செப்டம்பர் 2017 காலண்டர் (Post No.4176)

30 ஆழமான கருத்துடைய பழமொழிகள்

compiled by London Swaminathan

 

Date: 30 August 2017

 

Time uploaded in London- 16-59

 

Post No. 4176

 

4-ஓணம், 6-மாளயபட்சம் ஆரம்பம்,19-மஹாளய அமாவாசை,11 பாரதி நினைவு தினம்,

6-யஜூர் உபாகர்மா,21– நவராத்ரி ஆரம்பம் 28- சரஸ்வதி பூஜா, 30-விஜயதசமி,30- தசரா

பௌர்ணமி 6

சுபமுகூர்த்த நாட்கள்- 4, 8, 15

ஏகாதசி – 1 or 2, 16

 

 

செப்டம்பர் 1 வெள்ளிக்கிழமை

வைகறைத் துயில் எழு

 

செப்டம்பர் 2 சனிக்கிழமை

 

விஷத்துக்கு விஷம் மாற்று

செப்டம்பர் 3 ஞாயிற்றுக் கிழமை

 

ஆலும் வேலும் பல்லுல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

செப்டம்பர் 4 திங்கட் கிழமை

இலங்கணம் (பட்டினி கிடத்தல்) பரம ஔஷதம்

செப்டம்பர் 5 செவ்வாய்க்கிழமை

கண்கெட்ட பிறகா சூரிய நமஸ்காரம்?

செப்டம்பர் 6 புதன் கிழமை

பொன்னாங்கண்ணிக்குப் புளியிட்டு ஆக்கினால் உண்

ணாப் பெண்ணும் ஒரு உழக்கு உண்ணும்

செப்டம்பர் 7 வியாழக்கிழமை

ஈயான் தோட்டத்து வாழை இரண்டு குலை தள்ளும்

செப்டம்பர் 8 வெள்ளிக்கிழமை

அகங் குளிர முகம் மலரும்

 

செப்டம்பர் 9 சனிக்கிழமை

சுத்தம் சோறு போடும்

 

செப்டம்பர் 10 ஞாயிற்றுக் கிழமை

அன்ன தானத்துக்குச் சரி, என்ன தானம் இருக்கிறது?

செப்டம்பர் 11 திங்கட் கிழமை

அன்றைக்குத் தின்கிற பலாக் காயை விட இன்றைக்குத் தின்கிற

களாக்காய் பெரிது

செப்டம்பர் 12 செவ்வாய்க்கிழமை

வாய் நல்லதானால் ஊர் நல்லது

செப்டம்பர் 13 புதன் கிழமை

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

 

செப்டம்பர் 14 வியாழக்கிழமை

 

ஊமைக்கு உளறுவாயன் சண்டப்பிரசண்டன்.

 

செப்டம்பர் 15 வெள்ளிக்கிழமை

 

வைகுண்டத்துக்குப் போகிறவனுக்கு வழிகாட்டிக் கொடுக்க வேண்டுமா?

 

செப்டம்பர் 16 சனிக்கிழமை

பாலுக்குச் சீனி இல்லை என்பார்க்கும் கூழுக்கு உப்பு இல்லை என்பார்க்கும் விசாரம் ஒன்றே

 

செப்டம்பர் 17 ஞாயிற்றுக் கிழமை

 

ஓசிப் பொடி வாங்கி நாசியில் போட்டால், காசிக்குப் போனாலும் கருமம் தொ லையாது.

 

 

செப்டம்பர் 18 திங்கட் கிழமை

தன் ஊருக்கு ஆனை அயலூருக்குப் பூனை

 

செப்டம்பர் 19 செவ்வாய்க்கிழமை

 

ஈட்டி எட்டின மட்டும் குத்தும், பணம் பாதாளம் மட்டும் பாயும்

 

செப்டம்பர் 20 புதன் கிழமை

அலை மோதும்போதே தலை முழுகு; காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்

 

செப்டம்பர் 21 வியாழக்கிழமை

உட்கார்ந்தல்லவோ படுக்க வேண்டும்

 

செப்டம்பர் 22 வெள்ளிக்கிழமை

அடியாத மாடு பணியாது

 

செப்டம்பர் 23 சனிக்கிழமை

பிச்சையிட்டுக் கெட்டவனும் இல்லை பிள்ளை பெற்றுக் கெட்டவளும் இல்லை

 

 

செப்டம்பர் 24 ஞாயிற்றுக் கிழமை

அம்பட்டன் குப்பையைக் கிளறினால் அத்தனையும் மயிரே

 

செப்டம்பர் 25 திங்கட் கிழமை

பனங்காட்டு நரி சலச்லப்புக்கு அஞ்சாது

 

செப்டம்பர் 26 செவ்வாய்க்கிழமை

 

கொல்லவரும் யானை மீது கல்லை விட்டு  எறியாதே

செப்டம்பர் 27 புதன் கிழமை

குரங்கின் கையில் கொள்ளி அகப்பட்ட கதை

 

 

செப்டம்பர் 28 வியாழக்கிழமை

கன்று கெட்டால் காணலாம் தாயருகே

செப்டம்பர் 29 வெள்ளிக்கிழமை

 

கழுதை கெட்டால் குட்டிச் சுவர்

செப்டம்பர் 30 சனிக்கிழமை

கனவில் கண்ட கத்தரிக்காய் கறிக்காகுமா?

 

—-Subham–

 

பூர்வ குடியினரின் ஆத்திரமும் ஒரு விஞ்ஞானியின் திகைப்பும்! (Post No.4175)

Written by S.NAGARAJAN

 

Date: 31 August 2017

 

Time uploaded in London-11-43 am

 

Post No. 4175

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

by ச.நாகராஜன்

 

 

அனுபவம் பேசுகிறது

பூர்வ குடியினரின் ஆத்திரமும் ஒரு விஞ்ஞானியின் திகைப்பும்!

 

ச.நாகராஜன்

 

லெப்டினண்ட் கர்னல் சிஷிர் கோகலே ராணுவத்தின் பாதுகாப்புத் துறையில் பல்லாண்டு பணியாற்றிய மூத்த டாக்டர். விஞ்ஞான மனப்பான்மை கொண்ட அவர் ஆதிவாசிகளின் “தாழ்ந்த” நிலைமையைக் கொண்டு வருத்தம் அடைந்தார்.

அவர்களை எப்படியேனும் “முன்னேற்ற” வேண்டும் என்று கங்கணம் பூண்ட அவர் தனது “நல்ல காரியத்தை” அந்தமான் தீவுகளில் ஆரம்பித்தார்.

 

நடந்தது என்ன?

 

அவரே தனது அனுபவத்தை ஒரு கட்டுரையில் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்.

 

அந்தமானில் வாழ்ந்து வந்த பூர்வ குடிகளின் குடிசைகள் மிக மோசமாக இருந்தன.அவை மரத்தால் ஆனவை. ஓலைகள் வேயப்பட்டவை. திடீர் திடீர் என்று பெய்யும் கனமழையாலும் வெயிலாலும் பழங்கால முறையிலான கற்களை அடுப்பாக வைத்து விறகை வைத்து சமைக்கும் முறையினாலும் குடிசைகள் பார்க்கச் சகிக்க முடியாதவையாக் இருந்தன.

அதனால் அங்கு வாழ்பவரின் கண்கள் சிவந்திருந்தன; சுவாசக் கோளாறுகள் வேறு இருந்தன.

 

இதை எப்படிப் போக்குவது?

 

தீவிர சிந்தனைக்குப் பிறகு  புகையற்ற ஸ்டவ்களை அங்கு சில குடிசைகளில் நிரமாணித்தார் கோகலே. அவர்கள் இருமுவது குறைந்தது. சமைக்கும் போது புகையினால் கண்களிலிருந்து பெருகும் நீர் குறைந்தது. பார்க்க சந்தோஷமான காட்சி. கோகலே மகிழ்ந்தார்.

 

இதைப் பார்த்த பூர்வ குடியினரில் ஏனையோரும் இந்தப் புதிய முறையை விரும்பி ஏற்றுக் கொண்டனர்.

 

ஒரு வருடம் கழிந்தது.

 

தாங்கள் நிறுவி ‘புது வழி’ காட்டியதால் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் கண்டு மிகிழ அங்கு சென்றார் கோகலே.

