Date: MARCH 30, 2018
Time uploaded in London- 5-49 am
Compiled by S NAGARAJAN
Post No. 4864
PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
சம்ஸ்கிருதச் சிறப்பு :
நீங்கள் படிப்பது அயர்லாந்து சம்ஸ்கிருத ஆசிரியர் ரட்கெர் கோர்டன்ஹார்ஸ்ட் நிகழ்த்திய உரை!
என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? -3
ச.நாகராஜன்
ஆங்கிலத்தை எடுத்துக் கொள்வோம். உங்கள் குழந்தை அதை எப்படி கற்க வேண்டி இருக்கிறது என்று பாருங்கள்!
ROUGH என்பதை எப்படிச் சொல்ல வேண்டும்? அதே சமயம் DOUGH என்பதை எப்படிச் சொல்ல வேண்டும்? WOMEN என்ற வார்த்தையில் உள்ள ‘o’ ஏன் ‘e’ போல ஒலிக்க வேண்டும்? SPECIAL என்ற வார்த்தையில் வரும் ‘ci’ ஏன் CINEMA என்ற வார்த்தையில் வரும் ‘ci’- ஐ விட மாறுபட்டு ஒலிக்க வேண்டும்?
ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்? ‘அது அப்படித்தான்’! அதைக் கற்றுக் கொள்ளுங்கள் என்கிறார்கள்! அவர்களுக்கு தர்க்கரீதியாகக் காரணம் சொல்லத் தெரியவில்லை!
குழந்தைகளுக்கு அது ஒரு ‘hit and miss’ விஷயம் போல விசித்திரமாக இருக்கிறது! இது குழந்தைக்கு என்ன ஒரு நம்பிக்கையைத் தரும்?!
இப்போது விதிகள் உள்ள மொழியைப் பாருங்கள்.
எதையுமே ‘அது அப்படித்தான்’ என்று சொல்ல இடமில்லாமல் விதி முறை மாறாமல் இருக்கிறது.
அருமையான நேர்த்தியான தத்துவக் கருத்துக்கள் எளிய ‘அகர வரிசை’ சரியாக அமைக்கப்பட்டிருப்பதால் நன்கு உருவாகி கற்க முடிவதைப் பாருங்கள்!
சம்ஸ்கிருதத்துடனான தொடர்பினால் மற்றவர்கள் அப்படி நல்ல குணாதிசயங்களுடன் வளர்வதை நான் நேரடியாகக் கண்டிருக்கிறேன்.
பல வருடங்களாக சம்ஸ்கிருதத்தை ‘குறைந்த பட்ச புரிதலுடன்’ ‘அதிக பட்ச உற்சாகத்துடன்’ நாங்கள் கற்பித்து வந்துள்ளோம்.John Scttus School – இல் உள்ள குழந்தைகளுக்கும், தத்துவப் பள்ளியில் – School of Philosophy – இல் உள்ள பெரியவர்களுக்கும் நாங்கள் சம்ஸ்கிருதம் கற்பித்து வந்துள்ளோம்.
ஒருவேளை நாங்கள் ஏராளமானவர்களை சம்ஸ்கிருதம் படிக்க ஊக்குவிக்கவில்லையோ என்னவோ!
ஆகவே சம்ஸ்கிருதம் எங்கு தோன்றியதோ அங்கு செல்ல வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.
சம்ஸ்கிருத ஆசிரியர்கள் சம்ஸ்கிருதத்திலேயே பேசுபவர்களாக இருக்கும் இடத்தில் வாழ வேண்டும்.
பெங்களூர் அருகில் உள்ள ‘சம்ஸ்கிருத பாரதி’ -இல் நான் மூன்று கோடைக் காலங்களைக் கழித்தேன்.
அது என்னை இன்னும் தீவிரமாக சம்ஸ்கிருதத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆசையைத் தோற்றுவித்தது.
ஆகவே பாரம்பரியமான ஒரு குருகுலத்திற்கு நான் சென்றேன்.
அதாவது அங்கேயே தங்கி இருக்க வேண்டும்.
அரிசி சாதம் சாப்பிட வேண்டும்.
ஏராளமான பவர் கட்டுகளை – மின் தடைகளை அனுபவிக்க வேண்டும்.
நீர் பற்றாக்குறையைச் சமாளிக்க வேண்டும்.
ஆனால் டிசம்பர் 2009இல் நான் ஒரு முடிவுக்கு வந்தேன். சீனியர் ஸ்கூலில் நான் வகித்து வந்த வைஸ்-பிரின்ஸிபால் வேலையை விட்டு விட்டு சம்ஸ்கிருதத்தை கற்பிப்பதிலேயே என் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.
இன்னும் பல பேர்கள் நான் வகித்து வந்த வைஸ்-பிரின்ஸிபால் பதவியை வகிக்க தகுதியானவ்ர்களாக இருப்பார்கள். ஆனால் சம்ஸ்கிருதத்தை அயர்லாந்தில் போதிக்க வேறு யாரால் முடியும்?
ஆகவே இதை ஒரு பதவி உயர்வாகவே – ப்ரமோஷனாகவே – நான் கருதுகிறேன்.
