இசைத் தமிழ் அதிசயங்கள்

1).காரைக்கால் அம்மையார் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் தமிழ் இசைக் கருவிகள் பட்டியலை ஒரே பாடலில் அழகாகக் கொடுத்திரு க்கிறார்:

“ துத்தங்கைக் கிள்ளை விளரி தாரம்

உழைஇளி ஓசைபண் கெழும பாடிச்

சச்சரி கொக்கரை தக்கை யோடு

தகுணிதம் துந்துபி டாளம் வீணை

மத்தளம் கரடிகை வன்கை மென்றோல்

தமருகம் குடமுழா மொந்தை வாசித்து

அத்தனை விரவினோ டாடும் எங்கள்

அப்பன் இடம்திரு வாலங் காடே”

 

இதில் குரல், துத்தம், கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்பன ஏழு ஸ்வரங்களாகும்.

சச்சரி,கொக்கரை, தக்கை, தகுணிதம் கரடிகை, வங்கை, மெந்தோல் ,டமருகம், குடமுழா என்பன தோல் கருவிகள். அல்லது தாளம் எழுப்பும் கருவிகள். துந்துபி ஊதும் கருவி.

 

2).பத்துப் பாட்டில் ஒன்றான மலைபடு கடாம் என்ற நூலில் கூத்தர் கொண்டு சென்ற வாத்தியங்களின் பட்டியல் வருகிறது:

திண்வார்விசித்த முழவோடு ஆகுளி

நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்

மின்னிரும் பீலி அணிதழைக் கோட்டொடு

கண்ணிடை வகுத்த களிற்றுயிர்த் தூம்பின்

இளிப்பயிர் இமிரும் குறும்பரத் தூம்பொடு

விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ

நடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டை

கடிகவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி

நொடிதரு பாணிய பதலையும் பிறவும்

கார்க்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப

நேர்சீர் சுருக்கிய காய கலப்பையீர் ( மலைபடு. 1-14)

 

இவ்வரிகளில் முழவு, ஆகுளி, பாண்டில்,  கோடு, தூம்பு, குழல்,  தட்டை, எல்லரி, பதலை முதலிய கருவிகளைக் காண்கிறோம்.

இசைக் கருவிகளை தமிழர்கள்  தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி ,கஞ்சக் கருவி என்று பகுத்து வைத்தனர். குழலும் கோடும் தூம்பும் துளைக் கருவிகள் முழவு, முரசு, பறை, பதலை, துடி போன்றன தோல் கருவிகள். யாழ் என்பது நரம்புக் கருவி. பாண்டில் என்பது கஞ்சக் கருவி. (ஜால்ரா போன்றது).

 

 

3). இப்போது கிடைக்காமல் போன பல இசை நூல்களை உரைகாரர்கள் மேற்கோள் காட்டுவர். அவற்றின் பட்டியல் இதோ:

இறையனார் களவியல் உரை: முதுநாரை, முது குருகு.

அடியார்க்கு நல்லார் உரை: இசை நுணுக்கம், பெருநாரை, பெருங்குருகு, பஞ்சபாரதீயம், இந்திரகாளியம்

அரும்பத உரை ஆசிரியர்: பதினாறு படலம்

யாப்பருங்கல விருத்தி உரை: வாய்ப்பியம், குலோத்துங்கன் இசை நூல்

 

4). சிலப்பதிகார உரையில் அடியார்க்குநல்லார் பேரி யாழ், மகர யாழ் சகோட யாழ் செங்கோட்டு யாழ் ஆகிய  பல வகை  யாழ்களைக் குறிக்கிறார். இவை முறையே 21, 19, 14, 7 நரம்புகளை உடையன.

 

5.)மலைச் சாரல் பகுதியில் தினைப் பயிரைத் திண்ண ஒரு காட்டு யானை வந்தது. அங்குள்ள குறத்தி அழகான குறிஞ்சிப் பண்ணைப் பாடினாள். அதைக் கேட்டு மெய் மறந்து நின்ற யானை பயிரைச் சாப்பிட மறந்து போனதாம்:

ஒலியல் வார் மயிர் உளரினள் கொடிச்சி

பெருவரை மருங்கில் குறிஞ்சி பாடக்

குரலும் கொள்ளாது நிலையினும் பெயராது

படாஅப் பைங்கண் பாடுபெற்று ஒய்யென

மறம்புகல் மழகளிறு உறங்கும் (அகம்.102)

6).பாலை நிலத்தில் வாழும் கள்வர்கள் அவ்வழியாகச் செல்வோரை வழிமறித்துத் தாக்கிக் கொன்றுவிட்டு பொருள்களை எடுத்துக் கொள்வர். அப்பேர்ப்பட்ட கல் நெஞ்சுடையோரும் பாலைப் பண்ணைக் கேட்டுக் கொலைத் தொழிலை மறந்தனராம்:

ஆறலை கள்வர் படைவிட அருளின்

மாறு தலை பெயர்க்கும் மறுவின் பாலை (பொருந. 21-22)

 

7). புண் பட்ட போர் வீரர்களை பேய்களிடம் இருந்து காப்பாற்ற காஞ்சிப் பண்ணையும், நரியை விரட்ட விளரிப் பண்ணையும் பாடியதாக புறநானூறு கூறுகிறது (பாடல் 281- 291)

 

8).தமிழ் மொழியை இசை, இயல், நாடகத் தமிழ் என்று பிரித்து முத்தமிழ் எனப் பெயரிட்டனர். யாழ், பறை, யாழ் பற்றிய நூல் ஆகியவற்றை தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

தொல்காப்பியர் காலத்தில் துவங்கிய தமிழ் இசை அருணகிரிநாதர் காலத்தில் சிறப்போடுத் திகழ்ந்தது. இதோ திருப்புகழில் இசை:

தகுட தகுதகு தாதக தந்தத்

திகுட திகுதிகு தீதக தொந்தத்

தடுடு டுடுடுடு டாடக டிங்குட்  டியல் தாளம்

தபலை திமிலைகள் பூரிகை பம்பைக்

கரடி தமருகம் வீணைகள் பொங்கத்

தடிய ழனவுக மாருதச் சண்டச் சமரேறி………

என்று சிதம்பரத்தில் பாடியது ஆடல்வல்லானை மனதிற்கொண்டுதான் என்பதைச் சொல்லத் தேவை இல்லை.

9). வயலூரில் பாடிய திருப்புகழில் நீண்ட தாளத்துக்குப் பின்

பேரி திமிலை கரடிகை பதலை சலரிதவில்

தமர முரசுகள் குடமுழவொடு துடி

சத்தக் கணப் பறைகள் மெத்தத் தொனித்து அதிர

 

என்று பாடி இசைக் கருவிகளின் ஒலியை எழுப்புகிறார். இன்னும் பல பாடல்களில் இதே போல தாள ஒலிகளுக்குப் பின்னர் அருமையான பொருள் பொதிந்த வரிகளைச் சேர்த்திருக்கிறார்.

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் அருணகிரி காலத்தில் நிலவிய வாத்தியச் சொற்கள் கூட இன்று வழக்கொழிந்துவிட்டன.

 

10)  பரிபாடல்-12 வையை நதி பற்றிய பாடல்.

ஒத்த குழலின் ஒலி எழ முழவிமிழ்

மத்தரி தடாரி தண்ணுமை மகுளி ஒத்தளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார்

 

என்ற வரிகளில்  மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி, முழவு ஆகிய வாத்தியங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

 

11) கொங்கு நாட்டில் ஈரோடு—காங்கயம் பாதையில் அரச்சலூர் என்னும் இடத்தில் மூன்று பழைய கல்வெட்டுகள் உள்ளன. இவற்றின் எழுத்தமைதியைக் கொண்டு இவை இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று மதிப்பிடுகின்றனர். இதை எழுதியவன் தேவன் சாத்தன் என்று மூன்றாம் கல்வெட்டில் பெயர் உள்ளது. இது ஒரு இசைக் கல்வெட்டு. முதல் இரண்டு கல்வெட்டுகளில் இடமிருந்து வலமாகப் படித்தாலும் மேலிருந்து கீழாகப் படித்தாலும் ஒரே மாதிரி உள்ளதைக் காணலாம். இதோ முதல் கல்வெட்டு:

த தை தா தை த

தை தா தே தா தை

தா தே தை தே தா

தை தா தே தா தை

த தை தா தை த

 

முத்தமிழ் வாழ்க! தமிழ் இசை வெல்க!!

Contact London Swaminathan at swami_48@yahoo.com  or swaminathan.santanam@gmail.com

Please read other 425 English and Tamil posts already uploaded by me.

Amazing Andal: Where did she see the Lion?

