Avvaiyar’s Sanskrit words; 31Purananuru wonders-31, Tamil Encyclopedia-71 (Post No.15,833)

Written by London Swaminathan

Post No. 15,833

Date uploaded in London –5 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Purananuru wonders-31, Tamil Encyclopedia-71; One Thousand Interesting Facts -Part 71

Item 559

In Avvaiyar‘s poems in Purananuru, one notable thing is her use of Sanskrit words; she never hesitated to use them though Tamil words were available for the same .

Puram 91 –Neela mani – sapphire

101- oosi- needle;

102- sakatam- cart; pandam – things; sema achchu – Protective axle

104- karmam /action, work

***

Puranānūru 100, Poet Avvaiyār sang for Athiyamān Nedumān Anji,


Spear in his hand, beautiful warrior
anklets on his legs, sweat on his body,
fresh wounds on his neck,
his dark, curly hair splendidly adorned
with needle-like fronds from the top
of young palmyra trees, entwined with
huge vetchi blossoms and vēngai flowers,
his enemies flee his sight,
like he were a mighty elephant that had
come back from battling a tiger,
so that the rage he felt has not yet left him.

Alas!  For those who aroused his anger,
there is no escape.
The eyes that saw his enemies are still red
even though they see his young son!

Vaidehi Herbert’s English Translation is used; Thanks.

புறநானூறு 100பாடியவர்: ஔவையார்பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சிதிணை: வாகைதுறை: அரச வாகை
கையது வேலே, காலன புனை கழல்,
மெய்யது வியரே, மிடற்றது பசும்புண்,
வட்கர் போகிய வளர் இளம் போந்தை
உச்சிக் கொண்ட ஊசி வெண்தோட்டு
வெட்சி மா மலர் வேங்கையொடு விரைஇச்,  5
சுரி இரும் பித்தை பொலியச் சூடி,
வரிவயம் பொருத வயக்களிறு போல,
இன்னும் மாறாது சினனே அன்னோ,
உய்ந்தனர் அல்லர் இவன் உடற்றியோரே,
செறுவர் நோக்கிய கண் தன்  10
சிறுவனை நோக்கியும், சிவப்பு ஆனாவே.

***

Item 560

In Puram 101, poetess Avvaiyar says , Chieftain Athiyaman will give the First day treatment for the second day, third day……………….many more days

This is because the popular saying is

You are given food in Thalai Vaazai Ilaiyile (Longest Banana leaf)

On the second day they will serve you food in Kaiyile (In your hand)

If you stay for one more day

On the third day they will serve you food on your Thalaiyile (on your head)

The meaning is, the hosts will throw you out.

Remembering this popular saying Avvai says Athiyaman treat everyone the same way irrespective of the period of your stay with him as a guest.

முதல் நாள் தலைவாழை இலையில

இரண்டாம் நாள் – கையில

மூன்றாம் நாள் – உன் தலையில

***

Puranānūru 101, Poet Avvaiyār sang for Athiyamān Nedumān Anji,

We did not go to him just for one day or two days,
but brought along many and went for many days,
and he welcomed us like it was the first day.

When we receive gifts from Athiyamān who owns
fine chariots and elephants adorned with ornaments,
they are there, whether it takes more or less time.
The gifts are in our hands like a ball of food placed
between the tusks of an elephant.

He will not fail us, my heart that desires food!
Do not worry!  May his efforts prosper!

***

புறநானூறு 101பாடியவர்: ஔவையார்பாடப்பட்டோன் அதியமான் நெடுமான் அஞ்சிதிணை: பாடாண்துறை:  பரிசில் கடாநிலை
ஒரு நாள் செல்லலம்இரு நாள் செல்லலம்,
பல நாள் பயின்று பலரொடு செல்லினும்,
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ,
அணி பூண் அணிந்த யானை இயல் தேர்
அதியமான் பரிசில் பெறூஉங் காலம்  5
நீட்டினும் நீட்டாது ஆயினும், யானை தன்
கோட்டு இடை வைத்த கவளம் போலக்
கையகத்தது, அது பொய் ஆகாதே,
அருந்த ஏமாந்த நெஞ்சம்,
வருந்த வேண்டா, வாழ்க அவன் தாளே.  10

***

Item 561 Sixteen Blessings

In Puram verse 102 Avvaiayar praised Pokuttu Ezini, son of Chieftain Athiyaman and compared him to the Full Moon. Commentators say that he is blessed with 16 boons or blessings like the Moon. Hindus believe that on Full Moon Day (Purnima) the moon has all the 16 phases; it shines bright and there is no place for darkness.

The sixteen boons or blessings according to Abhirami Bhattar’s famous poem are:

பதினாறு பேறுகள்

1. Education

2. Long Life

3. Good Friends

4. Prosperity

5. Eternal youth

6. Life without diseases

7. Steady Mind

8. Ever loving wife

9. Good Children

10.Fame

11.Truthness

12.charitableness

13.Never diminishing Wealth

14.Equnomity

15.Trouble free Life

16.Devotion to God

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்

கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையுங் குன்றாத இ­ளமையும்

கழுபிணியிலாத உடலும்

சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்

தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்

தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு

துன்பமில்லாத வாழ்வும்

துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய

தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!

ஆதிகட வூரின் வாழ்வே!

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!

அருள்வாமி! அபிராமியே!

***

புறநானூறு 102பாடியவர்: ஔவையார்பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினிதிணை: பாடாண்துறை:  இயன் மொழி
எருதே இளைய நுகம் உணராவே,
சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே,
அவல் இழியினும் மிசை ஏறினும்
அவணது அறியுநர் யார் என உமணர்
கீழ்மரத்து யாத்த சேம அச்சு அன்ன,  5
இசை விளங்கு கவிகை நெடியோய், திங்கள்
நாள் நிறை மதியத்து அனையைஇருள்
யாவணதோ நின் நிழல் வாழ்வோர்க்கே?

***

Puranānūru 102, Poet Avvaiyār sang for Athiyamān Nedumān Anji’s son Pokuttu Ezhini,

Not knowing what could happen,
salt merchants tie spare axles to the
lower wooden beams of their wagons,
since the bulls are young and not
acquainted with yokes, and since there
are heavy loads in the wagons which
climb on mounds and go down
through ditches.

O lord!  You are like that spare axle,
a great man with cupped hands
that give.  You are like the full moon.
How can there be darkness for those
who live under your protection?

***

Item 562 Meat Eaters

Ancient Tamils were meat eaters. Here in poem 103 Avvaiyar says hat the Virali (dancer) will get if she goes to Athiyaman’s place. Another interesting Tamil word word is MANDAI. In those days it was the begging vessel and now the meaning is head.

***

Puranānūru 103, Poet Avvaiyār sang for Athiyamān Nedumān Anji,

Hanging a pathalai drum on one side, and
a small, hollow muzhavu drum on another side,
O virali in the wasteland with a few bangles,
you wonder who will turn your dish right
side up!

If you go to him, he is not far away.
He is in the land of his enemies, where in
the harsh battlefield, a mass of black smoke
surrounds young male elephants
like clouds that surround mountains.

Ānji of many spears, even in hard times,
keeps the bowls of bards filled with food,
meat with fat that appear like soft adais
made with wax.  May all his efforts prosper!

***

புறநானூறு 103பாடியவர்: ஔவையார்பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சிதிணை: பாடாண்துறை: விறலியாற்றுப்படை
ஒரு தலைப் பதலை தூங்க, ஒரு தலைத்
தூம்பு அகச் சிறு முழாத் தூங்கத் தூக்கிக்,
‘கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்?’ எனச்
சுரன் முதல் இருந்த சில் வளை விறலி!
செல்வை ஆயின் சேணோன் அல்லன்,  5
முனை சுட எழுந்த மங்குல் மாப் புகை
மலை சூழ் மஞ்சின், மழ களிறு அணியும்
பகைப் புலத்தோனே, பல் வேல் அஞ்சி,
பொழுது இடைப்படாஅப் புலரா மண்டை
மெழுகு மெல் அடையின் கொழு நிணம் பெருப்ப,  10
அலத்தற் காலை ஆயினும்,
புரத்தல் வல்லன், வாழ்க அவன் தாளே. 

***

Item 562 Elephant and Crocodile simile

In Puram 104, Avvaiyar used the famous Gajendra Moksha scene as a simile. Crocodile attacking elephant Gajendra is sculpted all over India from Gupta period. Here Avvai used it to praise Athiyaman’s son. He is compared to a crocodile. An interesting simile.

***

Puranānūru 104, Poet Avvaiyār sang for Athiyamān Nedumān Anji,

Protect yourselves warriors!  Let me tell you!
My lord is like a crocodile that can drag in
and slaughter an elephant in knee-deep,
shallow water muddied by the playing feet
of the little children in town.

If you don’t consider his acts, but despise
him by saying “He is just a young man,”
victory will come hard for you!

***

புறநானூறு 104பாடியவர்: ஔவையார்பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சிதிணை: வாகைதுறை: அரச வாகை
போற்றுமின் மறவீர்! சாற்றுதும் நும்மை!
ஊர்க் குறுமாக்கள் ஆடக் கலங்கும்
தாள்படு சில் நீர்க் களிறு அட்டு வீழ்க்கும்
ஈர்ப்பு உடைக் கராஅத்து அன்னஎன் ஐ
நுண் பல் கருமம் நினையாது,  5
இளையன் என்று இகழின், பெறல் அரிது ஆடே.

To be continued …………………

–Subham—

Tags- Avvaiyar‘s Sanskrit words; 31Purananuru wonders-31, Tamil Encyclopedia-71, Tamil’s sixteen Blessings, boons, Sanskrit words, Treatment of guests, item 562

அந்தணர் என்பவர் பிராமணாள்தான்! சந்தேகமே வேண்டாம்!! -பூதன் சேந்தன் புத்திமதி (Post.15,832)

Written by London Swaminathan

Post No. 15,832

Date uploaded in London –5 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திராவிட அரைவேக்காடுகளுக்கு அவ்வப்போது ஒரு ஐயப்பாடு எழும் ; அந்தணர் என்பவர் பிராமணாளா அல்லது சன்யாசியா என்று. உண்மையைச் சொல்லப்போனால் இருவரும் ஒருவரே ; ஏனெனில் இருவரும் அறநெறிப்படி வாழ்பவர்கள்; மாமிசம், கள் சாப்பிடாதவர்கள் ; பொருளைச்  சேர்த்து வைக்காதவர்கள் ; ஊர் ஊராகப் போய் பிழைப்பவர்கள் ; யாசகம் மூலம் உணவு பெறுவோர்; ஆயினும் துறவிகளுக்கு இல்லற வாழ்வு கிடையாது; அது ஒரு பெரிய வேறுபாடு; இதனால் அந்தணர் என்ற சொல்லை எல்லோரும் துறவிகளுக்கும் பிராமணர்களுக்கும் பயன்படுத்தினர்.

எச்சரிக்கை ; இதெல்லாம் அந்தக் கால பிராமணர் பற்றிய வருணனை !

கபிலர் என்ற புலவர் இன்னா நாற்பது என்று இன்னல் தரும் 40  விஷயங்களைப்  பாடினார்; உடனே அவருக்கு எதிரொலியாக இன்பம் தரும் 40 விஷயங்களைப்  பூதன் சேந்தனார்  பாடினார். இந்த இரண்டு நூல்களும் சங்க காலத்துக்குப் பின்னர் சுமார் நான்கு அல்லது ஐந்தாவது நூற்றாண்டுகளில் தோன்றியவை; பூதன் சேந்தன் என்ற பெயரே சங்க காலப் பெயர் .

அவர் அந்தணர் என்ற சொல்லை இரண்டு இடங்களில் ஐயம் திரிபற பிராமணர்களுக்குப் பயன்படுத்துகிறார்

1

காவோ டறக்குளம் தொட்டல் மிகஇனிதே

ஆவோடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்இனிதே

பாவமும் அஞ்சாராய்ப் பற்றுந் தொழில்மொழிச்

சூதரைச் சோர்தல் இனிது.– இனியவை நாற்பது [23]

விளக்கம்:

சோலையுடன் கூடிய பொதுக் குளத்தை வெட்டுதல் இனிது. அந்தணர்க்குப் பசுவோடு பொன்னைக் கொடுத்தல் இனிது. பாவத்திற்கு அஞ்சாமல் சூதாடுகிறவர்களை நீக்கி வாழ்தல் இனியது.

(சன்யாசிகளுக்கு அந்தக் காலத்தில் யாரும் பசுவும் தங்கமும் தானமாகத் தருவது இல்லை)

2

அந்தண ரோத்துடைமை ஆற்ற மிகஇனிதே

பந்தம் உடையான் படையாண்மை முன்இனிதே

தந்தையே ஆயினுந் தானடங்கான் ஆகுமேல்

கொண்டடையா னாகல் இனிது. . . . .[07]

விளக்கம்:

பிராமணர்க்கு வேதம் ஓதுதல் இனிது. இல்லறத்தாருக்கு பற்று,பாசம் இனிது. படையுடையானுக்கு வீரம் இனிது. தந்தையே ஆனாலும் அவர் கூறும் தவறானவற்றைச் செய்யாமை இனிது

***

சங்க காலத்துக்குப் பின்னர் எழுந்த அற நூல்களை பதினெண் கீழ்க்கணக்கு என்று நம் முன்னோர்கள் பிரித்துவைத்தனர் அதில் ஒன்றுதான் ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய திருக்குறள் என்பதும் ; கிட்டத்தட்ட அதே காலத்தில்தான் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் முதலிய நூல்களையும் எழுதினார்கள்.

