Better go to Heaven in rags than to Hell in embroidery! (Post No. 2495)

birds, gopuram

Compiled by london swaminathan

Date: 31 January 2016

 

Post No. 2495

 

Time uploaded in London :–  15-06

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

February 2016 Good Thoughts Calendar

Festivals in February:

8-Thai Amavasya and Chinese New Year, 22- Maasi Maham and Mahaa Maham held once in 12 years;14 Valentine Day and Ratha Saptami

 

 

Auspicious Days: 3,5,10, 12,17,19,26

Full Moon 22 Masi Makam, Maha Maham and Float Festival in several temples

New Moon 8 Thai Amavasya

Ekadasi Fasting Days: 4, 18

 

29 Golden Sayings on Religion are in this month’s calendar.

bhuvaeswari, mysore

February 1 Monday

A man without a religion is a horse without a bridle.

February 2 Tuesday

One may live without father or mother, but one cannot live without God.

February 3 Wednesday

Have God and have all.

February 4 Thursday

He loses nothing who keeps God for his friend.

February 5 Friday

The best way to travel is towards Heaven.

 

cave temple, HP

February 6 Saturday

Put your trust in God, but keep your powder dry (Advice given by Oliver Cromwell to his troops while crossing a river)

February 7 Sunday

Praise the Lord and pass the ammunition (First said by a Chaplain at Pearl Harbour in 1941)

February 8 Monday

The man of God is better for having his bows and arrows about him.

February 9 Tuesday

St. Luke was a saint and physician and yet he died.

February 10 Wednesday

Jest not with the religion or eye.

 

chamundi3

February 11 Thursday

King Harry robbed the church, and died a beggar (A reference to Henry VIII and the Reformation)

February 12 Friday

Better go to heaven in rags than to hell in embroidery.

February 13 Saturday

Heaven and hell are within the heart (Chinese proverb)

February 14 Sunday

He that will enter into Paradise must have a good key.

February 15 Monday

A man must go old to the court, and young to a cloister, that would go from thence to heaven.

 

 

cheranmadevi appan

February 16 Tuesday

Gold goes in at any gate except heaven’s.

February 17 Wednesday

Who fasts and does no other good, spares his bread and goes to hell

Poor men go to heaven as soon as rich.

February 18 Thursday

Hell is always open.

February 19 Friday

Danger makes men devout.

February 20 Saturday

Some are atheists only in fair weather.

 

darasuram

February 21 Sunday

The porter calls upon God only when he is under the load (Arabic Proverb)

February 22 Monday

An atheist is one point beyond the devil.

February 23 Tuesday

A complete Christian must have the works of a Papist, the words of a Puritan, and the faith of a Protestant.

February 24 Wednesday

The Jews spend at Easter, the Moors at marriages, the Christians in suits (suits here refers to lawsuits)

February 25 Thursday

Henry the Eighth pulled down monks and their cells, Henry the Ninth should pull down bishops and their bells (A reference to the Reformation).

 

IMG_0534

February 26 Friday

There is no rain – the Christians are the cause ( A popular proverb in ancient Rome)

February 27 Saturday

Clergymen’s sons always turn out badly.

February 28 Sunday

A Pope by voice, a king by birth, an emperor by force.

February 29 Monday

A short prayer penetrates the heaven. The fewer the words, the better the prayer.

 

-Subham-

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! (Post No. 2494)

IMG_9761

பிப்ரவரி 2016 (மன்மத தை-மாசி) காலண்டர்

Compiled by london swaminathan

Date: 31 January 2016

 

Post No. 2494

 

Time uploaded in London :–  12-31

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

இந்த மாதக் காலண்டரில் தமிழ் பற்றிய 29 மேற்கோள்கள் இடம்பெறுகின்றன.

 

திருவிழா நாட்கள்: 8-தை அமாவாசை, சீனப்புத்தாண்டு, 14-ரத சப்தமி, காதலர் தினம், 15-பீஷ்மாஷ்டமி, 22-மாசிமகம், கும்பகோணத்தில் மஹாமகம், பல கோவில்களில் தெப்பத் திருவிழா

அமாவாசை:8

பவுர்ணமி- 22

ஏகாதசி: 4, 18

சுபமுஹூர்த்த நாட்கள்- 3,5, 10, 12, 17, 19, 26.

IMG_9765

பிப்ரவரி 1 திங்கட் கிழமை

மாண்ட வரதன் சரண் வணங்க எதிர்வந்தான்

நீண்ட தமிழால் உலகை நேமியில் அளந்தான் (கம்பன்)

பிப்ரவரி 2 செவ்வாய்க் கிழமை

நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண்

தழல் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான் (கம்பன்)

பிப்ரவரி 3 புதன் கிழமை

நன்று வரவு என்று பல நல் உரை பகர்ந்தான்

என்றும் உள தென் தமிழ் இயம்பி இசைகொண்டான் (கம்பன்)

 

பிப்ரவரி 4 வியாழக் கிழமை

வடவேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்- தொல்காப்பிய பாயிரம்-பன்பாரனார்

 

பிப்ரவரி 5 வெள்ளிக் கிழமை

சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே

தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம் – பாரதியார்

 

 

IMG_9814

பிப்ரவரி 6 சனிக் கிழமை

ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை

மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்- பாரதியார்

 

பிப்ரவரி 7 ஞாயிற்றுக் கிழமை

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்- பாரதியார்

பிப்ரவரி 8 திங்கட் கிழமை

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்

துலங்குக வையகமே — பாரதியார்

பிப்ரவரி 9 செவ்வாய்க் கிழமை

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும்வகை செய்தல் வேண்டும்.

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்- பாரதியார்

பிப்ரவரி 10 புதன் கிழமை

தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்

இங்கமரர் சிறப்புக் கண்டார்

 

 

IMG_9816

பிப்ரவரி 11 வியாழக் கிழமை

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!

வாழிய பாரத மணித்திருநாடு– பாரதியார்

 

பிப்ரவரி 12 வெள்ளிக் கிழமை

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே- அதைத்

தொழுது படித்திடடி பாப்பா- – பாரதியார்

 

பிப்ரவரி 13 சனிக் கிழமை

இறவாய் தமிழோடிருப்பாய் நீ (பாரதியார்)

 

பிப்ரவரி 14 ஞாயிற்றுக் கிழமை

தமிழுக்கும் அமுதென்று பேர்- அந்தத் தமிழ் இன்பதமிழ் எங்கள் உயிருக்கு நேர் –பாரதிதாசன்

 

பிப்ரவரி 15 திங்கட் கிழமை

சென்றணைந்து மதுரையினில் திருந்திய நூற் சங்கத்துள்

அன்றிருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் கோயில் – – பெரியபுராணம்

 

 

IMG_9776

பிப்ரவரி 16 செவ்வாய்க் கிழமை

தெள்ளித் தெளிக்கும் தமிழ்க் கடலின் அன்பினைந்திணை என எடுத்த இறைநூல்—மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்

பிப்ரவரி 17 புதன் கிழமை

சந்நிதியில் வீழ்ந்து எழுந்து தமிழறியும் பெருமாளே! தன்னைச் சேர்ந்தோர் நன்னிதியே! திருவாலவாயுடைய நாயகனே!—திருவிளையாடல் புராணம்

 

பிப்ரவரி 18 வியாழக் கிழமை

அறைகடல் வரைப்பில் பாடை அனைத்தும் வென்று ஆரியத்தொடு

உறழ்தரு தமிழ் தெய்வத்தை உள்நினைந்து ஏத்தல் செய்வாம்- சீகாளத்திப் புராணம்

 

 

பிப்ரவரி 19 வெள்ளிக் கிழமை

கடல் அமுது எடுத்துக் கரையில் வைத்ததுபோல்

பரப்பின் தமிழ்ச் சுவை திரட்டி மற்றவர்க்குத்

தெளிதரக் கொடுத்த தெந்தமிழ்க் கடவுள்- கல்லாடம்

 

பிப்ரவரி 20 சனிக் கிழமை

உலகு அளித்தனை தமிழ் தெளித்தனை

ஒன்றும் ஆயினை, பலவும் ஆயினை – காசிக் கலம்பகம்

 

 

IMG_9820

பிப்ரவரி 21 ஞாயிற்றுக் கிழமை

தமிழால் வைதாரையும் வாழவைப்போன் – கந்தரலங்காரம்

 

