Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
ஒரே சொல் பல இடங்களில் வந்திருந்தாலும் ஒரு இடம் அல்லது சில இடங்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முதல் எண் பகவத் கீதையின் அத்தியாய எண் ; இரண்டாவது எண் ஸ்லோக எண்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஞாயிற்றுக் கிழமை அக்டோபர் 31-ம் தேதி 2021
ஆம் ஆண்டு
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./காணலாம்.
XXXX
போப்பாண்டவர் -மோடி சந்திப்பு – ஆர் எஸ் எஸ் வரவேற்பு
இத்தாலியில் வாத்திகன் நகரில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவர் போப்பாண்டவர் பிரான்சிசை நேற்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். 20 நிமிடம் சந்திப்பு என்று நேரம் ஒதுக்கப்பட்டபோதும் இருவரும் உலக விஷயங்களை ஒரு மணி நேரம் அலசி ஆராய்ந்தனர். போப்பாண்டவரை இந்தியாவுக்கு வருமாறு நரேந்திர மோ டி அழைப்பும் விடுத்தார்.
இதற்கு முன்னரும் அப்போதைய போப் இந்தியாவுக்கு விஜயம் செய்தது அடல் பிஹாரி வாஜ்பாயியின் ஆட்சிக் காலத்தில்தான் என்பது குறிப்பிடத் தக்கது.
தார்வாட்டில் ஆர் எஸ் எஸ் கூட்டம் வரவேற்பு
போப் – மோடி சந்திப்பை உலகத்தின் மிகப்பெரிய தொண்டர் அமைப்பான ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் வரவேற்றது . ஆர் எஸ் எஸ் அமைப்பின் தேஸீய செயற்குழு கூட்டம் கர்நாடக மாநிலத்தின் தார்வாட் நகரில் மூன்று நாட்களுக்கு நடந்தது அதன் இறுதியில் இயக்கத்தின் செயலாளர் தத்தாத்ரேய ஹோஷபாலே பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் தருகையில் போப் பிரான்ஸிஸ் – பிரதமர் மோடி சந்திப்பை ஆர் எஸ் எஸ் இயக்கம் வரவேற்பதாகச் சொன்னார் . மோடி, உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர்; போப் பிரான்சிஸ் உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தனிப் பெரும் தலைவர். இருவர் சந்திப்பு இந்தியாவின் நன்மதிப்பை மேலும் உயர்த்தும் – மேலும் ‘வசுதைவ குடும்பகம் – யாதும் ஊரே யாவரும் கேளிர் ‘என்பது இந்துக்களின் பண்பாடு. மேலும் இருவரும் இரு நாட்டு தலைவர்கள் என்பதால் இது நாட்டுத் தலைவர்கள் சந்திப்பாகும் என்றும் சொன்னார். இத்தாலியின் தலைநகரான ரோமாபுரிக்குள் ஒட்டிக் கொண்டிருக்கும் குட்டி நாடு வாத்திகன் சிட்டி ஆகும் . இது இந்தியாவின் பெரிய நகர் அளவுக்குக் கூட இல்லை .
தார்வாட் நகரில் நடந்த ஆர் எஸ் எஸ் செயற்குழு கூட்டத்தில் 350 கார்யகர்த்தாக்கள் கலந்து கொண்டனர். இயக்கத்தின் தலைவரான சர்சங்க சாலக் மோகன் பகவத், இயக்கத்தின் செயலாளரான சற்கார்யவாஹ் தத்தாத்ரேய ஹோஷபாலே முன்னிலையில் விவாதங்கள் நடந்தன
வங்க தேசத்தில் இந்துக்கள் மீது நடைபெறும் தாக்குதல்கள், இஸ்லாமிய தீவிரவாதிகளால் திட்டமிடப்பட்ட தாக்குதல் என்றும் இதைத் தடுத்து நிறுத்த வங்க தேச அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டம் எச்சரித்தது .
நாட்டில் நடக்கும் மத மாற்ற முயற்சிகளையும் ஆர் எஸ் எஸ் வன்மையாகக் கண்டித்தது
.xxx
இத்தாலியில் ‛ஓம்நமச்சிவாயா‘ மந்திரத்தை கூறி பிரதமர் மோடியை வரவேற்ற இந்திய வம்சாவளியினர்
G 20 (ஜி 20) மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளியன்று இத்தாலி தலைநகர் ரோமிற்கு சென்றிருந்தார். அப்போதுஅந்நாட்டின் இந்திய வம்சாவளியினர் ‛ஓம் நமச்சிவாயா’ மற்றும் சமஸ்கிருத மந்திரங்களை கூறி வரவேற்றனர்.
இரு நாட்களாக நடந்த ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட மோடி, வெள்ளியன்று இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள பைசா காந்தி நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், வெளிவந்த பிரதமர் மோடியை அங்கு கூடியிருந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் வணங்கி வரவேற்றனர். அனைவருக்கும் பிரதமர் மோடி வணக்கம் தெரிவித்தார்
பின் அங்கு கூடியிருந்தவர்களில் பலர் ஓம் நமச்சிவாய மந்திரம் மற்றும் பல சமஸ்கிருத மந்திரங்களை ஒலித்து மோடியை வரவேற்றனர். குஜராத்தி மொழியிலும் பக்தி பாடல்களை பாடினர்.
XXXXXXXXXX
தங்க நகை உருக்கும் தி.மு.க . திட்டத்துக்கு கோர்ட் தடை
அறங்காவலர்களை நியமிக்கும் வரை கோயில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கி, தங்க கட்டிகளாக மாற்றி, அதனை வைப்பு நிதியில் வைத்து வரும் தொகையை பயன்படுத்தி கோவிலுக்கு தேவையான பணிகள் செய்யப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பல கோவில்களில் அறங்காவலர்கள் பணி நிரப்பப்படாமல் உள்ள நிலையில், கோவில் நகைகளை உருக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு சந்தேகத்தை எழுப்புகிறது என்று கூறினார். இதனை கருத்தில் எடுத்துக் கொண்ட ஐகோர்ட்டு, அறங்காவலர்களை நியமிக்கும்வரை கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
மேலும், கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட நகைகளை கணக்கெடுக்க அனுமதி அளிக்கப்படுவதுடன், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டு, வழக்கினை டிசம்பர் 15ஆம் தேதிக்கு சென்னை ஐகோர்ட்டு தள்ளிவைத்தது.
இந்து சமய அறநிலையத் துறை முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இது சம்பந்தமாக செப்டம்பர் 22ம் தேதி பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரியும் ‘இண்டிக் கலெக்டிவ் டிரஸ்ட்’ மற்றும் சிலர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில், இந்து சமய அறநிலைய சட்டத்தில் கோயிலுக்கு சொந்தமான நகைகளை உருக்க எந்த அனுமதியும் வழங்கவில்லை. கோயில் நிர்வாகத்தில் மட்டுமே அறநிலையத்துறை தலையிட முடியுமே தவிர மத வழிபாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது.
வருவாய் ஈட்டுவதற்காக நகைகளை உருக்கி டெபாசிட் செய்வதற்கு பதில் ஆக்கிரமிப்பில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் கோயில் நிலங்களை மீட்டு வருவாய் ஈட்டலாம். கோயில் நகைகள் தொடர்பாக முறையாக எந்த பதிவேடுகளும் பராமரிக்கப்படாத நிலையில், நகைகளை உருக்கி வங்கிகளில் டெபாசிட் செய்வது கேள்வியை எழுப்பியுள்ளது. பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நகைகளை உருக்க அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதால் நகைகளை உருக்குவது தொடர்பான சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில் நகைகளை பொறுத்தவரை உச்ச நீதிமன்ற நீதிபதி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கோயில்களுக்கு பக்தர்கள் அளித்த காணிக்கை நகைகளை கண்டறியலாம். அறநிலையத்துறை சட்டப் பிரிவின்படி கோயில் நகைகளை உருக்குவது தொடர்பாக கோயில்களின் அறங்காவலர் குழுதான் முடிவு செய்ய வேண்டும். எனவே, அறங்காவலர்களை நியமிப்பதற்கு முன்பு காணிக்கை நகைகளை உருக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக எந்த முடிவையும் அரசு செய்ய கூடாது. இந்த வழக்கில் அரசு பொதுவான பதில் மனுவை 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்குகள் டிசம்பர் 15ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.
