Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
COMON SANSKRIT WORDS THAT ARE USED THROUGHOUT INDIA ARE IN
THE CROSS WORD
1. –11
letters- mathematician and astronomer, born in Sind (now in Pakistan) 1400
years ago; author of Brahmasputa Siddhanta
8. -4—beyond;
supreme, highest, above
10.—5—dawn,
sun, morning; also goes with Uddalaka
11–4–flute
12. –4—name
of a dynasty, a small country; a tree, a Puru dynasty king
13.—6—reason
with long Kaa; argument
15. r–7—northern
most state of India; it looks like crown of Bharat
16. –9—greatest
epic which covers land up to Sri Lanka
17. – 6—water
offering
18– 5—LEAF
Xxx
1. – 8
letters –author of Siddanta Siromani; great mathematician who was born Mysuru
1000 years ago.
2. – Star
of Shiva; special Darshan is arranged on that day in Shiva temples.
3.– 4—the
nomadic people who invaded India from Europe
4. –8– a saint’s hut in forest
5. – 7—name
of Vishnu in Sahasranama, meaning above Indra
6–4—ordinary
meaning water; business community mentioned in the Vedas
7. i –6—satisfaction,
contentment in Sanskrit; common name of Hindu
females
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
சிவபிரான் – உமா தேவி – ஒரு சூடான விவாதம்!
ச.நாகராஜன்
சிவபெருமானுக்கும் உமா தேவிக்கும் இடையே நடந்த ஒரு
சூடான விவாதத்தை அருகிலிருந்து கேட்டவர் போல்
சொல்லி அருள்பவர் சிவப்பிரகாச சுவாமிகள்.
அவரது பாடல் இதோ:
அம்பிகையரன் றன்னை நோக்கி யுன்னா பரணமரவமென வுமையை
நோக்கி
அரியரவ
சயனத்தை யரவுருவமானத்தை யறியாய் சொல் சிறிதுமென்ன
உன் ஆபரணம் அரவம் என – உனது ஆபரணமாக இருப்பது பாம்பு
என்று சொல்ல
நம்பி – (அதற்கு) சிவ பெருமான்
உமையை நோக்கி – உமா தேவியைப் பார்த்து
அரி – திருமால்
அரவ சயனத்தை – சர்ப்ப சயனம் உடையதாகவும்
அரவுரும் ஆனத்தை – சர்ப்ப ரூபமாகவும் ஆனதை
சிறிதும் அறியாய் கொல் என்ன – சிறிதும் அறியாயோ என்று
சொல்ல
மனைதொறும் இரந்து உண்ணும் ஆண்டி என்ன – நீ வீடுகள்
தோறும் பிச்சை கேட்டு உண்ணுகின்ற ஆண்டி என்று சொல்ல
நான் தாதன் அறிவேன் என – தாதனை நான் அறிவேன் என்று
சொல்ல
நவை உறும் பொய் புகன்றீர் என – குற்றம் மிகுந்த பொய்யைச்
சொன்னீர்கள் என்று சொல்ல
பாரதம் நடந்ததே கரி ஆம் என – மஹாபாரதம் நடந்ததே சாட்சி
என்று சொல்ல
வெம்பி ஒருவன் பிரம்பால் அடித்தான் என – கோபித்து
ஒருவன் பிரம்பால் அடித்தான் என்று சொல்ல
விளங்கிழை ஒருத்தி – பெண் ஒருத்தி
தாம்பால் வீசினது சொல் என்ன – தாம்புக் கயிற்றால்
அடித்ததைச் சொல் என்று சொல்ல
எண்ணாயிரம் பெண்கள் – எண்ணாயிரம் பெண்களுடைய
மிகு கற்பை நீக்கின என – மிகுந்த கற்பினை நீக்கினாய்
என்று சொல்ல
பம்பு கற்பினில் – மிகுந்த கற்பினில்
ஓர் இரட்டிப்பு நீக்கினது – ஓர் இரட்டிப்புக்காக
நீக்கினதை
பதறாமல் நீ கேள் என – பதற்றம் கொள்ளாமல் நீ கேட்பாயாக
என்று சொல்ல
பரமருடன் – பரமசிவனோடு
இவ்வாறு – இந்தப் பிரகாரம்
விளையாடு – விளையாடுகின்ற
பச்சைப் பசுங்கொடி – உமாதேவி ஆனவள்
உமைக் காக்க – உம்மைக் காக்கக் கடவன்
picture by Lalgudi Veda
பல திருவிளையாடல்களை உள்ளடக்கிய பாடல் இது. ஒவ்வொன்றையும்
மாற்றி மாற்றி சிவனும் உமையும் பேசுவது போல அமைக்கப்பட்ட இந்தப் பாடலின் சுவையே தனி
தான்.
