Agni is Mitra when enkindled duly, Mitra s priest, Varuna, Jataveda; Mitra as active Minister, and House-Friend, ,Mitra of flowing rivers, and of mountains RV.3-5-4
xxx
SEPTEMBER 2 THURSDAY
As holy food, Agni to your invoker , give wealth in cattle, lasting rich in marvels. RV.3-5-11
Xxx
SEPTEMBER 3 FRIDAY
Bring with their Dames, the Gods, the Three and Thirty, ater your God like nature, and be joyful-3-6-9
Xxx
SEPTEMBER 4 SATURDAY
Agni, forgive us, for our weal, even sin committed-6-7-10
Lord of the Forest, raise yourself up n the loftiest spot on earth.
Xxx
SEPTEMBER 5 SUNDAY
Give splendour, fixed and measured well, to him who brings the sacrifice 3-8-3
Xxx
SEPTEMBER 6 MONDAY
Well- robed, enveloped he is come, the youthful, ; springing to life his glory waxes greater. Contemplative in mind and God-adoring, sages of high intelligence upraise him 3-8-4
xxx
SEPTEMBER 7 TUESDAY
Adityas, Rudras, Vasus,careful leaders, Earth, Heaven and Prithivi and Air’s mid regions. RV.3-
xxx
SEPTEMBER 8 WEDNESDAY
Accordant Deities, shall bless our worship and make or sacrifice’s flag lofty -3-8-8
xxx
SEPTEMBER 9 THURSDAY
Sing, Agni, for long life to us and noble sons 3-3-7
Xxx
SEPTEMBER 10 FRIDAY
These speak of truth, praising the truth eternal, thinking on order as the guards of order RV.3-4-7
Xxxx
SEPTEMBER 11 SATURDAY
May Bharati with all her sisters,Ila accordant with gods ,with mortals agni ,
Sarasvati with all her kindred rivers, come to this grass. Three goddesses and seat them 3-4-8
Xxxx
SEPTEMBER 12 SUNDAY
Like swans that fly in long lines, the (Yupa) pillars have come to us in arrayed in brilliant colour. They lifted on high by sages, eastward, to go forth as gods to the God’s dwelling places -3-8-9
xxxx
SEPTEMBER 13 MONDAY
Those Poles (Yupa) on the earth with rings that deck them seem to the like eyes like horns of horned creatures .3-8-10
Xxx
SEPTEMBER 14 TUESDAY
Him who had passed beyond his foes, beyond continual pursuits, Him the unerring ones, observant, found in floods, couched like a lion in his lair 3-9-4
Xxx
SEPTEMBER 15 WEDNESDAY
Offer to him who knows fair rites, who burns with purifying glow, swift envoy, active, ancient, and adorable; serve you the God attentively. RV.3-9-8
Xxx
SEPTEMBER 16 THURSDAY
Three times a hundred Gods and thrice a thousand, and three times ten and nine have worshipped Agni.3-9-9
Xxx
SEPTEMBER 17 FRIDAY
He verily , who honours you with fuel, Knower of all Life, , HE! Agni! Wins heroic might , he prospers well 3-10-3
Xxx
SEPTEMBER 18 SATURDAY
As such O Purifier!, shine on us heroic glorious might; be nearest friend to those who laud thee, for their weal. RV.3-10-8
xxxx
SEPTEMBER 19 SUNDAY
O Agni! In our deeds of might, my we obtain all precious things. The Gods are centred in you 3-11-9
xxx
SEPTEMBER 20 MONDAY
Indra and Agni, , singers skilled in melody hymn on, bringing lauds, ; I choose you for the sacred good 3-12-5
xxx
SEPTEMBER 21 TUESDAY
Infallible is Agni, he who goes before the tribes, a chariot swift and ever new 3-11-5
Xxx
SEPTEMBER 22 WEDNESDAY
He /Agni, is the sage who guides these men, Leader of sacred rites is he,
Who wins and bestows wealth 3-13-3
xxx
SEPTEMBER 23 THURSDAY
Approaching with raised hands and adoration, we have this day fulfilled for your longing 3-14-5
Xxx
SEPTEMBER 24 FRIDAY
Approaching with raised hands and adoration, we have this day fulfilled for your longing RV. 3-14-5
Xxx
SEPTEMBER 25 SATURDAY
As such, O Agni, deal us wealth and hero might, O Bounteous One! Most lofty, very glorious, rich in progeny, free from disease and full of power- 3-16 3
xxx
SEPTEMBER 26 SUNDAY
Help us to strength, Blessed Agni! Rice in progeny in abundant, in our sacrifice. Flood us with riches yet more plenteous, bringing weal, with high renown, most Glorious One! – 3-16 6
xxx
SEPTEMBER 27 MONDAY
May we rest ever in the loving kindness, in the auspicious grace of him the Holy RV.3-1-21
xxx
Grant us abundant food , you priestly Herald, vouchsafe to give us ample wealth RV.3-1-22
xxx
SEPTEMBER 28 TUESDAY
Wishing to do you service, , Agni, they are there ,desirous of your friendship; grant them store of wealth -3-2-6
xxx
SEPTEMBER 29 WEDNESDAY
Agni , the friend of men, ever seek for wealth 3-2-15
xxx
SEPTEMBER 30 THURSDAY
Don’t leave us to destitution, Agni, nor want of heroic sons, RV.- 3-16 -5
–SUBHAM–
Tags. –GANESH, RV 3rd Mandala, September 2021, Calendar, Rigveda
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
செப்டம்பர் 2021 காலண்டர்; ரிக் வேத பொன்மொழிகள்- 3 வது மண்டலம்(Post.10036)
பண்டிகை நாட்கள் – செப்.5 ஆசிரியர் தினம்; 8- சாம வேத உபாகர்மா ;10- கணேஷ் சதுர்த்தி; 11- பாரதி நூற்றா ண்டு நினைவு தினம் , ரிஷி பஞ்சமி; 21- மாலையை பட்சம் ஆரம்பம்;
செப்.6 – அமாவாசை ; செப்.20 பவுர்ணமி ;
ஏகாதஸி விரத நாட்கள் – 2,16;
சுபமுஹூர்த நாட்கள் – 1,3,8,9
xxx
செப்டம்பர் 1 புதன் கிழமை
தண்ணீரில் கருவாக இருப்பவன்/ அக்னீ ; தன் ஒளியால் பிரகாசிப்பவன்; மக்களின் நன்மைக்காக தண்ணீரை உண்டாக்கினான் RV 3-1-12
XXX
செப்டம்பர் 2 வியாழக் கிழமை
சாணையால் கத்தியைத் தீட்டிக் கூராக்குவது போல, மனிதர்கள் கவிதைகளால் அக்கினியை பிரகாசிக்கச் செய்கின்றனர் 3-2-9
XXX
செப்டம்பர் 3 வெள்ளிக் கிழமை
அக்னீ , பிறக்கும்போது வெள்ளை; பலமானபோது சிவப்பு; ஏழு மகத்தான நதிகள் அவனை வளர்த்தன 3-1-4
மனிதர்களின் நண்பன்; மனிதர்களின் நலனை நாடுபவன்; வடிவில் அழகன் ; உத்தமன்; பல வர்ணங்களில் ஒளிர்வோன், மாசு மருவற்றவன் ; தூயவன் ஆன அக்கினியிடம் வேண்டுகிறோம் 3-2-15
XXX
செப்டம்பர் 6 திங்கட் கிழமை
அமிர்தனான அக்கினி தேவர்களைப் போற்றுகிறான் ; அதனால் அவன் சனாதன தர்மத்துக்கு ஊறு விளைவிப்பதில்லை 3-2-15
XXX
செப்டம்பர் 7 செவ்வாய்க் கிழமை
அக்கினி சிங்கத்தைப் போல கர்ஜித்து வயிற்றில் வளர்கிறான் ; ஆவி கொடுப்போருக்கு செல்வத்தை வழங்குகிறான் RV 3-2-11
அக்கினியை வழிபடுவோர் சுகத்தையும் இன்பத்தையும் நாடுகிறார்கள் ; அவன் வேள்வியின் கொடி ;பாடுவோர் புனிதத் சடங்குகளை அவனிடம் சேமிக்கிறார்கள்; குவித்துவைக்கிறார்கள் RV.3-3-3
XXX
செப்டம்பர் 10 வெள்ளிக் கிழமை
நல்ல புதல்வர்களைப் பெறவும், நீண்ட ஆயுளுக்காகவும் அக்கினியைப் போற்றுங்கள்; வினைத் திட்பனான உன்னை தேவர்களும் மனிதர்களும் விரும்புகிறார்கள்; நீ எப்போதும் விழித்திருப்பவன் 3-3-7
XXX
செப்டம்பர் 11 சனிக் கிழமை
பாடல்களால் அக்கினி தேவனைப் போ ற்றுவோம் ; அவன் பேரின்பத்தை அளிப்பவன் மங்கலமான தேரில் ஏறி தன பலத்தால் எல்லா பிரஜைகளை பற்றினான் 3-3-9
