Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
பரிபாடலில் காளிதாசன் உவமை –‘சொல்லும் பொருளும்’
உவமைக்கு காளிதாசன் (உபமா காளிதாஸஸ்ய उपमा कालिदासस्य ) என்பது ஆன்றோர் வாக்கு .ஏழே நூல்களில் 1500-க்கும் மேலான உவமைகளைக் கையாண்டவன் காளிதாசன் .சொல்லையும் பொருளையும் — வார்த்தையையும் அதன் அர்த்தத்தையும் – எப்படிப் பிரிக்க முடியாதோ அப்படிப் பிரிக்க முடியாது சிவனையும் சக்தியையும் என்ற கடவுள் வாழ்த்துப்
தேவரையும் தாங்கும் பெரிய நிலைமையுடைய புகழ் அமைந்த இருங்குன்றம் சிறந்ததாகும்
கிருஷ்ணன் – கருப்பு; பலதேவன் – வெள்ளை ; ஆனால் அவர்கள் இருவரும் சொல்லும் போல இணை பிரிக்க முடியாதவர்கள் .இதை பாடியவர் இந்திரர் அமிழ்தம் பற்றி புறநானூற்றில் செய்யுள் பாடிய கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி ஆவார்.
XXX SUBHAM XXX
tags- பரிபாடல் , காளிதாசன் உவமை , சொல்லும் பொருளும்,
காலை முளைத்த கதிரே போற்றி, கயிலைமலையானே போற்றி போற்றி”
திருநாவுக்கரசர் திருநாமம் போற்றி, போற்றி!
ஆலயம் அறிவோம்!வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன். ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது விநாயகர், முருகனுடன் சிவ-பார்வதி உறைந்து பிரபஞ்சத்தை அருளாட்சி புரியும் ஸ்தலமான திருக்கயிலாயம் ஆகும். இந்தத் தலம் இமயமலையில் வடபால் மேற்குத் திபெத்தின் பகுதியில் அமைந்துள்ளது.டெல்லியிலிருந்து செல்வோர் முதலில் 750 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்திய சீன எல்லையில் உள்ள லிபுலெக்கை அடைந்து அங்கிருந்து 97 கிலோமீட்டர் வடக்கில் சென்று கைலாயத்தை அடையலாம். SWAMI_48@YAHOO.COM
இராவணன் தூக்க முயன்ற மலை எது? கங்கை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட பல புண்ய நதிகள் உற்பத்தியாகும் இடம் எது? இலக்குவன் உயிரைக் காப்பாற்ற அனுமன் தேடிச் சென்ற சஞ்சீவினி மூலிகை உள்ள இடம் எது? கர்ணனை குந்தி பெற்ற இடம் எது? சகுந்தலை வளர்ந்த ஆசிரமம் உள்ள இடம் எது? வேத வியாஸர் மஹா பாரதத்தை இயற்றிய இடம் எது? இது போன்ற நூற்றுக் கணக்கான கேள்விகளுக்கு ஒரே விடை, மஹாகவி பாரதியாரால் “மன்னும் இமயமலை எங்கள் மலையே மாநில மீதிது போற் பிறிதிலையே” என்று புகழப்படும், இமயமலைத் தொடர் பகுதி என்பதே ஆகும்!
காளிதாஸனால் நாகாதிராஜன் – மலைகளின் அரசன் என்று போற்றி புகழப்படும் இமயமலை ஹிந்துக்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் ஆகியோருக்கான புனித மலை.
இங்குள்ள திருக்கயிலாயம் உலகின் புண்ணிய பகுதிகளுக்கெல்லாம் புண்ணியம் தரும் தெய்வீக இடமாகும். இங்குள்ள இறைவர் : கயிலாயநாதர்; இறைவி: பார்வதி பிராட்டியார்; தீர்த்தம் மஹாசிவ தீர்த்தம்.
பிரம்மாவின் மனதில் தோன்றி இங்கு உருவான மானஸசரோவர் ஒப்பற்ற பளிங்கு நீர் போன்ற தூய நீர் கொண்ட உலகின் ஒரே அதிசய அற்புத ஏரி.
15060 அடி உயரத்தில் அமைந்துள்ள வட்ட வடிவமான இந்த ஏரியின் சுற்றுப்பாதை மட்டும் 88 கிலோமீட்டர் நீளம் கொண்டதாகும். இதன் அதிக பட்ச ஆழம் 300 அடி. ஒரு கூழாங்கல்லை இதனுள் போட்டால அது அடியில் அமிழும் வரை அதிசயிக்கத்தக்க விதத்தில் பார்க்கும் அளவு இதன் நீர் தூய்மையானது!
இங்கிருந்து கைலாய மலையைப் பார்க்கும் பக்தர்கள் பரவசப்பட்டு ஆனந்தமடைவர். 21778 அடி உயரம் கொண்டது இந்த தெய்வீக சிகரம். இதைச் சுற்றி வரும் பாதை 52 கிலோமீட்டர் நீளம் கொண்டது. ஒரு நாளில் இதைச் சுற்றி வருவதாக விரதம் மேற்கொண்டோர் அரும்பாடுபட்டு இந்த கிரிவலத்தை முடிப்பர்.