 

சந்தோஷமான முகங்களைக் காணப் போகிறோம் என்று சென்ற அவரது குழுவினருக்கு ஒரு திகைப்பூட்டுக் காட்சி காத்திருந்தது.

அங்கு கிராமத்தையே காணோம்.

 

திகைப்படைந்த அவர்கள் பூர்வ குடியினரைத் தேடி காட்டின் உட்பகுதிக்குச் சென்றனர்.

அங்கே புதிதாக அமைக்கப்பட்ட குடிசைகளில் அவர்கள் இருந்தனர்.

அவர்கள் அனைவரும் கோபத்துடன் கோகலே குழுவினரைச் சூழ்ந்து கொண்டனர்.

 

 

கோபமான குரலில், “ நீங்கள் எங்களுக்குப் பெரும் தீங்கு இழைத்து விட்டீர்கள். எங்கள் முன்னோர் எங்களுக்கு வலுவான வீடுகளை அமைத்துக் கொடுத்திருந்தனர். தலைமுறை தலைமுறையாக் அதில் வாழ்ந்து வந்தோம். அவற்றை ஒரே ஆண்டில் அழிக்க வகை செய்து விட்டீர்களே! உடனே இங்கிருந்து ஓடிப் போய் விடுங்கள்” என்று அவர்கள் கத்தினர்.

அனைவரும் திகைத்தனர்.

திகைப்புடன் திரும்பினாலும் அவர்களிடம் இருந்த விஞ்ஞான மனப்பான்மை அவர்களை பழைய குடிசைகளை நோக்கிப் போக வைத்தது.

 

அந்தக் குடிசைகளில் இருந்த மரங்கள் கறையானால் அரிக்கப்பட்டு உளுத்துப் போயிருந்தன. கூரை விட்டங்கள் வளைந்திருந்தன.பலவித பூச்சிகள் கட்டைகளையும் குடிசைப் பகுதிகளையும் விதம் விதமாக் ஆக்கிரமித்திருந்தன.

வாழவே முடியாத ஒரு கோரம்!

 

கொசுக்களும் பூச்சிகளும் குழுவினரைச் சூழ்ந்து கடிக்க உள்ளே அவர்கள் பார்த்த போது அவர்கள் தந்த புகையில்லா ஸ்டவ் மட்டும் அலங்காரமாக அப்படியே இருந்தது!

திகைப்பும் வியப்பும் ஆட்கொள்ள அவர்கள் தங்கள் கூடாரத்திற்குத் திரும்பினர்.

 

அப்போது வழியிலே அவர்களைப் பார்த்த பழங்குடியினரில் வயதான ஒருவர்,’என்ன கவலையுடன் இருக்கிறீர்களே! என்ன விஷயம்?” என்று கனிவாகக் கேட்டார்.

நடந்ததை எல்லாம் அவரிடம் சொல்ல அவர் உன்னிப்பாக அனைத்தையும் கேட்டார்.

 

 

“இன்று களைப்புடன் இருக்கிறீர்கள். மன உளைச்சல் வேறு.

ஆகவே நாளை உங்களுடன் நானும் வருகிறேன். அவர்களைப் பார்ப்போம்” என்றார் அவர்.

 

கோகலே குழுவினரைப் போல ஏராளமான “குழுவினரை”ப் பார்த்து விட்ட அனுபவம் அவர் முகத்தில் தெரிந்தது.

மறுநாள் அவரும் கூட வந்தார்.

பழைய குடிசைகளில் சிதிலமடைந்து கிடந்த கட்டைகள், சில பூச்சிகள், புழுக்கள் ஆகியவற்றை ஆய்வுக்காக சேர்த்தது விஞ்ஞானக் குழு.

 

“அவர்களுக்கு உதவவே முன் வந்தோம். அவர்களோ எங்களைத் தீய ஆவிகளைக் கொண்டு வந்து விட்டு விட்டோம் என்கிறார்கள். நீங்களும் ஒரு பழங்குடியினர் தானே. நாங்கள் தீய ஆவிகளையா இங்கு விட்டோம், சொல்லுங்கள்” என்று கேட்டார் கோகலே.

“இல்லை, நீங்கள் தீய ஆவிகளை இங்கு விடவில்லை” என்றார் அந்தப் பெரியவர்.

 

 

அவர் சொற்கள் சற்று ஆறுதல் அளித்தன.

“ஆனால் துரதிர்ஷ்டவசமாக இங்கிருந்த நல்ல ஆவிகளை நீங்கள் எடுத்துக் கொண்டு சென்று விட்டீர்கள்’ என்று தொடர்ந்து கூறினார் அவர்.

 

 

இதைக் கேட்ட குழுவினர் திகைத்தனர்.

 

அவர் தொடர்ந்தார்: “ தீ மூட்டி சமைப்பது புனிதமானது. அது நல்ல ஆவிகளையும் ஆரோக்கியத்தையும் தருகிறது. புகையும் சாம்பலும் குடிசை நீடித்திருக்க நமது உடலுக்கு உணவு போல அவசியமானது. புகையும் வெப்பமும் பூச்சிகள், கரையான் போன்ற தீய ஆவிகளை ஒண்ட விடாது. அந்த புகை என்ற நல்ல ஆவியை விரட்டி விட்டு கரையான் என்ற தீய ஆவிகளைத் தந்ததால் தான் அவர்கள் உங்கள் மீது கோபப் படுகிறார்கள்.இந்தக் குடிசைகளுக்குப் விறகு வைத்து கல்லினால் ஆன அடுப்பில் சமைப்பதே சிறந்த பாதுகாப்பு!”

 

 

படிப்பறிவே இல்லாத சாமானிய பூர்வீக பழங்குடிப் பெரியவரின் வார்த்தைகள் அவர்களை பிரமிக்க வைத்தன.

சிறிய வார்த்தைகள் மூலம் அரிய உண்மையை அவர்கள் உணர்ந்து கொண்டனர்.

 

அந்தக் கணம் முதல் படிப்பறிவில்லாதவன், பழங்குடி என்றெல்லாம் சொல்லி அவர்களை கேலி செய்யக் கூடாது அவர்களின் அறிவுக்கும் அனுபவத்திற்கும் முன்னால் விஞ்ஞான மனப்பான்மை கூட பல சமயம் தோற்று விடும் என்பதை கோகலே உணர்ந்து கொண்டார்.

 

 

இந்த அனுபவத்தை ஒரு கட்டுரை வாயிலாக அவர் தெரிவித்து “விஞ்ஞானம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மட்டும் தானா கற்பிக்கப்படுகிறது? அறியப்படுகிறது?” என்ற கேள்வியையும் கட்டுரையின் முடிவில் எழுப்புகிறார்!

உண்மை தான்!

 

அறிய வேண்டிய நல்ல விஷயங்கள் எல்லா இடங்களிலுமே இருக்கின்றன.

 

பூர்வ குடியினரிடமும் கூட!

****

 

SEPTEMBER 2017 GOOD THOUGHT CALENDAR (Post No.4174)

30 Quotations on Chaste women

written by London Swaminathan

 

Date: 30 August 2017

 

Time uploaded in London- 19-27

 

Post No. 4174

 

 

FESTIVE DAYS : Sep.4- Onam, Sep 6- Yajur Upakarma, September 11- Bharati Memorial Day,  21- Navaratri begins,, 28- Sarasvati Puka, Durga Ashtami, 29- Sarasvati Puja, Maha Navami, 30- Dusserah, Vijaya Dasami

Sep 6- Malaya Paksham begins

 

 

EKADASI FASING DAYS- 1 or 2, 16

FULL MOON- 6

NEW MOON- Mahalaya Amavasai 19

AUSPICIOUS DAYS- 4, 8, 15

 

SEPTEMBER 1 FRIDAY

Chaste women are by nature truthful- Bharat Katha Manjari

SEPTEMBER 2 SATURDAY

The mind of chaste women finds happiness in the glorious tales of virtuous women- Bharat Katha Manjari (BKM)

 

SEPTEMBER 3 SUNDAY

Universally, virtuous women are desireless- Katha Sarit Sagara (KSS)

SEPTEMBER 4 MONDAY

Women of great calibre committed to their husbands are glorified in Heavens too- Valmiki Ramayana 2-118-12

