இருபதாயிரம் தமிழ் பழமொழிகள்

 

தமிழ் மொழி மிகவும் வளமான மொழி. உலகிலேயே அதிகமான பழமொழிகள் இதில் தான் இருக்கின்றன. சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்னர் மூன்று ஆங்கிலேயர்கள் 19,000க்கும் மேலான பழமொழிகளைத் தொகுத்து ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளியிட்டனர். சம்ஸ்கிருதத்தில் சுபாஷிதங்கள் எனப்படும் பாடல் வகை நீதிக் களஞ்சியம், தனிப்பாடல்கள் இருபதாயிரத்தும் மேலாக இருக்கின்றன. ஆயினும் தமிழ் மொழிதான் பழமொழித் தொகுப்பில் உலகில் முன்னிலையில் நிற்கிறது.

வெள்ளைக்கரகள் தொகுப்பதற்கு முன்னரும் தமிழ் மொழியில் பழமொழித் தொகுப்பு இருந்தது. இதை பெர்சிவல் என்பவரே தன் நூல் முகவுரையில் குறிப்பிடுகிறார். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் பெருமான் பழ மொழிகளைக் கொண்டே சிவன் மீது ஒரு பதிகம் பாடிவிட்டார். அதற்கு முன்னர் முன்றுரை அரையனார் என்பார் பழமொழி 400 என்ற தொகுப்பில் 400 வெண்பாக்களையும் பழமொழிகளைக் கொண்டு முடிக்கிறார். இப்படி ஒரு நூல் உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை. இதிலும் தமிழுக்கே முதலிடம்!! கம்பன், தன் ராமாயணத்தில் நிறைய பழமொழிகளைக் கையாளுகிறான்.

பழமொழி என்பது என்ன? ஒரு சமூகத்தின் பழங்கால ஞானம், அறிவு ஆகியன ரத்தினச் சுருக்கமாக பேச்சு நடையில் வெளிப்படும் ஒரு சொற்றொடர். தமிழ் பழமொழிகள் பேசாத பொருளே இல்லை. ஆகையால் தமிழ் பழமொழிகளை இந்த சமூகத்தின் கலைக்களஞ்சியம் என்று கூறலாம்.

தனிப்பாடல்கள், சங்க இலக்கியப் பாடல்கள் அல்லது திருக்குறள் போன்ற நீதிநெறி இலக்கியப் பாடல்கள் கற்றோருக்கு மட்டுமே தெரியும். ஆனால் பழமொழிகளோ  எனில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கும் தெரியும். கிராமப் புறப் பெண்களின் வாயில் பழமொழிகள் புகுந்து விளையாடும். சண்டை சச்சரவானாலும் சரி, பொழுதுபோக்கு அரட்டைக் கச்சேரியானாலும் சரி, கிண்டல், வேடிக்கையானாலும்சரி எல்லா இடங்களிலும் சரளமாகப் புழங்கும்

ஆயிரக கணக்கான ஆண்டு அனுபவம், பழமொழிகளில், எதுகை மோனையுடன் வரும் நாலைந்து சொற்களில் அடங்கிவிடும்

 

யானை பற்றி நூறு பழமொழிகள்

யானை பற்றி மட்டுமே நூற்றுக்கும் மேலான பழமொழிகள் கிடைத்திருக்கின்றன. பறவைகளில் காகமும், பிராணிகளில் யானையும் தமிழர்களை மிகவும் கவர்ந்துவிட்டதன. ஆனை வரும் பின்னே, மணி ஓசைவரும் முன்னே, ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன், யானை உண்ட விளாங்கனி போல, யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளும், யானைக்கும் கூட அடி சறுக்கும்— இப்படி நூற்றுக்கும் மேலாகப் படிக்கலாம்

சமயம், பெண்கள், பண்புகள், உணவு, மருத்துவம், பழக்க வழக்கங்கள், மிருகங்கள், தாவரங்கள், ஜாதிகள், அரசு, தொழில்கள், சோதிடம், அறிவியல், வானசாத்திரம், பருவநிலை, விவசாயம்—இப்படி ஏராளமான விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். 20,000 பழமொழிகள் ஒவ்வொன்று பற்றியும் ஆராய்ந்து தனித் தனி கட்டுரை எழுதலாம். சில பழமொழிகளுக்கு நேரிடையான பொருளும் எதிர்ப்பத பொருளும் கிடைக்கும்.

முதல் முதலில் ரெவரண்டு பெர்சிவல் என்பவர் 1842 ஆம் ஆண்டு 2000-க்கும் குறைவான பழமொழிகளுடன் ஒரு புத்தகம் வெளியிட்டார். பின்னர் அவரே 1877 ல் மூன்றாம் பதிப்பை வெளியிட்ட போது அதில் 6156  தமிழ் பழமொழிகள் இருந்தன. அவர் தொகுப்பில் விட்டுப் போன பழமொழிகளாக எடுதுத் தொகுத்து 9415 பழமொழிகளுடன் ஜான் லசாரஸ் என்பவர் 1894ல் வெளியிட்டார். பின்னர் ரெவரண்ட் ஹெர்மன் ஜென்சன் என்பவர் 1897ம் ஆண்டில் 3644 பழமொழிகளுடன் இன்னும் ஒரு நூலை வெளியிட்டார். இவற்றைத் தொகுத்தவர்கள் ஆங்கிலேயர்கள். அவர்களுக்கு இதன் பொருளை விளக்கியதில் நம்மவரின் பங்கே அதிகம் அதுமட்டுமல, நம்மவர்களும் பழமொழிகளைத் திரட்டித் தந்தனர். இந்த 3 புத்தகங்களும் தமிழ் பழமொழிகளின் ஆங்கில மொழி பெயர்ப்புகளுடன் வந்தன.

சமயம் பற்றிய பழமொழிகள் (பழமொழிகளில் இந்து மதம் என்ற என் கட்டுரையைப் படிக்கவும்):

தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் (நரசிம்மாவதாரம் கதை), எல்லாம் அவன் செயல், நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும், தலைக்கு வந்தது தலைப் பாகையுடன் போனது (கர்ணன் கதை) இப்படி மதம் தொடர்பாக நூற்றுக் கணக்கில் பழமொழிகள் உண்டு.

 

சோதிடப் பழமொழிகள்

ஓடிப் போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு, அகப் பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி,முப்பது ஆண்டு வாழ்ந்தவனும் இல்லை, முப்பது ஆண்டு தாழ்ந்தவனும் இல்லை (சனிக் கிரகத்தின் சுழற்சி), பரணி தரணி ஆள்வான், அவிட்ட நட்சத்திரக் காரனுக்கு தவிட்டுப் பானை எல்லாம் தங்கம்—இப்படி நிறைய சோதிட பழமொழிகள் .

ஆயிரக் கணக்கான ஆண்டுகளில் ஒரு சமுதாயம் சம்பாதித்த அனுபவம் எல்லாவற்றையும் பழரசமாகப் பிழிந்து கொடுப்பது போன்றது பழமொழி.

பெண்களுக்கும் ஜாதிகளுக்கும் ஆதரவாகவும் எதிராகவும் பழமொழிகள் கிடைக்கின்றன. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே, பெண் என்றால் பேயும் இரங்கும், பெண் பாவம் பொல்லாதது, பெண் புத்தி பின் புத்தி இப்படி எதிரும் புதிருமாகப் படிக்கலாம்.

ஆலும் வேலும் பல்லுக் குறுதி, வறுத்த பயற்றை விடாதே, சுட்ட எண்ணெயைத் தொடாதே, உடம்பைக் கடம்பால் அடி, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம், சுப்பிரமணியத்துக்கு மேல் தெய்வமும் இல்லை, சுக்குக்கு மேல் மருந்தும் இல்லை, மருந்தே ஆயினும் விருந்தோடு உண்— இப்படி நூற்றுக் கணக்கான மருத்துவப் பழமொழிகள்.

ஆடிப் பட்டம் தேடி விதை, எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை பெய்யும் என்பன பருவ நிலை, விவசாயம் பற்றிப் பேசும்.

தாய்க்குப் பின் தாரம் என்று சினிமாப் பட தலைப்புகளில் கூட பழமொழி இடம்பெறும்

 

இரு பொருள்படும் பழமொழிகள்

சில பழமொழிகளுக்கு இன்றுவரை அர்த்தமே தெரியவில்லை. இன்னும் சில பழமொழிகளுக்கு இருவேறு விதமாகப் பொருள் சொல்லலாம். தனக்கு மிஞ்சித்தான் தான தருமம் என்று ஒரு பழமொழி. இது தன் சக்திக்கும் அப்பால் போய் ஒருவர் செய்வதே தானம் என்பாரும் உளர்; தனக்குப் பின் மிஞ்சிப் போனதைக் கொடுப்பதே தானம் என்பாரும் உளர். ஆக இது போன்ற பழமொழிகளுக்கு அவரவர் விருப்பப்படி வியாக்கியானம் செய்யலாம்!!

உலகில் எல்லா மொழிகளிலும் பழமொழிகள் இருக்கும். சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்பதோடு அதைப் பேச்சு மொழியில் சுவைபடச் சொல்லுவதே இதன் இலக்கணம். தமிழ் மொழியில் இது உச்சநிலையை எட்டி, தமிழுக்குத் தனிப் பெருமையை ஈட்டித் தந்துள்ளது.

***************

பெண்களின் 64 கலைகள்!