பிப்ரவரி 22 திங்கட் கிழமை

பொழிந்து ஒழுகு முதுமறையின் சுவை கண்டும் புத்தமுதம்

வழிந்து ஒழுகும் தீந்தமிழின் மழலை செவி மடுத்தனையே – மதுரைக் கலம்பகம்

பிப்ரவரி 23 செவ்வாய்க் கிழமை

செந்தமிழோடு ஆரியனைச் சீரியானை

முத்தமிழும் நான் மறையும் ஆனான்  — தேவாரம்

பிப்ரவரி 24 புதன் கிழமை

தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானை—திருவாசகம்

 

பிப்ரவரி 25 வியாழக் கிழமை

சாறு சுவைஎனக் கூறநின்று இட்ட

ஆரியம் தீந்தமிழ் என்மனார் அவையே

ஓரிருமகாரின் பேறுகண்டு அவற்றுள்

கன்னியந்தமிழின் செவ்வியைப் புணர்ந்தோய் – பொய்கையார்

 

IMG_9764

 

பிப்ரவரி 26 வெள்ளிக் கிழமை

ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி

ஏங்கொலி நீர் ஞாலத்து இருள் அகற்றும் – ஆங்கவற்றுள்

மின்னேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்று ஏணையது

தன்னேர் இலாத தமிழ் – தொல்லியல்

 

பிப்ரவரி 27 சனிக் கிழமை

இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்- பிங்கலந்தை

 

பிப்ரவரி 28 ஞாயிற்றுக் கிழமை

தமிழ் தழிய சாயலவர் – சிந்தாமணி

 

பிப்ரவரி 29 திங்கட் கிழமை

பட்டர் பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே இங்கு பரிசுரைப்பார்…………..திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்—ஆண்டாள்

 

–சுபம்–

கிருஷ்ண சபதம்! (Post No. 2493)

krishna as ntr

Written by S Nagarajan

 

Date: 31 January 2016

 

Post No. 2493

 

Time uploaded in London :–  11-31 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

ஞான ஆலயம் பிப்ரவரி 2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. திருமதி மஞ்சுளா ரமேஷை ஆசிரிராகக் கொண்டுள்ள இந்த ஆன்மீக இதழ் அனைத்து புத்தக கடைகளிலும் கிடைக்கும்.

மஹாபாரதம்

கிருஷ்ண சபதம்!

 

ச.நாகராஜன்

 

 

flute kris, fb

 

ஸ்ரீ கிருஷ்ணர், வசுதேவர் சந்திப்பு

மஹாபாரதத்தில் ஒரு அருமையான காட்சியைச் சித்தரிக்கிறார் வேத வியாஸர்.

 

சோகத்தின் உச்ச கட்டம் அது.

 

அதில் தான் ஸ்ரீ கிருஷ்ணர் தன்னைப் பற்றியும் தன் அரும் குணநலன்களைப் பற்றியும் பேசுகிறார். அதாவது அவருக்குப் பேச வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.கிருஷ்ண சரிதத்தைக் கேட்கும் பக்தர்களான நாம் பரவசப்படுகிறோம்.

காட்சியைப் பார்ப்போம்.
பாரத யுத்தம் முடிந்தது. த்வாரகை மீள்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். உற்சாகமான வரவேற்பு. தந்தை வஸுதேவரையும் அன்னையையும் அடி பணிந்து வணங்குகிறார் கிருஷ்ணர். ‘நடந்ததை உன் வாயாலேயே சொல்’ என்று கேட்கிறார் வஸுதேவர்.

 

 

விஸ்தாரமாக யுத்தத்தைச் சொன்ன கிருஷ்ணர் ஒரு விஷயத்தை மட்டும் வஸுதேவருக்குச் சொல்லவில்லை. அது தான், அவரது பேரனான அபிமன்யுவின் மரணம்.

 

சோகத்தினால் முதியவர் துக்கப்படக் கூடாது என்பது கிருஷ்ணரின் எண்ணம் ஆனால் சுபத்திரையோ கிருஷ்ணரை நோக்கி, ‘அபிமன்யுவின் வதத்தைச் சொல்லும்’, என்று கூறி மயக்கமுற்று விழுகிறாள். அதைக் கண்ட வஸுதேவரும் மயக்கமுறுகிறார்.

 

ஒருவாறு அவர்களைத் தேற்றிய கிருஷ்ணர் அஸ்வமேத யாகம் செய்யுமாறு யுதிஷ்டிரரிடம் கூற யாக ஏற்பாடுகள் பிரமாதமாக ஆரம்பிக்கப்படுகின்றன.

 

 

இறந்து பிறந்த குழந்தை

 

யாகத்திற்காக அனைவருடனும் ஹஸ்தினாபுரத்திற்கு கிருஷ்ணர் வந்த அந்த சமயத்தில் தான் மிக்க சோகமான நிகழ்ச்சி நடைபெற்றது.

 

உத்தரையின் பிரசவ நேரம் அது. குழந்தையும் பிறந்தது. ஆனால் பிரம்மாஸ்திரம் பிரயோகிக்கப்பட்டதால் குழந்தை மரித்துப் பிறந்தது.

 

குந்தி தேவிக்கும், உத்தரைக்கும் அரண்மனையில் இருந்த இதர அனைவருக்கும் துக்கம் தாளவில்லை.

 

கிருஷ்ணரை எப்படியாவது குழந்தையை உயிர்ப்பித்துத் தருமாறு வேண்டிய குந்தி தேவி கிருஷ்ணருடைய பிரதிக்ஞையை நினைவு படுத்துகிறாள்.

 

“அஸ்வத்தாமாவினால் பிரம்மாஸ்திரம் ஏவப்பட்ட காலத்தில் மரித்துப் பிறக்கும் குழந்தையை நான் உயிர்ப்பிக்கிறேன் என்று நீ பிரதிக்ஞை செய்திருக்கிறாய்” என்று நினைவு படுத்துகிறாள் குந்தி.

 

கிருஷ்ணருக்குத் துக்கம் தாளவில்லை. அப்படியே ஆகட்டும் என்று உரக்கச் சொல்லி அனைவரையும் சந்தோஷப்படுத்தியவாறே உத்தரையின் பிரசவ அறைக்குள் செல்கிறார்.

 

அங்கே உத்தரை கட்டுக் க்டங்காத துயரத்துடன் கிருஷ்ணரைப் பார்த்தவுடன் அழுது புலம்பலானாள். குழந்தையை மடியில் போட்டுக் கொண்டு, ‘இதோ இங்கே வந்திருக்கும் கிருஷ்ணரை நமஸ்கரிக்காமல் இருக்கிறாயே” என்றெல்லாம் கூறிப் புலம்புகிறாள்.

 

“கிருஷ்ணரே! என் குழந்தையை உயிர்ப்பித்துத் தாரும்” என்று கூறி அவள் அழ, கூடவே அங்கு குழுமியிருந்த அனைவரும் அழ அந்தச் சமயத்தில் எழுந்தது கிருஷ்ண சபதம்!

உத்தரை கிருஷ்ணரை நமஸ்கரித்து எழுந்தாள். உடனே கிருஷ்ணர் ஆசமனம் செய்து பிரம்மாஸ்திரத்தை அதன் விளைவு இல்லாமல் போகச் செய்தார்.

 

krishna close up

கிருஷ்ண சபதம்

 

பின்னர் அந்தக் குழந்தை உயிருடன் எழுவதைப் பற்றி உலகமெல்லாம் அறியும் படி பிரம்மாண்டமான ஒரு சபதத்தை செய்தார்:

 

“உத்தரையே! நான் பொய் சொல்லவில்லை. இது உண்மையாகவே ஆகப் போகிறது. எல்லா மக்களும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இந்தக் குழந்தையை உயிருள்ளதாக ஆக்குகிறேன்.

 

நான் ஒரு பொழுதும் விளையாட்டுக்களிலும் கூடப் பொய் சொன்னதில்லை.யுத்தத்திலிருந்து புறம் காட்டியது இல்லை.இது உண்மையானால் இந்தக் குழந்தை உயிருடன் வாழட்டும்.

 

எனக்குத் தர்மத்திலும் அந்தணர்களிடத்திலும் அதிகமான அன்பு இருக்குமானால், இறந்து பிறந்த இந்த அபிமன்யுவின் குழந்தை ஜீவித்திருக்கட்டும்.

 

நான் ஒருபொழுதும் அர்ஜுனனிடத்தில் விரோதத்தை எண்ணாமலிருப்பது உண்மையானால் மரித்த இந்தக் குழந்தை ஜீவிக்கட்டும்.

 

சத்தியமும் தர்மமும் என்னிடத்தில் எப்பொழுதும் நிலைபெற்றிருக்குமானால் அபிமன்யுவின் புத்திரனும் இறந்தவனுமாகிய இந்தக் குழந்தை ஜீவிக்கட்டும்.

