ஏழு லட்சம் புத்தகங்களை முஸ்லீம் வெறியன் எரித்தது ஏன்? (Post No.4686)

Date: 31 JANUARY 2018

 

Time uploaded in London- 17-03

 

Written  by LONDON SWAMINATHAN

 

Post No. 4686

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 
((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

எகிப்திலுள்ள அலெக்ஸாண்ட் ரியா நகரில் (Alexandrian Library) இருந்த நூலகத்தை மத வெறிபிடித்த காலிபா உமர் எரித்து அழித்தது எப்படித் தெரியுமா?

 

“இங்கேயுள்ள 700,000 புத்தகங்கள் எல்லாம் குரான் சொல்லுவதையே, சொல்லுவதாக வைத்துக் கொள்ளுவோம். அப்போது குரான் ஒன்றே போதுமே! இந்த நூல்கள் எதற்காக?”

 

இங்கேயுள் ள   புத்தகங்கள் எல்லாம் குரான் சொல்லுவதற்கு எதிரான கருத்துக்களைச் சொல்லுவதாக வைத்துக் கொள்ளுவோம்; அப்படியானால் உடனே தீக்கிரையாக்க வேண்டும்.

இரண்டு விதத்தில் நோக்கினாலும் தீ வைத்துக் கொளுத்துங்கள்!

 

இந்தியாவில் பீஹாரில் இருந்த நாளந்தா பல்கலைக் கழகத்துக்கும் அதன் நூலகத்துக்கும் முஸ்லீம்கள் தீ வைத்தபோதும் இதேதான் சொல்லியிருப்பார்கள்.

xxx

 

மதவெறியர்களுக்கு ஆப்ரஹாம் லிங்கன் பதிலடி

ஒரு முறை  ரெவரென்ட் திரு ஷ்ரிக்லி என்பவர் ராணுவத்தில் மருத்துவ மனைக்கான சமய குருவாக (Chaplain) நியமிக்கப்பட்டார். இது அமெரிக்க ஒய்.எம்.சி.ஏ. (Young Men’s Christian Association) நிர்வாகிகளுக்குப் பிடிக்கவில்லை. உடனே ஒரு கூட்டம் போட்டு, ஒரு கமிட்டியை அமைத்து, வாஷிங்டனுக்கு அனுப்பினர்.

 

ஆப்ரஹாம் லிங்கன் அறையில் நடந்த சம்பாஷனை:–

 

“ஐயா, நாங்கள் இந்த திருவாளர் ஷ்ரிக்லி நியமனம் விஷயமாகப் பார்க்க வந்திருக்கிறோம்.”

 

லிங்கன்: “ஓ, கவலையே படாதீர்கள். என்னுடைய தீவிர சிபாரிசுடன் நியமனத்தை செனட் சபைக்கு அனுப்பிவிட்டேன். வெகு விரைவில் அவர்கள் அதை உறுதிப்படுத்துவர்”.

“ஐயா, நாங்கள்……… நாங்கள்………. அந்த நியமனம் வேண்டாம், கூடாது என்று சொல்ல வந்திருக்கிறோம்”.

 

லிங்கன்:-

“அ ப்படியா சேதி! கதையே மாறுகிறதே. சரி, என்ன காரணத்தால் நீங்கள் வேண்டாம் என்று சொல்லுகிறீர்கள்.

“ஐயா, அவர், நம்முடைய பைபிள் கூற்றுக்கு எதிரான பிராசாரத்தை முன்வைக்கிறார்.

லிங்கன்:-

அட, அப்படி என்ன சொன்னார்?

“ஐயா நம் சுதந்திரப் போருக்கு எதிர் தரப்பில் இருந்த எதிரிகளையும் பரம பிதா மன்னிப்பார் என்கிறார். அது எப்படி சரியாகும்? இறைவன் எல்லையற்ற தண்டனை தருவார் என்பதை அவர் ஏற்கவில்லை.

இவரை ஆஸ்பத்திரி சமய குருவாக நியமித்தால் நம் மதத்துக்கே ஆபத்து”.

மற்றவர்களும் ‘’ஆமாம், ஆமாம்’’ என்று ஒருமித்த குரலில் சொன்னார்கள்.

 

ஆப்ரஹாம் லிங்கன் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார். என்ன சொன்னீர்கள்? எதிரிகளையும் இறைவன் மன்னிப்பார் என்று அவர் கருதுகிறார் என்று சொன்னீர்களா? அப்படியானால் இவர்தான் இந்தப் பதவிக்கு மிகவும் தகுதியானவர்”

 

ஆப்ரஹாம் லிங்கனின் பதில் அந்தக் குழுவுக்கு நெத்தியடி, சுத்தியடி கொடுத்தது போல இருந்தது.

xxx

 

கிறிஸ்தவர் என்ன செய்தார்கள்?

அமெரிக்க வரலாற்றுப் பாடம் முடிந்தது.

வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார்:-

மாணவர்களே! இவ்வளவு நேரம் பாடம் கேட்டீர்களே! ப்யூரிடன் (Puritan) கிறிஸ்தவர்கள் அமெரிக்காவில் என்ன செய்தார்கள்?

ஒரு மாணவன் எழுந்தான்:-

“ஐயா, அவர்கள் தங்கள் வழியில் இறைவனைக் கும்பிட்டார்கள்; அதே வழியில் மற்றவர்களையும் கும்பிட வைத்தார்கள்.”

 

(கட்டாய மதமாற்றத்தை அந்தப் பையன் அழகாக சொல்லி முடித்தான். வாத்தியார் அதை ரசிக்கவில்லை!)

 

சுபம்–

ஆண்களை விட பெண்களுக்கு சக்தி அதிகம்-சாணக்கியன் (Post No.4685)

Date: 31 JANUARY 2018

 

Time uploaded in London- 15-07

 

Written  by LONDON SWAMINATHAN

 

Post No. 4685

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 
((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

ஆண்களை விட பெண்களுக்கு எல்லா அம்சங்களிலும் அ பார சக்தி இருப்பதாக உலக மஹா ஜீனியஸ்/ மஹா புத்தி சாலி, மேதாவிப் பிராஹ்மணன் சாணக்கியன் ,2300 ஆண்டுகளுக்கு முன்னர் இயம்பியதைப் படித்தால் அதிசயமாக இருக்கும்.

 

“ஆண்களை விட ஒரு பெண் இரண்டு மடங்கு சாப்பிடுவாள்;

ஆண்களை விட பெண்களுக்கு நான்கு மடங்கு புத்தி அதிகம்;

ஆண்களை விட பெண்களுக்கு துணிச்சல் ஆறு மடங்கு அதிகம்;

ஆண்களை விட பெண்களுக்கு செக்ஸ் (Sex drive) விஷயங்களில் எட்டு மடங்கு ஆர்வம் அதிகம்”.

