Four Benefits of Breath control/ Pranayama! (Post No 2681)

_pranayam

Compiled  by london swaminathan

Date: 31 March,2016

 

Post No. 2681

 

Time uploaded in London :–  15-16

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

There are some slokas/couplets to explain the benefits and types of Yoga in Sanskrit. When one reads it in verse form, it is easily remembered and retained.

pranayama

1.Types of Breath Control (Pranayama):

Recaka – Exhalation

Puuraka – Inhalation

Kumbhaka – Retention

Suunyaka – only Retention

Recaka Puurakascaiva Kumbhaka Suunyakastathaa

Evam caturvidhah proktah Praanaayaamo maniishibhih

–Brhannaradiya Puranam

Xxx

2.Effects of Pranayama

Saanti – Peace

Prasaanti – Tranquility

Diipti – Splendour

Prasaada – Calmness

Prayojanaani catwaari  praanaayaamasca viddhi vai

Saanti Prasaantirdiipti sca prasaadasca cathustayam

Xxx

 

krishnamacharya-pranayama

3.Four types of Yoga

Mantrayoga,

Layayoga

Raajayoga

Hathayoga

Mantrayogo layascaiva raajayogastritiiyakah

Hathayogascaturthah syaat praaninaam mokshadaayakah

–Hatharatnaavali

Xxx

4.Krishna on True Yogi

Arjuna, he who looks on all as one, on the analogy of his own self, and looks upon he joy and sorrow with a similar eye – such a Yogi is deemed the highest of all (Bhagavad Gita 6-32)

Aatmaupamyena sarvatra samam pasyati yoarjuna

Sukham vaa yadi vaa dukham ca yogii pramo mathah (B G 6-32)

Xxx

113474-299x401-Pranayama4

5.Yoga is Difficult

Yoga is difficult of achievement for one whose mind is not subdued; by him, however, who has the mid under control, and is ceaselesley striving, it can be easily attained through practice. Such is my conviction ( B G 6-36)

Asamyataatmanaa yogo duspraapa ite me matih

Vasyaatatmanaa tu yatataa sakyo vaaptumupaayatah

-Bhagavad Gita 6-36)

–subham–

 

 

 

 

மகனைத் தியாகம் செய்து இளவரசனைக் காப்பாற்றிய வீரத்தாய்! (Post No 2680)

 

panna2 (2)

Written by london swaminathan

Date: 31 March,2016

 

Post No. 2680

 

Time uploaded in London :–  8-56 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

akbar7 (2)

ராஜஸ்தானில், மேவாரில் சங்க ராஜா என்ற ஒரு ரஜபுத்ர வீரன் ஆண்டுவந்தான். அவனுக்கு உதயசிம்மனென்ற சிறு குழந்தை இருந்தது. சங்கராஜா திடீரென்று இறந்துபோகவே, அரசவைப் பெரியோர்கள் கூடி, பான்பீர் என்னும் ஒரு இளவரசனை அழைத்து, உதய சிம்மன் பெரியவானாகும் வரை நீ நாட்டை ஆண்டு வா என்று உத்தரவிட்டனர்.

 

பான்பீர் முதலில் நன்றாகவே அரசாட்சி செய்து வந்தான். சில காலத்துக்குப் பின்னர் தானே மேவாருக்கு அரசனாக வேண்டும் என்ற பேராசை உண்டாயிற்று. உடனே பல வகைகளிலும் அரசாட்சியை நீட்டிக்கத் திட்டமிட்டான்.

 

 

பன்னா என்னும் தாதிதான் உதய சிம்மனைப் பாதுகாப்பாக வளர்த்து வந்தாள். அவளுக்கும் அதே வயதில் ஒரு குழந்தை இருந்ததால் இரண்டு குழந்தைகளையும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தாள். ரஜபுத்ரப் பெண்கள், அந்நாட்டு ஆண்களைப் போலவே வீரமிக்கவர்கள். அவளுக்கு பான்பீரின் துர்புத்தி நன்றாகத் தெரியும். உதய சிம்மனை சிறு வயதிலேயேக் கொல்ல, பான்பீர் திட்டமிட்டதும் அவளுக்குத் தெரியவந்தது. உடனே பாரி என்ற பெயருள்ள நாவிதனை வீட்டுக்குக் காவலாகப் போட்டாள்.

 

ஒருநாள் பான்பீர், வாளும் கையுமாக, பன்னாவின் வீட்டு வாயிலில் வந்து இறங்கினான். உடனே நாவிதன் பாரி, ஓடிப்போய் அவளிடம் தகவல் சொல்லவே, அவள் வீட்டின் பின்புறமாக உள்ளே நுழைந்து, தன் கையிலிருந்த பழக்கூடையில் ராஜகுமாரன் உதயசிம்மனை வைத்து பழக்கூடையை நாவிதனிடம் கொடுத்து ஊர்க்கடைசியிலுள்ள மரத்தடியில் காத்திருக்கச் சொன்னாள்.

 

வீட்டிற்குள் மீண்டும் வந்து, ராஜ குமாரனின் உடைகள், அணிகலன்களைத் தன் மகனுக்கு அணிவித்தாள்; பின்னர் கதவைத் திறந்துவிட்டாள். ஆவேசத்துடன் நுழைந்த பான்பீர், தொட்டிலில் அரசனுக்குரிய ஆடை அணிகலன்களை அணிந்திருக்கும் சிறுவன் தான் உதயசிம்மன் என்று எண்ணி ஒரே குத்தில் கொன்றுவிட்டான். உடனே பன்னா வீறிட்டழுதாள். அக்கம்பககத்திலுள்ள பெண்கள் ஓடிவந்து அரசன் பான்பீர் நிற்பதைப் பார்த்துவிட்டு, பயந்து பிரமையுடன் நின்றனர். அவன் கொக்கரித்துவிட்டு வெளி ஏறினான்.

தந்நாட்டு அரசகுமாரனைப் பாதுகாப்பதற்காக தன் மகனையே தியாகம் செய்த பன்னா, சிறிதும் தாமதியாமல் மரத்தடிக்கு ஓடிச் சென்று நாவிதனின் கையிலிருந்த கூடையை வாங்கினாள். அதிலுள்ள ராஜகுமாரனை அருகாமை நாட்டிலுள்ள சிற்றரசனிடம் ,நடந்த கதை அனைத்தும் கூறி, உதய சிம்மன் பெரியவனாகும் வரை பாதுக்காக்க வேண்டினாள்.

 

உதயசிம்மன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, நல்ல வாலிபப் பருவம் எய்திய பின்னர் முழுக் கதைகளையும் கேட்டறிந்து படை திரட்டிச் சென்று பான்பீரைக் கொன்றான். மேவாரின் ஆட்சியை மீண்டும் ஏற்றான்.

