

Picture line- London University Tiru Valluvar Statue Installation- Right extreme-London Swaminatha, Left extreme Dr Sighvi, High Commissioner of India in Britain
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 11,311
Date uploaded in London – 30 SEPTEMBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
31 திருக்குறளில் இந்துமதம்: அக்டோபர் 2022 ‘நற்சிந்தனை’ காலண்டர்
திருக்குறளில் உள்ள 31 இந்துமத செய்திகள் – இந்த மாத காலண்டரில் இடம்பெறுகின்றன.
பண்டிகை நாட்கள்: 2- காந்தி ஜயந்தி , 3-துர்காஷ்டமி , 4- ஸரஸ்வதி பூஜை / ஆயுத பூஜை, 5-விஜயதசமி /தசரா , 24- தீபாவளி பண்டிகை, லெட்சுமி குபேர பூஜை , 25-சூரிய கிரஹணம் , 25/26 கந்த சஷ்டி விரதம் ஆரம்பம் , 30- கந்த சஷ்டி, சூர சம்ஹாரம்
அமாவாசை – 24/25; பெளர்ணமி – 9; ஏகாதஸி விரத நாட்கள் – 6, 21
சுபமுஹுர்த்த நாட்கள் – 28, 30
அக்டோபர் 1 சனிக்கிழமை
அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன்-குறள் 1; அக்ஷரானாம் அகாரோஸ்மி – பகவத் கீதையில் (10-33) கண்ணன் ; ஸம்ஸ்க்ருத சொல்லான அகார — என்பதை வள்ளுவர் பயன்படுத்துகிறார்.
xxx
அக்டோபர் 2 ஞாயிற்றுக் கிழமை
இந்திரன் பற்றி
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி. –குறள் எண் – 25
xxx
அக்டோபர் 3 திங்கட் கிழமை
மோக்ஷம் அடைய வழி –
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்– குறள் எண்:38
xxx
அக்டோபர் 4 செவ்வாய்க் கிழமை
குறள் 580ல் சிவன் மகிழ்ச்சியோடு விஷம் குடித்த கதையைப் பாடுகிறார்-
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்– குறள் 580
நஞ்சுண்ட கண்டன் = சிவன்.
xxx
அக்டோபர் 5 புதன் கிழமை
தானம், தவம் என்ற பகவத் கீதையின் ஸம்ஸ்ருதச் சொற்களை அப்படியே எடுத்தாண்டு இந்துமதத்தின் உயர்வினைக் காட்டுகிறார் -குறள்கள் 19, 295
xxx
அக்டோபர் 6 வியாழக் கிழமை
முதல் அதிகாரத்தில் இறைவனின் பாத கமலங்களை தாள், அடி என்று 7 குறள்களில் சொல்லி வள்ளுவர், தான் ஒரு தூய ஹிந்து என்பதை சத்தியம் செய்கிறார்; மற்ற மதங்களில் இறைவனுக்கு உருவம் இல்லை
xxx
அக்டோபர் 7 வெள்ளிக் கிழமை
நூலின் பெயர் முப்பால் -தர்ம, அர்த்த, காம – ஆறாம், பொருள், இன்பத்துப் பால் ; குறள்கள் 754, 760, 501 ஆகியவற்றில் தர்ம, அர்த்த, காம என்பதைத் திரும்ப வலியுறுத் துகிறார்.
xxx
அக்டோபர் 8 சனிக்கிழமை
இந்துக்கள் செய்யும் பஞ்ச யக்ஞம் ; யமனுடைய திக்கு- தெற்கு
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை -குறள் 43
xxx
அக்டோபர் 9 ஞாயிற்றுக் கிழமை
ராமனும் கிருஷ்ணனும் , காஞ்சி பரமாசார்யாளும், ரமணரும் கடவுளே!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்–குறள் 50
xxx
அக்டோபர் 10 திங்கட் கிழமை
இந்து மதக் கருத்து- 7 பிறவிகள்
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்-குறள் 62, also 107
xxxx
அக்டோபர் 11 செவ்வாய்க் கிழமை
இந்திரர் அமிழ்தம் (புறநானூற்றிலும் உள்ளது ; பாடல் 182
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்–குறள் 64 ; ALSO 82, 720, 1106
xxx
அக்டோபர் 12 புதன் கிழமை
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்–குறள் : 70, also 160
இந்துமதம் தவிர வேறு எதிலும் ‘தவம் செய்து பிள்ளை’ பெறும் வழக்கம் இல்லை
xxx
அக்டோபர் 13 வியாழக் கிழமை
லக்ஷ்மி , அவளுடைய அக்காள் மூதேவி பற்றி
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்-குறள் 179, Also 617, 519, 920,936
xxx
அக்டோபர் 14 வெள்ளிக் கிழமை
ஈசாவாஸ்யோபநிஷத் கருத்து
இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு– குறள் எண்:180
அசையும் உலகனைத்தும் ஈசனால் நிரம்பியுள்ளது;
அதைத் துறந்து நீ இன்பம் துய்த்திடுக;பிறர் பொருளை விரும்பற்க.
ஈஷாவாஸ்யமிதம் சர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத் .
தேந த்யக்தேந புஞ்ஜீதா மா கரிதஃ கஸ்ய ஸ்வித்தநம் ৷৷ 1.1.1 ৷৷
xxx
அக்டோபர் 15 சனிக்கிழமை
தீதும் நன்றும் பிறர்தர வாரா- புறநானூறு 192; கர்மா வினை கருத்து
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடி உரைந்தற்று (குறள் 208)
ஒருவன் தீங்கு செய்தால் அவன் அதனால் கெட்டுப்போவது நிச்சயம். எப்படி ஒருவனுடைய நிழல் அவன் கூடவே வந்து அவனடியில் தங்குமோ, அது போலத் தீமையும் அவனை நிழல்போலத் தொடரும்.
xxx
அக்டோபர் 16 ஞாயிற்றுக் கிழமை
பகவத் கீதை 2-47
கருமம் செய்வதற்கே உனக்கு அதிகாரம். அதன் பற்றில் அல்ல(2-47)
கர்மண்யேவ அதிகாரஸ்தே மா பலேஷு கதாசன (2-47)
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு–குறள் 211
xxx
அக்டோபர் 17 திங்கட் கிழமை
உத்திஷ்ட! யசோ லப !! எழுந்திரு, புகழ் அடை (பகவத் கீதா 11-33)
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று- குறள்:236
xxx
அக்டோபர் 18 செவ்வாய்க் கிழமை
வாமன/ த்ரிவிக்ரம அவதாரம்
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு–குறள் 610
XXX
அக்டோபர் 19 புதன் கிழமை
உலகைப் படைத்த பிரம்மா பற்றி
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்–குறள் 1062
XXX
அக்டோபர் 20 வியாழக் கிழமை
யமன் பற்றி – மார்க்கண்டேயர் கதை
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு- குறள் 269 ALSO 326, 765, 1083, 1085
XXX
அக்டோபர் 21 வெள்ளிக் கிழமை
தேவலோகம், இந்திரலோகம் பற்றி
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.–குறள் 58 ALSO 213, 222, 234, 290
XXX
அக்டோபர் 22 சனிக்கிழமை
அரவிந்தாக்ஷன், கமலநயனன் , தாமரைக்கண்ணன் – விஷ்ணு பற்றி
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு—குறள் 1103
தாமரைக் கண்ணான் உலகு= வைகுந்தம்
XXX
அக்டோபர் 23 ஞாயிற்றுக் கிழமை
பன்மாயக் கள்வன் – மாய கிருஷ்ணன் ; கோபி கிருஷ்ணா
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை–குறள் 1258
XXX

