Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
LONDON SWAMINATHAN’S REQUEST TO MADRAS HIGH COURT AND SUPREME COURT TO TAKE SUO MOTU ACTION IN THE ISSUE OF TEMPLE GOLD JEWELS MELTING SCHEME OF THE TAMIL NADU GOVERNMENT. IT IS DONE BY WHO DOES NOT KNOW HISTORICAL VALUE OF ANTIQUES AND WHO DOES NOT BELIVE IN TEMPLE RITUALS. THE JEWELS ARE GIVEN BY INDIVIDUALS WITH A PURPOSE. THEY CANT VIOLATE THAT. IF WE DON’T USE THEM FOR THE PURPOSES MEANT BY THE DONORS, IT IS OUR FAULT. MOST OF THEM CARRY MORE ANTIQUE VALUE THAN FACE VALUE.
THANKS TO THE FRENCH INSTITUE OF PONDICHERY, WE RECOVERED LOT OF STOLEN ARTICLES WITH THEIR BLACK AND WHITE PICTURES OF OUR IDOLS. EVEN A COPPER COIN IN THE PADMANABHA SWAMI TEMPLE VAULT OF THIRU ANANTHA PURAM WILL BE NOUGHT FOR A BIG PRICE BY FOREIGN MUSEUMS.
I PAID MONEY TO SEE JEWELS OF BRITISH QUEEN IN LONDON, NAPOLEON’S SHOES IN VERSAILLE IN FRANCE AND CROWNS OF SWEEDISH KINGS IN STOCKHOLM. EVEN ANTI GOD COMMUNIST GOVERNMENTS ARE KEEPING ALL BUDDHA STATUES AND THE JEWELS IN MUSEUMS. COURTS MUST CONSULT GREAT HISTORIANS AND ARCHEOLOGISTS LIKE DR R NAGASWAMY IN THIS MATTER. ARCHAEOLOGY DEPARTMENT SHOULD PHOTOGRAPH ALL GEMS AND GOLDS BEFORE TAKING ANY DECISION. THE PICTURES MUST BE MADE PUBLIC.
QUEEN VICTORIA REQUESTED A GEM FROM MADURAI MEENAKSHI TEMPLE 200 YEARS AGO. THAT WAS SENT TO LONDON AND ‘RETURNED’. NOBODY KNEW WHETHER IT WAS THE ORIGINAL SHE SENT BACK . I DOUBT IT. IT IS IN MY ARTICLE WRITTEN 10 YEARS AGO ‘THE WONDER THAT IS MEENAKSHI TEMPLE’. COURTS MUST TAKE IMMEDIATE ACTION. HINDU ORGANISATIONS MUST TAKE ACTION IMMEDIATELY.
SEVERAL GEMS AND JEWELS OF TAMIL TEMPLES ARE ALREADY PLUNDERED AND FAKE GEMS ARE INSTALLED. THE BOOGOLAM AND KAGOLAM ORIGINAL MAPS IN CLOTH AT MEENAKSHI TEMPLE KALYANA MANDAPAM WERE STOLEN AND TAKEN TO FOREIGN COUNTRY. SAVE OUR TEMPLES; SAVE OUR ANTIQUES.
29 Sept 2013 — Madurai Meenakshi Temple is an architectural wonder. When one climbs to the top of the South Tower to have a bird’s eye view of Madurai,
கோவில் தங்கத்தை உருக்குவோர் வரலாறு அறியாத முட்டாள்கள். சாபத்திற்கு உள்ளாகி அழியப்போகும் வஸ்துக்கள் . நாங்கள் இங்கு லண்டனில் 25 பவுன் கொடுத்து மஹாராணி நகைகளையும் மோதிரங்களையும் , கிரீடங்களையும் பார்க்கிறோம். பாரிசுக்கு வெளியே வெர்சாய் அரண் மனையில் நெப்போலியன் பயன்படுத்திய செருப்பு, மேஜை கூட காட்சிக்கு வைத்து இருக்கிறார்கள். அதையும் காசு கொடுத்து பார்த்தேன். சுவீடனில் ஸ்டாக்ஹோம் மியூசியத்தில் மன்னர் கிரீடங்களை காசு கொடுத்து பார்த்தேன். மீனாட்சி கோவில் நகைகள் பல கோடி ரூபாய் மதிப்புடையவை. அவற்றின் பழங் கலைப் பொக்கிஷ மதிப்பு- அதாவது ஆன்ட்டிக் வால்யூ ANTIQUE VALUE – கோடி மடங் அதிகம்.
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷத்தில் உள்ள செப்புக்காசுக்கும் ஆன்ட்டிக் வால்யூ அதிகம். கோவில் நகைகளில் பல மிகப்பழமையானவை . அவைகளை உருக்கக்கூடாது. தொல்பொருட் ததுறையினர் மூலம் விலைமதிப்பிட வேண்டும்.. பல நகைகள் சுவாமி, அம்மன், பெருமாள் மீது போடுவதற்காக கொடுக்கப்பட்டிருக்கலாம். அவைகளை துஷ்பிரயோகம் செய்வோர் மீது சாபங்கள் உள்ளன. இதை எல்லா தமிழக கல்வெட்டுகளின் கடைசி வரியில் காணலாம். ஆக அந்த சாபங்கள திராவிடர்களை அடியோடு அழித்துவிடும். மத நம்பிக்கை இல்லாத கம்யூனிஸ்ட் நாடுகள் கூட தங்க புத்த விக்கிரகங்களையும் நகைகளையும் அப்படியே வைத்திருக்கின்றன. மீனாட்சி அம்மனின் நீலக்கல் லண்டன் வந்து அதை விட்ட்டோரியா மஹாராணி திருடி வைத்துக் கொண்டு வேறு கல்லை அனுப்பிய செய்தியை 2011ல் எனது பிளாக் கட்டுரையில் பதிவு செய்துள்ளேன். அதுபோல நகைகளில் உள்ள விலையுயர்ந்த ரத்தினங்களை திராவிடர்கள் கொள்ளையிட வாய்ப்பு கொடுக்கக் கூடாது. தயவு செய்து இதை கோர்ட்டாரே SUO MOTU வழக்காக எடுத்து மறு பரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும் . புதுக் சேரியிலுள்ள பிரென்ச் இன்ஸ்டிட்யூட் பழைய கோவில் விக்ரகங்களை கருப்பு வெள்ளை போட்டோ எடுத்து வைத்திருந்ததால்தான் டாக்டர் நாக சாமி போன்ற அறிஞர்கள் அவைகளை வெளிநாட்டு மியூசியங்களில் இருந்து மீட்டார்கள் . ஆகையால் தொல்பொருட் துறை முதலில் எல்லாவற்றையும் வெளிநாட்டு மியூசியங்களில் இருந்து புகைப் படம் எடுக்கவேண்டும். அந்த நகைகளின் பழமை குறித்து மதிப்பிடவேண்டும்.
