாகவும் காளிதாசன் பாடுகிறான் (5-6)

குமாரசம்பவத்தில் மேலும் ஒரு துறவியைக் காட்டுகிறான். சடைமுடியுடன் ஒரு யோகி வருகிறார். அவர் மான் தோல் அணிந்தவர். பலாச தண்டம் கையில் ஏந்தி இருந்தார். பிரம்ம தேஜஸுடன் காணப்பட்டார். ஒரு பிரமச்சாரி போல தபோவனத்துக்குள் நுழைந்தார். உமாவும் அவரைத் தக்கபடி உபசரித்தாள். (5-30)

 

அந்தக் காலத்தில் மக்கள் பல்வேறு விதமாகத் தவம் இயற்றியதையும் காளிதாசன் படம்பிடித்துக் காட்டுகிறான்:

“புகையினால் மிகச்சிவந்த கண்களை உடையவனும் , கால்களால் மரக்கிளைகளைப் பிடித்துக் கொண்டிருப்பவ்னும், கீழ்நோக்கிய முகம் உடையவனுமான ஒருவனை ராமர் பார்த்தார்”. (ரகு 15-49)

ராமாயண காலத்திலேயே ஒருவன் கீழே தீயை மூட்டி அதில் முகத்தைக் காட்டியவாறு, தலை கீழாக தொங்கிக் கொண்டு தவம் செய்ததை இது காட்டுகிறது.

 

ஒரு முனிவர் யாரையாவது சாபம் இட்டால் அவருடைய தவ வலிமை (POWER AND ENERGY தபோ சக்தி) குறைந்து விடும் என்ற உண்மையை ரகு வம்சத்தில் எடுத்துரைப்பான் காளிதாசன் (15-3):

 

ராமனை பார்த்தவுடன் அவனே அசுரனைக் கொன்றுவிடுவான் என்பது முனிவர்களுக்குத் தெரிந்தது:–

“லவணன் என்ற அசுரனால் துன்புறுத்தப்பட்ட மஹரிஷிகள் தங்களுடைய தேஜசினால் (தவ வலிமை) அவனை வீழ்த்தவில்லை ஏனெனில் ரக்ஷகன் இல்லாதபோதுதான் சாபத்தை ஆயுதமாகக் கொண்ட ரிஷிகள் அவர்களுடைய தவத்தைச் செலவழிப்ப்ர் ” (15-3)

 

 

பிராமணரல்லாதாரும், அசுரர்களும் கூட தவம் செய்து வரம் பெற்ற கதைகள் புராணம், இதிஹாசம் முழுதும் இருக்கின்றன. ஆரிய திராவிட வாதம் பொய் என்பதற்கு இவை நல்ல சான்றுகள். தசரதன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றபோது, ஒரு யானை தண்ணீர் குடிக்கிறது என்று எண்ணி அம்புவிட்டான. ஆனால் அதுவோ ஒரு சூத்திர முனிவருடைய புதல்வன், குடத்தில் நதி நீரை எடுத்தபோது எற்பட்ட ஓசை ஆகும். உடனே தசரதன் அவனை தாய் தந்தையிரிடம் எடுத்துச் செல்ல, அந்த முனிகுமாரன் இறந்து விடுகிறான். அப்போது அந்த வயதான முனிவர், நீயும் புத்திரசோகத்தால் இறப்பாய் என்று தசரதனுக்குச் சாபம் தருகிறார். இதிலிருந்து சூத்திர முனிவர்கள், ஆதிகாலத்தில் இருந்ததும் அவர்களும் சாபம் இட முடியும் என்பதும் தெரிகிறது. வால்மீகி சொன்ன இவ்விஷயத்தைக் காளிதாசனும் சொல்கிறான் (ரகு. 9-46/49)

 

எல்லோரும் எல்லாம் செய்யக்கூடாது, செய்ய முடியாது என்பதையும் குமார சம்பவத்தில் (5-33/34) காட்டுகிறான்.

உமாவிடம்  புதிய துறவி கேட்கிறார்:

“காட்டில் தர்ப்பைப் புல்லும், யாகத்திற்கான மரக்குச்சிகளும் எளிதில் கிடைக்கிறதா?  குளிப்பதற்கேற்ற நீர் உள்ளதா? உன்னுடைய உடல் தாங்கக்கூடிய வகையில் தவம் செய்கிறாயா? உடலை வைத்துத் தான் சமயச் சடங்குகளைச் செய்யமுடியும்” (சுவரை வைத்துத்தான் சித்திரம்). அந்த நேரத்தில் உமாவின் கைகளிலிருந்து மான்கள் புல்லை வாங்கிச் சாப்பிட்டதையும் காளிதாசன் பாடுகிறான்.

ஆக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களும் தவம் செய்தனர். அதை ஒரு அதிசய நிகழ்ச்சியாகச் சொல்லாமல் சாதாரண நிகழ்வாகவே செப்புகிறான்

 

குமார சம்பவத்தில் வரும் ஆசிரமக் காட்சி (5-17):–

அந்த வனம் புனிதம் நிறைந்தது; போரிடும் மிருகங்கள் சண்டை போடுவதைக் கைவிட்டுத் திரிந்தன. வந்த விருந்தாளிகளுக்குத் தேவைப்பட்ட பழங்களை மரங்களே தந்து, அவர்களை உபசரித்தன. புதிதாக வேயப்பட்ட இலைகள் உடைய பர்ண சாலைகளில் யாகத் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

இந்தக் காட்சி சாந்தம் தவழும் சூழ்நிலையை ஓவியம் போலக் காட்டுகிறது.

 

வசிட்டரின் ஆசிரமத்துக்குச் சென்ற திலீபன் கண்ட காட்சிகள் (ரகு.2-17/18):——

“காட்டுப் பன்றிகள், அங்குள்ள நீர்ச் சுனைகளில் நின்று கொண்டிருந்தன. மயில் கூட்டம் மரங்களை நோக்கிப் பறந்தன; மான்கள் புற்களை மேய்ந்து கொண்டிருந்தன. முனிவர்கள் ‘இங்குடி’ மர விதைகளை உடைத்து அதிலிருந்து எண்ணை எடுத்து விளக்கேற்றினர்”.

 

இவ்வாறு பலவகை முனிவர்கள், பெண் துறவிகள், காட்டிடை உள்ள ஆசிரமங்களின் வருணனை, காளிதாசனின் படைப்புகளில் பல இடங்களில் உள்ளன. பழங்கால முனிவர்கள், அமைதி தவழும் காடுகளுக்கிடையே எப்படி வாழ்ந்தனர் என்பதை நாம் இவற்றிலிருந்து அறிகிறோம்.

சாகுந்தலம் நாடகம்

 

இதே போல கண்வர் ஆசிரமக் காட்சிகள், சாகுந்தல நாடகத்தில் வருகின்றன.

சாகுந்தலம் நாடகம் முதல் காட்சி:

“நாம் ஒரு தபோவனத்தின் எல்லையில் நிற்கிறோம் என்பது சொல்லாமலே விளங்கும்; மரப் பொந்துகளிலிருந்து காட்டு அரிசி தானியங்கள் உதிரந்திருப்பதைப் பார்க்கவில்லையா? அவைதான் கிளிகளின் கூடுகள்; அதோ பார்; அந்தக் கற்கள் எண்ணை பூசியது போல பளபளவென மின்னுகிறது. அதில்தான் தவ முனிவர்கள் இங்குடிக் கொட்டைகளை நசுக்கி இங்குடி எண்ணை எடுத்துள்ளனர். ந ம்முடைய ரதங்கள் வந்த சப்தத்தையும் பொருட்படுத்தாமல் மான்கள் புற்களை மேய்கின்றன; அதோ தொலைவில் கயிற்றில் உலர்த்துவதற்காகத் தொங்கவிடப்பட்டுள்ள மர உரிகளில் இருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டு இருக்கிறது.

 

“இன்னும் கொஞ்சம் தள்ளிப் பார்; மரங்களைச் சுற்றி வாய்க்கால் வெட்டி நீர் பாயும்படி செய்துள்ளனர். இலைகளின் பசுமையை மறைக்கும்படி ஹோமப் புகை வந்து கொண்டிருக்கிறது மான்கள் கொஞ்சமும் அச்சமின்றி மேய்ந்து கொண்டிருக்கின்றன. தர்பைப் புல் அழகாக வெட்டி விடப்பட்டுள்ளது.”

காட்சி இரண்டில் வரும் வருணனை:

“இதோ ஆச்ரமத்தின் அருகில் வந்துவிட்டோம்; காட்டெருமைகள் காட்டின் சுனைகளில் இறங்கி விளையாடட்டும்;   அவை கொம்புகளால் நீரை, வாரி இறைக்கின்றன.  மரத்தடியில் கூட்டம் கூட்டமாக நிற்கும் மான்கள் மென்று தின்று அசை போடட்டும். வாசனை மிகுந்த கிழங்குகள் விளையும் அந்த சதுப்பு நிலத்தில் காட்டுப் பன்றிகள் தண்ணீரில் விழுந்து புரளட்டும்

 

மேலும்,

“சூரிய காந்தக்கற்கள் தொடுவதற்குக்

குளுமையய் இருக்கும்; ஆனால் அதனுள்ளே

வெப்பம் மறைந்திருக்கும்; மற்றொரு ஒளி அதன் மீது விழவே அவை வெப்பத்தை உமிழும்; அது போலத்தான் தவ சீலர்களும்;

சாந்தமே உருவானவர்கள்; அவர்கள் உல்லத்தே தவத்தின்

சக்தி — ஞானத் தீ – உளது; அதைத் தூண்டும் போது, அது கொழுந்து விட்டு எரியும்.”

