Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பெண்களா யானையா என்று வியக்க வைக்கும் ஒரு சிற்பம் பெண்களா குதிரையா என்று வியக்க வைக்கும் வேறு ஒரு சிற்பம் என்று பல சிற்பங்களைப் படைத்து தமிழ் சிற்பிகள் தங்கள் படைப்புத் திறனை வெளிப்படுத்தியுள்ளனர் . இவை ஸ்ரீ வைகுண்டம் கோவிலில் உள்ளன ; இவைகளை வெளி உலகுக்குக் காட்டி பெருமை சேர்த்துக்கொண்டார் ஓவியர் சில்பி; அவர் வரையாத கோவில் இல்லை ; அந்தப் படங்களை/ ஓவியங்களைக் கண்டு வியக்காத தமிழன் இல்லை ; அவருடைய ஓவியங்களை வரைபடங்களை விகடன் பிரசுரம் நீண்ட காலத்துக்கு முன்னரே இரண்டு தொகுதிகளாக வெளியிட்டது .
கோவில்களுக்குச் செல்லும் பக்தர்கள் மனக் கவலை தீரவும் பல பதவிகளையும் வெகுமதிகளையும் எதிர் பார்த்தும் செல்வதால் இந்த அற்புத சிற்பங்களைக் கண்டுகொள்வதில்லை; அதற்கென தனிக் கண்கள் வேண்டும் வெறும் மனிதர்களையும் இயற்கையையும் மட்டும் வரையும் ஓவியர்கள் உலகெங்கிலும் உண்டு; ஆனால் தெய்வீக ஓவியங்களை /வரைபடங்களை வரைவோர் அபூர்வமே . தமிழகத்துக் கிடைத்த பொக்கிஷம் ஓவியர் சில்பி அவர்கள் ! எல்லாக் கோவில்களுக்கும் நாம் செல்ல முடியாவிட்டாலும் விளக்கத்துடன் கூடிய அவருடைய இரண்டு தொகுதிகளை பார்த்தாலே போதும் !. பார்த்தாலே போதும் பசி தீரும் ! உங்கள் அறிவுப்பசி தீரும் !
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படங்களைக் காணவும்.
ஸ்ரீ வைகுண்டம் கோவில்
–subham—
Tags- ஸ்ரீ வைகுண்டம் கோவில்,பெண்களா யானையா, பெண்களா குதிரையா , தமிழ் நாட்டின் அதிசய சிற்பங்கள் -1, ஓவியர் சில்பி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1
நாகர்- மாயா இன அற்புத ஒற்றுமைகள்- பகுதி 1, 2 என்ற தலைப்பில் இந்த பிளாக்கிலும் என்னுடைய புஸ்தகங்களிலும் எழுபது ஒற்றுமைகளை 15 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினேன் . அதில் ஒன்று:
பந்து விளையாட்டைத் தமிழ்ச் சிறுமியர் கைகளால் விளையாடினர். மாயாக்கள் கால்களால் பந்து விளையாடினர். வாலிபால் போல கைப்பந்து விளையாட்டுகள்
***
2
சங்க காலத்தில் தமிழ்ப் பெண்கள் விளையாட்டு என்ற தலைப்பில் கீழ்கண்ட செய்தியைத் தந்தேன்:
சங்க இலக்கியத்தில் பெண்களின் பூப்பந்து விளையாட்டினைக் கீழேயுள்ள பாடல்களில் காணலாம் :
பெறும்பாணாற்றுப்படை- line 335;
நற்றிணை – 47, 79;
பதிற்றுப்பத்து – 15-5;
பரிபாடல்- 8-106/7;
அகநானூறு – 17, 49, 66
புறநானூறு – 36
அந்தக் காலத்தில் திருமணமாகும் வரை பெண்கள் என்ன என்ன விளையாடினர் என்று ஒரு பாட்டின் மூலம் தெரிகிறது. இது முற்றிலும் சரி என்பது சங்கத் தமிழ் பாடல்களாலும், ராமாயண, மஹாபாரத நூல்களாலும் உறுதியாகிறது:-
மருங்குவளர் பூங்கா மலர்வாவி யூச
றிருந்துமணி செய்குன்று தேமா- விரும்பமுத
பானங்கிளி பூவை பந்துகன்னங் கழங்கன்ன மயின்
மான்முல்லை பந்தர் வளர்ப்பு
–உபமான சங்கிரஹம் இரத்தினச் சுருக்கம்
1.பூங்காவில் பூக்கள் பறித்து விளையாடினர்.
2.பொய்கை, கிணறுகளில் நீராடிப் பொழுது போக்கினர்.
3.வீட்டிலும் மரத்தடியிலும் ஊஞ்சல் கட்டி ஆடினர்.
4.பணக்காரர் வீடுகளில் செயற்கையாக குன்று எழுப்பி அதில் ரத்தினக் கற்களைப் பதித்துவைத்து அதன் மேல் ஆடி ஓடி சாடினர்.
5.தேமாமரம் விளையாடினர் (மாமரத்தில் ஏறி அல்லது கல் விட்டெறிந்து மாங்காய், மாம்பழம் எடுத்துச் சாப்பிடுதல்) .
6.அமிர்தம் போன்ற பானங்கள் செய்து குடித்தனர்.
7.காய்களை வைத்து கழங்கு ஆடினர்;
8.பூப்பந்து ஆடினர்.
9.கிளி, பூவை (சாரிகைப் பறவை), அன்னம், மயில் ஆகிய பறவைகள் வளர்த்து பொழுது போக்கினர்.
10.முல்லைப் பூச்செடிக்கு பந்தல் கட்டி வளர்த்து அதைப் பராமரித்தனர். முல்லை என்றால் அது போன்ற பிறவகை மலர்ச் செடிகளும் அதில் அடங்கும்.
***
3
பின்னர் ஆதி சங்கரரின் விவேகா சூடாமணியில் பந்து விளையாட்டு பற்றிய குறிப்புகளையும் சுட்டிக்காட்டினேன்.
Ball Game in Sankara’s Viveka Chudamani – Research Article on VC-42 (Post No.13,548)
WRITTEN BY LONDON SWAMINATHAN
लक्ष्यच्युतं चेद्यदि चित्तमीषद्
बहिर्मुखं सन्निपतेत्ततस्ततः ।
प्रमादतः प्रच्युतकेलिकन्दुकः
सोपानपङ्क्तौ पतितो यथा तथा ॥ ३२५ ॥
lakṣyacyutaṃ cedyadi cittamīṣad
bahirmukhaṃ sannipatettatastataḥ |
pramādataḥ pracyutakelikandukaḥ
sopānapaṅktau patito yathā tathā || 325 ||
ஆதி சங்கரர் எழுதிய விவேக சூடாமணியில் மனத்தின் இயல்பினை விளக் குகையில் ஒருவரின் மனம் கீழே செல்லத் துவங்கினால் அது மாடிப்பாடியில் விழுந்த பந்தினைப்போல கீழேயே படிப்படியாக, பிடிக்க முடியாமல் போகும் என்கிறார்; அருமையான உவமை; பந்து விளையாட்டினை விளையாடியோருக்கு இது நன்கு விளங்கும்!.
***
4
இப்போது கிடைத்த புதிய செய்திகள்- தமிழ்ப் பெண்களுக்கும் முன்னதாக பாண்டவர்களும் கெளரவர்களும் பந்து விளையாடிய சம்பவங்கள் ஆகும்.
ஆதி பர்வத்தில் வரும் சம்பவம் இது : பாண்டவர்களும் கெளரவர்களும் மிகவும் சின்னப் பையன்களாக இருந்தபோது காடு போன்ற பகுதியில் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர் ; அப்போது ஒருவர் அடித்த அடியில் பந்து கிணற்றுக்குள் விழுந்து விட்டது; அது தண்ணீர் இல்லாத வறண்ட கிணறு ; ஆனால் எல்லோரும் சிறுவர்கள் ஆனதால் ஏது செய்வதென்று அறியாமல் திகைத்து நின்றனர் ; ஒருவரை ஒருவர் வெட்டகத்துடன் பார்த்துக்கொண்டு நின்றனர் ; அப்போது, தினமும் காலையில் செய்யும் அக்கினி ஹோமத்தை முடித்துக் கொண்டு ஒரு கருத்த பிராமணன் அங்கே வந்தான் ; க்ஷத்ரிய பலத்தைவிட பிராமணனின் புத்திர் பலமே சிறந்தது என்று காட்ட எண்ணி கிணற்றுக்குள் வட்ட வடிவிலுள்ள மோதிரத்தை எறிந்தான்; தர்ப்பைப் புல் வைத்துக்கொண்டு மந்திரங்களையும் முனுமுனுத்தான். முதலில் ஒரு அம்பினால் பந் தினையும் பின்னர் மோதிரத்தையும் எடுத்தான்; அந்த மோதிரத்தை 105 பாண்டவ, கெளரவர்களிடம் அளித்தான் ;இதை அந்தச் சிறுவர்கள் பெரிய தாத்தா பீஷ்மரிடம் சொல்லவே அவர் அந்தக் கருப்பு நிற பிராமணனை அம்புப் பயிற்சி சொல்லித் தரும்படி நியமித்தான்; அவர்தான் உலகப்புகழ்பெற்ற வில்வித்தை ஆசிரியர் துரோணர் ; பிறகு இந்தப் பிராமண சிரேஷ்டர், மகாபாரத யுத்தத்தில் ஒரு கமாண்டராக ARMY DIVISIONAL COMMANDER நியமிக்கப்பட்டதை நாம் அறிவோம் (Mahabharata 1-131-17 Adi parva)
இந்த இடத்தில் அவர்கள் விளையாடியது கைப்பந்தா, கால்பந்தா என்ற விவரம் இல்லை ;ஆனால் சம்ஸ்க்ருத மொழியில் உத்ர் என்ற வினைச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அதன் வடிவம் வட்டம் என்று சொல்ல முடியும் ; விஷ்ணுவானவர் வராஹ அவதாரம் எடுத்த போது சமுத்திரத்துக்கு அடியிலிருந்து வட்ட வடிவ பூமியை மேலே கொண்டு வந்ததற்கும் இதே வினைச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது ; வராஹத்தின் மூக்கில் வட்ட வடிவ பூமி இருப்பதை பழங்கால சிற்பங்களில் கூடக் காண முடிகிறது; பூமி என்பது வட்டமானது என்பதை முதலில் கண்டுபிடித்த இந்துக்கள் அதை பூகோளம் என்றே சொல்லி பாடம் நடத்தினர். பாண்டவர்கள் கெளரவர்கள் உதைத்து விளையாடியதால் அது கிணற்றுக்குள் விழுந்ததை யூகிக்க முடிகிறது . ஆகவே உதை பந்து என்னும் கால் பந்தினைக் கண்டுபிடித்தவர்கள் இந்துக்களே ; தென் அமெரிக்க மாயா நாகரிக மக்கள் அல்ல .
***
இரண்டாவது பந்து விளையாட்டு
பாண்டவர்களின் தாயான குந்தியின் ஒரிஜினல் பெயர்- அதாவது அப்பா, அம்மா வைத்த பெயர் பிருதா ; பிருத்வி என்னும் வட்ட வடிவ பூமியை நினைவு படுத்தும் பெயர்; அவள் கதையை அவளே கிருஷ்ண பரமாத்மாவிடம் சொன்ன சம்பவம் மஹாபாரதத்தில் உள்ளது ;அவளது தந்தை ஷுரா , இவள் சின்னப் பெண்ணாக பந்து விளையாடிக்கொண்டிருந்த போது குந்திபோஜன் என்னும் உறவினனுக்குத் தத்துக் கொடுப்பதாகச் சொன்னானாம் ; இங்கும் பந்து விளையாட்டினைக் குறிப்பிடுகிறார் வியாசர் . அவள் விளையாடியது சங்கத் தமிழ் பெண்கள் போல பூப்பந்தாக இருக்கலாம் .
