SILENCE IS GOLDEN- CHANAKYA (Post No.4569)

Written by London Swaminathan 

 

Date: 31 DECEMBER 2017 

 

Time uploaded in London- 15-29

 

 

Post No. 4569

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

It is said that ‘Speech is sliver and silence is golden’. But Chanakya goes one step further and says that one who eats in silence will have respect in heaven for ever.

 

Loot at the following sloka-9 in Chapter 11 0f Chanakya Niti:

One who has meals for a full year in silence gets respect in heaven for a thousand crore Yugas.

Yastu samvatsaram purnam nityam maunena bhunchati

yugakotisahasram tu svargaloke mahiyate.

 

A Swiss inscription says, “Sprehfien ist silbern, Schweigen ist golden’

 

These phrases are only a few centuries old. But Indian phrases are older than these.

 

There is some logic behind eating in silence and getting great benefits. Many of the times we don’t appreciate the good things in cooking done by wives or mothers. They do it well for 90 out of 100 days. But when it s not up to the mark in the ten out of 100 days we shout at them or at least we criticise them, saying this has no salt or this has too much salt, this is very spicy, this is very oily etc. If we eat in silence this would not happen. And both the cook and the person who took the food feel contented and happy.

 

In another sloka Chanakya says,

Silent Prayer

We all know the great saint of Tiruvannamalai Sri Ramana Maharishi cleared the doubts of thousands of devotees in silence. Even people like Paul Brunton (author of Search in Secret India) acknowledged that they got answers for their questions by simply in front of him, who most of the times maintained silence.

Chanakya says,

udyoge naasti darityam japato naasti patakam

maune cha kalaho naasti naasti jagarite bhayam

 

The meaning is.th exertion there is no poverty; one who offeres silent prayer incurs no sin. In silence there is no quarrel. For one who is wide awake there is no fear.

 

This advice is also very practical. If everyone maintains silence, the world will be a better place to live in. In silence there is no quarrel.

 

One who does prayer in silence, gets more benefit. In our own time we have seen Ramana Maharishi maintaining silence and helping the devotees. Many spiritual centres have meditation halls where silent prayer is encouraged.

Chinese philosopher Confucius said,

Silence is a true friend who never betrays.

Scottish philosopher Thomas Carlyle’s quotations are very popular:-   

 

“Silence is more eloquent than words.   

Speech is great, but silence is greater.   

Speech is of time, silence is of eternity”.

 

–Subham–

 

 

 

மௌனத்தின் மஹிமை: சாணக்கியன் ஆராய்ச்சி (Post No.4568)

Written by London Swaminathan 

 

Date: 31 DECEMBER 2017 

 

Time uploaded in London- 9-32 am

 

 

Post No. 4568

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

மௌனத்தின் மஹிமை: சாணக்கியன் ஆராய்ச்சி (Post No.4568)

உணவு அருந்த போது மவுனமாக இருக்க வேண்டும் யார் சொன்னார்? உலக மஹா அறிவாளி சாணக்கியன்

 

இதன் தாத்பர்யம் நமக்கும் புரியும். உப்பு போடவில்லை அல்லது உப்பைக் கூடுதலாகப் போட்டுவிட்டாய்; ஒரே புளிப்பு, ஒரே உரைப்பு என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மனைவியையோ அம்மாவையோ, ஹோட்டல் சர்வரையோ திட்டிக் கொண்டே சாப்பிடுபவர்களைக் கண்டுள்ளோம்.

 

இதில் இரண்டு ஆபத்துகள் உண்டு:

ஒன்று நம் கோபத்தால் உடலில் ஏற்படும் நாடித் தளர்ச்சி, AFRINALIN அற்றினலின் சுரப்பு ஆகியன உடல் நலத்தைப் ,,,,,,,,,,,,திக்கும்

இரண்டாவது ஆபத்து- உணவு பரிமாறுவோரின் உள்ளக் கிளர்ச்சியும் மன வருத்தமும் நம்மைக் கட்டாயம் பாதிக்கும்.

 

இதனால் சாணக்கியன் சொல்கிறான்:–

 

யஸ்து ஸம்வத்ச்ரம் பூர்ண நித்யம் மௌனேன முஞ்சதி

யுக கோடி ஸஹஸ்ரம் து ஸ்வர்கலோகே மஹீயதே

சாணக்கிய நீதி, அத்தியாயம் 11 , ஸ்லோகம் 9

 

பொருள்

எவன் ஒருவன் ஓராண்டுக் காலத்துக்கு மௌனமாக உணவு அருந்துகிறானோ, அவனுக்கு ஆயிரம் கோடி யுகங்களுக்கு ஸ்வர்க லோகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

 

இது கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகத் தோன்றலாம். ஆனால் இதன் உட்கருத்து மௌனமாக உண்க; மதிப்பு பெறுக – என்பதே.

 

பிராமணர்கள் தினமும் உணவை நீரினால் சுற்றி மந்திரம் சொல்லிச் சாப்பிடுவர். அதில் அந்த உணவை அமிர்தம் என்று போற்றுவர். இதனால் அவர்களின் ஆரோக்கியமும் மந்திர சக்தியும் பெருகியது.  சாப்பிட்டு முடியைந்தவுடன் ‘’அன்னதாதா சுகி பவ’’ என்று ஆஸீர்வதிப்பர்; உண்டி கொடுத்தோர் நீடுழி வாழ்க என்பது இதன் பொருள்.

 

கிறிஸ்தவர்கள் உணவை உண்ணும் முன், அதை வழங்கிய ஆண்டவனுக்கு நன்றி சொல்லிச் சாப்பிடுவர்.

 

முன்னோர்களின் சடங்குக்ள் உளவியல் ரீதியில் நற்பலன்களை விளைவிக்கும்.

 

நமது காலத்தில் மவுனத்தின் மூலம் அருள் வழங்கிய ரமண மஹரிஷியை நாம் அனைவரும் அறிவோம்.

 

மௌனப் ப்ரார்த்தனையின் மஹிமை

இன்னொரு பாட்டில் மௌனப் பிராத்தனையின் மஹிமையைச் சொல்கிறார்:

உத்யோகே நாஸ்தி தாரித்யம் ஜபதோ நாஸ்தி பாதகம்

மௌனே ச கலஹோ நாஸ்தி நாஸ்தி ஜாகரிதே பயம்

 

–சாணக்கிய நீதி, அத்தியாயம் 3, ஸ்லோகம் 11

 

முயற்சி திருவினை ஆக்கும்; அங்கே வறுமை தலைக் காட்டாது.  மௌனப் பிரார்த்தனை செய்பவனுக்குப் பாபம் ஒட்டாது; மவுனமாக இருக்கும் இடத்தில் சண்டை சசச்சரவுகள் தோன்றாது; விழித்திருப்பவனுக்கு அச்சம் என்பதே கிடையாது.

நல்ல ஸ்லோகம். கோபத்தில் சுடு சொற்களைப் பொழிந்துவிட்டு எவ்வளவு கஷ்டப்படுகிறோம்! எவ்வளவு வருத்தப்படுகிறோம். அதன் விளைவுகள் எவ்வளவு பயங்கரமானவை? ஆட்சிகள் கவிழ்கின்றன; குடும்பங்கள் பிரிகின்றன. இதை எல்லாம் அறிந்தும் நாம் தவறிழைக்கிறோம்!

 

பிரார்த்தனையில் சிறந்தது மௌனப் பிரார்த்தனை. அதற்கு பன் மடங்கு சக்தி அதிகம். முதலில் உரத்த குரலில் சொல்லிப் பழகிவிட்டால் பின்னர் மௌனப் பிரார்த்தனை எளிதாகும்.ஜபம் என்பதே மௌனமாகப் பிரார்த்திப்பதே!

 

 

My old articles on Silence and Prayer.

