Three curses on Ravana! (Post No.4869)

WRITTEN by London Swaminathan 

 

Date: 31 MARCH 2018

 

Time uploaded in London –  20-24 (British Summer Time)

 

Post No. 4869

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

Ravana, the king of Lanka and the villain in the Ramayana did lot of penance ruled as an unconquerable man. But his inherent weakness was that he thought men can never kill him. He was suffering from superiority complex and so he ignored human beings from the list of potential threats. He always ridiculed men He thought he was a big mountain and the human beings are mosquitoes.

 

Apart from this wrong notion he had three big curses on him:

Curse 1

 

At one time Ravana waged a war against Anaranya. He did lot of atrocities against him and received a curse from him. From my  race of Ikshwaku kings, a man will  be born named Rama and he will kill you in battle. Ravana remembers the curse as he does many other curses he reived in his life (Vi-60-8/10)

 

Curse 2

I once ravished  a woman, Vedavati, and she said, “some how I am going to be your end. I think  she has been born as Sita and I have brought this danger into my palace and all this trouble upon me in consequence.@ Then he recalls some of the other curses he had received. VI-60-10-11

 

Curse 3

Uma nad Nandi cursed him as well. Once he went to Kailasa and tried to lift the sacred Hill and displeased Mahadeva himself. At that time he was stopped by Nandi when he went in. Ravana turned round, and looking at his oddface he laughed loudly. Nandi was very angry, but not liking to do battle in the palace of Shiva, that too without his permission. So Nandhi cursed Ravana.

 

“As you have set up this laughter as loud as thunder, there will born in the world, a race of monkeys having my look and also having my strength, in order to kill you and your whole family. As big as hills they will be, and they will fight with nails and teeth.”

 

–subham-

“நடப்பது நடந்தே தீரும்” கம்பன் Philosophy பிலாஸபி/ தத்துவம் (Post No.4868)

“நடப்பது நடந்தே தீரும்” கம்பன் Philosophy பிலாஸபி/ தத்துவம் (Post No.4868)

 


WRITTEN by London Swaminathan 

 

Date: 31 MARCH 2018

 

Time uploaded in London –  6-14 am (British Summer Time)

 

Post No. 4868

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

மஹாபாரதத்தில் கர்ணன் என்னும் கதா பாத்திரமும், ராமாயணத்தில் கும்பகர்ணன் என்னும் கதபாத்திரமும் அற்புதமான படைப்புகள்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்நன்றி கொன்ற மகற்கு—

என்ற குறளுக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர்கள். இது புறநானூற்றிலும் (புறம்.34, ஆலத்தூர் கிழார் பாடியது) ராமாயண மஹா பாரதத்திலும் உள்ள வாசகம்.

கும்பகர்ணன் வாய்மொழி மூலமாக கம்பன் உதிர்க்கும் கருத்துக்களைச் சில பாடல்கள் மூலம் காண்போம்

 

 

ஆகுவது ஆகும் காலத்து ஆகும்; அழிவதும் அழிந்து சிந்திப்

போகுவது அயலே நின்று போற்றினும் போதல் திண்ணம்!

சேகு அறத் தெளிந்தோர் நின்னில் யார் உளர்?

ஏகுதி எம்மை நோக்கி இரங்கலை என்றும் உள்ளாய்

 

யுத்த காண்டம்,கும்ப கர்ணன் வதைப் படலம், கம்ப ராமாயணம்

 

ராமனிடம் அடைக்கலம் புக மாட்டேன் என்று மறுத்து, வீடணனிடம் கும்பகர்ணன் சொன்ன சொற்கள்:-

“என்றும் வாழ்பவனே! உரிய காலத்தில் ஆக வேண்டியது ஆகியே தீரும்; அழிய வேண்டியது. அதற்குரிய காலத்தில் அழிந்து சிதறிப் போகும். அவ்வாறு அழிய வேண்டியதை அருகேயிருந்து பாதுகாத்தாலும், அழிந்தே போவது உறுதி. இதைக் குற்றமற உணர்ந்தவர், உன்னைக் காட்டிலும் யார் உள்ளனர்? வருத்தப் படாமல்

(ராமனிடமே) நீ திரும்பிச் செல். என்னை நினைத்து நீ வருந்தாதே — என்று கூறினான் கும்பகர்ணன்.

 

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்காதே

 

என்பது கும்பகர்ணனின் முடிவு.

ராமனிடம் சரணடைந்தால் இம்மைக்கும் மறுமைக்கும் பயன் உண்டு என்று வீடணன் சொல்கிறான். அதற்கு மறுமொழி தந்த கும்பகர்ணன், நீ சொல்வது எல்லாம் சரிதான்; அதர்மத்தின் தரப்பிலுள்ள நாங்கள் எல்லோரும் இறப்பது உறுதி. நானும் ராவண னும் அரக்கர் சேனையும் கூண்டோ டு, கைலாஸம் போகப் போகிறோம். எங்களுக்கு எல்லாம் எள் இறைத்து நீர் தெளித்து இறுதிக் கடன்கள் செய்து     நாங்கள் நரகம் புகாமல் , தடுக்க ஒருவராவது தேவை. ஆகையால் நீ வெற்றி பெறும் ராமர் தரப்புக்கே சென்று விடு என்கிறான்.

 

 

இதோ சில பாடல்கள்:

 

கருத்து இலா இறைவன் தீமை கருதினால் அதனைக்காத்துத்

திருத்தலாம் ஆகின் அன்றே திருத்தலாம்? தீராது ஆயின்

பொருத்து உறு பொருள் உண்டாமோ? பொரு தொழிற்கு உரியர் ஆகி

ஒருத்தரின் முன்னம் சாதல் உண்டவர்க்கு உரியது அம்மா

 

பொருள்

“தலைவன் ஒருவன் ஆலோசனை செய்யாமல் தீய செயல் செய்ய நினைத்தால் அதைத் தடுத்து நிறுத்த முடியுமானால் நல்லது. முடியாதாயின் அவனது பகைவரை (ராமனை) அடைந்து பெறக்கூடிய பயன் உண்டா? ஒருவன் இட்ட சோற்றை உண்டவர்க்கு உரிய செயல் போரில் இறங்கி போரிட்டு, அன்னம் இட்டவர்க்கு முன்னமேயே இறக்க வேண்டியதே

 

அடுத்த பாட்டிலெல்லோரும் அழிந்தபின்னர் ராவணன் அனாதையாக அழிவதைப் பார்க்க விரும்பவில்லை என்கிறான்.