XXX
செப்டம்பர் 12 ஞாயிற்றுக் கிழமை
2 முக்கிய பாடகர்களும், 7 வேள்விப் பாடகர்களும் அக்கினியே சத்யம் என்று செப்புகின்றனர். அவர்கள் உண்மையைப் போற்றுபவர்கள்; விரதங்களைப் பின்பற்றுவோர்; அக்கினியை ஒளிப்படுத்துவோர்
3-4-7
XXX
செப்டம்பர் 13 திங்கட் கிழமை
பாரதி, இளா , சரஸ்வதி ஆகிய மூன்று தேவியரும் இங்கே வந்து தர்ப்பைப்புல் ஆசனத்தில் அமருங்கள் RV. 3-4-8
அக்கினியை நதிகள் பலப்படுத்தி ஏந்திச் செல்லுகின்றன. அக்கினி ஒரு மனைவியுடன் இருக்கும் கணவனைப் போல வானம் – பூமியுடன் இருக்கிறான் 3-4-7
XXX
செப்டம்பர் 16 வியாழக் கிழமை
எங்களுக்கு நித்தியமாக வசிக்க நிலத்தை அளிக்கவும்; எங்கள் வம்சத்தில் புதல்வர்களும் பேரர்களும் தோன்றுவார்களாகுக ; உன் கருணை எங்கள் பால் இருக்கட்டும் 3-6-11
XXX
செப்டம்பர் 17 வெள்ளிக் கிழமை
சோம பானத்தைக் கொடுக்கும் செடிகள் தோல் போன்ற சவ்வினால் போர்த்தப்பட்டுள்ளது; அவன் அதைக் காக்கிறான்; கொழுப்புச் சத்து நிறைந்த பறவைகளின் இடத்தையும் காக்கிறான்.3-5-6
XXX
செப்டம்பர் 18 சனிக் கிழமை
அக்கினி தன் பெற்றோர்களான வானத்தையும் பூமியையும் அடிக்கடி புதுப்பிக்கிறான் 3-4-7
XXX
செப்டம்பர் 19 ஞாயிற்றுக் கிழமை
அக்னீ அழகன்; பூமியை, பறவைகளின் உயர்ந்த இடத்தைக் காக்கிறான் ; 7 தலை உள்ள மருத்துக்களைக் காப்பவன்; சூரியனின் வழியைக் காப்பவன் 3-5-5
யூப நெடுந் தூணே ! கிழக்கில் நில், வீரர்களைக் கொடு ; வறுமையையும் பஞ்சத்தையும் விரட்டு ; பெரும் அதிர்ஷ்ட்டதை எங்களுக்கு கொணர்க .3-8-2
XXX
செப்டம்பர் 24 வெள்ளிக் கிழமை
வனஸ்பதியே ! பூமியின் உயர்ந்த இடத்தில் நிமிர்ந்து நிற்கவும் ? வேள்வியை நடத்துபவனுக்கு உணவு அளிக்கவும் 3-8-3
XXX
செப்டம்பர் 25 சனிக் கிழமை
நல்லாடை அணிந்தவன்; மாலைகள் உடையவன் யாகத் தூண் (யூபம்) ; அவன் பிறந்தவுடன் புகழ் அடைகிறான்.; அவனை அறிஞர்களும், கவிகளும் தியானிப்பவர்களும் உயர்த்துகிறார்கள் 3-8-4
XXX
செப்டம்பர் 26 ஞாயிற்றுக் கிழமை
வனஸ்பதியே! கடவுளை வணங்குவோர் உனக்கு நெய் பூசி காப்பிடுகிறார்கள் ; நீ உயர்ந்து நின்றாலும், உன் தாயான பூமியில் சாய்ந்து படுத்திருந்தாலும் எங்களுக்குச் செல்வத்தைக் கொடு RV.3-8-1
XXX
செப்டம்பர் 27 திங்கட் கிழமை
3399 தேவர்கள் அக்கினியைப் போற்றினார்கள்; அவனுக்கு நெய்க் காப்பிட்டார்கள் அவனுக்கு அவனுக்குத் தர்ப்பையைப் பரத்தி அமர்த்தினார்கள் 3-9-9
xxx
செப்டம்பர் 28 செவ்வாய்க் கிழமை
அக்கினியே உன் பரவும் சுவாலையின் சக்தியால் எங்கள் பாவங்களை நீக்கவும் 3-6-10
XXX
செப்டம்பர் 29 புதன் கிழமை
வனஸ்பதியே ; நீ 100 கிளைகளோடு பெருக வேண்டும்; நாங்கள் ஆயிரம் கிளைகளோடு உயர்வோமாக.3-8-11
xxx
செப்டம்பர் 30 வியாழக் கிழமை
அழகான காப்புகளோடுள்ள அந்த யூபங்கள் , காண்பதற்கு பிராணிகளின் கொம்புகள் போலத் தோன்றுகின்றன. துதிகளைக் கேட்கின்றன; அவை போர்களிலே எங்களைக் காக்கட்டும் RV 3-8-10
xxx
BONUS GOLDEN SAYINGS
உன்னை (அக்கினியே) நண்பன் என்ற முறையில் எங்களுக்கு உதவ அழைக்கிறோம். தண்ணீரின் பேரனே !துன்பமற்றவனே; ஒளி மயமானவனே ! ஒப்பற்ற வெற்றியுடையவனே RV 3-9-1
xxx
அக்கினியே நீ மரங்களை விரும்பி, தாய் போன்ற தண்ணீரிடம் சென்றாய்; ஆனால் தாமதத்தைதை சகிக்காமல் எங்களிடமே ஒரு நொடியில் திரும்பி வந்துவிட்டாய் .3-9-2
Xxx
வேள்வித் தலைவர்கள், ஆதித்யர்கள், ருத்திரர்கள், வசுக்கள், வானமும் பூமியும் ஒன்றுபட்டு நிற்கும் எல்லா தேவர்களும் எங்கள் வேள்விகளைக் காப்பார்களாகுக; வேள்விக் கொடியை உயர்த்தட்டும் RV 3-8-8
— subham —
TAGS. செப்டம்பர் 2021, காலண்டர், ரிக் வேத பொன்மொழிகள், 3 வது மண்டலம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ருக்மிணீஷ விஜய– ஆறாம் மகா காவியம் B.Kannan,Delhi
அன்பார்ந்த ஞானமயம் / தமிழ் முழக்கம் தமிழ் நெஞ்சங்களுக்கு தில்லியிலிருந்து கண்ணன் வணக்கம்.
இன்றைக்கு நாம் கேட்கப் போவது பிரபல கவி மாகா, மற்றும் மகான் ஶ்ரீவாதிராஜர் பற்றியது தான்….
தென் கர்நாடக மாநிலம், கும்பாஸி ஜில்லா அருகே ஹூவினகரே என்னும் அழகிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வந்த ஸ்ரீ ராமாச்சார்யர் (தேவபட்டா) – ஸ்ரீமதி ஸரஸ்வதி(கௌரி) எனும் துளுவக்குலப் பிராமணத் தம்பதிகளுக்கு வெகு நாட்களாகப் புத்திரப் பாக்கியம் இல்லாமல் இருந்தது. உடுப்பி ஸோதே மடத்தின் 19-வது மடாதிபதியாக விளங்கிய ஶ்ரீவாகீஸ தீர்த்தரின் அருளால் அவர்களுக்கு இரண் டாவது மகனாக ஸ்ரீ வாதிராஜர், மாக மாத, சுத்த த்வாதஸி அன்று (1480 ) சுபநாளில் அவதரித்தார். இவருடைய பூர்வாஸ்ரமப் பெயர் ஸ்ரீ பூவராஹன். குரு வாகீஸதீர்த்த ருக்குக் கொடுத்த வாக்குப்படி,8 வயதானவுடன் அவரை மடத்தில் சேர்த்து விட்டனர். அங்கு,ஶ்ரீவாதிராஜ தீர்த்தர் என்றச் சன்னியாச நாமத்துடன் துறவியாக நியமிக்கப் பட்டு, ஶ்ரீவித்யநிதி தீர்த்தரின் பராமரிப்பில் வைக்கப்பட்டார். பின்னர் குருவின் நேரடி பார்வையில் கல்விகற்றுப் புலமைப் பெற்றார்.பெயருக்கு ஏற்ப வாதத்தில் எதிரிகளை வென்று அவர்களின் கர்வம், அகங்காரத்தை அடக்குபவராக விளங்கினார்.
வாதிராஜ தீர்த்தர் ஓரு துவைதத் தத்துவஞானியும், கவிஞரும் ஆன்மீகவாதியு மாவார். இவரது காலத்தில் ஒரு பன்மொழிப் புலமைக் கொண்டவரான இவர்,
மத்துவ இறையியல் மற்றும் தத்துவங்கள் குறித்துப் பல படைப்புகளை எழுதினார். கூடுதலாக, இவர் ஏராளமான கவிதைகளையும் இயற்றினார். சோதே மடத்தின் தலைவராக,(வடகன்னட) உடுப்பியில் உள்ள கோயில் வளாகத்தைப் புதுப்பித்து, பரியாய வழிபாட்டு முறையை நிறுவினார். மத்துவரின் படைப்புகளில் உத்வேகம் கொண்டு கன்னடத்திற்கு மொழிபெயர்த்ததன் மூலம் அக்கால கன்னட இலக்கியங் களை வளப்படுத்தியப் பெருமையும் இவருக்கு உண்டு]. மேலும், ஹரிதாச பக்தி இயக்கத்திற்கும் பங்களிப்பு செய்தார். இவரது படைப்புகள் அவற்றின் கவிதை செழிப்பு, கூர்மையான அறிவு மற்றும் நகைச்சுவை ஆகியவற்றால் வகைப்படுத்தப் படுகின்றன
ஒரு சிறந்த எழுத்தாளரான இவர், அறுபதுக்கும் மேற்பட்ட படைப்புகளுக்குப் பெருமைச் சேர்த்துள்ளார். குறுகிய பாடல்கள் மற்றும் காவியக் கவிதைகள் முதல் துவைதத் தத்துவங்களிலுள்ளச் சிக்கல்களைப் பற்றியச் சுருக்கமான அறிவார்ந்தப் படைப்புகள் வரை இவரது சாயல் வேறுபட்டது. அயவதானா என்ற பெயரில் பல கவிதைகளை எழுதினார். யுக்திமாலிகா எனற படைப்பு இவரது மகத்தானப் பணியா கப் பரவலாகக் கருதப்படுகிறது. இவர் பல காவியக் காப்பியங்களையும் இயற்றினார்.
அவற்றில் குறிப்பிடத்தக்கது !9 காண்டங்கள் அடங்கிய ருக்மிணீஷ விஜயநூலாகும். ஆஷாட சுக்ல தசமியிலிருந்து, கார்த்திகைச் சுக்ல பௌர்ணமி வரையிலான நான்கு மாதகாலம் சாதுர்மாஸ்யப் புண்ணியக் காலம் எனப்படும். இது மகாவிஷ்ணுவை வழிபடுவதற்கு மிகவும் உகந்ததாகும். துறவிகள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே இருந்தவாறு, வேறு எங்கும் விஜய யாத்திரை மேற்கொள்ளாமல், அன்றாடப் பூஜை, புனஸ்காரங்களை நடத்துவர். அப்படியொரு சந்தர்ப்பத்தில் மகான் ஶ்ரீவாதிராஜ தீர்த்தர் வாழ்வில் நடந்த ஓர் அற்புத நிகழ்வைத்தான் இப்போது பார்க்கப்போகிறோம். இது அவரது வாழ்க்கைச் சரிதத்தைக் கூறும் ஶ்ரீராமசந்திராச்சாரியார் இயற்றிய “ஶ்ரீவாதிராஜ குருவர சரிதாம்ருதா” என்ற நூலில் (அத்தி.3, சுலோகம் 4–10) விவரிக்கப்படுகிறது. இவர் சார்வரி ஆண்டு பங்குனி மாதம் (1600) பகுள த்ருதியை அன்று பக்தர்கள் வேதகோஷம் முழங்க, ஜீவத்துடன் பிருந்தாவனப் பிரவேசம் அடைந்தார்.