ஆஹாரோ த்விகுணஹ ஸ்த்ரீணாம் புத்திஸ்தாஸாம் சதுர்குணா

ஷட்குணோஅத்யவஸாயஸ்ச காமஸ்சாஷ்டகுணஹ ஸ்ம்ருதஹ

–சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 17

 

xxx

 

எந்த ஜாதியானாலும் கல்யாணம் கட்டு!

 

 

“விஷப்பொருளில் அமிர்தம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்;

அசிங்கமான அழுக்கான பொருள்களுக்கு இடையே தங்கம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்;

கீழ் மக்களிடம் அறிவு இருந்தால் அதை ஏற்றுக்கொள்;

கீழ் மட்டத்தில் பிறந்த பெண் குணவதியாக இருந்தால் அவளை ஏற்றுக்கொள்”

விஷாதப்யம்ருதம் க்ராஹ்யமமேத்யாதபி காஞ்சனம்

நீசாதப்யுத்தமாம் வித்யாம் ஸ்த்ரீரத்னம் துஷ்குலாதபி

–சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 16

 

புறநானூற்றிலும் மநு ஸ்ம்ருதியிலும் இதற்கு இணையான கருத்துக்கள் உள்ளன.

 

xxx

 

பெண்களின் அழகு எது?

“குயிலின் அழகு இனிமையாகக் கூவுதலில் இருக்கிறது;

பெண்களின் அழகு கற்பில் உள்ளது (கணவனைத் தவிர யாரிடமும் விருப்பமின்மை);

அவலட்சணமான தோற்றம் உள்ளவரிடத்தில் அழகு என்பது அவருடைய அறிவுதான்;

யோகிகளுக்கு அழகு மன்னிப்பதில் உள்ளது”.

 

கோகிலானாம் ஸ்வரோ ரூபம் ஸ்த்ரீணாம் ரூபம் பதிவ்ரதம்

வித்யா ரூபம் குருபாணாம் க்ஷமா ரூபம் தபஸ்வினாம்

–சாணக்கிய நீதி, அத்தியாயம் 3, ஸ்லோகம் 9

 

திருக்குறளிலும் கற்பு மற்றும் கணவனைத் தொழுவது பெரிதும் போற்றப்படுகிறது. அதே போல குணம் என்னும் குன்றேறி நின்றார் உடனே மன்னித்துவிடுவர் என்றும் வள்ளுவன் கூறுவான்.

 

 

 

xxxx

 

 

பெண்களை தூய்மையாக்குவது எது?

வெண்கலத்தை சாம்பலால் தேய்த்து சுத்தப்படுத்தலாம்;

பித்தளையை அமிலத்தைத் தேய்த்து சுத்தப்படுத்தலாம்;

பெண்களுக்கு மாதவிடாய் (விலக்கு) வந்தால் சுத்தமாகிவிடுவர்

ஒரு நதியை வேகமாக ஓடும் தண்ணீர் சுத்தமாக்கும்.

பஸ்மனா சுத்யதே காம்ஸ்யம் தாம்ரமம்லேன சுத்யதி

ரஜஸா சுத்யதே நாரீ நதீ வேகேன சுத்யதி

–6-3

 

XXXX

யார் பாபம் யாருக்கு?

நாட்டு மக்கள் செய்த பாபம் அரசனைச் சாரும்;

அரசன் செய்த பாபம் புரோஹிதனைச் சாரும்;

மனைவி செய்த பாபம் கணவனைச் சாரும்;

மாணவன் செய்த பாபம் ஆசிரியரைச் சாரும்;

 

ராஜா ராஷ்ட்ர க்ருதம் பாபம் ராக்ஞஹ பாபம் புரோஹிதம்

பர்தா ச ஸ்த்ரீக்ருதம் பாபம் சிஷய பாபம் குருஸ்ததா

6-9

 

XXX

கல்யாணம் கட்டாதே!

கெட்ட அரசன் ஆளும் நாட்டைவிட காடே மேல்;

கெட்ட நண்பனைவிட, நண்பனில்லாததே மேல்;

கெட்ட மாணவனை விட மாணவன் இல்லாதததே மேல்;

கெட்ட மனைவியைவிட மனைவி இல்லாததே மேல்.

 

வரம் ந ராஜ்யம் ந குராஜராஜ்யம் வரம் ந மித்ரம் ந குமித்ரமித்ரம்

வரம் ந சிஷ்யோ ந குசிஷ்யசிஷ்யோ வரம் ந தாரா குதார தாராஹா.

6-12

 

–Subham–

 

CHRISTIAN FANATICS DISAPPOINTED (Post No.4684)

Date: 31 JANUARY 2018

 

Time uploaded in London- 8-02 am

 

Compiled  by LONDON SWAMINATHAN

 

Post No. 4684

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

 

Bigotry Anecdotes

 

BURN THE LIBRARY!

In connection with the destruction of the 700 000 manuscript volumes of the Alexandrian library, the Caliph Omar said

Either these books conform to the Koran or they do not. If they do, they are not needed; if they do not, they are positively harmful. Therefore, let them be destroyed.

 

Xxx

WHAT DID CHRISTIANS DO?

 

What did Puritans come to this country for?

Asked a teacher in a class of American history.

 

To worship in their own way, and make other people do not same, was the reply

 

Xxxx

FANATICS DISAPPOINTED!

 

The Young Men’s Christian Association appointed a committee to go to President Lincoln to protest his appointment of the Rev Mr Shrigley as hospital chaplain in the army. When they first approached, the president mentioning Mr Shrigleys name, he misunderstood them and thought they had come to praise his choice and said,

“Oh yes, I have sent it to the Senate. His testimonials are highly satisfactory, and the appointment will no doubt be confirmed at an early date”.

Hastily the committee spokesman protested,

“But sir, we have come not to ask for the appointment, but to solicit to withdraw the nomination, on the ground that Mr Shrigley is not evangelical in his sentiments”.

“Ah! Said the president, that alters the case. On what point of doctrine is the gentleman unsound? “

“He doesn’t believe in endless punishment”, was the reply.

“Yes, added another member of the committee, he believes that even the rebels themselves will finally be saved; and it will never do to have a man with such views as hospital chaplain”.

 

The president was silent for a moment. Then, regarding the expectant faces about him, he said with emphasis,

“If that be so, gentlemen, and there be any way under heaven where by the rebels can be saved, then let the man be appointed!”

 

Xxx

TRAGIC GALILEO

 

There are few more tragic records of the struggle of the human mind and spirit against bigotry than this text of Galileo”s recantation before the Holy Inquisition

 

“But because I have been enjoined by this Holy Office altogether to abandon the false opinion which maintains that the sun is the centre and immovable, and forbidden to hold, defend or teach the said false doctrine in any manner and after it had been signified to me that the aid doctrine is repugnant with the Holy Scripture.