 

ஜோதி | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/ஜோதி/

Translate this page

… மௌனம் அனுஷ்டிக்கிறார்களாம்! ஏனெனில் வாயைத் திறந்தால் சொல் குற்றம் வந்து விடுமோ என்று! யூத மதத்தை எடுத்துக் கொண்டால் அங்கும் சொற்களை ஜாக்கிரதையாகப் பிரயோகம் செய் என்றே கூறுகிறது. அதிலும் பிரார்த்தனைபுரிவதில் சொல்லுக்குள்ளே ஜோதியைக் …

பிரார்த்தனை, செய்வது எப்படி? – Tamil and Vedas

https://tamilandvedas.com/…/பிரார்த்தனை-செய்…

Translate this page

எனக்குச் செல்வம் வேண்டும்; நான் புகழ் பெற வேண்டும்; எனக்கு அதிகாரம் வேண்டும்; நான் அமைச்சராக வேண்டும், எனக்கு பிள்ளை பிறக்க வேண்டும், எனக்கு நோய் நீங்க வேண்டும் என்றெல்லாம் பலரும் கோவில் உள்ளிட்டபிரார்த்தனை ஸ்தலங்களில் பிரார்த்தனை புரிவதை …

Missing: மௌனப்

நீண்ட ஆயுளுக்கு வேதப் … – Tamil and Vedas

https://tamilandvedas.com/…/நீண்ட-ஆயுளுக்கு-…

Translate this page

நீண்ட ஆயுளுக்கு வேதப் பிரார்த்தனை! (Post No.4206). Written by London Swaminathan. Date: 12 September 2017. Time uploaded in London- 17-35. Post No. 4206. Pictures are taken from various sources; thanks. வேத கால நிஷிகள் என்ன வேண்டினர் என்று ஒரு கட்டுரையில் கண்டோம். உலகின் பழமையான நூலில் மனிதனின் ஆயுள் 100 ஆண்டு …

 

 

–SUBHAM–

பிள்ளைமார் வாழ்க! (Post No.4567)

Picture of Meenakshi sundaram pillai from wikipedia

 

Date: 31  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-38 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4567

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

தேசம், தெய்வம், தமிழ் போற்றிய உத்தமர்கள்

 

பிள்ளைமார் வாழ்க!

 

ச.நாகராஜன்

 

1

இந்தக் கட்டுரையின் தலைப்பில் ஒரு குறை இருக்கிறது. அதை இந்தக் கட்டுரையின் கடைசி வரியில் நிவர்த்தி செய்து விடுகிறேன்.

 

ஜாதிப் பேரைச் சொல்லலாமா என்று சிலர் ஆதங்கப்படலாம்.

அட, தமிழுக்கும், ஹிந்து மதத்திற்குகும் தேசத்திற்கும் தொண்டு இழைத்தவர்களைப் பாராட்ட ஜாதிப் பெயரைச் சொல்வதில் என்ன ஐயா, தவறு?

 

பிள்ளைமார் சமூகத்தை எடுத்துக் கொண்டால் அது ஆற்றிய பெரும் சேவையை பெருங் களஞ்சியமாக அல்லவா தொகுக்க வேண்டியிருக்கும்!

 

இருந்தாலும் ஒரு சில பெயர்களையாவது நினைத்துப் பார்க்கலாமே!

தமிழன் எப்போதும் நன்றி மறக்கமாட்டான், இல்லையா?

 

2

 

உலகில் சமீப கால வரலாற்றில் முறைப்படுத்தப்பட்ட ஆவணம் நிருபிக்கும் உத்தம அவதார புருஷர் வடலூர் வள்ளலார் என்று மிக்க பக்தியுடன் அழைக்கப்படும் வடலூர் இராமலிங்கம் பிள்ளை! (தோற்றம் 18-12-1822 ஒளி உருவமாக மறைந்த தேதி 5-12-1879) அவர்களின் அருட்பா பற்றி அறிமுகமே வேண்டாம். கொல்லாமையையும் அனைவருக்கும் அன்ன தானத்தையும் வலியுறுத்திய மகான் ஒளி உருவமாக மறைந்தார்.

அவரது பெருமையை முழுதுமாகச் சொல்ல முடியுமா, என்ன?

 

3

தமிழ் இலக்கியத்திற்கு மகத்தான சேவை செய்த ஏராளமானோரில் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நிறைய பேர்கள் உள்ளனர்.

 

சமீப காலத்தில் வாழ்ந்த மகா வித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களை மறந்தோம் என்றால் தமிழன் என்று சொல்லிக் கொள்ளவே லாயக்கில்லை என்பது உண்மை.

இவரது பெருமையை இவரது அற்புதமான சீடர் மஹாமஹோபாத்யாய உ.வே. சாமிநாதையர் விரிவாக எழுதியிருக்கிறார். (இரண்டு தொகுதிகள் உள்ள நூல்)

ஐயர், பிள்ளை என்ற ஜாதி பேதம் அங்கு இல்லை. தமிழால் பிணைக்கப்பட்டனர் இருவரும். தனது குருவின் பெருமையை இறுதி வரை ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தார் ஐயர் அவர்கள்.

 

பின்னாளில் வந்த பிசாசுகளே ஜாதி வேற்றுமையை எங்கும் கிளப்பி அது இன்று பெரிய பூதமாக மாறி நம்மை அழித்து வருகிறது.

 

மகா வித்துவான்  (தோற்றம் 6-4-1815 மறைவு 1-2-1876) சுமார் ஒரு லட்சம் பாடல்களைப் பாடியுள்ளார்.

 

ஒரு லட்சம் பாடல்கள்.

சற்று சிந்தித்துப் பாருங்கள்.

தமிழ் இலக்கணத்தின் அனைத்து அம்சங்களையும் சுட்டிக் காட்டி இறை புகழ் வெளிப்படுத்தும் ஒரு லட்சம் என்ற பிரம்மாண்டமான எண்ணிக்கை கொண்ட பாடல்களை அவர் யாத்துள்ளார்.

 

95க்கும் மேற்பட்ட புராணங்கள், இதர இலக்கியங்கள்!!

தமிழுக்குப் பெருமை! தமிழருக்குப் பெருமை!! பொதுவான இலக்கிய உலகிற்கே உலகளாவிய அளவில் பெருமை.

 

பிள்ளைமார்களுக்கும் பெருமை (ஆனால் சரியான விதத்தில் அவரைக் கொண்டாடாமல் விட்டு விட்டார்களோ!)

கவிச் சக்கரவர்த்தி கம்பன் பத்தாயிரம் பாடல்களைப் புனைந்து கவி சிகரத்தில் ஏறினான்.

 

ஆனால் மகா வித்துவானோ ஒரு லட்சம் பாடல்களைப் புனைந்துள்ளதால் அவரை “பத்துக் கம்பன்” என்று அழைக்கிறார்கள்.

இவரை என்ன சொல்லிப் புகழ? என்ன பட்டம் தந்தாலும் அது சற்று சிறிதாகத் தானே இருக்கும்!

 

4

அடுத்து இசையும் தெய்வமும் தமிழருக்கு ஒன்றே!

இசை உலகில் மிக பிரம்மாண்டமான அரிய சாதனை புரிந்த ஒரு சக்கரவர்த்தி இருக்கிறார்.

 

அவர் தான் நாதசுர சக்கரவர்த்தி!

திருவாவடு துறை ராஜரத்தினம் பிள்ளை!

டி. என். ராஜரத்தினம் பிள்ளை ( தோற்றம் 27-8-1898 மறைவு 12-12-1956) அவர்களின் பெருமையை முற்றிலும் எழுத்தில் வடிக்க முடியுமா?

 

என் தந்தையார் (தினமணி வெ.சந்தானம் அவர்கள்) அவரைப் பற்றிக் கூறுகையில், “அவர் ஒரு இடத்தில் வாசிக்க வரப் போகிறார் என்றால் முன் கூட்டியே (தஞ்சை ஜில்லாவில்) அனைத்து கிராம மக்களுக்கும் தெரிந்து விடும். நடந்தும், வண்டி கட்டிக் கொண்டும் அலை அலையாக மக்கள் வருவர். பல மைல்களுக்கு அப்பால் வரும் போதே நாதசுரத்தின் சுநாதம் அனைவரையும் மயக்கும். மயங்கி நிற்போம்” என்று கூறினார்.

(இந்த சந்தர்ப்பத்தில் காருகுறிச்சி அருணாசலம் அவர்களும் அவரது மாப்பிள்ளை மௌனகுருசாமி அவர்களும் என் தந்தையார் மீது வைத்திருந்த மதிப்பையும் மரியாதையையும். பற்றையும், பாசத்தையும் இங்கு நன்றியுடன் நினைவு கூர்கிறேன்)

பெரிய புத்தகமாக எழுத வேண்டிய நாதசுர சக்ரவர்த்தியின் வாழ்க்கையில் ஒரு சிறிய பகுதியை இங்கு சுட்டிக் காட்ட விழைகிறேன்.

 

இதை எழுதியவர் நாமகிரிப் பேட்டை கிருஷ்ணன்.