ஒருசமயம் மகான் புண்ணியபுரி என்றழைக்கப்படும் புனே நகரில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் சம்ஸ்க்ருதப் பண்டிதர்களின் வித்வத் சபை கூடி, எந்த மகாகாவியத்தை மிகச் சிறந்தப் படைப்பாகக் கருதலாம் என்பதைத் தீர்மானிக்க விவாதத்தில் ஆழ்ந்திருந்தது.முடிவில் அனைவரது ஒப்புத லுக்கு இணங்க கவி மாகாவின் “சிசுபால வதம்” அதற்கு ஏற்றது எனத் தேர்ந் தெடுத்தது. .
இதில் மாத்வர்களுக்குச் சற்றும் இணக்கமில்லை. மாகா என்னத்தான் விஷ்ணுவைப் போற்றியிருந்தாலும், கிருஷ்ணரைத் தாழ்த்தி, வில்லன் சிசுபாலனை உயர்த்திப் புகழ்ந்திருந்ததை ஏற்க மனமில்லை. மகான் ஶ்ரீவாதிராஜருக்கும் இதே மனநிலை தான். அன்றைக்கு எட்டு நூற்றாண்டுகளுக்கு முன் மாகாவால் இயற்றப்பட்டக் காவியத்துக்குச் சவால் விடவேண்டும் என்றால், அதைவிட மேண்மையான ஒரு காப்பியத்தை இயற்ற வேண்டும் என எண்ணம் கொண்டார். உடுப்பி மடத்தில் அதே பின்புலனை வைத்துத் தான் எழுதியக் காவியத்தின் கையெழுத்துப் பிரதி மற்றும் மேல் விவரங்களை வைத்திருப்பதால், அவற்றைக் கொண்டு வந்துச் சமர்ப்பிக்க மூன்றுவாரக் கால அவகாசம் தேவை, அதையும் பரிசீலித்து விட்டு ஒரு முடிவுக்கு வரலாம் அதுவரைப் பொறுத்திருக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொண்டார்…அவர்களும் சம்மதித்தனர்.
கவி மாகாவைப் பற்றி அறிந்துகொள்ளுவது இப்போது அவசியமாகிறது.
மாகா பொ.ஆ.பின் 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ஶ்ரீமலாநகர் எனும் தற்போது ராஜஸ்தானிலுள்ள பின்மல் ஊரில்,செல்வந்தர் தத்தகா சர்வாச்சார்யாருக்கு மகனாகப் பிறந்தார். தனது தந்தை. பாட்டனார் சுப்ரபதிகா போன்று இவரும் பின்னாளில் வடமொழியில் பாண்டித்யம் பெற்று, அந்நாட்டு அரசன் வரமலதாவின் அரசவைக் கவிஞராகத் திகழ்ந்தார். அவர் பல நூல்களை எழுதியதாகச் சொல்லப் பட்டாலும் அவையெல்லாம் வெளியுலகத்துக்கு வரவேயில்லை, ஒரேயொரு காவியத்தைத் தவிர. உலகெங்கும் பேசும்பொருளாக விளங்கும் சிசுபாலவதம் தான் அது! ஐந்துமகா காவியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ( ரகுவம்சம், குமார சம்பவம், கிராட்டார்ஜுனீயம், சிசுபாலவதம், நைஷதீய சரிதம்)
இந்நூலைப் பற்றியப் பல சொலவடை அறிஞர்களிடையேப் புழக்கத்தில் உள்ளன. தருமி புலவர் தன்னை வம்புக்கிழுத்த நக்கீரரிடம் சொல்வது போல், “பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்கள் (மாகா) இருக்கிறார்கள், அதில் குற்றம்,குறை கண்டுப் பிடித்து பேர் வாங்கும் புலவர்களும் (மல்லிநாதர்) இருக்கிறார்கள். ஆம், மல்லிநாத சூரியின் விமர்சனம், விளக்கவுரை அல்லது வியாக்கியானம் இல்லாமல் சிசுபால வதம் போன்ற காவியங்களைப் புரிந்துக் கொள்ள இயலாது! மல்லிநாதரே சொல்கிறார், “”माघे मेघे वयम् गत:”–மாக காவியம், மேகதூதம் நூல்களைப் படித்துப் புரிந்துக் கொள்வதிலேயே காலம் ஓடிவிடுகிறதே!” என்று வியக்கிறார்.
எப்போதுவரை கவி மாகா இலக்கியத் தொடுவானில் எழும்பவில்லையோ, அதுவரைதான் பாரவியின் கவியாற்றல் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் என்பது மற்றொரு பழமொழி!
உபமானத்துக்கு காளிதாஸன், பொறுள்செறிவுக்குப் பாரவி, வார்த்தை ஜாலங்களுக்கு தண்டின், இவையெல்லாவற்றையும் கொண்டவர் கவி மாகா என்பது பிறிதொன்று.
ஒரு மகா காவியத்துக்குரிய லட்சணங்களாக அந்த வித்வத் சபை எதிர்பார்த்தது: கதையின் கரு இந்திய இதிகாசத்திலிருந்தோ, வரலாற்று நிகழ்ச்சியை ஒட்டியோ இருக்க வேண்டும்
அர்த்த, காமம்,தர்மம், மோட்சம் ஆகியவற்றைச் சொல்வதாக இருக்க வேண்டும்
அதில், நகரம், கடல்,மலை, சூரிய-சந்திர உதய வர்ணனை, ஜலக்ரீடை, உல்லாச கேளிக்கை, காதலர் பிரிவு வேதனை, திருமண நிகழ்ச்சி, குழந்தை பிறப்பு, ராஜ சபை, படை அணிவகுப்பு,போர்க்களம், வெற்றி வாகைச் சூடுதல் ஆகியவை இடம் பெற வேண்டும். இவற்றை மாகா உபயோகித்திருந்தாலும், அவற்றைக் வெளிக்காட்டத் தனக்கென்று ஒரு தனி வழியைப் பின்பற்றிக் கொண்டார்.
“முதல் 9 சர்கங்களிலேயே சொல்லகராதில் உள்ள எல்லா எழுத்துக்களையும் உபயோகித்து விட்டதால் பின்னால் வரும் அத்தியாயங்களில் வேறு எந்தப் புதுச் சொற்களையும் சேர்க்க முடியாமல் போனதாம்!” என்ற சொலவடையும் ஒன்றுண்டு.
தனது வீரரஸக் காவியத்துக்கானக் கதைக் கருவை, மகாபாரதம் சபாபர்வத்தில் (அத்.33-45) கூறப்பட்டுள்ளச் சம்பவங்களையே நிலைக்களனாக எடுத்துக் கொண்டுள் ளார். பாகவதத்தில் இதுவே 10-வது ஸ்காந்தம்அத்.74-ல் வருகிறது. அக்காலக் கட்டத்தில் ஆண்களும், மகளிரும் உபயோகித்த ஆடை, ஆபரணங்களை விவரிக் கிறார்–பரிதானா, அம்சுகா, வஸனா, வஸ்த்ரா, அம்பரா,உத்தரீயம் என்றும், மளிர் அணியை, நீவீ, வஸனா, அம்சுகா, கௌஷேயா, அதிவாசா, நிதாம்பர வஸ்த்ரா, இடையில் அணியும் கபந்தா(ஓட்டியாணம்) என்று. ரைய்வதகா (கிர்நார்) மலையின் ஒரு பக்கம்நிலவு உதிப்பதையும், மறுபக்கம் சூரியன் மறைவதையும் பார்க்கும்போது, அது ஒரு பெரிய யானையின் முதுகின் இருபுறமும் தொங்கி ஆடி அசையும் இரண்டு மணிகள் போல் காட்சியளிக்கிறதாம்!(4-20) இந்த உருவகம் பிரபலமடைந்து, “கண்டாமாகா”–மணிமாகா– என்றப் புனைப் பெயரால் அவர் அறியப்படலானார். கவி தண்டின் காவ்யாதர்சாவில் விவரிக்கும் அனைத்துச் சொல்லணிகளையும் திறம்படக் கையாண்டு மற்றப் புலவர்களைத் திணற வைத்துள்ளார்.
அவருடைய எழுத்துக்களில்,ஜோதிடம்,அரசியல், வேத கோஷம், வான சாஸ்திரம், யானை,குதிரை சாஸ்திரம் பற்றியச் செய்திகள்,சங்கீதம், தத்துவம் ஆகிய விஷயங் களைக் காணலாம். அவர் ஒரு நடமாடும் கலைக்களஞ்சியம் என்றால் மிகையல்ல.
இப்படிப்பட்ட ஓர் அசகாயச் சூரரின் காவியத்தைத் தான் ஶ்ரீவாதிராஜர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எதிர்ப்புகளைச் சாமர்த்தியமாக எதிர்கொண்டு வெற்றிகரமாக
மீண்டு வருவதில் தான் ஒரு கவிஞனின் படைப்புத் திறன் மேன்மை அடங்கியிருக்கிறது. அதுமாதிரி சிசுபாலவதம் மகா காவியத்துக்குச் சவால் விட ஶ்ரீவாதிராஜர் போன்ற மகான் வரவேண்டியிருந்தது. உடுப்பியிலிருந்துப் பிரதியை எடுத்து வர வேண்டும் என்றுச் சொன்னதெல்லாம் ஒரு சாக்குப் போக்கே! அந்தக் கால இடை வெளியில் ஒரு சாதனை நிகழ்த்தத் தயாராகி விட்டார்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கோவில் கொள்ளைத் துறையும் ஒரு ராஜாவின் கதையும்!
