கேதார்நாத் — ஆலயம் அறிவோம் (Post No.9321)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9321

Date uploaded in London – –28 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 28-2-2021 அன்று ஒளிபரப்பான உரை!

THIS TALK WAS BROADCAST VIA FACEBOOK, YOU TUBE AND ZOOM ON 28-2-2021. IF U WANT TO HEAR IT, PLEASE GO TO FACEBOOK.COM / GNANAMAYAM

“நீறு பூசி நிலத்து உண்டு நீர் மூழ்கி நீள் வரை தன் மேல்

தேறு சிந்தை உடையார்கள் சேரும் இடம் என்பரால்

ஏறி மாவின் கனியும் பலாவின் இருஞ் சுளைகளும்

கீறி நாளும் முசுக் கிளையொடு உண்டு உகளும் கேதாரமே”

திருஞானசம்பந்தர் திருநாமம் போற்றி, போற்றி!

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றான கேதார்நாத் ஆகும். 11755 அடி உயரத்தில் இமயமலைத் தொடரில் உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள இந்தத் தலம் ரிஷிகேசத்திலிருந்து 223 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

காலத்தை வென்று, தொன்று தொட்டு நிலைத்திருக்கும், இந்த சிவ ஸ்தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு.

கே என்றால் தலை; தாரம் என்றால் தரிப்பது. ஆக கேதாரம் என்றால் சிவபிரான் கங்கையைத் தலையில் தரித்து அருள் புரிந்த தலம் கேதாரமாகும்.

இன்னொரு பொருள் : கே என்றால் இந்திரியம்; தாரம் என்றால் அவைகளை அடக்கி வெல்வது. பொறி புலன்களை வெல்லும் தலம் கேதாரம். இன்னொரு பொருள்: கே என்றால் பிரமரந்திரம் தாரம் என்றால் அதிலிருந்து வடியும் அமிர்த தாரை. இப்படி கேதாரம் பற்றிய விளக்கத்தை திருமுருக கிருபானந்தவாரியார் அவர்கள் தருகிறார். கேதார்நாதர் கோவில்.

தெற்குப் பார்த்த கோவில். எதிரில் பெரிய நந்தி. இரு புறமும் துவாரபாலகர்கள். இறைவன் திரு நாமம் :கேதார நாதர் இறைவி : கேதார கௌரி. கோயிலுக்குள் உள்ள மண்டபத்தில் குந்தி தேவி, தர்மர், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன், திரௌபதி, கிருஷ்ணர் ஆகியோருடைய சிலாவுருவங்கள் உள்ளன.

பாண்டவர்கள் கடைசியில் மகாபிரஸ்தானம் என்ற விரதத்தை மேற்கொண்டு இங்கு வந்தார்கள். கேதார்நாதரை வழிபட்டு வடகீழ் திசையில் உள்ள ஒரு மலையின் வழியாக சொர்க்கம் புகுந்தார்கள். அந்த மலையை இங்கிருந்தே தரிசிக்கலாம்.

பாண்டவர்களைப் பற்றிய இன்னொரு வரலாற்றை ஸ்கந்த புராணம் விவரிக்கிறது. உற்றார், உறவினரைக் கொன்றதால் ‘கோத்ர ஹத்யா’ என்ற பாவத்திற்குள்ளாகி, மனம் வருந்திய பாண்டவர்கள், சிவபிரானை தரிசித்துத் தங்கள் பாவத்தைப் போக்கிக் கொள்ள இங்கே வர, சிவபிரானோ அவர்களுக்கு அருள் புரிய மனம் இன்றி ஒரு காளையின் வடிவத்தை எடுத்துக் கொண்டு ஓடலானார். அவரைத் துரத்திச் சென்ற பீமன் அவர் வாலைப் பிடிக்க வால் இருந்த இடம் கேதாரமானது. மனம் கனிந்த சிவபிரான் அங்கு தோன்றி பாண்டவர்களுக்கு அருள் பாலித்தார். அவரது உடல்  இன்னும் நான்கு இடங்களில் தோன்றின. இந்த ஐந்து இடங்களும் பஞ்ச கேதார் என்று அழைக்கப்படுகிறது.

இன்னொரு வரலாற்றின் படி கேதார்நாத்தை அடுத்துள்ள பத்ரிநாத்தில் நரனுடன் தவம் புரிய விரும்பிய விஷ்ணு தன் விருப்பத்தை சிவபிரானிடம் தெரிவிக்கவே, அவர் அதற்கு இசைந்து கேதார்நாத் சென்றார். இதனால் மனம் மிக மகிழ்ந்த விஷ்ணு யாரெல்லாம் தன்னை பத்ரிநாத்தில் தரிசிக்க விரும்புகிறார்களோ அவர்கள் முதலில் கேதார்நாத் சென்று கேதாரநாதரைத் தரிசித்த பின்னரே தன்னை தரிசிக்க வரவேண்டும் என்ற நியமத்தை ஏற்படுத்தினார்.

இங்கு க்ஷீ ர கங்கை, மது கங்கை, மந்தாகினி, சொர்க்கதுவார கங்கை, சரஸ்வதி என பஞ்ச கங்கை எனப்படும் ஐந்து நதிகள் ஐந்து புறங்களில் மகாமலைகளில் இருந்து கீழே வந்து ஒன்று படுகின்றன.

பஞ்ச கங்கை போல இங்கு பஞ்ச குண்டங்கள் உண்டு. அமிர்த குண்டம், அம்ச குண்டம், ரேதச குண்டம், ஈசான குண்டம், உதக குண்டம் என்பவையே அந்த ஐந்து குண்டங்கள். ஐந்தாவது குண்டமான உதக குண்டம் மிகவும் புனிதமானது. அது சிறு கோவிலுக்குள் இருக்கிறது. உதகம் என்றால் நீர் என்று பொருள்.

‘கேதாரம் உதகம் பீத்வா, புனர் ஜன்ம ந வித்யதே’ என்ற மொழியால், இங்கு இந்த தீர்த்தத்தைப் பருகியவர்களுக்கு மறு பிறப்பு கிடையாது என்பது ஐதீகம்.

‘ஸ்ரீ சைலம் தர்சனாத் முக்தி, வாரணாஸ்யாம் ம்ருதஸ்யச

கேதாரம் உதகம் பீத்வா, ஸுஷூம்னாடீச தர்சனாத்’ என்ற ஸ்லோகத்தால்    ஸ்ரீ சைலத்தில் தரிசித்தால் முக்தி, காசியில் மரித்தால் முக்தி, கேதாரத்தில் இந்த உதக குண்டத்தில் உள்ள நீரைப் பருகினால் முக்தி, நடுநாடியாகிய ஸுஷூம்னாவை தரிசித்தால் முக்தி என்பது பெறப்படுகிறது.

கேதார்நாதரின் கோவில் தீபாவளியன்று மூடப்படும். பின்னர் வைகாசி பூர்வபட்சம் திருதியை அன்று திறக்கப்படும். குளிர்காலம் என்பதால் பனிக்கட்டியால் கோவில் மூடி இருக்கும். அதை ஆறு மாதம் கழித்து பனிக்கட்டிகளை அகற்றி, திறக்கும் போது, பெருமானுக்குச் சாத்திய மலர் வாடாமலும், ஏற்றி வைத்த தீபம் அணையாமலும் இருக்கும்.

இங்கு தான் ஆதிசங்கரர் இறைவனுடன் இரண்டறக் கலந்தார். அவரது சமாதி, கோயிலுக்கு மேற்கே சிறிது தூரத்தில் உள்ளது.