 

I abjure, curse and detest the sad heresies and errors…….. and I swear that I will never or assert anymore in future say or more anything verbally  or in writing , which may give rise to a  similar suspicion of me”.

–SUBHAM–

 

 

வைரமும் இல்லை; முத்தும் இல்லை; எல்லாம் தப்பு!!! (Post No.4683)

Date: 31 JANUARY 2018

 

Time uploaded in London- 7-17 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4683

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

 

((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

 

ஷாக்கிங்! ஷாக்கிங்!!

 

வைரமும் இல்லை; முத்தும் இல்லை; எல்லாம் தப்பு!!!

 

ச.நாகராஜன்

 

1

நிஜமாகவே ஏமாந்து போனேன். நண்பர் வைரமுத்துவிடம் வைரம், முத்து இன்ன பிற ரத்தினங்கள் இருக்குமோ என்று ஒரு நப்பாசை இருந்தது.

ஆனால் ஷாக்கிங், ஷாக்கிங்! இவரிடம் வைரமும் இல்லை; முத்தும் இல்லை; வெறும் ஓட்டாஞ்சல்லி தான் இருக்கிறது என்று தெரிந்து விட்டது!

ஆண்டாள் தமிழை ஆண்டாள்;

தமிழ் இதயங்களை ஆண்டாள்! உண்மைத் தமிழர்களின் இதயங்களைத் தான் சொல்கிறேன்.

போலிகளை அவள் வேண்டாள். (வேண்ட மாட்டாள்!)

 

 

2

மனிதர் ‘பெய்யெனப் பெய்யும் மழை என்று எப்படி குமுதத்திற்குத் தலைப்புக் கொடுத்தாரோ தெரியவில்லை.

ராங் டைடில்!

“உன்னைப் பார்த்து உலகம் குரைக்கும்

தன்னம்பிக்கை தளரவிடாதே

இரட்டைப் பேச்சுப் பேசும் உலகம்

மிரட்டும் தம்பி மிரண்டு விடாதே!

 

ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு

உலகின் வாயில் இரட்டை நாக்கு

எனக்கு நேர்ந்த இழிமொழி எல்லாம்

உனக்குச் சொல்கிறேன் உள்ளத்தில் எழுது!

என்று 22-5-1997 குமுதம் இதழில் ‘பெய்யெனப் பெய்யும் மழை கவிதைத் தொடரில் எழுதிய போது மயங்கிப் போனேன்.

மனிதர் உண்மையத் தான் சொல்கிறாரோ என்று!

“இன்னிசைத் தமிழை எளிமை செய்தேன்

இலக்கியம் இல்லை லேகியம் என்றது…

எளிய தோற்றமே இயல்பென இருந்தேன்

வடுக பட்டி வழியுது என்றது

 

உயர்ந்தோர் பெருமை உவந்து புகழ்ந்தேன்

காதில்பூ வைக்கிறான் கவனம் என்றது

விருதுகள் கழுத்தில் வீழக் கண்டேன்

குருட்டு அதிர்ஷ்டம் கூடிய தென்றது

 

உலகின் வாயைத் தைத்திடு; அல்லது

இரண்டு செவிகளை இறுக்கி மூடிடு

உலகின் வாயைத் தைப்பது கடினம்

உந்தன் செவிகள் மூடுதல் சுலபம்

 

   _ 22-5-1997 குமுதம் இதழில் வெளியான 68 வரிகள் கொண்ட உலகம் என்ற கவிதையில் சில வரிகள் மட்டும் மேலே தரப்பட்டுள்ளது.

 

அடடா, எவ்வளவு ‘இழிமொழி எல்லாம் அனாவசியமாக வாங்கி இருக்கிறார் என்று தோன்றியது.

 

இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தான் உலகம் அவரை ஏன் உலகம் இப்படிப் பழிக்கிறது என்று எனக்குப் புரிகிறது.

உலகத்தோடு ஒட்ட ஒழுகார்; வையத்து

அலகையா வைக்கப்படும்

 

ஆம் இவரை உலகம் அலகையா – பேயாக வைத்து விட்டது இன்று!

சூடிக் கொடுத்த நாச்சியாரை உலகம் கொண்டாட, இவர் தன் வழி தனி வழி என்றார். உலகம் செய்ய வேண்டிய மரியாதையை இன்று செய்து விட்டது!

 

 

3

இவர் ஆண்டாளைப் பற்றிச் சொன்னதற்கு பக்தி லெவலில் சென்று மறுப்புரை கொடுக்கிறார்கள்.

அந்த அளவுக்கு இவர் தகுதியானவர் தானா! இல்லை என்று அல்லவா தோன்றுகிறது!!

இலக்கிய மட்டத்தில் கூட இவருக்கு இவ்வளவு மறுப்புரை தேவை இல்லை; வரலாற்று ரீதியாக கூட இவருக்கு இவ்வளவு ஆதார உரைகள் தேவை இல்லை.

தமிழ்ப் பைத்தியம் என்று நினைத்திருந்தேன்; ஆனால் தமிழைத் தவற விட்டு விட்டார் என்பது இப்போது எனக்குப் புரிகிறது!

 

 

இவர் சேர்ந்த இடமே சரியில்லை.

போலித் தமிழில் கொச்சை வார்த்தை பேசுபவர்களிடம் இச்சகம் கொண்டவர் இவர்; இச் ச(ஜ)கத்தை அவர்களிடம் கண்டவர் அவர்.

 

‘இவர் யார் என்றால் மனைவி; அவர் யார் என்றால் துணைவி;

‘இவள் யார் என்றால் துணைவிக்குப் பெண்; உனக்கு யார் என்றால் துணைவிக்குப் பிறந்த பெண்.

‘போதை முடிவுக்கு வந்து விட்டதா?

 

இப்போதைக்கு முடிவு தான்! (இப்போதைக்கு – அதாவது தற்காலிகமாக இப்போதைக்கு – மதுவுக்கு முடிவு தான்!)

இப்படி கொச்சையாகப் பேசி சொந்தக் கூட்டத்திடம் கை தட்டல் வாங்குபவர்களின் சேர்க்கை இவரை என்ன செய்யுமோ அதைச் செய்து விட்டது.

வேசி; தாசி! அடடா, என்ன தமிழ் அறிவு!

வேசிக்கும் தாசிக்கும் “இன்னிசைத் தமிழை எளிமை செய்தவர் தரும் விளக்கம் புல்லரிக்க வைக்கிறது.

 

 

4

 

இல்லாத ஒரு ஆய்வுக் கட்டுரையைக் கேடயமாக்கி தமிழையும் தமிழ்ப் பெண்ணையும் இழிவு படுத்திய இவருக்கு மறுப்புரையே தேவை இல்லை; இவரைப் பற்றிய மதிப்புரை தான் தேவை!

 

அதுவும் கிடைத்து விட்டது!