ச.நாகராஜன்
1
திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் மாத இதழான ஹெல்த்கேர் அனைவரும் ஆரோக்கியமாகவும் மன நிம்மதியுடனும் வாழ்வதற்கு வழிகாட்டும் கட்டுரைகளைக் கொண்டு வெளிவரும் தமிழ் இதழாகும். இதன் ஆசிரியர் ஆர்.சி.ராஜா சிவன் பால் சித்தம் வைத்து வாழ்ந்து வருவதோடு அனைவரின் நலனையும் மனதில் கொண்டிருப்பவர் என்பது இந்த இதழைப் படிப்பவர்களுக்கு நன்கு புரியும். அவர் 2021, ஆகஸ்ட், 28ஆம் தேதியன்று ஒரு கதையை அனுப்பி இருந்தார் எனக்கு. நல்ல கதை. சிந்தனையைத் தூண்டி விடும் கதை. உடனே அவருக்கு இதை ஒரு கட்டுரையாக எழுதுங்களேன், ஏனெனில் இது இன்றைய ஆலய நிலையைச் சுட்டிக் காட்டுகிறது என்றேன். நீங்களே எழுதுங்கள் என்று பதில் அனுப்பி விட்டார் அவர். இதோ எழுதுகிறேன் – இந்தக் கதையை அனுப்பிய அவருக்கும் அவருக்கு இதை அனுப்பிய அவரது நண்பருக்கும் நன்றி கூறி!
2
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் தனது மந்திரியுடன் ஒரு நாள் மாலை நகர் வலம் சென்றார். ஆற்றங்கரை ஓரமாக அவர்கள் சென்ற போது ராஜா ஒரு வெள்ளரிக் கொடியைப் பார்த்தார். அதில் காய்கள் நன்கு காய்த்து அழகுறத் தொங்கின.
மந்திரியைப் பார்த்து ராஜா, “அதோ அந்தக் காய்களைப் பறித்து வாரும். உண்ணலாம்” என்றார்.
மந்திரி உடனே அதைப் பறிக்கப் போனார். அப்போது அங்கே ஒரு கண்பார்வையற்ற முதியவர் உட்கார்ந்திருந்தார்.
யாரோ ஒருவர் காயைப் பறிக்க முன் வருவதை உணர்ந்த அவர் கூறினார்:”ஐயா, காயைப் பறிக்காதீர்கள். அது வெள்ளரிக்காய் போலத் தோன்றும் குமட்டிக்காய். அதைத் தின்றால் வாந்தி தான் வரும்”.
கண்பார்வையற்ற ஒருவர் சொன்னதை நம்பாத ராஜா, “மந்திரி, எங்கே அதைப் பறித்துச் சாப்பிடும். உமக்கு வாந்தி வருகிறதா என்று பார்க்கலாம்” என்றார்.
அரச கட்டளை ஆயிற்றே! மந்திரி காய்களைப் பறித்துச் சாப்பிட்டார். உடனே ஒரே வாந்தியாக வந்தது. மந்திரி தொடர்ந்து வாந்தி எடுத்ததைப் பார்த்த ராஜா திகைத்துப் போனார்.
“அட, கபோதியே! நீ சொன்னது உண்மையாக அல்லவா இருக்கிறது. நான் அரசன். எனது மந்திரி வாந்தி எடுக்கிறாரே. இதை எப்படி நிறுத்துவது? வழி தெரியுமா உனக்கு?” என்றார் ராஜா.
“ராஜாவா! வணக்கம் ராஜா! ஒன்றும் கவலைப்பட வேண்டாம். அருகில் கை போலக் காட்சி அளிக்கும் ஒரு சிறிய செடியில் வளர்ந்துள்ள இலைகளைப் பறித்துக் கசக்கிச் சாப்பிடச் சொல்லுங்கள். வாந்தி உடனே நிற்கும் “ என்றார் அந்தக் குருடர்.
உடனே மந்திரி அப்படியே பச்சிலைகளைப் பறித்து வாயில் போட்டுக் கொண்டார். வாந்தியும் நின்றது.
ராஜாவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. குருடரைப் பார்த்து, “அது சரி, உனக்குத் தான் கண் பார்வை இல்லையே, இதையெல்லாம் எப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்டார்.
குருடர் கூறினார்: “ அரசே! நாட்டில் எங்கும் பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்துத் தாண்டவம் ஆடுகிறது. அப்படி இருக்கும் போது வெள்ளரிப் பிஞ்சுகளை எவனாவது செடியில் விட்டு வைத்திருப்பானா? ஆகவே தான் அதை குமட்டிக்காய் என்று அறிந்தேன். அத்தோடு இறைவன் எப்போதுமே நோய் கொடுக்கும் காயை வைத்திருந்தால் அதற்குப் பக்கத்திலேயே அதைத் தீர்க்கும் மருந்தையும் வைத்திருப்பார் என்பதால் அந்த பச்சிலை பற்றிச் சொன்னேன்” என்றார்.
ராஜாவுக்கு ஒரே மகிழ்ச்சி. “அடடா! அற்புதம். என் பெயரைச் சொல்லிக் கிழக்கு வாயிலுக்குப் போ. அங்கே பட்டை சாதம் இலவசமாகத் தருவாங்க. வாங்கிச் சாப்பிடு” என்றார்.
நாட்கள் பல கழிந்தன.
அயல் தேசத்து வியாபாரி ஒருவர் அந்த அரசனிடம் வந்தார். “ராஜாவே, என்னிடம் வைரம் நிறைய இருக்கிறது. வாங்கிக் கொள்கிறீர்களா?” என்று கேட்டார்.
இந்த வைரங்கள் நிஜமானவையா அல்லது போலியானவையா என்று எப்படிக் கண்டு பிடிப்பது என்று ராஜாவுக்குக் குழப்பம் வந்து விட்டது. “மந்திரியைக் கூப்பிட்டு இது பற்றி உனக்குத் தெரியுமா” என்றார்.
மந்திரிக்கு வாந்தி எடுத்த அனுபவம் ஞாபகத்திற்கு வந்தது. வைரத்தைச் சாப்பிடச் சொன்னால் உயிர் அல்லவா போய்விடும்! அலறிப் போனார்.
“எனக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது. ஒரு வல்லுநரை அழைத்துத் தான் கேட்க வேண்டும்” என்றார் அவர்.
ராஜாவுக்கு அந்தக் குருடரின் ஞாபகம் வந்தது.
மந்திரியைப் பார்த்து, “அந்த குருடர் கொஞ்சம் விஷயம் அறிந்தவராக இருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்’ என்றார்.
மந்திரியும் அப்பாடா பிழைத்தோம் என்று எண்ணி அந்தக் குருடரை அழைத்து வரச் செய்தார். குருடரும் வந்தார்.
அவரிடம் ராஜா, ” அப்பனே! இது நிஜமான வைரமா? போலியும் கலந்திருக்கிறதா என்று எப்படிக் கண்டு பிடிப்பது. சொல்லேன்” என்று கேட்டார்.
“அரசே, இது மிக சுலபம். கற்களை வெயிலில் வையுங்கள். கண்டு பிடித்து விடலாம்” என்றார் குருடர்.
ராஜா அசந்து போனார் – இது என்ன அற்புத உத்தியாக இருக்கிறதே என்று!
அப்படியே நல்ல வெயிலில் வியாபாரி கொண்டு வந்த வைரங்கள் வைக்கப்பட்டன. சிறிது நேரம் கழிந்தது. குருடர் அந்த வைரங்களைத் தடவிப்
பார்க்க ஆரம்பித்தார். சிலவற்றை ஒரு புறமாக வைத்து இவை நல்ல வைரங்கள் என்றார். இன்னும் சிலவற்றை வேறொரு பக்கம் வைத்து இவை போலி வைரங்கள் என்றார்.
ராஜா வியாபாரியைப் பார்த்து, “என்ன விஷயம்?” என்று அதட்ட, அந்த வியாபாரியும் குருடர் சொன்னது சரிதான் என்றும் அவர் தரம் பிரித்தது மிகவும் சரிதான் என்றும் உண்மையைக் கூறியதோடு அந்த வைரங்களை ராஜாவுக்கு இலவசப் பரிசாக அளித்து தண்டனையிலிருந்து தப்பித்தார்.
ராஜாவுக்கு ஆச்சரியம் தாளவில்லை.
“அப்பனே! எப்படி இப்படி எளிதாக கையால் தடவி கண்டு பிடித்தாய்? இரண்டு கண்களும் நன்றாக உள்ள எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லையே” என்று வியப்புடன் கேட்டார்.
“அரசே!இது மிகச் சுலபமான ஒன்று தான். வெயிலில் வைத்த போது கண்ணாடி என்றால் அது சுடும் இல்லையா? நல்ல வைரங்கள் சுடாது. அதை வைத்து கண்ணாடிக் கற்களை ஒதுக்கி வைத்தேன். அவ்வளவு தான்” என்றார் குருடர்.
ராஜா அவரது அறிவை மெச்சி ,”மேற்கு வாயிலுக்குச் செல்லுங்கள், உங்களுக்கு பட்டை சாதம் தயாராகக் காத்திருக்கும். பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார்.
குருடரும் நகர்ந்தார்.
மாதங்கள் சில கழிந்தன. தன் குமாரனுக்கு நல்ல பெண்ணாகப் பார்க்க ராஜா விரும்பினார். பல தேச இளவரசிகளில் சிறப்பான ஒரு இளவரசியை எப்படித் தீர்மானிப்பது. யாரையும் அவர் நம்பத் தயாரில்லை. குருடரின் புத்தி கூர்மை அவருக்கு நினைவுக்கு வரவே அவரை அழைத்து வர ஏற்பாடு செய்தார் ராஜா. குருடரும் வந்தார்.
ராஜா தனது பிரச்சினையைச் சொன்னார்.
“நிறைய இளவரசிகள் இருக்கிறார்கள். எப்படி தேர்ந்தெடுப்பது மருமகளை?” என்று ராஜா கேட்டார்.
குருடர் ராஜகுமாரிகள் இருக்கும் இடங்கள் உட்பட அனைத்து விவரங்களையும் கேட்டார்.
“ராஜா! இது ரொம்ப சுலபம். உங்களது அடுத்த நாட்டிற்கு அடுத்த நாட்டில் உள்ள இளவரசியை நிச்சயம் செய்து மணத்தை முடித்து விடுங்கள்.
ராஜாவுக்கு ஒரே சந்தோஷம். இப்படிப்பட்ட பிரம்மாண்டமான பிரச்சினைக்கு இப்படி ஒரு வரியில் ஒரு தீர்வா?
சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்ற அவர் குருடரைப் பார்த்துக் கூறினார்’ “ஆஹா! அந்த இளவரசி அற்புதமான பெண் தான்! ஆனால் இவ்வளவு பேர் இருக்கும் போது அவளை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்? காரண காரியம் இல்லாமல் நீங்கள் தீர்மானிக்க மாட்டீர்களே. எப்படி தேர்வு செய்தீர்கள் என்று சொல்லுங்கள்” என்றார்.