கலைமகள் 1994ஆம் ஆண்டு தீபாவளி மலரில், “சுத்த மத்யமம் உத்தம மத்யமம் ஆனது எப்படி?” என்ற கட்டுரையில் வரும் ஒரு பகுதியே இது:

இன்றைய நிலையில் இந்த நாகசுர வாத்தியத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் அவர் என்று சொல்லலாம்!

 

முன்பெல்லாம் – அதாவது திருவாவடுதுறையார் ஒழுங்கு பண்ணுவதற்கு முன்பாக, நாகசுரத்தில் சுத்த மத்யமம் பேசாது. வாசிப்பில் அது சுத்த மத்யமாகவும் இல்லாமல், பிரதி மத்யமாகவும் இல்லாமல், இரண்டிலும் சேராத – இரண்டுக்கும் இடைப்பட்டதாக – இரண்டும் கெட்டானாக, ஒன்று ஒலிக்கும்.

அதை எப்படி அழைப்பது? வித்வான் அதைச் செல்லமாக, செல்ல மத்யமம் என்று அழைத்தார்கள்!

 

ஆனால் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையவர்கள் நாகசுரத்தில் சுத்த மத்யம் சுகமாகப் பேசும். அது எப்படி? அது தான் பிள்ளையவர்கள் வாசிப்பில் மட்டுமல்லாது – வாத்தியத்திலும் செய்த புதுமை!

 

பிள்ளையவர்கள் என்ன செய்தார் தெரியுமா? நாகசுரம் தயார் செய்யும் ஆச்சாரியார் ஒருவரைத் தம்முடன் வைத்துக் கொண்டார். தம் கையில் ஒரு நாகசுரத்தை எடுத்துக் கொண்டார்.

 

துளைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கிப் போட்டுக் கொண்டே வந்தார். அவ்வப்போது அதில் வாசித்துப் பார்த்தார். ஒரு சின்னக் குழாய் மாதிரி செய்து நாகசுரத்தோடு பிட் அப் செய்து கொண்டார். வாசித்தார்; பல மாதங்கள், பல நாகசுரங்களை இப்படித் துளையிட்டு வாசித்து அசுர சாதனை செய்தார். முயற்சி வீண் போகவில்லை.

 

ஒரு நாள் சோதனையில் சுத்த மத்யமம். உண்மையிலேயே சுத்தமயமாக, உத்தமமாக வாசித்தது. பிள்ளையவர்களுக்குச் சந்தோஷம் பிடிபடவில்லை. அந்த நாகசுரத்தையே வாசிப்புக்கு ஏற்ற நாகசுரமாக்கினார். வாசித்தார். வாழ்நாள் முழுதும் – இசையை உபாசித்தார்; நாதோபாசனை புரிந்தார்.

இன்று நாகசுர வித்வான்களுக்கு எல்லாம் அருமையான நாகசுரம் கிடைத்திருக்கிறது, அற்புதமாக வாசிக்கிறார்கள் என்றால், அது திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் கருணைக் கொடை என்று தான் சொல்ல வேண்டும்.

 

*

நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். எப்படிப்பட்ட இசை மேதையின் கடின உழைப்பையும் நாத உபாசனையையும் சுட்டிக் காட்டி விட்டார்!

 

 

5

கட்டுரை நீண்டு கொண்டே போகிறது. ஆனால் சொல்ல வந்த விஷயத்தில் மிகச் சிறிய அளவே இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.

ஆகவே, கட்டுரையின் அடுத்த பகுதியையும் எழுத வேண்டியது தான்!

 

அது சரி, கட்டுரை தலைப்பில் உள்ள தவறை நிவர்த்தி செய்கிறேன் என்றீர்களே, அதை செய்வீர்களா என்று கேட்கிறீர்களா.

 

‘இந்தக் கட்டுரையின் கடைசி வரி’ என்று எழுதி விட்டேன், அல்லவா, அதைச் செய்து தான் ஆகவேண்டும்.

காலக்ஸி போன்ற பிள்ளைமார்கள் நிரம்பி இருக்க அவர் தம் பெருமையை ஒரு கட்டுரையில் அடக்க முடியவில்லை.

தலைப்பில் பிள்ளைமார் வாழ்க என்று எழுதியதில் ஒரு வாழ்க

தான் இருக்கிறது. ஒரு வாழ்க எங்காவது போதுமா?

வாழ்க, வாழ்க, வாழ்க…. என்று அல்லவா எழுதி இருக்க வேண்டும்! இப்போது நிவர்த்தி செய்து விட்டேன், தவறை! பிள்ளைமார் வாழ்க, வாழ்க, வாழ்க…!!!

 

***         (அடுத்த கட்டுரை தொடரும்)

 

பாரதி போற்றி ஆயிரம் – 21(POST NO.4566)

Date: 31  DECEMBER 2017

 

Time uploaded in London-6-25 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4566

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 21

  பாடல்கள் 132 முதல் 134

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் பாடல்கள்

பாடல்கள் 132,133

பாரதி ஜயந்தி மலர்

 

ஆரியத்தில் செந்தமிழில் ஆங்கி லத்தில்

              அரியபல நூல்கள் ஆய்ந்து கற்ற

பேரறிஞர் எழுதுமெழுத் தோவி யங்கள்

       பெற்றபெரும் செல்வமெனப் பேணுமிந்தப்

 

           பாரதி ஜயந்தி மலரின் வாசம்

              பாரெங்கும் பரவிநிதம் பரிம ளிக்கச்

சீருயரும் காளிகட்டப் பதியில் வாழும்

              தேவிபரா சத்திபதம் சேவிப் போமே

(கல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் 1949)

 

பாடல் 134

பாரதி மண்டபம்

 

இராகம் – வஸந்தா        தாளம் – ஆதி

 

பல்லவி

மண்டபம் வாழ்கவே! – பாரதி

               மண்டபம் வாழ்கவே!           (மண்டபம்)

 

அநுபல்லவி

             தண்டமிழ் போல அவன்

                 தந்த கவிகள் போல

             எண்டிசையும் போற்றும்

                 இமைய மலையே போல    (மண்டபம்)

 

சரணம்

             பாரத சக்தி வளர் – பீடமாய்

                 பைந்தமிழ்க் காலயமாய்

             வீரசுதந்தி ரத்தின்

                 வெற்றி நிலைக் களமாய்

             சூரிய சந்திரர் இந்தத்

                 தொல்லுல குள்ளளவும்      (மண்டபம்)

 

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை: கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.

 

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.

****

 

Tamils and Chanakya attack Yavanas! (Post No.4565)

Roman wine picture

Research Article Written by London Swaminathan 

 

Date: 30 DECEMBER 2017 

 

Time uploaded in London- 8-18 am

 

 

Post No. 4565

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

Chanakya in his Niti Shastra attack Yavanas like the Tamils. One of the most powerful Tamil kings Imayavaramban Netuncheralathan punished Yavanas by shaving their heads and pouring oil on the heads 2000 years ago. (Please see full details in my earlier research articles in the links given at the bottom).

 

But who are the Yavanas?

 

In Tamil literature it denotes Romans and Greeks. In later Tamil literature, the words milecha and Yavanas were used for Romans, Greeks and Arbas may be Persians. Both Kalidasa and Tamil poet mentioned the Yavana wine. In Shakuntalam and Raghu Vamsa it refers to the wine produced by the Persians. Both Tamil and Sanskrit poets used them for guarding the harem, war camps and gates of the palaces. The Yavana women were used as maids in the palaces.

 

Let us look at what Chanakya says about the Yavanas (Greeks)  first!

 

“The wise who know the reality have proclaimed that even one Yavana is equal to thousands of Candalas (untouchables) There is no one more lowly than a Yavana”.

–Chanakya Niti , Chapter 8, Sloka 5

 

Chaadaalaanaam sahasraischa suuribistatvadarsibihi

eko hi yavanah prokto na niicho yavanaat parah

 

Satya Vrata Sastri who translated Chanakya Niti, says in the introduction:

“The Caanakya Niiti provides a good glimpse of the contemporary thinking. The time it was composed was marked by intense hatred for the Yavanas, the Greek or for that matter all the foreign invaders, who were out to subjugate the country with their life style running counter to that of the locals – mark the expression ‘Sayanaa Bhunchathe Yavanaah, ‘the Yavanas partake the food while lying’, a practice abhorring to high-bred Indians of the time.

 

The Yavanas through their unseemly behaviour, this is how one can infer it, invited on themselves the curse of the locals who would not take them kindly as evidenced by such expressions as ‘Dur yavanam’ which is cited in grammatical texts as an example of  the Avyayii Bhaava compound in the sense of vyurudhdhi (vi+ rudhdhi), the absence of prosperity of the Yavanas which was the wish of the then Indians.

