Largest Gold Coin

India was the richest country in the ancient world. Until 1987 the largest gold coin was an Indian coin issued by the Mogul emperor Jahangir. Seventeenth century Mogul ruler of India Jahangir recorded in his memoirs presenting a 1000 Mohur coin to Shah of Persia’s ambassador in 1612. That was the only reference to this gigantic coin. Probably one or two only were ever struck.

The coin’s diameter is seven inches, it weighs 27 pounds. The coin was embellished with poetic description of its image in Arabic and Persian. It was written by Jahangir’s court poet. The coin was auctioned in Geneva along with Shahjehan’s 100 mohur gold coin struck in 1639. The mystery owner of the largest coin was auctioned by Swiss auction firm Habsburg Feldman in 1987. Though the owner expected to sell it for ten million dollars he got only 8 million dollars (£4-47 million).

The existence of this coin was unknown, until rumours began to circulate in the market. It was suggested that the coin was removed from the Iranian Treasury by the late deposed Shah and came for sale from his family. The second largest gold coin issued by Shahjehan attracted a bid of £1.56 million. All these prices were 1987 prices. It must have multiplied in value by now.

Latest Gold coin

Recently Canada issued a 100 kilo gold coin. But in 2011 Australia made a 1000 kilo gold coin to celebrate Queen Elizabeth’s visit. The gold coin has queen on one side and a leaping Kangaroo on the other side. Its denomination is 1 million Australian dollars. But the actual worth of the coin is £35 million. It weighs 2213 lb, 31 inches wide (80 cm) and 4-7 inches (12 cm) thick. The Western Australian Perth mint took 18 months to make it.

The Australian gold coin is ten times heavier than the Canadian coin, which weighed 100 kilos. With all the modern technology they were able to produce such a big coin. But India led the world till 1987. Nobody produced any coin equal to the Moghul gold mohurs.
Museums and Private parties have India’s riches around the world. They are worth billions of dollars. Tehran Museum in iran is one of the richest museums in the world. A lot of Indian gems and jewelleries are displayed in Tehram museum.

Also read: Rs 1000 Crore Indian Gem Wonder

Indiahhhhh……. Richest Country in The World (Five Parts series)

நட்சத்திர அதிசயங்கள்- பகுதி 1

நட்சத்திர அதிசயங்கள்

வான மண்டலத்தில் இருபத்தியேழு நட்சத்திரங்களில் முதலிடத்தைப் பெறுவது அஸ்வினி! இதன் அதி தேவதை அஸ்வினி தேவர்கள்! எத்தனை ரஹஸ்யங்கள் இதற்குள் உள்ளன தெரியுமா? அஸ்வினி தேவர்கள், இழந்த கண் பார்வையை அருளி உபமன்யுவை மஹரிஷி ஆக்கிய அற்புத சரிதத்தை இந்த வாரம் பார்ப்போம்!
அஸ்வினி ரஹஸ்யம்! – 1

எழுதியவர்: ச.நாகராஜன்

அதி ரஹஸ்ய அஸ்வினி

இருபத்தியேழு நட்சத்திரங்களுள் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் அஸ்வினி நட்சத்திரத்தின் பெருமைகளும் மர்மங்களும் அதிசயங்களும் ரஹஸ்யங்களும் ஏராளம், ஏராளம்! மேஷ ராசியில் அமைந்துள்ள அஸ்வினி நட்சத்திரத்தின் அதி தேவதை அஸ்வினி தேவதைகள். மேலை நாட்டினரால் ஆல்பா,பீடா ஏரியஸ் என இது அழைக்கப்படுகிறது. பிறருக்கு உதவி செய்வதற்கென்றே ஒரு தேவதை இருக்குமானால் அது அஸ்வினி தான்! அஸ்வினி இரட்டையரைப் பற்றிய ஏராளமான கதைகள் ரிக் வேதத்தில் உள்ளது. இது மட்டுமல்லாமல் மஹாபாரதம் மற்றும் 18 புராணங்கள் நம் மனதைக் குளிர வைக்கும் பல ரகசியங்களை அஸ்வினி பற்றிக் கூறுகின்றன.

அயோதௌம்யரின் கட்டளை

அஸ்வினி பற்றிய முக்கியமான ஒரு சரிதத்தை இங்கு பார்ப்போம்.இந்தச் சம்பவம் நிகழ்ந்த காலம் த்வாபர யுகத்தின் இறுதிக் காலம். அயோதௌம்யர் என்ற மஹரிஷிக்கு உபமன்யு, ஆருணி,வேதர் என்ற மூன்று சிஷ்யர்கள் இருந்தனர்.தௌம்யருக்கு குருகுல வழக்கப்படி உபமன்யு உள்ளிட்டவர்கள் உரிய முறையில் சேவை செய்து கொண்டிருந்தனர். ஒரு நாள் தௌம்யர் உபமன்யுவை அழைத்து,” நீ என் பசுக்கூட்டத்தை ரக்ஷ¢த்துக் கொண்டு வா” எனக் கட்டளையிட்டார். அவ்வாறே உபமன்யு பசுக் கூட்டங்களை மேய்த்துக் கொண்டு போய் மாலையில் குருவிடம் வந்து சேர்ந்தார். குரு உபமன்யுவின் தேகம் வாடாமல் இருந்ததைக் கண்டு அவரை நோக்கி, “உபமன்யு, உன் தேகம் வாடாமல் பொலிவுடன் இருக்கிறதே, நீ என்ன ஆகாரம் உண்டாய்?” என்று கேட்டார்.உபமன்யு,” குருவே! நான் யாசகம் செய்து அதனால் ஆகாரம் உண்டேன்” என்றார், அதற்கு குரு, “யாசகத்தினால் உனக்குக் கிடைப்பதை என்னிடம் இனி கொண்டு வந்து கொடுத்து விடு. அதை எனக்குச் சேர்ப்பிக்காமல் நீ உண்பது முறையன்று” என்றார். உபமன்யு அந்தக் கட்டளையை சிரமேற் கொண்டார். மறுநாள் பிட்சையில் தமக்குக் கிடைத்த அனைத்தையும் குருவிடம் உபமன்யு சமர்ப்பித்தார். அதில் ஒரு கவளம் கூட உபமன்யுவுக்குத் தராமல் தௌம்யரே அனைத்தையும் எடுத்துக் கொண்டார். பிறகு மாடுகளை மேய்க்கச் சென்ற உபமன்யு மாலையில் வீடு வந்து சேர்ந்தார்.

அவர் உடல் வாடாமல் இருந்ததைக் கண்ட குரு, “உனக்கு நான் ஒரு கவளம் கூடக் கொடுக்கவில்லையே! என்றாலும் கூட நீ உடல் வாடாமல் வந்திருக்கிறாயே! எதை ஆகாரமாக உண்டாய்?” என்று கேட்டார்.அதற்கு உபமன்யு, “குருவே! முதலில் யாசகம் எடுத்ததைத் தங்களிடம் கொடுத்து விட்டேன். இன்னொரு முறை யாசகம் எடுத்து அதை நான் சாப்பிட்டேன்” என்றார்.தௌம்யர், “உபமன்யு, நீ செய்தது சரியல்ல. உன்னுடைய இந்த செய்கையினால் பி¨க்ஷ ஜீவனம் செய்யும் மற்றவர்களுக்கு நீ இடைஞ்சல் செய்கிறாய். இப்படி நீ ஜீவிப்பதால் நீ துராசை உள்ளவனென்பது நிச்சயமாகிறது” என்றார்.குரு கூறிய அனைத்தையும் மனதில் வாங்கிக் கொண்டு உபமன்யு மாடுகளை மேய்க்கச் சென்றார். அன்று மாலை வழக்கம் போல அவர் வந்ததும் அவரை நோக்கிய குரு “ என்ன உபமன்யு, நீ வாடாமல் கொழுத்துத் தான் இருக்கிறாய், என்ன உணவை உண்டாய்?” என்று கேட்டார். அதற்கு உபமன்யு,”ஐயனே, நான் இந்தப் பசுக்களின் பாலை அருந்தி ஜீவிக்கிறேன்” என்றார்.

உடனே தௌம்யர், “அடடா, என்னுடைய அனுமதியைப் பெறாமல் பாலை அருந்தலாமா? இனி அருந்தாதே!” என்றார். குருவின் வார்த்தைகளுக்குச் சரி என்று சொல்லி உபமன்யு திரும்பினார். மறு நாள் மாலை ஆயிற்று.உபமன்யு வந்தார். குரு அவர் சற்றும் சோர்வடையாமல் இருப்பதைக் கண்டு,”உபமன்யு, இன்று எதையாவது அருந்தினாயா, என்ன?பாலை அருந்தவில்லையே!” என்று கேட்டார். “ஐயனே! பாலை அருந்தவில்லை. ஆனால் பாலைக் கன்றுகள் குடித்தபின்னர் கீழே விழும் நுரைத் துளிகளை அருந்தினேன்” என்றார், உடனே தௌம்யர்,” இந்தக் கன்றுக்குட்டிகள் பாலை போதிய அளவு அருந்தாமல் விட்டு விடுகின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. ஆகவே இனி நீ நுரைத் துளிகளையும் அருந்தாதே” என்று கட்டளையிட்டார். குருவின் கட்டளையை உபமன்யு சிரமேற் கொண்டார். நுரைத் துளிகளை இனி அருந்தமாட்டேன் என்று குருவிடம் உறுதி கூறினார். கன்றுகள் அருந்திய பின்னர் வந்த பாலின் நுரைத்துளிகளையும் அருந்தாமல் காட்டில் மாடுகளை மேய்த்தவாறு அலைந்த அவர் இறுதியில் பசி தாங்காமல் எருக்க இலைச் சாறை அருந்தினார்.காரம் நிறைந்த எருக்க இலைச் சாறின் விஷத்தினால் அவர் கண்கள் உடனே குருடாயின.

அஸ்வினி தேவர்களை நோக்கி துதி

கண் தெரியாததால் காலால் நடக்க முடியாமல் உபமன்யு ஊர்ந்து செல்லத் தொடங்கினார்.அப்போது வழியில் இருந்த ஆழமான கிணற்றுக் குழி ஒன்றில் விழுந்தார். மாலை நேரமாயிற்று. உபமன்யு வராததைக் கண்ட தௌம்யருக்குக் கவலை வந்தது. தனது இதர சீடர்களை அழைத்து உபமன்யு எங்கே என்றார். அவர்களுக்குப் பதில் தெரியவில்லை. ‘வாருங்கள், அவனைச் சென்று தேடுவோம்’ என்று கூறிய தௌம்யர் காட்டை நோக்கிச் சென்றார். ‘உபமன்யு, நீ எங்கே இருக்கிறாய்’ என்று கூவிய வாறே ஒவ்வொரு பகுதியாக அவர் தேட ஆரம்பித்தார். தன் குருவின் சப்தத்தைக் கேட்ட உபமன்யு, “ குருவே! நான் இதோ இந்தக் கிணற்றுக் குழியில் வீழ்ந்து கிடக்கிறேன்!” என்று பரிதாபமான குரலில் உரக்கக் கத்தினார்.”இதில் நீ எப்படி விழுந்தாய்?” என்று தௌம்யர் கேட்க உபமன்யு, தான் எருக்கஞ்சாறை அருந்தியதையும் கண்கள் குருடான விஷயத்தையும் கூறினார். உடனே தௌம்யர், “உபமன்யு! தேவர்களுக்கு வைத்தியர்களான அஸ்வினி தேவர்களை நீ ஸ்தோத்திரம் செய்! அவர்கள் உனக்கு கண்களை மீண்டும் அளிப்பார்கள்” என்று கூறி அருளினார். குருவால் கட்டளையிடப்பட்ட உபமன்யு மனமுருக அஸ்வினி தேவர்களைப் பிரார்த்திக்க ஆரம்பித்தார்.