***
5
செப்பும் பந்தும் போல– என்று தமிழில் பழமொழியும் உண்டு ; சங்க காலத்தில் தமிழ்ச் சிறுமிகள் உருண்டையான கழங்கு கொண்டு அம்மானை முதலியன விளையாடினார்கள் .
***
6
From Tamil Dictionary அகராதியிலிருந்து
ammāṉai n. அம்மானை [K.ammāle, M. ammāna.] 1. Girls’ game of keeping a number of balls in the air, some rising while others are falling; அம்மானையாட்டம்.
—SUBHAM—
Tags- பந்து விளையாட்டு, கண்டுபிடித்தது, பாண்டவர்கள் , சங்க காலம் , தமிழ்ப் பெண்கள், விவேக சூடாமணி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-17; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள்
திருநாங்கூர் விஷ்ணு தலங்கள் (Thirunangur Divya Desams) தமிழ்நாட்டில், சீர்காழிக்கு அருகில் உள்ளன .
முக்கிய தகவல்கள்:
11 திருத்தலங்கள்: இந்த 11 தலங்களும் சிவபெருமானின் கோபத்தைத் தணிக்க, திருமால் 11 வடிவங்களில் காட்சி தந்தவை ஆகும். இத்தலங்கள் அனைத்தும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த பெருமை உடையவை.
திருநாங்கூர் 11 திவ்ய தேசங்கள் பட்டியல்:
திருமணிமாடக்கோயில் (திருநாங்கூர்) – நாராயணப் பெருமாள்
திருவெள்ளக்குளம் (அண்ணன் கோயில்) – ஸ்ரீநிவாசப் பெருமாள்
திருப்பார்த்தன் பள்ளி – தாமரையாள் கேள்வன்
திருவாலி – லட்சுமி நரசிம்மர்
திருநகரி – கல்யாண ரங்கநாதர்
திருச்செம்பொன்செய் (திருநாங்கூர்) – பேரருளாளன்
திருத்தெளிச்சேரி (திருநாங்கூர்) – மாதவப் பெருமாள்
திருமங்கையாழ்வார் விழா:
ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள் (தை மாதத் திருவோணம்), திருநாங்கூரில் உள்ள 11 பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி, திருமங்கையாழ்வாருக்குக் காட்சியளிக்கும் பிரம்மாண்டமான கருட சேவை விழா நடைபெறும்.
இந்தத் தலங்கள் அனைத்தும் சோழர் காலத்தைச் சேர்ந்தவை.
1
திருநாங்கூர் திருமணிமாடக்கோயில் , 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும், இது திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.
திருநாங்கூரில் அமைந்துள்ள இத்தலம், இமயமலையிலுள்ள பத்ரிநாத் ஸ்ரீ பத்ரிநாராயணப் பெருமாளைப் போலவே அமைந்துள்ளது பத்ரிநாத் சென்று வர இயலாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால், பத்ரிநாத் சென்று வந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை
திருமணிமாடக்கோயில்
இறைவன்: பத்ரிநாராயணர் (சாச்வததீபநாராயணர் – கிழக்கு நோக்கிய திருக்கோலம்).
இறைவி: புண்டரீகவல்லி தாயார்.
தீர்த்தம்: ருத்ர புஷ்கரிணி, சங்கு புஷ்கரிணி
திருநாங்கூர் 11 கருடசேவை திருவிழாவில் இத்தலப் பெருமாள் எழுந்தருளுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
சீர்காழியில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில், திருநாங்கூரில் அமைந்துள்ளது.
திருமாலின் மாடக்கோயில் மீது ருத்ரன் அமர்ந்து தவமிருந்த இடமாதலால் ‘திருமணிமாடக்கோயில்’ என்று அழைக்கப்படுகிறது..
***
2
திருவைகுந்த விண்ணகரம் (திருநாங்கூர்)
108 வைணவ திவ்ய தேசங்களில் 33-வது திருத்தலமாகும். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இக்கோயில், திருநாங்கூர் 11 திருப்பதிகளுள் ஒன்றாகும்.
மூலவர் வைகுண்ட நாதன், தாமரைக் கண்ணுடைய பிரான்.
வைகுந்த நாதன், அமர்ந்த திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி, சங்கு சக்கரங்களுடன் காட்சி தருகிறார்.
தாயார்: வைகுந்த வல்லி.
திருக்கோலம்: உபய நாச்சிமார்கள் புடைசூழ கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்
108 திவ்ய தேசங்களில், திருஅரிமேய விண்ணகரம் என்று அழைக்கப்படும் குடமாடு கூத்தன் கோவில் 29-வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து ஆடிய பெருமாள் என்பதால் குடமாடு கூத்தன் என்று அழைக்கப்படுகிறார்.
மூலவர்: குடமாடு கூத்தன்
உற்சவர்: சதுர்புஜ கோபாலர்
தாயார்: அமிர்தவல்லி
தல விருட்சம்: பலாச மரம்
தீர்த்தம்: அமிர்த தீர்த்தம், கோடி தீர்த்தம்
கோலம் : கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்
குடத்துடன் குழந்தை வடிவில் அமர்ந்திருக்கும் மூலவர்.
ஹரி (பெருமாள்) கோவில் கொண்டுள்ள தலம் என்பதால் இத்தலத்திற்கு அரிமேய விண்ணகரம் பெயர். சிவபெருமானின் வேண்டுகோளை ஏற்று பெருமாள் இத்தலத்தில் கோவில் கொண்டதாக ஒரு புராணம் சொல்கிறது. உதங்க முனிவர், திருமாலை காண வேண்டு தவம் செய்ததாகவும், அவரின் தவத்தை ஏற்று இந்த தலத்தில் திருமால் கோவில் கொண்டுள்ளதாகவும் மற்றொரு தல புராணமும் கூறுகின்றன.
கோவில் அமைப்பு :
மூன்று நிலை கோபுரங்களைக் கொண்ட இக்கோவில் வயல்கள் சூழ்ந்த, இயற்கை எழில் கொஞ்சம் அழகுடன் காணப்படுகிறது. கோவிலின் வடக்கு புறத்தில் குளம் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் கையில் குடத்துடன் அமர்ந்த நிலையில் கிருஷ்ணராக காட்சி தருகிறார் பெருமாள். இதனால் திருமங்கையாழ்வார் இவரை குடமாடுகூத்தன் என்ற பெயரால் குறிப்பிட்டார்.
உற்சவர்- பஞ்சலோகத்தால் ஆன நான்கு திருக்கரங்களுடன் உள்ள கோபாலன்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
விஜயபாரதம் முப்பெரும் விழா – எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு – சப்த ரிஷிகள் நூல் வெளியீட்டு விழா!
ச. நாகராஜன்
விஜயபாரதம் வார இதழ் சார்பாக 2026, ஏப்ரல் 26ம் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்.மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
சிறந்த எழுத்தாளர்களுக்கான பாரதி விருது ஜெயஶ்ரீ சாரநாதன், ஜனனி ரமேஷ் ஆகியோருக்கும் சிறந்த பதிப்பாளருக்கான பாரதி விருது ரேர் பதிப்பகத்தின் பதிப்பாளர் ரங்கநாதனுக்கும், சிறந்த எழுத்தாளருக்கான உ.வே.சா. வாழ்நாள் சாதனையாளர் விருது சோ.தர்மனுக்கும் வழங்கப்பட்டது.
தினமலர் நாளிதழ் இணை ஆசிரியர் திரு கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் இசைக்கவி ரமணன், ஆர்.எஸ்.எஸ். அகில பாரத செயற்குழு உறுப்பினர் ரவிகுமார் ஆகியோர் விழாவில் சிறப்புரை ஆற்றினர்.
விழாவின் முக்கியப் பகுதியாக சப்தரிஷிகள் நூல் வெளியீடும் நடைபெற்றது.
சப்தரிஷிகள் நூல் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தில் சப்தரிஷிகளாகத் திகழ்ந்த ஏழு ரிஷிகளைப் பற்றிய ஏழு நூல்களாகும்.
ஏழு ரிஷிகள் :
1.தனித்துவ வழி கண்ட தலைவர் பரம பூஜனீய டாக்டர் கெசவ பலிராம் ஹெட்கேவார்
2. பன்முகம் கொண்ட பண்பாளர் பரம பூஜனீய ஶ்ரீ மாதவ சதாசிவ கோல்வல்கர்
3. தீர்வு கண்ட தீரர் ஶ்ரீ ஏக்நாத் ரானடே
4. பல்துறை கண்ட வித்தகர் ஶ்ரீ தத்தோபந்த் தெங்கடி
5. சாமானிய சாதனையாளர் ஶ்ரீ சிவராம்ஜி
6. அசாத்திய சாதகர் ஶ்ரீ சூரியநாராயணராவ்ஜி
7. வீரத்துறவி இராம. கோபாலன்
சங்கத்தில் நீண்ட பல வருடங்களாக சேவை புரிந்து வரும் நாமக்கல்லைச் சேர்ந்த திரு ஹரிகரகோபாலன் இந்த ஏழு நூல்களைத் தொகுத்து ஒருங்கிணைப்பதில் பெரும் பணி ஆற்றியுள்ளார்.
ஏழு நூல்களுக்கும் தென்பாரத ஆர் எஸ் எஸ் தலைவர் திரு இரா.வன்னியராஜன் வாழ்த்துரை வழங்கியுள்ளார்.
ஏழு நூல்களும் கிடைக்குமிடம்:
விஜயபாரதம் பிரஸ்
12. எம்.வி.நாயுடு தெரு
சேத்துப்பட்டு, சென்னை – 31
விலை பற்றிய விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்; (Whatsapp) 89391 49466
அரும்பணி ஆற்றியுள்ள நாமக்கல் ஹரிஹரகோபாலன் அவர்களுக்கும் நூலை சிறப்புற வெளியிட்டுள்ள விஜயபாரதம் பிரசுரத்தாருக்கும் நமது மனமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகுக.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Years ago, I wrote about south American Mayan – Indian link with 68 similarities. I said then that Hindus used hands in ball game but Mayas used foot in the ball games. When Hindus used flowers or cloth to make balls , Mayans used rubber to make balls.
Later I showed where Sankara used ball game in Viveka Chudamani and Sangam poets used ball games in Tamil poems.
Now I am revising my theory after reading an article by M Biardeau in Ludwik Sternbach Felicitation volume part two . here is what he says,
“Two episodes of the Mahabharata allude to some kind of ball game. The first mentioned takes place at the time of the first meeting of the young Kauravas and Pandavas with the Brahmin Drona. The boys had been playing with a ball – vitaa—till they fall into a well and were unable to reach it and get it back. They were looking at one another with shame when a dark-complexioned hoary Brahmin appeared nearby, duly sanctified by the performance of his daily rites. The helpless young princes with great hopes surrounded the Brahman who was none else than Drona.
Finding the weakness of Kshatrias’ might , Drona wanted to show off his Brahminic superiority. He threw a seal ring of his into the well and manged to recover first the ball with mantra inspired blades of grass and then ring with an arrow, and gave the ring MUDRIKAA to the boys. As reward for the feat, Bhisma appointed Drona as master of arms for the 105 cousins.
(Mahabharata 1-131-17 Pdi parva)
Nothing is said about the ball in the above episode. But the verb used was uddhr. This is the verb used to narrate how Vishnu in his Varaha avatar rescued the ball shaped earth from the bottom of the ocean.
Mahabharata does not say foot or hand was used while playing; but we can guess only a powerful kick thew the ball into the well.
