‘பர்தா’ ஒழிக – பாரதியார் முழக்கம் (Post No.10,653)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,653

Date uploaded in London – –    12 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி! – பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;
வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் – இந்த
மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;
வல்லி யிடையினையும் மார்பிரண்டையும் – துணி
மறைத்தத னாலழகு மறைந்த தில்லை;
சொல்லித் தெரிவ தில்லை, மன்மதக்கலைமுகச்
சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ? 1

ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென் கிறாய் – பண்டை
ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ?
ஓரிரு முறைகண்டு பழகிய பின் – வெறும்
ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ?
யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார் – வலு
வாக முகத்திரையை அகற்றி விட்டால்?
காரிய மில்லையடி வீண் பசப்பிலே – கனி
கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பனோ? 2- பாரதியார்

தற்காலத்து தமிழ் உலகின் மிகப் பெரிய கவிஞன் பாரதியார் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. அவர் மாபெரும் தமிழ் அபிமானி, தேச பக்தர், சர்வ சமய புரவலர், இந்து மத போற்றுநர் என்பதிலும் எவருக்கும் ஐயமில்லை. ஏசுவையும், புத்தரையும், முகமது நபியையும் பாராட்டிப் பாடல்களும் இயற்றினார் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. அவருக்கு பர்தா , முகத்திரை பிடிக்காது. ஏனெனில் இது வேத காலப் பெண்களிடத்தில் கிடையாது. இது அவர் சொல்லும் செய்தி; நான் செய்யும் விமர்சனம் அல்ல.

வேத வாழ்வைக் கடைபிடிக்க வேண்டும்; பெண்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்று தற்காலத்தில் பாடிய முதல் கவிஞனும் பாரதிதான் .

பாரதியின் படலைப் படிப்பதற்கு முன்னர் இன்னொரு விஷயத்தையும் கவனிப்போம். இந்தியாவின் புராதனப் பெண்கள் சிலைகள் சாஞ்சி, பர்ஹுத் , அமராவதி முதிய இடங்களில் உள்ளன. அவைதான் பெண்களின் பழைய சிலைகள். அதாவது 2300 ஆண்டுகள் பழமையானவை. அதற்கு முன்னர் இலக்கிய வருணனைகளிலும் முகத்திரை கிடையாது. கல்யாண சடங்குகளின் போது முதல் தடவையாக பெண்ணைப் பார்க்கும்போது SUSPENSE சஸ்பென்ஸ், வியப்பு,வேடிக்கை, கேளிக்கை இருக்க வேண்டும் என்பதற்காக திரைக்குப் பின்னர் உட்கார வைத்து திரையைத் திறந்தனர்.

நமது வீட்டில் சின்னக் குழந்தைகளுடன் கண்ணாமூச்சி விளையாடும்போது கூட இப்படி ஒளிந்து கொண்டு முகத்தைக் காட்டினால் அது பெரிதாகச் சிரிக்கும்; ஆனந்தம் அடையும். அது போல பெண்ணை மஹத்தாக அலங்கரித்து திடீரென்று காட்டும்போது, முன்னர் பார்த்த பெண் இவள்தானா அல்லது புதிய தேவதையா என்று மணமகன் வியப்பான் . இந்த விஷயம் ரிக் வேத 10-85 கல்யாண மந்திரத்தில் தெளிவாக உள்ளது. நீயே மஹாராணி என்று அந்த மந்திரம் பெண்ணைப் புகழ்கிறது .

இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். உலகில் மிகப்பழமையான ஓவியங்கள் நமக்கு எகிப்தின் பிரமிடுகளில், ஏனைய கட்டிடங்களிலும் கிடைக்கின்றன. அவர்களும் பர்தா அணியவில்லை . சங்கத் தமிழ் நூல்களிலும், கோவில் சிலைகளிலும் பர்தா கிடையாது. அஜந்தா, சித்தன்னவாசல், தஞ்சசைக் கோவில் ஓவியங்களிலும் பெண்கள் பர்தா அணியவில்லை.

முஸ்லீம்கள்  ஏன் அணிந்தார்கள் என்றால் சவூதி அரேபியா போன்ற பாலைவனத்தில் (DESERT SAND STORMS) வாழ்ந்த பெண்கள் தங்களை மணற் புயல் காற்றிலிருந்து காப்பதற்காக அதை அணிந்தனர். முஸ்லீம்கள் வாழ்ந்த துருக்கியில் பர்தா கிடையாது.

பல இனத்தவரும் பர்தா அணிவதாக வைத்துக் கொள்வோம். ஒருவருடைய முகக் குறிப்பைவைத்தது அவர்களுடைய எண்ணங்களை அறிய வாய்ப்பே இல்லாமல் போய்விடும். இது பள்ளி ஆசிரியர்கள் , வாடிக்கையாளரை  சந்திக்கும் பொறுப்பில் உள்ளவர்களுக்கு பெரிய சங்கடத்தை விளைவிக்கும். ஆக PRACTICAL பிராக்டிகல் ஆகப் பார்த்தாலும், விஞ்ஞான SCIENTIFIC  முறையில் பார்த்தாலும் பர்தா  தேவை இல்லை.

இதை முஸ்லீம்களே முன்வந்து செய்தால் இன்னும் அழகாக இருக்கும். இதற்காக ஒரு கோர்ட், ஒரு இயக்கம், ஒரு சட்டம் தேவை இல்லை.

அவர்கள் சமய விழாக்களில் பங்கு கொள்ளும்போது அவர்கள் வழக்கப்படி செய்யலாம். அதற்குத் தடை ஏதுமில்லை. ஆக வரலாற்று ரீதியிலும் கிரேக்க, ரோமானிய, எகிப்திய , சீன, இந்து கலாசாரங்களில் பர்தா கிடையாது.