 

இராமன் செலுத்தும் அம்பு மழையில் அரக்கர் அனைவரும் அழிவர். அவ்வாறு அழிந்து விட்டால் அயோத்தி வேந்தனிடம் அடைக்கலம் அடைந்த நீ இல்லாவிட்டால் எள்ளுடன் கூடிய நீரைக் கொடுத்து தர்ப்பணம் செய்ய யார் உளர்? இருந்தால் அவரைக் காட்டுவாய்- என்கிறான் கும்பகணன்.

எய்கணை மாரியாலே இறந்து பாழ்படுவேம் பட்டால்

கையினால் எள் நீர் நல்கிக் கழிப்பாரைக் காட்டாய்

 

 

வீடணன் Philosophy பிலாஸபி பிறவி நோய்க்கு மருந்து ராமன்

 

ராமனைச் சரணடைந்தால் என்ன பயன் கிட்டும் என்று விபீஷணன் உரைக்கிறான். அதிலும் கம்பன் இந்துமத தத்துவங்களை மொழிகிறான்

 

 

இருள் உறு சிந்தையேற்கும் இன் அருள் கரந்த வீரன்

அருளும் நீ சேரின் ஒன்றோ அபயமும் அளிக்கும் அன்றி

மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம், மாறிச் செல்லும்

உருளுறு சகட வாழ்க்கை ஒழித்து வீடு அளிக்கும் அன்றே.

 

பொருள்

 

அறியாமை உடைய எனக்கும் அருள் பொழிந்த வீரன் ராமன்.

நீ வந்தால் உனக்கும் அருள் புரிவான். உனக்கு அபயம் (பாதுகாப்பு) தருவான்.

அஞ்ஞானம் நிறைந்த பிறவி நோய்க்கு அவன் மருந்தாக அமைவான்.

உருண்டு செல்லும் வண்டிச் சக்கரம் போல இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் இயல்புடையது வாழ்க்கை. இதனை நீக்கி மோட்சத்தை அருளுவான் ராமன்.

 

அதாவது ஜனன- மரண பிறவிச் சுழலிலிருந்து விடுவிப்பான்.

 

ஆக கும்ப கர்ண வதைப் படலத்தில் யார் யார் எல்லாம் பேசுகிறார்களோ அவர்கள் மூலம் எல்லாம் இந்துமதக் கருத்துகளை ஜூஸாகப் பிழிந்து தருகிறான் கம்பன்.

படிக்கப் படிக்கப் பேரின்பம் கிடைக்கும்.

சுபம்

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? – 4 (Post No.4867)

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? – 4 (Post No.4867)

 

Date: MARCH 31, 2018

 

 

Time uploaded in London- 5-35 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4867

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

சம்ஸ்கிருதச் சிறப்பு :

நீங்கள் படிப்பது அயர்லாந்து சம்ஸ்கிருத ஆசிரியர் ரட்கெர் கோர்டன்ஹார்ஸ்ட் நிகழ்த்திய உரையின் இறுதிப் பகுதி.

 

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? – 4

 

ச.நாகராஜன்

நரேந்திரா தனது வழிமுறை அரவிந்தராலும் அன்னையாலும் தரப்பட்டது என்று கூறுகிறார். அந்த வழிமுறையைத் தான் நாங்கள் இங்கு டப்ளினில்  இன்று கடைப்பிடிக்கிறோம்.

அன்னை கூறிய பல ஊக்கமூட்டும் மொழிகளில் இதுவும் ஒன்று:-

“Teach logically. Your method should be most natural, efficient and stimulating to the mind. It should carry one forward at a great pace. You need not cling there to any past or present manner of teaching.”

 

 

Renaissance எனப்படும் மறுமலர்ச்சியின் 500 ஆண்டு கால சுழற்சியைப் பார்ப்போம்.

 

ஐரோப்பாவின் கடைசி மறுமலர்ச்சி நாம் வாழும் இன்றைய உலகை மாற்றி அமைத்த மூன்று விஷயங்களை மேம்படுத்தியது.

கலை, இசை மற்றும் விஞ்ஞானம்!

 

நாஸாவின்  ஸ்பேஸ் புரொகிராம் (விண்வெளித் திட்டம்) இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி மற்றும் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் ஆகியவற்றிற்கு சம்ஸ்கிருதத்தைப் பயன்படுத்த அதி தீவிர முயற்சியை எடுத்து வருகிறது.

ஸ்ரீ அரவிந்தர் கூறினார்:

 

”…. at once majestic and sweet and flexible,  strong and clearly formed and full and vibrant and subtle…”

 

ஜான் ஸ்காட்ஸ் பள்ளி மாணவர்கள் கூறுவது இது:-

 

It makes your mind bright, sharp and clear.

It makes you feel peaceful and happy.

It makes you feel BIG.

It clears and loosens your tongue so you can pronounce any language easily.

 

நாஸாவில் உள்ள சம்ஸ்கிருத ஆர்வலர் ரிக் ப்ரிக்ஸ் (rick Briggs)  கூறுகிறார்:-

 

It gives you access to a vast and liberating literature.

It can describe all aspects of human life from the most abstract philosophical to the latest scientific discoveries, hinting at further development.

 It can describe all aspects of human life from the most abstract philosophical to the latest scientific discoveries, hinting at further developments.

Sanskrit and computers are a perfect fit. The precision play of Sanskrit with computer tools will awaken the capacity in human beings to utilize their innate higher mental faculty with a momentum that would inevitably transform the mind. In fact, the mere learning of Sanskrit by large numbers of people in itself represents a quantum leap in consciousness, not to mention the rich endowment it will provide in the arena of future communication. NASA, California

After many thousands of years, Sanskrit still lives with a vitality that can breathe life, restore unity and inspire peace on our tired and troubled planet. It is a sacred gift, an opportunity. The future could be very bright.

 

நாஸாவின் ரிக் ப்ரிக்ஸ் (rick Briggs)  கூறும் வார்த்தைகளையே எனது கடைசி வார்த்தைகளாகக் கூறுகிறேன்:-

 

One thing is certain; Sanskrit will only become the planetary language when it is taught in a way which is exiting and enjoyable. Furthermore it must address individual learning inhibitions with clarity and compassion in a setting which encourages everyone to step forth, take risks, make mistakes and learn.

Rick Briggs [NASA]

 

***

சம்ஸ்கிருதத்தின் சிறப்பு பற்றிய இந்தத் தொடர் முற்றும்.

இதன் ஆங்கில மூலத்தை அடுத்த கட்டுரையாகக் காணலாம்.

 

Poor Preacher, Baptist Fish, Fool’s Signature- More Interesting Anecdotes (Post No.4866)

Poor Preacher, Baptist Fish, Fool’s Signature- More Interesting Anecdotes (Post No.4866)

 


COMPILED by London Swaminathan 

 

Date: 30 MARCH 2018

 

Time uploaded in London –  7-45 am (British Summer Time)

 

Post No. 4866

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

Poor Preacher!