Andal  is one of the famous women poets of Tamil Nadu. She lived around 8th century. Though she is known as a devotional poet, her knowledge in several subjects is amazing. She has sung about various subjects from Astronomy to Zoology. In her A to Z dealings, I am going to touch A for Astronomy and Z for Zoo in this article. Ancient Tamil women were well educated. We have scores of female poets (poetesses) in Sangam Tamil literature. We had more than one Avvaiyar in Tamil literature. Among the devotional poetesses Karaikal Ammaiyar of fifth century and Andal of 8th century AD are more popular.

Andals’s 30 verses known as Tiruppavai and  another 143 verses known as Nachiyar Tirumozi are household names in Tamil Vaishnavite families. Her wedding song Varanam Ayiram (part of Nachiyar Tirumozi) is sung in all the Vaishnavite Brahmin weddings. She is the only one female in the twelve famous Vaishnavite Saints known as Alvars.

Two of the 30 Tiruppavai verses are known for her knowledge in Animal Behaviour and Astronomy. One may wonder whether she encountered a lion in a forest or a zoo when one reads her description of a lion. Unless she had keen observation power or a personal visit to a zoo in Madurai near her native place Srivilliputur she would not have described the lion in the following manner:

“ As a fierce lion, which throughout the rains

Within his mountain lair has lain asleep

And awakes, and flashes fire from the eye

And angrily with bristling mane he moves

All of his body, and shakes himself and stands

Upright and roars, and lordly issues forth:

So who flowerlike art, come graciously

Forth from thy shrine; in grace upon by throne

Of cunning craftsmanship, search out the cause

That brings us here. Ah, Elorembavoy  (23)

(From Hymns of the Alwars by J S M Hooper)

Andal and Astronomy

Andal must be an amateur astronomer. Though she was a teenage girl she knew ornithology, zoology, astronomy etc. She mentioned a particular bird called Anaichathan (Asian Drongo Cuckoo or Valiyan Kuruvi) . Her keen observation of Venus rising and Jupiter setting in the early morning sky 1200 years ago helped us to confirm her period. We know approximately her period because of her father Periyalvar and the Pandya king of his times. Andal’s precise date was determined by her astronomical reference in the following verse:

Singing the glory of him

Who split the bird’s bill and killed

And Him who plucked the wicked demon as a weed

Girlies all reached the site of deity

Venus ascended and Jupiter had slept sunk;

Birds too clanged behold, belle gild:

The eye is a la flower or deer flirting?

Yet asleep in bed

Enjoin to dip and shiver in bath of cold;

Shed off thy stealth untold

This day is auspicious, consider our damsel.

 

In the very first verse of Tirupavai, she says that it was Full moon day in the month of Markazi.( Markazi thingal mathi niraintha nannaalal in Tamil) and then she says Venus ascended and Jupiter went down. This happened on 18th December 731 AD according to scholars Raghava Iyengar and KG Shankar. Thanks to Andal we were able to pinpoint the date.

I am giving both the verses in Tamil for the benefit of Tamil readers:

 

Animal behaviour:

மாரிமலை முழைஞ்சில் மன்னிக்கிடந்து உறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து

வேரி மயிர்ப்பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போதருமா போலே நீ பூவைப் பூவண்ணா உன்

கோயில் நின்று இங்ஙனே போந்தருளி, கோப்புடைய

சீரிய சிங்காசனத்திருந்து, யாம் வந்த

காரியம் ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய் (திருப்பாவை 23)

 

Astronomy:

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்ந்திமை பாடிப்போய்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பின காண்! போது அரிக்கண்ணினாய்

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே

பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்து ஏல் ஓர் எம்பாவாய் (திருப்பாவை 13)

Contact swami_48@yahoo.com

புலவரின் வேதனை: சிவன் இப்படிச் செய்யாமல் விட்டு விட்டானே!

Pictures of Shiva and Brahma

சம்ஸ்கிருதச் செல்வம்-5

 

புலவரின் வேதனை: சிவன் இப்படிச் செய்யாமல் விட்டு விட்டானே!

 

By ச.நாகராஜன்

 

பொல்லாத வார்த்தைகளில் ஒன்று விதி என்பது! புரிந்து கொள்ள முடியாததும் கூட!

சோக மனத்துடன் வருந்தும் ஒருவனுக்கு ஆறுதல் அளிக்கிறார் ஒரு புலவர் இப்படி:-

 

ஏன் அதிகமாக சிந்திக்கிறாய்?

கிம் சிந்த்தேன பஹுனா?

 

ஏன் அவன் சோக மனத்துடன் வருந்துகிறான்?

கிம் வா சோகேன மனஸி நிஹிதேன?

 

முன் நெற்றியில்  விதியால் என்ன எழுதப்பட்டிருக்கிறதொ அது நிச்சயம் நடக்கும்!

தன்னிஸ்சித்தம் பவிஷ்யதி

   விதினா லிகிதம் லலாடே யத்

 

தீர்க்கமாக விதியைப் பற்றிச் சொல்லி விட்டார் அவர் இப்படி:-

கிம் சிந்த்தேன பஹுனா?

   கிம் வா சோகேன மனஸி நிஹிதேன? I

தன்னிஸ்சித்தம் பவிஷ்யதி

   விதினா லிகிதம் லலாடே யத் II

 

  (லலாடம் – முன் நெற்றி லிகிதம் – எழுதப்பட்டது)

 

ஆனால் இன்னொரு புலவரோ உலகத்தில் நடப்பதை எல்லாம் நன்கு கூர்ந்து கவனிக்கிறார். நல்லவனுக்கு ஏகப்பட்ட சோதனைகள்! தீயவர்களோ கொடி கட்டிப்

பறக்கிறார்கள். செல்வத்தில் புரள்கிறார்கள்.

அனைவரையும் இஷ்டத்திற்கு வாட்டுகிறார்கள். இது சரியா? விதி இப்படி இருக்குமானால் அது சரி இல்லையே! வருகிறது கோபம் அவருக்கு. சிவன் செய்தது சரி இல்லை என்று ஒரே போடாகப் போடுகிறார் சிவன் மேல் ஏன் கோபம்? சிவனுக்கும் விதிக்கும் என்ன சம்பந்தம்?

 

அனுசிதமேவாசரிதம்

     பசுபதினா யத்திதே: சிரச்சின்னம்

சிவன் செய்தது முறையில்லை. பிரம்மாவின் தலையை மட்டும் தான் அவர் அறுத்தெறிந்தார்.

 

சின்னோ ந சாஸ்ய ஹஸ்தோ

    யேனாயம் துர்லிபிம் லிகதி

எந்தக் கையால் மோசமான எழுத்துக்களை (விதியை) அவர் எழுதுகிறாரோ அந்தக் கையை அறுக்கவில்லையே!

 

பாடலை முழுதுமாகப் பார்ப்போம்:-

அனுசிதமேவாசரிதம்

     பசுபதினா யத்திதே: சிரச்சின்னம் I

சின்னோ ந சாஸ்ய ஹஸ்தோ

    யேனாயம் துர்லிபிம் லிகதி II

 

(அனுசிதம் – முறையில்லை; பசுபதி – சிவன் துர்லிபி – மோசமான எழுத்து – அதாவது விதி)

 

பிரம்மாவின் தலையை அறுத்து என்ன பிரயோஜனம்? மோசமான விதியை எழுதும் பிரம்மாவின் கையை அல்லவா சிவன் அறுத்தெறிந்திருக்க வேண்டும்!

 

நாட்டு நடப்பைப் பார்த்தால் கவிஞரின் கோபம் நியாயமானது தான் என்று நமக்கும் அப்படியே தான் தோன்றுகிறது. ஆனால் விஷயம் பற்றி நன்கு ஆய்ந்த கவிஞர் இதற்குச் சமாதானம் கூறுகிறார் இப்படி:-

 

க்ருத கர்மக்ஷயோ நாஸ்தி

   கல்பகோடி ஷதைரபி I

அவஸ்யமேவ போக்தவ்யம்

    க்ருதம் கர்ம சுபாசுபம் II

 

ஒருவன் செய்த கர்மம் அவனை கோடி கல்பம் சென்றாலும் விடாது. அவன் செய்ததற்கான பலனை அனுபவித்தே ஆக வேண்டும். அது நல்ல செயலோ அல்லது கெட்ட செயலோ பலனை அனுபவித்தே ஆக வேண்டும்!

 

க்ருத கர்மம் – ஒருவன் செய்த செயல்களின்

க்ஷயோ நாஸ்தி –விளைவுகள் நாசமடைவதில்லை

அவஸ்யம் ஏவ –நிச்சயமாக

போக்தவ்யம் – அனுபவித்தே ஆக வேண்டும்

கல்ப கோடி ஷதைரபி– நூறு கோடி கல்பம் சென்றாலும் சரி

சுபாசுபம் – நல்ல மற்றும் தீய

க்ருதம் கர்ம – செயல்களைச் செய்ததற்கான பலன்களை அனுபவித்தே தீர வேண்டும்.