சிலர் ரிக் வேதத்தில் உள்ள 10,552 மந்திரங்களில் இரண்டே மந்திரங்களைக் காட்டி ஏதோ பர்தா இருந்ததாக சொல்ல முனை ன்றனர் . அந்த 8-33 மந்திரத்தின் அடிக்குறிப்பிலேயே கடைசி மூன்று மந்திரங்கள் புரியவில்லை ‘எசகு பிசகாக’ உள்ளது என்று எழுதிவைத்துள்ளனர்.

ரிக்வேதம் முழுதையும் மொழிபெயர்த்த ஜம்புநாத அய்யர் எழுதியுள்ளதை படியுங்கள் :–

8-33-17

ஸ்திரீயினுடைய மனம் கட்டுக்கடங்காதது ; அவளுடைய மனத்  திட்பம் அற்பமாயிருக்கிறது என்று இந்திரன் சொன்னான்.

8-33-18

(17க்கும் 19க்கும் சம்பந்தமில்லாத விஷயம் )

இந்திரனுடைய இரண்டு குதிரைகள் அவனுடைய ரதத்தை வேகமாக இழுக்கின்றன. தேரின் தண்டம் – இணைக்கும் கட்டை — இரண்டு குதிரைகளின் மீது உள்ளன.

8-33-19

உன்னுடைய கண்களைக் கீழே செலுத்தவும்; மேலே பார்க்காதே; கால்களை இருகச் சேர்த்துக் கொள்ளவும் உன் ஆடை மறைத்திருப்பதைக் காணாமல் இருப்பார்களாக.. ஏனெனில் நீ பிராமணனாய்  இருந்து — ஆணாக இருந்து — ஸ்திரியானாய்

இதற்கு ஜம்பு நாத அய்யர் எழுதிய அடிக்குறிப்பு :-

16 முதல் 19 வரையான பாடல் தெளிவாக இல்லை . முந்தைய பாடல்களுடன் தொடர்பும் தெரியவில்லை . 16, 18 இரண்டும் ஒரு பெண் படுவது. 17 ஒரு மனிதன் கூறுவது. 19 இந்திரன் ஆசங்கனிடம் கூறுவது. இந்த ஆசங்கன் கடவுளால் பெண்ணாக மாறுமாறு சபிக்கப்பட்டு பின் ஆணாக மாறினான் என்று ஒரு கதை உண்டு.

ஆக இது பர்தா பற்றியது அல்ல. ஒரு ஆண் பெண்ணாக மாறி மீண்டும் ஆணாக மாறும்போது உடை பற்றிச் சொன்ன விஷயம். இது பர்தாதான் என்று சாதிப்பார் ஆண் -பெண் – ஆண் ஆனதையும் நம்புகிறார்களா ? பகிரங்கமாகச் சொல்லட்டுமே. அது சரி இப்படி ஓவியமோ சிலையோ பர்தாவுடன் 2300 ஆண்டுகள்ளாக இல்லையே .

XXXXX

கண்ணம்மா என் காதலி –3

தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி ! பெண்கள்

திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்

வல்லி இடையினையும் – ஓங்கி முன்னிற்கும் – இந்த

மார்பையும் மூடுவது சாத்திரம் கண்டாய்

ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென்கிறாய்

ஆரியப் பெண்களுக்கு திரைகள் உண்டோ?

ஆக பாரதியார் சொல்லுவதே சரி. இது தில்லித் துலுக்கர் செய்த வழக்கம்

கண்ணம்மா ஏன் முத்திரையுடன் வந்தாள் ? என்று ஒரு கேள்வி எழலாம். ; துலுக்கர் படையெடுப்பின்போது அவர்கள் இந்துப் பெண்கள் மீது நடத்திய தாக்குதலை வீர சிவாஜி பாடலிலும், குரு கோவிந்த் சிம்மன் பாடல்களிலும் பாரதியார் விரிவாகப் பாடி சாடுகிறார். ஆகவே கண்ணம்மா (வடக்கத்திய ராஜபுதன பெண் அல்லது கோபியர் தலைவி ராதா) வை அவர் வடக்கத்திய பெண்ணாக கற்பனை செய்வதே “பர்தா முறை ஒழிக” என்ற கருத்தை விளக்கவே என்று சொன்னால் மிகையாகாது. பாடல் முழுதும் அவர் பிரஸ்தாபித்த ஒரே வழக்கம் பர்தா – முகத் திரைதான்!

-சுபம்-

பர்தா, முகத் திரை, பாரதியார், தில்லித் துருக்கர், வழக்கமடி,பெண்கள்

பெண்கள் பற்றி மேல்நாட்டு அறிஞர்கள்: பெண்கள் வாழ்க-18 )Post.9539)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9539

Date uploaded in London – –27 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

பெண்கள் பற்றி மேல்நாட்டு அறிஞர்கள்; பெண்கள் வாழ்க Part 18;இந்தியப் பெண்களைவிட மேல்நாட்டுப் பெண்கள் கூடுதல் ‘சுதந்திரத்துடன்’ வாழ்வது உண்மைதான். ஆனால் இந்தியப் பெண்களைவிட இன்பமான மகிழ்ச்சியான குடும்ப வாழ்வு வாழ்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும். ஏனெனில் விவாகரத்தும் தனிமையாக (separation; single mothers)  

tags – பெண்கள் , மேல்நாட்டு அறிஞர்கள், பெண்கள் வாழ்க-18, 

பெண்கள் வாழ்க -8; உலகிலேயே அதிர்ஷ்டசாலிப் பெண்கள்! (9454)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9454

Date uploaded in London – –4 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

இந்து சமயப் பெண்கள்தான் உலகிலேயே அதிர்ஷ்டசாலிகள்- திறமைசாலிகள்  என்பதற்கு 33 காரணங்கள் உள . அவையாவன :–1.பழங்கால  உலகில் பெண்களுக்கு ஸ்வயம்வரம் வழங்கிய ஒரே நாடு இந்தியா . திரவுபதி ஸ்வயம்வரம் தமயந்தி ஸ்வயம்வரம், காளிதாசன் காவியத்தில் காணப்படும் இந்துமதி 

tags- பெண்கள் வாழ்க -8, அதிர்ஷ்டசாலி, பெண்கள், ஸ்வயம்வரம்

தூய்மையான பெண்கள் ஆண்களைவிட வலிமை உடையவர்கள்- காந்தி (Post.9329)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9329

Date uploaded in London – –     2 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 26 continued…

kattukutty

அழகு என்பது என்ன???

