ஆனந்தம்/ மகிழ்ச்சி எத்தனை வகை? (Post No.3593)

Written by London swaminathan

 

Date: 31 JANUARY 2017

 

Time uploaded in London:-  18-50

 

Post No. 3593

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு — என்ற தலைப்பில் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 நான் எழுதி வெளியிட்ட கட்டுரையில், பாரதி, பாரதிதாசன், அருணகிரிநாதர், திருமூலர், நம்மாழ்வார், தொல்காப்பியர், நக்கீரர், தாயுமானவர், அப்பர், மாணிக்கவாசகர், திரைப்பட பாடலாசிரியர் மருதகாசி, திருவள்ளுவர் ஆகியோரின் பொன்மொழிகளை வெளியிட்டேன். இப்பொழுது சம்ஸ்கிருத நூல்களில் இன்பம், ஆனந்தம், மகிழ்ச்சி பற்றிய சில பொன்மொழிகளையும் பழமொழிகளையும் காண்போம்:-

 

எது அல்லது யார் இன்பம் தருவர்?

 

ஸ்வதாரா- தன்னுடைய மனைவி

போஜன- நல்ல சாப்பாடு

தனம் – பணம்

 

சந்தோஷஸ்த்ரிஷு கர்தவ்யஹ ஸ்வதாரே போஜனே தனே (சுபாஷித ரத்ன பாண்டாகாரம்)160-337

xxxx

ஆனந்தம்/ மகிழ்ச்சி எத்தனை வகை?

 

விஷயானந்த- உலக விஷயங்கள் தரும் இன்பம்

 

யோகானந்த – யோகத்தின் மூலம் பெறும் இன்பம்

 

அத்வைதானந்த- அத்வைதக் கொள்கையால் கிடைக்கும் இன்பம்( அஹம் பிரம்மாஸ்மி)

 

விதேஹானந்த- உடல் கடந்த இன்பம்

 

பிரம்மானந்த – இறை இன்பம்

 

விஷயே யோகானந்தௌ த்வாவத்வைதாந்த ஏவ ச

விதேஹானந்தோ விக்யாதா ப்ரஹ்மாந்தஸ்ச பஞ்சமாஹா

xxxx

 

சேரும்போது இன்பம், பிரியும்போது துன்பம்

 

அதிகாரம்- ஆட்சி அதிகாரம், பதவி அதிகாரம்

கர்பம்- கருவுருதல், கரு சிதைதல்

வித்தம்- பணம்

ஸ்வான மைதுனம்- நாய்களின் புணர்ச்சி

 

அதிகாரம் ச கர்பம் ச வித்தமன்வதேர் ச ஸ்வானமைதுனம்

ஆகமே சுகமாப்னோதி நிர்கமே ப்ராணசங்கடம்

 

xxx

 

ஆனந்த சீமா கலு ந்ருத்யசேவா- ஒருவரின் மகிழ்ச்சியின் எல்லை நடனத்தில் (தெரியும்)

 

ஏகத்ர சிரவாசோ ஹி ந ப்ரீதிஜனனோ பவேத் (மஹாபாரதம் 3-36-36)

ஒரே இடத்தில் நீண்டகாலம் வசிப்பது மகிழ்ச்சி தராது

 

கோ ஹி சாந்த்வைர்ன துஷ்யதி (பாரத மஞ்சரி) – ஆறுதல் தரக்கூடிய பேச்சு யாருக்குத்தான் மகிழ்ச்சி தராது?

 

மனத்திருப்தி வந்துவிட்டால் யார் பணக்காரன்? யார் ஏழை? (வைராக்ய சதகம் 53) மனசி ச பரிதுஷ்டே கோ அர்தவான்கோ தரிர்த்ரஹ

 

புத்தியுள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும், அதுதான் கடவுளை வணங்குவதாகும் (சந்தோஷம் ஜனயேத் ப்ராக்ஞஹ ததேவேஸ்வர பூஜனம்)

 

மகிழ்ச்சிக்கு இணையான செல்வம் இல்லை (பஞ்சதந்திரம்) சந்தோஷ துல்யம் தனமஸ்தி நான்யத்

 

மகிழ்ச்சியானவர்கள் வெற்றி அடைவர், அழுகின்றவர்கள் மற்றவர்களைக் கஷ்டப்படுத்துவார்கள்

ஹசத்பிஹி க்ரியதே கர்ம ருதத்பிஹி பரிபச்யதே

 

–Subham–

 

 