***
The second episode is the story of Prthaa/Kunti ‘s adoption. She herself narrated it to Krishna in the Mahabharata XII.347-2
Kunti’s birth name was Prtha. She was given by her father to his cousin Kuntibhoja as friend does to a friend. Her father promised this when she was playing the ball—kriidantim kanduhastikam. Here is a comparison ,
Prtha is closer to Prthvi—ball shaped earth. When she was playing the ball game means throwing the ball to another player. It is the symbol of earth/country changing from one king to another – like throwing the ball. Whatever the explanation maybe her adoption was decided when she was playing a ball game according to Mahabharata.
****
Following is my old article on Hindu’s Ball Game
Ball Game in Sankara’s Viveka Chudamani – Research Article on VC-42 (Post No.13,548)
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,548
Date uploaded in London – 15 August 2024
xxxx
लक्ष्यच्युतं चेद्यदि चित्तमीषद्
बहिर्मुखं सन्निपतेत्ततस्ततः ।
प्रमादतः प्रच्युतकेलिकन्दुकः
सोपानपङ्क्तौ पतितो यथा तथा ॥ ३२५ ॥
This is from Viveka Chudamani (VC) of Sankar
lakṣyacyutaṃ cedyadi cittamīṣad
bahirmukhaṃ sannipatettatastataḥ |
pramādataḥ pracyutakelikandukaḥ
sopānapaṅktau patito yathā tathā || 325 ||
325. If the mind ever so slightly strays from the Ideal and becomes outgoing, then it goes down and down, just as a play-ball inadvertently dropped on the staircase bounds down from one step to another.
Notes:
[Ideal—Brahman. Cf. Mundaka II. ii. 3-4.
What a terrible and graphic warning to happy-go-lucky aspirants! ]
xxxx
Adi Sankara was down to earth in explaining the greatest Hindu philosophy Advaita (Monism). Man is God is the ultimate truth. But the strangest thing is that he used even ball game in his hymn.
Hindu literature is full of ball games. But it is not the foot- ball that was invented by the ancient South American civilizations. Tamil and Sanskrit poems described the flower balls that were used as Volley Balls.
There is a genre in Tamil called அம்மானை Ammaanai, where women sit or stand in circles and play ‘throw and catch’ ball game. Another version is, they sit one against another and throw the pebbles or flower balls or big and light seeds skyward like a juggler.
Depending upon the skill of the person, the number of balls or round objects are used.
2000 year old Sangam literature has several references to flower balls used in games. It was a woman’s game in ancient India
xxxx
செப்பும் பந்தும் போல.
Like a box and a ball- is a proverb in Tamil. Both are children’s toys.
In Sangam Tamil literature ball game was also called கழங்கு Kazangu.
***
FROM SANGAM LIERATURE
Following are few references to ball games in 2000 year old Sangam books:-
Perumpaanaatruppadai- line 335;
Nattrinai – 47, 79;
Pathitruppaththu – 15-5;
Paripaatal- 8-106/7;
Akanaanuuru – 17, 49, 66
Puranaanuuru – 36
xxxx
From Tamil Dictionary
ammāṉai n. அம்மானை [K.ammāle, M. ammāna.] 1. Girls’ game of keeping a number of balls in the air, some rising while others are falling; அம்மானையாட்டம்.
—SUBHAM—
TAGS- ball game, Sankara, Viveka Chudamani, Sangam Tamil poems, Mahabharata, Pandavas and Kauravas, Kunti
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தலைச்சங்காடு
நாண்மதியப்பெருமாள்
அருள்மிகு நாண்மதியப்பெருமாள் திருக்கோயில்
மூலவர் – : நாண்மதியப்பெருமாள்,
உற்சவர் – : வெண்சுடர்ப்பெருமாள், செங்கமலவல்லி
தாயார் – : தலைச்சங்க நாச்சியார்
புராண பெயர் – : திருத்தலைசங்க நாண்மதியம், தலைசிங்க நான்மதியம்
ஊர் – : தலச்சங்காடு
தீர்த்தம்:- சந்திர புஷ்கரிணி
தல விருட்சம்:- புரசு
கோலம் -: நின்ற திருக்கோலம்
* கையில் சங்குடன் காட்சி தரும் பெருமாள்
* சந்திரனின் சாபம் தீர்த்த தலம்
* சிவனை போல் பிறை சூடி காட்சி அளிக்கம் பெருமாள்
கோவிலின் முன்புறம் குளம் காணப்படுகிறது. சந்திரன் நீராடி சாபம் தீர்ந்த குளம் என்பதால் இதற்கு சந்திர புஷ்கரிணி என்று பெயர்.
குரு பகவான் மனைவியான தாராவுக்கும் சந்திரனுக்கும் இடையே ஏற்பட்ட காதலால் பிறந்தவர் புதன் என்றும் இதனால் குரு பகவான் சாபமிட்டதாகவும் கதை; சாபம் தீர இங்கே வழிபட்டார் சந்திரன்
சந்திரன் தனது சாபம் நீங்கும் பொருட்டு இவ்வூர் தீர்த்தத்தில் நீராடியதால் சந்திர தோஷம் உள்ளவர்கள், இத்தலத்தில் வழிபாடு செய்தால் தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
108 திவ்ய தேசங்களில் 25-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. பெருமாள் கையில் சங்குடன் காட்சி தருவதால் இத்தலத்திற்கு தலைச்சங்காடு என்ற பெயர் வரலாயிற்று..
ஒற்றை நிலை கோபுரத்துடன் அமைந்த இக்கோவிலில் ஒரே ஒரு பிரகாரமும், இரண்டு சன்னதிகளும் மட்டுமே அமைந்துள்ளன.
காவிரி ஆற்றின் தென்கரையில் இக்கோவில் அமைந்துள்ளது. சோழர்கள் ஆட்சி காலத்தில் வணிக நகரமாக இருந்த பூம்புகாருக்கு மிக அருகில் இத்தலம் அமைந்துள்ளதால் சங்கிற்கு பிரபலமான ஊராகவும் இது இருந்தது.
இந்த தலத்தில் மட்டுமே சிவ பெருமானைப் போல் பெருமாளின் தலையில் பிறை சந்திரனை அணிந்த நிலையில் காட்சி அளிக்கிறார்.
சந்திர விமானத்தின் கீழ் மூலவர் நாண்மதியப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கியபடி சேவை சாதிக்கிறார்.
அழகிய சங்கை ஏந்தியபடியால் திருமங்கையாழ்வார் இத்தலத்தை தலைச்சங்க நாண்மதியம் என்று அழைத்தார்.
இக்கோயிலில் சில காலம் வழிபாடு இன்றி இருந்த நிலையில் வடுக நம்பி சீரமைக்க முயன்றார். பின்னர் அவரது சீடர் சுந்தர ராமானுஜ தாசர் திருப்பணிகள் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இக்கோயிலை திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் 2 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்.
மாயவரத்திலிருந்து சீர்காழி செல்லும் வழியில் உள்ள ஆக்கூரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆக்கூரிலிருந்து தலைச்சங்காடு வந்து அங்கிருந்து இடதுபுறம் பிரியும் சாலையில் சென்றால் கோயிலை அடையலாம்.( தலைச்செங்காடு)தற்போது ‘தலைச்சங்காடு’ என்று அழைக்கப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி வைபவம், நவராத்திரி தினங்களில் சுவாமி, தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும்.
****
பாடல் பெற்ற சிவன் கோவிலும் உண்டு!
இவ்வுலக உயிர்களைக் காப்பதற்காக சங்காரண்யேஸ்வரரை வழிபாடு செய்து தனது ஆயுதமாக சங்கைப் பெற்றுள்ளார் திருமால். அதனால் இவ்வூரில் உள்ள சிவபெருமான் கோயிலில் திருமாலுக்கு தனி சந்நிதி உண்டு. திருமாலுக்கு பாஞ்சசன்யம் என்ற சங்கை அருளிய காரணத்தால் சிவபெருமான், சங்காரண்யேஸ்வரர், சங்கவனநாதர் என்று அழைக்கப்படுகிறார்.
இக்கோயிலுக்கு அருகில் திருநாங்கூர், திருவாலி, திருநகரி, திருவெண்காடு, பல்லவனீஸ்வரம், கீழப் பெரும்பள்ளம், மேலப் பெரும்பள்ளம், திருக்கடையூர் போன்ற தலங்கள் அமைந்துள்ளன.
***
தலைச்சங்காடு பாசுரங்கள்
கண்ணார் கண்ணபுரம் கடிகை கடிகமழும்
தண்ணார் தாமரைசூழ் தலைச்சங்க மேல்திசையுள்
விண்ணோர் நாண்மதியை விரிகின்ற வெஞ்சுடரை
கண்ணாரக் கண்டுகொண்டு களிக்கின்றதிங் கென்றுகொலோ.
—subham—
Tags-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-16; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், தலைச்சங்காடு, நாண்மதியப்பெருமாள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
3-5-26 தினமணி இதழில் கொண்டாட்டம் பகுதியில் வெளியாகியுள்ள கட்டுரை.
உற்சாகம் தரும் இசை – இசைக்கும் மூளைக்கும் உள்ள நல்ல தொடர்பு!
ச. நாகராஜன்
இசைக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பு பற்றிய நியூயார்கர் பத்திரிகையின் சமீபத்திய கட்டுரை உலகில் உள்ள அனைவரையும் கவர்ந்திருக்கிறது.
இசையைக் கேட்டவுடன் ஏன் உணர்ச்சி வசப்படுகிறோம்; கவரப்படுகிறோம்?
எப்படி இசையால் கவரப்படுகிறோம் என்பது ஒரு புறமிருக்க ஏன் இசையால் நாம் கவரப்படுகிறோம் என்பது அடுத்த கேள்வி.
ஆனால் இப்போது எப்படி இசையால் நாம் கவரப்படுகிறோம் என்ற கேள்விக்கு நவீன அறிவியல் ஆராய்ச்சி பதில் தந்து விட்டது.
இசை அனைவரிடமும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவது கண்கூடு. உலகில் ஐந்து சதவிகிதம் பேர்களே இசையால் நல்ல தாக்கத்தைக் கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு இசை அன்ஹெடோனியா (Musical Anhedonia) என்ற நிலை இருப்பதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். அதாவது இசை இன்பத்தைப் பருக முடியாதவர்கள் இவர்கள்!
ஏன் இசை நம்மை உணர்ச்சிபூர்வமாக பாதிக்கிறது என்றால் நமது மரபணுவிலேயே அந்த உணர்ச்சி ஊறி இருக்கிறது என்பது ஒரு பதிலாகும்.
எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
நாற்பதினாயிரம் வருடங்களுக்கு முன்னரே புல்லாங்குழல் போன்ற ஒரு கருவியை மனிதன் படைத்து வாசித்து மகிழ்ந்தான் என்கிறது வரலாறு. அதாவது வார்த்தைகள் இல்லாத இசை கூட நம்மை உணர்ச்சிபூர்வமாக பாதிக்கிறது என்பதை இதன் மூலம் அறிகிறோம்.
மாண்ட்ரீலில் உள்ள ஜடோரே சோதனைச்சாலையில் இசை ஆர்வலர்களின் மூளைகளைப் பரிசோதிக்க ஆரம்பித்தனர். மூளையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான வரித்திரளி (Striatum) சந்தோஷமான தருணங்களில் டோபமைனைச் சுரக்கிறது என்று கண்டுபிடித்தனர். டோபமைன் என்பது -‘ஃபீல் குட் கெமிகல்’- நல்ல உணர்வை நல்கும் மூளை இரசாயனம் என்பதை அனைவரும் அறிவர்.
தங்களுக்கு மிகவும் பிடித்த பாடல்களைக் கேட்குமாறு சோதனையில் பங்கு கொண்டோர் கூறப்பட்டனர். என்ன ஆச்சரியம்! அவர்களின் மூளையின் சந்தோஷம் தரும் பகுதி நன்கு ஊக்குவிக்கப்பட்டதை ஆய்வாளர்கள் கண்டனர்.