ஒரு விஷயத்தை மறந்துவிடக்கூடாது சிலப்பதிகார நிகழ்ச்சிகள் நடந்தது சங்க காலத்தில்தான்; அதே போல தொல்காப்பியம் சொல்லும் விதிகளும் சங்க கால விதிகள்தான்; அதை யாரோ ஒருவர் தொகுத்த காலம் பிற்காலம் என்பதை எளிய நடையும் ஸம்ஸ்ருதச் சொற்களும் பல புதிய வழக்கங்களும் காட்டிவிடும்; எடுத்துக்காட்டாக சிலப்பதிகாரத்தில் நாரதர் வருகிறார்; வீணை வருகிறது. சங்க கலத்தல் இதைக் காணமுடியாது; லிங்கம், கணபதி சிவன் என்ற சொற்களைக் காண முடியாது இவை பிற்காலத்தில் வந்தவை ; இளங்கோ கூட சிவகதி நாயகன் என்பவற்றை சமணர்க்குதான் பயன்படுத்துகிறார் சிவ பெருமானுக்கு அல்ல.

இன்னொரு விஷயத்தையும் சொல்லிவிடுகிறேன்; ஒரு பொருளை ஒருவர் சொல்லாததால் அது அக்காலத்தில் இல்லவே இல்லை என்று எண்ணிவிடாதீர்கள்; அதை வழக்கில் பயன்படுத்தவில்லை என்பதே உண்மை.

பிராமணர்களுக்கு அளிக்கப்படும் 16 தானங்களில் பசுவும் தங்கமும் முக்கியம் ; இந்தோனேஷியாவின் அடர்ந்த காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட மூல வர்மன் கல்வெட்டும் பூரண வர்மன் கல்வெட்டும் சம்ஸ்க்ருதத்தில் எழுதிவைத்துள்ளனர் அவரின் காலம் 1600  ஆண்டுகளுக்கு முன்! போர்னியோ தீவில் இருந்த கல்வெட்டுகள் இப்போது மியூசியங்ககளில் உள்ளன.

***

Pictures சதீசன் மோடி துலாபாரம் கொடுத்தது

செங்குட்டுவனிடம் 70 கிலோ தங்கம் வாங்கிய பிராமணன்

சிலப்பதிகாரத்தில் பிராமணன் மாடல மறையோன் என்பவன்தான் முக்கிய கதாபாத்திரம் கண்ணகி கோவலன் செங்குட்டுவன் வரலாறுகளை இணைக்கும் சங்கிலி இவன் ; அவனுடைய பங்கினை அகற்றிவிட்டால் சிலப்பதிகாரம் துண்டு துண்டாகத் தோன்றும்; செங்குட்டுவனை ஊக்குவித்து போர் செய்ய வைத்தவன் இறுதியில் யாக யக்ஞங்கள் செய் என்று அறிவுறுத்துகிறான்; இதற்காக அவனுக்கு செங்குட்டுவன் எடைக்கு எடை துலாபாரத்தில் தங்கம் கொடுத்தான் என்று சிலப்பதிகாரம் செப்பும்!

அன்மையில் புதிதாக கேரள முதல்வராகப் பொறுப்பேற்ற கங்கிரஸ் கட்சி முதலமைச்சர் சதீசன் எடைக்கு எடை வெண்ணெய் கொடுத்தார் அவருடைய எடை 71 கிலோ ; செங்குட்டுவனுக்கு 70 அல்லது 80 கிலோ இருந்திருப்பான் ஆகையால் அந்த பிராமணனுக்கு – மாடல மறையோனுக்கு அடித்தது லக்கி பிரைஸ்— Lucky Prize ! 80 கிலோ தங்கம் !

***

துலாபாரம் பிரதமர் மோடி முதல் எல்லோரும் இன்றுவரை செய்யும் சடங்கு ; குருவாயூர் மட்டுமின்றி தமிழ் நாட்டின் பல கோயில்களிலும் துலாபாரம் ‘துலா’க்களை– அதாவது தராசுகளைக் –காணலாம்.

–subham — Lucky Prize

Tags-பிராமணர், அந்தணர், துலாபாரம் இனியவை நாற்பது, பசு தங்கம் தானம், பூரண வர்மன், மூல வர்மன் கல்வெட்டுகள் இந்தோனேஷியா,  பூதன் சேந்தன் புத்திமதி,  செங்குட்டுவன், மாடல மறையோன்

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-45; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,831)

Written by London Swaminathan

Post No. 15,831

Date uploaded in London –5 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருநாவாய்

நாவாய் முகுந்தன் கோவில்

மலைநாட்டுத் திருப்பதி, கேரள மாநிலம்

திருநாவாய் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.திருமங்கையாழ்வார் மற்றும் நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது

மூலவர் – நாவாய் முகுந்தன், நாராயணன், நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் – மலர்மங்கை நாச்சியார், சிறுதேவி.

தீர்த்தம் – செங்கமல ஸரஸ்.

விமானம் – வேத விமானம்.

ப்ரத்யக்ஷம் – லக்ஷ்மி, கஜேந்த்ரன், நவயோகிகள்.

கோவில் பாரதப்புழை ஆற்றை ஒட்டியுள்ளது. எதிர்க் கரையில் சிவனுக்கும் ப்ரஹ்மாவுக்கும் கோவில்கள் உள்ளன. இதைக் காசிக்கு ஸமானமாகக் கருதி சிராத்தங்கள் முதலியன செய்கின்றனர்.

துவாரபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் இங்கு வந்து பஞ்ச பாண்டவர்களுடன் சேர்ந்து, தம் முன்னோருக்கு பித்ரு பூஜை செய்தார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் இத்தலத்தில் பித்ரு பூஜை செய்தால் அளவிடற்கரிய புண்ணியம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

அமாவாசை நாட்களில் இத்தலத்தின் தலவிருட்சம் அடியில் பித்ருக்களுக்கு அன்னம் வைத்து வழிபடுகிறார்கள். அமாவாசையன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தலத்தின் அருகில் உள்ள பாரத புழை நதியில் நீராடி பித்ரு பூஜை செய்கின்றனர். கேரள மாநிலத்தில் பித்ரு தர்ப்பணம் கொடுப்பதில் இத்தலம் முதன்மை வகிக்கிறது.

இவ்விடத்தில் 9 யோகிகள் யாகம் செய்ததால் இந்த ஸ்தலம் திருநவயோகி என்று பெயர் பெற்று நாளடைவில் திருநாவாய் என்று மக்கள் வழக்கில் மாறுபட்டதாக ஐதீஹம்.

ஒரு சமயம் மஹாலக்ஷ்மியும் கஜேந்திரனும் தாமரைப் பூக்களை பறித்து பகவானை அர்ச்சனை செய்ய, கஜேந்திரனுக்கு, பூ கிடைக்காமல் பகவானிடம் முறையிட பகவான் லக்ஷ்மியை பூ பறிக்க வேண்டாம் என்று சொல்லி, லக்ஷ்மியை தன்னுடன் ஏக சிம்மாஸனத்தில் அமரச்செய்து கஜேந்த்ரன் பூஜையை எற்றுக் கொண்டதாக புராண வரலாறு. மலைநாட்டில் இந்த ஓர் இடத்தில்தான் லக்ஷ்மிக்கு தனி ஸந்நிதி உண்டு.

மங்களாசாஸனம் –

திருமங்கையாழ்வார் – 1520, 1856

நம்மாழ்வார் – 3634 -44

மொத்தம் 13 பாசுரங்கள்.

திருநாவாய் முகுந்தன் கோவில்

பெருமாளின் முழங்கால்களுக்கு கீழான பகுதி பூமியில் புதைந்துள்ள தலம் இதன் பொருட்டே இங்கே நேர்த்தி கடன் செலுத்தும் அன்பர்கள், முட்டியிட்டு பிரதட்சணம் செய்வது வழக்கம்.

***

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருநாவாய். சென்னை – கள்ளிக்கோட்டை ரயில் மார்க்கத்தில் திருநாவாய் ரயில் நிலையம் அமைந்துள்ளது. சென்னை – கள்ளிக்கோட்டை ரயில் மார்க்கத்தில் உள்ள இந்த

ஸ்டேஷனிலிருந்து ஊரும் கோவிலும் 1 மைல் தூரத்தில் உள்ளன. ஷோரானூரிலிருந்து பஸ்ஸில் குட்டீபுரம் வந்து அங்கிருந்து வேறு பஸ்ஸில் திருநாவாய் வந்ததும் கோயிலை அடையலாம்.

***

திருவிழா

வைகுண்ட ஏகாதசி, திருவோணம்;

இக்கோவிலில் மாமாங்கத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டில் திப்பு சுல்தானாலும் 1921 இல் மாப்பிள்ளைக் கலகம் நடந்த போதும் இக்கோவில் தாக்குதலுக்கு உள்ளானது

கேரளாவில் இந்த தலத்தில் மட்டும் தான் லட்சுமிக்கு தனி சன்னதி உண்டு என்கிறார்கள்.

கோயிலின் சுற்றுப்பகுதியில் கணபதி, லட்சுமி, ஐயப்பனுக்கு சன்னதிகள் உண்டு. கோயிலுக்கு எதிரே உள்ள ஆற்றின் அக்கரையில் பிரம்மனுக்கும், சிவனுக்கும் தனி கோயில் உள்ளது. எனவே இத்தலத்தை மும்மூர்த்தி என அழைக்கிறார்கள்.

***

பாசுரங்கள்

1520.  

தூ வாய புள் ஊர்ந்து வந்து*  துறை வேழம்*

மூவாமை நல்கி*  முதலை துணித்தானை*

தேவாதிதேவனை*  செங் கமலக் கண்ணானை*

நாவாய் உளானை*  நறையூரில் கண்டேனே.   

***

3750.  

அறுக்கும் வினையாயின*  ஆகத்து அவனை*

நிறுத்தும் மனத்துஒன்றிய*  சிந்தையினார்க்கு*

வெறித்தண்மலர்ச் சோலைகள்சூழ்*  திருநாவாய்*

குறுக்கும்வகை உண்டுகொலோ*  கொடியேற்கே?  (2)

3751.  

கொடிஏர்இடைக்*  கோகனகத்தவள் கேள்வன்*

வடிவேல் தடம்கண்*  மடப்பின்னை மணாளன்*

நெடியான்உறை சோலைகள்சூழ்*  திருநாவாய்* 

அடியேன் அணுகப்பெறும்நாள்*  எவைகொலோ!

3752.  

எவைகொல் அணுகப் பெறும்நாள்?’*  என்று எப்போதும்*

கவையில் மனம்இன்றி*  கண்ணீர்கள் கலுழ்வன்*

நவைஇல் திருநாரணன்சேர்*  திருநாவாய்* 

அவையுள் புகலாவதுஓர்*  நாள் அறியேனே

3753.  

நாளேல் அறியேன்*  எனக்குஉள்ளன*  நானும்

மீளா அடிமைப்*  பணி செய்யப் புகுந்தேன்*

நீள்ஆர்மலர்ச் சோலைகள்சூழ்*  திருநாவாய்*

வாள்ஏய் தடம்கண்*  மடப்பின்னை மணாளா!

3754.  

மணாளன் மலர்மங்கைக்கும்*  மண் மடந்தைக்கும்*

கண்ணாளன் உலகத்துஉயிர்*  தேவர்கட்குஎல்லாம்*

விண்ணாளன் விரும்பிஉறையும்*  திருநாவாய்*

கண்ஆரக் களிக்கின்றது*  இங்குஎன்று கொல்கண்டே? 

3755.  

கண்டே களிக்கின்றது*  இங்குஎன்று கொல்கண்கள்*

தொண்டேஉனக்காய் ஒழிந்தேன்*  துரிசுஇன்றி*

வண்டுஆர்மலர்ச் சோலைகள்சூழ்*  திருநாவாய்* 

கொண்டே உறைகின்ற*  எம்கோவலர்கோவே!

3756.  

கோவாகிய*  மாவலியை நிலம்கொண்டாய்*

தேவாசுரம் செற்றவனே!*  திருமாலே*

நாவாய்உறைகின்ற*  என்நாரணநம்பீ*

‘ஆஆ அடியான்*  இவன் என்று அருளாயே.

3757.  

அருளாது ஒழிவாய்*  அருள்செய்து*  அடியேனைப்

பொருளாக்கி*  உன்பொன்அடிக்கீழ்ப் புகவைப்பாய்*

மருளேஇன்றி*  உன்னை என்நெஞ்சத்துஇருத்தும்*

தெருளேதரு*  தென்திருநாவாய் என்தேவே! 

3758.  

தேவர் முனிவர்க்குஎன்றும்*  காண்டற்குஅரியன்*

மூவர் முதல்வன்*  ஒருமூவுலகுஆளி*

தேவன் விரும்பிஉறையும்*  திருநாவாய்*

யாவர் அணுகப்பெறுவார்*  இனிஅந்தோ!

3759.  

அந்தோ! அணுகப்பெறும்நாள்*  என்றுஎப்போதும்* 

சிந்தை கலங்கித்*  திருமால் என்றுஅழைப்பன்*

கொந்துஆர்மலர்ச் சோலைகள்சூழ்*  திருநாவாய்*

வந்தே உறைகின்ற*  எம்மா மணிவண்ணா!.

3760.  

வண்ணம் மணிமாட*  நல்நாவாய் உள்ளானைத்* 

திண்ணம் மதிள்*  தென்குருகூர்ச் சடகோபன்*

பண்ணார் தமிழ்*  ஆயிரத்து இப்பத்தும்வல்லார்* 

மண்ணாண்டு*  மணம்கமழ்வர் மல்லிகையே.  ~ நம்மாழ்வார்

–subham—

Tags– திரு நாவாய்,மலைநாட்டுத் திருப்பதி, Part 45, Vishnu Temples, 108

கும்பகர்ணனுக்கு பிரம்மா வரம் அளித்தது! (Post.15,380)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,830

Date uploaded in London – 5 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் மூன்றாம் பாகம் ஆரம்பம்

ராமாயணத்தில் வரங்கள் (55) கும்பகர்ணனுக்கு பிரம்மா வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் பத்தாவது ஸர்க்கமாக அமைவது ‘ராவணன் முதலியவர்கள் வரத்தைப் பெறுவது’ என்ற ஸர்க்கமாகும்.