ரிக் வேதத்தில் உள்ள மிக நீண்ட உபமன்யுவின் துதி மிக மிகச் சிறப்பானது. அதன் இறுதி வாக்கியங்களில் அவர், “ஓ! அஸ்வினி தேவர்களே!! நான் உங்களை வணங்குகிறேன். உங்களால் நியமிக்கப்பட்டிருக்கும் இந்த ஆகாயத்தையும் வணங்குகிறேன்.தேவர்களும் கூட தப்ப முடியாத எல்லாக் கர்மங்களுக்கும் பலன்களை நீங்களே விதிக்கின்றவர்களாய் இருக்கிறீர்கள்!ஆனால் உங்களின் செய்கைகளால் ஏற்படும் பலன்கள் உங்களைச் சார்வதில்லை. நீங்களே எல்லோருக்கும் பெற்றோர்களாயிருக்கின்றீர்கள். நீங்களே ஆணும் பெண்ணுமாக இருந்து பின்னால் ரத்தமாகவும் ஜீவாதாரமான திரவியமாயும் ஆகிற அன்னத்தைப் புசிக்கிறீர்கள். புதிதாய் பிறந்த குழந்தை தாயின் பாலை உண்ணுகிறது. உண்மையில் குழந்தை ரூபமாக இருப்பவர்கள் நீங்களே! ஹே! அஸ்வினி தேவர்களே! என்னுடைய ஜீவனை ரக்ஷ¢ப்பதற்கு ஆதாரமாக உள்ள கண் பார்வையை எனக்கு அனுக்ரஹம் செய்யுங்கள்.” என்று கூறி அஸ்வினி தேவர்களை மனமுருக பிரார்த்தனை செய்தார்.

மீண்டும் கண்பார்வை கிடைத்தது

எல்லோருக்கும் உடனே உதவத் துடிக்கும் அஸ்வினி தேவர்கள் தன்னை அண்டி வணங்கிய உபமன்யுவின் துதியால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் உபமன்யுவின் முன் தோன்றி.”நாங்கள் திருப்தி அடைந்தோம். இதோ, இந்தத் தின்பண்டத்தை உடனே உட்கொள்” என்று கூறி அவர் உண்ண தின்பண்டம் ஒன்றைத் தந்தனர். உபமன்யு,”நீங்கள் கொடுப்பதை என் குருவுக்கு முதலில் கொடுக்காமல் நான் சாப்பிடத் துணியேன்” என்றார். உடனே அசுவனி தேவர்கள் பழைய சம்பவம் ஒன்றை உபமன்யுவிடம் கூற ஆரம்பித்தனர். “முன்னொரு காலத்தில் உன்னுடைய குருவானவர் எங்களைப் பிரார்த்தித்தார்.நாங்கள் அப்போது அவருக்கு இதே மாதிரி தின்பண்டம் ஒன்றை உண்ணுவதற்காகத் தந்தோம்.அதை அவர் தன் குருவுக்குக் கொடுக்காமலேயே சாப்பிட்டார். ஆகவே உன் குரு முன் செய்த பிரகாரமே நீயும் அவருக்குக் கொடுக்காமல் உடனே இதைச் சாப்பிடலாம்” என்று கூறினர்.

உபமன்யு, “ஓ! அஸ்வினி தேவர்களே! என்னை மன்னிப்பீர்களாக! இதை என் குருவுக்குக் கொடுக்காமல் நான் சாப்பிட மாட்டேன்” என்று உறுதியாகக் கூறினார். உடனே அஸ்வினி தேவர்கள், “ உன் குருவின் மீது உனக்கு இருக்கும் பக்தியை மெச்சினோம்.உன் குருவினுடைய பற்கள் காரிரிரும்பினால் ஆக்கப்பட்டுள்ளன. உன்னுடைய பற்கள் தங்கப் பற்களாகக் கடவது” என்று கூறி ஆசீர்வதித்தனர்.” இனி நீ உன் பார்வையை அடைவாய். உனக்கு சர்வ மங்களமும் உண்டாகட்டும்” என்று கூறி அஸ்வினிதேவர்கள் மறைந்தனர்.

குருவிடம் உபமன்யு நடந்த அனைத்தையும் கூறி வணங்கினார்.தௌம்யர் மிகவும் சந்தோஷம் அடைந்தார். உபமன்யுவை நோக்கி அவர்,”நீ இனி அஸ்வினி தேவர்கள் கூறியபடியே சகல §க்ஷமத்தையும் அடைவாய்! எல்லா வேதங்களும் எல்லா தர்ம சாஸ்திரங்களும் உன்னிடத்தில் விளங்கும்” என்று கூறி ஆசீர்வதித்தார். அதன்படியே உபமன்யு வேத சாஸ்திரங்களில் தேர்ந்து பெரும் தவம் புரிந்து பெரிய மஹரிஷியாக ஆனார்.
அஸ்வினி தேவர்கள் அனைவருக்கும் உதவி செய்த ஏராளமான சம்பவங்களுக்கு உபமன்யுவின் கதை ஒரு சிறந்த சான்று. மேலும் அஸ்வினியைப் பற்றிப் பார்ப்போம்
-தொடரும்

*****************

பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்- இறுதி பகுதி


வீட்டுக்கு அலங்காரம் மனையாள்

வீட்டுக்கு அலங்காரம் மனையாள்
வீட்டுக்கு இருந்தால் வெங்கலப் பெண்டாட்டி வீட்டுக்கு இல்லாமற் போனால் தூங்கற் பெண்டாட்டி
வீட்டுக்காரி என்று பெண்சாதிக்குப் பெயர்
வீதிரும் பெண்ணும் விலை போச்சுது, கை தப்பினால்
வெடவெட என்று தண்ணீர் குடிக்காதவளா உடன்கட்டை ஏறப்பொகிறாள்?
வெட்கத்தால் ஒல்காதவள் குலஸ்த்ரீக்குப் போகாது
வெடகப்படுகிற வேசியும், வெடகங் கெட்ட சமுசாரியும் உதவ மாட்டார்கள்
வெட்கமே கெட்டு வெளிப்பட்ட முண்டைக்கு முக்காடு ஏதுக்கு?
வெட்கம் அற்ற பெண்பிள்ளை வீண்

வேசி பற்றி

வேசி காசு பறிப்பாள் (210)
வேசி அவல் ருசியை அறியாள்,வெள்ளாட்டி எள் ருசியை அறியாள்
வேசி ஆடினால் காசு, வெள்ளாட்டி ஆடினால் சவுக்கு
வேசி உறவு காசிலும் பணத்திலுந்தான்
வேசி உறவும் வெள்ளாட்டி அடிமையும் காசு பணத்தளவே காணலாம்
வேசி கூச்சப்பட்டால் வெண் காசு கிடைக்குமா?
வேசிக்கு ஆணையில்லை,வெள்ளாட்டிக்குச் சந்தோஷமில்லை
வேசிக்கு காசு மேல் ஆசை, விளையாடுப் பிள்ளைக்கு மண் மேலாசை
வேசி மேல் ஆசைபடறது வெள்ளெலும்பை நாய் கவ்வினதுக்கு ஒப்பாம்
வேசியும் நாயும் விதி நூல் வைத்தியரும் பாசம் அற்று நிற்பது காண்பார்
வேசியைப் பெண்டுக்கு வைத்துக் கொண்டால், வேறே வினை தேவையில்லை
வேசி வீடு போவதும் வெந்து சாம்பல் ஆவதும் ஒன்னுதான் (220)
வேடக்காரனுக்கும் ஆடக்காரனுக்கும் பகை, வேசிக்கும் தாசிக்கும் பகை
துக்குணிச் சிறுக்கிக்கு முக்கலக் கந்தை
துடைகாலி முண்டை எல்லாம் துடைத்துப் போட்டாள்
சும்மாக் கிடந்த அம்மையாருக்கு அரைப் பணத்துத் தாலி போதாதா?
சுவத்துக் கீரயை வழித்துப் போடடி சுரணை கெட்ட வெள்ளாட்டி
தையல் சொல் கேட்டால் எய்திடும் கேடு

தைரிய லெட்சுமி தன லெட்சுமி

தைரிய லெட்சுமி தன லெட்சுமி
தோசிப் பெண்ணுக்கேற்ற சொறியாங்கொள்ளி மாப்பிள்ளை
பெற்ற தாயானாலும் குற்றம் எத்தனை பொறுப்பாள்?
பெற்ற தாயிடத்திலேயா கற்ற வித்தையை காட்டறது? 230
பெற்ற தாயுடன் போகிறவனுக்கு பத்தம் ஏது?
வித்துவானை அடித்தவனும் இல்லை, பெற்ற தாயுடன் போனவனும் இல்லை
வித்தைக் கள்ளி மாமியார் விறகு ஒடிக்கப் போனாளாம், கத்தாழை முள்ளு கொத்தோடு தைத்ததாம்
வித்தைக் கள்ளி, விளையாடுக் கள்ளி, பாகற்காய் விற்ற பழங்கள்ளி
விட்தைக்காரப் பெண்பிள்ளை, செத்த பாம்பை ஆட்டுகிறாள்
வித்தையடி மாமி விற்கிறதடி பணிகாரம்
விலைமோரிலே வெண்ணை எடுத்துத் தலை மகனுக்கு கலியாணம் பண்ணுவாள்
வடுகச்சி காரியம் குடுகுச்சு, முடுகுச்சு

கிழவன் கிழவி பற்றி

கிழம் ஆனாலும் கேட்டானாலும் கட்டிக்கொண்டவள் பிழைப்பாள்
கிழவனுக்கு வாழ்க்கைப் படிகிறதிலும் கிணற்றில் விழலாம்
கிழவன் ஆனாலும் கட்டை ஆனாலும் கட்டிக்கொண்டவள் பிழைப்பாள்
கிழவி இருந்த வீடும் கிளி இருந்த காடும் ஈடேறமாட்டாது (241)
கிழவி பாட்டைக் கின்னரக் காரன் கேட்பானா?
கிழவி போனபோது சுவர் இடிந்து விழுந்ததாம்
கிழவியும் காதம் குதிரையும் காதம்
கிழவியை அடித்தால் வழியிலே பேலுவாள்
கிழவியை பாட்டி என்பதற்கு கேட்க வேண்டுமா?
குங்குமக் கோதைக்கும் அஞ்சு பணம், குருட்டுக் கண்ணிக்கும் அஞ்சு பணமா?
கெட்டது கெட்டாய் மகளே கிட்ட வந்து படுத்துக் கொள்
கெட்ட பயலுக்கேற்ற துட்ட சிறுக்கி
கூலிக்குக் குந்துவாள் பிள்ளைக்குத் தவிடு பஞ்சமா? (25)
கூனி ஆனாலும் கூடை சுமந்துதான் கூலி பெற வேண்டும்
கூனி வாயாற் கெட்டாற் போல
செத்த பாம்பு சுற்ற வருகிறதே, அத்தை நான் மாட்டேன் என்றாற் போல
செத்த பாம்பை ஆட்டுவாளாம் வித்தைகார பெண்பிள்ளை
அன்ன நடை நடக்கப் போய் தன் நடையும் கெட்டாற்போல
அன்னிய சம்பந்தமேயல்லாமல் அத்தை சம்பந்தம் இல்லை என்கிறான்
அன்னிய மாதர் அவதிக்குவுவாரா?
அன்னைக்குதவாதவன் ஆருக்குமாகான்
ஆக்கமாட்டாத பெண்ணுக்கு அடுப்புக் கட்டி பத்தாம்
ஆக்கமாட்டாத அழுகல் நாரிக்குத் தேடமாட்டாத திருட்டுக் கணவன் வாய்த்தானாம்
ஆக்கவேண்டாம் அரைக்கவேண்டாம் பெண்ணே, என் அருகில் இருந்தாலும் போதுமடி கண்ணே (260)
ஆக்கி அரைத்துப் போட்டவள் கெட்டவள், வழிக்கூட்டி அனுப்பினவள் நல்லவள்
ஆங்காரிகளுக்கு அதிகாரி
ஆங்காலம் எல்லாம் அவசாரி ஆடி,சாங்காலம் சங்கரா சங்கரா என்கிறாள்
ஆசையாய் மச்சான் என்றாளாம், அடிச் சிறுக்கி என்று அறைந்தானாம்
ஆச்சி ஆச்சி மெத்தப் படித்துப் பேசாதே
அண்ணனிடம் ஆறுமாதம் வாழ்ந்தாலுமண்ணியிடத்தில் அரை நாழிகை வாழலாமா?
அண்ணனுக்குப் பெண் பிறந்தால் அத்தை அயல்நாட்டாள்
அண்ணன் உண்ணாதது எல்லாம் மைத்துனிக்கு லாபம்
அண்ணாங்கை அப்சரஸ்த்ரீ
அதமனுக்கு பெண்டாட்டியாய் இருப்பதைவிட பலவானுக்கு வேலைக்காரியாய் இருப்பதே மேல் (270)
அதிசயமான ரம்பை அரிசி கொட்டுகிற தொம்பை

