Post No. 10,913
Date uploaded in London – – 30 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
வன பர்வம் ஸ்லோகம் -95-15/18
லோபாமுத்ரா செப்புகிறாள் :–
என் மூலமாக ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக என்னை என் கணவர் திருமணம் செய்து கொண்டார் என்று எனக்குத் தெரியும் . அதில் சந்தே கமில்லை; ஒரு மனைவியிடம் கணவன் எப்படி நடந்து கொள்வாரோ அப்படி நீங்கள் என்னிடம் வரலாம். ஆனால் என்னுடைய தந்தையின் அரண்மனை போன்ற ஓரிடத்தில் என்னைச் சந்தியுங்கள். அத்தோடு நீங்களும் சிறந்த ஆடை அணிகலன்களை அணிந்து அறைக்குள் வாருங்கள் .
அகஸ்தியர் பகிர்கிறார்
அழகியே; செளபாக்கியவதியே! உங்கள் தந்தையை ஒப்பிடும் அளவுக்கு என்னிடம் செல்வம் இல்லையே (வன பர்வ ஸ்லோகம் 3-95-20)
லோபாமுத்ரா உரைத்தாள் :
நாதா ! சுவாமி! இந்த பூமியில் எவ்வளவு செல்வம் இருக்கிறதோ அத்தனையையும் உமது தவ வலிமையால் பெற முடியுமே
அகஸ்தியர் பதில்: 3-95-21
உன்னுடைய யோசனைப்படி நான் செய்தால் என் தவ வலிமை செலவழிந்து போகுமே; என் தபோ நிதி குறையாத ஒரு யோஜனையைச் சொல்.
மஹா பாரத வன பர்வ ஸ்லோகம் 3-95 22 முதல் 28
லோபாமுத்ரா மொழிகிறாள்:-
நாதா, நான் மாத விலக்கு முடிந்து குளித்து விட்டேன். ஆகையால் உடனே நீர் வரவேண்டும்; காலம் தாழ்த்த முடியாது ; அதனால்தான் உம்மை அவசரப் படுத்துகிறேன். அதே நேரத்தில் உங்கள் தவம் செய்யும் விஷயத்தில் நான் குறுக்கிட விரும்பவில்லை; உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள்.
3-95-24
அகஸ்தியர் சொல்கிறார்:-
உன் மனதில் இவ்வளவு நம்பிக்கை இருக்குமானால் நானும் முயற்சியை உடனே துவங்குகிறேன். உன் ஆசையை நிறைவேற்றுவேன்; இங்கேயே காத்திரு.
xxx
வேண்டிய பணத்தைப் பெறுவதற்காக முதலில் ஸ்ருதர்வா என்ற மன்னனை அகஸ்தியர் அணுகினார். அகஸ்தியரே அந்த மன்னரின் பட்ஜெட், வரவு செலவு கணக்கு புஸ்தகத்தைப் பார்க்கிறார். அவர் எதிர்பார்த்த பணம் பாலன்ஸ் ஷீட்டில் Balance sheet இல்லை . உடனே அந்த அரசனையும் கூட்டிக்கொண்டு பிருஹதஸ்வா என்ற மன்னனைச் சந்திக்கிறார். அவனிடம் தேவையான பணம் இல்லை என்பதைக் கண்டுபிடித்தவுடன் அவனையும் கூட்டிக்கொண்டு த்ருஸாதஸ்யு என்ற அரசனிடம் செல் கன்றனர் . அவனுடைய பாலன்ன்ஸ் ஷீட்டிலும் போதுமான அளவு பணம் இல்லை.
அப்படியும் அகஸ்தியர் மனம் தளரவில்லை. அந்தக் காலத்தில் இல்வலன் – வாதாபி என்ற இரண்டு அரக்கர்கள் பிராமண மாமிசப் பிரியர்களாக இருந்தனர். இரண்டு அரக்கர்களும் பணம் படைத்த இரண்டு அரக்கர்கள்; இருவரும் மாயாஜாலத்தில் வல்லவர்கள்; தம்பி வாதாபியை வெட்டி கறி சமைத்து பிராமணர்களுக்கு பரிமாறுவர். அவர்கள் சாப்பிட்டு ஏப்பம் விடுவதற்குள் இல்வலன் அவனை அழைப்பான்.உடனே அவன் பிராமணர் வயிற்றைக் கிழித்து வெளியே குதிப்பான். அந்த பிராமண மாமிசத்தை இருவரும் சமைத்து உண்பர். இது அகஸ்தியருக்கு தெரியும்.இல்வலனிடத்தில் இருந்த, செல்வத்தை அபகரிப்பதாற்காக அகஸ்தியர் ஒரு தந்திரம் செய்தார் ; அவனிடம் போய் விருந்தும் உண்டார். வழக்கம் போல ‘வாதாபி வெளியே வா’ என்றான் இல்வலன்; அகஸ்தியர் சிரித்தார் ; வாதாபி இனிமேல் வரவே மாட்டான் என்று அகஸ்தியர் வாதாபி ஜீர்ணோ வாஹ – என்று சொல்லி தொந்தியைத் தடவினார்; இல்வலன் அழுது புரண்டு அகஸ்தியர் காலில் விழுந்து வணங்கினான்.