இப்படி முழுக்க முழுக்க காட்டின் வருணனையும் தவ சீலர்களின் குணங்களும் புகழப்படுகின்றது.

சகுந்தலை வரும் காட்சிகளில் அவள் எப்படி மான்களுக்கும் பறவைகளுக்கும் உணவு படைக்கிறாள்; மரங்களையும் கொடிகளையும் உடன்பிறவாச் சகோதரிகள் போல கவனிக்கிறாள் என்று அற்புதமாக வருணிப்பான் காளிதாசன்.

விக்ரம ஊர்வசீய நாடகத்திலும் இக்காட்சிகளைக் காணலாம். அங்கே பெண் துறவியரின் தோற்றம்மும் குணங்களும் நம்மைக் கவரும்..

அவைகளைப் படிக்கையில் பழங்கால பாரதத்தின் புகழ்மிகு சித்திரம் நம் மனக் கண் முன்னே தோன்றும்!

–சுபம்–

 

 

காளிதாசன் காவியங்களில் பெண் கல்வி (Post No.3694)

Written by London swaminathan

 

Date: 5 March 2017

 

Time uploaded in London:- 14-20

 

Post No. 3694

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

மாணவ மாணவியர் கல்விப் பயிற்சி பற்றி காளிதாசன் கூறும் கருத்துக்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் உன்னத நிலையைக் காட்டுகிறது. இந்த அளவுக்கு உயரிய கருத்துகள், இந்தியாவைத் தவிர வேறு எங்கும் இருந்ததா என்பது கேள்விக்குறியே. நமக்கு இணையாக அருகில் வருவது கிரேக்க பண்பாடு ஒன்றுதான். சாக்ரடீஸ் (Socrates), பிளாட்டோ (Plato), அரிஸ்டாட்டில் (Aristotle) ஆகியோர் இது பற்றிச் சிந்தித்துள்ளனர். ஆயினும் அவர்களுக்கெல்லாம் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட உபநிஷத்துகளின் முன்னால் — அவர்கள் மலைகளுக்கு முன் நின்று கொசுக்கள் போலவே காணப்படுவர். கேள்வி கேட்டு அதற்குப் பதில் சொல்லும் முறைக்கு — தடை எழுப்பி விடை காணும் பாணிக்கு — சாக்ரடீஸ் முறை (Socratic Method) என்று பெயர் சூட்டீனர் வெள்ளையர். ஆனால் அது உபநிஷதத்திலேயே உள்ளது!

 

காளிதாசன் கருத்துக்களைக் கண்போம்:

யார் நல்ல ஆசிரியர் என்பதை அவன் மாளவிகாக்னிமித்திரம் (மாளவிகா+ அக்னிமித்ரம்)  நாடகத்தில் செப்புவான்:-

நல்ல ஆசிரியர்க்கு அறிவும் அதைக் கற்பிக்கும் திறனும் வேண்டும் என்பான்.

 

“சிலர் நன்றாக நடிப்பார்கள்; இன்னும் சிலர் அந்தக் கலையை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில் வல்லவர்களாக இருப்பர்; இவ்விரு திறமைகளிலும் யார் சிறப்பாக இருக்கிறார்களோ அவர்களே ஆசிரியர்களிடத்தில் முதலிடம் பெறுவர் (1-16)

 

ஸ்லிஷ்டா க்ரியா கஸ்யசித் ஆத்மசம்ஸ்தா

சங்க்ராந்திர் அன்யஸ்ய விசேஷயுக்தா

யஸ்யோபயம் சாது ச சிக்ஷகாணாம்

துரி ப்ரதிஷ்டாபயிதவ்ய ஏவ

–மாளவிகாக்னி மித்ரம் 1-16

 

பாத்திரம் அறிந்து தானம் செய் – என்பது  தமிழ்ப் பழமொழி. இது கல்வி கற்பிப்பதிலும் பொருந்தும்.

புத்திசாலி மாணவர்களுக்குப் போதிக்கும் விஷயங்கள் கடலில் முத்துச் சிப்பியின் வாயில் விழுந்த மழைத்துளிகளுக்குச் சமம் என்பான்.

(சுவாதி நட்சத்திரத்தன்று முத்துச் சிப்பிகளின் வாயில் விழும் மழைத் துளிகள் முத்து ஆகும் என்பது இந்தியர் நம்பிக்கை; முத்து பற்றிய எனது கட்டுரையில் இதை விளக்கியுள்ளேன்)

 

பாத்ர விசேஷம் ந்யஸ்தம்

குணாந்தரம் வ்ரஜதி சில்பமாதாதுஹு

ஜலமிவ சமுத்ர சுக்தௌ

முக்தா பலதாம் பயோதரஸ்ய

–மாளவிகாக்னி மித்ரம் 1-6

சாதாரண இடங்களில் மழை விழும்போது அதனால் பயன் குறைவு. வறண்ட  நிலத்தில் விழுந்தாலோ பூமி உறிஞ்சிவிடும். எங்கு மழை விழுகிறதோ அதைப் பொறுத்தே பலன். இதே போல ஆசிரியரும் ஒரு வகுப்பிலுள்ள 30, 40 பேருக்குப் பாடம் போதிக்கிறார். அவர் வித்தியாசம் பார்ப்பதில்லை. எல்லோருக்கும் சமமான கல்வி. இருந்தபோதிலும் புத்திசாலியான ஓரிருவரிடத்தில் அது முத்துக்களை உண்டாக்குகின்றது.

 

நல்ல அருமையான உவமை. மழையிடமோ ஆசிரியரிடமோ பாரபட்சம் இல்லை; பெறுவோரின் நிலையைப் பொறுத்து அதன் பயன் அமையும்.

கல்வியின் நோக்கம் என்ன?  

கல்வியின் நோக்கம் என்ன?  மேலை நாட்டு மாணவனிடம் கேட்டால் நல்ல சம்பளம் வாங்க நல்ல கல்வி என்பான். சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும்; கற்றவருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு; “உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு” என்பான். ஆனால் உண்மையில் கல்வி என்பது சாகாவரம் தருவதற்காகும். மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று வள்ளுவனும் காளிதாசனும் சொல்வர்:-

 

சைசவே அப்யஸ்த வித்யானாம் யௌவனே விஷயைஷிணாம்

வார்த்தகே முனிவ்ருத்தீனாம் யோகேனாந்தே தனுத்யஜாம்

–ரகுவம்சம் 1-8

 

“இளம் வயதில் கற்கப்பட்ட கல்வியை உடையவர்களும், வாலிபப்  பருவத்தில் சுகத்தை விரும்புபவர்களும் வயோதிகப் பருவத்தில் முனிவர்களின் தொழிலை (தவம்) உடையவர்களும் முடிவில் ஈசுவர தியானத்தினால் உடலை விடுபவர்களுமான ரகுவம்சவத்தரின் சரிதத்தை கூறப்போகிறேன்”.

 

இளமையில் கற்கும் கல்வி, மோட்சத்திற்கு இட்டுச் செல்லும் என்பதே காளிதாசன் கண்ட உண்மை.

 

பெண்களின் கல்வி

குமார சம்பவத்தில் (1-30) உமா கற்ற கல்வி பற்றிக் காளிதாசன் கூறுவதால் அக்காலத்தில் பெண்களின் கல்வி பற்றி அறிய முடிகிறது.

“பூர்வ ஜன்மத்தில் கற்றதெல்லாம் அவளுக்கு நினைவில் இருந்தன. கல்வி போதிக்கப்பட்டவுடன் இவை எல்லாம் நினைவுக்கு வந்தன. இது இலையுதிர்க் காலத்தில் அன்னப் பறவைகள் கங்கை நதிக்குத் திரும்புவது போலவும், இரவு நேரத்தில் மூலிகைச் செடிகளுக்கு அவற்றின் ஒளி திரும்பிவருவது போலவும் இருந்தது”.

(இரவு நேரத்தில் ஒளிவிடும் தாவரங்கள் பற்றிக் காளிதாசன் பல இடங்களில் பாடியுள்ளான்).

 

தாம் ஹம்சமாலாஹா சரதீவ கங்காம்  மஹௌஷதிம் நக்தமிவாத்ம பாசஹ

ஸ்திரோபதேசாமுபதேசகாலே ப்ரபேதிரே ப்ராக்தன ஜன்மவித்யாஹா (1-30)

 

காளிதாசன் படைத்த பெண்களில் சகுந்தலை, இயற்கையிடமிருந்தும், கண்வ முனிவரிடமும் கல்வி கற்றாள்.

 

மேகதூதத்தில் யக்ஷனின் மனைவி ஓவியம் தீட்டல், கவிதை புனைதல், சங்கீதம் ஆகியவற்றில் வல்லவள்!

 

மாளவிகாக்னிமித்ரத்தில், மாளவிகா ஒரு சிறந்த நர்தகி, பாடகி.