Jerome D.Engel, the famous Baptist preacher, was once vacationing at a well -known shore resort. One of the local churches had expected to have its pulpit filled on Sunday morning by a “supply” or visiting minister. At the last minute, the visitor was unable to appear, and the church found itself with no one to conduct the services.

 

The leaders of the church scurried around distractedly in search of a preacher, and were unable to find anyone. At last to chancing to hear of the presence in town of the eminent divine, one of the church members sought out Engel and begged for his

services.

 

Delighted and relieved, the committeeman said, “You know, Dr Engel, we’d have been willing to accept a poorer preacher, but it was impossible to find one.”

 

xxx

Fool’s Signature

Reverend Henry Ward Beecher entered Plymouth Church one Sunday and found several letters awaiting him. He opened one and found it and contained the single word, “Fool”. Quietly and with becoming seriousness he announced to the congregation the fact in these words:

“I have known many an instance of a man writing a letter and forgetting to sign his name, but this is the only instance I have ever known of a man signing his name and forgetting to write the letter”.

 

xxx

 

More Repentance!!

 

xxx Bursting with her news, Mrs Meadows hurried to her neighbour’s house.

 

Have you heard, Mrs Smith? The minister’s son has decided to become a jockey. Of course you know that he was supposed to go to the Theological Seminary this year.

 

Mrs Smith, more of the woman of the world than her friend, replied drily,

Well, I must say that he will bring a lot more people to repentance that way than he would as a minister.

 

xxx

 

Baptist Fish

Jerome D Engel, the famous Southern Baptist divine, was strolling along the sea walk during a Church Convention at Charleston. He came upon an old colored man who was fishing from the pier. For some time Engel watched the Negro patiently waiting for a bite. At last he pulled in a fish of repulsive appearance, seeming to be something between a toad and a bullhead. Knowing little about so worldly a matter as fishing, Engle asked,

What kind of fish is that, George?

“Dey call it a Baptist fish”, croaked the old man.

“A Baptist Fish? inquired Engle sceptically.

“Sho”, answered the fisherman, throwing his catch back into the sea,

“ Dey calls dem dat ‘cause dey spoils so fast after dey is taken out of water”.

 

xxx

Specifications of a Good Minister!

The Reverend Doctor Edgar Dewitt Jones propounded the specifications of a good minister (preacher):

“He should get religion like a Methodist;

experience it like a Baptist;

be sure of it like a Disciple;

stick to it like a Lutheran;

pray for it like a Presbyterian;

conciliate it like a Congregationalist;

glorify it like a Jew;

be proud of it like an Episcopalian;

practise it like a Christian Scientist;

propagate it like a Roman Catholic;

work for it like a Salvation Army lassie;

enjoy it like a colored man.”

 

–Subham–

 

 

கனி மொழி பற்றி வள்ளுவன், கம்பன் (Post No.4865)

WRITTEN by London Swaminathan 

 

Date: 30 MARCH 2018

 

Time uploaded in London –  6-33 am (British Summer Time)

 

Post No. 4865

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

கனி இருப்ப பூக்கொய்யலாமோ? — கம்பன்

 

கம்பன் கனி மொழிகளை உதிர்க்கிறான் கம்ப ராமாயணத்தில்! வள்ளுவனைக் கரைத்துக் குடித்த கம்பனுக்குப் படலம் தோறும், திருக்குறள் வரிகளும், சொற்களும் தாமாக வந்து விழுகின்றன.

‘கனியிருப்பக் காய் கவர்ந்தற்று’ — என்றான் வள்ளுவன்.

கனி வரும் காலத்து ஐய பூக் கொய்யக் கருதலாமோ?

——-என்றான் கம்பன்

 

முனிவரும் கருணை விவைப்பர் மூன்று உலகத்தும் தோன்றி

இனிவரும் பகையும் இல்லை ஈறு உண்டு என்று  இரங்க வேண்டா

துனிவரும் செறுநர் ஆன தேவரே துணைவராவர்

கனி வரும் காலத்து ஐய பூக் கொய்யக் கருதலாமோ?

 

 

எங்கே, எப்போது, யார் நுவல்வது இஃது?

 

கும்பகர்ணனைக் கஷ்டப்பட்டு உசுப்பிவிட்டு ராமன் முன்னிலையில் போருக்கு நிறுத்தினார்கள். வேத நாயகனான ராமன், யாரையா இந்தப் புது முகம்? என்று விபீஷணனிடம் வினவுகிறான். அப்போது கும்பகர்ணனை அறிமுகம் செய்து வைக்கிறான். இவரையும் நமது கட்சியில் சேர்த்துக் கொண்டால் நமக்கு வெற் றி  நிச்சயம் என்று சுக்ரீவன் ஒரு யோஜனை சொல்கிறான். ராமனும், எத்தனை பேர் வந்தாலும் எனது கட்சியில் இடம் உண்டு; அழைத்து வா- என்று விபீஷணனை அனுப்புகிறான்.

அப்போது விபீஷணன், கட்சி மாறினால் வரும் சாதகங்களை உரைக்கிறான்:

“நீ ராமன் கட்சியில் சேர்ந்தால், அந்த நிலையில் முனிவர்களும் உன்னிடம் கருணை காட்டுவார்கள்; மூன்று உலகங்களிலும் உனக்குப் பகைவர்கள் இரார். உனக்கு சாவு என்பதே கிடையாது. தேவர்களும் நண்பர்கள் ஆவர். இனிக்கும் பழங்கள் தோன்றும் காலத்தில் வெறும் மலர்களைப் பறிப்பதற்கு நினைக்கலாமா? (கூடாது).”

இந்திய மக்கள்– குறிப்பாகத் தமிழர்கள், இயற்கையோடு இயைந்த வாழ்வு நடாத்தியதால், இயற்கையாகவே மரம், செடி, கொடி, காய், கனி உவமைகள் வரும்.

கனி மொழி பற்றி வள்ளுவன்

 

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந்  தற்று- குறள் 100

 

பொருள்

இனிமையான சொற்கள் இருக்கையில் ஒருவன் சுடு சொற்களைப் பெய்வது, இனிப்பான பழங்கள் இருக்கும் போது கய்களைத் தின்றது போலாகும்.

 

சேலத்து மாம்பழமும் , மல்கோவா, பாதிரி, நீலம் அல்பான்ஸோ பழங்களும் இருக்கும்போது நாட்டுப்புறத்தில் கீழே விழுந்து கிடக்கும் புளிச்ச மாங்காயைத் தின்னும் மாங்காய் மடையனாக இராதே என்று கனி மொழி பற்றி வள்ளுவன் சொல்கிறான்.