 

It is the Yavanas who were picked for vyurudhdhi. The same feeling of intense revulsion for the Yavanas in the Caanakya Niiti Darpana also echoes when it says, ‘there is none more vile than the Yavana’.

 

Yavanas in Kalidasa

In the Vikramorvasiyam Yavanis (Act 5-2-7) are mentioned.

The commentator adds, “Ionian Greek girls were employed as servants in the courts of kings in ancient India. In the Shakuntala also (Act II) we find that  King Dushyanta’s retinue consists of several Ionian Greek girls and the sixth act of the same drama we have an ionian maiden whose duty is to carry the bow of the king wherever he goes.

 

In the Raghuvamsa, Kalidasa says,

 

यवनीमुखपद्मानां सेहे मधुमदं न सः|
बालातपमिवाब्जानामकालजलदोदयः ॥ ४-६१

yavanīmukhapadmānāṁ sehe madhumadaṁ na saḥ|
bālātapamivābjānāmakālajaladodayaḥ  || 4-61

 

yavanI mukha padmAnA.m sehe madhu mada.m na saH bAla Atapam iva abja AnAm a kAla jalada udayaH

  1. 61. saH=he that raghu; yavanI=of yavana females; mukha padmAnA.m= on faces, like lotuses – lotuses like faces; madhu mada.m= flush from drinks; a+ kAla= un, timely; jalada udayaH= cloud, arising; abjAnAm= for lotuses; bAla Atapam iva= young, sun, as with; na sehe= not, tolerated, removed – the flushes of drink from the faces of Yavana females.

Picture of Persian woman drinking

 

As to how an untimely cloud removes morning sunlight from the faces of just blooming lotuses, raghu has also removed the blooming flush of wine from the lotus-like faces of yavana women when he encountered their men. [4-61]

 

The yavani-s spoken of by kAlidAsa seem to be of Persian and other races on the north-west of India. Viewing them to be Greek or Ionians is only too far-fetched. – KMJ

 

Another drama of Kalidasa, Malavika Agnimitram, also refers to the Yavanas.

 

Hundreds of Tamil words are in ancient Greek (see my previous posts)

 

Tamil literature also talks about Yavana wine. The commentators said that it was Roman wine. When we look at Kalidasa it looks like Tamils also used Persian wine.

 

We have very clear proof for the contact with the Greeks; Fragments of drama with Greek words were discovered in South India. In the North West of India, there was Indo-Greek rule for a long time after Alexander left Indian borders.

 

Other references are in my earlier articles:—

 

 

Barhut sculpture of a Yavana; 2300 year old.

yavanas in Hindu literature | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/yavanas-in-hindu-literature/

Yavanas are described as men of harsh words by Ilango and a Brahmin poet Kumattur Kannanar and Mlechchas and Turks by commentator Adiyarkkunallar. 4.Ancestors of Tamil Chozas fought with “Black Yavana” during Lord Krishna’s time! 5.Vedic literature (Satapatha Brahmana) also described some people speaking …

தமிழ் பண்பாடு | Tamil and Vedas | Page 46

https://tamilandvedas.com/category/…/2/…:/tamilandvedas…/46/

 

31 Jul 2014 – Yavana in Puranas Mucukunta was an ancient king, who the Chozas claim as their ancestor. Later inscriptions and Tamil literature claim Chozas belong to the solar race. Sibi, who ruled North West India was also an ancestor of the Chozas according to Sangam Tamil literature(Purananuru). Mucukunda …

Who is a Mlecha? | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/who-is-a-mlecha/

 

In the Sangam Tamil literature we come across the word Mlecha in Mullaippaattu (line 66). Poet Napputhanar called the Yavanas as Mlechas. He described them as dumb who used only sign language. Lot of Roman or Greek bodyguards were used by the Tamil kings. Tamils called theYavanas (Romans) ‘mlechas’ …

 

–SUBHAM–

 

யவனர்களைத் தமிழர்களும் சாணக்கியனும் தாக்கியது ஏன்? (Post No.4564)

Image of Roman Wine

 

Research Article Written by London Swaminathan 

 

Date: 30 DECEMBER 2017 

 

Time uploaded in London- 7-54 am

 

 

Post No. 4564

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

 

யவனர்களைத் தமிழர்களும் சாணக்கியனும் தாக்கியது ஏன்? (Post No.4564)

 

 

யவனர்கள் யார்?, மிலேச்சர்கள் யார்? என்று மூன்று ஆண்டுகளாகச் சில ஆராய்ச்சிக்  கட்டுரைகளை எழுதிவிட்டேன். இப்பொழுது இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் போலவே சாணக்கியன் காலத்திலும் ‘யவன வெறுப்பு’ இருந்ததைக் காட்டும் பாடல் கிடைத்துள்ளது அதையும் பார்ப்போம். காளிதாசன் கவிதைகளைக் கண்ட போது ஒரு புதிய எண்ணமும் மனதில் உதித்தது. அதையும் சொல்லுவேன்.

 

எனது துணிபு

 

யவனர் என்பது கிரேக்க, ரோமானிய, பாரசீக, அராபிய இனங்களைக் குறித்தது.

 

யவனர் மீது இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் காலம் வரை இருந்த வெறுப்பு பின்னர் சிறிது சிறிதாகத் தணிந்தது.

 

யவனர்களை கடும் சொல் பேசுவோர், அவர்கள் காவல் வேலைக்கு உகந்தோர், அந்நாட்டு அழகிகள் அந்தப்புரத்தைக் காக்க உதவுவர்; நம் மொழி தெரியாததால் அரசு ரஹஸியங்களைப் பாதுகாக்க அவர்களை அரசனுக்குக் காவலாக வைக்கலாம், மதுபானம் கொடுத்து உபசரிக்க அந்த அழகிகளை அருகில் வைத்துக் கொள்ளலாம் என்ற தகவல்கள் தமிழ் , ஸம்ஸ்க்ருத நூல்களில் இருந்து தெரிகின்றன.

Image of Persian Wine

முதலில் சாணக்கியன் சொல்லும் செய்தியைக் காண்போம்:-

 

சாண்டாலானாம் ஸஹஸ்ரைஸ்ச ஸூரிபிஸ்தத்வதர்சிபிஹி

ஏகோ ஹி யவனஹ ப்ரோக்தோ ந நீ சோ யவனாத் பரஹ

 

 

 

 

“உண்மை நிலையை உணர்ந்த அறிஞர்கள் செப்பியது என்ன? ஒரு யவனன் ஆயிரம் சண்டாளர்களுக்குச் சமமானவன். யவனனை விடத் தாழ்ந்தது உலகில் எதுவுமே இல்லை”.

 

சாணக்கிய நீதி, அத்தியாயம் 8, ஸ்லோகம் 5

 

ஏன் இந்த வெறுப்பு? சாணக்கிய நீதி நூலை மொழி பெயர்த்த ஸத்ய வ்ரத சாஸ்திரி பகர்வது யாதெனில், இவர்கள் ஆட்சியைப் பிடிக்க வந்தவர்கள். மேலும் வெறுக்கத் தக்க பழக்க வழக்கங்களை உடையவர்கள் என்பதாகும்.

 

உண்மைதான் இந்துக்கள் வெறுக்கும் பசு மாமிசத்தைப் புசித்திருப்பர். அலெக்ஸாண்டர் இறந்தவுடன் 2300 ஆண்டுகளுக்கு முன்பு, வடமேற்கு இந்தியாவில் இந்திய-கிரேக்க வம்ஸத்தினரின் ஆட்சி நிலவியது. அவர்கள் படை எடுப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்.

 

மேலும் அவர்கள் படுத்துக் கொண்டே உணவு உண்பார்கள் என்பதும் ஸம்ஸ்க்ருத ஸ்லோகங்களில் உள்ளது; ‘’சயானா முஞ்சதே யவனாஹா’’ என்று ஸ்லோகம் உள்ளதால் அவர்களுக்கு ‘’துர்யவனம்’’ என்ற அடைமொழி (கெட்ட யவனன்) கொடுக்கப்பட்டது. மேலும் இந்த ‘’துர் யவனம்’’ என்பதை ஸம்ஸ்க்ருத வியாகரணத்தில் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை விளக்க எப்போதும் பயன்படுத்தினர். ஆக பழக்க வழக்கங்களாலும் கடும் சொற்களாலும் (மிலேச்ச பாஷை பேசியதாலும்) இவர்கள் தீண்டத் தகாதவர்கள் (சண்டாளர்) ஆனார்கள்.