இன்பம் எங்கே, இன்பம் எங்கே என்று தேடு

https://tamilandvedas.com/…/இன்பம்எங்கேஇன்ப

Translate this page

23 Apr 2013 – இன்று நாம் அலசும் விஷயம் ”இன்பம் எங்கே?” யார் வேண்டுமானாலும் விவாதத்தைத் துவக்கி வைக்கலாம். திருமூலர்: நான் …

அதிசய முதலியார் செய்த அற்புதங்கள் – பகுதி 1 (Post No.3593)

Compiled by London swaminathan

 

Date: 31 JANUARY 2017

 

Time uploaded in London:-  9-13 am

 

Post No. 3593

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact: swami_48@yahoo.com

 

 

சென்னை பூவிருந்தவல்லி கலியாணசுந்தர முதலியார் ஒரு அஷ்டாவதானி; அதாவது ஒரே நேரத்தில் எட்டுவித செயல்களைச் செய்யும் அற்புதம் நிகழ்த்துபவர். அவருடைய 60-ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி அவர்களுடைய மாணவர்கள் 100 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட மலர் லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ளது. அதில் படித்த சில விஷயங்கள்:-

 

இவர் சிறுவயதிலேயே தமிழ்ச் செய்யுட்களைப் படிப்பதிலும் மனனம் செய்வத்திலும் ஆர்வம் காட்டி வந்தார். வளர் மதி (சந்திரன்) போல் இவர் மதியும் வளர்ந்தது. சிறுவயதிலேயே இவருக்கு செய்யுள் இயற்றும்  ஆ ற்ற லும் வாய்த்தது.

 

தினமும் பள்ளிக்கூடத்துக்குப் போகும் முன், தெருக்கோடியிலுள்ள பிள்ளையார் கோவிலில் தானே இயற்றிய ஒரு செய்யுளின் மூலம் பிரார்த்திப்பார். சக மாணவர்களை அழைத்து நீங்களும் துதிபாடுங்கள் என்று சொல்லிக் கொடுப்பார். இதோ முதலியார் செய்த துதி:-

 

வாத்தியார் சொல்லிவைக்கும் வண்மையுள்ள பாடமெல்லாம்

நேர்த்தியா யென்மனதில் நேர்மையுடன் — பூர்த்தியுறச்

சுந்தர விநாயகனே தூய்மை பெறு நின்றாளென்

சிந்தையினிலே யிருக்கச் செய்

 

(நின்றாள் = நின் தாள் = உன்னுடைய பாதங்கள்)

xxx

இவர் தந்தையார் தினமும் திருமுருகாற்றுப்படையைப் படிக்கும்படி சொல்லவே முதலியாரும் அவ்வாறே செய்து முருக பக்தர் ஆனார்.

 

இவர் பள்ளிக்கூடத்தில் படிக்கும் நாட்களில் ஒரு நாள் ஆசிரியர் “வாடியோட வனச மன்னன்” என்ற ‘திருவரம்பக் கலம்பகம்’ பாடல்

பற்றிப் பாடம் எடுத்தார். அதில் முருகன் ஓட என்ற வரிகள் வந்தது இவருக்குப் பிடிக்கவில்லை. இவரோ தீவிர சிவபக்தர். அதைப் படிக்க

மறுத்துவிட்டார். உடனே வாத்தியார், முதலியாரின் தந்தையிடம் இதைத் தெரிவித்தார்.

 

இதற்குப் பின்னர் 38ஆவது வயதில் முதலியார் பாடிய திரு ஒற்றியூர் கலம்பகத்தில் திருமால், லெட்சுமி, பிரம்மா எல்லோரும் ஓட என்னும் பொருள்படும் பாடலை இயற்றி தனது கோபத்தைத் தணித்துக்கொண்டார்!

xxx

பள்ளிக்கூடப் பாடம் படிக்கும்  நேரத்தில் படிக்காமல் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தால் ஆசிரியருக்குப் பிடிக்காது. அந்தக் காலத்தில் வாத்தியார்கள், பிரம்பைக் கையில் எடுத்து  தண்டிப்பது வழக்கம்.இப்படி விளையாடிய மாணவர் அருகில், கலியாண சுந்தர முதலியாரும் நின்றிருந்தார். ஒவ்வொருவரையாக அடித்த வாத்தியார். முதலியாரையும் அடித்து வைத்தார். உடனே அவர் செய்யுள் வடிவில் தனது தந்தையிடம் புகார் கொடுத்தார். அந்தச் செய்யுளை, முதலியாரின் தந்தை ஆசிரியரிடம் எடுத்துச் சென்று காட்டியவுடன், வாத்தியார் தான் செய்த தவற்றுக்கு வருத்தம் தெரிவித்தார். பின்னர் ஐரோப்பிய பிள்ளைகள் படித்த கத்தோலிக்க பாடசாலையில், முதலியாரைச் சேர்க்க அவரே உதவி செய்தார். ஆயினும் முதலியார், ஈராண்டுகள் அங்கே படித்துவிட்டு, தாலுக்கா பாடசாலையில் சேர்ந்து  தனது படிப்பைத் தொடர்ந்தார்.