உலகளாவிய விதத்தில் இப்படி இழிவு பட்ட ஒரு கவிஞரை இனிமேல் தான் தமிழகம் காண வேண்டும்.

காணாது.

 

 எட்டிய மட்டும் காதைக் குடைந்து தோண்டி காதை அறுப்பதற்கு வில்லிப்புத்தூரார் இன்று இல்லை.

ஆகவே இவர் கவிஞர் என்று சொல்லிக் கொள்ளலாம். வில்லிப்புத்தூரிலும் சென்று பேசலாம் – வீ ரமாக, கோரமாக!

இவர் தமிழை இன்னும் எளிமைப் படுத்தினால்! ஒரேயடியாக தமிழ் …. !!!!

 

 

5

அது சரி, தினமணி வைத்தியநாதனுக்கு என்ன ஆயிற்று!

(திரு ஏ.என்.எஸ், எனது தந்தையார் இருந்த ஸ்தானத்தில் இப்படி ஒருவரா!)

 

ஐயகோ! கலியின் கொடுமையா? காலிகளின் சேர்க்கையா!

தினமணி என்ற ஒளி கொடுக்கும் சூரியனை இருள் கவ்வச் செய்து விட்டாரே! தினமணிக்கு கிரகண காலம்!!

 

6

ஒரே ஒரு வழி தான்! இவர்களை இனம் கண்டு கொண்டாயிற்று!

இவர்களை ஒதுக்குங்கள்; உள்ள வேலையைப் பாருங்கள்!

“அப்படி இருந்தால் அதுவும் தப்பு

இப்படி இருந்தால் இதுவும் தப்பு

கத்தும் நாய்க்குக் காரணம் வேண்டாம்

தன் நிழல் பார்த்துத் தானே குரைக்கும்

என்று எழுதி இருக்கிறார் அல்லவா! (உலகம் கவிதை வரிகள்)

இப்போது புரிந்து விட்டது இதில் கூறியுள்ள ஜந்து யார் என்று!

“வைரமும் தப்பு; முத்தும் தப்பு – இவர்

தரமும் தப்பு; தமிழும் தப்பு

 

 

7

குரைப்பது கடிக்காது!

தெய்வீக ஆண்டாளும் சேமமுற இருப்பாள்; தெய்வத் தமிழும் தனது தெய்வத் தன்மையுடன் சிறந்து வாழும்.

 

 

8

ஒன்றும் தெரியாதார் உச்சத்தில் ஏறினார்

    அன்றும் இராவணன் உண்டு; இரண்யன் உண்டு

நன்று செய்யாதார் நலிந்தே செத்தார்

    நாயகன் தோன்றுவான் யுகம் தோறும்!

 

இப்போதைக்கு இவர் போதையில் ஆட்டம்

     போட்டாலும் பொட்டென வீ ழ்வார்

எப்போதைக்கும் வெல்வது அறம் தான்!

      ஆண்டாள் என்றுமே ஆள்வாள்!!

***

பாரதி போற்றி ஆயிரம் – 40 (Post No.4682)

Date: 31 JANUARY 2018

 

Time uploaded in London- 6-50 am

 

COMPILED  by S NAGARAJAN

 

Post No. 4682

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

 

((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை, அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

  பாடல்கள் 232 முதல் 240

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கவிஞர் k. ராமமூர்த்தி பாடல்கள்

பா வானம் கண்டறியா விடிவெள்ளி!

சீர்த்தி மிகு செந்தமிழின் சீராளன்

செப்புமொழிக் கவிதந்த பேராளன்

கார்த்திகை ஒளித் திங்கள் நன்னாளில்

கவிச்சுடரின் தரிசனமாய் வந்தனனே

 

நேர்த்தியுடன் துணிநெய்யத் தறிபோடும்

நிலமறிந்து பயிர்காணும் குறியாளன்

வார்த்திருக்கும் சொற்சிற்பப் பாத்திரமாம்

மாகவிஞன் மந்திரங்கள் சாத்திரமாம்

 

பாரதிசெவ்வாய் திறந் தருளுடனே

பாப்புரட்சி செய்த வீரன், சக்திதாசன்;

சீரதிகம் பெற்றதமிழ்க் குடியுயர்த்தி

செகமுணரத் தமிழ்மணக்க முரசடித்தான்

 

பண்ணொத்துப் பாட்டுவரும் போதினிலே

பசிதாகம் பறந்தேகும் விதம் போல

பொன்னொத்தக் கவியின்பச் சுவைதந்து

பொழுதுகளை இன்பமய மாக்கினனே

 

காழ்ப்புதனை மனங் கொள்ளாமல்

கவிக்குலத்து முன்னவரைக் கொலுவேற்றி

பாழ்பட்டு இருளடர்ந்து சிதைந்தநற்

பாமண்டபத் திருப்பணிக்கு அவதரித்தான்

 

எளிதாக்கித் தமிழ்ப்பாவில் நயம்தந்த

எழுச்சிக்கவி பாரதியார் சொல்யாவும்

உளிதாக்கி தெரித்தகவிச் சிதறலாகும்

ஒப்புக்கே எழுதாத உணர்ச்சிக்கவி

 

முந்தையரின் புகழ்த்தோணி விட்டங்கே

முத்தமிழும் விரிகடலாய் கிடந்தாலும்

சிந்தையதில் கடல்செல்வி ஆழம் இருந்து

தேர்ந்த கவி முத்துக்கள் பாலித்தான்

 

பாச்சொறிந்து புத்தமுதச் சுவைதந்த

பாவானம் கண்டறியா விடிவெள்ளி

மாக்கவிஞன் எங்கோமான் பாரதியார்

மங்கிடுமோ தமிழணங்கி னொளியிங்கே

 

வளர்கின்ற பொற்காலம் தமிழிற்கே

வாராதோ எனவிசனிக் கின்ற நாளில்

புலர்கின்ற பொழுதுவரும் ஞாயிற்றின்

புத்தொளியாய் பிறந்தவனே பாரதியாம்.

 

கவிஞர்  K. ராமமூர்த்தி : பாரதி காவலர் டாக்டர் K. ராமமூர்த்தி ‘மகாகவி பாரதிக்கு ஜதி பல்லக்கு’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். பாரதி பற்றிய பல கவிதைகளையும் புனைந்துள்ள பாரதி ஆர்வலர். தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் நடந்த 10வது உலகக் கவிஞர் மாநாட்டில் பங்கேற்று பாரதி பற்றி உரையாற்றியவர். பாரதத்தில் பல்வேறு இடங்களில் உரையாற்றியவர். தொடர்ந்து பாரதியைப் பரப்பும் பணியை மேற்கொண்டுள்ளார்.

தொகுப்பாளர் குறிப்பு: 6-12-1981 தினமணி சுடர் இதழில் வெளியாகியுள்ள கவிதை.