நான் கம்ஸனையும் கேசியையும் தர்மமாகக் கொன்றது உண்மையானால் இப்பொழுது இந்தக் குழந்தை மறுபடியும் பிழைக்கட்டும்

 

இப்படி கிருஷ்ணர் சபதத்தை உலகம் முழுவதும் அறியுமாறு உரக்கக் கூறினார்.

 

பின்னர் பிரம்மாவுர்ம் ருத்திரரும் பூஜிக்கப்பட்ட தன் பாதத்தால் குழந்தையின் கால் முதல் தலை வரையில் தடவினார்.

உடனே அந்தக் குழந்தை மெல்ல மெல்ல தன் பிரக்ஞையை அடைந்தது; பின்னர் அசைந்தது.

 

உயிர் பிழைத்த குழந்தையைக் கண்டு அனைவரும் ஆனந்த மிகுதியால் கிருஷ்ணரைப் புகழ்ந்தனர்.

 

பிரம்மாஸ்திரமோ கிருஷ்ணரால் உபசம்ஹாரம் செய்யப்பட்டதால் பிரம்மாவை அடைந்தது. இப்படியாக ஸ்ரீ கிருஷ்ணரின் சபதம் நிறைவேறியது.

 

 

ஆஸ்வமேதிக பர்வம் அறுபத்தொன்பதாம் அத்தியாயத்தைப் படிப்பவர்களின் மனம் ஆனந்தம் அடைவதோடு, கிருஷ்ணரின் மஹிமையை அவர் வாயாலேயே சொல்லக் கேட்ட பெருமையையும் அடையும்.

 

கிருஷ்ணரின் அரிய பெரிய பெருமைகளை மனம் காலம் எல்லாம் அசை போட்டாலும் முழுவதையும் உணர்ந்ததாகச் சொல்ல முடியுமா?

முடியாது!

 

krishna statue side pose

 

சிசுபாலனின் பொய் நிந்தனைகள்

 

சிசுபாலன் நூறு பொய் நிந்தனைகளைக் கூறும் வரை அவனை வதம் செய்யாமல் விடுகிறேன் என்று அவன் தாய்க்கு வரம் அருளினார் கிருஷ்ணர்.

 

கோபம் தலைக்கேற வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லிப் பொய்களை அடுக்கிக் கொண்டே போனான் சிசுபாலன். இதை இராஜசூயச் சருக்கத்திலே பதின்மூன்று பாடல்களில் அற்புதமாக விவரிக்கிறார் வில்லிப்புத்தூரார்.

அதில் ஒரு பாடல் இது:-

 

கஞ்சனெனும் மாமனொடு காளையமர் செய்தான்  வஞ்சனையினால் அமரும் எத்தனை மலைந்தான்    தஞ்சமெனவே மருவு தமரிலொரு தானே                  முஞ்சி  விரகாலுரிய மேதினி புரந்தான்

 

 

பாடலின் பொருள் :- இள எருது போல கொழுத்தவனான கிருஷ்ணன் மாமனான கம்ஸனுடன் போர் செய்து அவனைக்  கொன்றிட்டான். தந்திர வகைகளால் எத்தனையோ யுத்தங்களையும் செய்து முடித்தான். தன்னையே ஆதாரமாகக் கொண்டு சார்ந்துள்ள சுற்றத்தார்களில் தான் ஒருவன் மட்டுமே மேம்பட்டு தந்திரமாகத் தனக்கு உரியதாக ராஜ்யத்தைக் கைப்பற்றி ஆள்பவன் ஆனான்.

 

 

கம்ஸனைக் கொல்லுதல், சங்கு உருவத்தில் கடலில் வாழ்ந்த பஞசஜனன் என்னும் அசுரனைக் கொல்லுதல், பதினெட்டு முறை ஜ்ராசந்தனுடன் போர் செய்து வெற்றி பெறல், காலயவனென்ற மிலேச்ச ராஜனைத் தந்திரத்தால் அழித்தல், ருக்குமியைப் பங்கப் படுத்தல் ஆகிய அனைத்தையும் சுட்டிக் காட்டும் விதத்தில் இவை அனைத்தும் வஞ்சனை அல்லவா என்று ‘வஞ்சனையினால் அமரும் எத்தனை மலைந்தான்’ என்று ஆவேசப்பட்டு சிசுபாலன் கத்தினான். ஆனால் அதில் கோபம் இருந்ததே தவிர சத்தியம் இல்லை. சிசுபாலன் போலவே துரியோதனன் உள்ளிட்டோரும் பல பொய்ப் பழிகளை கிருஷ்ணர் மீது சுமத்தியதுண்டு.

 

 

ஆகவே தான் பொய் நிந்தனை சொல்வோர் சொன்னதெல்லாம் பொய்களே என்று உலகிற்குத் தெரிவிக்கும் வண்ணம் சத்திய பிரகடனம் செய்ய வேண்டி, உத்தரையின் சிசுவான – பாண்டவரின் ஒரே வாரிசான – பரீட்சித்தை உயிர்ப்பிக்க வேண்டிய  உச்சகட்டத்தில் (க்ளைமாக்ஸாக) கிருஷ்ணர் தன்னைப் பற்றிப் பிரகடனம் செய்யும் இந்த அரிய காட்சி அமைகிறது.

 

 

கிருஷ்ணரே சத்தியம் கிருஷ்ணரே தர்மம்!

 

எங்கு கிருஷ்ணர் இருக்கிறாரோ அங்கு சத்தியமும், தர்மமும், வெற்றியும் நிச்சயம். அவர் அருளால் இறந்தவரும் எழுவர்.

மஹாபாரதம் காட்டும் பல அரிய காட்சிகளில் உன்னதமான  காட்சி ஸ்ரீ கிருஷ்ண சபதம்!

 

********

 

 

 

 

Put Fire in the Poem or Poem in the Fire! (Post No. 2492)

fire1

Compiled by london swaminathan

Date: 30 January 2016

Post No. 2492

Time uploaded in London :–  15-27

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

swami_48@yahoo.com)

 

 

In his later years a lady called upon Mark Twain to express her enthusiasm for his work. She wanted to kiss his hand. He accepted it with dignity and serious ness.

 

“How God must love you!”, said the lady.

 

“I hope so”, said Mark Twain gently.

 

After she had gone he observed as gently without a smile, “I guess she has not heard of our strained relations”.

 

Xxxx

 

Burning-book-001

An author was reading some bad verses in his poem to his friend in a very cold apartment. The critic cried out in a shaking fit

 

“My friend, either put fire into your verses or verses into the fire or I shall not be able to stand here any longer” .

 

Xxxx

 

Author with a Cyanide Packet!

 

After coming out of jail Frank Harris decided he would rather commit suicide than go in again, and as he always had a contempt for court order s and ignore d everything, he felt liable for arrest at any moment. So that he might not again suffer indignity, he carried with him a small packet of cyanide of potassium, which he proposed to swallow before the land of law could touch him.

 

On his last trip to New York he was packing up at quarantine when a steward came along and told him that he was wanted by the captain. Harris heart fell. Here it was. He concealed the packet of poison in his right hand and followed the steward, and when he saw the captain talking to a tall, smooth, well fed man he knew it could only be the worst.

 

220px-Frankhar

“You wanted me”, gulped Frank

The captain inclined his head toward the third man, who was eyeing Frank keenly.

 

“Mr Frank Harris?”, asked the American

 

Frank wished he was not, but admitted the stigma.

 

“Pleased to meet you, Mr Harris”, said the large man, extending his hand.

“I am the mayor.  l have come right off the tug boat to tell you….. That we are honoured to offer you the freedom of our great city.”

 

Hastily Frank changed the poison packet into his left hand and greeted the mayor.

 

 

Xxxxx

 

Reward for Pornography!

 

Shortly after the sensational reception accorded the publication of his marvellous translation of The Arabian Nights Sir Richard Burton made the following statement

 

For thirty years I served Her Majesty at home and abroad without acknowledgment or reward.  I publish a pornographic book, and at once earn 10000 pounds and fame. I begin at last to understand the public and what it wants.

waroftheworlds_layout

–SUBHAM–

 

 

அறிவியல் சவால் – மில்லியன் டாலர் பரிசு! (Post No. 2491)

RANDI

Picture of James Randi

Written by S Nagarajan

 

Date: 30 January 2016

 

Post No. 2491

 

Time uploaded in London :–  11-04 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

8-1-2016 தேதியிட்ட பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை

அறிவியல் சவால் –  மில்லியன் டாலர் பரிசு!

