WHAT DID INDIA GIVE TO THE WORLD?- HENRY S.MAINE (Post No.4964)

Compiled by London Swaminathan 

 

Date: 30 APRIL 2018

 

Time uploaded in London – 19-05 (British Summer Time)

 

Post No. 4964

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

“Indian has given to the world comparative philology and comparative mythology; it may yet give us a new not less than valuable than the science of language and folk lore. I hesitate to call it comparative jurisprudence because if it ever exists, its area will be much wider than the field of law.

For Indian not only contains a language (Sanskrit) older than any other descendent of the common mother tongue, and a variety of names of natural objects less perfectly crystallized than elsewhere into fabulous personages, but it includes a whole world of Hindu institutions, Hindu customs, Hindu laws, Hindu ideas, Hindu beliefs, in a far earlier stage of growth and development than any which survive beyond its borders.

There are undoubtedly in it the materials for a new science, possibly including many branches. To create it, indeed to give it more than a beginning, will require may volumes to be written, and many workers to lend their aid:- Rede Lecture 1875

xxx

 

Role of Brads in preserving history!

No race of men is more proud of ancestry than the chiefs of the ruling dynasties of India. The records of their geneologies are maintained with scrupulous care, more particularly in the states of Rajaputana, by a body of hereditary bards, who are endowed wth lands and pensions for the special purpose.

 

Sangam literature also talks of the Tamil bards who sang the panegyrics of kings and chieftains. Another kind of bards stood in front of the palace and sang the praise of the kings in the very early morning.

The descent of the present rulers of Udaipur, Jaipur, Jodhpur and many others, from the ancient solar dynasties, and, therefore, thorugh Harischandra, is undoubted all over India.

Jarasandha was the founder of  Pandu dynasty in Magada, whose capital was the ancient Rajagriha. He was a contemporary of Yudhisthira of Mahabharata.

Every Brahman family of India claim to be descended from one or other of the Seven Great Rishis or sages who were exalted to the stars of the constellation – Sapta Rishi Mandla, also known as the Ursa Major (the Great Bear).

 

Homer and Indian Poets

Sir Monier Williams said in Indian Wisdom,

“Much of the Homeric poems are still admired, no one in any part of the world, now dreams of placing he slightest faith in their legends, so as to connect them with religious opinions and practices. In India a complete contrast in this respect may be observed. The myths of the Indian Epics are still closely interwoven with present faith”. – (Page 433, Indian Wisdom)

–from The Golden Legend of India, William Henry Robinson,1909

 

–Subham–

 

வெளி உலகவாசிகள் (E.T.), காலம் (Concept of Time) பற்றி கம்பன்! (Post No.4963)

 

Written by London Swaminathan 

 

Date: 30 APRIL 2018

 

Time uploaded in London – 16-00  (British Summer Time)

 

Post No. 4963

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

வெளி உலகவாசிகள் (E.T.), காலம் (Concept of Time) பற்றி கம்பன்! (Post No.4963)

கம்பன் இயற்றிய ராமாயண காவியத்தில் நிறைய அறிவியல் செய்திகள் உள்ளன. நமது பூவுலத்தைத் தவிர நிறைய உலகங்கள் உள்ளன; அங்கேயும் உயிரினங்கள் உள்ளன என்பதெல்லாம் மிகவும் தெரிந்த விஷயங்கள் போல போகிற போக்கில் அனாயாசாமாகச் சொல்கிறான் கம்பன்; உண்மைதான்; மஹாபரதத்திலேயே அர்ஜுனன் மேலுலகம் சென்று திரும்பி வந்த விஷயம் உள்ளது;  வால்மீகி ராமாயணத்திலேயே விமானம் பற்றிய செய்திகள் உள்ளன. இதே போல அணு விஞ்ஞானம் அவ்வையார் பாடல்களிலும் திருமூலர் பாடல்களிலும் கம்பன் பாடல்களிலும் காணப்படுகின்றன. இது பற்றிய முந்தைய எனது கட்டுரைகளின் இணைப்பை கீழே காட்டுவதால் அவைகளைத் திரும்பச் சொல்லப் போவதில்லை. கம்பன் பாடல்களை மட்டும் தருகிறேன்.

 

இந்த பூமியும் கோள்களும் பிரபஞ்சமும் வட்ட வடிவானமவை. இதை பல்லாயிரமாண்டுகளுக்கு முன்னரே அறிந்த இந்து மத விஞ்ஞானிகள் இதை அண்டம் என்ற ஸம்ஸ்க்ருத சொல்லால் குறித்தனர். அண்டம் என்றால் முட்டை; அந்த வடிவில் வானத்தில் இருக்கும் எல்லா  கிரஹங்களும் நட்சத்திரங்களும் தென்படுவதால் இந்தச் சொல்லைப் பயன்படுத்துவர்

கம்பன் எழுதிய காவியம் சுமார் ஆயிரம் ஆண்டுப் பழமையுடைத்து. ஆனால் ராமாயண, மஹாபாரத இதிஹாசங்களோ பல்லாயிரம் ஆண்டுப் பழமையுடைத்து. வேதங்களிலும் இந்தக் கருத்து உளது.

மாணிக்கவாசகர் முதல் பாரதியார் வரை பல்லாயிரம் அண்டங்கள் இருப்பதைப் பாடிப் பரவியுள்ளனர்.

 

எற்றை நாளினும் உளன் எனும் இறைவனும் அயனும்

கற்றை அஞ்சடைக்கடவுளும் காத்து அழிக்கும்

ஒற்றை அண்டத்தின் அளவினோ அதன்புறத்து உலவா

மற்றை அண்டத்தும் தன் பெயரே சொல வாழ்ந்தான்

 

பொருள்

மேலும் அந்த இரணியன் (ஹிரண்யகஸிபு), எந்தக் காலத்தும் அழியாமல் இருப்பவன் என்று வேதங்கள் சொல்லும் திருமாலும், நான்முகனும் அழகிய சடையுடைய திருமாலும் முறையே காத்து அழிக்கும்  அண்டத்தின் எல்லை மட்டுமா? இந்த அண்ட கோளத்திற்கு அப்பாலுள்ள  மற்ற அண்டங்களில் உள்ள எல்லாரும் தன் பெயரையே சொல்லித் துதிக்குமாறு வாழ்ந்தனன்.

 

ஏனைய அண்ட கோளங்கள் இருப்பதும் அங்கே வசிப்பவர்கள் பேச முடியும் என்பதும் நம்மவர்களுக்குத் தெரிந்த மிக சாதாரண விஷயம் என்பதை இந்தப் பாட்டு காட்டுகிறது.

 

அண்டம் என்பது முட்டை வடிவினதே என்று அறுதியிட்டுக் கூறுகிறான் கம்பன்:

குயிற்றிய அண்டம் குஞ்சை இட்டிலா முட்டைக் கூட்டில்

பயிற்றிய பருவமொத்த……………………………………..

 

திருமாலால் படைக்கப்பட்ட அண்ட கோளங்கள் குஞ்சு பொரிக்காத நிலையில் உள்ள முட்டைகள் போல விளங்க……………….

 

இதில் அண்டம் என்பது முட்டை வடிவமே என்று தமிழ்ப்படுத்திக் காட்டுகிறான் கம்பன்.

 

கால நேரம் பற்றிய அற்புத அறிவு

 

ஒரு நொடியை ஆயிரம் கூறாகப் போடுவது குறித்து பாடல் பாடுவதால் அக்கால மக்களுக்கு இவை எல்லாம் அத்துபடி என்பது சொல்லாமலேயே விளங்கும்:-

அயிரா இமைப்பினை ஓராயிரம் கூறு இட்ட

செயிரின் ஒரு பொழுதில் நுந்தையை யாம் சீறி

உயிர்நேடுவேம்போல் உடல் அளைய கண்டும்

செயிர் சேரா உள்ளத்தாய்கு என் இனி யாம் செய்கேம்

 

பொருள்:-

ஒரு இமைப் பொழுதை நுட்பமாக ஆயிரம் கூறாகப் பிளந்து, அந்த பகுப்புகளுள் ஒரு பகுப்பான சிறிது பொழுதிலே, உன் தந்தையை அவன் செய்த குற்றத்துக்காக யான் சினந்து அவன் உடலை நகங்களால் பிளந்து வருத்தியதைக் கண்ணெதிரே கண்டும் உள்ளம் கலங்காத மனநிலைக் கொண்ட நினக்கு யாம் இப்பொழுது என்ன கைம்மாறு செய்வோம் என்று பிரஹலாதனை நரசிம்மன் வடிவெடுத்த  விஷ்ணு கேட்கிறான்.