 

நான்     இன்னும் ஒரு கருத்தையும் சேர்ப்பேன். ஆரம்ப காலத்தில் இவர்கள் மேலைக் கடற்கரையில் சென்ற நமது வணிகக் கப்பல்களைத் தாக்கிக் கொள்ளை அடித்திருப்பர். சந்திர குப்த மௌர்யன், அவனுக்குப் பின்னால் இமய வரம்பன் நெடுஞ் சேரலாதன் ஆகியோர் இவர்களை அடக்கி ஒடுக்கி வழிக்குக் கொண்டுவந்த பின்னர் கடுமை குறந்து இருக்கும்.

 

பாரஸிக மதுபானம்

என்னுடைய இன்னும் ஒரு ஆராய்ச்சி தமிழகத்துக்குப் பாரஸிக மதுபானம் வந்த செய்தியாகும். யவன அழகிகள் தமிழ் மன்னர்களுக்கு தங்கக் கிண்ணங்களில் மது பானம் வழங்கிய செய்தி சங்க இலக்கியத்தில் உள்ளது (கீழே எனது பழைய ஆய்வுக் கட்டுரைகளுக்கான லின்க் LINK உள்ளது. அவைகளில் சங்க இலக்கியம் பற்றிய விரிவான செய்திகள் காணக் கிடைக்கும்.

 

காளிதாசன் அவனது நாடகங்களான சாகுந்தலம், மாளவிகா அக்னிமித்ரம், விக்ரம ஊர்வஸீயம் ஆகியவற்றிலும் ரகு வம்ஸத்திலும் யவனர் பற்றிய பல காட்சிகளைத் தருகிறான்:

 

 

ரகுவம்ஸ ஸ்லோகம் இதோ:–

 

யவனீ முக பத்மானாம் ஸேஹே மதுமதம் ந ஸஹ

பாலாமிவாப்ஜானாம் அகால ஜலதோதுயஹ

ரகுவம்ஸம், அத்யாயம் 4, ஸ்லோகம் 61

 

 

பொருள்:

காலை வேளையில் சூரியன் உதயமானவுடன் தாமரை மலர்கின்றது. முன்பே செந்நிறம் பெற்றுள்ள தாமரை மலர்கள், சூரியனது இளம் வெய்யில் படும் பொழுது மேலும் அழகு பெறும். ஆயினும் மேகக் கூட்டம் வந்து ஒளியைத் தடுத்தால் அவை ஒளி குறைந்து காணப்படும் பாரஸீகப் பெண்களின் முகம் செக்கச் செவே என்று தாமரை போல உள்ளன. அந்த அழகிகள் மதுபானம் செய்து மேலும் அழகு பெற்றனர். ஆயினும் ரகு மன்னன், பாரஸீகம் (ஈரான் நாடு) மீது படை எடுத்து வருகிறான் என்ற செய்தியைக் கேட்டவுடன் வாடினர். ஏனெனில் மது பானம் செய்வதைத் தவிர்த்தனர்.

 

யவன என்பதற்கு வியாக்கியானம் செய்தவர்கள் கொடுக்கும் பொருள் பாரஸீகம்

 

இந்த பாரஸீக மதுதான் சங்கத் தமிழ் நூல்களிலும் பயிலப்பட்டது என்பது எனது துணிபு.

Yavana in Barhut Sculpture; 2300 year old.

ஸாகுந்தலம் என்னும் உலகப் புகழ் பெற்ற நாடகத்தில், இரண்டாம் காட்சியிலும் ஆறாம் காட்சியிலும் யவன ஸ்த்ரீகள் நடமாடுகின்றனர். மாமன்னன் துஷ்யந்தனின் படைகளுடன் வந்த பரிவாரத்தில் யவன அழகிகளும் இருந்தனராம் (இதைத் தமிழிலும் காண்கிறோம்). மன்னன் எங்கு எங்கெல்லாம் சென்றானோ அங்கெல்லாம் யவன மாது ‘வில்’லை எடுத்து வந்தாளாம்.

 

முற்கால மன்னர்களின் சபைகளிலும், அரண்மனைகளிலும் யவன மகளிருக்கு வேலைக்காரி வேலை கொடுக்கப்பட் டத்தை ஏனைய நாடகங்கள் காட்டுகின்றன. இதைத் தில் இலக்கியத்திலும் காண்கிறோம்.

 

ஆக யவனர்கள் என்பது கீழ் மட்ட வேலைக்காரர் அல்லது வேலைக் காரி என்ற பொருளிலேயே சாணக்கியனும் தமிழரும் பயின்றனர்.

 

 

காளிதாசனின் 200-க்கும் மேலான உவமைகள் சங்கத் தமிழ் நூல்களில் உபயோகிக்கப்பட்டதால் காளிதாசன், சங்க காலத்துக்கு முந்தையவன் என்பதைப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் காட்டினேன். இந்த பாரஸீக மது, யவன வேலைக்காரிகள் என்பதை இன்னும் ஒரு சான்றாகக் கொள்க!

 

 

Persia (Iran)

 

யவனர்கள் யார் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/யவனர்கள்-யார்/

 

ஆராய்ச்சிக் கட்டுரை வரைபவர்: லண்டன் சுவாமிநாதன் கட்டுரை எண்.:–1207; தேதி:- ஆகஸ்ட் 1, 2014. சங்க இலக்கியத்திலும் பிற்காலத்தில் எழுந்த சிலப்பதிகாரத்திலும்யவனர்கள் பற்றிய சில குறிப்புகள் உள்ளன. இவை பெரும் புதிராக உள்ளன. யார் இந்த யவனர்? எப்போது இந்த சம்பவங்கள் நடந்தன …

சங்க இலக்கியத்தில் யவனர் மர்மம்! | Swami’s …

swamiindology.blogspot.com/2014/08/blog-post.html

1 Aug 2014 – சேரர்கள் – யவனர் மோதல் மர்மம் நீடிக்கிறது. சேர மன்னர் ஆண்ட யவனர் நாடோ, கைகளைப் பின்னால் கட்டி தலையில் நெய் ஊற்றப்பட்ட யவனர்கள் யார் என்பதோ தெரியவில்லை.இதே போல புராணங்களும் சகர மன்னன், யவனர்களைப் பிடித்து மொட்டை அடிக்கச் செய்தான் என்று …

“மிலேச்ச” என்றால் என்ன? | Tamil and Vedas

https://tamilandvedas.com/2012/…/மிலேச்ச-என்றால…

  1. 6 Sep 2012 – பலுச்சிஎன்பது மிலேச்ச என்று மாறியது என்று சில மொழி இயல் அறிஞர்கள் வாதிடுவர். கிரேக்கர்களும் கூட தங்கள் இனத்தைச் சேராதோரை ‘பார்பேரியன்ஸ்’ என்று அழைத்தனர்.

மிலேச்சர்களை அழிக்கும் கல்கி …

https://tamilandvedas.com/…/மிலேச்சர்களை-அழி…

21 Mar 2015 – … ‘மிலேச்ச பாஷை’யும் அல்ல என்பது இக்கட்டுரையின் துணிபு. முந்தைய கட்டுரைகள்:–. MLECHA: Most Misunderstood Word (Posted on 3 September,2012). “மிலேச்சஎன்றால் என்ன? (Posted on 6 September,2012) …

 

சுபம்–

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 11 (Post No.4563)

Date: 30  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-24 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4563

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 5 : கட்டுரை எண் 4327 – வெளியான தேதி 23-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 6 -கட்டுரை எண் 4355 – வெளியான தேதி 1-11-2017; மாக்ஸ்முல்லர் மர்மம் -7 கட்டுரை எண் 4385 – வெளியான தேதி  11-11-17; மாக்ஸ்முல்லர் மர்மம்-8 கட்டுரை எண் 4451 – வெளியான தேதி 2-12-17; மாக்ஸ்முல்லர் மர்மம் – 9 கட்டுரை எண் 4501 – வெளியான தேதி 16-12-17; மாக்ஸ்முல்லர் மர்மம் – 10 கட்டுரை எண் 4538 -வெளியான தேதி 24-12-17

இதனுடைய தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியாகிறது.

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 11

 

ச.நாகராஜன்

 

19

இந்தத் தொடரின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டோம்.

ஸ்வாமி விவேகானந்தர் மாக்ஸ்முல்லரைச் சந்தித்தது பற்றியும், அவரைப் பற்றிய ஸ்வாமிஜியின் அபிப்ராயத்தைப் பற்றியும் இப்போது பார்க்கப் போகிறோம்.