Picture: Sixty Four Arts, Orissa Pata Chitra

ச.நாகராஜன்

ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்

ஏய உணர்விக்கும் என் அம்மை- தூய

உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே

இருப்பள் வாராதிங்கு இடர்.

 

எழிலரசிகளாக விளங்கியவர்கள் தொழிலரசிகளாகவும் விளங்கியுள்ளனர். ஆயிரக்கணக்கான பாரதப் பெண்களின் மகிமையைச் சித்தரிக்கும் வரலாற்று நூல்கள் நம்மிடம் இல்லை என்பது தான் பரிதாபம்.

(நம்முடைய மஞ்சளை பேடண்ட் (patent) எடுக்கும் அளவு பிற நாடுகள் உரிமை கோரும் இந்தக் காலத்தில் செகுலர் அரசை நம்பாமல் நமது கலைகளைப் பற்றிய அறிவை நமது பெண்மணிகள் கற்பதோடு அவற்றைப் பரப்ப முன்வருவார்களா? வரவேண்டும்!)

இன்றைய நவீன யுகத்தில் பெண்கள் மிகவும் ஆவலுடன் தேர்ந்தெடுத்து நிபுணத்துவம் பெறும் கலைகள் ஏராளம். ஆனால் இவை எல்லாம் முன்பே நமது பழைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன என்றால் ஆச்சரியமாக இல்லை? அது மட்டுமல்ல, இவற்றில் எப்படி பாண்டித்தியம் பெறுவது என்பதை விளக்கமாகக் கூறும் நூல்கள் சுவடிகளாக ஆயிரக்கணக்கில் உள்ளன.

இப்படி, பெண்களின் கலைகளாக 64 கலைகளை நமது பழைய நூல்கள் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளன. இன்று பெண்கள் ஆர்வம் காட்டுவனவற்றை அவர்கள் ஆங்கில மொழி வாயிலாகக் கற்பதால் எளிதில் புரிந்து கொள்வதற்காக ஆங்கிலத்தில் குறிப்பிடப் புகுந்தால் கீழ்க்கண்டவற்றை உடனே குறிப்பிடலாம்: டான்ஸ் (ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நடனங்கள்), கொண்டை அலங்காரம் உள்ளிட்ட ப்யூடி பார்லர், ஜெம்மாலஜி, ஆர்கிடெக்சர், டெக்னிகல் ஸ்டடீஸ், ஸ்டோரி டெல்லிங், இன்டீரியர் டெகொரேஷன், குக்கிங் வெரைட்டீஸ், கார்டனிங், கால் சென்டர், மேக்-அப் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

லலிதா சஹஸ்ரநாமத்தில் 236-வதாக வரும் நாமமான சதுஸ்சஷ்டி கலாமயி என்ற நாமம் 64 கலைகளின் ரூபமாக இருப்பவள் லலிதாம்பிகை என்று குறிப்பிடுகிறது. ரிக் வேதத்தில் பாஞ்சால மஹரிஷி இந்த 64 கலைகளைப் பற்றி முதன்முதலாகக் குறிப்பிடுகிறார். ஆக உலகின் ஆதி நூலான வேதத்திலேயே 64 கலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்! பெண்களுக்குரிய 64 கலைகளை விரிவாகக் கல்ப சூத்திரம் குறிப்பிட்டுள்ளது. (வாத்ஸாயனர் மஹரிஷி வேறு காமசூத்திரத்தில் பெண்களுக்குரிய 64 கலைகளைப் பட்டியலிட்டுள்ளார்!)

கல்பசூத்திரம் குறிப்பிடும் 64 கலைகள் வருமாறு:-

1) நாட்டியம் 2) ஔசித்யம் 3) ஓவியம் 4) வாஜித்ரம் 5) மந்திரம் 6) தந்திரம் 7) தனவ்ருஷ்டி 8) கலா விஹி 9) சம்ஸ்க்ருத வாணி 10) க்ரியா கல்பம் 11) ஞானம் 12) விஞ்ஞானம் 13) தம்பம் 14) ஜலஸ்தம்பம் 15) கீதம் 16) தாளம் 17) ஆக்ருதி கோபன் 18) ஆராம் ரோபன் 19) காவ்ய சக்தி 20) வக்ரோக்தி 21) நர லக்ஷணம் 22) கஜ பரிட்சை 23) அசுவ பரிட்சை 24) வாஸ்து சுத்தி 25) லகு வ்ருத்தி 26) சகுன விசாரம் 27) தர்மாசாரம் 28) அஞ்சன யோகம் 29) சூர்ண யோகம் 30) க்ருஹி தர்மம் 31) சுப்ரஸாதன் கர்ம 32) சோனா சித்தி 33) வர்ணிக வ்ருத்தி 34) வாக் பாடவ் 35) கர லாகவ் 36) லலித சரண் 37) தைல சுரபீகரண் 38) ப்ருத்யோபசார் 39) கோஹாசார் 40) வியாகரணம் 41) பர நிராகரண் 42) வீணா நாதம் 43) விதண்டாவாதம் 44) அங்கஸ்திதி 45) ஜனாசார் 46) கும்ப ப்ரம 47) சாரி ஸ்ரமம் 48)) ரத்னமணி பேதம் 49) லிபி பரிச்சேதம் 50) வைக்ரியா 51) காமா விஷ்கரண் 52) ரந்தன் 53)கேஸ பந்தன் 54) ஷாலி கண்டன் 55) முக மண்டன் 56) கதா கதன் 57) குஸ¤ம க்ரந்தன் 58) வர வேஷ 59) சர்வ பாஷா விசேஷ 60) வாணிஜ்ய விதி 61) போஜ்ய விதி 62) அபிதான பரிஞான் 63) ஆபூஷண தாரண் 64) அந்த்யாக்ஷ¡ரிகா

இவற்றில் பொருள் விளங்காமல் இருக்கும் கலைகளைப் பற்றி மட்டும் இங்கு ஓரிரு வரிகளில் அர்த்தத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

ஔசித்யம் என்றால் சரியானவற்றை, தகுந்தவற்றைத் தேர்ந்தெடுக்கும் அறிவு . இந்த ஒரு கலையிலேயே ஷாப்பிங்கில் பொருள்களைத் தேர்ந்தெடுப்பது முதல் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது வரை எல்லாமே அடங்கி விடும்! வாஜித்ரம் என்றால் வாத்ய யந்திரங்களைப் பற்றிய அறிவாகும் க்ரியா கல்பம் என்றால் இன்ன வியாதி தான் வந்திருக்கிறது என்று முடிவாக நிர்ணயம் செய்வதற்கான வழி முறைகள் பற்றிய அறிவு. ஆக்ருதி கோபன் என்றால் முக பாவங்களை மறைத்தல். ஆராம் ரோபன் என்றால் நந்தவனம் தோட்டம் உபவனம் ஆகியவற்றை உருவாக்கும் அறிவு. நர லக்ஷணம் என்றால் ஆண்கள் மற்றும் பெண்களின் சாமுத்ரிகா லக்ஷணத்தைப் பற்றிய அறிவு.

கஜ பரிட்சை என்றால் எட்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ள யானைகளைப் பற்றிய அறிவு. அசுவ பரிட்சை என்றால் பத்து வகையான குதிரைகளைப் பற்றிய அறிவு. வாஸ்து சுத்தி என்றால் கட்டிடக் கலை பற்றிய முழு அறிவு. லகு வ்ருத்தி என்றால் சிறியதாக இருப்பதை பெரியதாக அபிவிருந்தி செய்யும் கலை. சகுன விசாரம் என்றால் பட்சிகள் மற்றும் இதர வகையிலான சகுனங்களை அறிந்து காரியம் வெற்றி பெறுமா எனக் கூறும் அறிவு. சூர்ண யோகம் என்றால் நல்ல மணமுள்ள திரவியங்களைக் கலக்கும் கலை.

வர்ணிக வ்ருத்தி என்றால் குணங்களை விவரித்துச் சொல்லப்படும் பெரிய கதைகளைச் சொல்லும் கலை, வாக் பாடவ் என்றால் வாக்கு சாதுரியம், பேச்சுக்கலை கர லாகவ் என்றால் கைகள் மூலம் செய்யும் தந்திரங்கள் மற்றும் கலைகள்! லலித சரண் என்றால் சிருங்கார ரஸத்தை வெளிப்படுத்தும் அங்க அசைவுகள் (கோரோகிராபி). தைல சுரபீகரண் என்றால் எட்டு விதமான எண்ணெய்களைத் தயாரிக்கும் விதம், அதை மஸாஜ் உள்ளிட்ட வகைகளில் பயன்படுத்தும் அறிவு. ப்ருத்யோபசார் என்றால் சிருஷ்டியில் உள்ள ஜட சேதனங்களுக்கான சேவை பற்றிய கலை. கோஹசார் என்றால் இல்லத்தரசிகள் இல்லங்களை எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றிய கலை.

வியாகரணம் என்றால் இலக்கணம் கும்ப ப்ரம என்றால் தங்கம் போலவே தோற்றமளிக்கும் போலி தங்கத்தைத் தயாரிக்கும் அறிவு. ரத்னமணி பேதம் என்றால் ரத்னங்களின் பேதங்களை அறிவது அதை பரிட்சை செய்து பார்ப்பது உள்ளிட்ட நவரத்தினங்களைப் பற்றிய அறிவு. லிபி பரிச்சேதம் என்றால் எழுத்துக்களை அழகுற எழுதும் பல்வேறு முறைகள். காமா விஷ்கரண் என்றால் ஊடலும் கூடலும் மற்றும் இதர தாம்பத்ய விஷயங்கள் பற்றிய அறிவு.