(
பிறர் எழுதியதைத் திருடுபவனும் பிறர் மனைவியைத் திருடுபவனும் பிறர் பொருளைத் திருடுபவனும் ஒன்றே – ஐன்ஸ்டீனின் அண்ணன்பெர்னார்ட் ஷாவின் தம்பிகாந்திஜியின் தாத்தா சொன்னது)

–Subham —

 

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? -3 (Post.4864)

Date: MARCH 30, 2018

 

 

Time uploaded in London- 5-49 am

 

 

Compiled by S NAGARAJAN

 

 

Post No. 4864

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

சம்ஸ்கிருதச் சிறப்பு :

நீங்கள் படிப்பது அயர்லாந்து சம்ஸ்கிருத ஆசிரியர் ரட்கெர் கோர்டன்ஹார்ஸ்ட் நிகழ்த்திய உரை!

 

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? -3

 

ச.நாகராஜன்

 

ஆங்கிலத்தை எடுத்துக் கொள்வோம். உங்கள் குழந்தை அதை எப்படி கற்க வேண்டி இருக்கிறது என்று பாருங்கள்!

ROUGH என்பதை எப்படிச் சொல்ல வேண்டும்? அதே சமயம் DOUGH என்பதை எப்படிச் சொல்ல வேண்டும்? WOMEN என்ற வார்த்தையில் உள்ள ‘o’  ஏன் ‘e’ போல ஒலிக்க வேண்டும்? SPECIAL என்ற வார்த்தையில் வரும் ‘ci’ ஏன் CINEMA என்ற வார்த்தையில் வரும் ‘ci’- ஐ விட மாறுபட்டு ஒலிக்க வேண்டும்?

ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்? ‘அது அப்படித்தான்’! அதைக் கற்றுக் கொள்ளுங்கள் என்கிறார்கள்! அவர்களுக்கு தர்க்கரீதியாகக் காரணம் சொல்லத் தெரியவில்லை!

 

குழந்தைகளுக்கு அது ஒரு ‘hit and miss’ விஷயம் போல விசித்திரமாக இருக்கிறது! இது குழந்தைக்கு என்ன ஒரு நம்பிக்கையைத் தரும்?!

இப்போது விதிகள் உள்ள மொழியைப் பாருங்கள்.

 

எதையுமே ‘அது அப்படித்தான்’ என்று சொல்ல இடமில்லாமல் விதி முறை மாறாமல் இருக்கிறது.

அருமையான நேர்த்தியான தத்துவக் கருத்துக்கள் எளிய ‘அகர வரிசை’ சரியாக அமைக்கப்பட்டிருப்பதால் நன்கு உருவாகி கற்க முடிவதைப் பாருங்கள்!

சம்ஸ்கிருதத்துடனான தொடர்பினால் மற்றவர்கள் அப்படி நல்ல குணாதிசயங்களுடன் வளர்வதை நான் நேரடியாகக் கண்டிருக்கிறேன்.

பல வருடங்களாக சம்ஸ்கிருதத்தை ‘குறைந்த பட்ச புரிதலுடன்’ ‘அதிக பட்ச உற்சாகத்துடன்’ நாங்கள் கற்பித்து வந்துள்ளோம்.John Scttus School – இல் உள்ள குழந்தைகளுக்கும், தத்துவப் பள்ளியில் – School of Philosophy – இல் உள்ள பெரியவர்களுக்கும் நாங்கள் சம்ஸ்கிருதம் கற்பித்து வந்துள்ளோம்.

ஒருவேளை நாங்கள் ஏராளமானவர்களை சம்ஸ்கிருதம் படிக்க ஊக்குவிக்கவில்லையோ என்னவோ!

ஆகவே சம்ஸ்கிருதம் எங்கு தோன்றியதோ அங்கு செல்ல வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

சம்ஸ்கிருத ஆசிரியர்கள் சம்ஸ்கிருதத்திலேயே பேசுபவர்களாக இருக்கும் இடத்தில் வாழ வேண்டும்.

 

பெங்களூர் அருகில் உள்ள ‘சம்ஸ்கிருத பாரதி’ -இல் நான் மூன்று கோடைக் காலங்களைக் கழித்தேன்.

அது என்னை இன்னும் தீவிரமாக சம்ஸ்கிருதத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆசையைத் தோற்றுவித்தது.

ஆகவே பாரம்பரியமான ஒரு குருகுலத்திற்கு நான் சென்றேன்.

அதாவது அங்கேயே தங்கி இருக்க வேண்டும்.

அரிசி சாதம் சாப்பிட வேண்டும்.

ஏராளமான பவர் கட்டுகளை – மின் தடைகளை அனுபவிக்க வேண்டும்.

நீர் பற்றாக்குறையைச் சமாளிக்க வேண்டும்.

 

ஆனால் டிசம்பர் 2009இல் நான் ஒரு முடிவுக்கு வந்தேன். சீனியர் ஸ்கூலில் நான் வகித்து வந்த வைஸ்-பிரின்ஸிபால் வேலையை விட்டு விட்டு சம்ஸ்கிருதத்தை கற்பிப்பதிலேயே என் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

இன்னும் பல பேர்கள் நான் வகித்து வந்த வைஸ்-பிரின்ஸிபால் பதவியை வகிக்க தகுதியானவ்ர்களாக இருப்பார்கள். ஆனால் சம்ஸ்கிருதத்தை அயர்லாந்தில் போதிக்க வேறு யாரால் முடியும்?

ஆகவே இதை ஒரு பதவி உயர்வாகவே – ப்ரமோஷனாகவே – நான்  கருதுகிறேன்.

வயது ஆக ஆக என் உடல் தளர்ந்தாலும் கூட சம்ஸ்கிருதத்தினால் என் மனம் முன்னேறும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

சம்ஸ்கிருதம் என்பது ஒரு முழு நேர ஆசிரியருடன் ஒப்பிடப்படக் கூடியது.

24/7 என்று முழு நேரமாக அது இருக்கிறது. மற்ற மொழிகள் எல்லாம் பகுதி நேர – Part time –  மொழியாகவே இருக்கின்றன!

சம்ஸ்கிருதம் கற்பதன் விளைவு என்னவெனில் அது உண்மையான நம்பிக்கையை என்னுள் ஏற்படுத்துகிறது.

இரண்டாவதாக எனது வார்த்தைகளை சீர் தூக்கிப் பார்த்து துல்லியமாக சரியாகப் பேச வேண்டும் என்று அது எனக்கு உணர்த்துகிறது.

குழப்பமின்றி நான் சொல்ல வருவதைச் சொல்ல அது எனக்குக் கற்பிக்கிறது.

ஆகவே எதையும் என்னால் சுருக்கமாகப் பேச முடிகிறது.