Xxx
கோவில்களில் விரைவில் அறங்காவலர்கள் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை
‘கோவில்ளுக்கு விரைவில் அறங்காவலர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு விட்டால், அறங்காவலர் நியமன நடவடிக்கையை கண்காணிக்கலாம்’ என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ முன்,விசாரணைக்கு வந்தது.
மனுதாரரான டி.ஆர்.ரமேஷ் ஆஜராகி, ”நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ கோவில்களில் உள்ள பணியிடங்களுக்கு நியமிக்க, அறங்காவலர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஆனால், கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை.”அயல்பணி என்ற முறையில் 100க்கும் மேற்பட்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டம் இதை அனுமதிக்கவில்லை. எனவே, மேற்கொண்டு நியமனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்,” என்றார். அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ”அறங்காவலர்களை நியமிக்க, மாவட்ட அளவில் குழுக்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.”குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய, விண்ணப்பங்கள் வரவேற்று விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நான்கு வாரங்களில் குழுக்கள் அமைக்கப்படும்,” என்றார்.
இந்த வழக்கு விசாரணை, ஆறு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அதற்கிடையில், மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு விடும் என நம்புகிறோம். மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு விட்டால், சட்டப்படி அறங்காவலர்கள் நியமிக்கும் முறையை நீதிமன்றம் கண்காணிக்கலாம்.இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.விசாரணையை, டிச., 15க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்துள்ளது.
மாவட்ட குழுக்களுக்கு உறுப்பினர்களை வரவேற்று வெளியிடப்பட்ட விளம்பரங்களில், விண்ணப்பிப்போருக்கான தகுதியை குறிப்பிடவில்லை என, டி.ஆர்.ரமேஷ் சுட்டிக் காட்டினார். உடனே, தலைமை நீதிபதி, விளம்பரத்தில் தவறு இருந்தால், சரி செய்து வெளியிடும்படி, அட்வகேட் ஜெனரலிடம் அறிவுறுத்தினார்.
xxxxx
அமெரிக்க பார்லிமென்டில் தீபாவளி; எம்.பி.,க்கள் உற்சாக பங்கேற்பு
அமெரிக்க பார்லிமென்டில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் இந்தியாவை பூர்வீகமாக உடைய எம்.பி.,க்களுடன் அமெரிக்க எம்.பி.,க்களும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
அமெரிக்காவில் வாழும் இந்தியாவை பூர்வீகமாக உடையோர், தீபாவளி பண்டிகையை ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அமெரிக்க பார்லிமென்டிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கும்.அந்த வகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவை பூர்வீகமாக உடைய எம்.பி.,க்களுடன், அமெரிக்க எம்.பி.,க்களும் பங்கேற்றனர்.
‘இன்டியாஸ்போரா’ அமைப்பு, அமெரிக்க இந்தியர் அமைப்புகளுடன் இணைந்து கடந்த சில ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. ”ஹிந்து அமெரிக்க கலாசாரம், அமெரிக்கா மற்றும் உலக நாடுகளை மேலும் சிறப்பானதாக மாற்றியுள்ளது,” என, பார்லி., உறுப்பினரான ரோ கன்னா குறிப்பிட்டார்.
INDIAN DIASPORA அமைப்பின் நிறுவனர் எம்.ஆர். ரங்கசாமி, இந்தியாவை பூர்வீக மாக உடைய எம்.பி.,க்களான டாக்டர் அமி பேரா, பிரமிளா ஜெயபால், ராஜா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தில் உயர் பதவியில் உள்ள இந்தியாவை பூர்வீகமாக உடைய நீரா டான்டன், விவேக் மூர்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
அமெரிக்க பெண் எம்.பி.,யான கரோலின் மலோனியும் பங்கேற்றார். இவருடைய முயற்சியால் 2016ல் தீபாவளி குறித்த சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. ”தீபங்களின் பண்டிகையான தீபாவளியை மேலும் சிறப்பிக்கும் வகையில், பொது விடுமுறை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என அவர் குறிப்பிட்டார்.
Xxxx
தீபாவளி வாழ்த்துக்கள்
இந்துக்களின் மிகப்பெரிய பண்டிகையான தீபாவளித் திருநாள் நவம்பர் 4ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. குஜராத்திகள் இதை நான்கு நாள் விழாவாகக் கொண்டாடுவர் ; புத்தாண்டு தினமாகவும் கொண்டாடுகின்றனர் . இந்துக்கள், சீக்கியர்கள், ஜைன மதத்தினர் ஆகியோரும் இதே நாளைக் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது ; ராம பிரான் அயோத்தி திரும்பிய நாள் என்பதால் அயோத்தி மாநகரம் விழாக்கோலம் கொண்டுள்ளது. கண்ணபிரான் நரகாசுரனை வதம் செய்ததாலும், உலகிற்கே பட்டாசு மத்தாப்புகளை ஏற்றுமதி செய்யும் சிவகாசி மக்களின் நல்வாழ்வுக்கு ஒளி வீசுவதாலும் மத்தா ப்பு பட்டாசுகளுடன் தமிழ் மக்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். சென்னை முதலிய நகரங்களில் மழை யையும் பொருட்படுத்தால் கடைத் தெருக்களில் கூட்டம் அலை மோதுவதாக இன்று காலை வெளியான தமிழ் நாளேடுகள் செப்புகின்றன. நவம்பர் 3ம் தேதி பிரிட்டிஷ் பார்லிமென்ட் தீபாவளியும் நவம்பர் 6ம் தேதி லண்டன் சவுத் இந்தியன் சொசைட்டி தீபாவளி விழாவும் பிரிட்டனில் நடைபெறுகிறது.
நேயர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் ஞான மயம் குழு பெருமகிழ்ச்சி அடைகிறது .
எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!!!
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் VAISHNAVI ANAND
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Namaste , Namaskaram to Everyone
This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.
Compiled from popular newspapers of India
Read by NITHYA SOWMY
This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at
ONE pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.
Even if you miss our live broadcast on SUNDAYS
you can always visit us on FACEBOOK.COM– slash- Gnana Mayam 24 hours a day.
Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’
Read by NITHYA SOWMY
Xxx
Modi meets Pope Francis, discusses wide range of issues
Prime Minister Narendra Modi called on Pope Francis on Saturday and discussed a wide range of issues aimed at making the planet better by fighting climate change and removing poverty during their first-ever one-on-one meeting.
Modi, who is the first Indian Prime Minister to meet Francis since he became Pope in 2013, invited the head of the Catholic Church to visit India.
It may be recalled that the last Papal Visit happened in 1999 when Atal Bihari Vajpayee was the Prime Minister and Pope John Paul II came.
Now it is during Modi’s prime ministerial term that the Pope has been invited to visit India, sources said.
The meeting between Prime Minister Modi and Pope Francis that was scheduled only for 20 minutes went on for an hour in Vatican City in Rome, they said.
PM Modi was accompanied by National Security Advisor (NSA) Ajit Doval and External Affairs Minister (EAM) Dr S Jaishankar.
Prime minister is on a trip to Italy to take part in G 20 Summit.
xxxx
RSS Welcomes PM Modi Meeting with Pope at Vatican; Recalls ‘Vasudhaiva Kutumbakam’
RSS on Saturday welcomed PM Narendra Modi’s meeting with Pope Francis in the Vatican, stating that the event has enhanced the prestige of the nation.
BJP’s ideological mentor Rashtriya Swayamsevak Sangh (RSS) on Saturday welcomed Prime Minister Narendra Modi’s rendezvous with Pope Francis in the Vatican, stating that the event has enhanced the prestige of the nation.
Talking to reporters about the meeting, RSS general secretary Dattatreya Hosabale said, “What is wrong if the head of the government meets anyone in the existing civil system in the world? We welcome it because we believe in Vasudhaiva Kutumbakam (the world is one family). We respect all religions.”
