Written by London swaminathan
Date: 31 JANUARY 2017
Time uploaded in London:- 18-50
Post No. 3593
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு — என்ற தலைப்பில் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 நான் எழுதி வெளியிட்ட கட்டுரையில், பாரதி, பாரதிதாசன், அருணகிரிநாதர், திருமூலர், நம்மாழ்வார், தொல்காப்பியர், நக்கீரர், தாயுமானவர், அப்பர், மாணிக்கவாசகர், திரைப்பட பாடலாசிரியர் மருதகாசி, திருவள்ளுவர் ஆகியோரின் பொன்மொழிகளை வெளியிட்டேன். இப்பொழுது சம்ஸ்கிருத நூல்களில் இன்பம், ஆனந்தம், மகிழ்ச்சி பற்றிய சில பொன்மொழிகளையும் பழமொழிகளையும் காண்போம்:-
எது அல்லது யார் இன்பம் தருவர்?
ஸ்வதாரா- தன்னுடைய மனைவி
போஜன- நல்ல சாப்பாடு
தனம் – பணம்
சந்தோஷஸ்த்ரிஷு கர்தவ்யஹ ஸ்வதாரே போஜனே தனே (சுபாஷித ரத்ன பாண்டாகாரம்)160-337
xxxx
ஆனந்தம்/ மகிழ்ச்சி எத்தனை வகை?
விஷயானந்த- உலக விஷயங்கள் தரும் இன்பம்
யோகானந்த – யோகத்தின் மூலம் பெறும் இன்பம்
அத்வைதானந்த- அத்வைதக் கொள்கையால் கிடைக்கும் இன்பம்( அஹம் பிரம்மாஸ்மி)
விதேஹானந்த- உடல் கடந்த இன்பம்
பிரம்மானந்த – இறை இன்பம்
விஷயே யோகானந்தௌ த்வாவத்வைதாந்த ஏவ ச
விதேஹானந்தோ விக்யாதா ப்ரஹ்மாந்தஸ்ச பஞ்சமாஹா
xxxx
சேரும்போது இன்பம், பிரியும்போது துன்பம்
அதிகாரம்- ஆட்சி அதிகாரம், பதவி அதிகாரம்
கர்பம்- கருவுருதல், கரு சிதைதல்
வித்தம்- பணம்
ஸ்வான மைதுனம்- நாய்களின் புணர்ச்சி
அதிகாரம் ச கர்பம் ச வித்தமன்வதேர் ச ஸ்வானமைதுனம்
ஆகமே சுகமாப்னோதி நிர்கமே ப்ராணசங்கடம்
xxx
ஆனந்த சீமா கலு ந்ருத்யசேவா- ஒருவரின் மகிழ்ச்சியின் எல்லை நடனத்தில் (தெரியும்)
ஏகத்ர சிரவாசோ ஹி ந ப்ரீதிஜனனோ பவேத் (மஹாபாரதம் 3-36-36)
ஒரே இடத்தில் நீண்டகாலம் வசிப்பது மகிழ்ச்சி தராது
கோ ஹி சாந்த்வைர்ன துஷ்யதி (பாரத மஞ்சரி) – ஆறுதல் தரக்கூடிய பேச்சு யாருக்குத்தான் மகிழ்ச்சி தராது?
மனத்திருப்தி வந்துவிட்டால் யார் பணக்காரன்? யார் ஏழை? (வைராக்ய சதகம் 53) மனசி ச பரிதுஷ்டே கோ அர்தவான்கோ தரிர்த்ரஹ
புத்தியுள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும், அதுதான் கடவுளை வணங்குவதாகும் (சந்தோஷம் ஜனயேத் ப்ராக்ஞஹ ததேவேஸ்வர பூஜனம்)
மகிழ்ச்சிக்கு இணையான செல்வம் இல்லை (பஞ்சதந்திரம்) சந்தோஷ துல்யம் தனமஸ்தி நான்யத்
மகிழ்ச்சியானவர்கள் வெற்றி அடைவர், அழுகின்றவர்கள் மற்றவர்களைக் கஷ்டப்படுத்துவார்கள்
ஹசத்பிஹி க்ரியதே கர்ம ருதத்பிஹி பரிபச்யதே
–Subham–
இன்பம் எங்கே, இன்பம் எங்கே என்று தேடு
https://tamilandvedas.com/…/இன்பம்–எங்கே–இன்ப…
23 Apr 2013 – இன்று நாம் அலசும் விஷயம் ”இன்பம் எங்கே?” யார் வேண்டுமானாலும் விவாதத்தைத் துவக்கி வைக்கலாம். திருமூலர்: நான் …