நன்றி: கவிஞர் K. ராமமூர்த்தி; நன்றி: தினமணி சுடர்

 

***

பக்திப் பாடல்கள் கேள்வி பதில் Quiz(Post No.4681)

Date: 30 JANUARY 2018

 

Time uploaded in London- 7-46 am

 

Written  by LONDON SWAMINATHAN

 

Post No. 4681

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

 

((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை, அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

 

 

நீங்கள் பக்திப் பாடல்களைக் கேட்டிருந்தாலோ பாடியிருந்தாலா கீழ்கண்ட கேள்விகளுக்கு கட்டாயம்  பதில் சொல்ல முடியும்; முயன்று பாருங்கள். பக்திப் பாடல்களுடன் சில இலக்கிய நயம் மிக்க பாடல்களும் உள்ளன

Old books, Picture posted by A Sugumaran

  1. நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
    பாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில்

 

 

  1. நாய்க்குண்டு தெண்டு, நமக்குண்டு பிச்சை, நமனை வெல்ல
    வாய்க்குண்டு மந்திர பஞ்சாட்சரம், மதியாமல் வரும்
    பேய்க்குண்டு நீறு

 

3.அன்பு சிவம் உலகத்துயர் யாவையும்

அன்பினில் போகுமென்றே – இங்கு

முன்பு மொழிந்துலகாண்டதோர் புத்தன்

மொழி எங்கள் அன்னை மொழி

 

 

4.அப்பன் இரந்து உண்ணி; ஆத்தாள் மலை நீலி;ஒப்பறிய மாமன் உறி திருடி- சப்பைக்கால் அண்ணன் பெருவயிறன்

 

 

5.எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை! வாழிய நிலனே!

 

 

Picture of london pathmanabha iyer

6.அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும்

ஆமையும் ஆனவனே! ஆயர்கள் நாயகனே

என் அவலம் களைவாய்!

 

 

  1. துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம் நெஞ்சிற்
    பதிப்போர்க்கு செல்வம் பலித்து கதித்து ஒங்கும்
    நிஷ்டையுங் கைகூடும்,

 

 

  1. தீது இலா வடமீனின் திறம் இவள் திறம்

 

  1. காதன் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதங் கண்டேன்

 

  1. நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தீயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே இராம என்ற இரண்டு எழுத்தினால்

 

  1. அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவதுயாரும் அறிகிலார்

 

  1. அந்தணர் என்போர் அறவோர்

 

  1. அழகிய மயிலே!அழகிய மயிலே!

உனது தோகை புணையாச் சித்திரம்

ஒளிசேர் நவமணிக் களஞ்சியம் அதுவாம்

 

  1. எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)

அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

 


  1. பிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை பிறந்து மண்மேல்
    இறக்கும்பொழுது கொடுபோவதில்லை இடை நடுவில்
    குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியா
    திறக்கும் குலாமருக்கு என் சொல்லுவேன்கச்சி ஏகம்பனே

 xxxxx

 

ANSWERS

1.குமர குருபரர், சகல கலா வல்லிமாலை, 2. பட்டினத்தார் பாடல்கள், 3. பாரதியார் பாடல்கள், 4. காளமேகப் புலவர் பாடல்கள் , 5. சங்க கால அவ்வையார் ,புறநானூறு, 6. பெரியாழ்வார் திருமொழி, திவ்யப் பிரபந்தம், 7.தேவராய சுவாமிகள், கந்த சஷ்டிக் கவசம், 8. இளங்கோ, சிலப்பதிகாரம், 9. அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை, 10. கம்பன், கம்ப ராமாயணம், 11.திருமூலர் எழுதிய திருமந்திரம், 12. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், 13. பாரதிதாசன் பாடல்கள், 14. தற்கால அவ்வையார், விநாயகர் அகவல்,  15. பட்டினத்தார் பாடல்கள்

 

–Subham–

 

 

 

 

 

 

 

CHANAKYA ON WOMEN’S MIGHTY POWER!!! (Post No.4680)

WRITTEN by London Swaminathan

Date: 30 JANUARY 2018

Time uploaded in London – 7-27 am

Post No. 4680

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

Chanakya, the great genius, who lived 2300 years ago in India had given his views on various topics and issues in addition to his monumental work Athashastra—the first Economics book in the world. Following are his comments on wife and women found in his didactic work Chanakyaniti.

 

One should accept nectar even from poison, gold even from filth, knowledge even from a lowly person and a jewel of a woman even from a lowly family

Chankaya niti, chapter 1, sloka/verse17

Vishaadapyamrutam graahyamedhyaadapi kaancanam

Niicaadapyuttamaam vidhyaam striiratnam dushkulaadapi

 

A Tamil poet in Purananuru says that the king would call for service one from the lowest of the four Varnas if he is more educated. Manu says that a person can learn from the lowest caste and treat him like Guru. He also says women can be married from any caste if they are good. Vasistha’s wife Arundhati is shown as an example.

 

 

Xxxx

Woman’s Sex Drive

 

The diet of a woman is twice, the intellect four times, the boldness/ courage six times, and sex drive eight times that of man

Chankaya niti, chapter 1, sloka/verse18

Aahaaro dwigunah striinaam buddhistaasaam chaturgunaa

Shatgunoadhyavasaayasca kaamascaashtagunah smrutah

 

Xxxx

 

Beauty of a Woman

The beauty of cuckoos is in their sweet cooing, that of women in their faithfulness and loyalty to their husbands, that of ugly ones in their knowledge and that of ascetics is in their forgiveness.

 

Chapter 3, sloka 6

Kokilaanaam swaro ruupam striinaam ruupam pativratam

Vidhyaa ruupam kuruupom kshamaa ruupam tapasvinaam

 

Ascetic’s anger wont last even for a moment because their nature is to forgive, says Tamil poet Tiru Valluvar.

Xxxx

 

Bell metal is cleansed with ashes, brass with acid, a woman with menstruation, and  a river with speed.

Chapter 6, sloka 3

 

Basmanaa sudhyate kaamsyam taamramamleena sudhyati

Rajasaa sudhyate narii nadhii vegena sudhyati

 

Xxxx

 

Woman on the move is wrong!

 

A king on the move gains respect, so do a Brahmin and a Yogi/saint, but a woman doing so comes to nought.

Chapter 6, sloka 4

Braman sampuujyaterajaa braman sampuujyate dwijah

Braman sampuujyate yogi strii bramantii vinasyati

Xxx

Wife’s sin goes to Husband!

 

The sin committed by the country goes to the king, that committed by the king goes to his priest, that committed by a woman goes to her husband and that pupil goes to his teacher.

Chapter 6, sloka 6

Raja raashtrakrutam paapam  raaknjah paapam purohitah

Bhartaa ca striikrutam  paapam sishyapaapam gurustathaa

 

Xxx

Don’t Marry!!!!

 

It is better not to have kingdom but not the kingdom of a bad king

 

It is better not to have a friend than to have a bad one

 

It is better not to have a student than to have a bad one

 

It is better not to have wife than to have a bad one.