 

 

இன்று நம்மிடையே கம்ப்யூட்டர்கள் இருப்பதால்  ஒரு வினாடியை ஆயிரத்தால் வகுத்து,விண்கலங்களை விண்ணில் செலுத்த முடிகிறது. அந்தக் காலத்தில் இப்படி ஒரு நொடியை ஆயிரமாகப் பிரிக்கும் விஷயங்களை வெளிநாட்டார் சிந்திக்கவும் இல்லை; சிந்திக்கவும் முடியாது. ஏனெனில் கணிதமும் ‘டெஸிமல் சிஸ்டமும்’ (தசாம்ஸ முறை) எண்களும் பூஜ்யமும் உலகிற்கு நாம் கற்றுக் கொடுத்த விஷயங்களாகும்!!!

MY OLD ARTICLES ON EXTRA TERRESTRIALS AND CONCEPT OF TIME

 

வெளி உலகவாசிகள் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/வெளி-உலகவாசிகள்/

2000 ஆண்டுகளாக மக்கள் முதலிய ஜீவன்களை 18 கணங்களாகப் பிரிப்பது இந்து மத நூல்களில் காணப்படுகிறது. அப்படியே மிஸ்டர் … இந்துக்களின் வெளி உலகவாசிகள் பற்றிய நம்பிக்கைகள் குறித்து நான் எழுதிய கட்டுரைகளில் இதை விரிவாக விளக்கியுள்ளேன். ஆக புற நானூற்றின் …

 

ராமரின் புஷ்பக விமானம் எப்படி பறந்தது …

https://tamilandvedas.com/…/ராமரின்-புஷ்பக-வி…

22 Jun 2013 – புதிய கண்டு பிடிப்பு! ஸ்ரீ ராமர் விமானம் எப்படிப் பறந்தது? தற்காலவிமானம் போல உயர் ரக பெட்ரோல் ஊற்றினாரா? அல்லது ஹைட்ரஜன் வாயுவால் பறந்ததா? என்று எல்லாம் கேட்போருக்கு இப்போது விடை கிடைத்துவிட்டது. லண்டன் ‘மெட்ரோ’ பத்திரிகையில் எண்ண …

 

 

science and religion | Tamil and Vedas

https://tamilandvedas.com/category/science-and-religion/

15 Mar 2018 – நமக்கு ஒரு காலம், பித்ருக்களுக்கு ஒரு காலக் கணக்கு, பிரம்மாவுக்கு வேறு ஒரு காலக் கணக்கு ஆகியன வெளி உலகங்கள் (Extra Terrestrial Civilization) இருப்பதைக் காட்டும். வெளி உலக கிரக வாசிகள் (ET) கண்டு பிடிக்கப்பட்டால் அவர்கள் இப்படிப்பட்ட காலச் சுழற்சி உடைய இடத்தில் …

 

வெளி உலகவாசிகள் பற்றி தாண்ட்ய …

https://tamilandvedas.com/…/வெளி-உலகவாசிகள்-… – Translate this page

2 Jul 2017 – … ஆனால் செக்ஸ் (SEX) செய்ய முடியாது. 5.அவர்கள் மானசீகமாக எங்கும்பயணம் செய்யலாம். 6.தாண்ட்ய பிராமண விளக்கத்தின்படி பார்த்த்,,,,,,,,,,,ல், அவர்கள் பூமியிருந்து பிற கிரகங்களுக்குச் சென்றவர்களே. ஆனால் வெள்ளைக்காரர் களோவெனில் வெளி உலக வாசிகள் தான் இங்கு …

 

காலப் பயணம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/காலப்-பயணம்/

Pisces constellation that includes REVATHI star. நட்சத்திர அதிசயங்கள். இந்த கட்டுரை தொடரின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டோம்.27 நட்சத்திரங்களில் கடைசி நட்சத்திரமான ரேவதி அறிவியல் வியக்கும் நட்சத்திரங்களில் முதலிடத்தை வகிக்கிறது.அப்படி அதிகம் வியக்கும்படி அந்த நட்சத்திரத்தில் எதைத் …

 

விண்வெளி அறிவியல் | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/விண்வெளி-அறிவிய…

உலகப் புகழ்பெற்ற சம்ஸ்கிருதக் கவிஞனின் உலகப் புகழ்பெற்ற நாடகம் சாகுந்தலம். இயற்கைக் காட்சிகளின் வருணனை ஒரு … காளிதாசன் சொல்லுவதைப் படிக்கையில் அவனே விண்வெளி வாகனத்தில் பயணம் செய்தானோ என்றே வியக்க வேண்டி இருக்கிறது. விமானி அறையில் (காக்பிட்) …

தமிழர்கள் கணித மேதைகள் | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/தமிழர்கள்-கணித-மேத…

ஆவியின் கூறு நூறயிரத்தொன்றாமே”—திருமந்திரம் 1974. சங்க இலக்கிய நூல்களான பரிபாடல் (3-53), புறநானூறு (பாடல் 2) ஆகியவற்றுக்கு உரை எழுதியோர் அணுச் செறிந்த உலகம் என்று பூமியை வருணித்துள்ளனர். உபநிஷத்துக்கள் இறைவனின் பெருமையைக் கூறுமிடத்து “அணோர் …

Tamil and Vedas | A blog exploring themes in Tamil and vedic …

https://tamilandvedas.com/page/10/?ca – Translate this page

21 Sep 2017 – திருமந்திரம். கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை. மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில். தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி. சிங்கார மான ….tamilandvedas.com/tag/ka. Posts about Ka written by Tamil and Vedas … Picture shows Egyptian Manu= Narmer. Did Indians build Pyramids?-Part 2 ( Please read first part before reading this .. –சுபம்–. Leave a comment.

 

Science & Religion | Tamil and Vedas | Page 14

https://tamilandvedas.com/category/science…:/tamilandvedas…/14/

17 Dec 2012 – அதாவது வியாச முனிவரின் எச்சில்தான் இந்த உலகம் முழுதும். அவர் வாயில் விழாத சப்ஜெக்ட் (விடயம்) இப்பூவுலகில் எதுவும் இல்லை. முன்னரே வெளி உலக வாசிகள் பற்றியும், பீஷ்மரின் ஊசி மருத்துவம் (அக்யுபன்க்சர்) பற்றியும் காலப்பயணம் பற்றியும் (டைம் ட்ராவல்) …

 

–சுபம்–

குயவன் ராஜகுமாரியின் வலிப்பு நோய் தீர்த்த வரலாறு!(Post No.4962)

WRITTEN by S NAGARAJAN

 

Date: 30 April 2018

 

Time uploaded in London –  5-45 AM  (British Summer Time)

 

Post No. 4962

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

கொங்குமண்டல

கொங்கக் குயவன் ராஜகுமாரியின் வலிப்பு நோய் தீர்த்த வரலாறு!

 

ச.நாகராஜன்

 

கொங்கு மண்டலத்தின் பெருமைகளை உரைக்கும் கொங்கு மண்டல சதகம் என்ற நூலில் உள்ள நூறு பாடல்களில் சிலவற்றை அவ்வப்பொழுது பார்த்து வந்திருக்கிறோம்.

 

இப்போது இன்னும் ஒரு அருமையான சம்பவத்தைக் கூறும் பாடலைப் பார்ப்போம். 89வது பாடலாக அமையும் பாடல் இது:

 

கரிகாலச் சோழன் மகளுக்கு வந்த கனவலிப்பு

மெரியா முடலை மயக்கமட் கோவ னிறைமகளைப்

பரிபா லனஞ்செய மட்பாவை யிற்குறி பார்த்துச்சுட

மரியாம லவ்வலி யேகிய துங்கொங்கு மண்டலமே

 

இப்பாடலின் பொருள் ; கரிகாலச் சோழன் மகளுக்கு வந்து நேர்ந்த பெரிய வலிப்பு நோயை, ஒரு குலாலன் மட்பாவை செய்து அதை நோக்கிக் குறி பார்த்துச் சுட, அவ்வலிப்பு நோய் தீர்ந்ததும் கொங்கு மண்டலம் என்பதாம்.