அழகு – சிறிது காலம் நிலைத்திருக்கும் ஓர் ஆணவ ஆட்சி!!!

XXX

விழுங்கல்கள்

விபசாரம் – செல்வத்தை விழுங்கும்.

பிரார்த்தனை – துன்பத்தை விழுங்கும்.

தர்மம் – நோயை விழுங்கும்.

பொய்ணவு, உடை, உறைவிடத்தை விழுங்கும்.

புறம் கூறுதல் – இறை வழிபாட்டை விழுங்கும்.

கவலையதை விழுங்கும்

XXXX

தூய்மையான பெண்கள் ஆண்களைவிட வலிமையுடையவர்கள்.

பெண்ணுக்குஉண்மையான ஆபரணம் அவளது தூய்மையான

நடத்தையே !!! – மஹாத்மா காந்தி

XXX

சிரிப்புஇரண்டு பேர்களுக்கிடையே உள்ள குறைந்த இடைவெளி!!!

XXXX

  ரா தி

வேஷ்டி – மடித்து கட்டினால் டீஸன்ட்டாக இருக்காது.

இறக்கி விட்டால் தடுக்கி விடுவது……

XXX

காதல் – யோசிக்காமல் செய்து பின் வருத்தப் பட வைப்பது

மருந்து – ழைகளால் வாங்க முடியாதது.

மானம் – ஏலத்தில் விடப்போவதாக அடுத்த வீட்டுக்காரன் நம்மை

அடிக்கடி மிரட்டிக் கொண்டிருப்பது.

ஜோக் – ம்மால் அடிக்க முடியாதது. அப்படியே அடித்தாலும்

அடுத்தவர் சிரிக்காதது.

எருமை மாடு – எல்லா அப்பாக்களும் தங்கள் மகன்களுக்கு

வைத்திருக்கும் பட்டப் பெயர்!!!

விமான விபத்து – இதில் சாகும் அளவிற்கு பலரிடம் வசதி இல்லை.

பேனா – சியானால் அழகாக எழுதுவது. சொந்தமானால் சொதப்புவது…….

எரிச்சல் – அழகாக இருக்கும் பெண்களைப் பார்த்து அழகில்லாத

பெண்களும் அழகாக இருக்கும் மற்ற பெண்களும் அடைவது….

பூ – ஈறும் பேனும் பொடுகும் உள்ள இடத்தை அடைப்பது

பொறுமை – நிறைய இருந்து நேரமாக, நேரமாகக் குறைவது.

ரத்தம் – சைக்கிள், மோட்டார் சைக்கிள் உபயோகிக்கும்போது

அடிக்கடி தென்படுவது.

மீசை – இது இல்லாவிட்டால் நாம் ஆண்தான் என்று நம்ப வைப்பது

மிக சுலபமில்லை……

டைம் – நம்ம கடிகாரம் ஓடாதிருக்கும் போது மற்றவர் கேட்பது.

நகம் – டென்ஷனா இருக்கும்போது துண்டு துண்டா வயிற்றுக்குள்

போவது……

ஸ்டைல் – ல்லாததை இருப்பது மாதிரி காட்டுவது.குறிப்பாக ஆண்கள் பெண்களிடமும், பெண்கள் ஆண்களிடமும்!!!

***

TAGS- பெண்கள் ,வலிமை ,  காந்தி,

கிரேக்க நாட்டிலும் யூத மதத்திலும் பெண்கள் (Post No.7592)

When i went to Greece, i visited the historical island Santorini. I took this picture in Santorini.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7592

Date uploaded in London – 19 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

தம்பதி என்ற சொல் வேதத்தில் வருகிறது. இதன் சம்ஸ்கிருதப் பொருள்- கணவனும் மனைவியும் குடும்பத்தின், வீட்டின் கூட்டுச்  சொந்தக்காரர்கள் என்பதாகும். இதை விளக்கும் வகையில் சிவனும் உமையும் அர்த்தநாரீஸ்வரர்  வடிவத்தில் காட்டப்பட்டுள்ளது  . அதாவது உறவினில் ல் 50-50; உரிமையில் 50-50. tamilandvedas.com, swamiindology.blogspot.com

தம்பதி – ரிக் வேதம் 8-31-5/6

யா தம்பதி சமனஸா சுனுதா அ ச

தாவள: தேவஸோ நியயாசிர்

Xxx

இல்லாள், இல்லத்தரசி

Picture card bought in Athens Museum

தமிழில் இல்லாள், இல்லத்தரசி என்றெல்லாம் சொல்கிறோம். இதுவும் தமிழில் வருவதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ரிக்வேதத்தில் உள்ளது. கல்யாண மந்திரங்களில் ‘நீயே வீட்டுக்கு ராணி’ என்று வருகிறது.

சங்க இலக்கியப்  பாடல்களில் மனைவியை ‘குடும்ப விளக்கு’ என்று அற்புதமாக வருணிக்கிறரர்கள் .

ரிக் வேதம் (3-53-4) மனைவியே வீடு என்கிறது.