BJP president JP Nadda also said the meeting between PM Modi and Pope Francis is an occasion fit for the history books and a great step towards peace, harmony, and inter-faith dialogue.
“India is a vibrant and inclusive democracy, where the Christian community has played a pivotal role in areas like politics, films, business & armed forces. Under Modi Ji’s leadership India is marching ahead on the path of ‘Sabka Saath, Sabka Vikas, Sabka Vishwas, Sabka Prayas’,” Nadda said in a tweet.
XXX
RSS CONDEMNS ATTACK ON BANGLADESH HINDUS
RSS passes resolution urging Bangladesh Govt to take necessary steps to protect minorities
Calling the attacks on Hindus in Bangladesh a “planned effort to eradicate the Hindu society there”, the RSS ‘karyakari mandal’—the All India Executive Committee—on Friday condemned the “rise of Islamic powers and the conspiracy of Islamisation by Jihadi organisations” in the neighbouring country.
The resolution passed at the meeting in Dharwad (Karnataka) termed the Bangladesh violence “a serious threat to the democratic system of peace-loving countries”.
The population of Hindus is decreasing continuously in Bangladesh since the time of Partition, the resolution also warned, asking the government to use all available diplomatic channels to apprise the government of Bangladesh about the “concerns of Hindu society and institutions around the world”.
More than 350 Sangh leaders from across the country, including chief Mohan Bhagwat and general secretary Dattatreya Hosabale, attended the event.
Apprising about the developments, senior RSS functionary Arun Kumar said the meeting deliberated on the current status of the RSS work, future plans and attacks on Hindus in Bangladesh.
“A resolution has been passed regarding the attacks on Hindus in Bangladesh. The attack on Hindu society in Bangladesh is not a sudden event. An attempt was made to create communal frenzy on the basis of fake news. It was a planned attempt to eradicate the Hindu society there,” Arun Kumar said.
Xxxx
NOW NEWS FROM TAMIL NADU
Don’t Melt Temple Jewellery Unless Trustees Appointed: Madras High Court Tells Tamil Nadu
The Madras High Court on Thursday directed the Tamil Nadu government to refrain from taking any decision on melting temple jewellery into gold bars, as part of the recently announced Gold Monetisation Scheme, until Trustees are appointed to Hindu temples in the State
However, the first bench of Chief Justice Sanjib Banerjee and Justice P D Audikesavalu said the three-member judges committee appointed by the state to monitor the process could proceed further with the inventory of gold donated to temples.
The commissioner of the Hindu religious and charitable endowments (HR and CE) department cannot suo motu decide on melting of temple gold without the recommendations of the trustees as per the HR and CE Act, the bench said.
The court passed the interim order on petitions moved by M Saravanan and A V Gopala Krishnan challenging the decision to melt gold jewellery and deposit them in banks.
Xxx
News from Uttar pradesh
Kejriwal promises free travel to Ayodhya
In the poll-bound Uttar Pradesh, Delhi Chief Minister Arvind Kejriwal played the ace card during his visit to Ram Janmabhoomi and Hanuman Garhi on the second of his two-day tour to Ayodhya on Tuesday by announcing that his government would provide free travel to Lord Ram’s birthplace to the residents of Delhi
Kejriwal had taken part in Saryu Aarati in Ayodhya on Monday.
“Under the Delhi government’s Mukhymantri Teerth Yatra Yojana, we cover Vaishnav Devi, Shirdi Sai, Rameshwaram, Dwarika Puri, Mathura-Vrindavan and other places for free travel to devotees. We will include Ayodhya in the scheme now,” he said.
Earlier, KEJRIWAL visited the Bajrang bali temple in Hanuman Garhi and had darshan of Ram Lalla in Ram Janmabhoomi on Tuesday. Kejriwal said he prayed to the god to bless the countrymen with happiness, progress, peace and development.
XXXXX
Kubera temple to be opened at Chalavara in Kerala’s Palakkad district on November 1
Kubera Temple of Economics called KUTECON at Chalavara near Shoranur in Palakkad district is the only temple in Kerala
Kubera, the Lord of Riches, is worshipped is here. The temple will be opened to the public by Sachidananda Bharathi, the pontiff of Edaneer Math, Kasaragod on November 1.
Members of the Palat Palace led by Dr TP Jayakrishnan will offer a ceremonial welcome to Sachidananda Bharathi with poornakumbha on his arrival for the opening of temple on November 1. With its golden epoxy flooring and gold cladding walls, the temple creates an air of prosperity and instils confidence in the mind of the devotees.
According to Jithin Jayakrishnan, trustee of KUTECON who manages the temple, it is more a school of financial discipline than a place of worship.
Glittering all in golden hues, a 20 feet tall idol of Lord Ganesha welcomes the devotees entering the temple and a life size idol of Kubera at the exit . The life size idols of Mahalakshmi and Sri Krishna are made of panchaloha, an alloy of five metals.
On November 5, former chief priest of Sabarimala and Guruvayur temples Thekkumparambath Unnikrishnan Namboothiripad will perform the Lakshmi – Kubera Pooa and Dhanavahini pooja.
On November 12 chief priests of Kollur Mookambika temple Sri Dr. Narasimha Adiga and Subramanya Adiga will perform Sree Sooktham and Dhanavahini pooja.
The temple has been established based on the concept of TP Jayakrishnan, a pioneer in the field of Holistic Human Metaphysics, who has done extensive research on various aspects of Vedic metaphysics since 1985.
XXXX
NEW SHIVA TEMPLE EXCAVATED IN ODISAH
The base of another temple was excavated in the Suka-Sari temple complex by the Archaeological Survey of India (ASI), Bhubaneswar circle, on Wednesday.
Besides, a structure resembling a Shiva Linga and carved portion of a wall have been found in the north-east direction of the Sari temple.
ASI State head Arun Malik said that there are chances that many other temple structures will be found in the area towards the Bindu Sagar, he told The New Indian Express.
Amalaka’ of buried temple excavated from Suka-Sari Deula complex
Archaeologists have stumbled upon two ‘amalakas’ while excavating the Suka-Sari Deula complex on Friday.
. An Aamalaka is a stone disk with ridges on the rim, that sits atop the temple’s main tower. It is crowned with a kalasha from which a temple banner is often hung.
“In Hindu temple architecture, every stone has a meaning and measurement. Measuring the amalakas can tell us about the length of their temples”, Malik said
Including this new finding, remains of four temples have been found from the Suka-Sari Deula complex IN ORISSA so far.
XXXX
Rock from Sri Lanka’s Ashok Vatika for Ram temple in Ayodhya
A delegation from Sri Lanka has presented a rock from the epical ‘Ashok Vatika’ for the Ram Janmabhoomi in Ayodhya.
Ashok Vatika was a sprawling garden of the ‘Treta Yug’ in the kingdom of Ravana, where Sita was held captive. The garden’s present location is believed to be the Hakgala Botanical Garden in Seetha Eliya, an upcountry town in central province of Sri Lanka close to the resort city of Nuwara Eliya.
High Commissioner of Sri Lanka Milinda Moragoda, visited Ayodhya on Thursday and offered the Ashok Vatika stone to the chief priest of Ram temple Acharya Satyendra Das.
There is a temple in Sita Eliya dedicated to Goddess Sita IN SRI LANKA and is said to mark the place where SITA DEVI was held captive and where she regularly prayed to Lord Ram to rescue her.
XXXXXXX
HAPPY DEEPAVALI
GNANAMYAM TEAM IS DELIGHTED TO WISH YOU ALL A VERY HAPPY DEEPAVALI.
DEEPAVALI IS CELEBRATED ON 4TH OF NOVEMBER THIS YEAR BY ALL HINDUS, JAINS AND SIKHS ALL OVER THE WORLD.
DEEPAVALI CELEBRATION WILL BE HELD IN BRITSIH PARLIAMENT BY HINDU FORUM OF BRITAIN ON 3RD NOVEMBER,
BY SOUTH INDIAN SOICETY, ON 6TH NOVEMBER IN LONDON.