SEPTEMBER 5 TUESDAY

Which chaste women  will defy her husbands instructions?- KSS

SEPTEMBER 6 WEDNESDAY

A chaste woman has no independent happiness, but her husband’s happiness is hers. -KSS

SEPTEMBER 7 THURSDAY

Noble women do not oppose the  desires of their husbands- KSS

 

SEPTEMBER 8 FRIDAY

It is sheer cruelty  on the part of a woman to desert her husband- Valmiki Ramayana 2-24-12

 

SEPTEMBER 9 SATURDAY

A woman attains supreme heaven by serving her husband – Valmiki Ramayana 2-24-36

 

SEPTEMBER 10 SUNDAY

Noble women are single pointedly focussed on the welfare of their husbands- BKM

SEPTEMBER 11 MONDAY

For women their husband’s desires are  paramount, not crores of sons- Valmiki Ramayana 2-35-8

SEPTEMBER 12 TUESDAY

The wife alone enjoys the fortunes of her husband- Valmiki Ramarayana 2-27-5

SEPTEMBER 13 WEDNESDAY

Women have their husbands as their Lords (PN)

 

SEPTEMBER 14 THURSDAY

Chaste women are protected by the strength of their character alone- KSS

 

SEPTEMBER 15FRIDAY

 

Modesty is the insignia of  chaste women -KSS

SEPTEMBER 16 SATURDAY

Chastity is a very challenging vow (Proverb)

SEPTEMBER 17 SUNDAY

Noble women do not visit their residence of their husband’s friend – (Proverb).

SEPTEMBER 18 MONDAY

Invincible indeed is the power of chaste women- BKM

SEPTEMBER 19 TUESDAY

For the chaste women husbands is GOD- BM

 

SEPTEMBER 20 WEDNESDAY

Following the path tread by their husbands is the ultimate vow of women- KSS

SEPTEMBER 21 THURSDAY

Women have their husbands as GODS – PN

 

SEPTEMBER 22 FRIDAY

Noble wives, ever engaged in the welfare of their husbands, endure all sorrows – BKM

SEPTEMBER 23 SATURDAY

Though the husband be ruthless, the minds of chaste women will not stray- KSS

SEPTEMBER 24 SUNDAY

When my husband is blnd why shy should I deck myself?-KR

 

SEPTEMBER 25 MONDAY

Gods alone protect women of moral integrity in their hour of danger KSS

SEPTEMBER 26 TUESDAY

For women husband himself is the lord- V Ramayana, 7-95

SEPTEMBER 27 WEDNESDAY

Good women, desirous of the welfare of their husbands , pay no heed to the malice of the others KSS

SEPTEMBER 28 THURSDAY

Tears of chaste women do not  wet the earth esaily- Valmiki Ramarayana 6-14-67

 

SEPTEMBER 29 FRIDAY

There is no vow ordained for women other than serving their husbands- Valmiki Ramarayana 2-118.9

 

SEPTEMBER 30 SATURDAY

The mind of a chaste woman is tender-KSS

 

–SUBHAM–

 

மேலை நாட்டினர் போற்றும் வாஸ்து சாஸ்திரம்! (Post No.4173)

Written by S.NAGARAJAN

 

Date: 30 August 2017

 

Time uploaded in London- 5-52 am

 

Post No. 4173

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

by ச.நாகராஜன்

 

 

ஹிந்து தத்துவத்திற்கும் அதைச் சார்ந்த கலைகளுக்கும் உல்கெங்கும் இப்போது பெரும் வரவேற்பு உள்ளது.

யோகா

ஆயுர்வேதம்

வாஸ்து சாஸ்திரம்

 

 

ஆகியவை மேலை நாட்டினரால் நாளுக்கு நாள் அதிகமாகப் பின்பற்றப்படுகின்ற்ன.

 

இவை அனைத்தும் உடலுக்கு மட்டுமின்றி உள்ளத்திற்கும் ஆன்ம உயர்விற்கும் வழி வகுக்கின்றன என்பது உண்மை.

பௌதிக ரீதியாக மட்டும் அனைத்தையும் அணுகும் மேலை நாட்டு விஞ்ஞானம் ஆன்மீக ரிதியாகவும் அனைத்தையும் அணுகும் ஹிந்துத்வத்திடம் போட்டி போட முடியாது என்கின்ற சாஸ்வதமான உண்மையை உலகம் இப்போது உணர்கிறது.

காத்லீன் காக்ஸ் என்ற பெண்மணி தி பவர் ஆஃப் வாஸ்து லிவிங் ( Kathleen Cox – The Power of Vastu Living) என்ற நூலை எழுதி வாஸ்து சாஸ்திரத்தின் பெருமையை உலகம் உணரச் செய்திருக்கிறார்.

 

1985ஆம் ஆண்டு நியூயார்க்கிலிருந்து நியூடெல்லி வந்தவர் இங்குள்ள ஹிந்து வாழ்க்கை முறையைக் கண்டு வியந்து போனார்.

1990இல் நிரந்தரமாக டில்லியை தன் இருப்பிடமாக ஆக்கிக் கொண்டார்.

 

 

காலையில் எழுந்ததிலிருந்து இரவு வரை ஒவ்வொரு ஹிந்துவும் கடைப்பிடிக்கும் சம்பிரதாயங்கள், சடங்குகள் அனைத்தும் அவரை வியப்பில் ஆழ்த்தின. வெறும் உடல் வளர்ச்சிக்காக மட்டுமின்றி ஆன்மீக வளர்ச்சிக்காகவும் அவை அமைக்கப்பட்டிருப்பதை உணர்ந்த அவர் வாஸ்து சாஸ்திரத்தின் பால் தன் மனதைச் செலுத்தி அதைக் கற்றுத் தேர்ந்தார்.

மூன்று முக்கிய விஷயங்களை வாஸ்து சாஸ்திரத்தின் மூலமாக அவர் வலியுறுத்துகிறார்.

 

 

  • ஐம்பூதங்களைப் போற்றி பிரபஞ்சத்தின் லயத்தை ஒருவர் மதிக்க வேண்டும்.
  • இயற்கை உலகை நாம் வாழும் இடத்திலும் நாம் பணி புரியும் இடத்திலும் இணைக்க வேண்டும். இயற்கையின் வெளி உலகும் வீட்டில் நாம் வாழும் உலகும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாத தொடர்புடன் இருக்கிறது.
  • நாமும் கூட இறைசக்தியின் ஒரு அங்கமே என்பதை உணர்ந்து நாம் யார் என்பதை உணரத் தலைப்பட வேண்டும்

ஆகிய இந்த மூன்று கொள்கைகளை வலியுறுத்தி வாஸ்து சாஸ்திரம் எப்படி நம் வாழ்க்கையை வளப்படுத்த முடியும் என்பதை அவர் 400 பக்கங்களில் தெளிவு படுத்துகிறார்

 

.

அவரது இணையதளம் www.vastuliving.com பல உண்மைகளை விளக்குகிறது.

கோவில்கள் அனைத்தும் வாஸ்து சாஸ்திரப்படியே அமைக்கப்பட்டுள்ளன.

அங்கு வழிபாட்டிற்காகக் குழுமும் மக்களுக்கு உயரிய ஆன்மீக அனுபவங்கள் ஏற்படும் வகையில் அவை அமைக்கப்பட்டுள்ளன.

 

சிற்ப சாஸ்திரம், ஆகம சாஸ்திரம், வான சாஸ்திரம் முதலானவை ஆன்மீக வளர்ச்சிக்கு உதவும் வகையில் இருப்பதை அதை நன்கு அறிந்தோர் உணரலாம்

.

ஹிந்து வாழ்க்கை முறையில் அனைத்துக் கலைகளும் அற்புதமாக இணைக்கப் பட்டிருப்பதை மேலை நாட்டினர் உணர்ந்து அதை நமக்கே திருப்பிச் சொல்லி நம் அருமையை விளக்கும் போது தான் நாம் நமது சாஸ்திரங்களை மதிக்கத் தலைப்படுகிறோம்.

 

வேதனையான் உண்மை இது!

 

ஏராளமான வாஸ்து சாஸ்திர நூல்கள் பதிக்கப்படாமல் சுவடி வடிவிலேயே உள்ளன.

 

சில சுவடிகள் பதிக்கப்பட்டு அந்த நூல்கள் தரும் தாக்கத்திற்கே மேலை உலகம் வியப்பின் உச்சிக்கு ஏறும் போது அனைத்தும் பதிக்கப்பட்டால் நமது பெருமை எந்த உயரத்திற்குச் செல்லும்!