வயது ஆக ஆக என் உடல் தளர்ந்தாலும் கூட சம்ஸ்கிருதத்தினால் என் மனம் முன்னேறும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
சம்ஸ்கிருதம் என்பது ஒரு முழு நேர ஆசிரியருடன் ஒப்பிடப்படக் கூடியது.
24/7 என்று முழு நேரமாக அது இருக்கிறது. மற்ற மொழிகள் எல்லாம் பகுதி நேர – Part time – மொழியாகவே இருக்கின்றன!
சம்ஸ்கிருதம் கற்பதன் விளைவு என்னவெனில் அது உண்மையான நம்பிக்கையை என்னுள் ஏற்படுத்துகிறது.
இரண்டாவதாக எனது வார்த்தைகளை சீர் தூக்கிப் பார்த்து துல்லியமாக சரியாகப் பேச வேண்டும் என்று அது எனக்கு உணர்த்துகிறது.
குழப்பமின்றி நான் சொல்ல வருவதைச் சொல்ல அது எனக்குக் கற்பிக்கிறது.
ஆகவே எதையும் என்னால் சுருக்கமாகப் பேச முடிகிறது.
எனது கவன சக்தி சந்தேகமின்ரி அதிகரித்துள்ளது!
கேட்பதைத் தக்க வைக்கும் சக்தியும் அதிகரித்துள்ளது!
எப்படி சம்ஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது?
இந்தியாவில் பல இடங்களில் முறையாக அது கற்பிக்கப்படவில்ல என்பது எனக்கு ஆச்சரியமூட்டும் ஒரு விஷயம்!
9 முதல் 11 வயது முடிய அது மாணவர்களுக்கு அங்கு கற்பிக்கப்படுகிறது. ஆனால் மோசமாகக் கற்பிக்கப்படுவதால் அத்துடன் அதை விட்டு விடுகிறார்கள்.
சில விடாக்கண்டர்கள் மட்டும் அதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல ஆசைப்படுகிறார்கள்.
இது ஏன்?
ஏனெனில் மேலை நாடுகளைக் காப்பி அடிக்க வேண்டும் என்ற ஒரு வெறி அங்கு உள்ளது.
காலனி ஆதிக்கத்தால் அவர்களின் பாரம்பரியம் திட்டமிட்டு வேருடன் அழிக்கப்பட்டுள்ளது.
கிழக்கத்திய ஞானத்தையும் இலக்கணத்தையும் அறிய பாரம்பரிய மிக்க ஒரு குருகுலத்தில் நான் சேர்ந்தேன்.
சம்ஸ்கிருதம் பேசுவதற்கோவெனில் நவீன அணுகு முறை அங்கு இல்லை என்பதை உணர்ந்தேன்.
அப்போது தான் புதுவையில் உள்ள அரவிந்த ஆஸ்ரமத்தில் இண்டர்நேஷனல் ஸ்கூலில் ஒரு ஆசிரியரைக் கண்டேன்.
அவர் பெயர் நரேந்திரா.
அவர் இலக்கணத்தைக் கற்பிக்க ஒரு புதிய எளிய வழி முறையைக் கண்டுள்ளார்.
அது இலக்கணம் படிக்கிறோம் என்ற உணர்வையே உங்களிடம் ஏற்படுத்தாது!
ஆனால் அதே சமயம் இலக்கணத்தை பயிற்சியாளர்களுக்குக் குறைத்துக் கற்பித்து விடாது. ஆகவே உங்களுக்கு இலக்கணத்தில் பகுதி அறிவு தான் ஏற்படும் என்ற நிலையும் ஏற்படாது.
சில சம்ஸ்கிருத பேச்சு வழக்கு வகுப்புகளிலும் நான் சேர்ந்தேன்.
இவை அனைத்தும் சம்ஸ்கிருதத்துடனான பரிச்சயத்தை எனக்கு அதிகப்படுத்தியது!
– தொடரும்
(அடுத்த கட்டுரையுடன் இந்தத் தொடர் முடியும்)
என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? -3 / A
ச.நாகராஜன்
Rutger Kortenhorst ஆங்கித்தில் உள்ள முரண்பாடுகள் ஒரு சிறிதை மட்டும் தனது உரையில் கோடி காட்டி விட்டுச் சென்று விட்டார்.
இது தொடர்பாக எனது தொகுப்பில் உள்ள ஒரு சிறு கவிதையை இங்கு தருகிறேன்.
ஆங்கித்தில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டும் சுவையான நையாண்டிக் கவிதை இது:-
WHY ENGLISH IS SO HARD
We’ll begin with a box, and the plural boxes,
But the plural of ox becomes oxen, not oxes
One fowl is goose, but two are called geese,
Yet the plural of moose should never be meese.
You may find a lone mouse or a nest full of mice
Yet the plural of house is houses, not hice.
If the plural of man is always called men,
Why shouldn’t the plural of pan be called pen?
If I speak of my foot and show you my feet,
And I give you a boot, would a pair be called beet?
If one is a tooth and a whole set are teeth,
Why shouldn’t the plural of booth be called beeth?
Then one may be that, and three would be those,
Yet hat in the plural would never be hose,
And the plural of cat is cats, not cose,
We speak of a brother and also of brethren
But though we say mother, we never say methern,
Then the masculine pronoun are he, his and him,
But imagine the feminine she, shis and shim!
– ANONYMOUS
***