 

 

இதோ முதலியார் சிறு பையனாக இருந்தபோது கொடுத்த புகார் மனு:-

 

எந்தவித குற்றமுமியானின்று செய்யாதிருக்க

என்றன் தொடையிலேன் சூடு வந்ததெனப்

பூரணமாய்க் கல்வி கற்ற பூங்கா வனக் கவியை

காரணநீ கேட்டிடுக கண்டு.

எந்தன் என்பது என்றன் — என்று இருக்க வேண்டும் என்பது அக்காலத்தில் முதலியாருக்குத் தெரியாது.

 

xxxx

 

 

ஒருநாள் பள்ளிக்கூடம் முடிந்து ஒரு கீரைத் தோட்டம் வழியாக மற்ற மாணவர்களுடன் முதலியாரும் நடந்து வந்துகொண்டிருந்தார். கீரைப் பாத்தியை பிள்ளைகள் மிதித்துவிட்டனர் என்பதால் சூரன் என்ற பெயருள்ள தோட்டக்காரன் எல்லோரையும் ஒரு வளார் கொண்டு விரட்டிக் கொண்டு வந்தான். எல்லோரும் ஓடிவிட்டனர். முதலியார் மற்றும் பொறுமையுடன் நின்றவுடன் அவருக்கு அடி விழுந்தது. உடனே கோபத்தில் கவி பொழிந்தார்.

 

தோட்டக்காரச் சூரன் றோன்றி வளாரடியைப்

போட்டான் முதுகில் பொறுக்கேனான் — தோட்டிதழ்சேர்

தாராரும் காளியே தாரணியிலன்னவனைப்

பாராமலேயிருக்கப் பண்

 

என்று தோட்டத்தின் மூலையில் இருந்த காளி கோவிலில் பாடிவிட்டு வந்தார். அந்தச் சூரன் அன்றிரவு தோட்டத்தில் தவறி விழுந்து கால் உடைந்து முடவன் ஆகிவிட்டான்.

 

பகுதி இரண்டில் அஷ்டாவதான அற்புதச் செயல்களைக் காண்போம்

 

தொடரும்……………

 

 

 

 

What is Happiness? Where is Happiness? (Post No.3592)

Compiled by London swaminathan

 

Date: 31 JANUARY 2017

 

Time uploaded in London:-  6-04 am

 

Post No. 3592

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

Following verses are available in Sanskrit literature. The verses and the proverbs are the summary of our ancient wisdom.

 

1.Santosah kartavyah/ Contentment to be had

 

Svadaaraa–With one’s own wife

Bhojana–In eating

Dhana–With one’s own wealth

 

Santosastrishu kartavyah svadare bhojane dhane

Subaashita ratna bhaandaagaaram

 

Xxx

 

2.Aagame sukh am, nirgame praanasankatam/ Happiness during association , sorrow in separation 

Adhikaaram–Rulership

Garbham–Pregnancy

Vittam–Wealth

Svaanamaithuna–Copulation of dogs

 

Adhikaram ca garbham ca Vitaminwater ca svaanamaithunam

Agame sukhamapnoti nirgame praanasankatam

 

Xxxx

 

3.Types of Bliss

Visayaananda–Worldly happiness

Yogaananda–Bliss through yoga

Advaitananda–Non dual bliss

Videhaananda–Bliss beyond body

Brahmaananda–Supreme bliss

 

Vishaye yoganandau dwavadvaitananda Eva ca

Videhanando vikyata brahmanandasca pancamaah

XXX

4.Dance is the climax of delight –Granthasthagaathegaaku

5.To reside in the same place for long, is unconducive to pleasure Mahabharata 3-36-36

6.Whom does not soothing speech console? Bharata Manjari

 

7.If contented, who then is rich or poor? Vairagya Sataka.53

 

8.The wise must make others happy – that itself is the worship of the Divine

(santosam janayepraajnaah tadaiva Isvara puujanam)-Sanskrit Proverb

 

9.No wealth equal to Happiness – Pancatantra 2-162

(santosa tulyam dhanamasti naanyat)

 

10.The happy achieve, the weeping scorch others—Sanskrit Proverb

(hasadbhih kriyate karma rudadbhih paripacyate)

 

–subham–

 

 

 

Taj Mahal is a Hindu Temple reveals the book ‘World Vedic Heritage’ (Post No.3591)

Written by S NAGARAJAN

 

Date: 31 January 2017

 

Time uploaded in London:-  5-06 am

 

 

Post No.3591

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

Santhanam Nagarajan

 

The book under review ‘World Vedic Heritage – A History of Histories’ is written by a great reserach scholar P.N.Oak after years of research on this subject.