NORTHWICK PARK HOSPITAL IN HARROW HAS ORGANISED AN EVENT ON MONDAY TOMORROW TO CELEBRATE DEEPAVALI
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருட்பிரகாச ராமலிங்க சுவாமிகளின் மேலும் 30 பொன்மொழிகளை நவம்பர் மாத காலண்டரில் காண்போம்
பண்டிகை நாட்கள் – நவம்பர் 4 தீபாவளி, அமாவாசை ,லட்சுமி பூஜை; 5 கோவர்த்தன பூஜை , குஜராத்தி புத்தாண்டு; 9 சூர சம்ஹாரம், கந்த சஷ்டி; 14 குழந்தைகள் தினம்; 19 திருக் கார்த்திகை தீபத் திருவிழா , சந்திர கிரஹணம்; 23 ஸ்ரீ சத்ய சாய் பாபா பிறந்த தினம்
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சைவ சமயவேதநிரூபணம்! : ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம் வெளியீடு!!
ச.நாகராஜன்
‘சைவசமய வேதநிரூபணம்’ என்ற சுவையான நூலை 28-8-2020 அன்று கள்ளக்குறிச்சி, ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம் வெளியிட்டுத் தமிழுக்கும் சைவத்திற்கும், இந்திய நாட்டிற்கும் அரும் சேவையைச் செய்துள்ளது.
‘கலியின் வலி மிக்க’ இந்தக் காலத்திலே நிஜமான சைவ நூல்களைப் பழிப்பதும், திரிப்பதும், மாற்றுவதும், திருக்குறள் உள்ளிட்ட நூல்களில் காழ்ப்புணர்ச்சி கொண்ட வஞ்சக மனத்துடன் எழுத்துக்களை மாற்றுதலும் கண்டு சைவப் பெரியோர்கள் மனம் வருந்தி ‘அரவின் குட்டி சிறிதாயினும் பெருங்கோல் கொண்டு அடித்தல் வேண்டும்’ என்னும் பழமொழிப்படி அந்தப் பொய்களைக் களைய எண்ணம் கொண்டனர். அதன் விளைவாக அற்புதமான இந்த நூல் எழுந்தது.
இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் சைவ சமயத்தில் வேதம் பற்றிய ஒரு கலகமானது, வடமொழி, பிராமண வெறுப்பு காரணமாக ஏற்படுத்தப்பட்டது. அதன் விளைவை, இந்த 2021 ஆம் ஆண்டிலும் கூட, அது விசுவரூபம் எடுத்து ஏராளமான சேதத்தை விளைவித்து பாரத தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கே ஊறு விளைவிக்கும் போக்கைக் கண்டு திகைத்து நிற்கிறோம். ஆக இப்படிப்பட்ட நிலை இந்த வஞ்சக உள்ளங்களால் ஏற்படப் போகிறது என்பதை தம் உண்மை அறிவினால் உணர்ந்த, காழ்ப்புணர்ச்சி அற்ற சைவப் பெரியோர்களில் ஒருவரான மா.சாம்பசிவம் பிள்ளை 1926ஆம் ஆண்டு ‘திருநான்மறை விளக்க ஆராய்ச்சி’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். அவர் எழுதிய நூலுக்கு 27 சைவப் பெரியோர்கள் வித்வத் அபிப்ராயம் தர அது முகவுரையாக வெளியிடப்பட்டது. அவற்றில் ஒன்றான யாழ்ப்பாணம் ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத பண்டிதர் அவர்கள்வழங்கிய முன்னுரையானது அற்புதமான ஒன்று.
அந்த முன்னுரை காலவெள்ளத்தால் அழிந்துபோகாமல் இருக்கவும், அந்த அற்புதமான நூலில் இருக்கும் உண்மைகள் தமிழக மக்கள்அனைவரின் உள்ளத்திலும் இடம் பெற வேண்டும் என்றும் எண்ணிய ஆதிசைவர்கள் நலவாழ்வுமையத்தின் நிறுவனர் சிவஸ்ரீ எஸ்.கார்த்திகேய தத்புருஷ சிவம் அதன் மறுபதிப்பைப்பெருமுயற்சி செய்து வெளியிட்டுள்ளார்.
திருக்குறளை எடுத்துக் கொண்டால், சென்னை சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகமானது ‘ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்’என்பதை வேண்டுமென்றே ‘ஆபயன் குன்றும் அறிதொழிலோர்நூல் மறப்பர்’என்று வழுவுறத் திருத்தி அச்சிட்டனர். இது எவ்வளவுபெரிய அநியாயம்?! இப்படி மனம் போன மாதிரி திருத்தியது தப்பு என்பதை ஆதாரங்களுடன்விளக்குகிறது இந்த நூல்.
இன்னொரு உதாரணம், ‘தனக்குமூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனப் பிழையாக இருக்க வேண்டும்’ என்று கருதி தன் மூக்கை அரிந்துகொண்டது போல ஔவையார் திரு நான்மறை என்று கூறியதில் நான்மறை என்பது வேதம் அல்லஎன்று கூறியதைச் சொல்லலாம்.
மகேந்திர மலை என்பது கைலாய மலைஅல்ல என்பது இன்னொரு பொய்க் கூற்று.
இப்படிப்பட்ட ஏராளமான பொய்யுரைகளைஎல்லாம் ஆதாரங்களுடன் மறுத்து தக்க விளக்கம் தந்து சைவசமயம் போற்றும் வேதத்தின்பெருமையை நிலை நாட்டுகிறது இந்த நூல். சுமார் 47 அரும் தமிழ் நூல்களிலிருந்து ‘போதும், போதும்’என்று சொல்லும் அளவு மேற்கொள் விளக்கங்கள்தரப்பட்டுள்ளன. நான்மறை என்ற ஒரு சொல்லுக்கு மட்டும், சிலப்பதிகாரம்,சீவகசிந்தாமணி, மணிமேகலை, புறநானூறு, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை உள்ளிட்ட பல நூல்களிலிருந்து மறுக்க முடியாத ஆதாரங்களுடன் விளக்கம்தரப்பட்டிருக்கிறது.
சில அந்தணர் மீது கொண்ட கோபமானதுவடமொழி மீது வெறுப்பாக மாறியது; தேவார முதலிய தெய்வ நூல்களைத் திரிக்கவும்அவற்றிற்குத் திரிவுப் பொருள் தரவும் முற்பட்டது.
இதைச் சுட்டிக் காட்டி அப்படிச்செய்வது தவறு என்பதை நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.
இதில் ஆச்சரியம் என்னவெனில் ‘மேன்மைகொள் சைவ நீதி’ பற்றி நன்கு அறிந்த அறிஞர், தவறாக எழுதியவர் முன்னிலையில் சபையில் தைரியமாகஅதைக் கண்டிக்கும் போது அதை சிரம் தாழ்த்தி தவறாக எழுதியவர் உள்ளிட்ட அவையினர் அதைஏற்றுக் கொண்ட செய்தி தான்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்றையகால கட்டத்தில் அன்று இடப்பட்ட துவேஷம் என்னும் விதை இன்று விஷ விருக்ஷமாக வளர்ந்துமக்களை வேறு படுத்தி அனைவரின் மனதிலும் நஞ்சைப் புகுத்தியுள்ளது.
முதலில் இந்த நிலையைத் தமிழகமக்களுக்குச் சுட்டிக் காட்ட வேண்டும் என்ற சரியான முனைப்புடன் சிவத்தொண்டில்சிறந்து விளங்கும் துடிதுடிப்பு மிக்க அன்பர் –கள்ளக்குறிச்சி, ஆதிசைவர்கள் நலவாழ்வு சங்கத்தின் நிறுவனர் – தில்லை சிவஸ்ரீ எஸ்.கார்த்திகேய தத்புருஷசிவம். 94 ஆண்டுகளுக்குப் பின்னர் அதை மறு பதிப்பு செய்ய பெரு முயற்சி எடுத்து இதைவெளியிட்டுள்ளார்.