தன்னுடன் வந்துருந்த 3 அரசர்களுக்கும் 10,000 பசுமாடுகளையும் தங்க நாணயங்களையும் கொடு என்று அகஸ்தியர் கட்டளை இட்டார். (3-97- 12/13 )
அகஸ்தியர் தனக்கு அது போல இரு மடங்கு அளிக்க வேண்டும் என்று நிபந்தனை போட்டார் அகஸ்தியரும் மூன்று அரசர்களும் அவரவர் இருப்பிடம் அடைந்தனர்.
(இந்தப் பகுதி மூலம் வேத கால அரசர் பெயர்களும், அரக்கர் அல்லது அசுரர் என்பவர்கள் எவ்வளவு பணக்காரர்கள் என்பதும் தெரிகிறது ; த்ரஸா தஸ்யூ முதலிய அரசர் பெயர்கள் ரிக் வேதத்திலும் உள .)
xxxx
3-97-17/18 லோபா முத்ரா பேசும் ஸ்லோகம்
அன்பரே ! நான் சொன்ன எல்லாவற்றையும் செய்து விட்டீர்; விரைந்து வந்து என் மூலம் குழந்தை பெறுக
அகஸ்தியர் சொல்கிறார் 3-97-18/18
பேரழகியே ! சரி குழந்தை பெறலாம்; அதற்கு முன்னர் என் கேள்விக்குப் பதில் சொல் ;ஆயிரம் மகன்கள் வேண்டுமா? அல்லது 1000 மகன்களுக்கு நிகரான ஒரே மகன் வேண்டுமா?
லோபா புகல்வதாவது :–
சஹஸ்ர சம்மிதஹ புத்ர ஏகோ மே அஸ்து தபோதனஹ
ஏகோ பஹுபிஹி ஸ்ரேயான் வித்வான் சாது ரசாதுபிஹி
தவ சீலரே !ஆயிரம் மகன்கள் தேவையில்லை ; ஏன் எனில் குணமோ கல்வி அறிவோ இல்லாத 1000 மகன்களை விட முனிவர் போன்ற ஒரு மகன் இருந்தால் போதும் .
இதற்குப் பின்னர் ஒரே மகன் பிறக்கட்டும் என்று அகஸ்தியர் வரம் தருகிறார்; அகஸ்தியர்- லோபா ஜோடிக்குக் கிடைத்த லாபம் – த்ரதஸ்யு மற்றோரு பெயர் – இத்ம வாஹ ( Drdhaasyu- Idmavaaha)அவரும் வேதம் செய்த ஒரு ரிஷி.
இந்த மஹாபாரதக் கதை தெரிந்தால்; அந்த ரிக் வேத துதியில் எந்த செக்ஸும் இல்லை; கணவனும் மனைவியும் குழந்தை பெறுவது பற்றி எல்லாத் தம்பதிகளும் என்ன கதைப்பார்களோ அதையேதான் அவர்களும் கதைத்தனர் ; செய்தனர் என்பது விளங்கும்.
xxxx
கங்காத்வார மதாகம்ய பகவான் ருஷி சத்தமஹ
உக்ரமதிஷ்டத தபஹ ஸஹ பத்ன்யானுகூலயா
இது மஹாபாரத ஸ்லோகம் ; அதாவது கல்யாணம் முடித்த பின்னர் இருவரும் கங்கை நதிக் கரையில் கடும் தவம் செய்தனர்; ஒரு மாத விலக்கிற்குப் பின்னர் லோபா குளித்து விட்டு வருகையில் அகஸ்தியருக்கு காம எண்ணம் உதித்தவுடன் அவர்கள் இருவரும் குழந்தை பெறும் எண்ணத்தை வெளியிட்டு சம்பாஷித்தனர். ரிக் வேதத்தை மட்டும் படிப்போர் திடீரென்று லோபாவுக்கு காம வெறி வந்தது என்று நினைப்பர்; இதனால்தான் வெள்ளைக்கார அரை வேக்காடுகளை, இந்து மதத்தை அழிக்கவந்த பறங்கித்தலை முண்டங்கள் எழுதியதை நம்பக்கூடாது .
இந்தக் கதையில் நிறைய நீதிகள் உள்ளன; கல்யாணம் என்று முடித்துவிட்டால் ஒருவர் ஆசைகளுக்கு மற்றோருவர் ஈடு கொடுக்க வேண்டும்; இரண்டாவது , செக்ஸை விட வம்ச வ்ருத்தி முக்கியம்; மூன்றாவது பேரழகி, ராஜகுமாரி , சீதாதேவி போல தவ உடை – தழை உடை — அணிந்து – தவம் செய்தாள் ; நாலாவது , சில மதத்தினர் போல பன்றிக்குட்டி போல , வத வத வென்று பிள்ளைகளை பெற்று பூபாரத்தை அதிகரிக்கக்கூடாது ; சிவனுக்கும் இரண்டு பிள்ளை; ராமனுக்கும் இரண்டு பிள்ளை; தசரதனுக்கு நாலே பிள்ளை ; கிருஷ்ணனுக்கு எட்டு மனைவிகள் இருந்தாலும் பிள்ளைகள் குறைவு .
ஐந்தாவது நீதி, தவத்தை பணம் பெறுவதற்குப் பயன்படுத்தினால், தவ வலிமை செலவாகும் என்று அகஸ்தியர் தெளிவாக்குகிறார்.
லோபா முத்ராவின் ரிக் வேத கவிதை பல ஆண்களின் கண்களைத் திறக்கும்.
Xxxxx subham xxxx
tags- லோபாமுத்ரா, அகஸ்தியர்