suo moto
(with reference to an action taken by a court) without any request by the parties involved.
“the court has, suo motu, decided to add the divisional commissioner as a respondent to the petition”
என் வேண்டுகோளை சுவோ மோட்டோ வழக்காக சென்னை ஹைகோர்ட்டும் சுப் ரீம் கோர்ட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
உலகப் பேரறிஞர் , சிவபுரம் நடராஜர் சிலை மீட்ட செம்மல் டாக்டர் இரா.நாகசாமி போன்றோர் கருத்தை முதலில் கேட்க வேண்டும்.
XXX SUBHAM XXX
tags –கோவில் நகை, தங்கம், உருக்கும் திட்டம், வரலாறு, திராவிடர் , வழக்கு, temple gold, melting, suo motu
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஸ்ரீ குமரகுருபரர்! – 2
ஒவ்வொரு ஊராகச் சென்ற குமரகுருபரர் அங்கு அவருடன் வாதுக்கு வந்தோரை வாதில் ஜெயித்து சைவ சித்தாந்தத்தை நிலை நிறுத்தினார். வைத்தீஸ்வரன் கோவிலை அடைந்த குமரகுருபரரின் கனவிலே முருகப் பிரான் காட்சி அளித்து, “எம்மை பாடாமல் விட்டது ஏன்?” என்று வினவினார். கண் விழித்தவுடன் குமரகுருபரர் ‘முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்” என்ற அரிய பிள்ளைத் தமிழ் நூலை இயற்றினார்.
பின்னர் யாத்திரையாக தர்மபுரம் நோக்கிச் சென்ற குமரகுருபரர் தர்மபுர மடத்தின் அதிபதியான மாசிலாமணி தேசிகரைச் சந்தித்து அவரிடம் ஞானோபதேசம் பெற்றார். அவர் குமரகுருபரரை காசிக்குச் சென்று அறப் பணிகளை மேற் கொள்ளுமாறு கூற காசி நோக்கிச் சென்றார் குமரகுருபரர்.
காசியை அப்போது முகலாய மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஹிந்துஸ்தானி பாஷை மட்டுமே தெரியும். குமரகுருபரருக்கோ அந்த மொழி தெரியாது. அவனைத் தனது அறப்பணிகள் நிமித்தமாகச் சந்திக்க விரும்பிய குமரகுருபரர் சரஸ்வதி தேவியைத் துதித்தார். சகலகலாவல்லி மாலை என்ற அற்புதமான நூலை இயற்றினார். சரஸ்வதியின் அருளால் ஹிந்துஸ்தானி மொழியில் அவர் வல்லவரானார்.
அரசனைச் சந்திக்க அவர் கிளம்பினார். ஆனால் அரசனோ அவருக்கு உரிய ஆசனத்தைத் தந்து கௌரவிக்கவில்லை. ஆகவே குமரகுருபரர் ஒரு சிங்கத்தின் முதுகின் மீது அமர்ந்து அரசவைக்குச் சென்றார். இதனால் வியப்புற்ற மன்னன் அவரது பெருமையை உணர்ந்து அவரைத் தக்கபடி வரவேற்றான்.
சுல்தான் குமரகுருபரரைக் கௌரவிப்பதைக் கண்டு பொறாமை கொண்ட மகமதிய முல்லாக்கள் மன்னரிடம் அவருக்குப் பெரும் அவமதிப்பை உருவாக்க எண்ணினர். அரசனிடம் அவர்கள், குமரகுருபரர் கல்வி கேள்விகளில் வல்லவர் என்றாலும் கூட அவர் வணங்கும் தெய்வம் மெய்யான தெய்வம் இல்லை; அப்படி மெய்யான தெய்வம் என்று அவர் கூறினால் அதை அவர் நிரூபிக்க வேண்டும்“ என்றனர். அரசனும் அவரை அவைக்கு அழைத்தான். குமரகுருபரரிடம் அவர் வணங்கும் தெய்வம் மெய்யான தெய்வம் எனில் அவர் பழுக்கக் காய்ச்சிய இரும்பைக் கையில் பிடித்துக் காண்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர் முல்லாக்கள். குமரகுருபரரும் இதை ஏற்றார். பழுக்கக் காய்ச்சிய இரும்பைக் கையிலே பிடித்த குமரகுருபரர், “சிவனே முழு முதல் கடவுள் என்பது உண்மையெனில் இந்தப் பழுக்கக் காய்ச்சிய இரும்பு என்னைச் சுடாதிருக்கட்டும்” என்று முழங்கினார். காய்ச்சிய இரும்பு அவரைச் சுடவில்லை. மகமதிய குருமார்கள் தலை கவிழ்ந்து நிற்க சுல்தானோ அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். குமரகுருபரர் கேட்டுக் கொண்ட படி மடம் ஒன்று நிறுவுவதற்கான சகல உதவிகளையும் செய்து மடத்திற்கான இடத்தையும் அளித்தான். ஆக இப்படித் தான் குமாரசாமி மடம் என்று அனைவராலும் அழைக்கப்படும் காசி மடம் உருவானது.