கிருஹம் என்றால் வீடு/ இல்லம். கிருஹிணி  என்றால் வீட்டுக்காரி , இல்லாள் , இல்லத்தரசி ; அதாவது இல்லத்தை ஆள்பவள். தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் இந்தக்கருத்து அப்படியே இருப்பது இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனை, ஒரே அணுகுமுறை, ஒரே பண்பாடு என்பதைத் தெள்ளிதின் tamilandvedas.com, swamiindology.blogspot.com

விளக்கும்.

Xxx

மணப் பெண்

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்ட வேண்டும் . ‘வது’ என்ற சொல் சம்ஸ்கிருதத்தில் மணப் பெண் என்ற பொருளிலும் வரும். சங்கத் தமிழ் பாடல்களிலும் இந்த ரிக் வேதச்  சொல் அதே பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

Xxx

தொழிற்சாலைகளில் பெண்கள்

துணி நெய்தல், நூல் நூற்றல் ஆகிய தொழில்களில் வேதகாலப் பெண்கள் ஈடுபட்டிருந்தனர். ஆனால் வியப்பா ன விஷயம் அவர்கள் போர்க் கருவி செய்யு ம் ஆலைகளிலும் வேலை பார்த்ததை ‘இஷு கர்த்ரயாக’ என்ற சொல் காட்டுகிறது.

வேத காலத்தில் ‘பர்தா’ முறை கிடையாது. இதை பாரதியார் பாடலிலும் வலியுறுத்துகிறார். இது தில்லித் துருக்கர் (துலுக்கர்) செய்தவழக்கமடி என்று சாடுகிறார். துலுக்கர் என்று பாரதியார்  எழுதியதை சில தமிழ் அறிஞர்கள் ஒன்றுகூடி துருக்கர் என்று மாற்றியதாக எங்கள் தமிழ் குருநாதர் , மதுரை சேதுபதி உயர் நிலைப் பள்ளி ஆசிரியர் வி.ஜி.சீனிவாசன் சொல்லி tamilandvedas.com, swamiindology.blogspot.com வருத்தப்படுவார்.

xxx

கிரேக்க நாட்டிலும் யூத மதத்திலும் பெண்கள்.

Picture card from Athens Museum

வேதம் தோன்றிய சுமார் ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர் கிரேக்க மொழியில் ஹோமர் என்னும் அந்தகக் கவிராயர் (Blind Poet Homer) இலியட், ஆடிஸி என்ற இரு பெரும் காவியங்களை எழுதினார்.

அதில் அக்காலப் பெண்கள் எப்படி  நடத்தப்பட்டனர் என்று வருகிறது. ஒரு மன்னர் வேற்று நாட்டை வென்றால் அந்த நாட்டிலுள்ள பெண்களை  வீரர்கள்  அ னைவரும்  பகிர்ந்து கொள்ளலாம். “வாருங்கள் வீரர்களே, அணி திரண்டு வாருங்கள். நாம் வெற்றி பெற்று வேற்று நாட்டுப் பெண்களை பகிர்ந்து கொள்வோம்” என்று ஹோமர் அறைகூவல் விடுக்கிறார். இந்து மன்னர்கள், வேற்று நாட்டு செல்வங்களைப்  பகிர்ந்து கொள் வார்கள். ஆனால் பெண்களை மதிப்புடன் நடத்துவர். வீர சிவாஜி முஸ்லீம் மகளிரை எவ்வளவு மதிப்புடன் நடத்தினார் என்பதை நாம் tamilandvedas.com, swamiindology.blogspot.com அறிவோம்.

வேதத்தில் சில பாடல்களை சகோதர -சகோதரி திருமணம் நடந்ததாக சிலர் சித்தரிப்பர். எகிப்தில் இவ்வழக்கம் இருந்தது. தமிழ் நாட்டில் இப்போது காணப்படும் அத்தை மகன், மாமன் மகள் கல்யாணத்தையும்  ஆங்கிலேயர் ‘கஸின் மேரியேஜ்’ (Cousin Marriage) என்றே சொல்லுவர்; அதாவது ‘ஒன்றுவிட்ட சகோதரர்’ என்னும் பொருள். இது வேதகாலத்தில் இருந்திருக்கலாம். கிருஷ்ணர் விஷயத்திலும் இதைக் காண்கிறோம். அதாவது உறவு முறைத் திருமணம்- முறைப் பெண் கல்யாணம்.

கணவன் இறந்த பின் மனைவி உடன்கட்டை ஏறுவது பிற்கால வழக்கம். புற  நானுற்று பாடலில் பாண்டிய ராணி பூதப்பாண்டியன் தேவி இப்படி உடன்கட்டை ஏறிதைக் காண்கிறோம். வேதகாலத்தில் இது குறைவு . அதற்குப் பதிலாக இறந்து போன கணவரின் சகோதரன் அவளை மனைவியாக ஏற்பான் . இந்த வழக்கம் யூதர்களிடையேயும் tamilandvedas.com, swamiindology.blogspot.com இருந்தது.

பார்ஸி மதத்தினரின் வேத நூலான ஜெண்ட் அவஸ்தா(Zend Avesta) கணவனுக்கு கீழ் படிந்து பெண்கள் நடக்க வேண்டும் என்கிறது. இதையெல்லாம் ஒப்பிட்டுக் கட்டுரை எழுதிய டாக்டர் ராதாகிருஷ்ணன் , டாக்டர் ரமேஷ் சந்திர மஜூம்தார் போன்ற பேரறிஞர்கள் வேத காலப் பெண்கள் வாழ்வே சிறந்தது என்று உறுதிபடப் tamilandvedas.com, swamiindology.blogspot.com பேசுகிறார்கள்

Source book –  Great Women of India, Advaita Ashrama, Mayavati, Almora, Himalayas, year 1953 (with my inputs from Tamil literature )

xxx

இலக்கியத்தில் 51 வகை பெண்மணிகள்! (Post No.6422)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 21 May 2019