ஆக்ஸிஜன் அளவு மிக குறைவாக இருப்பதாலும் மிக உயரமான இடத்தில் பனிமலையில் நடக்க வேண்டியிருப்பதாலும் இந்த புனித யாத்திரை சற்று சிரமமான யாத்திரையே! இந்த யாத்திரையில் பக்தர்கள் sub zero எனப்படும் மிக குறைந்த உஷ்ணநிலையில், நகரும் பனிப்பாறைகளின் மீது, நடந்து செல்ல வேண்டியிருக்கும். பனிப்பாறைகள் ஒரு நாளைக்கு ஒன்பது அங்குலமே நகர்கிறது என்பதால் இதன் மீது நடக்கும் போது பயம் இருக்காது. ஒரு எடுத்துக்காட்டு சொல்வதென்றால் இங்குள்ள ரக்தவர்ண பனிப்பாறை 13 கிலோமீட்டர் நீளமுள்ளது.மிக அதிக உயரத்தில் கடுங்குளிராக இருக்கும் போது ஏற்படும் மனம் மற்றும் உடல் பாதிப்பு பற்றிய விவரங்களை முன்னராகவே யாத்ரீகர்கள் தெரிந்து வைத்துக் கொள்ளுதல் இன்றியமையாததாகும். எங்கும் பனித் தோற்றம் என்பதால் SNOW BLINDNESS எனப்படும் பனித்தொடர் பார்வையின்மையைத் தடுக்க, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தலும் அவசியம். மானஸரோவர், ஹம்ஸ குண்ட், அம்ருத் குண்ட் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட புனிதமான ஏரிகள் இந்த இமயப் பகுதியில் உள்ளன. SWAMI_48@YAHOO.COM
இமயமலை, கைலாய சிகர யாத்திரை என்பது ஒரு தெய்வீக யாத்திரை! லக்ஷக் கணக்கான பக்தர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக கைலாய, மானஸ சரோவர் யாத்திரையை மேற்கொண்டு சிவபிரானின் அரிய தரிசனமான கைலாய தரிசனத்தைப் பெற்றுக் கைலாய யாத்திரையை முடித்துப் பெரும் ஆனந்தம் அடைந்து வந்திருக்கின்றனர். முக்திக்கு ஒரு யாத்திரை இந்த கைலாய யாத்திரையே!மானஸசரோவரை அடைய மூன்று பாதைகள் உண்டு. ஒன்று சிக்கிம் வழியாகப் போவது, இரண்டாவது உத்தர்கண்ட் வழியாகச் செல்வது, மூன்றாவது நேபாளத்தில் உள்ள காத்மாண்டு வழியாகச் செல்வது. இந்த மூன்று பாதைகளும் கடினமான மிக நீளமான பாதைகள். இப்போது சென்ற ஆண்டு அதாவது 2020இல் ஒரு புதிய பாதையை இந்திய அரசு அமைத்து இந்த யாத்திரையை மிக மிக எளிதாக்கியுள்ளது.சுந்தரர், ஔவையார், சேரமான் பெருமாள், பெருமிழலைக் குறும்பர் நாயனார் உள்ளிட்ட ஏராளமான மகான்கள் கைலைப் பயணம் மேற்கொண்டதை பல நூல்களும் சிறப்புறக் கூறும். அப்பர் கைலை தரிசனத்தை திருவையாற்றில் பெற்ற வரலாறு அனைவரும் அறிந்த ஒன்றே.
இந்த தலத்திற்கு திருஞானசம்பந்தர் இரு பதிகங்களையும் திருநாவுக்கரசர் மூன்று பதிகங்களையும் சுந்தரர் ஒரு பதிகமும் அருளி உள்ளனர். SWAMI_48@YAHOO.COM
அருணகிரிநாதர் ஆறு திருப்புகழ் பாடல்களை அருளியுள்ளார்.
காலம் காலமாக பக்தர்கள் வழிபட்டு வரும் திருக்கயிலாயநாதரும் பார்வதி தேவியும், அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறொம்.
“போர் ஆர் கடலில் புனல் சூழ் காழிப் புகழ் ஆர் சம்பந்தன்
கார் ஆர் மேகம் குடிகொள் சாரல் கயிலைமலையார் மேல்
தேரா உரைத்த செஞ்சொல் மாலை செப்பும் அடியார் மேல்
வாரா பிணிகள், வானோர் உலகில் மருவும் மனத்தாரே” நன்றி வணக்கம்!
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U WANT THE ARTICLE IN WORD FORMAT, PLEASE CONTACT US
PICTURES ARE FROM KALKSHETRA POST; THANKS
யோகவாசிஷ்டம் கூறும் மனம் பற்றிய கதை!
ச.நாகராஜன்
மஹரிஷி வால்மீகி இயற்றி அருளியுள்ள யோகவாசிஷ்டத்தில் மனம் பற்றிய ஒரு அருமையான கதை வருகிறது.