நினைத்துப் பெருமைப்படலாம்; வாஸ்து உள்ளிட்ட் அனைத்தையும் பழைய காலம் போல அனைவரும் கற்றுப் பின்பற்றலாம்.

 

 

ஹிந்து வாழ்க்கை முறை உலகெங்கும் பரவ ஹிந்துக்கள் அதை வாழ்ந்து காட்ட வேண்டும்!

****

உலகிலேயே மிகப்பெரிய கணக்குப் புத்தகம்: மேலும் ஒரு கர்நாடக அதிசயம்! (Post No.4172)

830 ft Jog Falls

 

Written by London Swaminathan

 

Date: 29 August 2017

 

Time uploaded in London- 9-22 am

 

Post No. 4172

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.

 

உலகிலேயே மிகப்பெரிய வீணை சிருங்கேரி மடத்தில் இருப்பது பற்றி எழுதினேன்.

 

உலகிலேயே மிகப்பெரிய ஒற்றைக் கல் சிலைகளில் ஒன்றான கோமடேஸ்வர் (சமண சமய சாது) 57 அடி உஅயர்த்துக்கு மலை மீது நிற்பது பற்றி எழுதினேன்.

 

 

இந்தியாவிலேயே மிகப்பெரிய (Bulls) நந்திகள் கர்நாடகத்தில் பல இடங்களில் உள்ளன.

மைசூர் சாமூண்டீஸ்வரி கோவிலில் ஒரு நந்தி

துருவகரே கோவிலில் ஒரு நந்தி

ஹளபீடுவில் ஒருநந்தி

 

சிவமுகா (ஷிமோகா) வில் உள்ள அரசாங்க மியூசியத்தில் அபூர்வ நாணயங்களும் 18-29 மீட்டர் நிளமுள்ள பழங்கால கணக்குப் புத்தகமும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

உலகிலேயே மிகப்பெரிய தங்க  சிம்மாசனம் (200 கிலோ) மைசூர் அரணமனையில் உள்ளது.

 

பேலூர், ஹளபீடு, சோமநாத்பூரிலுள்ள ஹோய்சாள வம்ச சிற்பிகளின் அற்புதப் படைப்புகள் பற்றியும் பார்த்தோம்.

Badami  Caves

உலகிலேயே அதிக சிற்பங்களை ஒரு சிறிய பரப்பில் காணும் அதிசயம் ஹளபீடில் இருக்கிறது. நட்சத்திரவடிவக் கோவிலில் 35000 சிற்பங்கள்! ராமாயண, மஹாபாரத, தசாவதார, கண்ணன் லீலைகளை தத்ரூபமாகச் செதுக்கியுள்ளனர்.

 

அணிவகுத்துச் செல்லும் யானைகளில் ஒரு யானை போல மற்றொரு யானை இல்லாத வகையில் செதுக்கியுள்ளனர்.

 

இந்தியாவிலேயே மிக உயரமான ஜோக் பால்ஸ் (830 feet) எனப்படும் நீர்வீழ்ச்சி கர்நாடகத்தில்தான் உள்ளது.

 

இந்துக்கள் போற்றும் கொல்லூர் மூகாம்பிகை, உடுப்பி க்ருஷ்ணன்,

குகே சுபரமண்யர்கோவில், சிருங்கேரி சாரதாம்பாள், காவிரி தோன்றும் தலைக் காவேரி,  மைசூர் சாமுண்டீஸ்வரி கோவில்,  மருதேஸ்வர் கோவில், தர்மஸ்தமலம், உலகப் புகழ்பெற்ற ஹம்பி நகர சிதைவுகள், பாதாமி குகைக் கோவில்கள், ஐஹோல், தென்னாட்டுக் காசி என வழங்கும் மூடபித்ரி கோகர்ணம், மஹாபலேஸ்வர் கோவில்கள்

– ஊருக்கு ஊர் பிரசித்திபெற்ற கோவில்கள் இருக்கும் மாநிலம் கர்நாடகமே.

 

2300 ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் மௌரிய சாம்ராஜ்ய அரசர் பதவியைத் துறந்து சமண மத துறவியான சந்திர குப்த மௌர்யனின் சந்த்ரகிரி முதல், ஏராளமான சமண மத புனிதத் தலங்கள் நிறைந்த பூமி இது.

Marudeshwar Temple

கோவிலகளுக்கோ, தொல் பொருட் துறைச் சின்னங்களுக்கோ நுழைவுக் கட்டணம் கிடையாது! இது ஒரு பெரிய அதிசயமே

 

சென்னகேசவ பெருமாள் கோவில் முதலியவற்றில் 880 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பூஜை நடக்கிறது. தமிழ் நாட்டில் முஸ்லீம் படையெடுப்புகளால் பல கோவிலகளில் பூஜை தடைப் பட்டது. மாலிக்காபூர் என்னும் முஸ்லீம் கொள்ளைகாரன் தங்கத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கோவில்களை விட்டு விட்டான்

 

 

ஹோய்சாள சிற்பிகளுக்கு எதையுமே பெரிதாக, கலைவண்ணத்துடன் படைப்பதே குறிக்கோள்

 

 

உத்தர கன்னட மாவட்டத்திலுள்ள ஓம் வடிவ பீச் (கடற்கரை) ஒரு இயற்கை அதிசயம்.

 

நாடு முழுதும் உடுப்பி ஹோட்டல்களை திறக்கும் அளவுக்கு புகழ்பெற்ற சமையல்காரகள்.

மணிப்பால் முதலிய புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள்

 

ஏராளமான நீர்வீழ்ச்சிகள்,பறவைகள் சர ணாலயங்கள், வனவிலங்குப் புகலிடங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையின் எழில்பொங்கும் இயற்கைக் காட்சிகள், ஆகும்பே என்னும் இடத்திலுள்ள மழைவனக் காடுகள், காவிரி, ஷராவதி, துங்கபத்திரா நதிகளின் சமவெளிகள் என எங்கும் இயற்கை அன்னையின் அருள்பாலிப்பு.

மாத்தூர் முதலிய கிராமங்களில் சம்ஸ்கிருதத்திலேயே பேசும் மக்கள் கூட்டம் மற்றும் ஒரு அதிசயம்!

World famous Hampi Ruins

கோலார் தங்கச் சுரங்கம், காவிரியின் குறுக்கேயுள்ள சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, மைசூர் பிருந்தாவனம், கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டு, 12 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் கோமடேஸ்வரின் மஹா மஸ்தக அபிஷேகம், ஈராண்டுக்கு ஒரு முறை நடக்கும் உடுப்பி பர்யாய உற்சவம், ஆண்டுதோறும் நடைபெறும் மைசூர் தசரா அலங்கார அணிவகுப்பு ஆகியவற்றைக் காண ஆயிரக் கணக்காணோனோர் கூடுகின்றனர்.

 

கூடுதல் விவரம் வேண்டுவோர் நான் ஆங்கிலத்தில் எழுதிய ஐந்து பகுதி கட்டுரைகளைப் படிக்கவும்.

Om shaped beach

TAGS:-பெரிய கணக்குப் புத்தகம், உயரமான நீர்வீழ்ச்சி, ஓம் வடிவ பீச்

–சுபம்–

 

கார்ல் மார்க்ஸை விஞ்சிய பாரத மகான்கள்! (Post No.4171)

Written by S.NAGARAJAN

 

Date: 29 August 2017

 

Time uploaded in London- 5-40 am

 

Post No. 4171

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

சிந்திக்க வேண்டும் தோழர்களே!

கார்ல் மார்க்ஸை விஞ்சிய பாரத மகான்கள்!

 

ச.நாகராஜன்

 

கார்ல்மார்க்ஸ் ஒரு புது வித தத்துவத்தைத் தந்து விட்டார் எனவும் அது உலகத்தையே உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்றும் சொல்லும் கம்யூனிஸ்டுகளை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது.

 

பாரத தேசத்தின் பழம் பெரும் அறிவுக் கருவூலங்களைப் படித்தவர்கள் அனைவருக்கும அந்தச் சிரிப்பு வரும்.