இதை வெவ்வேறு பகுதிகளிலிருந்து பார்ப்பதை விட அதிகாரபூர்வமான, அழகான, சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாற்றை எழுதிய சுவாமி ஆசுதோஷானந்தர் அவர்களின் நூலிலிருந்து பார்ப்பதே சாலச் சிறந்ததாகும்.

இரு பாகங்கள் அடங்கிய இந்த நூல் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை – 4 -இன் வெளியீடாகும்.

இதில் முதல் பாகத்தில் 723ஆம் பக்கம் தொடங்கி ஸ்வாமிஜி, மாக்ஸ்முல்லரைச் சந்தித்த விவரம் வருகிறது.

அதை அப்படியே கீழே தருகிறோம்.

20

இங்கிலாந்தில் சுவாமிஜி பேராசிரியர் மாக்ஸ்முல்லரைச் சந்தித்தார். அவரிடம் பெருமதிப்பு கொண்டிருந்தார் சுவாமிஜி. ‘தாம் வேதங்களுக்கு எழுதிய உரையைப் புதுப்பிக்க சாயணர் தான் இப்போது மாக்ஸ்முல்லராகப் பிறந்திருக்கிறார் என்று தான் எண்ணுகிறேன். நீண்ட காலமாகவே எனக்கு இந்தக் கருத்து இருந்தது. மாக்ஸ்முல்லரைப் பார்த்த பிறகு அது உறுதியாகிவிட்டது. இந்த நாட்டில் (இந்தியாவில்) கூட, வேத வேதாந்தங்களில் அவரைப் போல் அவ்வளவு உறுதியான, அவ்வளவு ஊறிப்போன ஒருவரை நீ காண முடியாது. அனைத்திற்கும் மேலாக, ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் அவருக்கு எவ்வளவு ஆழம் காண முடியாத பக்தி தெரியுமா! ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவதார புருஷர் என்பதை அவர் நம்புகிறார். நாம் அவரது விருந்தினராக இருந்த போது எவ்வளவு அற்புதமாக என்னை உபசரித்தார்! .. நான் பிரிந்து வரும் போது அவரது கண்களில் கண்ணீர் பெருகியது என்று ஒரு முறை சுவாமிஜி தமது சீடரான சரத் சந்திரரிடம் கூறினார் (ஞானதீபம் 6-57-58)

 

அதற்கு சரத் சந்திரர், “சாயணரே மாக்ஸ்முல்லராக பிறந்தார் என்றால் அவர் புனிதமான இந்தப் பாரத நாட்டில் பிறக்காமல் மிலேச்ச நாட்டில் ஏன் பிறந்தார்?” என்று கேட்டார். உணர்ச்சிவசப் பட்டவராக சுவாமிஜி பதிலளித்தார்:

‘அறியாமை காரணமாகவே மனிதன், “நான் ஆரியன், மற்றவர்கள் மிலேச்சர்கள்” என்று வேறுபடுத்துகிறான். வேதங்களுக்கே உரை எழுதியவரான,ஞானத்தின் பேரொளிப் பிழம்பான அவரிடம் வருணாசிரமப் பிரிவுகளும், ஜாதிப் பிரிவுகளும் இருக்க முடியுமா?” அவருக்கு இவையெல்லாம் முற்றிலும் பொருளற்றவை. மனித குலத்தின் நன்மைக்காக, தாம் விரும்பும் இடத்தில் பிறக்க அவரால் இயலும். கல்வி, செல்வம் இரண்டுமே உள்ள நாட்டில் பிறக்கவில்லை என்றால், இவ்வளவு பெரிய நூல்களையெல்லாம் அச்சிட்டு வெளியிடுவதற்கான பொருள் எப்படிக் கிடைக்கும்! ரிக் வேதத்தை வெளியிட அவருக்குக் கிழக்கிந்தியக் கம்பெனி ஒன்பது லட்சம் ரூபாய் கொடுத்தது உனக்குத் தெரியாதா? அது கூடப் போதவில்லை. இந்த நாட்டில் அதற்காக நூற்றுக்கணக்கான அறிஞர்களை மாதச் சம்பளம் கொடுத்து அமர்த்த வேண்டியிருந்தது. இந்தக் காலத்தில் அறிவுக்காக, ஞானத்திற்காக இந்தியாவில் யாராவது இவ்வளவு பணம் செலவழிப்பதைக் காண முடியுமா? கையெழுத்துப் பிரதியைத் தயாரிக்கவே இருபத்தைந்து வருடங்கள் ஆகியதாகத் தமது முன்னுரையில் மாக்ஸ்முல்லர் எழுதியுள்ளார். அச்சிடுவதற்கு, மேலும் இருபது ஆண்டுகள் பிடித்தன. தமது வாழ்வில் நாற்பத்தைந்து ஆண்டுக் காலத்தை, ஒரு நூலை வெளியிடுவதற்காகச் சாதாரண மனிதன் யாராவது கழிப்பானா? சற்று சிந்தித்துப் பார்! நான் அவரை சாயணர் என்று சொல்வது வெறும் கற்பனையா என்ன? (ஞானதீபம் 6-57-58)

 

இவ்வளவு தூரம் தாம் மதிப்பு வைத்திருந்த மாக்ஸ்முல்லரை சுவாமிஜி 1896 மே 28-இல் அவரது வீட்டில் சந்தித்தார். ‘என்ன அற்புதமான மனிதர் அவர்! சில நாட்களுக்கு முன்பு நான் அவரைச் சந்தித்தேன். சந்தித்தேன் என்பதை விட அவரை வணங்குவதற்காகச் சென்றேன் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் ஸ்ரீ ராமகிருஷ்ணரை நேசிக்கின்ற யாரையும் சென்று சந்திப்பதை ஒரு தீர்த்த யாத்திரையாகவே நான் கருதுகிறேன்’ என்று பிரம்மவாதின் பத்திரிகைக்கு எழுதினார் சுவாமிஜி.

 

சுவாமிஜி சந்தித்த போது மாக்ஸ்முல்லருக்கு 70 வயது ஆகியிருந்தது. அழகிய தோட்டத்தினுள் அமைந்திருந்தது அவரது சிறிய வீடு. சுற்றிலும் மரங்கள், செடிகொடிகள், பூக்கள் என்று அந்த இடம் எனக்கு பண்டைய முனிவர்களின் தபோவனமாகத் தோன்றியது. அவரும் அவரது மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போல் வாழ்ந்து வருகின்றனர். பிரம்ம ரிஷிகளும், ராஜ ரிஷிகளும், மாபெரும் வானப்ரஸ்தர்களும் வாழ்ந்த வாழ்க்கையையே எனக்கு அவர்கள் நினைவூட்டினர்…. இந்தியாவின் மீதும் வேதாந்தத்திலும் அவர் வைத்துள்ள ஈடுபாட்டில் பாதியாவது எனக்கு இருக்காதா என்று தோன்றுகிறது’ என்று தமது சந்திப்பைப் பற்றிக் கூறினார் சுவாமிஜி.

 

மாக்ஸ்முல்லரிடமிருந்து விடை பெறும்போது சுவாமிஜி அவரிடம், ‘நீங்கள் எப்போது இந்தியாவிற்கு வரப் போகிறீர்கள்?’ என்று கேட்டார். முதியவரான அந்த முனிவரின் முகம் மலர்ந்தது. கண்களில் கண்ணீர் ததும்பியது; மெதுவாகத் தலையை அசைத்தபடி அவர், ‘நான் இந்தியாவிற்கு வந்தால் என்னால் மீண்டும் இங்கே திரும்ப இயலாது. நீங்கள் என்னை அங்கேயே எரிக்க வேண்டியிருக்கும்’ என்று கூறினார்.