அது இது தான்:-
அடர்ந்த காட்டில் ஒரு மனிதன் வசித்து வந்தான். தன் முதுகில் தானே இரும்புத் தடிகளைக் கொண்டு அடித்துக் கொண்டான் அவன். வலி தாங்கவில்லை. ஆவென்று அலறிக் கொண்டே வேக வேகமாக ஓடி ஒரு கிணற்றில் விழுந்தான்.பின்னர் சிறிது நேரம் கழித்து ஒருவாறாக எழுந்த அவன் மீண்டும் முள் நிறைந்த அடர்ந்த காட்டுப் பகுதிக்குள்
யோக வாசிஷ்டம் சம்ஸ்கிருதத்தில் அமைந்துள்ள ஒரு அற்புதமான நூல். இதில் 64000 வரிகள் உள்ளன அதாவது 32000 செய்யுள்கள் உள்ளன. மனம் மற்றும் எண்ண சக்தி ஆகியவற்றைப் பற்றி மிக அழகாக தகுந்த கதைகளுடன் சுவை படக் கூறும் நூல் யோக வாசிஷ்டம். வாழ்வியல் ரகசியங்களைத் தெரிந்து கொண்டு உயரிய நிலையை அடையத் துடிப்பவர்கள் நாட வேண்டிய ஒரே நூல் யோக வாசிஷ்டமே!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உலக இந்து சமய செய்தி மடல் 7-3-2021
இன்று மார்ச் 7-ஆம் தேதி — ஞாயிற்றுக் கிழமை ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கு விடைகளும் அளிக்கப்படுகிறது.
எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும் .
Xxxxx
ராமாயண கலைக்களஞ்சியம் வெளியீடு
ராமாயண கலைக்களஞ்சியத்தை உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் நேற்று வெளியிட்டார். இது E BOOK ‘இ புஸ்தக‘ வடிவில் உள்ளது. இதை அயோத்தியிலுள்ள ராமாயண ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டது.
அயோத்தி நகரில் ராமர் கோவில் கட்டும் தருணத்தில் இது வெளியா வதால் இதன் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. இதுவரை தெரியாத பல விஷயங்களை உள்ளடக்கி இருப்பதால் இதைப் படிப்போருக்கு அயோத்தி நகரத்தைக் காண ஆவல் மிகும். இந்தியாவின் இரண்டு இதிஹாசங்களான ராமாயணமும் மகாபாரதமும் ஒளிமயமான பாரத நாட்டை வருணிக்கின்றன. நல்ல வருங்கால இந்தியாவை இவை அறிவிக்கின்றன என்றார் யோகிஜி.
இந்தியாவின் ஏழு புனித நகரங்களில் அயோத்யா, மதுரா, காசி ஆகிய மூன்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருப்பது தனக்கு பெரு மகிழ்சசி தருகிறது என்றும் யோகி ஆதித்ய நாத் விளம்பினார்.
ராமர் கோயிலுக்கு கூடுதல் நிலம்
அயோத்தியில், ராமர் கோவில் வளாகத்தை விரிவுப்படுத்தும் வகையில், 7,285 சதுர அடி நிலத்தை, 1 கோடி ரூபாய்க்கு, ‘ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ அறக்கட்டளை வாங்கியுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, மத்திய அரசு, ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைத்தது. அயோத்தியில், 1,100 கோடி ரூபாய் செலவில், ராமர் கோவில், அருங்காட்சியகம், நுாலகம் உட்பட பலவற்றை கட்ட, அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
இதற்காக, நாடு முழுதும் மக்களிடமிருந்து, அறக்கட்டளை சார்பில் நிதி வசூலிக்கப்பட்டது. இதில், 2,100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலானது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, மத்திய அரசு, ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைத்தது. அயோத்தியில், 1,100 கோடி ரூபாய் செலவில், ராமர் கோவில், கட்ட, அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
இதற்காக, நாடு முழுதும் மக்களிடமிருந்து, அறக்கட்டளை சார்பில் நிதி வசூலிக்கப்பட்டது. இதில், 2,100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலானது.
Xxxx
அமேசான் தாண்டவ் மன்னிப்பு
‘’வீடியோ ஸ்ட்ரீமிங்’ தளமான அமேசான் பிரைம் வீடியோ இன்று தனது தாண்டவ் வெப் சீரீஸுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது. மேலும் பார்வையாளர்களால் ஆட்சேபிக்கத்தக்கதாகக் காணப்படும் காட்சிகளை ஏற்கனவே அகற்றிவிட்டதாகவும் கூறியுள்ளது.
சைஃப் அலி கான் மற்றும் முகமது ஜீஷன் அயூப் ஆகியோர் நடித்த அரசியல் சகா, கல்லூரி நாடக நிகழ்ச்சியை சித்தரிக்கும் ஒரு காட்சிக்கு பெரும் சர்ச்சை வெடித்தது.
இந்த நிகழ்ச்சி இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருந்த நிலையில் இது தொடர்பாக பல எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டது.
