டிசம்பர் 2016 காலண்டர்
Compiled by london swminathan
Date: 30 November 2016
Time uploaded in London: 22-09
Post No.3404
Pictures are taken from various sources; they are representational only; thanks.
contact; swami_48@yahoo.com
December 2016 ‘Good Thoughts’ Calendar
டிசம்பர் 12 : கார்த்திகை தீபம், 13- சர்வாலய தீபம், 13- மிலாடி நபி, 25- கிறிஸ்துமஸ்; ஏகாதசி- 10, 24/25; பௌர்ணமி -13; அமாவாசை-28; முகூர்த்த தினங்கள்–1, 4, 5, 9
தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தமாக்கியதே – எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் எனும் தேன்
xxx
டிசம்பர் 1 வியாழக்கிழமை
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சின் நீங்காதான் தாள் வாழ்க
xxx
டிசம்பர் 2 வெள்ளிக்கிழமை
உய்ய என்னுள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
xxx
டிசம்பர் 3 சனிக்கிழமை
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ச்சுடரே
xxx
டிசம்பர் 4 ஞாயிற்றுக்கிழமை
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே
xxxx
டிசம்பர் 5 திங்கட்கிழமை
சிவனவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனருளாலே அவந்தாள் வனங்கி
xxxx
டிசம்பர் 6 செவ்வாய்க்கிழமை
புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி
………. எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்
—சிவபுராணம்
xxx
டிசம்பர் 7 புதன்கிழமை
மன்னு மாமலை மகேந்திரமதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும்
–கீர்த்தித் திரு அகவல்
xxxx
டிசம்பர் 8 வியாழக்கிழமை
அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந்தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொருகோடியின் மேற்பட விரிந்தன
–திருவண்டப்பகுதி
xxx
டிசம்பர் 9 வெள்ளிக்கிழமை
சொற்பதம் கடந்த தொல்லோன் காண்க
சித்தமும் செல்லாட் சேட்சியன் காண்க
பக்தி வலையிற் படுவோன் காண்க
–திருவண்டப்பகுதி
xxxx
டிசம்பர் 10 சனிக்கிழமை
ஆறுகோடி மாயா சக்திகள்
வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின
ஆத்தமானார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நாத்தழும்பேறினர்
–போற்றித் திரு அகவல்
xxx
டிசம்பர் 11 ஞாயிற்றுக்கிழமை
சமயவாதிகள் தத்தம் மதங்களே
அமைவதாக அரற்றி மலைந்தனர்
மிண்டியமாயாவாதம் என்னும்
சண்டமாருதஞ் சுழித்தடித்தார்த்து
உலோகாதயனெனும் ஒண்டிறர்பாம்பின்
கலாபேதத்த கடுவிடம் எய்தி
–போற்றித் திரு அகவல்
xxx
டிசம்பர் 12 திங்கட்கிழமை
ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி
–போற்றித் திரு அகவல்
xxx
டிசம்பர் 13 செவ்வாய்க்கிழமை
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஏனக் குருளைக்கருளினை போற்றி
மானக் கயிலை மலையாய் போற்றி
–போற்றித் திரு அகவல்
xxx
டிசம்பர் 14 புதன்கிழமை
புலிமுலை புல்வாய்க்கருளினை போற்றி
அலைகடன் மீமிசை நடந்தாய் போற்றி
கருங் குருவிக் கன்றருளினை போற்றி
இரும்புலன் புலர இசைந்தனை போற்றி
–போற்றித் திரு அகவல்
xxx
டிசம்பர் 15 வியாழக்கிழமை
நாடகதாலுன்னடியார்
போனடித்து நானடுவே
வீடகத்தே புகுந்திடுவான்
மிகப்பெரிதும் விரைகின்றே
–திருச்சதகம்
xxxx
டிசம்பர் 16 வெள்ளிக்கிழமை
யாமார்க்குங் குடியல்லோம் யாதும் அஞ்சோம்
மேவினோம் அவனடியாரடியாரோடு
மேன்மேலுங் குடைந்தாடி ஆடுவோமே
–திருச்சதகம்
xxx
டிசம்பர் 17 சனிக்கிழமை
பட்டிமண்டபமேற்றினை யேற்றினை
எட்டினோடும் இரண்டும் அறியேனையே
–திருச்சதகம்
xxx
டிசம்பர் 18 ஞாயிற்றுக்கிழமை
யானே பொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
–திருச்சதகம்
xxx
டிசம்பர் 19 திங்கட்கிழமை
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
–திருவெம்பாவை