 

ஒரு தாதி, ரஜபுத்ர அரசனுக்கு விசுவாசமாக இருந்து தன் மகனையே தியாகம் செய்த கதையை ரஜபுத்ர கிராம மக்கள் இன்றும் கிராமம்தோறும் பாடிப்பரவி வருகின்றார்கள்.

அவள் ஒரு வீரத்தாய்!

வேதத்திலும், புறநானூற்றிலும் வரும் வீரத் தாய்கள் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். அவ்வரிசையில் காலத்தால் வெல்ல முடியாத பகழ் படைதுவிட்டாள் பன்னா என்னும் சாதாரணப் பணிப்பெண்!!!

–subam–

சூரிய கிரகணம் தந்த அறிவியல் வெற்றிகள்! (Post No.2679)

china-sequence_1559762b

Written by S NAGARAJAN

Date: 31 March 2016

 

Post No. 2679

 

Time uploaded in London :–  6-09 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பாக்யா 1-4-2016 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை

 

சூரிய கிரகணம் தந்த அறிவியல் வெற்றிகள்!

 

ச.நாகராஜன்

 

(This article is written for Bhagya Magazineby my brother S NAGARAJAN- londonswaminathan)

 eclipse solar

“கிரகணத்தின்போது சூரியனைப் பார்க்காமல் இருப்பது நல்லது”. – ஜெஃப் கோல்ட்ப்ளம்

 

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வந்து சூரிய ஒளி மறைக்கப்படுவதை சூரிய கிரகணம் என்கிறோம். 2016ஆம் ஆண்டில் மார்ச் மாதம் 9ஆம் தேதி இந்தியாவில் சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இதை ஒரு சில பகுதிகளில் மட்டுமே பார்க்க முடிந்தது.

 

 

சூரிய கிரகணம் பற்றி அறிவியலும் ஆன்மீகமும் ஒரு சேர ஆர்வம் கொண்டிருப்பது வியப்பான செய்தி.

சூரிய கிரகண காலத்தில் பொதுவாக பாரதம் முழுவதும் யாரும் உணவு உண்பதில்லை; பிரார்த்தனைக்கான நேரம் கிரகண காலம் என்பர்.

பொதுவாக சூரிய கிரகண காலத்தில் ஆளும் மன்னருக்கு ஆகாது என்பது உலக நாடுகள் பலவற்றிலும் நிலவி வரும் நம்பிக்கை.

கிரகணம் பற்றிய சில சுவையான அறிவியல், சமூக மற்றும் ஆன்மீகத் தகவல்களைப் பார்ப்போம்:

 

 

1919ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி உலகில் மிக முக்கியமான கிரகணம் ஒன்று ஏற்பட்டது. உலகின் மிக பிரபலமான மேதை ஐன்ஸ்டீனின் ரிலேடிவிடி தத்துவப் படி புவி ஈர்ப்பு விசை ஒளியை வளைக்க வேண்டும். முதல் உலக மகாயுத்தத்திற்குப் பிறகு பிரிட்டன் இந்த சூரிய ஒளி பற்றிய ஆய்வுக்கு இரு இடங்களைத் தேர்ந்தெடுத்தது. அங்கு பார்வையாளர்களை அனுப்பியது. சூரியனின் ஒளி தற்காலிகமாகத் தடைப்பட்ட போது வானவியல் விஞ்ஞானியான சர் ஆர்தர் எடிங்டனும் அவரது குழுவினரும் தொலைதூரத்திலுள்ள நட்சத்திரங்களிலிருந்து கிளம்பும் ஒளி சூரியனின் ஈர்ப்பு விசையால் வளைந்ததைக் கண்டனர், வியந்தனர். இதன் மூலம் ஐன்ஸ்டீனின் ரிலேடிவிடி கொள்கை சரியே என்பது நிரூபிக்கப்பட்டது.

 

 

இந்த கிரகணம் உலகின் மிக பிரம்மாண்டமான அறிவியல் கொள்கையை மெய்ப்பித்தது. ஒரே நாளில் உலகமே ஐன்ஸ்டீனைக் கொண்டாடியது.

 

 

1868ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதியன்று இந்தியாவில் ஒரு சூரிய கிரகணம் ஏற்பட்டது. வானவியல் நிபுணர் ஜூல்ஸ் ஜன்ஸென் (Jules Janssen) அப்போது தான் கண்டுபிடிக்கப்பட்டிருந்த ஸ்பெக்ட்ரோகிராப் கருவியைச் சூரியனை நோக்கித் திருப்பிப் பார்த்தார். சூரியனின் க்ரோமோஸ்பியரில் ஒரு அசாதாரண சிறப்பு அலைமாலையைக் (spectral signature) கண்டார். இது கிரகணத்தின் போது மட்டுமே காணப்பட்ட ஒரு நிகழ்வு. இதில் ஒரு புதிய மூலகத்தை அவர் கண்டு  பிடித்தார். ஆனால் இந்தக் கண்டுபிடிப்பை உலகம் லேசில் ஏற்கவில்லை. இது மிக மிக இலேசான வாயு. இதன் பெயர் தான் ஹீலியம். கிரேக்க புராணங்களில் வரும் சூரியனுக்கான பெயர் ஹீலியோஸ். அதிலிருந்து இந்தப் பெயர் இந்த வாயுவுக்குச் சூட்டப்பட்டது.

annular-eclipse

 

கிரகணத்தினால் அறிவியலுக்குக் கிடைத்த ஆதாயங்கள் இவை என்றால் பல சரித்திர சம்பவங்கள் கிரகணத்தின் பாதகமான விளைவுகளைச் சுட்டிக் காட்டுகின்றன!

 

 

முதலில் மஹாபாரதத்தை எடுத்துக் கொள்வோம். பீஷ்ம பர்வத்திலும் உத்யோக பர்வத்திலும் ஏராளமான வானவியல் குறிப்புகள் வருகின்றன.

 

 

மஹாபாரத யுத்தம் வருவதைச் சுட்டிக் காட்டும் மோசமான வானியல் நிகழ்வுகளில் முக்கியமான ஒன்று பதின்மூன்றாம் நாளே அமாவாசை வருவது.

 

 

ஒரு சந்திர கிரகணமும் அதைத் தொடர்ந்து ஒரு சூரிய கிரகணமும் வருவது உலகில் நடைபெறாத ஒரு சம்பவம். அத்தோடு கிரகங்கள் வக்கிர நிலையை அடைகின்றன. இவை அனைத்தும் உலகில் இதுவரை நிகழாத ஒரு மாபெரும் போர் நிகழ இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டும் நிகழ்வுகள்.