அகஸ்திய முனிவர் ஶ்ரீ ராமரிடம் ராவணனும் அவனது சகோதரர்களும் பெற்ற வரம் பற்றி விளக்க ஆரம்பித்தார். அவர்களில் கும்பகர்ணன் பெற்ற வரத்தைப் பற்றி அவர் விளக்கமாக எடுத்துரைத்தார்.

விபீஷணனுக்கு வரம் அளித்த பின்னர் பிரம்மா கும்பகர்ணனுக்கு வரம் அளிக்கச் சித்தமானார். அப்போது தேவர்கள் எல்லோரும் பிரம்மாவை நோக்கி, “கும்பகர்ணன் துஷ்ட மனத்துடன் உலகங்களை எவ்வளவு நடுங்க வைத்திருக்கிறான் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இந்திரனுடைய நந்தவனத்தில் ஏழு அப்ஸரஸ்களும், மஹேந்திரனது பரிவார ஜனங்கள் பதின்மரும், மானிடப் பெரியோர்களும், ரிஷிகளும் இவனால் புசிக்கப்பட்டிருக்கின்றனர். ஆகவே இவனுக்கு வெளித்தோற்றத்திற்கு  வரம் போல இருக்கும் ஒன்றால் அவனது அறிவு சற்று இழந்திருப்பது போன்ற வரத்தை அருள வேண்டும். இதனால் உலகங்கள் அனைத்திற்கும் நன்மை உண்டாகும்” என்று வேண்டினர்.

உடனே பிரம்மா தனது பத்தினியான சரஸ்வதியை மனதில் நினைத்தார். உடனே சரஸ்வதி தேவி அவர் முன்னால் வந்து கை கூப்பி என்ன செய்ய வேண்டும் என்று வேண்டினாள்.

பிரம்மா சரஸ்வதியை நோக்கி, “ஹே! வாணி! தேவர்கள் வேண்டிக் கொண்டபடி நீ கும்பகர்ணனின் நாக்கில் புகுந்து நடத்து” என்றார்.

தேவியும் சரி என்று சொல்லி விட்டு அமைந்தாள். உடனே பிரம்மா, கும்பகர்ணனைப் பார்த்து, “மஹாபாஹுவாகிய கும்பகர்ணா! எது மனதில் இருக்கிறதோ அந்த வரத்தைக் கேட்பாயாக” என்றார்.

கும்பகர்ண மஹாபாஹோ வரம் வரய யோ மத: |

உத்தரகாண்டம், பத்தாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 44

மஹாபாஹோ – மஹாபாஹுவாகிய                               கும்பகர்ண – கும்பகர்ணா!                                                 ய: – எது                                                                மத: – மனதில் இருக்கிறதோ                                              வரம் – அந்த வரத்தை                                                      வரய – கேட்டுக்கொள் (என்றார்)

உடனே கும்பகர்ணன், “தேவதேவரே! அநேக வருஷங்கள் துயில் கொள்ள எனது கருத்து” என்றான்.

ஸ்வப்னம்து வர்ஷான்யனேகானி தேவதேவ மமேப்ஸிதம் |

உத்தரகாண்டம் பத்தாவது ஸர்க்கம் ஸ்லோக எண் 45

தேவதேவ – தேவதேவரே                                              அநேகானி – அநேக                                                  வர்ஷானி – வருஷங்கள்                                             ஸ்வப்னம்து – துயில்கொள்ள                                            மம – எனது                                                              ஈர்ஷிசதம் – கருத்து

உடனே பிரம்மா ஏவம் அஸ்து – அப்படியே ஆகுக என்று வரத்தை அளித்து விட்டு அந்தர்தானமானார்.. ஸரஸ்வதி தேவியும் அகன்றாள்

கும்பகர்ணன் மனம் நொந்து, “என் வாயிலிருந்து வந்த சொல் ஏன் இப்படி ஆகியிருக்கிறது” என்று நினைத்தான்.

இது கும்பகர்ணன் கேட்டுப் பெற்ற வரமாகும்.

**

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 70; இந்து மத கலைச்சொல் அகராதி-70 (Post No.15,829)

HINDU MUDRAS IN EGYPT

Written by London Swaminathan

Post No. 15,829

Date uploaded in London –4 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மோதக/ம்

தமிழில் கொழுக்கட்டை என்று பொருள்; விநாயகரின் கையில் , அதாவது பிள்ளையார் கையில், இருப்பது இந்த தின்பண்டம் . பிள்ளையார் சதுர்த்தி/கணேஷ் சதுர்த்தி பண்டிகையின் போது இதைச் செய்து பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்வார்கள் ; அவருக்கு மிகவும் பிடித்த பண்டம் இது. வேகவைத்த அரிசி மாவினாலான பை போன்ற உறைக்குள் தேங்காய்ப் பூரணம் அல்லது வெல்லம் கலந்த பருப்பினை வைத்து நீராவியில் வேக வைப்பார்கள் ; பின்னர் இறைவனுக்குப் படைத்துவிட்டு இதைச் சாப்பிடலாம்; மகாராஷ்டிரா, தமிழ் நாடு மாநிலங்களில் இப்போதும் இதைச் செய்கிறார்கள்  .

இதில் வேகவைத்த மாவினை கோலிக்குண்டு அளவுக்கு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கடுகு பருப்பு மிளகாய் தாளித்து செய்வதை ஊமைக் கொழுக்கட்டை என்பார்கள் ; அந்த உருண்டைகளை காரம் கலக்காமல் சர்க்கரை போட்ட பாலில் போட்டு சாப்பிடுவது பால் கொழுக்கட்டை எனப்படும். வேக வைத்த மாவிலான பைக்குள் வெல்லம் கலந்த தேங்காய்ப் பூரணத்துக்குப் பதில், காரம் நிறைந்த உளுத்தம் பருப்பு முதலியவற்றை வைத்தும் செய்யலாம். இது நைவேத்தியத்து உகந்தது அல்ல ; ருசிக்காகச் செய்யப்படும் தின்பண்டம்தான்.

மோதகம் என்ற சொல் வால்மீகி ராமாயண யுத்த்த காண்டத்தில் வருகிறது ;பத்ம புராணத்தில் கணபதிக்குப் படைக்கும் பொருள்காவே வருகிறது .

Vālmīki-Rāmāyaṇa Yuddhakhaṇḍa 131.38

Modaka (मोदक) refers to a type food-stuff used in the worship of Gaṇeśa, according to the Padmapurāṇa 1.65

***

மோக்ஷ/ம் முக்தி வீடுபேறு

ஜன மரண , அதாவது பிறப்பு இறப்பு, என்ற சூழலிலிருந்து விடுபடுவது வீடுபேறு ; சம்ஸ்க்ருதத்தில் இதை முக்தி என்பார்கள் ; இந்துக்களின் வாழ்க்கை நான்கு லட்சியங்களைக் கொண்டது; அவையாவன- தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் ; அதாவது அறம், பொருள், இன்பம், வீடு ; இது தொல்காப்பியம், புறநானூறு திருக்குறள் முதலிய நூல்களிலும் சொல்லப்பட்டுள்ளது. இந்துக்களின் இறுதி லட்சியம் மோக்ஷம்; இதை தேவார திருவாசக திவ்யபிரபந்தப் பாடல்களிலும் பஜனைப் பாடல்களிலும் இந்துக்கள் வேண்டிக் கொள்கிறார்கள்; புத்த, சமண, சீக்கிய மதக் கோட்பாடுகளிலும் இது இருக்கிறது ; பிறவிப் பெருங்கடலிலிருந்து- சம்சார சாகரத்திலிருந்து- விடுபடுவது விடுதலை ஆகும். 

***

மூகாம்பிகை

சரஸ்வதி தேவியின் இன்னும் ஒரு வடிவம்; இந்த தேவியின் கோயில் கர்நாடக மாநிலத்தில் கொல்லூர் என்னுமிடத்தில் உளது ; துர்கா, லெட்சுமி , சரஸ்வதி, ஆகியோரின் மூலமான ஆதி பராசக்தி என்றும் சொல்லுவார்கள் ; மூகாசுரனை  வதைத்ததாலும், மூகம் என்னும் ஊமைத்தன்மையைப் போக்குவதாலும் இந்தப் பெயர் . ஆதி சங்கரர் இவரை ஸ்தாபித்ததாகவும் கதை ஒன்று உள்ளது; ஆதிசங்கரர் வழிபட்ட தேவியை அவர் கேரளத்துக்கு அழைத்ததாகவும், அவர் திரும்பிப்பார்க்காமல் இருந்தால் அவரைப் பின்தொடர்ந்து வருவதாகவும் தேவி வாக்கு அளித்தாள்; அவரது நம் பிக்கையைச் சோதிக்க, தேவி ஓரிடத்தில் நின்றாள் ; காலடிச் சலங்கை ஒலி கேட்டகவில்லையே என்று சங்கரர் திரும்பிப் பார்க்கவே தேவி அங்கேயே நின்றுவிட்டாள். அந்த இடத்தில் அவளது விக்கிரகத்தையும் ஸ்ரீ சக்கரத்தையும் அவர் நிறுவினார் என்பது அந்தக் கதை  ஆகும்  . எம் ஜி ராமச்சந்திரன் , ஜெயலலிதா போன்ற அரசியல் தலைவர்கள் வைர வாள், தங்கக் கவசம் முதலியவற்றைக் காணிக்கையையாகச் செலுத்தியதால் தமிழ்ப் பாமரர்களுக்கு இடையேயும் இவள் புகழ் பரவியது.

***

மூக கவி

மூக கவி (Mooka Kavi) என்பவர்பிறவியிலேயே ஊமை; பின்னர்  காமாட்சி தேவியின் அருளால் பேசும் திறனைப் பெற்றமகான் ஆவார்.  காஞ்சி காமாட்சி அம்மன் மீது 500 ஸ்லோகங்களைக் கொண்ட  மூக பஞ்சசதீ என்ற ஸ்தோத்திரத்தை இயற்றினார்  ‘மூகன்’ என்றால் ஊமை என்று பொருள். , தேவியின் அழகை வருணிக்கும் இந்த புகழ்பெற்ற,அற்புத நூலைப் படைத்தார்.மூக பஞ்சசதீ மொத்தம் ஐந்து பாகங்களைக் கொண்டுள்ளது:ஆர்யா சதகம்: அம்பிகையின் மேன்மைகளை விவரிக்கும் 100 ஸ்லோகங்கள்.பாதாரவிந்த சதகம்: காமாட்சியின் திருவடித் தாமரைகளை வர்ணிக்கும் 100 ஸ்லோகங்கள்.ஸ்துதி சதகம்: அம்பிகையைத் துதிக்கும் 100 பாடல்கள்.கடாக்ஷ சதகம்: தேவியின் கருணைக் கடாட்சத்தைப் போற்றும் 100 ஸ்லோகங்கள்.மந்தஸ்மித சதகம்: அம்பாளின் புன்னகையை விவரிக்கும் 100 ஸ்லோகங்கள். இவர் மூக சங்கர (398-437 CE) என்ற பெயரில் காஞ்சி சங்காராச்சார்ய மடத்தின் இருபதாவது மடாதிபதியாக இருந்தார் என்று மடத்தின் வரலாறு இயம்புகிறது ; அவரை காஷ்மீர் அரசர்கள் மாத்ரு குப்தா, பிரவர சேனன் ஆகியோரும் போற்றினார்கள்

***

முசுகுந்தன்

இந்தியாவின் வடமேற்குப்பகுதியை ஆண்ட சூரிய குல மன்னர்கள் தமிழ்நாட்டுக்கு குடியேறி சோழ வம்சஆட்சியை  ஸ்தாபித்தார்கள். அவர்களுடைய முன்னோர்களில் ஒருவன் முசுகுந்தன்.மாந்தாதாவின் மகனான முசுகுந்தன் என்னும் சோழன் இந்திரனின் தலைநகரான அமராவதியைக் அசுரரிடமிருந்து காத்தான் என்றும் அதற்கு நன்றி தெரிவிக்கும் முகத்தான் காவல் பூதமும் ஐவகை மன்றமும் அனுப்பிவைத்தான் என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது (5-65/67; 6-7/17)

சோழ மன்னர்கள் திலீபன், அரிச்சந்திரன், மாந்தாதா, முசுகுந்தன், நாபாகன், காகுத்தன், பகீரதன், தசரதன், ராமன் முதலியோர் தங்கள் குலத்தவர் என்று கூறிக்கொள்வதை கன்யாகுமரிக் கல்வெட்டும், திருவாலங்காட்டுச் செப்பேடும், கலிங்கத்துப் பரணியும், மூவர் உலாக்களும் கூறுவதைக் காணலாம்.

இமயத்தில் சின்னம் பொறித்தது, மஹாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு உதவியது, இந்திரனுக்குச் சமமாக ஆசனத்தில் அமர்ந்தது ஆகியவற்றை மூவேந்தர்களும் தாங்கள் செய்ததாகக் கூறிக்கொள்கின்றனர்.

மாந்தாதா என்ற சோழன் ஒரே துறையில் புலியும் மானும் நீருண்ணும்படி பகை நீக்கி ஆண்டான் என்றும், ஒரு சோழன் உத்தரகுரு என்னும் போகபுரியை ஆண்டான் என்றும் தமிழ் நூல்கள் கூறுகின்றன.

தமிழர்களின் ஆட்சி அவ்வளவு தூரம் பரவியிருந்தது என்று சொல்ல முயலலாம். ஆயினும் பெயர்கள் எல்லாம் சம்ஸ்கிருதத்தில், புராணத்தில் உள்ள மன்னர் பெயர்களாக இருக்கின்றன.