.நாகராஜன்

 

“பழைய கதை எல்லாம் இருக்கட்டும், இதோ விடுகிறேன் சவால், ஆவிகள் உலகத் தொடர்பு, பிறர் மனதை அறிவது போன்ற  அதீத உளவியல் ஆற்றல் போன்றவற்றை விஞ்ஞானத்திற்கு இணங்க சோதனைச் சாலை நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிரூபித்து விட்டால் மில்லியன் டாலர் பரிசு தருகிறோம்” என்று அறிவித்துள்ள ஒருவரின் ஆய்வு சுவாரசியமானது; அறிந்து கொள்ளப்பட வேண்டியது!

 

அவர் பெயர் ஜேம்ஸ் ரண்டி. கனடிய அமெரிக்கரான இவருக்கு இப்போது 87 வயதாகிறது. மரணத்திற்குப் பின் மனித வாழ்க்கை ஒன்று உண்டு என்று சோதனைச்சாலை நிபந்தனைகளுக்கு உட்பட்டு யாரேனும் நிரூபித்தால் அப்படி நிரூபித்தவருக்கு உடனடியாக பத்து லட்சம் டாலர் (சுமார் ஆறு கோடி ரூபாய்) தருகிறேன் என்று அறிவித்தார் இவர்.

 

 

இதை ஏற்றுப் பல பேர் முன் வந்தாலும் சோதனைச்சாலை நிபந்தனைகளுக்கு அவர்கள் உட்பட மறுத்து விட்டனர். மீறி சோதனைக்கு வந்தவர்களால் அவரது திருப்திக்கிணங்க ஆவி உலகம் இருப்பதை நிரூபிக்க முடியவில்லை.

பங்கேற்றவர்கள் ரண்டி ஒரு மோசடிப்பேர்வழி என்று கூற ரண்டி நியமித்த விஞ்ஞானிகளோ ஆவி உலகம் என்பதே ஒரு கேலிக் கூத்து என்று முழங்கினர்.

 

 

ரண்டி பிரபலமான ஒரு மாஜிக் நிபுணர். ஜேம்ஸ் ரண்டி எஜுகேஷனல் ட்ரஸ்ட் (James Randi Educational Trust) என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் மில்லியன் டாலர் பரிசுத் தொகைக்கான போட்டியை அறிவித்தார்.

 

சமீபத்தில் அவர் அறக்கட்டளைப் பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்று விட்டதால் இந்த போட்டி இனி கிடையாது என அறக்கட்டளை அறிவித்து விட்டப்து. அதாவது 2015 செப்டம்பர் முதல் தேதி முதல் இந்தத் தொகையில் சிறு சிறு பகுதிகள் அறக்கட்டளையின் நோக்கத்தில் செயல் படும் பல்வேறு அறிவு சார்ந்த நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

 

ஆனால் அதீத உளவியல் ஆற்றல் நிபுணர்கள் அனைவருமே மோசடிப் பேர்வழிகளா, இல்லை! இதை சோதனை செய்த விஞ்ஞானிகளே வியந்து ஒப்புக் கொண்டுள்ளனர்.

 

மனதில் ஒருவர் நினைத்த ஒரு குறிப்பிட்ட அந்தரங்க எண்ணத்தை மீடியம் ஒருவர் கூறியதே இதற்குக் காரணம்!

குறிப்பாக விஞ்ஞானிகளைக் கவர்ந்த அதீத உளவியல் ஆற்றல் நிபுணர்கள் இருவர்.

ஒருவர் பாட்ரிசியா புட் (Mrs Patriciia Putt) என்ற பெண்மணி. டி.வி, ஷோக்கள், பத்திரிகை கட்டுரைகள் என பிரபலமான இவர் சோதனையை ஏற்று முன் வந்தார்.

 

 

2009ஆம் ஆண்டு மே மாதம் நடந்தது சோதனை. 10 தன்னார்வத் தொண்டர்கள் சோதனை நாளன்று பெரிய கண்ணாடிகள், முகமூடிகள், தொளதொள ஆடை, வெள்ளை சாக்ஸ் அணிந்து சோதனை அறைக்குள் நுழைந்து அறையின் பின்னால் இருந்த சுவரைப் பார்த்து அமர்ந்தனர். பாட்ரிசியா இருபது நிமிடங்களுக்குப் பிறகு  அறைக்குள் நுழைந்தார். அவர்களுக்கு 12 அடி தள்ளி அமர்ந்தார். ஒவ்வொருவரும் தன் கையில் கொடுக்கப்ப்ட்ட ஒரு சிறிய குறிப்புரையைப் படித்தனர். அது ஆவி உலகத்தினருக்கு அங்கு அமர்ந்திருப்பவர்களை அறிமுகம் செய்து கொள்ள உதவும் என்று பாட்ரிசியா கூறி இருந்ததால் அந்த ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் பாட்ரிசியா அவர்களைப் பற்றிய தனது கணிப்புகளைக் குறிப்பாக எழுதினார்.

 

 

அது முடிந்தவுடன் அந்தப் பத்து பேரும் அறையிலிருந்து வெளியேறினர். உடைகளை மாற்றிக் கொண்டு திரும்பி வந்தனர். அவர்களின் ஒவ்வொருவரைப் பற்றியுமான பிரத்யேக கணிப்புகள் பத்தும் ஒவ்வொருவரிடமும் வழங்கப்பட்டன. அந்த பத்து பேரும் அதில் தன்னைப் பற்றியதான சரியான கணிப்புத் தாளை எடுத்துத் தர வேண்டும்.

 

பத்து பேரில் ஐவர் சரியான கணிப்புகளைத் தந்து விட்டால் போதும்  மில்லியன் டாலர் பரிசு பாட்ரிசியாவுக்கு உண்டு. ஆனால் பத்து பேர்களும் தங்களுக்கு எழுதித் தரப்படாத ஒன்றையே எடுத்துத் தந்தனர். ஆகவே பாட்ரிசியா வெற்றி பெறவில்லை. ஆனால் இது பற்றி அவர் கவலைப்படவில்லை. மம்மி போல ஆடைகளை அணிந்து வந்தவர்களிடம் ஆவிகள் எளிதில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதே அவரது பதில்!

 

kim and patricia

Kim Whitton and Patricia Putt with science writer Simon Sing and others.

 

இதே போல இந்த சோதனைக்கு வந்த இன்னொரு  மீடியம் கிம் விட்டன் (Kim Whitton)  என்ற பிரபலமான பெண்மணி.

ஒரு தடுப்புத் திரைக்குப் பின்னால் ஒருவர் அமர கிம் அவரைப் பற்றிய தன் கணிப்பை எழுதினார். ஐந்து பேரைப் பற்றி அவர் சரியாக எழுதினாலே போதும், வெற்றி தான். இந்த சோதனையை வடிவமைத்தவர் புரபஸர் க்ரிஸ் ப்ரெஞ்ச் என்பவர். இவர் ஒரு அதீத உளவியல் பேராசிரியர். சோதனையில் கிம் வெற்றி பெறவில்லை. என்றாலும் அதிலிருந்த ஒருவர் தன் மனதில் இருந்ததை அப்படியே கிம் விளக்கி விட்டதாகவும் அந்த அந்தரங்கமான விஷயம் வேறு யாருக்கும் தெரியாது என்றும் கூறி பரவசப்பட்டார். பத்துக்கு எட்டு என்ற மதிப்பெண்களை அவர் பெற்றாலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படவில்லை. ஏனெனில் தற்செயல் ஒற்றுமையாகக் கூட அப்படி கூற வாய்ப்பு உண்டு என்ற அறிவியல் கோட்பாட்டின் படி அவர் நிராகரிக்கப்பட்டார்.

 

ஆனால் மீடியம்கள் இருவரும் இது பற்றிச் சற்றும் கவலைப்படவில்லை. சோதனைமுறைகள் தவறானவை மற்றும் கடுமையானவை என்று அவர்கள் கூறினர். இந்தச் சோதனையில் தோல்வி அடைந்ததால் பெண்மணிகளின் இருவரது மதிப்புக் குறைந்ததா? தொழில்வாழ்க்கை பாதிக்கப்பட்டதா? இல்லவே இல்லை. அவரது வாடிக்கையாளர்கள் சோதனையை மதிக்கவே இல்லை. தங்களுக்கு அனுபவபூர்வமாகத் தெரியும் ஆவி உலக வழிகாட்டுதலை யார் பொய் என்று சொன்னாலும் அவர்கள் ஏற்கத் தயாரில்லை.

 

ஆவி உலகத் தொடர்பாளர்களிடம், “சோதனை செய்கிறோம் வாருங்கள் என்கின்றனர் விஞ்ஞானிகள். இவர்களில் சிலர் பிரக்ஞை பற்றிய உண்மைகளை மீடியம்களை வைத்துக் கண்டுபிடிப்பதும் இப்போது அதிகமாகி வருகிறது.