 

Chapter 6, sloka 12

 

Varam na raajyam kuraajaraajyam varam na mitram na kumitra mitram

Varam na sihyo  na kushishyasishyo varam na daaraa  na kudaaradaaraah

 

xxxxxxxx

A Woman’s Strength!

The prowess of arms is the strength of king, that of  a Brahmin versed in the Veda is in knowledge of the Vedic lore  ,  beauty, sweetness and youth are the   unsurpassed strength of  women

 

Chapter 7, sloka 11

Baahuviiryam balam raaknjobraahmano brahmavid bhalii

Ruupayauvanamaadhuryam striinaam balamanuttamam

 

Source Book: Canakyaniti, Translated by Satya Vrat Shastri

xxx

 

காப்பி அடிக்கும் எழுத்துக் கலைவாண(ஞ)ர்கள்! (Post No.4679)

Date: 30 JANUARY 2018

 

Time uploaded in London- 6-45 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4679

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

 

((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை, அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

இலக்கியத் திருட்டு

காப்பி அடிக்கும் எழுத்துக் கலைவாண(ஞ)ர்கள்!

 

ச.நாகராஜன்

 

1

கவிஞர் கண்ணதாசன் எழுதியதைத் தன் பெயரில் போடத் துடித்த கலைஞர்கள் காலத்திலிருந்து இன்று வரை காப்பி அடிக்கும் கலைவாணர்கள் பெருகியே வந்திருக்கிறார்கள்.

இதை ஒரு குற்றமாக அவர்கள் நினைப்பது இல்லை என்பது தான் மெய்; வருத்தப்பட வைக்கும் விஷயமும் இது தான்!

இதில் ஒரு அற்ப ஆசை; தானும் ஒரு படைப்பாளி தான் என்பதை உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதே அடி மனத்து ஆசை.

புரிகிறது; ஆனால் இது பெரும் தவறல்லாவா! ஒரிஜினல் படைப்பாளிக்கும் படிப்பவர்களுக்கும் இழைக்கும் மாபெரும் துரோகமல்லவா?!

 

 

படித்ததில் பிடித்ததை நண்பர்களுக்கு அனுப்பலாம்; தளங்களில் வெளியிடலாம்- உரியவரின் அனுமதி பெற்று; அது இந்தக் கால கட்டத்தில் மிகவும் கஷ்டம் என்றால், படித்த நல்ல விஷயத்தைப் பகிர வேண்டும் என்ற ஆவல் அதிகமாகி இருந்தால், அதை எழுதியவர் யார், அதை வெளியிட்ட பத்திரிகை அல்லது இணையதளம் எது, அதை விரும்பக் காரணம் என்ன என்பதையும் சேர்த்து வெளியிட வேண்டும். உள்ளதை உள்ளபடி வெளியிட்டால் போதும்; என் அபிப்ராயம் எல்லாம் எதற்கு என்றால், அதுவும் சரிதான், படைப்பை அப்படியே அதை எழுதியவர், வெளியிட்ட தளம், பத்திரிகை எது என்பதுடன் வெளியிட வேண்டும்.

இது குறைந்த  பட்ச கர்டஸி.(Courtesy)

 

2

நாளுக்கு நாள் எனது படைப்புகளை உடனுக்குடன் “திருடி” என் பெயரை ‘கட்’ செய்து விட்டு, தங்கள் பெயரில் வெளியிடும் சாமர்த்தியசாலிகள் ஒன்றை மறந்து விடுகிறார்கள்.

இப்படி அவர்கள் பெயரில் வெளியாகியுள்ள திருட்டுக் கட்டுரை எனது உடனடி கவனத்திற்கு சில மணி நேரங்களுக்குள்ளாகவே தெரிவிக்கப்பட்டு விடுகிறது.

 

 

சுமார் எட்டாயிரம் பேர்கள் தினசரி எனது கட்டுரைகளைப் படிக்கிறார்கள் என்பதும், இவர்களுள் பெரும்பாலானோர் மிகவும் நல்லவர்கள், வல்லவர்கள், அதி புத்திசாலிகள், ஸ்மார் பீபிள் என்பதும் ஒரு காரணம் – இது உடனடியாக என் கவனத்திற்குக் கொண்டுவரப்படுவதற்கு

 

3

எனது எழுத்துக்களை திருடிய சில “திருடர்கள்”, திருடிகள் பற்றி எழுத வேண்டாம் என்று தான் இத்தனை நாள் இருந்தேன். ஆனால் சமீபத்திய “காதல் எத்தனை வகை” என்ற எனது கட்டுரை திருடப்பட்டு வெளியிடப்பட்ட விதம் தான் என்னை வருத்தமுறச் செய்தது, கோபமுறச் செய்தது.

 

 

அதில் என் பெயரை வெளியிடவில்லை; பரவாயில்லை!

வெளியிட்ட www.tamilandvedas.com தளத்தின் பெயர் வெளியிடப்படவில்லை, பரவாயில்லை.

ஆனால் போஜ மஹாராஜன் எழுதிய சிருங்காரபிரகாஸம் என்ற அரிய நூலை 1908 பக்கங்களையும் கைப்பிரதியாக எழுதி அதை ஆராய்ந்து உலகிற்கு வெளியிட்டாரே பேரறிஞர் டாக்டர் வி.ராகவன், அவரைப் பற்றி ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடவில்லை.

 

 

அந்தப் பகுதியை கட் செய்து விட்டார் “உத்தம வில்லன்”!

ஏன் அப்படிச் செய்தார் என்பது தான் தெரியவில்லை!

தன் பெயரில் வெளியிட்ட இந்தக் கட்டுரையை சில மணி நேரத்திற்குள்ளாகவே ஹெல்த்கேர் இதழ் ஆசிரியரும் என் நண்பருமான ஆர்.சி. ராஜா,” நன்றி கூட இல்லையே” என்று வருத்தப்பட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார் – இதை எடுத்துப் போட்டவரின் தளத்தின் லிங்கை அனுப்பி!

என்ன சொல்லித் திட்டுவது? படிப்பவர்கள் தாம் தீர்மானித்துத் திட்ட வேண்டும்.

 

சிலர் தனக்கு வந்த மெயிலிலிருந்து அப்படியே அனுப்பி விடுகிறார்கள் – அவர்களுக்கு ‘லிஃப்ட்” ஆனது தெரியாது!

ஆகவே உடனடியாக யாரையும் திட்ட முடியாது!

 

4

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையத்தை சென்னையில் இருந்தால் காலையில் கேட்பது வழக்கம். காரணம், சுமார் இருநூறுக்கும் (இன்னும் அதிகமாகவே) மேற்பட்ட  அறிவியல் மற்றும் சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகளை நான் அளித்திருப்பதாலும் இன்னும் அளித்து வருவதாலும், அந்தச் சிந்தனைகள் ஒலிபரப்பப்படுவதை  கேட்பேன்.