ஒரு புறம் பொங்கிப் பிரவாகித்துத் துள்ளிக் குதித்து ஓடும் மந்தாகினி நதி, மறுபுறம் நெடிதுயர்ந்த மலைகள் இவற்றின் நடுவே செல்வது புனித யாத்திரை மேற்கொண்டோரை பரவசப்படுத்துகிறது.  கௌரிகுண்டம் என்னும் இடத்திலிருந்து 22 கிலோமீட்டர் தூரம், சிறிய பாதை வழியே நடந்தே சென்று கேதாரநாதர் கோவிலை அடைய வேண்டும். நெடிதுயர்ந்த தேவதாரு மரங்கள், நூற்றுக் கணக்கான அருவிகள், பாய்ந்து ஓடும் மந்தாகினி நதி ஆகியவை, இயற்கை வளத்தின் சிகரமாகத் திகழும் இமயமலைப் பகுதி, இறைவனின் உறைவிடமே தான் என்பதைக் கணம் தோறும் சொல்லிக் கொண்டே இருக்கும்.

இந்த தலத்திற்கு திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும் சுந்தரர் ஒரு பதிகமும் அருளி உள்ளனர்.

காலம் காலமாக பக்தர்கள் வழிபட்டு வரும் கேதாரநாதரும் பார்வதி தேவியும், அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறொம்.

சுந்தரர் அருள் வாக்கு:-

“பண்ணின் தமிழ் இசைபாடலின் பழ வேய் முழவு அதிரக்

கண்ணின் ஒளி கனகச்சுனை வயிரம் அவை சொரிய

மண் நின்றன மத வேழங்கள் மணி வாரிக்கொண்டு எறியக்

கிண்ணென்று இசை முரலும் திருக்கேதாரம் எனீ ரே”     

நன்றி வணக்கம்!

TAGS- கேதார்நாத்

INDEX 54 FOR LONDON SWAMINATHAN’S MAY 2017 ARTICLES (Post No.9320)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9320

Date uploaded in London – –28 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS?

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9300 PLUS POSTS.

XXX

MAY 2017 INDEX 54

Dravidian Magician in Kashmir, 3869;1 May 2017

Kashmir ministers sacrifice saved the king,3872,2 /5

Why did Valmiki name Rama s children Lava Kusha? 3875;3/5

Follow the habits of a Crow Tamil poets Advice,3878;4/5

Women are Cuckoo s : Kalidasa and Tamil poets agree,3881;5/5

Venkai tree is tiger: Kalidasa and Tamil poets imagine, 3884; 6/5

Gold and Touch stone in Kalidasa,3887;7/5

Strange Luta disease in Kashmir,3890;8/5

More Brain s in your Belly than in your Head, 3893;9/5

Women! I like their Beauty, their Delicacy, their Vivacity and I like….3895;10/5

Two Words Please! You Lose, 3898;11/5

Duelling Anecdotes,3902;12/Buddha and Valluvar : great men think alike;3905;13/5

London Capital of the Tamil Speaking World,3907;14/5

Buddha and Vvalluvar on Vegetarianism and Hypocrisy- Great Men think alike, 16/5

Who is right? Ramanan’s or Kanchi Paramacharya? 3917;17/5

Mysterious Number 17 in the Vedas,3916;17/5

Comments on Vedic Women Poets,3923:18/5

Desire and Hatred:Valluvar and Buddha think alike- part 4;20/5

Rig Veda on Friendship and Food for all, 3929;21/5

Go Higher and Higher- Buddha and Valluvar -5

Mahabharata Story is True: Man gives birth to Babies, 3932;22/5

Karma Theory- Buddha and Valluvar -3935; part 6

Introduction Anecdotes, 3937: 24/5

Society Anecdotes, 3940, 25/5

30 Beautiful Quotations from the Yajur veda, 3943;26/5

Kalidasa and Valluvar on Bad Friends and Laughter, 3946: 27/5

Buddha s Encounter with Brahmins,3950:28/4

Drought in Tamil and Sanskrit literature, 3953: 29/5

About Brahmins: Buddha and Valluvar Think Alike-3956; part 7

Mystery and Miracle of Soma plant, Soma Rasa, 3959, 31/5

XXXX

TAMIL ARTICLESIN MAY 2017

வள்ளுவனுக்கு சங்கீதம் தெரியுமா?, 3868, மே 1, 2017

காஷ்மீரில் திராவிட மந்திரவாதி – உண்மைக் கதை 3871, 2/5

காஷ்மீர் அமைச்சரின் தியாகம் , 3874, 3/5

எல்லோருக்கும் இரண்டு மனைவி, இரண்டு மகன்கள், 3877, 4/5

காகத்திடம் கற்க வேண்டிய ஆறு விஷயங்கள் , 3880, 5/5

வாக்கு நயம்,யாக்கை நயம்- காக்கை இசை, குயில் இசை , 3883;6/5

தமிழர் வாழ்வில் வேங்கை மரம்! புலியா, மரமா ?3886, 7/5

சங்கத் தமிழில் தங்கமும் உரைகல்லும், 3889, 8/5

நோயைக் காட்டித் தப்பிய மன்னர்கள், 3892, 9/5

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே , 3896; 10/5

செய்தக்க அல்ல செயக்கெடும் – புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே -2, 3989, 11/5

தராசு உவமை -புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே -3 , 3901; 12/5

பனை மரத்துக்கு அடியில் நின்று பாலக் குடித்தாலும், 3904; 13/5

பெண்களின் அழகு எப்போது மறையும்? 3908, 14/5

ராமரின் வில் பெரிதா? சீதையின் சொல் பெரிதா? 3910, 15/5

சிறியோர் எல்லாம் சிறி யரும் அல்லர், பெரியோர் எல்லாம்….3911;15/5

பசி ஆற்றல்- புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே 3914, 16/5

வேதங்களில் எண் 17 ஒரு ரஹசிய எண் , 3919, 18/5

யார் உபதேசம், உபன்யாசம் செய்யலாம்? யார் செய்யக் கூடாது? 392219/5

தன மட்டும் உண்பவன் பாவி- ரிக்வேத மந்திரம் , 3926, 20/5

நிழல்  போலத் தொடரும்- புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-5,  3928, 21/5

மஹாபாரதம் உண்மையே – ஆண்களுக்கும் குழந்தை பிறக்கும் 3934, 23/5

குற்றம் கண்டுபிடிக்காதே – புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-6, 3938; 24/5

நண்பர்கள் பற்றி காளிதாசனும் வள்ளுவனும், 3941; 25/5

கர்ம வினை பற்றி புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-பகுதி -7, 3947; 27/5

புத்தரும் பிராமணர்களும்: இரண்டு சுவையான சம்பவங்கள் , 3949; 28/5

முப்பது வெற்றி வேற்கை பொன்மொழிகள் , 3952, 29/5

சங்க இலக்கியத்தில் வறட்சி – 3955, 30/5

பிராமணர்கள் – புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே- 3958; 31/5

—Subham–

tags- May 2017 posts, Index 54

தங்கம் அழுதது ஏன்? (Post No.9319)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9319

Date uploaded in London – –     28 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

                                                          Kattukutty

( திரு முருக கிருபானந்த வாரியார் சொற்பொழிவில் கேட்டது)

படைப்புக் கடவுளாகிய பிரம தேவனிடம் உலோகத்திலேயே உயர்ந்த

பொருளாகிய தங்கம் அவர் காலடியில் விழுந்து கதறி அழுதது.

பிரம தேவர்,”எனதருமைத் தங்கமே, நீ ஏன் அழுகிறாய் ? உனக்கு என்ன துன்பம்?