“சமீபத்தில் தொடங்கப்பட்ட தாண்டவ் என்ற கற்பனையான தொடரில் பார்வையாளர்கள் சில காட்சிகளை ஆட்சேபிக்கத்தக்கது என்று கூறியதால் அமேசான் பிரைம் வீடியோ மீண்டும் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறது. இது எங்கள் நோக்கம் அல்ல, மேலும் ஆட்சேபிக்கப்பட்ட காட்சிகள் எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டபோது அவை அகற்றப்பட்டன அல்லது திருத்தப்பட்டன.” என அமேசான் பிரைம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“நிபந்தனையின்றி மன்னிப்பு கோருகிறோம் என்று நிறுவனம் மேலும் கூறியது.
இந்து சமய தொண்டர்களும் இந்து சமய அமைப்புகளும் இந்தத் தொடருக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் ஆறு வழக்குகளைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது
2021 பிப்ரவரி 26ம் தேதிமுதல் வழிபாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது இதற்கு வித்திட்டவர் ஆசார்ய பிருகு கிரி மஹராஜ்.
சிவலிங்க வடிவிலான கோபுர உயரம் – 126 அடி சுற்றளவு -56 அடி
2003ம் ஆண்டில் கட்டிடவேலைதுவங்கியது. 2021ல் கோவில் உருவானது .
ஆதிகாலத்தில் சுக்ராச்சார்யார் தவம் செய்த இடம் இது.
5000 பேர் இடம்பெறும் பெரிய பரப்பு கொண்டது இந்தக் கோவில்.
***
நவகான் அல்லது பெர்பெரி என்னும் இடத்திலுள்ள இந்த ஆலயத்தின் பெயர் மகா மிருத்யுஞ்சய ஆலயம் ; அதாவது மரணத்தை வெல்ல வழிகாட்டும் சிவ பெருமானின் ஆலயம்.
250 தமிழ்நாட்டு புரோகிதர்கள், அர்ச்சகர்கள் வந்து இந்தக் கோவில் கும்பாபிஷேக யாக சாலை பூஜைகளை நடத்தினர். நாட்டின் உட்துறை அமைச்சர் அமித் ஷா இந்தக் கோவில் பூஜைகளில் கலந்து கொண்டார்.
கல்குளத்தை சுற்றியுள்ள 12 சிவாலயங்களுக்கும் சிவராத்திரி தினத்தன்று பக்தர்கள் “கோபாலா, கோவிந்தா” என்ற கோஷத்துடன் நடந்தும், ஓடியும் சென்று வழிபடுவார்கள். இந்த வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் 10-ந் தேதி தொடங்குகிறது.
சைவ-வைணவ ஒற்று மையை வலியுறுத்தும் வகையில் குமரியில் நடைபெறும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு சிவாலய ஓட்டம் ஆகும். இவ்வழிபாடு மாசி மாதம் நடைபெறுகிறது. சிவராத்திரியின் முதல் நாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவி உடை அணிந்து, பத்மனாதபுரத்தைச் சுற்றியுள்ள பன்னிரு சைவத் திருத்தலங்களையும் 24 மணி நேரத்தில் ஓடி வலம் வருகின்றனர்.
சிவாலய ஓட்டத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர். மேலும் இவ்வோட்டத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். கையில் ஓலை விசிறியுடனும் ஒரு சிறிய பண முடிச்சுடனும் ஓடுகின்றனர்.
கல்குளத்தை சுற்றி
1. திருமலை மகாதேவர் கோவில்
2. திக்குறிச்சி மகாதேவர் கோவில்
3. திற்பரப்பு மகாதேவர் கோவில்
4. திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில்
5. பொன் மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில்
6. திருப்பன்றிப்பாகம் சிவன் கோவில்
7. கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில்
8. மேலாங்கோடு சிவன் கோவில்
9. திருவிடைக்கோடு சடையப்பமகாதேவர் கோவில்
10. திருவிதாங்கோடு மகாதேவர் கோவில்
11. திருப்பன்றிக்கோடு மகாதேவர் கோவில்
12. திருநட்டாலம் சங்கர நாராய ணர் கோவில்
உள்பட 12 சிவாலயங்கள் உள்ளன.
இந்த 12 சிவாலயங்களுக்கும் சிவராத்திரி தினத்தில் பக்தர்கள், ‘கோபாலா….. கோவிந்தா….’ என அழைத்தவாறு நடந்தும், ஓடியும் சென்று வழிபடுவார்கள். சிலர், சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார், வேன் போன்ற வாகனங்களில் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த சிவாலய ஓட்டம் புதுக்கடை அருகே உள்ள முன்சிறை, திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்குகிறது.
xxxxxx
11 மாதங்களுக்கு பிறகு வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி
கோவையை அடுத்த பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் தென்கைலாயம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி ஆகிய நாட்களில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.