இதைத் தொடர்ந்து இன்னும் பல துர் சகுனங்களை மஹாபாரதம் விளக்குகிறது. ஆக, அசாதாரணமான இரு கிரகணங்கள் பெரும் போரை உலகில் விளைவித்ததை மஹாபாரதம் தெளிவாக்குகிறது.

 

 

அடுத்து மிகவும் சிக்கலான ஒரு கிரகணத்தை புனிதர்கள் மார்க், மாத்யூ, ல்யூக் ஆகியோர் பூடகமாக சுட்டிக் காட்டுகின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தன்று உலகம் இருளில் மூழ்கியது என அவர்கள் குறிப்பிடுகின்றனர். இது சூரிய கிரகண நிகழ்வா என்ற விவாதம் இன்றளவும் தொடர்கிறது. ஆனால் புனிதர் ஜான் இதைப் பற்றிக் குறிப்பிடவில்லை. வானியல் வல்லுநர்கள் கி.பி. 29ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி மத்திய கிழக்கில் ஒரு சூரிய கிரகணம் நிகழ்ந்ததையும் கி.பி. 33ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி ஒரு சந்திர கிரகணம் நிகழ்ந்ததையும் கணக்கிட்டுள்ளனர். இந்த நிகழ்வுகள் சிலுவையில் அறையப்படும் தினத்துடன் பொருந்தவில்லையே என்ற விவாதம் தொடர்வதால் சிலுவையில் ஏசு அறையுண்டதற்கும் கிரகணத்திற்கும் தொடர்பு உண்டா இல்லையா என்ற முடிவுக்கு வர முடியவில்லை.

total-solar-eclipse-2015-svalbard-totality

அடுத்து கொலம்பஸை கிரகணத்துடன் தொடர்பு படுத்தும் சுவையான நிகழ்வு ஒன்று உண்டு. புது நாடு காணப் புறப்பட்ட கொலம்பஸுக்கு வானியல் அறிவு நிறையவே உண்டு. வானில் உள்ள கிரக சஞ்சாரம், நட்சத்திர இயக்கம் ஆகியவற்றை வைத்தே அவர் தன் பயணத்தைத் தைரியமாக மேற்கொண்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது கப்பல் 1509 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி  ஜமைக்கா அருகே விபத்திற்குள்ளாக சுமார் எட்டு மாதங்கள் தன் குழுவினருடன் ஒரு தீவில் அவர் தங்க வேண்டி நேர்ந்தது. சாப்பாட்டிற்கு வழி?

 

 

அங்கிருந்த பூர்வகுடிகள் அவரது குழுவினருக்கு உதவ முன் வந்தனர். இதற்குக் காரணம் அவரது வானியல் அறிவு தான். அதன் மூலம் பூர்வ குடிகளின் தலைவனை அவர் மிகவும் கவர்ந்தார். ஆனால் இந்த இலவச சாப்பாடு தொடர்ந்து நடக்கவில்லை. ஆறு மாதங்கள் கழித்து ஒரு நாள் அவர்கள் உணவு கொடுப்பதை நிறுத்திக் கொண்டனர். தனது வானியல் அறிவால் கொலம்பஸ் அன்று சந்திர கிரகணம் ஏற்படுவதைக் கணக்கிட்டார்.பூர்வ குடியினரின் தலைவனை அழைத்த கொலம்பஸ் அவர்கள் தனது குழுவினருக்கு உணவு அளிப்பதை நிறுத்தி விட்டதால் கடவுளின் சாபம் அவர்கள் மீது ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அன்று சந்திரன் மறைந்தே போவான் என்றும் கூறினா. சற்று நேரத்தில் சந்திரனை முழுவதுமாகக் காணோம்!

 

 

 

பூர்வ குடிகளின் தலைவன் தன்னை மன்னிக்குமாறு கூறவே அதை கொலம்பஸ் கடவுளிடம் “எடுத்துச் சொல்லி” சந்திரனை சற்று நேரத்தில் மீட்டுக் கொண்டு வரவே தீவே ஒரே உற்சாகமயமாக ஆனது! கொலம்பஸ் குழுவினருக்கு உணவும் பூர்வ குடிகளுக்கு சந்திரனும் கிடைத்தன! இந்த உண்மை நிகழ்ச்சியை பல்வேறு எழுத்தாளர்கள் தங்கள் கதையில் பயன்படுத்தியுள்ளனர். குறிப்பிடத்தக்க ஒரு பிரபலமான நாவல் மார்க் ட்வெய்ன் எழுதிய ‘எ கனெக்டிகட் யாங்கி இன் கிங் ஆர்தர்ஸ் கோர்ட் (A Connecticut Yankee in King Arthur’s Court) என்ற நாவலாகும்!

 

 

இனி கிரகணத்தால் மன்னர்களுக்கு ஏற்பட்ட அபாயங்களைப் பார்ப்போம்.

 

Basic RGB

 

அறிவியல் அறிஞர் வாழ்வில்

மைக்கேல் ஷெர்மர் உலகப் பகுத்தறிவுக் கழகத்தின் தலைவர். விஞ்ஞானபூர்வமாக இல்லாத எதையும் நம்பக் கூடாது என்று வலியுறுத்தி வருபவர். இவரது கழகத்தில் சுமார் 55000 உறுப்பினர்கள் உள்ளனர். ஸயிண்டிபிக் அமெரிக்கன் பத்திரிகையில் 2001 ஏப்ரல் மாத இதழிலிருந்து பகுத்தறிவுப் பகுதியை எழுதி வருபவர் இவர்.இவரது பகுத்தறிவை ஆட்டுவிக்கும் ஒரு சம்பவம் இவரது திருமண தினமான 2014 ஜூன் 25ஆம் தேதியன்று நிகழ்ந்தது. அதை இவரே தனது ஸயிண்டிபிக் அமெரிக்கன் பத்திரிகை பகுதியில் பகிர்ந்து கொண்டது தான் சுவாரசியமான விஷயம்!

 

 

ஜெர்மனியைச் சேர்ந்த ஜென்னிபர் க்ராபை அவர் மணமுடிக்க முடிவு செய்தார். ஜென்னிபருக்கு அவரது தாத்தா என்றால் உயிர். ஆனால் அவரது 16ஆம் வயதில் அவரது தாத்தா மரணமடைந்தார்.  தாத்தா பயன்படுத்திய 1978ஆம் வருட பிலிப்ஸ் டிரான்ஸிஸ்டரை அவர் போற்றிப் பாதுகாத்து வந்தார்.

அது இயங்கவில்லை. எவ்வளவோ முயன்ற போதும் கூட அதை ரிப்பேர் செய்ய முடியவில்லை.