உலகிலேயே எல்லாரும் உன்னைத்தானே அதிகம்

மதிக்கிறார்கள்? உன் அழுகைக்கு காரணம் என்ன?” என்று பரிவுடன் கேட்டார்.

தங்கம், “தந்தையே,என்னை எல்லோரும் போற்றுகின்றார்கள், ஏத்துகின்றார்கள்.

உயர்ந்த உள்ளத்தைக் கூறும்போது தங்கம் போன்ற

உள்ளம் என்று புகழ்கிறார்கள். பொற்கொல்லர்களால் தான்

எனக்கு வேதனை ஏற்படுகிறது” என்றது.

பிரம தேவர் : “தங்கமே, பொற்கொல்லர்கள் உன்னை சுத்தியலினால்

தட்டுகிறார்களே அதனால் உனக்கு துன்பமா?”

தங்கம் :  “அப்பா, பொற்கொல்லர்கள் தட்டுவதினால் எனக்கு துன்பம்

இல்லை……அவர்கள் தட்டுவதினால் தான் நான் தகடு ஆகி சுவாமிக்கு

கவசமாகி எல்லோராலேயும் வணங்கப் பெறுகிறேன்”

பிரம தேவர் :  “உன்னை உருக்குவதினால் உனக்கு துன்பமா?”

தங்கம் : “இல்லை , இல்லை உருக்குவதினால்தான் மாற்றுயர்ந்து, ஒளி பொருந்தி சுடரும்

பொன்போல் மிளிர்கின்றேன்”.

பிரம தேவர் : “ஓஹோ, பொற்கொல்லர்கள் சிறிய துளையிலிட்டு கம்பியாக இழுக்கிறார்களே

அதனால் துன்பமோ”?

தங்கம் : “இல்லையப்பா, பொற்கொல்லர்கள் கம்பியாக இழுப்பதினால்தான்

நான் மணிகளைக் கோர்க்க பயன்படுகிறேன்”.நல்லவர்களைப்

பார்த்து “தங்கக் கம்பி”, எனகிறார்கள். அதனால் எனக்கு புகழ் தான் ஏற்படுகிறது்”.

பிரம தேவர் : “என் அன்புள்ள தங்கமே,அழாதே பொற்கொல்லரகளால்

உனக்கு வேறு என்ன விளைகின்றது, விவரமாகக் கூறு”

தங்கம் :  “ என் பிதாவே, உயர்ந்த ஒருவனிடம் தாழ்ந்தவனைச் சேர்த்துப் பேசுவது

எத்துணை அநியாயம்?பாலுடன் காடி சேர்க்கலாமா? வைரத்துடன் கண்ணாடி துண்டை

சேர்க்கலாமா? பொற்கொல்லர்கள் மாற்றுயர்ந்த என்னை ஒரு தட்டிலிட்டு ஒரு

காசுக்கும் பெறாத குண்டு மணியை அல்லது சாதாரண பித்தளை எடையை இட்டு

தராசில் நிறுக்கிறர்களே? இதை விட எனக்கு வேறு அவமானம் உண்டா? இதனால் தான்

மனம்புண்பட்டு அழுகிறேன்”

இதோ அந்தப் பாடல்

“என்றும் உயர்ந்த எனை எங்குமுள பொற்கொல்லர்

குன்றிமணியுடனே கூட்டுகின்றார், நன்றியிதோ

தந்தையே, தந்தையே, என்றயன்பால் தங்கம்

சிந்தையே நொந்தழுததே” !!!

ஆதலால் உயர்ந்தோரை, தாழ்ந்தோருடன் ஒப்பிடுதல் கூடாது.

                                                                        ****

tags – தங்கம் அழுதது

ராகங்கள் கொண்ட துறைப் பாடல், திரைப்படப் பாடல்கள்! (Post 9318)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9318

Date uploaded in London – –28 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ராகங்கள் கொண்ட துறைப் பாடல், திரைப்படப் பாடல்கள்!

ச.நாகராஜன்

1

மாம்பழக்கவிச்சிங்க நாவலர் புகழ் பெற்ற கவிஞர். பழனியில் கி.பி. 1836ஆம் ஆண்டு முத்தையாசாரியாரின் மகனாகப் பிறந்த இவர் 1884ஆம் ஆண்டு சிவபதம் அடைந்தார். எந்தப் பொருளைக் கொடுத்தாலும் உடனுக்குடன் பாடுவதில் வல்லவர் இவர்.

அவர் ஒரு சமயம் வண்ட பொம்மைய நாயக்கர் என்னும் பெரு வள்ளலைச் சந்தித்தார்.

அவரிடம் ராகங்களால் அமைந்த ஒரு துறைக்கவி பாடலை உடனே பாடிக் காட்டினார்.

பாடல் இதோ:-

பூரிகன காம்பரியி னோடுபட மஞ்சரிகாம் போதி தோடி

யாரபிநா மக்கிரியை மோகனம நோகரிகல் யாணி தேசி

சீரியமு காரிமத்தி மாபதிஸ்திரீ ராகவகை தெரிதல் வேண்டுங்

கூரிய பன்னாட்டையுங் கைக்கொண்டவண்ட பொம்மேந்த்ர குணபூமானே

இதில் பூரி, கனகாம்பரி, மஞ்சரி, காம்போதி, தோடி, ஆரபி, நாமக்கிரியை, மோகனம், மனோகரி, கல்யாணி, தேஷ், முகாரி, மத்யமாவதி உள்ளிட்ட ராகங்களின் பெயர்கள் ஒரே பாடலில் இடம் பெற்றதைக் காணலாம்.

2

1958ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தமிழகமெங்கும் திரையிடப்பட்டு மக்கள் மனதைக் கொள்ளை கொண்ட வெற்றிப் படம் சம்பூர்ண ராமாயணம். எம்.ஏ.வேணு தயாரித்த திரைப்படம் இது. கே.வி.மஹாதேவன் இசை அமைத்திருந்தார்.

அதில் ராவணனை அறிமுகப்படுத்தும் காட்சியே அமர்க்களமாக இருக்கும்.

இசையில் வல்லவனான ராவணனை அறிமுகப்படுத்தும் காட்சியில் பலரும் ராகங்களைப் பற்றிக் கேட்கும் ஒரு காட்சி இடம் பெற்றது.

‘நாரத முனிவர்க்கேற்ப நயம்பட உரைத்த நா’ என்று கம்பரால் புகழப்பட்ட ராவணன் வீணை வாசிப்பதில் வல்லவன். எல்லா ராகங்களிலும் தேர்ந்தவன். இசை நுணுக்கம் அறிந்தவன்.

சபையில் பலரும் ராகங்களைப் பற்றிக் கேட்க அதைப் பாடியே காண்பிக்கிறான் ராவணன்.

கவிஞர் ஏ. மருதகாசி அவர்கள் எழுதிய ‘சங்கீத சௌபாக்யமே என்றும் குன்றாத பெரும் பாக்யமே’ என்ற பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடலாக அமைந்து படத்திற்கு மெருகூட்டியது.

பல கேள்விகளுக்கும் ராவணன் அளித்த பதில்களில் இடம் பெறும் ராகங்கள் இவை:-

காலையில் பாடும் ராகம் பூபாளம்                                                                                          உச்சியில் பாடும் ராகம் சாரங்கா                                                                                                  மாலையில் பாடும் ராகம் வசந்தா                                                                                 இரக்கத்திற்கான ராகம் நீலாம்பரி                                                     மகிழ்ச்சிக்கான ராகம் தன்யாசி                                                        யுத்தத்திற்கான ராகம் கம்பீர நாட்டை                                                      வெண்பா பாட சங்கராபரணம்                                              அகவல் இசைக்க தோடி                                               தாழிசைக்கு கல்யாணி                                                                 இறுதியில் கயிலை நாதனைக் கானத்தால் கவர்ந்த ராகம் எது என்று மண்டோதரி கேட்க ராவணன் காம்போதி என்று பாடி முடிக்கிறான்.