புறநானூற்றின் பாடல் 37, 39, 43, 46, 228 ஆகியவற்றில் சோழர்களின் முன்னோடியாக சிபிச் சக்ரவர்த்தி கூறப்படுகிறான். சிபிச் சக்ரவர்த்தியின் கதை புராண, இதிஹாசங்களிலும் பவுத்த ஜாதகக் கதைகளிலும் வருகிறது. ஒரு புறாவுக்காக தன்னையே தராசில் நிறுத்தவன் அவன். தியாகத்தின் சின்னம் அவன். மஹாபாரதம் வன பர்வத்தில் வரும் (அத்தியாயம் 200) வரும் சிபி- கழுகு, புறாக் கதையை சங்க இலக்கியம் அப்படியே கூறுகிறது.

சிபியின் வழித்தோன்றல் என்பது சம்ஸ்கிருதத்தில் ‘சைப்ய’ என்று வரும். அதைத் தமிழில் செம்பியன் என்று தமிழ்படுத்தினர். அகநானூறு பாடல் 36, நற்றிணைப் பாடல் 14 ஆகியவற்றில் சோழர்கள் செம்பியன் என்றே அழைக்கப்படுகிறான். வடமொழி ஆசிரியர்கள் தண்டி, வராஹமிகிரர் ஆகியோரும் சோழர்களை சிபியின் குடியினராகவே கருதுவர். அமராவதி, நாகார்ஜுனகொண்டா, பர்ஹுத், இந்தோநேசியாவில் போரோபுதூர் புடைப்புச் சிற்பங்களில் சிபியின் கதைகள் சித்திர வடிவம் பெற்றன.

சிபி குலத்தை ரிக்வேதமும் ,ஐதரேய பிராமணமும் குறிப்பிடுகின்றன. குறைந்தது 3500 ஆண்டுக்கு முந்தியவர்கள் சிபி குலத்தினர்.

***

முத்கல்ய ரிஷி

மௌத்கல்யர் (அல்லது முத்கலர்) என்பவர் இந்து புராணங்களின்படி நளாயினியை மணந்த ஒரு புகழ்பெற்ற முனிவர் ஆவார். வறுமையிலும் இறையச்சத்துடன் வாழ்ந்து, மோட்ச நிலையை அடைவதில் தேர்ச்சி பெற்றவர்.மௌத்கல்ய நளாயினி (இந்திரசேனை) என்ற பதிவிரதையான பெண், தன் கணவரான மௌத்கல்ய முனிவரை ஒரு கூடையில் சுமந்து சென்றதாக புராணங்கள் கூறுகின்றன. மௌத்கல்ய முனிவரின் வழித்தோன்றல்களே மௌத்கல்ய பிராமணர்கள் ; மேலும், சௌராட்டிர சமூகத்தின் பண்டைய கோத்திரங்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த ரிஷியைச் சோதிக்க ஒரு முறை கோபக்கார ரிஷி  துர்வாசர் வந்து சாப்பிட உட்கார்ந்தார்; அவர் யாரோ ஒரு யாசகர் (பிச்சை எடுப்பவர்) போல வந்தார் கடோத்கஜன், பீமன் போல வீட்டிலிருந்த எல்லாவற்றையும் சாப்பிட்டுத் தீர்த்தார். இவ்வாறு ஆறு முறை செய்தார் ; அப்போதும் முத்கல்யர் மலர்ந்த முகத்துடன் அன்னமிட்டார் . துர்வாசரும் மனம் மகிழ்ந்து தன்னுடைய உண்மை வடிவத்தை வெளிப்படுத்தினார் . அதே நேரத்தில் முத்கல்யரை அழைத்துச் செல்ல ஒரு புஷ்பக விமானம் SPACE SHUTTLE ஸ்பேஸ் ஷட்டில் வந்தது; தேவலோகத்துக்கு வரும்படி தேவர்கள் அழைத்தனர் ; இதில் என்ன நிபந்தனைகள் என்று ரிஷி கேட்டார் ; உங்கள் புண்ணியம் தீரும் வரை நீங்க தேவலோக இன்பங்களை அனுபவிக்கலாம் என்று பதில் சொன்னார்கள் ; அப்படியா போய் வாருங்கள்; நான் சொர்க்கத்துக்கு வரவில்லை மீண்டும் நீண்ட தவம் செய்கிறேன் என்றார் ;  எந்த இடத்தில் நிரந்தர சுகம் உண்டோ, எந்த இடத்திலிருந்து நாம்  பிறப்பெடுக்க பூமிக்கு வருவதில்லையோ அதற்காக நான் தவம் செய்வேன் என்றும் சொல்லி விமானத்தை திருப்பி அனுப்பிவிட்டார்; இந்த சம்பவம் மஹாபாரத வனபர்வத்தில் உள்ளது .

***

முத்ரா / முத்திரை

BUDDHA COPIED HINDU RISHIS; HE NEVER REMOVED TILAK OR HIS SACRED THREAD.

முத்திரை என்பது விரல்கள், கைகள் மூலம் காட்டும் சமிக்ஞை ஆகும். இது உடலின் சக்தியை வழிப்படுத்தும் முறை அல்லது அதை அதிகரிக்கும் முறை ஆகும். அதுமட்டுமல்ல அதில் அக்குபிர்ஷர் ACUPRESSURE எனப்படும் உத்தியும் உளது; உடலில் சிலபகுதிகளுக்கு அழுத்தம் கொடுத்தால் அது ஞானம் பெறுவதற்கான நரம்புகளைச் சுண்டி விடும்.

முத்திரைகள் நாட்டியம் முதல்பூஜைகள் வரை பல இடங்களிலும் பயன்படுகின்றன. நாமும் கூட சாலைகளில் போலீஸ்காரகள் காட்டும் முத்திரைகள், காதுகேளாதோருக்கான முத்திரைகளைத் தினமும் காண்கிறோம். தியானத்தில் பயன்படுத்தும் முத்திரைகள் உயர்ந்த வகை முத்திரைகள். ரஹஸியப் பயன்பாடுள்ளவை.

பிராஹ்மணர்களும் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியா வந்தனத்தில் முத்திரைகளைப் பயன்படுத்துவர். பதஞ்சலி யோக சாத்திரம் முதலியன முத்திரைகள் பற்றிப் பேசுகின்றன. இந்துக் கடவுளர் அபய முத்திரை அல்லது வரத முத்திரையுடன் காணப்படுவர். ஆக நம்மிடம் உள்ளவற்றை பௌத்தர்களும் ஏற்று அவைகளைப் பயன்படுத்தினர்.

முத்ரா விதானம்’ என்னும் ஸம்ஸ்க்ருத நூல் சுமார் 130 முத்திரைகளை வரை படத்துடன் காட்டுகிறது. இதை ராமகிருஷ்ண மடம் (மயிலாப்பூர், சென்னை) தமிழிலும் வெளியிட்டுள்ளது. அதன் மூன்று ஸ்லோகங்கள் முத்திரையின் பயன்பாட்டை (பூஜைகளில்) விளக்குகிறது. இதோ அவை:-

1.எல்லா தேவர்களையும் மகிழ்விப்பதாலும் பாவத் தொடர்பைப் போக்குவதாலும் (மோதனாத், த்ராவணாத்) முத்திரை என்று சொல்லப்படும். அது எல்லாக் காமங்களையும் அர்த்தங்களையும் (செல்வம்) தருவதாகும்.

2.தந்திரங்களில் எல்லாம் கற்பிக்கப்பட்ட முத்திரைகளை இனி கூறுவோம். அவைகளைக் காட்டுவதால் மந்திர தேவதைகள் ப்ரீதி அடைவார்கள் .

3.அர்ச்சனை, ஜபம், தியானம் முதலியவற்றிலும் காமிய கர்மங்களிலும், ஸ்நானம், ஆவாஹனம், சங்கப் பிரதிஷ்டை, ரக்ஷணம், நைவேத்யம் இன்னும் பிறவற்றிலும் அந்தந்தக் கல்பங்களில் கூறப்பட்ட முத்திரைகளை உரிய ஸ்தானங்களில், உரிய லக்ஷணங்களுடன் கண்டுகொள்ள வேண்டும்.

இதன் பின்னர் 11 தலைப்புகளில் முத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆக இவை அனைத்தும் நாம் கண்டு பிடித்து வளர்த்தவை என்பது தெளிவு:-

ஸ்ரீ குருவந்தன முத்திரைகள்அர்கியஸ்தாபன முத்திரைகள்அர்ச்சனையில் ஆவாஹனாதி முத்திரைகள்நியாஸ முத்திரைகள்ஸ்ரீவித்யா பத்து முத்திரைகள்நிவேதன முத்திரைகள்காயத்ரீ முத்திரைகள்கணேச முத்திரைகள்சிவ முத்திரைகள்விஷ்ணு முத்திரைகள்நானா முத்திரைகள்முத்திரைகளின் அகராதி

புத்தர் ஒரு ‘பக்கா’ ஹிந்து. அவர்  ஹிந்துவாகப் பிறந்து இந்துவாகவே வாழ்ந்தார் என்பது அவருடைய சிலைகளில் இருந்தும் பிறகாலத்தில் புத்த மதத்தினர் செய்த செயல்களில் இருந்தும் தெரிகின்றது.அவர் முகத்தில் பெரிய பொட்டு/ திலகம் இருக்கும்; தோளில் பூணுல் தொங்கும் ; இந்தோனேஷியா நாட்டில் ஜாவா தீவில் போரோபுதூரில் உள்ள புத்தர் சிலைகளில் அவர் மந்திர சக்தியுள்ள முத்திரைகளைப்  பயன்படுத்தி அபூர்வ சக்திகளைப் பெற்றதை ஒரு ஜெர்மானியர் படங்களுடன் வெளியிட்டுள்ளார் .

பரத நாட்டிய சாஸ்திரத்திலுள்ள 108 முத்திரைகள் சிதம்பரம் முதலிய கோவில்களில் சிற்ப வடிவங்களில் செதுக்கப்பட்டுள்ளன உள்ளன

பழங்கால எகிப்திய சிலைகளில் தியான முத்திரை உள்ளது அபய முத்திரையும் உள்ளது புத்தர் சிலைகளைப் போல பல முத்திரைகளை காட்டும் சிலைகளும் உள்ளன (இது பற்றி நான் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுரைகளை எழுதி அது புஸ்தகமாகவும் வந்துள்ளது )

***

முரளீதரன்

கிருஷ்ணனின் பெயர் ; புல்லாங்குழலைத் தாங்கியவன் என்று பொருள்  . மாடு மேய்க்கும் கண்ணனாக வலம் வந்தபோது, குழல் ஊதி மக்களையும் மாக்களையும் மயக்கிய வேணுகால லோலன் என்பதால் இந்த வடிவத்தில் கிருஷ்ணனின் படங்களும் பொம்மைகளும் சிலைகளும் எங்கும் காணப்படுகின்றன.

***

முருகன்

DR A NARAYANAN , SYDNEY, HAS TAKEN THIS PICTURE

தமிழ்க்கடவுள் என்ற சிறப்புப்பெயர் முருகனுக்கு உண்டு ஏனெனில் அகஸ்திய முனிவருக்கு முருகன் தமிழ் மொழியைக் கற்பிக்கஅவர் முதல் இலக்கணத்தை எழுதினார் இதை அருணகிரி நாதர் முதல் பாரதியார் வரைப் பாடிப் பரவியள்ளனர்.

முருகன் என்றால் அழகன் என்று பொருள்.

ஏனைய பெயர்கள் ; ஸ்கந்தன், கார்த்திகேயன், விசாகன், ஆறுமுகன், ஷண்முகன் ,குகன், குறிஞ்சிக் கிழவன்

யாதேயர் காலத்திலிருந்து ஆறுமுகங்களுடன் நாணயங்களில் காணப்படுகிறார் .

ஸ்கந்தன்-விசாகன் பொம்மைகள் விற்கப்பட்டதை பதஞ்சலி மகாபாரஷ்யம் குறிப்பிடுகிறது;

காளிதாசன் எழுதிய குமார சம்பவ காவியத்தால் ஈர்க்கப்பட்டு வைஷ்ணவர்களான குப்தப் பேரரசர்களும் தங்களுடைய புதல்வர்களுக்கு ஸ்கந்த குப்தன், குமார குப்தன் என்ற  பெயர்களைச் சூட்டினார்கள்

தொல்காப்பியத்தில் சேயோன் ஆகத் தோன்றுகிறார்; சங்க கால திருமுருகாற்றுப்படை முதல் அண்மைக்கால அவ்வையார் அருணகிரிநாதர் வரை பாடப்பட்டுள்ளார்

மாயோன் மேய காடுறை உலகமும்,

சேயோன்  மேய மைவரை  உலகமும்,

……………… தொல்காப்பியம்

தமிழ் நாட்டில் அறுபடை வீடுகள் எனப்படும் கோயில்களுக்கு நாள்தோறும் பல்லாயிரம் மக்கள் சென்று வழிபடுகின்றனர்

அறுபடை வீடுகள்: திருப்பரங்குன்றம்திருச்செந்தூர்பழனிசுவாமிமலைதிருத்தணி மற்றும் பழமுதிர்சோலை

மனைவியர் – வள்ளி, தேவசேனை ;

வாகனங்கள்- மயில், பிணிமுகம் என்னும் யானை;

கொடி- சேவல், மயில் கொடிகள்;

சடங்குகள் – பால் குடம், காவடி;

பிடித்த நைவேத்தியம் – பஞ்சாமிர்தம்;

கொன்ற அசுரர்கள்- தாரகாசுரன், சூரபத்மன் ;

***

மூலாதாரம்  

மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம்,

விசுத்தி, ஆக்ஞா,  ஸஹஸ்ராரம் என்று ஏழு சக்கரங்கள் உடலில் உண்டு என்று யோகசாஸ்திரங்கள் பகர்கின்றன .குண்டலினி சக்தி பாம்பு வடிவத்தில் மூலாதாரத்தில் உறைந்து கிடக்கும்; அதை மூச்சுப் பயிற்சிகளினால் — அதாவது பிராணாயாமத்தினால் –தலைக்குக் கொண்டுபோகும்போது பிரம்மானந்தம்/ பேரானந்தம் என்னும் சமாதி நிலை கிட்டும்; பாதி வழி போவதற்குள் அற்புத சக்திகள் தோன்றும்; அந்த நிலையில் மண், பெண்,பொன் ஆசைகளில் சிக்கி பாதி சாமியார்கள் சிறைச் சாலைக்குப் போய்விடுவார்கள் . தப்பித் பிழைப்பவர்கள் ராமகிருஷ்ணர், ரமணர் போல அழியாத புகழ் பெறுவார்கள்

உடலிலுள்ள சக்கரங்கள் : மனித உடலில் ஆற்றல் மையங்களாக ஏழு முக்கிய சக்கரங்கள் (மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராரம்) விளங்குகின்றன. இந்த சக்கரங்களைச் சீரமைப்பதன் மூலம் ஆரோக்கியம், மன அமைதி மற்றும் ஆன்மீக விழிப்புணர்வு மேம்படுவதாகத் தமிழ் மற்றும் வேத இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

மனத்தின் ஏழு நிலைகள்

ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுகிறார்: மனம் உலக விஷயங்களைச் சிந்திக்கும் போது லிங்கம், குஹ்யம், நாபி எனும் மூன்று ஸ்தானங்களில் சஞ்சரிக்கும்.. அந்த நிலையில் உயர்ந்த மனோ பாவங்கள் எழுவதில்லை. காமினி காஞ்சனத்திலேயே அழுந்திக் கிடக்கும் (காமினி காஞ்சனம்= பெண் ஆசை, தங்கம்/செல்வம்/பணம் மீது ஆசை).