 

கல்யாண நாளன்று திடீரென்று அந்த ரேடியோ பாட ஆரம்பித்தது!

பகுத்தறிவுக் கழகத் தலைவர் அசந்து போனார். ஜென்னிபரும் அதே அளவு பகுத்தறிவுவாதி தான்!! அவரும் திகைத்தார். கூடியிருந்தோர் குதூகலப்பட்டனர்.

 

மணநாளன்று மட்டும் ஒலித்த அந்த ரேடியோ மறு நாளிலிருந்து இயங்கவில்லை.

தன் தாத்தா தன்னுடன் எப்போதும் இருக்கிறார் என்பதற்கான அடையாளம் அது என்கிறார் பகுத்தறிவுக் கொள்கையைக் கழட்டி  விட்ட ஜென்னிபர். ஆமாம் ஆமாம் அது உண்மையே என்கிறார் ஷெர்மரும்.

 

“என் பகுத்தறிவுக் கொள்கைக்குப் பலத்த அடி அது. எப்படி அந்த ரேடியோ ஒரே ஒரு நாளன்று மட்டும் அதுவும் ஜென்னிபரின் திருமண தினத்தன்று மட்டும் இயங்க முடியும். என்னால் நம்பவும் முடியவில்லை; விளக்கமும் கொடுக்க முடியவில்லை” என்று ஸயிண்டிபிக் அமெரிக்கன் இதழில் பகிரங்கமாக தன் நிலையை அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்!

அற்புதங்கள் என்றும் நிகழும்!

*********

In India Rain drops turn into Pearls and Rubies! (Post No.2678 )

rubies-article-8688364

Compiled by london swaminathan

Date: 30 March,2016

 

Post No. 2678

 

Time uploaded in London :–  18-43

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Arab writers praised India sky high; here are two notes:–

ruby_plain

India is a land where when rain falls it turns into pearls and rubies for those who have no ornaments; from here come musk camphor, amber and aloe wood, and various kinds of perfumes for those who require them; here grow all sweet smelling substances and nutmeg and andropogonnadus; here are found ivory and jai-phal, and aloe wood and sandal, and here is found in abundance the mineral tutia; here are found lions, leopards, elephants and bears; and here are found cranes and parrots, and peacocks and pigeons; and here grow the coconut tree and ebony tree and pepper plant; and here are made the unparalleled swords which need not be polished, and the lances which when wielded, large armies are routed; who can deny the excellence of such a land except fools?

Arabic writer Atharul Bilad, Al-Qazvini

1280-pearl-farming

Indians are the Most Advanced

The Indians are the first (most advanced), very large in number and belonging to a noble country. All the ancient peoples have acknowledged their wisdom and accepted their excellence in the various branches of knowledge. The kings of china used to call the Indian kings the kings of wisdom because of their great interest in sciences. The Indians, therefore according to all the nations throughout the ages had been the mines of wisdom, and the fountains of justice and administration. But on account of the great distance of india from our country, few of their compositions reached us. And, therefore only a small portion of their sciences was received by us.

 

We learnt of only a few of their scholars. In astronomy, for example there are three schools of thought in India

1.The school of Siddhanta

2.The school of Arjbar (Aryabhatta)

3.The school of Arkand (Khandakhadyaka)

But in spite of our efforts we received only the theory of Siddhanta. And this is the theory which is followed by a group of Muslim scholars who based their astronomical tables on it.

In music we have received from them the book called Yafar(?) it literally means ‘the fruits of wisdom’. It contains the principles of modulation and the collections of tunes. And what reached us of their science of ethics is the book “Kalila Wa Dimna’’(Panchatantra stories) which is widely known. And what reached us of their works on arithmetic is the one which has been collaborated by Abu Jafar Muhammed b. Musa al- Khawrizmi. This is the shortest process of calculation easiest to learn. It proves the sharp intelligence of Indians, their creative genius and their excellence in invention.

golden-pearls.jpg

Arabic writer Abu Mashar al –Balkhi

–subham–

 

“எங்க அப்பன் ஒரு கைநாட்டு, ஆனால் அவர் சிங்கம்டா!” (Post No 2677)

Jahangir_with_portrait_of_Akbar

Picture: Jehangir holding a portrait of his father Akbar.

Compiled by london swaminathan

Date: 30 March,2016

 

Post No. 2677

 

Time uploaded in London :–  8-39 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

மொகலாய மன்னன் ஜஹாங்கீர் எழுதிய நினைவுக் குறிப்பில், அவரது தந்தையான அக்பர் குறித்து எழுதியிருப்பது படிப்பதற்குச் சுவையாக இருக்கிறது. அதைப் படிக்கையில் அக்பர் பற்றிய உண்மையான சித்திரம் நம் மனக் கண்கள் முன் வருகிறது. இதோ ஜஹாங்கீரின் எழுத்துக்கள் – லண்டன் சுவாமிநாதன் மொழியாக்கத்தில், படியுங்கள்:–

 

“என் தந்தை எப்போதும் எல்லா மதங்களைச் சேர்ந்த கற்றறிந்த சான்றோர்களுடந்தான் இருப்பார். குறிப்பாக இந்திய பண்டிதர்களுடன்தான். அவர் ஒரு எழுத்தறியாத கைநாட்டு. ஆயினும் அறிஞர்களுடன் விவாதித்து நிறைய விஷயங்களை அறிந்திருந்தார். எல்லோருடனும் கலந்துரையாடுவார். யாருக்குமே அவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்பது தெரியாது. கவிதைகள், கட்டுரைகள் எல்லாவற்றையும் கேட்டறிந்திருந்ததால் அவரது குறை வெளியே தெரியவில்லை.

 

அவர் தோற்றத்தில் கொஞ்சம் குட்டைதான்; உயரமாக ஆசைப்பட்டார். ஆள் கோதுமை நிறம். கண்களும் புருவமும் கன்னங்கரேல் என்று நல்ல கறுப்பு. அவரை சிவப்பு என்று சொல்ல முடியாது. மாநிறம்தான். சிங்கம் போன்ற அகன்ற மார்பு; ஆஜானபாஹு (நீண்ட கைகள்). அவருக்கு இடது புற மூக்கில் ஒரு பெரிய மச்சம் சதை போல வளர்ந்திருந்தது. அரைப் பட்டாணி அளவுக்கு இருந்தபோதிலும் அவருடைய முகத்துக்கு அழகாகத்தான் இருந்தது. சாமுத்ரிகா லக்ஷணம் அறிந்தவர்கள் இது பேரதிர்ஷ்டத்தைத் தரும் என்று சொன்னார்கள். லட்சுமீகரமானது என்றனர். அவருடைய குரல் வளம் கம்பீரமாக இருக்கும். எதைப் பேசுவதிலும், விளக்குவதிலும் ஒரு தனி அழகு இருந்தது.