 

இப்படி கர்மம் பற்றிய உண்மையை நமக்குக் கூறி நம்மைத் தெளிவு படுத்துகிறார்கள் நம் பெரியோர்!

 

இப்போது நமக்கு மனம் ஆறுதல் அடைகிறது. செய்ததன் விளைவை ஒரு நாள் தீயவன் அனுபவித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் நம்மை நல்ல பாதையில் செல்லத் தூண்டுகிறது!

 

*********************

 

அருணகிரிநாதரின் சொற்சிலம்பம்

Photos from Face Book; Thanks.

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை -8

அருணகிரிநாதரின் சொற்சிலம்பம்

திருப்புகழ் என்பது இறைவனின் புகழ் பாடும் துதிப் பாடல்கள்தான். ஆயினும் அதில் தமிழ் கொஞ்சி விளையாடுகிறது. பல இடங்களில் அருணகிரிநாதர் சொற் சிலம்பம் ஆடுகிறார். முருகனை மறந்து விட்டு தமிழின் அழகை ரசிக்கத் துவங்கிவிடுகிறோம். ஏனெனில் ஆழ்வார்கள், நாயன்மார்கள் துவங்கி பாரதி வரை வந்த அடியார்கள் அனைவரும் தமிழையும் தெய்வத்தையும் ஒன்றாகவே கண்டார்கள். இதோ சில எடுத்துக் காட்டுகள்:

மனித்தர் பத்தர் தமக்கு எளியோனே

மதித்த முத்தமிழில் பெரியோனே

என்ற வரியிலிருந்து இது தெளிவாகிறது.

 

காமாரி, தீயாடி, ஆசாரி

விராலிமலை பாடலில் காமாரி, தீயாடி, ஆசாரி என்று சிவ பெருமானைப் பாடுகிறார். ஏதோ திட்டுவது போல இருக்கும்.

கரி புராரி காமாரி திரிபுராரி தீயாடி

கயிலையாளி காபாலி            கழியோனி

கரவு தாசன் ஆசாரி பரசு பாணி பானாளி

கணமொடாடி காயோகி           சிவயோகி

என்று பாடுகிறார். இதன் பொருள்: யானைத் தோலை உரித்து அணிந்தவர், காமனையும் திரிபுரங்களையும் எரித்தவர், சுடலையில் ஆடுபவர், கயிலை மலையை ஆளுபவர், கபாலத்தைக் கையில் ஏந்தியவர், மூங்கில் கழியின் கீழ் பிறந்தவர்,  கையில் தீயை ஏந்தி ஆடும் ஆசார்யர் (குரு), பரசு எனும் ஆயுதத்தை உடையவர், நள்ளிரவில் ஆடுபவர், பூத கணங்களுடன் ஆடுபவர், காப்பாற்றும் யோகி, சிவயோகி என்று சிவ பெருமானைப் புகழ்கிறார்.

சலா சலா, சிலீர் சிலீர், அளா அளா, சுமா சுமா

திருக்கழுக்குன்ற திருப்புகழில் தனா தனா, பளீர் பளீர், கலீர் கலீர், குகூ குகூ, சலா சலா, சிலீர் சிலீர், அளா அளா, சுமா சுமா, எழா எழா, குகா குகா, செவேல் செவேல் என்று ஓசை நயத்துடனும் பொருள் நயத்துடனும் பாடி இருக்கிறார். இதோ சில வரிகள் மட்டும்:

ஓலமிட்ட சுரும்பு தனாதனாவென

வேசிரத்தில் விழுங்கை பளீர் பளீரென

வோசை பெற்ற சிலம்பு கலீர் கலீரென             விரக லீலை

ஓர் மிடற்றில் எழும் புள் குகூ குகூவென…………..

 

பழமுதிர்ச் சோலையில் பாடிய சீர் சிறக்கு மேனி பசேல் பசேல் என

என்ற பாடலும் இதே பாணியில் அமைந்துள்ளது. ஓசை நயத்துடன் அத் திருப்புகழைப் பாடுகையில் நம்மை அறியாமலே உற்சாஅகம் கொப்பளிக்கும்.

 

தகப்பன் சாமி, நடிக்கும் சாமி, ஒழிக்கும் சாமி, பொறுக்கும் சாமி

சிவ பெருமானுக்கே ஓம்காரப் பொருளை உரைத்தவன் ஆதலால் முருகனை தகப்பன் சுவாமி என்பர். ஆனால் அருணகிரி சாமி என்ற சொல்லை வைத்துக் கொண்டு எப்படிச் சிலம்பம் ஆடுகிறார் என்று பாருங்கள்:

புவிக்குன் பாத—— என்று துவங்கும் பாடலில் சாமி என்ற சொல்லை வைத்துக் கொண்டு சாமி ஆடி விடுகிறார்!!

சிவத்தின் சாமி மயில் மிசை நடிக்குஞ் சாமி எமதுளம்

சிறக்குஞ் சாமி சொருப மீது ஒளி காணச்

செழிக்குஞ் சாமி பிறவியை ஒழிக்கும் சாமி பவமதை

தெறிக்குஞ் சாமி முனிவர்களிடம் மேவும்

தவத்தின் சாமி புரி பிழை பொறுக்கும் சாமி குடிநிலை

தறிக்கும் சாமி அசுரர்கள் பொடியாகச்

சதைக்கும் சாமி எமை பணிவிதிக்கும் சாமி சரவண

தகப்பன் சாமி எனவரு பெருமாளே

சாமியையே கிண்டல் செய்வது போல சொற் பிரயோகம் இருந்தாலும் ஒவ்வொரு சொல்லும் ஆழந்த பொருள் உடையது.

எண் ஜாலம்

எண்களை வைத்துக் கொண்டு ஜால வித்தை காட்டும் திருப்புகழ் இதோ:

சுருதி மறைகள் இருநாலு திசையில் அதிபர் முனிவோர்கள்

துகளில் இருடி எழுபேர்கள்             சுடர் மூவர்

சொலவில் முடிவில்  முகியாத பகுதி புருடர் நவநாதர்

தொலைவிலுடு வினுலகோர்கள் மறையோர்கள்;

அரிய சமய மொருகோடி அமரர் சரணர் சத கோடி

அரியும் அயனும் ஒருகோடி            இவர்கூடி

அறிய  அறிய அறியாத அடிகளறிய  அடியேனும்

அறிவு ளறியு மறிவூர அருள்வாயே

 

2,4,7,3,9 என்று சொல்லிவிட்டு கோடி, சத கோடி என்று அடுக்கியதோடு அறிய என்ற சொலை வைத்தும் சிலம்பம் ஆடுகிறார்! விஷ்ணுவும் பிரம்மனும் அறிய முயன்றும் அறியாத உன்னை எனது அறிவுக்குள் அறியும் அளவுக்கு அறிவு ஊர அருளவேண்டும் என்பது இதன் பொருள்.

 

அணிகலம் எது?

ஆலுக்கு அணிகலம் வெண்தலை மாலை

மாலுக்கு அணிகலம் தண் அம் துழாய், மயில் ஏறும் ஐயன்

காலுக்கு அணிகலம்  வானோர் முடியும் கடம்பும் கையில்

வேலுக்கு அணிகலம்  வேலையும் சூரனும், மேருவுமே

பொருள்: ஆலமர்ச் செல்வன் சிவனுக்கு அணி மண்டைஓட்டு மாலை, திருமாலுக்கு அணி துளசி மாலை, மயில் ஏறும் முருகன் காலுக்கு, தேவர்களின் முடியும் கடம்பும் அணிகலம். கையில் உள்ள வேலுக்கு அணி அதன் மூலம் துணிக்கப்பட்ட சூரனும் மலையும் கடலும் ஆகும்.

 

காணி நிலம் வேண்டும் பராசக்தி…….

பாரதி பாடிய பாடலில் காணி நிலம், மாளிகை, கிணறு, 10, 12 தென்னை மரங்கள் நிலவொளி, குயில் ஓசை ஆகியவற்றைக் கேட்டுவிட்டு அமைதியை வேண்டுகிறார். அதற்கு முன்னரே அதே பாணியில் அருணகிரி பாடிவிட்டார். பாரதியே இதைப் படித்துதான் காணி நிலம் வேண்டும் பாட்டை எழுதினாரோ !

உடுக்கத் துகில் வேணும் நீள் பசி

அவிக்கக் கன பானம் வேணும் நல்

ஒளிக்குப் புனலாடை வேணும் மெய்யுறு நோயை

ஒழிக்கப் பரிகாரம் வேணும் உள்

இருக்கச் சிறு நாரி வேணும் ஓர் படுக்கத்

தனி வீடு வேணும்……………… என்று அடுக்கிக் கொண்டே போகிறார்.