அமி பெல்ஃபி என்ற பெண்மணி இசை ஆராய்ச்சியில் முதன்மையானவர். இவரி மிஸௌரி பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றுபவர். இசையானது இன்பம் பயக்கும் ஒன்று என்பதை அறிவியல் ஆய்வுகள் மறுக்க முடியாதபடி நிறுவுகின்றன என்கிறார் இவர்.
ஆகவே கவலையா, மனச்சோர்வா, உடல்நல பாதிப்பா எதானாலும் சரி, உங்களுக்குப் பிடித்த இசையைக் கேட்க ஆரம்பித்தால் நீங்கள் உணர்வூக்கம் பெற்று உற்சாகம் அடைவீர்கள். மூளையில் டோபமைன் அதிகமாகச் சுரக்கும்; இன்ப உணர்ச்சியைத் தரும்!
பழைய பாடல்களைக் கேட்டால் அந்தக் காலத்திற்கே சென்று அதிக இன்பத்தையும் அனுபவிப்பீர்கள்.
சங்கீத சௌபாக்கியமே என்றும் குன்றாத பெரும் பாக்கியமே என்பது உண்மை தான்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
புறநானூற்றில் வரும் ஒரு பாடலுக்கு உரைகாரர்கள் சாமுத்ரிகா லட்சணத்தைக் காட்டியுள்ளனர். தோல் உரித்த உடும்பு போல எலும்புகள் தெரியும் ஏழைப் பாணனை ஒரு புலவர் ஆற்றுப்படுத்துகிறார் ; அவருக்கு உதவக்கூடிய மன்னன் செம் பொறி படைத்த ஆகம் / மார்பினை உடையவன் என்கிறார் ; இதற்கு உரைகள் எழுதியோர் பொறி என்ற சொல்லுக்குத் தமிழில் லெட்சுமி என்ற பொருள் இருப்பதைக் காட்டிவிட்டு மார்பில் மூன்று வரிகள் இருப்பதால் அவன் மார்பினை (ஆகம் ) செம்பொறி என்றார் புலவர் என்கின்றனர்
இவ்வாறு மூன்று வரிகள் கழுத்தில் இருந்தால் அவள் தேவிக்குச் சமமான உத்தம லட்சணம் உடையவள் என்று லலிதா சஹஸ்ரநாம மும் ஆதி சங்கரரின் செளந்தர்ய லஹரியும் கூறுகிறது ; இது சாமுத்ரிகா லட்சண விளக்கம்.
மன்னரை விஷ்ணுவுக்கு ஒப்பிடுவதைக் காளிதாசன் நூல்களிலும் பிற நூல்களிலும் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகளிலும் காணலாம் ; அவர்கள் ஆளும் ராஜ்யத்தை ராஜ்ய லட்சுமி என்றும் போற்றுவார்கள் ; ஏனெனில் விஷ்ணுவின் மார்பில் லட்சுமி வசிக்கிறாள் என்று இந்து மத புராணங்கள் பாடுகின்றன
பூவெனப்படுவது பொறி வாழ் பூவே
என்ற பொன் மொழியையும் உரைகாரர்கள்-சுட்டிக் காட்டுகின்றனர்
இதே பாடலில் பஞ்சாங்கத்தில் போட்டுள்ள பஞ்ச பக்ஷி சாஸ்திரத்தையும் புள் பகை என்ற சொற் களால் புலவர் சுட்டிக்காட்டுகிறார்.
***
செளந்தர்யலஹரி பாடல் 69
க³லே ரேகா²ஸ்திஸ்ரோ க³திக³மககீ³தைகநிபுணே
விவாஹவ்யானத்³த⁴ப்ரகு³ணகு³ணஸங்க்²யாப்ரதிபு⁴வ꞉ .
விராஜந்தே நானாவித⁴மது⁴ரராகா³கரபு⁴வாம்ʼ
த்ரயாணாம்ʼ க்³ராமாணாம்ʼ ஸ்தி²திநியமஸீமான இவதே
பொருள்: தாயே!, இசையில் கதி, கமகம், கீதம் ஆகியவற்றில் ஒப்பில்லாத திறமை வாய்ந்தவளே! உன்னுடைய கழுத்தில் இருக்கும் மூன்று ரேகைகள் (மடிப்புகள்), மூன்று சுவரங்களுக்கு (சங்கீதத்தில் ஷட்ஜம, மத்யம, காந்தார ) எல்லைக் கோடுகளாகத் திகழ்கின்றன. இந்த மூன்று ரேகைகளும், சிவபெருமானுடனான திருமணத்தின்போது கட்டப்பட்ட மங்கள சூத்திரத்தின் (தாலி) எண்ணிக்கையை உறுதிப்படுத்தும் சாட்சிகள் போல உள்ளன;
இந்த பாடல், அன்னையின் கழுத்து அழகையும், அவளின் சங்கீத ஞானத்தையும், சிவனுடன் அவளுக்கு இருக்கும் திருமண பந்தத்தையும் போற்றுகிறது. மூன்று ரேகைகள் என்பது சாமுத்ரிகா லட்சண சாஸ்திரத்தில் உத்தம ஜாதிப் பெண்களின் அம்சமாகச் சொல்லப்பட்டுள்ளது
இதே கருத்து இடுப்பிலுள்ள மூன்று கோடுகளாக 80-ஆவது ஸ்லோகத்தில் வருகிறது.
சௌந்தர்ய லஹரியின் 80-வது பாடல், அம்மனின் அழகு மற்றும் அவளது திருமேனியின் சிறப்புகளை வர்ணிக்கிறது. த்ரிவலி எனப்படும் மூன்று மடிப்புகள் மற்றும் தளிர் போன்ற மார்பகங்களின் அழகை இந்த ஸ்லோகம் விவரிக்கிறது.
कुचौ सद्यःस्विद्यत्तटघटितकूर्पासभिदुरौ
कषन्तौ दोर्मूले कनककलशाभौ कलयता
तव त्रातुं भङ्गादलमिति वलग्नं तनुभुवा
त्रिधा नद्धं देवि त्रिवलि लवलीवल्लिभिरिव ॥
குசௌ ஸத்ய:ஸ்வித்யத்தடகடிதகூர்பாஸபிதுரௌ
கஷந்தௌ தோர்மூலே கனககலஶாபௌ கலயதா ।
தவ த்ராதும் பனகாதலமிதி வலக்னம் தனுபுவா
த்ரிதா நத்தம் தேவி த்ரிவலி லவலீவல்லிபிரிவ ॥॥
ஹே பராசக்தி!
நீ உன் கணவர் பரமேஸ்வரரின் பெருமைகளை நினைத்து நினைத்து பூரிப்பு அடைவதினால், உன்னுடைய தேகம் வியர்வையில் நனைந்து போகின்றது. அப்போது விம்மும் தங்கக் கலசங்கள் போன்ற உனது ஸ்தனங்கள், உனது ரவிக்கையையும் கிழித்துக் கொண்டு இடுப்பையும் ஒடித்து விடுமோ என்ற பயத்தில், உன்னுடைய சரீரத்தை உருவாக்கிய மன்மதன், உனது இடுப்பு ஓடியாமல் இருக்கும்பொருட்டு மூன்று ரேகைகளைப் போன்று மூன்று மடிப்புக்களையும் ஏற்படுத்தி உள்ளான் என்று தோன்றுகின்றது.
இதே விஷயம் லலிதா சஹஸ்ரநாமத்திலும் இருக்கிறது.
******
இன்னுமொரு பாடல்:
தாள் தோய் தடக்கை = ஆஜானு பாஹும்
ஸ்ரீ ராகவம் தசரதாத்மஜம் அப்ரமேயம் சீதாபதீம்
ரகு குலான்வய ரத்னதீபம்
ஆஜானு பாஹீ மரவிந்த தளாய தாக்ஷம்
ராமம் நிசாசர விநாசகரம் நமாமி.”
Sri Raghavam dasarathatmaja maprameyam
Sitapatim raghuvaranvaya ratnadipam
Ajanubahum aravinda dalayataksam
Ramam nisacara vinasakaram namami “
இந்த வரிகள் பகவான் ஸ்ரீ ராமரை வர்ணிக்கும் புகழ்பெற்ற ஸ்லோகம்.
லவகுசா திரைப்படத்திலும் இந்த ஸ்லோகம் வருகிறது சம்ஸ்க்ருத இலக்கியம் முழுதும் இந்த ஆஜானு பாஹும் என்பதை மன்னர்க்கு வருணனையாக – குறிப்பாக ராமபிரானுக்கு – ப்பாடி இருக்கிறார்கள்.
பொருள்:
ஆஜானுபாஹும்= (Ajaanubaahum): முழங்கால் வரை நீண்ட கைகளை உடையவர் (நீண்ட புஜங்களை உடையவர்).அரவிந்த லோசனம் (Aravinda Lochana): தாமரை போன்ற கண்களை உடையவர் (அரவிந்தம் = தாமரை, லோசனம் = கண்).ராமம்: ராமனாகிய,நிசாசர வினாசகரம் (Nishachara Vinashakaram): ராக்ஷசர்களை (நிசாசரர்) அழிப்பவர்.
பொதுப்பொருள்:
முழங்கால் வரை நீண்ட கைகளையும், தாமரை போன்ற கண்களையும் உடையவரும், ராக்ஷசர்களை அழிப்பவருமான ராமனை வணங்குகிறேன்.இது பொதுவாக ராமனின் அழகையும், வீரத்தையும் போற்றும் ஸ்லோகமாக பாடப்படுகிறது.
தமிழில் இதை தாள் தோய் தடக்கை ( ஆஜானு பாஹும்) என்று மொழிபெயர்த்துப் பாடி இருக்கிறார்கள்; ஆண்களுக்கான சாமுத்ரிகா லட்சணத்தில் இது ஒரு அம்சம் ; தாமரை இதழ் போன்ற கண்கள் பொதுவாகப் பெண்களுக்கு தமிழில் பயன்படுத்தப்படுகிறது ஆயினும் ராமர் ,கிருஷ்ணர் ஆகியோருக்கு இது சம்ஸ்க்ருதத்தில் நிறைய இடங்களில் வருகிறது
ஆஜானுபாஹும் /தாள் தோய் தடக்கை என்பது சங்க இலக்கியங்களில், குறிப்பாகப் புறநானூற்றில் பாண்டிய மன்னர்களைக் பாடிய இடத்தில் வருகிறது ; இது ஒரு உத்தம இலக்கணம்; கைகள் முழங்கால் வரை நீண்டிருப்பது வலிமை மற்றும் கம்பீரத்தின் அடையாளமாக இந்துக்களால் போற்றப்பட்டது.
புறநானூறு 59
பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் இது புலவர் மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் பாடிய பாடல்
ஆரம் தாழ்ந்த அணி கிளர் மார்பின்,
தாள் தோய் தடக் கை, தகை மாண் வழுதி!
வல்லை மன்ற, நீ நயந்து அளித்தல்;
தேற்றாய், பெரும! பொய்யே; என்றும்
காய் சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும்
ஞாயிறு அனையை, நின் பகைவர்க்கு;
திங்கள் அனையை, எம்மனோர்க்கே.
புறநானூறு (59) சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்ற பாண்டிய மன்னனை, புலவர் “தாள் தோய் தடக்கைத் தகை மாண் வழுதி” (முழங்கால் வரை நீண்ட பெரிய கைகளை உடைய, தகுதியால் மாட்சிமைப்பட்ட பாண்டியனே) என்று புகழ்கிறார். , அம்மன்னன் பகைவரை ஞாயிறு போல் எரிப்பவன் என்றும் புகழ்கிறார்.