அவர்கள் மலையடிவாரத்தில் இருந்து மூங்கில் தடி உதவியுடன் செங்குத்தான 6 மலைகளை கடந்து 7-வது மலையில் சுயம்புவாக எழுந்தருளி உள்ள சிவலிங்கத்தை வழிபடுவார்கள். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக மார்ச் மாதம் 19-ந் தேதி முதல் வெள்ளியங்கிரி மலையேற வனத்துறையினர் தடை விதித்தனர்.
கொரோனா பரவல் குறைந்ததால், வெள்ளியங்கிரி மலையேற அனுமதி அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக இருட்டுப் பள்ளம் பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் வனத்துறையினர் ஆலோசனை நடத்தினர்.
அப்போது வருகிற மே மாதம் 31-ந் தேதி வரை வெள்ளியங் கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது என்றும், மலையேறும் வழியில் பழங்குடியினர் 40 கடைகள் அமைக்க அனுமதி அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பக்தர்கள் மூங்கில் தடியுடன் மலையேறினர். 11 மாதங்களுக்கு பிறகு வெள்ளியங்கிரி மலையேற அனுமதி அளிக்கப்பட்டதால், பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
Xxx
மகா சிவராத்திரி: ராமேசுவரம் கோவிலில் கொடியேற்றம்
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடி திருக்கல்யாண திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டின் மாசி மகாசிவராத்திரி திருவிழா 4-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கிய து.
இதை தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.
திருவிழாவின் 8-வது திருநாளான வருகின்ற 10-ந்தேதி வெள்ளி தேரோட்டம் நடைபெறுகின்றது. 11-ந்தேதி அன்று சுவாமி அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
xxxxx
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
7-3-2021 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH
Namaste , Namaskaram to Everyone
This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.
Read by SUJATHA RENGANATHAN .
XXX
This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at
ONE pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.
Even if you miss our live broadcast on SUNDAYS
you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day.
Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’
– Read by SUJATHA RENGANATHAN .
XXX
Yogi Adityanath launches Global Encyclopedia of Ramayana
Uttar Pradesh Chief Minister Yogi Adityanath on Saturday launched the Global Encyclopedia of the Ramayana and said that this epic and the Mahabharata give the best life lessons.
Stories in Hindu epics help us envision a better India, he said.
Asserting that historical facts cannot be denied, the chief minister said still there are some people who raise questions on the existence of Lord Ram in Ayodhya.
Launching the encyclopedia in an e-book format prepared by the Ayodhya Research Institute, the chief minister said the construction of the grand Ram temple at Ayodhya makes this launch of the Global Encyclopedia of Ramayana more special.
“This encyclopedia will motivate us to visit Ayodhya as it will introduce all to the untouched aspects of science and spirituality,” he said.
“There are Sapta Puri, seven holy cities, which are considered as the holiest Hindu pilgrimage sites. Out of these, Ayodhya, Mathura and Kashi are in Uttar Pradesh. It is a matter of pride for us that a workshop has been organised by the Department of Culture, in collaboration with the Ministry of External Affairs,” he said.
RAMA JANMA BHUMI EXTENSION
First extension of Ram Janmabhoomi premises; trust purchases 7,285 square foot land for Rs 1 crore
The land purchased by the trust is located next to the Asharfi Bhawan
The Ram Janmabhoomi Teerth Kshetra has purchased a 7,285 square feet land adjacent to the Ram Janmabhoomi premises here, in accordance with its plan to expand the temple complex area to 107 acres from the present 70 acres, an official of the trust said.
With Rs 2,100 crore in its kitty, Ram temple trust now mulling to launch global donation drive
The Ayodhya Ram temple trust is contemplating a global drive to collect donations after the ‘Samarpan Nidhi Abhiyan’ run by the Vishwa Hindu Parishad (VHP) volunteers concluded on February 27 with a collection of over Rs 2,100 crore.
According to Mahant Govind Dev Giri, the treasurer of the trust, a lot of requests were pouring in from Ram Bhakts living abroad to launch a global drive for collecting donations.
Giri said that a decision in this connection would be taken by the trust at a meeting of the trustees shortly. “Members will discuss modalities and protocol related to RBI, Finance Ministry, I-T regulations and clearances, to be followed for launching the ‘Samarpan Nidhi Abhiyan’ globally,” said one of the trustees.
It is to be recalled that the construction cost of the temple has been revised and pegged at Rs 1,500 after changes in its foundation designs. The Trust General Secretary Champat Rai said that more funds will be required for the expansion of the 70 acres temple complex.
Meanwhile, Iqbal Ansari, son of late Hashim Ansari, one of the oldest litigants of Ram Janamabhoomi- Babri mosque dispute, also donated for the temple construction through Gupt Daan (secret donation). Ayodhya-based Ansari donated an unknown sum on behalf of his late father, wife, son, daughter, and himself.
“The temple of Lord Ram will certainly consolidate unity and integrity. It will add a new chapter in the country’s cultural and secular fabric,” said Ansari refusing to divulge the amount he and his family donated.
XXXX
Amazon Prime Video apologises unconditionally for ‘Tandav’
Streaming platform Amazon Prime Video on Tuesday apologised “unconditionally” for its show “Tandav” and said it has already removed scenes found objectionable by viewers.