 

வரலாறு : பாடலின் அடிப்படையாக அமைந்ந்த வரலாறு இது தான் :

கரிகாலன் என்ற சோழனின்  மகளுக்கு பெரிய வலிப்பு நோய் வந்தது. எத்தனையோ வைத்தியர்கள் தம்மால் இயன்ற வைத்தியம் செய்து பார்த்தார்கள். நோய் தீரவில்லை.

கொங்கு நாட்டில் இருக்கும் ஒரு குயவன் இந்நோயை வெகு விரைவில் நீக்கி விடுவான் என்று பலர் சொல்லக் கேட்டான் கரிகாலன். அவனை வரவழைத்தான்.

 

“நீ சூடு போட்டு நோயை நீக்கி விடுவாய் என்று கேள்விப் படுகிறேன். ஆனால்  என் இளம் குழந்தை சூட்டைப் பொறுக்க மாட்டாளே” என்று வருத்தத்துடன் கூறினான்.

 

அதற்கு அந்தக் குயவன், “மன்னா! கவலைப்பட வேண்டாம். ராஜகுமாரியின் மேனியில் படாது சூடு போட்டு வலியைப் போக்குகிறேன்” என்றான்.

 

வியப்புற்ற மன்னன் அதற்குச் சம்மதம் தெரிவித்தான்.

குயவன் குழந்தை போலவே ஒரு பாவையை மண்ணினால் செய்தான். ராஜகுமாரிக்கு வலி எங்கிருக்கிறது என்பதைக் கேட்டு அறிந்து கொண்டான். அந்த இடத்தைக் குறி பார்த்து நெருப்பிற் காய்ந்த இரும்புக் கோலால் அந்த மண் பாவையில் சுட்டான். உடனே அரசிளங்குமரிக்கு வலிப்பு நோய் தீர்ந்தது.

 

குறிப்பிட்ட பொருளில் உருவம் செய்து அப்பாவையின் உறுப்பில் ஊசி முதலியவற்றைக் குத்தல், குறிப்பிட்ட இடத்தில் சுட்டு வியாதியைப் போக்கல், இல்லாத வியாதியை உண்டாக்கல் ஆகியவற்றை சல்லியம் என்னும்  மந்திர சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

 

அதன் படி ராஜகுமாரியின் நோய் நீங்கிற்று.

இந்த வரலாறைச் சற்று மாற்றியும் சொல்லும் ஒரு சுவடி உள்ளது.

 

அதன் படி மேற்கண்ட நோய் தீர்ந்தது விக்கிரம சோழன் மகள் என்றும், பொன்கலூர் நாட்டு வானவன் சேரி என்னும் ஊரில் இந்த நிகழ்ச்சி நடந்தது என்றும்  குறுப்பி நாடு கற்றாங்காணி ஊரிலுள்ள ஒரு கொங்குக் குயவன் அங்கு வந்து குறி சுட்டான் என்றும் தெரிய வருகிறது.

 

குயவர்களிடம் உள்ள ஒரு பழைய சுவடி இதனைத் தெரிவிக்கிறது!

***

More Eating Anecdotes (Post No.4961)

Compiled by London Swaminathan 

 

Date: 29 APRIL 2018

 

Time uploaded in London – 12-28 am (British Summer Time)

 

Post No. 4961

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 
Mark Twain habitually bemoaned the poor quality of French coffee . It was his insistence that the concoction was brewed by rubbing a chicory bean against a coffee bean and dropping the chicory bean in the water.

Xxx

Poisonous Mushroom’s effect


At a Sunday night tea which the author Hamlin Garden attended he was served Some fresh mushrooms.,
Are you sure, Madam, he asked his hostess with great concern. That these are not poisonous variety of mushrooms?
The hostess assured him that they were harmless and edible. As he still hesitated, looking speculatively into space, his hostess asked him if he was still afraid.
No, mused Mr Garland, I was just thinking of the effect on American letters should you be wrong.
Xxx

 

With Potatoes!


The wonderful Madame Ernestine Schumann Heink, greatest contralto of her time was seated in a restaurant near the Metropolitan Opera House with an enormous steak before her. Enrico Caruso came in and joined her at the table.
Stena, he said in mock astonishment, you are not going to eat that alone?
No said the portly contralto, no not alone; with potatoes.

Xxx

Don’t Eat Fork or Knife


Sir Richard Jebb, the famous doctor, was a liberal eater, a high liver. He believed the digestive organs were made to be used, not nursed. The question frequently asked by his patients what may I eat, Doctor? Was exceedingly annoying to him
On one occasion, he gave this answer,
My directions, sir, are simple. You must not eat the poker shovel or the tongs, for they are hard of digestion nor the bellows, for they will produce wind in your stomach; but you may eat anything else you please

Xxxx

Inventions and accidents

The old saying that many great inventions are the products of accidents seems to hold true in the culinary field.
There is a tradition surrounding the origin of Melba toast which was supposedly the great creation of the French master chef, Escoffier.

 

At the Savoy in London, Cesar Ritz was maitre d’hotel and Escoffier was chef. Nellie Melba, celebrated prima Donna was staying there and was strenuously dieting, living largely on toast.

 
It chanced one day, while the master was preoccupied, that an unerring prepared the great lady’s toast. It was bungled and was served to her in a thin dried up state resembling parchment. Ritz beheld with horror his celebrated guest crunching this aborted toast, and hastened over to apologise. Before he could utter a word Madame Melba burst out joyfully, saying, Caesar, how clever of Escoffier. I have never eaten such lovely toast.

Xxxx SUBHAM xxxxx

கம்பன் கவிதையில் எட்டெழுத்து மந்திரம் (Post No.4960)

Written by London Swaminathan 

 

Date: 29 APRIL 2018

 

Time uploaded in London – 9-25 am (British Summer Time)

 

Post No. 4960

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

எட்டெழுத்து, ஐந்தெழுத்து, ஆறெழுத்து மந்திரங்களின் புகழை இந்துக்கள் அனைவரும் அறிவார்கள்.

 

ஓம் நமோ நாராயணாய என்று சொல்லி, கோபுரத்தின் உச்சியில் இருந்து எட்டெழுத்து மந்திரத்தின் பெருமைதனை பறை  சாற்றினார் ராமானுஜர்.

ஐந்தெழுத்தின் மந்திர சக்தியை நமசிவாய என்று சொல்லி பல அற்புதங்களைச் செய்து தமிழ் கூறு நல்லுலகத்தை சைவ நெறியில் திருப்பினர் அப்பர், சம்பந்தர், சுந்தர மாணிக்க வாசகர் முதலானோர்.

 

ஓம் சரவண பவ என்று சொல்லி ஆறெழுத்தின் மந்திர சக்தியை உலகிற்கு நிலை நாட்டினர் அருணகிரி நாதர், தேவராய சுவாமிகள் முதலானோர்.

 

கம்பன் பாடிய ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் இரணியன் வதைப் படலத்தில் பிரஹலாதன் வாயிலாக எட்டெழுத்து மந்திரத்தின் மஹிமையை கம்பன் சொல்லும் அழகு தனி அழகு. கம்பன் வழி தனீ,,,,,,,,,,,,,,,,,, தனி வழி!

 

கம்பன் பாடல் ஒவ்வொன்றையும் மென்று, கடித்து, சுவைத்து, ரஸித்துப் படிக்க வேண்டும்.

 


சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது,
சொற்புதிது, சோதிமிக்க
நவகவிதை’

 

என்று பாரதி சொன்னானே அது பாரதி கவிதைக்கும் பொருந்தும்; கம்பன் கவிதைக்கும் பொருந்தும்.

 

இதோ எட்டெழுத்து மந்திரப் பாடல்கள்:

இரணியன், அவனுடைய மகனான பிரஹலாதனை, ஓம் நமோ ஹிரண்யகஸிபே நமஹ என்று சொல்ல வேண்டும் என்று கட்டளையிடுகிறான். இதற்காக ஒரு பிராஹ்மண வாத்தியாரையும் அமர்த்தி பாடம் சொல்லிக்  கொடுக்கிறான். அவனோ மீண்டும் மீண்டும் ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்தை உச்சரிக்கிறான். ஆசிரியர் ஐயாவுக்கு குலை நடுக்கம் எடுத்தது. உடனே ஓடிப்போய் ஹிரண்யகஸிபுவிடம் உண்மையை உரைக்கிறார். அவர் நுவல்வதைக் கேட்டு பிரஹ்லாதனைப் பல வகைச் சித்திரவதைகளுக்கு உட்படுத்துகிறான். அவனும் அப்பர் என்னும் திருநாவுக்கரசர் மாமன்னன் மஹேந்திர பல்லவனின் சித்திரவதைகளில் இருந்து ஐந்தெழுத்து மந்திரம்ர சொல்லி தப்பியது போல, எட்டெழுத்து மந்திரம் சொல்லித் தப்பி விடுகிறான்.