குமரகுருபரர் சிங்கத்தின் மீது அமர்ந்து அரசவைக்குச் சென்ற சம்பவம் உண்மை தான் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்தக் காசி மடத்தில் அவர் சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் கற்சிலை இன்றும் காணக்கூடிய படி அங்கு உள்ளது. காசியில் குமரகுருபரர் வசித்த காலத்தில் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.
ஒரு நாள் சுல்தான் அவரைத் தன்னுடன் உணவருந்தும்படி அழைத்தான். குமரகுருபரரும் இசைந்தார். தனது பணியாளர் ஒருவரை ஒரு தட்டிலே செவ்வலரி மலரை வைத்து அதைக் கொண்டு வரச் செய்து அரசனுடன் விருந்துண்ணச் சென்றார் அவர். “தட்டிலே என்ன?” என்று அவன் கேட்க, “அது பன்றி மாமிசம்” என்றார் குமரகுருபரர். இதனால் மிகுந்த வெறுப்புக்குள்ளானான் அவன். குமரகுருபரரோ, “இறைவனால் படைக்கப்பட்ட அனைத்தையும் விருப்பு வெறுப்பு இன்றி நோக்க வேண்டும்” என்று உபதேசித்ததோடு அரசன் தட்டிலே இருந்த புலால் உணவு அனைத்தையும் சைவ உணவாக மாற்றினார். அரசனுக்கு சைவ உணவின் மேன்மையைப் பற்றி புலப்படுத்தினார்.
கேதார் கட்டில் முகமதியர் மறைத்து வைத்திருந்த கேதார லிங்கத்தை வெளிப்படுத்தி முறையாக பூஜை நடத்த அவர் வழி வகுத்தார். நேபாளத்தில் முகரங்கி என்னுமிடத்தில் ஒரு திருமடத்தை நிர்மாணிக்க தனது அன்பரான வாகீச முனிவர் என்பவரிடம் சொல்லி அதை நிர்மாணிக்க வழி வகை செய்தார்.
காலம் செல்லச் செல்ல குமரகுருபரர் தனது இறுதி நெருங்குவதை உணர்ந்து தமக்குப் பின் பணிகளைத் தொடர்ந்து செய்ய தமது சீடர்களுள் ஒருவரான சொக்கநாத முனிவரை அதற்கெனத் தேர்ந்தெடுத்தார்.
வைகாசி மாதம் தேய்பிறை மூன்றாம் நாளில் அவர் காசி விஸ்வநாதருடன் கலந்தார். இன்னொரு வரலாற்றுச் செய்தி அவர் கங்காநதியில் சென்று மறைந்து கலந்தார் என்று தெரிவிக்கிறது.
தமிழுக்கு குமரகுருபரர் ஆற்றிய நற்பணி சொற்களினால் விளக்க முடியாதபடி எல்லையற்றுப் பரந்த ஒன்றாகும். அவர் தன் வாழ்நாளில் 16 நூல்களை இயற்றியருளினார். கந்தர் கலி வெண்பா, கைலைக் கலம்பகம், மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், மீனாட்சியம்மை குறம், மீனாட்சியம்மை இரட்டை மணி மாலை, மதுரைக் கலம்பகம், நீதி நெறி விளக்கம், திருவாரூர் நான்மணி மாலை, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ், சிதம்பர மும்மணிக் கோவை, சிதம்பரம் செய்யுட் கோவை, சிவகாமி அம்மை இரட்டை மணி மாலை, பண்டார மும்மணிக் கோவை, காசிக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, காசித் துண்டி விநாயகர் பதிகம் ஆகியவை அவர் இயற்றி அருளிய நூல்களாகும். இந்த நூல்கள் பலவற்றையும் www.projectmadurai.org உள்ளிட்ட பல இணையதளங்களில் காணலாம்.
குமரகுருபரரைப் பற்றி திரிசிரபுரம் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை 338 செய்யுள்களில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகளின் சரித்திரம் என்ற நூலை இயற்றியுள்ளார். சேற்றூர் இரா. சுப்பிரமணியக் கவிராயர் என்பவர் 1001 பாடல்கள் அடங்கிய ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் புராணம் என்ற நூலை இயற்றியுள்ளார்.