The political saga, starring Saif Ali Khan and Mohd Zeeshan Ayyub, attracted huge controversy for a scene depicting a college theatrical programme, leading to allegations that the show hurt religious sentiments and multiple FIRs.
“Amazon Prime Video again deeply regrets that viewers considered certain scenes to be objectionable in the recently launched fictional series ‘Tandav’. This was never our intention, and the scenes that were objected to were removed or edited when they were brought to our attention,” Amazon Prime said in a statement.
The cast and the crew of the Ali Abbas Zafar-directed series apologised twice.
Eventually, the team decided to cut the objectionable portions.
Hindu organisations objected to the series Tandav and filed six cases against them in different states.
XXXX
Muslim schoolgirl from Chhindwara learns Bhagavad Gita
Religion is no barrier in attainment of spiritual knowledge. Mushariff Khan from Madhya Pradesh’s Chhindwara district is a perfect example of this. The Class VIII student can recite shlokas from the Bhagavad Gita with much to the delight of her parents and teachers.
Mushariff started learning the holy Hindu scripture as part of memory retention training, and now she and her parents are proud that she has imbibed the best tenets of another religion.
The talented girl has learnt by heart 500 out of the total 701 shlokas in the Bhagavad Gita, using the memory retention technique taught by her Abacus and Vedic Mathematics teacher Rohini Menon.
“Mushariff is one of my best students. I gave her three options to showcase her memory retention technique: memorising the entire dictionary, the entire Constitution of India or the Bhagavad Gita. To the surprise of us all, she opted for learning the Bhagavad Gita. She started learning when she was in Class VI and has so far memorised 500 Sanskrit sholkas,” Menon told this newspaper.
Mushariff, whose father is a Mathematics teacher and mother a housewife, had joined the short course of Memory Retention under Menon two years back.
Proud of Mushariff’s achievement, her mother Zeenat Khan said, “Yes, we are Muslims. But we want to bring up our daughter in a manner that she grows up to be a noble human being ingrained with the best tenets of every religion.”
XXXXX
LARGEST SHIVA LINGA TEMPLE
The Maha Mrityunjay Temple situated in Nagaon, Assam is the world’s largest Shivalinga with a height of 126-feet.
The Puja Pran Prathishta Mahotsav of Maha Mrityunjay Temple started on February 22 and completed on February 25. The temple is opened for all the devotees from February 26.
The construction commenced in the year 2003 which was initiated by Acharya Bhrigu Giri Maharajas this was his place where he used to meditate. As per the mythological beliefs of the Maharaj, during the historic period, Shukracharya, the guru of the Daityas or Asuras performed religious rituals where the temple is situated.
On this auspicious and spiritual occasion, Amit Shah, the Union Home Minister visited Assam to participate in all the rituals
250 Tamil Priests from Tamil Nadu performed the rituals.
XXXX
NIOS to introduce Gita, Ramayana in 100 madrassas under new curriculum
Under its new curriculum, The National Institute of Open Schooling will be introducing epics such as Gita and Ramayana in around 100 madrassas across the country.
It includes 15 courses on the ‘Bharatiya Jnana Parampara’ or Indian Knowledge Tradition. The curriculum currently focuses on elementary classes 3, 5 and 8. The new courses under the program include Vedas, yoga, science, vocational skills, Sanskrit language, Ramayana and Mahabharata narratives, Bhagavad Gita teachings, and among others.
The study material for these courses was released by Union education minister Dr. Ramesh Pokhriyal and while releasing he mentioned, “India is a powerhouse of the ancient language, science and culture. India has all the capabilities to become a knowledge superpower with a rich and ancient heritage”
NIOS chairman said that NIOS New Curriculum would be introduced to 100 madrassas initially, and later, the programme will be extended to the 500 madrassas.
.
XXXX
Over Rs 1,500 crore spent on cow protection in three years: Rajasthan minister
Rajasthan Urban Development Minister Shanti Dhariwal on Friday said the state government has spent Rs 1,511.31 crore for the protection of cows in the past over three years.
The funds collected from stamp duty and VAT payable on liquor sale has been spent on the protection of cows, he said.
Replying to a supplementary question of BJP legislator Dharam Narayan Joshi during the question hour in the state Assembly, Dhariwal said as per the rules, funds are sanctioned whenever a demand is raised.
XXX
TTD not to take over temples hereafter due to fiscal burden
The Tirumala Tirupati Devasthanams (TTD), hereafter, will not take over temples. The TTD had taken over 32 temples from 1982.Speaking to the media on the sidelines of Dial Your EO Programme held in Tirumala on Friday, TTD Executive Officer KS Jawahar Reddy said a decision to this effect was taken in the Trust Board meeting after a lengthy discussion.
The TTD, however, will extend all possible cooperation and financial help to temples for development of infrastructure and pilgrim amenities though it will not take over them hereafter, the EO said.
The temple should be an ancient one or it should be rich in sculpture or having other significance to extend financial aid by the TTD, the EO said.
