சாக்ரடீஸுக்கு வேதம் கூட தெரியும்! (Post.10,387)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,387

Date uploaded in London – –   28 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸுக்கு(Socrates)  இந்து மத உபநிஷத்துக்கள் அத்துப்படி என்று பல ஆங்கில நூல்கள் வந்துவிட்டன. சாக்ரடீஸ் நேரடியாக நமக்கு எதையும் எழுதி வைக்க வில்லையாயினும் அவருடைய பிரதம சீடன் பிளாட்டோ(Plato) எழுதிய விஷயங்கள் மூலமாக நாம் முழு சித்திரத்தைப் பெறுகிறோம்.

சுமார் 2400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கிரேக்க அறிஞர் அவருக்கு முந்தைய பித்தகோரஸ் (Pythagoras) முதலியோர் மூலம் இந்து மத நூல்களை அறிந்ததை நாம் ஊகிக்க முடிகிறது. பித்தகோரஸ் தியரம் (Pythagoras Theorem தேற்றம்) என்பது இந்துக்கள் முன்னரே வேத காலத்தில் சொன்னது என்பதை இப்பொழுது உலக அறிஞர்கள் ஒப்புக்கொள்ளுகின்றனர்.(கணித வரலாறு பற்றிய நூல்களைக் காண்க)

ஆக, பித்தகோரஸ், அவருக்குப் பின்னர் சாக்ரடீஸ், அவரது சிஷ்யன் பிளாட்டோ, அவரது சிஷ்யன் அரிஸ்டாட்டில் (Aristotle) , அவரது சிஷ்யன் மாமன்னன் (Alexander)அலக்ஸ்சாண்டர் என்று வரிசையாக இந்து மத ஆதரவாளர்களைக் காணமுடிகிறது. கிரேக்க அறிஞர்களே இவர்களுடைய இந்து மத தொடர்பு, சைவ உணவு ஆதரவு பற்றி எழுதிவிட்டனர்.

நான் செய்த ஆராய்ச்சியில் வள்ளுவருக்கு சாக்ரடீஸ் தெரியும் என்று கண்டுபிடித்தேன். 1990-களில்  லண்டனிலிருந்து டாக்டர் இந்திரகுமார் வெளியிட்ட மேகம் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் இதை எழுதி அது 2015ல் விநாயகா பதிப்பக புஸ்தத்த்திலும்  வந்துவிட்டது. (காண்க – தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்)

குறள் 580-ல் நண்பர்களே விஷம் கொடுத்தாலும் அதை நண்பர்கள் மனம் வருந்தாமல் இருக்க குடிப்பது நாகரீகம் என்று வள்ளுவர் பாடுவது சிவபெருமானை அல்ல; சாக்ரடீஸையே என்று நான் எழுதியுள்ளேன்.

சாக்ரடீஸ் போதித்த ‘உன்னையே நீ அறிவாய்’ (Know thyself) என்ற ஆத்ம விசாரம், உபநிஷத் வாக்கியம் என்பதை உலகமே அறியும். மேலும் சாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், நண்பன் கிரிட்டோ(Creto) வை அழைத்து “ஏய் , ஆத்தாளுக்கு கோழியை பலி கொடுக்க மறந்துவிடாதே ; நான் ஆத்தாளுக்கு நேர்த்திக் கடன் செய்ய வேண்டியுள்ளேன்” என்று சொன்னதும் அவர் ஒரு பக்கா ஹிந்து என்பதைக் காட்டுகிறது.

இப்பொழுது அதர்வண வேதத்தைப் படித்துக் கொண்டு இருக்கிறேன். அதில் சூரியனுக்கும் கண்ணுக்கும் உள்ள தொடர்பு பற்றிய பாடலில் வெள்ளைக்காரன் Ralph T H Griffith கிரிப்பித் கூட சாக்ரடீசும் இதைச் சொல்லியுள்ளார் என்று அடிக்குறிப்பில் சொல்கிறார்.

இதோ அதர்வண வேத மந்திரமும்  Griffith கிரிப்பித் விமர்சனமும்

காண்டம் 5; துதி 9 (சூக்தம் எண் 151)

மந்திரம் 7

“சூரியன் என் கண் ; காற்று என் பிராணன்; வானம் என் ஆத்மா; பூமி என் உடம்பு; எனக்கு வெல்லப்படாதவன் என்ற பெயர் உண்டு ; அப்படிப்பட்ட நான் என் ஆத்மாவை பாதுகாப்பதற்காக பூமிக்கும் வானத்துக்கும் அளிக்கிறேன்”.

நம்முடைய ஆராய்ச்சிக்கு தேவையான வரி “சூரியன் என் கண்”; இது பல இடங்களில் வேதங்களில் வருகிறது ; ரிக் வேத மந்திரங்களில் மிகவும் பிரசித்தமானது புருஷ சூக்தம் (10-90) இதை கோவிலில் அபிஷேக காலத்தில் சொல்லுவதால் எல்லோருக்கும் தெரிந்த மந்திரம். அதில் கடவுளின் கண்களில் இருந்து சூரியன்  பிறந்ததாக வருகிறது. மேலும் இறுதிச் சடங்கு மந்திரம் (10-16-3) ஒன்றிலும் கண்களை சூரியன் எடுத்துக்கொள்ளட்டும் என்றும் வருகிறது . இது தவிர ஏனைய வேதங்களில் ‘’சூரியன்- கண்’ தொடர்பு  காணக்கிடக்கிறது

கிரிப்பித் Griffith Footnote அடிக்குறிப்பு

சாக்ரடீஸ் கூறுகிறார்:எல்லா புலன்களுக்கும் கண்களையே நான் சூரிய ன் போல ஒளி உள்ளதாகக் கருதுவேன் :

இது அக்காலத்திலேயே பிளாட்டோ எழுதிய Republic  ரிபப்ளிக் என்ற நூலில் உளது

அக்காலத்திலேயே,  வேதங்கள் பல இடங்களில் கூறும் விஷயத்தை சாக்ரடீசும் குறிப்பிடுவது அவருக்கு இந்துமத கருத்துக்களைப் பரப்புவதில் இருந்த ஆர்வத்தைக் காட்டுகிறது.

My Old Articles:-



சாக்ரடீஸுடன் 60 வினாடி பேட்டி | Tamil and Vedas

https://tamilandvedas.com › சாக்…

12 Feb 2012 — சாக்ரடீஸ், நீரோ தத்துவ ஞானி, உமது மனைவியோ அடங்காப் பிடாரி. ஒரு முறை நீர் …

DID SOCRATES KNOW VEDAS? HIS ‘SUN AND EYE …

https://tamilandvedas.com › 2021/11/27 › did-Socrates-…

1 day ago — 13 Jun 2021 — tamilandvedas.com, swamiindology.blogspot.com. Tiru Valluvar , author of Tamil Veda Tirukkural, says that man becomes god in two …



Strange Link between Lord Shiva, Socrates and Thiruvalluvar

https://tamilandvedas.com › strange-l…

·

18 Sept 2011 — Lord Shiva is one of the Hindu Trinity, a great god worshipped by millions of Hindus. Socrates was a great Greek philosopher who lived …

Missing: valuvar ‎| Must include: valuvar



Socrates’ Meeting with a Hindu Saint | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/02/22 › socrates-meet…

22 Feb 2014 — Socrates (499- 399 BC) Greek Philosopher Plato (427-347 BC) Philosopher … Drinking poison: Shiva Socrates and Valluvar, Know thyself in …

–subham–

tags- சாக்ரடீஸ், சிவபெருமான், வேதம், வள்ளுவர், கண், சூரியன்,Scrates

மர்மத் தவளைகள் ; ரிக், அதர்வ வேதம் தரும் அதிசயத் தகவல்கள் (Post.10,337)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,337

Date uploaded in London – –   14 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதம் முழுதும் ஒரு ரீடிங் READING கொடுத்துவிட்டேன். இப்போது அதர்வ வேதத்தில் நாலாவது காண்டத்தைப் படித்து வருகிறேன். மொத்தம் 20 காண்டங்கள். இன்னும் யஜுர் வேத அற்புதங்கள் வேறு பாக்கி இருக்கின்றன. இவ்வளவையும் சொல்ல ஒரு வாழ் நாள் போதாது. போகட்டும்; சப்ஜெக் subject டுக்கு வருகிறேன் .

வேதத்தில் இது வரை நான்,  4 தவளை அற்புதங்களைக் கண்டு பிடித்து விட்டேன்.

முதல் அற்புதம் வசிஷ்டர் பாடிய உலகப் புகழ் பெற்ற தவளைப் பாட்டு. ( RV 7-103) அதை கிரேக்க நாட்டு எழுத்தாளர் அரிஸ்டோபனீஸ் காபி copy  அடித்து கிரேக்க அர்சியல்வாதிகளை நக்கல் செய்தார். கம்பனும் அதை இமிடேட் imitate  செய்தான் ; முன்னரே நான் அதைப்பற்றிக் கதைத்து விட்டேன் (கட்டுரையின் கடைசியில் இணைப்பைக் காண்க . அது ரிக் வேத 7-103 பாடல்)

மேலும் 3 அதிசயங்கள்

1.சுடுகாட்டில் நடக்கும் தகனக் கிரியையில் , சடலம் தகனம் செய்யப்பட இடத்தில், குளிர்ந்த பின்னர் ஒரு பெண் தவளையை வையுங்கள் என்று ரிக் வேதம் செப்புகிறது.

2.கால்வாய் திறப்பு விழாவில் ஒரு தவளையை விடுங்கள்;  சிவப்பு; நீல நிற நூல்களால் சுற்றி அலங்கரியுங்கள் ; அதன் மீது அவக என்னும் நீர்த் தாவரத்தை வைத்து கால்வாயில் விடுங்கள் என்று அதர்வண   வேத மந்திரம் உரைக்கின்றது .

3.இன்னொரு அதர்வண  வேத மந்திரம் தவளையின் மூன்று விநோதப் பெயர்களை சொல்கிறது ;  அதற்கு அர்த்தம் புரியாத அத்தனை வெள்ளைக்காரப்பயல்களும் அது ஒலி  நயம் கருதி உருவாக்கப்பட்ட அர்த்தமற்ற சொற்கள் என்று சொல்லிவிட்டார்கள் . இதை ஆங்கிலத்தில் ஒனமோடோபியா ONOMATOPETIC என்பர். நாம் அலிபாபா கதைகளில் அப்ரகடப்ரா , அண்டாகா காசும் அபுல்கா காசும் என்பது போல.. ஆனால் நான் அதை நமபவில்லை; நமக்கு இன்று அர்த்தம் விளங்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்

இதோ 3 அதிசயங்களின் மேல் விவரம்:

XXXX

சுடுகாட்டில் பெண் தவளை; ரிக் வேதம் 10-16-14

தகன துதியில் 14 ஆவது மந்திரம்

குளிர்ந்தவளே! ஈர நிலமே ! பசும் புற்கள் நிறைந்தவளே !