ரந்தன் என்றால் உணவு தயாரிக்கும் கலை. கேஸ பந்தன் என்றால் கேஸப் பராமரிப்பு, கொண்டைகள் போடும் விதம் உள்ளிட்ட கேஸ சம்பந்தமான முழு அறிவு. ஷாலி கண்டன் என்றால் வசந்த காலத்தில் நடைபெறும் பெரும் கலைவிழா நடத்தும் அறிவு. கதா கதன் என்றால் கதை சொல்லும் திறமை. இது ஒரு பிரம்மாண்டமான கலை. வர வேஷ என்றால் பதி (கணவன்) போல வேஷம் போடுதல். சர்வ பாஷா விசேஷ என்றால் பல்வேறு மொழிகளில் நிபுணத்துவம் பெறுதல்.

வாணிஜ்ய விதி என்றால் அனைத்து வியாபாரங்களையும் செய்யும் திறன். அபிதான பரிஞான் என்றால் அகராதியில் உள்ளவை அனைத்தையும் அறிவது. ஆபூஷண தாரண் என்றால் ஆபரணங்களை அலங்காரமாக அணிந்து கொள்ளும் கலை. அந்த்யாக்ஷ¡ரிகா என்றால் உடனடியாக நினைவிலிருந்து கேட்ட பாடலைப் பாடும் திறன்.

மேலே உள்ள பட்டியலை ஒரு தரம் படித்தாலேயே நம் பண்டைய பெண்மணிகள் எதிலெல்லாம் சிறந்து விளங்கினார்கள் என்பது தெரிய வரும். அவர்கள் தொடாத துறை இல்லை; வெல்லாத விஷயம் இல்லை. எழிலரசிகளாக விளங்கியவர்கள் தொழிலரசிகளாகவும் விளங்கியுள்ளனர். ஆயிரக்கணக்கான பாரதப் பெண்களின் மகிமையைச் சித்தரிக்கும் வரலாற்று நூல்கள் நம்மிடம் இல்லை என்பது தான் பரிதாபம்.

சரஸ்வதி மஹால் உள்ளிட்ட பல்வேறு உலக நூலகங்களில் அபார அறிவு தரும் ஏராளமான நமது நூல்கள் சுவடிகளாக உள்ளன. ஒவ்வொரு ஊரிலும் பெண்கள் இணைந்து ஏற்படுத்திக் கொள்ளும் ஒவ்வொரு பெண் குழுவும் ஒரு சுவடி நூலைப் பதிப்பு நூலாக வெளியிடுவது என்று முடிவு செய்தால் புராதன கலை அறிவு இன்றைய 55 கோடி பெண்களை தேசம் முழுவதும் சென்று சேரும். இப்படிச் செய்யவில்லை என்றால் மஞ்சளை அமெரிக்கா பேடண்ட் எடுக்க முயன்ற கதை போல அனைத்து அறிவும் சுவடிகள் உள்ள அந்தந்தநாடுகள் உரிமை கொண்டாடி பேடண்ட் எடுக்கும் நிலை விரைவில் ஏற்படும்.
ஆகவே தமிழ் பெண்மணிகள் சேர்வார்களா? சேர்ந்து செய்வார்களா? சேர வேண்டும்! செய்ய வேண்டும்!!

 

 

இளநீர் மகிமையும் தென்னையின் பெருமையும்

Picture : courtesy of  The Hindu

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி

என்று தரும் கொல்லென வேண்டா—நின்று

தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்

தலையாலே தான் தருதலால் ( வாக்குண்டாம் )

பொருள்: தென்னை மரம் நிலத்திலிருந்து குடித்த தண்ணீரை சுவையுடைய இளநீராக தலை வழியாகத் தருதல் போல, ஒருவர்க்கு உதவி செய்தால் தருணம் வரும்போது மிகுதியாகத் திருப்பிச் செய்வார். ஆகையால் ஒருவர்க்குச் செய்த உதவி எப்போது திருப்பிக் கிடைக்கும் என்று எண்ணத் தேவையே இல்லை.

இந்த அருமையான கருத்தை 1500 ஆண்டுகளுக்கு முன் வடமொழியில் நீதிசதகம் (ஸ்லோகம் : ப்ரதம வயசி ப்லுதம் தோயம்——) எழுதிய பர்த்ருஹரி என்ற புகழ்மிகு கவிஞனும் அழகாகப் பாடிவிட்டான்:

பொருள்: மரம் நட்ட சில ஆண்டுகளுக்கு மட்டுமே நீர் பாய்ச்சுகிறோம். அதற்கு நன்றிக் கடனாக வாழ் நாள் முழுதும் தன் தலையில் பெரிய பாரத்தைச் சுமந்து கொண்டு சுவையான இளநீரைத் தருகிறது தென்னை.

தென்னை மரத்துக்கும் இளநீருக்கும் இப்படி அறிமுகம் தேவை இல்லை. தேங்காய் என்பது கோவில்களிலும் பூஜைகளிலும் உணவிலும் தவிர்க்க முடியாத ஒன்று. இலை முதல் நார் வரை எல்லா பகுதிகளும் பயன் படுவதால் இந்த மரத்தை கற்பக விருட்சமாகக் கருதுவோரும் உண்டு.

தமிழ்நாட்டில் திருத் தெங்கூர், வட குரங்காடு துறை முதலிய கோவில்களில் தல விருட்சமாக விளங்குகிறது. சித்த, ஆயுர்வேத வைத்தியத்தில் தேங்காய் எண்ணை முதல் மரத்தின் பல பகுதிகளும் பயன்படுத்தப்படுகின்றன. கள், சர்க்கரை, கயிறு, கூடை, விசிறி, கட்டில், உத்தரம் என எல்லாம் தந்து மனிதனின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து விட்டது.

இளநீர் சூட்டைத் தவிர்க்கும் என்பது உலகறிந்த உண்மை. கோடை காலம் வந்து விட்டால் சாலை ஓரம் முழுதும் மலை போலக் குவித்து, பொழுது சாயும் வரை விறுவிறுப்பாக விற்கின்றனர். இதெல்லாம் பழைய கதை.

Picture: Coconut Tree in Hawai,USA

புதிய கதை என்னவென்றால் இதை அட்டை டப்பாவில் ( carton) அடைத்து ஜூஸ் போல அமெரிக்கவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் விற்கத் துவங்கி விட்டார்கள். இதன் காரணமாக இதற்கு புது கிராக்கி வந்துவிட்டது. கோகோஸ் ந்யூசிபெரா (cocos nucifera) என்ற தாவரவியல் பெயருடன் உலகின் பெரும்பாலான கடற்கரைகளை அழகுபடுத்தும் மரம் இது.

வெளிநாடுகளில் ஒரு பொருளை விற்கவேண்டும் என்றால் அதன் எடை, அது தயாரிக்கப்பட்ட நாள், எத்தனை நாள் வரை அதைப் பயன்படுத்தலாம், அதில் என்ன என்ன சத்துக்கள் எவ்வளவு இருக்கின்றன என்று எல்லா வற்றையும்  எழுத வேண்டும். இப்படி எழுதிய உடனே இளநீருக்கு புது “மவுசு” வந்து விட்டது.

இளநீரில் பொட்டாசியம் மக்னிசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், தாமிர, கந்தக, இரும்புச் சத்து, வைட்டமின்கள் உண்டு. வாழைப்பழத்தைப் போல இரண்டு மடங்கு பொட்டாசியம் இருக்கிறது. கொழுப்புச் சத்து அறவே இல்லை. சர்க்கரைச் சத்தோ ஆரஞ்சு பழரசம் போன்ற பழ ரசங்களை விட மிகக் குறைவு. வயிற்றிலுள்ள புழுக்களைக் கொல்லும். சிறு நீரகத்தைப் பாதுகாக்கும். சில வகை புரதச் சத்து பசும்பாலை விட அதிகம் கொண்டது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை யாருக்கும் கொடுக்கலாம். சிறு நீரக, குடல் தொற்று நோய்கள், வயிற்றுப் போக்கு எல்லாவற்றுக்கும் மருந்தும் ஆகும்.

தென்னை 5, 6 ஆண்டுகளில் பலன் தரும். பனை மரமோ பலன் தர 30 ஆண்டுகள் ஆகும்.

Hindu Wisdom: Copper kills bacteria!

Hindu saints have been using copper vessels for thousands of years. They keep water in it for drinking purposes. When Aluminium vessels became cheaper and copper turned expensive people slowly moved away from copper. But Western countries are going back to copper. Hindus keep Ganga Jal (holy water from Ganges) for years in copper pots. They never go stale.

Read the latest news from British News Papers:

An Irish hospital is the first in the world to embrace the latest science by specifying hygienic copper door handles throughout in a bid to reduce healthcare associated infections such as MRSA, providing the best possible solid protection to its patients.

St Francis Private Hospital, a 140-bed facility located in Mullingar, County Westmeath, and its associated nursing home, St Clair’s, made the decision after examining the compelling evidence from the clinical trial at Selly Oak Hospital, Birmingham, which showed that copper surfaces such as taps, toilet seats and door push plates can reduce microbial contamination by 90-100%.