 

அவருடைய செயல்பாட்டில் அவர் ஒரு அசாதரண மனிதராகத் திகழ்ந்தார். அவருக்கு தெய்வத்தின் கடாக்ஷம் (இறை அருள்) கிடைத்தது. ராஜபோகத்தில் திளைத்தார்; பெரும் செல்வம் வைத்திருந்தார். போர்த்திறமை மிக்க பெரிய யானைகளையும், அராபிய குதிரைகளையும் வைத்திருந்தார். ஆயினும் கடவுளின் சிம்மாசனத்திற்கு முன்பாக ஒரு மயிரிழைகூட தவறு செய்ததில்லை. ஆண்டவனை ஒரு நொடிகூட மறந்தாரில்லை.

the-nav-ratna-of-akbar

எல்லா மதங்கள், வகுப்புகள், பிரிவுகள் ஆகியவற்றிலுள்ள நல்லோருடன் இணங்கினார். அவர்களுக்கு அருள் பாலித்தார். இரவு நேரத்தில் தூங்குவது குறைவு. பகலிலும் தூங்க மாட்டார். ஒரு நாளில் அவர் தூங்கியது ஒன்றரை ஜாமம்தான் (ஒரு இரவில் நான்கு ஜாமங்கள் உண்டு). இரவில் எவ்வளவு நேரம் விழித்திருப்பாரோ அவ்வளவுக்கு ஆயுள் அதிகரிக்கும் என்பது அவரது நம்பிக்கை. அவர் மிகவும் தைரிய சாலி. மதம்பிடித்த யானைகள் மீது துணிச்சலாக ஏறுவார். கொல்லவரும் யானைகளை அடக்குவார்.”

–ஜஹாங்கீர் நினைவுக் குறிப்பு

இந்த நூல் எது? – 1 (Post No.2676)

VectorToons.com

Written by S NAGARAJAN
Date: 30 March 2016

 

Post No. 2676

 

Time uploaded in London :–  8-04 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

தெரிந்து கொள்ள வேண்டிய நூல்

 

இந்த நூல் எது? – 1

.நாகராஜன்

 

QuestionMark

மாபெரும் மன்னன் இவன். பெரும் அறிவாளி. சகல கலா வல்லவன்.

சுமார் 84க்கும் மேற்பட்ட இவனது நூல்கள் உலகினரை பிரமிக்க வைப்பவை.

காதலை பிரதானமாகக் கொண்டு இவன் எழுதிய இந்த நூலுக்கு ஈடு இணை இல்லை.

அபிலாஷா, ஆகாங்க்ஷா, அபேக்ஷா, உத்கந்தா உள்ளிட்ட 64 வகைகள் காதலில் உண்டு.

இந்த 64 வகைகளில் ஒவ்வொன்றுக்கும் எட்டு வடிவங்கள் உண்டு.

 பரத முனிவரின் பரத சாஸ்திரத்தில் உள்ளது போல இவனது நூலிலும் 36 அத்தியாயங்கள் உள்ளன.

ரஸம் என்பது வாழ்க்கையின் பிரதானமான அம்சம். அதனால் தான் ரஸிகன் என்று  மனிதன் அழைக்கப்படுகிறான்.

சப்தம், அர்த்தம், சாஹித்யம் ஆகிய மூன்றிற்கும் இவன் தரும் விரிவான விளக்கங்கள் அற்புதமானவை.

சாஹித்யம் என்று எடுத்துக் கொண்டால் அதற்கான இலக்கணத்தை இவன் தரும் பாங்கே தனி! வாக்ய தர்மம் என்பதை எடுத்துக் கொண்டால் அதில் மட்டும் 48 வகை உண்டு.

அவற்றிற்கான இவனது விளக்கங்கள் அற்புதமானவை. சொற்களில் உள்ள தோஷங்கள் உள்ளிட்ட இவன் விளக்காத விஷயங்களே இல்லை.

கவிதையை அனுபவிக்கத் துடிப்பவர்கள் இவனது நூலைப் படித்த பின்னரே ஒரு கவிதையைத் தொட வேண்டும்.

சிருங்காரம் என்ற ரஸத்தைப் பிழிந்து அதன் சுவையை இவனைப் போல இன்னொரு கவிஞன் தந்ததில்லை என்பது மட்டும் உண்மை.

இவனது நூலைப் படிக்காதவர்களே இன்று திரைப்படத்தில் நாம் காணும்  மலினமான சில காதல் காட்சிகளை உருவாக்குகிறார்கள் என்றால் அது மிகையல்ல!

இந்திய நாட்டிற்கே, ஹிந்து தர்மத்திற்கே பெருமை தரும் இந்த மன்னன் எழுதிய நூலின் பெயர் என்ன?

  விடை: போஜ ராஜன் எழுதிய சிருங்கார ப்ரகாசா

–சுபம்–

 

 

“My father always………”- Jahangir about Akbar! (Post No.2675)

Jahangir_with_portrait_of_Akbar

Jahangir holding a portrait of Akbar.

Compiled by london swaminathan

Date: 29 March,2016

Post No. 2675

Time uploaded in London :–  16-36

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

akbarjahangir

“My father always associated with the learned of every creed and religion: especially the Pundits and the learned of India, and, although he was illiterate, so much became clear to him through constant intercourse with the learned and the wise, in his conversations with them, that no one knew him to be illiterate, and he was so well acquainted with the niceties of verse and prose compositions that his deficiency was not thought of.

 

In his august personal appearance he was of middle height, but inclining to be tall; he was of the hue of wheat; his eyes and eyebrows were black, and his complexion rather dark than fair; he was lion-bodied with a broad chest and his hands and arms long. On the left side of his nose he had a fleshy mole, very agreeable in appearance, of the size of half a pea. Those skilled in the science of physiognomy considered this mole a sign of great prosperity and exceeding good fortune. His august voice was very loud, and in speaking and explaining, had a peculiar richness.

 

In his actions and movements he was no like the people of the world and the Glory of God manifested itself in him.  Notwithstanding his kingship, his treasures, his fighting elephants and Arab horses he never by a hair’s breadth placed his foot beyond the base of humility before the Throne of God, and never for one moment forgot Him.

the-nav-ratna-of-akbar

He associated with the good of every race and creed and persuasion, and was gracious to all in accordance with their condition and understanding. He passed his nights in wakefulness, and slept little in the day. The length of his sleep during a whole night and day was not more than a watch and a half.  He counted his wakefulness at night as so much added to his life.  His courage and boldness were such that he could mount raging, rutting elephants and subdue to obedience murderous elephants.”