இந்த நூலுக்கு தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடம் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துகுமாரசுவாமிதம்பிரான் சுவாமிகள், சிவபுரம் வேத சிவாகம் பாடசாலை நிறுவனரும் முதல்வருமானமயிலாடுதுறைஸ்ரீ ஏ.வி. சுவாமிநாதசிவாசாரியார் ஆகியோர் ஆசியுரையும் அருளுரையும் பாராட்டுரையும் தந்து ஸ்ரீஎஸ்.கார்த்திகேய தத்புருஷ சிவம் அவர்களைப் பாராட்டியுள்ளனர்.
இப்படிப்பட்ட அரிய நூல்களை வெளியிட்டுக்கொண்டே இருக்கும் திரு கார்த்திகேய சிவம் அவர்களைப் பாராட்டுகிறோம்.
தமிழ் உலகம் வரவேற்க வேண்டிய காலத்திற்கேற்றநூல் இது.
நூலின் மொத்தப் பக்கங்கள் 92. அச்சுப் பதிப்புவழக்கம் போல சிறப்புற அமைந்துள்ளது.வடிவமைப்பு சிறப்புற இருக்க, நூல் தரம் வாய்ந்த தாளில் அச்சிடப்பட்டுள்ளது. நூலின்விலை ரூபாய் ஐம்பது மட்டுமே.
நூல் கிடைக்குமிடம் :ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம், 27, ஸ்ரீராமச்சந்திரா நகர், கள்ளக்குறிச்சி, 606202.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரிக் வேதம் 6000 ஆண்டுகளுக்கு முந்தியது என்பது ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபி HERMAN JACOBI , இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் B G TILAK போன்றோரின் கருத்து .
‘இல்லை, இல்லை நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது’– என்பது பேராசிரியர் வில்ஸன் PROFESSOR WILSON போன்றோரின் கருத்து; இந்துக்களோவெனில் இதை வியாசர் என்னும் உலக மஹா ஜீனியஸ் GREATEST GENIUS நான்காகப் பிரித்ததே கி.மு 3150ல் , அதாவது இற்றைக்கு சற்றேரக் குறைய 5170 ஆண்டுகளுக்கு முன்னர்; அதற்கு காலம் என்பதே இல்லை. ஏனெனில் ரேடியோ அலைகள் போல எப்போதும் காற்றில் உள்ள சப்தங்களை கண்டவர்கள் ரிஷிகள்; கே ட்டவர்கள் ரிஷிகள்– என்று நம்புகின்றனர். சங்கத் தமிழர்களும் இதன் ரகசியத்தை அறிந்து ‘நான் மறை’ (THAT WHICH IS SECRET) என்றும் ‘கேள்வி’ (THAT WHICH IS HEARD) என்றும் , எழுதாக் கிளவி (THAT WHICH IS NEVER WRITTEN) என்றும் அற்புதமாக மொழிந்தார்கள்
இதில் பத்தாவது மண்டலத்தில் 163-வது துதியில் அதிபயங்கர , அதி அற்புத, உலக மகா அதிசயம் ஒன்று உள்ளது. ரிஷி விவிரிஹனன் – கஸ்யபன் என்ற புலவன் ஆறே வரிகளில் நமது உடலில் உள்ள 28 உறுப்புகளின் பெயரை அழகாக அடுக்கி ஒரு துதி செய்துவிட்டான்.
xxx
இதிலுள்ள அதிசயங்களை ஒவ்வொன்றாகக் காண்போம்:
சங்க இலக்கியத்தின் அதிகமாகப் பாடிய புலவன் ஒரு பார்ப்பான். அவன் பெயர் கபிலர். சங்கப் புலவர்கள் பெயர் சொல்லி அதிகம் பாராட்டிய ஒரே ஆள் அந்தப் பிராமணன்தான் . அதுமட்டுமல்ல அவரை ‘புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ என்றும் பாராட்டிவிட்டனர். அவர் ஒரே மூச்சில் 99 மலர்களின் பெயர்களை சொல்லி, குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலை யாத்து, பிருஹத் தத்தன் என்ற வடக்கத்தி ஆளை அசத்தி, அவனுக்கு தமிழும் கற்பித்து , அவனை ஒரு பாடலும் எழுத வைத்து அதை சங்கப் பாடல்களில் சேர்த்துப் புகழ் பெற்றார் . அவர் 99 மலர்களை அடுக்கியது கின்னஸ் புஸ்தக சாதனை என்பத்தில் இரு வேறு கருத்ததுக்கு இடமே இல்லை
ஆனால் அவருக்கு 2000, 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புலவன், காஸ்யப கோத்திரத்தைச் சேர்ந்தவன் ஒரு ரிக் வேத துதியை 12 வரிகளில் சொன்னான். அதில் ஆறு வரிகள் பல்லவி. அதைக் கழித்து விட்டால் 6 வரிகள்தான் புதிய செய்தி. இதிலுள்ள செய்தி 27+1 உடல் உறுப்புகள் இன்று சம்ஸ்க்ருதத்தில் எம். பி. பி. எஸ். படிப்பு இருந்தால் மாணவர்களுக்கு உதவும் பாடல் இது.
xxxx
முதலில் பாடலைப் படியுங்கள். பின்னர் என் வியாக்கியானத்தைப் படியுங்கள்:–
ஜம்புநாதன் மொழிபெயர்ப்பு
1.நான் உன் கண்களிலிருந்தும் , நாசியிலிருந்தும், உன் செவியிலிருந்தும், உன் மோவாயிலிருந்தும் , உன் தலையிலிருந்தும், மோவாயிலிருந்தும் , உன் மூளையிலிருந்தும் , உன் நாக்கிலிருந்தும் யட்சமத்தை/க்ஷயத்தை /நோயை நீக்குகிறேன் .
2.நான் உன் கழுத்திலிருந்தும் , உன் தசை நார்களிலிருந்தும் , உன் சந்திகளிலிருந்தும் , உன் மேற் கைகளிலிருந்தும், உன் தோள்களிலிருந்தும், உன் முன் கைகளிலிருந்தும் யட்சமத்தை/க்ஷயத்தை /நோயை நீக்குகிறேன்
3.. நான் உன் அந்திரங்களில், உன் குதங்களில் , உன் இருதயத்தில் , உன் சிறுநீரகங்களில் , உன் கல்லீரலில் , உன் ஈரல்களில் இருந்தும் யட்சமத்தை/க்ஷயத்தை /நோயை நீக்குகிறேன்.
4.நான் உன் தொடைகளில் , முழந்தாள் குதிகால், விரல்களில், உன் இடைகளில், உன் நிதம்பத்தில், உன் மர்ம அங்கங்க ளில் இருந்தும் யட்சமத்தை/க்ஷயத்தை /நோயை நீக்குகிறேன்.
5.நான் உன் நீர் கக்கும் வழியிலிருந்தும் , உன் கலாசயத்திலிருந்தும் உன் ரோமத் திலிருந்தும், உன் நகங்களிலிருந்தும் , உன் முழு தேகத்திலிருந்தும் யட்சமத்தை/க்ஷயத்தை /நோயை நீக்குகிறேன்.
6. நான் ஒவ்வொரு அங்கத்தில் இருந்தும் , உன் ஒவ்வொரு ரோமத்திலிருந்தும் , அது தோன்றும் ஒவ்வொரு சந்தியிலிருந்தும் யட்சமத்தை நீக்குகிறேன் .
xxxx
यक्ष्मं शीर्षण्यं मस्तिष्काज्जिह्वाया वि वर्हामि ते ||
From all thyself, from top to toe, I drive thy malady away.
ஆறு மந்திரங்களிலும் கடைசி வரி ஒன்றேதான்.