 

ஆகவே அதீத உளவியல் ஆற்றல் உள்ளவர்களுக்குச் சமுதாயத்தில் ஒரு தனி இடம் இன்றும் கூடக் கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறது!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

அபல்லோ-8 விண்வெளிக்கலத்தில் சந்திரனைச் சுற்றி வந்த விண்வெளி வீரர் வில்லியம் அலிஸன் ஆண்டர்ஸ் (William Alision Anders) விண்வெளிப் பயணத்தால் பெரும் புகழ் பெற்றார். அவரைச் சுற்றி எப்போதும் கூட்டம். பத்திரிகையாளர்களும் புகைப்பட நிபுணர்களும் அவர் எங்கு போனாலும் பின் தொடர்ந்து சென்று கொண்டே  இருந்தனர். மனிதர் தளர்ந்து போனார். எப்படியாவது யார் கண்ணிலும் படாமல் தன் மனைவியுடன் ஓய்வு எடுக்க வேண்டும் என்று எண்ணிய அவர் அகாபல்கோ என்ற கடற்கரை ஸ்தலத்திற்குச் சென்றார். சில நாட்கள் கழிந்தன. தனது வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்த அவரை நோக்கி ஒரு நபர் வந்தார்.

தயங்கியவாறே, “உள்ளே வரலாமா? போட்டோ எடுக்கலாமா?” என்று கேட்டார். “ஹூம்” என்ற ஆண்டர்ஸ்,” வரலாம், போட்டோ எடுக்கலாம்” என்றார்.

 

சந்தோஷத்துடன் உள்ளே வந்த போட்டோகிராபரிடம் முன்னால் இருந்த பெரும் கடலைக் காட்டி, “அழகிய காட்சி. எத்தனை போட்டோ வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

போட்டோகிராபருக்கு முகம் போன போக்கு!

 

–subham-

பேனா முனையும், கத்தி முனையும்! சொல் வீச்சும் வாள் வீச்சும்! 2 சம்பவங்கள் (Post No. 2490)

pen_versus_sword

Written by london swaminathan

Date: 30 January 2016

Post No. 2490

Time uploaded in London :–  4-36 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact  swami_48@yahoo.com)

 

euripides

கத்தி முனையை விட பேனா முனை சக்தி வாய்ந்தது! வில் முனையைவிட சொல் முனை வலியது என்பதை உலகம் அறியும். சோழ மன்னனை துச்சமாக மதித்தான் கவிச் சக்ரவர்த்தி கம்பன். போஜ ராஜனை கெஞ்சும்படி வைத்தான் உலக மஹா கவிஞன் காளிதாசன். கிரேக்க நாட்டிலும் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளனின் சக்தி மிகப்பெரியதாக விளங்கியது. இதைக் காட்டும் இரண்டு சுவைமிகு சம்பவங்களைக் காண்போம்.

 

கிரேக்கர்களுக்கும் ரோமானியர்களுக்கும் இடையே மோதல் உருவானது. ரோமானியர்கள், ஏதென்ஸ் நகர அதீனீயர்களைச் சிறைப்பிடித்து சைரக்யூஸ் என்னுமிடத்தில் காவலில் வைத்தனர். போர்க் கைதிகளுக்குப் பொழுது போகவில்லை. கிரேக்க நாட்டின் கவிஞன், நாடகாசிரியன் யூரிபெடீசின் கவிதைகளை அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு சொன்னார்கள். நாம் அந்தாதி விளையாட்டு விளையாடுவது போல, அவர்கள் உற்சாகம் காட்டினர். இதை காவற்காரர்களும் ஆர்வத்தோடு வேடிக்கை பார்த்தார்கள்.

 

சாதாரணமாக கைதிகளை மிருகங்கள் போல நடத்தி, கண்ட வேலைகளைச் செய்யச் சொல்லுவது அங்கே வழக்கம். ஆனால் நாடகத்தில் வரும் கவிதையின் மஹா சக்தி, அந்தக் காவற்காரர்களின் மனதைக் கொள்ளை கொண்டது. இந்தச் செய்தி மேலதிகாரிகளுக்கும் போனது. அவர்களும் கைதிகளைத் தொடர்ந்து கவிதை வாசிக்கும்படி சொன்னார்கள். அந்தக் கைதிகளை, கவுரவ விருந்தாளிகளாக நடத்தி, பின்னர் விடுதலையும் செய்தார்கள்.

 

 

அதீனிய கைதிகள், ஏதன்ஸ் நகரத்துக்குத் திரும்பியவுடன் நேராக யூரிபிடீசின் வீட்டுக்குப்போய் நடந்த விஷயத்தைச் சொன்னார்கள். வாள் முனையில் தோற்றாலும், பேனா முனையில் வெற்றி கிடைத்தது குறித்து யூரிபிடீசுக்கு ஏக சந்தோஷம். முன்னாள் கைதிகள் அவரை வணங்கி, ஐயன்மீர்! நீங்கள்தான் எங்களை விடுதலை செய்தீர்கள், உயிர் கொடுத்து காப்பாற்றினீர்கள் என்று பாராட்டிவிட்டுச் சென்றனர்.

Xxx

 

sophocles

சோபோக்ளிசுக்கு விடுதலை!

கிரேக்க நாட்டின் புகழ்மிகு எழுத்தாளர்களில் ஒருவர் சோபோக்ளீஸ். அவர் சோகச் சுவை நாடகங்கள் எழுதுவதில் மன்னன். சதா சர்வ காலமும், அல்லும் பகலும் அனவரதமும் பேனாவும் கையுமாகத் திரிந்ததால், நிலபுலன்களையும், வீடு வாசலையும் அவர் கவனிக்கவில்லை என்று குடும்பத்தினர் கவலைப் பட்டனர்.

 

அவர்கள் என்ன சொன்னாலும் இவரோ “நமக்குத் தொழில் கவிதை- நாட்டிற்குழைத்தல்” என்ற கொள்கையுடன் எழுதினார்- எழுதினார்- எழுதிக் கொண்டேயிருந்தார். பிள்ளைகளுக்குப் பொறுக்கவில்லை. அப்பா மீது வழக்குத் தொடுத்தனர்.

 

வழக்கு, நீதி மன்றத்துக்குச் சென்றது. மகன்கள் சொன்னார்கள்: “எங்கள் அப்பனுக்கு படிச்சுப் படிச்சு மூளை குழம்பி போச்சு; வீட்டு வாசல் நினைவும் தப்பிப் போச்சு. ஆகையால் இந்தக் கிழவனை கையலாகாத பயல் என்று அறிவித்து, அந்த சொத்து சுகங்களை நிர்வகிக்கும் பொறுப்பை எங்களிடம் தர உத்தரவிட வேண்டுமென்று கனம் கோர்ட்டார் அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்றனர்.

 

சோபோக்ளீஸ் நகைத்தார்; அப்பொழுதுதான் அவர் ஒரு அருமையான நாடகத்தை எழுதி முடித்திருந்தார். கையில் அந்த ஓலைச் சுவடிகள் இருந்தன. எடுத்தார் சுவடிகளை; தொடுத்தார் சொல் அம்புகளை. ஐயன்மீர்! வயது காரணமாக மூளை குழம்பியிருந்தால் நான் இப்படி எழுத முடியுமா? என்று வினவினார். அவருடைய எழுத்தின் மஹா சக்தியைக் கேட்ட நீதிபதிகள் அனைவரும், “கூரிய புத்தியுடையவர் இவர்” என்று அறிவித்து விடுதலை செய்தனர். மகன்கள் தொடுத்த வழக்கு மண்ணைக் கவ்வியது!

சொல் அம்பு வலியது; வில் அம்பு மெலியது;

சொல் வீச்சு சக்தி வாய்ந்தது; வாள் வீச்சு பலவீனமானது.

pen and sword

தன்னுடன் கிரேக்க நாட்டுக்கு வராவிடில், தலையைச் சீவிவிடுவேன் என்று இந்து சந்யாசியை மிரட்டினான் மாமன்னன் அலெக்ஸாண்டர். அந்த சந்யாசியோ இடிபோலச் சிரித்து, இந்த ஆன்மாவை வாள் வெட்டாது, தீ எரிக்காது, தண்ணீர் நனைக்காது; இது தோன்றியதுமில்லை; அழிவதுமில்லை. என்றுமுளது! –என்று இடிமுழக்கம் செய்யவே அலெக்ஸாண்டர் அசந்தே போனான்! அவனது வீர வாளை உறைக்குள் சொருகிவிட்டு அவரை வணங்கிச் சென்றான் என்று 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க, ரோமானிய எழுத்தாளைர்கள் எழுதிவைத்துள்ளனர் (முழு விவரம் வேண்டுவோர் “நிர்வாண சாமியார்களுடன் அலெக்சாண்டர்” என்ற என்னுடைய பழைய ஆராய்ச்சிக் கட்டுரையில் காண்க)

 

–சுபம்–

 

 

Pen is mightier than sword! (Post No. 2489)

pen sword2

Compiled by london swaminathan

Date: 29 January 2016

 

Post No. 2489

 

Time uploaded in London :–  15-41

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

euripides

Words are more powerful than Swords!