A hospital in Birmingham, Britain tried copper fittings and pens against MRSA (Medicine Resistant Staphylococcus Aureus). This bacterium Staphylococcus aureus can’t be killed by antibiotics.

About 80 percent of MRSA transmission comes through surface contacts so an 18 month trial found that replacing stainless steel fittings with copper can greatly cut infection. The clinical trial was conducted at Selly Oak hospital in Birmingham. Key surfaces such as door handles, push-plates, bath taps, toilet flush handles and grab rails were changed to copper. Even the pens used by the staff were of copper alloy.

MRASA lives for days on stainless steel but dies within 90 minutes on copper, tests at Southampton University found. Copper can also tackle the resistant bug Clostridium difficile and could even act as a defence against bird flu.

In Britain, 30 000 patients pick up infections in hospitals each year. At least 5000 are likely to die the cost to the NHS is estimated at £ 1 billion a year (Source : Metro News paper, London).

***************

இந்திய அதிசயம்: ஆலமரம்

அலெக்ஸண்டரை வியப்பில் ஆழ்த்திய மரம்

உபநிஷத ரிஷிகள், மாணவர்களுக்கு செய்முறைப் பயிற்சி கொடுக்க பயன்படுத்திய மரம்

இந்தியாவின் தேசிய மரம்

தமிழ், சம்ஸ்கிருத கவிஞர்கள் பாடிய மரம்

சால்மான் ருஷ்டி, சதே, டேனியல் டீபோ கதைகளில் வரும் மரம்

அங்கோர் வட் கோவிலுக்கு பெயர் கொடுத்த மரம்

பனியா என்ற சொல்லை ஆங்கில அகராதியில் நுழைத்த மரம்

பகவத் கீதையில் கண்ணன் சொன்ன மரம்

சிவன் உபதேசம் செய்த மரம்

கண்ணன் இலையில் மிதந்த மரம்

கின்னஸ் நூலில் புகழ் அடைந்த மரம்

அமெரிக்கா வரை சென்ற மரம்

வட சாவித்திரி விரதத்தில் வணங்கப்படும் மரம்

தமிழ் பழமொழிகளில் இடம்பெற்ற மரம்

தமிழ் நாட்டுக் கோவில்கள் ஆறில் தல விருட்சம் ஆன மரம்

 

உலகம் புகழும் இந்த இந்திய அதிசயம் உபநிஷத ரிஷிகள காலம் முதல் இன்று திரைப் படப் பாடல்கள் வரை மனிதனின் சிந்த்னையைத் தூண்டி வருகிறது. ஆல் போல் தழைத்து அருகு போல வேரூன்ற வேண்டும் என்று பெரியோர்கள் வாழ்த்துவதைக் கேட்கிறோம்.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்று ஆலமரமும் வேல மரமும் புகழப்படுகின்றன. (நாலும் இரண்டும்=வெண்பா, குறள் பாக்கள் வகை).

தமிழ்நாட்டிலும் குஜராத்திலும் பல ஊர்ப்பெயர்களிலும் (வடோதரா, குஜராத்) ஆல மரம் மணம் கமழும். தமிழ்நாட்டில் ஆறு பெரிய கோவில்களில் இது ஸ்தல விருட்சம் (மரம்) ஆக திகழ்கிறது. ஆலங்காடு, திரு ஆலம்பொழில், திரு அன்பிலாந்துறை, திரு மெய்யம், திருப் பழவூர், திரு வில்லிப் புத்தூர்.

அங்கோர்வட் என்னும் கம்போடிய நாட்டு ஆலயம் உலக அதிசயங்களில் ஒன்று. அதன் பெயரில் உள்ள வட் என்பது “வட” என்ற சம்ஸ்கிருத சொல்லின் சுருக்கம் ஆகும். “வட” என்றால் ஆல மரம் என்பது பொருள்.

ஆண்டுதோறும் கோடைகால (ஆடி) பவுர்ணமியில் பெண்கள் அனுஷ்டிக்கும் வட சாவித்திரி விரத நாளில் ஆலமரத்துக்கு பூஜை நடக்கும். சாவித்திரியை வழிபடும் நாள் இது.

பஞ்சதந்திரக் கதைகளில் விஷ்ணு சர்மன் இந்த மரத்தை வானளாவப் புகழ்கிறான். மற்ற மரங்கள் பூமிக்குப் பாரமே என்பான். பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் வாழ்வளிக்கும், மனிதர்களுக்கு நிழல் அளிக்கும் இந்த மரம் மகிழ்ச்சிக் கடலின் இருப்பிடம் என்பான்.

“Deer recline in its shade;

Birds in multitude gather to roost

Darkening its dark-green canopy of leaves;

Troops of monkeys cling to the trunk;

While hollows hum with insect-throngs

Flowers are boldly kissed by honey-bees;

O! What happiness its every limb showers

An assemblage of various creatures;

Such a tree deserves all praise,

Others only burden the earth.”

 

ஆங்கிலக் கவிஞன் சதேயும் இதை ஆமோதிப்பான். நாலடியாரிலும் வெற்றி வேர்க்கையிலும் நமக்கு அறத்தைப் போதிக்கவும் இதுதான் உதவியது. கம்ப ராமாயணத்திலும், சிந்தாமணிச் செய்யுளிலும், காளிதாசன் காவியங்களிலும் இடம் பெறுகிறது.

“It was a godly sight to see

The venerable tree

For over the lawn, irregularly spread

Fifty straight columns propt its lofty heads

And many a long depending shoot

Seeking to strike a root

Straight like a plummet grew towards the ground

So like a temple did it seem that there

A pious hearts first, impulse would be prayer….”

எப்படி வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல கட்டிடங்களுக்கு அடியில் வேரை நுழைத்து ஆலமரம் அந்தக் கட்டிடங்களின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காணவைக்கிறதோ அது போல மன்னன் அஜன் மனதில் கவலைகள் நுழைந்தன என்று கவிபாடுவான் உலகப் புகழ் காளிதாசன்.

ஆலின் கீழ் அமர்ந்து பேசா மூர்த்தியாக சிவ பெருமான், தட்சிணாமுர்த்தி வடிவில், மவுன உபதேசம் செய்த மரம். கண்ணன் ஆலின் இலையில் மிதந்து பெருமை ஏற்றிய மரமும் இதுதான். ஆதிகாலத்தில் கோவில்கள் அனைத்தும் மரத்தின் கீழ்தான் இருந்தன. குறிப்பாக ஆலமரத்தின் கீழ் கோவில் கட்டினர். ஊர் மன்றம் நடத்தினர். விழாக்கள் நடத்தினர்.

அலெக்ஸாண்டர் இந்த மரத்தைக் கண்டு வியந்ததையும் 7000 படை வீரர்களுடன் முகாம் இட்டதையும் கிரேக்க நாட்டு ஆசிரியர்கள நமக்கு எழுதிவைத்திருக்கிறார்கள்.

சாந்தோக்கிய உபநிடதத்தில் ஸ்வேதகேது என்ற இளைஞனுக்கு அவன் தந்தை பல விஞ்ஞான சோதனைகள் மூலம் இறை ஞானம் அளிக்கிறார். அதில் ஒரு செய்முறைப் பயிற்சி ஆல மரம் தொடர்புடையது.

“ மகனே அதோ அந்த ஆல மரத்திலிருந்து ஒரு பழம் பறித்து வா.

“இதோ, கொண்டுவந்துவிட்டேன், தந்தையே

“மகனே அதைப் பிரித்து உள்ளே பார்,

தந்தையே, மிக மிகச் சிறிய விதைகள் இருக்கின்றன

மகனே அதில் ஒருவிதையை எடுத்து பிரித்துப் பார்.

தந்தையே, பிரித்துவிட்டேன்.ஒன்றுமே தெரியவில்லையே.

பார்த்தாயா, ஒன்றுமே கண்ணுக்குக் தெரியாத அந்த ஒன்றிலிருந்துதான் இந்த பிரம்மாண்டமான ஆலமரம் உருவாகி இருக்கிறது. அதுதான் பிரம்மம். அது வேறு யாரும் இல்லை. நீயேதான்.(உன்னையே நீ அறிவாய்).

ஆலமரக்குச்சிகள் பல் தேய்க்க உதவும். அதன் பட்டைகளும், பாலும் பழமும் மருதுவப் பயன் கொண்டவை.

அஸ்வத்தாமவுக்கு பாண்டவர்களைப் படுகொலை செய்யும் யோசனை தோன்றியதும் ஆல மரத்துகடியில்தான். இரவு நேரத்தில் காகங்கள் ஆந்தைகளைத் தாக்கியதைப் பார்த்தவுடன் அதே போல இரவு நேரத்தில் பாண்டவர்கள் முகாமுக்குள் சென்று படுகொலைகள் செய்கிறான்.

அதே ஆலமரத்தை மும்மூர்த்திகளின் வடிவாக இந்துக்கள் வணங்குவர். பிரம்ம, விஷ்ணு, சிவன் அந்த மரத்தின் வேர், பட்டை, கிளைகளில் இருப்பதாக ஐதீகம்.

பனியா என்ற சொல்லும், பானியன் ட்ரீ என்ற சொல்லும் ஆங்கில அகராதியில் உண்டு. அந்தக் காலத்தில் வியாபாரிகள் (பனியாக்கள்) இம்மரத்தின் கீழ் இருந்து வணிகம் செய்ததை வைத்து மரத்துக்கு பானியன் ட்ரீBanyan Tree என்ற ஆங்கிலப் பெயர் வந்தது.