குமரகுருபரரின் பக்தியையும் அவர் பா நயத்தையும் மேற்படி நூல்களில் காணலாம். சொல் நயம், கற்பனை நயம், பொருள் நயம் என அனைத்து நயங்களிலும் அவர் மேலோங்கி நிற்பதற்குச் சில உதாரணங்களை மட்டும் இங்கு பார்ப்போம். இறைவனது எல்லையற்ற தன்மையை அவர் விளக்கும் பாங்கு அற்புதமாக உள்ளது:
“இலதென உளதென இலதுள தெனுமவை
அலதென அளவிட அரியதோர் அளவினை
குறியிலன் அலது ஒரு குணம் இலன் என நினை
அறிபவ ரறிவினும் அறிவரும் நெறியினை” என மதுரைக் கலம்பகத்தில் வரும் பாடல் அருமையான ஒன்று.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
FESTIVAL DAYS – OCT.2- GANDHI JAYANTHI, 6- MAHALAYA AMAVASAI,7- NAVARATRI BEGINS, 14- SARASVATI PUJA, 15- VIJAYA DASAMI/DASARA,19-MILADI NABHI,
NEW MOON DAY- OCT.6, FULL MOON DAY- OCT.20, EKADASI FASTING DAYS- OCT.2, 16
AUSPICIOUS DAYS – OCT. 25, 27,
From Fourth Mandala
OCTOBER 1 FRIDAY
O AGNI, O MOST BRIGHT, O RADIANT GOD, WE COME WITH PRAYERS FOR HAPPINESS OF OUR FRIENDS 5-24-4
XXX
OCTOBER 2 SATURDAY
Victorious Agni, bring us that vanquished in the war. FOR YOU ARE WONDERFUL AND TRUE, GIVER OF STRENGTH IN HERDS OF COWS 5-23-2
XXX
OCTOBER 3 SUNDAY
Agni, the great who ward not off the anger of your power and might. Stir up the wrath and hatred due to one who holds an alien creed 5-20-2
XXX
OCTOBER 4 MONDAY
Immortal Agni, Heroes illustrious, lofty fame, who at the synod met for praise presented me with fifty horses 5-18-5
XXX
OCTOBER 5 TUESDAY
GREAT POWER IS IN THE BEAM OF LIGHT; Sing praise to Agni, to the god whom men have set in foremost place like Mitra with their eulogies 5-16-1
XXX
OCTOBER 6 WEDNESDAY
May he born newly, conquer his assailants; round him they stand as round an angry Lion 5-15-3
XXX
OCTOBER 7 THURSDAY
When like a Mother, spreading forth to nourish to cherish and regard each man that lives
Consuming all the strength that you have got, you wander round, yourself, in varied fashion 5-15-4
xxxx
OCTOBER 8 FRIDAY
Agni, Mark with attention this our speech,
O Agni, you victorious one, you strong- jawed, as the Lord of Home, the Atris with their exalted songs praise you.5-22-4
xxx
OCTOBER 9 SATURDAY
Agni, lofty Asura, meet for worship, Steer of Eternal Law, my prayer I offer. 5-12-1
Xxx
OCTOBER 10 SUNDAY
Agni your friends those who have turned them from you, they have become ungracious. They have deceived themselves by their own speeches, uttering wicked words against the righteous 5-12-5
Xxx
OCTOBER 11 MONDAY
You,Agni, as the felly rings the spokes encompassed the gods. I yearn for bounty manifold 5-13-5
Xxx
OCTOBER 12 TUESDAY
Now,Agni, come to succour us; let priests draw nigh to offer gifts; And let the patrons of our rites SUBDUE ALL REGIONS OF THE EARTH.5-10-6
xxx
OCTOBER 13 WEDNESDAY
Agni, for you is this sweetest prayer of mine; dear to your spirit be this product of my thought.
AS GREAT STREAMS FILL THE RIVERS SO OUR SONGS OF PRAISE FILL YOU AND MAKE YOU YET MORE MIGHTY IN YOUR STRENGTH 5-11-6
xxxx
OCTOBER 14 THURSDAY
Agni shears the field and wilderness, with flashing teeth and Beard of Gold, deft with his unabated might 5-7-7
Xxx
OCTOBER 15 FRIDAY
Agni, Master of the house hold, with Hair of Flame, with High Flag, multi form, distributor of wealth, Kind Helper, Good Protector, Drier of the Floods 5-8-2
Xxx
OCTOBER 16 SATURDAY
Agni,,as an infant newly born, the kindling sticks brought to life, Sustainer of the tribes of men, skilled in well-ordered sacrifice 5-9-3
xxxx
OCTOBER 17 SUNDAY
Yes,you are very hard to grasp, like the offspring of wriggling SNAKES. When you consume many woods like an ox, Agni in the mead 5-9-4
XXXX
OCTOBER 18 MONDAY
As a skilled craftsman makes a chariot, a singer I, Mighty One, this hymn for you,have fashioned. If you accept it gladly, may we obtain thereby the heavenly Waters 4-2-11
XXXX
OCTOBER 19 TUESDAY
Most Youthful Agni, verily you help the one who praises you, safely over all his troubles. We have seen the thieves and open foes. Unknown have been the plotting s of the wicked 4-3-11
XXXX
OCTOBER 20 WEDNESDAY
Agni, flaming high, shall never yield us to calumny, to him who wrongs us 4-3-12
XXX
OCTOBER 21 THURSDAY
Over all woes and dangers, Jatavedas/Agni, bear us in a boat across a river 4
XXX
Spread yourself out, you soft as wool. The holy hymns have sung to you 4-5-4
OCTOBER 22 FRIDAY
Open yourselves the Doors Divine, easy of access for our aid 4-5-5
XXX
OCTOBER 23 SATURDAY
Many seek Agni, man has found to be the Stay of All. He gives flavour to our food, the home of every man that lives 5-7-6
XXXX
OCTOBER 24 SUNDAY
Ila,Sarasvati,Mahi, three goddesses who bring us weal, Be seated harmless on the grass 4-5-8
XXXX
OCTOBER 25 MONDAY
When ghee is poured on him,Agni, he mounts on them like children rides on the back of their father.5-7-5
XXXX
OCTOBER 26 TUESDAY
Vanaspati, wherever you know the gods mysterious names, send our oblation s hitherward 4-5-t
XXXX
OCTOBER 27 WEDNESDAY
O my friends, offer to Agni, your appropriate praise, appropriate food 5-7-1
XXXX
OCTOBER 28 THURSDAY
Agni,Worshipful House Friend, our own auspicious guest, lauded by the sages.
That strength the Bull with 1000 horns possesses. In might, O Agni, you excelled others 4-1-8
XXX
OCTOBER 29 FRIDAY
He/ Agni conquers godless and malign enchantments and sharpens both his horns to gore the Rakshasas 4-2-9
XXXX
OCTOBER 30 SATURDAY
Ila,Sarasvati,Mahi, three goddesses who bring us weal, Be seated harmless on the grass 4-5-8
XXX
OCTOBER 31 SUNDAY
The youthful Mother keeps the Boy / Agni in secret pressed to her close, nor yields him to the Father. But he lies upon the arm, the people see his unfading appearance before them 4-2-1
—-SUBHAM —–
tags – October 2021, Calendar, Vedic quotes, Fourth Mandala
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சேர சோழ பாண்டியர்கள் உலகிலேயே நீண்ட காலத்துக்கு அடித்துக்கொண்டு செத் தொழிந்தார்கள் . இது போல வடக்கே நடந்த ஒரு யுத்தம் இது. அதாவது ஒரே இனத்தில் உட் பூசல் ; அரக்கர்கள் இல்லாத மதநூல் உலகில் எந்த மதத்திலும் இல்லை. போர் நடைபெறாத பகுதி இந்தப் பூவுலகில் எதுவுமே இல்லை. இது போல ரிக் வேத காலத்திலும் உட்பூசல் , வெளிப்பூசல்கள் இருந்தன. அவை எல்லாவற்றுக்கும் இனப் பூ ச்சு பூசிய அயோக்கியத்தனத்தை மார்க்சீய கும்பலும் மாக்ஸ் முல்லர் கும்பலும் செய்தன. இந்து மத நூல்கள் எவற்றிலும் இந்துக்கள் வெளியிலிருந்து வந்ததாக எழுதவில்லை. தேவர்களும் இந்தியாவில் பிறக்க வேண்டும் என்று ஏங்குவதாக புராணங்கள் சம்ஸ்கிருதப் பாடல்களில் பாடுகின்றன.