 

அப்பொழுது இரணியன் நேரே வந்து தன் மகனை அடக்கப் பார்க்கிறான். அந்தக் கட்டத்தில் பிரஹலாதன் சொல்லுவான்:

 

 

 

காமம் யாவையும் தருவதும் அப்பதம் கடந்தால்

 

சேம வீடுறச் செய்வதும் செந்தழல் முகந்த

 

ஓம வேள்வியின் உறுபதம் உய்ப்பதும் ஒருவன்

 

நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய

 

கேட்டதை எல்லாம் கொடுப்பான்; அது அலுத்துப் போய் மோட்சம் வேண்டின் அதையும் தருவான்; யார் அவன்? சுவர்க்கம் போக ஹோமம் செய்யும்போது சொல்லும் பெயர் இருக்கிறதே! அதுதான்– நமோ நாராயணாய.

மண்ணின் நின்று மேல் மலர் அயனுலகு உறவாழும்

எண் இல் பூதங்களில் நிற்பனதிரிவன இவற்றின்

உள் நிறைந்துள கரணத்தின் ஊங்கு உள உணர்வும்

எண்ணுகின்றது இவ் எட்டு எழுத்தே பிறிது இல்லை

 

பொருள்

இந்த பூமி முதல் மேலேயுள்ள பிரம்ம லோகம் வரையுள்ள எல்லா உலகங்களிலும் இருக்கும் உயிரினங்களிலும் அறிவும் நினைப்பும் இந்த எட்டெழுத்துதான்.

 

முன்கண் டேவனும் நான் முகத்து ஒருவனும் முதலா

மக்கள் காறும் இம்மந்திரம் மறந்தவர் மறந்தார்

புக்குக் காட்டுவதரிது இது பொதுவுறக் கண்டார்

ஒக்க நோக்கினர் அலவர் இதன் நிலை உணரார்

பொருள்:

மூன்று கண் உடைய சிவனும் நான்கு முகம் உடைய பிரம்மாவும் முதலாக சாதாரண மனிதர் வரை யாராவது இந்த எட்டெழுத்துப் பெயரை மறந்தால் அவர்கள் இறந்தவர்களே இதன் மஹிமையை விரித்துச் சொல்ல இயலாது; சமய வேறுபாடின்றி நடு நிலையோடு பார்க்கும் விவேகம் உடையோருக்கு– ஞானிகளுக்கு– இதன் மஹிமை நன்கு விளங்கும்; கல்லாத மற்றவர் இதன் பெருமையை அறியார்.

 

இவ்வாறு பிரஹலாதன் விளக்கிக் கொண்டே போகிறான்.

கம்பன்   இ ந்தப் படலத்தில் ஓம், உபநிஷதம் முதலிய தத்துவங்களையும் விளக்குகிறான்.

 

ஒவ்வொரு பாடலையும் ஊன்றிப் படிப்போருக்கு ஆனந்தம் கிட்டும்.

 

–சுபம்–

மௌன நீரூற்றால் புரட்சி செய்த பெண்மணி!–1 (Post No.4959)

WRITTEN by S NAGARAJAN

 

Date: 29 April 2018

 

Time uploaded in London –  8-54 AM  (British Summer Time)

 

Post No. 4959

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பாக்யா 27-4-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள எட்டாம் ஆண்டு எட்டாம் கட்டுரை

மௌன நீரூற்றால் புரட்சி செய்த பெண்மணி!– 1

.நாகராஜன்

 

 

 

உலகையே அச்சுறுத்திய சீனாவின் டியாங்காங் – 1 (Tiangong-1) ஸ்பேஸ் லேப் ஒருவழியாக தென்பசிபிக் கடலில் 2-4-2018 திங்கள்கிழமையன்று காலையில் வெடித்துச் சிதறி விழுந்தது. விண்வெளியிலேயே அதன் பெரும்பாலான பாகங்கள் உருகி விட்டதென்றும் அது விழுந்ததால் யாருக்கும் எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை என்றும் சீனப் பிரதிநிதி கூறி விட்டார்.

விண்வெளி டிராமா முடிவடைந்தது! சுபம்!!

 

 

இப்படி விண்ணில் கூட மனிதனால் ஆபத்திற்கான வித்து இடப்படுவதானது அச்சமூட்டும் விஷயம்.

இந்த நேரத்தில் மண்ணில் சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைவிப்பதை எதிர்த்துப் பாடுபட்ட ஒரு அருமையான பெண்மணி பற்றி அறிய வேண்டியது அவசியமாகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த அவரது பெயர் ராக்கேல் கார்ஸன்.

(Rachel Carson)

 

 

பென்சில்வேனியாவில் 27-5-1907இல் அவர் பிறந்தார். அவரது தந்தை ஒரு டிராவலிங் சேல்ஸ்மென். ஆகவே பெரும்பாலும் வீட்டில் இருக்க மாட்டார்.

 

தாயோ ஒரு இசைப் பாடகி. மகளின் புத்தி கூர்மையைக் கண்டு வியந்த தாய், தனது பெண்ணை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். பணம் பெரிய பிரச்சினையாக இருந்தது. தங்களுக்குச் சொந்தமாக இருந்த நிலத்தை விற்றார். படிப்புக்கு வழி வகுத்தார்.

 

 

தாயிடமிருந்து மகளுக்கு வந்த அரிய குணம் – இயற்கையை நேசிப்பது. இயற்கைக்கு ஊறு விளைவிப்போரை அவரால் சிறுவயதிலிருந்தே பொறுக்க முடியாது. பொங்கி எழுவார்.

இது பின்னால் உலக மக்களுக்குப் பெரிய நன்மையைச் செய்தது!

 

 

எட்டாம் வயதிலேயே ராக்கேல் சின்னச் சின்னக் கதைகளை எழுத ஆரம்பித்தார். அந்தக் காலத்தில் நமது அம்புலிமாமா போல செயிண்ட் நிக்கலஸ் என்ற மாதப் பத்திரிகை ஒன்று குழந்தைகளுக்காக அமெரிக்காவில் வெளி வந்து கொண்டிருந்தது. அதை குடும்பத்தினர் படிப்பது வழக்கம்.

 

 

1918, மே மாதம் தனது 11ஆம் வயதில் ராக்கேல் ஒரு கதையை எழுதி அந்தப் பத்திரிகைக்கு அனுப்பி வைத்தார். அது நான்கு மாதங்கள் கழித்து பத்திரிகையில் வெளியானதோடு சன்மானமாக பத்து டாலரும் கிடைத்தது.

 

 

இரண்டே வருடங்களில் அவரது கதைகள் அனைவராலும் விரும்பிப் படிக்கப்படுக் கதைகளாக அமைந்தன.இதனால் மகிழ்ந்த பத்திரிகை நிர்வாகம் அவரது ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு செண்ட் அளிக்க முன் வந்தது.

 

27ஆம் வயதில் கல்லூரிப் படிப்பை ராக்கேல் முடித்த போது அவரது தந்தை 71ஆம் வயதில் இறந்தார்.

 

 

ரொமான்ஸ் அண்டர் தி வாட்டர் (Romance Under the Water) என்று மீன்களைப் பற்றி அவர் எழுதிய வானொலி உரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அவர் புகழ் எங்கும் பரவத் தொடங்கியது

அரசு வேலை ஒன்றும் அவருக்குக் கிடைத்தது. ஆகவே பணக் கவலை ஒழிந்தது. திருமணத்தைப் பற்றி அவர் சிந்திக்கவே இல்லை. தனியாகவே இறுதி வரை வாழ்ந்தார்.

 

1941இல் அவர் தனது முதல் புத்தகத்தை வெளியிட்டார். ஆனால் அப்போது ஜப்பான் அமெரிக்க துறைமுகமான பேர்ல் ஹார்பரில் தாக்குதலை நடத்தி அமெரிக்காவை உலகப் போரில் தீவிரமாக ஈடுபட வைத்தது. ஆகவே மக்களின் கவனம் முழுவதும் போரில் ஈடுபடவே யாரும் ராக்கேலின் புத்தகத்தைக் கவனிக்கவில்லை.