திருமால் அரவம் ஆனது எப்படி? ஒரு சமயம் பார்வதியும்
பரமசிவனும் சூதாடி விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் பார்வதி ஜெயித்தாள். ஆனால் பரமசிவனோ
நான் தான் ஜெயித்தேன் என்று சொன்னார்.அருகிலிருந்த திருமாலைச் சாட்சிக்கு அழைத்தார்.
அவரும் சிவபிரானே ஜெயித்தான் என்று சொல்ல, கோபம்
கொண்ட உமா தேவி திருமாலை நோக்கி, “நீ பொய் சாட் சொன்னதால் அரவமாகக் கடவாய்” என்று சாபமிட்டாள்.
இந்த வரலாறு கந்த புராணத்தில் உள்ளது. சிவபெருமான்
பொய் கூறியதும் இதே சந்தர்ப்பத்தில் தான்.
பிரம்பால் அடி பட்டது பிட்டுக்கு மண் சுமந்த போது.
இப்படி ஒவ்வொரு விளையாடலையும் சுட்டிக் காட்டும்
இந்தப் பாடல் மனமுருகி சிவன் மற்றும் உமையின் திருவிளையாடல்களை நினைக்க வைத்து அருள்
வேண்டித் துதிக்கச் செய்கிறது!
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
12 Aug 2017 – WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU. அஷ்டமா சித்தி (எட்டு வகை …
21 May 2018 – WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU. அஷ்டமா சித்தி (எட்டு வகை …
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
eight immortals from wikipedia
The Eight Immortals (Chinese: 八仙; pinyin: Bāxiān; Wade–Giles: Pa¹-hsien¹) are a group of legendary xian (“immortals”) in Chinese mythology. Each immortal’s power can be transferred to a vessel (法器) that can bestow life or destroy evil. Together, these eight vessels are called the “Covert Eight Immortals” (暗八仙). Most of them are said to have been born in the Tang or Shang Dynasty. They are revered by the Taoists and are also a popular element in the secular Chinese culture. They are said to live on a group of five islands in the Bohai Sea, which includes Mount Penglai.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
மாலைமலர் 28-9-2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் நவரத்தினங்கள் – ஒரு அறிமுகம்!
ச.நாகராஜன்
பூமித் தாய் எல்லையற்ற கருணை
உள்ளம் படைத்தவள்!
தன் மக்கள் நீடித்து ஆரோக்கியத்துடனும்
மன நிம்மதியுடனும் பூரணமான நூறு ஆண்டுகள் வாழ என்னென்ன தர வேண்டுமோ அனைத்தையும் தந்து
அவள் அருளியுள்ளாள்.
ஆகவே தான் எழுந்தவுடன் உள்ளங்கைகளைப் பார்த்தவாறே அவளுக்கு நன்றி கூறி விஷ்ணு பத்னி நமஸ்துப்யம்; பாத ஸ்பர்ஸம் க்ஷமஸ்வ மே – விஷ்ணுவின் பத்னியே, உன்னைக் காலால் தொட்டு இன்று முழுவதும் நடக்க இருக்கிறேன். இதற்காக என்னை மன்னித்தருள் என்று கூறி வேலையைத் தொடங்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது நமது அற நூல்கள். நன்றி மறப்பது நன்றல்ல, அல்லவா!
தானியங்கள், நீர், காற்று, இருக்க இடம், வெப்பம்,
வானிலிருந்து விளையும் நன்மைகள் என அனைத்தையும் தன் மண்டலத்தில் தந்த அவள் கருணைக்கு
எல்லையே இல்லை.
இத்துடன் மூலிகைகள், மினரல்கள்
எனப்படும் தாதுப் பொருள்கள், தங்கம் உள்ளிட்ட விலை மதிக்கவே முடியாத உலோகங்கள் உள்ளிட்ட
அனைத்தையும் சொல்லப் போனால் முடிவே இருக்காது.
அன்னை பூமிக்கு 53 பெயர்கள்
உண்டு. அதில் முக்கியமான ஒன்று வசுந்தரா என்பதாகும்.
