HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 87; இந்து மத கலைச்சொல் அகராதி-87 (Post.16,015)

 Written by London Swaminathan

Post No. 16,015

Date uploaded in London – 25 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஆங்கிலத்தில் ஆர் ஐ RI எழுத்துக்களில் துவங்கும் சொற்கள்

ரிக் வேதம்

உலகிலேயே மிகப்பழமையான நூல்; இதற்கு இணையான நூல் உலகில் எந்தப் பகுதியிலும் இல்லை ; வேத கால ஸம்ஸ்ருத மொழியில் உள்ள இந்த நூலில் சுமார் 450 முனிவர்கள் மனக்கண்களால் கண்ட — ரேடியோ அலைகளை போல ஈர்த்த– 10,000 

மந்திரங்கள் சுமார் ஆயிரம் துதிகளில் உள்ளன . நான்கு வேதங்களில்– அதாவது ரிக், யஜுர், சாமம் அதர்வணம் என்ற – நான்கில் முதன்மையானது . சுமார் 6000 ஆண்டு முதல் 3500 ஆண்டுவரை  பலராலும் தேதி குறிப்பிடப்பட்டது.

இதுபற்றி அதிகம் எழுதியோர் ஆங்கிலத்தில் எழுதியதால் தப்பும் தவறுமாக உளறிக்கொட்டி இருக்கிறார்கள்; அந்தப் பேர்வழிகள் இந்துமதத்தை எதிர்க்கும் ஆக்ஸ்போர்ட் துறையில் சம்பளம் வாங்கியவர்கள்; அவர்களில் மாக்ஸ்முல்லர் போன்ற பேர்வழிகள் இந்தியாவுக்கு வந்ததும் இல்லை ; இந்துக்களைப் பார்த்தும் இல்லை ; யார் இந்துமதத்தைப் பின்பற்றுகின்றார்களோ அவர்கள் வேதங்களைப் பற்றி என்ன சொல்கிறார்களோ அதைப் படித்தால் நன்கு புரியும் ; இந்திரன் என்பது ஒரே ஆளின் பெயர் என்று நினைத்து உளறிக்கொட்டி இருக்கிறார்கள் ; இவர்களை பற்றிக் காஞ்சி மகா சுவாமிகள் (1894-1994) முதலியோர் சொன்னதை முன்னரே எழுதி   ருக்கிறேன் .

ரிக் வேதத்தில் பத்து மண்டலங்கள் உள்ளன அவைகளில் ஆறு மண்டலங்களை அந்தந்த ரிஷிகளின் வழிவந்தவர்கள் படைத்துள்ளனர் . வேதத்தை ஏற்காதவர்களை இந்துக்களாகச் சேர்ப்பதில்லை . ஆழ்வார்கள் நாயன்மார்கள் மஹான்கள்,  சாது, சந்யாசிகள் வேத்தைப் புகழ்ந்துள்ளார்கள். இதைத் தொல்காப்பியம், சங்க இலக்கியம்,  திருக்குறளிலும் காணலாம். 

இதோ சில  ரிக் வேத புள்ளிவிவரங்கள்

மொத்தமுள்ள சூக்தங்கள்/ துதிகள்  1028 .

அவைகளில் உள்ள மந்திரங்களின் எண்ணிக்கை-  10,600.

The number of syllables அசைகள் 432,000.

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் சாயனர் எழுதிய பாஷ்யத்தை வெள்ளைக்காரர்கள் மொழிபெயர்த்து ஆங்காங்கு சொந்தச்  சரக்கையும் சேர்த்து, அதி பயங்கர உளறல்களைக் கொட்டியுள்ளனர்  ; எடுத்துக்காட்டாக முதல் பக்கத்திலே கிரிப்பித் என்னும் பேர்வழி, சோம லதை பற்றிச் சேர்த்த உதாரணத்தைச் சொல்லலாம்.

ரிக்வேதத்திலுள்ள சொற்களின் எண்ணிக்கை – 1,53,826

மண்டலம் 2:  க்ருத்சமத ரிஷியின் குடும்ப ரிஷிகள்  (43 hymns)

மண்டலம் 3: விசுவாமித்திரர் குடும்பம்  (62 hymns)

மண்டலம் 4: வாமதேவ ரிஷியின் குடும்பம் (58 hymns)

மண்டலம் 5: அத்ரி மகரிஷியின் குடும்பம் (87 hymns)

மண்டலம் 6: பரத்வாஜ ரிஷியின்குடும்பம்  (75 hymns)

மண்டலம் 7: வசிஷ்ட மஹரிஷியின் குடும்பம் (104 hymns)

முதல் மண்டலத்திலும் கடைசி /பத்தாவது மண்டலத்திலும் பல ரிஷிகளின் பாடல்கள் இருக்கின்றன .

மண்டலம் 8 – பல தெய்வங்கள் பற்றிய  103 துதிகள்;  ஒன்பதாவது மண்டலம் முழுதும் சோம லதை பற்றிய 114 துதிகள் உள்ளன .

***

ரிஷிகேஷ்

இமயமலையின் அடிவாரத்தில், கங்கை நதியின் கரையில், அமைந்த புனிதத்தலம .  ஒருகாலத்தில் இயற்கை வனப்புடன் இருந்த இந்த இடம் இப்பொழுது முழு அளவுக்கு வணிகத் தலமாக மாறிவிட்டது சுவாமி சிவானந்தர் போன்ற தூய தமிழ் சந்நியாசி முதலில் தெய்வ நெறிக்கழகத்தை Divini Life Society.   நிறுவி இதன் புகழை இந்தியா முழுதும் பரப்பினார். பின்னர் மஹேஸ் யோகியை பீட்டில்ஸ் பாடகர்கள் பின்பற்றவே இது உலகம் முழுதும் தெரியவந்தது; இன்று ரிஷிகேஷில் கிளை அமைக்காத சாது சன்யாசி கிடையாது; முக்கால் வாசி யோகா பிசினஸ் நடத்துவோர் ஆவர்; தூய்மைக்கும் அவர்களுக்கும் உள்ள இடைவெளி மிகப்பெரியது இதை உலக யோகா தலை நகர் என்றும் அழைப்பார்கள்; தற்போது உத்தர கண்ட மாநிலத்திலுள்ள இந்த இடத்தை டேராடூன் முதலிய நகரங்களிலிருந்து எளிதில் அடையலாம்  ஹரித்வாரிலிருந்து 24 கிலோமீட்டர் தூரம். (லண்டன் சுவாமிநாதன் இரண்டு முறை சென்றுவந்த இடம் )

***

ரிஷ்யசிருங்கர் / தமிழில் கலைக்கோட்டு முனிவர்

தலையில் மான் கொம்புடன் பிறந்தவர் ; தந்தை விபாண்டக முனிவரால் காட்டில் வளர்ந்து யோகங்களையும் வேதங்களையும் கற்றவர் ; ஒரு காலத்தில் ரோமபாதர் ஆண்ட அங்க தேசத்தில் வறட்சி நிலவியது; அப்போது இவர் வந்தால் மழை பெய்யும் என்று அறிந்து நாட்டியக்காரிகளை அனுப்பி அவரைக் கவர்ந்து அழைத்துவந்தார்; மழையும் பெய்தது. தனது மகள் சாந்தாவை திருமணம் செய்து கொடுத்தார் இவரது பெருமையை அறிந்த தசரதர் குழந்தை வரம் வேண்டி நடத்திய புத்ர காமேஷ்டி யாகத்தை இவர் மூலம் நடத்தி  பலன் அடைந்தார்.

***

ரோமஹர்ஷணர் 

புராணக் கதைகளைச் சொல்லுவதில் வல்லவர் . வேத வியாசரின் சீடர். . அவருடைய மகன் உக்ரஸ்ரவஸ் மஹாபாரத பிரவசனம் செய்தார் . அவர் மூலமே மஹாபாரதம் கிடைத்தது .

***

ருது

பர்வம் என்பது இதன் பொருள்;  இந்துக்கள் பருவங்களை ஆறாகப் பிரித்தனர் ; சங்க காலத் தமிழர்கள் அதை அப்படியே ஏற்று தமிழிலும் கொடுத்தனர் ; மேலை நாடுகளில் நான்கு பருவங்கள் மட்டுமே பேசப்படுகிறது .

உலகில் முதல் முதலில் பருவங்களைப் புகழ்ந்து நூல் எழுதியவர் காளிதாசர் ஆவார்; இவர்ருடை சம்ஸ்க்ருத ருது சம்ஹாரம் மிகவும் அழகான வருணனைகள் அடங்கியது .

அதில் காணும் ஆறு பருவங்கள் :

1.           வசந்த, or spring (Phālguna to Vaiśākha—mid March to mid May);

2.           க்ரீஷ்ம/ கோடை  , or summer (Vaiśākha to Āṣāḍha—mid May to mid July);

3.           வர்ஷ /மழைக்காலம் , or rainy season (Āṣāḍha to Bhādrapadā—mid July to mid Sep-tember );

4.           சரத் , or autumn (Bhādrapadā to Kārtika—mid September to mid No-vember);

5.           ஹேமந்த /குளிர் காலம் , winter, before the frost (Kārtika to Pauṣa—mid November to mid January);

6.           சீர்ஷ , or winter (Pauṣa to Phālguna—mid January to mid March).

காளிதாசனுக்கு முன்னர், உலகின் மிகப் பழைய சமய நூலான ரிக் வேதத்திலும், பருவம் பற்றிய குறிப்புகள் உண்டு. ஆயினும் அதர்வண வேதமே (6-55-2) ஆறு பருவங்களை முதலில் குறிப்பிடுகிறது. பல சம்ஹிதைகளிலும் ஆறு பருவங்கள் வருகின்றன.

வேதத்திலும் தொல்காப்பியத்திலும் இளவேனில், முது வேனில், கார், கூதிர், முன் பனி, பின்பனிக் காலம் என்று ஆறு பருவங்கள் உள்ளன. பழங்கால நாகரீகம் எதிலும் இப்பிரிவுகள் இல்லை. இதனால் என்ன தெரிகிறது?

காஷ்மீர் முதல் இலங்கையின் தென்கோடி கண்டி வரை ஒரே கலாசாரமே வேத காலம் முதல் நிலவியது.

தொல்காப்பியப் பொருள் அதிகாரத்தில் அகத்திணை இயலில் வரும் சூத்திரம்:
“காரும் மாலையும் முல்லை; குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்.
பனிஎதிர் பருவமும் மொழிப.
வைகறை விடியல் மருதம்; ஏற்பாடு
நெய்தலாதல் மெய்பெறத் தோன்றும்
நடுவு நிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே
பின்பனி தானும் உரித்தென மொழிப”

என்று நிலங்களுக்கு உரிய ஆறு பெரும் பொழுதுகளையும் ஆறு சிறு பொழுதுகளையும் கூறுவார்.

***

ருத்ராக்ஷம்

இமயமலையிலும் தென் கிழக்காசிய நாடுகளிலும் வளரும் ஒரு குறிப்பிட்ட மரத்தின் (botanically Elaeocarpus ganitrus) விதைகளை இந்துக்கள் புனிதமாகக் கருதி மாலைகளாக ஜெப மாலைகளாகப் பயன்படுத்துகின்றனர்; ருத்ர + அக்ஷ = என்றால்  சிவனின் கண்கள் என்று பொருள் இதில் ஏக முகம் முதல் பல முகங்கள் உள்ள வகை வரை கிடைக்கின்றன ; அவைகளின் பலன்களை தேவி பாகவதம், சிவ புராணம் முதலிய நூல்களில் காணலாம்.

***

ருத்ரன்


ரிக் வேதத்தில் ருத்ரன் என்று போற்றப்படும் தெய்வத்தை யஜுர் வேதம் முதலிய நூல்களில் சிவ பெருமானாகக் காண்கிறோம். சங்கத்தமிழ் நூல்களில் சிவனும் ருத்திரனும் ஒருவரே. ருத்ரன் கோபக் கனல் வீசும் சிவன் ஆவார் ; மும்மூர்த்திகளில் அழி த்தல் தொழில் அவருடையது; வேதத்தில் இவர் யானை புலித் தோலை அணிந்து வில் அம்புடன் காட்சி தருவதைத் தேவாரம் திருவாசகத்தில் காணலாம் . ருத்ரனை டாக் டராகவும் மருந்தாகவும் வேதங்கள் போற்றுகின்றன ஒரு மந்திரம் இவரிடம் ஆயிரம் குளிகைகள் உள்ளதாகப் பாடு கிறது;  தீராத நோயைத் தீர்த்து வைய்ப்பவர் என்று அப்பர் பெருமானும் புள்ளிருக்கு வேளூர் பதிகத்தில் போற்றுகிறார்; இன்றுவரை அந்த வைத்தீஸ்வரன் கோவிலை நோய் தீர்க்கும் தெய்வமாகவே வழிபட்டு வருகிறோம் ஆகையால் ரிக்வேதத்தில் பாடப்பட்ட ருத்ரனும்  தேவாரத்தில், சங்க இலக்கியத்தில் நக்கீரர் அவ்வையார் பாடிய சிவனும் ஒன்றே.

***

ருத்ரம்

யஜுர் வேதத்தில் வரும் முக்கியதுதி .

நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரம் முதல் முதலி வரும் துதி இது

ருத்ரம் என்னும் துதி யஜுர் வேதத்தில் உள்ளது. இது நமகம், சமகம் என இரண்டு பகுதிகளை உடையது. இறைவனிடம் என்ன வேண்டுவது என்று திணறுபவருக்கு இது ஒரு பெரிய பட்டியலைத் தருகிறது. இது பற்றிய மிகவும் அற்புதமான விஷயம் என்னவென்றால் நல்ல தூக்கத்தையும் தருக என்று இறைவனை வேண்டுவதாகும். மேலை நாடுகளிலும் இந்திய நகரங்களிலும் வாழ்பவருக்கு இன்று அரிதான பொருள் நல்ல நிம்மதியான உறக்கம் ஆகும். பலவித கவலைகளாலும் இயந்திரம் போன்ற வாழ்வாலும் மனிதர்கள் கஷ்டப் படுகிறார்கள். இதை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த நம் முன்னோர்கள் அழகாக வரிசையாக சமகம் என்னும் பகுதியில் பட்டியல் இட்டுவிட்டார்கள்.

நமகம் என்னும் பகுதியில் சிவ பெருமானை நூற்றுக் கணக்கான பெயர்களால் நமஸ்கரிக்கிறோம். இதனால் இதை சத ருத்ரீயம் என்று அழைப்பர். சமகம் என்னும் பகுதியில் நமக்கு வேண்டியவற்றை எல்லாம் கேட்கிறோம். இதைக் கேட்டாலேயே போதும். அத்தனையும் கிடைத்துவிடும். சிவன் கோவில்களில் அபிஷேக நேரத்தில் இதைப் பாராயணம் செய்வார்கள். இந்துக்களின் முக்கிய சடங்குகள் அனைத்திலும் ருத்ர பாராயணம் நடைபெறும்.

நமகம் என்னும் பகுதியில் 194 நம: வரும்

சமகம் என்னும் பகுதியில் 328 சமே வரும்.

நமகம் பகுதியில் சிவனை 300 பெயர்களால் வணங்குகிறோம்.

ருத்ரத்துக்கும் 11 என்ற எண்ணுக்கும் தொடர்பு மிக அதிகம்.ஏகாதச ருத்ரர்கள் என்று ருத்ரர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படுவதால் குறைந்தது 11 தடவையும், அதிகமாக இதன் பல மடங்குகளிலும் பாராயணம் செய்வர்.

ஸ்ரீருத்ரம் 174 ரிக்குகளைக் கொண்டது. இதில் 32 மஹா மந்திரங்கள் இருக்கின்றன. ருத்ரத்தில் 11 பிரிவுகள் (அநுவாகங்கள்), சமகத்தில் 11 பிரிவுகள் இருக்கின்றன. ருத்ரத்தின் 11 அநுவாகங்களில் எட்டாவது அநுவாகத்தில் நமச்சிவாய என்ற மஹா மந்திரம் வருவதால் அந்த இடம் வரும் போது முழுக் கவனத்தையும் செலுத்தி உரத்த குரலில் கூறுவர். 11ஆவது அநுவாகத்தில் மரண பயத்தை நீக்கும் ம்ருயுஞ்ஜய மந்திரம் (ஓம் த்ரயம்பகம் யஜாமஹே——–) வருகிறது.

ஸ்ரீ ருத்ரத்திற்கு சாயணர், பட்ட பாஸ்கரர், அபிநவ சங்கரர் ஆகிய பெரியோர்கள் பாஷ்யம் (விளக்க உரை) எழுதியிருக்கிறார்கள்.

பாபா செய்த மகத்தான யக்ஞம்–  அதிருத்ரம்

ருத்ரம் என்பது சிவனைப் போற்றும் யஜூர்வேதப் பாடலாகும். இதைப் பலமுறை உச்சரித்து ருத்ர யாகம் செய்வார்கள். நமது காலத்தில் சென்னையிலும் புட்டபர்த்தியிலும் ஸ்ரீ சத்ய சாய் பாபா இதைப் பெரிய அளவில் நடத்தி உலகையே வியப்பில் ஆழ்த்தினார்:–

ருத்ர ஏகாதசி: 11 புரோகிதர்கள் 11 முறை ருத்ரத்தைப் பாராயணம் செய்து 121 தடவை ஹோமம் செய்வது
மஹாருத்ரம்: ருத்ரத்தை 1331 (11X11X11) தடவைப் பாடி யாகம் செய்வது
அதிருத்ரம்: ருத்ரத்தை 14641 (11X 11X11X11) தடவைப் பாடி யாகம் செய்வது.

Rudra Ekadasi: When Rudram is recited 121 times (11 priests recite it 11 times) it is Rudra Ekadasi.

When Rudram is recited 1331 times (11X11X11) it is Maha Rudram

When Rudram is recited 14641 times (11X 11X11X11) it is Ati Rudram.

To be continued………………………..

Tags-HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 87; இந்து மத கலைச்சொல் அகராதி-87, அதிருத்ரம், ருத்ரன், ருத்ராக்ஷம், ரிக் வேதம்

ராமாயணத்தில் வரங்கள் 71  – தேவதைகள் நிமிக்கு வரம் அளித்தது! (Post.16,014)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,014

Date uploaded in London – 25 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் 71  – தேவதைகள் நிமிக்கு வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் ஐம்பத்தேழாவது ஸர்க்கமாக அமைவது ‘வஸிஷ்டர் மித்திராவருணர்களுக்கு புத்திரனாக ஜனிப்பது’ என்னும் ஸர்க்கமாகும்.

ஶ்ரீ ராமர் லக்ஷ்மணருக்கு ராஜா நிமி பற்றிய வரலாற்றை விரிவாகக் கூறுகிறார்.

நிமி இக்ஷ்வாகு வமிசத்தில் பன்னிரெண்டாவது தலைமுறை பிள்ளையாகப் பிறக்கிறார். அவருக்கு தீர்க்கசத்திரம் என்ற யாகத்தை நடந்த விருப்பம் உண்டாகவே அவர் வஸிஷ்டரை அழைக்கிறார். வஸிஷ்டரோ தான் இந்திரன் நடத்தும் ஒரு யாகத்தை நடத்த ஒப்புக் கொண்டதாகக் கூறுகிறார். உடனே நிமி ரிஷி கௌதமரை அழைத்து யாகத்தை முடிக்கிறார்.

பின்னர் வஸிஷ்டர் அவரைப் பார்க்க வந்தபோது அவர் உறங்கிக் கொண்டிருந்தார். இதனால் கோபமுற்ற வஸிஷ்டர், ‘உனது உடலை விட்டு உயிர் பிரியட்டும்’ என்று சாபம் கொடுத்தார். நிமியும் பதிலுக்கு உமது உயிரும் உடலை விட்டு நீங்கட்டும் என்ற சாபத்தைக் கொடுத்தார்.

நிமியின் உயிர் நீத்த உடலை மக்களும், மந்திரிகளும், பிராமணர்களும் அழியாத வண்ணம் காப்பாற்றி வந்தனர்.

அப்போது பிருகு மஹரிஷி யாகம் முடிந்த மகிழ்ச்சியில் வாயுவாக இருந்த நிமியிடம் இப்படிக் கூறினார்:

அனயிஷ்யாமி தே சேதஸ்துஷ்டோஸ்மி தவ பார்திவ |

   உத்தரகாண்டம் ஐம்பத்தேழாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 12

தவ – உன் விஷயத்தில்                                             துஷ்ட: – அகமகிழ்ந்தவனாக                                              அஸ்மி – ஆகிவிட்டேன்                                                        தே – உன்னுடைய                                                             சேத: – ஜீவாத்மாவை                                                    தத: – மீளவும்                                                                  அனயிஷ்யாமி – உண்டாக்குகிறேன்

இதைத் தொடர்ந்து தேவர்கள் அனைவரும் நிமியினது ஜீவாத்மாவைப் பார்த்து, “அரசரே! உமது ஜீவாத்மா எங்கிருக்க வேண்டுமோ அது உன்னால் நிச்சயிக்கப்படட்டும்.விருப்பமான வரத்தை வேண்டுவீராக’ என்றனர்.

சுப்ரீதாஸ்ச சுரா: சர்வே நிமேஷ்சேதஸ்தாப்ருவன் |                         வரம் வஸ்ய ராஜர்ஷே க தே சேதோ நிரூஷ்யதாம் |

உத்தரகாண்டம் ஐம்பத்தேழாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 13

சுரா: – தேவர்கள்                                                            சர்வே ச – எல்லோரும்                                                          சுப்ரீதா: – அதிக ப்ரீதி அடைந்தவர்களாய்                                          நிமே: – நிமியினது                                                            சேத: – ஜீவாத்மாவைப் பார்த்து                                                     ததா – இப்படி                                                                           அப்ருவன் – சொல்லியருளினார்கள்                                ராஜர்ஷே – ‘அரசர் பெருமானே                                               தே சேத: – உனது ஜீவாத்மா                                                       க – எங்கிருக்க வேண்டுமோ அது                                               நிரூஷ்யதாம் – உன்னால் நிச்சயிக்கப்படட்டும்                                  வரம் – விருப்பமான வரத்தை                                               வஸ்ய – வேண்டுவீராக

ஏவமுக்த: சுரை: சர்வைநிமேஸ்சேதஸ்ததாப்ரவீத் |                          நேத்ரேஷு சர்வபூதானாம் வஸேயம் சுரசத்தமா: ||

   உத்தரகாண்டம் ஐம்பத்தேழாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 14

சுரை: – தேவர்கள்                                                            சர்வை: – எல்லோராலும்                                                    ஏவம் – இவ்வண்ணம்                                                 உக்த: – நியமனம் பெற்ற                                                  நிமே: – நிமியினது                                                              சேத: – ஜீவாத்மா                                                                ததா – அப்பொழுது                                                                 அப்ரவீத் – இப்படி பதிலுரைத்தது                                                 சுரசத்தமா: – ‘ஹே! தேவோத்தமர்களே!                                                    சர்வ பூதானாம் – எல்லா பிராணிகளுடைய                                      நேத்ரேஷு – நேத்திரங்களில்                                               வஸேயம் – நான் வசித்திருக்க வேண்டுகிறேன்’’

பாடமித்யேவ விபுதா நிமேஸ்சேதஸ்ததாப்ருவன் |                         நேத்ரேஷு சர்வபூதானாம் வாயுபூதஸ்சரிஷ்யஸி ||
                உத்தரகாண்டம் ஐம்பத்தேழாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 15

ததா – அப்பொழுது                                                   விபுதா: – தேவர்கள்                                                            நிமே: – நிமியினது                                                                    சேத: – ஜீவாத்மாவைப் பார்த்து                                                                 இதி – இப்படி                                                               அப்ருவன் – நியமித்தருளினார்கள்                                                பாடம் ஏவ- ‘அங்ஙனமே ஆகுக.                                                      வாயுபூத: –  வாயு வடிவமாகி                                              சர்வபூதானாம் – எல்லா பிராணிகளுடைய                                       நேத்ரேஷு – நேத்திரங்களில்                                            சரிஷ்யஸி – நீ ஸஞ்சரிக்கக் கடவை’

த்வத்க்ருதே ச நிமிஷ்யந்தி சக்ஷூம்ஷி ப்ருதிவீபதே |                        வாயுபூதேன சரதா விஸ்வமார்தே முஹுர்முஹு: ||

              உத்தரகாண்டம் ஐம்பத்தேழாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 16

ப்ருதிவீபதே – ஹே, பார்த்திவ                                      வாயுபூதேன – வாயு வடிவமாக                                            சரதா – சஞ்சரிப்பதால்                                               த்வக்ருதே – உன் நிமித்தமாய்                                               விஸ்ரமார்த ச – இளைப்பாறுதற்காகவே                                       முஹு: முஹு: – அடிக்கடி                                                                      சக்ஷூம்ஷி – கண்களை                                                          நிமிஷ்யந்தி – இமை கொட்டுவார்கள்

இப்படிக் கூறிவிட்டு தேவர்கள் தங்கள் இடம் சென்றனர். நிமியின் உடலை எடுத்து வந்து ரிஷிகள் மந்திரம் சொல்ல ஒரு புத்திரன் ஜனனமானான்.

அவரே ஜனகர் ஆவார்.

இந்த வரத்தில் தேகத்தை விட்டு நீங்கிய ஜீவாத்மாவுக்கு வரம் அளிக்கப்பட்டதைக் காண்கிறோம்.

**

ராமாயணத்தில் வரங்கள் 65  – இந்திரன் ஹனுமாருக்கு வரம் அளித்தது! (Post.15,994)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,994

Date uploaded in London – 19 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் 65  – இந்திரன் ஹனுமாருக்கு வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் முப்பத்தாறாவது ஸர்க்கமாக அமைவது ‘ஹனுமார் வரம் பெற்றுக் கொள்வது’ என்னும் ஸர்க்கமாகும்.

ஶ்ரீ ராமர் அகத்திய முனிவரிடம் ஹனுமாரின் வரலாறைச் சொல்லுமாறு கேட்க அவர் ஹனுமாருக்கு இந்திரன் வரம் கொடுத்ததையும் கூறுகிறார்.

பிரம்மாவால் ஸ்பரிசக்கப்பட்டு ஜீவனைப் பெற்ற ஹனுமாரைப் பார்த்த வாயுதேவன் முன் போல சஞ்சரிக்கலானார். அனைத்து உயிர்களும் மகிழ்ந்தன.

வாயுதேவனை இன்னும் மகிழ்ச்சியுறச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் பிரம்மா தேவதைகளை நோக்கி இப்படிச் சொல்லலானார்:

“இந்த சிசுவால் உங்களுக்கு ஆக வேண்டியதாயிருக்கிற ஒரு பெரும் காரியம் உண்டாகப் போகிறது. ஆதலால் எல்லோரும் இந்த வாயுவின் ப்ரீதி நிமித்தம் வரங்களை விதியுங்கள்” (ததத்வதத்வம் வரானசர்வே மாருதஸ்யாஸ்ய துஷ்டயே – உத்தர காண்டம் 36ம் ஸர்க்கம் ஸ்லோக எண் 9)

தத: சஹஸ்ரநயன: ப்ரீதியுக்த: ஷுபானன: |                            குஷேஷயமர்யீ மாலாமுத்க்ஷிப்யேதம் வசோப்ரவீத் ||                  

                         (உத்தர காண்டம் 36ம் ஸர்க்கம் ஸ்லோக எண் 10)

தத: – அதன் மேல்                                                 ஷுபானன: – அழகான முகமுடைய                                            சஹஸ்ரநயன: – ஆயிரக் கண்ணன்  (இந்திரன்)                                ப்ரீதியுக்த: – அன்பு கூர்ந்தவராய்                                      குஷேஷயமர்யீ – பொற்றாமரை                                             மாலாம் – மாலையை                                                     உத்க்ஷிப்ய – கழற்றிக் கையிலெடுத்துக் கொண்டு                                    இதம் – பின்வரும்                                                              வச: – ஆக்கினையை                                                அப்ரவீத் – நியமித்தருளினார்

மத்கரோத்ச்ருஷ்ட வஜ்ரேண ஹனுரஸ்ய யயா ஹத: |                     நாம்னா வை கபிஷார்தூலோ பவிதா ஹனுமானிதி ||   

                         (உத்தர காண்டம் 36ம் ஸர்க்கம் ஸ்லோக எண் 11)

கபிஷார்தூல – வானரோத்தமன்                                      அஸ்ய – இவனது                                                            ஹனு; – தாடை                                                             மத்கரோ ச்ருஷ்ட வஜ்ரேண – என் கையினின்று வீழ்ந்த வஜ்ராயுதத்தால்  ஹத: – அடியுண்டது                                                   யதா – என்னும் காரணத்தால்                                            ஹனுமான் – ஹனுமான்                                               இதி – என்கிற                                                                  நாம்னா வை – பெயராலேயே                                                  பவிதா – விளங்கட்டும்

அஹமஸ்ய ப்ரதாஸ்யாமி பரமம் வரமத்புதம் |                          இத: ப்ரப்ருதி வஜ்ரஸ்ய மமாவத்யோ பவிஷ்யதி ||                           

                    (உத்தர காண்டம் 36ம் ஸர்க்கம் ஸ்லோக எண் 12)

அஸ்ய – இவனுக்கு                                                                   அஹம் – நான்                                                                      அத்புதம் – அற்புதமும்                                                 பரமம் – ச்ரேஷ்டமுமான                                                     வரம் – ஒரு வரத்தை                                                 ப்ரதாஸ்யாமி – கொடுக்கிறேன்                                            இத ப்ரப்ருதி – இது முதல்                                                மம – எனது                                                              வஜ்ரஸ்ய – வஜ்ராயுதத்தினால்                                                  அவத்ய – கொல்ல முடியாதவனாக                                  பவிஷ்யதி – விளங்குவான்

இப்படியாக இந்திரன் குழந்தைக்கு ஹனுமான் என்ற பெயரை அளித்ததோடு தனது வஜ்ராயுதத்தால் கூட அழிக்க முடியாதபடி விளங்குவான் என்று வரத்தை அளிக்கிறார்.

இந்த வரம் கேட்காமல் இந்திரனே மனம் மகிழ்ந்து தந்த வரமாகும்.

**

ராமாயணத்தில் வரங்கள் (62) பரமசிவன் மேகநாதனுக்கு வரம் அளித்தது! (Post.15,859)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,859

Date uploaded in London – 12 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (62) பரமசிவன் மேகநாதனுக்கு வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் இருபத்தைந்தாவது ஸர்க்கமாக அமைவது ‘மது சக்யம்’ என்ற ஸர்க்கமாகும்.

ஒரு நாள் ராவணன் லங்காபுரியில் ஒரு உத்தியானவனத்திற்குச் சென்றான்.

அங்கே ஒரு யாகம் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் கண்டான். தன் புதல்வன் மேகநாதனே அந்த யாகத்தை நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்து,”இது என்ன? சொல்!” என்றான். உடனே யாகத்தை நடத்திக் கொண்டிருந்த அசுர குருவாகிய சுக்ராசாரியர் ராவணனிடன், “நானே சொல்கிறேன். உனது புதல்வனால் ஏழு யாகங்கள் இயற்றப்பட்டன” என்று ஆரம்பித்து விவரங்களைக் கூறுகிறார்.

அக்னிஷ்டோமஸ்வமேதஸ்ச யக்ஞோ பஹுசுவர்ணக: |                  ராஜசூயஸ்ததா யக்ஞோ கோமேதோ வைஷ்ணவஸ்ததா||

மாஹேஸ்வர ப்ரவ்ருத்தே து யக்ஞே பும்பி: சுதுர்லபே |
வராம்ஸ்தே லப்தவாபுத்ர: சாக்ஷாத் பசுபதேரிஹ ||

உத்தரகாண்டம் இருபத்தைந்தாவது ஸர்க்கம் ஸ்லோக எண்கள் – 8&9

அக்னிஷ்டோம: – அக்னிஷ்டோமம் என்ற                               யக்ஞ – யாகமும்                                                அஸ்வமேத: – அஸ்வமேதம் என்ற யாகமும்                                      பஹுசுவர்ணக: –  பஹுசுவர்ணம்                                      யக்ஞ ச – என்ற யாகமும்                                               ராஜசூய: – ராஜசூயம் என்ற யாகமும்                                        ததா – அவ்வண்ணமே                                                       கோமேத: – கோமேதம் என்ற                                              வைஷ்ணவ: – வைஷ்ணவம் என்ற யாகமும்                                            ததா – அவ்விதமே                                                              பும்பி: – மனிதர்களால்                                                             சுதுர்லப: – செய்து முடிக்க கஷ்டமாயுள்ள                                            மாஹேஸ்வர யக்ஞே – மாஹேஸ்வரம் என்ற யாகமும்                             ப்ரவ்ருத்தே – குறையின்றி நடைபெறுகையில்                                        தே – உனது                                                           புத்ர – புதல்வன்                                                                   இஹ து – இவ்வுலகில்                                                                       பசுபதே: – பரமசிவனுடைய                                                 சாக்ஷாத் – பிரத்யக்ஷத்தில்                                                    வரான் – வரங்களை                                                    லப்தவான் – வரங்களைப் பெற்றான்

காமகம் ஸ்யந்தனம் திவ்யம்ந்தாரிக்ஷசரம் த்ருவம் |                  மாயாம் ச தாமஸீம் நாம யயா சம்பத்யதே தம: ||

ஏதயா கில சங்க்ராமே மாயயா ராக்ஷஸேச்வர |                        ப்ரயுக்தயா கதி: ஷக்யா ந ஹி ஞாதும் சுராசுரை: || |

அக்ஷயாவிஷுதீ பாணைச்சாபம் சாபி சுதுர்ஜயம் |                         அஸ்த்ரம் ச பலவத்சௌம்ய சத்ருவித்வம்ஸனம் ரணே ||

ஏதான்ஸர்வான்வரான்லப்த்வா புத்ரஸ்தேயம் தசானன |
அத்ய யக்ஞசமாப்தௌ ச த்வாம் தித் ருக்ஷு: ஸ்திதோஹ்யஹம்

உத்தரகாண்டம் இருபத்தைந்தாவது ஸர்க்கம் ஸ்லோக எண்கள் – 10,11,12,13

தசானன – தசானன                                                 ராக்ஷஸேச்வர – ராக்ஷஸ மன்னா                                          சௌம்ய – அன்பனே                                                    தே – உனது                                                              அயம் – இந்த                                                                  புத்ர – புதல்வன்                                                        ஏதான் – பின்கண்ட                                                          வரான் – வரங்கள்                                                           ஸர்வான் – எல்லாவற்றையும்                                                அத்ய – இப்போது                                                              லப்த்வா – பெற்றான்                                                              திவ்யம் – தேவநிர்மிதமானதும்                                                     காமகம் – இஷ்டப்படியெல்லாம் செல்ல வல்லதும்                                     அந்தரிக்ஷசரம் – ஆகாயமார்க்கத்தில் செல்ல வல்லதும்                        த்ருவம் – என்றும் அழியாததுமான                                    ஸ்யந்தனம் – ஒரு தேரையும்                                              யயா – எந்த ஒன்றால்                                                           தம: – பிரத்யக்ஷத்திலும் கண்களால்                                      சம்பத்யதே – உண்டாகிறதோ                                       சங்க்ராமே – போரில்                                             ப்ரயுக்தயா – பிரயோகிக்கப்பட்ட                                        ஏதயா – இந்த                                                                   மாயயா – மாயையால்                                                              சுராசுரைபி: – தேவர்களாலும் அசுரர்களாலும் கூட                                         யதி: – இருக்குமிடம்                                                           ஞாதும் – கண்டுகொள்ள                                                          கில ஹி – எப்படியும்                                                         ந ஷக்யா – முடியாதோ அந்த                                             தாமஸீம் – தாமஸி                                                     நாம – என்கிற                                                             மாயாம் ச – மாயையையும்                                              அக்ஷயௌ – அக்ஷயமான                                                       இஷுதீ ச – அம்பராத்துணிகள் இரண்டையும்                                பாணை: – பாணங்களால்                                                   சுதுர்ஜயம் – வெல்வதற்கரிய                                               சாபம் ச – தனுசையும்                                                  ரணே – போரில்                                                               சத்ரு வித்வத்வம்ஸனம் – எதிரிகளை ஹதம் செய்யும்                                பலவத – எல்லாவற்றிற்கும் மேம்பட்டதாகிய                                     அஸ்த்ரம் ச – ஒரு அஸ்திரத்தையும் பெற்றான்                            யக்ஞ சமாப்தௌ – யாக முடிவில்                                    த்வாம் – உன்னை                                                தித்ருக்ஷு: – காண                                                    அஹம் ஹி – நானும்                                                               ஸ்தித: – இருந்தேன்

இப்படியாக சுக்ராசாரியார் ராவணனிடம் அவன் புத்திரனாகிய மேகநாதன் பரமசிவனிடமிருந்து வரங்கள் பெற்றதைக் கூறினார்.

யாகங்களை இயற்றி பெறப்பட்ட இந்த வரங்களை வால்மீகி விவரமாக இப்படி எடுத்துரைக்கிறார்.

**

ராமாயணத்தில் வரங்கள் (60) குபேரன் ஓணானுக்கு வரம் அளித்தது! (Post No.15,852)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,852

Date uploaded in London – 10 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (60) குபேரன் ஓணானுக்கு வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் பதினெட்டாவது ஸர்க்கமாக அமைவது ‘மருத்த மஹாராஜனை ஜெயிப்பது’ என்ற ஸர்க்கமாகும்.

அகஸ்திய மஹரிஷி ராமருக்குத் தொடர்ந்து கூறிய வரலாறுகளில் குபேரன் ஓணானுக்கு அளித்த வரத்தைப் பற்றிக் கூறலானார்.

மருத்த மன்னன் சம்வர்த்தர் என்ற மஹரிஷியை வைத்து ஒரு யாகம் செய்த போது அங்கு வந்த ராவணன் மருத்தரை யுத்தத்திற்கு அழைத்ததையும் அப்போது தேவர்கள் பயந்து விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் உடலில் மறைந்து கொண்டதையும் முன்னர் பார்த்தோம். குபேரன் ஓணானின் உடலில் மறைந்து கொண்டார்.

ராவணன் ஜயித்து விட்டதாகக் கருதி அங்கிருந்து அகன்றவுடன் குபேரன் ஓணானை நோக்கி இப்படிக் கூறினார்:

அதாப்ரவீத்தைஸ்ரவண: க்ருக்லாஸம் கிரௌ ஸ்திதம் |             ஹைரண்யம் சம்ப்ரயச்சாமி வர்ணம் ப்ரீதம்ஸ்தவாப்யஹம் ||

 உத்தரகாண்டம் பதினெட்டாவது அத்தியாயம் ஸ்லோக எண் 35

வைஸ்ரவண: – குபேரர்                                                கிரௌ – மலைமீது                                                  ஸ்திதம் – இருந்த                                                    க்ருகலாஸம் – ஓணானைப் பார்த்து                                     அத – இப்படி                                                          அப்ரவீத் – சொல்லியருளினார்                                             ப்ரீத: – விஸ்வாசமுடைய                                                அஹம் அபி – நானும்                                                  தவ – உனக்கு                                                        ஹைரண்யம் – பொன்னிற                                                      வர்ணம் – நிறத்தை                                                    சம்ப்ரயச்சாமி – கொடுக்கிறேன்

சத் ரவ்யம் ச ஷிரோ நித்யம் பவிஷ்யதி தவாக்ஷயம் |                   ஏஷ காஞ்சனகோ வர்ணோர் மத்ப்ரீத்யா தே பவிஷ்யதி ||

உத்தரகாண்டம் பதினெட்டாவது அத்தியாயம் ஸ்லோக எண் 36

தவ – உனது                                                                ஷிர: ச – முடியும்                                                           நித்யம் – எப்போதுமே                                                     அக்ஷயம் – மாறாத                                                       சத்ரவ்யம் – பொன்னிறமுடையதாய்                                  பவிஷ்யதி – விளங்கட்டும்                                       மத்ப்ரீத்யா – எனது ப்ரீதி காரணமாய்                                                தே – உனது                                                              ஏஷ: – இந்த                                                               வர்ணம் – ரூபம்                                                     காஞ்சனக: – பொன்னிறமுடையதாய்                                      பவிஷ்யதி – விளங்கட்டும்

இப்படியாக இந்திரனும், யமனும், வருண பகவானும், குபேரனும் மயிலுக்கும், காக்கைக்கும், ஹம்ஸத்திற்கும், ஓணானுக்கும் வரங்களைத் தந்தருளினர்.  பின்னர் அவரவர் இருப்பிடம் சென்று சேர்ந்தனர்.

இத்துடன் இந்த பதினெட்டாம் அத்தியாயம் முடிகிறது.

**

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 72; இந்து மத கலைச்சொல் அகராதி- 72 (Post No.15,850)

Written by London Swaminathan

Post No. 15,850

Date uploaded in London –9 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

நபக / நாபாக

புராணங்களில் இதே பெயரில் பலர் இருப்பதால் குழப்பமாகத் தோன்றும் .

Nabhaga (नभग):—நபக என்பவர் ஸ்ராத்த தேவ – ஷ்ரத்தா ஆகியோரின் புதல்வர் .

Nābhāga (नाभाग).—நாபாக– என்பவர் இக்ஷ்வாகு மன்னரின் சகோதரர் ; புகழ்பெற்ற அம்பரீஷன் இவருடைய புதல்வர்.; மஹாபாரதம், பாகவதம் ஆகியவற்றில் இவர்கள் கதைகள் வருகின்றன. நாபாக, தன்னிடமிருந்த எல்லாவற்றையும் தானம் செய்தபோது பூமி தேவியே அவரிடம் யாசகத்துக்குச் சென்றாள்;  எப்போதுமே மாமிசம் சாப்பிடாத அவருக்கு பிரம்மலோகத்தில் நிரந்தர வாசம் கிடைத்தது.

இன்னும் ஒரு கதையும் உண்டு;

வைவஸ்வத மனுவின் புதல்வரும் அம்பரீஷனின் தந்தையுமான

 Nābhāga (नाभाग).—நாபாக- பிரம்மச்சாரியாக இருந்தபோது அவருடைய தந்தை எல்லாவற்றையும் மூத்த சகோதர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டதால் அவருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை; தந்தையின் சொற்படி ஆங்கீர ரிஷி வம்சத்தினர் நடத்திய யாகத்துக்குச் சென்று சடங்குகள் பற்றி விளக்கினார்; யாகம் செய்தவர்கள் சொர்க்கத்துக்குச் சென்ற பின்னர் அவர்களுடைய  செல்வம் அனைத்தும் அவருக்கு கிடைத்தது. அதை எடுத்துக் கொள்ளும் தருணத்தில் கருப்பு மனிதன் வடிவத்தில் ருத்ரன் தோன்றி யாகத்தில் விடப்படும் மிச்சம் மீதியெல்லாம் ருத்ரனுக்குச் சொந்தம் என்று உரிமை கொண்டாடினார்; அதற்கென்ன எடுத்துக்கொள்ளுங்கள் என்று நாபாக சொன்னார் ; ருத்ரன் மனம் மகிழ்ந்து அனைத்தையும் அவருக்குக் கொடுத்துவிட்டு பிரம்மன் பற்றிய ஞானத்தையும் சொல்லிக்கொடுத்தார்

***

நாகர்கள்

சங்கத் தமிழ் இலக்கியத்தில் நீண்ட நாகர் பட்டியல் உள்ளது: இருபது நாகர் குலப் பெயர்களில் மிகவும் புகழ் பெற்றவர்கள்: மருதன் இளநாகன், நன்னாகன், வெண்ணாகன், நாலைக் கிழவன் நாகன், நல்லியக்கோடன், நீலநாகன் (சிறுபாணாற்றுப்படை)

மகாவம்ச இலங்கை மன்னர் பட்டியலில் வரும் நாகர் பெயர்கள்:—

நாகதாச, சிசுநாக (இந்திய மன்னர்): கல்லாட நாகன், சோரநாகன், மஹாநாகன், இளநாகன், மஹல்லநாகன், குஜ்ஜநாகன், குஞ்சநாகன், ஸ்ரீநாகன்.

குப்தர்கால கல்வெட்டுகளிலும் கணபதி நாகன் முதலிய பெயர்கள் காணப்படுகின்றன.

நாகர் என்பவர் பற்றி மஹாபாரத காலம் முதல் கேட்டு வருகிறோம். ( நாகர்கள், மஹாபாரத சண்டைக்குப் பின்னர், தென் அமெரிக்காவில் குடியேறி, காண்டவ வனத் தலைவன் மய தானவன் என்பவனின் தலைமையில் புதிய மாயா நாகரீகம் ஸ்தாபித்ததை எனது பழைய கட்டுரையில் காண்க).

நாகர்கள் எந்தப் பாதையில் சென்றார்கள் என்பதும் தெளிவாகிவிட்டது. இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள்,மத்திய அமெரிக்கா என்று படிப்படியாகச் சென்றதால் இந்த நாடுகள் அனைத்தும் நாகலோகம், நாகத்தீவு என்று அழைக்கப்படுகின்றன. சிந்து நதி முகத் த்வாரத்தில் பாதாள என்ற துறைமுகம் இருந்ததை பழங்கால பயணிகள் எழுதிவைத்தனர். பலி முதலிய மன்னர்களை பாதாள லோகத்துக்கு அனுப்பியதாகக் கூறுவதன் பொருள் அவர்கள் கடல் வழியாக நாடு கடத்தப் பட்டனர் என்பதாகும்.

நாகர்களை வேதமும் பழைய இனமாக (பஞ்சவிம்ச பிராமணம் -9-4) குறிப்பிடும்.

 சங்க இலக்கியமும் மஹாபாரதமும் நாகர்கள் செய்யும் அரிய வேலைப்பாடமைந்த ஆடைகளைக் குறிப்பிடுகின்றன. மஹாபாரத காலத்தில் அர்ஜுனன் இரண்டு நாகர் இனப் பெண்களை திருமணம் செய்துகொண்டான்: உலூபி, சித்திராங்கதை. (தமிழ்நாட்டில் இவளை அல்லி ராணி என்று பாடுகின்றனர்).

 நாகர் இனப் பெண்களை எல்லோரும் மணந்தனர். அகத்தியர் வழியில் வந்த பிற்கால அகத்தியர் கம்போடியாவில் யசோவதி என்ற பெண்ணைக் கல்யாணம் செய்தார்.

 கிருஷ்ணர் இரண்டு முறை நாகர்களுடன் மோதினார்: காண்டவ வனத்தை எரித்தார், காளீயன் என்ற நாகர் இனத் தலவனைக் கொன்றார்.

அர்ஜுனனின் பேரன் ஆன பரீட்சித்தை நாகர்கள் படுகொலை செய்ததால் நாகர்கள் வெளிநாட்டில் குடியேற நேரிட்டது.

ஜனமேஜயன் துவக்கிய நாகர் ஒழிப்பு இயக்கத்தை ஆஸ்தீகர் என்ற பிராமண ரிஷி ஒரு சமாதான உடன்பாடு மூலம் நிறுத்தினார்.  நர்மதை நதிக் கரையில் மஹிஸ்மதி நகரில் நடந்த சர்ப்ப யாகத்தையும் (நாகர் படுகொலை) சமாதான உடன்பாட்டையும் இன்றுவரை பிராமணர்கள் தினசரி சந்தியாவந்தனத்தில் கூறிவருகிறார்கள். உலகிலேயே நீண்ட வரலாறு படைத்த சமாதான உடன்பாடு இதுதான்!

தமிழர்களும் தெலுங்கர்களும் விளையாடும் பரமபத சோபான படத்தில் இன்றும் தடசகன், கார்க்கோடகன் போன்ற நாகர்கள் நினைவு கூறப்படுகின்றனர்.

நாகர்கள் தங்கள் உடம்பில் பச்சைக் குத்திக் கொண்டதாகத் தெரிகிறது. சங்க இலக்கியத்தில் இவர்கள் ஓவியர்கள், அருவாளர்கள் என்றும் வடமொழியில் இவர்களுடைய பெயர்கள் சித்திர என்ற சொல்லுடனும் உள்ளன. கிரேக்க வரலாற்று ஆசிரியர்களும் ஒபைட்ஸ் ( ஒவியர்) என்பவர்களை நாகங்களை வழிபடும் இனம் என்று வருணிப்பர்.

பஞ்சவிம்ச பிராமணத்தில் சர்ப்பராக்ஞி ( பாம்பு ராணி) யும் அதர்வ வேதத்தில் அலிகி, விளிகி- யும் குறிப்பிடப்படுகின்றனர். அலிகி, விளிகி சுமேரியாவிலும் வேறு பெயர்களில் இருக்கிறார்கள்.

 நாகர்கள் எகிப்து வழியாகச் சென்றனரோ என்ற ஐயப்பாடும் உண்டு. எகிப்தில் 17 மன்னர்கள் ராம சேஷன் அல்லது ரமேசன் என்ற பெயரில் கி.மு 1500 முதல் ஆண்டார்கள். அவர்கள் தலையில் சிவன் மாதிரி பாம்பு இருக்கும். ரிக் வேத காலம் முதல், சிந்து சமவெளியில் கிடைத்த பாம்புராணி முத்திரை முதல்– இன்று சபரிமலையில் உள்ள நாகராணி வரை— தொடர்ச்சியாக நாக வழிபாடு உள்ள மதம் – கலாசாரம் இந்துமதம் மட்டுமே. இமயம் முதல் குமரி வரை கோவில்களில் உள்ள நாகர்கள் சிலை பல லட்சம்!

ஆயிரம் தலையுடைய வாஹனத்தைச் செய்ய முடியாதென்பதால் நமது கோவில் நாக வாஹனத்தில் 5, 7, 9 தலைகள்மட்டுமே சித்தரிக்கப் பட்டிருக்கும் – வடிவமைக்கப் பட்டிருக்கும்.

ஸ்னேக் (ஸ்+நாக), செர்பெண்ட் (ஸர்ப்ப) SNAKE, SERPENT என்ற ஆங்கிலச் சொற்கள் சம்ஸ்கிருதத்திலிருந்து வந்தவை என்பதையும் நோக்குக. சுருக்கமாகச் சொன்னால், ரிக்வேத நாகர் வழிபாடு இன்று நாகர்கோவில், நாக்பூர், நாகாலாந்து வரை இருப்பது நம் பண்பாட்டில் மட்டுமே. மறைபொருளில்—நான் ‘மறை’– பாடிய ரிஷிகள், பாம்பு வடிவ சுனாமிப் பேரலைகளையே ஆதி சேடன் – ஆயிரம் தலையுடைய ஆதி சேடன் – என்று பாடினரோ என்று வியக்க வேண்டியுள்ளது. சுனாமிப் பேரலைகளின் படங்களைக் கூர்ந்து நோக்கினால் ஆயிரம் பாம்புத் தலைகளுடன் சுனாமி அலைகள் , நிலப் பகுதிக்குள் ஆக்ரோஷத்துடன் – சீற்றத்துடன் – பிரவேசிப்பதைப் பார்க்கலாம்.

இதைப்படங்களுடன் நான் ஒரு கட்டுரையில் விளக்கியுள்ளேன் (காண்க- நான் கண்ட சுனாமி அதிசயம் ! அலைகளில் ஆதி சேஷன்!! (Post No. 2722).

***

நகர

சங்க இலக்கியத்தில் புறநானூற்றில் கோயிலை நகர் என்று குறிப்பிட்டனர் ; முது குடுமிப் பெருவழுதி என்ற பாண்டியன் பாடலில் இது வருகிறது. சம்ஸ்க்ருத நூல்களிலும் நாகர என்ற கோவில் வகைகளைக் குறிப்பிடுகின்றனர் இன்னுமொரு பொருள் – நகரம் – பெரிய ஊர் என்பதாகும்.  வாத்ஸ்யாயனர் எழுதிய காமசூத்திர நூலிலும் நகரம் வருகிறது; நாகரீகம் என்பதும் நகர மக்களின் குணங்களைக் குறிக்கிறது இதற்கு எதிர்ப்பதம் பட்டிக்காட்டான்.

***

நசிகேதன்

சாந்தோக்ய உபநிஷத்தில் நசிகேதன் கதை வருகிறது ; இவர் உத்தாலக ஆருணியின் மகன். சின்னப்பையனாக இருந்தபோது தந்தை செய்த தானங்களை உற்று நோக்குகிறார் ; பால் வற்றிப்போன கிழட்டுப் பசுக்களை அவர் பிராமணர்களுக்குத் தானம் கொடுத்ததை பார்த்து வருத்தப்பட்ட நசிகேதன் , அப்பா என்னை யாருக்குத் தானம் கொடுக்கப்போகிறீர்கள்? என்று கேட்டான் ; இதையே மூன்று முறை கேட்டவுடன் அப்பாவுக்குக் கோபம் வந்துவிட்டது ; உன்னை ம்ருத்யுவுக்குக் (யமதர்மன்) கொடுக்கப்போகிறேன் என்று கத்திவிட்டார்; உடனே மயங்கி விழுந்த நசிகேதன் யமலோகம் சென்று மூன்று நாட்களுக்கு காத்துக் கிடக்கிறான்; அவனைக் கண்டு அதிசயித்த யமன் எப்படி வந்தான் என்ற விஷயத்தை அறிந்தபின்னர் நீ போ!  பூலோகத்துக்கே திரும்பிப் போ; உனக்கு வரம் தருகிறேன் என்றான் . அப்படியா எனக்கும் என்னுடைய தந்தைக்கும் மீண்டும் சுமுக உறவு ஏற்பட்ட வேண்டும் என்று வேண்டுகிறான் ;அப்படியே ஆகுக என்று யமனும் சொல்கிறான் .

ஆயினும் நசிகேதன் கிளம்பவில்லை ; பல ஆசைகளைக் காட்டியும் மயங்காத நசிகேதன், தனக்கு ஆன்மா , பிரம்மன் பற்றிச் சொல்ல வேண்டும் என்கிறான் ; யமனும் அவ்வாறே செய்கிறான் .

உபநிஷத்தைத் தவிர, மஹாபாரதத்தில் வேறு ஒரு செய்தி வருகிறது; பசு தானம் செய்து மேன்மை அடைந்தவர்களைக் காண வேண்டும் என்று நசிகேதன் சொன்னவுடன் அவர்களைக் காணவும் யமதர்மன் ஏற்பாடு செய்கிறான் ; இது கோ தானத்தின் சிறப்பினைக் காட்டுகிறது.  .

****

நஹுஷன் 

நஹுஷன் ,இந்திராணியிடத்தில் சில்மிஷம் செய்து பாம்பாகப் பூமியில் விழுந்தார் .முன்னொரு காலத்தில் தேவலோக இந்திரன் அசுரராய் பிறந்த பிராமணன் ஒருவரைக் கொன்றான்; அந்த அஸுரன் பெயர் வ்ருத்ராஸுரன் ; பிராமணனைக் கொன்றால் பிரம்மஹத்தி என்னும் பாவம் ஒருவன் மீது ஏறிவிடும்; இதைப் போக்க பரிகாரம் செய்ய வேண்டும்.  இவ்வாறு பரிகாரம் செய்ய இந்திரன் பூலோகத்துக்கு VISIT  விசிட் செய்தார் ; அப்போது இந்திரன் பதவி VACANT வேகண்ட் ஆனது ; தற்காலிக இந்திரன் பதவிக்குப்   பூலோகத்தில் இருந்த நஹுஷனுக்கு அழைப்பு வந்தது ! இந்திராணியைப் பிடித்துவிட்டால் பழைய இந்திரன் பூமியிலே கிடப்பான்; நாம் ‘ஜாலி’யாக இந்திராணியுடன் தேவ லோகத்தை ஆளுவோம் என்று திட்டமிட்டு இந்திராணியிடம் நஹுஷன் சேட்டை செய்தான்; அவளுக்குப் புரிந்துவிட்டது. 

அன்பரே தொட்டுப் பேச வேண்டுமானால் சட்டப்படி தொட்டுப் பேச வேண்டும்; நான் சொல்லும் CONDITION கண்டிஷனை முதலில் கேளும் ; நீவீர் எனது பள்ளியறைக்கு எழுந்தருளலாம்; ஆனால் சப்த ரிஷிகள் தூக்கும் பல்லக்கில் என்னுடைய BED ROOM பெட் ரூமுக்கு வர வேண்டும் என்றாள்; இது நடவாத காரியம் என்பது அப் பெண்ணின் கணிப்பு!

நஹுஷனுக்கு ஒரே குஷி; சப்த ரிஷிகளையும் விரட்டிப்பிடித்தான்; அவர்களுக்கும் தெரியும்; ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்று ; ஐயா , ஏழு ரிஷிகள் பல்லக்கினைத் தூக்கினால் பேலன்ஸ் BALANCE இருக்காது; எட்டாவது ஆளாக அகஸ்தியரைச் சேர்த்துக் கொள்கிறோம் என்றார்கள்; உடனே அதைச் செய்யுங்கள் என்று தற்காலிக இந்திரன், அதாவது நஹுஷன் சொன்னான் .

ஏழு ரிஷிகளும் – அதாவது சப்த ரிஷிகளும் – நல்ல உயரம்; அகஸ்தியரோ அதி பயங்கர குட்டை ; பல்லக்கு ரெடி. நஹுஷன் பல்லக்கில் ஏறினான் ;  மெதுவாகப் போனது; என்ன தாமதம்? ஏன் பல்லக்கு மெதுவாகப்போகிறது? அதுவும் wobbling/ வாப்ளிங் ஆட்டம் இருக்கிறதே என்றான். அவர்கள் சொன்னார்கள் “ஐயா பொறுத்தருளும்! அகஸ்தியர் குட்டை; நாங்கள் எல்லாம் உயரம். ஆகையால் மெதுவாகச் செல்கிறோம்” .

உடனே நஹுஷன் பல்லக்கிலிருந்து எட்டிப்பார்த்தான்; குட்டையான  அகஸ்தியரைப் பார்த்து சர்ப்ப சர்ப்ப என்றான் ; இந்தச் ஸம்ஸ்க்ருத்ச் சொல்லுக்குப் பொருள் —சலோ சலோ !போங்கள் போங்கள்! என்று விரைவு படுத்துவதாகும். அத்தோடு நில்லாமல் அகஸ்தியரைக் காலால் எட்டி உதைத்து இதைச் சொன்னான் சர்ப்ப சர்ப்ப என்று.

குணக்குன்றான அகஸ்தியருக்குக் கோபம் வந்தது ; பிடி சாபம் ! சர்ப்ப சர்ப்ப என்றார் சர்ப்ப என்பதற்கு இன்னும்மொரு பொருள் SERPENT/சர்பெண்ட்- பாம்பு

 அகஸ்தியன் சாபத்துக்கு ஏற்ப நஹுஷன் பூமியில் பாம்பாக விழுந்தான். அயிராணி/ இந்திராணி / சசி தேவி  தன் கற்பை இழக்காமல் இருப்பதற்கு பல்லக்கு தந்திரத்தைப்  பயன்படுத்தினாள். 

****

நகுலன்

பாண்டுவின் இரண்டாவது  மனைவியான மாத்ரிக்குப் பிறந்தவர் நகுலன்; இரட்டையர்களாகப் பிறந்தவர்களில் சகாதேவன் இவருடைய சகோதரர்  ஆவார் . இவர் குதிரை தொடர்பான சாஸ்திரங்களில் வல்லவர் ஆகையால் மறைந்து வாழும் 13-ஆவது ஆண்டில் கிரந்திகா என்ற பெயரில் விராட மன்னனுக்கு குதிரைகளை பராமரிப்பதில் உதவி செய்தார் ; 13-ஆவது ஆண்டின் இறுதியில் த்ரிகர்த்த தேசப் படைகள் விராடனின் மத்ஸ்ய தேசத்தைத் தாக்கியபோது இவர் தன்னுடைய உண்மை அடையாளத்தைக் காட்டினார் ;  இவரும் சகோதரர் ஆன சகாதேவனும் வேத கால இரட்டையர் அஸ்வினி குமாரர்களின்  அம்ஸங்கள் நிறைந்தவர்கள் ஆவர்.

****

நள தமயந்தி 

கதையின் மிகச் சுருக்கம்:- நளனும் தமயந்தியும் காதலித்துக் கல்யாணம் கட்டினர். தூய்மையற்ற நிலையில் நளனைக் கலி பற்றிக் கொண்டான். சூதாட்டத்தால் நாடிழந்த நளன் மனைவியுடன் காடேகி, இருவரும் பிரியும் நிலை ஏறபடுகிறது. சமையல் கலை, தேரோட்டக் கலை, கவிதைக் கலையில் வல்ல நளன், தமயந்தியின் சமயோஜித புத்தியால் மீண்டும் இணைகின்றனர்.

காதல் கதைக்கும் கற்புக்கும் இலக்கணமாகத் திகழும் இளவரசி. விதர்ப்ப நாட்டு மன்னன் பீமனின் மகளான தமயந்தி, நிடத நாட்டு மன்னனான நளன் மீது காதல் கொண்டு, அன்னப்பறவை மூலம் தூது அனுப்பினாள். மன்னன் கூட்டிய மன்னர்கள் கூட்டத்திலிருந்து ஸ்வயம்வரம் மூலம் நளனைத் தேர்ந்தெடுத்து மணந்தாள் . அங்கு நளன் போலவே வேடமணிந்து வந்த தேவர்களையும் புறக்கணித்தாள்; ஆயினும் திருமணத்துக்குப் பின்னர் சொல்லொணாத் துயரம் அனு பவித்து மீண்டும் நளனை அடைந்தாள். மஹாபாரதத்திலும் புராணங்ககளிலும், தமிழ்ப் பாடல்களிலும் இவர்களுடைய நீண்ட கதை உள்ளது.

சேதி நாட்டில் வியாபாரம் செய்து பெரும் பொருள் ஈட்டும் நோக்கத்தோடு ஒரு பெரிய சார்த்தவாஹன வண்டித் தொடர் சென்று கொண்டிருந்தது. அது வேத்ரவதி நதியைக் கடந்து செல்லும் தருணத்தே தமயந்தியும் அக்கூட்டத்தில் சேர்ந்துகொண்டாள். 

மாலை நேரம் நெருங்கியது; சூரிய தேவன் மலை வாயில் விழுந்து கொண்டிருந்தான். சார்த வாஹத் தலைவன் கட்டளையின் பேரில் அவரவர் முகாம் அடித்தனர். வனவிலங்குகள் குளிக்கவும் தண்ணீர் குடிக்கவும் நீர் நிலைகளை நோக்கி வரும் பாதை அது. யானைகள் தண்ணீர் குடிக்க கூட்டம் கூட்டமாக வரவே வணிகர்கள் பீதி அடைந்து ஓடினர். அவர்களில் பலர் மிதிபட்டு இறந்தனர்; ஒரே களேபரம்; அங்கும் இங்கும் அனைவரும் சிதறி ஓடினர்; துயரக் காட்சி. இத்தகைய குழப்பத்துக்கு இடையே உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலிகளில் தமயந்தியும் ஒருவள் (ஒருத்தி); அவள் நளனைத் தேடிச் செல்லும் நெடும் பயணம் இது. வணிகர்களுடன் சேர்ந்து அவளும் காட்டைக் கடந்தாள்.

நள தமயந்தி கதையில் வரும் விஞ்ஞான விஷயங்கள்:-

1.பிற கிரஹங்களில் வாழும் மக்கள் நிலை (Extra Terrestrials)

2.மாறுவேடக் கலை ( Art of Disguise)

3.எட்டு அதிசய சக்திகள் (மாயாஜாலக் கலை) Eight Paranormal Powers

4.பறவைகளை தூது விடப் பழக்கல் (Bird Migration and Training Birds for communication)

5.சமையல் கலை (Art of Cookery)

6.தேரோட்டும் கலை (Art of Charioting)

7.எண் ரஹஸியம் (Magic Numbers)

8.சூதாட்டக் கலை (Art of Gambling and Manipulation)

9.மாயமாய் மறையும் கலை (Invisible Cloaking)

10.விஷத்தை விஷம் முறிக்கும் அறிவு (Toxicology)

11.மனநலம் தரும் சொற்கலை (Moral Teaching and Psychology)

12.கடிதம் எழுதும் கலை (Letter Writing by Kings)

13.ஸத்தியமே பெரிது (Truth alone Triumphs)

14.தூய்மையின் அவஸியம் (Necessity of cleanliness)

15.கவிதைக் கலை (Role of Poetry)

16.பார்ப்பனரைத் தூதுவிடும் கலை (Brahmin Ambassadors/ Role of Ambassadors)

17.வணிகர்கள் (சாத்தன்) பயணக் கலை (Travellers’ Tale & Business Travel)

18.பாரத நாட்டின் புவியியல் (Geography)

19.பாரத நாட்டின் வரலாறு (History)

20.முனிவர்களின் பங்கு பணி (Role of Saints/Pscychologists)

21.குழந்தைகள் வளர்ப்புக் கலை (Child care)

22.பெண்களின் மஹத்தான சுதந்திரம் ( Unusual Freedom of Indian Women)

23.மச்ச சாஸ்திரம் (Body marks)

24.அஸ்வ (குதிரை) சாஸ்திரம் (Science of Horses)

25.வ்ருக்ஷ (மரம்) சாஸ்திரம் (Tree Science)

தகவல் பரிமாற்றம் (SHARING/ EXCANGE OF INFORMATION)

இந்தக் கதையின் மூலம், மஹாபாரதத்தின் 18 பர்வங்களில் மூன்றாவதாக வரும் வன பர்வத்தில் வருகிறது.

நள தமயந்தி சரிதத்தைப் புகழேந்திப் புலவரும், அதிவீரராம பாண்டியனும் தமிழில் யாத்துள்ளனர்.

நளன் செய்த எட்டு அதிசயங்கள்

800 மைல் தொலைவை 24 மணி நேரத்தில் கடந்து விதர்ப்பதேச குண்டினபுரத்துக்கு அயோத்தி மன்னனை அழைத்து வந்த பாஹுகன் (வாகுகன்) நளனாகத் தான் இருக்கும் என்று கருதிய தமயந்தி, தனது பணிப்பெண் கேசினியை அனுப்பி ரஹஸியாமாக உளவறியச் சொல்கிறாள். அப்பொழுது தேவர்கள் நளனுக்கு அளித்த எட்டு அதிசய சக்திகளைக் கண்ணால் கண்டு தமயந்திக்கு ரிப்பொர்ட் (report)  தருகிறாள். உடனே தமயந்திக்கு அவன் நளன்தான் என்பது 100 சதவிகிதம் தெரிந்து விடுகிறது;

நளன் பார்த்த மாத்திரத்தில் குடங்களில் நீர் நிரம்புகிறது.

அவன் ஒரு துரும்பை சூரிய ஒளியில் காட்டினாலும் அது தானாகவே பற்றி எரிகிறது. நீர் இல்லாமலும், நெருப்பு இல்லமலும் அறு சுவை படைக்க வல்லவன் அவன்.

நீர் அவன் இஷடப்பட்டபடி பெருகுகிறது நெருப்பு அவனைச் சுடுவதில்லை.

மலர்களை அவன் கசக்கினாலும் கசங்குவதில்லை அது மணம் வீசி கசங்காமல் நிற்கிறது.

இவற்றையெல்லாம் பார்த்த கேசினி அப்படியே அறிவிக்கிறாள்!

(இரண்டு நீண்ட கட்டுரைகளில் விஞ்ஞான விஷயங்கள் அனைத்தையும் எனது பிளாக்குகளில் சில ஆண்டுகளுக்கு முன் எழுதியுள்ளேன்.)

–SUBHAM—

TAGS –HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 72; இந்து மத கலைச்சொல் அகராதி- 72 நஹுஷன், நகுலன், நளன், நசிகேதன், நாபாக , எட்டு அதிசயங்கள்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 70; இந்து மத கலைச்சொல் அகராதி-70 (Post No.15,829)

HINDU MUDRAS IN EGYPT

Written by London Swaminathan

Post No. 15,829

Date uploaded in London –4 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மோதக/ம்

தமிழில் கொழுக்கட்டை என்று பொருள்; விநாயகரின் கையில் , அதாவது பிள்ளையார் கையில், இருப்பது இந்த தின்பண்டம் . பிள்ளையார் சதுர்த்தி/கணேஷ் சதுர்த்தி பண்டிகையின் போது இதைச் செய்து பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்வார்கள் ; அவருக்கு மிகவும் பிடித்த பண்டம் இது. வேகவைத்த அரிசி மாவினாலான பை போன்ற உறைக்குள் தேங்காய்ப் பூரணம் அல்லது வெல்லம் கலந்த பருப்பினை வைத்து நீராவியில் வேக வைப்பார்கள் ; பின்னர் இறைவனுக்குப் படைத்துவிட்டு இதைச் சாப்பிடலாம்; மகாராஷ்டிரா, தமிழ் நாடு மாநிலங்களில் இப்போதும் இதைச் செய்கிறார்கள்  .

இதில் வேகவைத்த மாவினை கோலிக்குண்டு அளவுக்கு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கடுகு பருப்பு மிளகாய் தாளித்து செய்வதை ஊமைக் கொழுக்கட்டை என்பார்கள் ; அந்த உருண்டைகளை காரம் கலக்காமல் சர்க்கரை போட்ட பாலில் போட்டு சாப்பிடுவது பால் கொழுக்கட்டை எனப்படும். வேக வைத்த மாவிலான பைக்குள் வெல்லம் கலந்த தேங்காய்ப் பூரணத்துக்குப் பதில், காரம் நிறைந்த உளுத்தம் பருப்பு முதலியவற்றை வைத்தும் செய்யலாம். இது நைவேத்தியத்து உகந்தது அல்ல ; ருசிக்காகச் செய்யப்படும் தின்பண்டம்தான்.

மோதகம் என்ற சொல் வால்மீகி ராமாயண யுத்த்த காண்டத்தில் வருகிறது ;பத்ம புராணத்தில் கணபதிக்குப் படைக்கும் பொருள்காவே வருகிறது .

Vālmīki-Rāmāyaṇa Yuddhakhaṇḍa 131.38

Modaka (मोदक) refers to a type food-stuff used in the worship of Gaṇeśa, according to the Padmapurāṇa 1.65

***

மோக்ஷ/ம் முக்தி வீடுபேறு

ஜன மரண , அதாவது பிறப்பு இறப்பு, என்ற சூழலிலிருந்து விடுபடுவது வீடுபேறு ; சம்ஸ்க்ருதத்தில் இதை முக்தி என்பார்கள் ; இந்துக்களின் வாழ்க்கை நான்கு லட்சியங்களைக் கொண்டது; அவையாவன- தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் ; அதாவது அறம், பொருள், இன்பம், வீடு ; இது தொல்காப்பியம், புறநானூறு திருக்குறள் முதலிய நூல்களிலும் சொல்லப்பட்டுள்ளது. இந்துக்களின் இறுதி லட்சியம் மோக்ஷம்; இதை தேவார திருவாசக திவ்யபிரபந்தப் பாடல்களிலும் பஜனைப் பாடல்களிலும் இந்துக்கள் வேண்டிக் கொள்கிறார்கள்; புத்த, சமண, சீக்கிய மதக் கோட்பாடுகளிலும் இது இருக்கிறது ; பிறவிப் பெருங்கடலிலிருந்து- சம்சார சாகரத்திலிருந்து- விடுபடுவது விடுதலை ஆகும். 

***

மூகாம்பிகை

சரஸ்வதி தேவியின் இன்னும் ஒரு வடிவம்; இந்த தேவியின் கோயில் கர்நாடக மாநிலத்தில் கொல்லூர் என்னுமிடத்தில் உளது ; துர்கா, லெட்சுமி , சரஸ்வதி, ஆகியோரின் மூலமான ஆதி பராசக்தி என்றும் சொல்லுவார்கள் ; மூகாசுரனை  வதைத்ததாலும், மூகம் என்னும் ஊமைத்தன்மையைப் போக்குவதாலும் இந்தப் பெயர் . ஆதி சங்கரர் இவரை ஸ்தாபித்ததாகவும் கதை ஒன்று உள்ளது; ஆதிசங்கரர் வழிபட்ட தேவியை அவர் கேரளத்துக்கு அழைத்ததாகவும், அவர் திரும்பிப்பார்க்காமல் இருந்தால் அவரைப் பின்தொடர்ந்து வருவதாகவும் தேவி வாக்கு அளித்தாள்; அவரது நம் பிக்கையைச் சோதிக்க, தேவி ஓரிடத்தில் நின்றாள் ; காலடிச் சலங்கை ஒலி கேட்டகவில்லையே என்று சங்கரர் திரும்பிப் பார்க்கவே தேவி அங்கேயே நின்றுவிட்டாள். அந்த இடத்தில் அவளது விக்கிரகத்தையும் ஸ்ரீ சக்கரத்தையும் அவர் நிறுவினார் என்பது அந்தக் கதை  ஆகும்  . எம் ஜி ராமச்சந்திரன் , ஜெயலலிதா போன்ற அரசியல் தலைவர்கள் வைர வாள், தங்கக் கவசம் முதலியவற்றைக் காணிக்கையையாகச் செலுத்தியதால் தமிழ்ப் பாமரர்களுக்கு இடையேயும் இவள் புகழ் பரவியது.

***

மூக கவி

மூக கவி (Mooka Kavi) என்பவர்பிறவியிலேயே ஊமை; பின்னர்  காமாட்சி தேவியின் அருளால் பேசும் திறனைப் பெற்றமகான் ஆவார்.  காஞ்சி காமாட்சி அம்மன் மீது 500 ஸ்லோகங்களைக் கொண்ட  மூக பஞ்சசதீ என்ற ஸ்தோத்திரத்தை இயற்றினார்  ‘மூகன்’ என்றால் ஊமை என்று பொருள். , தேவியின் அழகை வருணிக்கும் இந்த புகழ்பெற்ற,அற்புத நூலைப் படைத்தார்.மூக பஞ்சசதீ மொத்தம் ஐந்து பாகங்களைக் கொண்டுள்ளது:ஆர்யா சதகம்: அம்பிகையின் மேன்மைகளை விவரிக்கும் 100 ஸ்லோகங்கள்.பாதாரவிந்த சதகம்: காமாட்சியின் திருவடித் தாமரைகளை வர்ணிக்கும் 100 ஸ்லோகங்கள்.ஸ்துதி சதகம்: அம்பிகையைத் துதிக்கும் 100 பாடல்கள்.கடாக்ஷ சதகம்: தேவியின் கருணைக் கடாட்சத்தைப் போற்றும் 100 ஸ்லோகங்கள்.மந்தஸ்மித சதகம்: அம்பாளின் புன்னகையை விவரிக்கும் 100 ஸ்லோகங்கள். இவர் மூக சங்கர (398-437 CE) என்ற பெயரில் காஞ்சி சங்காராச்சார்ய மடத்தின் இருபதாவது மடாதிபதியாக இருந்தார் என்று மடத்தின் வரலாறு இயம்புகிறது ; அவரை காஷ்மீர் அரசர்கள் மாத்ரு குப்தா, பிரவர சேனன் ஆகியோரும் போற்றினார்கள்

***

முசுகுந்தன்

இந்தியாவின் வடமேற்குப்பகுதியை ஆண்ட சூரிய குல மன்னர்கள் தமிழ்நாட்டுக்கு குடியேறி சோழ வம்சஆட்சியை  ஸ்தாபித்தார்கள். அவர்களுடைய முன்னோர்களில் ஒருவன் முசுகுந்தன்.மாந்தாதாவின் மகனான முசுகுந்தன் என்னும் சோழன் இந்திரனின் தலைநகரான அமராவதியைக் அசுரரிடமிருந்து காத்தான் என்றும் அதற்கு நன்றி தெரிவிக்கும் முகத்தான் காவல் பூதமும் ஐவகை மன்றமும் அனுப்பிவைத்தான் என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது (5-65/67; 6-7/17)

சோழ மன்னர்கள் திலீபன், அரிச்சந்திரன், மாந்தாதா, முசுகுந்தன், நாபாகன், காகுத்தன், பகீரதன், தசரதன், ராமன் முதலியோர் தங்கள் குலத்தவர் என்று கூறிக்கொள்வதை கன்யாகுமரிக் கல்வெட்டும், திருவாலங்காட்டுச் செப்பேடும், கலிங்கத்துப் பரணியும், மூவர் உலாக்களும் கூறுவதைக் காணலாம்.

இமயத்தில் சின்னம் பொறித்தது, மஹாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு உதவியது, இந்திரனுக்குச் சமமாக ஆசனத்தில் அமர்ந்தது ஆகியவற்றை மூவேந்தர்களும் தாங்கள் செய்ததாகக் கூறிக்கொள்கின்றனர்.

மாந்தாதா என்ற சோழன் ஒரே துறையில் புலியும் மானும் நீருண்ணும்படி பகை நீக்கி ஆண்டான் என்றும், ஒரு சோழன் உத்தரகுரு என்னும் போகபுரியை ஆண்டான் என்றும் தமிழ் நூல்கள் கூறுகின்றன.

தமிழர்களின் ஆட்சி அவ்வளவு தூரம் பரவியிருந்தது என்று சொல்ல முயலலாம். ஆயினும் பெயர்கள் எல்லாம் சம்ஸ்கிருதத்தில், புராணத்தில் உள்ள மன்னர் பெயர்களாக இருக்கின்றன.

புறநானூற்றின் பாடல் 37, 39, 43, 46, 228 ஆகியவற்றில் சோழர்களின் முன்னோடியாக சிபிச் சக்ரவர்த்தி கூறப்படுகிறான். சிபிச் சக்ரவர்த்தியின் கதை புராண, இதிஹாசங்களிலும் பவுத்த ஜாதகக் கதைகளிலும் வருகிறது. ஒரு புறாவுக்காக தன்னையே தராசில் நிறுத்தவன் அவன். தியாகத்தின் சின்னம் அவன். மஹாபாரதம் வன பர்வத்தில் வரும் (அத்தியாயம் 200) வரும் சிபி- கழுகு, புறாக் கதையை சங்க இலக்கியம் அப்படியே கூறுகிறது.

சிபியின் வழித்தோன்றல் என்பது சம்ஸ்கிருதத்தில் ‘சைப்ய’ என்று வரும். அதைத் தமிழில் செம்பியன் என்று தமிழ்படுத்தினர். அகநானூறு பாடல் 36, நற்றிணைப் பாடல் 14 ஆகியவற்றில் சோழர்கள் செம்பியன் என்றே அழைக்கப்படுகிறான். வடமொழி ஆசிரியர்கள் தண்டி, வராஹமிகிரர் ஆகியோரும் சோழர்களை சிபியின் குடியினராகவே கருதுவர். அமராவதி, நாகார்ஜுனகொண்டா, பர்ஹுத், இந்தோநேசியாவில் போரோபுதூர் புடைப்புச் சிற்பங்களில் சிபியின் கதைகள் சித்திர வடிவம் பெற்றன.

சிபி குலத்தை ரிக்வேதமும் ,ஐதரேய பிராமணமும் குறிப்பிடுகின்றன. குறைந்தது 3500 ஆண்டுக்கு முந்தியவர்கள் சிபி குலத்தினர்.

***

முத்கல்ய ரிஷி

மௌத்கல்யர் (அல்லது முத்கலர்) என்பவர் இந்து புராணங்களின்படி நளாயினியை மணந்த ஒரு புகழ்பெற்ற முனிவர் ஆவார். வறுமையிலும் இறையச்சத்துடன் வாழ்ந்து, மோட்ச நிலையை அடைவதில் தேர்ச்சி பெற்றவர்.மௌத்கல்ய நளாயினி (இந்திரசேனை) என்ற பதிவிரதையான பெண், தன் கணவரான மௌத்கல்ய முனிவரை ஒரு கூடையில் சுமந்து சென்றதாக புராணங்கள் கூறுகின்றன. மௌத்கல்ய முனிவரின் வழித்தோன்றல்களே மௌத்கல்ய பிராமணர்கள் ; மேலும், சௌராட்டிர சமூகத்தின் பண்டைய கோத்திரங்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த ரிஷியைச் சோதிக்க ஒரு முறை கோபக்கார ரிஷி  துர்வாசர் வந்து சாப்பிட உட்கார்ந்தார்; அவர் யாரோ ஒரு யாசகர் (பிச்சை எடுப்பவர்) போல வந்தார் கடோத்கஜன், பீமன் போல வீட்டிலிருந்த எல்லாவற்றையும் சாப்பிட்டுத் தீர்த்தார். இவ்வாறு ஆறு முறை செய்தார் ; அப்போதும் முத்கல்யர் மலர்ந்த முகத்துடன் அன்னமிட்டார் . துர்வாசரும் மனம் மகிழ்ந்து தன்னுடைய உண்மை வடிவத்தை வெளிப்படுத்தினார் . அதே நேரத்தில் முத்கல்யரை அழைத்துச் செல்ல ஒரு புஷ்பக விமானம் SPACE SHUTTLE ஸ்பேஸ் ஷட்டில் வந்தது; தேவலோகத்துக்கு வரும்படி தேவர்கள் அழைத்தனர் ; இதில் என்ன நிபந்தனைகள் என்று ரிஷி கேட்டார் ; உங்கள் புண்ணியம் தீரும் வரை நீங்க தேவலோக இன்பங்களை அனுபவிக்கலாம் என்று பதில் சொன்னார்கள் ; அப்படியா போய் வாருங்கள்; நான் சொர்க்கத்துக்கு வரவில்லை மீண்டும் நீண்ட தவம் செய்கிறேன் என்றார் ;  எந்த இடத்தில் நிரந்தர சுகம் உண்டோ, எந்த இடத்திலிருந்து நாம்  பிறப்பெடுக்க பூமிக்கு வருவதில்லையோ அதற்காக நான் தவம் செய்வேன் என்றும் சொல்லி விமானத்தை திருப்பி அனுப்பிவிட்டார்; இந்த சம்பவம் மஹாபாரத வனபர்வத்தில் உள்ளது .

***

முத்ரா / முத்திரை

BUDDHA COPIED HINDU RISHIS; HE NEVER REMOVED TILAK OR HIS SACRED THREAD.

முத்திரை என்பது விரல்கள், கைகள் மூலம் காட்டும் சமிக்ஞை ஆகும். இது உடலின் சக்தியை வழிப்படுத்தும் முறை அல்லது அதை அதிகரிக்கும் முறை ஆகும். அதுமட்டுமல்ல அதில் அக்குபிர்ஷர் ACUPRESSURE எனப்படும் உத்தியும் உளது; உடலில் சிலபகுதிகளுக்கு அழுத்தம் கொடுத்தால் அது ஞானம் பெறுவதற்கான நரம்புகளைச் சுண்டி விடும்.

முத்திரைகள் நாட்டியம் முதல்பூஜைகள் வரை பல இடங்களிலும் பயன்படுகின்றன. நாமும் கூட சாலைகளில் போலீஸ்காரகள் காட்டும் முத்திரைகள், காதுகேளாதோருக்கான முத்திரைகளைத் தினமும் காண்கிறோம். தியானத்தில் பயன்படுத்தும் முத்திரைகள் உயர்ந்த வகை முத்திரைகள். ரஹஸியப் பயன்பாடுள்ளவை.

பிராஹ்மணர்களும் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியா வந்தனத்தில் முத்திரைகளைப் பயன்படுத்துவர். பதஞ்சலி யோக சாத்திரம் முதலியன முத்திரைகள் பற்றிப் பேசுகின்றன. இந்துக் கடவுளர் அபய முத்திரை அல்லது வரத முத்திரையுடன் காணப்படுவர். ஆக நம்மிடம் உள்ளவற்றை பௌத்தர்களும் ஏற்று அவைகளைப் பயன்படுத்தினர்.

முத்ரா விதானம்’ என்னும் ஸம்ஸ்க்ருத நூல் சுமார் 130 முத்திரைகளை வரை படத்துடன் காட்டுகிறது. இதை ராமகிருஷ்ண மடம் (மயிலாப்பூர், சென்னை) தமிழிலும் வெளியிட்டுள்ளது. அதன் மூன்று ஸ்லோகங்கள் முத்திரையின் பயன்பாட்டை (பூஜைகளில்) விளக்குகிறது. இதோ அவை:-

1.எல்லா தேவர்களையும் மகிழ்விப்பதாலும் பாவத் தொடர்பைப் போக்குவதாலும் (மோதனாத், த்ராவணாத்) முத்திரை என்று சொல்லப்படும். அது எல்லாக் காமங்களையும் அர்த்தங்களையும் (செல்வம்) தருவதாகும்.

2.தந்திரங்களில் எல்லாம் கற்பிக்கப்பட்ட முத்திரைகளை இனி கூறுவோம். அவைகளைக் காட்டுவதால் மந்திர தேவதைகள் ப்ரீதி அடைவார்கள் .

3.அர்ச்சனை, ஜபம், தியானம் முதலியவற்றிலும் காமிய கர்மங்களிலும், ஸ்நானம், ஆவாஹனம், சங்கப் பிரதிஷ்டை, ரக்ஷணம், நைவேத்யம் இன்னும் பிறவற்றிலும் அந்தந்தக் கல்பங்களில் கூறப்பட்ட முத்திரைகளை உரிய ஸ்தானங்களில், உரிய லக்ஷணங்களுடன் கண்டுகொள்ள வேண்டும்.

இதன் பின்னர் 11 தலைப்புகளில் முத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆக இவை அனைத்தும் நாம் கண்டு பிடித்து வளர்த்தவை என்பது தெளிவு:-

ஸ்ரீ குருவந்தன முத்திரைகள்அர்கியஸ்தாபன முத்திரைகள்அர்ச்சனையில் ஆவாஹனாதி முத்திரைகள்நியாஸ முத்திரைகள்ஸ்ரீவித்யா பத்து முத்திரைகள்நிவேதன முத்திரைகள்காயத்ரீ முத்திரைகள்கணேச முத்திரைகள்சிவ முத்திரைகள்விஷ்ணு முத்திரைகள்நானா முத்திரைகள்முத்திரைகளின் அகராதி

புத்தர் ஒரு ‘பக்கா’ ஹிந்து. அவர்  ஹிந்துவாகப் பிறந்து இந்துவாகவே வாழ்ந்தார் என்பது அவருடைய சிலைகளில் இருந்தும் பிறகாலத்தில் புத்த மதத்தினர் செய்த செயல்களில் இருந்தும் தெரிகின்றது.அவர் முகத்தில் பெரிய பொட்டு/ திலகம் இருக்கும்; தோளில் பூணுல் தொங்கும் ; இந்தோனேஷியா நாட்டில் ஜாவா தீவில் போரோபுதூரில் உள்ள புத்தர் சிலைகளில் அவர் மந்திர சக்தியுள்ள முத்திரைகளைப்  பயன்படுத்தி அபூர்வ சக்திகளைப் பெற்றதை ஒரு ஜெர்மானியர் படங்களுடன் வெளியிட்டுள்ளார் .

பரத நாட்டிய சாஸ்திரத்திலுள்ள 108 முத்திரைகள் சிதம்பரம் முதலிய கோவில்களில் சிற்ப வடிவங்களில் செதுக்கப்பட்டுள்ளன உள்ளன

பழங்கால எகிப்திய சிலைகளில் தியான முத்திரை உள்ளது அபய முத்திரையும் உள்ளது புத்தர் சிலைகளைப் போல பல முத்திரைகளை காட்டும் சிலைகளும் உள்ளன (இது பற்றி நான் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுரைகளை எழுதி அது புஸ்தகமாகவும் வந்துள்ளது )

***

முரளீதரன்

கிருஷ்ணனின் பெயர் ; புல்லாங்குழலைத் தாங்கியவன் என்று பொருள்  . மாடு மேய்க்கும் கண்ணனாக வலம் வந்தபோது, குழல் ஊதி மக்களையும் மாக்களையும் மயக்கிய வேணுகால லோலன் என்பதால் இந்த வடிவத்தில் கிருஷ்ணனின் படங்களும் பொம்மைகளும் சிலைகளும் எங்கும் காணப்படுகின்றன.

***

முருகன்

DR A NARAYANAN , SYDNEY, HAS TAKEN THIS PICTURE

தமிழ்க்கடவுள் என்ற சிறப்புப்பெயர் முருகனுக்கு உண்டு ஏனெனில் அகஸ்திய முனிவருக்கு முருகன் தமிழ் மொழியைக் கற்பிக்கஅவர் முதல் இலக்கணத்தை எழுதினார் இதை அருணகிரி நாதர் முதல் பாரதியார் வரைப் பாடிப் பரவியள்ளனர்.

முருகன் என்றால் அழகன் என்று பொருள்.

ஏனைய பெயர்கள் ; ஸ்கந்தன், கார்த்திகேயன், விசாகன், ஆறுமுகன், ஷண்முகன் ,குகன், குறிஞ்சிக் கிழவன்

யாதேயர் காலத்திலிருந்து ஆறுமுகங்களுடன் நாணயங்களில் காணப்படுகிறார் .

ஸ்கந்தன்-விசாகன் பொம்மைகள் விற்கப்பட்டதை பதஞ்சலி மகாபாரஷ்யம் குறிப்பிடுகிறது;

காளிதாசன் எழுதிய குமார சம்பவ காவியத்தால் ஈர்க்கப்பட்டு வைஷ்ணவர்களான குப்தப் பேரரசர்களும் தங்களுடைய புதல்வர்களுக்கு ஸ்கந்த குப்தன், குமார குப்தன் என்ற  பெயர்களைச் சூட்டினார்கள்

தொல்காப்பியத்தில் சேயோன் ஆகத் தோன்றுகிறார்; சங்க கால திருமுருகாற்றுப்படை முதல் அண்மைக்கால அவ்வையார் அருணகிரிநாதர் வரை பாடப்பட்டுள்ளார்

மாயோன் மேய காடுறை உலகமும்,

சேயோன்  மேய மைவரை  உலகமும்,

……………… தொல்காப்பியம்

தமிழ் நாட்டில் அறுபடை வீடுகள் எனப்படும் கோயில்களுக்கு நாள்தோறும் பல்லாயிரம் மக்கள் சென்று வழிபடுகின்றனர்

அறுபடை வீடுகள்: திருப்பரங்குன்றம்திருச்செந்தூர்பழனிசுவாமிமலைதிருத்தணி மற்றும் பழமுதிர்சோலை

மனைவியர் – வள்ளி, தேவசேனை ;

வாகனங்கள்- மயில், பிணிமுகம் என்னும் யானை;

கொடி- சேவல், மயில் கொடிகள்;

சடங்குகள் – பால் குடம், காவடி;

பிடித்த நைவேத்தியம் – பஞ்சாமிர்தம்;

கொன்ற அசுரர்கள்- தாரகாசுரன், சூரபத்மன் ;

***

மூலாதாரம்  

மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம்,

விசுத்தி, ஆக்ஞா,  ஸஹஸ்ராரம் என்று ஏழு சக்கரங்கள் உடலில் உண்டு என்று யோகசாஸ்திரங்கள் பகர்கின்றன .குண்டலினி சக்தி பாம்பு வடிவத்தில் மூலாதாரத்தில் உறைந்து கிடக்கும்; அதை மூச்சுப் பயிற்சிகளினால் — அதாவது பிராணாயாமத்தினால் –தலைக்குக் கொண்டுபோகும்போது பிரம்மானந்தம்/ பேரானந்தம் என்னும் சமாதி நிலை கிட்டும்; பாதி வழி போவதற்குள் அற்புத சக்திகள் தோன்றும்; அந்த நிலையில் மண், பெண்,பொன் ஆசைகளில் சிக்கி பாதி சாமியார்கள் சிறைச் சாலைக்குப் போய்விடுவார்கள் . தப்பித் பிழைப்பவர்கள் ராமகிருஷ்ணர், ரமணர் போல அழியாத புகழ் பெறுவார்கள்

உடலிலுள்ள சக்கரங்கள் : மனித உடலில் ஆற்றல் மையங்களாக ஏழு முக்கிய சக்கரங்கள் (மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராரம்) விளங்குகின்றன. இந்த சக்கரங்களைச் சீரமைப்பதன் மூலம் ஆரோக்கியம், மன அமைதி மற்றும் ஆன்மீக விழிப்புணர்வு மேம்படுவதாகத் தமிழ் மற்றும் வேத இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

மனத்தின் ஏழு நிலைகள்

ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுகிறார்: மனம் உலக விஷயங்களைச் சிந்திக்கும் போது லிங்கம், குஹ்யம், நாபி எனும் மூன்று ஸ்தானங்களில் சஞ்சரிக்கும்.. அந்த நிலையில் உயர்ந்த மனோ பாவங்கள் எழுவதில்லை. காமினி காஞ்சனத்திலேயே அழுந்திக் கிடக்கும் (காமினி காஞ்சனம்= பெண் ஆசை, தங்கம்/செல்வம்/பணம் மீது ஆசை).

மனத்தின் நான்காவது ஸ்தானம் இருதயம். இந்த இடத்துக்கு மனம் வரும்போது முதன் முதலில் ஆத்ம எழுச்சி உண்டாகிறது. இந்த நிலையில் மனமானது பெண்ணாசை, பொன்னாசைகளில் ஒருபோதும் செல்வதில்லை.

மனத்தின் ஐந்தாவது ஸ்தானம் கழுத்து. அங்கு வரும்போது அஞ்ஞானம் எல்லாம் அகல்கிறது. ஆறாவது ஸ்தானம் புருவ மத்தி. அங்கு வரும்போது இரவும் பகலும் இறைவனின் திவ்ய தரிசனமே தென்படுகிறது.

தலைதான் மனத்தின் ஏழாவது நிலை. அங்கு சமாதி உண்டாகிறது. தன் நினைவே கிடையாது. உலக வியாபாரங்கள் அனைத்தும் அறவே ஒழிந்து பரமானந்தம் கிட்டுகிறது.

இந்த ஏழு ஸ்தானங்களே யோக நூல்களில் மூலாதாரம், ஸ்வாதி ஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, ஸஹஸ்ராரம் என்று கூறப்படுகின்றன.

***

மூல நட்சத்திரம்

இது 27 நட்சத்திரங்களில் ஒன்று திருமூலரும் சங்க காலப் புலவர் மாமூலனும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்று சொல்லலாம் ஆண் மூலம் அரசாளும் என்ற பழமொழி தமிழில் உள்ளது

இதோ 27 நட்சத்திரங்களின் பெயர்கள் :–

அசுவினி = பரி, புரவி, வாசி, ஐப்பசி, இரலை, புரவி, ஏறு, யாழ், தலை நாள், மருத்து நாள், சென் பூதம், குதிரை

பரணி = காடுகிழவோன், தாழி, அடுப்பு, முக்கூட்டு, வேழம், சோறு, பகடு, பகலவன், தாசி

கார்த்திகை = அறுமீன், அழல், ஆரல், அளக்கர், எரி, அங்கி, ஆல், ஆறாமீன், அறுவாய், நாவிதன், அளகு, இறால், நாடன், வாணன், தழல்

ரோகிணி = பண்டி, மாட்டு வண்டி, உருள், வையம், ஊறல், பிரமநாள், சதி, அயன் நாள், தேர், விமானம், சகடம் (அகம் 86),

(சங்க காலத் தமிழர்கள் சகடம்/ரோகிணி நட்சத்திரம் அன்றுதான் கல்யாணம் செய்வர் என்று அகநானூறு கூறுகிறது. )

மிருகசீரிடம் = மான் தலை, மாழ்கு, மும்மீன், நரிப்புறம், பாலை வெய்யோன்.

திருவாதிரை = செங்கை, யாழ், சடை, இறைநாள் (வடமொழியில் ஆருத்ரா), மூதிரை,ஈசன் தினம்

27 நட்சத்திரங்களில் இரண்டே நட்சத்திரங்களுக்கு மட்டுமே (திரு+ஆதிரை, திரு + ஓணம்) திரு என்ற சிறப்பு அடைமொழி உண்டு. இது பற்றி காஞ்சி மஹா ஸ்வாமிகள் ஆற்றிய சொற்பொழிவினைப் படிக்க)

புனர்பூசம் = கழை, கரும்பு, ஆவனம், ஏரி, அதிதி நாள், பிண்டி, மூங்கில், பாலை;

பூசம் = கொடிறு, வண்டு, காற்குளம், வியாழன் நாள் (புஷ்ய, திஷ்ய என்ற பெயர்கள் உண்டு), அண்டம், குருவின் நாள்;

ஆயில்யம் (ஆஸ்லேஷா) = அரவு நாள், கௌவை, பாம்பு;

மகம் = வேள்வி, வேட்டுவன், கொடுங்கம், வாய்க்கால், மாசி, முதலில் வரும் சனி, பிதிர் நாள், எழுவாயெழுஞ்சனி (திவாகர நிகண்டு)

பூரம் (பூர்வ பல்குனி) = எலி, கணை, இடை எழும் சனி, துர்க்கை, பகவதி, நாவிதன்;

உத்தரம் = மானேறு, கதிர்நாள், கடை எழும் சனி, பாற்குனி, மாரி நாள்;

அத்தம் (ஹஸ்த) = ஐவிரல், கைம் மீன் , களிறு காமரம், அங்கிநாள், கௌத்துவம், நவ்வி, கயினி

சித்திரை =நெய்ம்மீன், பயறு, அறுவை, நடுநாள், ஆடை, தூசு, சுவை, தச்சன், துவட்டா நாள், நேர்வான்;

சுவாதி = விளக்கு, வீழ்க்கை, வெறுநுகம், மரக்கால், காற்றினாள், முத்து, பவள, சோதி, அனில், காற்று;

விசாகம் = முறம், முறில், சுளகு, காற்றினாள், வைகாசி, அனில நாள், சேட்டை;

அனுஷம் = பனை, புள்தேள், நட்புநாள், புல், தாளி, பெண்ணை, தேள், போந்தை, மித்திர நாள்;

கேட்டை(ஜேஷ்டா) = தழல், துளங்கொளி,  வல்லாரை, இந்திரன் நாள், சேட்டை, வேதி, எரி, பின்று;

மூலம் = அன்றில்வில்குருகுகொக்குதேட்கடைசிலைஆனிஅசுர நாள்;

பூராடம் (பூர்வாஷாட) = உடைகுளம், முற்குளம், நீர்நாள்;

உத்திராடம் = ஆடி, கடைக் குளம், ஆனி, விச்சுவ நாள்;

சித்திரை (ஸ்பைகா) நட்சத்திரம்;

திருவோணம் = முக்கோல், உலக்கை, மாயோன் நாள், முக்கோல், சிரவணம், சோணை, வயிரம்;

அவிட்டம் (தனிஷ்டா) = பறவை, காக்கை, வசுக்கள் நாள், புள், ஆவணி

சதயம் (சதபிஷக்) = நீர்நாள், செக்கு, குன்று, போர், சுண்டன், வருணன் நாள்;

பூரட்டாதி = நாழி, முக்கொழுங்கோல் (பூர்வ ப்ரோஸ்தபத), புரட்டை

உத்திரட்டாதி = மன்னன், அறிவன் நாள், பிற்கொழுங்கோல் (உத்திரப் ப்ரோஸ்தபத);

ரேவதி = இரவி நாள், கலம், தோணி, நாவாய், தொழு, பஃறி, ஆ நாள், கடை நாள், சூலம், பெரு நாள், பூடா நாள், கடை மீன்;

என் கருத்துக்கள்:

ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் உரிய வேத கால தெய்வங்களின் பெயர்கள் இப்பட்டியலில் உள.

சில விண்மீன்களின் பெயர்கள் வேறு பல விண்மீன்களுக்கும் வரும்.

பல பெயர்கள் போலக் காணப்பட்டாலும் அவை எல்லாம் ஒருபொருள் குறித்த பல சொற்களே. எடுத்துக்காட்டாக தீ என்பதற்கான — அங்கி, அழல், தழல், எரி போன்ற பல சொற்களால் — கார்த்திகை நட்சத்திரம் குறிக்கப்படுவதைக் காண்க. ஆகவே பட்டியலைச் சுருக்க முடியும்.

மேலும் வட நாட்டில் நீண்ட காலமாக 27 நட்சத்திரங்களுக்கும் போடும் படமும் பல சொற்களும் ஒரே மாதிரி இருக்கின்றன.

பல நட்சத்திரங்கள், சில கிரகங்களுடனும், சில மாதப் பெயர்களுடனும் தொடர்பு படுத்திருப்பதை நோக்குக.

இதோ ஆங்கிலப் பெயர்கள்:–

1) Ashwini –Alpha, Beta –Aries அஸ்வினி

2) Bharani – No 28,29,41 Taurus பரணி

3) Krittika – Pleiades கார்த்திகை

4) Rohini – Aldebaran Hyades, Alpha, Theta, Gama, Delta and Epsilon Taurus ரோஹிணி

5) Mrigashirsha – Lambda, Phi 1, Phi 2, Orion மிருகசீர்ஷம்

6) Aardraa –Betelgeaux – Alpha Orion திரு ஆதிரை

7) Punarvasu – Castor, Pollux with Procyon Alpha, Beta, Gemini-Alpha Canis Minor respectively புனர் பூசம்

8) Pushya – Gama, Delta and Theta of Cancer பூசம்

9) Ashlesha – Delta, Epsilon, Eta, Rho and Zeta Hydra ஆயில்யம்

10) Maagha – Regulus, Alpha, Ela, Gama, Zeta My and Epsilon Leonis மகம்

11) Poorva Phalkuni – Delta and Theta Leo பூரம்

12) Utra Phalkuni – Beta and 93 Leo உத்தரம்

13) Hasta – Delta, Gama, Eta, Virgo ஹஸ்தம்

14) Chitraa – Spica, Alpha Virgo சித்திரை

15) Swaati – Arcturus – Alpha Bootes ஸ்வாதி

16) Vishaakha – Alpha, Beta etc Libra விசாகம்

17) Anuraadha – Beta, Delta, Pi –Scorpia அனுஷம்

18) Jyestha – Antares Alpha, Sigma Tau Scorpio கேட்டை

19) Mula – Scorpio, tail stars மூலம்

20) Poorvaashadaa – Delta and Epsilon Sagittarius பூராடம்

21) Uttaraashaada – Zeta and Omicron Sagittarius உத்திராடம்

22) Shraavanaa – Altair – Alpha Aquila திரு ஓணம்

23) Dhanishtha – Delphinus அவிட்டம்

24) Shatabhisak – Lambda Aquarius சதயம்

25) Poorva Bhaadrapada – Alpha and Beta Pegasus பூரட்டாதி

26) Uttara Bhaadrapada – Gama Pagasus and Alpha Andromeda உத்திரட்டாதி

27) Revathi – Zeta Piscum ரேவதி

–Subham—

Tags – முருகன், மோக்ஷ, மூககவி,  முத்ரா , மூலம் ,மூல நட்சத்திரம் HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 70; இந்து மத கலைச்சொல் அகராதி-70, 27 நட்சத்திரங்களின் பெயர்கள்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 68; இந்து மத கலைச்சொல் அகராதி-68 (Post No.15,821)

MEGADUTA OF KALIDASA 

Written by London Swaminathan

Post No. 15,821

Date uploaded in London –2 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மாதங்க

ஸம்ஸ்க்ருத்தில் யானை என்று பொருள்; ஒரு சுவையான கதை இதோ:

இந்தக் கதை மஹாபாரதத்தில் உள்ளது. ராமாயணத்திலும் கூட இவர் பெயர் வருகிறது ;ரிஷ்யமுக மலைக்கு அருகிலுள்ள இவருடைய ஆஸ்ரமத்துக்கு ராமனும் சீதையும் விஜயம் செய்தார்கள். சண்டாளனுக்குப் பிறந்த ஒருவன் பிராமணனாக வளர்க்கப்பட்டான்;அவன் ஒரு பெரிய கழுதைக் கும்பலை முரட்டுத்தனமாக மேய்த்துக் கொண்டிருந்தான்.  அப்போது தாய்க் கழுதை சொன்னது ; ஏய் கழுதைகளே; இதைவிட அதிகம் எதிர்பார்க்காதீர்கள்; ஏனெனில் நம்மை ஓட்டுபவன் பிராமணன் அல்ல; அவன் ஒரு சண்டாளனுக்குப் பிறந்தவன். இதைக் கேட்ட கழுதை ஒட்டி புத்திசாலிக் கழுதையே உனக்கு இது எப்படித் தெரியும்? என்று  கேட்டான் ; கழுதை சொன்னது : உன்னுடைய தாயார் போதையில் இருந்த போது ஒரு கீழ்ஜாதி அம்பட்டன் உன்னுடைய தாயைக் கட்டித் தழுவினான்; அதனால் பிறந்தவன்தான் நீ ; இதைக் கேட்ட சண்டாளன் பிராமணன்  ஆக மாறுவதற்கு நீண்ட காலம் தவம் செய்தான் அவனது தவத்தைக் கண்டு தேவர்கள் அஞ்சினர்; ஆயினும் இந்திரன் அவனுக்கு அனுமதி மறுத்தான். அவன் மீண்டும் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்தான் ; 1000 ஆண்டுகள் உருண்டோடின அவன் எலும்பும் தோலுமாக ஆனான். இந்திரனே வந்து அவனைத் தாங்கி நின்றான்; அப்போது அவனுக்கு சில வரங்களை அளித்தான்; “நீ பறவையாகப் பறக்கலாம்; நினைத்த வடிவத்தை எடுக்கலாம்; எங்கு சென்றாலும் உனக்கு மரியாதையும் கெளரவமும் கிடைக்கும்” என்றான் அவர்தான் மாதங்க முனிவர்.  

***

மேதாதிதி

காண்வ மகரிஷி குலத்தில் உதித்த வேத ரிஷி இவர். உபநிஷத்தில் இவரைப் பற்றிய கதை வருகிறது ; இவரது தவத்தைக் கண்டு மெச்சிய இந்திரன் இவரை தேவலோகத்துக்குக் கடத்திச் சென்றான் ; அப்போது அவரை செம்மறியாட்டு வடிவத்தில் கொண்டு சென்றான் (இதே போல கழுகு வந்து கனிமேட் GANYMEDE என்பவனைத் தேவலோகத்துக்குக் கடத்திச் சென்றதாக கிரேக்க புராணக் கதை ஒன்றும்  இருக்கிறது.

***

மேதாவி

பாலாதி என்ற ரிஷியின் புதல்வர் இவர்; தந்தை இயற்றிய கடும் தவத்தால் இவருக்கு ஒரு வரம் கிடைத்தது; அருகிலுள்ள மலை இருக்கும் வரை யாரும் இவரை வெல்லவோ கொல்லவோ முடியாது என்பது அந்த வரம்; மேதாவிக்கு அகந்தை அதிகரித்தது ; உடனிருந்த பிரமணர்களைக் கொடுமைப் படுத்தினான் ; அதைக் கண்ட தனுசக்ஷா என்ற பிராமணர், பலத்த கொம்புள்ள ஒரு செம்மறி ஆட்டினை உருவாக்கினார் அது அந்த மலையை முட்டி முட்டி மோதிச் சிதற அடித்தது ; மேதாவிக்கும் மரணம் சம்பவித்தது; மஹாபாரதத்தில் இந்தக் கதை உள்ளது.  பரத்வாஜ முனிவர் இந்த விஷயத்தை அவருடைய மகன் யவக்ரீடனுக்குச் சொல்லி, அகந்தை ஆளையே அழித்துவிடும் என்று அறிவுறுத்தினார்.

***

மேனகா

தேவலோகத்தில் வசிக்கும் அப்சரஸ் என்னும் அழகிகளில் ஒருவர் மேனகா; விச்வாமித்திரர் என்னும் க்ஷத்ரிய மன்னன், பிராமணன் ஆகி பிரம்ம ரிஷி பட்டம் பெறுவதற்கு கடும் தவம் இயற்றிக் கொண்டிருந்தார் ; அவருடைய தவத்தைக் கலைக்க இந்திரன் மேனகாவை அனுப்பினான் ; அவளும் வாயுதேவனிடம் பேசி ஒரு உடன்படிக்கை செய்தாள்; விசுவாமித்திர முனிவருக்கு முன்னால், சேட்டைகள் செய்தபோது வாயு தேவன் அவளுடைய ஆடைகளை அகற்றினான்; உடனே முனிவர் தவம் கலைந்து மேனகாவின் வலையில் விழுந்தார்; அவர்கள் இருவரும் குடும்பம் நடத்திய காலத்தில் பிறந்தவள்தான் சகுந்தலா என்ற பெண்;  பாரத நாட்டினை ஆண்டு பாரத நாடு என்ற பெயரினை நல்கிய பரதனின் தாயார் சகுந்தலை.

***

மேனா

ரிக்வேதத்தில் வரும் மேனா என்ற பெண், வ்ரிஷனஸ்வாவின் புதல்வி ஆவார் ;இந்திரன் அவளை விரும்பினான்; புராணத்தில் ஹிமவத்தின் மனைவி ; அவர்களுக்குப் பிறந்தவள் உமா , மற்றும் கங்கா ; மகன் பெயர் மைனாகம் (இந்திரன் என்பது ஒருவரைக் குறிக்கும் பெயர் அல்ல; மன்னன் என்ற பொதுப் பெயரில் வேத, இதிஹாச புராணங்களில் வருகிறது ; இமயமலையில் கங்கை நதி பிறக்கிறது என்பதை ஹிமவத்தின் மகள் கங்கை என்று புராணம் சொல்கிறது)

****

மேரு

பூமியின் நடுவிலுள்ள உயரமான மலை மேரு ஆகும் ; வட துருவத்தையும் மேரு என்று புராணங்கள் வருணிக்கின்றன;  மேரு மலையின் உச்சியில் ஸ்வர்கம் இருப்பதாகவும் சொல்லும்; இமயமலைக்கு அப்பால் இது இருக்கிறது ; சுமேரு , ஹேமாத்ரி /பொன்மயமான மலை, ரத்னசானு /நவரத்தின சிகரம், கர்ணிகாசலம்/ தாமரை மலை , அமராத்ரி /தேவர்கள் மலை, தேவ பர்வதம் என்ற பெயர்கள் மேருவுக்கு உள்ளன .

***

மிதிலை

ஜனகர் ஆட்சி செய்த விதேஹ நாட்டின் தலை நகரம் மிதிலாபுரி; இப்போதைய வடக்கு பீஹாருக்கு, வேத காலத்தில்  விதேஹம் என்ற பெயர்  இருந்தது மிதிலையில் பிறந்ததால் சீதா தேவிக்கு  மைதிலி என்று பெயர் ; இப்போதும் ஜனகரின் பெயரில் ஜனக்பூர் என்று இந்த ஊரினை அழைக்கிறார்கள் ; வேதாந்த விஷயங்களுக்குப் பெயர் பெற்ற நாடு விதேஹம்.

***

மிலேச்சர்

மிலேச்ச’ என்ற சொல் சங்க இலக்கியத்தில் முல்லைப் பாட்டில் வருகிறது. மகாபாரதம் முதல் பல சம்ஸ்கிருத நூல்களிலும் கல்வெட்டுகளிலும் வருகிறது. எல்லா இடங்களிலும் பாரத நாட்டைச் சாராத ‘அந்நியன்’ அல்லது ‘அந்நிய மொழி’ யைப் பேசுவோன் என்ற சொல்லிலேயே புழங்கியிருக்கிறது. யவனர்கள் எனப்படும் கிரேக்கர்கள் அல்லது ரோமானியர்களை இப்படி அழைத்தனர். படை எடுத்து வந்த முஸ்லீம்களையும் பிரிட்டிஷ்காரர்களையும் இப்படி அழைத்தனர்.

பலுச்சிஸ்தான் என்ற பகுதியில் வசித்தவர்களையும் இப்படி அழைத்தனர். பலுச்சி என்பது மிலேச்ச என்று மாறியது என்று சில மொழி இயல் அறிஞர்கள் வாதிடுவர். கிரேக்கர்களும் கூட தங்கள் இனத்தைச் சேராதோரை ‘பார்பேரியன்ஸ்’BARBARIANS (  காட்டுமிராண்டி ,நாகரிகமற்றவர், முரட்டுத்தனமானவர்,  அநாகரிகர்,  பண்பற்றவர்)  என்று அழைத்தனர். பிற்காலத்தில் இந்தச் சொல் அர்த்தம் மாறி தீய (காட்டுமிராண்டி) அர்த்தத்தில் மட்டும் வழக்கத்தில் வந்தது.

யாராவது ஏதாவது புரியாத விஷயத்தைச் சொன்னால் ஆங்கிலத்தில் “இட் இஸ் கிரீக் டு மீ” IT IS GREEK TO ME என்று சொல்லுவார்கள். இதற்கு கிரேக்க மொழி என்று பொருள் அல்ல. எனக்குப் புரியவில்லை என்று பொருள். ஆக இந்த இடங்களில் கிரீக், பார்பேரியன்ஸ் என்ற சொற்களை எப்படி அர்த்தம் செய்துகொள்கிறோமோ அப்படித்தான் நாமும் ‘மிலேச்ச’ என்ற சொல்லுக்குப் பொருள் காண வேண்டும்.சி ந்து சமவெளியை மிளக்கா என்று பாபிலோனியர்கள் அழைத்தனர் என்றும் களிமண் ஏடுகளில் மிளக்கா என்பது உள்ளது என்றும் சொல்லி சிந்து வெளி ஆய்வை திசை திருப்பிய அறிஞர்களும் உண்டு. முன் கூறியது போல இது பலுச்சிஸ்தான் என்னும் குறுகிய நிலப்பரப்பில் வாழ்ந்த ஒரு இனத்தை மட்டும் குறித்திருக்கலாம். ஆனால் பாரத நாடு முழுதையும் குறித்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை.

முல்லைப் பாட்டில் ரோமானிய மக்களைக் குறிக்கையில் வாய் பேசாதோர், ஊமை போன்று சைகை மொழியில் பேசுவோர் என்று மிலேச்ச என்ற சொல்லுக்குப் பொருள் கூறப்பட்டிருக்கிறது. ரிக் வேதத்திலும் கூட சிலரை வாய் பேசாதோர், மொழியே இல்லாதோர் என்றும் கூறியிருக்கின்றனர். இதன் பொருள் ‘நம் மொழியைப் பேசாதவர்’ என்பதே.

ஆனால் வெளிநாட்டு அறிஞர்கள் இது திராவிடர்களை வசை பாடியது என்றும் மிலேச்சர்கள் என்பவர்கள் திராவிடர்கள் என்றும் எழுதி குழப்பி இருக்கின்றனர்; மாபாரத ஆதி பர்வத்தில் அரக்கு மாளிகை கட்டிய எஞ்சினீயரை மிலேச்சன் என்றும் மாபாரத யுத்தத்தில் பங்குகொண்ட பல மன்னர்களை மிலேச்சர்கள் என்றும் சொல்லியிருக்கிறது. சேரன் செங்குட்டுவன் யவனர்களைப் பிடித்து மொட்டை அடித்து அவர்கள் தலையில் எண்ணை ஊற்றி அவமானம் செய்ததை பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரத்தில் காணலாம். சகரர், ஹூணர், கிரேக்கர்கள் ஆகியோரை வட மொழிக் கல்வெட்டுகளும் நூல்களும் மிலேச்சர்கள் என்று கொச்சையாகத் திட்டுவதையும் காணலாம்.

சுருக்கமாகச் சொன்னால் மிலேச்சர்கள் தமிழோ சம்ஸ்கிருதமோ பேசாதவர்கள், இந்து மத நம்பிக்கைகளுக்குப் புறம்பானவர்கள்  என்பதை 3000 ஆண்டு சொல் பிறப்பியல் ETYMOLOGY வரலாறு காட்டும்.

***

மேகநாதன்

ராவணனின் மூத்த மகன்.

ராமாயணத்தில் வரும் மேகநாதன், இலங்கையின் அரசனான ராவணன் -மண்டோதரி ஆகியோரின் மூத்த மகன் ஆவார். இவருக்கு இன்னொரு பெயர் இந்திரஜித். இவர் பிறந்தபோது இடியும் மின்னலும் முழங்கியதால் ‘மேகநாதன்’ என்ற பெயரும் , தேவர்களின் தலைவனான இந்திரனைப் போரில் வென்ற காரணத்தினால்  ‘இந்திரஜித்’ என்ற பெயரும் ஏற்பட்டன; இவருடைய வீர தீர போர்ச் செயல்களை கம்பனும் வால்மீகியும் வருணித்துள்ளார்கள்.

***

மேக தூதம்

காளிதாசன் உலகின் முதல்Tourist Guide டூரிஸ்ட் கைடு ; போகும் வழியில் உள்ள நகரங்களையும் காடு மலைகளையும் வருணித்து படிப்போருக்கு பூகோள, வரலாற்றுச் செய்திகளை  அளிக்கிறான்

மேலும் அவன்தான் முதல் பயணக்கட்டுரை (Travelogue Writer) எழுதியவன் என்றும் சொல்லலாம். மஹாபாரதம், ராமாயணத்தில் இது போன்ற வருணனைகள் இருந்தாலும் புராணக்கதைகளும் நம்ப முடியாத விஷயங்களும் இருக்கும்.

காளிதாசன் வானிலை இயல் மன்னன் (Meteorologist) . முதல் முதலில் (Mapped South West Monsoon) தென் மேற்குப் பருவக்காற்று விந்திய மலை முதல் இமய மலை வரையே எந்தப் பாதையில் செல்கிறது என்பதையும் காட்டுகிறான். பறவைகள் குடியேற்றம் (Bird Migration) பற்றியும் காளிதாசன் செல்கிறான் . பிற் காலத்தில் புறநானூற்றுப் புலவர் முதல் சத்திமுற்றத்துப் புலவர் வரை “நாராய், நாராய், செங்கால் நாராய்” (Northward Return Journey of MigratoryBirds) என்று பாட வழிவகுத்தார் இவ்வகையில் காளிதாசனின் மேக விடு தூது சிறப்புடைத்து. மேகம் மூலம் ஒரு யக்ஷன் தனது காதலிக்கு அனுப்பிய செய்தியைக் கொண்டது ஆகும்.

காளிதாசரின் ‘ஒரிஜினல் ஐடியா’ Original Idea வா  இந்த தூதுக் கவிதை; இல்லை. காளிதாசரின் நூல்களுக்கு பழங்காலத்தில்  75 பேருக்கும் மேலானோர் உரை எழுதினார்கள். அவர்களில் மிகவும் பிரசித்தமானவர் மல்லிநாதர். வால்மீகி முனிவரின் ராமாயணம்தான் காளிதாசருக்கு ஊற்றுணர்ச்சி தந்தது என்கிறார். ராமாயணத்தில் நாம் குரங்கு/ அனுமன் விடு தூதுக் கவிதையைக் காண்கிறோம். ராமன் அனுப்பிய செய்தியுடன் சீதையைச் சந்தித்து மோதிரத்தையம் கொடுத்து, மீண்டும் ‘குட் நியூஸ்’ Good News  கொண்டுவந்து ராமனிடம் சபாஷ் வாங்குகிறார் அனுமன். இந்த அனுமன் தூது – குரங்கு விடு தூதுதான் காளிதாஸருக்கு ஐடியா Idea கொடுத்தது என்பதற்கு மற்றும் ஒரு சான்று வால்மீகி ராமாயண கணையாழி போல காளிதாசரின் ஒவ்வொரு நாடகத்திலும் ஒரு மோதிரம் அல்லது நகை முக்கிய இடம் பெறும் . ஆக அவர் வால்மீகி தாசர் என்பது வெள்ளிடை மலை.

அப்படியானால் ராமாயணத்தில் வரும் அனுமன் தூது விடு தூதுதான் உலகின் முதல் தூதுக் கவிதையா? இல்லை .

ரிக் வேதத்தில் வரும் ‘நாய் விடு தூது’தான் உலகின் முதல் தூதுக் கவிதை. தூது என்பது ஸம்ஸ்க்ருதச் சொல். இதுபற்றி திருவள்ளுவரும் ஒரு அதிகாரம் எழுதியுள்ளார். தமிழ் மொழியில் நிறைய தூதுக் கவிதைகள் (Messenger Poems)  உள்ளன; தமிழர்களுக்கும் முன்னதாக இந்தத்துறையில் காளிதாசன் எழுதிய நூல் மேக தூதம் என்ற பெயரில் உலகப் புகழ் பெற்றது; இலக்கிய உலகத்தில் அந்த நூல் பெரும் புரட்சியை உருவாக்கியது. அவரைத் தொடர்ந்து பலரும் இப்படி முழு நீள தூதுக் கவிதை நூல்களை எழுதத் துவங்கினர்.

***

மித்ரன்

சூரியனின் பெயர்; ஒளி , நேர்மறை சக்தி, பகல்பொழுது என்று பொருள் .

வேத மந்திரங்களில் பெரும்பாலும் மித்ரனையும் வருணனையும் சேர்த்தே சொல்லுவர். உலகம் என்பது நேர்மறை, எதிர்மறை சக்திகளையுடையது. பூமி என்னும் காந்த மண்டலத்திலும் வட துருவம், தென் துருவம் என்று இருக்கும். மின்சாரத்திலும் பாஸிட்டிவ், நெகடிவ் அம்சங்கள் உண்டு. அப்பொழுதுதான் அது பூர்த்தியாகும். வேதத்தில் வருணன் என்பது இருளையும், கரு நீலக் கடலையும், குளிர்ச்சியையும் குறிக்கும். வேத மந்திரங்கள் இதைத் தெளிவாகக் கூறும்.

மித்ரன் என்பது பல பொருள்களில் வழங்கப்பட்டாலும் சூரியன் என்பதே அதிகம் புழங்கும் அர்த்தம்.

சூர்ய நமஸ்கார மந்திரங்களில் முதல் மந்திரம் மித்ராய நம: என்பதாகும்.

அர்த்த நாரீஸ்வர உருவத்திலும் உமையை கருப்பாகவும் சிவனை சிவப்பாகவும் காட்டுவர். சங்கர நாராயண உருவத்திலும் சிவனை சிவப்பாகவும் விஷ்ணுவை கார்மேனி வண்ணனாகவும் காட்டுவர். இவை அனைத்திலும் உள்ள பொருள் ஒன்றுதான். ஆக்க சக்தி அழிவு சக்தி இரண்டும் நிறைந்ததே இயற்கை. சிவனின்றி சக்தி இல்லை; சக்தி இன்றி சிவனில்லை.என்ன அதிசயம் என்றால் கி.மு.1400 வாக்கில் கையெழுத்திடப்பட்ட துருக்கி-சிரியா (Mitanni Treaty) பகுதி ஒப்பந்தத்திலும் மித்ர-வருணர்கள் உள்ளனர். இதனால் வேதங்களை எவரும் கி.மு 1400-க்கும் முன்னர்தான் வைக்க முடியும். வியப்பான விஷயம் என்ன வென்றால் இன்றும் பிராமணர்கள் நாள்தோறும் செய்யும் சந்தியா வந்தனத்தில் இந்த தெய்வத்தை வழிபடுகின்றனர்.

பாரசீக நாட்டிலிருந்து இதை பெற்ற ரோமானியர்கள் இதை ஒரு ரகசிய தெய்வமாக குகைகளில் வைத்து தவறான லீலைகளில் ஈடுபட துவங்கினர் பின்னர் புதிய கதைகளையும் உருவாக்கினர் ஐரோப்பா முழுதும் புதுப்புது மித்ரன் கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டுவருகின்றன ரோம் நகரில் மட்டுமே 700 மித்ரன் கோவில்கள்! இருக்கின்றன .

TO BE CONTINUED……………………….

TAGS- மித்ரன், மேக தூதம், மிலேச்சர், மாதங்க, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 68; இந்து மத கலைச்சொல் அகராதி-68, மேனகா

 Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-30; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,770)

Written by London Swaminathan

Post No. 15,770

Date uploaded in London –22 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருமாலிருஞ்சோலை (அ) அழகர் கோவில்

திருமாலிருஞ்சோலை  என்றால் பொதுமக்களுக்குத் தெரியாது ; இந்த இடத்தின் தற்போதைய பெயர் அழகர் கோவில் ; மலை அடிவாரத்தில் பெருமாள் கோயில்இருக்கிறது; மலையில் ஏறிச்  சென்றால் அறுபடை வீடுகளில் ஒன்றான முருகப்பெருமானின் பழமுதிர்ச் சோலையைத் தரிசிக்கலாம்  ; அதற்கும் மேலே மலையேறிச் சென்றால் நூபுர கங்கை என்னும் சின்ன அருவி; இதிலிருந்து ஒடிய சிலம்பாறு ஒருகாலத்தில் பெரிய நதியாக இருந்திருக்க வேண்டும் .

மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் அழகர் கோயில்  உள்ளது; அங்கு அழகர் மலையின் அடிவாரத்தில்  அமைந்துள்ள திருமால் கோயிலை திருமாலிருஞ்சோலை என்றும்  மாவிருங்குன்றம் என்றும் சோலை மலை என்றும் வைணவர்கள் அழைத்தார்கள்;  இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று.

கருவறையில் பெருமாள் ஸ்ரீபரமசுவாமி .

உற்சவ மூர்த்தி அழகர், அல்லது சுந்தரராஜப் பெருமாள்

 பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்க மன்னர்கள் ஆகியோரின் திருப்பணிகளை இக்கோயில் கொண்டுள்ளது.

தாயார் : ஸ்ரீ சுந்தர வல்லி

மூலவர் : திரு மாலிரும் சோலை நம்பி

மண்டலம் : பாண்டியநாடு

கடவுளர்கள்: கள்ளழகர் கல்யாணசுந்தரவல்லி

***

சித்திரைத்  திருவிழா

இந்த விழாவை தற்போதைய வடிவில் அமைத்த மன்னர்  திருமலை நாயக்கர் ஆவார் .மீனாட்சி திருக்கல்யாணம் (திருமணம்) விழாவையும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வையும் ஒரே திருவிழாவாக இணைத்தார்..

1. மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் 💍

மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில்-ல்

மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரரின் திருமணம் மிக விமர்சையாக நடைபெறும்.

2. தேர் திருவிழா

பெரிய தேரில் தெய்வங்கள் நகரை சுற்றி வருவது பக்தர்களுக்கு மிகப் பெரிய ஆனந்தம்.

3. அழகர் வருகை :அழகர் கோவிலிலிருந்து

கள்ளழகர் மதுரைக்கு வந்து, வைகை நதியில் இறங்குவது இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சி ஆகும் ; வரும்போதும் அழகர் திரும்பிப்போகும் போதும் பல லட்சம் மக்கள் கூடிக் கொண்டாடுவர்; முக்கியமாக கள்ளர் மரபினர் பழங்கால வேடம் அணிந்து தண்ணீர் பைகளிலிருந்து தண்ணீரைப்பீச்சி அடித்த வண்ணம் வருவார்கள் ;அதைக் காணக் கண்கோடி வேண்டும்

அழகர் தனது சகோதரி மீனாட்சியின் திருமணத்திற்கு வருகிறார். ஆனால் அவர் தாமதமாக வந்து, திருமணம் முடிந்துவிட்டதை அறிந்து, கோபத்தில் வைகை ஆற்றில் இறங்குவதாக நம்பப்படுகிறது.

இது சைவம் மற்றும் வைணவம் ஆகிய இரு சமயங்களின் ஒற்றுமையை காட்டுகிறது

வைகை ஆற்றின் கரையோரமுள்ள நூற்றுக் கணக்கான மண்டகப்படிகளில் மக்களுக்கு இலவச உணவுப் பிராசதம் கிடைக்கும்.

***

கோயில் கலைச் சிறப்புகள் :

முழுமை அடையாத இராஜ கோபுரம்

மூலவரின் கருவறை மீது எழுப்பப்பட்டுள்ள சோமசந்த விமானம் வட்ட வடிவமானது.

ஆரியன் மண்டபத்தில் கொடுங்கைகள் மற்றும் இசைத் தூண்கள் உள்ளன. இசைத் தூணின் உச்சியிலுள்ள சிங்கத்தின் வாயில், சுழலும் நிலையில் ஆனால் வெளியே எடுக்க முடியாதபடி உள்ளது.

திருக்கல்யாண மண்டபத்தில் நரசிம்மர் அவதாரம், கிருஷ்ணன், கருடன், மன்மதன், ரதி, திரிவிக்கிரமன் அவதாரம், இலக்குமி வராகமூர்த்தி ஆகிய பெயர்களைக் கொண்ட கற்றூண்களில் உள்ள சிற்பங்கள் நாயக்கர் கால சிறந்த படைப்புகளாகும்.

வசந்த மண்டபத்தில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கும் அழகிய ஒவியங்கள் உள்ளன.

கோயிலின் காவல் தெய்வம் பதினெட்டாம்படிக் கருப்பசாமி சந்நிதியில் உள்ள கோபுரம் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது.

இராயகோபுரம் திருமலை மன்னரால் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறா நிலையில் உள்ளது.

கோவிலைச் சுற்றி உள்கோட்டை மற்றும் வெளிக்கோட்டை எனப்படும் இரணியன் கோட்டை , அழகாபுரிக் கோட்டை அமைந்துள்ளது.

***

மதுரையில் வியாழன் ஞாயிற்றுக் கிழமைகளில் பெரிய சந்தையொன்று,  திலகர் திடலில் கூடும்; அப்போது நூற்றுக்கணக்கான மூலிகைகளும் கீரைவகைகளும் ஒரு பகுதியில் இருக்கும்; மாவடு விற்போர் அந்தந்த சீசனில் வருவார்கள்; இன்னுமொரு பக்கம் மாகாளிக்கிழங்கு குவிந்து கிடக்கும்; அத்தனையும் அழகர் மலையிலிருந்தது வந்தவை ; பிற்காலத்தில் ஆண்ட அரசியலவாதிகள் அந்த வாராந்திர மார்க்கெட்டை அடியோடு அழித்தார்கள். ஒரு காலத்தில் காடுகளும் ஆறுகளும் நிறைந்த இந்தப் பகுதி இப்போது நூற்றில் ஒரு சதவிகிதம் மிஞ்சி இருக்கிறது என்று சொல்லலாம்.

****

நாலாயிர திவ்ய பிரபந்தம்

முதல் ஆயிரம்—ஆண்டாள்–நாச்சியார் திருமொழி

586       சிந்துரச் செம்பொடிப் போல்

      திருமாலிருஞ்சோலை எங்கும்

இந்திர கோபங்களே

      எழுந்தும் பரந்திட்டனவால்

மந்தரம் நாட்டி அன்று

      மதுரக் கொழுஞ்சாறு கொண்ட

சுந்தரத்தோளுடையான்

      சுழலையினின்று உய்துங் கொலோ?            (1)

587       போர்க்களிறு பொரும்

      மாலிருஞ்சோலை அம் பூம்புறவில்

தார்க்கொடி முல்லைகளும்

      தவள நகை காட்டுகின்ற

கார்க்கொள் பிடாக்கள் நின்று

      கழறிச் சிரிக்கத் தரியேன்

ஆர்க்கு இடுகோ? தோழீ

      அவன் தார் செய்த பூசலையே             (2)

588       கருவிளை ஒண்மலர்காள்

      காயா மலர்காள் திருமால்

உரு-ஒளி காட்டுகின்றீர்

      எனக்கு உய் வழக்கு ஒன்று உரையீர்

திரு விளையாடு திண் தோள்

      திருமாலிருஞ்சோலை நம்பி

வரிவளை இற் புகுந்து

      வந்திபற்றும் வழக்கு உளதே?             (3)

589       பைம்பொழில் வாழ் குயில்காள்

      மயில்காள் ஒண் கருவிளைகாள்

வம்பக் களங்கனிகாள்

      வண்ணப் பூவை நறுமலர்காள்

ஐம் பெரும் பாதகர்காள்

      அணி மாலிருஞ்சோலை நின்ற

எம்பெருமானுடைய

      நிறம் உங்களுக்கு என் செய்வதே?             (4)

590       துங்க மலர்ப் பொழில் சூழ்

      திருமாலிருஞ்சோலை நின்ற

செங்கண் கருமுகிலின்

      திருவுருப் போல் மலர்மேல்

தொங்கிய வண்டினங்காள்

      தொகு பூஞ்சுனைகாள் சுனையிற்

தங்கு செந்தாமரைகாள்

      எனக்கு ஓர் சரண் சாற்றுமினே             (5)

591       நாறு நறும் பொழில்

      மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்

நூறு தடாவில் வெண்ணெய்

      வாய்நேர்ந்து பராவி வைத்தேன்

நூறு தடா நிறைந்த

      அக்கார அடிசில் சொன்னேன்

ஏறு திருவுடையான்

      இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ?             (6)

592       இன்று வந்து இத்தனையும்

      அமுது செய்திடப் பெறில் நான்

ஒன்று நூறாயிரமாக்

      கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன்

தென்றல் மணம் கமழும்

      திருமாலிருஞ்சோலை தன்னுள்

நின்றபிரான் அடியேன்

      மனத்தே வந்து நேர்படிலே             (7)

593       காலை எழுந்திருந்து

      கரிய குருவிக் கணங்கள்

மாலின் வரவு சொல்லி

      மருள் பாடுதல் மெய்ம்மைகொலோ?

சோலைமலைப் பெருமான்

      துவாராபதி எம்பெருமான்

ஆலின் இலைப் பெருமான்

      அவன் வார்த்தை உரைக்கின்றதே             (8)

594       கோங்கு அலரும் பொழில்

      மாலிருஞ்சோலையிற் கொன்றைகள்மேல்

தூங்கு பொன் மாலைகளோடு

      உடனாய் நின்று தூங்குகின்றேன்

பூங்கொள் திருமுகத்து

      மடுத்து ஊதிய சங்கு ஒலியும்

சார்ங்க வில் நாண்-ஒலியும்

      தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ?             (9)

595       சந்தொடு காரகிலும்

      சுமந்து தடங்கள் பொருது

வந்திழியும் சிலம்பாறு

      உடை மாலிருஞ்சோலை நின்ற

சுந்தரனைச் சுரும்பு ஆர்

      குழற் கோதை தொகுத்து உரைத்த

செந்தமிழ் பத்தும் வல்லார்

      திருமாலடி சேர்வர்களே             (10)

****

திருவாய்மொழி–பத்தாம் பத்து

மணத்தின் வாசியறிந்து, வேர் சூடுவார் மண்ணையும் சேர்த்துச் சூடுவர்.

அதுபோல் ஞானயிரின் ஞான பரிமளம் வீசும் தேகத்தை எம்பெருமான் விடுவதில்லை. பரம பக்தி சபலனான எம்பெருமான் ஆழ்வாரை இத்திருமேனியோடு பரமபதத்திற்கு அழைத்துச் செல்ல ஆசை கொண்டான்.

அந்த எம்பெருமானே திருமாலிருஞ்சோலை எம்பெருமான் என்று இப்பகுதி அறிவிக்கின்றது.

***

3733. செஞ்சொற் கவிகாள்!உயிர்காத்தாட்

செய்மின் திருமா லிருஞ்சேலை,

வஞ்சக் கள்வன் மாமாயன்

மாயக் கவியாய் வந்து,என்

நெஞ்சு முயிரு முள்கலந்து

நின்றார் அறியா வண்ணம்,என்

நெஞ்சு முயிரும் அவையுண்டு

தானே யாகி நிறைந்தானே.

திருமாலிருஞ்சோலையான் என் உயிரை உண்டுவிட்டான்

3734. தானே யாகி நிறைந்தெல்லா

உலகும் உயிரும் தானேயாய்,

தானே யானென் பானாகித்

தன்னைத் தானே துதித்து,எனக்குத்

தேனே பாலே கன்னலே

அமுதே திருமா லிருஞ்சோலை,

கோனே யாகி நின்றொழிந்தான்

என்னை முற்றும் உயிருண்டே..

ஆ!அம்மான் திருவருள் இருந்தவாறு என்னே!

3755. என்னை முற்றும் உயிருண்டென்

மாய ஆக்கை யிதனுள்புக்கு,

என்னை முற்றும் தானேயாய்

நின்ற மாய அம்மான்சேர்,

தென்னன் திருமா லிருஞ்சோலைத்

திசைகை கூப்பிச் சேர்ந்தயான்,

இன்னம் போவே னேகொலோ!

என்கொல் அம்மான் திருவருளே?

எம்பெருமான் என்னைக் கைவிடமாட்டான்

3736. நண்ணா அசுரர் நலிவெய்த

நல்ல அமரர் பொலிவெய்த,

எண்ணா தனகள் எண்ணும்நன்

முனிவ ரின்பம் தலைசிறப்ப,

பண்ணார் பாடல் இன்கவிகள்

யானாய்த் தன்னைத் தான்பாடி,

தென்னா வென்னும் என்னம்மான்

திருமா லிருஞ்சோ லையானே.

திருமால் என்னை ஆள்கின்றான்

3738. திருமா லிருஞ்சோ லையானே

ஆகிச் செழுமூ வுலகும்,தன்

ஒருமா வயிற்றி னள்ளேவைத்

தூழி யூழி தலையளிக்கும்,

திருமா லென்னை யாளுமால்

சிவனும் லெய்தி யடிபரவ

அருளை யீந்த அம்மானே.

எல்லா மூர்த்திகளின் மயக்கங்களையும் போக்குபவன் திருமால்

3739. ‘அருளை ஈயென் அம்மானே!’

என்னும் முக்கண் அம்மானம்,

தெருள்கொள் பிரமன் அம்மானும்

தேவர் கோனும் தேவரும்,

இருள்கள் கடியும் முனிவரும்

ஏத்தும் அம்மான் திருமலை,

மருள்கள் கடியும் மணிமலை

திருமா லிருஞ்சோ லைமலையே.

என்னை ஒரு நொடியும் பிரியாதவன் திருமால்

3740. திருமா லிருஞ்சோ லைமலையே

திருப்பாற் கடலே என்தலையே

திருமால் வைகுந் தமேதண்

திருவேங் கடமே எனதுடலே,

அருமா மாயத் தெனதுயிரே

மனமே வாக்கே கருமமே,

ஒருமா நொடியும் பிரியானென்

ஊழி முதல்வன் ஒருவனே.

மனமே!திருமாலை விடாமல் பிடி

3741. ஊழி முதல்வன் ஒருவனே

என்னும் ஒருவன் உலகெல்லாம்,

ஊழி தோறும் தன்னுள்ளே

படைத்துக் காத்துக் கெடுத்துழலும்.

ஆழி வண்ணன் என்னம்மான்

வாழி!மனமே கைவிடேல்

உடலும் உயிரும் மங்கவொட்டே

நானேயாகி என்னை அளித்தவன் திருமால்

3742. மங்க வொட்டுன் மாமாயை

திருமா லிருஞ்சோ லைமேய,

நங்கள் கோனே!யானே c

யாகி யென்னை யளித்தானே,

பொங்கைம் புலனும் பொறியைந்தும்

கருமேந் திரியும் ஐம்பூதம்,

இங்கிவ் வுயிரேய் பிரகிருதி

மானாங் கார மனங்களே.

3743. மானாங் கார மனங்கெட

ஐவர் வன்கை யர்மங்க,

தானாங் கார மாய்ப்புக்குத்

தானே தானே யானானை,

தேனாங் காரப பொழில்குருகூர்ச்

சடகோ பன்சொல் லாயிரத்துள்,

மானாங் காரத் திவைபத்தும்

திருமா லிருஞ்சோ லைமலைக்கே.

****

திவ்யதேச பாசுரங்கள்

71.  

உன்னையும் ஒக்கலையிற் கொண்டு தம் இல் மருவி*  உன்னொடு தங்கள் கருத்து ஆயின செய்து வரும்*

கன்னியரும் மகிழ கண்டவர் கண்குளிர*  கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி*

மன்னு குறுங்குடியாய்! வெள்ளறையாய்! மதில் சூழ்-  சோலைமலைக்கு அரசே! கண்ணபுரத்து அமுதே!*

என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை*  ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே  

258.  

சுற்றி நின்று ஆயர் தழைகள் இடச்*  சுருள்பங்கி நேத்திரத்தால் அணிந்து*

பற்றி நின்று ஆயர் கடைத்தலையே*  பாடவும் ஆடக் கண்டேன்*  அன்றிப் பின்-

மற்று ஒருவர்க்கு என்னைப் பேசலொட்டேன்*  மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால்*

கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக்*  கொடுமின்கள் கொடீராகிற் கோழம்பமே.*

338.  

அலம்பாவெருட்டாக்*  கொன்றுதிரியும் அரக்கரை*

குலம்பாழ்படுத்துக்*  குலவிளக்காய் நின்றகோன்மலை*

சிலம்பார்க்கவந்து*  தெய்வமகளிர்களாடும்சீர்*

சிலம்பாறுபாயும்*  தென்திருமாலிருஞ்சோலையே.  (2)

344.  

மன்னர்மறுக*  மைத்துனன்மார்க்கு ஒருதேரின்மேல்*

முன்னங்குநின்று*  மோழைஎழுவித்தவன் மலை*

கொன்னவில்கூர்வேற்கோன்*  நெடுமாறன்தென்கூடற்கோன்*

தென்னன்கொண்டாடும்*  தென்திருமாலிருஞ்சோலையே

345.  

குறுகாதமன்னரைக்*  கூடுகலக்கி*  வெங்கானிடைச்-

சிறுகால்நெறியே போக்குவிக்கும்*  செல்வன்பொன்மலை*

அறுகால்வரிவண்டுகள்*  ஆயிரநாமம்சொல்லிச்*

சிறுகாலைப்பாடும்*  தென்திருமாலிருஞ்சோலையே.

355.  

கனங்குழையாள்பொருட்டாக் கணைபாரித்து*  அரக்கர்தங்கள்-

இனம்கழுஏற்றுவித்த*  ஏழிற்தோள்எம்இராமன்மலை*

கனம்கொழிதெள்அருவி*  வந்துசூழ்ந்துஅகல்ஞாலம்எல்லாம்*

இனம்குழுஆடும்மலை*  எழில்மாலிருஞ்சோலையதே.

358.  

ஆயிரம்தோள்பரப்பி*  முடிஆயிரம்மின்இலக*

ஆயிரம்பைந்தலைய*  அனந்தசயனன்ஆளும்மலை*

ஆயிரம்ஆறுகளும்*  சுனைகள்பலஆயிரமும்*

ஆயிரம்பூம்பொழிலும்உடை*  மாலிருஞ்சோலையதே (2)

–subham—Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-30; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், திருமாலிருஞ்சோலை , அழகர் கோவில், சித்திரைத் திருவிழா , அழகர், வைகை 

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 64; இந்து மத கலைச்சொல் அகராதி-64 (Post.15,759)

Written by London Swaminathan

Post No. 15,759

Date uploaded in London –19 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மைத்ரேயி

Maitreyī (मैत्रेयी).—வேதகாலப் பெண் அறிஞரான மைத்ரேயி, பிரம்மவாதினியாகத் திகழ்ந்து சிறந்த தத்துவ விவாதங்களில் ஈடுபட்டவர் . கார்க்கி, சுலபா, ஆகியோருடன் இணைந்து, வேத காலத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராகக் கல்வியிலும் அறிவிலும் சிறந்து விளங்கினர் என்பதை மைத்ரேயி உறுதிப்படுத்துகிறார். மைத்ரேயி–யாக்ஞவல்கியர் தத்துவ உரையாடல் பற்றிய தகவல் பிருஹதாரண்யக உபநிஷத்தில் உள்ளது.

பிரம்மரிஷியான யாக்ஞவல்கியருக்கு மைத்ரேயி மற்றும் காத்யாயனி என இரு மனைவியர் இருந்தனர். தத்துவ ஞானத்தை நாடிய மைத்ரேயி மற்றும் இல்லற வாழ்வில் நாட்டம் கொண்ட காத்யாயனி, யாக்ஞவல்கியரின் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றினர். எதனால் பிரம்மத்தை அறிந்த்து பேரின்பம் அடையலாம் என்ற விவாதத்தில் மைத்ரேயி தனக்கு சொத்து சுக்கங்கள் வேண்டாம் என்கிறார் ; காத்யாயபி இல்லற இன்பத்தில் நாட்டம் கொள்கிறார் ; இது 3000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெண்களின் வேதாந்த வேட்கையை அறிய உதவும் சம்பாஷணை ஆகும் .

***

மலையத்வஜ பாண்டியன்  / மீனாக்ஷி 

மஹாபாரதம், திருவிளையாடல் புராணம் ஆகியவற்றில் மலையைக் கொடியாகக்கொண்ட பாண்டிய மன்னன் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன ; சூர சேன மன்னனின் மகளான காஞ்சன மாலாவை மணந்துகொண்ட அவருக்கு குழந்தைகள் இல்லாததால் அஸ்வ மேத யாகம் செய்தார் ; யாகத்தீயில் மூன்று மார்பகங்களுடன் பெண் குழந்தை தோன்றியது ; தடாதகை என்று பெயர் சூட்டினார்கள்; அவளுக்குரிய ஆண்மகனைச் சந்திக்கும்போது மூன்றாவது முலை மறைந்துவிடும் என்ற அசரீரி கேட்டது ; அதுபோலவே எட்டுத் திக்குகளில் திக் விஜயம் மேற்கொண்ட அவர் சுந்தரேஸ்வரர் என்ற சிவபெருமானைக்கண்டவுடன் அந்த மார்பகம் மறைந்தது. நாணித் தலை குனிந்து அவருக்கு மாலையிட்டாள். இன்றும் மதுரை மீனாட்சி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவில் மீனாட்சியின் திக் விஜயம், கல்யாணம் ஆகியன நடைபெறுகின்றன;  மீனாட்சி பற்றி பண்டேயா  அரசி என்று 2300 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க தூதன் மெகஸ்தனிஸ் குறிப்பிட்டுள்ளார் . 1400 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரைக்கு வந்த திருஞான சம்பந்தர் அங்கயற் கண்ணி என்று மீனாட்சியின் பெயரைத் தமிழ் மொழியில் பாடிப் பரவியுள்ளார்

மகாபாரதப் போரில், பாண்டவர்களுக்கு ஆதரவாக கலந்துகொண்டு, போரிட்ட மலையத்வஜனை அஸ்வத்தாமன் கொன்றான்

****

மாளவிகாக்னிமித்ரம்

காளிதாசனின் மூன்று நாடகப் படைப்புகளில் மாளவிகாக்னிமித்ரம்  முதலாவது நாடகம் என்று ஆராய்ச்சியார்கள் கருதுகிறார்கள்.

சம்ஸ்கிருத மொழியில் அந்தக்  காலத்திலேயே  640 நாடகங்கள் இருப்பதை ஜவஹர்லால் நேரு பெருமையுடன் குறிப்பிட்டு எழுதியுள்ளார்  அக்கினி மித்ரன் என்ற அரசனுக்கும் மாளவிகா என்ற பணிப்பெண்ணுக்கும் இடையேயான காதல் கதை இது . இதில் அக்கால ஓவியக் கலை, நாடகக் கலை பற்றிய அரிய செய்திகள் கிடைக்கின்றன முதல் மனைவியான தாரிணியின் பணிப்பெண்களின் ஓவியத்தைக் கண்டவுடன் காதல் மலர்கிறது ; இருவர் உதவியுடன் காதல் கைகூடும் தருணத்தில் மாளவிகாவும் ராஜ குமாரி என்ற சர்ப்ரைஸ் செய்தி கிடைக்கிறது; தாரிணியும் மனமுவந்து கல்யாணத்துக்குச் சம்மதிக்கிறாள்; இந்து ராஜாக்கள் ஒருவருக்கு மேல் இன்னும் பலரைக்  கல்யாணம் கட்ட சாஸ்திரம் அனுமதிக்கிறது. ராம பிரான் ஒருவன் மட்டுமே ஏகபத்தினி விரதன் என்பதால் உலகமே அவனைப்  பாராட்டுகிறது.

***

மனஸ்/  மனம்

சங்க காலம் முதல் திருக்குறள் காலம் வரை- இன்று வரை –தமிழ் மொழியில் பயன்படுத்தும் இந்த ஸம்ஸ்க்ருதச்  சொல்லியிருந்தான் மைண்ட் MIND என்னும் ஆங்கிலச் சொல்லும் பிறந்தது; இதன் பொருள் – உள்ளம், எண்ணம், கிடக்கை , புத்திசாலித்தனம், புரிந்து கொள்ளும் உணர்வு, விருப்பம்  என்பன ஆகும் ; மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது தமிழ்ப் பழ மொழி . மனம் ஒரு குரங்கு என்று பல அடியார்களும் பாரதியாரும் பாடியுள்ளனர்.

***

மண்டிலம்/ மண்டலம்

Maṇḍala (मण्डल).— வட்டமான , அல்லது ஒரு எல்லைக்குட்பட்ட பகுதி ; கண்ணாடி. ரிக் வேதத்தில் பத்து மண்டலங்கள்  (பிரிவுகள் ) உள்ளன . காலக்கணக்கீட்டில் 41 நாட்கள் ; சபரி மலை ஐயப்ப பக்தர்கள், ஆந்திரத்தில் விஜயவாடா கனக துர்க்கை அம்மன் கோவில் தீட்சை  விரதம் இருப்போர் 40, 41, 44 நாட்கள் என்ற பல கால எண்ணிக்கையை  மண்டலம் என்பார்கள்.

Maṇṭilam (மண்டிலம்) noun < maṇḍala.

1. See மண்டலம்² [mandalam²], 1,

2. (பிங்கலகண்டு) செஞ்ஞாயிற்று . . . பரப்புச் சூழ்ந்த மண்டிலமும் [(pingalagandu) sejnayirru . . . parappus suzhntha mandilamum] (புறநானூறு [purananuru] 30).

2. Coursing in a circle; வட்டமாயோடுகை. செலவொடு மண்டிலஞ்சென்று [vattamayodugai. selavodu mandilanchenru] (புறப்பொருள்வெண்பாமாலை [purapporulvenpamalai] 12, வென்றிப். [venrip.] 14).

3. Horse, as running in a circle; குதிரை. கழிப்பு லாய் மண்டிலங் கொட்பு [kuthirai. kazhippu lay mandilang kodpu] (இன்னா. [inna.] 35). (பிங்கலகண்டு [pingalagandu])

4. See மண்டலம்² [mandalam²],

12. (நாமதீபநிகண்டு [namathipanigandu] 732.)

5. The earth; பூமி. கடல்சூழ் மண்டிலம் [pumi. kadalsuzh mandilam] (குறுந்தொகை [kurundogai] 300).

6. Sun; சூரியன். பகல்செய் மண்டிலம் பாரித்தாங்கு [suriyan. pagalsey mandilam parithangu] (பத்துப்பாட்டு: பெரும்பாணாற்றுப்படை [pathuppattu: perumbanarruppadai] 442).

7. Moon; சந்திரன். செய்வுறு மண் டிலம் [santhiran. seyvuru man dilam] (கலித்தொகை [kalithogai] 7).

8. See மண்டலம்² [mandalam²],

14. (பிங்கலகண்டு [pingalagandu])

9. Air, atmosphere, heavens; ஆகாயம். (பிங்கலகண்டு) [agayam. (pingalagandu)]

10. Mirror; கண்ணாடி. மையறு மண்டிலம்போலக் காட்ட [kannadi. maiyaru mandilambolag katta] (மணிமேகலை [manimegalai] 25, 137).

11. See மண்டலம்² [mandalam²],

7. மண்டிலத் தருமையும் [mandilath tharumaiyum] (தொல். பொ. [thol. po.] 41).

12. See மண்டலம்² [mandalam²],

8. (பிங்கலகண்டு [pingalagandu])

13. (Nāṭya.) A posture. See மண்டிலநிலை [mandilanilai],

1. (சிலப்பதிகாரம் அரும்பதவுரை [silappathigaram arumbathavurai] 8, 25, உரை. [urai.]) (பிங்கலகண்டு [pingalagandu]

***

மாந்தாதா

தமிழ் நாட்டினை ஆண்ட சோழர்கள் தமிழர்கள் அல்ல ; புறநானூறும் சிலப்பதிகாரமும் வடமேற்கு இந்தியாவை அந்த சிபிச் சக்ரவர்த்தியைத் தங்களுடைய முன்னோர்கள் என்று பெருமையுடன் செப்புகின்றன ; அந்த வழியில் வந்த மாந்தாதா , முசுகுந்தன் ஆகியோரையும் கல்வெட்டுகளும் சாசனங்களும் கம்பராமாயணமும் சூரிய குல ராஜாக்களாகப்  போற்றுகின்றன ; மாந்தாதா , ஒரு ஆணுக்குப் பிறந்தவன் என்ற சுவையான கதை மகாபாரதத்தில் உள்ளது ; ஆணுக்கு குழந்தை பிறந்த செய்தி அபூர்வமாக மேலை நாடுகளிலும் நடந்துள்ளது.

யுவனாஸ்வன் மகனான மாந்தாதா தேவர்களையும், அசுரர்களையும், மனிதர்களையும் வீழ்த்தியவனாவான். தேவர்களான அசுவினி இரட்டையர்கள், அவனை {மாந்தாதாவை} அவனது தந்தையின் {யுவனாஸ்வனின்} கர்ப்பப்பையில்  இருந்து அறுவைச்  சிகிச்சையின் மூலம் வெளியே எடுத்தனர். (மாந்தாதாவைக் குறித்து வனபர்வம் பகுதி 126ல் குறிப்பிடப்பட்டுள்ளது).

ஒரு சமயம் மன்னன் யுவனாஸ்வன், காட்டில் மானைத் துரத்திச் சென்ற போது, மிகவும் தாகமடைந்தான்,  ஒரு வேள்விசாலையை அடைந்து, அங்கே சிதறிக் கிடந்த புனிதமான வேள்வி நெய்யைக் குடித்தான் ;இதனால் அந்த மன்னன் கருவுற்றான்.

 தேவர்கள், தங்களுக்குள் ஒருவருக்கொருவர், “இந்தக் குழந்தை எதனால் உயிர் வாழும்?” என்று வினவினர். அப்போது இந்திரன், “குழந்தை என் விரல்களைச் சப்பட்டும்  ” என்றான். இதனால் மாந்த்தாதா என்ற பெயர் ஏற்பட்டது  இவன் ராம பிரான், சோழர்கள் ஆகியோர் தோன்றிய சூரியகுல மன்னன் ஆவான் ; முசுகுந்தன் கதை பாகவதத்தில் உள்ளது.

***

மங்கலதேவி/ கண்ணகி

வரலாற்றுச் சிறப்புமிக்க மங்களதேவி/  கண்ணகி கோயில் தமிழக-கேரள எல்லையில் உள்ள வண்ணாத்தி பாறையில் அமைந்துள்ளது.

கர்நாடக மாநில மங்களூரிலும் , கேரளத்திலும் மங்கலதேவி  கோவில்கள் உள்ளன  . இவற்றில் கேரளத்திலுள்ள கோவில் பத்தினித் தெய்வமான, சிலப்பதிகார கண்ணகிக்கு எழுப்பப்பட்ட கோவில் என்று மக்கள் நம்புகின்றனர் ; கண்ணகியின் கணவனான கோவலனைப் பாண்டிய மன்னன் தவறுதலாகக் கொல்ல உத்தரவிட்டதால், வெகுண்ட கண்ணகி மதுரையின் ஒரு பகுதியை எரித்துவிட்டு, கேரளத்துக்கு வந்து புஷ்பக வியமானத்தில்கோவல  னுடன் சொர்க்க லோகம் சென்றதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. தமிழக – கேரளா எல்லையில் உள்ள இடுக்கியில் 5000 அடி உள்ள மலை பகுதியில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கோவில் (சித்ரா பௌர்ணமி) திறக்கப்படும் .

***

மங்கள சூத்ரம்

இது ஹிந்துப்  பெண்கள் திருமணத்தின் போது அணியும் மஞ்ச்சள் குங்கும தடவிய புனிதமான கயிறு ஆகும் ; தாலி என்ற சொல்லும் இதைக் குறிக்கும். சேயிழை , அணியிழை என்ற பெயர்களில் சங்கத் தமிழ் நூல்கள் இதைப் போற்றுகின்றன ; கணவன் உயிருடன் இருக்கும்வரை இதைப் பெண்கள் அணிவார்கள்

***

மாங்கல்யதாரணம் 

தாலி என்னும் மங்கல சூத்ரத்தை அணியும் கல்யாண நிகழ்ச்சிக்கு மாங்கல்ய தாரணம் — மாங்கல்யத்தைத் தரித்தல்/ அணிதல் – என்று பெயர் .

***

மணிபல்லவம்

மணிபல்லவம் என்பது ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை காப்பியத்தில் குறிப்பிடப்படும் ஒரு புராணத் தீவு ஆகும்.இலங்கையில் யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள நயினாத் தீவுதான் மணிபல்லவம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

 மணிமேகலா தெய்வம், மணிமேகலையை பூம்புகாரிலிருந்து இந்தத் தீவிற்கு அழைத்துச் சென்றது. புத்தரின் பாதச்சுவடுகள் பொறிக்கப்பட்ட அற்புதம் வாய்ந்த தர்மபீடிகை இங்கு உள்ளது. இதன் மீதுள்ள மலர்களைத் தொழுதால் முற்பிறவி நினைவுகள் தோன்றும் ; மக்களின் பசியைப் போக்கும் ‘அமுதசுரபி’ என்ற அட்சய பாத்திரம் இந்தத் தீவில் உள்ள கோமுகி என்னும் பொய்கையிலிருந்து தோன்றியது என்று மணிமேகலை குறிப்பிடும்.

மேலும், இது பிரபல எழுத்தாளர் தீபம் நா. பார்த்தசாரதி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலின் பெயரும் ஆகும்.மணிபல்லவம் நாவல் – காவிரிப்பூம்பட்டினம், இலங்கை மற்றும் சோழ நாட்டுப் பின்னணியில் எழுதப்பட்ட வரலாற்று நாவல் ஆகும்.

***

மனிஷா பஞ்சகம் 

மனீஷா பஞ்சகம் என்பது ஆதிசங்கரரால் அருளப்பட்ட ஐந்து ஸ்லோகங்களைக் கொண்ட ஒரு புகழ்பெற்ற தத்துவ நூலாகும். “மனீஷா” என்றால் உறுதியான ஞானம் அல்லது தெளிந்த அறிவு என்று பொருள். அனைத்து உயிர்களிலும் இறைவன் சமமாக இருக்கிறான் என்ற அத்வைத தத்துவத்தை இது விளக்குகிறது.தோன்றிய வரலாறு:ஆதிசங்கரர் காசியில் கங்கையில் நீராடிவிட்டுத் திரும்பும்போதுஎதிரே நாய்களுடன் ஒரு சண்டாளர் (புலையன்) வந்தார். சங்கரரின் சீடர்கள் அவரை விலகிச் செல்லுமாறு கூறினர். அதற்கு அந்தச் சண்டாளர், “இந்த உடலை விலகிப் போகச் சொல்கிறீர்களா அல்லது உடலுக்குள் இருக்கும் ஆன்மாவை விலகிப் போகச் சொல்கிறீர்களா? உடலால் அனைவரும் சமம் தானே?” என்று ஒரு தத்துவக் கேள்வியைக் கேட்டார்.அவருடைய கேள்வியின் ஆழத்தைப் புரிந்துகொண்ட ஆதிசங்கரர், சாதி, மத பேதங்களைக் கடந்து, அனைத்து உயிர்களிலும் பரம்பொருள் நிறைந்திருக்கிறது என்ற உண்மையை உணர்ந்தார். அந்த ஞானத்தை வெளிப்படுத்தும் விதமாக ஐந்து ஸ்லோகங்களை இயற்றினார்.பிரம்மத்தை (இறைவனை) உணர்ந்த ஞானி, அவன் எந்த சாதியாக இருந்தாலும், அவனே தனக்கு குரு என்று ஆதிசங்கரர் இந்த நூலில் கூறுகிறார்.பிரம்மமே உண்மை: இந்த உலகம் மாயையானது, எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கும் சைதன்யம் (உயிர்) ஒன்றே என்பதை இந்த ஸ்லோகங்கள் வலியுறுத்துகின்றன.ஒவ்வொரு ஸ்லோகத்தின் முடிவிலும், “இதுவே எனது உறுதியான அறிவு” (மனீஷா மம) என்று ஆதிசங்கரர் பாடியுள்ளார்.இந்த நூலின் மூல ஸ்லோகங்கள் மற்றும் விளக்கங்களைப் படிக்க, Vaidika Vignanam வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.

புலையனாக வந்தது வேத வியாசர் என்றும் அவருடன் வந்த நான்கு நாய்கள்  நான்கு வேதங்கள் என்றும் உரைகாரர்கள் விளம்புவர்.

***

மன்மதன்  / மதன/ மாரன்/காம தேவன்

காதல் தெய்வத்தின் பெயர் ; மனைவி ரதி தேவி;  அவருடைய கொடி- மகரக் கொடி; அதாவது முதலை என்றும் சுறாமீன் என்றும் சொல்வர். சங்கத் தமிழ் இலக்கியத்தில் மன்மதனைப் பற்றிய குறிப்புகள் உள. தாரகாசுரனை அழிக்க கார்த்திகேயன் என்னும் முருகன் பிறக்க வேண்டும் என்றும் அதற்கு சிவனும் பார்வதியும் முனைய வேண்டும் என்றும் தேவர்கள் திட்டமிட்டனர் . மன்மதனை அனுப்பி ஐந்து மலர்க்கணைகளை எய்தி காம உணர்வு எழுப்புவதற்கு சிவ பெருமானிடம் அனுப்பினார்கள் சிவன் நெற்றிக் கண்ணைத்  திறக்கவே காம தேவன் சாம்பலானான் ; ரதி அழுது புலம்பவே அவன் அனங்கனாக  (உடல் அற்ற / உருவம் இல்லாத) மனித உலகில் சஞ்சரிப்பான் என்று வரம் அளித்தார் ; இன்றும் எல்லோருக்கும் காம உணர்வினை ஏற்படுத்துபவன் அவன்தான்.

****

மந்திரம்

மனதில் தியானித்தால் அவர்களைக் காப்பாற்றும் கருவி என்பது சொல்லின் பொருள் 

Manas: Meaning “mind” Trai or Tra: Meaning “tool,” “instrument,” or “protection

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும். (குறள் 28

பொருள்:  நிறைவான சொல் ஆற்றல்கொண்ட சான்றோர்களின் –அதாவது ரிஷி முனிவர்களின்— பெருமையை, இந்த உலகத்தில் அவர்கள் அருளிய மந்திரச் சொற்களே (மறைமொழி)  எடுத்துக் காட்டிவிடும். இது தொல்காப்பியத்திலும் இருக்கிறது .

நான்கு வேதங்களிலும் உள்ள காயத்ரீ மந்திரமும் ஓம் என்னும் பிரணவமும் எல்லோருக்கும் பொதுவானது .

அகராதியில் மந்திரம் (Mantra) கடவுளை வழிபடவோ அல்லது தியானிக்கவோ திரும்பத் திரும்ப உச்சரிக்கப்படும் புனிதமான சொல், வாக்கியம் அல்லது ஓசை (எ.கா: ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய .

ஏனைய பொருள்- மந்திராலோசனை : இரகசிய விவாதம் (Counsel): அரசர்கள் அல்லது தலைவர்கள் கூடிப் பேசும் இரகசிய ஆலோசனை அல்லது அமைச்சரவை சபை.

 (Slogan): ஒரு நபர் அல்லது குழு தங்களின் அடிப்படை நம்பிக்கையாக அல்லது குறிக்கோளாகக் கொண்டு அடிக்கடி உச்சரிக்கும் வாசகம் (எ.கா: “வாடிக்கையாளரே தெய்வம்”).

மறைபொருள் / சூனியம் (Magic/Spell): ஆன்மீக அல்லது மாந்திரீக சக்திகளைக் கொண்டதாக நம்பப்படும் மந்திரச் சொற்கள்

மந்திரம் என்பது சில குறிப்பிட்ட ஒலிகள், வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களை மீண்டும் மீண்டும் உச்சரிப்பதன் மூலம் மனதை ஒருமுகப்படுத்தி, நேர்மறை ஆற்றலையும் அமைதியையும் பெற உதவும் ஒரு ஆன்மீகச் சொல்லாகும்.  மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பிரபலமான சில மந்திரங்கள்:ஓம் (பிரணவ மந்திரம்): இதுவே பிரபஞ்சத்தின் ஆதி ஒலி. மன அமைதிக்கு இது மிகச் சிறந்ததாகும்.ஓம் நம சிவாய: இது அறியாமையை அகற்றி ஞானத்தையும், முக்தியையும் தரக்கூடிய பஞ்சாட்சர மந்திரமாகும்.ஓம் சரவணபவ: முருகப் பெருமானின் அருள் பெறவும், தடைகள் நீங்கவும் உச்சரிக்கப்படும் ஆற்றல் மிக்க மந்திரம்.

வைணவர்களின் முக்கிய மந்திரம்– ஓம் நமோ நாராயணாய .

****

மனு /  மன்வந்தரம்

மனித குலத்தைத் தோற்றுவித்தவர் மனு; ஒவ்வொரு மன்வந்தரத்திலும் ஒரு மனு வருவார் ; இப்போது நாம் வைவஸ்வத மனுவின் ஆட்சியில் உள்ளோம்; பிராமணர்களும் ,புரோகிதர்களும் பூஜைக்கு முன்னர் இதைச் சொல்லி பூஜை அல்லது சடங்குங்களைத் துவங்குவர் ; மன்வந்தரம் என்பது குறிப்பிட்ட மனுவின் ஆட்சிக்காலம்.

மன்வந்தரம் 

இந்து சமய காலக் கணக்கீட்டின்படி, மனிதகுலத்தின் மூதாதையான ஒரு மனுவின் (Manu) ஆட்சிக்காலம் மன்வந்தரம் (Manvantara) எனப்படுகிறது. ஒவ்வொரு மன்வந்தரமும் ஒரு குறிப்பிட்ட மனு, சப்தரிஷிகள், மற்றும் இந்திரன் ஆகியோரின் கீழ் இயங்குகிறது.: ஒரு கல்பத்திற்கு 14 மன்வந்தரங்கள் உள்ளன.தற்போதைய காலம்: நாம் தற்போது 7-வது மன்வந்தரமான ‘வைவஸ்வத மன்வந்தரத்தில்’ வாழ்ந்து வருகிறோம்..

கால அளவு: ஒரு மன்வந்தரம் என்பது 71 சதுர யுகங்களைக் கொண்டது. அதாவது பிரம்மாவின் ஒரு நாள் .

14 மனுக்கள் பெயர்கள்

சுவாயம்புவ மனு,

சுவாரோசிஷ மனு,

உத்தம மனு,

தாமச மனு,

ரைவத மனு,

சாக்ஷுஷ மனு,

வைவஸ்வத மனு (நாம் தற்போது இருக்கும் காலம்),

சாவர்ணி மனு,

தக்ஷ சாவர்ணி மனு,

பிரம்ம சாவர்ணி மனு,

தர்ம சாவர்ணி மனு,

ருத்ர சாவர்ணி மனு,

தேவ சாவர்ணி மனு (அ) ரௌச்ய மனு,

இந்திர சாவர்ணி மனு

***

மனு ஸ்ம்ருதி

முரண்பட்ட பல ஓலைச் சுவடிகளை ஆராய்ந்து வெள்ளைக்காரர்கள் கொடுத்த கல்கத்தா சுவடியின் பதிப்புதான் தமிழிலும் ஆங்கிலயத்திலும் இப்போதுள்ளது; இதில் சூத்திரர்களுக்கு எதிரான 40 ஸ்லோகங்கள் சுங்க வம்ச காலத்தில் சேர்க்கப்பட்டவை; அதை வெள்ளைக்கார்கள் அப்படியே வைத்துக்கொண்டனர் ; ஆகையால் இப்போதைய பதிப்பு ஒருதலைச் சார்பானது ; நமபத்தக்கதல்ல.

மனு பற்றிய குறிப்புகள் ரிக் வேதத்திலேயே வருவதாலும்,மனு சரஸ்வதி நதி தீரம் பற்றிப் பேசுவதாலும், சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் பற்றி எதுவும் பேசாததாலும் அவர் ஹமுராபி (Hamurabi, 1810 BCE) போன்றோருக்கு முந்தியவர் என்பதில் ஐயமில்லை. ஆனால் காலப்போக்கில் அதில் புதுச் சரக்கு சேர்ந்தது என்பதில் ஐயமில்லை. மனு நீதி நூலை முழுதுமாகப் படிப்போருக்கு முரண்பட்ட சில விஷயங்கள் வருவதைக் காணலாம்.. காந்தி போன்றோர் இதிலுள்ள முரண்பட்ட விஷயங்களை ஒதுக்கினால் இது மிகப்பெரிய படைப்பு என்று சொல்லி ஏற்றுக்கொண்டனர்.

மனு நீதி நூலில் உள்ள மொத்த சம்ஸ்கிருத ஸ்லோகங்களின் எண்ணிக்கை–2647

மொத்தமுள்ள அத்தியாயயங்கள்- 12

வெளிநாட்டினர் கருத்துப் படி இதன் காலம் – கி.மு இரண்டாம் நூற்றாண்டு; என்னுடைய கணிப்பு; கி.மு 2000க்கு முந்தியது.

முதல் அத்தியாயத்தில் வரும் விஷயங்கள்

மனுவின் சிறப்பு

வேதத்தின் சிறப்பு

பிரளயம்

பிரபஞ்சத்தின் தோற்றம்- படைப்பு

நாராயண சப்,தத்தின் பொருள்

பிரம்மனின் தோற்றம்

மஹத் தத்துவம் முதலான சிருஷ்டி

தேவர் முதலானோரின் தோற்றம்

பிராணிகளின் தொழில்

விராட புருஷனின் தோற்றம்

மநுப் பிரஜாபதியின் தோற்றம்

மரீசி முதலானோரின் தோற்றம்

சராசரங்க ளின் உற்பத்திக் கிரமம்

தினப் பிரளயம்

மஹாப் பிரளயம்

இந்த நூல் தோன்றிய வரலாறு

காலக் கணக்கு

யுகக் கணக்கு

மன்வந்தரக் கணக்கு

யுக தருமம்

வர்ண தர்மம்

பிராமணன் சிறப்பு

பெண்கள் பற்றி மனு எச்சரிக்கை

உலகின் முதல் விரிவான சட்டப் புத்தகத்தை எழுதிய மனு, பெண்களை மதிக்காதவர்கள் அடியோடு அழிந்து போவார்கள் என்று எச்சரிக்கிறார். பெண் பாவம் பொல்லாதது, பெண்களை அவமதிப்பது கடவுளுக்கும் பிடிக்காது என்று எச்சரிக்கிறார்.

‘’யார் நலம் பெற விரும்புகின்றனரோ, அவர்கள் எல்லாம் பெண்களை ஆராதிக்கவேண்டும். தந்தையர், சகோதரர், கணவன், மைத்துனர் ஆகியோர் பெண்களை மரியாதையாக நடத்த வேண்டும்’’. (மனு3-.55)

‘’எங்கே பெண்கள் மதிக்கப் படுகிறார்களோ அங்கே கடவுள் ஆனந்தம் அடைகிறார். எங்கே பெண்கள் மதிக்கப் படுவது இல்லையோ, அங்கே செய்யப்படும் புனிதச் சடங்குகள் பலன் இல்லாமல் போகும்’’. (மனு.3-56)

‘’உறவுக்கார பெண்கள் எங்கே கண்ணீர் வடிக்கின்றனரோ அங்கே  அந்தக் குடும்பம் அடியோடு நாசமாகும். எங்கே பெண்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அந்தக் குடும்பம் செழித்துத் தழைத்து ஓங்கி வளரும்’’(மனு.3-57

‘’எந்த வீடுகளில் பெண்கள் சரியாக நடத்தப் படவில்லையோ அந்த இடங்களில் பெண்களின் சாபம், மந்திர மாயா ஜாலத்தில் பொருள்கள் மறைவதைப் போல வீடுகளை முற்றிலும் அழித்துவிடும்’’(மனு.3-58)

‘’ஆகையால் யாரெல்லாம் நலம் பெறவும் வளம் அடையவும் விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாம் பெண்களை விழாக் காலங்களிலும், விடுமுறைக் காலங்களிலும் ஆராதிக்க வேண்டும். எப்படி? துணிமணிகள், நகைகள்,அறுசுவை உணவு படைத்துப் போற்றவேண்டும்’’(மனு.3-59)

மனுவை விட வேறு யார் பெண்களுக்கு இவ்வளவு ஆதரவு தர முடியும்? இருக்கிறார், ஒரு ஆசாமி, அவர் பெயர் வள்ளுவர். அவர் நம்மை மாயாஜால (சிலர் மூட நம்பிக்கை) உலகுக்கே அழைத்துச் செல்லுகிறார். பத்தினிப் பெண்கள் மழையைப் பெய் என்றால் பெய்யுமாம் (குறள் 55).

சதி அநசுயா, சத்தியவான் சாவித்திரி, சீதா தேவி கதைகளைப் படிப்பவர்கள் வள்ளுவனை நம்பியே ஆகவேண்டும். ‘’கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா’’? என்று முனிவர்களையே எள்ளி நகையாடும் புள்ளி மான்கள் உலவிய நாடல்லவா இது!

To be continued……………………………….

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 64; இந்து மத கலைச்சொல் அகராதி-64, மைத்ரேயி , மனு, மனு ஸ்ம்ரிதி, மங்கலதேவி, கண்ணகி, பெண்கள் பற்றி மனு, தாலி, மன்மதன்