அத்தை பற்றி

அத்தைக்கு மீசை முளைத்தால் சிற்றப்பா
அத்தைக்கொழியப் பித்தைகில்லை ஔவையாரிட்ட சாபத்தீடு
அத்தை மகளானாலும் சும்மா வருமா?
அத்தை மகள் சொத்தை அவள் கேட்கிறாள் மெத்தை
அத்தை மகள் அம்மான் மகள் சொந்தம் போல
கள்ளப் புருடனை நம்பிக் கணவனைக் கை விடலாமா? (277)
மலடி அறிவாளோ பிள்ளை அருமை?
மலடிக்குத் தெரியுமா பிள்ளையைப் பெற்ற அருமை?
மலடிக்குத் தெரியுமோ மகப்பேறு வைத்தியம்? (280)
மலடி மகப் பெற்றாள்
மலடியைப் பிள்ளை பெறச் சொன்னால் பெறுவாளா?
மனையாளுக்கு உற்றது ஒன்றும் சொல்ல வேண்டாம், மாற்றானை ஒருநாளும் நம்பவேண்டாம்
மனைவியில்லாத புருடன் அரை மனிதன்
மனைவி இறந்தால் மணம், மகள் இறந்தால் பிணம்
முகம் சந்திர பிம்பம், அகம் பாம்பின் விடம்
முண்டைகண்ணி பிள்ளை இரண்டு கண்ணும் நொள்ளை
முண்டைச்சி சம்பந்தக்காரன் முன்னுக்கு வருவானா?
முண்டைச்சி பெற்றது மூன்றும் அப்படியே
முண்டையைப் பிடித்த கண்டமாலை முருங்கையையும் பிடித்தது
முப்பணியிட்ட பெண்ணுக்குக் கொப்பு ஒன்றுதான் குறை (290)
மூடு முக்காட்டுக்குள்ளே போகிறவள்தான் ஓடிஓடி மாப்பிள்ளை கொள்ளுகிறது

கல்லானாலும் கணவன்

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்
மூதேவி மூதேவி முகம் கழுவ வா மூதேவி
மூன்று முடிச்சு கழுத்தில் விழட்டும், முப்பது இலை குப்பையில் விழட்டும்
மேலான மினுக்கியைக் கொண்டவன் கெட்டான், மேட்டிலே
பயிரிட்டவன் கெட்டான்
கூத்திக்கு இட்டுக் குரங்கு ஆனான், வேசிக்கு இட்டு விறகு ஆனான்
கூத்தியார் பிள்ளைக்கு தகப்பன் யார்?
கூத்தியார் ஆத்தாள் செத்தால் கொட்டும் முழக்கும், கூத்தியார் செத்தால்
ஒன்றுமில்லை
கூத்தியார் செத்தால் பிணம், அவள் தாய் செத்தால் மணம்
குமரிக்கு ஒரு பிள்ளை கோடிக்கு ஒரு வெள்ளை
குமரி தனி வழியே போனாலும் கொட்டாவி தனி வழியே போகாது (300)
குமரியாய் இருக்கையில் கொண்டாட்டம் கிழவியாய் இருக்கையில் திண்டாட்டம்
கனவிலே கண்டவனுக்கு பெண் கொடுத்த கதை
தங்கப் பெண்ணே தாராவே, தட்டால் கண்டால் பொன் என்பான், த்கராசில் வைத்து நிறு என்பான், எங்கும் போகாமல் இங்கேயே இரு
தங்கச்சி பிள்ளை தன் பிள்ளை ஆனால், தவத்துக்குப் போவான் ஏன்?
கலியாண சந்தடியில் தாலி கட்ட மறாந்தது போல
வண்ணானுக்கு வண்ணாத்தி மேல் ஆசை வண்ணாத்திக்கு கழுதை மேல் ஆசை
மயிருக்கு மிஞ்சின கருப்பும் இல்லை மதனிக்கு மிஞ்சின உறவும் இல்லை
ஆத்தங்கரையில் அம்மவைப் பார்த்தால் வீடில் பெண்ணைப் பார்க்கவேண்டாம் (310)
பொண்ணை போத்தி வள, ஆணை அதட்டி வள (ர்)
தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை
கல்யாணமே என்றாளாம், தூரமே என்றாளாம்
மாட்டுக்கு மூக்கணாம் கயிறு பெண்ணுக்கு தாலிக் கயிறு
பொட்டு வச்சுக்கோ மாமியாரே பூ வச்சுக்கோ மாமியாரே என்றாளாம்
கொண்டு வந்தால் மகராசி இல்லாவிட்டால் பரதேசி
அடி வயத்தை அம்மா பார்ப்பாள் அடி மடியை ஆத்துக்காரி பார்ப்பாள்

பெற்ற தாய்

பெற்ற தாய்க்கும் வளர்த்த தாய்க்கும் உதவாமல் பிரிந்த குயில் போல
பெற்ற தாய் செத்தால் பெற்ற அப்பன் சிற்றப்பன்
பெற்ற தாய் பசித்திருக்க பிராமண போஜனம் செய்வித்தது போல
பெற்ற தாய் மூதேவி,, புகுந்த தாரம் சீதேவி (320)
பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு
பெற்றவளுக்குத் தெரியாதா பெயரிட?
பெற்றவளுக்குத் தெரியும் பிள்ளை அருமை
பெற்றவள் வயிற்றைப் பார்ப்பாள், பெண்சாதி மடியைப் பார்ப்பாள்
வலியப் பெண் கொடுக்கிறோம் என்றால் குலம் என்ன? கோத்திரம் என்ன என்பார்கள்
வலிய வந்த சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளலாமா?
வலிய வந்தால் கிரந்திக்காரி
வல்லடி வழக்கைச் சொல்லடி மாமி (328)

Lie Detectors in Upanishads

Lie detector is a modern instrument that detects the liars. It uses the changes in the body to say whether one is telling the truth or not. In Ancient India they used different techniques to find the truth. Chandogya Upanishad has the earliest reference to one test called a Hot Axe Test. This test was given to people charged with thefts in Ancient India. It followed the same principles that are used in the modern Lie Detectors.

An axe would be made red hot and the accused person would be asked to hold it in his hand. If the hand was not burnt, he would be acquitted. It shows that he was innocent. If his hand was burnt he would be convicted and severe punishments would follow the convictions. During the days of Guptas there were severe punishments for thefts and robberies. Because of severe punishments and great prosperity there was no theft and people slept without locking their doors, says the Chinese traveller Fa Hien (337-422 AD).

Adi Shankara, the great philosopher, also alluded to this hot axe test in his Viveka Chudamani (sloka 332).The reference in the Chandogya Upanishad appears thus:
VI-xvi-1: ‘Dear boy, (The officers of the king) bring a man, holding him by the hand (while saying) “He has taken something, he has committed a theft, heat the axe for him”. If he is doer of that, then he makes himself false. And being addicted to falsehood, he covers himself with falsehood and grasps the heated axe; he is burnt, and then he is punished.

VI-xvi-2: ‘If, however, he is not the doer of that, then he makes himself true. And being attached to truth, he covers himself with truth and grasps the heated axe; he is not burnt and then he is released.
VI-xvi-3: ‘And as in this case he (the man attached to truth) is not burnt, (similarly a man of knowledge is not born again). Thus has all this world That for its self. That is the true. That is the Atman. That thou art, O Svetaketu.’ From his words Svetaketu understood That – yea, he understood.

Snake Pot Test

Kulasekhara Alwar is one of the twelve Vaishnavite saints of Tamil country. He ruled Chera country (modern Kerala) around 800 AD. He was a great devotee of Vishnu and devoted much of his time in listening to Ramayana, Maha Bharata and Bhagavatha. Some of his court officials did not like this. They wanted to create a rift between the priests and the king. So they falsely accused the priests of stealing the temple jewels. The king did not believe this story and knew the motive of the accusers. In those days if someone tells a lie he would be asked to put his hand in a pot full of hungry cobras. If one has done anything wrong they would definitely avoid instant death by the snake bites. The king proposed that he would put his hand in the pot of snakes and if he has come out unscathed then the story of theft is false. He did this and came out unharmed. He did it on behalf of the priests
Story of Mandana Mishra

Adi Shankara was victorious in his debates and defeated Gurus of various sects in Hinduism and Buddhism. He had to meet a giant in Mimamsa philosophy. When they wanted to discuss Advaita philosophy they wanted a judge to say who has won the discussion. In those days people were so honest that once they are defeated they would accept the defeat and embrace the philosophy of the opponent who won the debate. There was none to judge their debate except Mandanamisra’s wife Sarawani. Since both of them were intellectual giants they accepted Mandan’s wife as judge. She was equally a great scholar. But she was very much embarrassed and told them that she being the wife of one of the debaters wouldn’t be a proper person to be the judge in this contest. So she proposed a very good idea. She asked both Mandana and Shankara to wear flower garlands and told them the wearer of the garland that withers first was the loser.

The argument went for weeks and at last Mandana’s garland withered first. Then Shankara had to debate with his wife. When she was also defeated by Shankara both husband and wife became disciples of Adi Shankara. Mandana became Sureshwaracharya in his later life.
Sita’s Agni Pareeksha (Fire Test)
When Rama’s wife Sita Devi was suspected by a washer man of the city Ayodhya Rama asked Sita to undergo Fire Test to prove her purity and integrity. She jumped in to a fire pit and came unscathed. Even today the Fire Walking ceremony is done in several South Indian villages. It is an ancient custom to prove one’s innocence and integrity.

Tamil Lie Detector

Ancient Tamils followed a different test 2000 years ago. One of the Sangam Tamil Books Kalitokai describes this strange test. If a liar stands under a tree the tree would wither away. If he is not a liar the tree would be ever green. Palai Padiya Perum Katunko (Palai Kali 33) sang about this test. A woman who suffers from separation lamented that her condition was like a tree that was made to wither by a liar.

Science behind Lie Detectors

There is a scientific explanation for all the above tests. It is the same principle that the modern Lie Detecting instruments follow. A Polygraph, popularly known as Lie Detector, records graphically certain body activities such as respiration, blood pressure, pulse rate and changes in the electrical resistance in the skin. Marked changes in these activities when a person answers a question may indicate that the person is lying. Facial expressions and linguistic changes are also taken into account.

If we look at the case of Tamil tree or Mandana’s garland we can see why they wither away. The temperature changes in the body make them wither away. Whoever is agitated and doesn’t see the reason or truth feels hot. More over the fear makes one to produce more adrenaline. Animals like dogs and snakes can easily sense it. They have powerful smell organs. If one is not agitated and focussed, calm and quiet that person wouldn’t be harmed even by an agitated animal. When a person has full concentration on a certain thing (truth or God) neither extreme heat nor cold would affect that person. Yoga practitioners knew this very well. So we can see science behind the above anecdotes.