“அரசே! அந்த ராஜாவை உங்க சம்பந்தி ஆக்கிக் கொண்டால் எல்லை பிரச்சினை வரவே வராது. இரண்டு பேருக்கும் நடுவில் இருப்பதால் நடு தேசத்து ராஜா அடங்கி இருப்பார். அத்துடன் நம் நாட்டில் நிலவும் பஞ்சம் ஒரேயடியாக ஒழிந்து விடும். நமது நாட்டில் மற்ற இரு தேசங்களின் நட்புறவால் வளம் கொழிக்கும். எல்லை பிரச்சினையும் என்றுமே இருக்காது” என்றார் குருடர்.
“அடடா! என்ன ஒரு அற்புதமான யோசனை. இதோ இப்போதே நம் வடக்கு வாயிலுக்குச் செல்லுங்கள் . அங்கு உங்களுக்கு பட்டை சாதம் தயாராக இருக்கும். அதை வாங்கிச் சாப்பிடுங்கள்’ என்று உபசரித்தார் ராஜா.
குருடரும் வடக்கு வாயிலை நோக்கிப் போனார்.
நாட்கள் சில கழிந்தன.
ராஜா ஒரு நாள் அந்தக் குருடரை தனது அந்தரங்க அறைக்கு வரச் சொன்னார். மற்ற அனைவரையும் உள்ளே வரக் கூடாது என்று உத்தரவிட்டார்.
குருடரைப் பார்த்து, “அப்பனே! நீண்ட காலமாக என் மனதை அரித்து வரும் விஷயத்தைப் பற்றி உன்னைக் கேட்க விரும்புகிறேன். இந்த தேசத்தில் பலரும் என்னை பிச்சைக்காரிக்குப் பிறந்தவன் என்கிறார்கள். இதைக் கேட்கவே சகிக்கவில்லை. இது உண்மையா? காரண காரியத்தோடு பதிலைச் சொல்லு” என்றார் ராஜா.
குருடர் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். ராஜா அவரைப் பார்த்து, “பயப்படவே வேண்டாம். உம்மை ஒன்றும் செய்ய மாட்டேன். இது சத்தியம். உண்மையைச் சொல்லலாம்” என்றார்.
குருடர் ராஜாவைப் பார்த்து, “ராஜாவே! இதில் சந்தேகமே வேண்டாம். நீங்கள் பிச்சைக்காரிக்குப் பிறந்தவர் தான்!” என்றார்.
ராஜாவுக்கு ஒரே வருத்தம். குருடரைப் பார்த்து, “அடடா! எவ்வளவு சோகமான செய்தி! இருந்தாலும் சரி, எப்படி இதைச் சொல்கிறாய், அந்தக் காரணத்தைச் சொல்” என்றார்.
குருடர் கூறினார்: “ ராஜாவே! முதலில் நீங்கள் என்னைப் பார்த்தீர்கள். குமட்டிக்காயைப் பற்றிச் சொல்லி உங்கள் மந்திரியைக் காப்பாற்றினேன். அதற்காக எனக்கு கிழக்கு வாயில் பட்டை சாதத்தைக் கொடுத்தீர்கள். உண்மையான ராஜாவாக இருந்தால் தனது வைர மோதிரம், மாலை உள்ளிட்டவற்றை கழட்டிக் கொடுத்திருப்பார். அடுத்ததாக கோடிக் கணக்கான பெறுமானமுள்ள வைரங்களை தரம் பிரித்ததோடு அந்த வியாபாரி அதை இனாமாக உங்களுக்குக் கிடைக்கச் செய்தேன். அதற்கு மேற்கு வாயில் பட்டை சாதத்தை வழங்கினீர்கள். உண்மையான ராஜாவாக இருந்திருந்தால் எனக்கு அரண்மனை பொக்கிஷத்தை வாரி வழங்கி இருப்பார். அடுத்து ஒரு ராஜ்யத்தையே உங்கள் வசமாக்கியதோடு நடுவில் இருந்த நாட்டையும் நிரந்தர நட்பு நாடாக்கி ஒரேயடியாக நம் நாட்டின் பஞ்சத்தையும் ஒழிக்க வழி வகை கூறினேன். அதற்கு எனக்கு நீங்கள் அளித்தது வடக்கு வாயில் பட்டை சாதம். உண்மை ராஜாவாக இருந்திருந்தால் எனக்கு மாடமாளிகை கூட கோபுரம் கொடுத்து என்னை உச்சி மேல் வைத்துக் கொண்டாடி இருப்பார். பல கிராமங்களை மானியமாக அளித்து என்னை மேலே உயர்த்தி இருப்பார் அல்லவா! நீங்களோ என்ன செய்தீர்கள் என்று எண்ணிப் பாருங்கள். உங்களுக்கு பட்டை சாதத்திற்கு மேலே போக உங்கள் புத்தி அனுமதிக்கவில்லை. வாயில் வாயிலாக கிழக்கு, மேற்கு, வடக்கு என்று அனுப்பிப் பட்டைச் சாதம் வழங்கினீர்கள். இதிலிருந்தே தெரியவில்லையா அலைந்து பிச்சை எடுக்கும் ஒரு பிச்சைக்காரிக்குத் தான் நீங்கள் பிறந்தீர்கள் என்பது” – இப்படி விளக்கமாகக் கூறி முடித்தார் அந்த முதியவரான குருடர்.
ராஜா வெட்கித் தலை குனிந்தார். குருடரின் மன்னிப்புக் கேட்டு விசும்பி விசும்பி அழுதார்.
இது தான் கதை!
இன்றைய தமிழகத்தின் நிலைமையும் இது தான்! மக்கள் கொடுத்த அரசுப் பொறுப்பைத் துஷ் பிரயோகம் செய்து தமது “புத்திக்கு எட்டியவரை” கோவில்களை எப்படி எல்லாம் அழிக்கலாம், அந்தச் சொத்துக்களை எப்படி எல்லாம் சுரண்டலாம் என்று பார்க்கும் கோவில் கொள்ளையையும் பண்பாட்டை அழிக்கும் செயலையும் நன்கு விளக்கும் கதை இது தான்!
அனைவருக்கும் பரப்ப வேண்டிய கதை இது!
3
ரீடர்ஸ் டைஜஸ்ட் மாத இதழில் சில ஆண்டுகளுக்கு முன்னர் படித்த ஜோக் ஒன்று நினைவுக்கு வருகிறது. அதை நவீனமாக்கித் தருகிறேன் இங்கு.
நவீன அறிவியல் உத்தியின் படி ஒரு புது வித கார் வடிவமைக்கப்பட்டது.
அதை டிஸைன் செய்த பேரறிஞரின் மானேஜர் பத்திரிகைகாரர்கள், அறிஞர்கள்,சாமானிய மக்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒரு டெமோவுக்கு அழைத்தார்.
மைதானம் ஒன்றில் காரை நிறுத்தி அதன் வடிவமைப்பை விளக்கினார் மானேஜர்.
“அற்புதமான இந்தக் காரில் பிளாஸ்டிக் இல்லை. மாசுப் பொருள்களை ஏற்படுத்தும் எரிபொருள் இல்லை. பேரறிஞர் கண்டுபிடித்த கண்டுபிடிப்பாக இதைக் கொள்ளலாம். இதோ இந்த பட்டனை அமுக்கினால் ரிமோட் கண்ட்ரோலினால் இது ஓடும்! பாருங்கள் இதோ, ஓடப் போகிறது” என்று கூறியபடியே அவர் ஒரு பட்டனை அமுக்கினார்.
கார் வெகு விரைவாகப் பறந்தது. அனைவரும ஆஹா ஆஹா என்று வியந்தனர்.
ஆனால் திடீரென்று மைதானத்தில் ஒரு இடத்தில் அந்தக் கார் ஒரு குட்டிக் கரணம் போட்டது. அனைவரும் ஓவென்று கூவினர். இன்னும் சில இடங்களிலும் அந்தக் கார் குட்டிக் கரணம் போட்டது.
ஜனங்கள் வியந்தனர். டெமோ முடிந்தவுடன்வடிவமைப்பு பற்றி கூறி டெமோ செய்தவரிடம் அனைவரும் கேட்ட ஒரே கேள்வி இது தான்: “ பேரறிஞரின் வடிவமைப்பு பற்றி நீங்கள் அளந்த கதை வியக்கும் படியாகத் தான் இருக்கிறது. ஆனால் ஏன் சில இடங்களில் இது குட்டிக் கரணம் போடுகிறது? இதில் பயணிப்பது ஆபத்தாக அல்லவா இருக்கும். உயிர் போய் விடுமே. இது குட்டிக் கரணம் போடுவதன் காரணம் என்ன?”
எல்லோரும் பதிலுக்காக நெருக்கவே அந்த டெமோ செய்தவர் உண்மையைச் சொல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார்!
“அதுவா! வேறொன்றுமில்லை. இந்தக் கார் முற்றிலும் பன்றித் தோலினால் ஆனது. ஆகவே தான் மைதானத்தில் சகதியாக உள்ள இடங்களில் எல்லாம் அது குட்டிக் கரணம் போடுகிறது”
அடடா! என்ன அழகான ஜோக்! மலத்தைத் தின்று உயிர் வாழும் பன்றியின்
பிறவிக் குணத்தை நவீன தொழில்நுட்பம் கூடப் போக்க முடியாது!
உண்மை தான் இல்லையா!
சுரண்டுவது, அழிப்பது என்பதை பிறவிக் குணமாகக் கொண்டவர்களும் கூட சகதிகளில் குட்டிக் கரணம் போடுவது இயல்பே அல்லவா! கோவில்களை இறைவன் இருக்கும் இடம் புண்ய தீர்த்தமாக நினைப்பது பக்தர்கள். அதை சகதிகளாக நினைப்பவர்கள் என்ன செய்வார்கள்?
இந்த பன்றிக் காரில் யாராவது சவாரி செய்ய முடியுமா, சொல்லுங்கள்!
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 29-8-2021 அன்று ஒளிபரப்பான உரை!
பிருந்தாவனம் திருத்தலம்!
அனைவருக்கும் ஜன்மாஷ்டமி நல் வாழ்த்துக்கள்!
கண்ணன் திருவடி எண்ணுக மனமே, திண்ணம் அழியா வண்ணம் தருமே
தருமே நிதியும் பெருமை புகழும், கருமா மேனிப் பெருமான் இங்கே!
மகாகவி பாரதியார் வாழ்க!