XXXX
Will not participate in ‘shahi snan’ in Yamuna unless water is clean: Hindu seers
Underlining the Yamuna’s acute water pollution, three prominent Hindu seers of the country on Saturday vowed not to take another bath on other ‘shahi snan’ days during the ongoing Vrindavan Kumbh near here unless the river water is clean.
The declaration to boycott the ‘shahi snan’ in the river on three remaining auspicious days — March 9, 13 and 25 — and thereafter during subsequent Kumbh fairs was made by the chief of the Ayodhya-based Maha Nirvani Akhara, Mahant Dharm Das.
Mahant Dharam Das made the declaration in presence of the chiefs of two other Vaishnavi akharas, Maha Nirmohi and Maha Digambar akharas.
The Mathura district administration had promised to arrange for clean water in the river at its Devraha Ghat during the Vrindaban Kumbh by discharging additional water from the Ganga but nothing appears to have been done, he said.
XXX
THAT IS THE END OF ‘AAKAASA DHWANI ’ HINDU NEWS BULLETIN BROADCAST FROM LONDON –
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us. ‘குருடற்கு குருடர் வழிகாட்டியது போல’ என்ற உவமை சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய உபநிஷத நூல்களில் கையாளப்பட்டது. பின்னர் அது பாலி மொழியில் உள்ள பவுத்த மத நூல்களிலும் பைபிளில்
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஞானசம்பந்தர் அருளிய ஒரு நல்ல, நல்ல, நல்ல, நல்ல, நல்ல பதிகம்!
ச.நாகராஜன்
வாழ்வில் நமக்கு ஏற்படும் இடர்கள் ஒன்றல்ல; இரண்டல்ல; இந்த இடர்கள் ஏற்படுவதும் ஒரே ஒரு காரணத்தினால் மட்டும் அல்ல; சில நம்மால் கட்டுப்படுத்தப்படக் கூடியது; சில நம்மால் கட்டுப்படுத்த முடியாதவை; இயற்கையின் சீற்றங்கள் எதிர்பாராது நம்மை வாட்டுவதைச் சொல்லலாம்; இந்த இடர்களும் எதிர்காலத்தில் எப்போது வரும் என்பதையும் சொல்ல முடியவில்லை, நம்மால்!
என்ன செய்வது, பரிதாபப் படுகிறோம். இதைப் பார்த்து மனம் கசிந்த திருஞானசம்பந்தர் மனித குல நன்மைக்காக ஒரு பதிகத்தை அருளியுள்ளார்.
அது தான் கோளறு திருப்பதிகம.
நமது வினைப் பயனால், கிரகங்களால் சில தீமைகள் நமக்கு ஏற்படுகின்றன.
வானத்தில் சில சமயம் பல கிரகங்கள் ஒரே ராசியில் ஒன்று கூடி மனித குலத்தையே ஓலமிட வைக்கின்றன.
சமீபத்திய கொரானா உலகையே ஆட்டி வைத்த- ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் – ஒரு கொடிய நோய், அல்லவா!
இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் கோளறு திருப்பதிகம், அதை ஓதுபவர்க்கு இன்னலை அகற்றும்; நன்மையைத் தரும்.
கோளறு திருப்பதிகம் பதினோரு பாடல்களைக் கொண்டது. அதை ஓதுபவர்க்கு என்னென்ன நலன்கள் எல்லாம் வரும் என்பதை அந்தப் பாடல்களிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
தீமை பயக்கும் அனைத்துமே அடியார்க்கு நல்லனவையாக ஆகும் அல்லது ஆக்கும் அற்புதம் அவரது இந்தப் பதிகத்தில் உள்ளது.
திருஞான சம்பந்தர் 385 பதிகங்களை அருளியுள்ளார். இதில் உள்ள மொத்தப் பாடல்கள் 4169 ஆகும். இந்தப் பாடல்களில் அவர் ‘நல்ல’ என்ற சொல்லை 134 இடங்களில் பொருள் பொதிந்து பயன்படுத்துகிறார்.
இந்த 134 இடங்களில் கோளறு திருப்பதிகத்தில் மட்டும் 41 இடங்களில் ‘நல்ல’ பயன்படுத்தப்படுகிறது. அதிலும் 11 பாடல்களில் முதல் பாடலிலேயே ஐந்து இடங்களில் ‘நல்ல’ என்ற சொல் வருவதைக் கண்டு அதிசயிக்கலாம்.
இந்தப் பாடலில் முதல் அடியில் ஒரு ‘நல்ல’. இறுதி அடியில் நான்கு ‘நல்ல’ ஆக மொத்தம் ஐந்து ‘நல்ல’ வருவதைக் காணலாம்.
இதர பத்துப் பாடல்களில் வரும் இறுதி அடிகள் இவை:-
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே (பா-2)
அரு நெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே (பா-3)
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே (பா-4)
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே (பா-5)
ஆள் அரி நல்ல நல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே (பா-6)
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே (பா-7)
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே (பா-8)
அலைகடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே (பா-9)
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே (பா-10)
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல அடியார் அவர்க்கு மிகவே (பா-2)
இந்த வரிகளில் 36 முறை நல்ல வருவதைக் காணலாம்.