British Summer Time uploaded in London – 15-19

Post No. 6422

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

பெண்கள் மீது ஹமுராபி பாய்ச்சல் (Post No.5965)

WRITTEN   by London swaminathan

swami_48@yahoo.com


Date:20 JANUARY 2019


GMT Time uploaded in London – 20-36
Post No. 5965


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

வேதம் படிக்க 36 ஆண்டு! யாரைக் கல்யாணம் கட்டலாம்?- மநு (Post No.5085)

Written by london swaminathan

 

Date: 7 JUNE 2018

 

Time uploaded in London –  22-14  (British Summer Time)

 

Post No. 5085

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

மநு சொல்லும் விநோதச் செய்திகள்

மநு நீதி நூல்- Part 18

Third Chapter begins

வேதம் படிக்க 36 ஆண்டு! யாரைக்  கல்யாணம் கட்டலாம்?- மநு (Post No.5085)

 

3-1.மூன்று வேதங்களையும் படிப்போர் 36 ஆண்டுகள் அல்லது 18 ஆண்டுகள் அல்லது 9 ஆண்டுகள் அல்லது வேதத்தின் ஒரு கிளையை (ஷாகா) முடிக்கும் வரை பயிலலாம்.

3-2.மூன்று அல்லது இரண்டு அல்லது ஒரு வேதத்தைப் பயின்ற பின்னர் இல்லற வாழ்வில் காலடி எடுத்து வைக்கவும்

3-3.வேதம் பயின்று முடித்தவனை சந்தனம், மலர் மாலை, மதுபர்க்கம் (பால்+தேன்), பசு தானம் கொடுத்து மரியாதை செய்க

3-4.இந்த பட்டமளிப்பு விழாவுக்குப் பின்னர் அழகான பெண்ணை மணக்கலாம்.

3-5. மதச் சடங்குகளைச் செய்யவும் பிரஜா உற்பத்திக்காகவும் தன் கோத்ரத்தில் சேராத தாயின் ஏழு தலைமுறைகளில் தொடர்பில்லாத ஒரு பெண்ணை கல்யாணம் கட்டு.  இது   மூன்று வருணத்தாருக்கும் பொருந்தும்.

 

 

3-6. ஆடு மாடு, தன, தான்யம் மிகுந்த குடும்பத்தில் பெண் எடு; ஆயினும் பின்வரும் பத்து குலத்தைத் தவிர்.

 

3-7.ஆண் குழந்தைகளே பெறாத குடும்பம், சடங்குகளைப் பின்பற்றாதோர், வேதம் ஓதாதோர், உடல் முழுதும் முடியுடையோர், க்ஷயரோகம், வயிற்று வலி, மூல வியாதி உடையோர், பெரு வியாதி, வெண் குஷ்டம் உடையோர், யானைக் காலர், குடும்பத்தில் பெண் எடுக்காதே.

3-8.செம்பட்டை முடி, சிவப்புக் கண்கள், உடல் முடியுடையோள், நோயாளி, கடும் சொல் உடைய பெண்கள் வேண்டாம்

3-9. நட்சத்திரம், நதி, மலை, மரம், அடிமைப் பெண்கள் , ஈன ஜாதி, பறவை, பாம்பு ஆகிய பெயர்களை உடைய பெண்கள் வேண்டாம்.

யார், யாரை மணக்கலாம்?

3-10. அழகான, நற் பெயர் உடைய, மென் குரல், மென் முடி, வெண் பற்கள், இன் சொல்லினள், அன்ன நடை உடைய பெண்கள் நல்லது

 

3-11.சஹோதரன் இல்லாதவள், தகப்பன் பெயர் தெரியாதவள் வேண்டாம். அவர்களுக்குப் பிறப்போர் புத்ரிகா, புத்ரன் ஆவர். பின்னொரு அத்யாயத்தில் விளக்கம் உளது.

3-12.தனது வருணப் பெண்ணை மணப்பது சிறப்பு; ஆயினும் இரண்டாம் கல்யாணம் செய்வதாயின் பின்வரும் கட்டளைகளை மனதிற் கொள்க

3-13. நாலாம் வருணத்தவன் (சூத்திரன்) தனது வருணத்திலும் வைஸ்யன் தனது இனம்+ நாலாம் வருணத்திலும், க்ஷத்ரியன் மற்ற இரு வருணத்திலும் பிராஹ்மணன் நால் வருணத்திலும் மணக்கலாம்.

3-14 . அந்தணனுக்கும் அரசனுக்கும் சொந்த இனத்தில் பெண் கிடைக்காவிடில் முதல் மணமே நாலாம் வருண பெண்ணைக் கூட மணக்கலாம்.

3-15. தாழ்ந்த ஜாதியில் மணப்பவர்கள், பிறக்கும் குழந்தைகளையும் நாலாம் வருணத்துக்கு இழுத்துவிடுவர்.

3-16. நாலாம் வருணத்தவனை மணப்பவன் பதிதன் என்று அத்ரி, சௌனகர், கௌதமன் பிருகு முதலியோர் கூறுவர்.

 

3-17.  தாழ்ந்தகுலப் பெண்ணுடன் படுக்கும் அந்தணன், நரகத்தை அடைவான். பிறக்கும் பிள்ளையும் பிராஹ்மணன் இல்லை.

3-18. அப்படிப் பிறக்கும் பிள்ளை கொடுக்கும் பிண்டத்தை பித்ருக்கள், தேவர்கள் ஏற்க மாட்டார்கள்.

3-19. தாழ் குலப் பெண்ணின் அதர பானமும் மூச்சுக் காற்றும் பிறக்கும் குழந்தைகளுக்கும் பாவத்தை உண்டாக்கும்.