(நாரி=மனைவி)

 

உருகவில்லை, அறியவில்லை, விழையவில்லை

தீர்த்தமலையில் பாடிய பாடலில் என்ன என்ன செய்யவில்லை என்பதைப் பட்டியல் போடுகிறார்:

பாட்டில் உருகிலை, கேட்டும் உருகிலை,

கூற்று வழி பார்த்தும் உருகிலை

பாட்டை அநுதினம் ஏற்றும் அறிகிலை       தினமானம்

பாப்பணியருள் வீட்டை விழைகிலை

நாக்கின் நுனி கொண்டு ஏத்த அறிகிலை என்று பாடுகிறார்.

 

முந்தைய ஏழு திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் கண்டு களிக்க.

swami_48@yahoo.com

Philippines- A Tamil Hindu Colony?

The Pre Spanish history of Philippines was shrouded in mystery. Now the mist around the Philippines is clearing thanks to recent discoveries. The Spaniards, wherever they went, destroyed the local culture, plundered their gold and massacred the people. They spared those people who converted to Christianity.

The Philippines is a country of 7000 islands. Nobody asked or wondered what those places were called before they named it “ Philippines” just 400 years ago. They had their own names, their own culture, but they were ignored as primitive and uncivilized. Fortunately one inscription and one golden statue escaped the wrath of the religious fanatics.

One important Tamil inscription of Rajendra Chola was not properly explained. Half of the place names mentioned in the inscription is not properly identified. The East Indies were known to Kalidasa of 1st century BC. Parasurama was linked with Aparanta.  Kalidasa used to mention Indonesia and the islands beyond as Dwipantara.  Rajendra Cholas inscription mentioned Parasurama.

Hindu music instrument Kadjabi is still played in the Philippines. Hundreds of Sanskrit words are used in the islands even today.

Golden Statue

A  five and a half inch tall golden statue recovered from Mindanao in 1917 is kept in the Field Museum of Natural History in Chicago. Vishnu’s vehicle Garuda was found in Palawan. The gold statue is that of a Buddhist goddess known as Tara. It weighs 4 pounds (approximately 2 Kilos). It is dated 1200 to 1300 AD. It was found in Wawa River after heavy rains. Lot of gold was taken back to Spain and melted. Only a few escaped from the invaders.

Laguna Copper Plate inscription

Luzon in the Philippines was ruled by Lakans (local chieftains)  from 900 AD until 1571. An inscription found there known as Laguna copperplate inscription dated 900 AD contains Sanskrit words and place names. The inscription which was found in 1989 contains information about debts cleared by the ruler of Tondo. Namwaran along with his children Lady Angkatana and Buka were cleared of debts. It was written in Kawi script. Lord Minister Jayadewa issued the order. The inscription is kept in the National Museum of the Philippines  in Manila. A lot of Sanskrit words such as Swasti, Visaka,Chathurthi, Suwarna, Krishnapaksha, Somawara, Dewata, Jyotisa  are in the text. Full text and translation is available in Wikipedia.

Language

Wikipedia article says 25 percent of words in Philippines native language are from Sanskrit and Tamil. Look at the list given by Wikipedia:

From Tagalog:

* budhi “conscience” from the Sanskrit bodhi
* dukha “one who suffers” from the Sanskrit dukkha
* guro “teacher” from the Sanskrit guru
* sampalataya “faith” from the Sanskrit sampratyaya
* mukha “face” from the Sanskrit mukha
* laho “eclipse” from the Sanskrit rahu
* maharlika “noble” from Sanskrit mahardikka

From Kapampangan:

* kalma “fate” from the Sanskrit karma
* damla “divine law” from the Sanskrit dharma
* mantala -“magic formulas” from the Sanskrit mantra
* upaya “power” from the Sanskrit upaya
* lupa “face” from the Sanskrit rupa
* sabla “every” from the Sanskrit sarva
* lawu “eclipse” from the Sanskrit rahu
* Galura “giant eagle (a surname)” from the Sanskrit garuda
* Laksina -“south (a surname)” from the Sanskrit dakshin
* Laksamana/Lacsamana “admiral (a surname)” from the Sanskrit lakshmana

From Tausug:

* suarga “heaven”; compare “sorga” in modern Indonesian [1]
* neraka “hell”
* agama “religion”

Sanskrit and Sanskrit-derived words common to most Philippine languages:

* sutla “silk” from the Sanskrit sutra
* kapas “cotton” from the Sanskrit kerpas
* naga “dragon or serpent” from the Sanskrit naga

Ramayana in the islands

Ramayana and Mahabharata are popular in all the South East Asian countries. Philippines also have its own version of Ramayana. The Maranao version is Maharadia lawana ( Maharaja Ravana). Lam- Ang is the version of the Llocanos. Many verses of Hud Hud are from Ramyana and Mahabharata.

Musical Instruments

Several musical instruments of the Philippines are similar to Indian musical instruments and Kutiyapi is a corrupted word of Kadjabi, a Sanskrit word.

Rajendra Chola Inscription

Rajendra Chola, son of the Raja Raja won many countries in South East Asia. The inscription named all the countries and islands he won around 1025 AD. K.A.Nilakanta Sastri, the greatest authority on South Indian History has written about his conquests. But when he wrote about the Cholas 75 years ago Laguna inscription was not discovere. Only Rajendra’s Tamil inscription was known. Now we know Philippine islands were under Hindu rulers even before Rajendra invaded S.E. Asian countries.

Scholars identify the following places in the inscription:

Sri Vijaya= Palembang, Pannai= North Sumatra, Malaiyur= Jambi, Mayirudingam= Thai-Malay peninsula, Ilangasokam= Langkasuka, Mappalam= Pegu, Mavimbangam= Isthumus of Ligor or Thai-Malay peninsula, Valaipanduru= Vietnam?, Talaitakkolam= Takoba, Madamalingam= Tambralinga, Ilamuridesam= Lamri in Aceh, Manakkavaram= Nicobar islands, Kadaram= Kedah.

Some of the above places are confirmed by secondary evidence. My research shows that the place names such as Mayirudingam, Mavimbangam are islands of Philippines. The reason for this is the trade roués to China went through these islands. During 1300 year rule, the countries established trade and political contacts with China which is confirmed by the Chinese writers. A patient decoding of Chinese transliterations may reveal more truths. Sanskrit and Tamil words are corrupted beyond recognition Eg. Liang Shu (Langkasoka).

Kaundinya from South India established the Hindu empire in the First century AD in Funan. Chinese writers have written about the rulers and their relationship with China. Agastya cult was deep rooted in Java, Sumatra and Bali islands. I have already written about it and Mulavarman’s Sanskrit inscription in Borneo.

More From History of Indian Culture by B.M.Luniy

“ Modern researchers have proved that the people of South India had established their colonies in the Philippines and they had considerably influenced all aspects of daily life. Handicrafts, coins, folk songs, traditions and many religious customs exhibit the Hindu influence there. The scripts of the people of Philippines bear striking resemblance with those of South India. In the realm of religious rites, rituals and assigning names, the natives of Philippines followed Indians closely. The names of the places on the Luzon coast and the shores of Manila bay indicate their Sanskrit origin. The discovery of Ganesh statue proves that the people followed Brahmanism. The hill tribes of Luzon worship early Vedic Gods even to this day.

The people of many islands in the Pacific Ocean have physical appearance similar to that of Indo Aryans. Their languages have resemblance with those of the pre Aryan Indians like Santhals. Their religious and social customs and beliefs betray traces of Hindu cultural influences. The Hula dance of Hawai islands and Shiva dance of Samoa are similar to the folk dances of Bengal

 

Their use of conch shell, nose flute, musical bones, staple food stuffs and animals reveal Indian origin. Many of their decorative designs, crafts, traditions, ideas of phallic symbolism and images are examples of old Polynesian cultural traits derived from the Brahmanical civilization”.