 

பொதுவாகப் பெண்கள் விவேகமும், பகுத்தறிவும் உடையவர்கள் என்பது காளிதசனின் கணிப்பு:

 

நிசர்கநிபுணாஹா ஸ்த்ரியஹ (மா.அ. 2)

 

பெண்கள் லட்சுமியின் அவதாரம்; அவர்களுக்கு கணவனே கண்கண்ட தெய்வம் என்பதும் அவனுடைய பொன்மொழிகள்:

லக்ஷ்மீரிவ குணோன்முகீ (ரகுவம்சம் 12-26)

மனைவி என்பவள் இல்லுறை தெய்வம், ஒரு அமைச்சர், நம்பிக்கைக்குரிய ரஹசியங்களைப் பகிரும் நண்பன், கணவனின் சிஷ்யை, தூய்மையின் உறைவிடம், வீரத் தாய் என்றெல்லாம் புகழ்வான். இவை எல்லாம் பெண்களை மிகப் பெரிய மேதாவிகளாகக் காட்டுகின்றன:-

 

க்ருஹிணீ சசிவஹ சகீ மிதஹ ப்ரியசிஹ்யா லலிதே கலாநிதௌ

கருணாவிமுகேன ம்ருத்யுனா ஹரதா த்வாம் வத கிம் ந மே ஹ்ருதம்

–ரகுவம்சம் 8-67

 

நீ எனக்கு மனைவியாகவும் மந்திரியாகவும், தனிமையில் துணைவியாகவும், மனோஹரமான கலைகளின் பிரயோஹத்தில் அன்பிற்குகந்த மாணவியாகவும் இருந்தாய்; ஆகையால் உன்னைக் கவருகின்ற யமன் என்னிடமிருந்து எதைத்தான் பறிக்கவில்லை? சொல் (இந்த எல்லா விஷயங்களையும் நான் இழப்பேன்)

 

 

பத்ரார்சி வீரபத்னீனாம் ஸ்லாக்யாயாம் ஸ்தாபிதா துரி

வீரசூரிதி சப்தோயம் தனயாத்வாம் உபஸ்திதஹ

-மாளவிகா. 5-16

“உன்னுடைய கணவன் காரணமாக வீரர்களின் மனைவியர் வரிசையில் நீ முதலிடம் பெறுகிறாய்; ஆனால் உன் மகன் தான் உனக்கு வீரத்தாய் என்ற பட்டத்தைத் தருகிறான்”

 

–SUBHAM–

ஆதிகால எகிப்திய புலவரின் புலம்பல்; எகிப்திய அதிசயங்கள்-5 (Post No.3654)

Written by London swaminathan

 

Date: 20 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 20-54

 

Post No. 3654

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

எகிப்தில் பழைய அரச வம்சம் (Old Kingdom) முடிந்தவுடன், கி.மு.2200 வாக்கில் பெரும் மாறுதல்கள் நிகழ்ந்தன; கடவுள் என்று கருதப்பட்ட மன்னனின் அதிகாரங்கள் குறைந்து மனிதன் என்ற நிலையை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தார். மன்னரின் கால்களை முத்தமிடுவது கிடைத்தற்கரிய பாக்கியமாக கருதப்பட்ட நிலை மாறி, மன்னரைக் கவிழ்க்கும் முயற்சிகள் பெருகின. இதை நேரில் கண்ட ஒரு புலவர் நமக்காக எழுதிவைத்துச்  சென்றுள்ளார். சுமார் 4000 ஆண்டுகளுக்கு பின்னர் படித்தாலும் அதிலுள்ள கவிநயம் ரசிக்கத்தக்கதாக உள்ளது. இதே போல காளிதாசனும் ரகுவம்சத்தில் தோன்றிய கடைசி சில அ ரசர்கள் பற்றிப் புலம்பியுள்ளார். காஷ்மீரின் சரித்திரத்தை ராஜதரங்கிணி என்ற நூலாக எழுதிய கல்ஹணரும் இதே போல காஷ்மீரில் இந்து சாம்ராஜ்யம் எப்படி சரிந்தது என்று கவி பாடியுள்ளார். கவிஞர்கள் என்றுமே உண்மை விளம்பிகள்!

 

இந்தக் கவிஞரின் பெயர் இபுவேர் (Ipuwer) அல்லது அய்புவேர. அவருடைய கவிதை சிதைந்த நிலையிலேயே கிடைத்துள்ளது. ஆதிகால எகிப்திய இலக்கியத்தில் சிறந்த ஒரு பகுதி என்று கருதப்படுகிறது. இபுவேர் சொல்கிறார்:

 

“அரசன் கிழவன் ஆகிவிட்டான்; அரண்மனைக்குள் பாதுகாப்பாக உள்ளான். அவனுக்குத் தெரியுமா மக்கள் படும்பாடு! அவனைச் சுற்றியுள்ள அதிகாரிகள், அவனுக்கு இதுபற்றித் தெரியாமல் மறைத்துவிட்டனர். எகிப்தைப் பீடித்துள்ள நோய்கள் இரண்டு; அதிகமான வெளிநாட்டினர் தங்கு தடையின்றி உள்ளே வந்துவிட்டனர். அத்தோடு பழைய சமூக நிலை தலை  கீழாக மாறிவிட்டது

இதைப் பற்றித்தான் எல்லோரும் புகார் செய்கின்றனர். வேலைக்காரிகள், மஹாராணிகளின் இடத்தைப் பிடித்துவிடுகிறார்கள்; அதிகாரிகள் சட்டவிரோத ஆட்களின் கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டியுள்ளது. இளவரசர்களின் குழந்தைகளை சுவரில் மோதி கொல்கின்றனர்”.

கடவுள்- அரசன் தொடர்பு மாறியவுடன் அரசன்–மக்கள் தொடர்பும் மாறிவிட்டது நாலாவது (Fourth Dynasty) அரச வம்ச மன்னன் ஒருவன், தனக்கு வேண்டிய ஒரு அதிகாரியை தனது காலை முத்தமிட அனுமதித்தான். அதை அந்த அதிகாரி பெரிய பாக்கியமாகக் கருதினார். இவையெல்லாம் பிறகாலத்தில் நினைத்தும் பார்க்கமுடியாதவை

 

எகிப்தியர்களே இதற்கு முந்தைய ஆயிரம் ஆண்டுகளைப் பொற்காலம் (Golden Age) என்று வருணித்தனர். ரே (Re) என்னும் கடவுளே அக்காலத்தில் ஆண்டதாகக் கருதினர். ஆனால் இபுவேர் என்ற கவிஞர் சொல்கிறார்:

 

“ரே- வுக்கு வயதாகிவிட்டது! அவருடைய எலும்புகள் வெள்ளி ஆகிவிட்டன; சதை தங்கம் ஆகிவிட்டது; அவருடைய தாடி நீலநிறக் கற்களாகிவிட்டன.”

 

கஷ்டகாலத்திலும் கூட கவிஞரின் கற்பனைக்கு யாரும் தடை போட முடியவில்லை. அவர் வருணித்த பொருள்கள் எல்லாம் வெளிநாடுகளில் இருந்து எகிப்துக்குள் வந்தவை.

 

இபுவேர் கி.மு.2000ல் வாழ்ந்தவர் என்றும் அவர் வருணிப்பது அதற்கு 200 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தவை என்றும் கருதப்படுகிறது. ஆனால் அவரது கவிதையை தவிர வேறு எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை.

 

காளிதாசன் புலம்பல்

உலகப் புகழ்பெற காளிதாசனும் ரகு வம்சத்தை துவக்கத்தில் புகழ்கிறான்; பிற்காலத்தில் அது க்ஷீண திசையை அடந்தபோது இகழ்கிறான். மக்களை மதிக்காத மன்னன் ஜன்னல் வழியே கால்களை நீட்டித் தெரியும்படி வைத்து மக்களை அவமானப் படுத்துகிறான்.

 

ரகுவம்சத்தில் 19-ஆவது சர்கத்தில் அக்னிவர்ணன் என்ற மன்னன் பற்றிக் காளிதாசன் கூறுவதாவது:-

 

அழகான ஸ்த்ரீக்களுடன் வசிக்கும் அக்காமுகனது வீட்டில் எப்போதும் மிருதங்க ஒலி கேட்டது. முதல் நாள் கொண்டாட்டத்தை விஞ்சும் அளவுக்கு இரண்டாம் நாள் கொண்டாட்டம் இருக்கும். அந்தப் புரத்தை விட்டு அவன் நகரவில்லை.  ஜனங்களைக் காண விரும்பவில்லை.

மந்திரிகள் கெஞ்சியதால் ஒரு முறை மக்களுக்கு தரிசனம் தந்தான். எப்படி என்றால் ஜன்னல் வழியே கால்களை மட்டும் நீட்டினான. அப்பாதத்தையே வணங்கி மக்கள் பேறுபெற்றதாக எண்ணி மகிழ்ந்தனர். மதுவிலும் மாதுவிடத்திலும் காலம் கழித்தான். அவனே மிருதங்கம் வாசித்து ஆடல் அழகிகளை ஆடச்செய்தான். வேலைக்கரிகளிடம் காதல் கொண்டான்.. இறுதியில் நோய்வாய்ப்படு இறந்தவுடன் அவன் மனைவி அரசாண்டாள்.