3                                 

1965ஆம் ஆண்டு வெளியான படம் திருவிளையாடல். ஏ.பி.நாகராஜனின் இயக்கத்தில் வந்த இந்தப் படம் பெரு வெற்றியைப் பெற்றது. அதில் ஹேமநாத பாகவதாரக நடித்த டி.எஸ். பாலையா தன் இசைப் பெருமையை விளக்குவதாக ஒரு பாட்டு அமைந்திருந்தது. பாடலை இயற்றியவர் கவியரசர் கண்ணதாசன். பாடலைப் பாடியவர் பிரபல பாடகரான பாலமுரளிகிருஷ்ணா. இசை அமைத்தவர் கே.வி. மஹாதேவன்.

பாடல் இது தான்:-

ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா


நான் பாட இன்றொரு நாள்
போதுமா

நாதமா கீதமா
அதை நான் பாட இன்றொரு
நாள் போதுமா

புது ராகமா
சங்கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா



ராகமா சுக
ராகமா கானமா தேவ
கானமா ராகமா சுக
ராகமா கானமா தேவ
கானமா



என் கலைக்கிந்த
திரு நாடு சமமாகுமா என்
கலைக்கிந்த சிறு நாடு
சமமாகுமா நாதமா கீதமா
அதை நான் பாட இன்றொரு
நாள் போதுமா



குழல் என்றும் யாழ்
என்றும் சிலர் கூறுவார்
என் குரல் கேட்ட பின்னாலே
அவர் மாறுவார்

அழியாத கலை
என்று என்னை பாடுவார்


அழியாத
கலை என்று என்னை பாடுவார்


என்னை அறியாமல் எதிர்ப்போர்கள்
எழுந்தோடுவார்

என்னை அறியாமல்
எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்



இசை கேட்க எழுந்தோடி
வருவார் அன்றோ எழுந்தோடி
வருவார் அன்றோ எழுந்தோடி
தோடி ஆஆ ஆஆ ஆஆ இசை
கேட்க எழுந்தோடி வருவார்
அன்றோ



எனக்கு இணையாக
தர்பாரில் எவரும் உண்டோ


தர்பாரில் எவரும் உண்டோ
தர்பாரில் ஆஆ

எனக்கு
இணையாக தர்பாரில்
எவரும் உண்டோ



கலையாத மோகன
சுவை நான் அன்றோ

மோகன
சுவை நான் அன்றோ மோகனம்
ஆஆ ஆஆ

கலையாத மோகன
சுவை நான் அன்றோ



கானடா ஆஆ
ஆஆ ஆஆ என் பாட்டு
தேன் அடா

இசை
தெய்வம் நான் அடா!

இந்தப் பாட்டில் தோடி, தர்பார், மோகனம், கானடா ஆகிய ராகங்களின் பெயர்கள் (இருபொருள் பட) இடத்திற்கேற்ற படி வருவதையும் அந்த ராகங்களிலேயே அவை இசைக்கப்படுவதையும் மக்கள் பெரிதும் ரசித்தனர்.

இப்படி ராகப் பாடல்கள் பல உண்டு.

அனைவரையும் மகிழ்விக்கும் இசை இப்படி புது விதத்தில் தரப்படும் போது ஏற்படுவது, இரட்டிப்பு மகிழ்ச்சி அல்லவா?!

***

tags- ராகங்கள்

PLEASE JOIN US TODAY SUNDAY 28-2-2021

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST

SUNDAY 28-2-2021

1 PM LONDON TIME, 6-30 PM IST

OPENING ANNOUNCEMENT & PRAYER -5 MINUTES

SONG BY MRS DEEPTHA MAHADEV- 3 MTS

MRS BRHANNAYAKI SATHYANARAYANAN ON KEDARNATH TEMPLE-8 MTS

Thiruppugaz Amirtham –MRS JAYANTHI SUNDAR AND MRS BANU CHANDRASEKAR-10 mts

XXX

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY SUJATHA RENGANATHAN

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY VAISHNAVI ANAND

–20 MINUTES

***

SONG BY MRS UMA RAVI OF DUBAI  – 5 MTS

LONDON SWAMINATHAN’S ARTICLE- READ BY MRS VAISHNAVI ANAND-4 MTS

SONG BY MR SESHADRI OF BANGALORE -3

SONG BY MRS DAYA NARAYANAN- 4

APPROXIMATELY 60 MINUTES

XXXXXXXXXX

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 1 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

PUBLICITY2822021

50 SANSKRIT WORDS AND 25 PRAKRIT WORDS IN OLDEST TAMIL BOOK (Post No.9317)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9317

Date uploaded in London – –27 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Agreement between Tolkappiam and Sanskrit works on Grammar

BY S N Sri Rama Desikan

(FOLLOWING MATTER IS FROM AN OLD PAPER CUTTING)

The first two chapters of Tolkappiam deal with grammar while the third deals with literature/ rhetoric. These are analogous to three divisions in Sanskrit-

Siksha

Vyakarana and

Alankara sastra

It may be observed that the portion’s of Tolkappiam dealing with the form of letters, their origin, their four -fold manner of compounds and seven Vyakrthis agree with the Sanskrit grammatical works of Panini, Yaska’s Nirukta, Patanjali’s Mahabhasya etc.

In Tolkappiam, we find 50 Sanskrit words, 25 Prakrit words and some technical terms.

In regard to the explanations for the

eight sentiments/Rasas,

ten states/Avastas and

32 Accessory feelings/Vyabhichari bhavas, there is full agreement between the Bharata Natyasastra and Tolkappiam.

As Tolkappiar himself says in several places,

I am giving here explanation according to Natya sastra; some consider that the source should be Bharatas Natya sastra.

In the matter of

32 Kavya Yuktis/ literary practices,

ten kavya doshas/ literary blemishes and

Sutra lakshanas / characteristic’s of aphoristic compositions also,

Tolkappiam agrees with the Bharata Natyyasastra and Arthasastra.

Tolkappiar has also followed closely the sastras like

Manu Smrti and Dharma sastras in regard to

eight kinds of marriages, their classification according to castes , proper and improper marriages and their characteristics .

There are similarities also regarding

nature of Jivas and

 five Tinais / regional classification

It can be inferred that there should have been a common basic work even if one does not go so far as to state that one language follows the other.

The Sangam poets have referred profusely to the episodes in the epics and Puranas.