இன்பம் தருபவளே!  இன்பம் ஊட்டும் மரங்கள் நிறைந்தவளே! (பூமாதேவியே ).

பெண் தவளைகளோடு  சேரட்டும் ; இந்த அக்னியை மகிழ்வியுங்கள்

இது பற்றி ப்ளூமபீல்ட்BLOOMFIELD  என்ற மொழி பெயர்ப்பாளர் சொல்கிறார்:-

உடலைத் தீ எரித்த பின்னர் , அதன் மீது நீர் ஊற்றப்படுகிறது . பின்னர் அங்கே சில செடிகள் ஊன்றப்படுகின்றன .நெருப்பு அணைந்த இடத்தில் ஒரு பெண் தவளையோ ஆண் தவளையோ வைக்கப்படுகின்றது இவை நீரின் பிரதிநிதி. நீரானது தீயைத் தடுக்கவும் அணைக்கவும் பயன்படுகிறது.

ஆயினும் வெள்ளைக்காரன் (Bloomfield) விளக்கம் சரியாகத் தோன்றவில்லை .

இன்னும் சிலர் இது மீண்டும் பிறப்பதற்கான அறிகுறி; செழிப்பு என்பதன் சின்னம் தவளை என்பர்.

Xxx

கால்வாயில் தங்கமும் தவளையும்

அதர்வண வேதம் — மூன்றாவது காண்டம் ; துதி 13, மந்திரம் 7

ஜலங்களே ! இது உங்களது இருதயம்;  புனிதம் நிறைந்தவர்களே ! இது உங்களது கன்று; இங்கே பாயுங்கள்; பிரவாகித்து எழும் நீங்கள் இந்த வழியாக வாருங்கள்.

இதற்கு முந்தைய ஆறு மந்திரங்கள் சொற்பிறப்பியல் ETYMOLOGY பற்றியது; அதை தனியாக எழுதுகிறேன்; அதில் குறள் 11 மற்றும் தமிழ்ச் சொல் வாரி/ மாரி உள்ளது

இப்போது ஏழாவது மந்திரத்தின் விளக்கத்தைக் காண்போம். எப்படி மதுரை பாரத்வாஜ கோத்திர பார்ப்பனனான

“உச்சிமேற் புலவர் கொள்” நச்சினார்க்கினியனின்  உரை இல்லாமற் சங்க இலக்கியத்தை நாம் அறிய முடியாதோ, அது போல கெளசிக சூத்திரம் இல்லாமற் நாம் அதர்வண வேதத்தைப் புரிந்துகொள்ள முடியாது!

அந்த சூத்திரம் சொல்லும் விளக்கம்:-

இப்பாடல் கால்வாய் வெட்டும் சடங்கு பற்றியது ; முதல் பாடல் முடிந்தவுடன் சிறிது தங்கம் அங்கே வைக்கப்படுகிறது ; இரண்டாவது பாடலின் பொழு து தங்கத்துக்குப் பின்னால் ஒரு தவளை FROG வைக்கப்படும் . அதன் உடலின் மீது நீளமும் சிவப்பும் கலந்த வண்ண நூல்கள் கட்டப்படுகின்றன. மூன்றாவது பாடலின் போது அவகா AVAKAA என்னும் நீர்தாவரம் அதன் மீது வைக்கப்படவேண்டும் இதன் பொருள் புரியவில்லை. அநத சடங்கிற்குப் பின்னர் அங்கே பொன்னும், தவளைகளும், தாமரைப் பூவும் சிதறிக்கிடக்கும்.

உண்மைதான் ; இதன் பொருளை அறிய இயலாத அளவுக்கு இது பழமையானது. உதவாக்கரை வெள்ளைக்காரன்கூட அதர்வண வேததத்தை கி.மு 1000 என்பான். நாமோ நாலு வேதமும் உருவானது வியாசர் காலம் (கி.மு.3150) என்று நம்புகிறோம் தங்கத்தை வேதம் ஓதும் பிராமணன் எடுத்துக் கொள்வான் என்று எவனாவது கதை கட்டினாலும், எதற்கடா? தவளை மீது குறிப்பிட்ட கலர் நூல், எதற்கு குறிப்பிட்ட ‘அவகா’ தாவரம் என்று நாம் கேட்கலாம். அவகா தாவரத்தை மீன் வளர்ப்போர் இப்போதும் வாங்கி மீன் தொட்டிக்குள் வைக்கின்றனர். தண்ணீருக்கு அடியில் ஆக்சிஜன் இல்லாமல் வாழும் தாவரம் இது!

XXXX

நாலாவது அதிசயம்

கண்வகா , கைமுகா ததுரீ !!!

இவைகள் எல்லாம் தவளைகளின் பெயர்காளாம்.!!!

வெள்ளைக்காரப்பயல்களுக்கு விளக்கம் தெரியவில்லை.

இவை அர்த்தமற்ற ஒலி நயச் சொற்கள் என்று எழுதிவிட்டு தப்பித்துப் போய்விட்டான் . அவன் ‘முட்டாள்’ என்பது மற்ற மந்திரங்களைப் பார்க்கையில் நமக்குத் தெரிகிறது.

இப்படித்தான் பாம்புகளுக்கு ஆறு பெயர்கள் ஒரு மந்திரத்தில் வருகிறது. அவைகளில் அலிகி , விளிகி ALIGI, VILIGI என்ற பாம்புகளின் பெயர்கள் சுமேரியாவில் உளது. அதர்வண வேத பாம்புகள் எப்படிச் சுமேரியாவுக்குப் போயிற்று?

வெள்ளைக்காரனால் விளக்கம் சொல்ல முடியாது.

அது போல இந்த மூன்றுத் தவளைப் பெயர்களுக்கும்  மர்ம அர்த்தம் இருக்கலாம்! ஒரு சங்கரனோ நச்சினார்க்கினியனோ பிறக்கையில் இவைகளுக்கு விளக்கம் கிடைக்கலாம். அதுவரை நாமும்

ஹிக்கறி டிக்கரி டாக் தி மவுஸ் ரன் அப் தி க்ளாக்

என்று நாமும் நர்சரி பாட்டுப் பாடலாம்

எப்படி?

கண்வகா , கைமுகாததுரீ  FROGS ஃராக்ஸ்

கம்  டு  மை  ஹவுஸ் டு ஸீ எ பாக்ஸ் TO SEE A FOX   – என்று

KHANVAKHAA!! KAIMUKHAA!! TADUREE FROGS

COME TO MY HOUSE TO SEE A VERY GOOD FOX!

அடுத்த தவளைக் கட்டுரையில் எகிப்திய தவளை முக அரசி /கடவுள் )  இந்து மதத்தினரின் குழந்தைக் கடவுளே என்று காட்டுகிறேன்  TO BE CONTINUED………………………………………

XXX

ரிக்வேதத்திலும் கம்ப ராமாயணத்திலும் …

https://tamilandvedas.com › ரிக்…

15 Dec 2016 — ரிக் வேத தவளைப் பாட்டு. ரிக்வேதத்தின் ஏழாம் மண்டலத்தில் வசிஷ்டரும் அவரது …

Tags-   தவளைப் பாட்டு , தவளை, மர்மங்கள், கால்வாய், சுடுகாடு, வினோத பெயர்கள், வேதம்

மல்லி விலை என்ன? (Post No.9000)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9000

Date uploaded in London – –5 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பேச்சு வழக்கில் நாம் பயன்படுத்தும் சொற்கள் பல பொருளைத் தரக்கூடும். எந்த தருணத்தில், எந்த சூழ்நிலையில் ஒருவர் ஒரு சொல்லைப்  பயன்படுத்துகிறார் என்பதை அறிபவரே அதன்பொருளை உணர்வார்.

இன்னும் ஒரு விஷயம் ஊர்ப் பெயர்களாகும். அந்தந்த வட்டார மக்கள் அதை சுருக்கெழுத்தில் சொல்லுவார்கள். கே. புதூர் , ஆ.புதூர் என்றெல்லாம் உண்டு.

“மல்லி  விலை ஏறிப் போச்சு” என்று பூக்கடைக்காரர்களோ, பெண்களோ பேசிக்கொண்டால்  அது மல்லிகைப் பூவைக் குறிக்கும். பலசரக்குக்க கடையில் இதே குரல் ஒலித்தால் அது கொத்த மல்லி விதைகளைக் குறிக்கும்.

இதுவே காய்கறிக் கடையானால் கொத்துமல்லி இலையைக் குறிக்கும் . சம்ஸ்க்ருதத்தில் மூன்று வகையான (Swaras) சுரங்கள் வேறு உண்டு. சீன மொழி போல அதிலும் அர்த்தவேறுபாடு வந்து விடும்.

xxxx

கும்போணம் வெத்தலை கிடைக்குமா?

தஞ்சாவூர்காரர்கள் கும்ப கோணம் என்று சொல்ல மாட்டார்கள். ‘கும்போணம்’ என்பர். மகாமகம் என்று சொல்லாமல் ‘மாமாங்கம்’ என்பர். எண்பத்தைத்தந்து (85) என்பதை ‘எண்ப்ளத்தைந்து’  என்பர்.

கீழ்கண்ட ஊர்ப்பெயர்களைப் பாருங்கள்; எப்படி உரு மாறுகிறது என்பது தெரியும்.

திருப்பராய்த் துறை – திருப்ளாத்துறை

ஐராவத நல்லூர் – அயிலானுர்

சீர்காழி – சீயாழி

ஆரல்வாய் மொழி – ஆராம்பொலி

தரங்கம்பாடி – ட்ராங்கு பார்

மட்டக்கிளப்பு – பட்டிக்கோலா

சோழாந்தகன் – சோழவந்தான்

வாரணாசி – பெனாரஸ்

பாரு கச்சம் – ப்ரோச்

இப்படி நாடு முழுதும் உண்டு.

தற்காலத்தில் மாநில அரசுகள் ஒவ்வொரு ஊரின் உண்மைப்பபெயரை ஆங்காங்கு சூட்டி வருவதை அறியலாம்.

வெள்ளைக்காரர்களும் பிற மொழிக்காரர்களும்  நம் ஊர்ப் பெயர்களை மாற்றியது இமயம் முதல் கண்டிவரை காணப்படுகிறது.

xxx

உம்மாச்சி பட்டர்

உம்மாச்சி பட்டர் என்றால் என்ன என்று திகைத்த காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) ஒரு கோவிலில் அதற்கு அர்த்தம் கண்டுபிடித்த சம்பவம் ‘தெய்வத்தின் குர’லில் இருக்கிறது; சுவாமிகளுக்கு முன்னர் உம்மா ச்சி பட்டரை க்கு கூப்பிடுங்கள் என்று பட்டர்கள் பேசிக்கொண்டனர். உம்மாச்சியும் வந்தார். அவருடைய பெயரை விஜாரித்தபோது அவருடைய பெயர் உமா மஹேஸ்வர பட்டர் என்று தெரிய வந்தது. மஹா மேதாவியான அவருக்கே அதை விளங்கிக் கொள்ள ஒரு சம்பவம் தேவைப்பட்டது. நாம் எல்லாம் எம்மாத்திரம்?