 

எகிப்திய கவிஞர் புலம்பல் போலவே காளிதாசனும் புலம்பியது குறிப்பிடத்தக்கது.

 

இதே போல இலங்கையில் நடந்த தீய செயல்களை மஹாவம்சமும் காஷ்மீரில் நடந்த தீய செயல்களை கல்ஹணரின் ராஜதரங்கிணியும் விளக்கமாகத் தந்துள்ளன.

 

சுபம்–

 

 

தொல்காப்பியத்தில் பகவத் கீதை உவமை! (Post No.3513)

Research Article written by London swaminathan

 

Date: 4 January 2017

 

Time uploaded in London:-  15-53

 

Post No.3513

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

ஆதிகாலத்தில் இந்தியர்களுக்கு ஒரே சிந்தனைதான். அவர்கள் உவமைகள் கூட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மேலும் அததகைய உவமைகளை வேறு எந்த பண்பாட்டிலும் காண முடியாது. இதனால் என்ன தெரிகிறது? ஆரியரும் கிடையாது, திராவிடரும் கிடையாது; இமயம் முதல் முதல் குமரி வரை ஒரே சிந்தனைதான். ஒரே பண்பாடுதான். ஒரு உவமையை வைத்து மட்டும் இப்படிச் சொல்லிவிட  முடியாது.  ஏராளமான இடங்களில் இதைக் காணலாம் “யானையால் யானையாத்தற்று” = நாட்டு யானையை வைத்து காட்டு யானையைப் பிடிப்பது என்பதை வள்ளுவனும் சொல்லுவான். அவனுக்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சாணக்கியனும் அர்த்தசாத்திரத்தில் சொல்லுவான்!

 

தொல்காப்பியனும், காளிதாசனும், சங்கப் புலவர்களும் கிருஷ்ண பரமாத்மா என்ன சொன்னாரோ அதையே கிளிப்பிள்ளை மாதிரி திரும்பத் திரும்பச் சொல்லுவர்.

 

ஒரே ஒரு உவமையை மட்டும் எடுத்துக்கொள்வோம்:

முத்துமாலை அல்லது ரத்தின மணிமாலை

 

மத்த: பரதரம் நான்யத் கிஞ்சித் அஸ்தி தனஞ்சய

மயி சர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணி-கணா இவ

-பகவத் கீதை 7-7

தனஞ்சயா! என்னைக் காட்டிலும் உயர்ந்தது வேறு ஒரு சிறிதும் இல்லை; நூலில் மணிகள் போல இவை எல்லாம் என்னிடத்தில் கோர்க்கப்பட்டுள்ளன.

 

இது அவதூதோபநிஷத்திலும் உள்ளது

யேன ஸர்வமிதம் ப்ரோதம்  ஸூத்ரே மணிகணா இவ; தத் ஸூத்ரம் தாரயேத் யோகீ யோகவித் ப்ராஹ்மணோ யதி:

 

தொல்காப்பியர் சம்ஸ்கிருதத்தில் உள்ள சூத்ரம் என்ற சொல்லையே தனது சுருக்கமான விதிகளுக்குப் (1425) பயன்படுத்தியுள்ளார் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். கீழேயுள்ள பகுதியில் நூல் (சரடு) என்ற பொருளில் வருகிறது. தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் நூல்=சூத்ரம் என்றால் ஒரே பொருள்தான்! அதவது சரடு/ நூல் , புத்தகம்

 

நூற்பா=சூத்ரம் 1426

நேரின மணியை நிரல்படவைத்தாங்கு

ஓரினப் பொருளை ஒருவழி  வைப்பது

ஒத்து என மொழிப உயர்மொழிப் புலவர்

 

பொருள்:– ஒரே மாதிரியான மணிகளை வரிசையாகக் கோர்ப்பதுபோல ஓரினப் பொருள்களைத் தொகுத்து ஒரு முறையில் வைப்பதை ஒத்து என்று கூறுவர் சிறந்த புலவர்.

 

சூத்திரம் 1425-ல் சூத்திரம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லையும் சூத்திரம் 1426-ல் மணி என்ற சம்ஸ்கிருதச் சொல்லையும் தொல்காப்பியர் கையாளுவதையும் மறந்துவிடக் கூடாது.

 

இதையே மற்ற புலவர்கள் எப்படிப் பயன்படுத்துகின்றனர் என்பதைப் பார்க்கையில் மேலும் வியப்படைவோம்.

 

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை

அணியில் திகழ்வதொன்று உண்டு (குறள் 1273)

 

பொருள்:-

கோத்த மணியின் ஊடே விளங்கும்  நூலைப்போல என் காதலியின் அழகினுள்ளே (இவள் மறைத்து வைத்தாலும்) தோன்றுகின்ற குறிப்பு ஒன்று இருக்கின்றது.

 

காளிதாசன் பயன்படுத்தும் இடங்கள்:

 

ரகுவம்சம் 1-4; 6-28; 7-10, 8-64, 16-62; விக்ர 5-2, 5-3

எனக்கு முன்னால் இருந்த பெரியோர்களால் செய்ய்ப்பட்ட ராமாயணம் இந்த துவாரமுடைய சூரியவம்சத்தில் என்னுடைய போக்கு, வஜ்ரத்தினால் துளியிடப்பட்ட ரத்தினத்தில் நூல் (எளிதாகச்) செல்லுவது போல இருக்கிறது- ரகுவம்சம்.1-4

 

 

இந்த அங்கதேச மன்னர், பல தேச மன்னர்களை வென்றதால் அவர்களுடைய மனைவிமார் முத்துமாலைகளை இழந்தனர். இப்பொழுது அவர்கள் அழுவதால் விழும் கண்ணீர்த்துளிகள் நூலின்றியே புது முத்துமாலைகள் சூட்டியதைப் போல விளங்கின – ரகுவம்சம்.6-28

 

(இந்த உவமையைப் பல தமிழ்ப் புலவர்கள் பயன்படுத்தி இருப்பதைக் கீழே காண்க)

 

ஒரு பெண் கால் கட்டைவிரலில் நூலைக் கட்டி, அதில் மணிகளைச் சேர்த்து மாலை கட்டிக் கொண்டிருந்தாள். அஜன் வருவதைக் கேட்டவுடனே நூலின் மறுமுனையை விட்டுவிட்டு அவனைப் பார்க்க ஜன்னலுக்கு ஓடினாள். அவள் காலில் நூல் மட்டுமே இருந்தது. மணிகள் சிதறி ஓடின- ரகுவம்சம்..7-10

 

பெண்கள் தனது உள்ளங்கைகளால் தண்ணீரை அடித்து விளையாடினர். அந்த வேகத்தில் அவர்களுடைய முத்துமாலைகள் இற்றுப் போயின. ஆனால் அவர்கள் எழுப்பிய நீர்த்துளியானது அவர்களுடைய மார்பகங்கள் மேல் மணிகள் போல இருந்ததால் மாலை நழுவியதை அவர்கள் உணர  முடியவில்லை.-ரகுவம்சம்.18-62

 

பாதி தொடுக்கபட்ட மேகலை என்னும் வரிகள் ரகுவம்சத்தில் (ரகுவம்சம்.8-64) வருகிறது.

 

சங்கத்   தமிழ் இலக்கியத்தில்

 

அகம்225 (எயினந்தை மகன் இளங்கீரனார்

பூத்த இருப்பைக் குழைபொதி குவீணர்

கழல்துளை முத்தின் செந்நிலத்து உதிர

பொருள்:-

குவிந்த துளை உடைய பூங்கொத்துகள் நூலினின்று அறுந்து விழும் துளையுடைய முத்தைப் போல சிவந்த நிலத்தில் உதிரும்.

 

குடவாயிற் கீரத்தனார் பாடிய (அகம்.315) பாடலில்

கோடை உதிர்த்த குவி கண் பசுங்காய்

அறுநூல் பளிங்கின் துளைக் காசு கடுப்ப

வறு நிலத்து உதிரும் அத்தம்

 

பொருள்:-

நெல்லி மரத்தில் மேல் காற்று உதிர்த்த, குவிந்த கண்ணை உடைய பசிய காய்கள், நூல் அறுபட்டு விழுந்த துளையுடைய , பளிங்குக் காசுகளைப் போல வெற்று நிலத்தில் உதிர்ந்து கிடக்கும் காட்டு நெறி….

 

 

 

இதே புலவர் (அகம்.289) இன்னொரு பாட்டில், ”

கண்பனி நெகிழ்நூல்முத்தின், முகிழ் முலை தெறிப்ப”

பொருள்:-

 

உடன் அவர் இல்லாமையை எண்ணி வருந்த, நூலறுந்து விழும் முத்துக்களைப் போல கண்ணீர் முலை மீது சிந்தக், குற்றம் இல்லாத படுக்கையில் அழகிய மெல்லிய அன்னச்சிறகால் ஆகிய  அணையைச் சேர்த்து………………………………….

 

இளங்கீரனார் ஒவ்வொரு பாட்டிலும் காளிதாசன் பயன்படுத்திய இரண்டு விஷயங்களைப் பயன்பத்துகிறார் என்பது அவர் காளிதாசனைக் கரைத்துக்குடித்தவர் என்பதைக் காட்டும்.