மன்னர்களை சூரிய சந்திரனுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் ஒப்பிடுவதைக் காளிதாசன் நூல்களில் காண்கிறோம். இதைச் சங்க இலக்கியத்திலும் காணலாம். ஆகவே இமயம் முதல் குமரி வரை இந்துக்கள் ஒரே பண்பாட்டினைக் கொண்டவர்கள் என்பது தெளிவாகிறது சங்க இலக்கியத்தின் 30,000 வரிகளில் புத்தரோ மஹாவீரரோ கிடையாது ; இந்து மத தெய்வங்களும் புராணக்கதைகளும் மட்டுமே 200 முதல் 300 பாடல்களில் காணக்கிடக்கின்றன; ஏனையவை மத சம்பந்தம் இல்லாத வாழ்க்கைக் குறிப்புகளே!
—subham—
Tags- புறநானூற்றில், சாமுத்ரிகா லக்ஷணம் ,செம் பொறி ஆகம் , லட்சுமி வசிக்கும் மார்பு, பூவெனப்படுவது பொறி வாழ் பூவே ,மூன்று வரிகள் ,தாள் தோய் தடக்கை ,ஆஜானு பாஹு,சௌந்தர்ய லஹரி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மந்தபால
மஹாபாரதத்திலுள்ள ஒரு வினோதமான ரிஷியின் கதை. குழந்தைகள் உனக்குப் பிறக்காததால் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்று திருப்பி அனுப்பப்பட்ட ரிஷி இவர். அடுத்த ஜென்மத்தில் அவர் ஆண்பறவையாகப் பிறந்து ஜரிதா என்னும் பெண் பறவையின் மூலம் நான்கு பறவைகளைப் பெற்றார் . பின்னர் ஜரிதாவை விட்டுவிட்டு லபிதா பறவையுடன் வாழ்ந்தார் ; காண்டவ வனத்தை அர்ஜுனனும் கிருஷ்னனும் எரிக்கப்போகும் செய்தியை அறிந்து 4 பறவைக்குழந்தைகளை காப்பாற்றுவதற்காக ஜரிதாவிடம் திரும்பி வந்து காட்டின் வேறு பகுதியில் சுகமாக வாழ்ந்தார் .
***
மாண்டவ்ய ரிஷி / ஆணி மாண்டவ்ய
பழி ஓரிடத்திலே பாரம் ஒரிடத்திலே என்றும், பாவம் ஓரிடத்திலே என்றும் ஒரு பழமொழி உண்டு. மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி அல்லது சமம் என்று மற்றொரு பழமொழி உண்டு. இதை விளக்க ஒரு சுவையான கதை இருக்கிறது.
ஆணி மாண்டவ்ய ரிஷி (Mandavya Rishi), அணி மாண்டவ்யர் (Aṇi Māṇḍavya) என்றும் அழைக்கப்படுபவர் ஒரு முனிவர் ஆவார். அவருடைய கதை மகாபாரதத்தில் ஆதி பர்வத்தில் வருகிறது மாண்டவ்ய ரிஷி இரு கைகளையும் உயரத் தூக்கியவாறு தவத்தில் இருந்தார்; அப்போது அரண்மனையில் இருந்து அரசனின் பொருள்களைத் திருடியவர்கள் ஓடி வந்தனர்; பின்னால் சேவகர்கள் துரத்திக்கொண்டு வருவதைப் பார்த்து முனிவர்களின் ஆசிரமத்துக்குள் பொருள்களைப் போட்டுவிட்டு திருடர்கள் ஓடிவிட்டனர்; திருடர்களைத் தேடி வந்த அரச சேவகர்கள் பல கேள்விகளைக் கேட்டும் முனிவர் பதில் சொல்லவில்லை ஏனெனில் அவர் மெளன விரதத்தில் இருந்தார் . பின்னர் திருடர்களும் பிடிபட்டனர்; முனிவரிடம் திருட்டுப் பொருள்கள் இருந்ததால் அவரையும் திருடர்களுடன் மன்னர் முன்னால் நிறுத்தினர் ; ராஜாவும் அனைவரையும் கழுமரத்தில் ஏற்றிக்கொல்ல உத்தரவிட்டான் அவரைச் சூலத்தில் (Stake) ஏற்றித் தண்டித்தனர். திருடர்கள் அனைவரும் இறந்தனர் ; அணி மாண்டவ்யர் மட்டும் இறக்கவில்லை ; அவர் நிரபராதி என்று தெரிந்தவுடன் அவரைக் கழு மரத்திலிருந்து இறக்கியபோது கூரான ஆணி முனை ஒட்டிக்கொண்டு இருந்ததால் அவர் பெயருடன் ஆணியும் சேர்ந்து கொண்டது . தன் தவ வலிமையால் சூலத்தில் இருந்தும் உயிருடன் இருந்த அவர், யமதர்மனிடம் (மரண தேவன்) ஏன் தனக்குத் தண்டனை கிடைத்தது என்று கேட்டார். சிறுவயதில் பூச்சிகளைக் கொன்றதற்கான தண்டனை இது என்று யமன் கூறியதைக் கேட்டு, சிறு வயதில் அறியாமையால் செய்யும் தவறுக்கு தண்டனை வழங்கக் கூடாது என்று கூறி, யமனைப் பூமியில் மனிதனாகப் பிறக்கச் சாபமிட்டார். இதன் காரணமாகவே யமன் விதுரராகப் பிறந்தார் அவர் ஒரு பட்டுப்பூச்சியை வெறும் புல்லினால் குத்தி வேடிக்கையை பார்த்ததற்கு கிடைத்த தணடனை கழுமரம்!மண்டியா(கர்நாடகம்) நகரம்: மாண்டவ்ய ரிஷியின் ஆசிரமம் காவேரி நதிக்கரையில் இருந்ததாகவும், அந்த இடமே பின்னர் மண்டியா (Mandya) நகரம் என்று அழைக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.
***
மஹாலக்ஷ்மி: லட்சுமியின் பெயர் ; அஷ்ட லெட்சுமிகளின் விவரம் முன்னரே லெட்சுமி என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
***
மஹா கால
சிவனின் பெயர் ; காலம் என்றும் காலன் என்றும் பொருள்; அதாவது எல்லோரின் , எல்லாவற்றின் முடிவுக்கு காரணமானவர் சிவ பெருமான் ; பன்னிரண்டு ஜோதிர்லிங்கத்த தலங்களில் ஒன்றான உஜ்ஜைனி நகரத்திலுள்ளவர் மஹா காலேஸ்வர்; அங்குள்ள ஷிப்ரா நதியில் ஸ்நானம் செய்து சிவலிங்கத்தைத் தரிசித்தவர்களுக்கு அஸ்வமேத யாகம் செய்தபலன் கிடைக்கும் இந்த விவரம் மஹாபாரத வனபர்வத்தில் உள்ளது.
***
மகரிஷி / மஹரிஷி
தற்காலத்தில் ராமணரும் மனம் கடந்த தியான முறையைக் கண்டுபிடித்த மகேஷ் யோகியும் மகரிஷி என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார்கள்.
உலகின் மிகப் பழமையான நூலான ரிக்வேதத்தில் பல இடங்களில் ரிஷி என்ற சொல் பயிலப்படுகிறது. “மந்திரத்தை வாக்கிய வடிவத்தில் சொல்பவர்” — என்று வேதத்தின் சர்வானுக்ரமணி கூறும்.
யாஸ்கர் எழுதிய நிருக்தம் போன்ற நூல்களில் சொற்பிறப்பியல் அடிப்படையில் ரிஷி என்ற சொல்லுக்கு விளக்கம் தரப்படுகிறது:
சாயனர் “ர்ஸ்: என்றால் ‘மேலே செல்’ என்பார். இதிலிருந்து பிறந்தது ரிஷி — ரிக் வேத பாஷ்யத்துக்கு முன்னுரை தருகையில் ‘த்ருஸ்’ என்ற சொல்லையும் காட்டுவார். ‘பார்’ என்பது இதன் மூலம். அதாவது மனிதனின் ஊனக் கண்ணால் காண முடியாததை ஞானக் கண்ணால் கண்டு நமக்கு வேத மந்திரங்களை அளித்தார்கள்.
இந்து மதம் தவிர, உலகிலுள்ள எல்லா மத நூல்களும் ஒரு மதத் தலைவர் சொன்னதை அடிப்படையாகக் கொண்டவை. உலகிலுள்ள எல்லா மதங்களும் ஒரு மனிதனால் தோற்றுவிக்கப்பட்டவை. இந்துக்களின் வேதமோ, இந்து மதமோ மனிதனால் தோற்றுவிக்கப் படவில்லை. அது சநாதனமாக – தோற்றமோ முடிவோ இல்லாத ஒன்றாக— இருந்து வருகிறது. வேத மந்திர ஒலிகளும் இப்படித்தான்.
நாம் ரேடியோவில் ஒரு நிலையத்தைக் கேட்க வேண்டுமானல் ஒரு அலை வரிசயைத் தேர்ந்தெடுக்கிறோம். அது போல ரிஷிகள் மனதை ஒரு முகப்படுத்தி மந்திரங்களைக் கேட்கிறார்கள். எப்படி ஆயிரக் கணக்கான நிலயங்களின் ரேடியோ அலைகள் நம்மைச் சுற்றி இருக்கிறதோ அது போல பிரபஞ்சத்தில் பல்லாயிரக் கணக்கான மந்திர ஒலிகளும் நம்மைச் சுற்றி இருக்கின்றன என்று இந்துக்கள் நம்புவர்.
ரிஷிகள் முக்காலம் உணர்ந்த “த்ரிகால” ஞானிகளும் ஆவர். எப்படி நாம் ஒரு வீடியோ “டேப்”பைப் பார்க்கையில் REWIND ரீவைண்டு, FAST FORWARD பாஸ்ட் பார்வர்ட் என்று முன் பின்னால் உள்ளதைப் பார்க்கிறோமோ அது போல ரிஷிகளும் செய்கின்றனர். மஹாபாரத யுத்தக் காட்சியை கண்ணன் — விஸ்வரூப தரிசனத்தில் — அர்ஜுனனுக்கு பாஸ்ட் பார்வர்ட் செய்து காட்டுவதைப் படிக்கிறோம்.
இதே போல த்ரிகரண சுத்தி என்பதும் ரிஷிகளிடத்தில் உள்ளது.
சதபத ப்ராஹ்மணம் ரிஷி என்பதற்கு “அதிகம் பாடுபடுபவர், கஷ்டப்படுபவர்” — என்று பொருள் சொல்லும். அதாவது தீவிரத் தவம் புரிவோர்.
தைத்ரீய ஆரண்யகம் , “முன்னேறிச் செல், தோன்று” என்று பொருள் காணும்.
தான் மட்டுமின்றி மனித குலத்தையும் முன்னேற்ற விரும்பியதால்தான் அவர்கள் காயத்ரி மந்திரம், மிருத்யுஞ்சய மந்திரம் போன்ற அரிய பெரிய மந்திரங்களை நமக்கு அளிததனர்.
ராஜ ரிஷிகளும் சப்த ரிஷிக்களும்
ஜனகன், புத்தன், ராமன், கிருஷ்ணன் இவர்களை ராஜ ரிஷிகள் என்பர். கண்ணனும் ராஜரிஷி பற்றி கீதையில் (4-2) சொல்கிறான். இன்னும் ஒரு ஸ்லோகத்தில் (10—6) சப்த ரிஷிக்கள் , நான்கு மானச புத்ரர்கள், 14 மனுக்கள் பற்றி கிருஷ்ணன் சொல்லுவான்.
இதற்கு ஸ்ரீ இராமகிருஷ்ண மடம் அண்ணா அவர்கள் எழுதிய உரை மிகவும் அருமையானது. அவர் சொல்வதாவது:–
முன்னவர்களான ஏழு மகரிஷிக்கள்:
1.நீண்ட ஆயுள்
2.மந்திரங்களை காணும் சக்தி
3.ஈசுவரத்தன்மை
4.தெய்வீகப்பார்வை
5.குணத்தாலும், வித்தையாலும், வயதாலும் உயர்வு
6.தருமத்தைப் பிரத்யக்ஷமாக அனுஷ்டித்துக் காட்டல்
7.கோத்ரப் பிரவர்த்தகராக இருத்தல்
இவ்வேழு லக்ஷணங்களும் அமைந்தவர்கள் ரிஷிகள்.