Please read my earlier posts

1.Pandya King who Ruled Vietnam 2.Ancient Sanskrit inscriptions in strange places 3.Sanskrit inscriptions in Mosques and on Coins 4.Sanskrit inscription and Magic Square on Tortoise 5.Ancient Tamil Dress 6.Pallankuzi (mancala) mystery 7.India- Madagascar Link 8.Is Brahmastra a Nuclear Weapon? 9.Great Engineers of Ancient India 10. The Mysterious Link between Karnataka and Cambodia

I have given below part of the text of Rajendra Chola’s inscription for the benefit of Tamil readers:

தொல்பெருங் காவற் பல்பழந் தீவும்

செருவிற் சினவி யிருபத் தொருகால்

அரசுகளை கட்ட பரசு ராமன்

மேவருஞ் சாந்திமத் தீவரண் கருதி

இருத்திய செம்பொற் றிருத்தகு முடியும் (20)

********

அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச்

சங்கிராம விசையோத் துங்க வர்ம

னாகிய கடாரத் தரசனை வாகையும்

பொருகடல் கும்பக் கரியொடு மகப்படுத் (50)

துரிமையிற் பிறக்கிய பருநிதிப் பிறக்கமும்

ஆர்த்தவ னகநகர்ப் போர்த்தொழில் வாசலில்

விச்சா திரத்தோ ரணமு மொய்த்தொளிர்

புனைமணிப் புதவமுங் கனமணிக் கதவமும்

நிறைசீர் விசயமுந் துறைநீர்ப் பண்ணையும்

வன்மலை யூரெயிற் றொன்மலை யூரும்

ஆழ்கட லகழ்சூழ் மாயிரு டிங்கமும்

கலங்கா வல்வினை இலங்கா சோகமும்

காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும்

காவலம் புரிசை மேவிலிம் பங்கமும் (60)

விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும்

கலைத்தக் கோர்புகழ் தலைத்தக் கோலமும்

தீதமர் பல்வினை மாதமா லிங்கமும்

கலாமுதிர் கடந்திற லிலாமுரி தேசமும்

தேனக்க வார்பொழில் மானக்க வாரமும் (65)

தொடுகடற் காவற் கடுமுரட் கடாரமும்

மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பரகேசரி வன்மரான

உடையார் ஸ்ரீராசேந்திர சோழதேவர்க்கு யாண்டு…”

Contact for further details: swami_48@yahoo.com

சங்கீத ரகசியம்: இளமையில் கல்

Picture: My Friend Violinist Nagaraju’s son

சங்கீத ரகசியம்: இளமையில் கல்

 

தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டுமா? சங்கீதம் கற்றுக் கொள்ளுங்கள்.

ஞாபக சக்தி வளர வேண்டுமா? சங்கீதம் கற்றுக் கொள்ளுங்கள்.

வயதான போதும் இளமை திரும்ப வேண்டுமா? சங்கீதம் கற்றுக் கொள்ளுங்கள்.

அதுவும் இளமையில் இசையைக் கற்கவேண்டும்!!!

பிரிட்டனில் இருந்து வெளியாகும் ‘நியூ சை ன்டிஸ்ட்’ New Scientist பத்திரிக்கை ஒரு நல்ல சுவையான செய்தியை வெளியிட்டிருக்கிறது. இதற்கு முன்பாக ‘சைன் டிFபிக் அமெரிக்கன்’, ‘நேச்சர்’ Nature, Scientific American ஆகிய பத்திரிக்கைகளிலும் நியுரோ சை ன்டிஸ்ட்’ பத்திரிக்கைகளிலும் இதே கருத்து வெளியாகி இருக்கிறது.

பார்ப்பனச் சிறுவர்களை ஐந்து வயதிலேயே வேதத்தின் ஒரு ஷாகையயும் வேதத்தின் ஆறு அங்கங்களையும் (ஷட்+ அங்கம்= சடங்கு) கற்க அனுப்பியதால், அவர்கள் பெரிய அறிவாளிகளாக விளங்கினர். நீண்ட ஆயுளுடனும் நல்ல ஞாபக சக்தியுடனும் விளங்கினர். இதே முறையை சங்கீதப் பயிற்சிக்கும் பின்பற்றினர். வேதமும் இசையை அடிப்படையாக உடையது. இரண்டும் பய பக்தி கலந்த, மரியாதை மிக்க குரு குல வாச முறையில் பயிலப் பட்டன.

பள்ளிக்கூடத்தில் சேர வருவோருக்கு கணிதமும் சங்கீதமும் தெரிந்திருக்க வேண்டும் என்று கிரேக்க அறிஞர் பிளாட்டோ வலியுறுத்தினார்.

இசை என்பது காதோடு மட்டும் நிற்பதல்ல. இசையின் நுண்ணலைகள் நம்முள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை படைத்ததவை.

முதலில் புதிய செய்தியைப் பார்ப்போம்:

சங்கீதத்தில் புகழ்பெற்ற, திறமைமிக்க 36 பேர்களைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களில் பாதிப்பேர் ஏழு வயதுக்கு முன்னரே இசையைக் கற்கத் துவங்கினர். மீதி பாதிப்பேர் ஏழு வயதுக்குப் பின்னர் இசையைக் கற்கத் துவங்கினர். எல்லோரையும் எம்.ஆர். ஐ. ஸ்கேன் (Magnetic Resonance Imaging Scan) செய்து பார்த்தனர். ஒரு அதிசயமான உண்மை அம்பலத்துக்கு வந்தது.

மனிதர்களின் மூளையில் இரண்டு பிரிவுகள் உள்ளன. இதை இணைக்கும் வெள்ளைத் திசுவுக்கு கார்ப்பஸ் கல்லோசம் என்று பெயர். நாம் ரேடியோ அல்லது கம்ப்யூட்டர் ஆகியவற்றைப் பிரித்துப் பார்த்தால் பினபக்கத்தில் ஏராளமான இணைப்புகளைப் பார்க்கலாம். அது போல முளையின் இரண்டு பகுதிகளை இணக்கும் பகுதியே கார்பஸ் கல்லோசம். யார் சின்ன வயதிலேயே இசையைக் கற்கச் சென்றார்களோ அவர்களுக்கு இந்தப் பகுதி நன்றாக வளர்ச்சி பெற்று இருக்கிறது. ஏழு வயதுக்குப் பின்னர் பயின்றவர்களுக்கு இசைப் பயிற்சி இல்லாதவர்களின் அளவுக்கு இந்த வெண்ணிறப் பகுதி இருக்கிறது.

இந்த வெண்ணிறப் பகுதியின் வளர்ச்சி எதைக் காட்டுகிறது? இடது கையும் வலது கையும் ஒருங்கிணைந்து செயல்படுவதைக் காட்டுகிறது. சங்கீதம் கற்பவர்கள் ஒரு கருவியைக் கற்கவோ கைகளால் தாளம் போடவோ இது மிகவும் அவசியம்

இதை ஜெர்மனியில் லைப்சிக் நகரில் இருக்கும் மூளை, மனித அறிவு ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ளது. இதை கிறிஸ்டோபர் ஸ்டீல்,

( மாக்ஸ் பிளன்க் நிறுவனம் Max Planck Institute for Human Cognitive and Brain Sciences, Leipzig, Germany) அறிவித்தார். இளமையில் சங்கீதம் கற்போர் மற்றவர்களை விஞ்சிவிடுவர் என்பது இந்த ஆய்வின் துணிபு.

நம் முன்னோர்கள் “இளமையில் கல்” என்றும் “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்றும் சொன்னது எவ்வளவு உண்மை?

****

இசையும் செயல்பாடும்

இதோ இன்னொரு செய்தி:

வெளிநாடுகளில் இருந்து மூன்று பிரபல விஞ்ஞானப் பத்திரிக்கைகள் வருகின்றன.: New Scientist, Nature, Scientific American. இந்த மூன்று பத்திரிக்கைகளில் வெளியாகும் செய்திகளுக்கு தனி மதிப்பு உண்டு.

பாட்டுக் கேட்டாலே போதும். மூளை வளர்ச்சி பெறும் என்று இந்த செய்தி கூறுகிறது! சங்கீதம் கற்போருக்கு பல மொழிகளைக் கற்கும் திறன் அதிகரிக்கும் என்றும் பெரும் இரைச்சலில் இருந்து சொற்களைப் பிரித்தெடுக்கும் சக்தி அதிகம் என்றும் இந்த ஆய்வுகள் காட்டின. 45 பேரைத் தேர்ந்தெடுத்து  பல உரையாடல்களை பயங்கர இரைச்சலுக்கு இடையே ஒலிபரப்பினர். சங்கீதம் கற்றோர் மற்றவர்களை விட உரையாடல்களை நன்கு கேட்க முடிந்தது.  Journal of Neuroscience இந்தச் செய்தியை வெளியிட்டது.

பிரபல இசை மேதை மோசார்ட்டின் இசையை ரசிப்போருக்கு சில விஷயங்களில் அறிவும் திறமையும் கூடுதலாக இருப்பதாக 1993ல் நேச்சர் பத்திரிக்கை ஒரு ஆய்வை வெளியிட்டது. இளம் வயதில் சிறிது இசைப் பயிற்சி பெற்றாலும் வயதான பின்னரும் அவர்களின் கேள்வி ஞானம் சிறப்பாக இருக்கிறது என்று நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் (அமெரிக்கா) 2012ல் இதை உறுதி செய்துள்ளது. (A Little Music Training Goes a Long Way: Practicing Music for Only Few Years in Childhood Helps Improve Adult Brain)

 

வயது ஆக ஆக ஆக மூளையின் செயல்பாடு குறையும் என்பது பொது விதி. ஆனால் சங்கீதம் கற்றுத் தொடர்ந்து பயிற்சி செய்வோரிடம் இந்த தேய்மானம் அந்த வேகத்தில் இல்லை. ஞாபக சக்தித் தேர்விலும், வேகமாக எதையும் புரிந்து கொள்ளும் தேர்விலும் சங்கீதக்காரர்கள் அதிகம் மதிப்பெண் பெறுகிறார்கள் (ஆதாரம்: 2012 July issue of Frontiers in Human Neuroscience).