 

குறுந்தொகைப் பாடலில் (51) குன்றியனார் என்னும் புலவர் கூறுவதாவது:-

கூன் முண் முண்டகக் கூர்ம்பனி மாமல்ர்

நூலறு முத்திற் காலொடு பாறித்

துறைதொறும் பரக்குந்தூமணல் சேர்ப்பனை

 

பொருள்:-

வளைந்த முள்ளையுடைய கழிமுள்ளியினது மிக்க குளிர்ச்சியுடைய கரிய மலரானது, நூலற்று உதிர்ந்த முத்துக்களைப் போல காற்றால் சிதறி நீர்த்துறைகள் உள்ள இடம்தொறும் பரவும் தூய மணல் பரப்பை………………

 

குறுந்தொகை  104-ல் காவன் முல்லைப்  பூதனார் என்னும் புலவர் கூறுவதாவது:-

அம்ம வாழி தோழி காதலர்

நூலறு முத்திற் றண்சித ருறைப்பத்

தாளித் தண்பவர் நாளமேயும்

 

பொருள்:-

தோழி, ஒன்று கூறுவன்; கேட்பாயாக, நம் தலைவர் (காதலர்) நூலற்ற முத்துவடத்தினின்றும் தனித்து உதிர்கின்ற முத்துக்களைப்போல, குளிர்ந்த பனித்துளிகள் துளிக்க, குளிர்ந்த தாளியறுகின் கொடியை,  விடியற்காலத்தில் பசுக்கள் மேயும்…………..

கலித்தொகையிலும் (பாடல் 82, மருதக்கலி, மருதன் இளநாகன்) கண்ணீர்த் துளிகளை அறுந்த முத்துமாலைக்கு ஒப்பிடுவதைக் காணலாம்.

 

தமிழ் பக்தி இலக்கியத்தில் நிறைய இடங்களில் முத்துமாலை  கோத்தல், அறுந்த முத்துமாலை உவமைகளை  காணலாம்.

 

“செப்பு மொழி பதினெட்டுடையாள்- எனில்

சிந்தனை ஒன்றுடையாள்” (பாரத தேவி)– பாரதியார்

 

–சுபம்—

 

காளிதாசன் கவிஞனா? விஞ்ஞானியா? (Post No.3445)

b6570-magnet

Research Article Written by London swaminathan

 

Date: 13 December 2016

 

Time uploaded in London:-16-54

 

Post No.3445

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

உலகப் புகழ்பெற்ற கவிஞன் அவனுடைய ஏழு சம்ஸ்கிருதப் படைப்புகளில் கொடுத்த 1200+ அற்புதமான உவமைகளை உலகமே அறியும். உலகத்திலேயே அதிகமான, பொருத்தமான உவமைகளைப் பயன்படுத்தியதால் “உவமைக்கு காளிதாசன் என்ற  பொன்மொழி உண்டாயிற்று. அவனுடைய 1200க்கும் மேற்பட்ட உவமை, உருவக, உத்திகளில் 200 ஐ சங்க காலத் தமிழ்ப் புலவர்கள் பின்பற்றியதால் காளிதாசன் கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்று என்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் நிறுவியுள்ளேன்.

 

இப்பொழுது அவன் தந்த வியத்தகு அறிவியல் உண்மைகளை அலசுவோம்:

 

காளிதாசன் பேசாத பொருளே இல்லை. அவனைப் போல இலக்கிய நயமும், என்சைக்ளோபீடியா போன்ற அறிவு வீச்சும் காண்பதற்கரிது.

 

இரண்டு விஷயங்களை காளிதாசன் எப்படிச் சொன்னான் என்பது இன்று வரை எவருக்கும் புரியவில்லை.

 

குமரசம்பவம் என்னும் காவியத்தில் முதல் பத்துப் பாடல்களில் இமய மலையின் அற்புத அழகை வருணிக்கும் போது அதை உலகத்தின் அளவுகோல் (ஸ்கேல்/ ரூலர்) என்கிறான். இன்று நவீன வசதிகள் இருப்பதால் அதை 1500 மைல் நீளம் உடையது என்பதை நாம் அறிவோம். அது விண்வெளியிலிருந்து தெரியும் விஷயங்களில் ஒன்று என்று விண்வெளிக் கப்பல் விட்டதால் அறிகிறோம். காளிதாசன் கி.மு முதல் நூற்றாண்டில், அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன் வசித்தவன். எப்படி இது இவ்வளவு நீளமானது? உலகின் அளவுகோல் என்று தெரிந்தது? என்பது வியப்பான விஷயமே. தென் அமெரிக்காவிலுள்ள ஆண்டீஸ் மலை சுமார் 4000 மைல் நீளமிருந்தாலும் அதெல்லாம் உலகின் பழைய நாகரீகம் இல்லாத இடங்களில் இருக்கிறது.

ஆனால் இமயமலையோ உலகின் முக்கிய நாகரீகங்களுக்கு இடையில் இருக்கிறது. வேறு யாரும் சொல்லாத விஷயத்தை அவன் போகிற போக்கில் சொல்லிச் செல்லுகிறான்.

 

இவனுடைய பூகோள அறிவுக்கு இது மட்டும் சான்றல்ல. ஈரான் நாட்டில் தேன் அடை போல தாடி வைத்திருக்கும் பாரசீகர் முதல், இந்தோநேஷியத் தீவுகளில் கிடைக்கும் வாசனைத் திரவியங்கள் வரை இவன் காவியத்தில் உள்ளன. தமிழ்நாடு-கர்நாடகத்திலுள்ள சந்தனமரப் பாம்பு முதல் பாண்டியன் – அகஸ்தியன் உறவு வரை பேசுகிறான். சங்கத் தமிழ் இலக்கியத்தில் கூட அகத்திய-பாண்டியன் உறவு பேசப்படவில்லை!

 

 

இவன் சொன்ன இரண்டாவது விஷயம் இமய மலை விஷயத்தைவிட வியப்பானது. விமானம் ஓட்டப் பயிற்சி செய்யும் பைலட் PILOTடுகள் முதல்தடவை பறக்கும்போதும் தரை இறங்கும் போதும் பயந்து விடுவார்கள். பூமியில் விமானம் வேகமாகத் தரை இறங்கும்போது நம் மீது வெகு வேகமாக மோத வருவது போல பூமி நம்மை நோக்கி விரைந்துவரும். இந்தக் காட்சியை காளிதாசன் வருணிக்கிறான். அவனுக்கு எப்படி இந்த அனுபவம் கிடைத்தது? மேலும் இது பற்றியும் மனதினால் இயங்கக் கூடிய விமானம் பற்றியும் பேசுவதால் அவனுடைய காலத்தில் இதுபற்றி நிறையபேருக்கு நல்லறிவு இருந்திருக்கவேண்டும்.

 

ae12d-gems

ஒளிவிடும் மரங்கள், பறவைகள் குடியேற்றம், இரும்பை இழுத்துக் கவரும் காந்தம், சூரிய ஒளியைக் குவித்து நெருப்பு உண்டாக்கும் சூரியகாந்தக் கல் (உருப்பெருக்காடி), பலூனில் பறத்தல் ஆகியவற்றைப் பற்றியும் பாடுகிறான்.

 

உலகில் இன்று ஏதாவது ஒரு நாட்டிற்குப் போக வேண்டும் என்றால் அந்த நாடு அல்லது நகரம் பற்றிய TOURIST GUIDE டூரிஸ்ட் கைட்-ஐ விலைக்கு  வாங்குவோம். இதை வெளியிட பிரபல கம்பெனிகள் இருக்கின்றன. உலகின் முதல் டூரிஸ்ட் கைட் TOURIST GUIDE  காளி தாசனின் மேக தூதம்தான். நூற்றுக்கும் மேலான பாடல்களில் “மேகமே நீ இதைப் பார் அதைப்பார்” என்று வருணிக்கிறான். அதே போல இலங்கையிலிருந்து சீதையை விமானத்தில் அழைத்துவரும்போது ராமன் வாயிலாக திமிங்கிலம் முதலியவற்றை வருணிக்கிறான். சைபீரியாவிலிருந்து வரும் பறவைகள் இமயமலை மீது பறக்க முடியாது. ஏனெனில் 20000 அடிக்கு மேல் உயரமுடையது. அவை எல்லாம் நீதி பாஸ் என்னும் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழையும். இதையெலாம் பாடுகிறான் நம் கவிஞன்! இவனுடைய இலக்கிய நயத்தையும் சாகுந்தல நாடகத்தின் இனிமையையும் உலகம் அறியும். ஆனால் இவனுக்கு எல்லா துறைகளிலும் அறிவு இருந்தது; அவன் சகல கலா வல்லவன் என்பது பலருக்கும் தெரியாது.

 

திருமணமாகி புதுவீட்டுக்குச் செல்லும் பெண்ணுக்கு அவன் சொல்லும் அறிவுரை சாகுந்தலத்தில் உள்ளது . இவனுக்கு சைகாலஜியும் (Psychology)  தெரியும் என்பதற்கு அதுவே சான்று.