ஆக முதல் பாடலில் 5 + மற்ற 9 பாடல்களில் 36, மொத்தம் 41 இடங்களில் நல்ல என்ற சொல் இந்தப் பதிகத்தில் இடம் பெறுவதைக் காண முடிகிறது.
எவையெல்லாம் தீங்கு பயப்பவையோ அவை எல்லாம் அடியார்க்கு நல்லனவாக ஆகி விடும்.
பெரிய பட்டியலே பதிகத்தில் இடம் பெறுகிறது.
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, பாம்பு இரண்டு.
ஆக நவகிரகங்கள் தீமையே செய்யாது; நன்மையே செய்யும்.
அடுத்து பயணத்திற்கு ஆகாது என்று விலக்கப்பட்ட நாட்கள் ஆயில்யம், மகம், விசாகம், கேட்டை, திருவாதிரை நட்சத்திரங்கள் வரும் நாட்கள் ஆகும்.
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடனாய நாட்கள் ஆகியவை நல்லதே பயக்கும் என்பது சம்பந்தரின் அருள் வாக்கு!
மொத்த நட்சத்திரங்கள் 27.
அதில் ஒன்பதாய் வரும் நட்சத்திரம் ஆயில்யம்!
ஒன்பதொடு ஒன்று – பத்தாவது நட்சத்திரம் மகம்!
ஒன்பதொடு ஏழு – பதினாறாவது நட்சத்திரம் விசாகம்!
பதினெட்டாவது நட்சத்திரம் கேட்டை.
ஆறாவது நட்சத்திரம் திருவாதிரை.
விலக்கப்பட்ட நாட்களும் கூட சிவனடியார்க்கு நல்லதையே செய்யும்.
அடுத்து மஹாலக்ஷ்மி, சரஸ்வதி,பூமி, திசை தெய்வங்கள் இவை அனைத்தும் நல்லனவற்றையே அருளும்.
அடுத்து கொதிக்கின்ற காலன், அக்னி, யமன், யமதூதர், ஏராளமான கொடிய நோய்கள் ஆகியவையும் தீமை பயக்காமல் அகன்று விடும்.
கோபம் கொண்ட அவுணர் கூட்டம், இடி, மின்னல், இன்னும் உள்ள பூதங்கள் ஆகியவையும் கூட சிவனடியாரைக் கண்டால் அஞ்சிடும்; தீமையைத் தராது.
புலி,யானை, பன்றி, நாகம், கரடி உள்ளிட்ட அனைத்து மிருகங்களும் தீமையைச் செய்யாது. நல்லனவாக ஆகி சிவனடியாரிடமிருந்து அகன்று விடும். வெப்பு நோய், குளிர், வாதம், பித்தநோய் ஆகிய எந்த வியாதியும் வந்து அடியாரைப் பீடிக்காது. இராவணன் போன்ற தீயவர்களால் வரும் கேடும் வராது. பிரம்மா, திருமால், வேதங்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள் நன்மையே செய்வர். எதிர்காலம் உள்ளிட்ட இன்னும் இங்கு சொல்லப்படாது உள்ள பலவும் நன்மையே செய்யும். ஆழ்கடல் நல்லது; அலைகடலும் நல்லதே!
நெற்றியில் இடும் திருநீறு மஹிமை வாய்ந்தது. திடமானது. அது அனைத்து இடர்களையும் எதிர்கொண்டு ஜெயிக்கும். அடியவர்க்கு நல்லதையே ஏற்படுத்தும்.
இது மட்டுமல்ல, இந்த கோளறு திருப்பதிகத்தை ஓதுபவர்க்கு ஒரு பெரும் பரிசாக ஒரு ஆணையை தாமே இட்டு உறுதி செய்கிறார் சம்பந்தர்.
“ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசு ஆள்வர்-ஆணை நமதே” என்கிறார்!
என்ன கம்பீரமான அதிகார தோரணையுடன் கூடிய சொற்றொடர்!
வானில் அரசு ஆள்வதற்கான இப்படிப்பட்ட ஒரு ஆணையை எல்லாம் வல்ல இறைவனே அல்லவா இட முடியும்.
அப்படி அதை இடுகிறார் – ஞானசம்பந்தனாக வந்து நடமாடிய தெய்வத் தமிழ் மகன்! முருகனே அல்லவா ஞானசம்பந்தர்!
ஐந்து ‘நல்ல’ உள்ள பாடலுடன் 41 ‘நல்ல’ தரும் இந்தப் பதிகத்தை ‘நல்ல, நல்ல, நல்ல’ என்று 41 முறை சொல்லி விட்டு நல்லன அருளும் பதிகம் இதுவே தான் என்று சொல்லலாம் இல்லையா!
ஓதுவோம் தினமும், நலன்கள் அனைத்தையும் பெறுவோம் எந்நாளும்!