அதாவது ‘முடி முதல் அடிவரை , உன் னிடமுள்ள நோயை நான் விரட்டுகிறேன்’ என்பதாகும். ஆக இந்த ஆறு வரிகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் எஞ்சிய ஆறு வரிகளில் 25-க்கும் மேலான உறுப்புகள் சம்ஸ்க்ருதத்தில் இருப்பதைக் காணலாம்
XXXX
என் கருத்துக்கள்
1. இது கவசம் என்னும் பாடல் வகைக்கு முன்னோடி; பிற்காலத்தில் சம்ஸ்க்ருதத்தில் சிவ கவசம், இந்திராக்ஷி கவசம், தமிழில் கந்த சஷ்டிக் கவசம், விநாயக கவசம் முதலியன தோன்ற இதுவே மூலம். ஆக, கவசத்தை உருவாக்கியோர் வேத கால முனிவர்கள். அதை நாமும் பின்பற்றி இன்று வரை கவசங்களைப் படித்து வருகிறோம் ஆகையால் ரிக் வேத முனிவர்களுக்கு நன்றி சொல்வதோடு 6000 ஆண்டுப் பழமையான விஷயத்தைப் பின்பற்றுகிறேன் என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம். .
2. தற்காலத்தில் பஜனைகளிலும், கச்சேரி களிலும் பாடும் பல பாடல்களிலும் கடைசி வரி ஒன்றாக இருக்கும்; அதாவது பல்லவி திரும்பத் திரும்ப வரும்; இதை உலகிற்குச் சொல்லிக் கொடுத்தவர்களும் நாம்தான் . ரிக் வேதத்தில் இது போலப் பல பாடல்கள் இருக்கின்றன.
3. சம்ஸ்க்ருதத்தில் உள்ள பல உறுப்புகளின் பெயர்கள் இன்றும் இந்திய மொழிகளில் உள்ளது. இருதயம், நகம், ரோமம், முதலியன சில எடுத்துக் காட்டுகள்
4.உலகின் எந்த ஒரு பழைய கலாசா ரத்திலும் இப்படியான பழைய பாடல் கிடையாது .
5.இதை, துதிகளில் ஒன்றாக வியாசர் சேர்த்ததும், அதை பிராமணர்கள் அப்படியே நினைப்பில் வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
6. இது மன ரீதியில் ஒருவரின் நோயைப் போக்கித் தெம்பைக் கொடுக்கும். இப்போது மருத்துவர்களும் கூட இது போன்ற மந்திரங்கள் உளவியல் ரீதியில் உதவும் என்று கருத்துக் கொண்டுள்ளனர்
7. இது அக்கால மக்களின் மருத்துவ ஆர்வத்தையும், ஆயுர்வேத படிப்பின் source of Ayurveda மூலமாகவும் விளங்குகிறது
8.நமக்கு வேதகால சம்ஸ்க்ருதம் கற்க வழி செய்கிறது.
9. இறுதியாக ப்ளாசிபோ Placebo என்ற ‘நம்பிக்கை மருந்து’ பறி நிறைய ஆராய்ச்சிக்கு கட்டுரைகள் வந்து கொண்டிருக்கின்றன. அவையும் ‘நம்பினார் கெடுவதில்லை’ என்றே தீர்ப்புச் சொல்லிவி ட்டன!
இதோ உடல் உறுப்புகளை நன்கு அடையாளம் காண உதவும் ஆங்கில மொழிபெயர்ப்பு
In this short hymn with 12 lines one comes across 27 ++ body parts; if you delete the repeated last line in every mantra it is only a SIX line mantra!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
‘காடுகள் வாழ்க ! இந்துக்களின் அற்புத வாழ்க்கை முறை’ என்ற தலைப்பில் இரண்டாவது பகுதி நேற்று வெளியானது. இன்று இறுதி பகுதியில் ரிக் வேத துதி 10-146 ல் கடைசி மூன்று மந்திரங்களைக் காண்போம்.
நேற்று இறங்கு வரிசையில் மந்திரம் 6, 5, 4 பற்றி எனது விளக்க உரையைத் தந்தேன். ஆறு மந்திரங்களின் முழு மொழிபெயர்ப்பை முதல் பகுதியிலேயே தந்து விட்டேன்.
இதோ மூன்றாவது மந்திரம் ரிக்.10-146-3
இங்கும் புலவர் ஒரு கற்பனைக் காட்சியை புலவர் நம் முன்னே வைக்கிறார்.
புலவர் சொன்ன வார்த்தைகள் – “அங்கு பசுக்கள் மேய்வது போலத் தோன்றுகிறது. அதனால் வீடுகள் இருப்பது போலவும் தோன்றுகிறது மாலை நேரத்தில் அரண்யானி தன் வண்டிச் சக்கரங்களைக் கழற்றி வைத்திருக்கிறாள் போலும்!”
இதற்கு விளக்கம் எழுதியோர் உண்மையில் புலவர் பார்ப்பது மான்கள், அங்கும் இங்கும் புல் மேய்வதாகும்; வீடு என்பது மரங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து, செடி கொடிகளால் கூரை வேயப்பட்டது போலத் தோன்றுவதே என்றும் எழுதியுள்ளனர்.
வண்டிச் சக்கரம் கழற்றி விட்டது என்பது மாலை நேரத்தில் வண்டிக்காரர்கள் காளைகளை வண்டியிலிருந்து அகற்றி இளைப்பாற விட்டுவதாகும். இங்கே காட்டில் மான்கள் சுதந்திரமாக புல் மேய்வதைக் கண்ட புலவர் அப்படிப் பாடுகிறார் .
நல்ல ஒரு காட்சியை புலவர் நம் முன்னே கொண்டுவருகிறார்.
காளிதாசன், இமய மலை அடிவாரம் பற்றி குமார சம்பவத்தில் சொல்லும் காட்சி இது. அதை அப்படியே புறநானூற்றுப் புலவர் முரஞ்சியூர் முடி நாகராயர் பாடல் 2-ல் வருணிக்கிறார்:-
“சிறுதலை நவ்வி பெருங்கண் மாப்பிணை
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கின் துஞ்சும்
பொற்கோட்டு இமயமும், பொதியமும் போன்றே “
இது சேரமான் பெருஞ் சோற்று உதியஞ் சேரலாதனைப் பாடிய பாடலால் மிகப் பழைய பாடல் ஆகும் .
MR NAGARAJAN’S POEM IN PURA NANURU
பிராமணர்கள் இமயமலை அடிவாரத்தில் மாலை நேரத்தில் சந்தியா வந்தனம் செய்து, யாகம் செய்வதைக் காட்டுகிறது .இன்று தேசப்படத்தில் ‘கஞ்சன் ஜங்கா’ என்று போட்டிருக்கும் சிகரத்தின் உண்மைப் பெயர் ‘காஞ்சன சிருங்கம்’; அதை அப்படியே ‘பொற்கோடு’ golden peak என்று அழகுற மொழிபெயர்க்கிறார் புறநானூற்றுப் புலவர் மிஸ்டர் நாகராஜன் (ராய= ராஜ என்பது இன்று ஆங்கிலத்திலும் Royal ராயல் என்று இருப்பதை தமிழ் -சம்ஸ்கிருதம் தொடர்பு பற்றிய 150 கட்டுரைகளில் விளக்கியுள்ளேன்)
xxx
ரிக்.10-146-2
இரண்டாவது மந்திரத்துக்கு வருவோம். ரிக் வேதம் எவ்வளவு பழமையானது; அதற்குப் பொருள் காண்பது எவ்வளவு கடிது என்பதை இந்த மந்திரம் விளக்குகிறது
காட்டில் நடக்கும் Orchestra ஆர்கெஸ்ட்ரா பற்றிப் புலவர் பாடுகிறார். இது போன்ற அருமையான இயற்கை வருணனை மலைபடுகடாம் முதலிய சங்க இலக்கியப் பனுவல்களில் நிறைய உள .
“கிரீச் என்று சப்திக்கும் விருஷாவரத்துக்கு சிச்சிகம் பதில் அளிக்கிறது. அங்கே பின்புறத்தில் யாரோ தாளம் போடுகிறார்கள். யாரோ சுருதி பாடுகின்றனர் . அவைகள் எல்லாம் அரண்யானி தேவியைக் குறித்து துதி பாடுகின்றன” –
இதன் பொருள் காட்டில் பல்வேறு ஒலிகள் கேட்கின்றன.அவற்றின் ஒலிகள் ‘பாடுவது’ போலவும் பின்னாலுள்ள வண்டுகளின் தொடர்ந்த ரீங்காரம் ‘சுருதி’ போலவும் உள்ளதாம். இதைப் புரிந்துகொள்ள இரண்டு விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
ஒன்று, இந்துக்களின் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் பாடகர் அல்லது வாத்தியம் வாசிப்போருக்கு தம்பூராவில் சுருதி மீட்டும் ஒரு பெண்மணி அமர்ந்து 3, 4 மணி நேரத்துக்கு சுருதி போட்டுக்கொண்டு இருப்பார் .