மனத்தின் நான்காவது ஸ்தானம் இருதயம். இந்த இடத்துக்கு மனம் வரும்போது முதன் முதலில் ஆத்ம எழுச்சி உண்டாகிறது. இந்த நிலையில் மனமானது பெண்ணாசை, பொன்னாசைகளில் ஒருபோதும் செல்வதில்லை.

மனத்தின் ஐந்தாவது ஸ்தானம் கழுத்து. அங்கு வரும்போது அஞ்ஞானம் எல்லாம் அகல்கிறது. ஆறாவது ஸ்தானம் புருவ மத்தி. அங்கு வரும்போது இரவும் பகலும் இறைவனின் திவ்ய தரிசனமே தென்படுகிறது.

தலைதான் மனத்தின் ஏழாவது நிலை. அங்கு சமாதி உண்டாகிறது. தன் நினைவே கிடையாது. உலக வியாபாரங்கள் அனைத்தும் அறவே ஒழிந்து பரமானந்தம் கிட்டுகிறது.

இந்த ஏழு ஸ்தானங்களே யோக நூல்களில் மூலாதாரம், ஸ்வாதி ஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, ஸஹஸ்ராரம் என்று கூறப்படுகின்றன.

***

மூல நட்சத்திரம்

இது 27 நட்சத்திரங்களில் ஒன்று திருமூலரும் சங்க காலப் புலவர் மாமூலனும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்று சொல்லலாம் ஆண் மூலம் அரசாளும் என்ற பழமொழி தமிழில் உள்ளது

இதோ 27 நட்சத்திரங்களின் பெயர்கள் :–

அசுவினி = பரி, புரவி, வாசி, ஐப்பசி, இரலை, புரவி, ஏறு, யாழ், தலை நாள், மருத்து நாள், சென் பூதம், குதிரை

பரணி = காடுகிழவோன், தாழி, அடுப்பு, முக்கூட்டு, வேழம், சோறு, பகடு, பகலவன், தாசி

கார்த்திகை = அறுமீன், அழல், ஆரல், அளக்கர், எரி, அங்கி, ஆல், ஆறாமீன், அறுவாய், நாவிதன், அளகு, இறால், நாடன், வாணன், தழல்

ரோகிணி = பண்டி, மாட்டு வண்டி, உருள், வையம், ஊறல், பிரமநாள், சதி, அயன் நாள், தேர், விமானம், சகடம் (அகம் 86),

(சங்க காலத் தமிழர்கள் சகடம்/ரோகிணி நட்சத்திரம் அன்றுதான் கல்யாணம் செய்வர் என்று அகநானூறு கூறுகிறது. )

மிருகசீரிடம் = மான் தலை, மாழ்கு, மும்மீன், நரிப்புறம், பாலை வெய்யோன்.

திருவாதிரை = செங்கை, யாழ், சடை, இறைநாள் (வடமொழியில் ஆருத்ரா), மூதிரை,ஈசன் தினம்

27 நட்சத்திரங்களில் இரண்டே நட்சத்திரங்களுக்கு மட்டுமே (திரு+ஆதிரை, திரு + ஓணம்) திரு என்ற சிறப்பு அடைமொழி உண்டு. இது பற்றி காஞ்சி மஹா ஸ்வாமிகள் ஆற்றிய சொற்பொழிவினைப் படிக்க)

புனர்பூசம் = கழை, கரும்பு, ஆவனம், ஏரி, அதிதி நாள், பிண்டி, மூங்கில், பாலை;

பூசம் = கொடிறு, வண்டு, காற்குளம், வியாழன் நாள் (புஷ்ய, திஷ்ய என்ற பெயர்கள் உண்டு), அண்டம், குருவின் நாள்;

ஆயில்யம் (ஆஸ்லேஷா) = அரவு நாள், கௌவை, பாம்பு;

மகம் = வேள்வி, வேட்டுவன், கொடுங்கம், வாய்க்கால், மாசி, முதலில் வரும் சனி, பிதிர் நாள், எழுவாயெழுஞ்சனி (திவாகர நிகண்டு)

பூரம் (பூர்வ பல்குனி) = எலி, கணை, இடை எழும் சனி, துர்க்கை, பகவதி, நாவிதன்;

உத்தரம் = மானேறு, கதிர்நாள், கடை எழும் சனி, பாற்குனி, மாரி நாள்;

அத்தம் (ஹஸ்த) = ஐவிரல், கைம் மீன் , களிறு காமரம், அங்கிநாள், கௌத்துவம், நவ்வி, கயினி

சித்திரை =நெய்ம்மீன், பயறு, அறுவை, நடுநாள், ஆடை, தூசு, சுவை, தச்சன், துவட்டா நாள், நேர்வான்;

சுவாதி = விளக்கு, வீழ்க்கை, வெறுநுகம், மரக்கால், காற்றினாள், முத்து, பவள, சோதி, அனில், காற்று;

விசாகம் = முறம், முறில், சுளகு, காற்றினாள், வைகாசி, அனில நாள், சேட்டை;

அனுஷம் = பனை, புள்தேள், நட்புநாள், புல், தாளி, பெண்ணை, தேள், போந்தை, மித்திர நாள்;

கேட்டை(ஜேஷ்டா) = தழல், துளங்கொளி,  வல்லாரை, இந்திரன் நாள், சேட்டை, வேதி, எரி, பின்று;

மூலம் = அன்றில்வில்குருகுகொக்குதேட்கடைசிலைஆனிஅசுர நாள்;

பூராடம் (பூர்வாஷாட) = உடைகுளம், முற்குளம், நீர்நாள்;

உத்திராடம் = ஆடி, கடைக் குளம், ஆனி, விச்சுவ நாள்;

சித்திரை (ஸ்பைகா) நட்சத்திரம்;

திருவோணம் = முக்கோல், உலக்கை, மாயோன் நாள், முக்கோல், சிரவணம், சோணை, வயிரம்;

அவிட்டம் (தனிஷ்டா) = பறவை, காக்கை, வசுக்கள் நாள், புள், ஆவணி

சதயம் (சதபிஷக்) = நீர்நாள், செக்கு, குன்று, போர், சுண்டன், வருணன் நாள்;

பூரட்டாதி = நாழி, முக்கொழுங்கோல் (பூர்வ ப்ரோஸ்தபத), புரட்டை

உத்திரட்டாதி = மன்னன், அறிவன் நாள், பிற்கொழுங்கோல் (உத்திரப் ப்ரோஸ்தபத);

ரேவதி = இரவி நாள், கலம், தோணி, நாவாய், தொழு, பஃறி, ஆ நாள், கடை நாள், சூலம், பெரு நாள், பூடா நாள், கடை மீன்;

என் கருத்துக்கள்:

ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் உரிய வேத கால தெய்வங்களின் பெயர்கள் இப்பட்டியலில் உள.

சில விண்மீன்களின் பெயர்கள் வேறு பல விண்மீன்களுக்கும் வரும்.

பல பெயர்கள் போலக் காணப்பட்டாலும் அவை எல்லாம் ஒருபொருள் குறித்த பல சொற்களே. எடுத்துக்காட்டாக தீ என்பதற்கான — அங்கி, அழல், தழல், எரி போன்ற பல சொற்களால் — கார்த்திகை நட்சத்திரம் குறிக்கப்படுவதைக் காண்க. ஆகவே பட்டியலைச் சுருக்க முடியும்.

மேலும் வட நாட்டில் நீண்ட காலமாக 27 நட்சத்திரங்களுக்கும் போடும் படமும் பல சொற்களும் ஒரே மாதிரி இருக்கின்றன.

பல நட்சத்திரங்கள், சில கிரகங்களுடனும், சில மாதப் பெயர்களுடனும் தொடர்பு படுத்திருப்பதை நோக்குக.

இதோ ஆங்கிலப் பெயர்கள்:–

1) Ashwini –Alpha, Beta –Aries அஸ்வினி

2) Bharani – No 28,29,41 Taurus பரணி

3) Krittika – Pleiades கார்த்திகை

4) Rohini – Aldebaran Hyades, Alpha, Theta, Gama, Delta and Epsilon Taurus ரோஹிணி

5) Mrigashirsha – Lambda, Phi 1, Phi 2, Orion மிருகசீர்ஷம்

6) Aardraa –Betelgeaux – Alpha Orion திரு ஆதிரை

7) Punarvasu – Castor, Pollux with Procyon Alpha, Beta, Gemini-Alpha Canis Minor respectively புனர் பூசம்

8) Pushya – Gama, Delta and Theta of Cancer பூசம்

9) Ashlesha – Delta, Epsilon, Eta, Rho and Zeta Hydra ஆயில்யம்

10) Maagha – Regulus, Alpha, Ela, Gama, Zeta My and Epsilon Leonis மகம்

11) Poorva Phalkuni – Delta and Theta Leo பூரம்

12) Utra Phalkuni – Beta and 93 Leo உத்தரம்

13) Hasta – Delta, Gama, Eta, Virgo ஹஸ்தம்

14) Chitraa – Spica, Alpha Virgo சித்திரை

15) Swaati – Arcturus – Alpha Bootes ஸ்வாதி

16) Vishaakha – Alpha, Beta etc Libra விசாகம்

17) Anuraadha – Beta, Delta, Pi –Scorpia அனுஷம்

18) Jyestha – Antares Alpha, Sigma Tau Scorpio கேட்டை

19) Mula – Scorpio, tail stars மூலம்

20) Poorvaashadaa – Delta and Epsilon Sagittarius பூராடம்

21) Uttaraashaada – Zeta and Omicron Sagittarius உத்திராடம்

22) Shraavanaa – Altair – Alpha Aquila திரு ஓணம்

23) Dhanishtha – Delphinus அவிட்டம்

24) Shatabhisak – Lambda Aquarius சதயம்

25) Poorva Bhaadrapada – Alpha and Beta Pegasus பூரட்டாதி

26) Uttara Bhaadrapada – Gama Pagasus and Alpha Andromeda உத்திரட்டாதி

27) Revathi – Zeta Piscum ரேவதி

–Subham—

Tags – முருகன், மோக்ஷ, மூககவி,  முத்ரா , மூலம் ,மூல நட்சத்திரம் HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 70; இந்து மத கலைச்சொல் அகராதி-70, 27 நட்சத்திரங்களின் பெயர்கள்

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-44; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,828)

Written by London Swaminathan

Post No. 15,828

Date uploaded in London –4 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருச்செங்குன்றூர் (திருச்சிற்றாறு)

மலைநாட்டுத் திருப்பதி

Part 44

மூலவர் – இமையவரப்பன், நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்.

தாயார் – செங்கமலவல்லி.

தீர்த்தம் – சங்க தீர்த்தம், திருச்சிற்றாறு.

விமானம் – ஜகஜ்ஜோதி விமானம்.

ப்ரத்யக்ஷம் – ருத்ரன் (சிவன்)

     பாரத யுத்தத்தில் துரோணரைக் கொல்வதற்காக தர்மன் ஒரு பொய் கூறினான். அஸ்வத் தாமன் யானை இறந்துவிட்டது என்று சொல்ல வேண்டிய தர்மன் அஸ்வத்தாமன் என்ற சொல்லைப் பலமாக கூவி யானை என்ற சொல்லை மிக மெல்லிய சப்தத்தில் உச்சரித்தான். இதனால் போரில் துரோணாச்சாரி கொல்லப்பட்டார்.

தன் குருவான துரோணரை யுத்தத்தில் கொல்வதற்கு பொய் சொன்னது தர்மபுத்ரரின் மனதை வருத்தியபடியால், இத்தலத்திற்கு வந்து ஆலய ஜீர்ணோத்தாரணம் செய்து, திருசிற்றாற்றில் ஸ்நானமும் பகவத் பூஜையும் செய்து, மனநிம்மதி அடைந்ததாக வரலாறு. தர்மபுத்ரர் ஜிர்ணோத்தாரணம் செய்ததால், தர்மபுத்ரர் ப்ரதிஷ்டை என்பர்.