Following list of Sanskrit words in Tolkappiam is given by Prof. Vaiyapuri Pillai

XXXX SUBHAM XXXX

tags- Sanskrit words, Tolkappiam, Prakrit words, Bharata, Natya Sastra

தண்டலையார் சதகம்- 31 பழமொழிகள் (Post No.9316)

மார்ச் 2021  நற்சிந்தனை காலண்டர் (Post No.9316)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9316

Date uploaded in London – –27 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தண்டலையார் சதகம் என்றும் பழமொழி விளக்கம் என்று கூறப்படும் நூலில் 100 பழமொழிகள் உள்ளன. அவற்றில் 31 பழமொழிகளை இந்த மாத காலண்டரில் காண்போம்

பண்டிகை/விடுமுறை நாட்கள் :–மார்ச் 11- மகா சிவராத்திரி ;  14- காரடையான் நோன்பு ; மார்ச் 28-பங்குனி உத்திரம் , ஹோலி

ஏகாதசி – 9, 24; அமாவாசை – 13; பௌர்ணமி -28;

முஹுர்த்த நாட்கள் – 3, 5, 10, 11, 15, 24, 31

.****

மார்ச் 1 திங்கட் கிழமை

திருவிளக்கிட் டார்தமையே தெய்வமறிந் திடும்வினையும் தீரும் தானே! (01) பழமொழி: “திருவிளக்கிட்டாரைத் தெய்வமறியும்”, “விளக்கிட்டால் வினைதீரும்”

xxx

மார்ச் 2 செவ்வாய்க்  கிழமை

வான்செய்த நன்றிக்கு வையகம்என் செய்யுமதை மறந்தி டாதே

உலகத்தை வாழவைக்கும் மழைக்கு நன்றிகாட்ட உலகமக்கள் என்னசெய்ய முடியும்?

xxx

மார்ச் 3 புதன்  கிழமை

இட்டபடி யேயொழிய வேறாசைப் படில்வருவ தில்லை தானே!(03)

இட்டபடி அல்லாமல் வேறு ஆசைப்பட்டால் கிடைத்திடுமோ?

xxx

மார்ச் 4 வியாழக்  கிழமை

நன்மைசெய்தார் நலம்பெறுவர் தீமைசெய்தார் தீமைபெற்று நலிவர் தாமே. (04) நன்மைசெய்தார் நன்மைபெறுவர் தீமைசெய்தார் தீமை பெறுவர்.

xxx

மார்ச் 5 வெள்ளிக்  கிழமை

நல்லறமாம் வள்ளுவர்போல் குடிவாழ்க்கை மனைவியுடன் நடத்தி நின்றால்

இல்லறமே பெரிதாகும் துறவறமும் பழிப்பின்றேல் இயற்கை தானே. (05)

பழமொழி: இல்லறமே பெரிது

xxx

மார்ச் 6 சனிக்  கிழமை

கொக்கெனவே நினைந்தனையோ கொங்கணவா என்றொருத்தி கூறி னாளே. (06)

கொக்கெனவே நினைந்தனையோ கொங்கணவா

xxx

மார்ச் 7 ஞாயிற்றுக்  கிழமை

பன்றிபல ஈன்றுமென்ன குஞ்சரம்ஒன் றீன்றதனாற் பலனுண் டாமே. (07)

பழமொழி: பன்றிபல குட்டி போட்டால் என்ன? யானையின் ஒருகுட்டிக்கு இணையாமோ?

xxxx

மார்ச் 8 திங்கட் கிழமை

நல்லதுகண் டால்பெரியோர் நாயகனுக்(கு) என்றதனை நல்கு வாரே. (08)

பழமொழி: நல்லதுகண்டால் நாயகனுக்குக் கொடுப்பர். (நாயகன்=இறைவன்)

xxx

மார்ச் 9 செவ்வாய்க்  கிழமை

வருவிருந்தோ டுண்பதல்லால் விருந்தில்லா(து) உணுஞ்சோறு மருந்து தானே.(09) விருந்தில்லாத சோறு மருந்து.

xxx

மார்ச் 10 புதன்  கிழமை

சர்க்கரையின் பந்தலிலே தேன்மாரி பொழிந்துவிடும் தன்மை தானே. (10)

சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி பெய்தாற்போலே.

xxx

மார்ச் 11 வியாழக்  கிழமை

எறும்பெண்ணா யிரமப்பாற் கழுதையுங்கை கடந்ததென்றோன் எண்ணந் தானே. (11)

 ‘எறும்பு எண்ணாயிரம் போனது அப்பால் கழுதையும் கைகடந்தது, என்றாற் போல’.

xxx

மார்ச் 12 வெள்ளிக்  கிழமை

உப்பிட்ட பேர்கடமை உளவரையும் நினைக்குமிந்த உலகம் தானே. (12)

 உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

xxx

மார்ச் 13 சனிக்  கிழமை

காட்டுக்கே எரித்தநிலா கானலுக்கே பெய்தமழை கடுக்கும் தானே. (13)

: காட்டுக்கு எரித்தநிலா, கானலுக்குப்பெய்த மழை போல

xxx

மார்ச் 14 ஞாயிற்றுக்  கிழமை

கங்கையிலே படர்ந்தாலும் பேய்ச்சுரைக்காய் நல்லசுரைக் காயா காதே. (14)

கங்கையிலே படர்ந்தாலும் பேச்சுரைக்காய் நல்லசுரைக்காய் ஆகாது.

xxx

மார்ச் 15 திங்கட் கிழமை

மழைவிட்டும் தூவானம் விட்டதில்லை யாயிருந்த வண்ணந்தானே. (15)

பழமொழி: மழைவிட்டும் தூவானம் விடவில்லை.

xxx

மார்ச் 16 செவ்வாய்க்  கிழமை

துர்ச்சனப்பிள் ளைக்(கு)ஊரார் புத்திசொல்லு வார்என்றே சொல்லு வாரே. (16) பழமொழி: துர்ச்சனப்பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்லுவார்.

xxx

மார்ச் 17 புதன்  கிழமை

பொறுத்தவரே ஆள்வார் பொங்கினவர் காடுறைந்து போவர் தாமே. (17)

பொறுத்தவர் பூமி ஆள்வார்,பொங்கினவர் காடாள்வார்.

xxx

மார்ச் 18 வியாழக்  கிழமை

பிள்ளைபெற் றவர்தமைப்பார்த் திருந்துபெரு மூச்செறியும் பெற்றி யோரே. (18) பழமொழி: பிள்ளை பெற்றவளைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டாளாம்

xxx

மார்ச் 19 வெள்ளிக்  கிழமை

எண்ணமெல்லாம் பொய்யாகும் மௌனமே மெய்யாகும் இயற்கை தானே. (19) மௌனமே மெய்

xxx

மார்ச் 20 சனிக்  கிழமை

முன்னுக்கொன் றாயிருந்து பின்னுக்கொன் றாய்நடந்து மொழிவர் தாமே.(20) முன்னுக்கொன்றாய்ப் பின்னுக்கொன்றாய்ப் பேசுவார் முகத்தில் விழிக்கக் கூடாது.

xxx

மார்ச் 21 ஞாயிற்றுக்  கிழமை

விடியன்மட்டும் மழைபெயினு மதினோட்டாங் கிளிஞ்சின் முளைவீசி டாதே. (21) விடியவிடிய மழைபெய்தாலும் ஓட்டாங்கிளிஞ்சில் முளைக்காது

xxx

மார்ச் 22 திங்கட் கிழமை

ஐங்காதம் போனாலும் தன்பாவம் தன்னுடனே ஆகும் தானே. (22)

ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது

xxx

மார்ச் 23 செவ்வாய்க்  கிழமை

நாயறியாது ஒருசந்திச் சட்டிபா னையினந்த ஞாயம் தானே. (23)

நாய்க்குத் தெரியுமோ ஒருசந்திப்பானை?/

நக்குற நாய்க்குச் செக்குந்தெரியாது, சிவலிங்கமும் தெரியாது!

xxx

மார்ச் 24 புதன்  கிழமை

எட்டிமரம் பழுத்தாலும் ஈயாதார் வாழ்ந்தாலு மென்னுண் டாமே. (24)

பழமொழி: எட்டிபழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?

xxx

மார்ச் 25 வியாழக்  கிழமை

காதவழி பேரில்லான் கழுதையோ(டு) ஒக்குமெனக் காண லாமே. (25)