—Emperor Jehangir’s Memoirs

 

 

ஏப்ரல் 2016 காலண்டர் (மன்மத/துர்முகி ஆண்டு பங்குனி/சித்திரை) Post No.2674

 

hanuman raman

Compiled by london swaminathan

Date: 29 March,2016

 

Post No. 2674

 

Time uploaded in London :–  8-45 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

தாவரங்கள் பற்றிய 30 பழமொழிகள், இந்த மாத காலண்டரை அலங்கரிக்கின்றன.

 

முக்கிய நாட்கள்:-  8-யுகாதி/தெலுங்கு புத்தாண்டு,

14-தமிழ் புத்தாண்டு, 15-ஸ்ரீஇராமநவமி, 21-சித்திரா பவுர்ணமி.

ஏப்ரல் 20- மதுரை சித்திரைத் தேர், 22- கள்ளழகர், மதுரை வைகை ஆற்றில் இறங்குதல்.

முகூர்த்த நாட்கள்:-4, 25, 29, அமாவாசை:- 6/7, பௌர்ணமி:- 21

ஏகாதசி:- 3, 17/18 இம்மாத காலண்டரில் தாவரம் பற்றிய 30 பழமொழிகள் இடம்பெறுகின்றன.

 

raman full page

ஏப்ரல் 1 வெள்ளிக்கிழமை

அமாவாசையில் மழை பெய்தால், அரிசி விற்ற விலையில் நெல் விற்கும்.

ஏப்ரல் 2 சனிக்கிழமை

அணில் ஏறி, தென்னை மரம் அசையுமா?

ஏப்ரல் 3 ஞாயிற்றுக் கிழமை

அரச மரத்தைச் சுற்றிவிட்டு, அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம்.

ஏப்ரல் 4 திங்கட்கிழமை

அருகாகப் பழுத்தாலும் விளா மரத்தில் வெவ்வால் சேராது.

ஏப்ரல் 5 செவ்வாய்க்கிழமை

அறுக்க ஊறும் பூம்பாளை; அணுக ஊறும் சிற்றின்பம்.

 

arasamaram

 

ஏப்ரல் 6 புதன்கிழமை

ஆடிப் பட்டம் தேடி விதை; ஆடி வாழை தேடி நடு.

ஏப்ரல் 7 வியாழக்கிழமை

ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்து

ஏப்ரல் 8 வெள்ளிக்கிழமை

ஆள் அறிந்து ஆசனம் போடு; பல் அறிந்து பாக்குப் போடு

ஏப்ரல் 9 சனிக்கிழமை

ஆமணக்கும் பருத்தியும் அடர விதைத்தால் ஆகாது.

ஏப்ரல் 10 ஞாயிற்றுக் கிழமை

ஆலும் வேலும் பல்லுக்குறுதி.

 

ஆலமரம்

ஏப்ரல் 11 திங்கட்கிழமை

ஆவணி மருதாணி அடுக்காய்ப் பற்றும்

ஏப்ரல் 12 செவ்வாய்க்கிழமை

ஆவும் தென்னையும் அஞ்சு வருஷத்தில் பலன் ஈயும்

ஏப்ரல் 13 புதன்கிழமை

இலை சாய்கிற பக்கம் குலை சாயும்

ஏப்ரல் 14 வியாழக்கிழமை

எட்டடி வாழை, பத்தடி பனை, பதினாறடி தென்னை

ஏப்ரல் 15 வெள்ளிக்கிழமை

எட்டி மரமானாலும் பச்சை மரத்தை வெட்டாதே.

 

2மர விநோதம்

 

ஏப்ரல் 16 சனிக்கிழமை

எட்டு எள்ளுக்குச் சொட்டு எண்ணெய் எடுப்பான்.

ஏப்ரல் 17 ஞாயிற்றுக் கிழமை

எள்ளும் கரும்பும் இறுக்கினால்தான் பலன் கொடுக்கும்

ஏப்ரல் 18 திங்கட்கிழமை

ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும், தன் நாற்றம் போகாதாம் பேய்ச் சுரைக் காய்க்கு.

ஏப்ரல் 19 செவ்வாய்க்கிழமை

ஐப்பசி நெல் விதைத்தால் அவலுக்கும் ஆகாது

ஏப்ரல் 20 புதன்கிழமை

கத்தரிக்காய் வாங்க பூசணிக்காய் கொசுரா?

brinjal white

 

ஏப்ரல் 21 வியாழக்கிழமை

கத்தரிக்காய்க்கு காம்பு ருசி; வெள்ளரிக்காய்க்கு விதை ருசி.

ஏப்ரல் 22 வெள்ளிக்கிழமை

யானை வாயில் போன கரும்பைப் போல

ஏப்ரல் 23 சனிக்கிழமை

கரும்பில் எறும்பு இருந்தால் ஆனைக்கு என்ன?

ஏப்ரல் 24 ஞாயிற்றுக் கிழமை

காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்

ஏப்ரல் 25 திங்கட்கிழமை

கனியிருக்க காயைத் தின்பரோ?

BANANA HILL

ஏப்ரல் 26 செவ்வாய்க்கிழமை

காய்த்த மரம்தான் கல்லடி படும்

ஏப்ரல் 27 புதன்கிழமை

கேட்காத கடனும் பார்க்காத பயிரும் பாழ்

ஏப்ரல் 28 வியாழக்கிழமை

கொடிக்குக் காய் பாரமா?

ஏப்ரல் 29 வெள்ளிக்கிழமை

சாணி சுமப்பவளுக்கு சந்தனப் பூச்சு எதற்கு?

ஏப்ரல் 30 சனிக்கிழமை

சுண்டைக் காய் கால் பணம்; சுமைகூலி முக்கால் பணம்.

மே 1 ஞாயிற்றுக் கிழமை

–சுபம்–

 

 

 

சந்திரனில் கடைசியாக நடந்த மனிதன்! (Post No.2673)

Apollo_17_Cernan_on_moon

Written by S NAGARAJAN ( for Bhagya Magazine)

Date: 29 March 2016

 

Post No. 2673

 

Time uploaded in London :–  8-05 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பாக்யா அறிவியல் துளிகள் தொடரில் 25-3-2016 இதழில் வெளி வந்த கட்டுரை

 

 

சந்திரனில் கடைசியாக நடந்த மனிதன்!

 

ச.நாகராஜன்

apollo 17,schmidt

“சந்திரனில் நின்று முதலில் பூமியைத் திரும்பிப் பார்த்த போது நான் அழுதேன்” – விண்வெளி வீரர் ஆலன் ஷெப்பர்ட்

 

நீல் ஆர்ம்ஸட் ராங் சந்திரனில் முதன் முதலாகக் கால் பதித்தவுடன் சந்திரப் பயணம் ஆரம்பித்தது. இது சூடு பிடித்து பல பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.