(அஸ்வத்தாமன் என்ற) யானை இறந்து விட்டது =”அச்வத்தாமா ஹத” என்று உரக்கச் சொல்லி “குஞ்ஜர” (Elephant) என்ற சொல்லை மிக மெல்லிய சப்தத்தில் உச்சரித்தான்).

தலபுராணம்: திருச்செங்குன்றுர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருச்சிற்றாற்று மகாவிஷ்ணு கோயில் எனவும் அழைக்கப்படுகிறது.

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலம் மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களுள் தருமரால் கட்டப்பட்ட தலம் எனக் கருதப்படுகிறது.

இக்கோயிலின் இறைவன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் இமையவரப்பன் என்ற பெயருடன் காட்சி தருகிறார். தருமன் இங்கு வருவதற்குப் பல்லாண்டு முன்பே இத்தலம் சிறப்புற்றிருந்தது எனலாம். இமையவர்கள் (தேவர்கள்) இங்கே குழுமியிருந்து திருமாலைக் குறித்து தவம் புரிந்தனர் என்றும் அவர்களுக்கு திருமால் இவ்விடத்து காட்சி தந்ததால் “இமையவரப்பன்” என்ற பெயர் இறைவனுக்கு உண்டாயிற்றென்றும் செவிவழிச் செய்திகளாகவே அறியமுடிகிறது.

***

  எங்கள் செல்சார்வு யாமுடையமுதம்         

         இமையவரப்பன் என்னப்பன்    

     பொங்கு மூவுலகும் படைத்தளித்தழிக்கும்         

        பொருந்து மூவுருவன் எம்மருவன்    

    செங்கயலுகளும் தேம்பனை புடைசூழ்    

         திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறு    

     அங்கு அமர்கின்ற ஆதியானல்லால்         

         யாவர் மற்று என் அமர்துணையே    

                      (3481) திருவாய்மொழி 8-6-2

     என்று நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருச்செங்குன்றூர் என்ற

பெயரில் சிறந்த நகரமாக விளங்குகிறது. செங்குன்றூர் என்றால்தான் யாருக்கும்; எளிதில் விளங்கும். திருவல்லாவில் இருந்து இவ்வூர் வழியாக திருவாறன்விளை திவ்யதேசமான ஆரமுளாவிற்குப் பல பேருந்துகள் செல்கின்றன.

     இங்குள்ள பேருந்து நிலையத்திலிறங்கி சிற்றாறு என்றோ அல்லது தர்மரால் கட்டப்பட்ட அம்பலம் எங்குள்ளது என்றால் எளிதில் பாதை காட்டிவிடுவார்கள். பேருந்து நிலையத்திலிருந்து நடந்தே வந்து நதியைக் கடந்து (தற்போது மேற்கு திசையில் சுமார் 2 பர்லாங் சென்றால் இத்தலத்தை அடையலாம்.]

மாநிலம்: கேரளம் மாவட்டம்: ஆலப்புழா

***    

     1. இந்த நகரத்தின் பெயர் செங்குன்றூர். இங்கே பாயும் நதியின் பெயர் சிற்றாறு. எம்பெருமானின் திருநாமம் இமையவரப்பன். தலைப்பிலிட்ட பாடலில் நம்மாழ்வார் மூன்று பெயர்களையும் எடுத்தாண்டுள்ளார்.

     2. இன்றும் இந்தச் சிற்றாறு ஒரு சிறு நதியாக ஓடிக்கொண்டிருக்கிறது.

பிரம்மாண்டமான கட்டிடமாக ஒரு காலத்தில் இத்தலம் இருந்திருக்க வேண்டும். தற்போது சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

     3. கோவிலின் சுற்றுப்பிரகாரங்களில் வர்ணம் கலந்த தீபங்கள்

அகல்விளக்கு போல வரிசை வரிசையாக அமைந்துள்ள காட்சி காண்பதற்கு பேரழகு வாய்ந்தது.

***

மங்களாசாஸனம் –

நம்மாழ்வார் – 3480-90 – 11 பாசுரங்கள்.

3596.  

வார்கடா அருவி யானை மாமலையின்*   மருப்புஇணைக் குவடுஇறுத்துஉருட்டி*

ஊர்கொள் திண்பாகன் உயிர் செகுத்து*  அரங்கின்  மல்லரைக்கொன்று சூழ்பரண்மேல்*

போர்கடா அரசர் புறக்கிட*  மாடம்மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த*

சீர்கொள்சிற்றாயன் திருச்செங்குன்றூரில்*   திருச்சிற்றாறு எங்கள் செல்சார்வே  (2) 

3597.  

எங்கள் செல்சார்வு யாமுடைஅமுதம்*   இமையவர் அப்பன் என்அப்பன்*

பொங்குமூவுலகும் படைத்துஅளித்துஅழிக்கும்*   பொருந்துமூவுருவன் எம்அருவன்*

செங்கயல் உகளும் தேம்பணைபுடைசூழ்*   திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு-

அங்கு அமர்கின்ற*  ஆதியான் அல்லால்*   யாவர்மற்றுஎன்அமர் துணையே?        

3598.  

என்அமர்பெருமான் இமையவர்பெருமான்*   இருநிலம் இடந்த எம்பெருமான்*

முன்னைவல்வினைகள் முழுதுஉடன்மாள*   என்னைஆள்கின்ற எம்பெருமான்*

தென்திசைக்கு அணிகொள் திருச்செங்குன்றூரில்*   திருச்சிற்றாற்றங்கரைமீபால்-

நின்றஎம்பெருமான் அடிஅல்லால் சரண்   நினைப்பிலும்*  பிறிதுஇல்லை எனக்கே.

3599.  

பிறிதுஇல்லை எனக்கு பெரியமூவுலகும்*   நிறையப்பேர் உருவமாய் நிமிர்ந்த*

குறியமாண் எம்மான் குரைகடல்கடைந்த*   கோலமாணிக்கம் என்அம்மான்*

செறிகுலைவாழைகமுகு தெங்கணிசூழ்*  திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு

அறிய*  மெய்ம்மையே நின்ற எம்பெருமான்*   அடிஇணை அல்லதுஓர் அரணே. 

3600.  

அல்லதோர் அரணும் அவனில் வேறுஇல்லை*   அது பொருள்ஆகிலும்*  அவனை

அல்லது என்ஆவி அமர்ந்துஅணைகில்லாது*   ஆதலால் அவன் உறைகின்ற*

நல்ல நான்மறையோர் வேள்வியுள்மடுத்த*   நறும்புகை விசும்புஒளி மறைக்கும்*

நல்ல நீள்மாடத் திருச்செங்குன்றூரில்*   திருச்சிற்றாறு எனக்கு நல்அரணே.

3601.  

எனக்கு நல்அரணை எனதுஆருயிரை*   இமையவர் தந்தைதாய் தன்னை*

தனக்கும் தன் தன்மை அறிவரியானை*   தடம்கடல்பள்ளி அம்மானை*

மனக்கொள்சீர் மூவாயிரவர்*  வண்சிவனும்  அயனும்தானும் ஒப்பார்வாழ்*

கனக்கொள் திண்மாடத் திருச்செங்குன்றூரில்*   திருச்சிற்றாறு அதனுள்கண்டேனே.

3602.  

திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள்கண்ட*  அத்திருவடி என்றும்*

திருச்செய்ய கமலக்கண்ணும்*  செவ்வாயும்செவ்வடியும் செய்யகையும்*

திருச்செய்யகமல உந்தியும்*  செய்யகமலை மார்பும் செய்யஉடையும்*

திருச்செய்யமுடியும் ஆரமும்படையும்*   திகழ என் சிந்தையுளானே. 

3603.  

திகழ என்சிந்தையுள் இருந்தானை*  செழுநிலத்தேவர் நான்மறையோர்*

திசை கைகூப்பி ஏத்தும்*  திருச்செங்குன்றூரில்  திருச்சிற்றாற்றங்கரையானை*

புகர்கொள்வானவர்கள் புகலிடம்தன்னை*   அசுரர்வன்கையர் வெம்கூற்றை*

புகழுமாறு அறியேன் பொருந்து மூவுலகும்*   படைப்பொடு கெடுப்புக்காப்பவனே!

3604.  

படைப்பொடு கெடுப்புக் காப்பவன்*  பிரம பரம்பரன் சிவப்பிரான் அவனே*

இடைப்புக்குஓர் உருவும் ஒழிவுஇல்லைஅவனே*  புகழ்வுஇல்லையாவையும் தானே*

கொடைப்பெரும்புகழார் இனையர் தன்ஆனார்*  கூரியவிச்சையோடு ஒழுக்கம்*

நடைப்பலி இயற்கைத் திருச்செங்குன்றூரில்*  திருச்சிற்றாறுஅமர்ந்த நாதனே.     

3605.  

அமர்ந்த நாதனை அவர்அவர்ஆகி*  அவர்க்குஅருள் அருளும் அம்மானை*

அமர்ந்ததண்பழனத் திருச்செங்குன்றூரில்*  திருச்சிற்றாற்றங்கரையானை*

அமர்ந்தசீர்மூவாயிரவர் வேதியர்கள்*   தம்பதி அவனிதேவர் வாழ்வு*

அமர்ந்தமாயோனை முக்கண்அம்மானை*   நான்முகனை அமர்ந்தேனே.

3606.  

தேனைநன்பாலை கன்னலைஅமுதை*  திருந்துஉலகுஉண்ட அம்மானை*

வானநான்முகனை மலர்ந்ததண்கொப்பூழ்*  மலர்மிசைப் படைத்தமாயோனை*

கோனை வண்குருகூர் வண்சடகோபன்*  சொன்ன ஆயிரத்துள் இப்பத்தும்*

வானின்மீதுஏற்றி அருள்செய்துமுடிக்கும்*  பிறவிமாமாயக் கூத்தினையே.   (2)

–subham—

Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-44; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், திருச்செங்குன்றூர், திருச்சிற்றாறு). Kerala

இறைவன் நாமத்தை உச்சரித்து நூறு ஆண்டுகள் வாழ்வீராக! – ஶ்ரீ சத்ய சாயிபாபா (Post No.15,827)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,827

Date uploaded in London – 4 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

31-5-26 தீபம் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

தர்மத்தின் வழியில் நடந்து இறைவனின் நாமத்தை உச்சரித்து நூறு ஆண்டுகள் வாழ்வீராக! – ஶ்ரீ சத்ய சாயிபாபாவின் அருளுரை! 

ச. நாகராஜன் 

22-8-2001 விநாயக சதுர்த்தி தினத்தன்று ப்ரசாந்தி நிலையத்தில் பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா ஆற்றிய அருளுரை:

ஆரம்பத்தில் ப்ரசாந்தி நிலையத்தில் சேஷகிரிராவ் இருந்தார். அவர் ஒரு பெரிய அதிகாரி. அவர் ஆரத்தி எடுப்பார். அவர் நூறு வருடங்கள் வாழ்ந்தார். இன்னொருவர், கிஷ்டப்பா என்று அவருக்குப் பெயர் சேஷகிரிராவுக்குப் பின்னால் வந்தவர் மறைந்து விட்டார். அவர் வெகு தூரத்திலிருந்து கால்நடையாக வருவார். பஜனை முழுவதிலும் இருந்து கலந்து கொள்வார். பின்னர் ஸ்வாமிக்கு ஆரத்தி எடுப்பார். அவரும் நூற்றியோரு வருடங்கள் வாழ்ந்தார். வேங்கடகிரியிலிருந்து வந்த பெரிய ஆளுமை கொண்ட சுரய்யா ஆறு அடி மூன்று அங்குல உயரம் இருப்பார்.அவரும் இங்கு இருந்தார். அவர் மிகவும் பிரபலமானவரும் கூட. இரவில் ஸ்வாமி ஓய்வெடுக்கும் போது அவர் ஸ்வாமியின் பாதங்களைப் பிடித்து விடுவார். ஸ்வாமி அவரிடம், “சுரய்யா, எனது பாதங்கள் வலிக்கவில்லை. நீ அதை அமுக்கிப் பிடிக்க வேண்டாம்” என்று கூறும் போது, அவர், “ஸ்வாமி. உங்களுக்கு வலி இல்லை. ஆனால் நான் பிடிக்கவில்லை என்றால் எனக்கு வலிக்கிறது. ஆகவே நான் உங்களின் பாதங்களைப் பிடிக்க விடுங்கள்” என்பார். ஸ்வாமி கண்களை மூடிய பிறகு அவர் அறையை விட்டு வெளியே செல்வார். இந்த வேலையை அவர் வாழ்நாளில் கடைசி நாள் வரை செய்தார். அவரும் நூறு ஆண்டுகள் வாழ்ந்தார். காருண்யாநந்த ஸ்வாமிகளும் நூறு ஆண்டுகள் வாழ்ந்தார்.  கஸ்தூரி மிகவும் சீக்கிரமாகவே இறந்திருக்க வேண்டும். ஆனால் ப்ரசாந்தி நிலையத்திற்கு வந்த பிறகு அவர்  தொண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்தார்.

 யாரெல்லாம் இங்கு வருகிறார்களோ அவர்கள் நீடித்து வாழ்வார்கள். இதன் காரணம் என்ன? அவர்கள் எப்போதும் கடவுளை நினைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதுவே அவர்களுக்கு நீடித்த வாழ்வைத் தருகிறது.

 சிலர் ஜாகிங் செய்து கொண்டு, ஒரு பயனும் இல்லாமல் மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள். ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினைகள் வரும் போது அவர்கள் ஸ்வாமியிடம் வந்து பிரசாதம் பெற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை இப்படி கழிக்கிறார்கள்.  இப்படிப்பட்ட ஆட்கள் மிகவும் அதிகமாக இருக்கிறார்கள்.  இன்றைய நாட்களில் இளைஞர்கள் குரங்கு மனத்தைக் கொண்டிருக்கிறார்கள். குரங்கு மனத்தை விட இன்னும் மோசமான மனத்தைக் கொண்டிருக்கிறார்கள். எதைச் சொன்னார்களோ அதை அடுத்த நிமிடமே மறக்கிறார்கள். நாக்கிற்கு எலும்பில்லை. ஆகவே அது எப்படி வேண்டுமானாலும் சுழலும்.