உன் சக்திக்குத் தக உழை; உன் தேவைக்குத் தக எடுத்துக் கொள்; உலகத் தொழிலாள வர்க்கமே ஒன்று படு

என்று இப்படியெல்லாம் கோஷம் எழுப்பி இது ஒரு புதிய கண்டு பிடிப்பு போல கம்யூனிஸ்டுகள் “அபூர்வக் காட்சியைத்” தருவது அவர்கள் சம்ஸ்கிருத செல்வத்தையோ அல்லது குறைந்த பட்சம் வள்ளலாரின் திரு அருட்பாவையோ கூடப் படிக்காததால் தான் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லலாம்.

 

“அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்

ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்

எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே  நினதருட்புகழை

இயம்பியிடல் வேண்டும்”

 

 

என்று அவர் கூறும் போது அந்த மனம் எவ்வளவு விசாலமானது; இதை விட ஒரு பெரிய கருத்தையா கார்ல் மார்க்ஸ் சொல்லி விட்டார் என்று கேட்கத்த் தோன்றும்.

கம்யூனிஸத்திற்கும் அருட்பா கொள்கைக்கும் ஒரு வித்தியாசம் உண்டு.

 

கம்யூனிஸம் அடிதடி, வன்முறை, கொள்ளை, பணக்காரனை ஒழி; அழி என்று கூறும். ஆனால் அருட்பாவோ அனைவரும் நன்றாக வாழட்டும்; அன்பு பொங்க வாழட்டும் என்கிறது.

எது உயர்ந்தது? யார் வேண்டுமானாலும் சிந்தித்துத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்!

 

 

அடுத்து காலத்தாற் முற்பட்ட பாகவத ஸ்லோகம் ஒன்றைப் பார்ப்போம்:

“ஒரு மனிதன் அவன் உயிர் வாழ எவ்வளவு தேவையோ அவ்வளவை மட்டுமே கொள்ள அவனுக்குத் தகுதி உண்டு;  அதை விட மேலாக ஒருவன் அடைய முற்படுவானேயானால் அவன் ஒரு திருடனாகக் கருதப்பட வேண்டும்; அவன் தண்டனைக்கு உரியவனே” என்கிறது பாகவதம்.

 

“யாவத் ப்ரீயேத ஜாதரம் தாவத் ஸ்வத்வம் ஹி தேஹினாம் I

அதிகம் யோபிமான்யேத ச ஸ்தனோ தண்டமார்ஹதி” II

 

ஈஸாவாஸ்ய உபநிடதத்தின் முதல் ஸ்லோகமும் கூட அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டது. இதில் அடுத்தவன் தனத்திற்கு ஆசைப்படாதே என்று அருளுரை பகர்கிறது.

 

மனுவைத் திட்டும் திராவிடப் பிசாசுகளும் கம்யூனிஸ சைத்தான்களும் மனுவைச் சரியாகப் படிக்கவில்லை என்று அடித்துக் கூறலாம்.

 

ஏனெனில் அவர்கள் கூறும் தத்துவத்தை விட அழகாக அவர் கூறுவது:

 

“உழுபவனுக்கே நிலம் சொந்தம்”

ஆச்சரியமாக இருக்கிறதா? மனுவைப் படிக்க வேண்டும்!

ஸ்தாணுச்சேதஸ்ய கேதாரமாஹு சல்யவதோ ம்ருஹம்

என்கிறார் மனு.இது தான் மனு நீதி!

மனு நீதி பாரதம் முழுவதற்கும் பொது;

க்ருண்வந்தோ விஸ்வம் ஆர்யம்

உலகம் முழுவதையும் பண்பாடுள்ளதாக மாற்றுவோம் என்பது வேத முழக்கம்.

 

 

ஆகவே மனு நீதி உலகம் முழுமைக்கும் பொது!

வேதம் என்பது தனி மனிதனின் சொத்து அல்ல; அது பிராம்மண, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்ற நான்கு வருணத்திற்கும் உரியது. பொது.

 

 

ரஷியாவிலும் கூட, ஏன் சீனாவிலும் கூட கொள்கை வகுக்கும் அறிவு சால் மக்கள் அல்லது தலைவர்கள் அல்லது அனைவருக்கும் இதத்தைத் தர உழைப்பவர்கள்- பிராமணர்கள் – உள்ளனர்.

 

அங்கும் நாட்டைப் பாதுகாக்க ராணுவத்தினர் – க்ஷத்ரியர் – உள்ளனர்.

அங்கும் வணிகம் புரியும் வணிகர் – வைசியர் – உள்ளனர்.

அங்கும் அன்றாட இதரப் பணிகளைப் புரிவோர் – சூத்ரர் – உள்ளனர்.

 

 

இந்த நான்கு வகுப்பில் உயர்வு தாழ்வு இல்லை.

ஒரு சமூகத்திற்குத் தேவையானது இந்த அமைப்பு; அவ்வளவு தான்.

 

வேதமறிந்தவன் பார்ப்பான், பல

  வித்தை தெரிந்தவன் பார்ப்பான்

நீதி நிலை தவறாமல்  – தண்ட

   நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

பண்டங்கள் விற்பவன் செட்டி – பிறர்

    பட்டினி தீர்ப்பவன் செட்டி

 

தொண்டரென்றோர் வகுப்பில்லை – தொழில்

    சோம்பலைப் போல் இழிவில்லை

நாலு வகுப்பும் இங்கொன்றே – இந்த

      நான்கினில் ஒன்று குறைந்தால்

வேலை தவறிச் சிதைந்தே செத்து

    வீழ்ந்திடும் மானிடச் சாதி

 

என்ற பாரதியின் வார்த்தைகளை விட வேறு எந்த வார்த்தைகளால் இந்த நான்கு வருண தத்துவத்தைக் கூற முடியும்?

 

பண்டைய ரிஷிகளும் தொடர்ந்து தோன்றி வரும் பாரத மகான்களும் – வியாசர் முதல் வள்ளலார் வரை அனைவரும் -வலியுறுத்தும் கருத்து ஒன்றே தான்!

 

ஆருயிர் அனைத்தும் ஒரே நிறை; ஒரே எடை; ஆருயிர்க்கெல்லாம் அனைவரும் அன்பு செய்தல் வேண்டும்

 

கார்ல் மார்க்ஸ் தத்துவத்தை விட பாரத மகான்கள் வலியுறுத்தும் தத்துவம் மிக மேலானதா, இல்லையா?

தோழர்கள் சிந்திக்க வேண்டும்!

***

100 Karnataka Wonders: Part 5 (Post No.4170)

Murudeshwar temple

Compiled by London Swaminathan

 

Date: 28 August 2017

 

Time uploaded in London- 17-44

 

Post No. 4170

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.

 

Tumakuru District

 

 

83.TUMKUR (TUMAKURU)

Vijayanagar period Laksminarayanaswamy temple is the oldest temple here.

 

84.TURUVEKERE

The large sculpture of Nandhi (bull) is splendidly carved out of a single black stone in front of Gangadhareswara Temple. Three impressive temples with Hoysala inscriptions are in the town.

 

85.SIDDHAGANGA KSHETRA

There is a Gurukula type of higher education centre is in the town. The waters of a natural spring here is considered to be sacred.

 

Udupi District

86.UDUPI

The important Vaishnavite pilgrim and cultural centre. It is the centre of most famous Krishna temple. Also famous for its South Indian cuisine. All over South India we have Udupi Bhavans (restaurants).

87.UDUPI KRISHNA TEMPLE

The temple is associated with Sri Madhwacharya, founder of the Dwaitha philosophy.The Paryaya festival held once in two years attracts large a number of devotees from all oover the country.

 

88.KALLIANPUR

Centre of many temple and relics of an old fort.

89.KARKAL

It is known for a 12-8 metre high monolith of Lord Gmateswara, a Jain sage. Important Jain centre.

 

90.MALPE

A quiet and beautiful beach is here.

91.MANIPAL

Famous for its educational institutions.

92.MARAVANTHE
Centre of Water Sports. West Coast Highway is spectacular. Beautiful spot with lush green hills on one side and delta of river Sauparnika on the other side.

 

Uttar Kannada District

93.KARWAR

Excellent beach at the mouth of Kali river. It is angler’s paradise. Sadashivgahta Hill Fort, Naganath Temple, Baithkola Beach, Karwar Harbour are frequented by tourists. Karwar is famous for its muslin factory as well.