 

ஆனால் அமெரிக்க விண்வெளி வீரரான செர்னான் சந்திரனில் கால் பதித்து 44 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இதுவரை யாரும் சந்திர பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை.

இதுவரை மொத்தம் பன்னிரண்டு பேர் சந்திரனில் இறங்கியுள்ளனர்.

 

 

இவர்களில் யாரும் ஒரு தடவைக்கு மேல் சந்திரனில் இறங்கவில்லை என்பதும் ஒரு சுவாரசியமான செய்தி தான்!

அபல்லோ 11

 

1969ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி நீல் ஆர்ம்ஸ்ட் ராங் சந்திரனில் இறங்கி பெரும் சாதனையைப் படைத்தார். இவரைத் தொடர்ந்த் பஸ் ஆல்ட் ரின் (Buzz Aldrin)  அங்கு இறங்கினார். அவர்கள் அமெரிக்க கொடியை அங்கு நாட்டினர். பத்திரமாக பூமிக்குத் திரும்பினர்.

அபல்லோ 12

இந்தக் கலத்தில் சென்றவர்கள் பீட் கான்ராட் மற்றும் ஆலன் பீன் (Pete Conrad & Alan Bean) இவர்கள் இருவரும் 1969ஆம் ஆண்டு நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய இரு நாட்கள் அங்கு இருந்தனர்.

 

அபல்லோ 13

இதில் சென்றவர் யாரும் சந்திரனில் இறங்கவில்லை. ஆக்ஸிஜன் டேங்க் ஒன்று வெடிக்கவே கலம் பெருத்த அபாயத்திலிருந்து தப்பியது.

 

அபல்லோ 14

இதில் பயணப்பட்ட ஆலன் ஷெப்பர்ட் மற்றும் எட்கர் மிட்செல்  (Alan Shepard & Edgar Mitchell) 1971ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் நாளன்று சந்திரனில் இறங்கினர். இதில் ஷெப்பர்ட் கோல்ப் பந்துகளை இரு முறை அடித்துப் பார்த்தார்.

 

அபல்லோ 15

இந்தக் கலத்தில் சென்ற டேவிட் ஸ்காட் மற்றும் ஜேம்ஸ் இர்வின் (David Scott & James Irwin) ஆகிய இருவரும் 1971 ஜூலை 31ஆம் தேதி சந்திரனில் இறங்கினர். மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்த பின்னர்  ஆகஸ்ட் 2ஆம் நாளன்று பூமிக்குப் பத்திரமாகத் திரும்பினர். பதினெட்டரை மணி நேரம் இவர்கள் கலத்தின் வெளியே இருந்து லூனார் ரோவரை இயக்கிப் பார்த்தனர்.  சுமார் 77 கிலோ எடையுள்ள சந்திரக் கற்களையும் இவர்கள் பூமிக்குக் கொண்டு வந்தனர்.

 

அபல்லோ 16

இந்தக் கலத்தில் பயணித்த ஜான் யங் மற்றும் சார்லஸ் ட்யூக் (John Young & Charles Duke) ஆகிய இருவரும் சந்திரனில் வெற்றிகரமாக இறங்கினர். 1972ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதியிலிருந்து 23ஆம் தேதி முடிய மூன்று நாட்கள் இவர்கள் அங்கு இருந்தனர். சுமார் 71 மணிகள் அங்கிருந்த இவர்கள் மூன்று சந்திர நடைப் பயணத்தை மேற்கொண்டனர். சுமார் 20 மணி 14 நிமிடங்கள் இந்த நடைப் பயணம் நீடித்தது. இவர்கள் லூனார் ரோவரை 26.7 கிலோமீட்டர் இயக்கினர்.

apollo-17

Apollo 17 was the sixth and last Apollo mission in which humans walked on the lunar surface. On Dec. 11, Lunar Module Pilot Harrison H. Schmitt and Commander Eugene A. Cernan, landed on the moon’s Taurus-Littrow region in the Lunar Module, while Command Module Pilot Ron Evans continued in lunar orbit.

அபல்லோ 17

இந்தக் கலத்தில் ப்யணித்த யூஜீன் செர்னான் மற்றும் ஹாரிஸன் ஷ்மிட் (Eugene Cernan & Harrison Schmitt) ஆகிய இருவர் தான் சந்திரனில் கடைசியாக இறங்கிய மனிதர்கள். இவர்களுக்குப் பின்னர் இது வரையிலும் யாருமே சந்திரனுக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை. அபல்லோ 17 விண்கலம் 1972 டிசம்பர் 11ம் தேதி சந்திரனில் இறங்கியது. இந்த சந்திரப் பயணிகள் டிசம்பர் 19ஆம் தேதியன்று பூமிக்குப் பத்திரமாகத் திரும்பினர். மூன்று நாட்கள் இவர்கள் சந்திரனில் இருந்தனர். கலத்தின் மொத்தப் பயண நாட்கள் 12. சந்திரனை விட்டுக் கிளம்பும் முன்னர் செர்னான் தனது மகள் ட்ரேஸியின் இனிஷியல்களை சந்திரனில் எழுதினார். அங்கு காற்றோ மழையோ பெய்யாது என்பதினால் இன்று வரை அந்தப் பெயரின் முதலெழுத்துகள் அங்கு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

சுமார் 566 மணிகள் 15 நிமிடங்கள் விண்வெளியில் கழித்திருக்கும் செர்னான் 73 மணிகள் சந்திரனில் இருந்திருக்கிறார் என்பது ஒரு தனிப் பெருமையாகும்.

 

சந்திரனில் கடைசியாக இறங்கிய மனிதர் என்ற பெருமைக்குரிய செர்னான் தனது பயண அனுபவத்தை ‘தி லாஸ்ட் மேன் ஆன் தி மூன் (The Last Man on the Moon) என்ற டாகுமெண்டரி படத்தில் சுவைபடச் சொல்லியுள்ளார். இந்தப் படம் 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதியன்று அமெரிக்க தியேட்டர்களில் வெளியிடப்பட்டது.

“சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு பையன் கனவிலும் நினைக்க முடியாத் ஒரு பயணத்தை மேற்கொண்ட கதை இது”” என்கிறார் இந்தப் படம் பற்றி செர்னான்.