ஒப்பில்லாத அப்பனை உப்பிலி அப்பன் ஆக்கி உப்பில்லாத பிரசாதத்தை வழங்குவது போல வேதத்தை வெள்ளைக் கார்கள் மொழி பெயர்த்துள்ளனர்.

ரிக் வேதத்தை மொழி பெயர்த்தவர்கள் இப்படி நுணுக்கமான விஷயங்களை மனதிற் கொள்ளாமல் கண்டபடி மொழி பெயர்த்துவிட்டனர். இப்போதுதான் விழிப்புணர்ச்ச்சி ஏற்பட்டுவருகிறது.

xxx

ரிக் வேத மொழிபெயர்ப்புத் தவறுகள்

சங்க இலக்கி யத்தில் பகை மன்னர்களை வென்ற போது போர்க் களத்தில் “ரத்த ஆறு” (River of Blood)  ஓடியதாக வருணனைகள் உண்டு. இதே போல வடக்கில் சர்மண் நதி என்று ஒரு ஆறு உள்ளது . அது இயற்கையிலேயே சீனாவின் மஞ்சள்  நதி போல செம்மண் நிறம் உடையது. அதில் வெள்ளம் வருகையில் அது சிவப்பாக இருக்கும்.

ஒரு புலவர் தற்குறிப்பேற்ற அணியை பயன்படுத்தி இந்த ஆறு சிவப்பானதற்கு மன்னரின் ‘யாக பலி’ காரணம் என்று பாடி வைத்தார். உடனே ஒரு மார்க்சிஸ்ட் மேதாவி எத்தனை ஆயிரம் ஆடு, மாடுகள் வெட்டப்பட்டால் இப்படி சர்மண் நதியில் ரத்த ஆறு ஒடி இருக்கும் என்று கணக்குப் போட்டு விட்டார்!!! வேதத்தில் மஞ்சள் வர்ண மக்கள், சப்பை மூக்குக்கார்கள் பற்றி பாடல்கள் உள. இவை வட கிழக்கு  இந்தியாவில் உள்ள சீன , பர்மிய (Mongoloid) மக்களைக் குறிப்பதாக இருக்கவேண்டும் . இதை சப்பை மூக்கு திராவிடர்களைக் குறிப்பதாக வெள்ளையர் எழுதி வைத்துவிட்டனர்.! அவர்களே வேறு இடங்களில் திராவிடர்களை வருணிக்கையில் போண்டா மூக்கு, கோழிமுட்டைக் கண்ணன் என்றும் எழுதி வைத்துள்ளனர். கடைசியில் பார்க்கப்போனால். சிந்து- சரஸ்வதி நதி தீரத்தில் கண்டு பிடிக்கப்பட்ட எலும்புக்கு கூடுகள் அத்தனையும்  வேதகால மக்களுடையவை!! அதாவது இன்றைய பஞ்சாபியரின்  உடல்வாகைக் கொண்டவர்கள். சங்க இலக்கிய 30,000 வரிகளில் “சிந்து” என்ற பெயரே இல்லை. ஆனால் கங்கை, இமயம் , அருந்ததி, சப்தரிஷி , அத்தனை இந்துக்கடவுளரின் பெயர்களும் இருக்கின்றன. புத்தரோ, மஹாவீரரோ கூட ‘பெயர் அளவில்’ இல்லை!!

tags- கும்பகோணம், மல்லி விலை, உம்மாச்சி , வேதம்

–SUBHAM—

பிராமணர், க்ஷத்ரியர், வைசியர் வேதம் படிக்க வேண்டும் – மநு கட்டளை (Post No.7353)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 17 December 2019

Time in London – 9-38 AM

Post No. 7353

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

மநு நீதி நூல் – Part 46

ஒன்பதாவது அத்தியாயத்தை 16-11-2019-ல் முடித்தோம் . இன்று பத்தாவது அத்தியாயத்தைத் துவங்குவோம் இணைப்பில் முழு சுலோகங்களின் பொருள் உளது. முதலில் சுவையான செய்திகளை புல்லட் (BULLET POINTS) பாயிண்டுகளில் தருகிறேன்.

please go to swamiindology.blogspot.com for an old Manu Smriti Tamil Book.

இந்த அத்தியாயத்தில் மிக முக்கியமான பொன்மொழி ஸ்லோகம் 63-ல் வருகிறது .

அஹிம்ஸை, உண்மை, பிறர் பொருள் திருடாமை, தூய்மை , புலன் அடக்கம் ஆகியன நான்கு ஜாதிகளுக்கும் பொது என்று அறிவிக்கிறார்.

அதற்கு அடுத்த முக்கியத்துவம் வாய்ந்தது ஸ்லோகம் 62 ஆகும் . பிராமணன், கோ மாதா ,பெண்கள், குழந்தைகளைக் காக்க உயிர்விடுவோர் உயர்நிலையை அடைவர். இது சிலப்பதிகாரத்திலும் வருகிறது. மதுரையை எரிப்பதற்கு முன்னர் இவர்களை மட்டும் வருத்தாதே , தீண்டாதே என்று அக்கினி தேவனுக்கு கண்ணகி கட்டளை இடுகிறார். திருவள்ளுவரும் பிராமணர்களையும் பசுவையும் முதலில் வைக்கிறார். குறள் 560, 1066.

ஸ்லோகம் 65-ல் ஏழே தலைமுறையில் சூத்திரன் பிராமணன் ஆகிவிடுவான் என்கிறார்.

ஸ்லோகம் 69 முதல் 73 வரை மநு ஒரு சுவையான பட்டிமன்றம் நடத்துகிறார் விதை/ஆண் முக்கியமா , நிலம்/பெண்  முக்கியமா என்று. இறுதியில் நல்ல நிலத்தில் நல்ல விதை விதைப்பதே சாலச்சிறந்தது என்று தீர்ப்பு வழங்குகிறார் .

இந்த அத்தியாயத்தில் முதல் 70 சுலோகங்களில் கலப்புத் திருமணம், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் பற்றி நிறைய ‘வகை’கள் வருகின்றன. அதில் விராத்யர் , திராவிடர், தஸ்யூ , யவனர் காம்போஜர், சகர் முதலியோர் யார் என்று விளக்கப்படுகின்றனர் . ஆயினும் இவையனைத்தும் இன்று நாம் வழங்கும் பொருளில் பயன்படுத்தப்படவில்லை . ஏனெனில் வேறு பல தேச பெயர்களும் கலப்புத் திருமண வகைகளில் வருகிறது.

இரண்டு விஷயங்கள் தெளிவாகத் தெரிகின்றன.

1.மனு நீதி நூலின் இந்த அத்தியாயம் எழுதப்பட்ட அல்லது சேர்க்கப்பட்ட காலத்தில் கலப்புத் திருமணம் பெருவாரியாக நிகழ்ந்தது. இதை நாம் மகாபாரதத்திலும் காண்கிறோம்.

2.யவனர், திராவிடர், காம்போஜர், சகரர் ஆகியோரும் இந்துக்களே.

முதல் இரண்டு ஸ்லோகங்களில் மூன்று வர்ணத்தினரும்  வேதம் படிக்க வேண்டுமென்பது எந்தக் காலம் வரை பின்பற்றப்பட்டது  என்பதை ஆராய வேண்டும்.

சுலோகம் 20, 22 –திராவிடர், விராத்யர் பற்றிப் பேசுகிறது. தமிழ்ச் சங்கத்தில் நக்கீரர் முதலிய பிராமணர்கள் விராத்தியர் எனப்படுவர். அவர் சங்கு அறுத்து வளையல் செய்யும் தொழிலில் இருந்தார்.

ஸ்லோகம் 25 முதல் கலப்புத் திருமண தம்பதிகளுக்குப் பிறந்த குழந்தைகள் பற்றிப் பேசப்படுகிறது. இவையெல்லாம் இக்காலத்தில் பொருத்தம ற்றதாகிவிட்டன.

ஸ்லோகம் 47 முதல் அவர்கள் செய்யவேண்டிய தொழில்கள் பற்றி வருகிறது.

ஸ்லோகம் 58-ல் ஆர்யன் (ARYAN)  அல்லாதான் குணம் பற்றி வருகிறது. இன்று இனப் பொருளில் பயன்படுத்தும் ஆர்யன் அல்ல இது . பண்பாடற்றவன் என்பதே பொருள்- அனார்யன் . என்றால் நாகரீகமற்றவன் என்று பொருள். கிரேக்கர்கள் மற்றவர்களை பார்பேரியன் (BARBARIAN) என்று அழைத்தது போல. இன்று அந்தச்சொல்லின் பொருள் காட்டுமிராண்டி

வேதம் பிராஹ்மணனிடம் என்ன சொன்னது? (Post. 4673)

வேதம் பிராஹ்மணனிடம் என்ன சொன்னது? மநு தகவல்- மநு நீதி நூல்- Part 13 (Post No 4763)

 

Date: 19 FEBRUARY 2018

 

Time uploaded in London- 11-59 AM

 

Written by London swaminathan

 

Post No. 4763

 

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

மானவ தர்ம சாஸ்திரம்- இரண்டாம் அத்தியாயம் தொடர்ச்சி

 

 

2-89 இந்திரியங்களைப் பெரியோர்கள் பதினொன்றாக வகுத்துள்ளனர். அதை நான் இப்போது விளக்குவேன் (207)

2-90.காது, தோல், கண், நாக்கு, ஐந்தாவதாக மூக்கு, ஆசன வாய், ஜனன இந்திரியங்கள், கை, கால், பத்தவதாக பேசும் உறுப்பு ஆகியனவும்

2-91. இவைகளில் காது முதல் மூக்கு வரை உள்ள ஐந்தும் ஞானேந்திரியம், ஆசனவாய் முதல் வாய் வரையுள்ள ஐந்தும் கர்மேந்திரியங்கள்

 

2-92. இந்த பத்து உறுப்புகளையும் கட்டுப்படுத்தும் மனம் பதினோராவது இந்திரியம் ஆகும். அதைக் கட்டுப்படுத்தினால் ஏனைய பத்து இந்திரியங்களையும் கட்டுப்படுத்திவிடலாம். (210)

 

2-93. புலன் வழிச் சென்று, அதன் போக்கில் இன்பங்களை அனுபவிப்பவன் தவறுகளைச் செய்வான்; ஆனால் இவைகளைக் கட்டுப்படுத்துபவன் இன்பத்தையும் வெற்றியையும் அடைவான்.

Picture posted by S P Ramanathan

2-94. ஆசைகளை நிறைவேற்றுவதன் மூலம் அதைத் திருப்தி செய்வதென்பது முடியாது. ஆசைகளைப் பூர்த்தி செய்ய முயல்வது, தீயில் நெய்யை ஊற்றி அதை அணப்பதற்குச் சமம் ((அதை மேலும் வளர்ப்பது போலாகும்)).