அப்பர் தேவாரத்தில் பழமொழிகள்

Written by ச.நாகராஜன்

Appar Thevaram Dance at Natyanjali by Uma B.Ramesh

மொழிக்கு அணியாய்த் திகழ்வன பழமொழிகள்

ஒரு மொழிக்கு அணியாய்த் திகழ்வது பழமொழிகள்.செம்மொழியான தமிழ் மொழியில் ஆயிரக்கணக்கான பழமொழிகள் உள்ளன.

மைடரின் விளக்கம்

அமெரிக்காவில் உல்ப்கேங் மைடர் என்ற அறிஞர் ப்ராவெர்பியம் (Proverbium – journal)என்ற பத்திரிக்கையையே நடத்தி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. பழமொழிகளின் இன்றியமையாமை மற்றும் சிறப்பு குறித்து இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்.

பழமொழி பற்றி அவர், A proverb is a short, generally known sentence of the folk which contains wisdom, truth, morals, and traditional views in a metaphorical, fixed and memorizable form and which is handed down from generation to generation” என்று கூறுகிறார். இதன் பொருள் : ஒரு பழமொழியானது, மக்கள் அனைவரும் அறிந்த ஒரு சிறிய வாக்கியம். அதில் உலக ஞானம், நீதி, அறநெறி, பாரம்பரியப் பார்வைகள் உருவகமாகவும், சிறிய உறுதியான வாக்கியங்களாகவும், சுலபமாக நினைவில் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும். இவை தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வழக்கில் இருந்து வரும்” என்கிறார்.

வாழ்க்கையின் எந்த நிலைக்கும் ஏற்ற பழமொழி தமிழில் உண்டு

தமிழ்ப் பழமொழிகளைக் காக்கும் பணியை சாமான்ய மக்களும். புலவர்களும் தொடர்ந்து செய்து வந்ததால் இன்றளவும் அவை உயிருடன் இருந்து வருகின்றன. ஒரு பழமொழியைக் கூறாத எந்த ஒரு பெண்மணியையும் தமிழகத்தில் பார்க்கவே முடியாது. வாழ்க்கையின் எந்த ஒரு நிலையையும் பழமொழி தமிழில் உள்ளது என்று உறுதி கூறலாம்.

அற்புத புருஷர் அப்பரின் இணையிலா தேவாரம்

தமிழகத்தின் சரித்திரத்திலும் தமிழின் சரித்திரத்திலும் பக்தி இலக்கியத்திலும் இடம் பெறும் மாபெரும் அற்புத புருஷர் அப்பர்! திருநாவுக்கரசர் என அனைவராலும் போற்றப்படும் அவரது
தேவாரம் தேனிலும் இனியது. திகட்டாதது. தமிழின் இனிமையைச் செவ்வனே காண்பிப்பது. ஆயிரக்கணக்கான தமிழ்ப் பதிகங்களை அவர் பாடியுள்ள போதிலும் இன்று நமக்கு அவரது பதிகங்களீல் கிடைத்திருப்பவை சிலவே.

சுந்தரர், “இணைகொள் ஏழெழுநூறு இரும்பனுவல் .
என்று பாடி இருப்பதால் அப்பர் சுமார் 4900 பதிகங்களை அதாவது சுமார் 49000 பாடல்களை இயற்றியுள்ளது தெரிய வருகிறது. இன்று நம்மிடம் இருப்பதோ 313 பதிகங்கள் அதாவது சுமார் 3068 பாடல்கள் தாம்!
பன்னிரு திருமுறைகளில் அப்பரின் தேவாரப் பாடல்கள் நான்காம்,ஐந்தாம் மற்றும் ஆறாம் திருமுறையாக அமைகின்றன.
இவற்றில் நூற்றுக்கணக்கான பழமொழிகளை அப்பர் எடுத்துக் கூறி அரும் பெரும் விஷயங்களைச் சுருங்க்க் கூறி விளங்க வைக்கிறார்.
அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்.

திருவாரூர் பழமொழிப் பதிகம்

அப்பரின் தனிச் சிறப்பு என்னவெனில் அவர் திருவாரூர்ப் பதிகத்தில் பத்துப் பாடல்களிலும் கடைசி அடியில் ஒவ்வொரு பழமொழியை வைத்துப் பாடி இருப்பது தான்.

மெய்யெலாம் வெண் நீறு என்று ஆரம்பிக்கும் இந்தப் பதிகம் திருவாரூர்ப் பழமொழிப் பதிகம் என்ற சிறப்புப் பெயராலேயே வழங்கப்படுகிறது.

1) கையினால் தொழாது ஒழிந்து
கனி இருக்கக் காய் கவர்ந்த கள்வனேனே
2) முன்பு இருக்கும் விதி இன்றி
முயல் விட்டுக் காக்கைப்பின் போனவாறே
3) அருகு இருக்கும் விதி இன்றி அறம்
இருக்க மறம் விலைக்குக் கொண்டவாறே
4) பண்டு எலாம் அறியாதே பனி நீரால்
பாவை செயப் பாவித்தேனே
5) என் ஆகத்து இருத்தாதே ஏதன்
போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே
6) எப்போதும் நினையாதே இருட்டு
அறையில் மலடு கறந்து எய்த்தவாறே
7) விதி இன்றி மதிஇலியேன் விளக்கு
இருக்க மின்மினித்தீக் காய்ந்தவாறே
8) பாவியேன் அறியாதே பாழ்ஊரில்
பயிக்கம் புக்கு எய்த்தவாறே
9) தட்டானைச் சாராதே தவம் இருக்க
அவம் செய்து தருக்கினேனே
10) கறுத்தானைக் கருதாதே கரும்பு இருக்க
இரும்பு கடித்து எய்த்தவாறே

என்ன அருமையான பாடல்கள்! அற்புதமான கருத்துக்களைப் பொதித்து பழமொழியையும் ஈற்றடியில் வைத்து அமைந்திருக்கும் இது போன்ற பாடல்கள் உலக இலக்கியத்தில் இவை மட்டுமே என்பது உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை!

இருட்டு அறையில் மலட்டு மாட்டைக் கறத்தல் போல என்ற பழமொழி ஒன்றை உதாரணத்திற்காக எடுத்துக் கொண்டால், அதில் தான் suggestion என்று ஆங்கிலத்திலும் த்வனி என்று சம்ஸ்கிருதத்திலும், உள்ளுறை உவமம் என்று தமிழிலும் கூறப்படும் ஏராளமான கருத்துக்களை விளக்கும் அற்புதப் பாங்கை எவ்வளவு அழகிய முறையில் பார்க்க முடிகிறது!!

மேலும் பற்பல பழமொழிகள்.

இவை தவிர அப்பர் தேவாரத்தில் உள்ள மேலும் சில பழமொழிகள் பின் வருமாறு :

1)அறு கயிறூசல் போல
2)ஆற்றிலே கெடுத்துக் குளத்திலே தேடுதல் போல
3) இருதலைக் கொள்ளியின் இடையகப்பட்ட எறும்பு போல
4) இன்றுளார் நாளை இல்லை
5) உலை நீரில் திளைத்து விளையாடிய ஆமை போலத் தெளிவிலாதேன்
6) உழுத கால் வழியே உழுவான்
7) உற்றலால் கயவர் தேறார்
8) ஓடும் நீரினை ஓட்டைக் குடத்தட்டி மூடி வைத்திட்ட மூடர்கள்
9) கழியிடைத் தோணி போன்றேன்
10) காம்பிலா முழை போல (முழை – அகப்பை)
11) கூவலாமை குரைகடலாமையைக் கூவலோடொக்குமோ கடல் என்றல் போல்
12) கையில் உள்ள நெல்லிக்கனி போல
13) கொத்தைக்கு மூங்கர் வழி காட்டல் போல (கொத்தை- குருடர்; மூங்கர் – ஊமையர்)
14) தழலை நீர் மடிக் கொள்ளன்மின்
15) நரி வால் கவ்வச் சென்று நற்றசை இழந்தது ஒத்தது
16) நூலும் வேண்டுமோ நுண்ணுணர்வோகட்கே
17) பாம்பின் வாய்த் தேரை போல
18) பாழுக்கே நீர் இறைத்தது
19) பாழூரிற் பயிக்கப் புக்கெய்த்தவாறே (பயிக்கம் – பைக்ஷம் என்ற வார்த்தையிலிருந்து பிறந்த பிக்ஷை – பிச்சை)
20) மத்துறு தயிரே போல மறுகும் என் உள்ளம்
21) மன்றத்துப் புன்னை போல மரம்படு துயரம் எய்தி
22)மோத்தையைக் கண்ட காக்கை போல (மோத்தை- பிணம்)
23) விளக்கத்திற் கோழி போன்றேன்
ஒவ்வொரு பழமொழி வாயிலாகவும் ஒரு பெரும் கருத்தை முன் வைக்கும் அப்பரின் பதிகம் உள்ளிட்ட இலக்கியம் போல இன்னொரு இலக்கியம் இன்று வரை தமிழில் இல்லை! இந்தப் பழமொழிகள் வரும் பாடல்களை உற்றுப் பயில்வோர் அடையும் பயனுக்கு எல்லை இல்லை!

அதனால் தான் போலும், ‘திருநாவுக்கரசர் திரு ஏகாதசமாலை’ என்ற நூலை எழுதி அவரைப் போற்றிய நம்பி ஆண்டார் நம்பி,

“வாய்மைக் கவிதையிற் பல
உபரியாகப் பொருள் பரப்பிய
அலகில் ஞானக் கடலிடைப்படும்
அமிர்த யோக சிவ ஒளிப்புக
அடியரேமுக்கருளினைச் செயும்
அரைய தேவத் திருவடிக்களே”
என்று போற்றிப் பரவுகிறார்.

அப்பரின் தேவாரத்தை வீடு தோறும் கொண்டு செல்வோம்; நாடு தோறும் முழங்குவோம். வாழ்க தேவாரம்! வளர்க தெய்வத் தமிழ்!!

This is written by my brother S Nagarajan
****************

பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்- பகுதி 2

இரண்டாம் பகுதி

கட்டுரையின் முதல் பகுதியில் முன்னுரை கொடுத்திருக்கிறேன். முதல் பகுதியையும் ஏனைய பழமொழிக் கட்டுரைகளையும் படிப்பது பயன் தரும்.