 

ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் அளவற்ற ஈடுபாடு கொண்டிருந்தார் மாக்ஸ்முல்லர். அவரது வரலாற்றை எழுத வேண்டும், அதற்கு சுவாமிஜி உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். சுவாமிஜியும் ராமகிருஷ்ணானந்தருக்கு எழுதி, அவருக்குத் தேவையான தகவல்களையும் குறிப்புகளையும் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

மாக்ஸ்முல்லரிடம் இவ்வளவு மதிப்பு வைத்திருந்தாலும் மாக்ஸ்முல்லர் உட்பட மேலை நாட்டு அறிஞர்கள் இந்தியா பற்றியும் அதன் ஆன்மீக, கலாச்சார பாரம்பரியத்தைப் பற்றியும் சரியாக அறிந்திருக்கவில்லை என்பது சுவாமிஜிக்குத் தெரிந்தே இருந்தது. மாக்ஸ்முல்லரும் தமது சில கட்டுரைகளில் இந்து மதத்தைப் பற்றியும் இந்தியாவைப் பற்றியும் சில உண்மையற்ற கருத்துக்களைக் கூறியிருந்தார். அதுபற்றி, ‘பேராசிரியர் மாக்ஸ்முல்லர் இந்து மதத்தைப் பற்றி எழுதுகின்ற எல்லா நூல்களிலும் இறுதியில் அதனைச் சிறுமைப்படுத்துகின்ற ஒரு கூற்றைச் சேர்த்து விடுகிறார் என்றாலும், நாளடைவில் முழு உண்மையையும் அவர் கண்டேயாக வேண்டும் என்று நான் நினைத்தேன். அவர் கடைசியாக எழுதியுள்ள வேதாந்தம் என்ற நூலின் பிரதி ஒன்றை முடிந்த அளவு விரைவில் பெறுங்கள்; அந்த நூலில் அவர் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வதை நீங்கள் காணலாம் – மறு பிறவி, மற்ற எல்லாவற்றையுமே ஏற்றுக் கொள்கிறார் என்று எழுதிகிறார் அவர். (ஞான தீபம் 10-156)

 

மொழியியலின் துணையுடன் மேலை நாட்டு அறிஞர்கள் வேதங்களின் காலத்தைக் கணித்திருப்பதும் சரியல்ல என்பதும் சுவாமிஜிக்குப் புரிந்திருந்தது. ‘வேதங்களைப் பற்றி மேலை அறிஞர்கள் கூறுகின்ற கருத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. அது இன்ன காலத்தைச் சேர்ந்தது என்று இன்று கூறுகிறார்கள். நாளையே அதத் தவரென்று தள்ளிவிட்டு, ஓராயிரம் ஆண்டுகள் முன்னால் கொண்டு வருகிறார்கள் என்று எழுதுகிறார் அவர். (ஞான தீபம் 5-427)

கருத்து என்னவாக இருந்தாலும் சுவாமிஜி இறுதி வரை மாக்ஸ்முல்லரிடம் வைத்திருந்த மதிப்பு மாறவில்லை.

 

**

மேலே உள்ளவை சுவாமி ஆசுதோஷானந்தர் எழுதிய சுவாமிஜியின் விரிவான வாழ்க்கை வரலாற்றில் உள்ளது.

இந்தத் தொடரின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டோம். எல்லா உண்மைகளும் நம்மிடம் இப்போது உள்ளன.

அவற்றை அலசி ஆராய்ந்து மாக்ஸ்முல்லர் மர்மத்தை விடுவிப்போம்.

அதற்கு முன்னர் சுவாமிஜி மாக்ஸ்முல்லரைப் பற்றிக் கூறியவற்றில் சில பகுதிகளை அப்படியே ஆங்கிலத்தில் பார்த்து விடலாம்.

****                                           தொடரும்

 

பாரதி போற்றி ஆயிரம் – 20 (Post No.4562)

Date: 30  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-11 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4562

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 20

  பாடல்கள் 126 முதல் 131

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் பாடல்கள்

பாரதி மண்டபம்

                    

தேவருமே இங்குவந்து செந்தமிழைக் கற்றினிய        பாவலராய் வாழமனம் பற்றுவரே – பூவுலகில்

வானுயரும் பாரதியார் மண்டபத்தை எட்டப்பன்

மாநகரில் கண்டு மகிழ்ந்து

வேறு

பாரதத்தாய் செய்தவப் பயனாய் வந்த

   பாவலன் சுப்பிரமணிய பாரதிக்குச்

சீருயரும் எட்டய புரத்திற் கண்ட

   திருக்கயிலை யனையமணி மண்டபத்தைப்

பேருவகை தருசர்வ ஜித்தில் கன்னி

   பிறந்தஇரு பானேழில் திறந்து வைத்தான்,

தாரணியில் வங்கவள நாட்டை யாளும்

   சக்ரவர்த்தி ராஜகோ பால மாலே

 

இலங்கைப் பாரதி சங்கம்

 

சீரியநல் லறப்பணிகள் பலவும் செய்து

    செந்தமிழை வளம்பெருகத் தினமும் பேணி

வீரசுதந் திரங்காத்துக் காந்தி யண்ணல்

   விதித்திடும்மெய் யன்புநெறி கடைப்பிடித்து,

தாரணியில் புகழோங்கும் தில்லைக் கூத்தன்

    தண்ணருளால் அழகியதென் இலங்கைத் தீவில்

பாரதியின் பெயர் போற்றும் இளைஞர் சங்கம்

    பல்லாண்டு பல்லாண்டு வாழ்க மாதோ! 

 

பாரதி தமிழ்ச் சங்க மலர்

 

 

அப்பாலுக் கப்பால்நின் றாளும் பெருமாளே

ஒப்பாரு மில்லா ஒருவனே – இப்பாரில்

பொங்கு புகழ் பாரதிபேர் போற்றும் இனியதமிழ்ச்

சங்கமலர் வாழவரம் தா

 

வங்க மகளின் திருமுகமாய்

   வாய்த்த காளி கட்டத்தில்

பொங்கு புகழ்சேர் பாரதிபேர்

   போற்றி வளரும் தமிழ்ச்சங்கம்

தங்கும் அன்பால் தந்தமலர்

   தரணிமீது வாடாமல்

எங்கும் அறிவின் மணம்வீ சி

   இனிது வாழ்க வாழ்கவே  

 

சீருயர் காளிகட்டத் திருநகரில் வளரும்

பாரதி தமிழ்ச்சங்கப் பைங்கொடி பூத்தமலர்

சூரிய சந்திரர்கள் தோன்றிடு காலமெலா

வாரிது சூழுலகில் வாழ்கவே

 

 

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை: கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.

 

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.

****

 

Twenty Qualities for Success: Chanakya’s Strange Advice (Post No.4561)

Written by London Swaminathan 

 

Date: 29 DECEMBER 2017 

 

Time uploaded in London- 8-03 am

 

 

Post No. 4561

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

Greatest statesman and astute politician who succeeded in establishing the largest empire in ancient India, Chanakya, gives a strange advice. He advises to learn 20 qualities for invincibility from animals and birds. But he is not the first one to use animals and birds for teaching. Dattatreya listed 24 Gurus from Nature. It is in the Bhagavata Purana.

 

 

Learn from Animals and Birds:

One should acquire one quality each from a lion and a crane, four of them from a cock, five of them from a crow, six of them from a dog and three from an ass.

—chapter-6, sloka 14, Chanakya Niti

 

If he has left it like this it would be a puzzle leading to different answers. But Chanakya, fortunately continued with more slokas giving the details

 

The first lesson one has from a lion, as they say, is that whatever work, big or small, one wants to accomplish, one should put in all efforts for it –sloka 15

 

A wise man should accomplish all things with a brake on his senses like a crane weighing the proper place, time and his own capacity – sloka 16

One should acquire four qualities from a cock: to wake up in time, to be ever ready for an assault, to distribute equally (what one has acquired) among his kith and kin, and eating a thing attained through self-attack- sloka 17

 

One should learn the following five from a crow:

Coitus in secret, insolence, accumulation of things from time to time, alertness and non-trust- sloka 18

 

Eating in good quantity, feeling satisfied with a little, good sleep, getting alert even with a feeble sound, loyalty to master, bravery – these six are the qualities that one should learn from a dog- sloka 19

One should acquire three qualities from an ass: however tired it may be, it goes on carrying load, does not care for cold or heat, moves about in all contentment – sloka 20

A person who follows these twenty qualities in the course of all types of his work, will become invincible- sloka 20

Panchatantra and Hitopadesa used only nature to teach the youths. Adi Shankara and others used plants and animals to illustrate their teachings. Tamils did not lag (Tirukkural, Viveka Chudamani, Divya Prabandam). They used the tortoise image to teach Self -control. We find it in Sanskrit literature as well in the Bhagavad Gita, Manu Smrti and other books.

 

Following is the link for my earlier articles on the subject.

 

Lessons from Nature | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/lessons-from-nature/

 

This type of learning started in the Vedic days. I have already written about what the Devas, Demons and Humans learnt from the Da,Da,Da sound from the Thunder. It is a parable in the Upanishad. I have also written about the connection between Dattareya and William Wordsworth two years ago (Dattatreya episode is in …

The Connection between William Wordsworth and Dattatreya | Tamil …

https://tamilandvedas.com/…/the-connection-between-william-wordsworth-and-dattatr…

10 Nov 2011 – Let Nature be Your Teacher ”–William Wordsworth and Dattatreya William Wordsworth was an English poet who lived from 1770 to 1850 in England. … The most interesting thing about Dattatreya is that he mentioned 24 natural objects or living beings as his teachers. … What did he learn from the nature?