 

The power of pen is excellently illustrated by an incident in the war between the ancient Greeks and Romans. A group of Athenians were seized and held captive at Syracuse. To help pass the time they enacted many scenes from the plays of Euripides (480 BCE) . Their captors were so favourably impressed by the beauty of the verses that instead of treating their prisoners cruelly as was their custom, they persuaded them to continue their play acting and held them as their as honorary guests.

 

Upon their return to Athens, the former captives went to the home of Euripides and informed him of the effect of his plays upon the supposedly heartless men of Syracuse. So great was their gratitude toward the great dramatist they treated him as though he had actually rescued them in combat on the field of the battle.

 

Xxxxx

 

Sophocles Freed!

 

sophocles

Sophocles (406 BCE) wrote tragedies to the end of his long life. On account of this zeal for writing he seemed to be neglecting his business affairs so his sons summoned him to court that a jury may pronounce him as incompetent to manage his estate on the ground of senility. Then the old man is said to have recited to his judges a play which he has just finished and had in his hands, the Oedipus at Colonous and to have asked whether the poem seemed the work of a man

In his dotage (old and weak period).  After his recitation he was freed by the vote of the jurors.

 

Lincoln-cent-sword-pen-2010-design

Xxx

–Subham-

 

பரமஹம்ஸர் கூறிய பொற்கொல்லர் கதை! (Post No. 2488)

 

 

great  master

Written by S Nagarajan

Date: 29 January 2016

 

Post No. 2488

 

Time uploaded in London :–  14-25

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

 

பரமஹம்ஸரைத் தரிசித்த பங்கிம் சந்திரரிடம் அவர் கூறிய பொற்கொல்லர் கதை!

 

ஹிந்து தேசீயம்

 

 

ச.நாகராஜன்

 

 

 rk parahamsa

ஹிந்து தேசீய கீதம்

 

ஹிந்து தேசீயத்தைத் தட்டி எழுப்பிய மாபெரும் மஹரிஷி பங்கிம் சந்திர சட்டோபாத்யாய. (ஜனனம் 26-6-1838 மறைவு 8-4-1894) வந்தேமாதரம் கீதத்தைத் தந்து தூங்கிக் கிடந்த 30 கோடி மக்களைத் தட்டி எழுப்பினார் அவர்.

ராமகிருஷ்ண பரமஹம்ஸரை பெரிதும் மதித்து வணங்கியவர் பங்கிம் சந்திரர்.(பரமஹம்ஸ அவதார தோற்றம் 17/2/1836 அவதார மறைவு 1/1/1886)

 

 

கேள்விகளைக் கேட்ட பங்கிம் சந்திரர்

அவரது சந்திப்புகளில் சுவையான சந்திப்பு ஒன்று இது.

ஒரு நாள் பரமஹம்ஸரை அவரது அணுக்க பக்தரான ஆதார் சந்த்ர சென்னின் வீட்டில் அவர் தரிசித்தார். அவரிடம் சிக்கலான பல கேள்விகளை சந்தேகக் கண்ணோட்டத்துடன் கேட்க ஆரம்பித்தார். அனைத்துக் கேள்விகளுக்கும் பரமஹம்ஸர் பதிலளித்தார்.

 

 

எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளித்த பின் பரமஹம்ஸர் பரிகாசமாக ‘பங்கிம் என்ற வார்த்தையை வைத்து தமாஷ் செய்ய ஆரம்பித்தார்.

 

 

ஏன் பங்கிம் ஆனீர்கள்?

 

‘பங்கிம்என்றால் சந்திரனின் பிரகாசமான பக்கம் என்று பொருள். வங்காள மொழியில் இதற்கு  கூன் போன்று வளைந்த தன்மையைக் குறிக்கும் இன்னொரு பொருளும் உண்டு.

 

பரமஹம்ஸர் பங்கிமை நோக்கி, “ நீங்கள் பெயரிலும் பங்கிம். செயல்களிலும் பங்கிம் என்றார். (கோணலானவர்)

இந்தக் கேலியை ஏற்ற பங்கிம், பரமஹம்ஸரின் பதில்கள் அவரது இதயத்தைத் தொட்டு விட்ட காரணத்தினால், “ நீங்கள் அவசியம் ஒருநாள் எங்கள் கந்தல்பாரா வீட்டிற்கு வர வேண்டும். அங்கே இறைவழிபாட்டிற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படும். ஹரி நாமத்தை நாம் எல்லோரும் உச்சரிக்கலாம் என்று சொன்னார்.

 

 

உடனே பரமஹம்ஸர், ஹரியின் நாமத்தை எப்படி நீங்கள் உச்சரிப்பீர்கள்? பொற்கொல்லர் உச்சரித்தது போலவா? என்று கேட்டார்.

 

அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.

 

பொற்கொல்ல கதையை அவர்கள் பரமஹம்ஸர் வாயிலாக முன்னமேயேர் கேட்டிருந்தனர்.

 

பங்கிம் சந்திரருக்கும் பொற்கொல்லர் கதையை பரமஹம்ஸர் சொல்ல ஆரம்பித்தார்.

 

 bankim chandrar1

 

பரமஹம்ஸர் கூறிய பொற்கொல்லர் கதை

 

பொற்கொல்லர் ஒருவரின் கடைக்கு சில நண்பர்களுடன் ஒருவர் வந்தார். அவருக்கு ஒரு நகையை விற்க வேண்டியிருந்தது.

 

பொற்கொல்லர் உடம்பு முழுவதும் தெய்வீகமான சந்தனக் கீற்றுகள்.பரம பக்தராக அவர் தோன்றினார். தலையில் குடுமி. கழுத்திலோ ருத்திராட்சம்!

 

வீட்டின் வாசலில் அமர்ந்திருந்த அவர் ஹரி நாமத்தை பரம பக்தியுடன் உச்சரித்துக் கொண்டிருந்தார்.

 

வீட்டின் உள்ளே அவரது உதவியாளர்கள் நான்கு பேரும் கூட இதே போலத் தோற்றமளித்தனர். அவர்கள் வெவ்வேறு நகை வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர்.

 

அவர்களின் அற்புதமான இந்த கோலத்தைப் பார்த்து வந்தவரும் அவர் நண்பர்களும், “இந்தப் பொற்கொல்லர் மிகவும் நல்லவர். ஒருவரையும் ஏமாற்ற மாட்டார் என்று எண்ணினர்.

 

தான் கொண்டு வந்த நகையைப் பொற்கொல்லரிடம் தந்த அவர் அதன் சரியான விலையைச் சொல்லுமாறு வேண்டினார்.

வந்தவர்களை முதலில் அன்புடன் உட்கார வைத்தார் பொற்கொல்லர்.தன் சீடன் ஒருவனிடம் அவர்கள் அனைவருக்கும் புகைக்க ஹீக்கா (பைப்) ரெடி செய்யுமாறு உத்தரவிட்டார்.

 

பின்னர் உரைகல்லில் அந்த நகையை உரைத்துப் பார்த்து தங்கத்தின் விலையைக் கூறினார். பின்னர் அதை உருக்குவதற்காக (தங்கம் எவ்வளவு தேறும் என்பதைப் பார்க்க) அவர்கள் அனுமதியைப் பெற்ற பின் வீட்டினுள்ளே அனுப்பினார்.

 

அதை வாங்கிக் கொண்ட சீடன் உடனே அதை உருக்க ஆரம்பித்தான். திடீரென்று பக்தி மேலிட “கேசவா, கேசவா என்று உரக்கக் கூச்சலிட்டான் அவன்.

 

அந்த திவ்ய நாமத்தைக் கேட்ட பொற்கொல்லரும் பக்தி பரவசராகி, “கோபாலா, கோபாலா என்று உரக்கச் சொன்னார்.

உடனே உள்ளேயிருந்த இன்னொருவன், “ஹரி, ஹரி, ஹரி என்று கத்திச் சொன்னான்.