94.ATTIVERI BIRD SANCTUARY

79 species of birds are seen. Migratory birds from various countries also flock to the sanctuary.

 

95.THE TIBETAN UNIVERSITY
It is near mundgod. Students from different countries come here to study Buddhist Philosophy.

  1. DANDELI

Industrial Centre; Gateway to the famous Dandeli wildlife sanctuary.

97.GOKARNA

Gokarna means Ear of the cow. According to legend, Rudra Shiva arrived here shortly after the creation of the earth, squeezing through the ear of the earth. An important beach centre.

98.MAHABALESWAR TEMPLE

Magnificent Shiva temple perched on a hillock near the beach. Temple is famous for its Atmalinga.

 

99.KUDLE BEACH AND OM BEACH

Kudle beach is on the southern side of Gokarna. Om beach resembles the sacred Hindu symbol OM.

  1. MURUDESHWAR

Atop the hill is famous temple of Lord Shiva, enshrining the Linga. Beach is clean and unspoilt. The view of the sea from the hill is awe inspiring.

 

101.YANA

Twin peaks of Bairaveshwara Shikara

and Mohini Shikara (shikara = peak) are venerated by the locals. Mahashivarathri festival is very popular.

102.HONNAVAR

New bridge across the Sharavati river dominates the landscape.

103.THREE WATER FALLS

APSARA KONDA FALLS, LUSHINGTON FALLS AND MAGOD FALLS are beauty spots.

 

SUMMARY OF THE WONDERS

The world’s largest Venna (appr.10 ft long) is in Sringeri.

The world’s largest account book is in Government museum in Shivamogga.

Indi\’s highest water fall Jog Falls is near Shmogga.

Biggest bulls (Shiva’s bull) made up of monoliths (single stone) are in several temples.

Mysuru palace has the biggest gold throne weighing 200 kilos.

 

In Belur, Halebidu and Somnathpur several thousands of sculptures ae there. Marching elephants, Gods are all differently carved. The don’t like similar.

 

Statues of Jain saint Gamateswara are in two different places. The Maha Mastaka Abisheka of Gomateswara is in Srvanabelagola. It is 57 ft tall. The ceremony held every 12 years is colourful.

 

–subahm–

 

-subham–

 

தமிழ்ச் சுவடி மர்மம்- Part 2! (Post No.4169)

Written by S.NAGARAJAN

 

Date: 28 August 2017

 

Time uploaded in London- 5-37am

 

Post No. 4169

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தமிழ்ச் சுவடி மர்மம்!

 

மாயச் சதுர மர்மத்தைச் சுவடிகளிலிருந்து விளக்கும் தமிழ்ப் பெண்மணி தஞ்சாவூர் சத்தியபாமா! – 2

 

ச.நாகராஜன்

****

 

 

மாயச் சதுரத்த்தை அமைக்கும் மூன்றாவது வகை ஒரு கூட்டு எண்ணை கொடுக்கப்பட்டு அதற்காக சதுரத்தை அமைப்பதாகும்.

ஒரு பாடலைப் பார்ப்போம்:

 

கப்பலெண் மிகாமல் இரண்டோர் எட்டில்

    கருதிய பதினொன்றில் பதிமூன் றாக்கிச்

செப்பமுடன் நவமாக்கிப் பக்க மாக்கிச்

    சேர்ந்ததோர் நான்காறில் செய்த பின்பு

ஒப்பிய இலக்கத்தைப் பாதி யாக்கி

    ஒன்று தள்ளி ராசியின்மேல் பதினா லாக்கி

எப்படியும் முதலேழில் மூன்றில் ஐந்தாம்

    ஈரைந்தில் பதினாறாம் இயம்ப லாமே

         (சுவடி எண்  1475)

 

 

இரண்டு படிகளில் சொல்லப்பட்டுள்ள இக்கணக்கின் வழிமுறையில் முதலில் 2,8,11,13,9,15,4,6 ஆகிய சிறு சதுரங்களில் முறையே 1,2,3,4,5,6,7,8 ஆகிய எண்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

முதலில் பதினாறு சதுரங்களை எண்களுடன் காண்போம்:

 

 

 

1 2 3 4
5 6 7 8
9 10 11 12
13 14 15 16
       

 

 

இதில் இரண்டாம் கட்டத்தில் 1, எட்டாம் கட்டத்தில் 2 என்று இப்படி முறையே எண்களைப் பதிக்க வேண்டும்.

வருகின்ற சதுரம் முதல் படியில் இப்படி இருக்கும்

  

  1   7
  8   2
5   3  
4   6  

 

நவம் என்றால் ஒன்பது. ரா – இங்கு பன்னிரெண்டு.

பஷீகம் – 15 நாட்கள் கொண்டது. இங்கு 16. இவ்வாறாகச் சதுரத்தை அமைத்துக் கொண்ட பின்னர்க் கூட்டுத் தொகையில் பாதியில் ஒன்றைக் கழிக்க வேண்டும். பின்பு முறையே 12,14,1,7,3,5,10,16 ஆகிய கட்டங்களில் முன் கூறப்பட்ட எண்ணில் ஒன்றைக் குறைத்து இறங்கு வரிசையில் எழுத வேண்டும்.

 

சான்றாக சுவடியில் தரப்பட்டிருந்த மாயச் சதுரத்தின் கூட்டுத் தொகை 64. 64இல் பாதி 32.

ஒன்றைக் கழிக்க வருவது 31.

 

முன்னர் அமைத்த மாயச் சதுரத்தில் நிறைவு செய்யப்படாத கட்டங்களில் (12,14,1,7,3,5,10,16) முறையே 31,30,29,28,27,26,25,24 ஆகிய எண்களை நிரப்ப வேண்டும்.

 

 

  

29 1 27 7
26 8 28 2
5 25 3 31
4 30 6 24

 

மாயச் சதுரம் இப்போது அமைந்து விட்டது.

இந்த மாயச் சதுரத்தில் எந்த வரிசையையும் இடமிருந்து வலமாகக் கூட்டினாலும் மேலிருந்து கீழாகக் கூட்டினாலும் மூலை விட்டங்கள் வழியே கூட்டினாலும் வரும் கூட்டுத் தொகை 64!

 

 

போனஸாக இன்னொரு விந்தையும் இதில் உண்டு!

நான்கு மூலைகளில் உள்ள கட்டங்களில் அமைந்துள்ள எண்களைக் கூட்டினாலும் வருவது 64 தான்!!

 

    இப்படி இந்தச் சுவடி தரும் விந்தை பல!

இவற்றை நன்கு ஆராய்ந்த திருமதி சத்தியபாமா ஆய்வின் முடிவில் தரும் முடிவுகள் ஐந்து.

 

 

  • அறிவிற்கு விருந்தூட்டும் தமிழரின் சிறந்தப் பொழுது போக்குக் கணித விளையாட்டுக் குறித்து அறிந்து கொள்ள இந்த மாயச் சதுரங்கள் ஆதாரங்களாக விளங்குகின்றன.
  • மாயச் சதுரங்களை அமைப்பதற்கான இத்தகைய பாடல்கள் வேறு எந்தக் கணித நூல்களிலும் இதுவரை கிடைக்கவில்லை. அந்த நிலையில் இவை அரிதானவையாக விளங்குகின்றன.
  • மாயச் சதுரங்களை அடிப்படையாகக் கொண்டு செய்யும் ஒரு சில கணக்குகள், கணக்கதிகாரம், ஆஸ்தான கோலாகலம், பல கணக்கு வகை முதலான நூல்களில் காணப்படுகின்றன.
  • மாயச் சதுரங்களை உருவாக்கும் மேலை நாட்டினரின் கணிதச் செய்முறைகளோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யக் கூடிய ஆய்வுக் களமாக இவை விளங்குகின்றன.
  • காலம் குறித்த செய்திகள் கூறப்படவில்லை என்றாலும் காலத்தில் பழமையானவையாகப் பழந்தமிழரின் கணித அறிவை உலகிற்குப் பறை சாற்றுவனவாக இவை விளங்குகின்றன.

 

 

இந்த ஒரு சுவடியிலேயே இவ்வளவு அரிய பாடல்களைக் காணும் போது இன்னும் கணக்கதிகாரம், ஆஸ்தான கோலாகலம், பல கணக்கு வகை போன்ற நூல்களை ஆராய்ந்தால் நாம் பெறக் கூடிய விந்தைகள் எவ்வளவோ.