வசுந்தரா என்றால் செழிப்பான
நிலத்தையும் அளப்பரிய செல்வங்களையும் கொண்டவள் என்று பொருள். ‘உலகம் முழுவதும் எதிலிருந்து
ஆரம்பித்து எதில் முடிகிறதோ அது வசுந்தரா’ என்று இன்னொரு பொருளும் உண்டு. புத்த மத நூல்களும் பாலி மொழியில்
உள்ள கிரந்தங்களும் தரும் பொருள்கள் பிரமிக்க வைப்பவை; ரகசியமானவை!
இப்படிப்பட்ட அரிய பூமியில்
அரிய பிறப்பான மனிதப் பிறப்பை எடுத்துள்ள வெவ்வேறு விதமான மனிதர்களுக்கு வெவ்வேறு விதமான
பிரச்சினைகள்.
இவற்றிற்கு அவரவர் அறிவுக்குத்
தக அவரவர் வழியில் தீர்வு காண்கின்றனர்.
மனம் கனிந்த அன்னை சரியான வழியைக்
காட்ட மகான்களையும், சித்தர்களையும் உலவ விட்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வழி
காண்பிக்கவே அவை பல சாஸ்திரங்களாக – அற நூல்களாக வடிவம் எடுத்தன.
அவற்றுள் ஒன்று தாதுப் பொருள்களைப்
பற்றிய சாஸ்திரம். இதன் முக்கியப் பகுதி நவரத்தினங்களைப் பற்றியது.
மணி என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படுகிறது
இது.
இதன் முக்கியத்துவம் என்ன?
மூன்று முக்கிய சாஸ்திரங்களுள்
முக்கியமானது மணிகள் பற்றியதாகும்.
அன்யானி சாஸ்த்ராணி விநோத மாத்ரம் – மற்ற கலைகள் எல்லாம் வேடிக்கைக்காக உள்ளனவே தான்.
ஆபத்துக் காலங்களிலும் அனைத்து
சமயங்களிலும் உதவுவது : மணி மந்த்ர ஔஷதமே என்று மேலோர் குறிப்பிடுவர்.
மணி என்பதில் ஜ்யோதிஷம், வைத்யம்,
வாஸ்து, எண் கணிதம் , வைத்தியம், பக்தி எனப்படும் இறையருள் பெறும் துதி செய்தல் உள்ளிட்ட
அனைத்துக் கலைகளும் இணைகின்றன.
மினரல் எனப்படும் தாதுபொருள்களை
கணக்கிலடங்காத அளவில் பூமித் தாய் தந்திருக்கிறாள்.
அவற்றில் 300 அரிய தாதுக்களை
அறிஞர்கள் இனம் கண்டுள்ளனர்; அவற்றின் அரிய பயன்களைச் சொல்லி வருகின்றனர்.
இந்த முன்னூறில் சுமார் எண்பதுக்கும்
மேற்பட்டவற்றை அரிதான மணிகள் என மணிகளில் நிபுணர்களாக உள்ளோர் குறிப்பிடுகின்றனர்.
இந்த எண்பதில் ஒன்பது மணிகளை உலகில் உள்ள அனைத்து பழைய நாகரிகங்களும் – எகிப்திய, அஸிரிய,
ரோமானிய, கிரேக்க, யூத, ஹிந்து, பௌத்த, அராபிய நாகரிகம் உள்ளிட்ட அனைத்துமே – உச்சி மேல் வைத்துக் கொண்டாடுகின்றன.
ஒன்பது மணிகளை நவ ரத்தினங்கள் என்று சந்தோஷத்துடன் குறிப்பிடுகிறோம். ஏனையவை உபரத்தினங்கள் எனப்படும். வணிக நோக்கில் இவை ராசிக் கற்கள் என்ற பெயரைப் பெறுகின்றன.
நவரத்தினங்களாவன :
1) மாணிக்கம் – Ruby
2) முத்து – Pearl
3) பவளம் – Coral
4) மரகதம் – Emerald
5) புஷ்பராகம் – Topaz
6) வைரம் – Diamond
7) நீலக்கல் – Blue Sapphire
8) கோமேதகம் – Zircon
9) வைடூரியம் – Cat’s Eye
ஹிந்து நாகரிகத்தில் கருட புராணம்,
சரக சம்ஹிதை, ஜோதிட சாஸ்திரம் உள்ளிட்ட நூல்கள் ஒவ்வொரு ரத்தினத்தின் பயனையும் தன்மையையும்
விரிவாக விளக்குகின்றன.