 

அப்போது புகைக்க பைப்பைத் தயாராகக் கொண்டு வந்தவன் “ஹர ஹர ஹர என்று சொல்லியவாறே அவர்களிடம் புகைக்குழாய்களைத் தந்தான்.

 

இதைக் கேட்டவுடன் முதலில் உருக்கிக் கொண்டிருந்தவன் அந்த நகையை நீர் இருந்த பானையில் முக்கி தங்கள் பங்கிற்குத் தேவையான தங்கத்தை ஒதுக்கிக் கொண்டான்.

வந்தவர்கள் அவர்களின் பக்தியை மெச்சிக் கொண்டாடினர். உண்மையில் நடந்தது என்னவென்றே அவர்களுக்குத் தெரியாது.

 

நடந்தது இது தான்.

 

கேசவா என்று முதல்வன் இறைவன் நாமத்தை உச்சரிக்கவில்லை.

 

வங்காள மொழியில் அவன், “கே – சவா? என்று கேட்டான். அதற்கான பொருள், “அவர்கள் யார்?

 

அதாவது வந்திருந்தவர்கள் புத்திசாலிகளா அல்லது ஒன்றும் தெரியாத முட்டாள்களா என்பதே அவனது கேள்வி.

 

இதற்கு பொற்கொல்லர் கோ-பாலா, கோ-பாலா என்று பதில் சொன்னார். கோ – பசு, பாலா – பராமரிக்கும் கூட்டம்; அதாவது பசுக்களை மேய்க்கும் முட்டாள்கள் போல என்று அவர் பதில் கூறினார்.

 

உடனே ஹரி என்றவன், அப்படியானால் கொஞ்சம் திருடிக் கொள்ளலாமா (அபகரிக்கலாமா?) என்றான்.

உடனே அதற்கு ஹர  என்று பதில் வந்தது – (அபகரி) திருடிக் கொள் என்று.

 

பரம பக்தர்களிடம் அல்லவா வந்திருக்கிறோம் என்று எண்ணி எண்ணி மகிழ்ந்த வந்தவர்கள், உருக்கப்பட்ட தங்கத்தின் எடையைப் போட்டு பொற்கொல்லன் தந்த காசை வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியுடன் திரும்பினர்.

 

தங்கத்தில் சிறிது திருடப்பட்டது அவர்களுக்குத் தெரியாமல் போனது.

 

இந்தக் கதையைப் பரமஹம்ஸர் சொல்ல பங்கிம் சந்திரரும் விழுந்து விழுந்து சிரித்தார்.

 

“ஏன் நீங்கள் பங்கிம் ஆனீர்கள்? என்ற பரமஹம்ஸரின் கேள்விக்கு பரிகாசமாக அவரும். “இந்த இங்கிலீஷ்காரன் தன் ஷூ காலினால் என் முதுகைக் குத்தியதால் நான் பங்கிம் ஆனேன் என்றார்.

 

அனைவரும் கலகலப்புடன் நகைத்தனர்.

 bankim 2

பங்கிம் சந்திரரின் உண்மையான சொரூபம்

பரமஹம்ஸருக்கும் பரமஹம்ஸரின் பிரம்மாண்டமான பெரிய நிலை பங்கிமுக்கும் நன்கு தெரியும்.

 

அவர்களிடம் ஆத்மார்த்தமான நட்பு தொடர்ந்து நிலவியது.

பல சுவையான நிகழ்ச்சிகள் அவர்கள் சந்தித்த போதெல்லாம் நிகழ்ந்தன.!

 

*********

குறிப்பு : ஆங்கிலம் அறிந்தோர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது Swami Saradananda  எழுதியுள்ள Sri Ramakrishna The Great Master  என்ற நூலைப் படிக்க வேண்டும். அதில்  உள்ள நிகழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டே இந்த கட்டுரை உருவாகியுள்ளது. ராமகிருஷ்ண மடத்தில் இந்த நூலைப் பெற முடியும். இது விலை மதிக்க முடியாத  பொக்கிஷம் போன்ற ஒரு புத்தகம்.

 

-Subham-

 

 

அண்டப்புளுகன், ஆகாசப் புளுகன், கச்சந்திப் புளுகன், பீப்பாய் புளுகன் கதை (Post No. 2487)

IMG_3347

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 29 January 2016

 

Post No. 2487

 

Time uploaded in London :–  14-00

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

நூறு ஆண்டு பழமையான ‘ஜோக்’குகள்

பெரும்புளுகர் சமஸ்தானம்

ஒரு ராஜ சமஸ்தானத்தில் அண்டப்புளுகன், ஆகாசப் புளுகன், கச்சந்திப் புளுகன், பீப்பாய் புளுகன் ஆகிய நால்வரும் அரசனிடம் வந்து நாங்கள் சமஸ்தானப் புளுகனை ஜெயிக்கவந்தோம் என்று கூற, இதைக்கேட்ட அரசன், சமஸ்தானப் புளுகன் எங்கே தோற்றுவிடுவானோ என்று அஞ்சி அருகிலிருக்கும் சமஸ்தானப் புளுகனை  ஒரு பார்வை பார்த்தான்.

 

உடனே சம்ஸ்தானப் புளுகன், திடீரென்றெழுந்து கம்பீரமாய் நின்று, “ஓ,ஓ! கீர்த்தி பெற்ற கிண்டப்புலி புளுகர்களே! என்னை ஜெயிப்பதன் முன்னர், நானே புளுகிவிடுகிறேன். பின்பு உங்களிஷ்டம் போல் புளுகலாம், என்று கூறியவர்களைச் சம்மதிக்கச் செய்து, பிறகு சொல்லத் தொடங்கினான்:

“சபையோர்களே! என் பாட்டி கல்யாணத்திற்கு முகூர்த்தக்கால் நட்டார்கள். அப்போது நான் தான் தேங்காயுடைத்தேன். அதில் மேல் மூடி சப்த லோகமாகப் பரவிய ஆகாசமாயிற்று. கீழ்மூடி அதல, விதல, சுதல, தராதலமென்ற கீழ் ஏழு லோகமாயிற்று. நடுவிலிருக்கும் தேங்காய் நீர் சப்த சமுத்ரமாயிற்று. அதிலுள்ள திப்பி, நார் முதலியன சூரிய,சந்திர, நக்ஷத்ராதீ, தேவ, மனுஷ, மிருக, பக்ஷி, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரமென்ற மற்றெல்லாமாயின. ஐய! இனிப் புளுகுவோரெல்லாம் இந்த ஈரேழு பதினான்கு லோகங்களுக்கு  அப்ப்லாலிருந்து புளுக வேண்டுகிறேன்” என்று சொல்லி சமஸ்தானப் புளுகன் உட்கார்ந்தான்.

 

இதுகண்டு வந்தவர்கள் இவனேது அண்டரண்டப் புளுகனாயிருக்கிறானென்று பயந்து, வந்தனஞ்செய்துவிட்டுத் தம் பதிக்கேகினர்.

 

xxx

காளிகோவில் பூசாரி : வாரியார் சொன்ன கதை (Post No. 2486)

durga many hands

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 13 January 2016

 

Post No. 2486

 

Time uploaded in London :– 9-31 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

 

(லண்டன் ஸ்ரீ முருகன் கோவில் மஹா கும்பாபிஷேக மலர், 1984)

நேற்று வெளியிட்ட சஜ்ஜன சாருகர் கதையையும் படியுங்கள்

durga killing asura

அவ்வினைக்கு இவ்வினை: மற்றொரு சான்று

ஒரு காளிகோவில் பூசாரி ஒருவன் பூஜை செய்து கொண்டிருந்தான். மார்கழி மாதம் அதிகாலையில் குளிர்ந்த நீரில் முழுகி காளி தேவிக்கு தயிர் அன்னம் நிவேதனம் செய்தான். ஒவ்வொரு நாள் ஒவ்வொருவருடைய உபயம். தட்டில் பணம் போடும் பெரியவர்கட்குத் தயிரன்னத்தை விளாம்பழம் அளவு உருட்டித் தருவான். பிள்ளைகள் கையில் தயிரன்னத்தைத் தடவி விடுவான். அப்பிள்ளைகள் வெளியே வந்து பூதக்கண்ணாடி போட்டுப்பார்த்தால்தான் கையில் பிரசாதம் சிறிது இருப்பது தெரியும்!

 

பூசாரிக்கு ஆகார மாறுபாட்டால் காய்ச்சல் வந்தது. அதற்குத் தகுந்த மருந்து   உண்பதுதான் முறை. அவன் அறிவில்லாதவன். “காளியாயீ! இந்தக் காய்ச்சலிலிருந்து என்னைக் காப்பாற்று. உனக்கு இரு ஆடுகள் பலி தருவேன்” என்று பிரார்த்தனை செய்துகொண்டான். அவன் மனைவி மிளகு- திப்பிலி கஷாயம் செய்து தந்தாள். காய்ச்சல் நின்றுவிட்டது.