தாவர இயல் ரீதியில் அரச மரம் (அஸ்வத்த), அத்தி மரம், ஆல மரம், உடும்பரா ஆகியன மோரேஸி Moraceae என்னும் குடும்பத்தைச் சேர்ந்தன. இவை அனைத்தும் பைகஸ் Ficus என்னும் பெயருடன் துவங்கும். இந்துக்கள் இதை அந்தக் காலத்திலேயெ அறிவர். இவை அனைத்திலும் இறைவன் உறைவதை அறிந்து விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் கூட ஏற்றிவிட்டனர்.(ந்யக்ரோத=ஆலமரம், அஸ்வத்த=அரச மரம், உடும்பர= அத்தி வகை, யமனுக்குரிய மரம், எமனின் மற்றொரு பெயர் அவுதும்பரன்)

உலகப் புகழ்பெற்ற ஆல மரங்கள்

வெளிநாட்டினர் இந்தமரங்களை அமெரிக்கா, ஸ்பெயின் ஆகிய இடங்களில் நட்டு அவை மிகவும் பெரிதாக வளர்ந்துவிட்டன. அமெரிக்காவில் ஹவாய் திவிலும், ப்ளோரிடா மநிலத்திலும் ஆல மரங்கள் உண்டு.

ஆயினும் சென்னை அடையாறு பிரம்ம ஞான சபை வளாக ஆலமரம், ஆந்திர கதிரி திம்மம்மா ஆல மரம், உலகப் புகழ் கல்கத்தா தாவரவியல் தோட்டத்திலுள்ள மாபெரும் ஆலமரம், பெங்களுருக்கு அருகிலுள்ள மரம், குஜராத்தில் இருக்கும் கபீர் வட், அண்மைக் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட பஞ்சாப் பதேகார் மாவட்ட ஆல மரம்– நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக இருக்கின்றன. ஆயிரக் கணக்கான விழுதுகளுடன் இன்னும் வளருகின்றன. ஒரே நேரத்தில் 3000 முதல் 10000 பேர் வரை இவைகளின் கீழ் நிழலில் தங்கி இளைப்பாறலாம். இந்த மரங்களை அழியாமல் காப்பதும் போற்றி வளர்ப்பதும் நம் கடமை.

பஞ்சாபில் கட்டி சோலன் கிராமத்தில் இருக்கும் மாபெரும் ஆலமரத்தின் குச்சிகளை அடுப்பெரிக்க விறகுக்காக கூட மக்கள் எடுக்கமாட்டார்கள். அதனால் குடும்பத்துக்கே ஆபத்துவரும் என்று பயப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான பறவைகளை  ஆனந்தப் படுத்துமால மரத்தை துன்புறுத்த யாருக்கு மனம் வரும்?

“தெள்ளிய ஆலின் சிறுபழத் தொரு விதை

தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்

நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை

அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடு

மன்னக் கிருக்க நிழலாகும்மே” –(வெற்றிவேர்க்கை)

பொருள்: சிறிய மீனின் முட்டையை விடச் சிறியதான ஆல மர விதையானது நாற்பெரும் படையொடு வரும் மன்னரும் தங்க நிழல் தரும். அதுபோல மிகச் சிறிய செல்வமுடைய மேன் மக்கள் பிறருக்குப் பெரிதும் பயன்பட வாழ்வார்கள்..

அத்தி, ஆல் அரசு ஆகிய மரங்கள் எல்லாவற்றிலும் பூக்கள் வெளியே தெரியாமலே காய்கள் உருவாவதால் பூவாது காக்கும் மரங்கள் (கோளி ஆலம்) என்று சொல்லி இவைகளையும் உவமைக்குப் பயன்படுத்தினர் தமிழ் புலவர்கள்.

நாலடியார் என்னும் அற நூல் பல இடங்களில் ஆல மர உதாரணத்தைக் காட்டுகிறது. ஆலம் விதை சிறிதானாலும் மரம் பெரிதாவது போல ஒருவனின் அறச் செயல் பயன் தரும். இன்னும் ஒரு இடத்தில் ஆலமரத்தைக் கறையான்கள் அரித்தாலும் அதன் விழுதுகள் அதைத் தாங்கி நிற்பது போல தந்தையை மகன் காப்பாற்றவேண்டும் என்று சொல்லும்.

மரம் வளர்த்தால், மனித குலம் தழைக்கும்.

FAMOUS BANYAN TREES

LARGEST TREE: The latest discovery of a huge banyan tree in Fategarh district of Punjab surprised all nature lovers when they came to know its dimensions. The tree is in a village called Choti Kalan and the tree is called Kaya Kalpa Vriksha. It occupies four acres. A temple and a rest house have been constructed under the tree. Punjab Government has taken steps to preserve it as a bio diversity area. Though private lands surround the tree, people believe that stopping the growth of the tree will bring bad luck. The people are so scared they don’t even collect the fallen twigs for fire wood.

Great Banyan Tree- Kolkatta Botanical Gardens-250 year old-occupy four acres-3300 aerial roots

Thimmamma Marimanu, Near Kadiri,A.P-1100 aerial roots- said to be 600 year old-Thimmamma committed SATI and a banyan tree came in that place. Thousands of people go there on Shivratri day every year to worship Thimmamma.

Adyar Theosophcal Society Tree- Chennai -200 year old-3000 people can stand in its shade.

Kabir Vad tree, Gujarat-300 year old tree.

Doda lara mara- near Bangalore- spread over three acres-

William Owen Smith Banyan tree-Hawai,USA (Banyan trees were brought to USA by nature lovers)

************************************

Indian Wonder: The Banyan Tree

There is a beautiful verse in the Panchatantra about Banyan Tree:

“Deer recline in its shade;

Birds in multitude gather to roost

Darkening its dark-green canopy of leaves;

Troops of monkeys cling to the trunk;

While hollows hum with insect-throngs

Flowers are boldly kissed by honey-bees;

O! What happiness its every limb showers

An assemblage of various creatures;

Such a tree deserves all praise,

Others only burden the earth.”

Ancient story teller Vishnu Sharma of Pancha Tantra fame composed the above poem; modern poet Southey did not lag behind:

“It was a godly sight to see

The venerable tree

For over the lawn, irregularly spread

Fifty straight columns propt its lofty heads

And many a long depending shoot

Seeking to strike a root

Straight like a plummet grew towards the ground

So like a temple did it seem that there

A pious hearts first, impulse would be prayer….”

Read more amazing things about the tree below:

Alexander the Great amazed at the Banyan tree;

Angkor Wat got its name;

Bania entered Oxford English Dictionary;

Bhagavad Gita used it as a simile;

Seers of Upanishads used it for boys’ experiments;

Tamil and Sanskrit literatures sang its glory;

Shiva and Vishnu sat under/on it;

Salman Rushdie, Daniel Defoe and Southey used it in their stories and novels;

Guinness Book of Records published it under its Tree records;

Banyan is the Sthala Vriksham of many Tamil temples;

Spread its branches in the Unites States;

Used as tooth picks and medicines by Indians;

Worshipped by Hindu women in Vata Savithri Vrata;

Served as the meeting point of villagers for thousands of years

The story of the great and glorious BANYAN TREE is a never ending story.

CHANDOGYA UPANISHAD

Swetaketu said to his father : “Please sir, tell me more of this teaching.

Very well my son. Go and pick a fig from the Banyan tree

Here you are, sir

Split it open and tell me what you see inside

Many tiny seeds, sir

Take one of them and split it open and tell me what you see inside.

Nothing at all, sir

Then the father said,n “The subtlest essence of the fig appears to you as nothing, but, believe me my son, from that very nothing this mighty banyan tree has arisen.

That being which is the subtlest essence of everything, the supreme reality, the Self, the self of all that exists, THAT ART THOU Svetaketu.”

This Chandogya Upanishad is full of practical demonstrations and experiments ( salt and glass of water etc.). This shows the scientific approach even in the teaching of philosophy.

NATIONAL TREE OF INDIA

Banyan tree is the national tree of India.

TAMIL TEMPLES

Over six temples in Tamil Nadu have got the tree as its temple tree (sthala Vriksha): Thiru Alankadu, Thiru Alampozil, Thirup pazuvur, Thiru Anpilanthurai, Thiru Meyyam and Thiru Vilipputhur temples. Ancient Tamil native doctors used its root, leaves and latex(milk) as medicines. The tooth brushes made up of its stick are used throughout the length and breadth of India.

BANIA

Indian merchants are called banias. They did their business camped under the tree and the Europeans called this tree as Bania (n) tree.

ALEXANDER

Alexander was wonder struck when he saw this tree in India. He camped with 7000 soldiers under  banyan trees in North West India.

ASWATTHAMA

Aswatthama got the idea of attacking Pandavas when he saw crows attacking owls at the dead of night.

ANGKOR WAT

Vata is banyan tree in Sanskrit. Throughout India people worshipped gods and goddesses under the banyan tree in the olden days. In Cambodia where Hindu culture was established by two saints called Agastya and Kaundinya, the same worship was followed. When big stone temples were built in those places, they were still called Vat giving the name Angkor Vat. Because of carelessness and the civil war, huge banyan trees have covered the temple walls now.

KALIDASA
Kalidasa, the king of similes, used banyan tree simile appropriately. Like the roots of a banyan tree creeps insidiously into the adjoining tower and shake its very foundations, grief entered King Aja’s heart and shook him.