 

திருமதி சத்தியபாமா அவர்களின் முழு ஆய்வையும் பதிப்பிக்க தமிழ் உலகம் முன் வர வேண்டும்.

 

தமிழின் பெருமை எல்லயற்றது.

தமிழரின் அறிவு நுட்பமானது; பரந்து பட்டது.

இதை உலகம் அறிய வழி செய்ய வேண்டும்.

              ***                                 (குறிப்பு: திருமதி

 

சத்தியபாமா அவர்களைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் அவரை இந்தத் துறையில் நன்கு தூண்டலாம். அவரது ஆய்வு பற்றி மேலும் கூடுதல் தகவல்களை இந்தத் தளத்திற்கு அனுப்பச் சொல்லலாம். எனக்கு அறிமுகமில்லாத நிலையில் அவரைப் பாராட்டி அவரையும் அவரது ஆய்வையும் நமது தளத்தின் மூலமாக வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதில் மகிழ்ச்சியுறுகிறேன்.)

–Subham– 

100 Wonders of Karnataka- Part 4 (Post No.4168)

Compiled by London Swaminathan

 

Date: 27 August 2017

 

Time uploaded in London- 15-24

 

Post No. 4168

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.

 

64.MYSURU

The city of demon Mahisasura who was killed by the presiding deity of the city goddess Chamundeeswary. I t was ruled by the kings of Wodeyar family. Cleanest city in India with beautiful mansions.

 

65.MYSURU PALACE

 

The three storeyed palace was built on an old structure. Durbar Hall and Kalyana Mandapam were decorated with foreign materials. Golden treasurers are in the palace. 200 kilo gold gold throne and a golden Howdah are used in the annual Dasara procession.Millions watch this procession.

 

66.ART GALLERY MUSEUM

Art gallery housed in Jaganmohan Palace and the museum have a very rare collection.

 

67.RAIL MUSEUM
Museum houses priceless locomotives. Folklore museum has a collection of 6500articles Mysuru is one of the oldest zoos in the country.

 

68.LALITHA MAAL PALACE

It is in the outskirts of the city at the foot of the Chamundi Hills. built in European style now it has been converted into a hotel.

69.CHAMUNDI HILLS

IT IS 1065 METRE HIGH AND THE FAMOUS Chamundeeswary Temple is here. 1000 steps and a motorable road are there. Chamundy Temple is believed to be 2000 year old. It is famous for its monolith Nandi (bull) towering nearly 5 metres. It is one of the famous seven Nandis. Gigantic statue of Mahisasura in on the top of the hill.

 

70.NANJANGUD

It is famous for its annual Chariot festival attended by large number of devotees.

 

71.SOMNATHPUR

King Narasimha III built it in 1268. Excellent example of Hoysala architecture. Epic secenes decorate the walls in sculptural form.

72.TALAKAD

The Hindu pilgrim centre on the left bank of the Kaveri river has Pancha Lingas (five lingas). The Panchalinga Darshan is arranged once in 12 years.

 

73.SHIVAMOGGA (SHIMAGA)

It means the face of Lord Shiva. Keladi Nayaks, Kadambas, Gangas, Chaukyas, Rashtrakutas and Vijayanagara rulersruled from very early years.

 

74.18-29 METRES ACCOUNT BOOK

Government Museum in Shivamoga dispalys rare coins, mansuscripts, palm leaves,  and an ancient account book measuring 18-29 long.. Apart from this the Seetha Rama Anjaneya temple in the fort is a fine example of Hoysalas.

75.AGUMBE

IT IS CALLED THE CHIRAPUNJI OF Suth India with maximum rain fall for four monts. It is set in the Tropical Rain Forest region with rare orchid flowers.

Spectacular sunset point 90 kms from Sivamoga is very popular.

 

 

76.BHADRAVATI

Industrial city also known as Steel City.Lakshminarasimha Temple and Rameshwara Templeon the banks of Tunga river are of Hoysala period.

77.GAJANUR

The dam on the River Tunga and the elephant camp are poular.

  1. HUMCHA

Important Jain pilgrim centre with Panchakuta Basadi. Jain Temples are here.

 

79.JOG FALLS/JERASAPPA FALLS

Highest Water Fall in the country with an elevation of almost 1000 ft. River Sharavati falls from the top as four different cascades: Raja, Rani, Roarer and Rocket. It is a thrilling spectacle.

80.KOODALI

Pilgrim and Cultural centre on the confluence of rivers Tunga and Bhadra. A Smartha Mutt was established in the 16th century.

 

  1. MADAGADDE BIRD SANCTURAY

Located on the small island of River Tunga. Surrounded by dense forests. Attracts migratory birds.

82.TAVAREKOPPA

LION SAFARI WAS STARTED IN 1988 AMIDST DENSE FOREST. Other wild animals are also roam the forest.

Agumbe Rain Forest

to be continued………………………….

கர்நாடக அதிசயங்கள்-1; 35,000 சிற்பங்கள்! (Post No.4167)

Written by London Swaminathan

 

Date: 27 August 2017

 

Time uploaded in London- 11-59 am

 

Post No. 4167

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.

 

 

எனக்கு ரொம்பநாளாக ஒரு ஆசை! பேலூர், ஹளபீடு, சோமநாதபுரம் சிற்பங்களைப் படங்களில் பார்க்கையில் என்றவது ஒரு நாள் நேரில் போய்ப் பார்க்கவேண்டும் என்று.

 

நாங்கள் பெங்களூரிலிருந்து காரில் புறப்பட்டு சிருங்கேரி சென்றபோது கொல்லூர் மூகாம்பிகை, உடுப்பி கிருஷ்ணன் கோவில் செல்ல திட்டமிட்டோம். ஆனால் போகும் போதோ அல்லது வரும்போதோ பத்து மணி நேரத்துக்கு மேல் காரில் அமர வேண்டியிருக்கும் என்று டிரைவர் எச்சரித்தார். ஏற்கனவே மதுரை, மாயுரம், மதறாஸ் என்று காரில் நீண்ட பயணம் செய்ததால் அது வேண்டாம் என்று தீர்மானித்தோம். ஆனால் டிரைவர் ஒரு போனஸ் திட்டத்தை முன் வைத்தார்.

 

பேலூர், ஹளபீடு, அன்னபூர்னேஸ்வரி கோவில்களும் சிரவண பெலகோலாவும் வழியில் இருப்பதால் அவைகளுக்கு அழைத்துச் செ வதாகச் சொன்னார். பரம சந்தோஷம்; ‘கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல’ இருந்தது. ஆனால் சிருங்கேரியில் கொட்டிய மழையைப் பார்த்தவுடன் அன்ன பூர்னேஸ்வரி கோவிலை விட்டுவிட்டு மற்ற இடங்களுக்குச் சென்றோம்.

 

ஹளபீடு சிற்பங்களைப் ஆர்த்தவுடன் நான் மீனாட்சி கோவில் பற்றி பெருமை பேசியதெல்லாம் தவறோ என்ற எண்ணம் மேலிட்டது. எனது மதுரை மீனாட்சி கோவில் உலகப் புகழ்பெற்றதுதான். கல்லூரிப் படிப்பு படிக்கும் வரை, தடுக்கி விழுந்தால் மீனாட்சி கோவிலில்தான் விழுவேன். ஊருக்கு வரும் விருந்தாளிகளைப் பெருமையுடன் சுற்றிக் காண்பிப்பேன். அப்போதெல்லாம் இந்தக் கோவில் கோபுரங்களிலும், பிரகாரங்களிலும் 30,00-த்துக்கும் மேலான சுதைகள்- சிற்பங்கள் இருப்பதாகப் பெருமை அடித்துக் கொள்வேன். அவ்வளவும் உண்மையே!

 

ஹளபீடு கோவிலில், கடுகு இடம் கூட வீணடிக்காமல் சிற்பங்களை அள்ளி வீசி விட்டார்கள் ஹோய்சாள வம்ச சிற்பிகள். சுமார் 1200 ஆண்டுப் பழமையான இந்தக் கோவிலில் வழிபாடு இல்லைதான். போய் தரிசிக்க கட்டணமும் இல்லை. ஒவ்வொரு சிற்பத்தையும் நன்றாகப் புகைப்படம் எடுத்தால் ஒவ்வொன்றும் போட்டோ போட்டியில் பரிசு பெறும்!