 

ஆடிமாதம அம்மனுக்கு, பூசாரி, அபிஷேகம் செய்து இரு ஆடுகளைக் கொண்டுவந்து அவைகளுக்கு மஞ்சள் நீர் ஊற்றி நீராட்டினான். மஞ்சள் நீர் பட்டதும் இரு ஆடுகளும் தலையை உதறின.- உடனே பூசாரி, “அம்மன் உத்தரவாகிவிட்டது. அதற்கு அடையாளம் ஆடுகள் தலையை ஆட்டிவிட்டன” என்று சொல்லி இரு ஆடுகளையும் வெட்டிவிட்டான். தண்ணீர்பட்டால் உதறுவது இயற்கைதானே, அதற்காக ஆட்டை வெட்டலாமா?

 

அந்த நகரை ஆட்சிபுரிகின்ற மன்னவனுக்கு ஒரு மன்னனும், மந்திரிக்கு ஒரு மகனும் பிறந்தார்கள். மந்திரி மகனும், மன்னன் மகனும் கலைகளில் வல்லவர்கள் ஆனார்கள். மன்னன் மகனுக்கு முடிசூட்டு விழா நடைபெற்றது.

 

மன்னன் மகனுக்கு மகுடாபிஷேகம் செய்தபின்னர், 12 ஆண்டுகளுக்கு மழை பெய்யவில்லை. மக்கள் உண்ணீரும் தண்ணீரும் இன்றித் தவித்தார்கள். ஒருநாள் மன்னவன் மகனும் மந்திரி மகனும்  இரவு பத்து மணிக்கு அந்தக் காளிதேவியிடம் இக்குறையைச் சொல்லி வழிபாடு செய்யச் சென்றார்கள். நம்மைத் தண்டிக்க வருகிறார்களோ என்று அஞ்சிய பூசாரி காளிதேவிக்குப் பின்புறம் ஒளிந்து கொண்டான்.

 

மன்னவன் மகன், அம்பிகையை அஞ்சலி செய்து, “தேவி! கருணாம்பிகை! அகிலாண்டநாயகி! எனக்கு முடிசூட்டிய பின்னர் 12 ஆண்டுகளாக மழையில்லை. அம்மையே! மழை பொழியச் செய்வாய்” என்று உள்ளம் உருக வேண்டினான்.

 

காளிதேவி, “மன்னன் மகனே! என் சந்நிதியில் நரபலி தந்தால் மழை பொழியும்” என்று அசரீரியாகக் கூறினாள்.

 

இதையறிந்த மன்னன் மந்திரியுடன் ஓடோடி வந்தான், மந்திரியைப் பார்த்து, “ தோழனே மக்களுக்கு நான் தந்தை. மக்கள் பொருட்டு என் உயிரைத் தியாகம் செய்ய வேண்டும். என்னைப் பலியிடு. நீ அரசாட்சியை ஏற்று நாட்டை ஆள் என்றான். மந்திரியோவெனில், “அரசே!

உடுக்கை இழந்தவன் கை போல

ஆங்கன் இடுக்கண் களைவதாம் நட்பு

 

 

durga,Bvar

தங்களின் நண்பனாகிய நான் தங்களை பலியிடுவதா? வேண்டாம். என்னைப் பலியிடுங்கள். மந்திரி பதவிக்குப் பலர் ஆலாப் பறக்கிறார்கள். யாரையாவது அமைசராக வைத்து அரசு புரியுங்கள்” என்றான்.

“என்னைப் பலியிடு”, “என்னைப் பலியிடு” – என்று இருவரும் வாதிட்டனர்.

 

அரசன், அன்பனே எனக்கும் உனக்கும் வாக்குவாதம் வேண்டாம்; அம்பிகையைக் கேட்போம். அம்பிகை யாரைக் கேட்கின்றாளோ, அவ்வாறே செய்வோம்” என்று கூறினான்.

 

தேவி! உன் சந்நிதியில் அடியேன் பலியாக வேண்டுமா? அல்லது அமைச்சர் பலியாக வேண்டுமா? என்று வினாவினான்.

 

தேவி சொன்னாள்: “மன்னவனே! நீயும் பலியாக வேண்டாம், மந்திரியும் பலியாக வேண்டாம். என் பின்னே ஒளிந்திருக்கும் பூசாரிதான் பலியாக வேண்டும். அதுவும் நீயும் மந்திரியும் பூசாரியை என் சந்நிதி முன்னே நிறுத்தி, அவனுக்கு முன்னும் பின்னுமாக நின்று, ஏக காலத்தில், உங்கள் மகன்கள் இருவரும் பூசாரியின் தலையை வெட்டித்தள்ள வேண்டும்”.

 

பூசாரி இதைக் கேட்டு நடுநடுங்கினான். வெளியே வந்தான். அவனுடைய கண்கள் சிவந்தன. மீசை படபடத்தது. புருவம் நெளிந்தது. “காளியாயீ! நீ ஒரு தெய்வமா! உனக்கு 55 ஆண்டுகளாகப் பூசை செய்தேனே! என்னையா பலியிடச் சொல்கின்றாய்? உனக்கு கருணையில்லையா? 84 நூறாயிர யோனி பேதங்கட்கும் நீ தாயல்லவா? நான் உனக்கு சேயல்லவா? கொடியவளே! உனக்கு இரக்கம் இல்லையா? பலகாலம் தொண்டு செய்த என்னையே பலிவாங்க முற்பட்டனையா? உன் மனம் இரும்பா? கல்லா? இரக்கமில்லாத அரக்கியே! நீ ஒரு தெய்வமா?” என்று கூறி வசைமாறி பொழிந்தான்.

 

காளிதேவி சொன்னாள்: “பூசாரி! பதட்டம் அடையாதே. தானத்தில் நிதானம் பெரியது. தயிரன்னம் உண்டு உனக்குக் காய்ச்சல் வந்தால் கோனாரின் வீட்டில் வாழும் ஆடுகள் என்ன பாவம் செய்தன? எண்பத்துநான்கு நூறாயிரம் யோனி பேதங்கட்கும் நான் தாய் என்று இன்றுதான் உணர்ந்தனையா? நீ பல ஆண்டுகளுக்கு முன் வெட்டிய ஆடுகட்கும் நான் தாயல்லவா? வாயில்லாத குற்றமற்ற ஆடுகளைக் கதறக் கதற அன்று நீ பலியிட்டனையே! நீ பலியிட்ட இரண்டு  ஆடுகளும் மன்னவன் மகனாகவும், மந்திரி மகனாகவும் பிறந்து வந்திருக்கின்றனர்.

Durga puja in Allahabad

Allahabad: Devotees immerse goddess Durga idol on the last day of puja festival in a pond near the confluence the Ganga, Yamuna, and Saraswati on Friday in Allahabad. PTI Photo (PTI10_23_2015_000199A)

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் – தமக்கின்னா

பிற்பகல் தாமே வரும் – என்பது பெரியோர் வாக்கு. அவ்வினைக்கு இவ்வினை” – என்றாள்.

 

பூசாரி குனிந்து நின்றான். மன்னவன் மகன் வாளும் மந்திரி மகன் வாளும் பூசாரியின் தலையை ஏக காலத்தில் சோதித்தன. அம்பிகை காட்சிதந்தாள். மன்னனே! உனக்கு வேண்டிய வரத்தைக் கேள் என்றாள்.

 

மன்னன், “தாயே! இந்த பூசாரி குற்ரத்தை உணர்ந்துகொண்டான். மன்னிப்பது உன் இயல்பு. தேவி! இவனை மன்னித்து உயிர்ப்பிச்சை கொடு என்றான்.பின்னர் மழை பெய்து, மக்கள் சுகமடைய அருள்புரிவயாக” என்றான்.

 

அம்பிகை அருள் புரிந்தாள். பூசாரி எழுந்தான். அதுமுதல் ஆலயத்தில் பலியிடும் கொடுமையை அகற்றினான். நன்கு மழை பொழிந்தது. நாடு செழித்தது. ஆதலால் செய்தவினை செய்தவனை வந்தடையும்.

“அவ்வினைக்கு இவ்வினை” என உணர்க. யாருக்கும் எப்போதும் இடர் புரியாது, நலமே புரிந்து இறையறும் பெறுக.

 

வாரியார் 1

(கிருபானந்த வாரியார் சுவாமிகள் 1984 ஆம் ஆண்டில் எழுதியது)

-சுபம்-