 

 

2-95. சிலர் ஆசைகளை நிறைவேற்றலாம்; சிலர் ஆசைகளை அறவே ஒதுக்கலாம்; ஆனால் அறவே ஆசைகளை அகற்றுவதே சிறந்தது.

 

2-96. ஆசைகளை அகற்றுவதற்கு தெளிந்த ஞானம்தான் உதவும்; அவைகளில் இருந்து தனித்து வாழ்வதால் ஆசைகளை ஒழிக்க முடியாது.

 

2-97. எவன் ஒருவன் புலன் இன்பங்களில் நாட்டம் உடையவனாக இருக்கிறானோ அவன் செய்யும் யாக யக்ஞங்களும், வேதம் ஓதுதலும், தானமும் தவமும் பயனற்ற செயல்களே.-215

2-98. எவன் ஒருவன் ஐம்புல நுகர்ச்சியால இன்பத்தையோ துன்பத்தையோ அடைவதில்லையோ அவனே புலன்களை வென்றவன் ஆவான்.

2-99. ஐந்து புலன்களில் ஒன்று பலவீனமானாலும், ஓட்டைப் பானையில் இருந்து தண்ணீர் வெளியேறுவது போல ஞானம் வெளியேறி விடும்

2-100. ஆகவே பொறிகளையும் மனதையும் கட்டுப்படுத்தி, உடலை வருத்தாமல், இம்மை மறுமை ஆகியவற்றின் நன்மைகளை நாட வேண்டும்.

Picture posted by Lalgudi Veda

 

2-101. அதி காலையில் சூரியன் உதயம் ஆகும் வரை நின்றுகொண்டு காயத்ரீ மந்திரத்தை ஜபிக்க வேண்டும். மாலையில் அமர்ந்து கொண்டு ஜபிக்க வேண்டும். நட்சத்திரங்கள் தோன்றும் வரை செய்க (காணாமல், கோணாமல், கண்டு கொடு; சூரியனைக் காணாமல் காலையிலும், நிழல் கோணாமல் நண்பகலிலும், சூரியனைக் கண்டு, அது மறையும் வரை மாலையிலும் காயத்ரீ மந்திரம் சொல்க)

 

2-102.காலையில் நின்று கொண்டு ஜபம் செய்வதால் இரவில் செய்த பாபங்கள் அழிந்து விடும்; மாலையில் அமர்ந்து கொண்டு செய்யும் தவத்தால் பகற்பொழுதில் செய்த பாவங்கள் நசித்துவிடும்.-220

2-103.யார் ஒருவன் இவ்வாறு காலை மாலை ஜபங்களைச் செய்வதில்லையோ அவன் இரு பிறப்பாளன் என்ற தகுதியை இழக்கிறான்.

2-104.ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திலோ, நதிக்கரைகளிலோ, ஒன்று குவிந்த மனதுடன் காயத்ரீ ஜபிக்க வேண்டும்.

 

2-105.இவைகளைச் செய்யக்கூடாத காலம் என்று விலக்கு எதுவும் இல்லை. வேதாங்கம் கற்கவும், வேதம் சொன்ன தினசரிச் சடங்குகளைச் செய்யவும் விடுமுறை நாட்கள் என்பது எதுவும் இல்லை.

 

2-106.இவை எல்லாம் வேதம் கற்பதின் ஒரு பகுதி என்பதால் விலக்கு எதுவும் இல்லை. அவை  வேறு காரணங்களினால்  தடைப் பட்டாலும் பலன் குன்றாது

 

2-107.யார் ஒருவன் ஓராண்டுக் காலத்துக்கு இவ்வாறு இடைவிடாமல், புலனடக்கத்துடன் செய்கிறானோ, அவன் இருக்கும் இடத்தில் பாலும் தேனும் வெண்ணையும் தயிரும் வற்றாது பாயும்-225

 

 

2-108. குருகுல வாசம் செய்யும் காலம் முழுதும் ஒரு மாணவன், வேதம் ஓதுதல், அக்னியில்  சமித்தினால் ஹோமம் செய்தல், பிச்சை எடுத்தல், குருவுக்குப் பணிவிடை செய்தல், தரையில் படுத்தல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.

 

2-109.வேத உபதேசம் ஏற்கக் கூடிய பத்து வகை மாணவர்கள் உண்டு: குருவின் மகன், தருமம் அறிந்தவன், ஒழுக்க சீலன் ( தூய்மையுள்ளவன்), உறவினர், கொடையாளி, பணிவுடையன், நம்பத் தகுந்தவன் (பொய்பேசாதவன்), வேதத்தை கற்கும் சக்தியுடையவன், , சேவை செய்பவன், மற்றவர்களுக்கு ஞானம் அளிப்பவன்.

आचार्यपुत्रः शुश्रूषुर्ज्ञानदो धार्मिकः शुचिः ।

आप्तः शक्तोऽर्थदः साधुः स्वोऽध्याप्या दश धर्मतः

 

 

2-110. ஒருவர் கேட்காத எதையும் விளக்காதே; குதர்க்கமாகப் பேசுபவர்களுக்குப் பதில் கொடுக்காதே; உனக்கு விஷயம் தெரிந்தாலும் முட்டாள் (ஒன்றும் தெரியாதவன் போல) இரு.

2-111.யார் தர்மத்துக்குப் புறம்பாக கேட்கிறானோ அல்லது தர்மத்துக்கு எதிராக விளக்குகிறானோ, அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ, விரோதம் காரணமாக இறக்க நேரிடலாம்.

2-112. தர்மமோ, தட்சிணையோ, அடக்கமோ இல்லாதவனுக்கு (வேதத்தைக்) கற்பிக்கக் கூடாது; பயன் தராத ஆளுக்குக் கல்வி கற்பது உவர் நிலத்தில் விதைகளை விதைப்பது போலாகும்-230

 

2-113.வேதம்  அ றிந்தவன், ஒரு தவறானவனுக்குக் கற்பிப்பவதைவிட, இறப்பதே மேல்

 

2-114.வேதம், பிராஹ்மணனிடம் சொன்னது: “நான் பெரும் பொக்கிஷம்;

என்னைக் காப்பாற்று நிந்திப்பவர் எவருக்கும் என்னை அளித்துவிடாதே. அப்போதுதான் நான் மிகவும் சக்தியுடன் விளங்குவேன்”.

विद्या ब्राह्मणमेत्याह शेवधिस्तेऽस्मि रक्ष माम् । %[ं।शेवधिष् टे]

असूयकाय मां मादास्तथा स्यां वीर्यवत्तमा ॥ Bछ्.Sछ्॥

 

यमेव तु शुचिं विद्यान्नियतब्रह्मचारिणम् । %[ं। विद्या नियतं ब्रह्मचारिणम्]

तस्मै मां ब्रूहि विप्राय निधिपायाप्रमादिने ।

 

2-115. தூய்மையுடைய, புலன் அடக்கம் உடைய, கிரஹிக்கும் சக்தியுடைய, பொக்கிஷத்தைப் பாதுக்காக்கக் கூடிய பிராமணன் இடத்தில் என்னைக் கொடு

2-116. வேதம் அறிந்த ஒருவரின் அனுமதி இல்லாமல், வேதத்தைக் கற்பவன் வேதத்தைத் திருடியவன் ஆவான். அவன் நரகத்தில் வீழ்வான்.-234

ब्रह्म यस्त्वननुज्ञातमधीयानादवाप्नुयात् ।

स ब्रह्मस्तेयसंयुक्तो नरकं प्रतिपद्यते

 

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

எனது கருத்து

 

இந்தப் பகுதி வேதம் எவ்வளவு புனிதமானது என்பதை விளக்குகிறது.

 

தகுதி இல்லாதவருக்குக் கற்பிப்பதைவிட அந்த அறிவுடன் இறந்து போனாலும் பரவாயில்லை என்கிறது.

 

மீண்டும் மீண்டும் ஒழுக்கத்தையும் புலன் அடக்கத்தையும் மநு வலியுறுத்துகிறார்.

 

புலன் அடக்கமும், ஆசையின்மையும், ஒழுக்கமும்தான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிராமணரை உயர் நிலையில் வைத்தது.

 

வேதம் பிராமணனிடம் வந்து சொன்ன வாசகம் அருமையானது; நான் ஒரு பொக்கிஷம்; என்னைப் பாது காத்து இதன் மதிப்பை அறிந்த தூயவனிடம் என்னை ஒப்படை.

 

இன்னும் ஒரு அறிவுரை எல்லோருக்கும் பொதுவானது: கேள்வி கேட்காமல் பதில் சொல்லாதே. குதர்க்கமாக கேட்பவனிடம் முட்டாளைப் போல நடி.

 

3 நல்ல உவமைகள்

ஆசைகளைப் பூர்த்தி செய்ய விழைவது, தீயில் நெய்யை ஊற்றி அதை அ ணைப்பதற்குச் சமம் என்ற உவமையும்

 

பயனற்ற ஆட்களுக்கு வேதம் கற்பிப்பது, உப்பு மணலுள்ள நிலத்தில் விதை விதைப்பதற்குச் சமம் என்ற உவமையும்,

இந்திரியங்களில் ஒரு இந்திரியம் (புலன்கள்) பலவீனமாக இருந்து மனதைப் பரிதவிக்கவிட்டாலும், அது ஓட்டையுள்ள தண்ணீர்ப் பைக்குச் சமம் என்ற உவமையும் ரசிக்கக் கூடியவை.

 

அந்தக் காலத்தில் தோலினால் ஆன தண்ணீர்ப் பை இருந்ததை இந்த ஸ்லோகம் காட்டுகிறது.

பிராமணர்களுக்குச் சொன்ன காணாமல் கோணாமல் கண்டு கொடு- (சந்தியா வந்தனம் செய்) என்பதும் நோக்கற்பாலது.

நண்பகலில் செய்யப்படும் மாத்யாஹ்னிகம் பற்றி மநு ஒன்றும் செப்பாதது வியப்புக்குரியது. அவர்காலத்தில் மதிய வழிபாடு இல்லையா? அல்லது எல்லோருக்கும் தெரிந்ததைச் சொல்ல  வேண்டியதில்லை என்று விட்டுவிட்டாரா?

இன்னும் 2400 ஸ்லோகங்கள் உள.

 

தொடரும்—

 

 

 

வேதங்கள் பற்றி கம்பன் தரும் வியப்பான தகவல் (Post No.4508)

WRITTEN by London Swaminathan 

 

Date: 17 DECEMBER 2017 

 

Time uploaded in London-  15-37

 

Post No. 4508

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

நால் வேதங்கள் பற்றி கம்பன் பல இடங்களில் பாடியிருக்கிறான். சில இடங்களில் வேதங்களின் உயர்வு எவ்வளவு என்பதைக் காட்ட அவைகளை உவமையாகவும் பயன்படுத்துகிறான். ஒரு பொருளை உவமையாகப் பயன்படுத்துவதானால் அது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருக்க வேண்டும். கம்பன் பாடல்களில் இருந்து வேதம் பற்றித் தமிழர்கள் என்ன கருதினர் என்பதை அறிய முடிகிறது. கம்பன் நமக்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவன்.