இவர்களில் முக்கியமானவர்கள் ஏழு மகரிஷிகள்; ஒவ்வொரு மன்வந்தரத்திலும் இவர்கள் வெவ்வேறாவர். இந்த கல்பத்தில் முதல் மன்வந்தரத்தில் தோன்றிய ஸப்தரிஷிகள்:–
நால்வர்: ஸனகர் ஸநந்தனர் ஸனாதனர் ஸனத் குமாரர்.இதுதவிர ரிஷிக்களை வேறு பல வகைகளிலும் பிரிப்பர்:
ராஜ ரிஷி:
க்ஷத்திய குல அரசர்கள் – ரிஷிகளின் தன்மை பெற்றவர்கள்
பிரம்ம ரிஷி:
பிராமண குலத்தை சேர்ந்த ரிஷி முனிவர்
ஜன ரிஷி:
மக்களிடையே இருந்து ரிஷிகளின் நிலைக்கு உயர்ந்தோர்.
காண்ட ரிஷி:
வேதங்களின் காண்டங்களுக்குப் பொறுபான ரிஷிக்கள்
மஹரிஷி:
ரிஷிகளுக்குள் உயர் நிலை அடைந்தவர். நாம் தலைவர், பெருந்தலைவர் என்று சொல்வது போல
பரம ரிஷி:
மிக உயர்ந்த நிலையிலுள்ள ரிஷி
ச்ருத ரிஷி:
வேத ஒலியைக் கேட்போர்
தவ ரிஷி:
தவத்தில் சிறந்தவர்
சத்ய ரிஷி:
சத்யத்தில் நிலைபெற்றவர்.
தேவ ரிஷி
தெய்வீக நிலைக்கு உயர்ந்தோர்.
பதஞ்சலி பிரிவினை
பாணினி எழுதிய அஷ்டாத்யாயீ என்னும் உலகமே வியக்கும் சம்ஸ்கிருத இலக்கண நூலுக்கு மஹாபாஷ்யம் என்ற அளவிலும் தரத்திலும் பெரிய விளக்கவுரை (பாஷ்யம்) செய்ஹ பதஞ்சலி என்ற ரிஷி. வேறி இரண்டு விளக்கம் தருவார்:
மந்திரத்தைக் கண்டவர்கள் ஒரு வகை. கல்ப சூத்ரம் போன்ற பெரிய நூலகளை எழுதியோர் மற்றொரு வகை. ஆன்மீக எழுத்தாளர்களையும் ரிஷி வகையில் சேர்த்துவிட்டார் பதஞ்சலி.
மஹாபாரதமோ எனில் வேறு வகையில் ரிஷிக்களைப் பிரித்துரைக்கும்:
கிருஹஸ்தாஸ்ரமி: இல்லறம் நடத்தும் ரிஷிமார்கள்.
ரிஷிக்களில் இந்த வகைதான் அதிகம். பெரிய ரிஷிக்கள் அனைவரும் இல்லறத்தை நடத்தியே பெரும் புகழை எய்தினர். வசிட்டர், விசுவா மித்திரர், அகத்தியர் ஆகிய அனைவரும் மனைவியுடன் வாழ்ந்தவர்
ஊர்த்வரேதஸ்: — பிரம்மசர்யம் அனுட்டித்த ரிஷிக்கள்
ஆஸ்ரமவாசிகள்:– கானகம் முதலிய இயற்கைச் சூழ்நிலையில் ஆஸ்ரமம் அமைத்து எளிமையான வாழ்வு வாழ்ந்தோர்.
யாயவரஸ்: நாடோடி ரிஷிக்கள். நாடு விட்டு நாடு சென்று பலருக்கும் உதவியவர்கள்
புரோகித வ்ருத்திகா: — புரோகிதம் செய்த ரிஷிக்கள்
சாதரண வ்ருத்திகா: — சாதாரண வாழ்க்கை நடத்திய ரிஷிக்கள்
சஸ்த்ர அத்யாபகா :– ஆயுதப் (சஸ்த்ரம்) பயிற்சி அளித்த ரிஷிகள்
சாஸ்த்ர அத்யாபகா: — சாத்திரப் பயிற்சி அளித்த ரிஷிகள்
உக்ர தபஸ்வீ: — இவர்கள் சூப்பர் பாஸ்ட் ரயில் போல உக்ரமான தவம் செய்து விரவில் பலன் பெற முயன்றோர்.
சாதரண தபஸ்வீ: இவர்கள் சாதாரண வேகத்தில் செல்லும் ரயில் போல தவம் செய்தோர்.
இந்தப் பிரிவினைகள் அவர்களை வருணிக்கப் பயன்படுத்திய சொற்கள். ஒருவர், ஒரு பிரிவில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதல்ல.
( உதவிய நூல்கள்:— பழங்கால இந்தியாவில் ரிஷிமார்கள் – சி.பி. பாண்டே எழுதிய நூல் —- ப்ருகு வம்சம் – ஒரு ஆய்வு, ஜயந்தி பண்டா எழுதிய நூல்—பகவத் கீதை, அண்ணா உரை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை).
****
மஹா வாக்கியங்கள்
மனிதன் என்பவன் இறைவனின் ஒரு அம்சம் ;அவனுக்குள் உறையும் ஆத்மா அழிவில்லாதது ; உடல் மட்டுமே அழியக்கூடியது ; எப்படி பானைக்குள் உள்ள காற்று பானை உடைந்த பின்னர் வெளியேயுள்ள காற்றுடன் கலந்து ஐக்கியமாகிவிடுகிறதோ அது போல ஆத்மாவும் இறைவன் என்னும் பரப் பிரம்மத்துடன் கலந்துவிடும் . இதை விளக்கும் பொன்மொழிகள் ஒவ்வொரு வேதத்துக்கும் உரிய உபநிஷத்தில் உள்ளது; அவை பின்வருமாறு:
1. प्रज्ञानम् ब्रह्म (ப்ரக்ஞாநம் ப்ரஹ்ம )
உணர்வு / பிரக்ஞை பிரம்மம்
ஐதரேய உபநிஷத் (3.3) ரிக் வேதம்,
**
2. अयम् आत्मा ब्रह्म (அயம் ஆத்மா ப்ரஹ்ம )
உள்ளுக்குள் உறையும் ஆத்மாவே பிரம்மம்
: மாண்டூக்ய உபநிஷத் (2) அதர்வ வேதம்
**
3. तत् त्वम् असि (தத் த்வம் அசி )
நீயே அதுவாக இருக்கிறாய்
சாந்தோக்கிய உபநிஷத் (6.8.7) சாம வேதம்
**
4. अहम् ब्रह्म अस्मि அஹம் ப்ரஹ்மாஸ்மி
நானே பிரம்மம் ஆக இருக்கிறேன்
பிருஹதாரண்யக உபநிஷத் (1.4.10) of the யஜுர் வேதம் .
**
வேறு சிலமஹா வாக்கியங்கள்
सर्वं खल्विदं ब्रह्म (சர்வம் கல்விதம் ப்ரஹ்ம ): இங்குள்ள எல்லாம் பிரம்மம்
इशावास्यमिदं सर्वम् (ஈசாவாஸ்யம் இதம் சர்வம் ): உலகம் முழுதும் இறைவனால் வியாபிக்கப்பட்டுள்ளது
***
மஹேந்திர வர்மன்
Music Inscription
Pallava Period Hero Stone for a Dog.
உலகப்புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரும் தொல்பொருட் துறை அறிஞருமான டாக்டர் இரா .நாகசாமி 23, 2014 மயிலை ஆர்கே கன்வென்ஷன் செண்டரில், “பல்லவர் இசையில் மயிலாப்பூர்” என்ற தலைப்பில் நிகழ்த்திய ஒரு உரை தரும் செய்திகள்
டாக்டர் நாகசாமி, காயத்ரி கிரீஷின் இசைத்துணையோடு, உரையாற்றினார்.
“சித்திரக்கார புலி”, “சங்கீர்ணஜாதி”, என்று விருதுகளை கொண்ட மகேந்திர வர்ம பல்லவன், கலைகளில் வல்லவன். புதுக்கோட்டை மாவட்டத்தில் குடுமியான்மலையிலும் திருமெய்யத்திலும் மகேந்திரனது இசைக்கல்வெட்டுகள் உள்ளன. “பகவதஜ்ஜுகம்”, “மத்தவிலாச பிரஹசனம்” என்ற சமஸ்கிருத நாட்டிய நாடகங்களை மகேந்திரன் படைத்தான். கேரளத்தில் சில கோயில் திருவிழாவில் இன்றும் மத்தவிலாசம் நடிக்கப்படுகிறது. அதன் ஓலைச்சுவடி நூறாண்டுகளுக்கு முன்னால் திருவிதாங்கூர் ஓரியண்டல் நூலகத்தில் கிடைத்தது. காஞ்சி அருகே மாமண்டூர் குகையில் மகேந்திர பல்லவனின் கல்வெட்டில் இந்நூலை அவன் படைத்த குறிப்பும் அதனால் தனக்கு “மத்தவிலாசன்” என்ற விருதமைந்த குறிப்பும் உள்ளன. இதில், நாந்தி என்றழைக்கப்படும் கடவுள் வாழ்த்தில், “பாஷா வேஷ வபுக்ரியா குணக்ருதான்” என்று வரும் சொற்களை, பரத முனிவர் தன் “நாட்டிய சாத்திரம்’ நூலில், நாட்டியத்தின் நான்கு முக்கிய அம்சங்கள் என்றுளார். பரதமுனிவரின் நாட்டிய சாத்திரத்தை கற்று மகேந்திரன் இந்நாடகத்தை படைத்த சான்று இது எனவும், “திஷது வோ ந்ருத்த கபாலீ ” என்ற வரியில் மயிலை கபாலியை மகேந்திர பல்லவன் வேண்டுகிறான் என்று நாகசாமி விளக்கினார்.மகேந்திரன் காலத்தில் மயிலை வந்த திருஞானசம்பந்தர் பூம்பாவை பதிகத்தை கபாலிக் கோவிலில் பாடியுள்ளார். அதில்
“மைப்பயந்த ஒன்கண் மடநல்லார் மாமயிலை
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓணவிழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே ஓடியோ பூம்பாவாய் ”,
என்ற தேவாரப்பாடலில், ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரதில் நடந்த விழாவையும்;
“மணக்கை மடநல்லார்” என்ற பாடலில் “தொல் கார்த்திகை நாள்” விழாவையும் சொல்லி, மயிலையில் கபாலிச்சுர கோவிலில் 1300 ஆண்டுக்கு முன் மாதாமாதம் நடந்த திருவிழாக்களை நாகசாமி எடுத்துக்காட்டினார்.
செங்கம் வட்டார நடுகற்கள் பற்றிய 1972-ம் நூலில் அப்போதைய தொல்பொருட் துறை இயக்குனரும், வரலாற்று நிபுணருமான டாக்டர் இரா .நாகசாமி நமக்கு இன்னொரு புதுமையான தகவலை அளிக்கிறார். என்சைக்ளோபீடியாக்களில் பார்த்தால் மாமன்னன் மஹேந்திர வர்மன் 30 ஆண்டுகள் மட்டுமே ஆண்டதாகக் கூறும். ஆயினும் அவனது 39-ஆவது ஆட்சி ஆண்டு கூட ஒரு நடு கல்லில் உளது; அவனது தந்தை சிம்ம விஷ்ணுவின் ஆட்சியின்போதே அவனுக்கும் பட்டாபிஷேகம் செய்விக்கப் பட்டதால் இப்படி ஆட்சி ஆண்டு உள்ளதாக அவர் கூறுகிறார்.