This was written way back in 1984 and I have read it long back with wonder. Some of the topics like Taj Mahal was a Hindu Temple, Vedic stanzas are in Koran, Aurangazeb’s grave is in a Goddess Temple-Yard etc. attracted me very much. While I am reading this book now, still it fascinates me.

Even though the subjects are controversial, the author has given ample authoritative evidence for the readers.

The author says that the dome of the Taj Mahal in Agra, near New Delhi, the capital of India, has lotus petals. The lotus petals in inlay-work girding its base, the inverted lotus on top of the dome and the trident pinnacle are all Hindu, Vedic features indicating that the fifth generation Mogul emperor, Shahjahan only requisitioned the Tejo Mahalaya Shiva Temple.

Most of the area in around the main building is under Archaelogical Department’s control and no visitor is permitted there. Oak says that there is ample evidence to prove his point in those areas.

 

The book has 92chapters in 1312 pages. The Vedic culture in the East, Vedic past of Japan, China, Korea and Manchuria, West Asia etc. are dealt in detail by the author. Supporting his theory, the author has given 56 photos also in the book.

The book makes an interesting reading.  It is argued in the book that the first immediate reaction of a large section of the public on reading an unheard of thesis of the kind expounded in this book is likely to be one of shock, disbelief and rejection. But the cogency of the argument, the continuity of the thread of the history and the comprehensive evidence are likely to be persuasive factors which may ultimately make the theme more agreeable and acceptable.

A detailed bibliography is also attached at the end of the book quoting 114 sources.

The reader may draw his own conclusion after digesting all the facts put forth in the book. Lastly, after going through the contents of this book, one will get the impression that the Indian history must definitely be re-written correctly.

Purushottam Nagesh Oak (Birth: 2 March 1917; Death: 4 December 2007), commonly referred to as P. N. Oak, was an Indian writer, notable for his Hindu-centric brand of historical revisionism. Oak’s “Institute for Rewriting Indian History” issued a quarterly periodical called Itihas Patrika in the 1980s.    He has written more than twelve books. He was on the editorial staffs of the newspapers Hindustan Times and The Statesman.  He joined in the Ministry of Information and Broadcasting, India and served as class I officer for a long time.

In all, those who are interested in Indian History, should read this book without fail.

***

This article first appeared in www.ezinearticles.com

You may read Platinum Author Santhanam Nagarajan’s articles in the above site.

Pl follow the link to read about Taj Mahal :                         http://EzineArticles.com/expert/Santhanam_Nagarajan/19574

 

நம்மாழ்வாரின் 28 அற்புதப் பொன்மொழிகள் (Post No.3590)

Compiled by London swaminathan

 

Date: 30 JANUARY 2017

 

Time uploaded in London:-  19-59

 

Post No. 3590

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

பிப்ரவரி 2017 காலண்டர்

துர்முகி வருடம் (தைமாசி மாதம்)

 

 

முக்கிய நாட்கள்:- பிப்ரவரி 3ரத சப்தமி, 9-  தைப்பூசம், 24-மஹா சிவரத்திரி.

ஏகாதசி- 7, 22; அமாவாசை- 26; பௌர்ணமி– 10

முகூர்த்த நாட்கள்1, 2, 6, 9, 16, 17, 23.

 

பிப்ரவரி 1 புதன்கிழமை

திரு உடம்பு வான்சுடர்; செந்தாமரை கண்; கை கமலம்

திரு இடமே மார்வம்; அயன் இடமே கொப்பூழ்;

ஒருவு இடமும் எந்தை பெருமாற்கு அரனே;

ஒருவு இடமும் ஒன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே (3054)

 

பிப்ரவரி 2 வியாழக்கிழமை

ஆண் அல்லன்; பெண் அல்லன்; அல்லா அலியும் அல்லன்;

காணலும் ஆகான்; உளன் அல்லன்; இல்லை அல்லன்;

பேணுங்கால், பேணும் உரு ஆகும்….. (3062)