*****

இதை எழுதும்போது, எனக்கு 1960களில் என் பெரிய அண்ணன் செய்த ஒரு செயல் நினைவுக்கு வருகிறது. மதியம் ஒலிபரப்பாகும் ‘விவித் பாரதி’ ஹிந்தி பாட்டுகளைக் கேட்டுகொண்டேதான் பாடங்களைப் படிப்பான். அவன் ஏமாற்றுவதாக அம்மாவும் சகோதரர்களும் அவனைக் கேலி செய்வோம். இப்போது நிறைய பேர் காதில் ‘இயர் போனை’ வைத்து பாட்டுக் கேட்டுக்கொண்டு பாடப் புத்தகங்களைப் படிப்பதைப் பார்க்கிறோம். இதிலும் பலன் உண்டு என்றே சொல்லத் தோன்றுகிறது!

மோட்சார்ட் இசையைக் கேட்ட பின்னர் புத்திசாலித்தன (ஐ.க்யூ) சோதனைய்ல் மானவர்கள் அதிகம் மதிப்பெண் பெற்றதாக முதலில் கலிபோர்னியா பல்கலைகழகம் செய்தி வெளியிட்டது ஆனால் பின்னர் மற்ற பல்கலைகழகங்கள் இதே சோதனையைச் செய்து பார்த்தபோது அந்தப் பல்ன்கள் கிடைக்கவில்லை . ஆகவே இந்த சோதனை ஒத்துக்கொள்ளப் படவில்லை.

*****

இசையும் பிராணிகளும்

25/05/1983ல் ஹிந்து நாளேடு வெளியிட்ட செய்தி என் கோப்பில் இருக்கிறது. அதில் பக்திப் பாடல்கலைக் கேட்ட பசு மாடுகள் அதிகம் பால் சுரந்ததாக ஆராய்ச்சி முடிவு வெளியானது. இன்று வரை அது நடக்கிறதா என்று தெரியவில்லை. அன்னமாசார்யா கீர்த்தனைகள், வெங்கடேஸ்வர சுப்ரபாதம் ஆகியன பாடப்பட்டபோது பால் உற்பத்தி அதிகரித்தது.

சங்க இலக்கியத்தில் தினைப்புனத்தை மேயவந்த யானை கூட இசைக்குக் கட்டுபட்டு நின்ற செய்தி உளது. பிருந்தாவனத்தில் ஆநிரைகள் கண்ணனின் புல்லாங்குழலுக்குக் கட்டுப்பட்டு மெய்மறந்து நின்றதையும் நினைவு கூறுவோமாக.

Contact London Swaminathan at swami_48@yahoo.com

அஸ்வமேத யக்ஞமும் அஸ்வப் படுகொலைகளும்

 

GOOD NEWS : This blog has crossed 81,000 hits. I have uploaded more than 400 research articles and at least one article is uploaded on an average every day. We thank you for your continued support. Both my blogs put together attract 1200 to 1800 hits a day. Please spread the word to your friends. Wherever you use my matter, please give full blog address. Pictures are not mine. They come under copyright rules.

 

அஸ்வமேத யக்ஞமும் அஸ்வப் படுகொலைகளும்

 

அஸ்வமேத யக்ஞம் என்பது என்ன? பெரிய மன்னர்கள் ஒரு குதிரைக்குப் பூஜை செய்து பட்டம் கட்டி திரிய விடுவார்கள் அது சென்றவிடமெல்லாம் எந்த மகாராஜா அனுப்பினாரோ அவருக்கு அந்த நாடு எல்லாம் கப்பம் கட்ட வேண்டும். யாராவது துணிவு இருந்தால் குதிரையைக் கட்டிப் போடுவார்கள். உடனே அதை அனுப்பிய மன்னர் சண்டைக்கு வருவார். யாருக்கு வெற்றியோ அவர்கள் பக்கம் அந்த இடம் போய்ச் சேரும். இறுதியில் குதிரையை வெட்டி யாகம் செய்வர். இப்படிச் செய்த இந்திய மன்னர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இருந்தபோதிலும் இந்தச் செய்தியைப் படித்த பலர் புருவத்தை உயர்த்துவர். உயிர்க் கொலை நியாயமா என்பர். அவர்களுக்கெல்லாம் ‘ஷாக்’ கொடுக்கும் செய்தி பிரிட்டனில் வெளியாகி இருக்கிறது.

 

சில நாட்களுக்கு முன்னால் பெரிய சூப்பர் ஸ்டோர்களில் விற்ற மாமிசத்தில் குதிரை மாமிசமும் கலந்திருந்தது. சொல்லாமல் இப்படிச் செய்வது சட்ட விரோதம். செய்தி வெளியானவுடன் டன் கணக்கில் விற்பனைக்கிருந்த மாமிசம் எல்லாம் குப்பைத் தொட்டிக்கு அநுப்பப்பட்டது. அப்போது பத்திரிக்கைகள் ஒரு உண்மைச் செய்தியை வெளியிட்டன. குதிரை மாமிச ரகசியங்கள் அம்பலத்துக்கு வந்துவிட்டன.

 

இதைப் பார்த்தால் மேலை நாட்டில் தினமும் லட்சக் கணக்கில் “ அஸ்வமேதங்கள்” நடக்கின்றன என்று சொல்லலாம்.

2010ஆம் ஆண்டுப் புள்ளி விவரங்கள் இதோ:

சீனா கொன்ற குதிரைகள் 201,600

பிரான்ஸ்————————–     4500

இதாலி                  67,000

அமெரிக்கா             110,000

ஆர்ஜெந்தினா           150,000

கனடா               100,000+

 

ஒரே ஆண்டில் பல லட்சம் குதிரைகள் மனிதர்களின் வயிற்றுக்குள் போய்விட்டன. அது மட்டுமல்ல. தமிழ் நாட்டில் இருந்து அடிமாடுகளை எப்படி லாரியில் அடைத்து அனுப்புகிறார்களோ அப்படி 67000 குதிரைகளை கொடுமையான முறையில் ஐரோப்பிய நாடுகள் ஏற்றுமதி செய்வதும் பத்திரிக்கைகளில் வெளியானது.

பிரிட்டனில் மட்டும் ஆறு வதைக் களங்களில் 8000 குதிரைகளைக் கொல்லுகின்றனர். ஒரே துப்பாக்கி ரவையைப் பயன்படுத்தி குதிரையின் மூளையில் சுட்டு “ மனிதாபிமான” முறையில் கொல்லுகின்றனர்!!!

குதிரைப் பந்தயத்தில் ஓடி வெல்லும் குதிரைகளுக்கு ராஜ உபசாரம். அது கிழடு தட்டிப் போய் ஆட்டம் ஒடுங்கிய பின் கொலைக் களம்.

 

போகிற போக்கில் ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனையும் கடித்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை.

 

கொல்லான் புலாலை மறுத்தானை

எல்லா உயிரும் கை கூப்பித் தொழும் (வள்ளுவப் பெருமான்)

contact: swami_48@yahoo.com

பொறுமையே அழகு!

ராமாயண வழிகாட்டி

அத்தியாயம் – 2

ச.நாகராஜன்

 

பொறுமையே அழகு!

 

அலங்காரோ ஹி நாரீனாம் க்ஷமா ஹி புருஷஸ்ய வா I

 

பொறுமையே பெண்களுக்கும் புருஷர்களுக்கும் அழகு.இது பிரசித்தம்.

பாலகாண்டம் 33ஆம் ஸர்க்கம் 8ஆம் ஸ்லோகம்

******

பொறுமையே தானம், ஸத்தியம்,யாகம், கீர்த்தி, தர்மம் எல்லாமும்!

 

க்ஷமா தானம் க்ஷமா ஸத்யம் க்ஷமா யக்ஞஸ்ய புத்ரிகா: I

க்ஷமா யக்ஞ: க்ஷமா தர்ம: க்ஷமாயாம் விஷ்டிதம் ஜகத் II

 

புத்திரிகளே! பொறுமை தானம்;  பொறுமை ஸத்தியம்: பொறுமை யாகம்: இன்னும் பொறுமை கீர்த்தி; பொறுமை தர்மம்; பொறுமையில் உலகம் நிற்கிறது.

பாலகாண்டம் 33ஆம் ஸர்க்கம் 10ஆம் ஸ்லோகம்

 

(வாயு குசநாபருடைய 100 புத்திரிகளை மணந்து கொள்ள விரும்பியபோது அவர்கள் அரசனை அணுகி முறையிட அரசன் அவர்களிடம் கூறியதையே மேலே காண்கிறோம்.)