இவை பிரமிப்பை ஊட்டுபவை; ஏனெனில்
இன்று அறிவியல் பல நவீன சாதனங்களின் உதவியால் கூறுபவற்றை அவை தீர்க்கமாக துல்லியமாகப்
பல்லாண்டுகளுக்கு முன்பேயே குறிப்பிட்டிருப்பதால் தான் இந்த பிரமிப்பு.
ரஸ ஜல நிதி என்ற நூல் ஒவ்வொரு
விஷயத்தையும் ‘பிட்டுப் பிட்டு’ வைக்கிறது; வியப்பின் உச்சிக்கே
போய்விடச் செய்கிறது.
ஆயுள் நீட்டிக்க ரத்தினக் கற்களை
அணிக என்று ஆணையிடுகிறார் சரகர்.
தேர்ந்த மருத்துவரான இவர் நூறு
வயது வாழ்வதற்கான வழிகளைத் தெள்ளத் தெளிவாக தனது சரக சம்ஹிதை நூலில் விளக்குகிறார்.
சந்தோஷமாக வாழ்க்கை எது என்பதையும் அவர் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
அதே நூலில் (அத்தியாயம் 19 சுலோகம்
7) வெளியில் கிளம்பும் போது –
ரத்தினக் கற்களைத் தொடாமல்
(அணியாமல்) செல்லக் கூடாது.
பெரியோர்களின் பாதங்களைத் தொடாமல்
செல்லக் கூடாது.
நெய், நல்ல மங்களகரமான பொருள்கள், மலர்கள் இவற்றைத் தொடாமல் செல்லக் கூடாது.
வணக்கத்திற்குரிய பெரியோர்கள்,
பூசிக்கப்படும் பொருள்கள் ஆகியவை வலப்புறம் இருக்கும்படியும், சிறியவர்கள் இடப்புறம்
இருக்கும்படியாகவும் உள்ள நிலையில் கிளம்ப வேண்டும். (அதாவது பூஜை செய்த பின் பெரியோர்களை
வலமாகச் சுற்றிக் கிளம்ப வேண்டும்.)
இதை அடுத்து, அடுத்த சுலோகத்தில்
ரத்தினக் கற்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்.
ரத்னக் கற்களை கைகளில் அணியாமலோ,
குளிக்காமலோ சாப்பிடக் கூடாது என்று வலியுறுத்தும் அவர் மூலிகைகளை உடலிலே தரிக்குமாறும்
அறிவுறுத்துகிறார்.
ரத்னக் கற்களை Precious Stones – அரிய, மதிப்புடைய கற்கள் என்று
கூறுகிறோம்.
அரிய கற்கள் என்றால் எதை வைத்து
அப்படிச் சொல்ல முடிகிறது.
இதற்கான மேலை நாட்டு வரையறுப்பு
–Beauty,
Durability, Rarity – அழகு, நீடித்திருக்கும்
தன்மை, அரிதாகவே கிடைப்பது – ஆக இந்த மூன்று பண்புகளும் இருந்தால் அந்தக் கல்லை அரிய
கல் என்று கூறலாம் என மேலை நாட்டு நிபுணர்கள் கூறுகின்றனர்.
நமது நூல்களோ இன்னும் ஒரு பண்பைச்
சேர்க்கிறது.
Usablility – பயன்மை; அது வாழ்க்கைக்கு உதவுகிறதா என்று பார் என்கிறது!
மூன்று பண்புகளின் விளக்கம்
என்ன?
அழகு (Beauty) : அழகு அவரவரது கண் பார்வையைப் பொறுத்தது. இன்று இருக்கும்
டிசைன் நாளை இருப்பதில்லை. வரம்பற்ற கற்பனைக்கு இடமாக்கித் தன்னை வெவ்வேறு விதத்தில்
கவர்ச்சியாகக் காட்டிக் கொள்ளும் கல்லே அழகுக் கல்!
நீடித்திருக்கும் தன்மை (Durability) : நிறைய விலையைக் கொடுத்து வாங்கி பெருமையுடன் அதை அணியும்
போது அது நீடித்திருக்கிறதா அல்லது உடனே மங்கி தன் தன்மையை இழந்து அழிகிறதா என்பதையும்
பார்க்க வேண்டி இருக்கிறது. பரம்பரை பரம்பரையாக அடுத்த தலைமுறைகளுக்கும் செல்லும் கல்லே
நீடித்திருக்கும் கல்.