பழமொழி: காதவழி பேரில்லான் கழுதைக்கொப்பான்

xxx

மார்ச் 26 வெள்ளிக்  கிழமை

தெரியாத செவிடன்கா தினிற்சங்கு குறித்ததெனச் செப்ப லாமே.(26)

செவிடன்காதில் ஊதிய சங்குபோல.

xxx

மார்ச் 27 சனிக்  கிழமை

தன்னுயிர்போல் எந்நாளும் மன்னுயிருக் கிரங்குவதும் தக்க தாமே. (27)

தன்னுயிர்போல் மன்னுயிர்க்கு இரங்கவேண்டும்

xxx

மார்ச் 28 ஞாயிற்றுக்  கிழமை

சருகரிக்க நேரமன்றிக் குளிர்காய நேரமில்லாத் தன்மை தானே. (28)

சருகரிக்க நேரமன்றிக் குளிர்காய நேரமில்லை.

xxx

மார்ச் 29 திங்கட் கிழமை

போதிலே மவுனமிராப் போதிலே ருத்ராக்கப் பூனை தானே. (29)

பழமொழி: உருத்திராட்சப் பூனை போல ;

xxx

மார்ச் 30 செவ்வாய்க்  கிழமை

தானொன்று நினைக்கையிலே தெயவமொனறு நினைப்பதுவும் சகசந்தானே. (30) பழமொழி: தானொன்றுநினைக்கத் தெய்வமொன்றுநினைக்கும்.

xxx

மார்ச் 31 புதன்  கிழமை

மெய்சொல்லி வாழாதான் பொய்சொல்லி வாழ்வதிலை மெய்ம்மை தானே. (31)

பழமொழி: மெய்சொல்லி வாழாதான் பொய்சொல்லி வாழ்வானோ?

xxx சுபம் xxx

tags-  தண்டலையார் சதகம்,  பழமொழிகள், மார்ச் 2021 காலண்டர்

கல்யாணமானவரின் கவலை! பிரும்மச்சாரியின் பதில் (Post.9315)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 9315

Date uploaded in London – – 27 FEBRUARY 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஞானமொழிகள் 25
Kattukutty

குழப்பத்திலிருக்கும் போது “அறிவு” சொல்வதைக் காட்டிலும்
“இதயம்” சொல்வதைக் கேட்பது நல்லது……..பிழை நேர்ந்தாலும்
அவ்வளவு வருத்தம் ஏற்படாது !!! – பெர்னாட் புரூஷ்

XXXX

சிலப்பதிகாரத்தை இரண்டேவரியில் சொன்னார் அப்துல் ரஹ்மான்
என்ற பேராசிரியர்…….
பால் நகையாள் வெண்முத்து பல் நகையாள் கண்ணகியாள்,
கால்நகையால் வாய்நகைபோய் கழுத்து நகை இழந்த கதை.!!!

பால்நகையாள்- பால் உணர்ச்சி தோன்றும்படி நகைக்க மாட்டாள்
வெண்முத்து பல் நகையாள்- முத்துப் போன்ற பற்களை உடையவள்
கால்நகையால் -கால் சிலம்பினால்
வாய் நகை போய் -புன் சிரிப்பு மறைந்து
கழுத்து நகை – தாலி

XXX

கல்யாணமானவரின் கவலை
உலகத்தில் பெண்களே இல்லை என்றால் நம் சட்டை பித்தான்களை
யார் தைத்து கொடுப்பார்கள்???
பிரும்மச்சாரியின் பதில்
பெண்களே உலகத்தில் இல்லையென்றால் நாம் ஏன் உடை
உடுத்த வேண்டும்???

XXXX

இலங்கையில் ராவணனுடைய ஆட்சிக் காலத்தில், யாராவது பேசும்
போது, “வந்தாராம், போனாராம், சொன்னாராம் “என்று பேசின
பேர்களையெல்லாம் பிடித்து தண்டனை கொடுக்கச்சொன்னான்
ராவணன்……ஏனென்றால் அனுமன் ராம், ராம் என்று சொல்லிக்
கொண்டே அசோக வனத்தையே அழித்ததைப் பார்த்த பிறகு
ராம், ராம் என்ற ராம நாமத்தை கேட்டதும் பயமும், வெறுப்பும்
ஏற்பட்டு விட்டது.ஆகவே தான் “ராம்” என்கிற பதத்தை யாரும்
உச்சரிக்க க்கூடாது என உத்தரவு போட்டானாம்!!!!
–கம்பரடிப்பொடி சா. கணேசன் சொற்பொழிவிலிருந்து

XXX

ஒரு பெண்மணி மற்ற ஓருத்தியிடம் கவலையுடன் கூறினாள்:
என்கணவர் சூரிய ஒளி பட்டவுடன்தான் தினமும் எழுந்திருக்கிறார்….
மற்றொருத்தி :அதனாலென்ன காப்பி கொடுத்து குளிக்கச் சொல்லவேண்டியது
தானே????
அதற்கு அவள் :
“என் வீட்டு ஜன்னல் மேற்கே பார்த்தல்லவா இருக்கிறது???”

XXX

வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்???
“ஐயோ, போய்விட்டாரே”, என்று சவப் பெட்டியைச் செய்கிறவன் கூட
வருத்தப் படவேண்டும்
****

tags -ஞானமொழிகள் 25

ஏமாறாதீர்கள், ஏமாற்றாதீர்கள்! (Post No.9314)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9314

Date uploaded in London – –27 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஏமாறாதீர்கள், ஏமாற்றாதீர்கள்! – நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்!

ச.நாகராஜன்

பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்பதற்கு ஒரு அளவுகோல் உண்டா, ஏமாற்றியவருக்கு என்ன தண்டனை? புரியவில்லை!

சமீபத்திய பல facebook, Whatsapp செய்திகளை/ கட்டுரைகளை/ உபதேசங்களைப் படித்து விட்டு நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்.

என்ன அந்த முடிவு? ஏமாறப் போவதில்லை, அதைச் சொல்லி பிறரை ஏமாற்றவும் போவதில்லை.

சில உதாரணங்கள்:

1)காயத்ரி  மந்திரத்தை ஒரு லாபரட்டரியில் உலகின் மாபெரும் விஞ்ஞானி அலசி ஆராய்ந்தார். திகைத்தார்; பிரமித்தார், வியந்தார். அவ்வளவு வைப்ரேஷனை அது ஒரு விநாடியில் உருவாக்குகிறது.

விஞ்ஞானியின் பெயர், புகழ்பெற்ற பல்கலைக் கழகத்தின் பெயர் எல்லாம் தரப்பட்டிருக்கிறது கட்டுரையில்!

மகிழ்ந்து போன என்னைப் போன்ற பலர் பலருடனும் அதைப் பகிர்ந்து கொள்ளும் போது ‘ஷாகிங் நியூஸ் வருகிறது. அதை உடனடியாக சரிபார்த்தும் விட்டேன். அப்படி ஒரு விஞ்ஞானியே இல்லை; அப்படி ஒரு ஆராய்ச்சியை அந்த பல்கலைக்கழகம் நடத்தவே இல்லை!

இது இந்து மதத்தினரின் ஏமாற்று வேலை என்று ‘பிடி,பிடி என்று பிடித்த Fake finding தளம் ஒன்று ஹிந்து மதமே ஒரு ஏமாற்று மதம் என்று முழங்குகிறது.