பொன் மயமான இலங்கை வேண்டுமா? என்ற வினா வந்த போது “ஜனனி ஜன்ம பூமிஸ் ச ஸ்வர்காதபி கரீயஸி “– என்று இராமபிரான் சொல்கிறான். “பெற்ற தாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” –என்று பாரதி அதை மொழி பெயர்த்தார். அதாவது அயோத்தி மாநகரமுள்ள கோசல நாடு சுவர்க்கத்தை விடச் சிறந்ததாம். இப்படி நதிகளுக்கும் நாட்டிற்கும் ‘தாய்’ என்ற பட்டம் சூட்டிய கலாசாரம் இந்து கலாசாரம். இதை ரிக் வேதத்தில் இருந்து கிரேக்கர்கள் ‘காப்பி’ copy அடித்து உலகிற்குப் பரப்பினர் .
இதோ இரண்டு யமுனைக் குறிப்புகள்:-
ரிக் வேதம் 5-52-17
ஒரு படையாகத் திரண்ட, ஏழு ஏழான (7X7+49) சக்தர்களான மருத்துக்கள், எனக்கு நூற்றுக் கணக்கான பசுக்களை அளிப்பார்களாகுக . நான் யமுனைக் கரையிலே புகழ்பெற்றுள்ள பசுக்களின் செல்வத்தை அடைவேனாக . குதிரைகளின் செல்வத்தை அடைவேனாக.”
இந்த துதியிலும் ஒன்பதாவது மந்திரத்தில் (ninth mantra) பருஸ்ணி என்ற பஞ்சாப் நதியின் பெயரை ரிஷி குறிப்பிடுகிறார். ஆக ரிக் வேதத்தின் மிகப்பழைய பகுதியில் ஆயிரம் மைல் இடைவெளியில் ஓடும் நதிகள் வருகின்றன. இந்த இரண்டு நதிக்கரைகளில் இரண்டு மோதல்களில் சுதாஸ் வெற்றி பெற்றதாக ஏனைய பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன. இந்த யுத்தத்தில் விசுவாமித்திரர் – வசிஷ்டர் இடையேயான பெர்சனாலிட்டி க்ளாஷும் Personality Clash (உரைகளில்) வருகிறது.
மிகப்பழைய யுத்தம் இப்படி பரந்த நிலப்பரப்பில் நடப்பது அவர்களின் ஆட்சிப் பரப்பை காட்டுகின்றன. ராமாயணமும் மஹா பாரதமும் இதை உறுதிப் படுத்து கின்றன ; கிருஷ்ணன் தன் தலைநகரை உத்தரப் பிரதேச மதுரா நகரிலிருந்து 800 மைல்களுக்கு அப்பாலுள்ள குஜராத் மாநில துவாரகா துறைமுகத்துக்கு மா ற்றினான். அது ஒரு சுனாமி தாக்குதலில் அழிந்ததை மஹாபாரதம் பேசுகிறது. இப்பொழுது 5000 ஆண்டுப் பழமையான அமைப்புகளை கடலடி தொல்பொருட்த் துறையினர் நமக்குக் காட்டுகின்றனர் . அவருக்கும் முந்தியவர் ராமன் !
xxx
ரிக் வேத 7-18-19
இந்த துதி முழுதும் வரலாற்றுக்குறிப்புகள் உடையது. இதில்தான் தெளிவாக பருஷ்ணி – யமுனை – சுதாஸ் வெற்றி வருகிறது. யமுனை பற்றிய குறிப்பை மட்டும் தருகிறேன்
இந்தப் பாடலில் ஏராளமான விஷயங்கள் உள்ளன. அவற்றை பின்னொரு சமயம் எழுதுவேன்.
இறுதியாக மார்க்சிஸ்ட் , மாக்ஸ் முல்லர் சவப்பெட்டிகளில் ஆணி அடிப்போம். ரிக் வேதம் முழுதும் நிறைய விவசாயக் குறிப்புகள் உள்ளன. இவைகளும், அவர்கள் ‘நாடோடிகள்’ அல்ல என்பதைக் காட்டும். ரிக்வேதத்தில் ஸபா, தலைவர்களைத் தேர்ந்தெடுத்தல் முதலியவையும் வருகின்றன. அந்த சபை/ அவை என்பதை இன்று இந்தியா முழுதும் பயன்படுத்தி வருகின்றனர் .
ரிக் வேதத்தில் மிகவும் புகழ் பெற்ற ஒரு வேடிக்கையான துதி ‘சூதாட்டக்காரன் புலம்பல்’ ஆகும். இது நம்ம ஊர் குடிகாரன் புலம்பல் போன்ற பாட்டு. அவன் கூட விவசாயத்தின் பெருமை யைச் சொல்கிறான்.