*********

 

அவமரியாதையோடு பரிசை வழங்கக்கூடாது!

 

அவக்ஞயா ந தாதவ்யம் கஸ்யசில்லிலயா(அ)பி வா I

அவக்ஞயா க்ருதம் ஹன்யாத்தாதாரே நாத்ர் சம்ஸய: II

 

அவமரியாதையோடும் அலக்ஷ்யத்தோடும் ஒருவனுக்கு கொடுக்கத் தக்கது இல்லை. அவமானத்தோடு செய்யப்பட்டது கொடுப்பவனைக் கொல்லும். இவ்விஷயத்தில் சந்தேகம் இல்லை.

பாலகாண்டம் 13ஆம் ஸர்க்கம் 30ஆம் ஸ்லோகம்

 

(ஒருவருக்கு பரிசை வழங்கும் போது எப்படி வழங்க வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்கிறோம். மிகுந்த மரியாதையுடனும், பயபக்தியுடனும் கொடுக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.)

*********** 

 

கர்மபூமியில் நல்ல கர்மங்களையே செய்ய வேண்டும்!

 

கர்மபூமிமிமாம் ப்ராப்ய கர்தவ்யம் கர்ம யஸ்சுபம் I

அக்னிர் வாயுஸ்ச சோமஸ்ச கர்மணாம் பலபாகின: II

 

இந்தக் கர்மபூமியை அடைந்தவர்கள் புண்ணியமாயுள்ள கர்மம் எதுவோ அதையே செய்ய வேண்டும்.

அக்னிபகவானும் வாயுபகவானும் சந்திரனும் கர்மங்களுடைய பலனைத்தான் அனுபவிக்கின்றன!

   அயோத்யா காண்டம் 109ஆம் ஸர்க்கம் 30ஆம் ஸ்லோகம்

 

(புனிதமான இந்த பூமி மட்டுமே கர்மபூமி. ஸ்வர்க்கத்தில் கூட புண்யபலன்களை அனுபவித்தவர்கள் அது முடிந்தவுடன் இங்கு தான் வந்து பிறக்க வேண்டும்.ஆகவே இந்த ஸ்லோகத்தின் அர்த்தம் பொருள் பொதிந்தது.)

 

**************

 

தமிழ் எழுத்துக்கள் முப்பதா? ஐம்பத்தொன்றா?

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை -7

தமிழ் எழுத்துக்கள் முப்பதா? ஐம்பத்தொன்றா?

 

51 எழுத்துக்கள் 51 தேவதைகள் 51 புலவர்கள்

சம்ஸ்கிருதத்தில் அ முதல் க்ஷ வரை 51 எழுத்துக்கள் உள்ளன. இதையே தமிழ்ப் புலவர்களும் ஏற்றுக்கொண்டு பாடல்களில் பரவலாகப் பயன்படுத்துகின்றனர். திருமூலர், அருணகிரிநாதர், பரஞ்சோதி முனிவர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சங்கத் தமிழ் புலவர்கள் 49 பேரும் 49 எழுத்துக்களின் வடிவம் என்ற திருவிளையாடல் புராணக் கதையும் சுவையானது.

51 எழுத்துக்களை பீஜாக்ஷரங்கள் (வித்து எழுத்துக்கள்) என்பர் அவற்றால் ஏற்படும் மாலை மந்திர மாலை அல்லது மாத்ருகா புஷ்ப மாலை எனப்படும். 51 எழுத்துக்களுக்கும் தனித் தனி தேவதைகள் உண்டு.

 

விராலிமலையில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில்:

“ ஐந்து பூதமும் ஆறு சமயமும்

மந்த்ர வேத புராண கலைகளும்

ஐம்பத்தோர்விதமான லிபிகளும்    வெகுரூப ”

என்றும் இன்னுமோர் இடத்தில்

“ அகர முதலென உரை செய் ஐம்பதொரக்ஷரமும்

அகில கலைகளும் வெகுவிதங் கொண்ட தத்துவமும்

அபரிமித சுருதியும் அடங்கும் தனிப் பொருளை ”

 

என்றும் பாடுகிறார். இந்தப் பாடல்களுக்கு திரு. கோபாலசுந்தரம் எழுதிய உரை மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பில் மிகவும் தெளிவாக 51 சம்ஸ்கிருத எழுத்துகள் என்றே விளக்குகிறார். ஆக சம்ஸ்கிருத 51 எழுத்துக்களையே தமிழ்ப் புலவர்கள் 51 என்று குறிப்பிடுதல் தெளிவு. ஏனெனில் தமிழில் எக்காலத்திலும் 51 எழுத்துகள் இருந்ததற்கு பழந்தமிழ் நூல்களில் ஆதாரம் இல்லை.

கந்தர் அநுபூதியை 51 பாக்களில் அருணகிரி அமைத்தமைக்கும் மாணிக்கவாசகரின் திருவாசகம் 51 பாடல்களில் அமைந்தமைக்கும் இந்த மந்திர எழுத்துக்களே காரணம் என்றும் பெரியோர் கூறுவர்.

 

திருமந்திரம்

திருமந்திரத்தில் 51 எழுத்துக்கள் என்பதை திருமூலர் பல பாடல்களில் பாடுகிறார். இவைகளுக்கு உரை எழுதியோர் தொல்காப்பிய காலத்துக்கு முன் தமிழிலும் 51 எழுத்துக்கள் இருந்ததாக எழுதியுள்ளனர். பின்னர் அது 33 ஆகவும் முப்பதாகவும் குறைக்கப்பட்டதாகச் சொல்லுகின்றனர். (பக்கம் 366, பாடல் 878க்கு திரு ப ராமநாத பிள்ளை எழுதிய உரையில் இவ்வாறு கூறுகிறார்.) ஆனால் இதற்கு ஆதாரம் எதையும் அவர் காட்டவில்லை. ஆதாரம் இருப்பதாகவும் தெரியவில்லை.

“ இணையார் திருவடி எட்டெழுத்தாகும்

இணையார் கழலிணை யீரைந்தாகும்

இணையார் கழலிணை ஐம்பதொன்றாகும்

இணையார் கழலிணை ஏழாயிரமே” (878)

( பாடல் 925,942,944,904, 1195, 1200, 1209, 1726,2650, 2826 ஆகியவற்றிலும் இதை திருமூலர் வலியுறுத்துகிறார்.)

12 உயிர் ,18 மெய், ஒரு ஆயுதம் உட்பட 31 தமிழ் எழுத்துகளே இன்று வரிவடிவத்தில் இருக்கின்றன. இத்தோடு உயிர்மெய் எழுத்துக்கள் 216 ஐயும் சேர்த்து 247 எழுத்துகள என்று சொல்லுவது வழக்கம்.

 

திருவிளையாடல் புராணம்

பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்தில் சங்கப் பலகை தந்த படலத்தில் ,” ஓ வாணியே,  உன் சொரூபமான ஐம்பத்தோரெழுத்தில் அகர முதலாக நாற்பத்தெட்டு எழுத்துகளும் நாற்பத்தெட்டு புலவர்களாக உலகத்தில் பிறக்ககடவன. திருவாலவாயானும் ஒரு புலவராகத் தோன்றி 49ஆவது புலவராக சங்கத்தில் அமரட்டும் என்று பிரம்ம தேவன் கூறியதாக உள்ளது.

 

காஞ்சிப் பெரியவர் 14-10-1932-ல் சென்னையில் ஆற்றிய சொற்பொழிவு

“அம்பிகையே வாக் ஸ்வரூபமாக இருப்பவள். அம்பாள் உருவம் முழுவதும் அக்ஷரங்கள். நம்முடைய உடம்பில் எல்லாம் நாற்றமுள்ள வஸ்துக்களெ நிரம்பி இருக்கின்றன. இந்த ஆசாபாசங்களுள் அறிவு என்ற ஒரு மணி இருக்கிறது அம்பாள் உடம்போ அகாராதி க்ஷகாராந்தம் இருக்கும் அக்ஷரங்கள்தான. தர்க்கத்தில் முக்தாவளியில் சப்தத்தைப் பற்றி இரண்டு நியாயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. வீசிதரங்க நியாயம், கதம்பமுகுள நியாயம் என்பவை அவை.

வீசிதரங்க நியாயம் என்பது அலைகளில் இருந்து அலை பிரிவது. அதாவது பெரிய அலைகளில் இருந்து சிறு சிறு அலைகள் பிரிந்து சென்று கடைசியில் சிறிதாகி அடங்குவதைப் போல்வது.