அரிதாகவே கிடைப்பது (Rarity) : தனது பெருமையை நிலை நாட்டிக் கொள்ள விரும்பும் ஒருவர் இது கிடைக்கவே கிடைக்காத ஒன்று என்று சொல்லும் போது அவர் அடையும் கர்வமும் மகிழ்ச்சியும் சொல்லில் அடங்காதது.
இந்த மூன்றும் இருந்தாலும் இது
நமக்கு உகந்ததா என்பதையும் பார் என்று சொல்கிறது நமது அற நூல்கள்.
உலகில் உள்ள 750 கோடிப் பேர்களில்
ஒருவர் போல ஒருவர் இல்லை. கை ரேகை தனி; கண்ணின் கரு விழித் திரை (Iris) தனி. மரபணு தனி. அவர்களது ஆசையும்
விருப்பமும் தேவையும் தனித் தனி தான்! உடல் வியாதிகளும், உள்ள மகிழ்ச்சிகளும் தனித்
தனி தான்!
இந்த அடிப்படையில் நவ ரத்தினங்களை
அலசுவோம்:
மாணிக்கம் உஷ்ண அலைகளை வெளிப்படுத்துகிறது.
குளிர்ச்சி சம்பந்தமான வியாதிகளைப் போக்க வல்லது. ரத்த சோகை, குளிர், ஜன்னி முதலானவற்றை
உடனே குணப்படுத்தும்.
முத்து மன சம்பந்தமான அனைத்து
நோய்களையும் தீர்க்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.
பவளம் பக்கவாத நோயைக் குணப்படுத்தும்.
வயிறுக் கோளாறுகள், மலச்சிக்கல், நீரிழிவு நோய் ஆகியவற்றைப் போக்கும்.
மரகதம் பில்லி சூனியத்தை நீக்கும்.
துர்த்தேவதைகளை விலகச் செய்யும்.
புஷ்பராகம் குழந்தை இல்லையே
என்ற ஏக்கத்தை நீக்கி புத்திர பாக்கியத்தைத் தரும்; மலடை நீக்கும்.
வைரம் குடும்ப ஒற்றுமையை ஓங்கச்
செய்யும். கலைகளில் வல்லவராக்கும். குறிப்பாக நாட்டியம், நடிப்பு, சினிமா துறையில்
உள்ளோர் அணிய வேண்டிய கல் இது. வாயு, பித்தம், கபம் ஆகிய மூன்றின் தோஷங்களை நீக்க வல்லது.
நீலக்கல், ஜல நீலம் மற்றும் இந்திர நீலம் என இது இருவகைப் படும். தோல் நோய்களைப் போக்கும். தொழு நோய் உடையவர்கள் கூட இதை அணிந்து நலம் பெறலாம்.
கோமேதகம் பசியைத் தூண்டி ஜீரண
சக்தியை அதிகரிக்கும்.
வைடூரியம் வாழ்வில் ஏற்படும்
பெருந்துன்பங்களிலிருந்து காக்க வல்லது.
இப்படிப்பட்ட ரத்தினங்களை ஜோதிட
சாஸ்திரம் ஆதரிக்கிறது; அணிந்து பயன் பெறுமாறு அறிவுறுத்துகிறது.
கற்களுக்கும் கிரகங்களுக்கும்
உள்ள தொடர்பை ஜோதிட நூல்கள் விளக்கமாகக் கூறுகின்றன.
சூரியன் – மாணிக்கம்
சந்திரன் – முத்து
செவ்வாய் – பவளம்
புதன் – மரகதம்
குரு – புஷ்பராகம்
சுக்ரன் – வைரம்
சனி – நீலக்கல்
ராகு – கோமேதகம்
கேது – வைடூரியம்
ஆக நவ மணிகளும் கிரஹ தோஷங்களைப்
போக்க வல்லவை.
ரத்தினங்களைத் தேர்ந்தெடுப்பது
ஒரு தனிக் கலை.
‘அறிவுறுத்தியபடி குறிப்பிட்ட
கல்லை அணிந்தேன்; ஆனால் நல்லது நடக்கவில்லை; மாறாக நிலைமை மோசமானது’ என்று ஒருவர் சொன்னால் அது பொய்யாக இருக்காது.
அவர் அணிந்திருந்த கல் உண்மையான,
தோஷமற்ற கல்லா என்பதை ஆராய வேண்டும்.
ஆம், கற்களில் உள்ள தோஷங்கள்
பல.
அதுவும் இன்றைய அறிவியல் உலகில்
செயற்கையாகச் செய்யப்படும் “கற்களை” அதிகப் பணம் கொடுத்து வாங்கி
அணிந்து பயன் இல்லாதது மட்டுமன்றி இன்னும் அதிகக் கெடுதல் ஏற்பட்டால் மனம் நோவது இயற்கை
தானே!