3-20. அடுத்த ஸ்லோகத்தில் இம்மை மறுமைப் பயன்களை நல்கும் எட்டுவகைத் திருமணங்கள் பற்றி இயம்புவேன்

 

எனது கருத்துகள்

  1. தமிழ் இலக்கியத்தில் நக்கீரர் 48 ஆண்டுகள் வேதம் பயின்றதாக உரைகாரர் உரைப்பர். ஒரு முனிவர் வேதம் எல்லாம் படிக்க 300 ஆண்டுகள் போதவில்லை என்றும் நாலாவது ஜன்மத்தில் பயின்றாலும் ‘கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு’ என்று இந்திரன் சொன்னதாகவும் முன் ஒரு கட்டுரையில் கண்டோம். இப்போதுள்ள வேதங்களையே எவரும் முழுக்க கற்க இயலாது; அழிந்து போன வேதங்களைக் கணக்கிற் கொண்டால் பல ஜன்மங்களும் போதாது.

 

2.இந்த 36 ஆண்டு, 48 ஆண்டு மனப்பாடப் படிப்பு இந்தியாவின் தனிச் சிறப்பாகும் இத்தகைய விஷயங்கள் வேறு பண்பாட்டில் இல்லாததால், ஆரிய-திராவிட வாதம் கட்டுக்கதை என்பது வெள்ளி டை மலை என விளங்கும். வெளிநாட்டில் இருந்து இந்துக்கள் வரவில்லை. இந்த நாட்டில் தோன்றிய பண்பாடே காரணம்.

 

  1. பிராஹ்மணர்கள் நால் வ மணக்கலாம் என்பதே புரட்சிகரமான கருத்து. மற்ற வர்ந்த்தாரும் ஏனையோரை மணக்கலாம் என்பது தற்காலத்துக் கருத்.து

4.மநு, மற்ற ஸ்ம்ருதிகாரர்களின்  கருத்துகளையும் மொழிகிறார். அகவே அக்காலத்திலேயே பல ஸ்ம்ருதிகள் இருந்ததை அறிகிறோம் அக்காலத்தில் கலப்பு மணம் இருந்ததை மநுவும் கோடிட்டுக் காட்டுகிறார். மக்களுக்குப் பல ஸ்ம்ருதிகளைப் பின்பற்றும் உரிமை இருக்கையில் மநு ஸ்ம்ருதியை மட்டும் எடுத்துக் கொண்டு குறைகூறுவதில் என்ன பொருள் உளது?

 

5.யாரை மணந்து கொள்ளலாம் என்பதில் கோத்ர முறை வருகிறது; ஒரே கோத்ரத்தில் பிறந்தவரை மணக்கக் கூடாது, நெருங்கிய உறவினரை மணக்கக் கூடாது  என்பதெல்லாம் இன்றைய விஞ்ஞான உலத்தில் ஏற்கப்பட்டுள்ளது.

 

  1. நட்சத்திரங்களின் பெயர்கள், நதிகளின் பெயர்களை பெண்களுக்குச் சூட்டக் கூட்டாது என்பது விநோதமான கருத்து . இன்றும் நட்சத்திரப் பெயர்களான ரேவதி, அஸ்வினீ, பரணி, கிருத்திகா, ஆருத்ரா, கங்கா, நர்மதா காவேரி, ஸரஸ்வதீ என்பதெல்லாம் சர்வ சாதாரணமாகப் பெரும்பாலோர் பெயர்களில் காணலாம். இந்துக்கள் எல்லா இயற்கைப் பொருட்களுக்கும் பெண்களின் பெயர்களையே சூட்டுவர். இதிலிருந்து மநு மிகப் பழங்காலத்தவர் என்பது தெளிவாகிறது

 

 

7.இத்தகைய பெயர் சூட்டும் முறையும் ஏனைய பண்பாட்டில் இல்லாததால் இந்துகள் அனைவரும் இங்கு தோன்றி ஒரே கலாசாரத்தை உருவாக்கினர் என்பது பொருத்தமாகும்.

8.வியாதிகள் பற்றி மநு எச்சரிப்பது ஆரோக்கிய வாழ்வை விரும்புவோரின் பட்டியலில் மநுவும் ஒருவர் என்பது புலனாகிறது.

 

9.மூன்று வேதங்களைப் பயின்றோர் த்ரிவேதி;

நான்கு வேதங்களைப் பயின்றோர் சதுர்வேதி;

இரண்டு வேதங்களைப் பயின்றோர்  த்விவேதி என அறியப்பட்டனர். ஒரு வேதத்தைப் பயின்றோர் கூட அரிதாகி வரும் நாளில் பெயரளவுக்கே த்ரிவேதி,சத்ர்வேதி முதலிய பெயர்கள் புழக்கத்தில் உள்ளன. ஆனால் அத்தகையோர் ஒருகாலத்தில் இருந்தனர்.

  1. பெண்களின் வருணனையில் அன்ன நடை யானை நடை முதலியன சங்கத் தமி ழ் இலக்கியத்தில் இருக்கிறது ஆக இமயம் முதல் குமரி வரை சிந்தனை ஒன்றே. அதுமட்டுமல்ல இக்கருத்துகள் வேறு கலாசாரத்தில் இல்லாததால் பாரத கலாசாரம் இங்கே தோன்றி இங்கே வளர்ந்தது என்பதையும் அறிக.

தொடரும்……………

 

ஆண்களை விட பெண்களுக்கு சக்தி அதிகம்-சாணக்கியன் (Post No.4685)

Date: 31 JANUARY 2018

 

Time uploaded in London- 15-07

 

Written  by LONDON SWAMINATHAN

 

Post No. 4685

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 
((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

ஆண்களை விட பெண்களுக்கு எல்லா அம்சங்களிலும் அ பார சக்தி இருப்பதாக உலக மஹா ஜீனியஸ்/ மஹா புத்தி சாலி, மேதாவிப் பிராஹ்மணன் சாணக்கியன் ,2300 ஆண்டுகளுக்கு முன்னர் இயம்பியதைப் படித்தால் அதிசயமாக இருக்கும்.