வாழுகிற பெண்ணும் வாழாத பெண்ணும்

மேட்டில் ஏறினால் முத்தாச்சி, பள்ளத்தில் இறங்கினால் அத்தாச்சி
மெலிந்தவளுக்கு மெத்தப் பலன், மேனி மினுக்கெட்டவளுக்கு மெத்தக் கசம்
மேலைக்குத் தாலி கட்டுகிறேன்,, கழுத்தே சுகமே இரு என்றார்போல
மேலைக்குத் வாழ்க்கைப்படுகிறேன்,, கழுத்தே சுகமே இரு
மேனி எல்லாம் சுட்டாலும் விபசாரம் செய்கிறவள் விடாள்
மைலங்கி மைலங்கி பூ எங்கே வைத்தாய், வாடாதே வதங்காதே அடுப்பிலே வைத்தேன்
வரப்பு ஏறித் தாண்ட மாட்டாள், அவள் பேர் தாண்டாய் (110)
வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம்
வருகிற வரும்படி எல்லாம் பூசாரிக்கு, சந்தடியெல்லாம் கங்காளம்மைக்கு
வறுமைக்கு மூதேவியும் செல்வத்துக்குச் சீதேவியும்
வாய் மதத்தால் வழக்கு இழந்தாள்
வாலிபத்தில் இல்லாத மங்கையை வயது சென்றபின் என்ன செய்கிறது?
வாலிபத்தில் தேடாத தேவடியாள் வயது போனபின் தேடப்போகிறாளா?
வாழாத பெண்ணுக்கு மை ஏண்டி, பொட்டு ஏண்டி, மஞ்சள் குளி ஏண்டி?
வாழாத பெண்ணைத் தாழ்வாய் உரைக்காதே
வாழாப் பெண் தாயோடெ
வாழுகிற பெண்ணை தாய் கெடுத்தது போல
வாழைப் பழம் கொண்டுபோனவள் வாசலில் இருந்தாள் (120)
வாயைக் கொண்டுபோனவள் நடுவீட்டில் இருந்தாள்

கைம்பெண்சாதி, எருமையில் கறவை பழகினாற் போல
கைம்பெண்டாட்டி தாலியைக் கூழைக்கையன் அறுத்தானாம்
கைம்பெண்டாட்டி பெற்ற கழிசடை
கைம்பெண்டாட்டி வளர்த்த கழுக்காணி
கைம்பெண்டாட்டி பெற்ற பிள்ளையானாலும் செய்யுஞ் சடங்கு சீராய் செய்யவேண்டும்
எட்டுக் கிழவரும் ஒரு மொட்டைக் கிழவியைக் கட்டிக் கொண்டார்கள்
எட்டும் இரண்டும் தெரியாத பேதை (நாத்தை)
ஒரு வீடடங்கலும் பிடாரி/ பஜாரி
ஏர் உழுகிற பிள்ளை இளைத்துப் போகிறது, பரியம்போட்ட பெண்ணைப் பார்த்து வளர்
ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம் (130)
ஏழைக்கும் பேழைக்கும் காடுகாள் அம்மை
ஏற்கனவே மாமி பேய்க்கோலம், அதிலும் கொஞ்சம் மாக்கோலம்
ஆமுடையானை நம்பி அவசாரி ஆடலாமா?
ஆமுடையானைக் கொன்ற அறநீலி
ஆமுடையான் அடித்ததற்குக் கொழுநனைக் கோபித்துக் கொண்டாளாம்
ஆமுடையான் அடித்ததது பெரிதல்ல; சக்களத்தி சிரிப்பாள் என்று அழுகிறேன்
ஆமுடையான் செத்த பின்பு அறுதலிக்குப் புத்தி வந்தது
ஆமுடையான் செத்தபோதே அல்லலுற்ற கஞ்சி
ஆமுடையான் செத்தவளுக்கு மருத்துவச்சி தயவேன்?

சீதேவியும் மூதேவியும்

சீதை பிறக்க இலங்கை அழிய (140)
சீதேவியுடன் மூதேவி பிறந்தாற் போல
சீராளன் கல்யாணத்தில் முன்றுபேர் பெண்டுகள் மாரோடே மார் தள்ளுது
சீரங்கத்துக்குப் போகிறவன் வழியிலெ பாரியைப் பறிகொடுத்தது போல
சீர்கேடனுக்குக் வாக்குப்பட்டு திரிச்சீலை துணிக்கு வாதைப் படாமல் இருந்தேன், சீராளனைப் பெற்ற பிறகு திரிச்சீலை துணிக்கு வருத்தமாச்சுது
சீலை இல்லை என்று சின்னாயி வீட்டுக்குப் போனாளாம், அவள் ஈச்சம்பாயைக் கட்டிக்கொண்டு எதிரே வந்தாளாம்
நாட்ட ஆளப் பெண் பிறந்தாலும் போட்ட புள்ளி தப்பாது
நாணம் இல்லாத சிறுக்கிக்கு நாலு திக்கும் வாசற்படி
நாணம் இல்லாத வாத்தி நாலு திக்குக்கும் கூத்தி
நாணம் இல்லாத பெண் நகைப்புக்கு இடம் வைப்பாள்
பூவுள்ள மங்கையாம் பொற்கொடியாம் , போன இடமெல்லாம் செருப்படியாம் (150)
பூ விற்றவளை பொன் விற்கப் பண்ணூவேன்

பெண்சாதி

பெண்சாதி இருந்தால் புது மாப்பிள்ளை
பெண்சாதி இல்லாதவன் பேயைக் கட்டித் தழுவியது போல
பெண்சாதி கால் விலங்கு, பிள்ளை சுள்ளாணி
பெண்சாதி கால்கட்டு, பிள்ளை வாய்க்கட்டு
பெண்சாதி சொந்தம், போகுவரத்துப் புறம்பே
பெண்சாதி பேச்சைக் கேட்டவன் பேய் போல அலைவான்
பெண்சாதி முகத்தைப் பார்க்காவிட்டாலும், பிள்ளை முகத்தைப் பார்க்க வேண்டும்
பெண்சாதியைக் குதிரை மேல் ஏற்றி, பெற்ற தாயின் தலையிலே புல்லுக் கட்டை வைத்தடிக்கிற காலம்
பெண்சாதியைத் தாய் வீட்டில் விட்டவனுக்கு ஒரு சொட்டு (160)
பெண்டாட்டி ஆசை திண்டாட்டத்தில் விட்டது
பெண்டாட்டி குதிர் போல அகமுடையான் கதிர்போல
பெண்டாட்டியுடன் கோபித்துப் பரதேசம் போவாருண்டோ
பெண்டுகளுக்கு பெற்றோரிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் மூப்பில்லை
பெண்டுகள் இருந்த இடம் சண்டைகள் பெருத்திடும்
பெண்டுகள் சமர்த்து அடுப்பங்கரையில்தான்
பெண்டுகள் சோற்றுக்குத் தண்டமில்லை
பெண்டுகள் வைத்தியம்
பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு, பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு
பெண் அரம்பைக் கூத்து போய், பேய்க் கூத்து ஆச்சுதே (170)
பெண் ஆசை ஒரு பக்கம், மண் ஆசை ஒரு பக்கம்
பெண் ஆசை கொண்டு பெருக்கத் தவிக்கிறது
பெண் ஆணையைத் தொடரும் பேரானையைப்போல
பெண்ணின் குணமும் அறிவேன், சம்பந்தி வாயும் அறிவேன்

தங்கமே தங்கம்

பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்
பெண்ணுக்கு ஒரு கும்பிடு வில்லுக்கு ஒரு கும்பிடு
பெண்ணின் குணம்தான் சீதனம்
பெண்ணின் பெண்தான் சீதனம்
பெண்ணுக்கு பொன்னிட்டுப் பார், சுவருக்கு மண்ணிட்டுப் பார்
பெண்ணுக்கு பொன்னாசை கொள்ளும் பேரணங்கு 180
பெண்ணுக்கு போட்டுப் பார், மண்ணுக்குப் பூசிப்பார்
பெண்ணுக்குப் போய்ப் பொன்னுக்குப் பின்வாங்கலாமா?
பெண்ணுக்கு மாமியாரும் பிள்ளைக்கு வாத்தியாரும்
பெண்ணுக்கும் பொன்னுக்கும் தோற்பு உண்டா?
பெண்ணும் இல்லாமல் ஆணும் இல்லாமல் பெருமரம் போல் வளருகிறது
பெண்ணைக் கட்டிக் கொடுப்பார்கள், பிள்ளை பெறுவதற்குப் பிணைபடுவார்களா?
பெண்ணைக் கொண்டு பையன் போனான், பிள்ளை பெற்றுச் சிறுக்கி நாயானாள்
பெண்ணைத் திருத்தும் பொன் (190)
பெண்ணைப் பிழை பொறுக்கப் பெற்ற தாய் வேண்டாமா?
பெண்ணை வேண்டும் என்றால் இளியற் கண்ணை நக்கு
பெண் என்று பிறந்தபோதே புருடன் பிறந்திருப்பான்
பெண்ணோடு ஆணோடு பிறக்காத பெரும்பாவி
பெண் படையும் பலமும் பெருக்கத் தவிக்கிறதோ?
பெண் புத்தி கேட்கிறவன் பேய்
பெண் மூப்பான வீடு பேரழிந்துபோம்
பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி
பொன்னாலே மருமகளானாலும், மண்ணாலே ஒரு மாமியார் வேண்டும்
பொன்னையும் புடவையையும் நீக்கிடில் பெண் மலக்கூடு (200)
போக்கற்றாள் நீக்கற்றாள், பொழுது விடிந்து கந்தை அற்றாள்

(மூன்றாம் பகுதியில் தொடரும்)

பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்- Part 1

பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்- Part 1

பெண்களைப் பற்றிய பழமொழிகள் பெரும்பாலும் அவர்களுக்கு எதிரானதாகவும், அவர்களைக் குறைகூறுவதாகவும் இருக்கின்றன. இதைக் காலத்தின் பிரதிபலிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். பல கலாசாரங்களிலும் பழங்காலத்தில் இப்படிதான் இருந்தது. வேற்று மொழிப் பழமொழிகள், பொன்மொழிகளைப் பயிலுவோருக்கு இது தெளிவாக விளங்கும்.

சில தமிழ்ப் பழமொழிகள் கடுமையான மொழியில் இருக்கும். வாசகர்கள் என்னை மன்னிப்பார்களாக. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருப்பதைத்தான் நான் மீண்டும் கொடுக்கிறேன். மிகவும் கடுமையான, பாலியல் தொடர்பான பழமொழிகளையும், படிப்பதற்கு நாராசமாக உள்ள பழமொழிகளையும் கூடுமான அளவுக்கு தவிர்த்துவிட்டேன்.
பெண் பல ரூபங்களில் இருப்பவள். தாயாகவும் மனைவியாகவும், மகளாகவும்,மருமகளாகவும், மாமியாரகவும், மாமியாகவும், அத்தை/சித்தியாகவும், மிக அபூர்வமாக வேசியாகவும் வருகிறாள். பெண்களைப் பற்றிய சுமார் 300 பழமொழிகளை மூன்று பகுதிகளாகத் தருகிறேன். இவைகளை ஆராய்ச்சிப் படிப்பாக எடுப்பவர்களுக்கு இது பயன் தரும். நேரம் கிடைக்கும்போது வேற்று மொழிப் பழமொழிகளுடன் ஒப்பிட்டும் காட்டுவேன்.

முதல் பகுதி

குடியில் பிறந்த பெண் வயிற்றெரிந்தால் கொடியில் உள்ள துணி எரியும்
நார்த்தங்காய்க்குப் போடுகிற உப்பும், நாத்தனாருக்குப் போடுகிற சாதமும் வீண்போகாது
தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறுதான்
மழை வருவதும், பிள்ளை பெறுவதும் மகாதேவனுக்கே தெரியாது
ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே
பெண் என்றால் பேயும் இரங்கும்
பெண் புத்தி பின் புத்தி
ஐந்து பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்
பணம் படைத்த சீமாட்டி எஸ் கொண்டையும் போடுவாள் ஒய் கொண்டையும் போடுவாள்
ஆடத்தெரியாத பெண் தெருக்கோணல் என்றாளாம் (கூடம் போதாது என்றாளாம்) 10

அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டாளாம்
அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்றானாம்
அரச மரத்தைச்சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம்
ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியதாம்
ஒத்த கணவனும் ஒரு சிறு நெல்லும் இருந்தால் சித்திரம் போல் குடித்தனம் செய்வேன் என்றாளாம்
ஓடுகாலி வீடு மறந்தாளாம்
பெண்ணைக் கொடுத்தாயோ கண்ணைக் கொடுத்தாயோ என்பார்கள்
பெண் கொடுத்த மாமியோ கண் கொடுத்த சாமியோ !
ஒய்யாரக் கொண்டையாம் தலக்குள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்
தாயா ? பேயா ?
பேய்க்கு வாக்குப்பட்டால் புளியமரத்தில் ஏறித்தான் ஆகவேண்டும்
பேயானாலும் தாய் (20)