சாஸ்திரத்தைப் பழிக்காமல் அதைத் தந்த சதிகாரர்களைத் தான் பழிக்க வேண்டும்!
ஆகவே எச்சரிக்கையுடன் இந்தக்
கலையை அணுக வேண்டும்.
எல்லாத் துறைகளிலும் போலிகள்
உள்ளனர் – அறிவியல் துறை உட்பட!!
ஆகவே முதலில் தினமும் சிறிது
நேரம் இந்தக் கலைக்கு நேரம் ஒதுக்கி இதைப் பற்றிய அடிப்படை அறிவைப் பெற வேண்டும். அட,
டி.வி. சீரியலுக்கு ஒதுக்கும் நேரத்தில் பத்தில் ஒரு பங்கு ஒதுக்கினால் கூட போதும்,
வாழ்க்கை வளம் பெற உதவும் கற்களைத் தேர்ந்தெடுத்து விடலாம்.
இது உண்மை, வெறும் புகழ்ச்சி
இல்லை.
கற்க கசடறக் கற்க இந்தக் கலையை;
பின் அணிக அதற்குத் தக என்பது தான் நமக்கு உரித்தான சூத்திரம்.
சூஷ்மத்தைப் புரிந்து கொண்டால்
வெற்றி தான் பெறுவோம்!
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
அடைப்புக் குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் எத்தனை
எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.
குறுக்கே
1. – 8 எழுத்துக்கள்–சூத்ரகர் எழுதிய
சம்ஸ்க்ருத நாடகம்
3. – 4– சட்டியிலிருந்து எடுக்க இது அவசியம்
4.– 5–ஒரு ராகத்தின் பெயர்;
தேவியின் பெயர் போல இருக்கும்
6. –6– கிடைத்த வரத்தைச் சோதிக்க
சிவன் தலையில் கை வைக்க முயன்ற அசுரன்
8.– 6– பெண்கள் தங்கள் கணவரைத் தேந்தெடுக்கும்முறை
9.– 8– அருணகிரிநாதர் எழுதிய அந்தாதி
Xxxx
கீழே
1. – 7 எழுத்துக்கள் –மார்க்கண்டேயரின் தந்தை
2.– 8–சிவபெருமானுடைய காரியதரிசி; சிவனைத் தரிசித்தபின்னர் அவரிடம்
சொல்லிவிட்டுப் போவோம்.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
1.Can you
identify the six states that are missing in the Map, numbered 1 to 6?
2.Can you
expand the 5 abbreviations of North Eastern States?
NL, MN,
MZ, TR, ML
மாநிலக்
கேள்வி-பதில்
1 முதல் 6 வரை இலக்கமிட்ட மாநிலங்களின்
பெயர்களைச் சொல்ல முடியுமா?
2. ஆங்கிலச் சுருக்கெக்ழுத்துக்கள் குறிக்கும் 5 வடகிழக்கு மாநிலங்கள் யாவை?
Pictures are taken from
various sources; beware of copyright rules; don’t use them without permission;
this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
ACROSS
1.– 11 LETTERS-
RIVER THAT FLOWS IN TIBET/CHINA AND INDIA
10. – 7–PRIEST
IN TEMPLE WHO DOES ARCHANA
11. – 7–INDRA’S
ELEPHANT
12. -6–
BRACELETS
13. –3—MOTHER GODDESS
14.–7–
RIVER IN NEPAL WHERE SALGRAMAS ARE FOUND
15. –6– MEANS CROCODILE, SHARK AND THE FLAG OF
MANMATHA
16. – 4—SUN SHINE;
FIND FAULT
XXX
DOWN
1. – 6- NAME
OF SARASVATI AS WELL AS THE MOTHER OF ALL SCRIPTS IN INDIA AND SOUTH EAST ASIA
2. – – 7-
BLACK, COLLYRIYUM
3.– 4–ONE OF
THE DEMONS WHO HANG IN SHIVA’S EAR SINGING
4. –4—HAIR,
CURLY
5. – 8–MONKEY;
USED IN VALMIKI RAMAYANA
6. – 5–SIMILE
7. – 6–BUTTER
MILK IN SANSKRIT
8 – 8–KING OF ANGA DESA; FRIEND OF DASARATHA;
LTERALLY HIS NAME MEANS HAIRY LEGGED