ஒரு நாள். ஒரு ஒலிபரப்பு என்னை திடுக்கிட வைத்தது.

ஒரு டாக்டர். ஜானகி என்று பெயர். எனது நூறு அறிவியல் கட்டுரைகளைத் தொகுத்து ‘வியப்பூட்டும் விஞ்ஞானப் புதுமைகள் நூறு” (நவம்பர் 2005 வெளியீடு) என்று ஒரு நூலாக வெளியிட்டிருந்தேன்.

 

 

அதில் பத்தை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை, எழுத்துக்கு எழுத்து  மாற்றாமல் அம்மையார் அனுப்ப, அதை நமது வானொலி நிலையமும் ஏற்றுக் கொண்டிருந்தது.

உடனடியாக புரோகிராம் எக்ஸிகியூடிவிடம் (திரு செல்வகுமார் அருமையான நண்பர்; சிறந்த நிர்வாகி; நல்லனவற்றைத் தேர்ந்தெடுப்பதில் வல்லவர்) விஷயத்தைச் சொன்னேன்.

அவர் சிரித்தார். ‘என்ன செய்வது? எல்லா நூல்களையும் என்னால் படிக்க முடியாதே! இப்படி ஒரு டாக்டர் செய்யலாமா’, என்று வருந்தினார்.

பின்னர் என்ன நடந்திருக்கும் என்பதை நான் ஊகித்தேன்.

 

5

பாக்யாவில் கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து சுமார் 19 வருடங்களாக வாரம் தோறும் எழுதி வருகிறேன். ஆச்சரியத்திலும் ஆச்சரியம் தினத்தந்தியில் அப்படியே எனது அறிவியல் கட்டுரை காப்பியாக ஒரு  முறை வந்ததை தற்செயலாகப் பார்த்துத் திடுக்கிட்டேன். என்ன செய்வது?

 

 

6

இலங்கையிலிருந்து வெளிவரும் பத்திரிகை தினக்குரல். சில ஆண்டுகளுக்கு முன்னர் மஞ்சுளா ரமேஷ் அவர்களின் குழுமத்திலிருந்து வெளியாகும் சினேகிதி பத்திரிகையில் மாதம் ஒரு கட்டுரை எழுதுவது எனது வழக்கம். அதில் வெளியான 64 கலைகள் பற்றிய எனது கட்டுரை அப்படியே வெளியாகி இருந்தது. ஆனால் இந்தப் பத்திரிகையில் எனது பெயரும், கட்டுரை எடிட் செய்யப்படாமலும் வந்திருந்தது. இதை எனது சம்பந்தி திரு சேஷாத்ரிநாதன் அவர்கள் சுட்டிக் காட்டினார்.

திருட்டு உலகிலும் ஒரு நல்ல குரல்!

 

 

எனது சம்பந்தி சந்தேகாஸ்பதமாக இருக்கும் கட்டுரைகள் என்னுடையது தானா என்று சுலபமாகக் கண்டுபிடிக்க ஒரு வழி வைத்திருக்கிறார்.

 

 

இதை அவர் சொன்ன போது சிரித்து மகிழ்ந்தேன்.

காப்பி அடிக்கப்பட்டுள்ள கட்டுரையின் சில முக்கிய சொற்றொடர்களை அப்படியே கூகுளில் போடுவாராம். எனது ஒரிஜினல் கட்டுரை வெளியான தளம்/ அல்லது பத்திரிகை, வெளியான தேதி உள்ளிட்டவை வந்து விடுமாம். உடனடியாக எனக்குத் தெரியப்படுத்துவார்.

இது போல எனது நண்பர்கள் பலரும் உடனடியாக போனில் கூப்பிட்டுச் சொல்லி விடுகிறார்கள்!

 

7

ரவி என்று ஒரு ஆசாமி. அப்படியே அப்பட்டமான காப்பியாளர். எனது கட்டுரையைத் தன் போட்டோவுடன் போட்டுக் கொண்டார். இதைச் சுட்டிக் காட்டிய போது, “இதில் என்ன இருக்கிறது?” என்று கேட்டார். அவருக்கு காப்பிரைட், திருட்டு இலக்கியம் என்றெல்லாம் பாடமா எடுக்க முடியும்? இதற்கு தண்டனை உண்டு என்றவுடன் ஆசாமி வழிந்தார்; வழிக்கு வந்தார்.

 

 

8

ஒரு நல்ல ஆன்மீக மாதப் பத்திரிகை. ‘அமிர்தமாக வர்ஷிக்கும்’ நல்ல கருத்துக்களைக் கொண்டது. இதில் ஒரு கட்டுரை வந்தது. இதைச் சுட்டிக் காட்டியவுடன் ஆசிரியர் வருத்தப்பட்டார். ஏனெனில் இப்படி ஒரு காப்பி கட்டுரையைத் தான் வெளியிட்டு விட்டோமே என்று!

 

 

சென்ற வாரம் எனது சம்பந்தி அனுப்பிய கட்டுரை ஒன்று வந்தது. மஞ்சுளா ரமேஷ் ஞான ஆலயம் குழுமம் நடத்தும் ஜோஸிய இதழான ஸ்ரீ ஜோஸியத்தில் நவம்பர் 2017 இதழில் வெளியான கட்டுரை ஒன்றை அப்படியே ஒரு பெண்மணி தன் பெயரில் இணைய தளத்தில் வெளியிட, அது “உலா” வந்தது! ஆனால் ஒரிஜினல் கட்டுரையில் நான் கொடுத்திருந்த ஆதாரமான சம்ஸ்கிருத ஸ்லோகங்களை (என்னென்ன கிழமைகளில் என்னென்ன செய்யலாம்?) வெட்டி விட்டார்.

 

9

கட்டுரை நீண்டு விட்டது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்!

அனுமதியுடன் பிரசுரியுங்கள், உரிய கட்டுரையாளரின் பெயரைப் போடுங்கள், அது வெளியான பத்திரிகை அல்லது தளத்தின் பெயரைச் சுட்டிக் காட்டுங்கள் என்று தான் சொல்லலாம்; இதற்கு அதிகமாக என்னத்தைச் சொல்ல, காப்பி அடிக்கும் கலை(ஞ)-வாணர்-களுக்கு?!

1961ஆம் ஆண்டு வெளியான திருடாதே திரைப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்காக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடலின் வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது :

‘திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால்

திருட்டை ஒழிக்க  முடியாது!’

 

10

ஒழிக்க முடியாவிட்டாலும் கூட கண்டிக்கலாம் இல்லையா?

இப்படி இலக்கியத் திருடு செய்யும் குருடர்களை ஒரு வார்த்தை கண்டித்து எழுதிப் போடுங்கள்.