-SUBHAM-

நாய் 6, காகம் 5, சேவல் 4 சொல்லிக் கொடுக்கும்! சாணக்கியனின் விநோத போதனை (Post 4560)

Written by London Swaminathan 

 

Date: 29 DECEMBER 2017 

 

Time uploaded in London- 7-15 am

 

 

Post No. 4560

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

 

உலக மஹா அறிவாளி,

உலகின் முதல் முழு நீளப் பொருளாதார புத்தகம் எழுதிய மேதாவி, அவிழ்த்த குடுமியை லட்சியம் நிறைவேறும் வரை  முடிய மாட்டேன் என்று  என்று வீர சபதம் செய்த பார்ப்பான்,

மகத சாம்ராஜ்யத்தை உருவாக்கியும் குடிசையில் வாழ்ந்த ஏழைப் ப்ராஹ்மணன்

சாணக்கியன் ஆவான்.

அவன்,  பர்த்ருஹரி, திருவள்ளுவன் போன்றோருக்கெல்லாம் முன்னதாக எழுதிய சாணக்கிய நீதியில் ஒரு புதிர் போடுகிறான். பின்னர் அவனே 6 ஸ்லோகங்களில் புதிரையும் விடுவித்து விடுகிறான்.

வாழ்க்கையில் வெற்றி பெற இந்த 20 குணங்களையும் ஒருவன் பின்பற்றினால் போதும் என்றும் சொல்கிறார்..

ஸிம்ஹாத் ஏகம் பகாத் ஏகம் சிக்ஷேச்சத்வாரி குக்குடாத்

வாயஸாத்பஞ்ச சிக்ஷேச்ச ஷட் சுனஸ்த்ரீணி கர்தபாத்

–சாணக்ய நீதி , அத்தியாயம் 6, ஸ்லோகம் 14

 

சிங்கத்திடம் இருந்தும் கொக்கிடமிருந்தும் ஒவ்வொரு குணத்தைக் கற்றுக்கொள்க;

சேவலிடமிருந்து நான்கு, காகத்திடமிருந்து ஐந்து, நாயிடமிருந்து ஆறு, கழுதையிடமிருந்து மூன்று குணங்களைக் கற்றுக் கொள்க.

 

இப்படிச் சொல்லிவிட்டு, சாணக்கியன் நிறுத்தி இருந்தால் ஆளாளுக்கு ஒவ்வொரு வியாக்கியானம் செய்திருப்பர். நல்ல வேளையாக அவரே பின் வரும் ஸ்லோகங்களில் விளக்கமும் சொல்லிவிடுகிறார்.

வாழ்க்கையில் வெற்றி பெற 20

குணங்கள்- சாணக்கியன் பட்டியல்

 

ஆனால் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி குணங்களைக் கற்பிப்பதில் இவர்தான் முதல்வர் என்று நினைக்க வேண்டாம். பாகவத புராணத்தில் 24 இயற்கைப் பொருட்களை, பிராணிகள், பறவைகளை குரு என்று தத்தாத்ரேயர் சொன்னதை முன்னரே கொடுத்துள்ளேன்.

 

விவேக சூடாமணியில் 13 இயற்கைப் பொருட்களை ஆசிரியராகப் பாடி இருப்பதையும் கொடுத்துவிட்டேன்.

 

வில்லியம் வோர்ட்ஸ்வர்த் (William Wordsworth) என்ற ஆங்கிலக் கவிஞன், புத்தகங்களைத் தூக்கி எறிந்து விட்டு இயற்கை அன்னையிடம் வாருங்கள்; எல்லா முனிவர்களையும் விட அதிகம் கற்றுக் கொடுப்பாள் என்று சொன்னதையும் எழுதிவிட்டேன்,

சாணக்யன் (370 BCE) சொல்லுவதைக் காண்போம்:-

 

ப்ரபூதம் கார்யமல்பம் வா யன்னரஹ கர்துமிச்சதி

ஸர்வாரம்பேண தத்கார்யம் சிம்ஹோதகம் ப்ரசக்ஷதே – 15

 

சிங்கத்திடம் கற்கும் முதல் பாடம்- சிறியதோ பெரியதோ, ஒரு காரியத்தைச் செய்து முடிக்க முழு ஆர்வத்தையும் ஈடுபாட்டையும்  காட்ட வேண்டும் – ஸ்லோகம் 15

 

இந்த்ரியாணி ச ஸம்யம்ய பகவத் பண்டிதோ நரஹ

தேசகாலபலம்ஞாத்வா ஸர்வகார்யாணி ஸாதயேத் –16

 

 

கொக்கு போல காத்திருந்து பெற வேண்டும்–தக்க இடம், தகுந்த காலம், தன்னுடைய சக்தி ஆகையவற்றைக் கொக்கிடம் கற்க.

ப்ரத்யுத்தானம்ச யுத்தம் ஸம்விபகம் ச பந்துஷு

ஸ்வயமாக்ரம்ய புக்தம் ச சிக்ஷேசத்வாரி குக்குடாத் –17

 

சேவலிடம் நான்கு குணங்களைக் கற்கவும்: அதி காலையில் எழுந்திருத்தல், தாக்குதலைச் சமாளிக்க ஆயத்த நிலையில் இருத்தல், கிடைத்ததைப் பகிர்ந்து கொடுத்தல், போட்டிக்கிடையே தானே சேகரித்து உண்ணல்.

கூடம் ச மைதுனம் தார்ஷ்ட்யம்  காலே காலே ச சம்க்ரஹம்

அப்ரமத்தம விஸ்வாசம் பஞ்ச சிக்ஷேச்ச வாயஸாத்– 18

 

கீழ்கண்ட ஐந்து குணங்களை காகத்திடம் கற்கவும்: ரஹசியமாக புணர்தல், துடுக்குத்தனம்,  காலாகாலத்தில் சேகரித்து வைத்தல், கவனமாக/ உஷாராக இருத்தல், மற்றவர்களை எளிதில் நம்பாது திருத்தல்

பஹ்வாசீ ஸ்வல்பஸந்துஷ்டஹஸுனிதோ லகுசேதனஹ

ஸ்வாமிபக்தஸ்ச சூரஸ்ச ஷடேதே ஸ்வானதோ குணாஹா-19

 

பொருள்

நல்ல அளவு உணவு அருந்தல், கொஞ்சம் கிடைத்தாலும் திருப்தி அடைதல், நன்றாகத் தூங்கல் , சிறிய சப்தம் கேட்டாலும் விழித்தல், விசுவாசமாக இருத்தல், துணிச்சல் ஆகிய குணங்களை நாயிடம் இருந்து கற்க வேண்டும்

ஸுஸ்ராந்தோபி வஹேத் பாரம் சீதோஷ்ணம் ந ச பஸ்யதி

ச்ஸந்துஷ்டஸ்சரதே நித்யம் த்ரீணி சிக்ஷேச்ச கர்தபாத் – 20

 

மூன்று குணங்களைக் கழுதையிடம் கற்கவும்: என்ன களைப்பு இருந்தாலும் தொடர்ந்து வேலை செய்தல், குளிர், வெப்பம் பற்றிக் கவலைப்படாது இருத்தல், எப்போதும் திருப்தியுடன் காணப்படுதல்.

 

ய ஏதான் விம்சதி குணானாசரிஷ்யதி மானவஹ

கார்யா அவஸ்தாஸு ஸர்வாஸு அஜேயஹ ஸ பவிஷ்யதி –21

 

எல்லா விதமான பணிகளிலும் ஒருவன் இந்த 20 குணங்களையும் பின்பற்றினால், அவனை வேறு யாரும் வெல்ல முடியாது.

சாணக்கியன் இந்த ஒரு நீதி நூலில் மட்டுமே 330-க்கும் மேலான கவிதைகளைப் பொழிந்துள்ளான், வேறு பல நூல்களிலும், உலகின் முதல் பொருளாதார நூலான அர்த்த சாஸ்திரத்திலும் ஆயிரத்துக்கும் மேலான பொன்மொழிகளை உதிர்த்துள்ளான்!

 

வாழ்க சாணக்கியன்!!! வளர்க அவர்தம் புகழ்!!!

 

சுபம்-