 

புண்ணியம் செய்தால் சொர்க்கம் கிடைக்கும்

புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்

என்னும் ஈது அருமறைப் பொருளே

மண்ணிடை யாவர் இராகவன் அன்றி

மாதவம் அறத்தொடு வளர்த்தார்

எண் அருங் குணத்தின் அவன் இனிது இருந்து இவ்

ஏழ் உலகு ஆள் இடம் என்றால்

ஒண்ணுமோ இதனின் வேறு ஒரு பாகம்

உறைவு இடம் உண்டு என உரைத்தல்

——பால காண்டம்

பொருள்

 

இப்பிறவியில் புண்ணியம் செய்தவர்கள் மறு பிறவியில் அடைவது சொர்க்கம் என்று சொல்லப்படும் இச் செய்தி அருமையான வேதங்கள்  கூறும் உண்மைப் பொருளே ஆகும். இவ்வுலகில் இராமனைத் தவிர வேறு யார் தருமத்துடன் சிறந்த தவத்தையும் வளர்த்தார்கள்? நினைப்பதற்கும் அரிய நற்குணங்களின் நாயகனான இராமன், இனிமையாக வீற்றிருந்து இந்த ஏழு உலகங்களையும் ஆளுகின்ற நகரம் அயோத்தி. இதைக் காட்டிலும் சிறந்த எல்லாப் போகங்களுக்கும் இருப்பிடமான வேறோர் உலகம் உள்ளது என்று சொல்ல முடியுமோ முடியாது.

‘புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்’ (சுவர்க்கம்)- என்பது அருமையான வாசகம்; இது வேதத்தின் சாரம் என்று கம்பன் மொழிவதும் சிறப்பு.

 

xxxxxxxxxxxxx

காலத்தால் அழியாத மறை!

தாள்படாக் கமலம் அன்ன தடங் கணான் தம்பிக்கு அம்மா

கீழ்ப்படா நின்ற நீக்கி கிளர் படாது ஆகி என்றும்

நாட்படா மறைகளாலும் நவைபடா ஞாநத்தாலும்

கோட்படாப் பதமே ஐய குரக்கு உருக்கொண்டது என்றான்.

கிட்கிந்தாக் காண்டம், அனுமப் படலம்

பொருள்

காம்பை விட்டு நீங்காத செந்தாமரை மலர்களைப் போல பெரிய கண்களையுடைய இராமன்,  தம்பியான இலக்குவனுக்கு, ஐயனே! கால எல்லைக்குட்படாத, கீழ் நிலைக்குத் தாழாத, ஒளியில் குறைவில்லாத, அழியாத வேதங்களாலும், குற்றம் உண்டாக இடமில்லாத அறிவாலும் கொள்ளப்படாத தத்துவ நிலையே இந்தக் குரங்கின் வடிவத்தில் வந்துள்ளதாகும் என்று இராமன் வியந்து சொன்னான்.

 

அதாவது ‘காலத்தால் அழியாத உயர்ந்த வேதம்’ என்று வேதம் புகழப்படுகிறது.

xxxxx

வேதத்தின் உயர்வு

 

மேவ   அரும் உணர்வு முடிவு இலாமையினால்

வேதமும் ஒக்கும் விண்புகலால்

தேவரும் ஒக்கும் முனிவரும் ஒக்கும்

திண்பொறி அடக்கிய செயலால்

காவலின் கலை ஊர் கன்னியை ஒக்கும்

சூலத்தால் காளியை ஒக்கும்

யாவரும் தன்னை எய்துதற்கு அரிய

தன்மையால் ஈசனை ஒக்கும்

 

—–பாலகாண்டம்

 

பொருள்:

அந்த மதில், அறிவினால்  முடிவு காண முடியாதிருப்பதால் வேதங்களை ஒத்திருக்கும்;

விண்ணுலகத்தை எட்டுவதால், தேவர்களை ஒத்திருக்கும்;

போர்ப்பொறிகளை தன்னுள் மறைத்து வைத்திருப்பதால் முனிவர்களை ஒத்திருக்கும்;

காவல் தொழிலில் கலைமானை வாஹனமாக உடைய துர்கா தேவியை ஒத்திருக்கும்;

தன் சிகரத்தில் இடி தாங்கி ஆகிய சூலத்தைப் பெற்றிருப்பதால் காளியை ஒத்திருக்கும்;

 

யாரும் தன்னை அணுக முடியாத நிலையில் ஈசனை ஒத்திருக்கும்.

 

 

நல்ல கற்பனை! அயோத்தி மாநகரின் மதிலை வர்ணிக்க வந்த கம்பன் அதன் உயர்வு பற்றி ஒப்பிடுகையில் அறிவினால் முடிவே காண முடியாத வேதங்களுக்குச் சமம் என்கிறான்.

 

இந்தப் பாடலில் உள்ள விஞ்ஞான விஷயமான இடிதாங்கி பற்றியும் துர்கையின் வாஹனமான கலைமானுடன் இந்தியா முழுதும் எங்குமே துர்கை சிலை கிடைக்காதது பற்றியும் ஏற்கனவே எழுதியுள்ளேன். கலைமகளின் வாஹனம் மான் என்று தமிழ் இலக்கியமும் சம்ஸ்கிருத இலக்கியமும் பாடிப் பரவியபோதும் ஓரிடத்திலும் இப்படிப்பட்ட சிலை கிடைக்காதது அதிசயமே. முஸ்லீம் படைகள் அடித்து உடைத்த சிலைகளில் இதுவும் அடக்கம் போலும்.

 

xxxxxxxxxxxx

வேதம் பொய்க்குமோ?

 

அல்லல் உற்றேனை வந்து அஞ்சல் என்ற இந்

நல்லவன் தோற்பதே நரகன் வெல்வதே

வெல்வதும் பாவமோ வேதம் பொய்க்குமோ

இல்லையோ அறம் என இரங்கி ஏங்கினாள்

சடாயு உயிர் நீத்த படலம், ஆரண்ய காண்டம்

 

பொருள்:

துன்புற்ற என்னிடம் வந்து அஞ்சாதே என்று தைரியம் சொன்னவனான ஜடாயு தோல்வி அடைவதா? நரகத்துக்கு உரியவனான  இராவணன் வெற்றி அடைவதா?  தருமம் வெல்லும் என்று வேதங்கள் கூறுவது பொய்யாகுமோ? பாவம் வெற்றி பெறுமா? இந்த ஊரில் தர்மம் என்பது இல்லாமல் போய்விட்டதா? என்று சீதை புலம்பினாள்

 

இதில் நாம் கவனிக்க வேண்டியது ‘அறம் வெல்லும் பாவம் தோற்கும்’ என்ற கருத்தாகும். இதைக் கம்பன் மேலும் சில இடங்களில் வலியுறுத்துகிறான். இது வேதம் சொல்லும் கருத்து என்பது இந்துக்களின் நம்பிக்கை.

xxxxx

வேத பாராயணம்

கிட்கிந்தா காண்டத்தில் கிட்கிந்தைப் படலத்தில் ஒரு காட்சி வருகிறது:

அருக்கிய முதல வான அருச்சனைக் கமைந்தயாவும்

முருக்கிதழ் மகளிர் ஏந்த முரசு இனம் முகிலின் ஆர்ப்ப

இருக்கு இனம் முனிவர் ஓத இசை திசை அளப்பயானர்த்

திருக்கிளர் செல்வம் நோக்கித் தேவரும் மருளச் சென்றான்

 

பொருள்:

கலியாண முருக்க மலரைப் போன்ற சிவந்த உதடுகளை உடைய வானர மகளிர் , அர்க்யம் முதலாக உள்ள அர்ச்சனைக்கு அமைந்த அனைத்தையும் கைகளில் ஏந்தி வரவும், பேரிகை முதலிய கருவிகள் இடி போல ஒலிக்கவும்,  முனிவர்கள் இருக்கு வேதம் முதலான நால் வேதங்களையும் பாராயணம் செய்தபடி வரவும், இசை எல்லாத் திசைகளிலும் பரவும், புதிய செல்வச் சிறப்பைக் கண்டு தேவர்களும் திகைக்குமாறு, சுக்ரீவன், இலக்குவனின் எதிரில் சென்றான்.

 

வானர சாம்ராஜ்யத்திலும் வேத பாராயணம் செய்யும் முனிவர்கள் இருந்ததும், அவர்கள் நாகரீகமிக்க சமுதாயத்தில் உள்ளதைப் போலவே மன்னன் பவனியில் வேத பாராயணம் செய்தவாறு வந்தனர் என்பதும் நல்லதொரு காட்சி.

 

எங்கள் மதுரையில் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் திருவீதி உலா வருகையில் இது போல பிராமணர்கள் வேத பாராயணம் செய்தவாறு வருவர். பின்னால் ஓதுவா மூர்த்திகள் தேவாரம், திருவாசகத்தை ஓதியவாறு வருவர்.இது கிட்கிந்தையிலும் நடந்தது!

 

 

உபநிடதம், வேதாந்தம் பற்றியும் பல பாடல்களில் பேசுகிறான் கம்பன்; அவைகளைத் தனி ஒரு கட்டுரையில் தருவேன்.

TAGS:– கம்பன், வேதம், உவமை, உயர்வு, பொய், நாட்படா மறை

 

–SUBHAM—

வேதத்தில் மரங்களின் கதை (Post No.4372)

Written by London Swaminathan 

 

Date: 6 NOVEMBER 2017

 

Time uploaded in London- 18-36

 

 

Post No. 4372

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Sacred Tree in Varanasi/ Benares

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் நியக்ரோத, உதும்பர, அஸ்வத்த என்று மூன்று மரங்களின் பெயர்கள் விஷ்ணுவின் அம்சமாக வழிபடப்படுகின்றன. மஹாபாரதத்தில் உள்ளதும், ஸ்ஹஸ்ரநாமங்களில் பழையதுமான ஒரு துதியில் மூன்று மரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மர வழிபாடு வேத காலத்திலேயே உண்டு. மேலும் இந்துக்கள் ஐரோப்பாவில் குடியேறி அவர்கள் பண்பாட்டைப் பரப்பியபோது விட்டு வந்த மிச்ச சொச்சங்களை இன்றும் ஐரோப்பாவில் காணலாம். இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் ஹாலிவுட் (ஹோலி உட் = புனித மரம்) ஹோலிஓக் (புனித ஓக் மரம்) இப்படி நூற்றுக் கணக்கான இடப் பெயர்கள் உண்டு.

 

 

2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஓவிட் (Ovid) என்னும் ரோமானியப் புலவர் மரங்களுக்கு காணிக்கை செலுத்துவது, நூல் கட்டுவது, கந்தைத் துணிகள் சாத்துவது பற்றிப் பாடியுள்ளார். இந்துக்கள் இயற்கையின் எல்லா றை அம்சங்களையும் வணங்கினர். மற்ற நாடுகளில் பழைய மர வழிபாடு இலக்கியத்திலும் மியூஸியங்களிலும் மட்டும் உள்ளது. ஆனால் இந்தியாவிலோ இமயம் முதல் குமரி வரை இன்றும் மர வழிபாடு இருக்கிறது.