வெட்கமடைபவர்கள், அப்புறம் அதில் ஈடுபடமாட்டார்கள், உரியவரின் பெயரை வெளியிடுவார்கள்!

அத்துடன் எனது நலம் விரும்பிகள் செய்வது போல ஒரிஜினல் படைப்பாளருக்கு இப்படிச் செய்பவர் யார் என்பதைத் தெரிவிக்கலாம்!

***

 

 

செரிங்கட்டிவிதிகள் (Post No.4678)

Date: 30 JANUARY 2018

 

Time uploaded in London- 6-20 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4678

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் இரண்டாவது உரை

 

  1. செரிங்கட்டிவிதிகள்

ச.நாகராஜன்

    இயற்கையின் உயிரியல் படைப்பு மர்மத்தை ஆராய்வதற்குத் தகுந்த ஒரு இடமாக விஞ்ஞானிகள் கருதியது ஆப்பிரிக்காவின் வட டான்ஜானியாவில் ஆரம்பித்து, தென் மேற்காக கென்யா வரை பரந்துள்ள மிக அழகிய செரிங்கட்டி வன பிராந்தியம் தான்! சுமார் 12000 சதுர மைல் பரப்பைக் கொண்டுள்ள இந்த இடத்தில் தான் செரிங்கட்டி சரணாலயம் உள்ளது.

உயிரியல் விஞ்ஞானிகளுக்கு இந்தப் பகுதி ஒரு ஆச்சரியகரமான ஆய்வுக் கூடம்.

1957ஆம் ஆண்டு டான்ஜானியா தேசீயப் பூங்காவின் அழைப்பின் பேரில் இங்கு இரு விஞ்ஞானிகள் வந்தனர். பெர்னார்ட் ஜிமெர்க் மற்றும் அவரது மகன் மைக்கேல் ஆகிய இருவரும் இந்தப் பகுதியை ஆய்வு செய்து மிகச் சரியாக மிருகங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அயர்ந்து போனார்கள்; அவர்களது ஆய்வு முடிவைக் கேட்டு உலகமே அயர்ந்து போனது!

கொம்புகளை உதிர்க்காத ஒரு அரிய வகை ஆப்பிரிக்க மானினம் மட்டும் 99481. வரிக்குதிரைகள் 57199.கேஸல் வகை மானினம் 1,94,654. நீலமும் மஞ்சளும் கொண்ட புள்ளின மான்கள் 5172. அரிய வகை இம்பாலா மான்கள் 1717. எருமைகள் 1813. ஒட்டைசிவிங்கிகள் 837.யானைகள் 60. மொத்தமாக 3,66,980 பிராணிகளை அயராமல் அவர்கள் எண்ணி பட்டியலிட்டனர்.

செரிங்கட்டி என்றால் ஆப்பிரிக்க மொழியான மாசாய் மொழியில் முடிவற்ற சமவெளி என்று பொருள். ஆப்பிரிக்காவின் ஏழு அதிசயங்களுள் இதுவும் ஒன்று. உலகின் பத்து இயற்கை எழில் வாய்ந்த இடங்களில் இது ஒன்று. இங்கு தான் அதிகமாக சிங்கங்கள் உலவுகின்றன.

 

70 அரிய வகை பிராணிகளும் 500 பறவைகளின் அரிய இனமும் செரிங்கட்டியில் உள்ளன.

செரிங்கட்டியை நன்கு ஆராய்ந்த விஞ்ஞானிகள் இயற்கை பற்றிய ஆறு விதிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

முதல் இரண்டு விதிகள் ஜனத்தொகை பற்றியது. இந்த மிருகம் எண்ணிக்கையில் குறைந்துவிட்டது, அது கூட இருக்கிறது என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாதீர்கள். இயற்கைக்கு எதையும் நன்றாகவே சம அளவில் இருக்க வைக்கும் அபூர்வ சக்தி உள்ளது என்கிறது ஆய்வின் முடிவு.

மனிதன் தான் இந்த இயற்கையின் விதிகளினூடே விளையாடுகிறான் என்பதும் அதனாலேயே அரிய விலங்குகளும் பறவைகளும் அழிந்துபடுகின்றன என்பதும் தெரிகிறது.

‘உயிர்களிடத்து அன்பு வேணும் என்ற பாரதியின் அறிவுரையை மனதில் கொண்டால் இயற்கை அமைத்த உலகம் வளம் பெறும்; நமக்கு வளத்தையும் நல்கும்.

***


 

STORY OF MR.OMNIA IN BONUM (Post No.4677)

WRITTEN by London Swaminathan 

 

Date: 29 JANUARY 2018

 

Time uploaded in London – 8-26 am

 

Post No. 4677

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

This is a folk tale from Tamil Nadu in South India. There was a king in Tamil country who had a wise minister. Whenever something good or bad happened in the country or at palace, he used to tell the king ‘Omnia in bonum’ (Latin for good in everything). He believed that everything will be good for those who believe in God. He told the king to leave everything to god and not to worry about anything. In course of time he earned the nick name Mr Good (omnia in bonum).

 

The king was not happy with his minister but he retained him because he served his father and earned the name of a wise minister. Once the king had cut his finger while he was cutting a fruit. Immediately he called the minster to find out any bad omen in it. He told the king everything is for good (Omnia in bonum). The king got very angry and ordered his servants to put him into the prison. Then he called the natïve doctor who gave him some herbal treatment. He put a bandage around the king’s finger.

Months have passed. The villagers of the country came to the palace and complained about wild animals entering their villages and attacking the cattle. They requested the king to hunt those wild animals. The king decided to go for hunting and one day he went into the forest. Usually the minister would be next to him and this time he went alone because he put his minister into the prison.

 

After a day of hectic hunting the king wanted to take rest under the shade of a tree and so ordered his assistants to keep away from him. While he had a nap, suddenly a lion sprang up on him. But it went away after smelling him. The king was shivering and shaking and at last managed to return to the palace with the help of his assistants.

 

As soon as he returned to the palace he released his minister and asked to explain the meaning of lion’s attack and why it left him alive. The minister again began with his refrain, “Everything that happened is good. Everything is planned by God. I have been telling you this from day one of my ministership. Look! because of your injury the lion did not eat you. Normally they don’t like the injured or dead animals. So, your injury only saved you.”

The king laughed and asked what happened to you Mr Good? You have been suffering in the prison until this minute. The minister told him, “No, I did not suffer. If I had accompanied you which I always did, the lion would have killed me because my body was intact. So the prison sentence is also God’s will. It was good that you imprisoned me”. The king was happy and made him a full-fledged minister again.

 

There is another version of this story:

When the king had a nap under the tree, the tribal worshippers — Kabaliks –had caught him and took him for a human sacrifice. They wouldn’t sacrifice anyone with lost limbs or handicapped. So, they released him when they saw a bandage around his cut finger.

 

All for Good; Good for all!

 

–Subham–