எனது கவன சக்தி சந்தேகமின்ரி அதிகரித்துள்ளது!

கேட்பதைத் தக்க வைக்கும் சக்தியும் அதிகரித்துள்ளது!

 

எப்படி சம்ஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது?

இந்தியாவில் பல இடங்களில் முறையாக அது கற்பிக்கப்படவில்ல என்பது எனக்கு ஆச்சரியமூட்டும் ஒரு விஷயம்!

9 முதல் 11 வயது முடிய அது மாணவர்களுக்கு அங்கு கற்பிக்கப்படுகிறது. ஆனால் மோசமாகக் கற்பிக்கப்படுவதால் அத்துடன் அதை விட்டு விடுகிறார்கள்.

சில விடாக்கண்டர்கள் மட்டும் அதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல ஆசைப்படுகிறார்கள்.

இது ஏன்?

 

ஏனெனில் மேலை நாடுகளைக் காப்பி அடிக்க வேண்டும் என்ற ஒரு வெறி அங்கு உள்ளது.

காலனி ஆதிக்கத்தால் அவர்களின் பாரம்பரியம் திட்டமிட்டு வேருடன் அழிக்கப்பட்டுள்ளது.

கிழக்கத்திய ஞானத்தையும் இலக்கணத்தையும் அறிய பாரம்பரிய மிக்க ஒரு குருகுலத்தில் நான் சேர்ந்தேன்.

சம்ஸ்கிருதம் பேசுவதற்கோவெனில் நவீன அணுகு முறை அங்கு இல்லை என்பதை உணர்ந்தேன்.

அப்போது தான் புதுவையில் உள்ள அரவிந்த ஆஸ்ரமத்தில் இண்டர்நேஷனல் ஸ்கூலில் ஒரு ஆசிரியரைக் கண்டேன்.

அவர் பெயர் நரேந்திரா.

அவர் இலக்கணத்தைக் கற்பிக்க ஒரு புதிய எளிய வழி முறையைக் கண்டுள்ளார்.

அது இலக்கணம் படிக்கிறோம் என்ற உணர்வையே உங்களிடம் ஏற்படுத்தாது!

ஆனால் அதே சமயம் இலக்கணத்தை பயிற்சியாளர்களுக்குக் குறைத்துக் கற்பித்து விடாது. ஆகவே உங்களுக்கு இலக்கணத்தில் பகுதி அறிவு தான் ஏற்படும் என்ற நிலையும் ஏற்படாது.

சில சம்ஸ்கிருத பேச்சு வழக்கு வகுப்புகளிலும் நான் சேர்ந்தேன்.

இவை அனைத்தும் சம்ஸ்கிருதத்துடனான பரிச்சயத்தை எனக்கு அதிகப்படுத்தியது!

– தொடரும்

(அடுத்த கட்டுரையுடன் இந்தத் தொடர் முடியும்)

 

 

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? -3 / A

 

ச.நாகராஜன்

 

Rutger Kortenhorst ஆங்கித்தில் உள்ள முரண்பாடுகள் ஒரு சிறிதை மட்டும் தனது உரையில் கோடி காட்டி விட்டுச் சென்று விட்டார்.

இது தொடர்பாக எனது தொகுப்பில் உள்ள ஒரு சிறு கவிதையை இங்கு தருகிறேன்.

ஆங்கித்தில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டும் சுவையான நையாண்டிக் கவிதை இது:-

WHY ENGLISH IS SO HARD

 

We’ll begin with a box, and the plural boxes,

But the plural of ox becomes oxen, not oxes

One fowl is goose, but two are called geese,

Yet the plural of moose should never be meese.

You may find a lone mouse or a nest full of mice

Yet the plural of house is houses, not hice.

 

If the plural of man is always called men,

Why shouldn’t the plural of pan be called pen?

If I speak of my foot and show you my feet,

And I give you a boot, would a pair be called beet?

If one is a tooth and a whole set are teeth,

Why shouldn’t the plural of booth be called beeth?

 

Then one may be that, and three would be those,

Yet hat in the plural would never be hose,

And the plural of cat is cats, not cose,

We speak of a brother and also of brethren

But though we say mother, we never say methern,

Then the masculine pronoun are he, his and him,

But imagine the feminine she, shis and shim!

 

– ANONYMOUS

***

 

 

அன்பிற்கும் அவதி உண்டோ? – ராவணன் (Post No.4863)

WRITTEN by London Swaminathan 

 

Date: 29 MARCH 2018

 

Time uploaded in London –  20-04 (British Summer Time)

 

Post No. 4863

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?’ என்றான் தெய்வப் புலவன் வள்ளுவன். தமிழ் வேதமான திருக்குறளில் அன்புடைமை என்னும் அதிகரத்தில் அருமையான பத்து குறட் பாக்களைக் காண்கிறோம். கம்ப ராமாயணம் முழுதும் நூற்றுக்கணக்கான பாடல்களில் குறளின் எதிரொலியைக் கேட்க முடிகிறது. கம்பன், தெய்வப் புலவனின் திருக்குறளை மனப்பாடமாக அறிந்திருக்க வேண்டும் ஒரு நாளைக்கு 700 கவிகள் பாடிய கம்பனுக்கு முடியாததும் உண்டோ!

 

கம்ப ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் கும்பகர்ணன் வதைப் படலத்தில் ஒரே பாடலில் இரண்டு செய்திகளைத் தருகிறான் கம்பன்

 

1.அன்புக்கு எல்லை இல்லை

2.விநாஸ காலே விபரீத புத்தி (விதி கெட்டால் மதி கெட்டுப் போகும்)

 

ராவணன் முதல் யுத்தத்தில் தோற்றவுடன் மால்யவான், மகோதரன் ஆகிய அமைச்சர்களையும் உறவினர்களையும் கலந்தாலோசிக்கிறான். மாமனான மால்யவான், சீதையை விட்டுவிடு என்கிறான். மகோதரன் என்பவனோ , வா, சண்டக்குப் போவோம், வெற்றி நமதே என்கிறான். அப்போது ராவணன் சொல்வான்—

 

பெறுதியே எவையும் செல்வம் பேர் அறிவாள சீரிற்று

அறிதியே என்பால் வைத்த     அன்பினுக்கு அவதி உண்டோ

உறுதியே சொன்னாய் என்னா உள்ளமும் வேறுபட்டான்

இறுதியே இயைவது ஆனால் இடைஒன்றால் தடைஉண்டாமோ?