 

இரத்தினக் கற்கள், நகைகள், தங்கம், வெள்ளி, முத்து, பவளம் பற்றியும் இவன் பாடுகிறான்.(இவை பற்றியெல்லாம் தனித் தனி கட்டுரைகளை இதே பிளாக்கில் ஐந்து ஆண்டுகளாக வெளியிட்டதால் இங்கு குறிப்புகளை மட்டும் கொடுக்கிறேன்). காளிதாசனைப் படிக்காத ஒருவனுக்கு இந்திய இலக்கியம் பற்றியோ பண்பாடு பற்றியோ பேச 100 சதவிகித அருகதை கிடையாது. 50 முதல் 60 சதவிகித அருகதையே. இதையே நான் வட இந்தியர்களுக்கும் சொல்லுவேன். நீங்கள் காளிதாசனையும் வால்மீகியையும் வியாசனையும் படித்தாலும் சங்கத் தமிழ் இலக்கியத்தையும் அதற்குப்பின் வந்த திருக்குறள்- சிலப்பதிகாரம் ஆகிய இரண்டையும் படிக்காதவரை உங்கள் அறிவு 50 முதல் 60 சதவிகிதமே என்று சொல்லுவேன்.

a7747-best2bbird2bmigration

 

கீழேயுள்ள குறிப்புகளைக் கொண்டு நீங்களே நான் சொன்ன விஷயங்களை ஆராயலாம்:–

 

ரகுவம்சம்- Rv

குமார சம்பவம்- KS

மேகதூதம் -Mega

விக்ரம ஊர்வசீயம்- VU

மாளவிகா அக்னிமித்ரம் – MA

அபிஞான சாகுந்தலம் – AS

ருது சம்ஹாரம் – RS

 

விமான இயல்

Sakuntalam Act 1—9 (Read my article: Did Kalidasa fly in a space shuttle? Posted on 12 Sept.2014)

Sakuntalam Act 7—7/10; Ks2-45;Rv 13-68;13-76;13-79;14-20

 

 

பறக்கும் பலூன்

Rv 16-68

 

வானத்திலுள்ள மூவழிப்பாதை

 

Flight path Rv 13-18, 13-19

xxx

Picture saved with settings embedded.

விண்வெளி இயல்

பால்வெளி மண்டலம் (Milky way) Rv 13-2; 1-78; KS 4-37;1-28; Rv 12-85

 

Chitra constellation Rv 1-46, 13-76, 17-35 pole star 18-34;

Comet KS 2-32; AS 4; Mars vu 5-3

Pusya star Rv 18-32;

Venus KS 3-43;

Stars KS 2-19; RV 7-2;

Meteor Rv 16-83; 14-53;

Algol/Arundhati in Ursa Major Constellation: Rv 1-56

Rohini and Moon:AS 7-22; 3-12; VU 3-4; RV 14-40

 

xxx

பறவைகள் குடியேற்றம்

Kalidasa’s references of swan, cranes and Himalayan geese: Mega. 11,23, 59, 70,81.

Vikra. IV 2,3,4,6,20;31,32,33,3441,54

BIRD MIGRATION :Vikra IV 14 to 17

Kumara. 1-30 (Hamsa mala)

Ragu. IV 19,VIII 59, XIII-33, XVI 33, 56, XVII-75

Malavika.II-2

Rv 1-41

 

xxxx

நிலவியல் Geography and Geology

 

KS 1-10 (Description of the beautiful Himalayas)

Sub marine Fire (Vadamukagni/Badava:- AS 3-3; Rv 9-82; 11-75; 13-4;13-7.

Lot of references about rivers, especially Ganga and Yamuna

 

a99ba-iaf2bplane

xxxx

இரத்தினக் கற்கள்

 

Cat’s eye RS 2-15; Coral  RS 6-16; Conch shell RS 3-4; Crystal Purva Megam 54; Emeralds/Rubies-Rv 13-53; Gems-PM 15, KS 1-38, KS 5-43, KS 5-45, Rv 1-4, Rv 3-18, Rv 10-30, Rv 11-59, Rv 11-68, RV 17-63, VU 2-99, MA 5-18, AS 2-7, AS 2-10, AS 6-6, Sapphire Rv 18-42; Pearl Rv 6-7, UM 46, KS 1-44, KS 3-53, KS 6-6KS 7-89, Rv 6-28, Rv 9-44,Rv 13-54, Rv 16-18; Rubies KS 3-53; Sun stone Rv 11-21; Moon stone VU 5-11; Ivory PM 62

 

லென்ஸ் Magnifying Glass (Lens)

Sun stone Rv 11-21; AS 2-7

 

நாகரத்தினம் (Cobra Jewel)

KS 2-38, 5-43; RV 13-12, 6-49, 11-59, 11-68, 17-63, 10-7, 13-12, 17-63

RS 1-20,

xxxx

 
காந்தம் Magnet –

Rv-18-63; KS 2-59;

xxx

 

சுற்றுப்புற சூநிலையியல் Environmental concern

Don’t Cut even a poisonous tree

KS 2-55

xxxx

 

 

ஒளிவிடும் தாவரம் Bio Luminescent Plants-

KS 1-10; Rv 9-70

 

 

உள்ளவியல்/ மனவியல் Human psychology

Advice to newlyweds: AS 4-20; 4-21;4-22

xxx

 

—Subham—

திமிங்கிலம் பற்றிக் காளிதாசனும் சங்கப் புலவர்களும் தரும் அதிசயத் தகவல் (Post No.3426)

Research Article Written by London swaminathan

 

Date: 7 December 2016

 

Time uploaded in London: 9-50 am

 

Post No.3426

 

 

Pictures are taken by Tamil Conference Booklet.

 

contact; swami_48@yahoo.com

 

(English version of this research article is also posted)

2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காளிதாசனும் சங்கப் புலவர்களும் கடலில் வாழும் திமிங்கிலங்கள் பற்றி அரிய தகவல்களைக் கூறுகின்றனர். அவ்வப்பொழுது நாடு முழுதும் உள்ள கடற்கரைகளில் இறந்துபோன திமிங்கிலங்கள் கரை ஒதுங்குவதையும், சில நேரங்களில் உயிருடன் கரை ஒதுங்கி தத்தளிப்பதையும் பத்திரிக்கைகளில் படிக்கிறோம். ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன் திமிங்கிலங்கள் நம் நாட்டுக் கரை ஓரமுள்ள கடற் பகுதியில் வந்து சென்ற விஷயங்களைக் காளிதாசன் பாடலும் காளிதாசன் புலவர் பாடல்களும் காட்டுகின்றன.

 

இப்போது அவை நம் நாட்டுக் கடற்பகுதிகளில் வசிப்பதில்லை. நம்மவர்கள் வேட்டையாடி அழித்திருக்கலாம் அல்லது கடல் வெப்ப நிலை மாற்றத்தால் அவை வேறு பகுதிகளுக்குச் சென்றிருக்கலாம்.

இதோ காளிதாசன் பாடல்:

 

காளிதாசன் கண்ட அற்புதக் காட்சி இது; திமிங்கிலங்கள் ஏராளமான மீன்களுடன் கூடிய தண்ணீரை உறிஞ்சி, மீன்களை வாயில் வைத்துக் கொண்டு, தலையிலுள்ள ஓட்டை வழியாக நீரைப் பாய்ச்சுவதைக் காளிதாசன் கண்டு மகிழ்ந்துள்ளான். இதை எல்லாம் விமானத்திலிருந்து இராமபிரான், சீதைக்குக் காட்டுவதாக கவி புனைந்துள்ளான் காளிதாசன்.

சசந்த்வமதாய நதீமுகாம்ப: சம்மீலயந்தோ விவ்ருதானனத்வாத்

அமீ சிரோபிஸ்திமய: சரங்ரைரூர்த்வம் விதன்வதி ஜலப்ரவாஹான்

ரகுவம்சம் 13-10

அமீ-இந்த, திமய: – திமிங்கிலங்கள்,  விவ்ருத் ஆனனத்வாத்- – திறந்த வாய்களை உடையதால், சமத்வம் – பிற கடல்வாழ் உயிரினங்களுடன் கூடிய, நதீமுகாம்ப:- ஆற்றின் முகத்வார நீரை,  ஆதாய- எடுத்து, சம்மீலயந்த: – வாய்களை மூடிக்கொள்கின்றன, சரங்க்ரை:- துளைகளுடன் கூடிய தலைகளின் வழியாக நீர்ப்பெருக்கை, ஊர்த்வம்- மேல் நோக்கி, விதன்வந்தி- விடுகின்றன.

(திமிங்கிலங்கள் உண்மையில் மூச்சுக் காற்றை வெளியேற்றவே கடலின் மேல் மட்டத்திற்கு வருகின்றன. அவை மேல் மட்டத்துக்கு வரும்போது வீசும் மூச்சுக் காற்று நீரில் குளிர்ந்து நீர்த்துளி ஆவதாலும், காற்றுடன் கடல் நீர் வீசுவதாலும் தண்ணீர் தெளித்தது போலாகிரறது. மேலும் திமிங்கிலங்களின் நீச்சலாலும் நீர்த்திவலைகள் வெளியே வரும். அதன் தலை ஓட்டையிலிருந்து வருவது மூச்சுக் காற்றுதான்; தண்ணீர் அல்ல என்பது விஞ்ஞான உண்மையாகும்)

தமிழ்க் கடலில் திமிங்கிலங்கள், Whales & Sperm Whale

Whales

இதோ சங்கப் புலவர்களின் திமிங்கிலப் பாடல்கள்:–

2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டுக் கரை ஓரமாக திமிங்கிலங்கள் கூட்டம் கூட்டமாகச் சென்றிருக்க வேண்டும். ஏனெனில் திமிங்கிலங்கள் தலையிலிருந்து உயரே பாய்ச்சும் நீரானது, காற்றினால் அடித்துவரப்பட்டு  மீனவர் குடிசைகள் மீது விழுந்ததாகத் தமிழ்ப் புலவர்கள் பாடுகின்றனர். அது மட்டுமல்ல தலையில் அதிக எண்ணையுடன் வரும் SPERM WHALE ஸ்பேர்ம் வேல் – எனப்படும் திமிங்கிலம் பற்றியும் பாடுகின்றனர். இது தவிர சுறாமீன்கள் செய்யும் அட்டூழியங்கள், வலைகளைக் கிழித்துக் கொண்டு வெளியேறுவது ஆகியன பற்றியும் பாடியுள்ளனர். இப்பொழுது தமிழ்நாட்டின் கரை ஓரங்களில் திமிங்கிலங்களைக் காணமுடியாது. எப்போதாவது வழி தவறி, திசை மாறி அடித்துவரப்படும் திமிங்கிலங்களை மட்டுமே பார்க்கலாம்.