டேய் சூதாட்டக்காரா — தனக்குத் தானே சொல்லி புலம்பும் காட்சி —
“டேய் சூதாட்டக்காரா ; நான் சொல்றத நம்புங்கடா ; எவனும் சூதாட்டம் ஆடாதீங்கடா ; நிலத்தைப் பண்படுத்தி , விவசாயம் செய்யுங்க; இதில் கிடைக்கும் காசு பணத்தில் சுகமாக வாழுங்க! அங்கு பசுக்களும் சாப்பிட்டு வளரும் ; வீட்டிலே மனைவியும் இருக்கா . இதையே எனக்கு சவிதா/ சூரிய தேவன் சொன்னான்” .10-34-14
இதற்கு முந்திய மந்திரங்களில் மனைவி விரட்டி அடித்த புலம்பல் எல்லாம் வருகின்றன. அதனால்தான் இந்த மந்திரத்தில் விவசாயம் செய்து உழைத்து காசு சம்பாதித்தால் ‘வீட்டில் மனைவியும் இருப்பாள்’ என்ற வரி வருகிறது . இதை அனைவரும் படித்து (கவிதை 10-34; சூதாட்டம் பற்றியது) மகிழவேண்டும். சூதாட்டம் என்பதை எடுத்துவிட்டு சாராயம் குடித்தல் என்று போட்டாலும் பொருந்தும்.
வள்ளுவனும் சூதாட்டம், கள் பற்றி எழுதி இருப்பதால் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இது தமிநாட்டிலும் பெரிய தீங்கு விளைவித்தது புரிகிறது. ஆக — உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லோரும் தொழு துண்டு பின் செல்வர் — என்று விவசாயத்தை ரிக் வேதம் போற்றுவதால் ,மாக் ஸ்முல்லர் , மார்கஸியவாதிகளின் சவப்பெட்டியில் ஓங்கி ஆணி அறைந்துவிட்டோம் . இனி அந்தப் பிரேதங்கள் எழுந்திருக்காது!!!
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 27-9-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.
ஸ்ரீ குமரகுருபரர்! – 1
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.
சைவ நெறியும் தமிழ் மொழியும் செழிக்க பதினேழாம் நூற்றாண்டில் அவதரித்த பெரும் மகான் குமரகுருபரர் ஆவார்.
இவரது அவதாரப் பெருமையை கொண்ட நாட்டை மகா வித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் வெகுவாகப் புகழ்கிறார்.
என்ற பெரும் பெருமையை உடைத்த பாண்டிய நாட்டிலே தாமிரபரணி நதி தீரத்தில் அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அவதரித்தார் குமரகுருபரர். ஸ்ரீவைகுண்டம் திருநெல்வேலிக்கு 18 மைல் கிழக்கே தாம்பிரவர்ணிக் கரையில் உள்ளது. அதற்கு மூன்று மைல் கிழக்கே ஆழ்வார் திருநகரி இருக்கிறது. திருச்செந்தூர் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 18 மைல் தூரத்தில் கடற்கரையில் அமைந்துள்ளது. ஸ்ரீவைகுண்டத்தின் வடபாகத்தில் கைலாயநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஊரில் சைவ வேளாளர் குலத்தில் சண்முக சிகாமணிக் கவிராயருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார் அவர். குழந்தைக்கு ஐந்து வயது வரையில் பேச்சு வரவில்லை. இதனால் மன வருத்தமுற்ற பெற்றோர் குழந்தையை திருச்செந்தூருக்கு அழைத்துச் சென்று முருகப் பிரானைத் தொழுது இலை விபூதி பிரசாதத்தைப் பெற்று முருகனிடம் குழந்தையை அடைக்கலமாகத் தந்தனர். முருகப் பெருமானின் அருளால் குழந்தை பேசத் தொடங்கியது. முருகன் அவரது கண் முன் தோன்றி ‘நீ யார்’ என்று கேட்க குமரகுருபரர் ‘அடியேன்’ என்றார். இறைவன் ஒரு கணத்தில் சைவ சித்தாந்த நல் உணர்வை அவருக்கு நல்கி ‘குருபரன்’ என்ற பெயரை இட்டு மறைந்தார். அன்றிலிருந்து அவர் குமரகுருபரன் என்று அறியப்படலானார்.
முருகனின் திருவருளால் அவர் தூய தவ வாழ்க்கையை வாழத் தொடங்கினார். முதலில் கந்தர் கலி வெண்பாவை இயற்றினார். பின்னர் தனது ஊருக்கு வந்து கயிலைக் கலம்பகம் என்ற நூலை இயற்றினார்.
தல யாத்திரை ஒன்றை மேற்கொண்ட அவர், திருநெல்வேலி, குற்றாலம், திருக்கானப்பேர், திருவாடானை உள்ளிட்ட பல தலங்களுக்குச் சென்று வழிபட்டு, பின்னர் மதுரையை அடைந்தார்.
அப்போது மதுரையை திருமலை நாயக்க மன்னர் சிறப்புற ஆண்டு வந்தார்.
திருமலை நாயக்கர் மதுரையை ஆண்ட காலத்தை வரலாற்று ஆசிரியர்கள் 1623முதல் 1659 முடிய என நிர்ணயித்துள்ளனர். ஆகவே குமரகுருபரர் வாழ்ந்த காலம் இது என கொள்ளலாம்.
மன்னர் திருமலை நாயக்கரது கனவிலே தோன்றிய மீனாட்சியம்மன், “என் புதல்வன் எம் அருள் பெற்றுப் பாடிய நூலை நான் கேட்க விரும்புகின்றேன்” என்று கூறி அருளினார்.
காலையில் திருமலை நாயக்கர் தமது அவையினரிடம் ‘இந்த ஊருக்கு யாரேனும் பெரியவர் வந்திருக்கிறாரா’ என்று வினவினார்.
“மன்னரே! ஆமாம். ஐந்து வயது வரை பேசாமல் இருந்து முருகன் அருளால் பேசத் துவங்கிப் பேரருளாளராக விளங்கும் குமரகுருபரர் மதுரைக்கு வருகை புரிந்துள்ளார். அவர் ஒரு பிள்ளைக் கவி பிரபந்தத்தை இயற்றியுள்ளார்” என்று அவர்கள் பதில் கூறினர்.