இரண்டு , காடுகளுக்குச் சென்ற அனுபவம் உடையோருக்கு அங்கு எப்போதும் இதே போல வண்டுகளின் ரீங்காரம் இசைப்பதை கேட்டிருப்பார்கள். கொடைக்கானல் போன்ற மலைகளில் ஏறும்போது காரை நிறுத்திவிட்டு வெளியே வந்தோருக்கு இது தெரிந்திருக்கும். இதே போல காடுகளில் தொடர்ந்து ஒலி . ஆனால் இப்படி ஆர்க்கெஸ்ட்ரா Orchestra வாசித்த பூச்சிகள் , பறவைகள் பற்றி உரைகாரர் இடையே கருத்தொற்றுமை இல்லை. ஏனெனில் வேதம் அவ்வளவு பழமையானது அந்தப் பறவைகளை இன்று அடையாளம் காணமுடியவில்லை. சிச்சிக ,வ்ருஷாவர என்பதை வெட்டுக்கிளி, மீன் கொத்திப் பறவை என்பர் சிலர். எல்லாமே பூச்சி வகை, எல்லாமே பறவை வகை என்றும் உரைகாரர் செப்புவர் .
நமக்குத் புரிவது பறவைகளின் பாடல்; பின்னணியில் சிற்றோடை, நீர்வீழ்ச்சிகள் தாளம், வண்டுகளின் ரீங்காரம் என்னும் சுருதி. இது தமிழ் இலக்கியத்திலும் உளது. ஆனால் அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புலவன் அதை சம்ஸ்கிருதத்தில் பாடியதும் அதை பிராமண சமூகம் வாய் மொழியாகவே பரப்பி வருவதும் உலக அதிசயம்!!!
xxx
10-146-1
முதல் மந்திரத்தைக் காண்போம் . அரண்யானி! அரண்யானி! என்று இரு முறை அழைத்து புலவர் பாட்டைத் துவங்குகிறார் . இது போல பல பாடல்கள் சங்க இலக்கியத்திலும் உண்டு ‘பல் சான்றீரே , பல் சான்றீரே!!’ ‘கலம் செய் கோவே, கலம் செய் கோவே !!’ என்றெல்லாம் இரு முறை அழைக்கும் பாடல்களை புற நானூற்றிலும் காணலாம்.
ரிக் வேதத்தில் உள்ள நிறைய சொற்களை தமிழர்களாகிய நாம் அன்றாடம் பயன்படுத்துகிறோம் ; இந்தக் கவியில் உள்ள ‘அரண்யானி’ என்பது ஆரண்யம், அரண்யம் = காடு என்பதாகும். இன்றும் கூட வேதாரண்யம் = திருமறைக்காடு என்பதெல்லாம் தமிழர் வாயில் சர்வ சாதாரணாமாகப் புழங்கும் சொற்கள் ஆகும் .
இப்படி காட்டு ராணியை அழைக்கும் புலவர் ஒரு வியப்பான கேள்வியைக் கேட்கிறார். “ஒய் அம்மணி! உனக்கு பயமே இல்லையா? மாலை நேரம் வந்துவிட்டால் தோன்றியும் தோன்றாமலும் மறைந்து போகிறாய். நீ ஏன் அருகிலுள்ள கிராமத்துக்கு வரக்கூடாது? உனக்கு பயம் என்பதே இல்லையா என்று வியக்கிறேன்”.
xxx
6000 ஆண்டுகளுக்கு முன்னர், இப்படிப் பாடிய கற்பனை மிகு கவிகள் ரிக் வேதத்தில் நிறைய உள்ளன. BIG BANG ‘பிக் பாங்’ என்று அழைக்கப்படும் மாபெரும் பிரபஞ்சத் தோற்றம் CREATION பற்றிய கவிதையைக் கண்டு உலகமே வியக்கிறது அதர்வண வேதத்தில் உள்ள பூமி சூக்தத்தைக் கண்டு உலகமே ஆச்சர்யப்படுகிறது.
ரிக்வேதத்தின் கடைசி கவிதை வியாசரின் மஹா ஜீனியஸைக் காட்டுகிறது. ‘’உலகம் முழுதும் ஒற்றுமை நிலவ வேண்டும் என்ற உலக மஹா தேசீய கீதத்தை கடைசி பாடலாக வியாசர் வைத்திருப்பது இந்துக்களின் நல்லெண்ணத்துக்கு உதாரணம்ஆகத் திகழ்கிறது. ரிக் வேதத்தை எல்லோரும் படிக்க வேண்டும். அஸ்வினி தேவர்கள், விச்வே தேவர்கள் பற்றிய கவிதைகளை முதலில் படியுங்கள். அற்புதங்களும் வரலாறும் அதில் உள .
இதனால்தான் வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே என்று பாரதியும் பாடிவைத்தான்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
‘பாரதியின் அறிவியல் பார்வை’ 8- வா.செ.குழந்தைசாமி
மஹாகவி பாரதியாரை அறிவியல் பார்வையில் பார்க்கும் நூல் இது. எழுதியவர் டாக்டர் திரு வா.செ.குழந்தைசாமி. (பிறப்பு 14-7-1929 மறைவு: 10-12-2016) அறிவியல் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டவர்.2002ஆம் ஆண்டு நமது மத்திய அரசின் பத்ம பூஷண் விருதைப் பெற்றவர். பல்வேறு நூல்களை எழுதியவர்.
இவர் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த போது நான் தினமணி கதிர் இதழுக்காக இவரை நேரில் சென்று பேட்டி கண்டேன். அந்தப் பேட்டிக் கட்டுரை ‘அறிஞர்கள் போற்றும் குழந்தை’ என்ற தலைப்பில் 3-11-1978 தேதியிட்ட தினமணி கதிர் இதழில் வெளியானது. (அப்போது எனது புனைப் பெயர் ‘கிருஷ்ணபிரகாஷ்.)
சிறந்த அறிஞரான இவர் எழுதியுள்ள இந்த ‘பாரதியின் அறிவியல் பார்வை’ என்ற நூல் மார்ச் 1983இல் வெளியிடப்பட்டது. 124 பக்கங்கள் கொண்ட இந்த நூல் 1) அறிவியல் பார்வை 2) பாரதியின் அறிவியல் பார்வை 3) புதுமைப் பெண்கள் 4) ஆயிரம் தொழில் செய்குவீர் 5) பல கல்வி தந்து பாரை உயர்த்துவோம் 6) மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை 7) ஒப்பிலாத சமுதாயம் 8) மனிதர் தம்மை அமரர்களாக்குவோம் ஆகிய எட்டு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
முதல் அத்தியாயத்தில் (அறிவியல் பார்வை) நமது சமுதாயத்தில் அறிவியல் மனப்பான்மை இன்னும் பரவலாக உருவாகவில்லை, அறிவியல் அணுகுமுறை இயற்கையான ஒரு கூறுபாடாக இன்னும் இடம் பெறவில்லை என்று குறிப்பிடும் இந்த நூலாசிரியர், முதிர்ந்த தெளிவோடும், முறையான வழியோடும் ஒரு மறுமலர்ச்சியை மாற்றத்தை உருவாக்கும் வழிகாட்டிகளின் வரிசையில் முன் நிற்பவர் பாரதி என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
இரண்டாம் அத்தியாயத்தில் (பாரதியின் அறிவியல் பார்வை),
பாரதியார், “காலத்துக் கேற்ற வகைகள் – அவ்வக்
காலத்துக் கேற்ற ஒழுக்கமும் நூலும்
ஞாலம் முழுமைக்கும் ஒன்றாய் – எந்த
நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை” என்று அறுதியிட்டு உறுதியாய்க் கூறியதைச் சுட்டிக் காட்டி, பாரதியாரின் ‘பழம் பெரும் நூல்கள் பயன்படக் கூடிய அளவிலே இடம் பெற வேண்டும்’ என்ற கருத்தை முன் வைக்கிறார். அவரது பயணத்திலே அறிவியல் பார்வை அணையா விளக்காகப் பயன்பட்டது என்கிறார்.