 

பேர் ஊர் துஞ்சும்; யாரும் இல்லை;

திருந்துவாய்ச் சுறவம் நீர் கான்று, ஒய்யெனப்

பெருந்தெரு உதிர்தரு பெயலுறு தண் வளி

போர் அமை கதவப் புரைதொறும் தூவ,

கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல்நகர்ப்

…………………

நற்றிணைப் பாடல் 132

 

பெரிய ஊர் உறங்கும் வேளை; தூங்காதவர் யாரும் இல்லை; பெரிய வாயுடைய திமிங்கிலம் தண்ணீரைப் பாய்ச்சும். குளிர்ந்த காற்று ஒய்- என்ற ஒலியுடன் வீசும்;  அந்தக் காற்றில் திமிங்கிலத் தலையிருந்து பொங்கும் நீர் அடித்து வரப்படும். கடலோரமாகவுள்ள மீனவர் வீடுகளில் அது மழைபோலப் பெய்யும்; இரட்டைகதவுகளின் துவாரம் வழியாக அது வீட்டுக்குள்ளேயும் தெரிக்கும்.

Sperm whale

கபிலர் பாடிய நற்றிணைப் பாடல் 291-ல் எண்ணைத் தலையுடைய SPERM WHALE ஸ்பெர்ம் வேல் பற்றிப் பாடுகிறார்:-

 

நீர்பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல்

நெய்த்தலைக் கொழு மீன் அருந்த, இனக் குருகு

குப்பை வெண்மணல் ஏறி, அரைசர்

ஒண்படைத் தொஉகுதியின் இலங்கித் தோன்றும்

தண் பெரும் பௌவ நீர்த்துறைவற்கு

……………….

 

இது ஒரு கடற்கரைக் காட்சி; எண்ணைச் சத்தை அதிகமாகக் கொண்ட தலையையுடைய ஒரு திமிங்கிலம்  வழிதவறிப்போய் கடற்கரையோர சேற்றில் சிக்கிக் கொண்டது. அதைச் சாப்பிட பெரிய கொக்குக் கூட்டம் வெண்மணலில் குவிந்துவிட்டன. அது எப்படி இருக்கிறது என்றால் ஒரு அரசரின் படை போல உள்ளது.

 

நற்றிணைப் பாடல் 175-ல் மீன் எண்ணை பற்றிய குறிப்பு வருகிறது. மீன் பிடித்து வந்த பரதவர் (மீனவர்), மீன்களைக் கடற்கரையில் குவித்துவிட்டு பெரிய கிளிஞ்சல்களில் மீன் எண்ணையை ஊற்றி விளக்கு ஏற்றுவர் என்று ஒரு புலவர் பாடி இருக்கிறார். இது சுறா போன்ற எண்ணைச் சத்துடைய மீன்களில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணையாக இருக்கலாம். இதுதான் மீனவர்களின் எரிபொருள்.

Sperm Whale

நெடுங்கடல் அலைத்த கொடுந்திமிற் பரதவர்

கொழுமீன் கொள்ளை அழி மணல் குவைஇ

மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய

சிறு தீ விளக்கில் துஞ்சும்……………

 

கம்பனும் கூட திமிங்கில எலும்புக்கூடு பற்றி ஒரு பாடலில் கூறுகிறான்

அண்டமும் அகிலமும் அடைய அன்று அனலிடைப்

பண்டு வெந்தென நெடும் பசை வறந்திடினும் வான்

மன்டலம் தொடுவது அம் மலையின் மேல் மலை எனக்

கண்டனன்  துந்துபி கடல்  அனான் உடல் அரோ

 

தென்புலக் கிழவன்  ஊர் மயிடமோ திசையின் வாழ்

வன்பு உலக்கரி மடிந்தது கொலோ மகரமீன்

என்பு உலப்புற உலர்ந்தது கொலோ இது எனா

அன்பு உலப்பு அரிய நீ உரை செய்வாய் என அவன்

 

துந்துபிப் படலம் , கிட்கிந்தா காண்டம்

 

பொருள்:-

மிகுந்த ரத்தம் வற்றிப் போயிருந்தாலும், ஊழித்தீயில் வெந்தது போன்றும் வான மண்டலத்தைத் தொடுவது போன்றும், கடல் போலப் பரவிக் கிடக்கும் துந்துபி என்னும் அசுரனின் உடல் எலும்புக் குவியலை, ருசியமுக மலையில் கண்டான்; அது வேறு ஒரு மலைபோலக் காணப்பட்டது.

 

அதைப் பார்த்த ராமன் சொன்னான்:- இது என்ன தென் திக்கில் பயணம் செய்யும் எமதர்மனின் வாகனமான எருமைக் கடாவா? திக்குகள் தோறும் உள்ள யானைகள் இறந்து கல்லானதோ! மகரம் என்னும் பெரிய  மீன் இறந்தபின்னர் உலர்ந்து கிடக்கும் எலும்புக்கூடா? என்று வியந்து சுக்ரீவனை நோக்கி உனக்குத் தெரிந்ததைச் சொல் என்றான்.

Whale Bone

உடனே துந்துபி என்னும் அரக்கனை வாலி கொன்ற வரலாற்றைச் சுக்ரீவன் சொன்னான்.

இங்கு வருணிக்கப்படும் மகர மீன் சுறாமீன் அல்ல; பெரிய திமிங்கிலமாகும். மகர என்ற சொல்லை டால்பின், சுறாமீன், திமிங்கிலம் ஆகிய எல்லாவற்றிற்கும் பயன்படுத்துவர்.

 

—subham–

 

இந்துக்களின் கண்டுபிடிப்பு: ஏழு வகை மழை, ஏழு வகை காற்று (Post No 2878)

earth-atmosphere-layers

Research Article written  by London swaminathan

 

Date: 8 June 2016

 

Post No. 2878

 

Time uploaded in London :–  17-45

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

உலகின் முதல் நிகண்டான அமரகோசத்தில் மேகத்துக்கு 15 சம்ஸ்கிருத சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏழு வகை அதிசய மழைகளையும் சம்ஸ்கிருத நூல்கள் உரைக்கின்றன. காளிதாசனின் சாகுந்தல நாடகத்துக்கு உரை எழுதியோர் ஏழு வகை ஆகாய மார்கங்களையும் எடுத்துக் காட்டுகின்றனர். இவைகளில் 75 விழுக்காட்டுக்கு விஞ்ஞான விளக்கம் கிடைக்கிறது. மீதியை இனித்தான் விஞ்ஞானம் கண்டுபிடிக்குமோ!

 

ஏழுவகை மழைகள்:-

சம்வர்த்தம் – மணி (ரத்தினக் கற்கள்)

ஆவர்த்தம்- நீர் மழை

புஷ்கலாவர்த்தம்- பொன் (தங்க) மழை

சங்காரித்தம் – பூ மழை (பூ மாரி)

துரோணம் – மண் மழை

காளமுகி- கல் மழை

நீலவருணம் – தீ மழை (எரிமலை, சுனாமி)

cloud_types

இந்த ஏழு வகை மழைகளில் நாம் எல்லோரும் அறிந்தது நீரைப் பொழியும் மழை.

மற்ற மழைகளைப் பற்றி பத்திரிக்கைகளிலும் புத்தகங்களிலும் படித்து வியக்கிறோம். சில எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம்.

தங்க மழை:

ஆதி சங்கரர் சிறு வயதில் ஒரு வீட்டு வாயிலில் நின்று “பவதி பிக்ஷாம் தேஹி” (தாயே! பிச்சை போடுங்கள்) என்று சொன்னார். அந்த வீட்டுப் பெண்மணி, பரம ஏழை. ஓடிப்போய் சமையல் அறையில் பார்த்தாள்; ஒன்றும் கிடைக்கவில்லை. பாத்திரங்களை உருட்டினாள். ஒரு ஊறுகாய் ஜாடியின் கீழே ஒரே ஒரு நெல்லிக்காய் ஒட்டிக்கொண்டிருந்தது. ஓடோடி வந்து அதைப் பிச்சைப் பாத்திரத்தில் போட்டார். சங்கரனின் கண்களில் இருந்து கண்ணீர் ‘பொல பொல’ என்று உருண்டோடியது. பரம கருணை மிக்க தாயே! உனது நல்லாட்சியில் இப்படி ஒரு வறுமையா? என்று அம்பாளை வேண்டி ஒரு துதி பாடினார். தங்க நெல்லிக்காய்கள் மழையாகப் பொழிந்தது. அந்தத் துதியின் பெயர், ‘தங்க மழை போற்றி’ (கனகதாரா தோத்திரம்).