 

இந்தப் படம் தயாரிக்க சுமார் ஐந்து ஆண்டுகள் பிடித்தன. இதில்  செர்னான் எப்படி ஒரு விண்வெளி வீரர் கடினமான பயிற்சிகளைப் பெறுகிறார் என்பதை விளக்குகிறார். ஒரு விண்வெளி வீரர் தனது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடவே முடியாது என்பதை வருத்தத்துடன் பதிவு செய்யும் அவர், “ஏனெனில் ஒரு விண்வெளி வீரர் வாரத்திற்கு எட்டு நாட்கள் வேலை செய்யவேண்டியிருக்கிறது” என்று நகைச்சுவையுடன் வேலைப்பளு பற்றிக் குறிப்பிடுகிறார்.  இந்தப் படம் விண்வெளி ஆர்வலர்களுக்கு பிடித்த படமாக இருப்பதோடு அடுத்து சந்திரனுக்கு ஒரு மனிதன் பயணப்பட வேண்டும் என்ற ஆசையையும் உருவாக்கியுள்ளது.

 

einstein

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

வெள்ளலூர் அண்ணாசாமி சுந்தரம் மகாத்மா காந்திஜியின் தொண்டர்களுள் ஒருவர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிகுந்த ஈடுபாடுடன் கலந்து கொண்ட அவரை காந்திஜி சுதந்திர இயக்கச் செய்திகளை மேலை நாடுகளில் பரப்புமாறு பணித்தார். இந்த ஆணையை சிரமேற்கொண்ட சுந்தரம் ஏழு மாத காலம் மேலை நாடுகளில் பயணித்தார். அப்போது பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனையும் சந்தித்து மஹாத்மாவின் அஹிம்சைப் போராட்டம் பற்றி விளக்கினார். இதனால் பெரிதும் கவரப்பட்ட ஐன்ஸ்டீன் காந்திஜிக்கு ஒரு கடிதம் எழுதி அதை சுந்தரத்திடம் கொடுத்து காந்திஜியிடம் சேர்ப்பிக்குமாறு வேண்டினார்.

அதில் காந்திஜியின் அஹிம்சா வழியை பாராட்டியதோடு, “ஒரு நாள் உங்களை நேரில் சந்திக்க முடியும் என்று  நம்புகிறேன்” என்று ஐன்ஸ்டீன் எழுதியிருந்தார். (I hope that I will be able to meet you face to face some day.)

 

இதைப் பார்த்து மகிழ்ந்த காந்திஜி தனது கொள்கைகளை ஐன்ஸ்டீன் ஏற்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து 18-10-1931 தேதியிட்ட கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பினார். அதில் ஐன்ஸ்டீன் தெரிவித்திருந்த விருப்பத்தை வரவேற்று, “நானும் உங்களை நேருக்கு நேர் சந்திக்க விரும்புகிறேன், அதுவும் இந்தியாவில் என் ஆசிரம்த்தில்” (I do indeed wish that we could meet face to face and that too in India at my Ashram.)  என்று எழுதி அனுப்பினார்.

 

ஆனால் இருவரும் நேரில் சந்திக்க முடியவே இல்லை! மனதால் இணைந்தனர் மஹாத்மாவும் மாபெரும் விஞ்ஞானியும்!

******

It is a silly fish that is caught twice with the same bait (Post No.2672)

Work-Experience

April, 2016 Good Thoughts Calendar

Compiled by london swaminathan

 

Date: 28 March 2016

 

Post No. 2672

 

Time uploaded in London :– 9-47 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

30 Proverbs and Sayings on ‘EXPERIENCE’

Compiled by london swaminathan

Date: 28 March,2016

 

Post No. 2672

 

Time uploaded in London :–  9-25 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

Festivals in April, 2016: 8th April-Telugu New Year Day/Ugadi/Vasanta Navaratri begins; 14th – Tamil New Year(Durmukhi) Day, 15th – Ram Navami, 21st – Chitra Pournami; April  20 – Madurai Ratotsavam

 

 

 

Auspicious Days:  4,  25, 29;

 

Full Moon/Purnima- 21

 

New Moon/Amavasya- 6/7

 

Ekadasi Fasting Days: 3, 17/18

 

 customer-experience_1

April 1 Friday

Drawing skills improve by the constant use of hand, Tamil skill improves by the constant use of tongue (speaking)- Tamil Proverb

 

 

April 2 Saturday

The more you sing, the more your voice improves, the more you cover your disease, the more it grows – Tamil Proverb

 

April 3 Sunday

The more you strike, even the grinding stone moves – Tamil Proverb

 

April 4 Monday

Even an ant can make a line on the stone by constantly using it – Tamil proverb

  

April 5 Tuesday

Experience is the mother of wisdom

 ant

April 6 Wednesday

Trouble brings experience and experience brings wisdom

 

April 7 Thursday

Experience without learning is better than learning without experience

 

April 8 Friday

Knowledge without practice makes but half an artist

 

April 9 Saturday

The person who kills 1000, is half a doctor (kills means treats here)

 

April 10 Sunday

An ounce of practice is worth a pound of precept.

 ounce

 

April 11 Monday

Practice makes perfect

 

April 12 Tuesday

Custom makes all things easy.

 

April 13 Wednesday

Experience is the best teacher

 

April 14 Thursday

By writing you learn to write

 

April 15 Friday

Experience is the mistress of fools

 

April 16 Saturday

Once bitten, twice shy

 

April 17 Sunday

The burnt child dreads the fire

 

April 18 Monday

A cat that knows what is hot – Tamil proverb

 

April 19 Tuesday

He that has been bitten by a serpent, is afraid of a rope.

 

April 20 Wednesday

Let another’s ship wreck be your sea-mark

 shipwreck

April 21 Thursday

It is good to learn at other men’s cost

April 22 Friday

It is a silly fish that is caught twice with the same bait

 

April 23 Saturday

You can do a mistake; but you repeat the same mistake, I wont tolerate it – My Editor A N Sivaraman to us in Madurai Dinamani Desk.

 

April 24 Sunday

He that deceives me once, shame fall him; if he deceive me twice, shame fall me.

 

April 25 Monday

In Tamil Chettiyar community, they never write ‘loss Rs100’, but write ‘lesson learnt Rs100’ instead (in their accounts book; Budhi Kolmuthal in Tamil)

 Live-Fishing-Worms-as-Bait

April 26 Tuesday

He that stumbles twice over one stone, deserves to break his shins.

 

April 27 Wednesday

In war, it is not permitted twice to err.

 

April 28 Thursday

Turn your wounds into wisdom –Oprah Winfrey

 

April 29 Friday

Failure is the condiment that gives success its flavour (Failure is the first step to success- Tamil Proverb)

 

April 30 Saturday

People never learn anything being told, they have to find out for themselves – Paulo Coelho

 

Condiments-31-39

–subham–