 

பிப்ரவரி 3 வெள்ளிக் கிழமை

உன்னைச் சிந்தை செய்து செய்து, உன் நெடு மா மொழி இசைபாடி, ஆடி, என்

முன்னைத் தீவினைகள் முழுவேர் அரிந்தனன் யான் (3069)

பிப்ரவரி 4 சனிக்கிழமை

அனைவது அரவு- அணைமேல்; பூம்பாவை ஆகம்

புணர்வது; இருவர் அவர் முதலும் தானே;

இணவன் ஆம் எப்பொருட்கும்; வீடு முதல் ஆம்-

புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே (3088)

 

பிப்ரவரி 5 ஞாயிற்றுக்கிழமை

கைம்மா துன்பம் கடிந்த பிரானே!

அம்மா! அடியேன் வேண்டுவது ஈதே-3099

(கைம்மா=யானை).

 

பிப்ரவரி 6 திங்கட்கிழமை

மகிழ் கொள் தெய்வம் உலோகம், அலோகம்

மகிழ் கொள் சோதி மலர்ந்த அம்மானே!

மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்

மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே -3104

 

பிப்ரவரி 7 செவ்வாய்க்கிழமை

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்

வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்,

வளர் இளம் பொழில் சூழ்மாலிருஞ்சோலை

தளர்வு இலர் ஆகிச் சார்வது சதிரே–3110

 

பிப்ரவரி 8 புதன்கிழமை

வரும்காலம், நிகழ்காலம், கழிகாலம் ஆய், உலகை

ஒழுங்காக அளிப்பாய்! சீர் எங்கு உலக்க ஓதுவனே?-3125

 

பிப்ரவரி 9 வியாழக்கிழமை

கிற்பேன், கில்லேன் என்று இவன் முனம் நாளால்;

அற்ப சாரங்கள் அவை அகன்றொழிந்தேன்;

பற்பல் ஆயிரம் உயிர் செய்த பரமா நின்

நற்பொன் – சோதித்தாள் நணுகுவது எஞ்ஞான்றே?—3137

 

பிப்ரவரி 10 வெள்ளிக் கிழமை

 

எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்

முந்தை – வானவர் வானவர் – கோனொடும்

சிந்து பூ மகிழும் திருவேங்கடத்து

அந்தம் இல் புகழ்க் கார் எழில் அண்ணலே -3144

 

பிப்ரவரி 11 சனிக்கிழமை

சாதி மாணிக்கம் என்கோ?

சவி கொள் பொன்முத்தம் என்கோ?

சாதி நல் வயிரம் என்கோ?

தவிவு இல் சீர் விளக்கம் என்கோ?-3157

 

பிப்ரவரி 12 ஞாயிற்றுக்கிழமை

கும்பிடு நட்டம் இட்டு ஆடி

கோகு உகட்டுண்டு உழலாதார்

தம்பிறப்பால் பயன் என்னே

சாது சனங்களிடையே?–3168

 

பிப்ரவரி 13 திங்கட்கிழமை

கனியை, கரும்பின் இன்சாற்றை,

கட்டியை, தேனை, அமுதை

முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்

முழுது உணர் நீர்மையினாரே—3170

 

 

பிப்ரவரி 14 செவ்வாய்க்கிழமை

ஒருமை மனத்தினுள் வைத்து,

உள்ளம் குழைந்து, எழுந்து, ஆடி,

பெருமையும் நாணும் தவிர்ந்து

பிதற்றுமின், பேதைமை தீர்ந்தே!-3174

 

பிப்ரவரி 15 புதன்கிழமை

தேவதேவனை, தென் இலங்கை

எரி எழச் செற்ற வில்லியை

பாவநாசனை, பங்கயத் தடங்

கண்ணனைப் பரவுமினோ -3177

 

பிப்ரவரி 16 வியாழக்கிழமை

குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து, எத்தனை

நலம் தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்,

வலம்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்

கலந்தார் அடியார்- தம் அடியார் எம் அடிகளே -3195

 

பிப்ரவரி 17 வெள்ளிக் கிழமை

அடிஆர்ந்த வையம் உண்டு, ஆல் இலை அன்னவசம் செய்யும்

படியாதும் இல் குழவிப்படி எந்தைபிராந் தனக்கு

அடியார் அடியார் தம் அடியார் அடியார்- தமக்கு

அடியார் அடியார் – தம் அடியார் அடியோங்களே -3196

 

பிப்ரவரி 18 சனிக்கிழமை

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன்; கேண்மினோ

எந்நாவில் இன்கவி  யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் –3209

 