இதைக் கேட்ட திருமலை நாயக்கர் மனம் மிக மகிழ்ந்து அவர் தங்கியிருந்த திருமடத்திற்குச் சென்று அவரை வணங்கி அவரது நூலை அரங்கேற்றுமாறு வேண்டினார்.
பேரவை ஒன்று கூட, அரங்கேற்றம் ஆரம்பமானது. அப்போது வருகைப் பருவம் படிக்க ஆரம்பித்த நாளில் அங்கயற்கண்ணிக்கு அர்ச்சனை செய்யும் அர்ச்சகரின் குழந்தை வடிவினளாய் ஆனாள் அம்மன். குழந்தை ஓடி வந்து மன்னரின் மடி மீது அமர்ந்தது. ‘தொடுக்கும் கடவுள் பழம்பாடல்” என்ற பாடலை, குமரகுருபரர் பாட ஆரம்பிக்க அரசர் கழுத்திலிருந்த முத்தாரத்தை எடுத்த குழந்தை குமரகுருபரரின் கழுத்திலே அணிவித்தது. பின்னர் மறைந்தது. இதனால் குமரகுருபரரின் பெருமை அனைவருக்கும் நன்கு விளங்கியது. திருமலை நாயக்கர் அவரை பொன்னால் ஆன சிம்மாசனத்தில் அமரச் செய்து அவருக்கு உயரிய மரியாதையை அளித்தார். அங்கு ‘மீனாட்சி அம்மை குறம்’, ‘மீனாட்சி இரட்டை மணி மாலை’ ஆகிய நூல்களை குமரகுருபரர் இயற்றினார்.
ஒரு நாள் மன்னர் உணவு உட்கொள்ளக் காலதாமதமானது. உடனே குமரகுருபரர் “வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது” என்ற திருக்குறளைக் கூறினார். இதைக் கேட்ட மன்னர் ‘இது எங்குள்ளது’ என்று வினவ குமரகுருபரர் திருக்குறள் பற்றிய விளக்கத்தை அளித்தார். அது போன்ற நீதி நூல் ஒன்று இயற்றுமாறு அவர் வேண்ட குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் என்ற ஒரு அற்புதமான நூலை இயற்றினார். இதனால் மகிழ்ந்த மன்னர் திருமலை நாயக்கர் இருபதினாயிரம் பொன் வருவாயை உடைய அரியநாயகி புரம் என்ற ஊரை அவருக்கு ஈந்தார். அவர் மதுரைக் கலம்பகம் என்ற நூலையும் இயற்றிப் பாடினார். (தொடரும்)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மாக்ஸ் முல்லர் (Max Muller) தலைமையிலான சுமார் 30 வெள்ளைத் தோல் கும்பலும் வெளிதேச விசுவாசம் கொண்ட இந்து மத விரோத Marxist , மார்க்சீய கும்பலும் பரப்பிவந்த அப்பட்டமான பொய்க்கு ரிக் வேத யமுனை நதி குறிப்புகள் செமை அடி ,மிதியடி கொடுத்துவிட்டன .
உலக மகா கவிஞன் சுப்ரமண்ய பாரதி, காஞ்சி பரமாசார்ய சுவாமிகள், சுவாமி விவேகானந்தர், மஹாத்மா காந்தி, பி.ஆர் அம்பேத்கார் முதலிய நூற்றுக் கணக்கான அறிஞர்கள் , பெரியோர்கள் தூக்கி எறிந்த ஆரிய-திராவிட வாதத்தை இன்றும் திரும்பத்திரும்பச் சொல்லுவோருக்கு அடி மேல் அடி கொடுக்கிறது ரிக் வேதத்தில் உள்ள நதி சூக்தம் முதலிய குறிப்புகள்.
இதோ விவரம்:
200 ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளைக்காரனின் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்தது. இந்தியாவைப் பிடித்ததை எப்படி நிய்யப்படுத்துவது என்று யோசித்து யோசித்துப் பார்த்தான் , போட்டான் ஒரு வெடி குண்டை. 700 ஆண்டு முஸ்லீம் ஆக்ரமிப்புக்கும் 300 ஆண்டு வெள்ளைக்காரன்
ஆக்ரமிப்புக்கும் ஒரு பொய்யைச் சொல்லி நியாயம் கற்பித்தான்.
“இங்கே பாருங்கடா ! 700 ஆண்டுக்கு உங்களை முஸ்லீம் ஆண்டான். அதுக்கு முன்னாடி கைபர் கணவாய் வழியாக ஆரியன்னு ஒத்தன் வந்தான். அவன் இந்த நாட்டு சொந்த குடி மக்களை எல்லாம் விரட்டிட்டு உங்களை ஆண்டான். அது போலத்தான் நாங்களும். அவங்க ஆண்டபோது சும்மா இருந்தீங்க. பேசாம வாயைப் பொத்திக்கினு கிடங்க ; இல்ல, இந்தப் பாரு; துப்பாக்கி, பீரங்கி.”
இதை மாக்ஸ்முல்லர் கும்பல், மார்க்சீய கும்பல், தமிழ் நாட்டில் திராவிடக் கழகம், ஜஸ்டீஸ் பார்ட்டி JUSTICE PARTY முதலியன திரும்பத் திரும்ப சொன்னார்கள். 1921 வாக்கில் சிந்து சமவெளி நாகரீக தடயங்கள் கிடைத்தவுடன் அதை திராவிட நாகரீகம் என்ற பொய் சொல்லி,
இது அப்பட்டமான அபத்தக் கதை என்பதை கடந்த 50 ஆண்டுக்கால அணுசக்தி BARC ஆராய்ச்சியும், நாஸா NASA என்னும் அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பும் நிரூபித்துவிட்டன (சரஸ்வதி நதியின் 4000 ஆண்டு பழமை, சிந்து வெளியில் திராவிட எலும்புக் கூடுகள் கிடைக்காமை , குதிரை எலும்பு சர்ச்சைகள் பற்றி தனியே எழுதிவிட்டதால் இங்கு விளக்க வில்லை; சிந்து வெளி பற்றிய எனது 25, 30 கட்டுரைகளைப் படிக்கவும் )
இந்தக் கட்டுரையில் யமுனை நதி தரும் சான்றுகளை மட்டும் காண்போம் .