மூன்றாவது அத்தியாயத்தில் (புதுமைப் பெண்கள்) மிளகாய்ப் பழச் சாமியார் என்ற கதையில் சாமியார் வாயிலாகப் பாரதியார் கூறும் பின் வரும் வரிகளைச் சுட்டிக் காட்டுகிறார் திரு வா.செ.குழந்தைசாமி.
“ உலக முழுமைக்கும் நான் சொல்லுகிறேன். ஆண் பெண்ணுக்கு நடத்தும் அநியாயம் சொல்லுக்கடங்காது. அதை ஏட்டில் எழுதியவர் இல்லை. அதை மன்றிலே பேசியவர் யாருமில்லை”
“மாதர்கள் தாமே முற்பட்டுத் தமக்கு வேண்டிய சீர்திருத்தங்களைத் தேடிக் கொள்வதே நன்றாகும்” என்பதை பாரதியார் வலியுறுத்துகிறார். ‘பட்டங்கள் ஆளவதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்று அவர்களாகவே அறிவித்துக் கொண்டதையும் பாரதியார் மகிழ்ச்சியோடு பதிவிடுகிறார். ‘கற்பு நிலை என்று சொல்ல வந்தார் – இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் என்பது அவர்கள் சட்டம்.
‘புதுமை எனில் இது புதுமை; புரட்சி எனில் இது புரட்சி’.
நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் கொண்ட பெண்களுக்கு அப்படிப்பட்ட புதிய நிலையை உருவாக்குவது கல்வியே என்பது பாரதியாரின் முடிவு. ‘ சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே’ என்ற புதுமைப் பெண்ணின் முழக்கத்தையும் அதற்கான அடிப்படை – ‘அறிவு நிலை’ என்ற உண்மையையும் நூலாசிரியர் இங்கு விளக்குகிறார்.
அடுத்து நான்காம் அத்தியாயமான ஆயிரம் தொழில் செய்குவீர் என்ற அத்தியாயத்தில்
சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் – வெறும்
சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்
என்று பாரதியின் நெஞ்சம் புழுங்குவதையும் அந்தப் பஞ்சத்தை நீக்க செல்வநிலை உயர வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டுவதையும் நூலாசிரியர் நிலை நிறுத்துகிறார். பாரதியாரது அறிவியல் அணுகுமுறை தொழில் வளர்ச்சி ஏற்படுவது இயல்பானதே என்பதைக் கொள்வதால், “இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே
இயந்திரங்கள் வகுத்திடுவீ ரே “ என்று அவரை வேண்டுகொள் விடுக்கச் செய்கிறது என்றும், ‘அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல் ஆயிரம் தொழில் செய்திடுவீரே’ என்றும் அவரைப் பாட வைக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.
அடுத்த ஐந்தாம் அத்தியாயத்தில் (பல கல்வி தந்து பாரை உயர்த்துவோம்)
‘மாற்றி வையம் புதுமையுறச் செய்து மனிதர் தம்மை அமரர்களாக்க’ விழைந்தவர் பாரதி என்று கூறும் நூலாசிரியர் அதற்கு அடிப்படைத் தேவையாக, ‘வயிற்றுக்குச் சோறிட வேண்டும்’ ‘பயிற்றிப் பல கல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திடல் வேண்டும்” என்று கூறுவதைச் சுட்டிக் காட்டுகிறார். கல்வி பெற்ற மக்களே தான் இனிச் செல்வம் பெற முடியும் என்பது இன்றைய காலகட்டத்தின் நிலை.
ஆகவே தான் அவர் “அறிவே வலிமை – கல்வியே செல்வத்தின் தாய்” என்று முழங்கினார்.
‘மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை’ என்பது அடுத்த அத்தியாயம். சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே என்று முழங்கியவர் பாரதியார்.
‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்று அவர் ஆசைப்பட்டார். ஆனால் அதே சமயம் தமிழின் இன்றைய குறைபாடுகளைப் பற்றியும் அவர் எண்ணுகிறார். ஆகவே “புதிய செய்தி, புதிய புதிய யோசனை; புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் தமிழில் ஏறிக் கொண்டே போக வேண்டும்” என்று அவர் வலியுறுத்துகிறார்.
“புதிய நுட்பங்கள் கூறும் கலைகள் தமிழினில் இல்லை; அவற்றைச் சொல்லும் திறமை தமிழ் மொழிக்கு இல்லை; மெல்லத் தமிழ் இனிச் சாகும்” என்று கூறிய ஒருவனை “என்று அந்தப் பேதை உரைத்தான்” என்று கூறிச் சாடுகிறார்.
“இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்” என்று வானம் அளந்தது அனைத்தும் அளந்த வண் மொழி வாழ வழி கூறுகிறார் அவர்.
இன்றைய உலகில் 100,000 பத்திரிகைகள் பல மொழிகளில் வருகின்றன. இன்று ஆண்டு தோறும் 12,00,000 ஆய்வுக் கட்டுரைகள் உலகில் வெளியாகின்றன. எல்லா வகையான துறைகளையும் சேர்த்துப் பார்த்தால் அமெரிக்காவில் 80,000 தலைப்புகள் உள்ளன. சோவியத் ஒன்றியம் 85000 தலைப்புகளை வெளியிடுகிறது. ஆகவே தமிழ் மொழியை வளர்க்க வேண்டும் என்ற பாரதியின் கனவு இன்னும் நனவாகவில்லை என்பதை நூலாசிரியர் மிகச் சரியாக இப்படி ஆதாரங்களுடன் விளக்குகிறார்.
ஏழாவது அத்தியாயத்தில் (ஒப்பிலாத சமுதாயம்) – எப்போதுமே புதுமை, புதிய உலகு, புதிய சமுதாயம் ஆகியவை பற்றிய எண்ணங்களை பாரதியார் வெளியிடுகிறார். அவர் சொற்களில் இந்தக் கனவுகளே ஒளி விடுகின்றன என்பதை நூலாசிரியர் ஆதாரங்களுடன் கூறுகிறார். ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்பது தான் பாரதியின் நிலைப்பாடு.
இறுதி அத்தியாயத்தில் (மனிதர் தம்மை அமரர்களாக்குவோம்) பாரதியின் பாடல்களில்
1) பாரதிக்கு மனிதனின் ஆற்றலில் அளவு கடந்த நம்பிக்கை
2) மனிதன் உயர்ந்து தானே அமர நிலை அடையக்கூடியவன்
என்ற எண்ணம் ஆகிய இரண்டையும் காணலாம் என்பதை திரு குழந்தைசாமி சுட்டிக் காட்டுகிறார்.
‘மாற்றி வையம் புதுமையுறச் செய்து
மனிதர் தம்மை அமரர்களாக்க” என்று இப்படி மகத்தான கனவைக் கண்டவன் பாரதி. அவர் பார்வையின் உயரத்தை அவரது சொற்களிலேயே காணலாம் என பல சான்றுகளைக் காட்டி நிறுவி நூலை முடிக்கிறார் நூலாசிரியர்.
பாரதியாரின் அறிவியல் பார்வையைத் தெள்ளத் தெளிவாக அலசி ஆராயும் இந்த நூல் அறிவியல் நோக்கில் அமைந்துள்ள நல்ல ஒரு நூல்.
இந்த நூலுக்கு பாரதி பக்தர் ம.ப.பெரியசாமித் தூரன் அழகிய முன்னுரை ஒன்றைத் தந்துள்ளார்.
அறிவியலிலும் பாரதி முன் நிற்கிறான் என்பதைச் சுட்டிக் காட்டி விளக்கும் இந்த நூல் பாரதி அன்பர்கள் படிக்க வேண்டிய நூல்.