நீங்கள் செய்த சத்தியத்தை இறக்கும் வரை காப்பாற்ற வேண்டும். பல பேர்கள் ஸ்வாமியிடம் வந்து, “ஸ்வாமி! எனது பற்கள் விழுகின்றன. எல்லாப் பற்களையும் இழந்த பிறகு என்ன பயன்?”என்கின்றனர்.

ஸ்வாமி அவர்களிடம், “நீங்கள் பற்களை இழக்கலாம். ஆனால் நாக்கு இருக்கிறதே” என்று சொல்வார்.

எல்லாப் பற்களும் வலிமையானவை. வலிமையானவை முன்னால் போகும். மென்மையான நாக்கு இன்னும் இருக்கும். நீ மறையும் போது நாக்கும் போய்விடும். நாக்கை நன்கு பாதுகாக்க வேண்டும். ஆகவே தான், “உன்னால் எப்போதுமே பணிந்து போய்க்கொண்டிருக்க முடியாது; ஆனால் எப்போதுமே பணிவாகப் பேச முடியும்” என்று சொல்லப்படுகிறது.

மென்மையாகப் பேசுங்கள். இனிமையாகப் பேசுங்கள்.  சத்தியத்தைப் பேசுங்கள். தர்மத்தைக் கடைப்பிடியுங்கள். இறைவனின் நாமத்தைப் பாடுங்கள். அதை மற்றவர்களைக் கேட்கச் செய்யுங்கள். எதற்காக நாக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது தெரியுமா? எல்லாவற்றையும் சாப்பிடுவதற்காகவா? அல்லது சந்து பொந்துகளில் சுற்றிக் கொண்டிருப்பதற்காகவா? உடலில் உள்ள ஒவ்வொரு அங்கத்திற்கும் ஒரு குறிக்கோள் உண்டு. நீங்கள் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். சரியான செயல்களைச் செய்ய வேண்டும். புனிதமான செயல்களைச் செய்வதற்காகவே உடல் பரிசாக அளிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் ஒருபோதும் அதர்மவழியில் செல்லக் கூடாது. ஒருபோதும் தப்பானவற்றைச் சொல்லக் கூடாது. உங்கள்  உடல் தர்ம வழியிலேயே அடி எடுத்து வைத்து நடக்க வேண்டும். ஸ்வாமி உங்களை நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

**

Dravidians Exposed! Tirukkural Encyclopaedia- Chapter 10 (Kural 96-100) Post 15,826


Pictures rare from H A Popley’s book; year 1931

Written by London Swaminathan

Post No. 15,826

Date uploaded in London –3 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Two of the following Kural couplets expose modern Dravidian translators.

In Kural 96, The first line அல்லவை தேய, அறம் பெருகும் will remind everyone paritranaya sadhunam vinashaya cha dushkritam dharma-sansthapanarthaya sambhavami yuge yuge

परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् To protect the righteous, to annihilate the wicked and to establish righteousness/Dharma “ said by Lord Krishna in the Bhagavad Gita.(IV- 8)

Kural 98 is about this birth and the next birth; modern Dravidian translators avoid Rebirth and give wrong interpretation. மறுமையும்
இம்மையும் இன்பந் தரும்

English commentators stick to old and correct interpretations. This helps us to expose fraudulent commentators.

***

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933

2.S M Diaz, I G of Police- SMD Year 2000

3.Rev.Dr.GU Pope – GUP. Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS. Year 1986

6.H A Popley – HAP (not full book) Year 1931

7.Tamil Original

****

Abhishekam to Valluvar

Chennai Mylapore Tiru Valluvar Temple Now.

Part 20

Chapter 10 இனியவை கூறல் kind words; Pleasing speech or Courtesy;

1.2.6 The Utterance of Pleasant Words

96.In him does the force of evil decline and seeds of God like virtue grow, who hungering for righteousness sweetly does speak— ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933

***

96.If one seeks always to do good by pleasant speech,

Virtues will flourish and sins will disappear– S M Diaz, I G of Police- SMD Year 2000

***

96.
Who seeks out good, words from his lips of sweetness flow;
In him the power of vice declines, and virtues grow.
If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase.- Rev.Dr.GU Pope – GUP. Year 1886

***

96.His sins vanish, his virtues grow
Whose fruitful words with sweetness flow– Suddhananda Bharathiyar- SB

***

96.If a man utters well considered pleasing words, he will grow in virtue while his sin will decrease— EVS Publishers, Singapore- EVS. Year 1986

***

96.Evil will fade and good will grow in him

Who seeking good, speaks kindly words H A Popley – HAP (not full book) Year 1931

***

96. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

Tamil Nadu Governor salutes Tiru Valluvar
97.Do you know what kindles the spark of righteousness in man and lights up the path beyond his grave? It is the kind word that scatters peace and good-will to all mankind— ANM+2

***

97.Pleasant words from a well-mannered man will do

Good to others and generate blessings– SMD

***

97.
The words of sterling sense, to rule of right that strict adhere,
To virtuous action prompting, blessings yield in every sphere.
That speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world). – GUP

***

97.The fruitful courteous kindly words
Lead to goodness and graceful deeds– SB.        

***

97.Pleasing speech of good effect is productive of righteousness and virtue— EVS

***

Not translated by H A Popley – HAP (not full book) Year 1931

***

97. நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

True Picture of Tiru Valluvar; Now Dravidians have changed it.

98.Blessings await a man both in heaven and on earth from whose lips do tenderly fall artless words— ANM+2

***

98.Kind words free from meanness, confer blessings

In this world as well as the next– SMD

***
98.
Sweet kindly words, from meanness free, delight of heart,
In world to come and in this world impart.
Sweet speech, free from harm to others, will give pleasure both in this world and in the next. – GUP

***

98.Kind words free from meanness delight
This life on earth and life the next –SB

***

98.Pleasing words which do no harm to others will give happiness to a man in this world and in the next— EVS

***

98.Kind speech, from meness free, will bring great joy,

Both in this life and in the life beyond- HAP
***

98. சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பந் தரும்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

Valluvar in Mauritius Island

99. What would it profit a man to be bitter of tongue who has seen eyes sparkle with delight at the gentle dew drops of speech?- ANM+2

***

99.When a man knows that kind words bring joy and happiness

Why should he resort to harsh words?— SMD

***

99.
Who sees the pleasure kindly speech affords,
Why makes he use of harsh, repellent words?
Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields ? – GUP

***

99.Who sees the sweets of sweetness here
To use harsh words how can he dare?  — SB     

***

99.Wherefore should a man use harsh words who has himself experienced the joy of hearing pleasing words— EVS

***
99.why does a man speak bitter words,

When he has seen the joy that kind words give?- HAP

****

Valluvar Family

99. இன் சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

100.Behold the man that is harsh of tongue oblivious of the charms of pleasant discourse.  He is one yearning for unripe fruits, while clusters of mellow ones do adorn his cottage wall— ANM+2

***

100.Using harsh words instead of kind ones, is like going in

For raw fruits, when ripe ones are available—SMD

***
100.
When pleasant words are easy, bitter words to use,
Is, leaving sweet ripe fruit, the sour unripe to choose.
To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe. – GUP

***

100.Leaving ripe fruits, the raw he eats
Who speaks harsh words when sweet word suits– SB.        

***

100.Using harsh words, when pleasing words are available, is like eating green fruits while there are ripe ones—EVS

***
100.To use harsh words when kind words are at hand

Is picking unripe fruit where ripe fruit hangs—HAP

***
100. இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

To be continued,,,,,,,,,,,,,,,,,,,,,,

Tags-Dravidians Exposed! Tirukkural Encyclopaedia- Chapter 10 (Kural 96-100) Post 15,826

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-43; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,825)

Written by London Swaminathan

Post No. 15,825

Date uploaded in London –3 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருவண்பரிசாரம் / திருப்பதிசாரம்

Part 43

திருவண்பரிசாரம் (அல்லது திருப்பதிசாரம்) என்பது 108 வைணவத் திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.

மூலவர் திருவாழ்மார்பன் ; திருக்குறளப்பன்

நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். லட்சுமி தேவி எப்போதும் இவரின் திருமார்பில் நித்திய வாசம் செய்வதால் இந்தத் திருநாமம் ஏற்பட்டது.

தாயார் கமலவல்லி நாச்சியார்

.தீர்த்தம் & விமானம்: லட்சுமி தீர்த்தம்

இந்திர கல்யாண விமானம்

ப்ரத்யக்ஷம் – விந்தை, காரி, உடையநங்கை, கருடன்.

குலசேகர ஆழ்வாரின் வெண்குதிரை காணாமல் போனபோது, அதனை பெருமாளின் சோம லட்சுமி தீர்த்தக் கரையில் கண்டெடுத்தார். எனவே இத்தலம் திருவெண்பரிசாரம் என்று அழைக்கப்படுகிறது; ”பரி’ என்றால் குதிரை

நம்மாழ்வார் தொடர்பு: நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். இத்தலத்திற்கு அருகில் உள்ள திருக்குருகூர் (ஆழ்வார்திருநகரி) நம்மாழ்வாரின் அவதாரத் தலமாகவும், திருவண்பரிசாரம் அவரது தாயார் பிறந்த ஊராகவும் போற்றப்படுகிறது

ஸ்தல வரலாறு :

சினம் தணிந்த நரசிம்மர் பிறகு, திருமகள் தவம் புரியும் இந்தத் தலம் வந்து, ‘திரு’வாகிய அவளை தன் மார்பில் ஏற்று, திருவாழ்மார்பனாக அருள் புரிந்தார். எனவே, இத் தலம் ”திருப்பதிசாரம்” ஆனது வரலாறு

” வருவார் செல்வார் பரிவாரதிருந்த என்

திருவாழ் மார்வற்கு என் திறம் சொல்லார்

செய்வதென்

உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும் மோடு

ஒரு பாடுழல்வான் ஓரடியானுமுள னென்றே

என்று நம்மாழ்வாரால் மட்டுமே மங்களாசாசனம் ;

108 திவ்ய தேசங்களில் திருவண்பரிசாரம் ஒன்றாகும்

இந்தத் தலத்தில் எம்பெருமானின் மார்பிலேயே உறைவதால், தாயார் கமலவல்லி நாச்சியாருக்குத் தனிச் சந்நிதி கிடையாது.

ஆனந்த மண்டபத்தை அடுத்து மூலவர் சன்னதி.  மூலவரான ”திருவாழ்மார்பன்” நான்கு கைகளுடனும், சங்கு சக்கரமேந்தி அபய ஹஸ்தத்துடன், அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். ஒன்பது அடி உயரமுள்ள இவ்விக்ரகம் “கடு சர்க்கரை யோகம் என்ற கூட்டினால் உருவாக்கப்பட்டதாம் (கல்லும், சுண்ணாம்பும் சேர்ந்து செய்யப்பட்ட உருவத்தின் மேல், கடுகும் சர்க்கரையும் சேர்ந்த ஒருவித பசையினால் பூசப்படும் முறைக்கு கடுசர்க்கரை யோகம் என்று சொல் வார்களாம்) அதனால் மூலவருக்கு  அபிஷேகமோ, அரளிப்பூ மாலை சார்த்துவதோ கிடையாது புனுகு மட்டுமே சார்த்தப்படுகிறது. உற்சவருக்கே அபிஷேகம் நடைபெறுகிறது

இத்தல மூலவர் நரசிம்மரின் பெயரையே தனதாக்கிக் கொண்டவர். இவரின் மகள்,உடையநங்கைக்கும்,  திருக்குறுங்குடியை சேர்ந்த ”காரி” என்பவருக்கும் திருமணம் நடந்தேறியது. இல்லறம் இனிதே நடந்தது. ஆனால், குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. இருவரும் குழந்தை வரம் வேண்டி இந்தத் தலத்தில் 41 நாட்கள் விரதம் அனுஷ்டித்தனர். இதன் பலனாக அவர்கள் பெற்றெடுத்த குழந்தையே நம்மாழ்வார்..

நம்மாழ்வார் பிறந்த கதை

திருப்பதிசாரத்தில் உடையநங்கை என்ற பெண் விஷ்ணு பக்தையாகி குருகூரில் காரி என்ற விஷ்ணு பகத்ருக்கு பத்தினியானார் ; அவர்கள் இந்த ஸ்தலத்தில் 41 நாள் விரதமிருந்து ஆவணி சுக்ல ஏகாதசியான வாமநஜயந்தி தினம் ஊஞ்சலுத்ஸவம் நடத்திய பின்னர் , உடையநங்கை கர்ப்பவதியானார்;  கலி- 43 –வது நாள்வைகாச விசாகத்தன்றுநம்மாழ்வார் அவதரித்தார்;குருகூரில் ஆதிநாதன் ஸந்நிதியில்விட, அந்தக் குழந்தை தவழ்ந்து புளியமரப் பொந்தில் புகுந்து யோக முத்திரையுடன் பத்மாஸன யோகத்தில் அமர்ந்தது.

வடநாட்டில் தோன்றிய ஒரு தெய்வீக ஜோதியைப் பின்தொடர்ந்து வந்த மதுரகவி ஆழ்வார் தமக்கு ஹிதோபதேசம் செய்யும்படி பிரார்த்திக்க, நம்மாழ்வார் திருவாய் மொழியை அருளிச் செய்ததாக ஸ்தல புராணம்.கூறும் 

ஹநுமார் பிரார்த்தனைக்கிணங்க அகஸ்தியர் ராமாயணம் அருளியதாக ஸ்தலவரலாறு சொல்கிறது  குலசேகர மஹாராஜன் மண்டப கோபுர பிரகாரங்களை நிர்மாணம் செய்து வாகனங்களையும்  செய்து ப்ருஹ்மோத்ஸவம் செய்து வைத்தாக ஸ்தல வரலாறு. சொல்கிறது.