 

தமிழ் நாட்டின் கோவில்களில் தல விருட்சங்கள் இருப்பது போல வட இந்தியாவில் புனித க்ஷேத்ரம் முழுவதும் புனித மரங்கள் இருக்கின்றன. வேத காலத்தில் பிப்பலாடன் (அரச மரம்) என்ற பெயரில் ரிஷி முனிவர்கள் வாழ்ந்தனர். பிராமணர்கள் அரச மரக் குச்சி (ஸமித்து) இல்லாமலோ தர்ப்பைப் புல் இல்லாமலோ வாழ முடியாது– அந்த அளவுக்கு அவர்கள் வாழ்க்கையில் குஸ ( தர்ப்பை) புல், அரச, பலாச மரங்கள் இணைந்து பிணைந்துள்ளன. ராமனின் புதல்வர்கள் இருவரில் ஒருவர் பெயருக்குக் காரணமே தர்ப்பைப் புல் (குஸ) தான்.

ஓரிரு வேதக் கதைகளைக் காண்போம்

 

பூமி, பிரஜாபதி ஆகியோரின் முடி (மயிர்) தான் தாவரங்கள் என்று சதபத பிராமணம் கூறும்; அதாவது ஒரு காலத்தில் தாவரங்களே இல்லாத பூமியில் தாவரங்கள் வளர்ந்ததை கதை போலச் சொல்லும் பகுதி இது.

 

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு- என்ற முது மொழியின்படி பூமியில் உள்ள தாவரங்கள்= மனிதனின் உடலிலுள்ள முடி

பூமியிலுள்ள ஆறுகள்= மனிதனின் உடலிலுள்ள ரத்தக் குழாய்கள்

 

–இவ்வாறு பல விளக்கங்கள் உண்டு.

 

கதை போலச் சொல்லுவதால் அதன் பின்னுள்ள மறை  பொருளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 

 

முக்கியமான விஷயம் என்ன வென்றால் தர்ப்பை (குஸ), தூர்வா (அருகம் புல்) உதும்பர, அஸ்வத்த, வட/ஆலம் மரங்கள் பற்றிய குறிப்புகள் வேத காலம் முதற்கொண்டே இருக்கின்றன என்பதே.

Kadamba Tree in Chir Ghat near Yamuna River

காட்டிலுள்ள தாவரங்களையும் மரத்திலுள்ள பழங்களையும் சாப்பிடலாம் என்று பிராமண நூல்கள் சொல்லும்.

 

பிதகோரஸ் என்ற கிரேக்க தத்துவ அறிஞர், அவரை (Beans) விதைகளை சாப்பிடக்கூடாது என்று தடுத்ததாகச் சொல்லுவர். இந்துக்களும் இப்படிப் பல தாவரங்களைத் தவிர்த்தனர். ரோமன் கத்தோலிக்க மதத்தினரும் , விரத காலத்தில் சில வகை உணவுகளை உண்ண மாட்டார்கள்.

 

உதும்பர என்பது அத்தி வகைத் தாவரம். இதில் செய்யப்பட்ட நாற் காலி அல்லது ஆசனத்தின் மீதமர்ந்து குளிப்பது பற்றி பல குறிப்புகள் பிராமண நூல்களில் உள.

 

உதும்பர மரம் பறிய கதை ஒன்று:–

 

தேவர்களும் அசுரர்களும் பிரம்மாவிடம் தோன்றினர். அவர்கள் அக்னியை முன் நிறுத்தி, அசுரர்களிடம் சென்றனர். அவர்கள் அக்னியை வெட்டி வீழ்த்தவே அது பூமியில் ‘க்ரிமுக’ மரம் ஆனது இதனால்தான் அது செந்நிற,,,,,தில் உளது.

 

பிரஜாபதி, முதல் யாகம் செய்தபோது அங்கிருந்து ‘வின்கங்கட’ மரம் வந்தது. அதன் மூலம் அவர் கைகளை சுத்தப்படுத்திக் கொண்டார்.

 

தேவர்களும் அசுரர்களும் பிரஜாபதியிடம் தோன்றினர். அவர்கள் ஒன்றாகச் செய ல்பட்ட காலத்தில் உதும்பர மரம் தவிர ஏனைய மரங்கள் எல்லாம் அசுரர் தரப்பில் நின்றன. ஆனால் தேவர்கள் வெற்றி பெற்றவுடன் எல்லா மரங்களும் தேவர் வசம் வந்தன. தோற்றுப்போன மரங்கள் எல்லாம் உதும்பர மரத்தில்  நுழைந்து கொண்டன. இதனால்தான் உதும்பர மரம் பால் வடியும் மரமாகவும் ஏராளமான பழங்கள் உடைய (அத்திப் பழம்) தாகவும் உளது.

Picture from Lalgudi Veda

இப்படிப்  பல கதைகள் சதபத, ஐதரேய பிராமனங்களில் இருக்கின்றன. அந்தக் காலத்திலேயே மரங்கள் பற்றி அக்கறை செலுத்தியதும், அதில் ஒரே இனத்தைச் சேர்ந்த (பைகஸ்  FICUS குடும்பம்) மூன்று மரங்களை விஷ்ணு சஹஸ்ரநாமம் வேதம் முதலியன குறிப்பிடுவதும் தாவர இயல் அறிவைக் காட்டும்.

 

மறை பொருள் உடைய கதைகள் என்பதால் இதன் மூலம் வேறு ஏதேனும் சொல்ல முற்பட்டனரா என்பதும் ஆராய்ச்சிக்குரியது.

 

எல்லாவற்றையும் விட முக்கியமானது—

தேவர்களும் அசுரர்களும் பிரஜாபதி என்னும் பிரம்மாவிடம் தோன்றியதாக கி.மு 1000 ஆண்டைச் சேர்ந்த பிராமண நூல்கள் கூறுவதாகும். இவைகளை  மறைத்துவிட்டு ஒரு தரப்பை பழங்குடியினர் அல்லது திராவிடர் என்று சித்தரிப்பது பிரித்தாளும் சூழ்ச்சியில் வல்ல வெளிநாட்டினரின் சதியாகும். சூத்திரர்களையும் கடவுளின் ஒரு பகுதி என்று ரிக் வேதத்தில் உள்ள புருஷ சூக்தம் சொல்லும். தேவர்கள், அசுரர்கள், ராக்ஷசர்கள் ஆகியோர் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும் வேதம் சொல்லும்— ஆனால் இவைகளை மறைத்து அவர்களை ஆதிப் பழங்குடி போல சித்தரிப்பது விஷமிகளின் வேலை. ஆக தாவரவியல் தவிர மானுடவியலும் சமூகவியலும் இந்த நூல்களில் காணக்கிடக்கின்றன என்ப தை அறிக.

 

—சுபம்—-

ரிக்வேதத்தில் பாவ மன்னிப்பு துதிகள் (Post No.4208)

Written by London Swaminathan

 

Date: 13 September 2017

 

Time uploaded in London- 6-54 am

 

Post No. 4208

 

Pictures are taken from various sources; thanks.

 

மனிதன் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்பது இந்துக்களின் தினசரி வழிபாட்டிலேயே இடம்பெற்றுள்ளது. எல்லா  பூ ஜைகளும் முடிந்தபின்னர் யானிகானிச பாபானி… என்ற மந்திரத்தைச் சொல்லி ஆ த்ம  ப்ரதக்ஷிணம் (தன்னையே சுற்றிக் கொள்ளல்) செய்வது வழக்கம். பிராமணர்கள் தினமும் 3 முறை செய்யும் சந்தியாவந்தனத்திலும் பாவ மன்னிப்பு கோரும் மந்திரம் வருகிறது. ஆண்டுதோறும் வரும் உபாகர்மா (ஆவணி அவிட்டம்-பூணூல் மாற்றும் நிகழ்வு) மந்திரத்தில் பாபங்களின் நீண்ட பட்டியல் வருகிறது; பெரிய பாவவங்கள், சின்ன பாவங்கள் முன் ஜன்மங்களில் செய்த பாவங்கள் ஆகிய எல்லாவற்றையும் சொல்லி மன்னிப்பு கேட்பர். இந்த மாதிரியான அற்புத மந்திரம் உலகில் வேறு எந்த நூலிலும் இல்லை.

 

கிறிஸ்தவமதம் போன்றவற்றில் பாவ மன்னிப்பு இருந்தாலும் அவை எல்லாம் ஒரு பெட்டிக்குள் ஒளிந்து கொண்டு பக்கத்துப் பெட்டியில் நிற்கும் பாதிரிமாரிடம் சொல்லுவதோடு நின்றுவிடும். இந்துமதத்தில் தினசரி பிரார்த்தனையில் இருப்பது அதன் சிறப்பு. எல்லோரும் சொல்லும் கந்த சஷ்டி கவசம் போன்றவற்றிலும்  “எத்தனை குறைகள்,எத்தனை பிழைகள் எத்தனையடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்” என்று வேண்டுகிறோம்.

 

ஆனால் இந்தக் கட்டுரையில் உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் (கி.மு1500 முதல் கிமு.6000) உள்ள சில பாவ மன்னிப்பு துதிகளைக் காண்போம்.

 

நாங்கள் எங்களை அன்பாக நேசிக்கும் மனிதனுக்கு எதிராகவோ சகோதரனுக்கு எதிராகவோ, நண்பனுக்கு எதிராகவோ, சகாவுக்கு (கூட்டாளி) எதிராகவோ, எங்களுக்குப் பக்கத்தில் வசிப்பவனுக்கு எதிராகவோ, முன்பின் தெரியாத ஒருவனுக்கு எதிராகவோ பாவம் (தீங்கு) செய்திருந்தால், ஓ வருண பகவானே அவைகளை நீக்கு வாயாக.

 

விளையாட்டில் யாரையாவது ஏமாற்றி இருந்தாலோ தெரிந்தோ தெரியாமலோ பாவம் செய்திருந்தாலோ  அவற்றையும் நீக்குக

 

இந்த எல்லா பாவங்களையும், கட்டுகளை அவிழ்ப்பது போல அவிழ்த்துவிடு; ஓ வருண பகவானே என்றைக்கும் உன் அன்புக்குப் பாத்திரமானவர்களாக நாங்கள் இருக்க வேண்டும்- 5-85-7/8

 

 

எங்கள் தந்தையர் செய்த பாவவங்களில் இருந்து எங்களை விடுவிப்பாயாக; எங்கள் தேகத்தினால் செய்த பாவங்களிலிருந்தும் விடுவி.