SRI RAMA

Lord Sri Rama consulted engineers about building a sea bridge to Sri Lanka under the green wood banyan tree. When the birds were making a big noise he made them quiet by hand gestures according to Sangam Tamil literature.

SRI KRISHNA

Lord Krishna in Bhagavad Gita (15-1): The scriptures speak of the eternal Asvattha, the World Tree, whose roots are in the most high, branches in the lower regions, and leaves in Vedic hymns. He who knows it, understands the Veda really. The same thought is in Katopanishad II-3.1 and Rig Veda I-24-7;I-16420.

Sri Krishna was floating on a banyan leaf and Shiva did teacher under banyan tree as Dakshinamurti.

VISHNU SAHSRANAMAM

Botanical term for banyan tree is Ficus Bengalensis (nyakrodha or Vata in Sanskrit).It belongs to the family Moraceae. Other three important trees of this family are also worshipped by Indians. Ficus religiosa (peepal; in Tamil Arasa maram),Ficus Benjamina (Fig tree; aththi in Tamil), Ficus glomerata (udumpara). Vishnu Sahasranamam praises Lord Vishnu with the names of three Ficus trees (Nyagrodha, Utumpara, Asvaththa).

TRIMURTI

Hindus worship Banyan tree (Ala Maram in Tamil) for thousands of years. Sanskrit and Tamil literature has innumerable references to it. They consider it represents Brahma , Vishnu and Shiva (Tri Murti). They reside in its roots, barks and branches respectively.

FAMOUS BANYAN TREES

LARGEST TREE: The latest discovery of a huge banyan tree in Fategarh district of Punjab surprised all nature lovers when they came to know its dimensions. The tree is in a village called Choti Kalan and the tree is called Kaya Kalpa Vriksha. It occupies four acres. A temple and a rest house have been constructed under the tree. Punjab Government has taken steps to preserve it as a bio diversity area. Though private lands surround the tree, people believe that stopping the growth of the tree will bring bad luck. The people are so scared they don’t even collect the fallen twigs for fire wood.

Great Banyan Tree- Kolkatta Botanical Gardens-250 year old-occupy four acres-3300 aerial roots

Thimmamma Marimanu, Near Kadiri,A.P-1100 aerial roots- said to be 600 year old-Thimmamma committed SATI and a banyan tree came in that place. Thousands of people go there on Shivratri day every year to worship Thimmamma.

Adyar Theosophcal Society Tree- Chennai -200 year old-3000 people can stand in its shade.

Kabir Vad tree, Gujarat-300 year old tree.

Doda lara mara- near Bangalore- spread over three acres-

William Owen Smith Banyan tree-Hawai,USA (Banyan trees were brought to USA by nature lovers)

VAT SAVITHRI VRAT

Vta Savitri Vrata (fasting) is observed by married women for health and wealth of their husbands. It is mostly observed in Eastern parts of India. People worship Savitri in Banyan (Vat) trees on the full moon day of Jyesta month (May-June). They wear new clothes and bangles on that day.

TAMIL PROVERBS

Tamils have named many towns after Banyan tree like Gujarat (Vatodara). They have proverbs and poems praising the strength of banyan tree. A poem describes how small seeds of a banyan tree bring forth huge trees. A didactic book called Vetri Vekai says that the seeds of a banyan tree are smaller than the eggs of fishes in a pond, but it gives shade to a big army of a king  with elephants and horses when it is fully grown. Good people’s wealth may be little but it will benefit a great number of people. Naladiyar, another didactic book, compares small seeds for the good work one does. It says it will give huge benefits for the person who does such work.

**************

Scientific proof for Samudrika Lakshana

Picture shows Beauty Ratio

(Body Symmetry or Body Features)

Hindus have divided arts under 64 branches. An expert is expected to master all those subjects. A popular Tamil hymn is praising Goddess Saraswati as the one who bestows everyone with these 64 “arts”. One of them is the art of knowing the character of a man by studying his features. This is called Samudrika Lakshna. (some books drop one or two subjects and include certain others-only minor changes) There are several books giving more details about women’s body features.  The books are called Anga Shastra. Vatsyayana , the author of Kamasutra, who lived two thousand years ago wrote in detail about the sexual organs. So that was purely a sexual classification of men and women.

Tamils classified women in to seven categories according to their age: Pethai, Pethumbai, Mangai, Matanthai,Arivai, Therivai and Perilam Pen, starting from age 5 and finishing with 40. Probably they called over forty women with a general term like “woman”. Sanskrit book Rati Rahasya went one step further and classified women into four categories on the basis of psycho-physical aspects: Padmini, Chitrini, Shankini and Hastini. Many books were written until 12th century giving more information about women’s body features. All these show serious research was done in these areas by Hindus. I doubt any other ancient culture has done so much work on body features and characters.

Latest scientific research by westerners confirms our studies. Though they have not quoted our texts on these subjects their approach is same. This makes it an urgent necessity of studying our ancient scriptures and prove them scientifically. This will help us to diagnose even diseases well in advance.

If we could predict the character of a person in advance, we could even take corrective measures for people with bad characters. Following are the scientific studies which strengthens our beliefs:

1. Back in 1977 the newspapers reported a new device developed by the Moscow Institute of Radio Engineering, Electronics and Automatics. The device is called thermovisor. The device was used for diagnosing diseases of thyroid (neck), the mammary glands (breast) and cardio vascular system (heart and blood vessels). Every object releases heat. There are parts in the human body where temperature exceeds the normal one. Such parts are situated around the eyes, the lips and on the forehead. The difference in temperatures is taken into account for diagnosis ( Tamils call snakes as Katsevi meaning EYE EAR. The eyes of snakes have got special organs which does the function of ear i.e. the snakes could see its prey during night time using infra red rays- body heat of the prey).  This is about body heat and not about body features.

2.  By 2008 many books were published about the measurements of hands, particularly fingers. John Manning found out our fingers provide a wealth of  evidence about  how men and women differ and how they are programmed before birth to show certain behaviour patterns and likely hood of getting certain diseases . John Manning’s book The Finger Book explains, the length of our ring and index fingers can greatly influence our personality, health and abilities. The language and approach of the book is similar to Sanskrit books on Samudrika Lakshan, but differ in details.

3. Another study by Michael Heselhuhn showed something more interesting. He found out that there is a link between a person’s behaviour and WHR. One’s WHR (width Height Ratio) is the ratio between face width and face height. His study involved 192 MBA students. The result of his study showed that men who have wider faces relative to their facial height are involved in un ethical behaviour. Michael is from Wisconsin University. He did this research along with Elaine M Wong.

4. Back in 2009, The Science Daily reported another study proving a link between the eyes and the mouth. Pamela Pallet and Stephen Link of University of California and Kang Lee of the University of Toronto did four experiments and discovered golden ratios for beauty. They said the position of the eyes and the mouth decided the beauty of a person. This was also in line with samudrika Lakshan. They said that the value of Phi was known to Greeks as divine proportion. Some believe that Lerado Da Vinci used this proportion for painting the most famous Monalisa. In short they found out, if the vertical distance between their eyes and the mouth is approximately 36 percent of the face’s length and the horizontal between their eyes was approximately 46 percent of the face width they looked beautiful. Even if one doesn’t understand all these mathematics of beauty, one can understand that there is always a link between the body features and one’s own behaviour or attraction.

5. Three researchers from the Psychology department of Brock University, Canada also concluded that facial features can tell us whether a person is aggressive or not.

6. All these Western researchers did not study the books on Samudrika Lakshan. If we do some scientific research on available information from our scriptures we may throw more light on this art/science.

7. In our literature we read about a person drawing a one’s whole figure just by looking at his or her nail. We also knew that great painters like Raja Ravi Varma did all Hindu Gods and goddesses by reading Sanskrit hymns. Those hymns were once again visualised by our seers. Heroines of Sanskrit literature drew the pictures of lovers by dreaming or hearing about him. It is a shame that we did not take all these writings worthy of scientific research.

 

(Please read my article “Hindus’ Future Predictions” to know more about what else Hindus have predicted about future discoveries)

****************

ஷ்ரோடிங்கரின் பூனை விளக்கும் பிரம்ம ரகசியம்!

 

யாராலும் விளக்க முடியாத பிரம்ம ரகசியத்தை வியன்னா விஞ்ஞானி ஷ்ரோடிங்கரின் மாயப் பூனை விளக்குவது ஒரு விஞ்ஞான – மெய்ஞான விந்தை அல்லவா! பிரம்ம ரகசியத்தை விளங்கிக் கொள்ள கட்டுரையைப் படியுங்கள்!

விஞ்ஞானம் விளக்கும் மெய்ஞானம்!

 

ஷ்ரோடிங்கரின் பூனை விளக்கும் பிரம்ம ரகசியம்!

——————————————————————— 

ச.நாகராஜன்

காலம் காலமாக ஹிந்து மதத்தின் வேத உபநிடதங்கள் கூறும் பிரம்மம் பற்றிய உண்மையை அறிந்து கொள்ள மாபெரும் அறிஞர்களே சிரமப்படுகின்றனர்.