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது இந்து மக்கள் அனைவரும் போற்றிக் கொண்டாடும் திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றாக அமைகின்ற பிருந்தாவனம் ஆகும். இந்தத் தலமானது உத்தரபிரதேசத்தில் உள்ள மதுராவிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
விருந்தா என்றால் துளஸி என்று பொருள் விருந்தாவனம் என்றால் துளஸிச் செடிகள் அதிகமுள்ள வனம் என்று பொருள். பத்து அவதாரங்களில் எட்டாவது அவதாரமாக அமையும் கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணரின் இளமைக் காலம் கழிந்த இடம் இதுவே. இங்கே தான் கோகுலம் கோவர்த்தனம் ஆகிய புராண பிரசித்தி பெற்ற இடங்கள் உள்ளன. கிருஷ்ண பக்தையான ராதாவின் திருத்தலம் என்பதோடு இங்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட கோவில்களும் ராதாதேவியுடன் தொடர்பு படுத்தப்படும் அழகிய இடங்களும் உள்ளன.
இங்கு ஓடும் அழகிய யமுனை ஆற்றில் அமைந்துள்ள ஏதேனும் ஒரு துறையில் ஸ்நானத்தைச் செய்து பக்தர்கள் இங்குள்ள கோவில்களைத் தரிசிக்கச் செல்வது மரபாக இருக்கிறது. மாலை நேரங்களிலோ வர்ணிக்க முடியாதபடி அகல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு யமுனை ஆறும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் ஜெகஜோதியாக அன்றாடம் காட்சி தரும் அழகே
அழகு!
கேசி காட் துறை முக்கியமான துறையாகும். இங்கு தான் கிருஷ்ணர் கேசி என்ற அசுரனை மாய்த்தபின் வந்து ஸ்நானம் செய்தார். இங்கு தான் மதன்மோகன் ஆலயம் உள்ளது. இங்கு வழிபாட்டுடன் அழகிய இந்தத் தலத்தைக் காணும் வகையில் படகிலும் செல்ல முடியும்.
மிகப் பழம் பெரும் ஆலயமான ஸ்ரீராதா மதன் மோகன் ஆலயம் காலிதா கட் அருகே உள்ளது இந்த ஆலயம் சைதன்ய மஹாபிரபுவுடன் தொடர்பு கொண்ட ஆலயமாகும்.
விருந்தாவன் ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவிந்த தேவ் ஆலயம் 1590ஆம் ஆண்டில் அம்பரை ஆண்ட ராஜா மான் சிங்கினால் கட்டப்பட்ட ஒன்றாகும். கொடுங்கோலன் அவுரங்கசீப்பினால் இந்த ஆலயம் சேதப்படுத்தப்பட்டதால் இது மூன்றடுக்குடன் மட்டுமே இன்று காட்சி அளிக்கிறது. இதற்குப் பின்னால் உள்ள ஒரு சிறு கோவிலிலேயே இன்றைய பூஜைகளும் வழிபாடும் நடக்கின்றன. கர்பக்ருஹமானது வெள்ளியாலும் சலவைக் கற்களாலும் அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணர் பிறந்த ஜன்மாஷ்டமி அன்றும் ஹோலிப் பண்டிகையின் போதும் மக்கள் இங்கு திரளாகக் கூடுகின்றனர்.
விருந்தாவனத்தில் பெரிய ஆலயமாகத் திகழ்வது 54 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள பிரேம் மந்திர் ஆகும்.
2012இல் திறக்கப்பட்ட இந்த இரண்டு அடுக்கு சலவைக் கல்லினால் ஆன ஆலயத்தில் ராதா கிருஷ்ணரைச் சித்தரிக்கும் எண்பதிற்கும் மேற்பட்ட வண்ண ஓவியங்களை சுவரில் கண்டு மகிழலாம். முதல் தளத்தில் ராதையும் கிருஷ்ணரும் கோவில் கொண்டு அருள் பாலிக்க மேல் தளத்தில் ராமரும் சீதையும் குடி கொண்டு அருள் பாலிக்கின்றனர். அழகிய மலர்ச் செடிகளும் நீரூற்றுகளும் சுற்றி இருக்க ஒளி விளக்குகள் இரவு நேரங்களில் ஒளிர்ந்து கண் கொள்ளாக் காட்சியை அளிக்கிறது. ராஸ லீலையைச் சித்தரிக்கும் சிற்பங்கள் இந்தத் தோட்டங்களில் உள்ளன.
இங்குள்ள இன்னொரு ஆலயம் பங்கே பிஹாரி ஆலயமாகும். பங்கே என்றால் வளைந்திருப்பது என்று பொருள். ராஜஸ்தானிய அமைப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயத்தில் கிருஷ்ணர் பால பருவத்தில் திரிபங்க கோலத்தில் அதாவது மூன்று இடங்களில் வளைந்து அமைந்துள்ள திருவுருவில் காட்சி அளிக்கிறார்.
சேவா குஞ்ஜ் அல்லது நிதி வன் என்று அழைக்கப்படும் அழகிய பெரிய தோட்டம் அனைவராலும் விரும்பிச் செல்லும் ஒரு இடம். ஏனெனில் இங்கு தான் ராஸ லீலை நடைபெற்றதாக புராண வரலாறு கூறுகிறது. இங்கு இன்றும், தினமும், ராதையும் கிருஷ்ணரும் வருகை புரிவதாக பக்தர்கள் திடமாக நம்புகின்றனர். இதற்கு மிக அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ ராதா தாமோதர் ஆலயம். 1542ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது இந்த ஆலயம். கிருஷ்ணரின் காலடித் தடங்கள் பதிக்கப்பட்ட கோவர்த்தன மலைப் பாறை ஒன்று இங்கு பக்தர்களைப் பெரிதும் ஈர்க்கிறது. இன்னொரு முக்கிய ஆலயம் ரங்காஜி ஆலயம் ஆகும். 1851ஆம் ஆண்டு இது நிறுவப்பட்டது. ரங்கநாதர் குடிகொண்டிருக்கும் இந்த ஆலயம் ஆறு நிலை கோபுரத்தையும் 50 அடி உயரமுள்ள த்வஜ ஸ்தம்பத்தையும் கொண்டுள்ளது. இங்கு ஆண்டு தோறும் கொண்டாடப்படும் ரத மேளாவிற்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து ரதத்தை இழுத்துச் செல்கின்றனர்.
மிகப் பெரும் ஆசார்யரான வல்லபாசாரியர் தனது 11ஆம் வயதிலே இங்கு வந்து இதன் அழகில் லயித்தார். 84 இடங்களில் அவர் கீதை பேருரைகளை ஆற்றினார். ஆனால் ஒவ்வொரு வருடமும் நான்கு மாதங்கள் பிருந்தாவனத்தில் தங்குவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். 300 கோடி ரூபாய் செலவில் 1975ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இஸ்கான் ஆலயமும் இங்கு முக்கிய ஆலயமாகத் திகழ்கிறது.
பக்தர்கள் பார்த்து அனுபவிக்கும் இன்னும் ஒரு இடம் கோவர்த்தனம் ஆகும் இது விருந்தாவனத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.. கிருஷ்ணர் எப்படி கோவர்த்தனமலையை தனது ஒரு விரலால் தூக்கினார் என்பதை இங்குள்ள மக்கள் ஆனந்தமாக இன்றும் விவரிக்கின்றனர். காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஸ்ரீ கிருஷ்ணரும் ராதாதேவியும்அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். மகாகவி பாரதியாரின் அருள் வேண்டுதல் இது:
வருவாய் வருவாய் வருவாய் கண்ணா, வருவாய் வருவாய் வருவாய்! உருவாய் அறிவில் ஒளிர்வாய் கண்ணா, உயிரின் அமுதாய்ப் பொழிவாய் கண்ணா! நன்றி வணக்கம்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Namaste , Namaskaram to Everyone
This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.
Compiled from popular newspapers of India
Read by BRAHANNAYAKI SATHYANARAYANAN
XXX
This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at
TWO pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.
Even if you miss our live broadcast on SUNDAYS
you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day.
Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’
Read by BRAHANNAYAKI SATHYANARAYANAN
Xxxx
Hindus, Sikhs and Afghan nationals airlifted from Kabul
While India’s evacuation efforts in Afghanistan continued to focus on its own nationals, among the close to 400 people flown to India on Sunday were also about 60 Afghans, including 23 Sikhs and Hindus. With an increasing number of people, including foreigners, seeking help from India in their bid to exit Afghanistan, the Centre has deployed a team of diplomats and defence ministry officials at the Kabul airport to coordinate evacuation efforts with the US and other countries who have been facilitating the exercise.
The 60 Afghans, including two lawmakers Anarkali Honaryar and Narender Singh Khalsa, were brought out amid reports that the Taliban were not allowing locals to leave the country. India had earlier assured Afghan nationals, including members of minority communities, with ties to it that it would prioritise visas for them and set up an emergency e-visa service for them.
A total of 168 people, including 107 Indians and 23 Afghan Sikhs and Hindus, were flown earlier from Kabul to the Hindon airbase near Delhi in a C-17 heavy-lift military transport aircraft of the Indian Air Force (IAF).
Another group of 87 Indians and two Nepalese nationals was brought back in a special Air India flight from Dushanbe, a day after they were evacuated to the Tajikistan capital in an IAF 130J transport aircraft, officials said.
XXXX
FIR against poet Munawwar Rana for comparing Maharshi Valmiki to Taliban
Madhya Pradesh police have registered an FIR against Urdu poet Munawwar Rana for allegedly hurting religious sentiments by comparing Maharshi Valmiki, who wrote the Ramayana, with the Taliban, an official said.
The case was registered against Rana in Guna on Monday following a complaint filed by Sunil Malviya, state secretary of the BJP’s Scheduled Caste cell, and other members of the Valmiki community.
Talking to a channel, Rana had said, “Valmiki became a God after he wrote the Ramayana, before that he was a dacoit. A person’s character can change. Similarly, the Taliban, for now, are terrorists, but people and characters change.”
Malviya alleged that Rana disrespected Maharshi Valmiki with his comments and hurt the feelings of the Valmiki community and Hindus.
“He compared Maharshi Valmiki with the Taliban and hurt the religious feelings of Hindus. So, we have filed a complaint against him,” he told reporters.
Guna Superintendent of Police Rajiv Mishra on Monday said, “A case was registered against Rana at the Kotwali police station. The case will be forwarded to the district concerned (Lucknow in Uttar Pradesh).”