 

பொருள்

மகோதரன் சொன்னதைக் கேட்ட ராவணன் அவனை நோக்கி, “சிறந்த அறிவுடையனே! நீ செல்வம் யாவையும் பெறுதற்கு உரியவன்; சிறந்த செயல்களை நீ அறிந்துள்ளாய். நீ என்னிடம் கொண்ட அன்புக்கு அளவு உண்டா?  நீ எனக்கு உறுதி பயக்கும் செயலையே உரைத்தாய்” – என்று அவனைப் பாராட்டி, தனது சோர்வைக் கைவிட்டான். ஒருவனுக்கு அழியும் காலம் வந்துவிட்டால், இடையிலே எது வந்தாலும் அந்த அழிவுக்குத் தடை உண்டாகுமோ? உண்டாகாது.

 

அவதி= எல்லை, அளவு, துயரம்

 

ஆக, கம்பனும் வள்ளுவனும் அன்பினுக்கு எல்லையோ தாழ்ப்பாளோ இல்லை என்கின்றனர்.

மேலும் சில ஒப்பீடுகள்

யாக்கையதியல்பினுமன்பினும் கொண்டுதன்

காட்சிக்கண்ணீர் கரந்தகத் தடக்கி (பெருங்கதி 1-36; 147-8)

 

உன்னுபே ரன்புமிக்கொழுகியொத் தொண்கணீர்

பன்னுதாரைகள் தரத் தொழுதெழும் பரதனை

-கம்ப. எதிர்கோள்.26)

அன்பிற்கும் உண்டோ | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/அன்பிற்கும்-உண்ட…

2 Dec 2016 – அன்பிற்கும் அன்ன தானத்துக்கும் சக்தி உண்டு!அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர். புன்கண்நீர் பூசல் தரும் (குறள் 71). பொருள்:- அன்பை, பிறர் அறியாமல் மறைத்து வைக்கும் கதவோ தாழ்ப்பாளோ உண்டா? கண்களிலிருந்து பெருகும் கண்ணீரே அந்த அன்பினைப் …

 

ANECDOTES ABOUT CHRISTIAN PREACHERS (Post No.4862)

COMPILED by London Swaminathan 

 

Date: 29 MARCH 2018

 

Time uploaded in London –  14-48 (British Summer Time)

 

Post No. 4862

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

Heaven and Hell Deal

A new clergyman in town sought the services of the best local physician, a man irregular in his church attendance. The medical treatment was prolonged, and the young pastor, worried over the accumulating expense, spoke to the doctor about the matter of his bill.

 

I will tell you what I will do, Pastor, said the doctor.

I hear you ae a pretty good preacher and you seem to think that I am a fair doctor. W will make a bargain. I will do all I can to keep you out of Heaven and you do all you can to keep me out of Hell, and it wont cost either of us a cent.

Sunday Amusement

Henry Ward Beecher asked Park Benjamin, the poet and humourist, why he never came to preach. Benjamin replied,

Why, Beecher, the fact is, I have conscientious scruples against going to places of amusement on Sunday.

 

People’s Voice went against Jesus!

John Wesley, in a considerable party, had been maintaining with great earnestness the doctrine of vox Populi vox Dei against his sister. At last the preacher, to put an end to the controversy, said, I tell you sister, the voce of the people is the voice of God.

Yes, replied his sister mildly, “it cried: Crucify him! crucify him”.

 

Zeal and Vigour!!!

A young minister who was temporarily filling a city pulpit made the following request in his prayers:

May the brother who ministers to this flock be filled full of fresh veal and new zigor”

Christian Life

Can I lead a good Christian life in New York City on $15 a week? a young man once asked Dr S Parkes Cadman.

My boy, was the reply, that’s all you can do

 

Illiterate preacher!

I am thankful that the Lord has opened my mouth to preach without any ‘larning’, an illiterate preacher.

A similar event took place in Balaam’s time, replied a gentleman present.

 

Religious Dispute

John Wilkes was once asked  a Roman Catholic gentleman in a warm dispute on religion:

Where was your religion before Luther?

Did you wash your face this morning? inquired the facetious alderman.

I did ,sir

Then pray where was your face before it was washed?

 

Idiot’s Vocation

Sydney Smith, the clergyman, had a combat of wit with a friend. His defeated antagonist intending to cast a slur on Smith’s vocation, fired back,

If I had a son who was an idiot I would make him a parson.

Your father was of a different opinion, was Sydney Smith’s answering thrust.

 

 

–Subham–

வீடு பற்றிய 30 பழமொழிகள் (Post No.4861)

Picture posted by Lalgudi Veda

COMPILED by London Swaminathan 

 

Date: 29 MARCH 2018

 

Time uploaded in London –  6-58 am (British Summer Time)

 

Post No. 4861

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

ஏப்ரல் 2018 காலண்டர்

(2018 பங்குனி-சித்திரை மாத நற்சிந்தனை காலண்டர்;

ஹேவிளம்பி- விளம்பி காலண்டர்)

 

முக்கிய விழாக்கள் ஏப்ரல் 14-தமிழ்ப் புத்தாண்டு; 18-அக்ஷய த்ருத்யை; 20- சங்கர ஜயந்தி; 29-சித்ரா பௌர்ணமி; புத்த பௌர்ணமி; ஏப்ரல் 1- ஈஸ்டர், 2- ஈஸ்டர் திங்கள் விடுமுறை

 

 

பௌர்ணமி ஏப்ரல் 29

அமாவாசை ஏப்ரல் 15

ஏகாதஸி விரதம்—ஏப்ரல் 12, 26

சுப முகூர்த்த தினங்கள்:- 5, 20, 22, 25, 27

 

ஏப்ரல் 1 ஞாயிற்றுக் கிழமை

வீடு அசையாமல் தின்னும், யானை அசைந்து தின்னும்

ஏப்ரல் 2 திங்கட்கிழமை

வீடு கட்டுகிறது அரிது, வீடு அழிக்கிறது எளிது

ஏப்ரல் 3 செவ்வாய்க்கிழமை

 

வீடு கட்டும் முன்னம், கிணறு வெட்ட வேண்டும்

ஏப்ரல் 4 புதன்கிழமை

வீடு நிறைந்த விளக்குமாறு

ஏப்ரல் 5 வியாழக்கிழமை

வீடு பற்றிக் கொண்டு  எரியும்போது, சுருட்டுக்கு நெருப்புக் கேட்டானாம்.

 

ஏப்ரல் 6 வெள்ளிக்கிழமை

வீடு பற்றி எரியும்போதா கிணறு வெட்டுவது?