அமைவிடம் :

இத்தலம் நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் சுமார் 3  மைல் தூரத்தில் உள்ளது. திருவாட்டாற்றிலிருந்து தொடுவெட்டி வந்து, பஸ்மாறி, நாகர்கோயில் திருநெல்வேலி பஸ் மார்க்கத்தில் நாகர்கோவில் வந்து, அங்கிருந்து 3 மைல் தூரம் வடக்கே சென்று இவ்வூரை அடையவேண்டும்.

-subham—

Tags- நம்மாழ்வார் பிறந்த கதை,  Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-43; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், திருவண்பரிசாரம், திருப்பதிசாரம்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 69; இந்து மத கலைச்சொல் அகராதி-69 (Post No.15,824)

Written by London Swaminathan

Post No. 15,824

Date uploaded in London –3 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

MO, MU words

Modaka/m

Modaka is found in the hand of Ganesh statues. This sweet rice dumpling is his favourite food. Tamil Brahmins and Maharashtrians make it and offer it to Lord Ganesh during Ganesh Chaturthi festival. It is a steamed snack in which coconut mixed with jaggery is stuffed into cups made up of rice flour.

Modaka (मोदक) refers to a “sweet ball”, according to the Vālmīki-Rāmāyaṇa Yuddhakhaṇḍa 131.38

Modaka (मोदक) refers to a type food-stuff used in the worship of Gaṇeśa, according to the Padmapurāṇa 1.65

***

Moksha

One of the four stages in a Hindu’s life: Dharma, Artha, Kama Moksha; of the four stages, Moksha is the final goal all Hindus aim at.

Moksha most commonly refers to the ultimate spiritual goal in Indian religions like Hinduism, Buddhism, and Jainism. Literally translating to “release” or “liberation” in Sanskrit, it signifies freedom from samsara—the eternal cycle of birth, death, and rebirth.

It is achieved by realizing the ultimate truth and freeing oneself from the illusions of the ego and karmic baggage

Most of the devotional songs or poems pray for this.

***

Mookambhika

Sarasvati or Vak Devi.

Mookambika is Hindu Goddess of Knowledge and her famous abode, the Kollur Mookambika Temple, is located in the Udupi district of Karnataka, India.

She is an aspect of Adi Parashakti (the supreme mother goddess) and is considered a powerful union of Goddesses Parvati, Lakshmi, and Saraswati.

The legend of the Kollur Mookambika Temple is deeply intertwined with the journey of Adi Shankara. The Goddess agreed to follow him to Kerala on the condition that he never looked back; when he did, she stayed in Kollur. Adi Shankaracharya meditated in the Chitramoola caves on the Kodachadri hills and requested the Goddess to come with him to Kerala. She agreed, but on the strict condition that she would walk behind him and he must never look back to check. When the tinkling sound of her anklets abruptly stopped, Adi Shankara turned back, breaking the vow. The Goddess stayed exactly where they were, which is the current location of the temple in Kollur. Adi Shankara then consecrated the four-armed idol and the Sri Chakra inside the shrine.

Tamil politicians and once chief ministers M G Ramachandran, Jayalalitha and others offered the deity valuable Diamond Sword, golden ornaments etc. This made her popular among their followers as well.

***

Mooka kavi

“Mooka Kavi was dumb from birth; but obtaining the grace of Kamakshi he burst forth into exquisite poetry. He sang five hundred verses in praise of Sri Kamakshi in five satakas of 100 verses each. Muka Kavi means dumb (turned) poet. He used to go to Kanchi Kamakshi temple and prostrate before the statue of the goddess every day. One day he saw the goddess and suddenly started composing poems. He was one of the Kanchi Sankaracharyas.

According to Kanchi Mutt calculations Muka Sankara (398-437 CE) was the 20th Shankaracharya. He was the son of Vidyavati, an astronomer. He mastered Vedas after he became eloquent.

Matrugupta, King of Kashmir, and Pravarasena, all considered it a privilege to serve Sri Muka Sankara (Muka Kavi).

The Mooka Pancha Sathi (five hundred verses) is a celebrated Sanskrit devotional text composed by Muka Sankara in praise of Goddess Kamakshi of Kanchi.

The work is divided into five parts (or Shatakas), each containing exactly 100 verses:

Arya Satakam: Focuses on the physical beauty, grandeur, and divine grace of the Goddess, using the melodic Arya meter.

Padaravinda Satakam: Extols the divine, lotus-like feet of Goddess Kamakshi, emphasizing their power to grant salvation and peace.

Stuti Satakam: Comprises hymns of praise and surrender, deeply expressing the devotee’s reverence and reliance on the Goddess’s mercy.

Kataaksha Satakam: Describes the transformative and compassionate sidelong glance of Goddess Kamakshi, which removes sins and brings prosperity.

Mandasmitha Satakam: Details the enchanting and radiant smile of the Goddess, symbolizing her boundless grace and cosmic joy.

***

Muchukunda

Very interesting stories are woven around a Choza king who was not recorded or documented in history. The Choza king Mucukunda is in the Puranas and Tamil literature. But history does not know him. From Kandhapurana and Silappadikaram commentaries we know the following details about him:

1.He helped Indra in defeating a demon.
2.Indra gave him a goblin (Bhuta) to protect his city. Later Chera took it to Vanji.
3.Mucukunda ruled from Pumpukar, Choza port city or Tiruvarur.
4.Mucukunda was an ardent devotee of Shiva.
5.He received several statues from Indra and installed them in and around Tiruvarur.
6.His face looked like a monkey (Musu = Monkey).
7.Mucukunda celebrated Indra Festival. He was very much into it.
8. A lot of Sthalapuranas have recorded Mucukunda’s role in local temples. He is connected with Tiruvarur, Tirumaraikkadu, Nagappatinam, Tirunallaru, Tirukkarayal, Tiruvaymur and Tirukkuvalai.

Following are the references from the Puranas and Tamil Epic Silappadikaram.
Pumpukar was a port city in the Chola kingdom. The importance of Pukar was not long lived. Now part of it is under the sea– Bay of Bengal. Anticipating the forthcoming devastation of the city, ‘buta’ (goblin) at Butachahukkam, which was brought from Indra’s abode by Mucukunta, was removed to Vanji by the Chera king. Source : –Canto 28 commentary of Silappadikaram

Origin of Cholzas is shrouded in mystery. Pura Nanuru of Sangam literature and Silappadikaram of Post Sangam period praised Sibi Chakravarthy in many places as the forefather of the Chozas. Sibi ruled North West of India, far away from the Choza territory of Tamil Nadu.

Tamil Encyclopeadia Abidana Chintamani adds more interesting stories: Mucu means monkey and when he was born as a monkey in the Himalyas, he did offer Bilva leaves to Shiva. As a result of this Puja he was born as a son of Dilipa and Mangalvathy in the solar race found in Hindu Puranas. Then he married Vichitravathy and helped Indra in his fight against Vala. When Indra told him that he would give him a gift, Mucukundan wanted a particular Shiva idol from Indra. That was given to Indra by Vishnu. But Indra gave him a different idol. This happened six times and at last he got the idol he wanted. He installed all the idols in different temples in Thanjavur district. The main idol was installed in Tiruvarur.

***

Mudagalya

Story of Mudgala is in Mahabharata, the longest epic in the world. Mudgala was a great sage. He ate only twice a month on Full Moon Day and New Moon Day. He used to gather grains from the field and cook it for his family. He lived with his wife Nalayani, his son and daughter in law. There may be many Rishis (seers) with this name; but the common belief is that the Maudgalya Brahmins came from this Vedic Rishi (sage).

Though Mudgala lived in poverty, he used to feed all the Brahmins, saints and others whoever came to him. He gleaned grains like a pigeon, but it never underwent diminution. This was a miracle like Akshaya patra (inexhaustible vessel) of Draupadi. Once sage Durvasa wanted to test his patience. He went in the disguise of a mendicant just before his fortnightly meals. Mudgala gave his share, but it did not satisfy the mendicant’s hunger. He demanded more and consumed all the food in the house. He returned after a fortnight and did the same- devoured all the available food. This happened six times. Mudgala never burst out in anger. He was happy to feed him.

Durvasa, the sage who was notorious for his anger, was extremely happy and revealed his identity. At the same time a messenger from the heaven came to take him to heaven in appreciation of his hospitality and generosity. He did not fall a prey for heavenly pleasures. He asked the messenger the benefits of going to heaven. Messenger told him that he would enjoy all the pleasures there as long as his merits are not exhausted. Once all the merits are used he would have to return to earth. Immediately he refused the offer and told him that he wanted to do more penance. He dismissed the messenger of the gods and began to practise ascetic virtues. He decided to go to the eternal abode where there is no sorrow, nor distress nor change. (3-216 Mbh).

***

Mudra

BUDDHA SHOWING FIVE DIFFERENT MUDRAS

A mudra is a hand gesture with fingers pointing different directions or postures. The reason for having different postures is to channelize the body energy. Each Mudra brings or enhances certain type of energy in us.

All Hindu Gods show Mudra mostly Abhaya or Varada. 

Mudras are used by Hindu priests differently. There is a book called ‘Mudra Vidanam’ giving a list of over 125 Mudras. A Brahmin who does Sandhyavandana ritual three times a day use Mudras as well. The Sanskrit slokas in the beginning of the book explain the significance of those Mudras. It says Mudras make the Devas (angels and gods) happy and it drives away the sins. The Devatas in charge of each Mantra (spell) are pleased with the Mudras. It also adds one should learn the Mudras used in Archana, Japa, Dhyana (Prayer and Meditation) Kamya Karmas (desire fulfilling rituals), Snanam , Avahanam (Bathing and Invoking), Prathista, Rakshanam and Naivedyam ( Installing, preserving and offering to god). The book classified Mudras under 11 titles and illustrated all Mudras with line drawings.

 In the classical dance called Bharatanatyam, there are lot of Mudras called Karanas. They are used to express feelings and give different messages. The books about Mudras are in Sanskrit. There are 108 different Mudras shown on the tower of Chidambaram temple where the Lord of Dance Nataraja/Shiva appears in his dancing form. The dance Mudras are different from Yoga Mudras. The Tantric Mudras are different from these two categories.

***

Muralidhara

Muralidhara (often spelled Muralidhar or Muralidhara) is a Sanskrit name meaning “the one who holds the flute.” [12]

In Hindu mythology, it is one of the most popular epithets used for Lord Krishna, who is famously depicted as a cowherd boy enchanting the world by playing the divine melody on his flute (the murali).

Lord Skanda is called Murugan in Tamil.

***

Muruga

Murugan means handsome one, beautiful.

He is the son of Lord Shiva and Goddess Parvati

He is the younger brother of Ganesh .

His vehicle is peacock.

Skanda’s other names are Subrahmanya, Kartikeya, Shanmukha

Hindu gods like Ganesh, Murugan are shown with many hands, some with many heads.

He is the popular god with highest number of heads and hands.

He has six heads and 12 hands in Shanmuga form. Shanmukha means six faces. You may wonder why? If you are at school final level, please got to Level Two of Skanda Murugan.

In normal form, he is also shown as a child like Ganesa. He is Kumara (youth)  or Bala kumara.

Subrahmanya means he possesses all the qualities of Brahman (god).

The name Kartikeya came to him because he was raised by six Krittika women personified as stars in the sky.

He was born in a grass land and so he is known as Saravana bhava.

Saravana is the name of the forest/grass land

We know that Ganesa is the head of Bhuta Ghana’s and in the same way Murugan is the Commander of the Divine Army. He killed Tarakasura and Sura pathman.

Skanda worship is very popular in Tamil speaking world. Tamils give Him a special status and so he is known as Tamil God.

They celebrate all his festivals with Kavadi. They carry it to the

Temple . A normal Kaavadi will have a long pole tied with two baskets on either side. Devotee s carry food and offerings to god in the attached pots or baskets. Later they constructed different shapes.

Another important thing is that his temples are mostly on top of hills or at the foot of the hills. There are six famous temples for him in Tamil Nadu

He married two women and they are Valli and Devasena (Deivaanai)

***

Muladhara/m

Muladhara (the Root Chakra) is the first energy center in the body, located at the base of the spine. It governs your sense of stability, safety, and basic survival needs (like food and shelter). When balanced, you feel grounded and confident; when blocked, it can cause anxiety or fear.

Root Chakra (Mooladhara): The Gateway of Power

Sex Chakra (Svadhisthana): Overcoming Karma and Sensory Delusions

Navel Chakra (Manipuraka): The Seat of Power and Spiritual Mastery

Heart Chakra (Anahata): The Portal to Love and Divine Connection

Throat Chakra (Vishuddha): The Repository of Karma and Truth

Third Eye Chakra (Ajna): The Birthplace of Divine Wisdom

***

Mulam star Mamular Tiru Mular

Mulam (also known as Moola) is the 19th lunar mansion in Vedic astrology, falling within the Sagittarius zodiac sign. Known as the “Foundation Star” or “Root Star,” it is symbolized by a tied bunch of roots and is governed by Ketu (the south lunar node) and the goddess Nirriti.

Mythological Association: It is frequently associated with Lord Hanuman’s birth star.

Literary references – Tiru Mular, Saivite saint of ninth century CE and Ma Mular of Sangam Tamil Literature are linked with Mulam star

The astronomical name of the Moolam star (or Moola Nakshatra) is Lambda Scorpii.

In modern astronomy, this refers to a multiple star system (primarily \(\lambda \) Scorpii) located in the tail of the Scorpius constellation

To be continued…………

Tags – Murugan, Moksha, Mookakavi,  Modaa, Mulam star,HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 69; இந்து மத கலைச்சொல் அகராதி-69