 

 

அடுத்து 1950இல் “சீ அரவுண்ட் அஸ்” (Sea Around Us)  என்ற அவரது புத்தகம் உலகளாவிய விதத்தில் கவனத்தை ஈர்த்தது. ஆறே மாதங்களில் இரண்டரை லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன.அத்துடன் பல விருதுகளும் மெடல்களும் அவரைத் தேடி வந்தன.

 

 

 

பேர்ல் ஹார்பர் தாக்குதலினால் மங்கி இருந்த அவரது முதல் புத்தகம் இப்போது வெளிச்சத்திற்கு வந்தது. மக்கள் அதையும் வாங்கிப் படித்தனர்.

ஆயிரக்கணக்கான மக்களை ராக்கேல் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களாக மாற்றினார்.

 

 

இயற்கையை உற்றுக் கவனித்து வந்த ராக்கேல் அதற்கு நாசம் விளைவிப்போரை எளிதில் இனம் கண்டார்.

மனிதர்கள் இயறிகையை அழிக்கலாமா, கூடாது என்று முடிவெடுத்த அவர் சைலண்ட் ஸ்பிரிங் – மௌன நீரூற்று – (Silent Spring) ழஎன்ற நூலை எழுதி செப்டம்பர் 1962இல் வெளியிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் கென்னடி நூலைப் படித்து வியந்தார். உலக மக்களின் அனைவரின் பார்வையையும் இது திருப்பியது. பெருத்த சர்ச்சையையும் தோற்றுவித்தது.

தமிழ்நாட்டில் ராஜாஜி கூட சுற்றுப் புறச் சூழல் கேட்டை எதிர்த்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்ட ஆரம்பித்தார்.

 

விஷயம் இது தான்:

டிடிடி (DDT) என்ற உரம் வயலில் பயன்படுத்தப்பட ஆரம்பித்தது. இதைப் பற்றிக் கவலை அடைந்த ராக்கேல் அதை எதிர்த்து தீவிர பிரசாரத்தில் இறங்கினார்.

 

1939இல் பால் முல்லர் (Paul Muller) என்பவர் DDT என்ற இரசாயனத்தை வயலில் பயிர்களை அழிக்கும் பூச்சிகளைக் கொல்லப் பயன்படுத்தலாம் என்றார். இதை ஏற்ற அமெரிக்க ராணுவம் 1943இல் நேப்பிள்ஸ் நகரில் இதைத் தெளித்தது. அதனால் அந்த நகரில் பத்து லட்சம் பேர் தொற்று வியாதியினால் பீடிக்கப்பட்டனர்.

 

DDT -ஐ கடவுள் தந்த வரபிரசாதம் என்று அரசும், அதைக் கண்டுபிடித்த முல்லரும் சொல்ல, இல்லை என்று எதிர்த்தார் ராக்கேல்.

 

1948 இல் DDT-ஐக் கண்டு பிடித்த முல்லருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. கொசுக்களை ஒழிக்க DDT அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் தெளிக்கப்பட்டது.

1959இல் 40000 டன்கள் DDT அமெரிக்கா முழுவதும் தெளிக்கப்பட அமெரிக்காவே கெமிக்கலினால் பாதிக்கப்பட ஆரம்பித்தது.

கொதித்து எழுந்தார் ராக்கேல்.

 

சைலண்ட் ஸ்பிரிங் நூலில் அமெரிக்காவின் நடுவில் இருப்பதாக ஒரு கற்பனை நகரத்தைப் படைத்தார். நகரமே நாசமானது – கெமிக்கலினால். ஆடு மாடுகள் அழிந்தன. மக்கள் மடிந்தனர். பறவைகள் ஒழிந்தன. தேனிக்கள் முற்றிலுமாகக் காணாமல் போனது. வயல்கள் வாடின. ஏரி, குளம், ஆறுகள் வறண்டன. மீன்கள் அழிந்தன. கறிகாய்களையே காணோம். மருத்துவர்கள் காரணம் தெரியாமல் விழித்தனர். மொத்தத்தில் சர்வ நாசம்.

இதற்குக் காரணம் மக்களே. கெமிக்கல்களை அவர்கள் ஆதரித்ததே இதற்குக் காரணம்.

 

 

அவர்களுக்கு ராக்கேல் ஒரு வேண்டுகோளை விடுத்தார். DDT பற்றி ஏதாவது செய்யுங்கள் என்றார். நூலைப் படித்த மக்கள் உத்வேகம் பெற்று எழுந்தனர். இது பற்றிய பலத்த விழிப்புணர்வு எழவே உலக மக்கள் உலகம் சுடுகாடாக ஆகக் கூடாது என்ற முடிவுக்கு வந்தனர்.

 

 

புத்தகத்தின் தாக்கத்தை உணர்ந்த அமெரிக்க அரசும் விழித்தெழுந்தது.

 

ஜனாதிபதி கென்னடியின் தலைமையிலான ஒரு விசேஷ குழு இதை ஆராய ஆரம்பித்தது. விளைவு என்ன? அடுத்து காண்போம்.

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் …

கி.மு.580இல் கிரேக்கத்தில் வாழ்ந்த பிதகோரஸ் உண்மையான சுத்தமான கணித மேதை என்று அழைக்கப்படுகிறார். நியூமராலஜி எனப்படும் எண் ஜோதிடத்தை முதலில் கண்டுபிடித்தவர் அவரே என்று எண் ஜோதிடர்கள் பெருமையாகக் கூறுவர். எண்ணே அனைத்துப் பொருள்களிலும் உள்ளது; கடவுள் எண்களை வைத்தே பிரபஞ்சத்தைப் படைத்துள்ளார்; எண்களே வடிவங்களையும் கருத்துக்களையும் கடவுளரையும் ராட்சஸர்களையும் ஆள்கிறது; எல்லாமே எண்கள் தான்!

இவையெல்லாம் அவர் கூறியவையே.

 

 

ஒன்று முதல் ஒன்பது முடிய உள்ள எண்களை வைத்தே அனைத்தையும் விளக்கி விடலாம் என்ற அவரது அபூர்வமான சித்தாந்தத்தை அவர் நிரூபித்துக் காட்டினார். பிதகோரஸ் தியரத்தைக் கண்டுபிடித்தார்.

 

 

பத்து என்ற எண்ணே சக்தி வாய்ந்தது என்று கூறிய அவர் அதன் சக்தி 4 என்ற எண்ணில் உள்ளது என்றார். அதன் காரணத்தையும் இப்படி விளக்கினார்: ஒன்று முதல் அடுத்தடுத்துள்ள எண்களைக் கூட்டினால் வருவது 10; அதாவது 1+2+3+4 = 10. நான்கை ஒருவர் மீறினால் பத்தையும் அவர் மீற நேர்கிறது. ஆகவே பத்தின் சக்தி நான்கில் உள்ளது என்றார் அவர். இப்படி முக்கோணம், சதுரம் உள்ளிட்ட வடிவங்களைப் பற்றிய அவரது விளக்கம்

அபூர்வமானவை. எண்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தால் எல்லாமே பிதகோரஸ் தான்!

***

 

MEN ARE SCOUNDRELS- ANECDOTES! (Post No.4958)

Compiled by London Swaminathan 

 

Date: 28 APRIL 2018

 

Time uploaded in London – 16-36 (British Summer Time)

 

Post No. 4958

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

BEHAVIOUR AND EATING ANECDOTES

GEORGE CHEYNE, A SCOTCH PHYSICIAN, WHEN A PERSON WAS TALKING ABOUT THE EXCELLENCE OF HUMAN NATURE, EXCLAIMED:

“HOOT, HOOT, MAN!

HUMAN NATURE IS A ROGUE AND A SCOUNDREL, OR WHY SHOULD IT PERPETUALLY STAND IN NEED OF LAWS AND OF RELIGION”

 

XXX

 

EATING

At a certain dinner party Daniel Webster found himself preyed upon by hat type of hostess who endlessly and mercilessly worries her guests with the insistence that they are not eating enough, that possibly they do not like this or that, will they not have more, is there anything else they would prefer, and so forth.

 

“You are hardly eating a thing, Mr Webster”, she protested for the umpteenth time.

“Madam”, said Webster solemnly, “permit me to assure you that I sometimes eat more than at other times but never less”.

 

xxx

 

Time to eat!

Bishop Davidson of Winchester was once one of a party of ecclesiastics who went into dinner after a religious conference. One of the others observed in a tone of pompous self-righteousness, “This is the time to put a bridle on our appetites”.