2. நரேந்திர மோடி உலக மகா தலைவர்; உலகமே இந்தியாவைக் கண்டு வியக்கப் போகிறது. அவர் ஒரு Dangerous Patriot. எழுதியவர் யார் தெரியுமா? நியூயார்க் டைம்ஸின் சீஃப் எடிடர்.

வியந்து போய் மகிழ்ந்த சமயம் ஒரு கணம் சிந்தித்தேன். அந்த ஆங்கில நடை மிக மோசமான நடை. சொற்றொடர்கள் தவறான சொற்றொடர்கள். இலக்கணப் பிழைகள் உள்ளன. நியூயார்க் டைம்ஸை படித்திருந்த காரணத்தினால் இப்படி ஒரு தலைமை ஆசிரியர் எழுதுவாரா என்ற ஐயம் எழுந்தது. சரி பார்த்தேன். சரியான fake article ! ஒரு அயோக்கியன் ( அவன் காங்கிரஸ் போன்ற கட்சிகளைச் சேர்ந்து இப்படி மோடியின் பெயரை டாமேஜ் செய்கிறானா அல்லது Over enthusiastic BJPகாரர் இப்படி முழங்குகிறாரா, தெரியவில்லை. மொத்த டாமேஜ் அருமையான தலைவர் மோடிஜிக்குத் தான். Fake finding தளம் இந்த செய்தியை ‘வச்சு வாங்கி விட்டது. இந்தியா டு டே – ஹா ஹா ஹா என்று முழங்குகிறது. இது தேவையா?

3) ஒரு பட்டம் பெறாத இளைஞன். அவன் ட்ரோன் விஞ்ஞானியாம்! மோடி பார்த்து வியந்தாராம். DRDOவில் உடனடியாக இவருக்கு ஒரு வேலை போட்டுக் கொடுங்கள் என்றாராம். நானும் வியந்து போய் வேலை மெனக்கெட்டு அதை தமிழில் மொழி பெயர்த்தேன். சந்தேகம் வந்தது. சரி பார்த்தேன். FAKE NEWS!

இப்படி ஃபேஸ் புக், வாட்ஸ் ஆப் கட்டுரைகள் ஏராளமாக எனக்கு வருகிறது. என்னை ஒரு ‘இளிச்சவாயன் என்று அவர்கள் முடிவு கட்டி விட்டார்கள்.

ஐயோ, அருமையான எனது நேரம் வீணாகிறதே. கதறுகிறேன்.

ஆகவே ஒரு  முடிவுக்கு வந்து விட்டேன். இனி இப்படிப்பட்ட கட்டுரைகளை/ செய்திகளைப் படிப்பதும் இல்லை; பரப்புவதும் இல்லை.

நல்ல ஒரு அருமையான தொழில்நுட்ப விந்தையை அயோக்கியர்கள் எப்படி எல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்று வருந்தி அந்தத் தொழில்நுட்பத்தையே நம்மை விட்டு அகற்ற முற்படுவது என்ன ஒரு துர்பாக்கியம்!

சார், எனக்கு ட்விட்டர் அக்கவுண்ட், ஃபேஸ்புக் அக்கவுண்ட், வாட்ஸ் ஆப் அக்கவுண்ட் இனி மேல் கிடையாது. இருந்தாலும் அதை மதிக்க மாட்டேன்.  இனி ஒரு முடிவுக்கு வந்து விட்டேன் – இந்த போலிகளிடம் ஏமாற மாட்டேன்; அதன் அடிப்படையில் கட்டுரைகளை எழுதி ஏமாற்ற மாட்டேன்!

ஏன் இந்த முடிவு என்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது -ஒரு உதாரணக் கட்டுரை தான்:-

இதை வச்சு வாங்கி விட்டன பல பத்திரிகைகளும் ப்ளாக்கும். படியுங்கள், ஏமாறாதீர்கள், ஏமாற்றாதீர்கள். அனைவருக்கும் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆஃப் செய்திகளை “அப்படியே” நம்பி விட வேண்டாம் என்று சொல்லுங்கள். முடிந்தால் மெயில் மூலமாக மட்டுமே தனிப்பட்ட கருத்துக்களை பரிமாறிக் கொள்ளுங்கள்.

இந்தியா வல்லரசாகிறது – நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர்!

ஜோஸப் ஹோப், தலைமை ஆசிரியர், நியூயார்க் டைம்ஸ் எழுதுகிறார்:-

நரேந்திர மோடியின் ஒரே குறிக்கோள் இந்தியாவை மிக நல்ல நாடாக ஆக்குவது தான். அவரை நிறுத்தவில்லை எனில், எதிர்காலத்தில், இந்தியா உலகில் மிகவும் சக்தி வாய்ந்த நாடாக ஆகி விடும். அது அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா ஆகிய நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

 நரேந்திரமோடி ஒரு குறிப்பிட்ட குறிக்கோளை அடையச் சென்று கொண்டிருக்கிறார். அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

 புன்சிரிப்புள்ள முகத்திற்குப் பின்னே ஒரு அபாயகரமான தேசபக்தர் இருக்கிறார். உலகில் உள்ள எல்லா தேசங்களையும் தனது நாடான இந்தியாவின் நலத்திற்காக அவர் பயன்படுத்துகிறார்.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கனிஸ்தானுடனான அமெரிக்காவின் உறவுகளை அழித்தார்.

நரேந்திர மோடி வியட்நாமுடன் ஒரு நேச உறவை ஏற்படுத்திக் கொண்டார்.  சூப்பர் பவர் ஆக வேண்டும் என்ற சீனாவின் கனவைத் தகர்த்தார். மூன்று நாடுகளையும் இதற்குப் பயன்படுத்திக் கொண்டார்.

வெளி நாடுகளில் எண்ணெயை எடுப்பதில் வியட்நாமுக்கும் சீனாவுக்கும் உள்ள நீண்ட கால தகராறு, இந்தியாவிற்கு ஆதாயமானது.

சீனாவின் தென் கடலில் வியட்நாம் இந்தியாவின் ஆதரவுடன் எண்ணெயை எடுக்க ஆரம்பித்து விட்டது.

அது தனது எல்லா எண்ணெயையும் இந்தியாவிற்கு வழங்குகிறது.

 அமெரிக்கா இதை வேறுவிதமாக ஆதரிக்கிறது. அவர் பாகிஸ்தானை ஒரு ஏழை நாடாக ஆக்கி விட்டார்.

அவர் ஈரான் துறைமுகத்தை தன் கண்பார்வையில் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

அவர் இந்திய ராணுவ முகாம்களை ஆப்கனிஸ்தான் எல்லையில் பாகிஸ்தானுடன் எல்லை பிரிகின்ற இடத்திற்கு வெகு அருகே அமைத்துள்ளார்.

இந்திய வணிகத்தை அதிகப்படுத்துவதற்காக, இரான் வழியே ஆப்கானிஸ்தானத்திற்கு  ஒரு பாதையையும் அவர் அமைத்துள்ளார் (பாகிஸ்தானை விட்டு விட்டு).

நரேந்திர மோடியின் ஆசைகள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக தொடர்கிறது.

370 மற்றும் 35A பிரிவுகள் நீக்கப்பட்டன.

ஒருநாள் PAC,  பாகிஸ்தான் வசமுள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்றி விடும். வருங்காலத்தில் பாகிஸ்தான் நான்கு துண்டுகளாக சிதறிவிடும். இது நரேந்திர மோடியின் எச்சரிக்கையைத் தொடர்ந்து நடக்கும்.

பாகிஸ்தானின் பாரம்பரிய உறவுநாடான சவூதி அரேபியா பாகிஸ்தானின் பிரிவினையில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கும்.