அக்டோபர் 24 திங்கட் கிழமை
அகஸ்தியர்- நகுஷன் கதை, பரசுராமன், சாணக்கியன் கதைகள்
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்–குறள் 899
XXX
அக்டோபர் 25 செவ்வாய்க் கிழமை
யமனைக் கைதட்டி அழைத்தல் -தக்ஷன் கதை
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்–குறள் 894
XXX
அக்டோபர் 26 புதன் கிழமை
பிராமணர் வேதம், கோ மாதா பற்றி
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்- குறள் 560 ALSO 134,543, 8, 30
XXX
அக்டோபர் 27 வியாழக் கிழமை
குருகுலத்தில் முதல் பாடம் – தர்மம் சர ; அது மட்டுமே செத்த பிறகும் கூட வரும் . மஹாபாரதக் கதை – தருமனுடன் கடைசி வரை வந்த நாய்.
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை–குறள் 36
அக்டோபர் 28 வெள்ளிக் கிழமை
நல்லோரை வாழ்த்திட தீயோரை வீழ்த்திட; பரித்ராணாய ஸாதூனாம் –கீதை 4-8
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்–குறள் 550
XXX

அக்டோபர் 29 சனிக்கிழமை
ஆசாரம் பற்றி
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது–குறள் 1075
XXX
அக்டோபர் 30 ஞாயிற்றுக் கிழமை
அஸ்வத்தாமா தீ வைத்த மஹாபாரத/ பஞ்ச தந்திரக் கதை
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது–குறள் 481
Other Pancha tantra stories in Tirukkural – 273, 274, 277, 481, 500, 495, 633, 1087,
XXX
அக்டோபர் 31 திங்கட் கிழமை
ஆண்டவன், கடவுள், இறைவன் என்ற தமிழ்ச் சொற்கள் இருந்தும் தெய்வம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லையே வள்ளுவர் போற்றினார்
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை– குறள் 55
‘கணவனே கண்கண்ட தெய்வம்’; ‘பத்தினிப் பெண்கள் அற்புதம் செய்ய முடியும்’ என்பது இந்து மதத்தில் மட்டுமே உண்டு
தெய்வம் Deiva / divine – 43, 50, 55, 619, 702, 1023
–SUBHAM–
tags- திருக்குறளில், இந்துமதம், அக்டோபர் 2022 ,காலண்டர், குறள்