No, returned the bishop, “this is the time to put a bit in our mouths”.

 

xxx

Why did I come to Africa?

 

“Why did I come to Africa?” Cecil Rhodes once remarked to a friend, “Well they will tell you that I came on account of my health or from love of adventure – and to some extent that may be true, but the real fact is that I could no longer stand their eternal cold mutton”.

 

xxx

Strawberries and Prunes!

In his early boarding-house days, in Kansas city, Eugene Field was invited to dine at a hospitable house where the best of everything was to be found. Some delicious strawberries were passed. Filed gazed at them longingly but shook his head.

“Why, Mr Field”, said his host in surprise, “ don’t you like strawberries?”

I dote on them.

Then why don’t you take some?

“I am afraid”, said the poet sadly, “that if I did, they would spoil my appetite for prunes”.

xxx

Charles Lamb

Thomas Hood, tempting Charles Lamb to dine with his said, “We have a hare”.

“Ad how many friends”, anxiously inquired Lamb.

 

xxx

Alfred Hitchcock

Alfred Hitchcock is a man notably fond of food. He is said to have once been a guest at a rather sparsely furnished dinner table, which had yielded him no more than a small portion of one thing or another amounting to a totally unsatisfactory sum. As the coffee was being brought in, his host said, “I do hope that you will soon dine here again”.

“By all means”, said Hitchcock. “Let us start now”

–Subham–

ராமன் பற்றி ராவணன் கிண்டல்/பரிஹாசம் (Post No.4957)

Written by London Swaminathan 

 

Date: 28 APRIL 2018

 

Time uploaded in London – 14-37 (British Summer Time)

 

Post No. 4957

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

ராமன் பற்றி ராவணன் கிண்டல்/பரிஹாசம் (Post No.4957)

இராம பிரானின் வீரத்தையும் புகழையும் சொல்லி, அவன் திருமாலின் அவதாரம், ஆகையால் சீதையை ஒப்படைப்பதே நன்மை பயக்கும் என்று விபீஷணன் புத்திமதி சொல்கிறான் இராவணனுக்கு.

அதற்கு இராவணன் வெடிச் சிரிப்பு சிரித்துவிட்டு,  சில பாடல்களில் இராம பிரானைக் கிண்டல் செய்கிறான்; சுவையான பாடல்கள்.

 

இவை யுத்த காண்டத்தில் இராவணன் மந்திரப் படலத்தில் உள்ள பாடல்கள்.

இந்திரன் தனை இருஞ்சிறையிட்ட நாள் இமையோர்

தந்தி கோடு இறத் தகர்த்த நாள் தன்னை யான் முன்னம்

வந்த போர் தொறும் துரந்த நாள் வானவர் உலகை

சிந்தவென்ற நாள் சிறியன் கொல் நீ சொன்ன தேவன்

 

பொருள்:

ஏ விபீஷணா! நீ சொன்னாயே ஒரு தேவன், அவன் நான் இந்திரனைச் சிறையில் வைத்தபோது வரவில்லை; தேவரின் யானையான ஐராவதத்தின் கொம்புகளை (தந்தம்) முறித்த போதும் வரவில்லை; அது போகட்டும்; திருமாலையே நான் புறமுதுகு காட்டி ஓட வைத்தேனே அப்போதும் வரவில்லை; தேவர்கள் உலகத்தை நான் வென்றபோது அவர்கள் பயந்து ஓடினர். அப்போதும் வரவில்லை. ஒருவேளை நீ சொன்ன தேவன் பச்சைக் குழந்தையாக இருந்தானோ!!

 

 

இன்னொரு பாட்டில் “அட, உன் திருமால், ஆயிரம் தோள்– ஆயிரம் கைகளை எடுத்தவனாயிற்றே! ஓரடிக்குள் பூமியை அளந்தானே.  அதெல்லாம் சிறுமையுடையது என்று கருதி இப்பொழுது நாம் உணவாக உண்ணும் மனித வடிவத்தை எடுத்தானோ!” என்று பரிஹாசம் செய்கிறான்.

ரிக்வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் உள்ள புகழ் மிகு புருஷசூக்தம்

என்னும் துதியில் “ஸஹஸ்சீர்ஷா புருஷஹ, ஸஹஸ்ராக்ஷ ஸஹஸ்ரபாத்”- என்று விஷ்ணு புகழப்படுகிறான் (ஆயிரம் தலை, ஆயிரம் கண், ஆயிரம் கால்). இன்னொரு துதியில் மூன்று அடி எடுத்த த்ரிவிக்ரம அவதாரம் பற்றி வருகிறது. இவை எல்லாம் கம்பனுக்கு அத்துபடி.

பகவத் கீதையில் கண்ணன் எடுத்த விஸ்வரூபத்திலும் இப்படிப்பட்ட வருணனை உண்டு.

ஆயிரம் பெருதோள்களும் அத்துணைத் தலையும்

மாயிரும் புவி உள்ளடி அடக்குறும் வடிவும்

தீய சாலவும் சிறிது என நினைத்து நாம்தின்னும்

ஓயும் மானுட உருவுகொண்டனன் கொலாம் உரவோம்

இதே காண்டத்தில் ஓம், உபநிஷதம் ஆகியவற்றின் பெருமையையும் விளக்குகிறான்.

 

 

இதில் இன்னொரு விசயத்தையும் இந்த காண்டத்தில் கம்பன் திரும்பத் திரும்ப சொல்லி வருகிறான். வேதம் படித்தாலும், வீணை வாசித்தாலும், தங்கக் கோட்டையில் வசித்தாலும் அரக்கர் இனம் மனிதர்களைத் தின்னும் (CVANNIBALS) இனம் என்பதாகும்

 

இக்கால வெள்ளையர்களை இராவணனுக்கு ஒப்பிடலாம்; எவ்வளவுதான் ராக்கெட் விட்டாலும் அணுகுண்டு வெடித்தாலும், பொருளாதாரத்தில் முன்னிலையில் இருந்தாலும் மேலை நாடுகள் பெட்ரோலியம் கொடுக்காத நாடுகள் மீது பொய்க் குற்றம் சாட்டி குண்டு மழை பொழிவதையும்,பெட்ரோலியம் கொடுக்கும் துலுக்க நாடுகளில் அடிப்படை உரிமையே இல்லாத போதும் அவைகளைக் கண்டுகொள்ளாமல் அவைகளுக்கு ஆயுதம் விற்பதையும் இராவண ஆட்சியுடன் ஒப்பிடலாம்.

அதுமட்டுமல்ல; சென்றவிடமெல்லாம் பழங்குடி மக்களை பறவைகளைச் சுடுவது போலச் சுட்டுத் தள்ளினர்; சிலர் அந்த நர மாமிசத்தை தின்னவும் செய்தனர்!

கடைசியாக ராவணன்  கூறுவது இன்னும் பகடி செய்கிறது:

பித்தன் ஆகிய ஈசனும் அரியும் என்பெயர்கேட்டு

எய்த்த சிந்தையர் ஏகுழி ஏகுழி எல்லாம்

கைத்த ஏற்றினும் கடவிய புள்ளினும் முதுகில்

தைத்த வாளிகள் நின்றுள குன்றின் வீழ் தடித்தின்

 

 

பொருள்:

என் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் பைத்தியக்காரனான சிவனும் திருமாலும் காளையிலும், கருடனிலும் ஏறி ஓடிப்போயினர். அப்போது நான் விட்ட அம்புகள், மலையில் இடி விழுந்த தடம் போலத் தழும்பேறிக் கிடக்கின்றன.

 

இவ்வாறு இராவணன் கிண்டல் செய்தவுடன், விபீஷணன் பதில் தருகிறான். அண்ணா! உன்னைவிட வலிமை படைத்ட் இரணியன் கதை கேள் என்று இரணியன் வதைப் படலத்தைச் சொல்கிறான். அது மிகவும் சுவையான பாடல்கள் கொண்ட பகுதி; தனிக் கட்டுரையில் தருகிறேன்.