 

நாங்கள் திட்டமிட்டு செய்த பாவம் இல்லை; ஓ வருணா! நாங்கள் குடித்த பானமோ, உணர்ச்சிவசமோ, சூதாட்டமோ, சிந்திக்க மறந்ததாலோ தவறான வழியில் செலுத்தப்பட்டுவிட்டோம்; வலுவானவர், பலவீனமானவரை தீய வழிகளில் செலுத்துகின்றனர்; தூக்கம் கூட அதர்மத்துக்கு வழிகோலுகிறது – 7-86

 

 

அதிதி, மித்ரா, வருணா எவ்வளவு பாவங்களை உங்களுக்கு எதிராகச் செய்தாலும்  எங்களை மன்னித்து விடுக 2-27-14

 

அஸ்வினி தேவர்களே! எங்கள் வாழ்நாட்க ளை நீட்டியுங்கள் பாவங்களை துடைத்து அழியுங்கள் 1-157-4

 

அழகிய இளம் கடவுள் அக்னி தேவனே! இந்த மானுட உலகத்தில் அறிவீனத்தால் நாங்கள் இழைத்த பாவங்களை

 

பெருமைமிகு அதிதிக்கு முன்னால் அடியோடு அகற்றிவிடு; நாங்கள் செய்த கொடுமைகளைத் துடைத்தொழி 4-12-4

 

மற்றவர் செய்த பாவங்களுக்காக எங்க ளை  வருத்தாதீர்கள் வசுக்களே: எங்க ளைத் தண்டிக்காதீர்கள் 6-51-7

மருத் தேவதைகளே! நாங்கள் ரஹசியமாகவோ பகிரங்கமாகவோ செய்த எந்த பாவச் செயல்கள் உங்கள் கோபத்தைத் தூண்டிவிட்டது? விரைவாக அவைகளை அழிப்பாயாக -7-58-5

அந்த எல்லையற்ற வ ளம்பெற்ற பிருஹஸ்பதி எங்களைப் பாவமற்றவர்களாகச் செய்யட்டும்; ஒரு தந்தை போல எங்களைக் கவனிக்கட்டும் 7-97-2

 

செய்த பாவவங்களில் இருந்தும் செய்யாத பாவங்களில் இருந்தும் எங்களைப் காப்பாற்றுங்கள் விஸ்வே தேவர்களே! இன்று எங்களை எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுவித்து மகிழ்ச்சியை அருளுக 10-63-8

 

 

எவ்வளவு நேர்மையான முறையீடுகள்!

எவ்வளவு அழகான சொற்கள்;

அடிமனத்தின் ஆழத்திலிருந்து வருந்தி வெளியிட்ட மனக்குமுறல்கள்!

 

உலகில் பாபிலோனிய, எகிப்திய கிரேக்க நாகரிகங்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பாவ மன்னிப்பு துதிகள் உண்டு.

 

ஆயினும் கி.மு 3100ல் வியாசரால் நான்காக வகுக்கப்பட்ட வேதங்களில் பழமையான ரிக் வேதத்தில் கோர்வையாக, தொகுப்பாக துதிகள் இருப்பது போல வேறு எங்கும் காணக்கிடைக்கில!

 

 

சுபம்

 

TAGS: வேதம், பாவ மன்னிப்பு, துதிகள்

 

வேத பிராயம் நூறு வயதை எட்டிய பெரியோர்! -1 (Post No. 2566)

number-100.jpg-12707

Written by S Nagarajan

 

Date: 23  February 2016

 

Post No. 2566

 

Time uploaded in London :–  6-12 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

வேதவழி

 

வேத பிராயம் நூறு வயதை எட்டிய பெரியோர்! -1

 

ச.நாகராஜன்

 

 

 

மனிதருக்கு வேதம் வகுத்த ஆயுள் நூறு.

 

ஜீவேம சரத சதம்- நூறு ஆண்டுகள் வாழ்வோமாக என்று தினமும் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் அருள வேண்டி சூரியனைத் துதிப்பது பண்டைய காலத்திலிருந்து ஹிந்து சமூகத்தில் இருந்து வரும் பழக்கம்.

 

 

இப்படி வேதம் வகுத்த நெறிகளின் படி வாழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட வயதைத் தாண்டியோர் ஏராளம். அவர்கள் அனைவரையும் பற்றிய விரிவான சரித்திரம் நம்மிடம் இல்லை; ஏனெனில் அதை ஒரு அற்புதம் என்று அப்படி வாழ்ந்தவர்கள் நினைக்கவே இல்லை.

 

 

ஆனால் நூறில் பாதியை எட்டுவதையே அதிசயமாகப் பார்க்கும் இந்தக் காலத்தில் அப்படிப்பட்ட மகான்களை நினைப்பதும் அவர்கள் வாழ்க்கை முறையை உன்னிப்பாக கவனித்துப் பார்ப்பதும் உத்வேகம் அளிக்கும்.

 

இந்த வகையில் சமீப காலத்தில் வாழ்ந்த  சிலரைப் பற்றியேனும் அறிந்து கொள்வது வேதநெறிக்கு நாம் கொடுக்கும் மரியாதையாகும்.

 go mata, kanchi

முதலில் நால்வரைப்  பார்ப்போம்.

 

காஞ்சி காமகோடி ஜகத்குரு சங்காராசாரியார் (ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி – 68 பீடாதிபதி)

 

பண்டிட் ஸ்ரீபத் தாமோதர சாத்வலேகர்

 

யோகி ஸ்ரீ கிருஷ்ணமாசாரியா

நிரோத்பரன்

 

சமீபகாலத்தில் வாழ்ந்த இந்த நால்வரில் ஒருவர் ஜகத்குரு.உலக நன்மையை வேண்டி தன் ஆயுளை அர்ப்பணித்த பெரும் அருளாளர்.

 

 

இன்னொருவர் வேத வாழ்க்கையை வாழ்ந்து காட்டி நூறு வயதை எட்டியவர். பண்டிட் ஸ்ரீபத் தாமோதர சாத்வலேகர்

இன்னொருவர் ஹிந்து வாழ்க்கை முறை கற்பிக்கும் யோகத்தைக் கற்று அதன்படி வாழ்ந்தால் நூறு வயதை சுலபமாக எட்டலாம் என்று நிரூபித்த யோகாசாரியர் – யோகி ஸ்ரீகிருஷ்ணமாசாரியார்.

மஹரிஷி ஒருவரை அண்டி அவரின் அணுக்க பகதராக இருந்து அவர் கூறிய யோக முறைப்படி வாழ்ந்தால் நூறையும் தாண்டலாம் என்று நிரூபித்தவர் அரவிந்த மஹரிஷியுடன் நீண்ட காலம் இருந்த் அணுக்கத் தொண்டர் நிரோத்பரன்!

 

 

இந்த நால்வரும் நமக்காக விட்டுச் சென்ற அன்புரைகளும் அறிவுரைகளும் ஏராளம்.

 

ஏராளமான சொற்பொழிவுகள். ஏராளமான நூல்கள்! ஏராள்மான இரகசியங்களைச் சுட்டிக் காட்டி அன்பர்களுக்குத் தந்த அருளுரைகள்.

 

இவையெல்லாம் நல்ல வேளையாக தொகுக்கப்பட்டுள்ளன.

தேடி ஓடி நாட வேண்டியது ஒன்று தான் நம் வேலை.

நாலவரைப்  பற்றியும் இந்தச் சிறு குறுந்தொடரில் அறிமுகம் செய்து கொள்வோம்!   – தொடரும்

 

 

உயிர், மெய் எழுத்துக்களைக் கண்டுபிடித்தவன் தமிழனா?

tamil-barakhari

Research paper No 1959

Written by London swaminathan

Date: 28 June 2015

Uploaded in London at காலை 9-48

தமிழில் உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, உயிர் மெய் எழுத்துக்கள் 216 (12×18=216), ஆய்த எழுத்து 1, ஆக மொத்தம் 247 என்று நாம் படித்திருக்கிறோம். இதை நான் லண்டன் பல்கலைக் கழகத்தில் பாடம் கற்பிக்கும் போது சொல்வேன்; உடனே எல்லா மாணவர்களும் ஆ! என்று ஒரு வியப்புக் குரல் கொடுப்பார்கள். கவலைப் படாதீர்கள்! முப்பது (12+18) எழுத்துக்களைப் படித்துவிட்டு சில குறியீடுகளையும் (diacritical marks டயக்கிரிட்டிகல் மார்க்ஸ்) அதற்குப் பின்னுள்ள சப்தங்களையும் புரிந்து கொண்டால் போதும்! ——- என்றவுடன் நிம்மதிப் பெருமூச்சுவிடுவர்.

அதற்குப் பின்னால் எழுத்து அமைப்பு விஷயத்தில், தமிழர்களின் அறிவியல் பூர்வ அணுகு முறையை விளக்கும்போது, உயிர் என்பது நம்முடைய மூச்சுக் காற்று, மெய் என்பது நமது உடல், இரண்டும் சேரும்போது வருவது உயிருள்ள மனிதன் என்பது போல இந்த உயிர் மெய் எழுத்துக்கள் என்று அதன் தத்துவப் பின்னணிகளை விளக்குவேன். பிற்காலத்தில் இது சைவ சித்தாந்த விளக்கத்திலும் இடம் பெற்றது. பல புத்தகங்களில் இது தமிழனின் அரிய கண்டுபிடிப்பு என்று எழுதி இருப்பார்கள். அது உண்மை அல்ல. அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வேத கால இலக்கியத்தில் இது இருக்கிறது. அப்படியானால் தமிழன் அதைக் “காப்பி” (copy) அடித்தானா? அதுவும் இல்லை!

தமிழ் மொழியையும் சம்ஸ்கிருத மொழியையும் படைத்தவன் சிவ பெருமான். தமிழுக்கு இலக்கணம் வகுக்கும் பொறுப்பை வடக்கிலிருந்து வந்த அகத்தியன் செய்து கொடுத்தான். இதை நான் சொன்னால் ஒதுக்கிவிடுவீர்கள். திருவிளையாடல் புராணத்தில் பரஞ்சோதி முனிவரும், நமது காலத்தில் வாழ்ந்த உலக மகா கவிஞன் சுப்பிரமணிய பாரதியும் சொல்லியிருக்கிறான் (ஆதிசிவன் பெற்றுவிட்டான்……..) இரண்டு பாடல்களையும் முன்னொரு கட்டுரையில் தந்துவிட்டேன்.

தமிழுக்கு இலக்கணம் வகுக்க அகத்தியனை சிவபெருமான் அனுப்பியதில் இரண்டு உண்மைகள் புலப்படும்:

1.அகத்தியர் வருவதற்கு முன்னரே தென்னாட்டில் தமிழ் என்று ஒரு மொழி இருந்தது. அது வட நாட்டிலோ, சிந்து சமவெளியிலோ வழங்கப்படவில்லை. தென்னாட்டில் மட்டுமே இருந்தது. இதைத் தொல்காப்பியரும், பனம்பாரனாரும் கூட சொல்கிறார்கள்.

2.இரண்டும் ஒரே மூலத்திலிருந்து வந்ததால்தான், இரண்டு மக்களும் ஒரே இனம் என்பதால்தான், அகத்தியர் அந்தப் பணியை ஏற்றார்; திறம்பட செய்தும் முடித்தார்.