பிப்ரவரி 19 ஞாயிற்றுக்கிழமை

மாரி அனைய கை, மால்வரை ஒக்கும் திண் தோள் என்று

பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும்பொய்கள் பேசவே – 3215

 

பிப்ரவரி 20 திங்கட்கிழமை

இடர் இன்றியே, ஒருநாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழிய

படர்புகர்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற திந்தேர் கடவி

சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை

உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே –3224

பிப்ரவரி 21 செவ்வாய்க்கிழமை

அடிசேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ

இடிசேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்

பொடிசேர் துகளாய்ப் போவார்கள்; ஆதலில் நொக்கெனக்

கடிசேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ -3233

 

பிப்ரவரி 22 புதன்கிழமை

ஏக மூர்த்தி இரு ஊர்த்தி

மூன்று மூர்த்தி பல மூர்த்தி

ஆகி, ஐந்து பூதம் ஆய்,

இரண்டு சுடர் ஆய், அருவு ஆகி – 3255

 

பிப்ரவரி 23 வியாழக்கிழமை

கண்ணன், எம்பிரான், எம்மான்

காலச்சக்கரத்தானுக்கே -3257

 

பிப்ரவரி 24 வெள்ளிக் கிழமை

அறியும் செந்தீயைத் தழுவி

அச்சுதன் என்னும்; மெய் வேவாள்;

எறியும் தண் காற்றைத் தழுவி

என்னுடைக் கோவிந்தன் என்னும்; -3266

 

பிப்ரவரி 25 சனிக்கிழமை

திரு உடை மன்னரைக் காணில்

திருமாலைக் கண்டேனே என்னும்;

உரு உடை வண்ணங்கள் காணில்

உலகு அளந்தான் என்று துள்ளும்;

கரு உடைத் தேவு இல்கள் எல்லாம்

கடல்வண்ணன் கோயிலே என்னும்;

வெருவிலும் வீழ்விலும் ஓவாள்;

கண்ணன் கழல்கள் விரும்புமே -3271

 

 

பிப்ரவரி 26 ஞாயிற்றுக்கிழமை

விரும்பிப் பகவரைக் காணில்

வியல் இடம் உண்டானே என்னும் -3272

(பகவர்= துறவி)

 

 

பிப்ரவரி 27 திங்கட்கிழமை

 

கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் தன்னை

வண்-தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே -3284

 

பிப்ரவரி 28 செவ்வாய்க்கிழமை

கொள்ளமாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்

வள்ளலேயோ! வையம் கொண்ட வாமனாவோ என்று என்று-3298

 

–subham–

 

 

காந்திஜியே மருந்து! (Post No.3589)

Written by S NAGARAJAN

 

Date: 30 January 2017

 

Time uploaded in London:-  5-04 am

 

 

Post No.3589

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

 

அண்ணல் காந்தியடிகளின் அற்புத வாழ்க்கையில் ஆயிரக் கணக்கான உத்வேகமூட்டும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.. அண்ணலுக்கு அஞ்சலி செய்யும் ஜனவரி 30ஆம் நாள் நினைவில் கொள்ள மூன்று சம்பவங்கள் இதோ:-

 

காந்திஜியே மருந்து!

 

ச.நாகராஜன்

 

நோய் தீர்த்த மஹாத்மா

 

1925ஆம் ஆண்டு. மஹாத்மா காந்திஜி கிழக்கு வங்கத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். டாக்காவில் எழுபது வயதான ஒருவர் காந்திஜியின் முன்னர் அழைத்து வரப்பட்டார். அவர் தீண்டத்தகாதவர் என்று  ஒதுக்கி வைக்கப்பட்ட ‘ஹரிஜன்’ ஆவார். அவர் கழுத்தில் காந்திஜியின் படம் தொங்கிக் கொண்டிருந்தது. காந்திஜியைக் கண்டவுடன் பல முறை கையெடுத்து அவரைக் கும்பிட்ட வண்ணம் இருந்தார் அவர். பின்னர் அவர் காலடியில் விழுந்து வணங்கினார்.

அவருக்கு பாரிச வாயு தாக்கியிருந்தது. என்னென்னெவோ வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தார். ஆனால் நோய் குணமாகவில்லை.

 

கடையியில் காந்திஜியின் நாமத்தை உச்சரிக்க ஆரம்பித்தார். ஆச்சரியத்திலும் ஆச்சரியம். அவர் நோய் அடியோடு  குணமாகி விட்டது. காந்திஜியின் நாமம் தான் தன்னைக் குணப்படுத்தியது என்பதால் அவரது திருவுருவப்படத்தைக் கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டிருந்தார்.