–சுபம்–

கம்ப ராமாயண யுத்த காண்டப் பொன்மொழிகள் (POST No.4956)

கம்ப ராமாயண யுத்த காண்டப் பொன்மொழிகள் (POST No.4956)

 

மே 2018 நற்சிந்தனை காலண்டர்

 

 

COMPILED by London Swaminathan 

 

Date: 28 APRIL 2018

 

Time uploaded in London – 8-43 am (British Summer Time)

 

Post No. 4956

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

மே 2018 காலண்டர்

(2018 சித்திரைவைகாசி மாத நற்சிந்தனை காலண்டர்;

விளம்பி காலண்டர்)

 

முக்கிய விழாக்கள் – 28-  வைகாசி விசாகம்; அக்னி நட்சத்திரம் ஆரம்பம் -4 முடிவு– 28; 10-ஹனுமான் ஜயந்தி (தெலுங்கு தேசம்); பாங்கு விடுமுறை திங்கள்-7 AND 28. 

பௌர்ணமி– – 29; அமாவாசை– –  15; ஏகாதஸி விரதம்—11, 15

சுப முகூர்த்த தினங்கள்:- 2, 4, 6, 7, 13, 20, 25, 27

 

 

 

 

மே 1 செவ்வாய்க்கிழமை

 

ஒன்றெ என்னின் ஒன்றேயாம்

பல என்று உரைக்கின் பலவேயாம்

அன்றே என்னின் அன்றேயாம்

ஆமே என்னின் ஆமேயாம் (கடவுள் பற்றி கம்பன்)

 

மே 2 புதன்கிழமை

கங்குல் பொழுதும் துயிலாத

கண்ணன் கடலைக் கண்ணுற்றான் ( இரவிலும் கூட தூங்காத ராமன் கடலைக் கண்டான்.)

 

மே 3 வியாழக்கிழமை

முழுப்பெருந்தனி முதல் உலகின் முந்தையோன் (படைப்புக் கடவுளான பிரம்மா பற்றி கம்பன்)

 

மே 4 வெள்ளிக்கிழமை

பண்டிதர் பழையவர் கிழவர் பண்பினர்

தண்டலில் மந்திரத் தலைவர் சார்க (அறிஞர், நீண்ட நாள் பழகியவர், சுற்றத்தார், பண்புடையோர், நல்ல ஆலோசனை கூறும் அமைச்சர்கள் வருக என ராவணன் ஆணையிட்டான்)

 

 

மே 5 சனிக்கிழமை

உலங்கும் நம்மேல் வரின் ஒழிக்கற்பாலதோ (எதிரிகளை ஒழிக்காவிட்டால் கொசு வந்தால் கூட நம்மால் அதை விரட்ட முடியாது)

 

மே 6 ஞாயிற்றுக் கிழமை

வெள்ளியம் கிரியினை விடையின் பாகனோடு (சிவன் பற்றிக் கம்பன்; வெள்ளிமலை- கயிலை, விடை-ரிஷப வாஹனம்)

 

மே 7 திங்கட்கிழமை

மண்ணியல் மனிசரும் குரங்கும் மற்றவும்

உண்ணிய மைந்தன உணவுக்கு (மனிதர்கள், குரங்கு, ஏனைய விலங்குகள் எல்லாம் நாம் சாப்பிட அல்லவா படைக்கப்பட்டுள்ளது; அரக்கர் சொல்லுவது)

 

மே 8 செவ்வாய்க்கிழமை

 

நீ அயன் முதல் குலம் இதற்கு ஒருவன் நின்றாய்

ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்தறிவு அமைந்தாய்

(ராவணா! நீ பிராமணன்; பிரம்மன் முதல் தோன்றிய நம் குலத்தில் நீ ஒப்பற்றவன்; ஆயிரம் கிளைகள் (ஷாகா) கொண்ட சாம வேதத்தை அறிந்தவன்)

 

மே 9 புதன்கிழமை

ஆசில் பரதாரம் அவை அம் சிறை அடைப்பேம்

மாசில்புகழ் காதலுறுவேம் வளமை கூரப்

பேசுவது மானம் இடை பேணுவதும் காமம்

கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம்

(மாற்றான் மனைவியை சிறை வைப்போம்; புகழை விரும்புவோம்;வீ ரம் பேசுவோம்; காமத்துடன் உலவுவோம்; ஆனால் வலிமை அற்ற மனிதரைக் கண்டு பயப்படுகிறோம்!நன்றாக இருக்கிறதப்பா!)

 

மே 10 வியாழக்கிழமை

யானை இலர் தேர் புரவி யாதும் இலர் ஏவும்

தானை இலர் நின்ற தவம் ஒன்றும் இலர் தாமோ

கூனல் முதுகின் சிறு குரங்கு கொடு வெல்வார்

ஆனவரும் மானுடர் நம் ஆண்மை இனிது அன்றோ

 

யானை, தேர், குதிரைப்படையோ, ஆயுதங்களோ இல்லாமல் கூன்முது கொண்ட குரங்கின் மேல் ஏறி வரும் மனிதர்கள் நமக்கு உணவாக வேண்டியவர் ஆவர். இவர்கள் ஜெயிப்பார் என்று சொல்வது நல்ல அழகப்பா!!)

 

மே 11 வெள்ளிக்கிழமை

கோநகர் முழுவதும் நினது கொற்றமும்

சானகி எனும் பெயர் உலகின் தம்மனை

ஆனவள் கற்பினால் வெந்தது (ராவணா, குரங்கு சுட்டதால் இலங்கை தீப்பற்றியது என்று எண்ணாதே; சீதையின் கற்புதான் எரித்தது – வீடணன் கூற்று)

 

மே 11 வெள்ளிக்கிழமை

உயர்வு மீட்சியும்

பெண்பொருட்டு அன்றியும் பிறிது உண்டாம் எனின்

மண்பொருட்டு அன்றியும் ,வரவும் வல்லவோ (பெண்ணினால் வீழ்ச்சி வராவிடில் மண்ணினால்  அழிவு வரும்; வேறு காரணம் உண்டா? வீடணன் கேள்வி))

 

மே 12 சனிக்கிழமை

 

நாலு தோள் நந்திதான் நவின்ற சாபத்தால்

கூல வான்குரங்கினால் குறுகும் கோள் அது

வாலிபால் கண்டனம் (நந்தி இட்ட சாபத்தால் குரங்கினால் உனக்கு அழிவு வரும் என்பதை வாலி யிட்ட சண்டையால்தால் அறிந்தாம்)

 

மே 13 ஞாயிற்றுக் கிழமை

தீயிடைக்குளித்தவத் தெய்வக் கற்பினாள்

வாயிடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ (தீக்குளித்த வேதவதி இட்ட சாபத்தை தடுக்கும் வல்லமை நமக்கு உண்டா? வீடணன் கேள்வி))

 

 

மே 14 திங்கட்கிழமை

அடல்படைத்து அவனியை பெருவளம்தருக என்றருளினானும்

கடல்படைத்தவரொடும் கங்கை

தந்தவன் வழிக்கடவுள் மன்னன் ( பூமியை வென்று வளம் கொடு என்று கட்டளையிட்ட பிருதுவும், கடலை உண்டாக்கிய சகரரும், கங்கையைக் கொடுணர்ந்த பகீரதனும் உதித்த சூரிய குலத்தில் வந்தவன் தசரதன்)

 

 

மே 15 செவ்வாய்க்கிழமை

ஈசனின் பெறு படைக்கலம்

இமைப்பு அளவில் எவ்வுலகில் யாவும்

நாசம் உற்றிட நடப்பன

கொடுத்தன பிடித்துடையர் நம்ப ( நொடிப் பொழுதில் எல்லாவற்றையும் அழிக்கும் ஆயுதங்களைக் கோசிகன் சிவனிடம் இருந்து பெற்று அவர்களுக்கு  அளித்தான்.)

 

மே 16 புதன்கிழமை

தெறு சினத்தவர்கள் முப்புரம்

நெருப்புற உருத்து எய்த அம்பும்

குறுமுனிப்பெயரினான் நிறைதவர்க்கு

இறைதரக் கொண்டு நின்றார் (ராமன் கையில் உள்ள ஆயுதங்கள் சிவன் கொடுத்த அம்பு, திருமாலின் வில்;அகத்தியவர் கொடுத்தவை)

 

மே 17 வியாழக்கிழமை

குலத்த கால் வயநெடுங் குதிரையும்

அதிர் குரல் குன்றும் இன்று

வலத்த கால் முந்துறத் தந்து நம்

மனையிடைப் புகுவ மன்னோ (குதிரைகளும் யானைகளும் வலது காலை வைத்து வீட்டிற்குள் வருகின்றன; தீய சகுனம்; அதாவது வீரர்கள் கைவிட்ட மிருகங்கள் மட்டும் திரும்பி வருகின்றன)

 

மே 18 வெள்ளிக்கிழமை

அசைவில் கற்பின் அவ் அணங்கை விட்டருளுதி இதன் மேல்

விசையம் இல் எனச் சொல்லினன் அறிஞரின் மிக்கான் (மாறாத கற்புடைய தெய்வப் பெண்ணாகிய சீதையை ராமனிடம் திருப்பி அனுப்பு; அதுவே வெற்றிதரும்– வீடணன் புத்திமதி)

 

மே 19 சனிக்கிழமை

 

வந்த போர்தொறும் துரந்த நாள் வானவர் உலகை

சிந்தவென்ற நாள் சிறியன் கொல் நீ சொன்ன தேவன் (ராமன் பற்றி ராவணன் கிண்டல்: இந்திரன், விஷ்ணு, தேவர்கள் ஆகியோரை ஒவ்வொரு போரிலும் ஓட ஓட விரட்டினேன்; அப்போதெல்லாம் நீ புகழும் ராமன் சின்னப் பயலாக இருந்தானோ?)