Sri-la-Sri Harihara Sri Gnanasambanda Desika Swamigal, 67, was anointed as the 293rd pontiff of the Madurai Adheenam at a ceremony on the mutt premises on Monday.
The anointment happened 10 days after Arunagirinatha Gnanasambantha Desika Paramacharya, who was the 292nd pontiff, died. Arunagirinatha died on August 13.
Many mutt heads including Kundrakudi, Thirupananthal, Siruvai, Kancheepuram South zone and Porur adheenams participated in the ceremony.
Joint commissioner of the Sri Meenakshi Sundareswarar temple K Chelladurai, HR and CE officials, were also present. Public stood in long queues and sought the blessing of the new Adheenam.
The new Adheenam also offered worship in the Sri Meenakshi temple and later went on a procession in the evening.
Madurai Adheenam is said to have been established by Saivite saint Thirugnanasambandar 1,500 years ago.
XXXXX
BIO DEGRADABLE LADDU BAGS IN BALAJI TEMPLE
The Defence research and development organization (DRDO) chairman G Sateesh Reddy along with Tirumala Tirupati Devasthanams executive officer Dr KS Jawahar Reddy inaugurated a biodegradable laddu bags counter at Tirumala on Sunday.
Speaking to reporters later, DRDO chief said “Our advanced systems laboratory located at Hyderabad has been doing a lot of research and inventing ways to find out the best environmentally friendly replacement options for the hazardous plastic. To minimise the usage of single-use plastic covers, DRDO has come out with eco-friendly biodegradable and compostable bags made of starch and corn which degrades naturally within 90 days and is also not harmful even if the stray cattle consume it,” added Sateesh Reddy.
A dedicated sale counter has been set up by the TTD near the Laddu counters adjacent to the Tirumala temple where the devotees can first buy these bags before heading to laddu counters to buy the prasadams.
XXXX
Xxxxx
14 ELEPHANTS SHORTLISTED FOR MYSURU DASARA JUMBO PARADE
KARNATAKA Forest department shortlists 14 elephants for Dasara Jumbo Savari
Though the State government is yet to decide on the scale of celebration of traditional Mysuru Dasara festival, the forest department has initiated the process of selecting ceremonial elephants for the world famous fete.
The preparation for Dasara begins two months earlier to prepare elephants for the grand procession. The forest department officials have written a letter to the Mysuru deputy commissioner to specify the number of jumbos needed for the procession. But the district administration is waiting for decision of State government. District in charge minister S T Somashekar recently said that the decision would be taken at a high-level meeting in Bengaluru. However, the forest department has started the process of selecting the elephants for the Jumboo Savari (Vijayadashami) on October 15.
The selected elephants include Golden Howdah carrier Abhimanyu from Mattigodu camp and Gopalaswamy, Lakshmana and Bhima.
XXXX
Indians in South Africa get threats
As uneasy calm settled over the troubled KwaZulu-Natal and Gauteng provinces of South Africa, worst affected in the July violence following the arrest of former president Jacob Zuma, cracks are beginning to show.
Their prime targets – Indian-origin South Africans in Durban and Johannesburg – say they have been receiving WhatsApp messages threatening renewed or ‘Part-II’ of the violence, asking “Indians to go back from where they came”.
A lot of Hindus live in South Africa.
Kimeshan Raman, a 33-year-old resident of Durban and social activist, who has recently applied for an OCI (Overseas Citizenship of India) card, said, “It’s a panic reaction. Messages and videos are being circulated targeting Indians. We want to protect our families.”
At least 330 people, many of them Indians, were killed in the riots that ravaged parts of South Africa for about two weeks, from July 9. It was four days after deadly arson and looting before President Cyril Ramaphosa deployed the army to quell the violence.
Mahatma Gandhi’s granddaughter Ela Gandhi, who resides in Durban, said, “We are trying to unite people across racial lines and build peace and goodwill.” But there’s a lot of uncertainty and insecurity because of threats from certain sections. “We don’t know where they are going to attack and when they are going to attack,” she said.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஞாயிற்றுக் கிழமை ஆகஸ்ட் 29 ஆம் தேதி ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் RANI SRINIVASAN
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது RANI SRINIVASAN
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./காணலாம்.
XXXX
மக்களை முட்டாளாக்க அரசு முயற்சிக்கிறது; கிருஷ்ணபிரேமி சுவாமிகள் காட்டம்
மக்கள் அனைவரையும் நாத்திகர்களாக மாற்ற நினைத்த அரசு, மக்களை முட்டாளாக்க முயற்சிக்கிறது என கிருஷ்ணபிரேமி சுவாமிகள் பேசினார்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற அரசின் திட்டம் குறித்து அவர் பேசியதாவது: கோயில் நடைமுறைகளை மாற்றுவதற்காகவே அரசு திட்டமிட்டுள்ளது. மூலவரை யார் தொட்டால் என்ன என்பது வீம்பா பக்தியா. மூலவரை தொடுவதற்கென்றே சிலர் உள்ளனர். மற்றவர்கள் தொட முடியாது. கடவுளை பாடிய ஆழ்வார்கள் கூட மூலவரை தொட்டதில்லை. ராமானுஜர் கூட தொட்டதில்லை. அரசர்கள், பீடாதிபதிகள் கூட மூலவர்களை தொட்டதில்லை.
அன்று மட்டும் அல்ல இன்றும் அதுவே நடைமுறை. வானமாமலை, அகோபிலம் ஜீயர்கள் மூலவர்களை தொட்டு அபிஷேகம் செய்கிறார்களா.. சங்கராச்சாரியார்கள் சிவன் சன்னதிக்குள் சென்று அபிஷேகம் செய்கிறார்களா… இல்லையே… இவை அனைத்துமே ஏற்கனவே நியமிக்கப்பட்ட சம்பிரதாயங்களின் படிதான் நடக்கிறது.
மக்களை நாத்திகர்களாக்கும் திட்டத்தில் இருக்கும் அரசு இவ்வாறு செய்து மக்களை பேதப்படுத்துகிறது. மக்களை முட்டாளாக்க முயற்சிக்கிறது. உங்களுக்கு அரசு தானாக கிடைக்கவில்லை. பெருமாள் தான் கொடுத்தார். என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்க வேண்டாம். மக்களிடம் கேட்டுப்பாருங்கள். கடவுள் இல்லை என்பவர் எத்தனை பேர். தற்போதுள்ள வழக்கத்தை மாற்றக்கூடாது என்றுதான் பெரும்பாலான மக்கள் கூறுகின்றனர்.
கோயிலுக்கு உள்ள சட்டத்தை உங்கள் இஷ்டப்படி மாற்றக்கூடாது. எங்களை மிரட்டுவது என்பது உங்களுக்கு கரும்பு தின்பது போல. இதை சமாளிக்கும் மனப்பான்மை எங்களுக்கு உண்டு. ராமானுஜர் காலம் தொட்டு எவ்வளோ பிரச்னைகளை சமாளித்துள்ளோம். சர்வேஸ்வரன் எதையும் திருத்துவான்… இதையும் திருத்துவான்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
XXXXX
கோவில் புறம்போக்கு நிலம்: வேறு எதற்கும் அரசு பயன்படுத்தவோ மாற்றவோ கூடாது
சென்னை,–‘கோவில் நலன்களுக்கு அல்லாமல், கோவில் பயன்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலத்தை, வேறு எதற்கும் அரசு பயன்படுத்தவோ, மாற்றவோ கூடாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, வைப்பாமலையில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் பரம்பரை அறங்காவலரான நந்தகுமார் தாக்கல் செய்த மனு:கோவில் நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறை கமிஷனரிடம் இருந்து, ஆட்சேபனையில்லா சான்றிதழ் பெறாமல், கோவில் பயன்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்களை வகைப்படுத்தவோ, மற்றவர்களுக்கு பட்டா வழங்கவோ முடியாது.
இத்தகைய புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு இருந்தால், வருவாய் துறையின் ஒத்துழைப்பின்றி நேரடியாகவே அகற்ற முடியும்.இந்நிலையில், கோவில் நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறை கமிஷனரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லாமல், அது போன்ற புறம்போக்கு நிலத்தில், 81 பேருக்கு, 2012 நவம்பரில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்தும், அதை புறக்கணித்து விட்டு பட்டா வழங்கி உள்ளனர்.எனவே, எதிர்காலத்தில் எங்களிடம் தடையில்லா சான்றிதழ் பெறாமல், கோவில் பயன்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலத்தில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கூடாது என, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவு:’அரசு நிலத்தில் தான் பட்டா வழங்கப்பட்டுள்ளது; பங்குனி உத்திரம் மற்றும் தேர் திருவிழா நடத்த, அங்கு நிலம் இருக்கிறது’ என, திருச்செங்கோடு தாசில்தார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.குறிப்பிட்ட ‘சர்வே’ எண்ணில் உள்ள நிலம், கோவில் பயன்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலமாக வகைப்படுத்தப்பட்டிருப்பது, பதிவேட்டில் தெளிவாகிறது. அதனால், கோவில் வசம் உள்ள இந்த நிலத்துக்கான அனைத்து உரிமைகளும் அறநிலையத் துறைக்கு உள்ளது.
எனவே, கோவில் நலன் தவிர, வேறு எந்த காரணங்களுக்காகவும், இந்த நிலத்தை அரசு பயன்படுத்தவோ, மாற்றவோ, கட்டுமானங்கள் மேற்கொள்ளவோ கூடாது.அறநிலையத்துறை சட்டம் மற்றும் வருவாய் நிலை விதியின்படி, கோவில் புறம்போக்கு நிலமாக வகைப்படுத்தியதை பயன்படுத்த, அறநிலையத்துறை கமிஷனரின் அனுமதியை மாவட்ட நிர்வாகம் பெற்றிருக்க வேண்டும் என, மனுதாரரின் வழக்கறிஞர் சரியாக சுட்டிக் காட்டியுள்ளார். எனவே, மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
Xxxxxxx
திருப்பதியில் பசுமை லட்டு பைகள் விற்பனை துவக்கம்
திருப்பதி பாலாஜி வெங்கடாசலபதி கோவிலில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்ட போதிலும் லட்டு பிரசாதம் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் கவர்கள் 50 மைக்ரானுக்கு மேல் இருந்ததால் தேவஸ்தானம் அதை பயன்படுத்தி வந்தது.