 

அவரிடம் காந்திஜி, “உங்களை குணப்படுத்தியது நான் இல்லை. கடவுளே” என்றார். ஆனால் அவரோ அதை நமபத் தயாராக இல்லை.

அவருக்கு கடவுளே காந்திஜியின் போட்டோ வடிவமாக இருந்தார். அவரிடம் வாதிட்டுப் பயனில்லை என்பதை அறிந்த காந்திஜி,” அன்பரே! எனக்காக ஒன்று செய்வீர்களா? என் போட்டோவை உங்கள் கழுத்திலிருந்து எடுத்து விடுங்களேன்” என்றார்.

 

 

காந்திஜி இப்படிக் கேட்டதும் உடனே அவர் சரி என்று சொல்லி அந்தப் போட்டோவை கழுத்திலிருந்து எடுத்து விட்டார்.

ஆனாலும் போட்டோவை எடுக்கச் சொன்ன கடவுள் தான் தன்னை குணப்படுத்தியதாக்ச் சொல்லிக் கொண்டே போனார்.

அவரது நம்பிக்கையை யாராலும் அசைக்க முடியவில்லை – காந்திஜி உட்பட!

 

மஹாத்மாஜி, நமக்கு சுதந்திரம் வந்து விட்டதா?

 

மஹாத்மாவின் தண்டி யாத்திரையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தண்டிக்கு அருகில் உள்ள கரோடி என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்த பஞ்ச காகா படேல் என்பவரும் அவர்களில் ஒருவர்.

 

 

தண்டியில் நடந்த உப்பு சத்யாக்ரஹத்தில் பங்கேற்றமைக்காக பிரிட்டிஷ் அரசு அவரது சொத்துக்களை பறிமுதல் செய்தது.

அவரைக் கைது செய்த போலீஸ் அதிகாரி அவரிடம், “பார்த்தாயா! உனக்கு நேர்ந்த கதியை. இப்போது ஒரு இஞ்ச் நிலம் கூட உன்னிடம் இல்லாமல் போய் விட்டது உனது வீடும் சேர்ந்து போய் விட்டது” என்றார்.

 

 

“அனாவசியமாக நீங்கள் கவலைப் படவேண்டாம். இந்தியா சுதந்திரம் அடையும் வரை நான் அவற்றைத் திருப்பிக் கேட்க மாட்டேன்: என்றார் காகா.

 

1937இல் பம்பாய் பிரஸிடென்ஸியில் காங்கிரஸ் அரசை அமைத்தது. முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற பி.ஜி.கேர்  காகாவிற்கு ஒரு செய்தியை அனுப்பினார்.

அதில் தனது அரசு அவரது நிலத்தையும் வீட்டையும் திருப்பித் தர தயாராக இருப்பதாக எழுதியிருந்தார்.

 

 

ஆனால் காகா இந்தியா சுதந்திரம் அடையும் வரையில் அதைத் திருமப்ப் பெறப் போவதில்லை என்று தான் சொன்னதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்து அதை இப்போது பெற முடியாது என்று தெரிவித்து விட்டார்.

 

1947 ஆகஸ்டும் வந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது. காகாவிற்கு இப்போதும் ஒரு கடிதம அரசிடமிருந்து வந்தது. அவர் தனது சொத்திற்கு உரிமை கோரலாம் என்றும் அரசு அவற்றைத் திருப்பித் தரத் தயார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 

இந்த முறை அவர் தனது குருநாதர் காந்திஜியிடம் சென்று கேட்டார் இப்படி: “பாபுஜி! நீங்கள் விரும்பிய சுதந்திரம் வந்து விட்டதா?”

 

காந்திஜி, “துரதிர்ஷ்ட்வசமாக இந்தக் கேள்விக்கு இல்லை என்று தான் நான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது” என்றார்.

காகா அரசிற்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அதில் தனது சொத்துக்கள் தனக்குத் திருப்பித் தரப்பட வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்!

 

டாக்டரா, வக்கீலா

 

ஆகாகான் அரண்மனையில் இருந்த போது ஒரு சமயம் காந்திஜிக்கு மலேரியா ஜுரம் வந்து விட்டது. கல்கத்தாவைச் சேர்ந்த பிரபல மருத்துவர் பி.சி.ராய் (பின்னால் மேற்கு வங்க முதல் அமைச்சரானவர்) அப்போது பம்பாயில் இருந்தார். ஆனாலும் அவரை காந்திஜிக்கு மருத்துவம் பார்க்க பிரிட்டிஷ் அரசு அனுமதி வழங்கவில்லை.