 

“ஆண்களை விட ஒரு பெண் இரண்டு மடங்கு சாப்பிடுவாள்;

ஆண்களை விட பெண்களுக்கு நான்கு மடங்கு புத்தி அதிகம்;

ஆண்களை விட பெண்களுக்கு துணிச்சல் ஆறு மடங்கு அதிகம்;

ஆண்களை விட பெண்களுக்கு செக்ஸ் (Sex drive) விஷயங்களில் எட்டு மடங்கு ஆர்வம் அதிகம்”.

ஆஹாரோ த்விகுணஹ ஸ்த்ரீணாம் புத்திஸ்தாஸாம் சதுர்குணா

ஷட்குணோஅத்யவஸாயஸ்ச காமஸ்சாஷ்டகுணஹ ஸ்ம்ருதஹ

–சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 17

 

xxx

 

எந்த ஜாதியானாலும் கல்யாணம் கட்டு!

 

 

“விஷப்பொருளில் அமிர்தம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்;

அசிங்கமான அழுக்கான பொருள்களுக்கு இடையே தங்கம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்;

கீழ் மக்களிடம் அறிவு இருந்தால் அதை ஏற்றுக்கொள்;

கீழ் மட்டத்தில் பிறந்த பெண் குணவதியாக இருந்தால் அவளை ஏற்றுக்கொள்”

விஷாதப்யம்ருதம் க்ராஹ்யமமேத்யாதபி காஞ்சனம்

நீசாதப்யுத்தமாம் வித்யாம் ஸ்த்ரீரத்னம் துஷ்குலாதபி

–சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 16

 

புறநானூற்றிலும் மநு ஸ்ம்ருதியிலும் இதற்கு இணையான கருத்துக்கள் உள்ளன.

 

xxx

 

பெண்களின் அழகு எது?

“குயிலின் அழகு இனிமையாகக் கூவுதலில் இருக்கிறது;

பெண்களின் அழகு கற்பில் உள்ளது (கணவனைத் தவிர யாரிடமும் விருப்பமின்மை);

அவலட்சணமான தோற்றம் உள்ளவரிடத்தில் அழகு என்பது அவருடைய அறிவுதான்;

யோகிகளுக்கு அழகு மன்னிப்பதில் உள்ளது”.

 

கோகிலானாம் ஸ்வரோ ரூபம் ஸ்த்ரீணாம் ரூபம் பதிவ்ரதம்

வித்யா ரூபம் குருபாணாம் க்ஷமா ரூபம் தபஸ்வினாம்

–சாணக்கிய நீதி, அத்தியாயம் 3, ஸ்லோகம் 9

 

திருக்குறளிலும் கற்பு மற்றும் கணவனைத் தொழுவது பெரிதும் போற்றப்படுகிறது. அதே போல குணம் என்னும் குன்றேறி நின்றார் உடனே மன்னித்துவிடுவர் என்றும் வள்ளுவன் கூறுவான்.

 

 

 

xxxx

 

 

பெண்களை தூய்மையாக்குவது எது?

வெண்கலத்தை சாம்பலால் தேய்த்து சுத்தப்படுத்தலாம்;

பித்தளையை அமிலத்தைத் தேய்த்து சுத்தப்படுத்தலாம்;

பெண்களுக்கு மாதவிடாய் (விலக்கு) வந்தால் சுத்தமாகிவிடுவர்

ஒரு நதியை வேகமாக ஓடும் தண்ணீர் சுத்தமாக்கும்.

பஸ்மனா சுத்யதே காம்ஸ்யம் தாம்ரமம்லேன சுத்யதி

ரஜஸா சுத்யதே நாரீ நதீ வேகேன சுத்யதி

–6-3

 

XXXX

யார் பாபம் யாருக்கு?

நாட்டு மக்கள் செய்த பாபம் அரசனைச் சாரும்;

அரசன் செய்த பாபம் புரோஹிதனைச் சாரும்;

மனைவி செய்த பாபம் கணவனைச் சாரும்;

மாணவன் செய்த பாபம் ஆசிரியரைச் சாரும்;

 

ராஜா ராஷ்ட்ர க்ருதம் பாபம் ராக்ஞஹ பாபம் புரோஹிதம்

பர்தா ச ஸ்த்ரீக்ருதம் பாபம் சிஷய பாபம் குருஸ்ததா

6-9

 

XXX

கல்யாணம் கட்டாதே!

கெட்ட அரசன் ஆளும் நாட்டைவிட காடே மேல்;

கெட்ட நண்பனைவிட, நண்பனில்லாததே மேல்;

கெட்ட மாணவனை விட மாணவன் இல்லாதததே மேல்;

கெட்ட மனைவியைவிட மனைவி இல்லாததே மேல்.

 

வரம் ந ராஜ்யம் ந குராஜராஜ்யம் வரம் ந மித்ரம் ந குமித்ரமித்ரம்

வரம் ந சிஷ்யோ ந குசிஷ்யசிஷ்யோ வரம் ந தாரா குதார தாராஹா.

6-12

 

–Subham–

 

யமன் (எமன்) போல வந்த 3 பெண்கள்! (Post No.4104)

Written by London Swaminathan


Date: 22 July 2017


Time uploaded in London- 11-00 am


Post No. 4104


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

ஒரு பாட்டுக்கு எனக்கு முழு அர்த்தம் விளங்கவில்லை. இது நீதி வெண்பாவில் உள்ளது. அந்த நூலை யார் எழுதினார்கள் அல்லது தொகுத்தார்கள் என்பது தமிழ் கூறு நல்லுலகிற்குத் தெரியாது. கால வெள்ளத்தில் மறைந்துவிட்டது. நாம் மிகவும் போற்றும் மூன்று பெண்களை எமனென்று வருணிக்கிறது இந்தப் பாடல்! ஓரளவுக்கு அர்த்தம் விளங்குகிறது!