 

மே 20 ஞாயிற்றுக் கிழமை

 

ஒற்றை அண்டத்தின் அளவினோ அதன் புறத்து உலவா

மற்றை அண்டத்தும் தன் பெயரே சொல வாழ்ந்தான் (இரணியன் பெயர் இந்த அண்டத்தில் மட்டும் இன்றி பிற அண்டங்களிலும் பரவியது;தமிழர்களின் வானியல் அறிவினைக் காட்டும் பாடல்)

 

 

மே 21 திங்கட்கிழமை

வேதத்தின் உச்சியின் மெய்ப்பொருட் பெயரினை விரித்தான் (வேதத்தின் உச்சியான உபநிடதத்தில் கூறப்படும் உண்மைக் கடவுளின் பெயரினை (பிரகலாதன்) கூறினான்

 

 

மே 22 செவ்வாய்க்கிழமை

என்னை உய்வித்தேன் எந்தையை யுய்வித்தேன் இனைய

உன்னை உய்வித்து இவ்வுலகையும் உய்விப்பான் அமைந்து

முன்னை வேதத்தின் முதற் பெயர் மொழிவது மொழிந்தேன்

என்னை குற்றம் நான் இயம்பியது இயம்புதி என்றான் (ஆசிரியரிடம் பிரகலாதன் சொன்னது: என்னையும், என் தந்தையையும், உங்களையும் ,உலகில் உள்ள எல்லோரையும் ஈடேறச் செய்யும், ஓம் எனும் வேதத்தின் முதல் எழுத்து உணர்த்தும் ஒருவன் பெயரைத்தானே- ஓம் நமோ நாராயணாய- நான் சொன்னேன்; இது ஒரு குற்றமா? சொல்லுங்கள்)

 

மே 23 புதன்கிழமை

 

காடு பற்றியும் கனவரை பற்றியும் கலைத்தோல்

மூடி பற்றியும் முண்டித்தும் நீட்டியும் முறையால்

வீடு பெற்றவர் பெற்றதின் விழுமிது என்றுரைக்கும்

மாடு பெற்றெனென் மற்று இனி என் பெற வருந்தி (முனிவர் தோற்றம்: காடு,மலையில் வாழ்வர்-மான் தோல் அணிவர்-முடியை மழிப்பர், வளர்ப்பர்- மோட்சத்தை அடைவர்- அதைவிடப் பெரிய செல்வம் எனக்குக் கிடைத்தது-பிரகலாதன் செப்பியது)

 

மே 24 வியாழக்கிழமை

காமம் யாவையும் தருவதும் அப்பதம் கடந்தால்

சேம வீடுறச் செய்வதும் செந்தழல் முகந்த

ஓம வேள்வியின் உறுபதம் உய்ப்பதும் ஒருவன்

நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய (கேட்டதை எல்லாம் கொடுப்பான்; அது அலுத்துப் போய் மோட்சம் வேண்டின் அதையும் தருவான்; யார் அவன்? சுவர்க்கம் போக ஹோமம் செய்யும்போது சொல்லும் பெயர் இருக்கிறதே! அதுதான்– நமோ நாராயணாய)

 

மே 25 வெள்ளிக்கிழமை

அரவின் நாமத்தை எலி இருந்து ஓதினால் அதற்கு

விரவு நன்மை என் துன்மதி விளம்பு என வெகுண்டான்( பிரகலாதனிடம் இரணியன் விளம்பியது: பாம்பின் பெயரை எலி இடைவிடாது ஓதினால் அதற்கு என்ன நன்மை கிடைக்கும்? சொல்)

 

 

மே 26 சனிக்கிழமை

வித்து இன்றி விளைவது ஒன்றில்லை வேந்த நின்

பித்து இன்றி உணர்தியேல் அளவைப் பெய்குவேன் (பிரகலாதன் மொழிவது: அரசனே, விதை இல்லாமல் மரம் முளைக்காது; நீ பைத்தியம் தெளிந்து கேட்பாயின் தத்துவப் பொருளை அறியும் வழியைச் சொல்வேன்)

 

மே 27 ஞாயிற்றுக் கிழமை

உபநிடதங்கள் ஓதுவ

கிளவிஆர் பொருள்களான் கிளக்குறாதவன்

களவை யார் அறிகுவார் மெய்ம்மை கண்டிலார் ( உபநிடதச் சொற்களால் விளக்கமுடியாதவன்; அவன் தன்மையை யார் அறிவார்? யாரும் கண்டதில்லை)

மே 28 திங்கட்கிழமை

 

முந்தை ஓரெழுத்து என வந்து மும்முறைச்

சந்தியும் பதமுமாய்த் தழைத்த தன்மையான் (ஓம் அவன்; அ, உ, ம சந்தி அவன்)

மே 29 செவ்வாய்க்கிழமை

ஆலமும் வித்தும் ஒத்து அடங்கும் தன்மையான் -(ஆலமரத்தையும் அதைத் தன் சிறிய விதைக்குள் அடக்கியது போல பிரபஞ்சத்தை அன்னுள் கொண்டவன்)

 

மே 30 புதன்கிழமை

ஓம் எனும் எழுத்து அதனின் உள் உயிர்

ஆம் அவன் அறிவினுக்கு அறிவும் ஆயினான் (ஓம் எனும் எழுத்தும், அதிலுள்ள அ,உ, ம, வில், அகார உயிராக உள்ளான்)

 

மே 31 வியாழக்கிழமை

கன்று புல்லிய கோள் அரிக்குழு எனக்

கனக்கின்ற தறுகண்ணார் ( குட்டி யானையை சிங்கக் கூட்டம் சூழ்ந்துகொண்டது போல, அரக்கர்கள் பிரகலாதனைச் சுற்றி வளைத்தனர்)

 

–SUBHAM–

பாரதி போற்றி ஆயிரம் – 83 (Post No.4955)

Compiled by S NAGARAJAN

 

Date: 28 April 2018

 

Time uploaded in London –  8-02 AM  (British Summer Time)

 

Post No. 4955

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 83

  பாடல்கள் 742 முதல் 778

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

புலவர் கு.ப. பெருமாள் இயற்றிய       பாரதியின் “பா”ரதம்

இந்த பாரதியாரின் வரலாற்று நூலில் பல அத்தியாயங்கள் உள்ளன. நூலை முழுவதுமாகத் தர இயலாத நிலையில் தேர்ந்தெடுத்த கவிதைகள் இங்கு அளிக்கப்படுகின்றன. இங்கு மதுரையில் மாகவி என்ற அத்தியாயத்தில் உள்ள 18 பாடல்களையும் சுதேசமித்திரனில் துணையாசிரியர் என்ற அத்தியாயத்தில் 19 பாடல்களையும் படித்து மகிழலாம். நூலின் பக்கங்களை அப்படியே காணலாம்.

இணைப்பாகத் தரப்படுபவை :

மதுரையில் மாகவி – 18 பாடல்கள்

சுதேசமித்திரனில் துணையாசிரியர் – 19 பாடல்கள்

 

 

தொகுப்பாளர் குறிப்பு:
புலவர் கு.பொ.பெருமாள் பல்வேறு சந்தங்களில் மரபு நிலை மாறாது பாடல்களை யாத்துள்ளார்.

இவரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மாவட்டம் புளியம்பட்டியில் இருக்கும் புலவர் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.

கவிஞர் கு.பொ.பெருமாள் அவர்களுக்கும் புலவர் பதிப்பக உரிமையாளருக்கும் நமது நன்றி

***