சப்தம் கொப்பளித்து வெவ்வேறு ஒலியாக விழுதல் கதம்ப முகுள நியாயம். இந்த சப்தங்கள் தாம் 51 அக்ஷரங்கள். அவற்றிற்கு மாத்ருகா என்று பெயர். இந்த அக்ஷரங்கள் ஒரு உருவம் எடுத்ததுதான் அம்பிகையின் வடிவம், அக்ஷரமாலிகை, மாத்ருகா ஸ்வரூபம் என்பர். ‘ஸர்வ வர்ணாத்மிகே’ என்று காளிதாசர் சொல்லி இருக்கிறார். எல்லா எழுத்துக்களின் வடிவமாய் இருப்பவளே என்பது அதன் கருத்து.

நாம் ஜபத்தில் அங்கந்யாச கரன்யாசங்கள் செய்கிறோம். அந்த அந்த மந்த்ர தேவதைக்கு அந்த அந்த அக்ஷரம் அந்த அந்த அங்கங்களாக இருக்கின்றன என்பது குறிப்பு”.

ருத்ராக்ஷ மாலா, ஸ்படிகாக்ஷ மாலா என்பனவற்றை விளக்குகையில் அ முதல் க்ஷ வரை உள்ள 51 எழுத்துக்களைக் குறிக்கவே அக்ஷ என்பதைச் சேர்த்திருபதாகவும் பெரியவர் விளக்குகிறார். எழுத்துக்கு வடமொழியில் அக்ஷ—ரம் என்பர். இதிலேயே முதல் அ–வும் கடைசி க்ஷ–வும் இருக்கிறது.

 

மந்திர சாஸ்திர விளக்கம்

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு என்ற பழமொழிக்கிணங்க 51 சக்தி பீடங்களும் தேவியின் 51 மாத்ருகா அக்ஷரங்களைக் குறிக்கும் என்றும்  உடலில் ஆறு ஆக்ஞா சக்ர ஸ்தானங்களில் இந்த 51 அக்ஷரங்களும் உள்ளதாகவும் மந்திர சாஸ்திரம் அறிந்தோர் விளக்குவர்.

கொரிய மொழியில் சாமா என்ற 51 எழுத்துக்கள் (27+24) உண்டு.

உலகில் தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் சிவன், முருகன், தேவியர் ஆகியோருடன் தொடர்பு படுத்தும் அளவுக்கு வேறு எந்த மொழியும் கடவுளுடன் தொடர்பு படுத்தப்படவில்லை!!

கடந்த சில நாட்களில் வெளியான ஏனைய திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் படித்து இன்புறுக. இன்னும் வரும்…………..

Contact london swaminathan at :  swami_48@yahoo.com

நரகத்துக்கு போவோர் பட்டியல்

 

Picture of Skanda/Kartikeya/Murugan in Cambodia (from Wikipedia)

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை -6

நரகத்துக்கு போவோர் பட்டியல்

யார் யார் நரகத்துக்குப் போவார்கள் என்று ஒரு சுவயான பட்டியலைத் தருகிறார் அருணகிரிநாதர்:

 

ஓதுவித்தவர் கூலிகொடாதவர்

மாதவர்க்கு அதிபாதகமானவர்

ஊசலில் கனலாய் எரி காளையர்         மறையோர்கள்

ஊர்தனக்கு இடரே செயும் ஏழைகள்

ஆர்தனக்கும் உதாசினதாரிகள்

ஓடி உத்தமர் ஊதிய நாடினர் இரவோருக்கு

ஏதும் இத்தனை தானம் இடாதவர்

பூதலத்தினில் ஓரமதானவர்

ஈசர் விஷ்ணுவை சேவை செய்வோர்தமை இகழ்வோர்கள்

ஏகசித்த தியானமிலாதவர்

மோகமுற்றிடு போகிதம் ஊறினர்

ஈனர் இத்தனை பேர்களும் ஏழ்நரக உழல்வாரே

 

பொருள்: குரு தட்சிணை கொடுக்காதவர்கள், தவ வலிமை மிக்க பெரியோர்களுக்கு ஊறுவிளைவிப்போர், காம வெப்பத்தில் நெருப்பாய் எரியும் இளையோர், வேதம் அறிந்த பார்ப்பனர் ஊர்களுக்கு கெடுதி செய்வோர், எல்லோரையும் உதாசினம் செய்து பேசுவோர், உத்தமர்களின் செல்வத்தை ஏமாற்றிப் பறிப்போர், பிச்சை கேட்போருக்கு தானம் இடாதவர், பூவுலகில் பாரபட்சமாகப் பேசுவோர், சிவனையும் விஷ்ணுவையும் க்உம்பிடுவோரை கேலி செய்வோர், ஒரு முகப் பட்ட மனத்துடன் தியானம் செய்யாதவர்கள், மோகத்தில் மூழ்கி காமத்தில் திளைப்பவர்கள், இன்னர்கள் இத்தனை பேரும் ஏழுவகை நரகங்களில் துன்புறுவார்கள்.

இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு வேண்டுவோர் கௌமாரம்.காம்  –இல் திரு கோபாலசுந்தரம் அவர்களின் அற்புதமான மொழிபெயர்ப்பைப் படிக்கவும்.

 

“ கடவுள் ஒரு திருடன் “

ஒரு நாஸ்தீகர் இப்படிச் சொல்லியிருந்தால் நாம் இது அவர்களின் வாடிக்கையான வசனம் என்று தள்ளிவிடலாம். அருணகிரிநாதரும் ஞான சம்பந்தரும் மீரா பாயும் சொன்னால் ஒதுக்கிவிட முடியுமா? கொஞ்சம் ஆழ்ந்து படிக்க வேண்டும்.

கண்ணபிரானைப் பற்றிப் பாடுவோர் எல்லாம் அவனை ‘சோர்’ (சம்ஸ்கிருத இந்தி மொழியில் சோர, சோர் என்றால் திருடன்) என்று புகழ்ச்சியாகப் பாடுவதைக் கேட்கிறோம். வெண்ணையை மட்டுமா திருடினான். கோபியரின் புடவையையும் அல்லவா திருடினான் கள்ளக் கிருஷ்ணன். ஆனால் இந்தத் திருட்டுக்கும் நம்ம ஊர் அரசியல் திருடர்களுக்கும் வித்தியாசம் உண்டு. கண்ணன் திருடினால் அவன் அன்பின் காரணமாக நம் வீட்டில் செல்வம் குவியும். நாம்ம ஊர் அரசியல்வாதிகள் திருடினால் நம் வாழ்வில் இருள் கவியும்.

அருணகிரிநாதர் கூட கண்ணனின் பெருமையைப் பாடுகிறார்:

 

சிகர குடையினி னிரைவர இசைதெரி

சதுரன் விதுரனில்  வருபவ னளையது

திருடி யடிபடு சிறியவ நெடியவன் மதுசூதன்

என்று பழனி திருப்புகழில் பாடுகிறார்.

 

சம்பந்தப் பெருமான் சிவனுக்கும் திருட்டுப் பட்டம் சூட்டினார். சிவனை உள்ளம் கவர் கள்வன் என்று மூன்று வயதிலேயே முதல் பாட்டிலேயே அடையாளம் கண்டுவிட்டார்:

 

தோடுடைய செவியன், விடை ஏறி ஓர் தூவெண் மதி சூடி

காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்

ஏடுடைய மலரான் உனை நான் பணித்து ஏத்த அருள் செய்த

பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்  அன்றே

 

மூன்று வயதிலேயே சம்ப்ந்தரின் உள்ளத்தைக் கவர்ந்ததால் ஞான சம்பந்தர் இந்து சமய வரலாற்றில் அழியாத இடம் பெற்றுவிட்டார்.

முருகனுக்கும் திருட்டுப் பட்டம் உண்டு என்பது பலருக்கும் தெரியாது. அருணகிரிநாதர் போன்ற அருளாளர்கள் தான் இப்படிச் சொல்லமுடியும்.

 

பெண் திருடி

செம்மான் மகளைத் திருடும் திருடன்

பெம்மான் முருகன், பிறவான், இறவான்,

‘சும்மா இரு சொல் அற’ என்றலுமே

அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே

(கந்தர் அநுபூதி, பாடல் 12)

இறைவனின் திருவிளையாடல்கள் எண்ணிலடங்கா. எவ்வளவோ அடியார்கள் வாழ்வில் கொள்ளையர் ரூபத்தில் வந்தும் அருள் பாலித்தான். இதுபோல பல அரசர்களும் புலவர்கள் பேரில்கொண்ட அன்பின் காரணமாக அவரை மீண்டும் ஊருக்கு வரவழைக்க இப்படி வழிப்பறிக் கொள்ளை அடித்ததுண்டு.

 

எனது முந்தைய திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

1.தமிழில் திட்டத் தெரியுமா? வசை பாடுவது எப்படி?

2.சம்பந்தருக்கு அடிமை அருணகிரிநாதர்

3. தனிமையில் இனிமை: அருணகிரிநாதர்

4. டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும்

5. அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி

6.’திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம்’

Contact London Swaminathan at swami_48@yahoo.com for the list of all the 400+ articles.