 

ஆதி சங்கரர் பிரம்மம் மட்டுமே சத்யம் மற்றது மாயை (ஜகம் மித்யா) என்று கூறுகின்ற போது அதை உணர்ந்து கொள்ள சிரமப்படுகிறோம். நாம் காண்கின்ற அனைத்துமே பொய்யா என்ற கேள்வி, மகாகவி பாரதியார் உள்ளிட்ட நம் அனைவருக்குமே எழுவது இயல்பு.(நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?-பாரதியார் -பொய்யோ மெய்யோ கவிதையில்)

 

அது மட்டுமின்றி அணோரணீயான் மஹதோ மஹீயான் – அது பெரிதுக்கும் பெரிது; அணுவுக்கும் அணு; மிக மிக தூரத்தில் உள்ளது; மிக மிக அருகிலேயே உள்ளது என்று விளக்கப்படும் போது இரண்டு நேர் எதிர் துருவங்கள் எப்படி ஒன்றாக இணைக்கப்பட்டு விளக்கப்பட முடிகிறது என்று அதிசயிக்கிறோம்;புரியாமல் தவிக்கிறோம்.

அர்ஜுனனக்கு கிருஷ்ணன் பகவத்கீதையில்,” சாஸ்வதமாயுள்ள சத்யத்தில் நிலைத்திரு;புவியில் காணும் எதிர்நிலைகளுக்கு அப்பால்!” என்று கூறும் போதும் இதைச் சரியாகப்புரிந்து கொள்ள முடியாமல் வியப்பும் வேதனையும் தான் மிஞ்சுகிறது.

 

இந்த வியப்பும் வேதனையும் விஞ்ஞானிகளுக்கும் ஹிந்து தத்துவத்தைப் பொருத்த மட்டில் உண்டு. அளக்க முடியாத அதன் ஆழத்தை அளந்தவர்கள் வெகு சிலரே!

 

வியன்னாவைச் சேர்ந்த எட்வின் ஷ்ரோடிங்கர் (Austrian Physicist Schrodinger) நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி (பிறப்பு 12-8-1987 மரணம் 4-1-1961). ஹிந்து தத்துவத்தின் பால் ஈர்க்கப்பட்டு அதன் கருத்துகளோடு ஒன்றியவர்!  ஐன்ஸ்டீனுடன் தன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டே இருந்த ஷ்ரோடிங்கர் 1935ம் ஆண்டு சிந்தனை சோதனை (Thought experiment) ஒன்றை அறிவித்தார். அவரது சிந்தனையில் இடம் பெற்றது ஒரு பூனை!

 

அந்தப் பூனை பிரம்ம ரகசியத்தை விஞ்ஞானபூர்வமாக விளக்கி உலகை பிரமிக்க வைத்தது!

 

அவரது சிந்தனை சோதனை இது தான்:-

இரு பகுதிகள் உள்ள ஒரு இரும்புக் கூண்டிற்குள் ஒரு பகுதியில் ஒரு உயிருள்ள பூனை இருக்கிறது.அதன் அடுத்த பகுதியை இரும்புக் கூண்டில் இருக்கும் பூனையால் ஒன்றும் செய்ய முடியாது.அந்த அடுத்த பகுதியில் ஒரு ரேடியோஆக்டிவ் பொருள் உள்ளது.இந்த ரேடியோ ஆக்டிவ் பொருள் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் செயல்படலாம் அல்லது செயல்படாமலும் போகலாம் ஐம்பதுக்கு ஐம்பது என்ற விகிதத்தில் அதில் உள்ள ஒரு அணு அழிந்து போகலாம் அல்லது அழியாமலும் இருக்கலாம். அந்த கூண்டில் இருக்கும் ஒரு குழாய் அணு அழிவு ஏற்பட்டால் செயல்பட்டு ஒரு சுத்தியலை செயல்பட வைக்கும். இந்த சுத்தியல் ஒரு சிறிய குடுவையில் உள்ள ஹைட்ரோசியானிக் அமிலத்தைக் கசிய வைக்கும். அவ்வளவு தான், பூனை அணுமயமாக ஆகி விடும்.

 

ஒரு மணி நேரத்திற்கு இந்த அமைப்பு அப்படியே இருப்பதாக வைத்துக் கொள்வோம். அணு அழிவு இல்லை என்றால் பூனை உயிருடன் அப்படியே இருக்கும். அணு அழிவு ஏற்பட்டால் பூனை இறந்து சிதறுண்டு அணுமயமாக ஆகியிருக்கும்.

 

இப்போது நம் முன் உள்ள கேள்வி பூனை உயிருடன் இருக்கிறதா அல்லது இறந்து பட்டதா!

 

ஷ்ரோடிங்கர் முரண்பாடு என்ற இந்த ‘சிந்தனை சோதனை சித்தாந்தம்’ ஒரு பெரிய உண்மையை விளக்குகிறது.

ஐம்பதுக்கு ஐம்பது என்ற விகிதத்தில் வாய்ப்பு இருப்பதால் பூனை இறந்தது என்று சொல்லவும் சொல்லலாம்; அது இறக்கவில்லை என்றும் சொல்லலாம்.

 

எல்லாம் பார்ப்பவர் பார்வையில் இருக்கிறது.

பிரம்மமும் அப்படித்தான். நோக்குபவர் எண்ணத்தில் தான் அது இருக்கிறது.

 

மாயையைக் கடந்த நிலையில் பிரம்மம் சத்யம்; ஜகம் மித்! மாயை இருக்கும் சூழ்நிலையில் கண் எதிரே ஜகம் உள்ளிட்ட அனைத்தும் நிஜம்!

 

க்வாண்டம் பிஸிக்ஸ்(quantum physics) என்றைய இன்றைய நவீன இயற்பியல் சப்-அடாமிக் (Sub atomic) மட்டத்தில் மேட்டர் (matter) எனப்படும் பொருளை இரு நிலைகளைலும் கூறலாம் என்று அதிசயக்கவைக்கும் வண்ணம் அறிவிக்கிறது. அதாவது பொருளானது அழிக்கப்படக் கூடியது ; அழிக்கப்பட முடியாதது! அது தொடர்ந்து இருப்பது, தொடராமல் விட்டு விட்டு இருப்பது! அது துகளாக இருக்கக் கூடியது, அலையாக இருக்கக் கூடியது!

 

(Matter is both destructible and indestructible, both continuous and also discontinuous, matter is both particle and also wave)

 

ஒரு இடத்தில் அணுத்துகள் இருக்குமா இருக்காதா என்பதை விளக்கப் புகுந்த ராபர்ட் ஓப்பன்ஹீமர் (இவர் அணுகுண்டு விஞ்ஞானி என்பதை அனைவரும் அறிவர்), “அணுத்துகள் ஒரே இடத்தில் இருக்குமா என்று கேட்டால் இல்லை என்றே நாம் சொல்ல வேண்டும்; எலக்ட்ரானின் நிலையானது, நேரம் மாறுபடும் போது மாறுமா என்று  கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும்; எலக்ட்ரான் ஒரே இடத்தில் இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும்; எலக்ட்ரான் சலனத்துடன் இயங்குகிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்” என்கிறார்

 

(‘If we ask whether the position of the particle remains the same, we must say no, if we ask whether the electron’s position change with time, we must say no, if we ask whether the electron is at rest, we must say no, if we ask whether it is in motion, we must say no.’ – Robert Oppenheimer)

 

இதே வார்த்தைகளை ஈஸாவாஸ்ய உபநிடதம் (ஐந்தாம் செய்யுள்) கூறுகிறது!!

 

“தத் தூரே; தத் அந்திகே; தத் அந்தரஸ்ய சர்வஸ்ய; தத் சர்வஸ்ய பாஹ்யதே”

 

பிரம்மத்தின் நிலையை இந்த விளக்கங்ளால் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா, இப்போது!

 

அது எங்கும் பரவி உள்ளது. அண்டத்தில் உள்ளது; பிண்டத்திலும் உள்ளது. அனைத்திலும் உள்ளது. உலகம் பிரம்மத்தின் பிரதிபலிப்பு!

“பார்ப்பவர் அதை உணர்வர்”! பார்ப்பவர் பார்வையைப் பொறுத்து அது இருப்பதும் இல்லாததும்- சத்யமும் மாயையும் – அமைகிறது.

இதையே ஆதி சங்கரர் மிக அழகாக விளக்கி அருளியுள்ளார். நான் மற்றும் நான் இல்லை என்ற இரு நிலைகளும் ஒன்றுக்கொன்று எதிரான நிலைகள். பார்ப்பவர் மற்றும் பார்க்கப்படும் பொருள் (subject and object) ஆகிய இரு நிலைகளும் வெளிச்சமும் இருளும் போன்றவை. வெளிச்சத்தை எடுத்துக் கொண்டு போய் யாராலாவது இருளை விளக்க முடியுமா? ஒரு விளக்கை எரிய விடும் போதே இருள் அகல்கிறது அல்லவா? பிரம்மத்தையும் இப்படித் தான் மனித நிலையில் இருந்து கொண்டு விளக்க முடியாது. அதை முற்றிலும் விளங்கிக் கொள்ளும் நிலையின் போது நாம் பிரம்மமாக ஆகி விடுகிறோம். ஆகவே தான் கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்!

 

ஐன்ஸ்டீனுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் ஷ்ரோடிங்கர் கிறிஸ்தவம் காட்டும் தந்தை மற்றும் ஏசு கிறிஸ்து அவரது புதல்வர் என்ற கருத்தைத் தன்னால் ஏற்க முடியவில்லை என்று எழுதினார். ஆனால் வேதாந்தம் விளக்கும் ஒரே பிரம்மம் தான் சத்யம் என்பதையும் அது எல்லோருக்குள்ளும் பிரகாசிக்கும் ஐக்கியத்தன்மையையும் தன்னால் ஏற்க முடிகிறது என்றார்.