பூ மழை

தேவர்கள் சந்தோஷப் படும்போதெல்லாம் பூ மாரி பெய்ததாக நமது புராணங்கள் பேசுகின்றன. அது உண்மையோ இல்லையோ நாம் அரசியல் தலைவர்கள் மீது பூ மாரி பெய்யும் பல படங்கள் அவ்வப்போது வெளி வருகின்றன. இதுபோல உற்சவ காலங்களில் கடவுள் சிலை மீது பூ மாரி பெய்கிறோம். திருமணத்தில் ஆசீர்வாத காலத்தில் மணமக்கள் மீது பூ மழை பெய்கிறோம். பிராமணர்கள் ‘யோபாம் புஷ்பம் வேதா’ – என்ற நீண்ட மந்திரம் சொல்லி இறைவனுக்கு பூமாரி பெய்வதுமுண்டு.

sandstorm

 

மண்மழை

உறையூரும், திருமலைராயன் பட்டிணமும் எப்படி மண்மழையில் அழிந்தது என்று முன்னரே எழுதிவிட்டேன். கீழ்கண்ட எனது கட்டுரையைப் படிக்கவும்.

மணலில் புதைந்த இரண்டு தமிழ் நகரங்கள் ( 7 டிசம்பர் 2013)

Sand Storms destroyed Two Tamil Towns! (7-12-2013)

 

பாலைவனத்தில் அவ்வப்பொழுது மணற் புயல் ஏற்பட்டு விமான சர்வீஸ் ரத்தாவது வட ஆப்பிரிக்க நாடுகளிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் வசிப்போருக்குத் தெரியும். சஹாரா பாலவன மண், ஐரோப்பா வரை வந்து வானிலை மாற்றங்களை உண்டாக்குவதையும் பத்திரிக்கைகளில் காணலாம்.

கல் மழை

சில நேரங்களில் ஐஸ்கட்டி மழை பெய்கையில் அதை ஆலங்கட்டி மழை என்போம். பெரிய பெரிய கூழாங்கற்கள் அளவுக்கு பனிக்கட்டி விழும். ஆனால் சில நேரங்களில் காற்றின் சுழற்சி காரணாமாக மேகங்கள் நீர் நிலைகளிலுள்ள மீன்கள், தவளைகள், கற்களுடன் மழை பெய்த செய்திகளையும் நாளேடுகளில் படிக்கிறோம்.

 

எரிமலை அருகில் வசிப்போருக்கு கல் மழை மிகவும் சர்வ சாதாரணம். இது தவிர பூமி தனது வட்டப் பாதையில் செல்கையில் ஆண்டுதோறும், சில குட்டி கிரகங்கள், விண்கற்கள் ‘பெல்ட்’டைக் கடக்கையில் எரிகற்கள் மழை பெய்வதுண்டு. அவைகளில் பெரும்பாலானவை காற்று மண்டலத்தில் எரிந்து விடும்.

 

Tungurahua-volcano-

தீ மழை

சுனாமி வருகையிலும், எரிமலை பொங்குகையிலும் தீ மழை பொழிகிறது. சுனாமி பேரலைகள் மிகவும் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்வதால், கடலில் தீ தோன்றும் அதிசயச் செய்திகளுமுண்டு.

காளிதாசர் தரும் அற்புதச் செய்தி

காளிதாசர், சாகுந்தலம் என்ற நாடகம் செய்திருக்கிறார். அதில் (7-5) காற்று மண்டலம் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதில் நமது விமானம் எந்தப் பிரிவில் உள்ளது என்று மன்னர் கேட்கிறார். அதற்கு உரைகாரர்கள் எழுதிய உரையில் இந்து புராணங்கள் வாயு மண்டலத்தை ஏழு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் கொடுத்திருப்பதை எடுத்துக் காட்டுகின்றனர்.

முதலாவது வாயு ஆவாஹ என்றும் அது  புவர்லோகத்தில் பாயும் என்றும் அந்தப்பிரிவில் பூலோகம், பாதாள லோகம், மற்றும் சூரியன் வரையுள்ள வாயு மண்டலம் அடங்கும் என்றும் உரைகாரர் கூறுவர். மற்ற ஆறு வாயு மண்டலங்களும் சுவர் லோகத்தில் (சுவர்க) இருப்பதாகவும் சொல்லுவர். இதிலுள்ள இரண்டாவது வழி ப்ரவாக என்றும் இந்த வாயுதான் சூரியனைச் சுற்றச் செய்கிறது என்றும் சொல்கின்றனர். மூன்றாவது வாயு சம்வாஹ- அது சந்திரனை இயங்கச் செய்கிறது. நாலாவது நட்சத்திர மண்டலம்; அங்கே உத்வாஹ என்னும் காற்றுள்ளது. ஐந்தாவது கிரகங்கள் அருகிலுள்ள காற்று; அதன் பெயர் விவாஹ; ஆறாவது காற்று சப்தரிஷி மண்டலத்தில் இயங்கும் அதன் பெயர் பரிவாஹ. அதுதான் பால்வளி மண்டலம் – மில்கி வே –  நட்சத்திரப் பகுதி. அங்கேதான் இப்பொழுது இந்திரனுடைய விமானம் சென்று கொண்டிருக்கிறது.

 

ஏழாவது வாயு துருவ நட்சத்திரப் பகுதியில் உள்ளது. அந்த துருவன் தான் எல்லா நட்சத்திரங்களியும் கிரகங்களையும்  சக்கரத்திலுள்ள ஆரம் எல்லாம் அச்சாணியில் இணைக்கப்பட்டிருப்பது போல கட்டி வைத்திருக்கிறான்.  அங்கே இயங்கும் காற்று பரவாஹ.

chart-cloud-types

அறிவியல் சிந்தனை:

விஷ்ணு புராணத்திலும் இக்கருத்துள்ளதால் 2000 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் மில்கி வே, சப்தரிஷி மண்டலம் வரை சிந்தித்துள்ளனர் என்று தெரிகிறது. எல்லாம் ஓவியத்தில் வரைந்த படங்கள் போலில்லாமல் இயங்குவதையும் அறிந்திருந்தனர். அவர்கள் சொல்லும் வாயுவை நாம் காற்று என்று மொழிபெயர்க்காமல்  பலவித கதிர்கள், அலைகள், ஒலிகள் என்று பொருள் கொள்ள வேண்டும். முதலில் இப்படி மேகங்களையும் காற்று மண்டலத்தையும் பிரித்த முதல் விஞ்ஞானிகள் இந்துக்களே. இப்போது நாம் மேகங்களை வேறுவிதமாகப் பிரிப்ப்தை வானிலை இயல் நூல்களில் காண்கிறோம். அறிவியல் சிந்தனை இருந்தால்தான் இப்படிப் பலவகை பிரிவுகளைச் செய்திருக்க முடியும்.

அமரகோசத்தில் 15 பெயர்கள்

உலகின் முதல் நிகண்டான (திசாரஸ்) அமரத்தில் கீழ்கண்ட பெயர்கள் மேகம் என்ற பொருளில் வழங்கப் படுவதாக அமர சிம்மன் சமஸ்கிருதத்தில் எழுதியுள்ளார்:–

அப்ரம், மேக:, வாரிவாஹ:, ஸ்தனயுத்னு:,

பலாஹக:, தாராதர:, ஜலதர:, தடித்வான், வாரித:, அம்புப்ருத், கண:, ஜீமூத:, முதிர:, ஜலமுக், தூமயோணி:.

மேகக் கூட்டத்துக்கு மேக மாலா, காதம்பினி என்று பெயர்.

 

தமிழில்:– கொண்டல், கொண்மூ, புயல், கார், மாரி, முகில், மங்குல், விண்டு, ஊரி, மாசு, மஞ்சு, எழில், செல், மை என்ற சொற்கள் மேகத்துக்கு உண்டு.

சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்தில், ஞாயிறு, திங்கள் ஆகியவற்றுடன் மழைக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வள்ளுவர் வான் சிறப்பு என்று பத்து குறள் பாடி கடவுள் வாழ்த்துக்கு அடுத்த அதிகாரமாக வைத்திருப்பதும் மேகத்தின், மழையின் சிறப்பை விளக்கும்.

காளிதாசனும் தமிழ் புலவர்களும் கடல், ஆறு, ஏரி, குளம் ஆகியவற்றின் நீர்தான் ஆவியாகி, மேகமாகி, மழையாகப் பொழிகிறது என்று தெள்ளத் தெளிவாகப் பாடி வைத்துள்ளனர். ஓரிடத்தில் அல்லது ஈரிடத்தில் மட்டுமல்ல. பல நூறு இடங்களில் பாடிவைத்துள்ளனர்.அவர்கள் முதல் முதல் தோன்றிய வானிலை இயல்துறை நிபுணர்கள் என்றால் மிகையாகாது!!

ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியவர்- லண்டன் சுவாமிநாதன்.

–சுபம்–