பெற்றவளுக்கு பிள்ளை பாரமா?
அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா
தாயில் சிறந்ததொரு கோயில் இல்லை
தாய்க்குப் பின் தான் தாரம்
பொம்பளை (பெண்) சிரிச்சா போச்சு பருத்தி விரிச்சா போச்சு
குனிந்து சேவித்து நிமிர்ந்து வாழ்த்திக் கொண்டாளாம்
அத்தை பகையில்லை அம்மாள் உறவில்லை
குறத்தி பிள்ளை பெற்றாளாம் குறவன் மருந்து சாப்பிட்டானாம்
மகள் பிறக்கும் முன் பூட்டிக்கோ, மருமகள் வருவதற்கு முன் சாப்பிட்டுக்கோ
இடுப்பில் குழந்தையை வைத்துக்கொண்டு ஊர் முழுவதும் தேடினாளாம்
கொடுக்காத மகராசி இருக்கவே இருக்கிறாள் கொடுக்கிற மூதேவி கொடுப்பதற்கு என்ன என்றாளாம்
மனம் காவலா மதி காவலா ?(பெண்ணுக்கு)
மருமகளுக்கு தீவளிக்கு தீவளி எண்ணை தேய்ப்பேன், மகளுக்கு வெள்ளியோடு வெள்ளிதான் தேய்ப்பேன் என்றாளாம்
ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு பிள்ளையும் வேண்டும் என்பார்கள்

மகளே உன் சமத்து

மகளுக்கு குடல் பாக்கியம் தவிர மற்ற பாக்கியம் எல்லாம் இருக்கின்றன
மகளுக்கு புத்தி சொல்லித் தாய் அவசாரி போனாளாம்
மகளே வல்லாண்மை
மகள் செத்தாள் தாய் திக்கற்றாள்
மகள் செத்தால் பிணம், மகன் செத்தால் சவம்
மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் கொட்டம் அடங்கினால் போதும்
மகாரசன் பெண்சாதி மர்மக்காரி,, யாருடன் சொன்னாலும் திறமைக்காரி
மகாலெட்சுமி பரதேசம் போனாற்போல
மகிமை சுந்தரி கதவை ஒஞ்சரி
மகிமையிலே ஒரு பெண் குவளையிலே வாழுகிறாள், அதில் ஒரு பெண் அறுத்துவிட்டு அழுகிறாள்
மங்கை தீட்டானால் கங்கையிலே முழுகுவாள், கங்கை தீட்டானால் எங்கே முழுகுவாள்?
மங்கை நல்லாள் பெண் பெருமாள், வாழ்ந்ததெல்லாம் எத்தனை நாள், திங்கள் ஒருபொழுது செவ்வாய் பகலறுதி
மச்சத்தின் குஞ்சுவுக்கு இப்படி என்றால் மாதாவுக்கு எப்படியோ?
மஞ்சள் குளித்து மணை மேலே இருக்கும்போது மட்டேன் என்றீரே, பிள்ளை பெற்று நொந்திருக்கச்சே வேண்ட வந்தீரே
மடிப் பிச்சை மாங்கலியப் பிச்சை
போனதினம் போகப் புதனன்றைக்கு வந்தாள்
அடைமழைக்குக் குடை இல்லாதவனுக்கு ஐந்து பெண்டாட்டியாம் (50)
அட்டிகைக்கு ஆசைப்பட்டு எருமைச் சங்கிலியைக் கட்டிக் கொண்டாளாம்
அண்டை வீட்டுக்காரி பிள்ளை பெற்றாள் என்று அயல் வீட்டுக்காரி இடித்துக் கொண்டது போல
அண்டை வீட்டுச் சுப்பிக்கும் எதிர் வீட்டுக் காமாட்சிக்குமா கவலை?
உதறுகாலி முண்டை உதறிப் போட்டாள்
உதறுகாலி வந்தாள், உள்ளதும் கெடுத்தாள்
ஏண்டி பெண்ணே, இளைத்தாய் குதிர் போல
ஏண்டி பெண்ணே குந்தியிருக்கிறாய்? சோறு பற்றாமல்
ஏண்டி பெண்ணே சோர்ந்திருக்கிறாய்? சோறு பத்தியம்
ஏண்டி சிறுக்கி புல்லு ஆச்சா? ஒரு நொடிக்கு முன் கட்டாச்சே
ஏய்த்தால் மதனியை ஏய்ப்பேன், இல்லாவிடால் பரதேசம் போவேன்
மயிர் உள்ள சீமாட்டி வாரி முடிக்கிறாள்
மயிற்கண்ணிக்கு மசக்கை, மாப்பிள்ளைக்கு அவத்தை
மரியாள் குடித்தனம் சரியாய் போச்சு

மருமகள்-மாமியார் மோதல்

மருமகளுக்கு மாமியார் பிசாசு; மாமியாருக்கு மருமகள் பிசாசு
மருமகனுக்கென்று சமைத்ததை மகனுக்கு இட்டு வயிறு எரிந்தாளாம்
மலைபோல பிராமணன் போகிறான், பின்குடுமிக்கு அழுதாளாம்
மலை விழுங்கின மாணிக்கத்தாளுக்குக் கதவு சுண்டரங்கி
மறு மங்கையர்க்கும், மறு மன்னவர்க்கும், மார்பும் முதுகும் கொடாமலிரு
மாதா ஊட்டாத அன்னம் மாங்காய் ஊட்டும்
மாதா செய்தது மக்களுக்கு (மக்களைக் காக்கும்) 70
மாதா மனம் எரிய வாழான் ஒரு நாளும்
மாதவுக்குச் சுகம் இருந்தால் கர்ப்பத்துக்கும் சுகம்
மாமி மெச்சிய மருமகள் இல்லை
மாமி ஒட்டினாலும் பானை ஒட்டாது
மாமியாருக்கு கண் மண்டை பிதுங்கிப் போகிறது
மாமியாருக்கு சுவாமியார் இவள்
மாமியாருக்கும் மாமியார் வேண்டும்
மாமியாரும் ஒரு வீட்டு நாட்டுப் பெண்

மாமியாரும் சாகாளோ, மனக்கவலை தீராதோ
மாமியாரைக் கண்டு மருமகன் நாணுவதைப் போல
மாமியாரோடு போகாத மாபாதகன்
மாமியார் இல்லாத மருமகள் உத்தமி, மருமகள் இல்லாத மாமியார் குணவதி
மாமியார் துணி அவிழ்ந்தால் வாயாலும் சொல்லக் கூடாது, கையாலும் காட்டக்கூடாது
மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்
மாமியார் கை வெல்லத்தைப் பார்க்கிலும் மருமகள் கைத்தவிடு தேவலை
மாமியார் செத்த ஆறாம் நாள் மருமகள் கண்ணில் தண்ணீர் வந்ததாம்
மாமியார் செத்த ஆறாம் மாதம் மருமகள் கண்ணில் தண்ணீர் வந்ததாம்
மாமியார் செத்து மருமகள் அழுகிறது போல
மாமியார் செய்த காரியங்களுக்கு நிந்தை கிடையாது
மாமியார் தலையில கையும் வேலிப் புறத்துல கண்ணும் (90)
மாமியார் தலையில கையும் மாப்பிள்ளை மேல் சிந்தையும்
மாமியார் நன்மையும் வேம்பு இனிப்பும் இல்லை
மாமியார் மெச்சின மருமகள் இல்லை, மருமகள் மெச்சிய மாமியார் இல்லை
மாமியார் வீடு மகா சவுக்கியம்
மாம்பழத்தில் இருக்கும் வண்டே ! மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை

மதனி/ மைத்துனி

மாலை இட்ட பெண்சாதி காலனை (எமனை)ப் போல வந்தாள்
மாலை சுற்றிப் பெண் பிறந்தால் மாமனுக்கு ஆகாது
மாற்றானை நம்பினாலும் மாதரை நம்பொண்ணாது (100)
மேய்த்தால் மதனியை மேய்ப்பேன்
மேய்த்தால் மைத்துனியை மேய்ப்பேன், இல்லாவிட்டால் பரதேசம் போவேன்

பாரதி பாட்டில் பழமொழிகள்

தமிழ் மொழியில் இருக்கும் இருபதாயிரம் பழமொழிகளை 150 ஆண்டுகளுக்கு முன் மூன்று வெள்ளைக்காரர்கள் தொகுத்து ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளியிட்டு அரிய பணியைச் செய்தனர். இன்னும் பத்தாயிரம் பழமொழிகள் பட்டியலிடப்படாமல் உள்ளன. மேலும் அவைகளை தலைப்பு வாரியாகத் தொகுக்க வேண்டும். பல சொற்களுக்கு இப்போதே பொருள் புரியவில்லை. இதே போக்கில் விட்டால் பிராமணர்களின் வேதங்களுக்கு எப்படி இன்று பொருள் சொல்ல முடியவில்லையோ அந்த கதி தமிழ்ப் பழமொழிகளுக்கும் எற்பட்டுவிடும். ராமர் கட்டிய பாலத்தில் அணிலும் சிறிது மண் போட்டு உதவியது போல நானும் ஏதோ சிறிய முயற்சிகளைச் செய்கிறேன்.
பழமொழிகளைப் பயன்படுத்தாத தமிழர்களைக் காண்பது அபூர்வம். வீட்டில் புரோகிதம் செய்துவைக்கும் புரோகிதர்கள் முதல் ரோட்டில் வடை சுட்டு விற்கும் கிழவிகள் வரை தமிழ்ப் பழமொழிகளைப் பயன் படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். சங்க இலக்கியமானாலும் சரி, கம்பன் பாடல் ஆனாலும் சரி பழமொழிகளைக் காணலாம். இந்தச் சிறிய கட்டுரையில் பாரதி பாடல்களில் கண்ட சில பழமொழிகளைக் காணலாம்.

1) எனை நீ காப்பாய், யாவுமாந் தெய்வமே!
பொறுத்தாரன்றே பூமி ஆள்வார்;

2) உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை
உமையவள் என்று அறியீரோ- உணர்ச்சி கெட்டீர்!
பண்டாய்ச்சி ஔவை அன்னையும் பிதாவும்
பாரிடை முன்னறி தெய்வம் என்றாள் அன்றோ?

3) காற்றுள்ளபோதே நாம் தூற்றிக் கொள்வோம்
கனமான குருவை எதிர் கொண்டபோதே

4) கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காடும் மறாஇகள் எல்லாம்—நீவிர்
அவலை நினைந்து உமி மெல்லுதல் போல் இங்கு
அவங்கள் புரிவீரோ

5) சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும்
செய்தி அறியாயோ—நன்னெஞ்சே!
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
கொடி வளராதோ?