ஏப்ரல் 7 சனிக்கிழமை

வீடு போ போ என்கிறது காடு வா வா என்கிறது

 

ஏப்ரல் 8 ஞாயிற்றுக் கிழமை

வீடு வெறும் வீடாய் இருந்தாலும் மணியம் ஏழு ஊர்

ஏப்ரல் 9 திங்கட்கிழமை

வீட்டிலிருக்கிற பூனையை அடித்தால், மேட்டிலிருக்கிற எலியைப் பிடிக்கும்

ஏப்ரல் 10 செவ்வாய்க்கிழமை

வீட்டுக்கு ஏற்றின விளக்கு விருந்துக்கும் ஆகும்

 

ஏப்ரல் 11 புதன்கிழமை

வீட்டைக் கட்டிப் பார், கலியாணம் செய்து பார்

 

ஏப்ரல் 12 வியாழக்கிழமை

வீட்டைக் காத்த நாயும் காட்டைக் காத்த நரியும் வீண்போகா

ஏப்ரல் 13 வெள்ளிக்கிழமை

வீட்டுக் கருமம் நாட்டுக்குரையேல்

ஏப்ரல் 14 சனிக்கிழமை

வீட்டுக் காரியம் பார்க்காதவன் நாட்டுக் காரியம்  பார்ப்பானா?

 

ஏப்ரல் 15 ஞாயிற்றுக் கிழமை

வீட்டுக்கு அடங்காத பிள்ளையை ஊரார் அடக்குவார்கள்

வீட்டில் அடங்கதவன் ஊரில் அடங்குவான்

ஏப்ரல் 16 திங்கட்கிழமை

வீட்டுக்கு அலங்காரம் பெரிய குடி.

வீட்டுக்கு அலங்காரம் மனையாள்.

வீட்டுக்கு அலங்காரம் விளக்கு.

வீட்டுக்கு அலங்காரம் வேளாண்மை.

ஏப்ரல் 17 செவ்வாய்க்கிழமை

வீட்டுக்கு இருந்தால் வெண்கலப் பெண்டாட்டி, வீட்டுக்கு இல்லாமற் போனால் தூங்கற் பெண்டாட்டி

ஏப்ரல் 18 புதன்கிழமை

வீட்டுக்கு ஒரு மெத்தை, கேட்டுக்கொள்ளடி மாரியாத்தை

ஏப்ரல் 19 வியாழக்கிழமை

வீட்டுக்கு ஒரு வாசற்படி, பூட்டுக்கு ஒரு திறவு கோல்

 

ஏப்ரல் 20 வெள்ளிக்கிழமை

வீட்டுக்கு சோறில்லை சிவனறிவான், நாட்டுக்குச் செல்லப் பிள்ளை நானல்லவா?

ஏப்ரல் 21 சனிக்கிழமை

வீட்டுக்குப் புளி, காட்டுக்குப் புலி

 

ஏப்ரல் 22 ஞாயிற்றுக் கிழமை

வீட்டுக்கு வாய்த்தது எருமை, மோட்டுக்கு வாய்த்தது போர்

 

ஏப்ரல் 23 திங்கட்கிழமை

வீட்டைக் கட்டிக் குரங்கை குடிவைத்தது போல

 

ஏப்ரல் 24 செவ்வாய்க்கிழமை

வீட்டுக்கு வீரன் காட்டுக்குக் கள்ளன்

 

ஏப்ரல் 25 புதன்கிழமை

வீட்டுப் பாம்பு காட்டுக்குப் போனால் அதுவும் காட்டுப் பாம்பாகும்.

வீட்டு மூதேவியும் காட்டு மூதேவியும் சேர்ந்து உலாவுகின்றன

 

ஏப்ரல் 26 வியாழக்கிழமை

வீட்டுக்குள் கஞ்சித் தண்ணீரைக் குடித்துவிட்டு, மீசையில் வெள்ளையைத் தடவிக்கொண்டு புறப்படுகிறது

ஏப்ரல் 27 வெள்ளிக்கிழமை

வீட்டுப் பெண்சாதி வேம்பு, நாட்டுப்     பெண்சாதி                 கரும்பு

 

ஏப்ரல் 28  சனிக்கிழமை

வீட்டுக்கு வீடு  வாசற்படி.

வீட்டுக்கு வீடு எதிர் வீடு ஆகாது.

வீட்டுக்கு வீடு மண் வீடுதான்.

 

ஏப்ரல் 29 ஞாயிற்றுக் கிழமை

வீட்டுச் செல்வம் மாடு, தோட்டச் செல்வம் முருங்கை

 

ஏப்ரல் 30 திங்கட்கிழமை

வீட்டுக்குள்ளே வேட்டை நாயை உசுப்புவானேன்

 

BONUS PROVERBS ON HOUSE/HOME

வீட்டிளக்காரம் வண்ணான் அறிவான்

வீட்டைக் கொளுத்தி வேடிக்கை பார்க்கிறதா?

வீட்டில் அழகு வேம்படியாகும்

 

–SUBHAM–

 

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? -2 (Post No.4860)

Date: MARCH 29, 2018

 

 

Time uploaded in London- 5-56 am

 

 

Compiled by S NAGARAJAN

 

 

Post No. 4860

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

சம்ஸ்கிருதச் சிறப்பு

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? -2

 

ச.நாகராஜன்

 

இந்தியா காத்து வரும் மொழி தான் சம்ஸ்கிருதம்.என்றாலும் பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதையும் அது கவர்ந்து வந்திருக்கிறது!

அது தரும் ஞானம் மேற்கு நாடுகளைக் கவர்ந்துள்ளது என்பதை யோகா, ஆயுர்வேத மருந்துகள், தியான உத்திகள், நடைமுறை தத்துவங்களாகத் திகழும் ஹிந்து மதம், புத்த மதம் ஆகியவற்றின் மூலமாக உணரலாம்.

ஆங்காங்குள்ள இடங்களில் இருக்கும் பாரம்பரியங்களையும், மதங்களையும் அது எதிர்ப்பதில்லை; அவற்றுடன் முரண்படுவதில்லை! மாறாக அவற்றை ஆதரிக்கிறது. விரிவாக்குகிறது.

மேலும் அதிகப் பொலிவுடன் அவற்றைத் திகழ வைக்கிறது!

சம்ஸ்கிருதத்தின் துல்லியம் அகர வரிசையில் ஒலிகள் எப்படி அமைக்கப்பட்டு விவரிக்கப்பட்டிருக்கிறது என்ற இணையற்ற விவரத்திலிருந்தே உருப்பெறுகிறது.

வாய், மூக்கு,தொண்டை முதலிய இடங்களிலிருந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒலி எழும்புவதை அது விவரிக்கிறது. அவை மாறுவதே இல்லை!

ஆகவே தான் சம்ஸ்கிருதத்தின் எழுத்துக்கள் ‘அக்ஷரங்கள்’ – அழிக்கப்பட முடியாதவை – என்று வழங்கப்படுகிறது.