இதுவரை முந்தைய கட்டுரைகளில் நான் சொன்ன கருத்துக்கள்:

1.இந்திய மொழிகளை திராவிட (Dravidian) மொழிகள் என்றும் இந்திய-ஐரோப்பிய (Indo-Eoropean)  மொழிக் குடும்பம் என்றும் பிரித்தது தவறு (சான்று: பரஞ்சோதி முனிவர், பாரதியார், தமிழ்-சம்ஸ்கிருத மொழிகளின் அமைப்பு).

2.இந்திய வரலாற்றையோ, பண்பாட்டையோ பற்றி எழுதுபவனுக்கு தமிழ், சம்ஸ்கிருத இலக்கிய, இலக்கண அறிவு இல்லாவிடில் கால்டுவெல் (Bishop Caldwell) போல அரை வேக்காட்டுக் கொள்கைகளை மொழிவர் (நல்ல வேளையாக, கால்டுவெல் கூறிய கொள்கைகளை எல்லா தமிழறிஞர்களும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டனர். தமிழன் துருக்கி (Mediterranean) பகுதியிலிருந்து வந்தவன், அவன் மொழிக்கும், சிதிய (Scthyan) மொழிக் குடும்பத்துக்கும் நெருங்கிய தொடர்பு என்றெல்லாம் அவர் உளறி வைத்தார். பகுத்தறிவுத் திராவிடங்கள் கூட அதை ஏற்கவில்லை).

  1. உலகில் சம்ஸ்கிருதத்துக்கு மிக நெருங்கிய மொழி தமிழ், தமிழுக்கு மிக நெருங்கிய மொழி சம்ஸ்கிருதம்; ஏனெனில் இரண்டு மொழிகளின் அகர வரிசை (Alphabetical order) , வேற்றுமை (Case suffixes) உருபுகள், சந்தி ( joining Rules) இலக்கணம் முதலியவற்றை வேறு எங்கும் காணமுடியாது. அப்படிக் கண்டால், அந்த மொழிகள் இவைகளிலிருந்த வந்த மொழிகளே!

4.தமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்களில் ஒரே கொள்கைகளை, வாழ்க்கை மூல்யங்களைப் (Values in life) பாராட்டுவதோடு (எ.கா.அறம், பொருள் இன்பம், இம்மை/மறுமை, வாய்மை), சில சொற்களை ஆதிகாலம் முதல் பகிர்ந்து (எ.கா. இருதயம், மனம், காமம்) கொள்கின்றனர். ஒரே மண்ணில், ஒரே சிந்தனையுடைய வர்கள் என்பதால்தான் இது சாத்தியமாயிற்று. இதற்கு முந்தைய கட்டுரைகளில் நிறைய உதாரணங்களைக் கொடுத்துவிட்டதால் மீண்டும் சொல்ல விரும்பவில்லை.

5.கடைசியாக மற்றொரு விஷயத்தையும் சொன்னேன்: ஆரியர்களும்- திராவிடர்களும் சந்திதபோது ஒலி மாற்றங்கள் (Sound changes) ஏற்பட்டதென்ற அரை வேக்காட்டு வாதங்களுக்கு பொருளே இல்லை. ஏனெனில் இவை தமிழ் மொழிக்குள்ளேயே எழுத்துக்கள் புணரும்போது (internal canges) இப்படி மாற்றம் அடைவதை இலக்கணப் புத்தகங்கள் காட்டுகின்றன; அதுமட்டுமல்ல, உலகில் பல இடங்களில் இப்படி மாற்றங்கள் நடந்து இருக்கின்றன (Odysseus= Ulysses; Ramadan= Ramalan= Ramzan ) என்பதையும் காட்டி, உலகிலுள்ள எல்லா பெரிய, முக்கிய மொழிகளும் தமிழ்-சம்ஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளில் இருந்தே வந்தன என்றும் சொன்னேன். இதனால்தான் தொல்காப்பியத்துக்கு நான்கு வேதங்களையும் கரைத்துக்குடித்த/ கரை கண்ட அதங்கோட்டு பிராமணன் “சர்ட்டிபிகேட்” கொடுத்தார் என்று பனம்பாரனார் எழுதிவைத்தார்.

sanskrit_alphabet_small_poster

தமிழன் காப்பி அடிக்கவில்லை

ஆகையால் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் பல ஒற்றுமைகளைக் காணும்போது யார் யாரிடருந்து “காப்பி” அடித்தனர் என்று கணக்குப்போடாமல், அவை எல்லாம் ஒருதாய் வயிற்றுப் பிறந்த சகோதரர்களின் ஒருமித்த சிந்தனைக்குச் சான்று பகரும் அற்புதக் குறிப்புகள் எனக் கொண்டால் ஐயங்கள் எழா!

தமிழில் கிடைத்த மிகப் பழைய நூலான தொல்காப்பியத்தை, தொல் பொருட் துறை, வரலாற்று, மொழியியல் அடிப்படையில் கி.மு முதல் நூற்றாண்டு அல்லது அதற்குப் பின் என்பர் அறிஞர் பெருமக்கள். இதே போல எகிப்திலுள்ள அமர்ணா லெட்டர்ஸ்/ கடிதங்கள் (Amarna Letters in Egypt), துருக்கிநாட்டு பொகஸ்கோய் (Bogazkoy) கல்வெட்டு, சிரியா நாட்டில் கிக்குலி (Kikkuli’s Horse Manual) எழுதிய குதிரை சாஸ்திரம், துருக்கி-சிரியாவை ஆண்ட தசரதன் – பிரதர்தனன்(Tusserata, paratartana) ஆகிய தொல்பொருட் துறைச் சான்றுகளால் சம்ஸ்கிருத மொழியை கி.மு.1400 க்கு முன் என்று வைப்பர். இவை அசைக்க முடியாத தொல்பொருட் துறைச் சான்றுகள் (archaeological evidence) என்பதால் யாரும் மறுப்பதில்லை!

சுருக்கமாகச் சொன்னால் தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் இடைவெளி குறைந்தது 1400 ஆண்டுகள். ஆகையால் இரண்டு மொழிகளும் கிளைவிட்டுப் பிரிந்து இரண்டு ஆல மரங்களாக வளர்ந்ததில் – இரண்டு வெவ்வேறு மொழிகளாகப் பிரிந்ததில்— வியப்பொன்றுமில்லை.

உயிரெழுத்தும், மெய்யெழுத்தும்

வேதத்தில் பாடல்கள் உள்ள பகுதியை சம்ஹிதை என்பர்; அதைத் தொடர்ந்து வந்தது- பிராமணங்கள்; அதற்குப் பின் எழுந்தது ஆரண்யகங்கள்; கடைசியாக வந்தது உபநிஷத்துக்கள்.

தைத்ரீய ஆரண்யகம் என்ன சொல்கிறது என்று காண்போம் (2-3-4-1; 3-2-5-2):

உயிரெழுத்து என்பது நாள்; மெய் எழுத்து என்பது இரவு;

உயிரெழுத்து என்பது உள்ளுணர்வு; மெய் எழுத்து என்பது உடல்;

உயிரெழுத்து என்பது ஆகாசம்; மெய் எழுத்து என்பது பூமி.

உயிரெழுத்து என்பது எலும்பு மஜ்ஜை; மெய் எழுத்து என்பது எலும்பு.

என்று இரண்டுக்கும் உள்ள உறவை அழகாகப் பாடுகின்றனர். இதைத் தமிழர்கள், அகத்திய மகரிஷி தலைமையில் மேலும் அழகுபடுத்தி உயிர், மெய்/உடல், உயிர்மெய் என்று எழுதினர்.

letter

சம்ஸ்கிருதத்தில் சிறப்பான ஊஸ்ம (Sibilants) சப்தங்கள் உண்டு. அவை ச, ஸ, ஷ என்பன.

இவைகளையும் தைத்ரீய ஆரண்யக மந்திரம் சேர்த்துக் கொண்டு, அவைகளை உயிர் மூச்சு, காற்று மண்டலம் என்றெல்லாம் வருணிக்கும். ஆகவே இந்தக் கொள்கையின், “மூலம்” வேத இலக்கியங்களில் இருந்து வந்தது.

சாந்தோக்ய உபநிஷதத்தில் (2-22-5) உயிர் எழுத்தை இந்திரன் என்றும் ச,ஸ,ஷ எழுத்துக்களை பிரஜாபதி என்றும், மெய் எழுத்துக்களை யமன் என்றும் வருணிக்கும். இதன் பின்னுள்ள தத்துவ விளக்கங்களுக்குப் போகாமல் மேம்போக்காகப் பார்த்தாலும் மொழியியலை ஏன் இவ்வளவு பயன்படுத்தினார்கள் என்று வியப்போம். இன்னொரு இடத்தில் மூவகை எழுத்துக்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் சொல்லி இலக்கண பாடம் நடத்தும்!!

இதில் மிக வியப்பான விஷயம்: சமய விஷயங்களில் கூட இலக்கணத்தையும், மொழியியலையும் புகுத்தியதாகும். உலகில் மிக முன்னேறிய நாகரீகம் வேத கால நாகரீகம். இதனால்தான் இலக்கண, இலக்கிய உவமைகளை மத விஷயத்தில் புகுத்தியுள்ளனர். மோஸஸ் என்பவர் பத்து கட்டளைகளைப் (Ten Commandments) பெறுவதற்கும் முன்னரே, கிரேக்க மஹா கவி ஹோமர் இலியட், ஆடிஸி (Homer’s Iliad and Odyssey)  ஆகிய இரண்டு புத்தகங்களை எழுதும் முன்னரே வேத கால இந்துக்கள் மொழியியல் (Linguistics) பற்றிப் பேசத்துவங்கிவிட்டனர் — உவமைகளாகப் பயன்படுத்தினர் — என்றால் அவர்களுடைய பேரறிவு எத்தகையது என்பதை நீங்களே எடைபோடலாம்.

வேத காலத்துக்கு நீண்ட நெடுங்காலத்துக்குப் பின் வந்த, உலகமே வியந்து போற்றும், மஹா கவி காளிதாசன் தனது ரகு வம்ச மஹா காவியத்தின் முதல் பாடலிலேயே பயன்படுத்தும் உவமை, இந்திய மக்களின் எழுத்தறிவினை உலகிற்கே பறை சாற்றும்:

வாகார்த்தாவிவ சம்ப்ருக்தௌ வாகர்த்தப் பிரதிபத்தயே

ஜகதப் பிதரௌ வந்தே பார்வதிபரமேஸ்வரௌ

பொருள்: சொல்லும் பொருளும் சேர்திருப்பவர் போல உலகத்திற்குத் தாய் தந்தையாக விளங்கும் பார்வதியையும் பரமேஸ்வரனையும் சொல், பொருள் இவைகளை அறியும் பொருட்டு வணங்குகிறேன்

இந்தியர்களின் மொழி அறிவு கண்டு – பாணினியின் இலக்கண நூல் கண்டு — உலகமே வியப்பது இதனால்தான்!!