டாக்டர் இரா. நாகசாமி அவர்கள், முதலாம் மகேந்திரவர்மன் பல்லவன் (கி.பி. 590-630) மற்றும் அவனது கலைப்படைப்புகள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட மிகச்சிறந்த தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் அறிஞர் ஆவார் மகேந்திர வர்மன் கி.பி. 600-630 காலகட்டத்தில் ஆட்சி செய்ததை அவர் உறுதிப்படுத்தினார் .
Mamamdur Caves of Mahendra Pallava
முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 600 – 630)
சிம்மவிஷ்ணுவின் மகனான மகேந்திரவர்மன், மாவீரனாக வாழ்ந்தான். இவனது ஆட்சிக்காலத்தின் முதற்பகுதியில் சமணம் உயர்நிலையில் இருந்தது. பிற்பகுதியில் சைவம் உயர் நிலைக்கு வந்தது. இப் பேரரசனே சமண சமயத்தை விடுத்து, சைவத்திற்கு மாறினான். திருநாவுக்கரசர் எனும் அப்பரால் மனமாற்றம் அடைந்தவன். சிவன் கோவில்களையும் விஷ்ணு கோவில்களையும் பிறமதத்தினர் ஆக்ரமித்திருந்தனர் ;அவற்றையெல்லாம் மீண்டும் இந்து மதக் கோவில்களாக மாற்றினான் ; இந்தச் செய்திகள் பெரிய புராணம் முதலிய நூல் களிலும் கல்வெட்டுகளிலும் உள. தமிழகக் கலை வரலாற்றில் ஈடிலாப் படைப்புக்களை உருவாக்கியவன். சிறந்த இசைவல்லவன், ஓவியன், நாடக ஆசிரியன். பல்லவர் வரலாற்றில் குறிப்பிடத்தக்க புகழ் எய்தியவன்.
பட்டங்கள்
இப்பேரரசனுக்குப் பல பட்டப் பெயர்கள் இருந்தன. குணபரன், விசித்திர சித்தன், போத்தரையன், சத்ருமல்லன், மத்தவிலாசன் போன்ற பல பட்டப் பெயர்கள் இவனது சாசனங்களில் காணப்பெறுகின்றன.
புள்ளலூர் எனும் இடத்தில் சாளுக்கிய மன்னன் புலிகேசியையும், கங்கமன்னன் துர்வீநீதனையும் இவன் வென்று தன் வீரத்திற்குப் பெருமை சேர்த்தான்.
மத்தவிலாச பிரகசனம் எனும் நாடகநூல் இப்பேரரசனால் எழுதப் பெற்றதாகும். பல்வேறு சமயங்களைப் பற்றிய செய்திகளையும், நல்லொழுக்கம் பற்றி வலியுறுத்துகின்ற செய்திகளையும் நகைச்சுவை உணர்வோடு இந்நாடகநூல் விவரித்துக் கூறுகின்றது. மகேந்திரவர்ம பல்லவனின் புலமை இந்நூல் வாயிலாக வெளிப்படுகின்றது.
சிறந்த இசைப்புலவனாக வாழ்ந்த மகேந்திர பல்லவன் ‘சங்கீர்ணஜாதி‘ எனும் இசைப் பண்ணைத் தானே அமைத்துச் சிறப்பெய்தினான். ஒப்பற்ற கவியாகவும் விளங்கினான். திருச்சிராப்பள்ளிக் குடைவரைப் பாடல்கள் இவனால் எழுதப்பெற்றவை என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும். சித்திரக்காரப்புலி என்ற பட்டம் புனைந்து, ஓவியக்கலை வளர்ப்பதில் பெரும் பணி புரிந்திருக்கிறான். மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, மாமண்டூர், வல்லம், பல்லவபுரம், தளவனூர், திருச்சிராப்பள்ளி போன்ற இடங்களில் மலையைக் குடைந்து, குடை வரைக் கோயில்களை உருவாக்கினான். சுதை, மண், கல், மரம், உலோகம் ஆகியவை இன்றிப் புதுமையான கோயில்களை உருவாக்கியவன் இவன் என அவனது மண்டகப்பட்டுக் கல்வெட்டு கூறுகின்றது.
***
பாண்டிய நாட்டு ராணி மங்கையற்கரசி
Queen Magaiyarkarasi
மங்கையற்கரசி சோழர் குலப் பெண்மணி ; மாபெரும் சிவ பக்தை; பாண்டிய மகாராஜாவுக்கு வாக்குப்பட்டாள் பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறன் சைவ சமயத்திலிருந்து சமண சமயத்திற்கு மாறி சமணர்களோடு சேர்ந்தான். இதனால் பாண்டிய நாட்டிலிருந்த கோவில்களெல்லாம் பாழாகி சமணர்களின் பள்ளிகளாக மாறலாயின;
இதையெல்லாம் பார்த்த பாண்டி மாதேவியான மங்கையர்க்கரசியார் மிகவும் வேதனையும் கவலையும் அடைந்தாள். அமைச்சராக இருந்த குலச்சிறையாரிடம் ஆலோசனை செய்தாள்.
சைவம் தழைக்க வந்துதித்த திருஞானசம்பந்தர் திருமறைக்கா ட்டுக்கு எழுந்தருளியிருப்பதை அவர்கள் அறிந்து தூதர்கள் மூலம் அழைப்புவிடுத்தார்கள் . ஞானசம்பந்தர், நமசிவாய மந்திரத்தை ஜபித்த வண்ணம் சிவிகையில் மதுரை நோக்கிச் சென்றார்.
மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைம்மடமானி
பங்கயச் செல்வி பாண்டிமாதேவி
பணி செய்து நாள்தோறும் பரவப்
பொங்கழலுருவன் பூத நாயகன் நால்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த
ஆலவாயாவதும் இதுவே
என்று தொடங்கி பதிகம் பாடினார் அதில் மங்கையர்கரசியின் சிவபக்தியைப் பெரிதும் புகழ்ந்து பாடியிருக்கிறார்.; இதற்குள் சமணர்கள் சம்பந்தர் தங்கிய மடத்தில் தீ வைத்தார்கள். அமணர்கள் இட்ட தீத்தழல் போய் ”பையவே சென்று பாண்டியர்க்காகவே” எனப் பாடினார். சம்பந்தரின் வாக்குப்படியே சமணர்கள் இட்ட தீ மன்னனிடம் வெப்பு நோயாக உருவெடுத்தது. யாராலும் தீர்க்கமுடியாத நோயை சம்பந்தர் மீனாட்சி கோவில் விபூதி மூலம் தீர்த்துவைத்தார் ; அப்போது அவர் பாடியதே
‘மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு, துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு, சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாய் உமை பங்கன் திரு
ஆலவாயன் திருநீறே’
பின்னர் நடந்த அனல்வாதம், புனல் வாதப் போட்டிகளில் சம்பந்தர் வென்றார் ; அவைகளில் தோற்றால், கழுமரத்தில் ஏறி உயிர்விடுவோம் என்று 8000 சமணர்கள் வீ ரவசனம் பேசியிருந்தனர் ; சம்பந்தர் வெற்றிபெற்றவுடன் நிறைய சமணர்கள் சைவர்களாக மாறினர்; ஏனையோர் கழுவேறினர் .
பாண்டிய நாட்டிற்கே கேடு வந்த சமயம் மங்கையர்க்கரசியார் மிகவும் சாதுரியமாக முடிவெடுத்து அமைச்சர் குலச்சிறையாருடன் சென்று சம்பந்தர் மூலமாக அக்கேட்டை நீக்கினாள்; மன்னனையும் மீட்டெடுத்தாள். நாட்டையும் வீட்டையும் தக்க சமயத்தில் கைகொடுத்துக் காப்பாற்றினாள். மங்கையர்க்கரசி மங்கையர்க்கு எல்லாம் அரசியாகி 63 நாயன்மார்களில் ஒரு நாயன்மாராகவும் சிறப்பித்துப் பேசப்படுகிறார். பெரிய புராணத்தில் அழகிய செய்யுட்களால் சேக்கிழார் நமக்கு இந்தக்கதையை செப்புகிறார்.
***
மங்கம்மாள் , ராணி மங்கம்மாள்
திருச்சியிலிருந்து மதுரையை அரசாண்ட ராணி மங்கம்மாளைப் பற்றி பல கதைகள் உண்டு. எகிப்திய பேரழகியும் ஆட்சியாளருமான கிளியோபாட்ராவைப்போலவே இவரும் அழகானவர்; பல போர் புரிந்தவர். அவரைப் போலவே அழகால், சாதுர்யத்தால் ஆட்சி உரிமை பெற்றவர். மிகவும் திறமையான ஆட்சியாளர். மதுரை நகர் முழுதும் இன்றும் இவர் புகழ் பாடும் கட்டடங்களும் சாத்திரங்களும் சின்னங்களும் இருக்கின்றன மர்மமான முறையில் (சிறையில்?) இறந்தார். ஆனால் இந்தச் செய்திகளில் சில, உறுதிப்படுத்தப் படாத செய்திகள். அவர் காலத்தில் வாழ்ந்த சின்ன வெங்கண்ணா, மங்கம்மாளைக் கிண்டல் செய்து எழுதிய கவிகளில் இருந்து பெறப்பட்ட கிளுகிளு செய்திகள் இதோ :.அவர் சொல்லும் ரகசியம்: மங்கம்மாளின் இயற் பெயர் கனகா; அவர் தந்தை சந்திரகிரி துபாகுல நாயகர். அவர் ஒரு நடன மாது. வேலை தேடி தஞ்சை விஜயராகவரின் அரசவைக்குச் சென்றார். அவர் அந்தப்புரத்தில் சேர்க்க தயாராக இருந்த தருணத்தில் எப்படியோ மதுரை சொக்கநாத நாயகரை (1659-1682) மணந்தார். மங்கம்மாளின் மகன் முத்துவீரப்ப நாயகர் (1682-1689) சிறிது காலம் ஆண்டு இறந்துவிட்டார். உடனே பேரன் விஜரங்க சொக்கநாத நாயக்கரின் பேரில் 1689-ல் ஆட்சியை ஏற்றுக்கொண்டார்.
. மதுரை முழுதும் அன்ன சத்திரங்களைக் கட்டினார். கோவில்களுக்கும் பிராமணர்களுக்கும் வாரி வழங்கினார். மதுரை சவுராஷ்டிர சமூகத்துக்குப் பிராமண அந்தஸ்து வழங்கினார். காவிரிப் பிரச்சினை இவர் காலத்தில்தான் துவங்கியது. சிக்கதேவராயன் காவிரி நதியின் குறுக்கே கண்ணம்பாடியில் அணை கட்டி தஞ்சைப் பாசனத்தைத் தடுக்கவே போர்க் குரல் எழுப்பினார். கடவுள் அருளால் பெரு மழை, வெள்ளத்தில் அணை உடைந்தது. காவிரிப் பிரச்சினையும் தீர்ந்தது. இவர் கடைசி காலத்தில் சிறையில் இறந்ததாக ஒரு செய்தி. எது எப்படியாகிலும் இவரது சத்திரங்களும், கோவில், மசூதி, கிறிஸ்தவ சர்ச்சுகளுக்குக் கொடுத்த தானங்களும், மதுரை தமுக்கம் அரணமனையும் (இப்போது காந்தி மியூசியம்), மீனாக்ஷி கோவில், திருப்பரங்குன்றம் கோவில்களும் இருக்கும் வரை மங்கம்மாளின் புகழ் மங்கவே மங்காது.