6) பெண் என்று சொல்லிடிலோ—ஒரு
பேயும் இரங்கும் என்பார்; தெய்வமே நினது
என்னம் இரங்காதோ

7) பண்ணிய பாவம் எல்லாம்
பரிதி முன் பனியே போல
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்

8) கை வைத்தது பசும்பொன் ஆகுமே—பின்பு
காலின் பயம் ஒழிந்து போகுமே

9) சுரத்திடை இன்னீர்ச் சுனையது போன்றும்
அரக்கர் தம் குலத்திடை வீடணனாகவும்
சேற்றிடைத் தாமரைச் செம்மலர் போன்றும்

10) வேளையிலே நமதுதொழில் முடித்துக் கொள்வோம்
வெயிலுள்ள போதிலே உலர்த்திக் கொள்வோம்
11) நரி வகுத்த வலையினிலே சிங்கம் தெரிந்து
நழுவி விழும்;சிற்றெறும்பால் யானை சாகும்;
வரி வகுத்த உடற் புலியைப் புழுவும் கொல்லும்

12) சென்றதினி மீளாது, மூடரே
(போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்)

13) தாழ்வு பிறர்க்கென்னத் தான் அழிவான் என்ற
சாத்திரம் கேளாயோ (கெடுவான் கேடு நினைப்பான்)

பழமொழி ஆராய்ச்சி செய்பவர்கள் என்னுடைய பிளாக்—கில் பின்வரும் கட்டுரைகளைப் படிக்கலாம்:
பழமொழிகளில் இந்துமதம்
இந்துமதம் பற்றி 200 பழமொழிகள்
20000 தமிழ் பழமொழிகள்
ஒன்றுக்கும் உதவா உதிய மரமே !
உடம்பைக் கடம்பால் அடி!
Amazing collection of 20,000 Tamil Proverbs
******************

பொம்பளை சிரிச்சா, உதைச்சா, பார்த்தா போச்சு

பொம்பளை சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சா போச்சு என்பது தமிழ் பழமொழி. ஆனால் பெண்கள் சிரித்தால் செண்பக மரம் பூக்கும் என்கிறது வடமொழி. பெண்களைப் போல் மரங்களுக்கும் மசக்கை (தோஹத) உண்டாம். பெண்களின் அன்புக்காக அவை ஏங்குமாம். தமிழர்களும் வேங்கை மரத்தை பெண்களின் திருமணத்தோடு இணைத்துப் பேசுவர். சங்க இலக்கிய நூல்கள் வேங்கை பரத்தின் அடியில் பெண்கள் புலி புலி என்று குரலிடுவதையும் அதனால் அது பூப்பதையும் குறிப்பால் உணர்த்தும்

சம்ஸ்கிருதத்தில் ஒரு செய்யுள் இருக்கிறது. அது பெண்களுக்கும் மரத்துக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பற்றிப் பேசுகிறது. அசோக மரத்தைப் பெண்கள் உதைத்தால் அது பூக்கும் என்று 2000 ஆண்டுகளாக வடமொழிப் புலவர்கள் பாடினர். இதோ அவர்கள் தரும் பட்டியல்:

பெண்கள் உதைத்தால் பூக்கும் அசோக மரம்
பெண்கள் சிரித்தால் பூக்கும் செண்பக மரம்
பெண்கள் பேசினால் பூக்கும் நமேரு மரம்
பெண்கள் தழுவினால் பூக்கும் குராபக மரம்
பெண்கள் பார்த்தால் பூக்கும் திலக மரம்

நாலிங்கிதக் குரபகஸ் திலகோ ந த்ருஷ்டோ
நோ தாடிதஸ்ச சரணை சுத்ரசாம் அசோக:
சிக்தோ ந வக்த்ரம் அதுனா பகுளாஸ் ச சைத்ரே
சித்ரம் ததாபி பவதி ப்ரஸவ அவகீர்ண என்பது சம்ஸ்கிருதப் பாடல்.

பெண்கள் எத்தனை வகை?

பெண்களை வடமொழி வித்தகர்கள் நாலு வகையாகவும், பரத சாஸ்திர அறிஞர் பரத ரிஷி எட்டு வகையாகவும் தமிழர்கள் வயதின் அடிப்படையில் ஏழு வகையாகவும், ஜப்பானியர்கள் ஒன்பது வகையாகவும், ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள் டி.என்.ஏ. அடிப்படையில் ஏழு வகையாகவும் பிரித்தனர்.

பத்மினி, சங்கினி,ஹஸ்தினி, சித்ரினி

வடமொழி நூலர்கள் குணத்தின் அடிப்படையில் பெண்களை நாலு வகையாகப் பிரித்தனர். அவர்கள் பத்மினி, சங்கினி, ஹஸ்தினி, சித்ரினி எனப்படுவர்.

பத்மினி பெண்களைப் பார்ப்பது அபூர்வம். அவர்கள் மிகவும் அழகானவர்கள், மென்மையானவர்கள்,புனிதமானவர்கள். முகம் வட்ட வடிவம் உடையது. உடலும் உருண்டு திரண்டு இருக்கும். அவர்கள் சுஹாசினி (மலர்ந்த முகம்) சுபாஷினி ( இனிய சொல்), சாருஹாசினி (புன்சிரிப்புடையோர்) ஆவர். அழகிய கவர்ச்சிகரமான பார்வையால் எதிரிகளையும் தேவர்களையும் வசப்படுத்துவர்.

சங்கினி வகைப் பெண்கள் அழகானவர்கள், புத்திசாலிகள், சுறு சுறுப்பானவர்கள். சங்கு வடிவத்தில் சில உடல் அம்சங்கள் ஒல்லியாக இருக்கும். சுதந்திர சிந்தனை படைத்தவர்கள். அதிக சக்தி உடைய இவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவோர் கார்கி, வைதேகி, சுரவந்தியா ஆவர்.

ஹஸ்தினி வகைப் பெண்கள் பார்பதற்கு இனியவர்கள், ஆனால் பருமனானவர்கள். பின் தூங்கி பின் எழும் பத்தினிகள். கேளிக்கை விரும்பிகள். நீங்கள் முடிவு எடுத்தால் கோபிப்பார்கள். தானாகவும் முடிவு எடுக்க மாட்டார்கள். கேளிக்கையே வாழ்க்கையின் குறிக்கோள். பிரபுக்கள் வம்சம்.

சித்ரினி மிக மெல்லிய தேகம் உடையோர். மூங்கில் குச்சியோ எனலாம். அலங்காரத்திலும் கலைகளிலும் ஆர்வம் அதிகம். அலமாரி முழுதும் ஆயிரம் உடைகளைப் பார்க்கலாம். படுக்கப் போகும் போதும் படுத்து எழுந்திருக்கும் போதும் அலங்காரத்துடன் வருவர். அலங்காரி, சிங்காரி ஒய்யாரி-பேஷன் பேர்வழிகள்.

Tree Yakshi Kicking the Asoka Tree, 2200 year old statue

2000 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களை வகைப் படுத்தினர் ஆன்றோர்கள். இன்றும் இவ்வகையினரைக் காண்பது நம் முன்னோரின் மேதாவிலாசத்தைக் காட்டும்.
நாட்டிய சாத்திரம் எழுதிய வட மொழி அறிஞன் பரத முனி எட்டு வகை நாயகிகளைப் பற்றிப் பேசுகிறார். இவரகள் குணத்தால் பிரிக்கப்பட்டவர் இல்லை. திரைப்பட கதாநாயகிகள் போல நடிப்பதற்காக தோன்றுபவர்கள்.

அவர்கள் ;1.வாசக சஜ்ஜா நாயிகா:காதலனுடன்டன் குலவத் தயாரான உடையுடன் இருப்பாள் 2.விரஹோத் கண்டிதா நாயிகா: பிரிவால் வருந்தும் பெண் 3. ஸ்வாதீன பர்த்ருஹா நாயிகா: கணவனை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவள் 4. கலஹாந்த்ரிதா நாயிகா: சண்டை போட்டுப் பிரிந்தவள் 5.கண்டிதா நாயிகா: காதலுனிடம் கோபமாகச் சீறுபவள் 6.விப்ரலப்தா நாயிகா: காதலனால் ஏமாற்றப்பட்டவள் 7.ப்ரோஷித பர்த்ருகா நாயிகா: கணவனுடன் சுகமாக வசிப்பவள் 8.அபிசாரிகா நாயிகா: கணவணை காண ஆவலுடன் செல்லும் நாயகி.
இந்த எட்டு வகைகாயும் நாடகம் திரைப்படம் ஆகியவற்றில் காண்கிறோம்.

தமிழர்கள் செய்த 7 வகை

தமிழர்கள் 40 வயதுக்குக் குறைவான பெண்களை மட்டும் வயது அடிப்படையில் ஏழு பிரிவுகளாகப் பிரித்தனர். அதற்குப் பிறகு அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. பேதை (5—7), பெதும்பை (8—11), மங்கை (12—13), மடந்தை (14—19), அரிவை (20—25), தெரிவை (25—31), பேரிளம் பெண் (32 முதல் 40 வயது).

இது தவிர சம்ஸ்கிருத நிகண்டு அமரகோஷம், தமிழ் நிகண்டு பிங்கலந்தை போன்றவற்றில் பல வடமொழிப்ப் பெயர்கள் உள்ளன. வாலை, தருணை, ப்ரவுடை, விருத்தை என்பன அந்தப் பிரிவாகும். இவைகளும் வயதின் அடிப்படையில் அமைந்தனவே.

காமசூத்திரம் எழுதிய வாத்ஸ்யாயனர் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பாலியல் ரீதியில் ஆண்களையும் பெண்களையும் பலவகைகளாகப் பிரித்திருப்பதும் குறிப்பிடத்த்க்கது. நம் முன்னோர்கள் எந்த அளவுக்கு ஆராய்ச்சி மனப்பான்மையோடு இவ்விஷயங்களை அனுகினர் என்பதைப் பார்க்கையில் வியப்பாக இருக்கிறது.

பெண்ணின் குணங்கள்

தாயின் கருணை, அடியாள் போல தொண்டு,பூமாதேவி போல பொறுமை, படுக்கை அறையில் மகிழ்விக்கும் பெண், குடும்ப நிர்வாகத்தில் மந்திரி போல அற்புத மூளை—அத்தனையும் வாய்கப் பெற்றவள் தாய். இதோ நீதி வெண்பா பாடல்:

அன்னை தயையும் அடியாள் பணியும் மலர்ப்
பொன்னின் அழகும் புவிப் பொறையும் – வன்னமுலை
வேசி துயிலும் விறல் மந்திரி மதியும்
பேசில் இவையுடையாள் பெண்

மஹாபாரதம், லலிதா சஹஸ்ரநாமம் ஆகியவற்றிலும் பெண்கள் பல வகையில் பிரிக்கப் பட்டிருக்கின்றனர்..

மரபியல் ரீதியில் ஏழு வகை

மனித இனம் முழுதும் ஏழு ரிஷிகளின் (சப்த ரிஷி) வழித்தோன்றியதாக இந்து மத நூல்கள் கூறுகின்றன. அத்ரி, ப்ருகு, குத்ஸ, வசிஷ்ட, கௌதம, காஸ்யப, ஆங்கிரஸ ரிஷி என எழுவர். மேலை நாட்டில் ஆக்ஸ்பர்ட் பேராசிரியர் ப்ரையன் சைக்ஸ் (Bryan Sykes) ஆராய்ந்ததில் வேறு ஒரு உண்மையைக் கண்டார். அவர் ஐரோப்பாவிலிருக்கும் பெண் இனங்களின் உயிர் அணுவிலுள்ள மைடோகாண்ட்ரியாவை ஆராய்ந்து பார்த்து அவர்கள் அனைவரும் ஏழு தாய்மார்கள் இடமிருந்து தோன்றினர் என்றும் அவருக்கு மூலமான பெண்மணி ஆப்பிரிக்காவில் சில லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார் என்றும் கூறுகிறார். ஏவாளின் ஏழு சகோதரிகள் The Seven Sisters of Eve என்று அவர் ஒரு புத்தகமும் எழுதி தனது மரபியல் ஆய்வுகளை வெளியிட்டார்.

ஆண்கள், பெண்கள் ஆகிய இருவர் இடத்திலும் மைடோகாண்ட்ரியல் டி.என்.ஏ.(mitochondrial DNA) இருந்தாலும் அம்மாவிடமுள்ள மைடோகாண்ட்ரியல் டி.என்.ஏ. மட்டுமே குழந்தைகளுக்குப் போகும். ஆகவே இதை வைத்து மூதாதையாரான பெண்மணி யார் என்பதை ஆராயலாம். அவர் கண்டுபிடித்த ஏழு வகைப் பெண்களூக்கும் கற்பனைப் பெயர்கள் கொடுத்திருக்கிறார். அவையாவன: 1.ஊர்சுலா 2.சீனியா 3.ஹெலீனா 4.வெல்டா 5.தாரா 6.காத்ரீன் 7.ஜாஸ்மின்

இந்தப் பெயர்கள் கற்பனை என்றாலும் அவர்களின் முதல் எழுத்து அந்த டைப்பின் (வகையின்) எழுத்தாகும் எ.கா. ஊர்சுலா என்றால் யு, சீனியா என்றால் எக்ஸ்—இப்படி வரும்.
ஜப்பனியர்கள் ஒன்பது குலத்திலிருந்து வந்ததாகவும் அமெரிக்க பழங்குடியினர் 4 குலத்திலிருந்து வந்ததாகவும் இந்துக்கள் ஏழு ரிஷிகளிடமிருந்து வந்ததாகவும் கூறுகிறனர். இவைகளையும் மரபியல் ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கமுடியும்.