மேலும் அதற்கு மாற்றாக பல்வேறு காகிதப் பைகள், சணல் பைகள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்தது. லட்டு பிரசாதத்தின் தரத்தை அப்படியே பாதுகாக்க தேவஸ்தானம் எளிதில் மக்கி உரமாகக்கூடிய காய்கறி கழிவுகளில் இருந்தும் பூக்கள் மற்றும் காய்கறிகளின் விதைகளுடன் பைகளை தயாரித்து அளிக்க முடிவு செய்தது.
இந்நிலையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி. ஆர்.டி.ஓ ஐதராபாத்தில் உள்ள சோதனை கூடத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான பொருட்களைக் கண்டறிந்து அதை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிறுவன தயாரிப்பான எளிதில் மக்கும் தன்மை வாய்ந்த மற்றும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய லட்டு கவர்களை தயாரித்துள்ளது.
அதன் விற்பனை திருமலையில் நேற்று தொடங்கப்பட்டது. இதை டி.ஆர்.டி.ஓவின் தலைவர் சதீஷ் ரெட்டி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இவற்றை கால்நடைகள் உட்கொண்டாலும் அதனால் அவற்றிற்கு பாதிப்பு ஏதும் ஏற்படுவதில்லை. பல மாத பரிசோதனைக்கு பிறகு இந்த பையன்களின் தயாரிப்பு தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
XXXXX
மதுரை ஆதீன மடத்தின் புதிய பீடாதிபதி பதவியேற்பு
மதுரை ஆதீன மடத்தின் புதிய பீடாதிபதியாக ஹரஹர ஞானசம்பந்த தேசிய பராமச்சாரிய சுவாமிகள் ஆக., 23ல் பொறுப்பேற்றார்.
மதுரை ஆதீன மடத்தின் 292வது பீடாதிபதி அருணகிரிநாதர், 77 உடல்நலக் குறைவால் ஆக., 12ல் காலமானார். 2019 ஜூன் 6ல், ஹரஹர ஞானசம்பந்த தேசிய பராமச்சாரிய சுவாமிகள், இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டிருந்தார்.இவர் நேற்று, மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக பொறுப்பேற்றார். முன்னதாக, அருணகிரிநாதர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பூஜைகள் செய்தார்.
பின் மடத்திற்கு வந்தவருக்கு தருமபுரம், திருவாவடுதுறை ஆதீனங்கள், பதவியேற்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தனர். இணை கமிஷனர்மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் செல்லதுரை தலைமையில், ஆதீனங்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.
புதிய ஆதீனம், மீனாட்சி கோவிலில் விடுபட்ட உஷகால கட்டளை நிறைவேற்றுதல், மடத்தில் அன்னதானம் வழங்குதல், மடத்திற்கு சொந்தமான நான்கு கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துதல் உட்பட ஆறு உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட ஹிந்து அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர். மாலை மீனாட்சி கோவிலில் ஆதீனம் வழிபட்டார். பின், சித்திரை வீதிகளில் ஊர்வலமாக சென்றார்.
XXXX
மரத்தாலான ராமர் கோவில் மாதிரி; வி.ஹெச்.பி., வழங்கல்
அயோத்தியில், ராமர்கோவில் கட்டுவதற்கு நன்கொடை அளித்த ஆண்டாள் பக்தர்கள் பேரவைக்கு, நன்றி தெரிவிக்கும் வகையில், விஸ்வ ஹிந்து பரிஷத் மூத்த தலைவர் சம்பத்ராய், மரத்தாலான ராமர் கோவில் மாதிரி கட்டடத்தை நினைவு பரிசாக வழங்கினார்.
அயோத்தி ராமர்கோவில் கட்டுவதற்கு ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில், 50 ஆயிரம் பேர் இணைந்து, 2 கோடி ரூபாய் நன்கொடை வழங்கினர். சென்னையில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அயோத்தி ராமர் கோவில் கட்டும் கமிட்டியின் பொதுச்செயலரும், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவருமான சம்பத்ராய், ஆக.,23 காலை சென்னை முகலிவாக்கத்தில் உள்ள ஆண்டாள் பக்தர்கள் பேரவை தலைவர் சொக்கலிங்கம் இல்லத்திற்கு வந்தார்.
அங்கு பக்தர்கள் பேரவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மரத்தினால் செய்யப்பட்ட ராமர் கோவில் மாதிரி கட்டடத்தை சம்பக்ராய், நினைவு பரிசாக வழங்கினார்.
பக்தர்கள் அனைவருக்கும் கேரளா புகழ் பலாப்பழம் பாயாயசத்துடன் பல்வேறு பதார்த்தங்களுடன் கொண்ட சிற்றுண்டி வழங்கப்பட்டது.
XXXX
மைசூரு தசரா விழா; ஊர்வலத்தில் பங்கேற்க 14 யானைகள் தேர்வு
மைசூருவில் ஒவ்வொரு ஆண்டும் தசரா விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகப்புகழ் பெற்ற இந்த மைசூரு தசரா விழா மைசூருவை ஆண்ட பண்டைய மன்னர்கள் காலத்தில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. மைசூரு தசரா விழா சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மைசூரு தசரா விழாவில் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து மன்னர் தனியார் தர்பார் நடத்துவதும், 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்க அதை யானைகள் புடைசூழ ஒரு யானை சுமந்து வரும் ஜம்பு சவாரி ஊர்வலமும் மிகவும் பிரசித்திபெற்ற நிகழ்வுகளாகும்.
அவற்றைக்காண கண்கொள்ளா காட்சியாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டு மைசூரு தசரா விழா விஜயதசமியையொட்டி 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் விஜயதசமியையொட்டி வருகிற அக்டோபர் மாதம் தசரா விழா நடைபெற இருக்கிறது.
14 யானைகள் தேர்வு
இந்த நிலையில் யானை சவாரி ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக மத்திக்கோடு, தொடஹரவே, ஆனேகோடு, துபாரே ஆகிய 4 யானைகள் முகாம்களில் இருந்து 14 யானைகளை வனத்துறையினர் தேர்வு செய்துள்ளனர். தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு யானையும், அதற்கு மாற்றாக பீமா யானையும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த ஆண்டும் ஊர்வலம் அரண்மனை வளாகத்திலேயே நடத்தி முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
XXXX
நாளை ஜன்மாஷ்டமி தினம்; நேயர்கள் அனைவர்க்கும் ஜன்மாஷ்டமி வாழ்த்துக்கள்
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் RANI SRINIVASAN
தமிழ் கண்ட புலவர்கள் ஆயிரமாயிரம். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சிறப்பு!
தாம் மெய்யாக் கண்டவற்றுள் இவையே என உரைப்பது சில புலவர்களின் சிறப்பு!
அந்த வகையில் இன்ன புலவருக்கு இன்ன சிறப்பு என்று கூறும் பாடல்கள் நிறைய உண்டு.
அவற்றில் மூன்றை இங்கு பார்க்கலாம்.
வாக்கிற் கருணகிரி வாதவூ ரர்கனிவில்
தாக்கிற் றிருஞான சம்பந்தர் – நோக்கிற்கு
நக்கீர தேவர் நயத்துக்குச் சுந்தரனார்
சொற்குறுதிக் கப்பரெனச் சொல்
இந்தப் பாடல் ஆறு பெரும் மகான்களைப் பற்றிப் பட்டியலிடுகிறது. இவர்கள் தேவார திருவாசகம் பாடியவர் நால்வர். சங்கப் புலவர் நக்கீரர் ஒருவர். திருப்புகழ் பாடியவர் அருணகிரி நாதர்.
வாக்கிற்கு – அருணகிரி
கனிவிற்கு – மாணிக்கவாசகர்
தாக்கிற்கு – திருஞானசம்பந்தர்
நோக்கிற்கு – நக்கீர தேவர்
நயத்துக்குச் – வன் தொண்டர் எனப்படும் சுந்தரனார்
சொல் உறுதிக்கு – அப்பர் எனப்படும் திருநாவுக்கரசர்
அடுத்த பாடல் இது
காசுக்குக் கம்பன் கருணைக் கருணகிரி
ஆசுக்குக் காளமுகி லாவனே – தேசுபெறும்
ஊழுக்குக் கூத்த னுவக்கப் புகழேந்தி
கூழுக்கிங் கௌவையெனக் கூறு
காசுக்கு – கவிச் சக்கரவர்த்தி கம்பன்
கருணைக்கு – அருணகிரிநாதர்
தேசுள்ள ஊழுக்கு – ஒட்டக்கூத்தர்
உவக்கப் பாடுபவர் – புகழேந்தி
கூழுக்கோ – ஔவையார்
மூன்றாம் பாடல் இது:-
வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர்
செயங்கொண்டான் விருத்தமென்னும்
ஒண்பாவிற் குயர்கம்பன் கோவையுலா
வந்தாதிக் கொட்டக் கூத்தன்
கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்
வசைபாடக் காளமேகம்
பண்பாக வுயர் சந்தம் படிக்காசு
லாதொருவர் பகரொ ணாதே
வெண்பா பாடுவதில் வல்லவர் – புகழேந்தி. நள வெண்பா பாடி வெண்பா வேந்தர் என்ற பெயரைப் பெற்றார் அவர்
பரணி பாடுவதில் வல்லவர் – ஜெயங்கொண்டான். அற்புதமான கலிங்கத்துப் பரணியை அழகுறப் பாடியுள்ளார்.
விருத்தமென்னும் ஒண்பா பாட வல்லவர் – கம்பர். நூறு வண்ணங்களைக் கொண்டுள்ள பத்தாயிரம் பாடல்களில் ராமாயணைத்தை இயற்றி உலகை வியக்க வைத்து கவிச்சக்கரவர்த்தி என்று பெரும் புகழ் பெற்று கவிச் சிகரத்தில் ஏறியவர் கம்பர்.
கோவை, உலா, அந்தாதி போன்ற பிரபந்தங்கள் பாட வல்லவர் – ஒட்டக்கூத்தர்
கண்பாய கலம்பம் பாட வல்லவர் – இரட்டையர்கள்
வசை பாடக் காளமேகம் – உடனடியாக வசை பாடுவதில் வல்லவர் காளமேகப் புலவர்
பண்பாக உயர் சந்தம் பாட வல்லவர் – படிக்காசுப் புலவர்.
இந்தக் கண்ணோட்டத்தில் இவர்களின் பாடல்களை ஒரு நோக்கு நோக்கினால் புலவர்களின் இந்தப் பார்வையை நாமும் ஆமோதிப்போம்!