மொகலாயப் பேரரசன் அவுரங்கசீப் தனது ஒரு செருப்பை நாடு முழுதும் ஊர்வலம் விட்டான். அஸ்வமேத யாக குதிரை போகும் இடம் எல்லாம் எப்படி பாரதீய சக்கரவர்த்திகளுக்குச் சொந்தமானதோ அதே போல செருப்பு போனமிடம் எல்லாம் கப்பம் கட்டவேண்டும். ராணி மங்கம்மாள் மிகவும் தைரிய சாலி. அவனது படைத் தளபதி அந்த ஒற்றை செருப்பை காலில் மாட்டிக்கொண்டு மற்றொரு செருப்பு எங்கே என்று கேட்டான். ஆனால் பின்னர் ராமநாதபுரத்தின் கிழவன் சேதுபதி, மைசூரின் சிக்க தேவராயா தஞ்சை மன்னன் ஷாஜி, திருவாங்கூர் மன்னன் ரவிவர்மா ஆகியோர் தொல்லை கொடுக்கவே அவுரங்கசீப்புடன் சமரசம் செய்துகொண்டு கப்பம் கட்டினார்.
அழகால் ஆட்சி பெற்றதும், போர் முனைகளில் எதிரிகளைச் சந்தித்ததும், மர்மமான முறையில் இறந்ததும் இவரை கிளியோபாட்ராவுக்கு அருகில் அழைத்துச் செல்கிறது.
***
மாணிக்கவாசகர்
Manikkavasagar
மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூரில் பிராமண குலத்தில் பிறந்த இவரை அரிமர்த்தனன் என்னும் பாண்டியன் அழைத்து அமைச்சர் ஆக்கினான் ; கடற்கரைப் பகுதியில் அராபிய வணிகர்கள் குதிரைகளைக் கொண்டுவந்திருப்பதை அறிந்த மன்னன், மாணிக்கவாசகரிடம் பொற்காசுகளைக் கொடுத்து அனுப்பினான் ; திருப்பெருந்துறையில் ஒரு புனித குருவினை கண்டவுடன் அவர் வசப்பட்டு அரச பணியை மறந்தார் . மன்னர் இவரை அழைத்து பல தண்டனைகளை கொடுத்தான் பின்னர்தான் மன்னருக்குத் தெரிந்தது – இவர் சிவபக்தர் அதைத் தெரிவிக்கவே நரி -பரி லீலைகள் நடந்தன என்று; அவரை விடுதலை செய்து அனுப்பியவுடன் அவர் யாத்திரை செய்து திருவாசகத்தைப் பாடினார். சிதம்பரத்தில் புத்த பிட்சுக்களை வாதத்தில் வென்ற பின்னர் அங்கே கோவிலில் இறைவன் அடி சேர்ந்தார்
அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் என்ற நால்வர் சைவ சமயத்தின் மாபெரும் தூண்கள்.
மாணிக்கவாசகர் வாழ்ந்த காலம் என்ன? அவருடைய பெயர் என்ன? யாருக்கும் விடை தெரியாத கேள்வி. தேவாரம் பாடிய மூவருக்கு முன்னால் இவர் வாழ்ந்திருந்தால் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரும் இவர் பெயரைச் சொல்லாதது ஏன்? நாயன்மார்கள் பட்டியலில் இவர் பெயர் இல்லாதது ஏன்? இந்த மூவருக்கும் பின்னால் அவர் வாழ்ந்திருந்தால் திருவாசகத்திலோ, திருக்கோவையாரிலோ மூவரையும் மாணிக்கமாவது குறிப்பிட்டிருப்பாரே! ஏன் குறிப்பிடவில்லை? மதுரை வரை வந்து கூன் பாண்டியனை நின்ற சீர்நெடுமாறனாக்கிய சம்பந்தரை எப்படி மாணிக்கம் மறக்கமுடியும்?
சுருக்கமாகச் சொன்னால் மூவரை மாணிக்கவாசகர் குறிப்பிடவில்லை. ‘மாணிக்கவாசகர் மூவர் குறிப்பிடவில்லை. திருவாசகத்தில் உள்ள திருவெம்பாவையைப் பாடியவர், திருக்கோவையார் என்னும் நூலையும் அவர் இயற்றியதை அறிஞர் உலகம் ஒப்புக்கொள்கிறது. அதில் சைவத்தில் பற்றுள்ள ஒரு வரகுணனைப் பற்றி ஒரு குறிப்பும் உள்ளது. அதைக் கொண்டு மாணிக்கவாசகர் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று பலரும் முடிவு கட்டிவிட்டனர். ஆனால் தற்போதைய ஆராய்ச்சிகள் இது பிழை என்றே காட்டுகின்றன. அப்பர் தேவாரத்திலும், திருவிளையாடல் புராணத்திலுமுள்ள செய்திகள் இவர் தேவார மூவருக்கு முந்தியவர் என்று காட்டுகின்றன மேலும் ‘வரகுண’ என்பது ஒரு அடைமொழி. யாரும் வைத்துக் கொள்ளலாம். உண்மையில் மாணிக்க வாசகரின் இயற்பெயர் எவருக்கும் தெரியாது இவர் பிறந்தது திரு வாதவூர் என்பதால் அந்த ஊரின் கடவுளான சத்ய வாகீஸ்வரர் இவர் பெயர் என்று கருதலாம் அதையே பின்னர் நமபியாண்டார் நம்பி முதலியோர் பொய் அடிமை இல்லாத புலவர் என்று பாடினார்கள்
அறுபத்து மூவர் வரலாற்றைக் கூறும் அகஸ்திய பக்த விலாசம் என்ற சம்ஸ்கிருத நூலும் பொய் அடிமை இலாத புலவரை ‘ஒருவர்’ என்றே கூறி அவருடைய பெயர் ஸத்யதாசன் என்றும் குறித்துள்ளது. அவர் வேதபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர், அந்தண குலத்தவர் 12 ஆண்டுப் பரமனைப் பாடிப் பரவி சிவபதம் அடைந்தார்.
மாணிக்க வாசகரின் பெயர் ஸத்தியதாசன். ஏனெனில் மேலே சத்யதாசனுக்குச் சொன்ன எல்லா விஷயங்களும் கச்சிதமாகப் பொருந்துகிறது. அதைவிட முக்கிய விஷயம் வேதபுரம் என்பது திருவாதவூரே! வேதபுர என்பது தமிழில் வாதவூர் என்று எழுதப்படும். திருவாதவூர் சுவாமிக்குப் பெயர் வேதபுரீஸ்வரர்!
–subham—
Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 60; இந்து மத கலைச்சொல் அகராதி-60, மாணிக்கவாசகர், ராணி மங்கம்மாள், பாண்டிய ராணி, மங்கையற்கரசி , மகரிஷி, மாண்டவ்யர் , ரிஷி, முனிவர் ஆணி மாண்டவ்ய
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திரு இந்தளூர்
திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் பெருமாள் கோயில், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திவ்ய தேசங்களில் 26-வது தலமாகும். இத்தலத்தைப் பற்றி திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் 10 பாசுரங்களை (1852-1861) பாடியுள்ளார்.
பாசுரங்களின் சிறப்பம்சங்கள்:
· பரிமள ரங்கநாதர்: மது, கைடபர் என்ற அசுரர்களை அழித்து, வேதங்களை மீட்டதால், பெருமாளுக்கு ‘பரிமள ரங்கநாதர்’ என்று பெயர்.
· திருமங்கையாழ்வார் பாசுரம்: “சிந்தை தன்னுள் முந்தி நிற்றிர், சிறிதும் திருமேனி, இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே!” என்று ஆழ்வார், அந்தந்த யுகத்தில் வெவ்வேறு நிறத்தில் இருந்த பெருமாளின் திருமேனி அழகை இந்தளூரில் காட்டி அருளுமாறு பாடியுள்ளார்.
· பஞ்சரங்க தலம்: இது பஞ்சரங்க தலங்களில் ஒன்றாகும்.
· சந்திரனின் தவம்: சந்திரன் தன் சாபம் நீங்க இத்தலத்தில் தவம் புரிந்து பயன் பெற்றான்.
திருமங்கையாழ்வார் பாடிய பாசுரங்கள், பரிமள ரங்கநாதரின் அழகையும், இத்தலத்தின் பெருமையையும் எடுத்துரைக்கின்றன.
எம்பெருமான் திருவடிவம் திருவரங்கத்தைக் காட்டிலும் பெரிது! 12 அடி X 6 அடி;முழுதும் பச்சைக் கல்லில் ஆனது! பட்டுப் பீதாம்பரத்தின் மடிப்புகளும், கை விரல் நகங்களும் தெரியும் அளவுக்கு நுணுக்கமாகச் செய்யப்பட்டிருப்பதை, ஆரத்தியின் போது காணலாம்!
பஞ்ச ரங்க தலங்களுள் என்று சொல்வார்கள்! 1. திருவரங்கம் = கஸ்தூரி ரங்கன் = பெரிய பெருமாள் 2. குடந்தை = ஹேம ரங்கன் = ஆராவமுதன் 3. திரு இந்தளூர் = பரிமள ரங்கன் = மருவினிய மைந்தன் 4. கோவிலடி = அப்பால ரங்கன் = அப்பக் குடத்தான் 5. மைசூர்-ஸ்ரீ ரங்கப் பட்டினம் = ஆதி ரங்கன் = ரங்கநாத சுவாமி
* ஆதி ரங்கம் = திருவரங்கம் / * மத்ய ரங்கம் = திருக் குடந்தை / * அந்த ரங்கம் = மயிலாடு துறை (திரு இந்தளூர்) – என்பதும் இன்னொரு வழக்கு!
சந்திரன் (இந்து) செய்த குற்றங்களை நீக்கி, அவனுடைய பிராயச்சித்தம் என்னும் கழுவாயை ஏற்று, சாபம் தீர்த்ததால், இந்தளூர்!
*** திரு இந்தளூர் பாசுரங்கள்
சொல்லாது ஒழிய கில்லேன் அறிந்த சொல்லில்! நும் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை! நல்லார் அறிவீர், தீயார் அறிவீர், நமக்கு இவ்வுலகத்தில், எல்லாம் அறிவீர்! ஈதே அறியீர் இந்த ளூரீரே!
**
திருமங்கை ஆழ்வார் வந்த போது சந்நிதி சார்த்தப்பட்டதால் அவர் கோபத்தில் பாடிய நிந்தா ஸ்துதி.
ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்து; அடியோர்க்கு
தேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு,
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர், எம்பெருமான்!
வாசி வல்லீர் இந்தளூரீரே! – வாழ்ந்தே போம் நீரே!
**
ஒவ்வொரு யுகத்திலும் திருமாலின் வண்ணம் மாறுபடுவதாக ஐதீகம். அதையும் ப்பாடுகிறார் ஆழ்வார் :
முன்னை வண்ணம் பாலின் வண்ணம், முழுதும் நிலைநின்ற,
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம், வண்ணம் எண்ணுங்கால்
பொன்னின் வண்ணம், மணியின் வண்ணம் புரையும் திருமேனி,
இன்ன வண்ணம் என்று காட்டீர், இந்தளூரீரே!
**
திருஇந்தளூர் பரிமள ரங்கநாதன் கோயில் மாட வீதியில் மிகப் புராதனமான ஹயக்ரீவர் சந்நிதி அமைந்துள்ளது. இங்கு ஸ்வாமி தேசிகனும் லட்சுமி ஹயக்ரீவரும் காட்சி தருகிறார்கள்.
சித்திரை மாதப்பிறப்பில் பெருமாள் வீதி புறப்பாடு, ஆவணியில் ஐந்து நாள் கண்ணன் புறப்பாடு, புரட்டாசி மாதத்தில் தாயாருக்கு நவராத்திரி உற்சவம், மார்கழியில் 20 நாள் வைகுண்ட ஏகாதசி உற்சவம், பங்குனி பத்து நாள் பிரம்மோற்சவம் சிறப்பாக கொண்டாடப்படும்.
—Subham—
Tags- திருஇந்தளூர், Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-15; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள்