உத்தரகாண்டத்தின் இருபத்தைந்தாவது ஸர்க்கமாக அமைவது ‘மது சக்யம்’ என்ற ஸர்க்கமாகும்.
ஒரு நாள் ராவணன் லங்காபுரியில் ஒரு உத்தியானவனத்திற்குச் சென்றான்.
அங்கே ஒரு யாகம் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் கண்டான். தன் புதல்வன் மேகநாதனே அந்த யாகத்தை நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்து,”இது என்ன? சொல்!” என்றான். உடனே யாகத்தை நடத்திக் கொண்டிருந்த அசுர குருவாகிய சுக்ராசாரியர் ராவணனிடன், “நானே சொல்கிறேன். உனது புதல்வனால் ஏழு யாகங்கள் இயற்றப்பட்டன” என்று ஆரம்பித்து விவரங்களைக் கூறுகிறார்.
உத்தரகாண்டத்தின் பதினெட்டாவது ஸர்க்கமாக அமைவது ‘மருத்த மஹாராஜனை ஜெயிப்பது’ என்ற ஸர்க்கமாகும்.
அகஸ்திய மஹரிஷி ராமருக்குத் தொடர்ந்து கூறிய வரலாறுகளில் குபேரன் ஓணானுக்கு அளித்த வரத்தைப் பற்றிக் கூறலானார்.
மருத்த மன்னன் சம்வர்த்தர் என்ற மஹரிஷியை வைத்து ஒரு யாகம் செய்த போது அங்கு வந்த ராவணன் மருத்தரை யுத்தத்திற்கு அழைத்ததையும் அப்போது தேவர்கள் பயந்து விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் உடலில் மறைந்து கொண்டதையும் முன்னர் பார்த்தோம். குபேரன் ஓணானின் உடலில் மறைந்து கொண்டார்.
ராவணன் ஜயித்து விட்டதாகக் கருதி அங்கிருந்து அகன்றவுடன் குபேரன் ஓணானை நோக்கி இப்படிக் கூறினார்:
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நபக / நாபாக
புராணங்களில் இதே பெயரில் பலர் இருப்பதால் குழப்பமாகத் தோன்றும் .
Nabhaga (नभग):—நபக என்பவர் ஸ்ராத்த தேவ – ஷ்ரத்தா ஆகியோரின் புதல்வர் .
Nābhāga (नाभाग).—நாபாக– என்பவர் இக்ஷ்வாகு மன்னரின் சகோதரர் ; புகழ்பெற்ற அம்பரீஷன் இவருடைய புதல்வர்.; மஹாபாரதம், பாகவதம் ஆகியவற்றில் இவர்கள் கதைகள் வருகின்றன. நாபாக, தன்னிடமிருந்த எல்லாவற்றையும் தானம் செய்தபோது பூமி தேவியே அவரிடம் யாசகத்துக்குச் சென்றாள்; எப்போதுமே மாமிசம் சாப்பிடாத அவருக்கு பிரம்மலோகத்தில் நிரந்தர வாசம் கிடைத்தது.
இன்னும் ஒரு கதையும் உண்டு;
வைவஸ்வத மனுவின் புதல்வரும் அம்பரீஷனின் தந்தையுமான
Nābhāga (नाभाग).—நாபாக- பிரம்மச்சாரியாக இருந்தபோது அவருடைய தந்தை எல்லாவற்றையும் மூத்த சகோதர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டதால் அவருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை; தந்தையின் சொற்படி ஆங்கீர ரிஷி வம்சத்தினர் நடத்திய யாகத்துக்குச் சென்று சடங்குகள் பற்றி விளக்கினார்; யாகம் செய்தவர்கள் சொர்க்கத்துக்குச் சென்ற பின்னர் அவர்களுடைய செல்வம் அனைத்தும் அவருக்கு கிடைத்தது. அதை எடுத்துக் கொள்ளும் தருணத்தில் கருப்பு மனிதன் வடிவத்தில் ருத்ரன் தோன்றி யாகத்தில் விடப்படும் மிச்சம் மீதியெல்லாம் ருத்ரனுக்குச் சொந்தம் என்று உரிமை கொண்டாடினார்; அதற்கென்ன எடுத்துக்கொள்ளுங்கள் என்று நாபாக சொன்னார் ; ருத்ரன் மனம் மகிழ்ந்து அனைத்தையும் அவருக்குக் கொடுத்துவிட்டு பிரம்மன் பற்றிய ஞானத்தையும் சொல்லிக்கொடுத்தார்
***
நாகர்கள்
சங்கத் தமிழ் இலக்கியத்தில் நீண்ட நாகர் பட்டியல் உள்ளது: இருபது நாகர் குலப் பெயர்களில் மிகவும் புகழ் பெற்றவர்கள்: மருதன் இளநாகன், நன்னாகன், வெண்ணாகன், நாலைக் கிழவன் நாகன், நல்லியக்கோடன், நீலநாகன் (சிறுபாணாற்றுப்படை)
மகாவம்ச இலங்கை மன்னர் பட்டியலில் வரும் நாகர் பெயர்கள்:—
குப்தர்கால கல்வெட்டுகளிலும் கணபதி நாகன் முதலிய பெயர்கள் காணப்படுகின்றன.
நாகர் என்பவர் பற்றி மஹாபாரத காலம் முதல் கேட்டு வருகிறோம். ( நாகர்கள், மஹாபாரத சண்டைக்குப் பின்னர், தென் அமெரிக்காவில் குடியேறி, காண்டவ வனத் தலைவன் மய தானவன் என்பவனின் தலைமையில் புதிய மாயா நாகரீகம் ஸ்தாபித்ததை எனது பழைய கட்டுரையில் காண்க).
நாகர்கள் எந்தப் பாதையில் சென்றார்கள் என்பதும் தெளிவாகிவிட்டது. இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள்,மத்திய அமெரிக்கா என்று படிப்படியாகச் சென்றதால் இந்த நாடுகள் அனைத்தும் நாகலோகம், நாகத்தீவு என்று அழைக்கப்படுகின்றன. சிந்து நதி முகத் த்வாரத்தில் பாதாள என்ற துறைமுகம் இருந்ததை பழங்கால பயணிகள் எழுதிவைத்தனர். பலி முதலிய மன்னர்களை பாதாள லோகத்துக்கு அனுப்பியதாகக் கூறுவதன் பொருள் அவர்கள் கடல் வழியாக நாடு கடத்தப் பட்டனர் என்பதாகும்.
நாகர்களை வேதமும் பழைய இனமாக (பஞ்சவிம்ச பிராமணம் -9-4) குறிப்பிடும்.
சங்க இலக்கியமும் மஹாபாரதமும் நாகர்கள் செய்யும் அரிய வேலைப்பாடமைந்த ஆடைகளைக் குறிப்பிடுகின்றன. மஹாபாரத காலத்தில் அர்ஜுனன் இரண்டு நாகர் இனப் பெண்களை திருமணம் செய்துகொண்டான்: உலூபி, சித்திராங்கதை. (தமிழ்நாட்டில் இவளை அல்லி ராணி என்று பாடுகின்றனர்).
நாகர் இனப் பெண்களை எல்லோரும் மணந்தனர். அகத்தியர் வழியில் வந்த பிற்கால அகத்தியர் கம்போடியாவில் யசோவதி என்ற பெண்ணைக் கல்யாணம் செய்தார்.
கிருஷ்ணர் இரண்டு முறை நாகர்களுடன் மோதினார்: காண்டவ வனத்தை எரித்தார், காளீயன் என்ற நாகர் இனத் தலவனைக் கொன்றார்.
அர்ஜுனனின் பேரன் ஆன பரீட்சித்தை நாகர்கள் படுகொலை செய்ததால் நாகர்கள் வெளிநாட்டில் குடியேற நேரிட்டது.
ஜனமேஜயன் துவக்கிய நாகர் ஒழிப்பு இயக்கத்தை ஆஸ்தீகர் என்ற பிராமண ரிஷி ஒரு சமாதான உடன்பாடு மூலம் நிறுத்தினார். நர்மதை நதிக் கரையில் மஹிஸ்மதி நகரில் நடந்த சர்ப்ப யாகத்தையும் (நாகர் படுகொலை) சமாதான உடன்பாட்டையும் இன்றுவரை பிராமணர்கள் தினசரி சந்தியாவந்தனத்தில் கூறிவருகிறார்கள். உலகிலேயே நீண்ட வரலாறு படைத்த சமாதான உடன்பாடு இதுதான்!
தமிழர்களும் தெலுங்கர்களும் விளையாடும் பரமபத சோபான படத்தில் இன்றும் தடசகன், கார்க்கோடகன் போன்ற நாகர்கள் நினைவு கூறப்படுகின்றனர்.
நாகர்கள் தங்கள் உடம்பில் பச்சைக் குத்திக் கொண்டதாகத் தெரிகிறது. சங்க இலக்கியத்தில் இவர்கள் ஓவியர்கள், அருவாளர்கள் என்றும் வடமொழியில் இவர்களுடைய பெயர்கள் சித்திர என்ற சொல்லுடனும் உள்ளன. கிரேக்க வரலாற்று ஆசிரியர்களும் ஒபைட்ஸ் ( ஒவியர்) என்பவர்களை நாகங்களை வழிபடும் இனம் என்று வருணிப்பர்.
பஞ்சவிம்ச பிராமணத்தில் சர்ப்பராக்ஞி ( பாம்பு ராணி) யும் அதர்வ வேதத்தில் அலிகி, விளிகி- யும் குறிப்பிடப்படுகின்றனர். அலிகி, விளிகி சுமேரியாவிலும் வேறு பெயர்களில் இருக்கிறார்கள்.
நாகர்கள் எகிப்து வழியாகச் சென்றனரோ என்ற ஐயப்பாடும் உண்டு. எகிப்தில் 17 மன்னர்கள் ராம சேஷன் அல்லது ரமேசன் என்ற பெயரில் கி.மு 1500 முதல் ஆண்டார்கள். அவர்கள் தலையில் சிவன் மாதிரி பாம்பு இருக்கும். ரிக் வேத காலம் முதல், சிந்து சமவெளியில் கிடைத்த பாம்புராணி முத்திரை முதல்– இன்று சபரிமலையில் உள்ள நாகராணி வரை— தொடர்ச்சியாக நாக வழிபாடு உள்ள மதம் – கலாசாரம் இந்துமதம் மட்டுமே. இமயம் முதல் குமரி வரை கோவில்களில் உள்ள நாகர்கள் சிலை பல லட்சம்!
ஆயிரம் தலையுடைய வாஹனத்தைச் செய்ய முடியாதென்பதால் நமது கோவில் நாக வாஹனத்தில் 5, 7, 9 தலைகள்மட்டுமே சித்தரிக்கப் பட்டிருக்கும் – வடிவமைக்கப் பட்டிருக்கும்.
ஸ்னேக் (ஸ்+நாக), செர்பெண்ட் (ஸர்ப்ப)SNAKE, SERPENT என்ற ஆங்கிலச் சொற்கள் சம்ஸ்கிருதத்திலிருந்து வந்தவை என்பதையும் நோக்குக. சுருக்கமாகச் சொன்னால், ரிக்வேத நாகர் வழிபாடு இன்று நாகர்கோவில், நாக்பூர், நாகாலாந்து வரை இருப்பது நம் பண்பாட்டில் மட்டுமே. மறைபொருளில்—நான் ‘மறை’– பாடிய ரிஷிகள், பாம்பு வடிவ சுனாமிப் பேரலைகளையே ஆதி சேடன் – ஆயிரம் தலையுடைய ஆதி சேடன் – என்று பாடினரோ என்று வியக்க வேண்டியுள்ளது. சுனாமிப் பேரலைகளின் படங்களைக் கூர்ந்து நோக்கினால் ஆயிரம் பாம்புத் தலைகளுடன் சுனாமி அலைகள் , நிலப் பகுதிக்குள் ஆக்ரோஷத்துடன் – சீற்றத்துடன் – பிரவேசிப்பதைப் பார்க்கலாம்.
இதைப்படங்களுடன் நான் ஒரு கட்டுரையில் விளக்கியுள்ளேன் (காண்க- நான் கண்ட சுனாமி அதிசயம் ! அலைகளில் ஆதி சேஷன்!! (Post No. 2722).
***
நகர
சங்க இலக்கியத்தில் புறநானூற்றில் கோயிலை நகர் என்று குறிப்பிட்டனர் ; முது குடுமிப் பெருவழுதி என்ற பாண்டியன் பாடலில் இது வருகிறது. சம்ஸ்க்ருத நூல்களிலும் நாகர என்ற கோவில் வகைகளைக் குறிப்பிடுகின்றனர் இன்னுமொரு பொருள் – நகரம் – பெரிய ஊர் என்பதாகும். வாத்ஸ்யாயனர் எழுதிய காமசூத்திர நூலிலும் நகரம் வருகிறது; நாகரீகம் என்பதும் நகர மக்களின் குணங்களைக் குறிக்கிறது இதற்கு எதிர்ப்பதம் பட்டிக்காட்டான்.
***
நசிகேதன்
சாந்தோக்ய உபநிஷத்தில் நசிகேதன் கதை வருகிறது ; இவர் உத்தாலக ஆருணியின் மகன். சின்னப்பையனாக இருந்தபோது தந்தை செய்த தானங்களை உற்று நோக்குகிறார் ; பால் வற்றிப்போன கிழட்டுப் பசுக்களை அவர் பிராமணர்களுக்குத் தானம் கொடுத்ததை பார்த்து வருத்தப்பட்ட நசிகேதன் , அப்பா என்னை யாருக்குத் தானம் கொடுக்கப்போகிறீர்கள்? என்று கேட்டான் ; இதையே மூன்று முறை கேட்டவுடன் அப்பாவுக்குக் கோபம் வந்துவிட்டது ; உன்னை ம்ருத்யுவுக்குக் (யமதர்மன்) கொடுக்கப்போகிறேன் என்று கத்திவிட்டார்; உடனே மயங்கி விழுந்த நசிகேதன் யமலோகம் சென்று மூன்று நாட்களுக்கு காத்துக் கிடக்கிறான்; அவனைக் கண்டு அதிசயித்த யமன் எப்படி வந்தான் என்ற விஷயத்தை அறிந்தபின்னர் நீ போ! பூலோகத்துக்கே திரும்பிப் போ; உனக்கு வரம் தருகிறேன் என்றான் . அப்படியா எனக்கும் என்னுடைய தந்தைக்கும் மீண்டும் சுமுக உறவு ஏற்பட்ட வேண்டும் என்று வேண்டுகிறான் ;அப்படியே ஆகுக என்று யமனும் சொல்கிறான் .
ஆயினும் நசிகேதன் கிளம்பவில்லை ; பல ஆசைகளைக் காட்டியும் மயங்காத நசிகேதன், தனக்கு ஆன்மா , பிரம்மன் பற்றிச் சொல்ல வேண்டும் என்கிறான் ; யமனும் அவ்வாறே செய்கிறான் .
உபநிஷத்தைத் தவிர, மஹாபாரதத்தில் வேறு ஒரு செய்தி வருகிறது; பசு தானம் செய்து மேன்மை அடைந்தவர்களைக் காண வேண்டும் என்று நசிகேதன் சொன்னவுடன் அவர்களைக் காணவும் யமதர்மன் ஏற்பாடு செய்கிறான் ; இது கோ தானத்தின் சிறப்பினைக் காட்டுகிறது. .
****
நஹுஷன்
நஹுஷன் ,இந்திராணியிடத்தில் சில்மிஷம் செய்து பாம்பாகப் பூமியில் விழுந்தார் .முன்னொரு காலத்தில் தேவலோக இந்திரன் அசுரராய் பிறந்த பிராமணன் ஒருவரைக் கொன்றான்; அந்த அஸுரன் பெயர் வ்ருத்ராஸுரன் ; பிராமணனைக் கொன்றால் பிரம்மஹத்தி என்னும் பாவம் ஒருவன் மீது ஏறிவிடும்; இதைப் போக்க பரிகாரம் செய்ய வேண்டும். இவ்வாறு பரிகாரம் செய்ய இந்திரன் பூலோகத்துக்கு VISIT விசிட் செய்தார் ; அப்போது இந்திரன் பதவி VACANT வேகண்ட் ஆனது ; தற்காலிக இந்திரன் பதவிக்குப் பூலோகத்தில் இருந்த நஹுஷனுக்கு அழைப்பு வந்தது ! இந்திராணியைப் பிடித்துவிட்டால் பழைய இந்திரன் பூமியிலே கிடப்பான்; நாம் ‘ஜாலி’யாக இந்திராணியுடன் தேவ லோகத்தை ஆளுவோம் என்று திட்டமிட்டு இந்திராணியிடம் நஹுஷன் சேட்டை செய்தான்; அவளுக்குப் புரிந்துவிட்டது.
அன்பரே தொட்டுப் பேச வேண்டுமானால் சட்டப்படி தொட்டுப் பேச வேண்டும்; நான் சொல்லும் CONDITION கண்டிஷனை முதலில் கேளும் ; நீவீர் எனது பள்ளியறைக்கு எழுந்தருளலாம்; ஆனால் சப்த ரிஷிகள் தூக்கும் பல்லக்கில் என்னுடைய BED ROOM பெட் ரூமுக்கு வர வேண்டும் என்றாள்; இது நடவாத காரியம் என்பது அப் பெண்ணின் கணிப்பு!
நஹுஷனுக்கு ஒரே குஷி; சப்த ரிஷிகளையும் விரட்டிப்பிடித்தான்; அவர்களுக்கும் தெரியும்; ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்று ; ஐயா , ஏழு ரிஷிகள் பல்லக்கினைத் தூக்கினால் பேலன்ஸ் BALANCE இருக்காது; எட்டாவது ஆளாக அகஸ்தியரைச் சேர்த்துக் கொள்கிறோம் என்றார்கள்; உடனே அதைச் செய்யுங்கள் என்று தற்காலிக இந்திரன், அதாவது நஹுஷன் சொன்னான் .
ஏழு ரிஷிகளும் – அதாவது சப்த ரிஷிகளும் – நல்ல உயரம்; அகஸ்தியரோ அதி பயங்கர குட்டை ; பல்லக்கு ரெடி. நஹுஷன் பல்லக்கில் ஏறினான் ; மெதுவாகப் போனது; என்ன தாமதம்? ஏன் பல்லக்கு மெதுவாகப்போகிறது? அதுவும் wobbling/ வாப்ளிங் ஆட்டம் இருக்கிறதே என்றான். அவர்கள் சொன்னார்கள் “ஐயா பொறுத்தருளும்! அகஸ்தியர் குட்டை; நாங்கள் எல்லாம் உயரம். ஆகையால் மெதுவாகச் செல்கிறோம்” .
உடனே நஹுஷன் பல்லக்கிலிருந்து எட்டிப்பார்த்தான்; குட்டையான அகஸ்தியரைப் பார்த்து சர்ப்ப சர்ப்ப என்றான் ; இந்தச் ஸம்ஸ்க்ருத்ச் சொல்லுக்குப் பொருள் —சலோ சலோ !போங்கள் போங்கள்! என்று விரைவு படுத்துவதாகும். அத்தோடு நில்லாமல் அகஸ்தியரைக் காலால் எட்டி உதைத்து இதைச் சொன்னான் சர்ப்ப சர்ப்ப என்று.
குணக்குன்றான அகஸ்தியருக்குக் கோபம் வந்தது ; பிடி சாபம் ! சர்ப்ப சர்ப்ப என்றார் சர்ப்ப என்பதற்கு இன்னும்மொரு பொருள் SERPENT/சர்பெண்ட்- பாம்பு
அகஸ்தியன் சாபத்துக்கு ஏற்ப நஹுஷன் பூமியில் பாம்பாக விழுந்தான். அயிராணி/ இந்திராணி / சசி தேவி தன் கற்பை இழக்காமல் இருப்பதற்கு பல்லக்கு தந்திரத்தைப் பயன்படுத்தினாள்.
****
நகுலன்
பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்குப் பிறந்தவர் நகுலன்; இரட்டையர்களாகப் பிறந்தவர்களில் சகாதேவன் இவருடைய சகோதரர் ஆவார் . இவர் குதிரை தொடர்பான சாஸ்திரங்களில் வல்லவர் ஆகையால் மறைந்து வாழும் 13-ஆவது ஆண்டில் கிரந்திகா என்ற பெயரில் விராட மன்னனுக்கு குதிரைகளை பராமரிப்பதில் உதவி செய்தார் ; 13-ஆவது ஆண்டின் இறுதியில் த்ரிகர்த்த தேசப் படைகள் விராடனின் மத்ஸ்ய தேசத்தைத் தாக்கியபோது இவர் தன்னுடைய உண்மை அடையாளத்தைக் காட்டினார் ; இவரும் சகோதரர் ஆன சகாதேவனும் வேத கால இரட்டையர் அஸ்வினி குமாரர்களின் அம்ஸங்கள் நிறைந்தவர்கள் ஆவர்.
****
நள தமயந்தி
கதையின் மிகச் சுருக்கம்:- நளனும் தமயந்தியும் காதலித்துக் கல்யாணம் கட்டினர். தூய்மையற்ற நிலையில் நளனைக் கலி பற்றிக் கொண்டான். சூதாட்டத்தால் நாடிழந்த நளன் மனைவியுடன் காடேகி, இருவரும் பிரியும் நிலை ஏறபடுகிறது. சமையல் கலை, தேரோட்டக் கலை, கவிதைக் கலையில் வல்ல நளன், தமயந்தியின் சமயோஜித புத்தியால் மீண்டும் இணைகின்றனர்.
காதல் கதைக்கும் கற்புக்கும் இலக்கணமாகத் திகழும் இளவரசி. விதர்ப்ப நாட்டு மன்னன் பீமனின் மகளான தமயந்தி, நிடத நாட்டு மன்னனான நளன் மீது காதல் கொண்டு, அன்னப்பறவை மூலம் தூது அனுப்பினாள். மன்னன் கூட்டிய மன்னர்கள் கூட்டத்திலிருந்து ஸ்வயம்வரம் மூலம் நளனைத் தேர்ந்தெடுத்து மணந்தாள் . அங்கு நளன் போலவே வேடமணிந்து வந்த தேவர்களையும் புறக்கணித்தாள்; ஆயினும் திருமணத்துக்குப் பின்னர் சொல்லொணாத் துயரம் அனு பவித்து மீண்டும் நளனை அடைந்தாள். மஹாபாரதத்திலும் புராணங்ககளிலும், தமிழ்ப் பாடல்களிலும் இவர்களுடைய நீண்ட கதை உள்ளது.
சேதி நாட்டில் வியாபாரம் செய்து பெரும் பொருள் ஈட்டும் நோக்கத்தோடு ஒரு பெரிய சார்த்தவாஹன வண்டித் தொடர் சென்று கொண்டிருந்தது. அது வேத்ரவதி நதியைக் கடந்து செல்லும் தருணத்தே தமயந்தியும் அக்கூட்டத்தில் சேர்ந்துகொண்டாள்.
மாலை நேரம் நெருங்கியது; சூரிய தேவன் மலை வாயில் விழுந்து கொண்டிருந்தான். சார்த வாஹத் தலைவன் கட்டளையின் பேரில் அவரவர் முகாம் அடித்தனர். வனவிலங்குகள் குளிக்கவும் தண்ணீர் குடிக்கவும் நீர் நிலைகளை நோக்கி வரும் பாதை அது. யானைகள் தண்ணீர் குடிக்க கூட்டம் கூட்டமாக வரவே வணிகர்கள் பீதி அடைந்து ஓடினர். அவர்களில் பலர் மிதிபட்டு இறந்தனர்; ஒரே களேபரம்; அங்கும் இங்கும் அனைவரும் சிதறி ஓடினர்; துயரக் காட்சி. இத்தகைய குழப்பத்துக்கு இடையே உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலிகளில் தமயந்தியும் ஒருவள் (ஒருத்தி); அவள் நளனைத் தேடிச் செல்லும் நெடும் பயணம் இது. வணிகர்களுடன் சேர்ந்து அவளும் காட்டைக் கடந்தாள்.
நள தமயந்தி கதையில் வரும் விஞ்ஞான விஷயங்கள்:-
1.பிற கிரஹங்களில் வாழும் மக்கள் நிலை (Extra Terrestrials)
4.பறவைகளை தூது விடப் பழக்கல் (Bird Migration and Training Birds for communication)
5.சமையல் கலை (Art of Cookery)
6.தேரோட்டும் கலை (Art of Charioting)
7.எண் ரஹஸியம் (Magic Numbers)
8.சூதாட்டக் கலை (Art of Gambling and Manipulation)
9.மாயமாய் மறையும் கலை (Invisible Cloaking)
10.விஷத்தை விஷம் முறிக்கும் அறிவு (Toxicology)
11.மனநலம் தரும் சொற்கலை (Moral Teaching and Psychology)
12.கடிதம் எழுதும் கலை (Letter Writing by Kings)
13.ஸத்தியமே பெரிது (Truth alone Triumphs)
14.தூய்மையின் அவஸியம் (Necessity of cleanliness)
15.கவிதைக் கலை (Role of Poetry)
16.பார்ப்பனரைத் தூதுவிடும் கலை (Brahmin Ambassadors/ Role of Ambassadors)
17.வணிகர்கள் (சாத்தன்) பயணக் கலை (Travellers’ Tale & Business Travel)
18.பாரத நாட்டின் புவியியல் (Geography)
19.பாரத நாட்டின் வரலாறு (History)
20.முனிவர்களின் பங்கு பணி (Role of Saints/Pscychologists)
21.குழந்தைகள் வளர்ப்புக் கலை (Child care)
22.பெண்களின் மஹத்தான சுதந்திரம் ( Unusual Freedom of Indian Women)
23.மச்ச சாஸ்திரம் (Body marks)
24.அஸ்வ (குதிரை) சாஸ்திரம் (Science of Horses)
25.வ்ருக்ஷ (மரம்) சாஸ்திரம் (Tree Science)
தகவல் பரிமாற்றம் (SHARING/ EXCANGE OF INFORMATION)
இந்தக் கதையின் மூலம், மஹாபாரதத்தின் 18 பர்வங்களில் மூன்றாவதாக வரும் வன பர்வத்தில் வருகிறது.
நள தமயந்தி சரிதத்தைப் புகழேந்திப் புலவரும், அதிவீரராம பாண்டியனும் தமிழில் யாத்துள்ளனர்.
நளன் செய்த எட்டு அதிசயங்கள்
800 மைல் தொலைவை 24 மணி நேரத்தில் கடந்து விதர்ப்பதேச குண்டினபுரத்துக்கு அயோத்தி மன்னனை அழைத்து வந்த பாஹுகன் (வாகுகன்) நளனாகத் தான் இருக்கும் என்று கருதிய தமயந்தி, தனது பணிப்பெண் கேசினியை அனுப்பி ரஹஸியாமாக உளவறியச் சொல்கிறாள். அப்பொழுது தேவர்கள் நளனுக்கு அளித்த எட்டு அதிசய சக்திகளைக் கண்ணால் கண்டு தமயந்திக்கு ரிப்பொர்ட் (report) தருகிறாள். உடனே தமயந்திக்கு அவன் நளன்தான் என்பது 100 சதவிகிதம் தெரிந்து விடுகிறது;
நளன் பார்த்த மாத்திரத்தில் குடங்களில் நீர் நிரம்புகிறது.
அவன் ஒரு துரும்பை சூரிய ஒளியில் காட்டினாலும் அது தானாகவே பற்றி எரிகிறது. நீர் இல்லாமலும், நெருப்பு இல்லமலும் அறு சுவை படைக்க வல்லவன் அவன்.
நீர் அவன் இஷடப்பட்டபடி பெருகுகிறது நெருப்பு அவனைச் சுடுவதில்லை.
மலர்களை அவன் கசக்கினாலும் கசங்குவதில்லை அது மணம் வீசி கசங்காமல் நிற்கிறது.
இவற்றையெல்லாம் பார்த்த கேசினி அப்படியே அறிவிக்கிறாள்!
(இரண்டு நீண்ட கட்டுரைகளில் விஞ்ஞான விஷயங்கள் அனைத்தையும் எனது பிளாக்குகளில் சில ஆண்டுகளுக்கு முன் எழுதியுள்ளேன்.)
–SUBHAM—
TAGS –HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 72; இந்து மத கலைச்சொல் அகராதி- 72 நஹுஷன், நகுலன், நளன், நசிகேதன், நாபாக , எட்டு அதிசயங்கள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மோதக/ம்
தமிழில் கொழுக்கட்டை என்று பொருள்; விநாயகரின் கையில் , அதாவது பிள்ளையார் கையில், இருப்பது இந்த தின்பண்டம் . பிள்ளையார் சதுர்த்தி/கணேஷ் சதுர்த்தி பண்டிகையின் போது இதைச் செய்து பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்வார்கள் ; அவருக்கு மிகவும் பிடித்த பண்டம் இது. வேகவைத்த அரிசி மாவினாலான பை போன்ற உறைக்குள் தேங்காய்ப் பூரணம் அல்லது வெல்லம் கலந்த பருப்பினை வைத்து நீராவியில் வேக வைப்பார்கள் ; பின்னர் இறைவனுக்குப் படைத்துவிட்டு இதைச் சாப்பிடலாம்; மகாராஷ்டிரா, தமிழ் நாடு மாநிலங்களில் இப்போதும் இதைச் செய்கிறார்கள் .
இதில் வேகவைத்த மாவினை கோலிக்குண்டு அளவுக்கு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கடுகு பருப்பு மிளகாய் தாளித்து செய்வதை ஊமைக் கொழுக்கட்டை என்பார்கள் ; அந்த உருண்டைகளை காரம் கலக்காமல் சர்க்கரை போட்ட பாலில் போட்டு சாப்பிடுவது பால் கொழுக்கட்டை எனப்படும். வேக வைத்த மாவிலான பைக்குள் வெல்லம் கலந்த தேங்காய்ப் பூரணத்துக்குப் பதில், காரம் நிறைந்த உளுத்தம் பருப்பு முதலியவற்றை வைத்தும் செய்யலாம். இது நைவேத்தியத்து உகந்தது அல்ல ; ருசிக்காகச் செய்யப்படும் தின்பண்டம்தான்.
மோதகம் என்ற சொல் வால்மீகி ராமாயண யுத்த்த காண்டத்தில் வருகிறது ;பத்ம புராணத்தில் கணபதிக்குப் படைக்கும் பொருள்காவே வருகிறது .
Vālmīki-Rāmāyaṇa Yuddhakhaṇḍa 131.38
Modaka (मोदक) refers to a type food-stuff used in the worship of Gaṇeśa, according to the Padmapurāṇa 1.65
***
மோக்ஷ/ம் , முக்தி , வீடுபேறு
ஜன மரண , அதாவது பிறப்பு இறப்பு, என்ற சூழலிலிருந்து விடுபடுவது வீடுபேறு ; சம்ஸ்க்ருதத்தில் இதை முக்தி என்பார்கள் ; இந்துக்களின் வாழ்க்கை நான்கு லட்சியங்களைக் கொண்டது; அவையாவன- தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் ; அதாவது அறம், பொருள், இன்பம், வீடு ; இது தொல்காப்பியம், புறநானூறு திருக்குறள் முதலிய நூல்களிலும் சொல்லப்பட்டுள்ளது. இந்துக்களின் இறுதி லட்சியம் மோக்ஷம்; இதை தேவார திருவாசக திவ்யபிரபந்தப் பாடல்களிலும் பஜனைப் பாடல்களிலும் இந்துக்கள் வேண்டிக் கொள்கிறார்கள்; புத்த, சமண, சீக்கிய மதக் கோட்பாடுகளிலும் இது இருக்கிறது ; பிறவிப் பெருங்கடலிலிருந்து- சம்சார சாகரத்திலிருந்து- விடுபடுவது விடுதலை ஆகும்.
***
மூகாம்பிகை
சரஸ்வதி தேவியின் இன்னும் ஒரு வடிவம்; இந்த தேவியின் கோயில் கர்நாடக மாநிலத்தில் கொல்லூர் என்னுமிடத்தில் உளது ; துர்கா, லெட்சுமி , சரஸ்வதி, ஆகியோரின் மூலமான ஆதி பராசக்தி என்றும் சொல்லுவார்கள் ; மூகாசுரனை வதைத்ததாலும், மூகம் என்னும் ஊமைத்தன்மையைப் போக்குவதாலும் இந்தப் பெயர் . ஆதி சங்கரர் இவரை ஸ்தாபித்ததாகவும் கதை ஒன்று உள்ளது; ஆதிசங்கரர் வழிபட்ட தேவியை அவர் கேரளத்துக்கு அழைத்ததாகவும், அவர் திரும்பிப்பார்க்காமல் இருந்தால் அவரைப் பின்தொடர்ந்து வருவதாகவும் தேவி வாக்கு அளித்தாள்; அவரது நம் பிக்கையைச் சோதிக்க, தேவி ஓரிடத்தில் நின்றாள் ; காலடிச் சலங்கை ஒலி கேட்டகவில்லையே என்று சங்கரர் திரும்பிப் பார்க்கவே தேவி அங்கேயே நின்றுவிட்டாள். அந்த இடத்தில் அவளது விக்கிரகத்தையும் ஸ்ரீ சக்கரத்தையும் அவர் நிறுவினார் என்பது அந்தக் கதை ஆகும் . எம் ஜி ராமச்சந்திரன் , ஜெயலலிதா போன்ற அரசியல் தலைவர்கள் வைர வாள், தங்கக் கவசம் முதலியவற்றைக் காணிக்கையையாகச் செலுத்தியதால் தமிழ்ப் பாமரர்களுக்கு இடையேயும் இவள் புகழ் பரவியது.
***
மூக கவி
மூக கவி (Mooka Kavi) என்பவர்பிறவியிலேயே ஊமை; பின்னர் காமாட்சி தேவியின் அருளால் பேசும் திறனைப் பெற்றமகான் ஆவார். காஞ்சி காமாட்சி அம்மன் மீது 500 ஸ்லோகங்களைக் கொண்ட மூக பஞ்சசதீ என்ற ஸ்தோத்திரத்தை இயற்றினார் ‘மூகன்’ என்றால் ஊமை என்று பொருள். , தேவியின் அழகை வருணிக்கும் இந்த புகழ்பெற்ற,அற்புத நூலைப் படைத்தார்.மூக பஞ்சசதீ மொத்தம் ஐந்து பாகங்களைக் கொண்டுள்ளது:ஆர்யா சதகம்: அம்பிகையின் மேன்மைகளை விவரிக்கும் 100 ஸ்லோகங்கள்.பாதாரவிந்த சதகம்: காமாட்சியின் திருவடித் தாமரைகளை வர்ணிக்கும் 100 ஸ்லோகங்கள்.ஸ்துதி சதகம்: அம்பிகையைத் துதிக்கும் 100 பாடல்கள்.கடாக்ஷ சதகம்: தேவியின் கருணைக் கடாட்சத்தைப் போற்றும் 100 ஸ்லோகங்கள்.மந்தஸ்மித சதகம்: அம்பாளின் புன்னகையை விவரிக்கும் 100 ஸ்லோகங்கள். இவர் மூக சங்கர (398-437 CE) என்ற பெயரில் காஞ்சி சங்காராச்சார்ய மடத்தின் இருபதாவது மடாதிபதியாக இருந்தார் என்று மடத்தின் வரலாறு இயம்புகிறது ; அவரை காஷ்மீர் அரசர்கள் மாத்ரு குப்தா, பிரவர சேனன் ஆகியோரும் போற்றினார்கள்
***
முசுகுந்தன்
இந்தியாவின் வடமேற்குப்பகுதியை ஆண்ட சூரிய குல மன்னர்கள் தமிழ்நாட்டுக்கு குடியேறி சோழ வம்சஆட்சியை ஸ்தாபித்தார்கள். அவர்களுடைய முன்னோர்களில் ஒருவன் முசுகுந்தன்.மாந்தாதாவின் மகனான முசுகுந்தன் என்னும் சோழன் இந்திரனின் தலைநகரான அமராவதியைக் அசுரரிடமிருந்து காத்தான் என்றும் அதற்கு நன்றி தெரிவிக்கும் முகத்தான் காவல் பூதமும் ஐவகை மன்றமும் அனுப்பிவைத்தான் என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது (5-65/67; 6-7/17)
சோழ மன்னர்கள் திலீபன், அரிச்சந்திரன், மாந்தாதா, முசுகுந்தன், நாபாகன், காகுத்தன், பகீரதன், தசரதன், ராமன் முதலியோர் தங்கள் குலத்தவர் என்று கூறிக்கொள்வதை கன்யாகுமரிக் கல்வெட்டும், திருவாலங்காட்டுச் செப்பேடும், கலிங்கத்துப் பரணியும், மூவர் உலாக்களும் கூறுவதைக் காணலாம்.
இமயத்தில் சின்னம் பொறித்தது, மஹாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு உதவியது, இந்திரனுக்குச் சமமாக ஆசனத்தில் அமர்ந்தது ஆகியவற்றை மூவேந்தர்களும் தாங்கள் செய்ததாகக் கூறிக்கொள்கின்றனர்.
மாந்தாதா என்ற சோழன் ஒரே துறையில் புலியும் மானும் நீருண்ணும்படி பகை நீக்கி ஆண்டான் என்றும், ஒரு சோழன் உத்தரகுரு என்னும் போகபுரியை ஆண்டான் என்றும் தமிழ் நூல்கள் கூறுகின்றன.
தமிழர்களின் ஆட்சி அவ்வளவு தூரம் பரவியிருந்தது என்று சொல்ல முயலலாம். ஆயினும் பெயர்கள் எல்லாம் சம்ஸ்கிருதத்தில், புராணத்தில் உள்ள மன்னர் பெயர்களாக இருக்கின்றன.
புறநானூற்றின் பாடல் 37, 39, 43, 46, 228 ஆகியவற்றில் சோழர்களின் முன்னோடியாக சிபிச் சக்ரவர்த்தி கூறப்படுகிறான். சிபிச் சக்ரவர்த்தியின் கதை புராண, இதிஹாசங்களிலும் பவுத்த ஜாதகக் கதைகளிலும் வருகிறது. ஒரு புறாவுக்காக தன்னையே தராசில் நிறுத்தவன் அவன். தியாகத்தின் சின்னம் அவன். மஹாபாரதம் வன பர்வத்தில் வரும் (அத்தியாயம் 200) வரும் சிபி- கழுகு, புறாக் கதையை சங்க இலக்கியம் அப்படியே கூறுகிறது.
சிபியின் வழித்தோன்றல் என்பது சம்ஸ்கிருதத்தில் ‘சைப்ய’ என்று வரும். அதைத் தமிழில் செம்பியன் என்று தமிழ்படுத்தினர். அகநானூறு பாடல் 36, நற்றிணைப் பாடல் 14 ஆகியவற்றில் சோழர்கள் செம்பியன் என்றே அழைக்கப்படுகிறான். வடமொழி ஆசிரியர்கள் தண்டி, வராஹமிகிரர் ஆகியோரும் சோழர்களை சிபியின் குடியினராகவே கருதுவர். அமராவதி, நாகார்ஜுனகொண்டா, பர்ஹுத், இந்தோநேசியாவில் போரோபுதூர் புடைப்புச் சிற்பங்களில் சிபியின் கதைகள் சித்திர வடிவம் பெற்றன.
சிபி குலத்தை ரிக்வேதமும் ,ஐதரேய பிராமணமும் குறிப்பிடுகின்றன. குறைந்தது 3500 ஆண்டுக்கு முந்தியவர்கள் சிபி குலத்தினர்.
***
முத்கல்ய ரிஷி
மௌத்கல்யர் (அல்லது முத்கலர்) என்பவர் இந்து புராணங்களின்படி நளாயினியை மணந்த ஒரு புகழ்பெற்ற முனிவர் ஆவார். வறுமையிலும் இறையச்சத்துடன் வாழ்ந்து, மோட்ச நிலையை அடைவதில் தேர்ச்சி பெற்றவர்.மௌத்கல்ய நளாயினி (இந்திரசேனை) என்ற பதிவிரதையான பெண், தன் கணவரான மௌத்கல்ய முனிவரை ஒரு கூடையில் சுமந்து சென்றதாக புராணங்கள் கூறுகின்றன. மௌத்கல்ய முனிவரின் வழித்தோன்றல்களே மௌத்கல்ய பிராமணர்கள் ; மேலும், சௌராட்டிர சமூகத்தின் பண்டைய கோத்திரங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த ரிஷியைச் சோதிக்க ஒரு முறை கோபக்கார ரிஷி துர்வாசர் வந்து சாப்பிட உட்கார்ந்தார்; அவர் யாரோ ஒரு யாசகர் (பிச்சை எடுப்பவர்) போல வந்தார் கடோத்கஜன், பீமன் போல வீட்டிலிருந்த எல்லாவற்றையும் சாப்பிட்டுத் தீர்த்தார். இவ்வாறு ஆறு முறை செய்தார் ; அப்போதும் முத்கல்யர் மலர்ந்த முகத்துடன் அன்னமிட்டார் . துர்வாசரும் மனம் மகிழ்ந்து தன்னுடைய உண்மை வடிவத்தை வெளிப்படுத்தினார் . அதே நேரத்தில் முத்கல்யரை அழைத்துச் செல்ல ஒரு புஷ்பக விமானம் / SPACE SHUTTLE ஸ்பேஸ் ஷட்டில் வந்தது; தேவலோகத்துக்கு வரும்படி தேவர்கள் அழைத்தனர் ; இதில் என்ன நிபந்தனைகள் என்று ரிஷி கேட்டார் ; உங்கள் புண்ணியம் தீரும் வரை நீங்க தேவலோக இன்பங்களை அனுபவிக்கலாம் என்று பதில் சொன்னார்கள் ; அப்படியா போய் வாருங்கள்; நான் சொர்க்கத்துக்கு வரவில்லை மீண்டும் நீண்ட தவம் செய்கிறேன் என்றார் ; எந்த இடத்தில் நிரந்தர சுகம் உண்டோ, எந்த இடத்திலிருந்து நாம் பிறப்பெடுக்க பூமிக்கு வருவதில்லையோ அதற்காக நான் தவம் செய்வேன் என்றும் சொல்லி விமானத்தை திருப்பி அனுப்பிவிட்டார்; இந்த சம்பவம் மஹாபாரத வனபர்வத்தில் உள்ளது .
***
முத்ரா / முத்திரை
BUDDHA COPIED HINDU RISHIS; HE NEVER REMOVED TILAK OR HIS SACRED THREAD.
முத்திரை என்பது விரல்கள், கைகள் மூலம் காட்டும் சமிக்ஞை ஆகும். இது உடலின் சக்தியை வழிப்படுத்தும் முறை அல்லது அதை அதிகரிக்கும் முறை ஆகும். அதுமட்டுமல்ல அதில் அக்குபிர்ஷர் ACUPRESSURE எனப்படும் உத்தியும் உளது; உடலில் சிலபகுதிகளுக்கு அழுத்தம் கொடுத்தால் அது ஞானம் பெறுவதற்கான நரம்புகளைச் சுண்டி விடும்.
முத்திரைகள் நாட்டியம் முதல், பூஜைகள் வரை பல இடங்களிலும் பயன்படுகின்றன. நாமும் கூட சாலைகளில் போலீஸ்காரகள் காட்டும் முத்திரைகள், காதுகேளாதோருக்கான முத்திரைகளைத் தினமும் காண்கிறோம். தியானத்தில் பயன்படுத்தும் முத்திரைகள் உயர்ந்த வகை முத்திரைகள். ரஹஸியப் பயன்பாடுள்ளவை.
பிராஹ்மணர்களும் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியா வந்தனத்தில் முத்திரைகளைப் பயன்படுத்துவர். பதஞ்சலி யோக சாத்திரம் முதலியன முத்திரைகள் பற்றிப் பேசுகின்றன. இந்துக் கடவுளர் அபய முத்திரை அல்லது வரத முத்திரையுடன் காணப்படுவர். ஆக நம்மிடம் உள்ளவற்றை பௌத்தர்களும் ஏற்று அவைகளைப் பயன்படுத்தினர்.
‘முத்ரா விதானம்’ என்னும் ஸம்ஸ்க்ருத நூல் சுமார் 130 முத்திரைகளை வரை படத்துடன் காட்டுகிறது. இதை ராமகிருஷ்ண மடம் (மயிலாப்பூர், சென்னை) தமிழிலும் வெளியிட்டுள்ளது. அதன் மூன்று ஸ்லோகங்கள் முத்திரையின் பயன்பாட்டை (பூஜைகளில்) விளக்குகிறது. இதோ அவை:-
1.எல்லா தேவர்களையும் மகிழ்விப்பதாலும் பாவத் தொடர்பைப் போக்குவதாலும் (மோதனாத், த்ராவணாத்) முத்திரை என்று சொல்லப்படும். அது எல்லாக் காமங்களையும் அர்த்தங்களையும் (செல்வம்) தருவதாகும்.
2.தந்திரங்களில் எல்லாம் கற்பிக்கப்பட்ட முத்திரைகளை இனி கூறுவோம். அவைகளைக் காட்டுவதால் மந்திர தேவதைகள் ப்ரீதி அடைவார்கள் .
3.அர்ச்சனை, ஜபம், தியானம் முதலியவற்றிலும் காமிய கர்மங்களிலும், ஸ்நானம், ஆவாஹனம், சங்கப் பிரதிஷ்டை, ரக்ஷணம், நைவேத்யம் இன்னும் பிறவற்றிலும் அந்தந்தக் கல்பங்களில் கூறப்பட்ட முத்திரைகளை உரிய ஸ்தானங்களில், உரிய லக்ஷணங்களுடன் கண்டுகொள்ள வேண்டும்.
இதன் பின்னர் 11 தலைப்புகளில் முத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆக இவை அனைத்தும் நாம் கண்டு பிடித்து வளர்த்தவை என்பது தெளிவு:-
ஸ்ரீ குருவந்தன முத்திரைகள்; அர்கியஸ்தாபன முத்திரைகள்; அர்ச்சனையில் ஆவாஹனாதி முத்திரைகள்; நியாஸ முத்திரைகள்; ஸ்ரீவித்யா பத்து முத்திரைகள்; நிவேதன முத்திரைகள்; காயத்ரீ முத்திரைகள்; கணேச முத்திரைகள்; சிவ முத்திரைகள்; விஷ்ணு முத்திரைகள்; நானா முத்திரைகள்; முத்திரைகளின் அகராதி
புத்தர் ஒரு ‘பக்கா’ ஹிந்து. அவர் ஹிந்துவாகப் பிறந்து இந்துவாகவே வாழ்ந்தார் என்பது அவருடைய சிலைகளில் இருந்தும் பிறகாலத்தில் புத்த மதத்தினர் செய்த செயல்களில் இருந்தும் தெரிகின்றது.அவர் முகத்தில் பெரிய பொட்டு/ திலகம் இருக்கும்; தோளில் பூணுல் தொங்கும் ; இந்தோனேஷியா நாட்டில் ஜாவா தீவில் போரோபுதூரில் உள்ள புத்தர் சிலைகளில் அவர் மந்திர சக்தியுள்ள முத்திரைகளைப் பயன்படுத்தி அபூர்வ சக்திகளைப் பெற்றதை ஒரு ஜெர்மானியர் படங்களுடன் வெளியிட்டுள்ளார் .
பரத நாட்டிய சாஸ்திரத்திலுள்ள 108 முத்திரைகள் சிதம்பரம் முதலிய கோவில்களில் சிற்ப வடிவங்களில் செதுக்கப்பட்டுள்ளன உள்ளன
பழங்கால எகிப்திய சிலைகளில் தியான முத்திரை உள்ளது அபய முத்திரையும் உள்ளது புத்தர் சிலைகளைப் போல பல முத்திரைகளை காட்டும் சிலைகளும் உள்ளன (இது பற்றி நான் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுரைகளை எழுதி அது புஸ்தகமாகவும் வந்துள்ளது )
***
முரளீதரன்
கிருஷ்ணனின் பெயர் ; புல்லாங்குழலைத் தாங்கியவன் என்று பொருள் . மாடு மேய்க்கும் கண்ணனாக வலம் வந்தபோது, குழல் ஊதி மக்களையும் மாக்களையும் மயக்கிய வேணுகால லோலன் என்பதால் இந்த வடிவத்தில் கிருஷ்ணனின் படங்களும் பொம்மைகளும் சிலைகளும் எங்கும் காணப்படுகின்றன.
***
முருகன்
DR A NARAYANAN , SYDNEY, HAS TAKEN THIS PICTURE
தமிழ்க்கடவுள் என்ற சிறப்புப்பெயர் முருகனுக்கு உண்டு ; ஏனெனில் அகஸ்திய முனிவருக்கு முருகன் தமிழ் மொழியைக் கற்பிக்க, அவர் முதல் இலக்கணத்தை எழுதினார் ; இதை அருணகிரி நாதர் முதல் பாரதியார் வரைப் பாடிப் பரவியள்ளனர்.
முருகன் என்றால் அழகன் என்று பொருள்.
ஏனைய பெயர்கள் ; ஸ்கந்தன், கார்த்திகேயன், விசாகன், ஆறுமுகன், ஷண்முகன் ,குகன், குறிஞ்சிக் கிழவன்
காளிதாசன் எழுதிய குமார சம்பவ காவியத்தால் ஈர்க்கப்பட்டு வைஷ்ணவர்களான குப்தப் பேரரசர்களும் தங்களுடைய புதல்வர்களுக்கு ஸ்கந்த குப்தன், குமார குப்தன் என்ற பெயர்களைச் சூட்டினார்கள்
தொல்காப்பியத்தில் சேயோன் ஆகத் தோன்றுகிறார்; சங்க கால திருமுருகாற்றுப்படை முதல் அண்மைக்கால அவ்வையார் அருணகிரிநாதர் வரை பாடப்பட்டுள்ளார்
மாயோன் மேய காடுறை உலகமும்,
சேயோன் மேய மைவரை உலகமும்,
……………… தொல்காப்பியம்
தமிழ் நாட்டில் அறுபடை வீடுகள் எனப்படும் கோயில்களுக்கு நாள்தோறும் பல்லாயிரம் மக்கள் சென்று வழிபடுகின்றனர்
அறுபடை வீடுகள்: திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்சோலை
மனைவியர் – வள்ளி, தேவசேனை ;
வாகனங்கள்- மயில், பிணிமுகம் என்னும் யானை;
கொடி- சேவல், மயில் கொடிகள்;
சடங்குகள் – பால் குடம், காவடி;
பிடித்த நைவேத்தியம் – பஞ்சாமிர்தம்;
கொன்ற அசுரர்கள்- தாரகாசுரன், சூரபத்மன் ;
***
மூலாதாரம்
மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம்,
விசுத்தி, ஆக்ஞா, ஸஹஸ்ராரம் என்று ஏழு சக்கரங்கள் உடலில் உண்டு என்று யோகசாஸ்திரங்கள் பகர்கின்றன .குண்டலினி சக்தி பாம்பு வடிவத்தில் மூலாதாரத்தில் உறைந்து கிடக்கும்; அதை மூச்சுப் பயிற்சிகளினால் — அதாவது பிராணாயாமத்தினால் –தலைக்குக் கொண்டுபோகும்போது பிரம்மானந்தம்/ பேரானந்தம் என்னும் சமாதி நிலை கிட்டும்; பாதி வழி போவதற்குள் அற்புத சக்திகள் தோன்றும்; அந்த நிலையில் மண், பெண்,பொன் ஆசைகளில் சிக்கி பாதி சாமியார்கள் சிறைச் சாலைக்குப் போய்விடுவார்கள் . தப்பித் பிழைப்பவர்கள் ராமகிருஷ்ணர், ரமணர் போல அழியாத புகழ் பெறுவார்கள்
உடலிலுள்ள சக்கரங்கள் : மனித உடலில் ஆற்றல் மையங்களாக ஏழு முக்கிய சக்கரங்கள் (மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராரம்) விளங்குகின்றன. இந்த சக்கரங்களைச் சீரமைப்பதன் மூலம் ஆரோக்கியம், மன அமைதி மற்றும் ஆன்மீக விழிப்புணர்வு மேம்படுவதாகத் தமிழ் மற்றும் வேத இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
மனத்தின் ஏழு நிலைகள்
ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுகிறார்: மனம் உலக விஷயங்களைச் சிந்திக்கும் போது லிங்கம், குஹ்யம், நாபி எனும் மூன்று ஸ்தானங்களில் சஞ்சரிக்கும்.. அந்த நிலையில் உயர்ந்த மனோ பாவங்கள் எழுவதில்லை. காமினி காஞ்சனத்திலேயே அழுந்திக் கிடக்கும் (காமினி காஞ்சனம்= பெண் ஆசை, தங்கம்/செல்வம்/பணம் மீது ஆசை).
மனத்தின் நான்காவது ஸ்தானம் இருதயம். இந்த இடத்துக்கு மனம் வரும்போது முதன் முதலில் ஆத்ம எழுச்சி உண்டாகிறது. இந்த நிலையில் மனமானது பெண்ணாசை, பொன்னாசைகளில் ஒருபோதும் செல்வதில்லை.
மனத்தின் ஐந்தாவது ஸ்தானம் கழுத்து. அங்கு வரும்போது அஞ்ஞானம் எல்லாம் அகல்கிறது. ஆறாவது ஸ்தானம் புருவ மத்தி. அங்கு வரும்போது இரவும் பகலும் இறைவனின் திவ்ய தரிசனமே தென்படுகிறது.
தலைதான் மனத்தின் ஏழாவது நிலை. அங்கு சமாதி உண்டாகிறது. தன் நினைவே கிடையாது. உலக வியாபாரங்கள் அனைத்தும் அறவே ஒழிந்து பரமானந்தம் கிட்டுகிறது.
இந்த ஏழு ஸ்தானங்களே யோக நூல்களில் மூலாதாரம், ஸ்வாதி ஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, ஸஹஸ்ராரம் என்று கூறப்படுகின்றன.
***
மூல நட்சத்திரம்
இது 27 நட்சத்திரங்களில் ஒன்று ; திருமூலரும் சங்க காலப் புலவர் மாமூலனும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்று சொல்லலாம் ; ஆண் மூலம் அரசாளும் என்ற பழமொழி தமிழில் உள்ளது
இதோ 27 நட்சத்திரங்களின் பெயர்கள் :–
அசுவினி = பரி, புரவி, வாசி, ஐப்பசி, இரலை, புரவி, ஏறு, யாழ், தலை நாள், மருத்து நாள், சென் பூதம், குதிரை
ரோகிணி = பண்டி, மாட்டு வண்டி, உருள், வையம், ஊறல், பிரமநாள், சதி, அயன் நாள், தேர், விமானம், சகடம் (அகம் 86),
(சங்க காலத் தமிழர்கள் சகடம்/ரோகிணி நட்சத்திரம் அன்றுதான் கல்யாணம் செய்வர் என்று அகநானூறு கூறுகிறது. )
மிருகசீரிடம் = மான் தலை, மாழ்கு, மும்மீன், நரிப்புறம், பாலை வெய்யோன்.
திருவாதிரை = செங்கை, யாழ், சடை, இறைநாள் (வடமொழியில் ஆருத்ரா), மூதிரை,ஈசன் தினம்
27 நட்சத்திரங்களில் இரண்டே நட்சத்திரங்களுக்கு மட்டுமே (திரு+ஆதிரை, திரு + ஓணம்) திரு என்ற சிறப்பு அடைமொழி உண்டு. இது பற்றி காஞ்சி மஹா ஸ்வாமிகள் ஆற்றிய சொற்பொழிவினைப் படிக்க)
உத்திரட்டாதி = மன்னன், அறிவன் நாள், பிற்கொழுங்கோல் (உத்திரப் ப்ரோஸ்தபத);
ரேவதி = இரவி நாள், கலம், தோணி, நாவாய், தொழு, பஃறி, ஆ நாள், கடை நாள், சூலம், பெரு நாள், பூடா நாள், கடை மீன்;
என் கருத்துக்கள்:
ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் உரிய வேத கால தெய்வங்களின் பெயர்கள் இப்பட்டியலில் உள.
சில விண்மீன்களின் பெயர்கள் வேறு பல விண்மீன்களுக்கும் வரும்.
பல பெயர்கள் போலக் காணப்பட்டாலும் அவை எல்லாம் ஒருபொருள் குறித்த பல சொற்களே. எடுத்துக்காட்டாக தீ என்பதற்கான — அங்கி, அழல், தழல், எரி போன்ற பல சொற்களால் — கார்த்திகை நட்சத்திரம் குறிக்கப்படுவதைக் காண்க. ஆகவே பட்டியலைச் சுருக்க முடியும்.
மேலும் வட நாட்டில் நீண்ட காலமாக 27 நட்சத்திரங்களுக்கும் போடும் படமும் பல சொற்களும் ஒரே மாதிரி இருக்கின்றன.
பல நட்சத்திரங்கள், சில கிரகங்களுடனும், சில மாதப் பெயர்களுடனும் தொடர்பு படுத்திருப்பதை நோக்குக.
7) Punarvasu – Castor, Pollux with Procyon Alpha, Beta, Gemini-Alpha Canis Minor respectively புனர் பூசம்
8) Pushya – Gama, Delta and Theta of Cancer பூசம்
9) Ashlesha – Delta, Epsilon, Eta, Rho and Zeta Hydra ஆயில்யம்
10) Maagha – Regulus, Alpha, Ela, Gama, Zeta My and Epsilon Leonis மகம்
11) Poorva Phalkuni – Delta and Theta Leo பூரம்
12) Utra Phalkuni – Beta and 93 Leo உத்தரம்
13) Hasta – Delta, Gama, Eta, Virgo ஹஸ்தம்
14) Chitraa – Spica, Alpha Virgo சித்திரை
15) Swaati – Arcturus – Alpha Bootes ஸ்வாதி
16) Vishaakha – Alpha, Beta etc Libra விசாகம்
17) Anuraadha – Beta, Delta, Pi –Scorpia அனுஷம்
18) Jyestha – Antares Alpha, Sigma Tau Scorpio கேட்டை
19) Mula – Scorpio, tail stars மூலம்
20) Poorvaashadaa – Delta and Epsilon Sagittarius பூராடம்
21) Uttaraashaada – Zeta and Omicron Sagittarius உத்திராடம்
22) Shraavanaa – Altair – Alpha Aquila திரு ஓணம்
23) Dhanishtha – Delphinus அவிட்டம்
24) Shatabhisak – Lambda Aquarius சதயம்
25) Poorva Bhaadrapada – Alpha and Beta Pegasus பூரட்டாதி
26) Uttara Bhaadrapada – Gama Pagasus and Alpha Andromeda உத்திரட்டாதி
27) Revathi – Zeta Piscum ரேவதி
–Subham—
Tags – முருகன், மோக்ஷ, மூககவி, முத்ரா , மூலம் ,மூல நட்சத்திரம் HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 70; இந்து மத கலைச்சொல் அகராதி-70, 27 நட்சத்திரங்களின் பெயர்கள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மாதங்க
ஸம்ஸ்க்ருத்தில் யானை என்று பொருள்; ஒரு சுவையான கதை இதோ:
இந்தக் கதை மஹாபாரதத்தில் உள்ளது. ராமாயணத்திலும் கூட இவர் பெயர் வருகிறது ;ரிஷ்யமுக மலைக்கு அருகிலுள்ள இவருடைய ஆஸ்ரமத்துக்கு ராமனும் சீதையும் விஜயம் செய்தார்கள். சண்டாளனுக்குப் பிறந்த ஒருவன் பிராமணனாக வளர்க்கப்பட்டான்;அவன் ஒரு பெரிய கழுதைக் கும்பலை முரட்டுத்தனமாக மேய்த்துக் கொண்டிருந்தான். அப்போது தாய்க் கழுதை சொன்னது ; ஏய் கழுதைகளே; இதைவிட அதிகம் எதிர்பார்க்காதீர்கள்; ஏனெனில் நம்மை ஓட்டுபவன் பிராமணன் அல்ல; அவன் ஒரு சண்டாளனுக்குப் பிறந்தவன். இதைக் கேட்ட கழுதை ஒட்டி புத்திசாலிக் கழுதையே உனக்கு இது எப்படித் தெரியும்? என்று கேட்டான் ; கழுதை சொன்னது : உன்னுடைய தாயார் போதையில் இருந்த போது ஒரு கீழ்ஜாதி அம்பட்டன் உன்னுடைய தாயைக் கட்டித் தழுவினான்; அதனால் பிறந்தவன்தான் நீ ; இதைக் கேட்ட சண்டாளன் பிராமணன் ஆக மாறுவதற்கு நீண்ட காலம் தவம் செய்தான் அவனது தவத்தைக் கண்டு தேவர்கள் அஞ்சினர்; ஆயினும் இந்திரன் அவனுக்கு அனுமதி மறுத்தான். அவன் மீண்டும் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்தான் ; 1000 ஆண்டுகள் உருண்டோடின அவன் எலும்பும் தோலுமாக ஆனான். இந்திரனே வந்து அவனைத் தாங்கி நின்றான்; அப்போது அவனுக்கு சில வரங்களை அளித்தான்; “நீ பறவையாகப் பறக்கலாம்; நினைத்த வடிவத்தை எடுக்கலாம்; எங்கு சென்றாலும் உனக்கு மரியாதையும் கெளரவமும் கிடைக்கும்” என்றான் அவர்தான் மாதங்க முனிவர்.
***
மேதாதிதி
காண்வ மகரிஷி குலத்தில் உதித்த வேத ரிஷி இவர். உபநிஷத்தில் இவரைப் பற்றிய கதை வருகிறது ; இவரது தவத்தைக் கண்டு மெச்சிய இந்திரன் இவரை தேவலோகத்துக்குக் கடத்திச் சென்றான் ; அப்போது அவரை செம்மறியாட்டு வடிவத்தில் கொண்டு சென்றான் (இதே போல கழுகு வந்து கனிமேட் GANYMEDE என்பவனைத் தேவலோகத்துக்குக் கடத்திச் சென்றதாக கிரேக்க புராணக் கதை ஒன்றும் இருக்கிறது.
***
மேதாவி
பாலாதி என்ற ரிஷியின் புதல்வர் இவர்; தந்தை இயற்றிய கடும் தவத்தால் இவருக்கு ஒரு வரம் கிடைத்தது; அருகிலுள்ள மலை இருக்கும் வரை யாரும் இவரை வெல்லவோ கொல்லவோ முடியாது என்பது அந்த வரம்; மேதாவிக்கு அகந்தை அதிகரித்தது ; உடனிருந்த பிரமணர்களைக் கொடுமைப் படுத்தினான் ; அதைக் கண்ட தனுசக்ஷா என்ற பிராமணர், பலத்த கொம்புள்ள ஒரு செம்மறி ஆட்டினை உருவாக்கினார் அது அந்த மலையை முட்டி முட்டி மோதிச் சிதற அடித்தது ; மேதாவிக்கும் மரணம் சம்பவித்தது; மஹாபாரதத்தில் இந்தக் கதை உள்ளது. பரத்வாஜ முனிவர் இந்த விஷயத்தை அவருடைய மகன் யவக்ரீடனுக்குச் சொல்லி, அகந்தை ஆளையே அழித்துவிடும் என்று அறிவுறுத்தினார்.
***
மேனகா
தேவலோகத்தில் வசிக்கும் அப்சரஸ் என்னும் அழகிகளில் ஒருவர் மேனகா; விச்வாமித்திரர் என்னும் க்ஷத்ரிய மன்னன், பிராமணன் ஆகி பிரம்ம ரிஷி பட்டம் பெறுவதற்கு கடும் தவம் இயற்றிக் கொண்டிருந்தார் ; அவருடைய தவத்தைக் கலைக்க இந்திரன் மேனகாவை அனுப்பினான் ; அவளும் வாயுதேவனிடம் பேசி ஒரு உடன்படிக்கை செய்தாள்; விசுவாமித்திர முனிவருக்கு முன்னால், சேட்டைகள் செய்தபோது வாயு தேவன் அவளுடைய ஆடைகளை அகற்றினான்; உடனே முனிவர் தவம் கலைந்து மேனகாவின் வலையில் விழுந்தார்; அவர்கள் இருவரும் குடும்பம் நடத்திய காலத்தில் பிறந்தவள்தான் சகுந்தலா என்ற பெண்; பாரத நாட்டினை ஆண்டு பாரத நாடு என்ற பெயரினை நல்கிய பரதனின் தாயார் சகுந்தலை.
***
மேனா
ரிக்வேதத்தில் வரும் மேனா என்ற பெண், வ்ரிஷனஸ்வாவின் புதல்வி ஆவார் ;இந்திரன் அவளை விரும்பினான்; புராணத்தில் ஹிமவத்தின் மனைவி ; அவர்களுக்குப் பிறந்தவள் உமா , மற்றும் கங்கா ; மகன் பெயர் மைனாகம் (இந்திரன் என்பது ஒருவரைக் குறிக்கும் பெயர் அல்ல; மன்னன் என்ற பொதுப் பெயரில் வேத, இதிஹாச புராணங்களில் வருகிறது ; இமயமலையில் கங்கை நதி பிறக்கிறது என்பதை ஹிமவத்தின் மகள் கங்கை என்று புராணம் சொல்கிறது)
****
மேரு
பூமியின் நடுவிலுள்ள உயரமான மலை மேரு ஆகும் ; வட துருவத்தையும் மேரு என்று புராணங்கள் வருணிக்கின்றன; மேரு மலையின் உச்சியில் ஸ்வர்கம் இருப்பதாகவும் சொல்லும்; இமயமலைக்கு அப்பால் இது இருக்கிறது ; சுமேரு , ஹேமாத்ரி /பொன்மயமான மலை, ரத்னசானு /நவரத்தின சிகரம், கர்ணிகாசலம்/ தாமரை மலை , அமராத்ரி /தேவர்கள் மலை, தேவ பர்வதம் என்ற பெயர்கள் மேருவுக்கு உள்ளன .
***
மிதிலை
ஜனகர் ஆட்சி செய்த விதேஹ நாட்டின் தலை நகரம் மிதிலாபுரி; இப்போதைய வடக்கு பீஹாருக்கு, வேத காலத்தில் விதேஹம் என்ற பெயர் இருந்தது மிதிலையில் பிறந்ததால் சீதா தேவிக்கு மைதிலி என்று பெயர் ; இப்போதும் ஜனகரின் பெயரில் ஜனக்பூர் என்று இந்த ஊரினை அழைக்கிறார்கள் ; வேதாந்த விஷயங்களுக்குப் பெயர் பெற்ற நாடு விதேஹம்.
***
மிலேச்சர்
மிலேச்ச’ என்ற சொல் சங்க இலக்கியத்தில் முல்லைப் பாட்டில் வருகிறது. மகாபாரதம் முதல் பல சம்ஸ்கிருத நூல்களிலும் கல்வெட்டுகளிலும் வருகிறது. எல்லா இடங்களிலும் பாரத நாட்டைச் சாராத ‘அந்நியன்’ அல்லது ‘அந்நிய மொழி’ யைப் பேசுவோன் என்ற சொல்லிலேயே புழங்கியிருக்கிறது. யவனர்கள் எனப்படும் கிரேக்கர்கள் அல்லது ரோமானியர்களை இப்படி அழைத்தனர். படை எடுத்து வந்த முஸ்லீம்களையும் பிரிட்டிஷ்காரர்களையும் இப்படி அழைத்தனர்.
பலுச்சிஸ்தான் என்ற பகுதியில் வசித்தவர்களையும் இப்படி அழைத்தனர். பலுச்சி என்பது மிலேச்ச என்று மாறியது என்று சில மொழி இயல் அறிஞர்கள் வாதிடுவர். கிரேக்கர்களும் கூட தங்கள் இனத்தைச் சேராதோரை ‘பார்பேரியன்ஸ்’BARBARIANS (காட்டுமிராண்டி ,நாகரிகமற்றவர், முரட்டுத்தனமானவர், அநாகரிகர்,பண்பற்றவர்) என்று அழைத்தனர். பிற்காலத்தில் இந்தச் சொல் அர்த்தம் மாறி தீய(காட்டுமிராண்டி) அர்த்தத்தில் மட்டும் வழக்கத்தில் வந்தது.
யாராவது ஏதாவது புரியாத விஷயத்தைச் சொன்னால் ஆங்கிலத்தில் “இட் இஸ் கிரீக் டு மீ” IT IS GREEK TO ME என்று சொல்லுவார்கள். இதற்கு கிரேக்க மொழி என்று பொருள் அல்ல. எனக்குப் புரியவில்லை என்று பொருள். ஆக இந்த இடங்களில் கிரீக், பார்பேரியன்ஸ் என்ற சொற்களை எப்படி அர்த்தம் செய்துகொள்கிறோமோ அப்படித்தான் நாமும் ‘மிலேச்ச’ என்ற சொல்லுக்குப் பொருள் காண வேண்டும்.சி ந்து சமவெளியை மிளக்கா என்று பாபிலோனியர்கள் அழைத்தனர் என்றும் களிமண் ஏடுகளில் மிளக்கா என்பது உள்ளது என்றும் சொல்லி சிந்து வெளி ஆய்வை திசை திருப்பிய அறிஞர்களும் உண்டு. முன் கூறியது போல இது பலுச்சிஸ்தான் என்னும் குறுகிய நிலப்பரப்பில் வாழ்ந்த ஒரு இனத்தை மட்டும் குறித்திருக்கலாம். ஆனால் பாரத நாடு முழுதையும் குறித்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை.
முல்லைப் பாட்டில் ரோமானிய மக்களைக் குறிக்கையில் வாய் பேசாதோர், ஊமைபோன்று சைகை மொழியில் பேசுவோர் என்று மிலேச்ச என்ற சொல்லுக்குப் பொருள் கூறப்பட்டிருக்கிறது. ரிக் வேதத்திலும் கூட சிலரை வாய் பேசாதோர், மொழியே இல்லாதோர் என்றும் கூறியிருக்கின்றனர். இதன் பொருள் ‘நம் மொழியைப் பேசாதவர்’ என்பதே.
ஆனால் வெளிநாட்டு அறிஞர்கள் இது திராவிடர்களை வசை பாடியது என்றும் மிலேச்சர்கள் என்பவர்கள் திராவிடர்கள் என்றும் எழுதி குழப்பி இருக்கின்றனர்; மாபாரத ஆதி பர்வத்தில் அரக்கு மாளிகை கட்டிய எஞ்சினீயரை மிலேச்சன் என்றும் மாபாரத யுத்தத்தில் பங்குகொண்ட பல மன்னர்களை மிலேச்சர்கள் என்றும் சொல்லியிருக்கிறது. சேரன் செங்குட்டுவன் யவனர்களைப் பிடித்து மொட்டை அடித்து அவர்கள் தலையில் எண்ணை ஊற்றி அவமானம் செய்ததை பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரத்தில் காணலாம். சகரர், ஹூணர், கிரேக்கர்கள் ஆகியோரை வட மொழிக் கல்வெட்டுகளும் நூல்களும் மிலேச்சர்கள் என்று கொச்சையாகத் திட்டுவதையும் காணலாம்.
சுருக்கமாகச் சொன்னால் மிலேச்சர்கள் தமிழோ சம்ஸ்கிருதமோ பேசாதவர்கள், இந்து மத நம்பிக்கைகளுக்குப் புறம்பானவர்கள் என்பதை 3000 ஆண்டு சொல் பிறப்பியல் ETYMOLOGY வரலாறு காட்டும்.
***
மேகநாதன்
ராவணனின் மூத்த மகன்.
ராமாயணத்தில் வரும் மேகநாதன், இலங்கையின் அரசனான ராவணன் -மண்டோதரி ஆகியோரின் மூத்த மகன் ஆவார். இவருக்கு இன்னொரு பெயர் இந்திரஜித். இவர் பிறந்தபோது இடியும் மின்னலும் முழங்கியதால் ‘மேகநாதன்’ என்ற பெயரும் , தேவர்களின் தலைவனான இந்திரனைப் போரில் வென்ற காரணத்தினால் ‘இந்திரஜித்’ என்ற பெயரும் ஏற்பட்டன; இவருடைய வீர தீர போர்ச் செயல்களை கம்பனும் வால்மீகியும் வருணித்துள்ளார்கள்.
***
மேக தூதம்
காளிதாசன் உலகின் முதல்Tourist Guide டூரிஸ்ட் கைடு ; போகும் வழியில் உள்ள நகரங்களையும் காடு மலைகளையும் வருணித்து படிப்போருக்கு பூகோள, வரலாற்றுச் செய்திகளை அளிக்கிறான்
மேலும் அவன்தான் முதல் பயணக்கட்டுரை (Travelogue Writer) எழுதியவன் என்றும் சொல்லலாம். மஹாபாரதம், ராமாயணத்தில் இது போன்ற வருணனைகள் இருந்தாலும் புராணக்கதைகளும் நம்ப முடியாத விஷயங்களும் இருக்கும்.
காளிதாசன் வானிலை இயல் மன்னன் (Meteorologist) . முதல் முதலில் (Mapped South West Monsoon) தென் மேற்குப் பருவக்காற்று விந்திய மலை முதல் இமய மலை வரையே எந்தப் பாதையில் செல்கிறது என்பதையும் காட்டுகிறான். பறவைகள் குடியேற்றம் (Bird Migration) பற்றியும் காளிதாசன் செல்கிறான் . பிற் காலத்தில் புறநானூற்றுப் புலவர் முதல் சத்திமுற்றத்துப் புலவர் வரை “நாராய், நாராய், செங்கால் நாராய்” (Northward Return Journey of MigratoryBirds) என்று பாட வழிவகுத்தார் இவ்வகையில் காளிதாசனின் மேக விடு தூது சிறப்புடைத்து. மேகம் மூலம் ஒரு யக்ஷன் தனது காதலிக்கு அனுப்பிய செய்தியைக் கொண்டது ஆகும்.
காளிதாசரின் ‘ஒரிஜினல் ஐடியா’ Original Idea வா இந்த தூதுக் கவிதை; இல்லை. காளிதாசரின் நூல்களுக்கு பழங்காலத்தில் 75 பேருக்கும் மேலானோர் உரை எழுதினார்கள். அவர்களில் மிகவும் பிரசித்தமானவர் மல்லிநாதர். வால்மீகி முனிவரின் ராமாயணம்தான் காளிதாசருக்கு ஊற்றுணர்ச்சி தந்தது என்கிறார். ராமாயணத்தில் நாம் குரங்கு/ அனுமன் விடு தூதுக் கவிதையைக் காண்கிறோம். ராமன் அனுப்பிய செய்தியுடன் சீதையைச் சந்தித்து மோதிரத்தையம் கொடுத்து, மீண்டும் ‘குட் நியூஸ்’ Good News கொண்டுவந்து ராமனிடம் சபாஷ் வாங்குகிறார் அனுமன். இந்த அனுமன் தூது – குரங்கு விடு தூதுதான் காளிதாஸருக்கு ஐடியா Idea கொடுத்தது என்பதற்கு மற்றும் ஒரு சான்று வால்மீகி ராமாயண கணையாழி போல காளிதாசரின் ஒவ்வொரு நாடகத்திலும் ஒரு மோதிரம் அல்லது நகை முக்கிய இடம் பெறும் . ஆக அவர் வால்மீகி தாசர் என்பது வெள்ளிடை மலை.
அப்படியானால் ராமாயணத்தில் வரும் அனுமன் தூது விடு தூதுதான் உலகின் முதல் தூதுக் கவிதையா? இல்லை .
ரிக் வேதத்தில் வரும் ‘நாய் விடு தூது’தான் உலகின் முதல் தூதுக் கவிதை.தூது என்பது ஸம்ஸ்க்ருதச் சொல். இதுபற்றி திருவள்ளுவரும் ஒரு அதிகாரம் எழுதியுள்ளார். தமிழ் மொழியில் நிறைய தூதுக் கவிதைகள் (Messenger Poems) உள்ளன; தமிழர்களுக்கும் முன்னதாக இந்தத்துறையில் காளிதாசன் எழுதிய நூல் மேக தூதம் என்ற பெயரில் உலகப் புகழ் பெற்றது; இலக்கிய உலகத்தில் அந்த நூல் பெரும் புரட்சியை உருவாக்கியது. அவரைத் தொடர்ந்து பலரும் இப்படி முழு நீள தூதுக் கவிதை நூல்களை எழுதத் துவங்கினர்.
***
மித்ரன்
சூரியனின் பெயர்; ஒளி , நேர்மறை சக்தி, பகல்பொழுது என்று பொருள் .
வேத மந்திரங்களில் பெரும்பாலும் மித்ரனையும் வருணனையும் சேர்த்தே சொல்லுவர். உலகம் என்பது நேர்மறை, எதிர்மறை சக்திகளையுடையது. பூமி என்னும் காந்த மண்டலத்திலும் வட துருவம், தென் துருவம் என்று இருக்கும். மின்சாரத்திலும் பாஸிட்டிவ், நெகடிவ் அம்சங்கள் உண்டு. அப்பொழுதுதான் அது பூர்த்தியாகும். வேதத்தில் வருணன் என்பது இருளையும், கரு நீலக் கடலையும், குளிர்ச்சியையும் குறிக்கும். வேத மந்திரங்கள் இதைத் தெளிவாகக் கூறும்.
மித்ரன் என்பது பல பொருள்களில் வழங்கப்பட்டாலும் சூரியன் என்பதே அதிகம் புழங்கும் அர்த்தம்.
சூர்ய நமஸ்கார மந்திரங்களில் முதல் மந்திரம் மித்ராய நம: என்பதாகும்.
அர்த்த நாரீஸ்வர உருவத்திலும் உமையை கருப்பாகவும் சிவனை சிவப்பாகவும் காட்டுவர். சங்கர நாராயண உருவத்திலும் சிவனை சிவப்பாகவும் விஷ்ணுவை கார்மேனி வண்ணனாகவும் காட்டுவர். இவை அனைத்திலும் உள்ள பொருள் ஒன்றுதான். ஆக்க சக்தி அழிவு சக்தி இரண்டும் நிறைந்ததே இயற்கை. சிவனின்றி சக்தி இல்லை; சக்தி இன்றி சிவனில்லை.என்ன அதிசயம் என்றால் கி.மு.1400 வாக்கில் கையெழுத்திடப்பட்ட துருக்கி-சிரியா (Mitanni Treaty) பகுதி ஒப்பந்தத்திலும் மித்ர-வருணர்கள் உள்ளனர். இதனால் வேதங்களை எவரும் கி.மு 1400-க்கும் முன்னர்தான் வைக்க முடியும். வியப்பான விஷயம் என்ன வென்றால் இன்றும் பிராமணர்கள் நாள்தோறும் செய்யும் சந்தியா வந்தனத்தில் இந்த தெய்வத்தை வழிபடுகின்றனர்.
பாரசீக நாட்டிலிருந்து இதை பெற்ற ரோமானியர்கள் இதை ஒரு ரகசிய தெய்வமாக குகைகளில் வைத்து தவறான லீலைகளில் ஈடுபட துவங்கினர் பின்னர் புதிய கதைகளையும் உருவாக்கினர் ஐரோப்பா முழுதும் புதுப்புது மித்ரன் கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டுவருகின்றன ரோம் நகரில் மட்டுமே 700 மித்ரன் கோவில்கள்! இருக்கின்றன .
TO BE CONTINUED……………………….
TAGS-மித்ரன், மேக தூதம், மிலேச்சர், மாதங்க, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 68; இந்து மத கலைச்சொல் அகராதி-68, மேனகா
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருமாலிருஞ்சோலை (அ) அழகர் கோவில்
திருமாலிருஞ்சோலை என்றால் பொதுமக்களுக்குத் தெரியாது ; இந்த இடத்தின் தற்போதைய பெயர் அழகர் கோவில் ; மலை அடிவாரத்தில் பெருமாள் கோயில்இருக்கிறது; மலையில் ஏறிச் சென்றால் அறுபடை வீடுகளில் ஒன்றான முருகப்பெருமானின் பழமுதிர்ச் சோலையைத் தரிசிக்கலாம் ; அதற்கும் மேலே மலையேறிச் சென்றால் நூபுர கங்கை என்னும் சின்ன அருவி; இதிலிருந்து ஒடிய சிலம்பாறு ஒருகாலத்தில் பெரிய நதியாக இருந்திருக்க வேண்டும் .
மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் அழகர் கோயில் உள்ளது; அங்கு அழகர் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள திருமால் கோயிலை திருமாலிருஞ்சோலை என்றும் மாவிருங்குன்றம் என்றும் சோலை மலை என்றும் வைணவர்கள் அழைத்தார்கள்; இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று.
கருவறையில் பெருமாள் ஸ்ரீபரமசுவாமி .
உற்சவ மூர்த்தி அழகர், அல்லது சுந்தரராஜப் பெருமாள்
பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்க மன்னர்கள் ஆகியோரின் திருப்பணிகளை இக்கோயில் கொண்டுள்ளது.
தாயார் : ஸ்ரீ சுந்தர வல்லி
மூலவர் : திரு மாலிரும் சோலை நம்பி
மண்டலம் : பாண்டியநாடு
கடவுளர்கள்: கள்ளழகர் கல்யாணசுந்தரவல்லி
***
சித்திரைத் திருவிழா
இந்த விழாவை தற்போதைய வடிவில் அமைத்த மன்னர் திருமலை நாயக்கர் ஆவார் .மீனாட்சி திருக்கல்யாணம் (திருமணம்) விழாவையும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வையும் ஒரே திருவிழாவாக இணைத்தார்..
1. மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் 💍
மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில்-ல்
மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரரின் திருமணம் மிக விமர்சையாக நடைபெறும்.
2. தேர் திருவிழா
பெரிய தேரில் தெய்வங்கள் நகரை சுற்றி வருவது பக்தர்களுக்கு மிகப் பெரிய ஆனந்தம்.
3. அழகர் வருகை :அழகர் கோவிலிலிருந்து
கள்ளழகர் மதுரைக்கு வந்து, வைகை நதியில் இறங்குவது இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சி ஆகும் ; வரும்போதும் அழகர் திரும்பிப்போகும் போதும் பல லட்சம் மக்கள் கூடிக் கொண்டாடுவர்; முக்கியமாக கள்ளர் மரபினர் பழங்கால வேடம் அணிந்து தண்ணீர் பைகளிலிருந்து தண்ணீரைப்பீச்சி அடித்த வண்ணம் வருவார்கள் ;அதைக் காணக் கண்கோடி வேண்டும்
அழகர் தனது சகோதரி மீனாட்சியின் திருமணத்திற்கு வருகிறார். ஆனால் அவர் தாமதமாக வந்து, திருமணம் முடிந்துவிட்டதை அறிந்து, கோபத்தில் வைகை ஆற்றில் இறங்குவதாக நம்பப்படுகிறது.
இது சைவம் மற்றும் வைணவம் ஆகிய இரு சமயங்களின் ஒற்றுமையை காட்டுகிறது
வைகை ஆற்றின் கரையோரமுள்ள நூற்றுக் கணக்கான மண்டகப்படிகளில் மக்களுக்கு இலவச உணவுப் பிராசதம் கிடைக்கும்.
***
கோயில் கலைச் சிறப்புகள் :
முழுமை அடையாத இராஜ கோபுரம்
மூலவரின் கருவறை மீது எழுப்பப்பட்டுள்ள சோமசந்த விமானம் வட்ட வடிவமானது.
ஆரியன் மண்டபத்தில் கொடுங்கைகள் மற்றும் இசைத் தூண்கள் உள்ளன. இசைத் தூணின் உச்சியிலுள்ள சிங்கத்தின் வாயில், சுழலும் நிலையில் ஆனால் வெளியே எடுக்க முடியாதபடி உள்ளது.
திருக்கல்யாண மண்டபத்தில் நரசிம்மர் அவதாரம், கிருஷ்ணன், கருடன், மன்மதன், ரதி, திரிவிக்கிரமன் அவதாரம், இலக்குமி வராகமூர்த்தி ஆகிய பெயர்களைக் கொண்ட கற்றூண்களில் உள்ள சிற்பங்கள் நாயக்கர் கால சிறந்த படைப்புகளாகும்.
வசந்த மண்டபத்தில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கும் அழகிய ஒவியங்கள் உள்ளன.
கோயிலின் காவல் தெய்வம் பதினெட்டாம்படிக் கருப்பசாமி சந்நிதியில் உள்ள கோபுரம் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது.
இராயகோபுரம் திருமலை மன்னரால் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறா நிலையில் உள்ளது.
கோவிலைச் சுற்றி உள்கோட்டை மற்றும் வெளிக்கோட்டை எனப்படும் இரணியன் கோட்டை , அழகாபுரிக் கோட்டை அமைந்துள்ளது.
***
மதுரையில் வியாழன் ஞாயிற்றுக் கிழமைகளில் பெரிய சந்தையொன்று, திலகர் திடலில் கூடும்; அப்போது நூற்றுக்கணக்கான மூலிகைகளும் கீரைவகைகளும் ஒரு பகுதியில் இருக்கும்; மாவடு விற்போர் அந்தந்த சீசனில் வருவார்கள்; இன்னுமொரு பக்கம் மாகாளிக்கிழங்கு குவிந்து கிடக்கும்; அத்தனையும் அழகர் மலையிலிருந்தது வந்தவை ; பிற்காலத்தில் ஆண்ட அரசியலவாதிகள் அந்த வாராந்திர மார்க்கெட்டை அடியோடு அழித்தார்கள். ஒரு காலத்தில் காடுகளும் ஆறுகளும் நிறைந்த இந்தப் பகுதி இப்போது நூற்றில் ஒரு சதவிகிதம் மிஞ்சி இருக்கிறது என்று சொல்லலாம்.
****
நாலாயிர திவ்ய பிரபந்தம்
முதல் ஆயிரம்—ஆண்டாள்–நாச்சியார் திருமொழி
586 சிந்துரச் செம்பொடிப் போல்
திருமாலிருஞ்சோலை எங்கும்
இந்திர கோபங்களே
எழுந்தும் பரந்திட்டனவால்
மந்தரம் நாட்டி அன்று
மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
சுந்தரத்தோளுடையான்
சுழலையினின்று உய்துங் கொலோ? (1)
587 போர்க்களிறு பொரும்
மாலிருஞ்சோலை அம் பூம்புறவில்
தார்க்கொடி முல்லைகளும்
தவள நகை காட்டுகின்ற
கார்க்கொள் பிடாக்கள் நின்று
கழறிச் சிரிக்கத் தரியேன்
ஆர்க்கு இடுகோ? தோழீ
அவன் தார் செய்த பூசலையே (2)
588 கருவிளை ஒண்மலர்காள்
காயா மலர்காள் திருமால்
உரு-ஒளி காட்டுகின்றீர்
எனக்கு உய் வழக்கு ஒன்று உரையீர்
திரு விளையாடு திண் தோள்
திருமாலிருஞ்சோலை நம்பி
வரிவளை இற் புகுந்து
வந்திபற்றும் வழக்கு உளதே? (3)
589 பைம்பொழில் வாழ் குயில்காள்
மயில்காள் ஒண் கருவிளைகாள்
வம்பக் களங்கனிகாள்
வண்ணப் பூவை நறுமலர்காள்
ஐம் பெரும் பாதகர்காள்
அணி மாலிருஞ்சோலை நின்ற
எம்பெருமானுடைய
நிறம் உங்களுக்கு என் செய்வதே? (4)
590 துங்க மலர்ப் பொழில் சூழ்
திருமாலிருஞ்சோலை நின்ற
செங்கண் கருமுகிலின்
திருவுருப் போல் மலர்மேல்
தொங்கிய வண்டினங்காள்
தொகு பூஞ்சுனைகாள் சுனையிற்
தங்கு செந்தாமரைகாள்
எனக்கு ஓர் சரண் சாற்றுமினே (5)
591 நாறு நறும் பொழில்
மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய்
வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த
அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான்
இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ? (6)
592 இன்று வந்து இத்தனையும்
அமுது செய்திடப் பெறில் நான்
ஒன்று நூறாயிரமாக்
கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன்
தென்றல் மணம் கமழும்
திருமாலிருஞ்சோலை தன்னுள்
நின்றபிரான் அடியேன்
மனத்தே வந்து நேர்படிலே (7)
593 காலை எழுந்திருந்து
கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லி
மருள் பாடுதல் மெய்ம்மைகொலோ?
சோலைமலைப் பெருமான்
துவாராபதி எம்பெருமான்
ஆலின் இலைப் பெருமான்
அவன் வார்த்தை உரைக்கின்றதே (8)
594 கோங்கு அலரும் பொழில்
மாலிருஞ்சோலையிற் கொன்றைகள்மேல்
தூங்கு பொன் மாலைகளோடு
உடனாய் நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திருமுகத்து
மடுத்து ஊதிய சங்கு ஒலியும்
சார்ங்க வில் நாண்-ஒலியும்
தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ? (9)
595 சந்தொடு காரகிலும்
சுமந்து தடங்கள் பொருது
வந்திழியும் சிலம்பாறு
உடை மாலிருஞ்சோலை நின்ற
சுந்தரனைச் சுரும்பு ஆர்
குழற் கோதை தொகுத்து உரைத்த
செந்தமிழ் பத்தும் வல்லார்
திருமாலடி சேர்வர்களே (10)
****
திருவாய்மொழி–பத்தாம் பத்து
மணத்தின் வாசியறிந்து, வேர் சூடுவார் மண்ணையும் சேர்த்துச் சூடுவர்.
அதுபோல் ஞானயிரின் ஞான பரிமளம் வீசும் தேகத்தை எம்பெருமான் விடுவதில்லை. பரம பக்தி சபலனான எம்பெருமான் ஆழ்வாரை இத்திருமேனியோடு பரமபதத்திற்கு அழைத்துச் செல்ல ஆசை கொண்டான்.
அந்த எம்பெருமானே திருமாலிருஞ்சோலை எம்பெருமான் என்று இப்பகுதி அறிவிக்கின்றது.
***
3733. செஞ்சொற் கவிகாள்!உயிர்காத்தாட்
செய்மின் திருமா லிருஞ்சேலை,
வஞ்சக் கள்வன் மாமாயன்
மாயக் கவியாய் வந்து,என்
நெஞ்சு முயிரு முள்கலந்து
நின்றார் அறியா வண்ணம்,என்
நெஞ்சு முயிரும் அவையுண்டு
தானே யாகி நிறைந்தானே.
திருமாலிருஞ்சோலையான் என் உயிரை உண்டுவிட்டான்
3734. தானே யாகி நிறைந்தெல்லா
உலகும் உயிரும் தானேயாய்,
தானே யானென் பானாகித்
தன்னைத் தானே துதித்து,எனக்குத்
தேனே பாலே கன்னலே
அமுதே திருமா லிருஞ்சோலை,
கோனே யாகி நின்றொழிந்தான்
என்னை முற்றும் உயிருண்டே..
ஆ!அம்மான் திருவருள் இருந்தவாறு என்னே!
3755. என்னை முற்றும் உயிருண்டென்
மாய ஆக்கை யிதனுள்புக்கு,
என்னை முற்றும் தானேயாய்
நின்ற மாய அம்மான்சேர்,
தென்னன் திருமா லிருஞ்சோலைத்
திசைகை கூப்பிச் சேர்ந்தயான்,
இன்னம் போவே னேகொலோ!
என்கொல் அம்மான் திருவருளே?
எம்பெருமான் என்னைக் கைவிடமாட்டான்
3736. நண்ணா அசுரர் நலிவெய்த
நல்ல அமரர் பொலிவெய்த,
எண்ணா தனகள் எண்ணும்நன்
முனிவ ரின்பம் தலைசிறப்ப,
பண்ணார் பாடல் இன்கவிகள்
யானாய்த் தன்னைத் தான்பாடி,
தென்னா வென்னும் என்னம்மான்
திருமா லிருஞ்சோ லையானே.
திருமால் என்னை ஆள்கின்றான்
3738. திருமா லிருஞ்சோ லையானே
ஆகிச் செழுமூ வுலகும்,தன்
ஒருமா வயிற்றி னள்ளேவைத்
தூழி யூழி தலையளிக்கும்,
திருமா லென்னை யாளுமால்
சிவனும் லெய்தி யடிபரவ
அருளை யீந்த அம்மானே.
எல்லா மூர்த்திகளின் மயக்கங்களையும் போக்குபவன் திருமால்
3739. ‘அருளை ஈயென் அம்மானே!’
என்னும் முக்கண் அம்மானம்,
தெருள்கொள் பிரமன் அம்மானும்
தேவர் கோனும் தேவரும்,
இருள்கள் கடியும் முனிவரும்
ஏத்தும் அம்மான் திருமலை,
மருள்கள் கடியும் மணிமலை
திருமா லிருஞ்சோ லைமலையே.
என்னை ஒரு நொடியும் பிரியாதவன் திருமால்
3740. திருமா லிருஞ்சோ லைமலையே
திருப்பாற் கடலே என்தலையே
திருமால் வைகுந் தமேதண்
திருவேங் கடமே எனதுடலே,
அருமா மாயத் தெனதுயிரே
மனமே வாக்கே கருமமே,
ஒருமா நொடியும் பிரியானென்
ஊழி முதல்வன் ஒருவனே.
மனமே!திருமாலை விடாமல் பிடி
3741. ஊழி முதல்வன் ஒருவனே
என்னும் ஒருவன் உலகெல்லாம்,
ஊழி தோறும் தன்னுள்ளே
படைத்துக் காத்துக் கெடுத்துழலும்.
ஆழி வண்ணன் என்னம்மான்
வாழி!மனமே கைவிடேல்
உடலும் உயிரும் மங்கவொட்டே
நானேயாகி என்னை அளித்தவன் திருமால்
3742. மங்க வொட்டுன் மாமாயை
திருமா லிருஞ்சோ லைமேய,
நங்கள் கோனே!யானே c
யாகி யென்னை யளித்தானே,
பொங்கைம் புலனும் பொறியைந்தும்
கருமேந் திரியும் ஐம்பூதம்,
இங்கிவ் வுயிரேய் பிரகிருதி
மானாங் கார மனங்களே.
3743. மானாங் கார மனங்கெட
ஐவர் வன்கை யர்மங்க,
தானாங் கார மாய்ப்புக்குத்
தானே தானே யானானை,
தேனாங் காரப பொழில்குருகூர்ச்
சடகோ பன்சொல் லாயிரத்துள்,
மானாங் காரத் திவைபத்தும்
திருமா லிருஞ்சோ லைமலைக்கே.
****
திவ்யதேச பாசுரங்கள்
71.
உன்னையும் ஒக்கலையிற் கொண்டு தம் இல் மருவி* உன்னொடு தங்கள் கருத்து ஆயின செய்து வரும்*
கன்னியரும் மகிழ கண்டவர் கண்குளிர* கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி*
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மைத்ரேயி
Maitreyī (मैत्रेयी).—வேதகாலப் பெண் அறிஞரான மைத்ரேயி, பிரம்மவாதினியாகத் திகழ்ந்து சிறந்த தத்துவ விவாதங்களில் ஈடுபட்டவர் . கார்க்கி, சுலபா, ஆகியோருடன் இணைந்து, வேத காலத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராகக் கல்வியிலும் அறிவிலும் சிறந்து விளங்கினர் என்பதை மைத்ரேயி உறுதிப்படுத்துகிறார். மைத்ரேயி–யாக்ஞவல்கியர் தத்துவ உரையாடல் பற்றிய தகவல் பிருஹதாரண்யக உபநிஷத்தில் உள்ளது.
பிரம்மரிஷியான யாக்ஞவல்கியருக்கு மைத்ரேயி மற்றும் காத்யாயனி என இரு மனைவியர் இருந்தனர். தத்துவ ஞானத்தை நாடிய மைத்ரேயி மற்றும் இல்லற வாழ்வில் நாட்டம் கொண்ட காத்யாயனி, யாக்ஞவல்கியரின் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றினர். எதனால் பிரம்மத்தை அறிந்த்து பேரின்பம் அடையலாம் என்ற விவாதத்தில் மைத்ரேயி தனக்கு சொத்து சுக்கங்கள் வேண்டாம் என்கிறார் ; காத்யாயபி இல்லற இன்பத்தில் நாட்டம் கொள்கிறார் ; இது 3000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெண்களின் வேதாந்த வேட்கையை அறிய உதவும் சம்பாஷணை ஆகும் .
***
மலையத்வஜ பாண்டியன் / மீனாக்ஷி
மஹாபாரதம், திருவிளையாடல் புராணம் ஆகியவற்றில் மலையைக் கொடியாகக்கொண்ட பாண்டிய மன்னன் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன ; சூர சேன மன்னனின் மகளான காஞ்சன மாலாவை மணந்துகொண்ட அவருக்கு குழந்தைகள் இல்லாததால் அஸ்வ மேத யாகம் செய்தார் ; யாகத்தீயில் மூன்று மார்பகங்களுடன் பெண் குழந்தை தோன்றியது ; தடாதகை என்று பெயர் சூட்டினார்கள்; அவளுக்குரிய ஆண்மகனைச் சந்திக்கும்போது மூன்றாவது முலை மறைந்துவிடும் என்ற அசரீரி கேட்டது ; அதுபோலவே எட்டுத் திக்குகளில் திக் விஜயம் மேற்கொண்ட அவர் சுந்தரேஸ்வரர் என்ற சிவபெருமானைக்கண்டவுடன் அந்த மார்பகம் மறைந்தது. நாணித் தலை குனிந்து அவருக்கு மாலையிட்டாள். இன்றும் மதுரை மீனாட்சி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவில் மீனாட்சியின் திக் விஜயம், கல்யாணம் ஆகியன நடைபெறுகின்றன; மீனாட்சி பற்றி பண்டேயா அரசி என்று 2300 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க தூதன் மெகஸ்தனிஸ் குறிப்பிட்டுள்ளார் . 1400 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரைக்கு வந்த திருஞான சம்பந்தர் அங்கயற் கண்ணி என்று மீனாட்சியின் பெயரைத் தமிழ் மொழியில் பாடிப் பரவியுள்ளார்
மகாபாரதப் போரில், பாண்டவர்களுக்கு ஆதரவாக கலந்துகொண்டு, போரிட்ட மலையத்வஜனை அஸ்வத்தாமன் கொன்றான்
****
மாளவிகாக்னிமித்ரம்
காளிதாசனின் மூன்று நாடகப் படைப்புகளில் மாளவிகாக்னிமித்ரம் முதலாவது நாடகம் என்று ஆராய்ச்சியார்கள் கருதுகிறார்கள்.
சம்ஸ்கிருத மொழியில் அந்தக் காலத்திலேயே 640 நாடகங்கள் இருப்பதை ஜவஹர்லால் நேரு பெருமையுடன் குறிப்பிட்டு எழுதியுள்ளார் அக்கினி மித்ரன் என்ற அரசனுக்கும் மாளவிகா என்ற பணிப்பெண்ணுக்கும் இடையேயான காதல் கதை இது . இதில் அக்கால ஓவியக் கலை, நாடகக் கலை பற்றிய அரிய செய்திகள் கிடைக்கின்றன முதல் மனைவியான தாரிணியின் பணிப்பெண்களின் ஓவியத்தைக் கண்டவுடன் காதல் மலர்கிறது ; இருவர் உதவியுடன் காதல் கைகூடும் தருணத்தில் மாளவிகாவும் ராஜ குமாரி என்ற சர்ப்ரைஸ் செய்தி கிடைக்கிறது; தாரிணியும் மனமுவந்து கல்யாணத்துக்குச் சம்மதிக்கிறாள்; இந்து ராஜாக்கள் ஒருவருக்கு மேல் இன்னும் பலரைக் கல்யாணம் கட்ட சாஸ்திரம் அனுமதிக்கிறது. ராம பிரான் ஒருவன் மட்டுமே ஏகபத்தினி விரதன் என்பதால் உலகமே அவனைப் பாராட்டுகிறது.
***
மனஸ்/ மனம்
சங்க காலம் முதல் திருக்குறள் காலம் வரை- இன்று வரை –தமிழ் மொழியில் பயன்படுத்தும் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லியிருந்தான் மைண்ட் MIND என்னும் ஆங்கிலச் சொல்லும் பிறந்தது; இதன் பொருள் – உள்ளம், எண்ணம், கிடக்கை , புத்திசாலித்தனம், புரிந்து கொள்ளும் உணர்வு, விருப்பம் என்பன ஆகும் ; மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது தமிழ்ப் பழ மொழி . மனம் ஒரு குரங்கு என்று பல அடியார்களும் பாரதியாரும் பாடியுள்ளனர்.
***
மண்டிலம்/ மண்டலம்
Maṇḍala (मण्डल).— வட்டமான , அல்லது ஒரு எல்லைக்குட்பட்ட பகுதி ; கண்ணாடி. ரிக் வேதத்தில் பத்து மண்டலங்கள் (பிரிவுகள் ) உள்ளன . காலக்கணக்கீட்டில் 41 நாட்கள் ; சபரி மலை ஐயப்ப பக்தர்கள், ஆந்திரத்தில் விஜயவாடா கனக துர்க்கை அம்மன் கோவில் தீட்சை விரதம் இருப்போர் 40, 41, 44 நாட்கள் என்ற பல கால எண்ணிக்கையை மண்டலம் என்பார்கள்.
தமிழ் நாட்டினை ஆண்ட சோழர்கள் தமிழர்கள் அல்ல ; புறநானூறும் சிலப்பதிகாரமும் வடமேற்கு இந்தியாவை அந்த சிபிச் சக்ரவர்த்தியைத் தங்களுடைய முன்னோர்கள் என்று பெருமையுடன் செப்புகின்றன ; அந்த வழியில் வந்த மாந்தாதா , முசுகுந்தன் ஆகியோரையும் கல்வெட்டுகளும் சாசனங்களும் கம்பராமாயணமும் சூரிய குல ராஜாக்களாகப் போற்றுகின்றன ; மாந்தாதா , ஒரு ஆணுக்குப் பிறந்தவன் என்ற சுவையான கதை மகாபாரதத்தில் உள்ளது ; ஆணுக்கு குழந்தை பிறந்த செய்தி அபூர்வமாக மேலை நாடுகளிலும் நடந்துள்ளது.
யுவனாஸ்வன் மகனான மாந்தாதா தேவர்களையும், அசுரர்களையும், மனிதர்களையும் வீழ்த்தியவனாவான். தேவர்களான அசுவினி இரட்டையர்கள், அவனை {மாந்தாதாவை} அவனது தந்தையின் {யுவனாஸ்வனின்} கர்ப்பப்பையில் இருந்து அறுவைச் சிகிச்சையின் மூலம் வெளியே எடுத்தனர். (மாந்தாதாவைக் குறித்து வனபர்வம் பகுதி 126ல் குறிப்பிடப்பட்டுள்ளது).
ஒரு சமயம் மன்னன் யுவனாஸ்வன், காட்டில் மானைத் துரத்திச் சென்ற போது, மிகவும் தாகமடைந்தான், ஒரு வேள்விசாலையை அடைந்து, அங்கே சிதறிக் கிடந்த புனிதமான வேள்வி நெய்யைக் குடித்தான் ;இதனால் அந்த மன்னன் கருவுற்றான்.
தேவர்கள், தங்களுக்குள் ஒருவருக்கொருவர், “இந்தக் குழந்தை எதனால் உயிர் வாழும்?” என்று வினவினர். அப்போது இந்திரன், “குழந்தை என் விரல்களைச் சப்பட்டும் ” என்றான். இதனால் மாந்த்தாதா என்ற பெயர் ஏற்பட்டது இவன் ராம பிரான், சோழர்கள் ஆகியோர் தோன்றிய சூரியகுல மன்னன் ஆவான் ; முசுகுந்தன் கதை பாகவதத்தில் உள்ளது.
***
மங்கலதேவி/ கண்ணகி
வரலாற்றுச் சிறப்புமிக்க மங்களதேவி/ கண்ணகி கோயில் தமிழக-கேரள எல்லையில் உள்ள வண்ணாத்தி பாறையில் அமைந்துள்ளது.
கர்நாடக மாநில மங்களூரிலும் , கேரளத்திலும் மங்கலதேவி கோவில்கள் உள்ளன . இவற்றில் கேரளத்திலுள்ள கோவில் பத்தினித் தெய்வமான, சிலப்பதிகார கண்ணகிக்கு எழுப்பப்பட்ட கோவில் என்று மக்கள் நம்புகின்றனர் ; கண்ணகியின் கணவனான கோவலனைப் பாண்டிய மன்னன் தவறுதலாகக் கொல்ல உத்தரவிட்டதால், வெகுண்ட கண்ணகி மதுரையின் ஒரு பகுதியை எரித்துவிட்டு, கேரளத்துக்கு வந்து புஷ்பக வியமானத்தில், கோவல னுடன் சொர்க்க லோகம் சென்றதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. தமிழக – கேரளா எல்லையில் உள்ள இடுக்கியில் 5000 அடி உள்ள மலை பகுதியில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கோவில் (சித்ரா பௌர்ணமி) திறக்கப்படும் .
***
மங்கள சூத்ரம்
இது ஹிந்துப் பெண்கள் திருமணத்தின் போது அணியும் மஞ்ச்சள் குங்கும தடவிய புனிதமான கயிறு ஆகும் ; தாலி என்ற சொல்லும் இதைக் குறிக்கும். சேயிழை , அணியிழை என்ற பெயர்களில் சங்கத் தமிழ் நூல்கள் இதைப் போற்றுகின்றன ; கணவன் உயிருடன் இருக்கும்வரை இதைப் பெண்கள் அணிவார்கள்
***
மாங்கல்யதாரணம்
தாலி என்னும் மங்கல சூத்ரத்தை அணியும் கல்யாண நிகழ்ச்சிக்கு மாங்கல்ய தாரணம் — மாங்கல்யத்தைத் தரித்தல்/ அணிதல் – என்று பெயர் .
***
மணிபல்லவம்
மணிபல்லவம் என்பது ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை காப்பியத்தில் குறிப்பிடப்படும் ஒரு புராணத் தீவு ஆகும்.இலங்கையில் யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள நயினாத் தீவுதான் மணிபல்லவம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மணிமேகலா தெய்வம், மணிமேகலையை பூம்புகாரிலிருந்து இந்தத் தீவிற்கு அழைத்துச் சென்றது. புத்தரின் பாதச்சுவடுகள் பொறிக்கப்பட்ட அற்புதம் வாய்ந்த தர்மபீடிகை இங்கு உள்ளது. இதன் மீதுள்ள மலர்களைத் தொழுதால் முற்பிறவி நினைவுகள் தோன்றும் ; மக்களின் பசியைப் போக்கும் ‘அமுதசுரபி’ என்ற அட்சய பாத்திரம் இந்தத் தீவில் உள்ள கோமுகி என்னும் பொய்கையிலிருந்து தோன்றியது என்று மணிமேகலை குறிப்பிடும்.
மேலும், இது பிரபல எழுத்தாளர் தீபம் நா. பார்த்தசாரதி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலின் பெயரும் ஆகும்.மணிபல்லவம் நாவல் – காவிரிப்பூம்பட்டினம், இலங்கை மற்றும் சோழ நாட்டுப் பின்னணியில் எழுதப்பட்ட வரலாற்று நாவல் ஆகும்.
***
மனிஷா பஞ்சகம்
மனீஷா பஞ்சகம் என்பது ஆதிசங்கரரால் அருளப்பட்ட ஐந்து ஸ்லோகங்களைக் கொண்ட ஒரு புகழ்பெற்ற தத்துவ நூலாகும். “மனீஷா” என்றால் உறுதியான ஞானம் அல்லது தெளிந்த அறிவு என்று பொருள். அனைத்து உயிர்களிலும் இறைவன் சமமாக இருக்கிறான் என்ற அத்வைத தத்துவத்தை இது விளக்குகிறது.தோன்றிய வரலாறு:ஆதிசங்கரர் காசியில் கங்கையில் நீராடிவிட்டுத் திரும்பும்போது, எதிரே நாய்களுடன் ஒரு சண்டாளர் (புலையன்) வந்தார். சங்கரரின் சீடர்கள் அவரை விலகிச் செல்லுமாறு கூறினர். அதற்கு அந்தச் சண்டாளர், “இந்த உடலை விலகிப் போகச் சொல்கிறீர்களா அல்லது உடலுக்குள் இருக்கும் ஆன்மாவை விலகிப் போகச் சொல்கிறீர்களா? உடலால் அனைவரும் சமம் தானே?” என்று ஒரு தத்துவக் கேள்வியைக் கேட்டார்.அவருடைய கேள்வியின் ஆழத்தைப் புரிந்துகொண்ட ஆதிசங்கரர், சாதி, மத பேதங்களைக் கடந்து, அனைத்து உயிர்களிலும் பரம்பொருள் நிறைந்திருக்கிறது என்ற உண்மையை உணர்ந்தார். அந்த ஞானத்தை வெளிப்படுத்தும் விதமாக ஐந்து ஸ்லோகங்களை இயற்றினார்.பிரம்மத்தை (இறைவனை) உணர்ந்த ஞானி, அவன் எந்த சாதியாக இருந்தாலும், அவனே தனக்கு குரு என்று ஆதிசங்கரர் இந்த நூலில் கூறுகிறார்.பிரம்மமே உண்மை: இந்த உலகம் மாயையானது, எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கும் சைதன்யம் (உயிர்) ஒன்றே என்பதை இந்த ஸ்லோகங்கள் வலியுறுத்துகின்றன.ஒவ்வொரு ஸ்லோகத்தின் முடிவிலும், “இதுவே எனது உறுதியான அறிவு” (மனீஷா மம) என்று ஆதிசங்கரர் பாடியுள்ளார்.இந்த நூலின் மூல ஸ்லோகங்கள் மற்றும் விளக்கங்களைப் படிக்க, Vaidika Vignanam வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.
புலையனாக வந்தது வேத வியாசர் என்றும் அவருடன் வந்த நான்கு நாய்கள் நான்கு வேதங்கள் என்றும் உரைகாரர்கள் விளம்புவர்.
***
மன்மதன் / மதன/ மாரன்/காம தேவன்
காதல் தெய்வத்தின் பெயர் ; மனைவி ரதி தேவி; அவருடைய கொடி- மகரக் கொடி; அதாவது முதலை என்றும் சுறாமீன் என்றும் சொல்வர். சங்கத் தமிழ் இலக்கியத்தில் மன்மதனைப் பற்றிய குறிப்புகள் உள. தாரகாசுரனை அழிக்க கார்த்திகேயன் என்னும் முருகன் பிறக்க வேண்டும் என்றும் அதற்கு சிவனும் பார்வதியும் முனைய வேண்டும் என்றும் தேவர்கள் திட்டமிட்டனர் . மன்மதனை அனுப்பி ஐந்து மலர்க்கணைகளை எய்தி காம உணர்வு எழுப்புவதற்கு சிவ பெருமானிடம் அனுப்பினார்கள் சிவன் நெற்றிக் கண்ணைத் திறக்கவே காம தேவன் சாம்பலானான் ; ரதி அழுது புலம்பவே அவன் அனங்கனாக (உடல் அற்ற / உருவம் இல்லாத) மனித உலகில் சஞ்சரிப்பான் என்று வரம் அளித்தார் ; இன்றும் எல்லோருக்கும் காம உணர்வினை ஏற்படுத்துபவன் அவன்தான்.
****
மந்திரம்
மனதில் தியானித்தால் அவர்களைக் காப்பாற்றும் கருவி என்பது சொல்லின் பொருள்
Manas: Meaning “mind” Trai or Tra: Meaning “tool,” “instrument,” or “protection
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். (குறள் 28
பொருள்: நிறைவான சொல் ஆற்றல்கொண்ட சான்றோர்களின் –அதாவது ரிஷி முனிவர்களின்— பெருமையை, இந்த உலகத்தில் அவர்கள் அருளிய மந்திரச் சொற்களே (மறைமொழி) எடுத்துக் காட்டிவிடும். இது தொல்காப்பியத்திலும் இருக்கிறது .
நான்கு வேதங்களிலும் உள்ள காயத்ரீ மந்திரமும் ஓம் என்னும் பிரணவமும் எல்லோருக்கும் பொதுவானது .
அகராதியில் மந்திரம் (Mantra) கடவுளை வழிபடவோ அல்லது தியானிக்கவோ திரும்பத் திரும்ப உச்சரிக்கப்படும் புனிதமான சொல், வாக்கியம் அல்லது ஓசை (எ.கா: ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய .
ஏனைய பொருள்- மந்திராலோசனை : இரகசிய விவாதம் (Counsel): அரசர்கள் அல்லது தலைவர்கள் கூடிப் பேசும் இரகசிய ஆலோசனை அல்லது அமைச்சரவை சபை.
(Slogan): ஒரு நபர் அல்லது குழு தங்களின் அடிப்படை நம்பிக்கையாக அல்லது குறிக்கோளாகக் கொண்டு அடிக்கடி உச்சரிக்கும் வாசகம் (எ.கா: “வாடிக்கையாளரே தெய்வம்”).
மறைபொருள் / சூனியம் (Magic/Spell): ஆன்மீக அல்லது மாந்திரீக சக்திகளைக் கொண்டதாக நம்பப்படும் மந்திரச் சொற்கள்
மந்திரம் என்பது சில குறிப்பிட்ட ஒலிகள், வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களை மீண்டும் மீண்டும் உச்சரிப்பதன் மூலம் மனதை ஒருமுகப்படுத்தி, நேர்மறை ஆற்றலையும் அமைதியையும் பெற உதவும் ஒரு ஆன்மீகச் சொல்லாகும். மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பிரபலமான சில மந்திரங்கள்:ஓம் (பிரணவ மந்திரம்): இதுவே பிரபஞ்சத்தின் ஆதி ஒலி. மன அமைதிக்கு இது மிகச் சிறந்ததாகும்.ஓம் நம சிவாய: இது அறியாமையை அகற்றி ஞானத்தையும், முக்தியையும் தரக்கூடிய பஞ்சாட்சர மந்திரமாகும்.ஓம் சரவணபவ: முருகப் பெருமானின் அருள் பெறவும், தடைகள் நீங்கவும் உச்சரிக்கப்படும் ஆற்றல் மிக்க மந்திரம்.
வைணவர்களின் முக்கிய மந்திரம்– ஓம் நமோ நாராயணாய .
****
மனு / மன்வந்தரம்
மனித குலத்தைத் தோற்றுவித்தவர் மனு; ஒவ்வொரு மன்வந்தரத்திலும் ஒரு மனு வருவார் ; இப்போது நாம் வைவஸ்வத மனுவின் ஆட்சியில் உள்ளோம்; பிராமணர்களும் ,புரோகிதர்களும் பூஜைக்கு முன்னர் இதைச் சொல்லி பூஜை அல்லது சடங்குங்களைத் துவங்குவர் ; மன்வந்தரம் என்பது குறிப்பிட்ட மனுவின் ஆட்சிக்காலம்.
மன்வந்தரம்
இந்து சமய காலக் கணக்கீட்டின்படி, மனிதகுலத்தின் மூதாதையான ஒரு மனுவின் (Manu) ஆட்சிக்காலம் மன்வந்தரம் (Manvantara) எனப்படுகிறது. ஒவ்வொரு மன்வந்தரமும் ஒரு குறிப்பிட்ட மனு, சப்தரிஷிகள், மற்றும் இந்திரன் ஆகியோரின் கீழ் இயங்குகிறது.: ஒரு கல்பத்திற்கு 14 மன்வந்தரங்கள் உள்ளன.தற்போதைய காலம்: நாம் தற்போது 7-வது மன்வந்தரமான ‘வைவஸ்வத மன்வந்தரத்தில்’ வாழ்ந்து வருகிறோம்..
கால அளவு: ஒரு மன்வந்தரம் என்பது 71 சதுர யுகங்களைக் கொண்டது. அதாவது பிரம்மாவின் ஒரு நாள் .
14 மனுக்கள் பெயர்கள்
சுவாயம்புவ மனு,
சுவாரோசிஷ மனு,
உத்தம மனு,
தாமச மனு,
ரைவத மனு,
சாக்ஷுஷ மனு,
வைவஸ்வத மனு (நாம் தற்போது இருக்கும் காலம்),
சாவர்ணி மனு,
தக்ஷ சாவர்ணி மனு,
பிரம்ம சாவர்ணி மனு,
தர்ம சாவர்ணி மனு,
ருத்ர சாவர்ணி மனு,
தேவ சாவர்ணி மனு (அ) ரௌச்ய மனு,
இந்திர சாவர்ணி மனு
***
மனு ஸ்ம்ருதி
முரண்பட்ட பல ஓலைச் சுவடிகளை ஆராய்ந்து வெள்ளைக்காரர்கள் கொடுத்த கல்கத்தா சுவடியின் பதிப்புதான் தமிழிலும் ஆங்கிலயத்திலும் இப்போதுள்ளது; இதில் சூத்திரர்களுக்கு எதிரான 40 ஸ்லோகங்கள் சுங்க வம்ச காலத்தில் சேர்க்கப்பட்டவை; அதை வெள்ளைக்கார்கள் அப்படியே வைத்துக்கொண்டனர் ; ஆகையால் இப்போதைய பதிப்பு ஒருதலைச் சார்பானது ; நமபத்தக்கதல்ல.
மனு பற்றிய குறிப்புகள் ரிக் வேதத்திலேயே வருவதாலும்,மனு சரஸ்வதி நதி தீரம் பற்றிப் பேசுவதாலும், சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் பற்றி எதுவும் பேசாததாலும் அவர் ஹமுராபி (Hamurabi, 1810 BCE) போன்றோருக்கு முந்தியவர் என்பதில் ஐயமில்லை. ஆனால் காலப்போக்கில் அதில் புதுச் சரக்கு சேர்ந்தது என்பதில் ஐயமில்லை. மனு நீதி நூலை முழுதுமாகப் படிப்போருக்கு முரண்பட்ட சில விஷயங்கள் வருவதைக் காணலாம்.. காந்தி போன்றோர் இதிலுள்ள முரண்பட்ட விஷயங்களை ஒதுக்கினால் இது மிகப்பெரிய படைப்பு என்று சொல்லி ஏற்றுக்கொண்டனர்.
மனு நீதி நூலில் உள்ள மொத்த சம்ஸ்கிருத ஸ்லோகங்களின் எண்ணிக்கை–2647
மொத்தமுள்ள அத்தியாயயங்கள்- 12
வெளிநாட்டினர் கருத்துப் படி இதன் காலம் – கி.மு இரண்டாம் நூற்றாண்டு; என்னுடைய கணிப்பு; கி.மு 2000க்கு முந்தியது.
முதல் அத்தியாயத்தில் வரும் விஷயங்கள்
மனுவின் சிறப்பு
வேதத்தின் சிறப்பு
பிரளயம்
பிரபஞ்சத்தின் தோற்றம்- படைப்பு
நாராயண சப்,தத்தின் பொருள்
பிரம்மனின் தோற்றம்
மஹத் தத்துவம் முதலான சிருஷ்டி
தேவர் முதலானோரின் தோற்றம்
பிராணிகளின் தொழில்
விராட புருஷனின் தோற்றம்
மநுப் பிரஜாபதியின் தோற்றம்
மரீசி முதலானோரின் தோற்றம்
சராசரங்க ளின் உற்பத்திக் கிரமம்
தினப் பிரளயம்
மஹாப் பிரளயம்
இந்த நூல் தோன்றிய வரலாறு
காலக் கணக்கு
யுகக் கணக்கு
மன்வந்தரக் கணக்கு
யுக தருமம்
வர்ண தர்மம்
பிராமணன் சிறப்பு
பெண்கள் பற்றி மனு எச்சரிக்கை
உலகின் முதல் விரிவான சட்டப் புத்தகத்தை எழுதிய மனு, பெண்களை மதிக்காதவர்கள் அடியோடு அழிந்து போவார்கள் என்று எச்சரிக்கிறார். பெண் பாவம் பொல்லாதது, பெண்களை அவமதிப்பது கடவுளுக்கும் பிடிக்காது என்று எச்சரிக்கிறார்.
‘’யார் நலம் பெற விரும்புகின்றனரோ, அவர்கள் எல்லாம் பெண்களை ஆராதிக்கவேண்டும். தந்தையர், சகோதரர், கணவன், மைத்துனர் ஆகியோர் பெண்களை மரியாதையாக நடத்த வேண்டும்’’. (மனு3-.55)
‘’எங்கே பெண்கள் மதிக்கப் படுகிறார்களோ அங்கே கடவுள் ஆனந்தம் அடைகிறார். எங்கே பெண்கள் மதிக்கப் படுவது இல்லையோ, அங்கே செய்யப்படும் புனிதச் சடங்குகள் பலன் இல்லாமல் போகும்’’. (மனு.3-56)
‘’உறவுக்கார பெண்கள் எங்கே கண்ணீர் வடிக்கின்றனரோ அங்கே அந்தக் குடும்பம் அடியோடு நாசமாகும். எங்கே பெண்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அந்தக் குடும்பம் செழித்துத் தழைத்து ஓங்கி வளரும்’’(மனு.3-57
‘’எந்த வீடுகளில் பெண்கள் சரியாக நடத்தப் படவில்லையோ அந்த இடங்களில் பெண்களின் சாபம், மந்திர மாயா ஜாலத்தில் பொருள்கள் மறைவதைப் போல வீடுகளை முற்றிலும் அழித்துவிடும்’’(மனு.3-58)
‘’ஆகையால் யாரெல்லாம் நலம் பெறவும் வளம் அடையவும் விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாம் பெண்களை விழாக் காலங்களிலும், விடுமுறைக் காலங்களிலும் ஆராதிக்க வேண்டும். எப்படி? துணிமணிகள், நகைகள்,அறுசுவை உணவு படைத்துப் போற்றவேண்டும்’’(மனு.3-59)
மனுவை விட வேறு யார் பெண்களுக்கு இவ்வளவு ஆதரவு தர முடியும்? இருக்கிறார், ஒரு ஆசாமி, அவர் பெயர் வள்ளுவர். அவர் நம்மை மாயாஜால (சிலர் மூட நம்பிக்கை) உலகுக்கே அழைத்துச் செல்லுகிறார். பத்தினிப் பெண்கள் மழையைப் பெய் என்றால் பெய்யுமாம் (குறள் 55).
சதி அநசுயா, சத்தியவான் சாவித்திரி, சீதா தேவி கதைகளைப் படிப்பவர்கள் வள்ளுவனை நம்பியே ஆகவேண்டும். ‘’கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா’’? என்று முனிவர்களையே எள்ளி நகையாடும் புள்ளி மான்கள் உலவிய நாடல்லவா இது!
To be continued……………………………….
Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 64; இந்து மத கலைச்சொல் அகராதி-64, மைத்ரேயி , மனு, மனு ஸ்ம்ரிதி, மங்கலதேவி, கண்ணகி, பெண்கள் பற்றி மனு, தாலி, மன்மதன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
4-5-2026 கல்கி ஆன்லைன்இதழில் வெளியான கட்டுரை!
மரணத்தைக்கண்டுஅஞ்சாதே –
புருஷனும்புருஷோத்தமனும் – ஶ்ரீசத்யசாயிபாபா
அருளுரை!
ச. நாகராஜன்
22-10-1963 அன்று பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா பிரசாந்தி நிலையத்தில் ஆற்றிய அருளுரை!
வயதான ஒரு மனிதன் மரணப்படுக்கையில் இருந்தான். அவன் கன்னட
தேசத்தைச் சேர்ந்தவன் என்று நினைக்கிறேன். கடைசி தருணம் வந்த போது
அவனால் ஏதோ வார்த்தைகளை உளறத்தான் முடிந்தது. அவனது மகன்களால்
அதை அறிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் உடனே ஒரு டாக்டரை
அழைத்து கொஞ்சம் ஆக்ஸிஜனைக் கொடுத்து அவர் பேசுவது என்ன என்பதைப்
புரிந்து கொள்ள வையுங்கள் என்று வேண்டினர். தான் சம்பாதித்த பணைத்தை
எங்கே வைத்திருக்கிறேன் என்பதை அவன் சொல்ல முயல்வதாக அவனது
பிள்ளைகள் அனுமானித்தனர். ஆகவே அவனது வார்த்தைகளைத் தெளிவாக
அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அவர்களால் ஒரே ஒரு
எழுத்தை மட்டும் தான் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த எழுத்து ‘க’. ‘க’ என்றால் என்ன?
‘க’ என்றால் கனகாவா? அதாவது தங்கமா? அல்லது ‘கரு’வா? அதாவது
கன்றுக்குட்டியா? அல்லது ‘க’ என்பது கஞ்சாவா? அல்லது கஸப்ரிகாவா அதாவது விளக்குமாறா?
விளக்குமாறை அவர்கள் கொண்டு வந்து காண்பித்தபோது அவன் தலையை
அசைத்தான். இறந்தும் போனான். அவன் விளக்குமாறாகவே பிறப்பு எடுக்க
நேர்ந்தது!
அவனைப் போல் நீங்கள் இறக்கக் கூடாது. நீங்கள் பீஷ்மரைப் போல மரணம் அடைய வேண்டும். சாந்திபர்வத்தை அவர் பாண்டவர்களுக்கு உபதேசிக்கும் போது அவர் அம்புப்படுக்கையில் படுத்திருந்தார். கிருஷ்ணர் முன்னால் இருக்க அவர் மரணம் அடைந்தார். கிருஷ்ணரின் இதயத்தில் புகுந்தார். மரணம் என்பது
பயப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. நல்ல சந்தோஷமான தருணங்களில் பேசக் கூடாத விஷயமாகக் கருதப்படுகிறது. ஆனால் மரணம் என்பது நல்லதோ
அல்லது கெட்டதோ இல்லை. உங்களுக்கு அதைப் பற்றிய விருப்பத் தேர்வே
கிடையாது. நீங்கள் அதை வரவேற்றால் அதைச் சீக்கிரம் பெற முடியாது. அதைக் கெட்டது என்று நினைத்துத் திட்டினால் அதைத் தவிர்க்கவும் முடியாது.
அது பிறந்து விட்ட தருணத்திலேயே தவிர்க்கமுடியாததாக ஆகி விட்ட ஒன்று.
பிறந்த தருணத்திலேயே சுடுகாட்டை நோக்கிய பயணமானது ஆரம்பித்து
விட்டது. சிலர் அதை சீக்கிரம் அடைகின்றனர். சிலர் சுற்றுப்பாதை வழியாகச்
சென்று சற்று தாமதமாக அடைகின்றனர். மனிதனுக்கு மனிதன் இது ஒன்று தான் வித்தியாசம். ஆனால் மனிதனோ மரணம் என்பது தூரத்தில் இருக்கும் ஒரு துயரம் என்று நினைத்து நடக்கிறான்.
அண்டைஅயலாரில் ஒருவரின் குழந்தை இறக்கும் போது அவரிடம் சென்று அது ஒரு கனவு என்றும், குழந்தைகள் பிறப்பதும் இறப்பதும் அவர்கள் நமது கொடுப்பினை என்றும் பழைய ஜென்ம கடன்களை உணரும் தருணம் அது என்றும் கூறித் தேற்றுகிறோம். ஆனால் நீங்கள் உங்கள் குழந்தையை இழந்து
தவிக்கும் போது இதே வாதங்களால் உங்களைத் தேற்றிக் கொள்ள
முடியவில்லை. இந்த ஆறுதல் மொழிகள் எல்லாம் மற்றவருக்கு மட்டுமே தான்!
அர்ஜுனன் கிருஷ்ணரை புருஷோத்தமா என்று அழைத்தான். ஏனென்றால் அவரே புருஷர்களில் உயர்ந்த புருஷராவார். புருஷா என்றால் உடல் என்ற – புரா- என்ற நகரிலே – உள்ளவன் என்று அர்த்தம். ஒவ்வொரு உடலிலும் புருஷன்
இருக்கிறான்.
பிரபஞ்சம் அனைத்துமே புருஷோத்தமனைத் தன்னுள் கொண்டிருக்கிறது.
ஆகவே இறப்பது எது என்றால் உடல் மட்டுமே தான்! அதன் உள்ளே இருக்கும் புருஷன் அல்ல. புருஷன் உங்களின் உள்ளே இருக்கிறான் என்ற நம்பிக்கை உங்கள் தீய எண்ணங்களையும்,தீய நாட்டங்களையும் புலன்களையும்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
எனது பிளாக்குகளில் இலவசமாகப் படிக்கலாம்
முதலில் தலைப்புகளை மட்டும் படியுங்கள் ; எவ்வளவு சுவையானவையென்பது புரியும் ; 1300௦++ திருப்புகழ் பாடல்களை படித்து எடுத்த குறிப்புகள் இவை ; கட்டுரைகளை எழுதப் பிடித்த நாட்கள் 81; கட்டுரைகளை எழுதப் பிடித்த நேரம் 81X3 மணி நேரம்!
***
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும் பொருள் வளமும்- Part 1 (Post.15,362) 26/1
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 2 (27/1)
திருமாலுக்கு சிவன் கொடுத்த சக்ராயுதம்! அருணகிரி சொல்லும் அதிசயச் செய்திகள்! 28/1
நக்கீரர் கதை: அருணகிரிநாதர் சொல்லும் அரிய தகவல்கள் (Post.15,371) 29/1
அருணகிரிநாதர் கண்டுபிடித்த அணு விஞ்ஞானம் ! (Post No.15,375)30/1
ராவணன் ஒரு முட்டாள்! திருப்புகழில் அரிய செய்திகள்- Part 6 (31-1-26)
அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் – Part 7 (Post.15,382)1/2/2026
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் -Part 8 (Post No.15,385)
நோய்கள், காசு பறிக்கும் டாக்டர்கள் பற்றி அருணகிரிநாதர்!-9 (Post.15,388)
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள்- Part 10 (Post.15,393)
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் – Part 11 (Post.15,396)
அருணகிரி நாதர் பாடலில் முஸ்லீம் ஸலாமும் ஆதி சங்கரரின் அத்வைதமும்!-Part 12 (Post.15,398)
கனவுகள், எட்டுவகைப் பறவைகள், முருகன் கொடிகள் பற்றி முக்கிய செய்திகள்-13 (Post.15,401)
மூளையின் கலர் என்ன? செட்டியார் வடிவில் முருகன்!- Part 14 (Post.15,404)
திருப்புகழில் பங்களாதேஷ் கோவில்; காகத்துக்கு ஏன் ஒரு கண்? Part-15 (Post.15,407)
திருப்புகழில் வாளை மீன் ! யாதவர்கள் அழிந்த கதை – Part 16 (Post.15,410)
முருகனைப் பழித்தவர்கள் அழிவார்கள் ! திருத்தணி என்ற பெயர் எப்படி வந்தது ?- 17 (Post.15,413)
அளவிட முடியாதவை எவை? அருணகிரி தரும் பட்டியல்! – Part 18 (Post No.15,416)
திருப்புகழில் புஸ்தகப் பித்தர்கள் மீது தாக்குதல்! எட்டு அபூர்வ சக்திகளை அடைய உதவும் துதி!—Part 19 (Post.15,419)
பறவை ஞானிகள் ‘பரமஹம்சர்’ பற்றி அருணகிரிநாதர் (Post.15,423)
சரஸ்வதியின் சகோதரன் முருகன்! திருப்புகழில் மேலும் ஒரு புதிர்!- Part 21(Post No.15,425)
திருப்புகழில் திருமால் அவதாரங்கள்! விஷ்ணுவை விநாயகர் அடக்கிய கதை! -22 (Post No.15,428)
முருகனின் யானை வாகனம்- திருமால்! திருப்புகழில் பஞ்ச பாண்டவர்கள்!- Part 23 (Post No.15,430)
அருணகிரி நாதர் சொன்ன நான்கு கதைகள்! ஐந்து கோசம்!காந்த ஊசி!– 24 (Post No.15,433)
முருகன் ஒரு மாலுமி! அவன் ஓட்டும் கப்பல் பற்றி அருணகிரிநாதர்!-Part 25 (Post.15,436)
திருமாலை முருகன் அடக்கிய கதை! வேதத்தின் ஆறங்கம்! மதுரையின் பெருமை-Part 26(Post.15,438)
20 ரி ரி ரி ரி ரி தேவியர் நாமங்கள்; திருப்புகழில் சொல் அழகும் பொருள் அழகும்! -27 (Post No.15,442)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திவ்யதேசம் திருச்சேறை / பஞ்சஸார க்ஷேத்திரம்
மூலவர்- ஸாரநாதன்
உத்ஸவர் – மாமதலைப்பிரான்
தாயார் – ஸாரநாயகி /ஸார நாச்சியார் / பஞ்ச லக்ஷ்மி
திருக்கோலம்- நின்ற
திசை – கிழக்கு
பாசுரங்கள் — 12
மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 12
சாரநாதன் என்ற எம்பெருமான், சாரநாச்சியார் என்ற தாயார், சார புஷ்க்ரணி, சாரவிமானம் மற்றும் சார க்ஷேத்திரம் என்ற ஐந்தும் சேர்ந்து பஞ்ச சார க்ஷேத்திரம் என்று ஆயிற்று.
ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, மஹாலக்ஷ்மி, சார நாச்சியார் என்று ஐந்து தேவிகளுடன் எம்பெருமான் காட்சி அளிக்கிறார். இங்குள்ள மூலவர் தனது வலது கையில் பத்மம் வைத்துள்ள காட்சி பரமபதம் எனப்படும் வைகுண்டத்தில் எம்பெருமான் தனது வலதுகரத்தில் பத்மம் வைத்துள்ளதற்கு ஓப்பானதாகும்.
எம்பெருமான் காவிரி தாய்க்கு ப்ரத்யக்ஷம். குளக் கரையில் காவிரியம்மனுக்கு சன்னதி உள்ளது. காவிரித் தாயின் தவத்தின் பலனாக அவரது மடியில் பெருமாள் குழந்தையாகத் திகழ்ந்ததோடல்லாது, அவருக்கு ஸ்ரீதேவி, பூதேவி, நிளாதேவி, மகாலட்சுமி, சாரநாயகி ஆகிய ஐந்து தேவியருடன் காட்சியளித்தார்
ராஜகோபாலன் சன்னதி உள்ளது. புஷ்கரணிக்கு வடமேற்கு திக்கில் உள்ள ஆஞ்சநேயரும் அவசியம் தரிசிக்க வேண்டிய சன்னதி.
குடவாசலிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவிலும் கும்பகோணத்திலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும் திருச்சேறை அமைந்துள்ளது .
கும்பகோணத்திற்கு குடத்தின் மூக்கு என்று சொல்வதை ஒட்டி, குடத்திற்கு வாசல், குடவாசல் என்ற அருகில் உள்ள ஊர். இந்த திவ்யதேசம், குடத்தின் சாரம், அதாவது மத்திய பாகம்.
மார்க்கண்டேயர் முக்தியடைந்த தலம் இது
திருச்சேறை, சாரநாதப் பெருமாள் (பஞ்சஸாரக்ஷேத்ரம்) மற்றும் செந்நெறியப்பர் (சிவன்) ஆகிய இரு முக்கிய கோவில்களைக் கொண்ட தலம். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த (13 பாசுரங்கள்) மற்றும் தேவாரப் பதிகங்கள் (சம்பந்தர், அப்பர்) பாடியுள்ள சிறப்புமிக்க தலம்.
திருமங்கையாழ்வார் இந்த திவ்யதேச எம்பெருமானை பற்றி பாடும் போது, இந்த எம்பெருமானின் திருவடிகளை வணங்கும் எல்லா பக்தர்களையும், ஆழ்வார் தன்னுடைய தலையில் தாங்குவதாக கூறி உள்ளார். “செல்வத் தண்சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே” (பெரிய திருமொழி 7.4.1)
கண்கள் சுழன்று சோரவும், வெப்பக் குருதி வெள்ளம் வெளிப்படவும், தீத்தழல்போல் சிவந்த கூந்தலுடைய பூதனையின் முலைப்பாலை குடித்து மடியச்செய்த பச்சிளம்பிள்ளையே ! வானவர் தலைவனே ! வானில் திரியும் இளம்பிறை வயிற்றைத் தொடும் மணி மாளிகைகள், செல்வம் வாய்த்ததுமாகிய திருச்சசேறை எம் பெருமானைத் தோழுவர்தம் திருவடிகளைத் தலைமேல் ஏற்பேன்.
1579
அம் புருவ வரி நெடுங்கண்
அலர்மகளை வரை அகலத்து அமர்ந்து
மல்லல் கொம்புருவ விளங்கனி மேல்
இளங் கன்று கொண்டெறிந்த கூத்தர் போலாம்
வம்பலரும் தண்சோலை
வண்சேறை வானுந்து கோயில் மேய
எம்பெருமான் தாள் தொழுவார்
எப்பொழுதும் என்மனத்தே இருக்கின்றாரே
அழகிய புருவத்துடன் நீள்விழிகளும் உடைய மலர்மகளைத் தனது திருமார்பில் வைத்தவன், தழைத்த கிளைகளில் விளங்கனிகளின் மேலே இனங்கன்றைக் குறுந்தடியாக எறிந்தவன், மணம் பரவியும் குளிர்ந்த சோலைகள் சூழும் திருச்சேறை திருக்கோயிலில் வாழ்கின்ற பெருமானுடைய திருவடிகளைத் தொழுவார்கள் எல்லோரும் எப்போதும் என் மனத்தில் வாழ்கின்றார்கள்.
தோ் நடத்த வல்லவனும் வாளை ஏந்தியவனுமான இராவணனின் இலங்கையைக் போரில் வில்லை ஏந்திக் கொடிய அம்புகளை ஏவி அழித்த இராமனே ! திருத்துழாய் மாலையுடன் விளங்கும் திருமார்புடையவனே, மேலுலங்களையும் காக்கும் பெருமையுடைய திருச்சேறை எம்பெருமானுடைய திருப்பெயர்களை ஓதிப் போற்றும் பெரியோர்களைக் கணப்போதும் நான் பிரியமாட்டேன்.
1582
வந்திக்கும் மற்றவர்க்கும்
மாசுடம்பின் வல்லமணர் தமக்கும் அல்லேன்
முந்திச் சென்று அரி உருவாய்
இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால்
சந்தப்பூ மலர்ச்சோலைத்
தண்சேறை எம்பெருமான் தாளை
நாளும் சிந்திப்பார்க்கு என்னுள்ளம்
தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே
இரணியன் வலிமையை அழித்த பெருமானுக்கே நான் உரியவன். வலிந்து வாது செய்யும் சமணர்க்கும், மற்றும் பெளத்தர்கட்கும் நான் உரியேன் அல்லேன். சந்தனமலர்ப் பொழில்கள் சூழந்த திருச்சேறை எம்பொருமானுடைய திருவடிகளை நாள்தோறும் எண்ணுவார்க்கு என் உள்ளம் தேன் அடர்ந்தது போல எல்லாக் காலமும் இன்புறுகின்றது.
1583
பண்டேனமாய் உலகை அன்றிடந்த
பண்பாளா என்று நின்று
தொண்டானேன் திருவடியே துணையல்லால்
துணையிலேன் சொல்லுகின்றேன்
வண்டேந்தும் மலர்ப்புறவில்
வண்சேறை எம்பெருமான் அடியார் தம்மை
கண்டேனுக்கு இது காணீர்
என் நெஞ்சம் கண் இணையும் களிக்குமாறே
முன்னர் வராகமாய் உலகைக் குத்தியெடுத்த நீர்மையனே ! உன்னை துதித்துத் தொண்டானேன் நான் : தேவரீர் திருவடிகளே எனக்குக் காப்பு . இவை தவிர வேறு புகலிடம் இல்லை என்று உறுதியாக சொல்லுகிறேன். வண்டுகளைக்கொள்ளும் மலர்ச் சோலை சூழ்ந்த நிலங்களுடைய திருச்சேறையில் உறையும் எம்பெருமானின் அடியார்களைக் கண்ட இப்பேறு, என் கண்களையும் நெஞ்சையும் களிக்கச் செய்கிறது.
1584
பைவிரியும் வரியரவில்
படுகடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும்
மைவிரியும் மணிவரைபோல்
மாயவனே என்றென்றும் வண்டார் நீலம்
செய்விரியும் தண்சேறை யெம்பெருமான்
திருவடியைச் சிந்தித்தேற்கு
என் ஐயறிவும் கொண்டானுக்கு ஆளானார்க்கு ஆளாம்
என் அன்புதானே
திருப்பார்கடலிலே திருவனந்தாழ்வான் மேல் கண்வளரும் எளியோனே! என்றும் அருள் படர்ந்த நீலமணி மலை போல் திருமேனித் திருமாலே! பலகாலும் வண்டுகள் அமரும் கருநெய்தல் கழனிகளிலே மலரும் தண்சேறை எம்பெருமானை சிந்திக்கின்றேன். என் ஐம்பொறிகளால் விளையும் அறிவூற்றிப் பெருமானை தனக்கே ஆக்கிக்கொண்டு அடிமைப்பட்டவர்பால் என்னுடைய அன்பும் அடிமைப்படும்.
வயல்களில் முளைத்துள்ள நெய்தல் மலர்களைக் களைந்ததால் மணம் பரவும் திருச்சேறைப் பெருமானது திருவடிகளை நாள்தோறும் மனத்தில் வைத்து நினைப்பவரை எனது மனம் நெகுழும். இப்பேறு எவ்வாறு எனக்குக் கிடைத்தது. நான் இறைவனுக்குரிய உள்ளுயிரை எனது என்று நினைக்கும் கள்வன், வஞ்சக நெஞ்சினன், ஆதலால் துன்பப் பெருங்கடலில் அழுந்தியிருப்பவன். எனக்கும் இப்பேறு கிட்டும்.
1587
பூமாண்சோ் கருங்குழலார் போல் நடந்து
வயல் நின்ற பேடையோடு
அன்னம் தேமாவின் இன்னிழலில் கண்துயிலும்
தண்சேறை யம்மான் தன்னை
வாமான் தோ்ப் பரகாலன்
கலிகன்றி ஒலிமாலை கொண்டு தொண்டீர்
தூ மாண்சோ் பொன்னடிமேல் சூட்டுமின்
நும் துணைக்கையால் தொழுது நின்றே
பூச்சூடிய கருங்கூந்தல் பெண்கள் போல் வயல்களிலே அன்னம் பெடையோடு உலாவி, தேமா மரத்தின் குளிர்ந்த நிழலில் உறங்குகின்ற திருச்சேறையில் உறையும் பெருமானைத் தாவிப்பாயும் குதிரைகள் பூட்டிய தேரில் ஏறி, பகைவர்களை வெல்லும் கலிகன்றி ஆழ்வார் பாடிய பாடல்களைப் பாடும் பக்தர்களை அழகு மிக்க தூய பெருமானதுத் திருவடிகளின் மேலே கைகளைக் குவித்து வணங்குவீர்.