xxx
டிசம்பர் 20 செவ்வாய்க்கிழமை
தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப்பேணு பெருந்துறையில்
–திருவம்மானை
xxx
டிசம்பர் 21 புதன்கிழமை
தேசமெல்லாம் புகழ்ந்தாடும் கச்சித்
திருவேகம்பன் செம்பொற் கோயில் பாடி
–திருப்பொற்சுண்ணம்
xxxx
டிசம்பர் 22 வியாழக்கிழமை
ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்காயிரம்
திருநாம் பாடி நாம் தெள்ளெணங் கொட்டாமோ
–திருத்தெள்ளேணம்
xxx
டிசம்பர் 23 வெள்ளிக்கிழமை
கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி தான்றனியன் காணேடீ
–திருச்சாழல்
xxx
டிசம்பர் 24 சனிக்கிழமை
மண்பால் மதுரையிற் பிட்டமுது செய்தருளித்
தண்டாலே பாண்டியன் றன்னைப் பணிகொண்ட
புண்பாடல் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ
–திருப்பூவல்லி
xx
டிசம்பர் 25 ஞாயிற்றுக்கிழமை
பாலகனார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே உந்தீ பற
குமரன்றன் தாதைக்கே உந்தீபற
–திருவுந்தியார்
xxx
டிசம்பர் 26 திங்கட்கிழமை
ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம்
பாழுக்கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே
—–திருத்தோணோக்கம்
xxxx
டிசம்பர் 27 செவ்வாய்க்கிழமை
தேன்பழச் சோலை பயிலுஞ்
சிறுகுயிலேயிது கேள் நீ
வான் பழித்திம் மண்புகுந்து
மனிதரை யாட்கொண்ட வள்ளல்
—குயிற்பத்து
xxxx
டிசம்பர் 28 புதன்கிழமை
தந்ததுன் றன்னைக் கொண்டதென்றன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தமொன்றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்றது என்பால்
–கோயில் திருப்பதிகம்
xxxx
டிசம்பர் 29 வியாழக்கிழமை
பவளத் திருவாயால்
அஞ்சேலென்ன ஆசைப்பட்டேன்
கண்டாய் அம்மானே
–ஆசைப்பத்து
xxxx
டிசம்பர் 30 வெள்ளிக்கிழமை
சொல்லும் பொருளும் இறந்த சுடரை
நெல்லிக்கனியைத் தேனைப் பாலை
நிறையின் அமுதை அமுதின் சுவையை
–புணர்ச்சிப்பத்து
xxxx
டிசம்பர் 31 சனிக்கிழமை
பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்பா
பரகதி கொடுத்தருள் செய்யும்
சித்தனே
–அருட்பத்து
xxx
சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அந்தமிலா ஆனந்தம் அணிகொடில்லை கண்டேனே
–கண்டபத்து
xxxx
சாதிகுலம் பிறப்பென்னும் சுழிபட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு
–கண்டபத்து
xxxx
பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ
பிறைசேர் சடையாய் முறையோவென்
றழைத்தால் அருளா தொழிவதே
அம்மானேயுன் அடியேற்கே
–குழைத்தபத்து
xxx
வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேண்டமுழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற் கரியோய் நீ
வேண்டியென்னைப் பணி கொண்டாய்
–குழைத்தபத்து
xxx
மற்றுமோர் தெய்வந்தன்னை
உண்டென நினைந்தெம் பெம்மாற்
கற்றிலாதவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சுமாறே
–அச்சப்பத்து
xxx
ஆலமுண்டான் எங்கள் பாண்டிப்
பிரான் தன் அடியவர்க்கு
மூல பண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமினே
–திருப்பாண்டிப் பதிகம்
xxxxx
சடையானே தழலாடீ தயங்கு மூவிலைச் ச்சூலப்
படையானே பரஞ்சோதீ பசுபதீ மழவெள்ளை விடையானே
—திருப்புலம்பல்
xxx
மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த
தேவரும் காணாச் சிவபெருமான்
–திருவெண்பா
xxxx
இன்பம்பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும்
துன்பந் தொடர்வறுத்துச் சோதியாய் – அன்பமைத்து…….
–திருவெண்பா
xxxxxxxxxxx
முன்னை வினை இரண்டும் வேரறுத்து முன்னின்றான்
பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன்
–திருவெண்பா
xxx
உய்யுநெறி காட்டுவித்திட்
டோங்காரத் துட்பொருளை
ஐயனெனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே
—அச்சோப்பதிகம்
—subham—