இப்படியே ஆராய்ச்சி செய்துகொண்டே போனால் மனித குலம் ஒன்றே –எல்லோரும் ஒரு தாய் மக்கள்- நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என்ற பரந்த மனப் பான்மை வளரும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ் முழக்கமும் “ ஒன்று பரம்பொருள், நாம் அதன் மக்கள், உலகு இன்பக் கேணி என்று நல் வேதம் கூறுவதாக பாரதி கூறும் வேத வாசகங்களும் உயிர்பெறும்.

ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
உலகு இன்பக் கேணி என்றே—மிக
நன்று பல் வேதம் வரைந்தகை பாரத
நாயகி தன் திருக் கை (தேசிய கவி சுப்ரமண்ய பாரதி)
**************

இந்துமதம் பற்றிய 200 பழமொழிகள்- பகுதி 2

Picture: Goddess Kali

ராம ராம ராம

இராம பாணம் பட்டு உருவினாற்போல
இராமர் இருக்கும் இடம் அயோத்தி
இராம லெட்சுமணரைப் போல இசைந்திருக்கிறது
இராம வாக்குக்கு இரண்டு உண்டோ?
அனுமார் வால் போல நீளுகிறதே
இராமனைப் போல ராசா இருந்தால் அனுமாரைப் போல சேவகனும் இருப்பான்
இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?
இராமன் மங்கையோடு இணங்கியது அவம்
இராமாமிர்தமே சீவனம் என்று பட்டினியாய் இருக்கலாமா? (110)
இரா முழுதும் இராமாயண்ம் கேட்டு சீதைக்கு ராமன் என்ன வேண்டும் என்ற கதை (சீதைக்கு ராமன் சித்தப்பன் என்ற கதை)
இராமேசுரத்துக்கும் காசிக்கும் போயும் என்னைப் பிடித்த சநீசுரன் தொலையல்ல
தம்பி உடையான் படைக்கஞ்சான் ( லெட்சுமணன் பற்றிய மொழி)
இராவண சந்யாசி போல இருக்கான்
இராவணன் குடிக்கு மஹோதரன் போலும், சுயோதனன் குடிக்கு சகுனி சுக்கிரீவ ஆக்கினையாய் இருக்கிறது
போலும்

சந்நியாசி புராணம்

சந்நியாசி கோவணத்துக்கு இச்சித்து சமுசாரம் மேலிட்டது போல
சந்நியாசி கோவணம் கட்டினது போல
சந்நியாசம் சகல நாசம்
சந்நியாசிக்குப் பழைய குணம் போகாது
சந்நியாசிக்கு சாதி மானம் போகாது (120)
சந்நியாசி பயணம் திண்ணையை விட்டுக் குதிப்பது தான்
சந்நியாசி பூனை வளர்த்தது போல
சந்நியாசியைக் கடித்த நாய்க்கு பின்னாலெ நரகமாம், சந்நியாசிக்கு முன்னாலெ மரணமாம்
சந்நியாசியை நிந்தித்தவனுக்கு பின்னாலெ நரகமாம்
சந்நியாசி வீடு திண்ணைல
சபையிலெ நக்கீரன் அரசிலே விற்சேரன்
சப்தப் பிரம்மத்திலே அசப்த பிரம்மம் பிரகாசிக்கிறது
சப்தப் பிரம்மம் பரப் பிரம்மம் இரண்டையும் அறிய வேண்டியது
பழமொழிகளில் அவதாரம்
கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பக் கூடாது (வாமன அவதாரம்) (130)
தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் (நரசிம்ம அவதாரம்)
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் (காகாசுரன் கதை-ராமாவதாரம்)
சாத்திரம் கற்றவன் தானே காசு
சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்திரம்
சாத்திரம் பார்த்துப் பெண்ணைக் கொள், கோத்திரம் பார்த்துப் பெண்ணைக் கொடு
சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்
சாபமிட்டருண்டோ? தலையில் திரு எழுத்தோ? வேக விட்டருண்டோ? எழுத்தின்படி தானோ?
சுவர்க்கத்திலே தோட்டியும் சரி, தொண்டமானும் சரி
சுவர்க்கத்துக்குப் போகிறபோது கக்கதிலே கூத்தியரா?
சுவர்க்கத்துக்குப் போகிறபோது கக்கதிலே ஒரு பிள்ளை ஏன்?
சுவர்க்கத்துக்குப் போனாலும் கக்கதிலே அட்சய பாத்திரமா?
சுவாமி வரங் கொடுத்தாலும் முன்னடியான் வரங் கொடான்
சூட்சுமத்தில இருக்குது மோட்சம்
சூட்சுமம் அறியாதவனுக்கு மோட்சம் இல்லை

14 லோகங்கள்

கீழேழு லோகமும் மேலேழு லோகமும் கண்ட காட்சியா?
குபேர பட்டணம் கொள்ளை போனாலும் கொடுத்து வையாத பாவிக்கு ஒன்றுமில்லை
ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியதாம்
ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரி ஆனது போல
நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்
ஒன்று தெரிந்தவனுக்கு எல்லாம் தெரியாது (150)
ஒன்றைத் தொடினும் நன்றைத் தொடு
காவியுடுத்தவர் எல்லாம் விவேகானந்தரா?

ஏகாதசி மஹிமை

ஏகாதசிக்கு மா இடித்தாற் போல
ஏகாதசித் திருடியை ஏற்றடா ரததின் மேலே
ஏகாதசி மரணம் துவாதசி தகனம்
ஏகாதசி மரணம் நல்லதென்று நாக்கைப் பிடுங்கிக் கொள்வார்களா?
எறும்பு முதல் எண்ணாயிரம் கோடிக்கும் தெரியும் நாராயணன் என்னை காப்பாற்ற மாட்டானா?
ஓமப் பிண்டத்தை நாய் இச்சித்தாற் போல
வடக்கே போன வாலியும் வரக் காணோம்
அவன் தம்பி அங்கதன் (160)
ரிஷிப் பண்டம் ராத்தங்காது
ஆண்டியே அன்னத்துக்கு அலையறச்சே லிங்கம் பால் சோற்றுக்கு அழுகிறதாம்
ஆதி முதல்வனே பாய்ந்தோடும் போது ஐயர் மணி ஆட்டுவாரா?
ஆத்தாள் அம்மணம், அன்றாடம் கோ தானம்
ஆயிரம் உளிவாய்ப் பட்டுத்தான் ஒரு லிங்கம் ஆகவேண்டும்
சரியான சாப்பாட்டு ராமன்
அண்டத்தை சுமக்கிறவனுக்கு சுண்டைக்காய் பாரமா?
அண்ணாமலையாருக்கு 64 பூசை, ஆண்டிகளுக்கு 74 பூசை
அண்ணாமலையார் அருள் உண்டானால் மன்னார்சாமி மயிர் பிடுங்குமா?
வசிட்டர் வாயால் பிரம்ம ரிஷி (170)
பகீரதப் பிரயத்தனம் செய்தான்
அகாரியத்திலே பகீரதப் பிரயத்தனம் ஆகாது
அகோர தபசி, விபரீத நிபுணன்
அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் அறியுமா?
அக்கினி தேவனுக்கு அபிடேகம் செய்தது போல இருக்கிறது
அங்காளம்மைத் தெய்வம் அகப்பைக் கூறு வழியாக வரும்
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
வீட்டுக்கு வந்த வரலெட்சுமி
லெட்சுமி இருக்கும் இடத்தில சரசுவதி இருக்க மாட்டாள்
பெருங்காயம் இருந்த பாண்டம் வாசனை போகாது (பாவம் செய்தவர்கள் நிலை) (180)
பிறவிக் குருடனுக்குத் தெய்வம் கண் கொடுத்தாற் போல
வைகுண்டம் என்பது திரு மாநகரம்
குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்தில்

Picture: Kneeling figure from Cambodia

வேத மகிமை

வேதியர்க்கு அழகு வேதம் ஓதுதல்
வேதத்தில் நாலு விதம் உண்டு
வேதத்திற்கு உலகம் பகை, உலகத்திற்கு ஞானம் பகை
வேதத்திற்கும் விக்ரகபக்திக்கும் பகை
வேதத்தை அறியாத கிழவன் வீண்
வேதம் ஆய்ந்து ஓதல் போதகர் முறைமை
வேதம் ஏன், நியாயம் ஏன், வித்தாரம் கள்ளருக்கு (190)
வேதம் ஒத்த மித்திரன்
வேதம் கேடவரை, வேதம் கேடவர் என்பான் ஏன்?
வேதம் பொய்த்தாலும் வியாழம் பொய்யாது
உருத்திராக்கப் பூனை உபதேசம் பண்ணினது போல
ஐயப்பன் குதிரையை வையாளி விட்ட கதை
ஐயர் ஒன்றே கால் சேர் அவர் அணியும் லிங்கம் அரை சேர்
ஐயானாரே வாரும், கடாவைக் கொள்ளும்
ஐயனார் கோவிலிலே ஆனை பிடிக்க வேண்டும் (200)
ஐயனார் கோவில் செங்கல் அத்தனையும் தங்கம்
ஐயனார் கோவில் மண்ணை மிதித்தவர் அத்தனை பேரும் பத்திரகாளி
கஞ்சி வரதப்பா என்றால் வாயில் வாரப்பா என்றானாம்
காசிக்குப் போனால் காலாட்டிப் பிழைக்கலாம்
கண்ணைக் கெடுத்த தெய்வம் மதியைக் கொடுக்கும்
சுடலை ஞானம் திரும்பி வரும் மட்டும்தான் (ஸ்மசான வைராக்யம்)
தவசிச்சிக்கு தயிரும் சோறும் விசுவாசிக்கு வென்னீரும் பருக்கையும்
தவசிப்பிள்ளை நமசிவாயம் கையாசாரம்
தவசுக்குத் தனிமையும் தமிழுக்குத் துணையும்
தவசே அணிகலன், தாழ்மையே மேன்மை (210)
தவத்திலிருதால் தலைவனைக் காணலாம்
தவத்துக்கொருவர் கல்விக்கிருவர்

Picture: Ganesa in US Museum

உன்னையே நீ அறிவாய்
எல்லாம் தலை விதி (கர்ம வினைக் கொள்கை)
உடலில் உள்ள அழுக்கைப் போக்கிடலாம் உள்ளத்திலுள்ள
அழுக்கைப் போக்குவது கஷ்டம்
ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள் கோழி அடிச்சுக் கும்பிட்டானாம்
மலையத்தனை சுவாமிக்கு கடுகத்தனை கற்பூரம்/ சாம்பிராணி

பெருமாள்

பெருமாளைச் சேர்ந்தோருக்குப் பிறப்பில்லை, பிச்சைச் சோற்றுக்கு எச்சல் இல்லை
பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் உண்டு
பெருமாள் இருந்தால் அல்லவோ திருநாள் நடக்கப் போகிறது?
பெருமாள் என்கிற பெயரை மாற்றி பெத்த பெருமாள் ஆச்சு (220)
பெருமாள் செல்கிற வழியில் புல்லாய் முளைத்தாலும் போதும்
பெருமாள் நினைத்தால் வாழ்வு குறைவா? பிரம்மா நினைத்தால் ஆயுசு குறைவா?
பெருமாள் புளிச்ச தண்ணீருக்கு அலைகிறான், அனுமார் ததியோதனம் கேட்கிறார்
பிச்சை எடுக்கிறதாம் அதைப் பிடுங்குகிறதாம் அனுமார்
பிள்ளையாரைப் பிடிச்ச சனி அரசமரத்தையும் பிடிச்சதாம் (225)

(பழமொழிகளில் இந்துமதம் என்ற எனது கட்டுரையில் கண்ட 14 பழமொழிகளையும் சேர்த்துக் கொள்க)