RV 10-75-5
முதலாவது பத்தாம் மண்டலத்தில் 75ஆவது துதியில் உள்ள ஜந்தாவது மந்திரத்தைக் கேளுங்கள்:
“கங்கையே! யமுனையே! சரஸ்வதியே ! சுதுத்ரியே! பருஸ்னியே! அசின்னையோடு , மருதவிருதையே , விதஸ்தையே , என்னுடைய இந்த துதியை ஏற்றுக்கொள்ளுங்கள் ; சுசோமையோடு ஆர்ஜீகியே ; நான் சொல்லுவதைக் காது கொடுத்துக் கேளுங்களேன் (PLEASE ,PLEASE ப்ளீஸ் ,ப்ளீஸ் )
முதலில் இது பற்றி என் கருத்துக்கள் :
கிழக்கிலுள்ள நதி முதல் மேற்காகச் சொல் கிறார்கள் ; அதாவது வேத கால இந்துக்கள் நாகரீகம் உலகிலேயே மிகப் பழைய நகரமான காசியில் இருந்தது. பின்னர் சரயு நதியின் மீதுள்ள அயோத்தி, யமுனை நதி மீதுள்ள மதுராவுக்குப் போனது. பின்னர் ஈரான் நாடுவரை இந்த்துக்களாட்சி ஏற்பட்டது. இதை வெள்ளைக்காரன் ‘உல்ட்டா’ ஆக்கினான். அதாவது தலை கீழ் வரிசையில் சொன்னான். அது அது தப்பு என்பதை வேறு இரண்டு யமுனைக் குறிப்புகள் காட்டுகின்றன. ரிக் வேத்தின் பத்து மண்டலங்களில் கங்கை பற்றிய குறிப்புகள் பழைய மண்டலங்களிலும் சிந்து என்பது பிந்திய மண்டலங்களிலும் வருவதை ஸ்ரீகாந்த் தலகெரி Srikant G Talageri போன்ற அறிஞர்கள் அண்மைக்காலத்தில் காட்டியுள்ளனர்.
இது பற்றி வேத கால ஹரப்பா மக்கள் (சிந்து வெளி நாகரீகம்) THE VEDIC HARAPPANS BY BHAGWAN SINGH என்ற புஸ்தகம் எழுதிய பகவான் சிங் என்பவர் 1957-ம் ஆண்டில் முகர்ஜி எழுதியதையும் சுட்டிக்காட்டிவிட்டு ஒரு அருமையான கேள்வி எழுப்புகிறார் . கங்கை முதல் ஆப்கானிஸ்தான் வரை ஓடும் நதிகளை எல்லாம் தனது சொந்த தாய் என்று வருணித்ததுவிட்து ‘நான் கதறுவதைக் கேளுங்கள்’ என்று இந்த நதிகள் சூக்தம் கூறுகிறது. வேத கால இந்துக்கள் நாடோடிகளாக இருந்தால் இப்படி பல ஆயிரம் மைல் இடைவெளிகளில் ஓடும் நதிகளை தன சொந்த தாய் என்று வருணிப்பானா? அப்படிப்பட்ட நாடோடிகளைக் காட்ட முடியுமா ? என்று .
இங்குதான் மாக்ஸ்முல்லர், மார்க்சீய கும்பல்களின் முகத்திரை கிழிக்கப்படுகிறது. இந்த இரண்டு கும்பல்களும் வேதகால இந்துக்களுக்கு ‘ஆரிய’ என்ற பெயரைச் சூட்டி அதற்கு இனவாத கலர்/ சாயத்தைப் பூசி அவர்களை “நாடோடிகள் ” NOMADS’ என்று வருணிக்கின்றன. ஆக முதல் பொய்யை , முழுப்பொய்யை உடைத்தோம் . இனி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடி யாது!!
யமுனை நதி பற்றி அகநாநூறு , சிலப்பதிகாரத்தில் கிருஷ்ண பரமாத்மாவுடன் தொடர்பு படுத்தும் பாடல்கள் உள. கங்கை, இமயம் பற்றி பல பாடல்கள் உள . ஆக 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்களும் இதைப் பாடிப்பரவினர் ; போற்றித் துதித்தனர் .
அடுத்த இரண்டு குறிப்புகள் வரலாற்றுக் குறிப்புகள் . உலகில் நடந்த மிக முக்கியப் போர்களில் ஒன்று ‘பத்து ராஜ யுத்தம்’ (DASA RAJNA YUDDHA) ; இந்த ‘பத்து அரசர் போர்’ பற்றியும் அதில் விசுவாமித்திரரை குல குருவாகக் கொண்ட மன்னன் சுதாஸ் வெற்றி பெற்றது பற்றியும் ரிக் வேதம் நெடுகிலும் பாடல்கள் உள்ளன. ஆகையால் இது மிகப்பழைய போர், மிகப்பெரிய போர் என்பதில் ஐயமில்லை.
இன்றும் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் ரிக் வேதம் பயிலுவோர் இதைப்பாடி வருகின்றனர். அதில் மன்னன் சுதாஸ், யமுனை நதிக்கரையில் வெற்றி பெற்றான் என்றும் வருகிறது. இந்த இடத்தை மொழி பெயர்த்த வெள்ளையர்கள் முழி பிதுங்கிப் போனார்கள் ; சில வெள்ளைத் தோல்கள் , எங்களுக்குப் புரியவில்லையே என்று வியப்புக் குறிபோட்டன. ஹாப்கின்ஸ் என்ற பயல், ‘இது வேறு யமுனை நதி??’ என்று கேள்விக்குறி போட்டான்.
இவை என்ன காட்டுகின்றன ?
TO BE CONTINUED…………………………..
TAGS- இந்து விரோத கும்பல் , யமுனை நதி , செமை அடி, ரிக் வேதம், RV.10-75