 

உலகிலேயே பணக்கார நாடு இந்தியா என்ற தலைப்பில் ஐந்து அல்லது ஆறு கட்டுரைகளை எழுதியபோது இதற்கு ஆதாரமாக ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டேன். அது என்ன வென்றால் இன்டிய சிற்பங்களில் காணப்படும் நகை நட்டுகள் போல உலகில் எந்த நாட்டிலும் காண முடியாது. கிரேக்க சிற்பங்களில் நகையே இராது. பாபிலோனிய, எகிப்திய, மாயன் நாகரீகங்களில் கொஞ்சம் நகைகள் இருக்கும். நமக்குக் கொஞ்சம் நெருங்கி வருவோர் எகிப்தியர்கள் மட்டுமே.

வேதங்களிலும் , ராமாயண மஹாபாரத இதிஹாசங்களிலும் ஏராளமான நகைகள் குறிப்பிடப்படுகின்றன. சீதையின் மோதிரமும் சகுந்தலையின் மோதிரமும் நம் இதிஹாசங்களில் முக்கியப் பங்காற்றுகின்றன. அது மட்டுமல்ல; சிந்துவெளி நடன மாது கழுத்தில் கூட நகை இருக்கும்; 2300 ஆண்டுகளுக்கு முந்தைய புத்தமத சிற்பங்களில் இருந்து இன்றுவரையுள்ள சிற்பங்களில் எண்ணற்ற நகைகளை காணலாம். இதில் என்ன அதிசயம் என்றால் பெண்களுக்குப் போட்டியாக, ஆண்கள் உடம்பிலும் ஏராளமான நகைகள் இருக்கும் இது உலகில் வேறு எங்கும் இல்லாத புதுமை.

 

ஹளபீடு சிற்பங்களில் யானை, குதிரை, மன்னர்கள், கடவுளர் அத்தனை பேருக்கும் நகைகள். ஒரு மனிதன் கற்பனையில் சில விஷயங்களை எழுத வேண்டுமானாலும், அது அந்தக் காலத்தில் இருந்தால்தான் எழுத முடியும், வரைய முடியும், செதுக்க முடியும்.

 

இது ஒரு புறமிருக்க சிற்பியின் கைவண்ணத்தை எப்படிப் புகழ்வது! இதை நேரில் சென்று பார்த்தால்தான் புரியும். நாங்கள் ஒரு மணி நேரம் கண்டு களித்தோம். ஆயினும் பல நாட்கள் தங்கி ஆராய்ந்தாலோ அ ல்லது புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டே பார்த்தாலோதான் எல்லாம் விளங்கும்.

 

உஙகளுக்கு ஹளபீடு செல்ல வாய்ப்புக் கிடைத்தால் நழுவ விடாதீர்கள்.

 

இனி சில புள்ளி விவரங்கள்:–

 

1.ஹோய்சாள மன்னர்களின் தலைநகர் இது. பழைய பெயர் துவாரசமுத்திரம். 1200 ஆண்டுப் பழமை உடைத்து

 

2.விஷ்ணுவர்த்தனின் மகனான இரண்டாம் வீர வல்லாளன் காலத்தில் புகழ் கொடிகட்டிப் பறந்தது. காவிரி நதி முதல் கிருஷ்ணா நதிவரை இடைப்பட்ட பிரதேசம் எல்லாம் அவன் வசப்பட்டது.

 

3.ஆயினும் 1311ல் டில்லித் துருக்கர் வசமானது. நல்லவேளை. முஸ்லிம்களின் அழிவுப்படை இந்தச் சிறபங்களில் கை வைக்கவில்லை. நாம் செய்த புண்ணியமே!

 

  1. துருக்கப் படைத் தளபதி, டன் கணக்கில் தங்கத்தையும் ரத்தினக் கற்களையும் மட்டும் எடுத்துச் சென்றான்.

 

5.ஹளபீடு என்றால் பழைய தலை நகர் என்று பொருள்; காரணம்- இதற்குப் பின்னர் புதிய தலைநகர் உருவானது.

 

150 அற்புதக் கோவில்கள்

 

6.ஹோய்சாலர்கள் கர்நாடகம் மாநிலம் முழுதும் 150 கோவில்களைக் கட்டினர். ஒவ்வொன்றும் சிற்பக் கலையின் அற்புதம்.

 

  1. இந்த ஊர், பெங்களூரில் இருந்து 214 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது

 

8.முக்கியக் கோவில் ஹோய்சாளேஸ்வரர் சிவன் கோவில். ஜேம்ஸ் பெர்குசன் இதை ஏதென்ஸின் பார்த்தினானுடன் ஒப்பிட்டுள்ளார். ஆனால் நான் சென்ற மாதம் பார்த்தினானைப் பார்த்து வந்ததால், ஹளபீடுக் க்கு 100 மார்க்கும் இன்றுள்ள பார்த்தினான் கோவிலுக்கு 35 மார்க்கும் கொடுப்பேன் (எல்லா சிலைகளையும் கிறிஸ்தவ, முஸ்லீம் படை எடுப்பாளர்கள் ஒழித்துக் கட்டி விட்டார்கள் ஏதென்ஸில்)

 

9.இரண்டு கோவில்கள் அருகருகே உள்ளன. ஒன்றில் பெரிய நந்தி. இது விஷ்ணுவர்த்தனின் அன்பு மனைவி சாந்தலாதேவியின் பெயர் சூட்டப்பட்ட கோவில்.

 

  1. என்ன என்ன சிற்பங்களைக் காணலாம்?

எல்லா வகை மிருகங்களோடு மகரம் , ஹம்சம் போன்ற கற்பனை உருவங்கள்;

எல்லா வகை தெய்வங்கள்

பால கிருஷ்ணனின் லீலைகள்

கர்ண– அர்ஜுனன் யுத்தம்

கோவர்தன மலையைத் தூக்கும் கிருஷ்ணன்

கஜேந்திர மோட்சம்

சிவ தாண்டவம்

சிவனின் ரிஷப வாஹன கோலம்

ராவணன் தூக்கும் கயிலை மலை

ராமாயணக் காட்சிகள்

சிவலிங்கம், நந்தி, மந்தாகினி என்னும் அழகிகள், ஏழு குதிரைகளுடன் சூரியனின் ரதம், வித விதமான தூண்கள், விஷ்ணுவின் அவதாரங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

 

35,000 சிற்பங்கள்!

மீனாட்சி கோவிலில் 14 கோபுரங்கள் 14 ஏக்கர் கோவில் பரப்பில் 30000 சுதைகளைக் காணலாம்; ஹலபீடிலோ அரை மணி நாரப் பார்வையில் கண் வீச்சில் 35000 சிற்பங்களைக் காணலாம்! அதனால்தான் பிரம்மாண்ட மீனாட்சி கோவிலைவிட இது சிறந்த வேலைப்பாடு உடைத்து என்கிறேன்.

 

‘கடுகைத்துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தறித்த குறள்’ என்று தி ருக்குறளை எப்படி பாராட்டினரோ அப்படி, குறுகி இடத்தில் 35000 சிற்பங்களை உருவாக்கிய காட்சி உலகில் வேறு எங்கும் இல்லை! இல்லவே இல்லை!!!

 

 

  1. காளிதாசி என்ற சிற்பி இதை உருவாக்கியதாகக் கல்வெட்டு சொல்கிறது

 

  1. உண்மையைச் சொல்லி விடுகிறேன்; எனது காமிரா பார்த்த அளவுக்கு என் கண்கள் காணவில்லை

வானிலுள்ள நடசத்திரங்களை பைனாகுலரும் , டெலஸ்கோப்பும் நன்கு காணும்; நமது ஊனக் கண்களோ மேம்போக்காகவே காணும்.

 

அருகிலுள்ள ஏனைய கோவில்களைக் காண நேரம் கிடைக்கவில்லை. அடுத்த முறை போகும்போது லண்டனில் நூலத்திலுள்ள புத்தகங்களைப் படித்துவிட்டுப் போவேன்!

 

 

வாழ்க ஹோய்சாளர்கள் (ஹோய்சாள = புலிகடிமால்);

வளர்க அவர்தம் கலைகள்!

 

–subam—