 

ஒரே ஆன்மா எல்லோருக்குள்ளும் பிரகாசிக்கும் தன்மையை விளக்கும் வேதாந்தத்தை ஷ்ரோடிங்கராலும் நவீன க்வாண்டம் இயற்பியலாலும் நம்மால் நன்கு விளங்கிக் கொள்ள முடிகிறது!

மாயையை விளக்கும் ஷ்ரோடிங்கரின் பூனை உண்மையில் ஒரு மாயப் பூனை தான்!

This article was written by my brother S Nagarajan.

******************

 

ஒன்றுக்கும் உதவாத உதிய மரமே

(தினமணி, 29-11-1977)

தஞ்சை, நவ.27 (1977): தஞ்சை மாவட்டத்தில் புயல் வீசி மரங்கள் சாய்ந்தன. இவைகள் சாலைப் போக்குவரத்தைப் பாதித்ததால், சாலையின் குறுக்கே விழுந்து கிடக்கும் மரங்களை பொது மக்கள் இலவசமாக எடுத்துச் செல்லலாம் என்று கலெக்டர் அறிவித்தார். உடனே ஏழை எளிய மக்கள் அவைகளை வெட்டி வீட்டுக்குக் கொண்டு சென்றனர். சில அரசு ஊழியர்கள் பணி முடிந்த்ததும் ஒரே வெட்டில் வெட்டக் கூடிய உதிய மரங்களை வெட்டி, சைக்கிளின் பின்னால் பெரிய மரங்களாக வைத்துச் சென்றனர். அவர்களை சட்ட மன்ற கொறடா துரை கோவிந்தராஜன் வழிமறித்து ஏன் பெரிய மரங்களை கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டார். அவர்கள் ,”கலெக்டர் அறிவித்ததால் நாங்கள் எடுத்துச் செல்கிறோம்” என்று பதில் சொன்னார்கள். உடனே கொறடா, புளிய மரக் கிளைகளை எடுத்துச் சென்றாலும் அடுப்பு எரிக்க உதவும். இவைகள் உதிய மரங்கள். அடுப்பில் வைதாலும் எரியாது, புகை தான் வரும், ஒன்றுக்கும் உபயோகம் இல்லாதவர்களை “ ஒன்றுக்கும் உதவாத உதிய மரமே” என்று கிராமங்களில் சொல்லுவதை நீங்கள் கேட்டதில்லையா என்றவுடன் அவர்கள் வெட்கமடைந்து அந்த பெரிய மரங்களை சாலை ஓரமாக போட்டுவிட்டுச் சென்றனர். (தினமணி செய்தியின் சுருக்கம்).

உதிய மரமும் ஒதிய மரமும் ஒன்றும் என்று சொல்லுவார்கள். ஆனால் இரண்டுக்கும் வெவ்வேறு தாவரவியல் பெயர்கள் கொடுக்கப்பட்டிருப்பதால் அது சரியா என்று சொல்ல முடியவில்லை.

உதிய மரம் உத்தரம் செய்யக்கூட பயன்படாது என்று கிராமப்புறத்தில் பழமொழி உள்ளத்.. எதற்கும் ஆகாத ஆட்களை, ஆள் உதுயமரம் போல வளந்திருக்கானே தவிர ஒரு பிரயோஜனமும் இல்லை என்று அப்பா, அம்மாக்கள் அலுத்துக்கொள்வதையும் பார்க்கலாம்.

ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ? (பழமொழி)

 

உடம்பைக் கடம்பால் அடி

படம்: மதுரையின் ஸ்தல விருட்சமான கடம்ப மரம்

கடம்ப மரம் உடலுக்கு நன்மை பயக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. உடம்பைக் கடம்பால அடி என்ற பழமொழி இதற்குச் சான்று. மதுரை நகரத்தைக் கட்டுவதற்கு முன் அந்த இடம் ஒரு பெரிய கடம்பவனக் காடாக இருந்தது. ஒரு நாள் இரவில் தனஞ்செயன் என்ற வணிகன் அக்காட்டு வழியே செல்கையில் இரவு நேரத்தில் அதிசய ஒளியைக் கண்டான். இந்திராதி தேவர்கள் காட்டின் நடுவே இருந்த சிவலிங்கத்துக்குப் பூஜை செய்வதைப் பார்த்து மறுநாள் பாண்டிய மன்னனுக்கு அறிவிக்கவே அங்கே கோவில் கட்டினான் என்று ஸ்தல புராணம் கூறுகிறது. இன்றும் மதுரை மீனாட்சி கோவிலில் காய்ந்து போன ஒரு கடம்ப மரத்தை வேலி கட்டி பாதுகாத்து வருகின்றனர்.

(என் பாட்டி கடம்ப மரத்தால் செய்யப்பட்ட கட்டிலில் படுத்து உறங்குவாள். அவள் இறுதி மூச்சு வரை நோய் நொடி இல்லாமல் வாழ்ந்தாள். நாங்கள் எனக்குத்தான இறுதிக் காலத்தில் இந்த கட்டில் சொந்தம் என்று சகோதரர்களுக்குள் “ஜோக்” அடித்துக் கொள்வோம்! அக்கட்டில் இன்னும் மதுரையில் இருக்கிறது.)

 

பார்ப்பனர் மாமிசம் சாப்பிடுவார்களா?

உடும்பின் படம் (varanus exanthematicus, garden lizard)

நான் சொல்லுவது பழந்தமிழகப் பிராமணர்களைப் பற்றியது. இப்பொழுதுள்ள பிராமணர்களைப் பற்றி அல்ல!!

புலன் அழுக்கற்ற அந்தணாளன் என்று கற்றோராலும் மற்றோராலும் புகழப்படும் கபிலர் பாடிய சில பாடல்களில் (புறம் 113, புறம் 14) மாமிச உணவு பற்றிய செய்திகள் வருகின்றன. இதனால் பழைய தமிழ் நாட்டில் பார்ப்பனர்கள் மாமிசம் (இறைச்சி) உண்டனரா என்ற கேள்விகள் எழுந்தன. உலகப் புகழ் காளிதாசனும் விதூஷகன் வாயிலாக வரும் வசனத்தில் மாமிசம் பற்றிப் பேசுவான். இதற்கெல்லாம் நீண்ட விவாதங்களுக்குப் பின்னர் ஆன்றோர்களும் சான்றோர்களும் பதில் கூறிவிட்டனர்.

அதாவது ஒருவன் இறைச்சி உணவு பற்றிப் பாடியதால் அவர்கள் உண்டதாகாது என்றும் பல தமிழ்ப் புலவர்கள் தங்களையே பாணர்கள் போல உருவகித்துப் பாடியபோதிலும் அவர்கள் பாணர் சாதியினர் அல்ல, அந்தணரே என்றும் விடை கூறி, எடுத்துக் காட்டுகள் தந்து சமாதானப் படுத்திவிட்டனர்.

பத்துப் பாட்டில் ஒன்றான பெரும்பாணாற்றுப் படையில் பார்ப்பார் வீட்டை கோழியும் நாயும் கூட நெருங்காது என்று அவர்கள் தூய்மை பெரிதும் போற்றப்படுகிறது. அதே நூல் வரிகள் 302-310 ஐயர் வீட்டில் என்ன என்ன கிடைக்கும் என்ற “மெனு” வையும் கொடுக்கிறது:

இராசன்னம் (அரிசிச் சோறு)

வெண்ணெயில் வெந்த கொம்மட்டி மாதுளைத் துண்டு

(மிளகு பொடியும் கருவேப்பிலையும் கலந்தது)

மாவடு

இதைப் பாடிய உருதிரங்கண்ணானார் ஒரு அந்தணரே.

இது இப்படி இருக்க, நீண்ட நாட்களாக எல்லா உரைகளிலும் வரும் பழமொழிப் பாட்டின் ஒரு வரி புதிராகவே இருக்கிறது:

 

கள்ளி அகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்

எள்ளற்க யார்வாயின் நல்லுறையைத்—தெள்ளிதின்

ஆர்க்கும் அருவி மலை நாட ! நாய் கொண்டால்

பார்ப்பாரும் திண்பர் உடும்பு (பழமொழி நானூறு)

பொருள்: அருவி உடைய மலைநாடனே! பார்ப்பனரும் நாய் கவ்வியதாயினும் உடும்பின் தசையை அதன் உயர்வை எண்ணித் தின்பர். அதுபோல கள்ளியிடம் தோன்றும் அகிலையும் கரிய காக்கையின் சொல்லையும் அவை தோன்றிய இடத்தை எண்ணி இகழாது உயர்வாய்க் கருத வேண்டும்.

 

உடும்பு என்னும் பல்லி இனப் பிராணியை எந்த எந்த இனத்தினர் சாப்பிடுவர்? உடும்புக் கறிக்கு ஏதேனும் மருத்துவ சக்தி இருப்பதால் இப்படிச் சொன்னார்களா? அல்லது இதை அப்படியே பொருள் கொள்ளாது வேறு வகையில் பொருள் கொள்ள வேண்டுமா?

இது நீண்ட காலமாக விடை காணப்படாத ஒரு கேள்வி. விடை தெரிந்தால் எழுதுங்கள்.contact swami_48@yahoo.com