ஆக வாயிலுள்ள ஐந்து இடங்கள் எல்லா அக்ஷரங்களையும் எந்த இடத்திலிருந்து உருவாக்குகிறது என்பதானது விரிவாக விளக்கப்பட்டுள்ளது. சில மன மற்றும் உடல் முயற்சிகள் மூலம் இவை நன்கு முறைப்படி திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளது.

A,b,c,d,e,f,g  என்ற ஆங்கில அகர வரிசையில் இதை உச்சரித்த பின் என்ன அமைப்பு (structure) இதில் இருக்கிறது?

ஏதேனும் தெரிகிறதா பாருங்கள்?! ஒரு அமைப்பும்   இல்லை.

A -இல் ஆரம்பித்து Z  வரை போகிறது. அவ்வளவு தான்!

மாறாக சம்ஸ்கிருதத்தில் உள்ள அழகிய அமைப்பு (structure) ஆங்கிலத்தில் இல்லை.

சரி,இப்போது எழும் கேள்வி, என் குழந்தை ஏற்கனவே இருக்கும் பாடச் சுமை போதாது என்று இன்னுமொரு மொழியை ஏன் கற்க வேண்டும் என்பது தான்!

இது அவர்களுக்கு எந்த விதத்தில் பயன்படும்?

பதில் இது தான்:

சம்ஸ்கிருதத்தின் குணாதிசயங்களே உங்கள் குழந்தையின் குணாதிசயங்களாக மாறும். அதாவது உங்கள் குழந்தையின் மனமும் இதயமும் அழகியதாக ஆகி விடும்!

துல்லியமானதாக (precise) ஆகி விடும்!

நம்பகமானதாக (reliable) ஆகி விடும்! எதையும் கூர்ந்து கவனிக்கும் சக்தியை அதனுடைய துல்லியத்தினால் சம்ஸ்கிருதம் அதைக் கற்கும் உங்கள் குழந்தைக்குத் தானாகவே கற்பித்து விடும்!

துல்லியம் இருக்குமானால் உயரச் செல்லுதல் என்பது ஏற்படும் என்பது அனுபவம்!

 

அது உங்களுக்குச் சந்தோஷத்தைத் தருகிறது. ஆரம்ப பயிற்சியில் ஈடுபட்டவர்கள் கூட அதன் இனிய அனுபவத்தை உணர முடியும். இசை போல அது உங்களை உயர்த்தும்.

அது வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும், பகுதிகளிலும் வாழ்நாள் முழுவதும் உதவும்.

இது மற்ற எல்லா குழந்தைகளையும் ஒப்பிடும் போது உங்கள் குழந்தைக்கு மிகுந்த பயனை நல்கும்.

சம்ஸ்கிருதத்தைக் கற்பதன் மூலமாக இதர மொழிகளைக் கற்பது சுலபமாக ஆகிறது.

சம்ஸ்கிருதத்தில் உள்ள சில இலக்கணங்களை ஐரிஷ் அல்லது கிரேக்கம்,லத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பிரதிபலிக்கிறது.

இந்த மொழிகள் அனைத்தும் சம்ஸ்கிருத இலக்கணத்தின் சில பகுதிகளைக் கொண்டுள்ளது.

சம்ஸ்கிருதம் கற்பதானது முறையான ஒரு மொழியைக் கற்கிறோம் என்பதாகிறது. அதன் விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் அது உங்கள் குழந்தைகளை முன்னேற்றுகிறது – வாழ்நாள் முழுவதும்!

அதை அவர்களே உங்களுக்குச் சொல்வார்கள்.

அவர்கள் நன்கு பேச ஆரம்பிப்பார்கள். யார் நன்கு பேச முடியுமோ அவர்களே உலகை வழி நடத்திச் செல்கின்றனர்.

பாரக் ஒபாமா நன்கு பேசுவதால் அவர் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறார்.

மஹாத்மா காந்தி தனது சீரான சொற்களால் பெருந்திரளான கூட்டத்தைக் கவர்ந்தார்.

தெரஸா எளிய சொற்களால் அனைவரையும் உயர்த்துகிறார்.

பெரும் ஆசான்களின் மொழியானது நமக்குப் பழமையான காலத்திலிருந்து கிடைத்துள்ள ஒன்று. ஆனால் அதுவே பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

ப்ளேட்டோவின் வார்த்தைகளின் மூலம் அவரது அருமையான மனத்தின் மூலம் புக முடிகிறது.

உங்கள் மகனோ மகளோ துல்லியமான மொழி மூலம் தங்களை வெளிப்படுத்த முடியுமானால் அவர்களே எதிர்காலத் தலைமுறையின் தலைவர்களாக ஆகி விடுவார்கள்.

வேதம், கீதை ஆகியவற்றின் மூலமாக சம்ஸ்கிருதம் அனைத்தையும் உள்ளடக்கிய கருத்துக்களைக் கொண்டுள்ளது.

வில்லியம் பட்லர் ஈட்ஸ் (William Butler yeats) அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ள உபநிடதங்கள் உலகம் முழுமைக்கும் பொதுவான மத உணர்வுகளை கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகம் முழுவதுமுள்ள மக்களுக்குத் தந்து வருகிறது!

மொழி பெயர்ப்பின் மூலம் இவற்றைப் படிப்பது மூலத்தைப் படிப்பதற்கு ஈடாகாது.

ஆகவே அவற்றை மூலத்தில் உள்ள மொழியிலேயே படிக்க வேண்டும்.

மதச் சச்சரவுகள் பெருகி வரும் இக்காலத்தில் உலக முழுமைக்கும் பொதுவான மத நோக்கத்தைத் தரும் ஞானம் நல்கும் மதத்தை நாம் பெற வேண்டும்.

பயங்கரவாதம் தவறாக மதத்தைப் புரிந்து கொள்ளும் அரைகுறை மதக் கருத்துக்களால் ஏற்படுகிறது.

உலகம் முழுவதும் போற்றும் ஆன்மீக ஞானியான ஸ்வாமி விவேகானந்தர். சிகாகோவில் 1893இல்  சர்வ மத மகாநாட்டில நிகழ்த்திய உரையில் கூறியது இது:-

You can put a mass of knowledge into the world, but that will not do it much good. There must come culture into the blood. We all know in modern times of nations which have masses of knowledge, but what of them? They are like tigers, they are like savages, because culture is not there.

Knowledge is only skin-deep, as civilisation is, and a little scratch brings out the old savage. Such things happen; this is the danger. Teach the masses in the vernaculars, give them ideas; they will get information, but something more is necessary; give them culture.

 

சம்ஸ்கிருதம் உங்கள் குழந்தைக்கு உலகம் முழுமைக்குமான, சீரான லயத்துடன் கூடிய உண்மைகளை வெளிப்படுத்த உதவுகிறது!

 

***

தொடரும்