 

முதலில் பாடலைப் படித்துவிட்டு விவாதிப்போம்:-

என்னே கிரேதத் திரேணுகையே கூற்றுவனாம்

தன்னேர் திரேதத்திற் சானகியே – பின்யுகத்திற்

கூடுந்திரௌபதையே கூற்றாம் கலியுகத்தில்

வீடுதொறும் கூற்றுவனாமே

 

பொருள்:-

கிரேதத்து- கிரேதா யுகத்தில்

இரேணுகையே – இரேணுகை என்பவளே

கூற்றுவன் ஆம் – யமன் ஆகும்

திரேதத்தில் – திரேதா யுகத்தில்

தன் நேர்- தனக்குத் தானே ஒப்பாகிய (வேறு எவரையும் உவமை சொல்ல முடியாத)

சானகியே –  சீதை என்பவளே

கூற்றுவனாம் – யமன் ஆகும்

பின் யுகத்தில் – அதற்கடுத்த துவாபர யுகத்தில்

கூடும் – வந்த

திரௌபதியே – திரௌபதையே

கூற்றாம் – யமன் ஆகும்

கலியுகத்தில் – இப்பொழுது நடக்கும் கலி யுகத்தில் என்றாலோ

வீடுதொறும் – ஒவ்வொரு வீட்டில் இருக்கும் (ஒவ்வொரு பெண்ணும்)

கூற்றுவனாம் ஆம் – யமன் ஆகும்

என்னே – இஃது என்ன ஆச்சரியம்!

 

மொத்தத்தில் கருத்து என்னவென்றால் பெண்கள் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்காமல் அடக்க ஒடுக்கமாக வாழவேண்டும். முன் யுகத்தில் இருந்ததைவிட இப்பொழுது பெண்கள் மிகவும் கெட்டுப் போய்விட்டார்கள் என்பதே.

 

அது எப்படி?

ரேணுகா – பரசுராமன் கதை பலருக்கும் தெரிந்ததே. ரேணுகாவுக்கு காமம் தொ டர்பான தீய எண்ணங்கள் வரவே அவரது கணவர் ஜமதக்னி ரேணுகாவைக் கொல்ல உத்தரவு இடுகிறார். உடனே பரசுராமன் அதைச் செய்கிறார். அதைப் பாராட்டி ஜமத்னி முனிவர் ஒரு வரம் தருகிறார். தன்னுடைய அம்மா ரேணுகாவை உயிர்ப்பிக்க வேண்டும் என்று வேண்டுகிறார். ரேணுகா மீண்டும் உயிர் பெறுகிறாள்.

 

இதில் ரேணுகா செய்த தவற்றால் ஒரு சம்பவம் நிகழ்கிறது. ஆனால் எல்லாம் சுபமாக முடிகிறது. பரசுராமர் க்ஷத்ரியர்கள் மீது கோபம் கொண்டு 21 தலைமுறையை அழித்ததற்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பில்லை.

 

சீதை, ஒரு மாய மானுக்காக ஆசைப்பட்டதால் ராவணன் கடத்துகிறான். இலங்கையே அழிகிறது. பிறகு சீதையைப் பற்றி ஒரு சலவைத் தொழிலாளி சந்தேகம் கிளப்பவே அவள் பூமாதேவியிடம் திரும்பிச் செல்கிறாள். இங்கு சீதை செய்த தவறு எல்லாப் பெண்களையும் போல தங்கத்துக்கு (பொன் மான்) ஆசைப்பட்டது. அதாவது அது பொன் மான் இல்லை என்று கணவன் தெளிவு படுத்தியும் அடம்பிடித்ததால் வந்த வினை.

 

மூன்றாவது, திரவுபதி சிரித்ததால் வந்த வினை. ரத்தினக் கல் போல இழைக்கப்பட்ட தரையைத் தண்ணீர் என்று நினைத்து துரியோதனன் தனது பட்டாடையைத் தூக்கவே பலகணியில் இருந்து அதைப் பார்த்த திரவுபதி ‘களுக்’ என்று சிரித்துவிட்டாள்; பெண்களுக்கான அடக்கம் அவளுக்கு அப்போது இல்லை.

 

இதற்கெல்லாம் சேர்த்துப் பழிவாங்க, வேறு ஒரு சந்தர்ப்பத்தில், அவளுடைய ஆடையை அவிழ்க்க உத்தரவிட்டான். அவள், உடனே சபதம் செய்து, மஹா பாரதப் போருக்குப் பின்னால்,  துரியோதனன் ரத்தத்தை முடியில் தடவி பழி தீர்த்துக்கொண்டாள். இது பெண்ணின் நகைப்பினால் வந்த வினை.

 

கலியுகத்தில் ஒவ்வொரு பெண்ணும் இப்படித் தவறு செய்யக்கூடும் என்பதால் புலவர் எச்சரிக்கிறார் போலும்.

 

இன்று டெலிவிஷன்களில் வரும் சீரியல்களிலும் அப்படித்தானே பெண்களைக் (நீலாம்பரிகளாக) காட்டுகிறார்கள்.

 

புலவர் பெருமான் காரணம் சொல்லாவிடிலும் மூன்று கதைகளையும் நாமாகத் தொடர்புபடுத்தி விளக்கம் காண முடிகிறது.

 

வேறு ஏதேனும் பொருள் தெரிந்தால் நீங்களும் சொல்லலாம்.

TAGS:- யமன், பெண்கள்,ரேணுகா, சீதை, திரௌபதி, யுகம்

-சுபம்–