ஆசியாவில், சீனாவையும் அமெரிக்காவையும் SAARC  உச்சி மகாநாட்டை ரத்து செய்ய வைத்த இந்த மனிதர் தனது சக்தியை உலகிற்குக் காட்டி விட்டார்.

ஆசியாவில் தனது மேலாம் நிலையைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதை   காண்பிப்பதில் நரேந்திர மோடி வெற்றி பெற்று விட்டார்.

இந்தியாவின் இரு பெரும் சக்திகளான ரஷியாவும் ஜப்பானும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர் இந்த இரு நாடுகளையும் மிகுந்த கூர்மையுடன் தன் கையில் வைத்திருக்கிறார். சீனாவின் வியட்நாம் எண்ணெய் விவகாரத்தில், சீனா எண்ணெயைக் கேட்கும். அப்போது அவர் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியைக் கேட்பார்.

அவர் என்ன சொல்வார் எனில், “நான் அதை எடுத்துக் கொள்கிறேன். நீ குளறிக் கொண்டிருஎன்று சொல்லி சீனாவை கிண்டல் செய்வார்.

சீனாவால் ஒன்றும் செய்ய முடியாது, இந்த மனிதர் இந்திய அரசியலை வேறு ஒரு மட்டத்திற்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்.

பல நாடுகள் ஒவ்வொரு நாடும் பல எதிரிகளைக் கொண்டிருப்பதாக நினைத்து அதற்கேற்ப நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தியாவிற்கோ பாகிஸ்தானைத் தவிர வேறு ஒரு எதிரி இல்லை. உலகின் எல்லா நாடுகளுடனும் நல்ல நட்பையே இந்தியா கொண்டிருக்கிறது என்பது நிச்சயம்.

இந்த மனிதர்  நிஜ யுத்தத்தை விட மிக மோசமான  தீங்கை பாகிஸ்தானுக்குச் செய்து கொண்டிருக்கிறார்.

இஸ்லாமிய நாடுகளை பாகிஸ்தானுக்கு எதிராகப் பயன்படுத்துவதன் மூலம் நரேந்திர மோடி உலகின் தலைசிறந்த தலைவர்களுள் ஒருவராகத் தன்னை நிரூபித்து விட்டார்.

 பாகிஸ்தான் இந்தியா மீது ஒரு போரைத் தொடுத்தாலும் கூட, பெரிய இழப்பு ஒன்றும் ஏற்படப் போவதில்லை. ஆனால் இப்போது பாகிஸ்தான்  அதை விட இன்னும் அதிகமாகத் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறது.

 எல்லா நாடுகளுடனான உடன்பாடுகளில் இந்த மனிதரின் நேர்மையை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் முன்னேற்றம் உலகின் இதர நாடுகளுக்கு கஷ்டமாக இருக்கும்.

இப்போதுள்ள இந்தியாவின் அசுர வளர்ச்சியின் படி, ஐக்கிய நாட்டு சபையில் உள்ள அனைத்து நாடுகளும் அதன் விளைவுகளை அனுபவிக்கப் போகின்றன!

***

FAKE NEWS – IT IS NOT IN NY TIMES

Joseph Hope, Editor-in-Chief of the New York Times: 

 Narendra Modi’s sole aim is to make India a better country. If he is not stopped, in the future, India will become the most Powerful Nation in the World. It will surprise the United States, the United Kingdom, and Russia.. 

Narendra Modi is moving towards a specific goal. No one knows what he wants to do.  Behind the smiling face, a dangerous patriot. He uses all the countries of the world for the benefit of his nation India. 

 Destroyed US ties with Pakistan and Afghanistan. 

 Narendra Modi has created an alliance with Vietnam, shattered China’s Superpower dream and made use of the 3 Countries. 

 The long-running dispute over oil extraction overseas between Vietnam and China has benefited India. With India’s support, Vietnam began producing Oil in China’s Southern Seas.. 

 It supplies all of its Oil to India. The United States has different support for this. He made Pakistan a poor Country. 

 He eyes the Port of Iran under his control.  He has set up an Indian Military base on the border with Afghanistan, very close to the area that divides Pakistan. 

 In order to increase Indian trade, he has also built a route through Iran (leaving Pakistan) to Afghanistan. 

 Narendra Modi’s desires are going one by one. Sections 370 and 35A have been repealed.  One day, PAC, will completely capture occupied Kashmir. Pakistan will fall into 4 pieces in the coming seasons. This will happen on the warning of Narendra Modi.

  Saudi Arabia, Pakistan’s traditional ally, will also play a key role in the Partition of Pakistan.  In Asia, this man who finished China and the United States cancelled the SAARC Summit and showed his power to the World. Narendra Modi has succeeded in maintaining India’s superiority over Asia. 

 Russia and Japan, 2 of Asia’s Major Powers, have done nothing to say.  He held both countries in his hands with great precision. In the case of China’s Vietnam Oil issue, China will ask for Oil. Then he will ask Pakistan Occupied Kashmir. 

What he would ask was, “I’ll take it.. You have Hair in your Mouth,” and tease China’s Vietnam issue.. 

 Nothing can be done by China. This person is taking Indian Politics to a different level.  Many Countries think and act that each Country has many Enemies. But India has no Enemies other than Pakistan. India is almost certain to be a friend to all Countries of the World. 

 This man is doing more harm to Pakistan than the real War. By using Muslim Countries  against Pakistan, Narendra Modi has proven himself to be one of the Best leaders in the World. 

 Even if Pakistan makes War with India, there will not be so much loss. But now Pakistan is suffering more than that. 

 In all negotiations with all Countries, this person’s Honesty must be taken into account.  India’s progress will be difficult for the rest of the World. 

 With the current astounding growth of India, all the Countries in the United Nations will experience the consequences.! 

(https://www.jansatta.com/

TAGS – ஏமாறாதீர்கள்,

****

BUCKINGHAM PALACE IN NUMBERS (Post No.9313)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9313

Date uploaded in London – –26 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

BUCKINGHAM PALACE, where Queen Elizabeth lives, is in the heart of London. Nearest underground station is Green Park. Three important lines- Jubilee, Piccadilly and Victoria lines – connect this station with most of London. Anyone staying in any part of London can reach this place within an hour and walk to the palace through the park. Well connected by buses as well.

Changing of Guards is a ceremony that happens every day in the morning (alternate days in winter) which is watched by thousands of people.

Here is a paper cutting that describes the palace in numbers. The word GHAM in Buckin ‘gham’ is a Sanskrit word ‘Grama’ (village). Hundreds of places in Britain have this suffix. So do Borough or Burg is a Sanskrit word  that is derived from Pura, Pur, Puri, i.e. place with a fort or protected wall is.

Before the corona virus attack, a small part of the palace was opened to the public were some royal items were on display. And in summer queen used to give a dinner to prominent citizens of London. 1000 people will be invited for the dinner in rotation. I and my wife were invited to the place several years ago where we met (in fact saw) her. She came to every group of people. And we were provided hundreds of food items and in different sheds. Vegetarians and teetotallers like me always have a few items to relish. Since my wife came wearing silk sari, some people came to us and appreciated the beauty of Indian saris. But none of us could carry any camera or mobile phone inside the palace. But when I went to Prime Minister David Cameron’s house (10 Downing Street) for Deepavali (Diwali) dinner a few years ago, he came straight to us when I said I was from Hindu Forum of Britain, he called the photographer and asked him to take several pictures posing with us. Though we were not allowed to take any camera or mobile inside, pictures were sent to us in a few days’ time. Palace also should do something like it.

tags – Buckingham palace, Queen