 

 

ஒரு வழியாக பெரிய போராட்டத்திற்குப் பிறகு அனுமதியைப் பெற்ற பிதான் ராய் காந்திஜியிடம் வந்தார்.

சிகிச்சை பெற காந்திஜிக்கு விருப்பமில்லை

 

காந்திஜியிடம் அவர், “நான் யாருக்கு சிகிச்சை அளிக்க வந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். மோஹன்தாஸ் கரம் சந்த் காந்திக்கு அல்ல. நாற்பது கோடி பேரின் பிரதிநிதிக்கு அல்லவா சிகிச்சை அளிக்க வந்திருக்கிறேன். அவர் வாழ்ந்தால் நாற்ப்து கோடி பேரும் ஜீவித்திருப்பார்கள். அவர் இல்லையேல் நாற்பது கோடிப் பேரும் இறந்து விடுவார்கள்” என்றார்.

 

 

 

இதைக் கேட்ட காந்திஜிக்கு பதில் சொல்ல முடியாமல் போனது. ஒரு நிமிடம் பேசாமல் இருந்த் அவர், “பிதான், நீங்கள்ஜெயித்து விட்டீர்கள். எனக்கு நீங்கள் சிகிச்சை அளிக்கலாம், நீங்கள் தரும் மருந்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் ஒன்று, டாக்டருக்கு படித்ததற்கு பதிலாக நீங்கள் வக்கிலுக்குப் படித்திருக்கலாமே. நன்றாக வாதிடுகிறீர்கள்” என்றார்.

உடனே பிதான், “அது ஏனென்றால் கடவுளுக்குத் தெரியும், ஒரு நாள் அவரது அபிமான புத்திரனுக்கு நான் மருத்துவம் செய்ய வேண்டியிருக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று. அதனால் தான் நான் டாக்டருக்குப் படித்தேன்” என்று பதில் சொன்னார்.

:  ”பார்த்தீர்களா! இப்போதும் கூட் டாக்டரை விட நீங்கள் சிறந்த வக்கீலாகவே வாதிடுகிறீக்ள்” என்றார் காந்திஜி!

அனைவரும் நகைத்தனர்!

 

ஸ்பரிசவேதி கல்லானது தன்னைத் தொட்ட எதையும் தங்கமாக்கி விடுவது போல,  காந்திஜியிடம் ஈடுபட்ட அனைவரும் தங்கமாகி விடுவார்கள்; அன்புமயமாகி விடுவார்கள்.

 

அவ்ரை நினைவைப் போற்றி அஞ்சலி செய்வோருக்கும் கூட இது பொருந்தும்!

 

********* .

கல்லால் அடித்தாலும் காப்பாற்றுகிறாயே! தாயுமானவர் வியப்பு! (Post No.3588)

Written by London swaminathan

 

Date: 29th January 2017

 

Time uploaded in London:-  21-28

 

Post No.3588

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

தாயுமனவர், பட்டினத்தார், சுந்தரர் ஆகிய சைவ அடியார்கள் எல்லோருக்கும் ஒரு வியப்பு; ஆச்சரியம்; எத்தனை பேர் உன்னை வில்லால் அடித்தனர், சொல்லால் அடித்தனர், கல்லால் அடித்தனர். அத்தனை பேருக்கும் உதவுகின்றாயே. ஆனால் அவர்களுக்கு எல்லாம் இருந்த ஆழமான அன்பு எங்களுக்கு இல்லையே என்று முறையிடுகின்றனர். உலக சமய இலக்கியங்களில் இல்லா சில விஷயங்கள் இந்து மதத்தில் மட்டுமே காணக்கிடக்கின்றன. இதோ மூன்று அடியார்கள் கொடுத்த “குற்றச் சாட்டு” பட்டியல்!

கல்லால் எறிந்தும் கைவில்லால்

அடித்தும் கனிமதுரச்

சொல்லால் துதித்தும்நற் பச்சிலை

தூவியும் தொண்டரினம்

எல்லாம் பிழைத்தனர் அன்பற்ற

நான் இனி ஏதுசெய்வேன்!

கொல்லா விரதியர் நேர்நின்ற

முக்கட்குருமணியே!

–தாயுமானவர்

 

கல்லால் அடித்து சிவனருள் பெற்றவர் -சாக்கிய நாயனார். இவர் முதலில் புத்தமதத்தைத் தழுவி பின்னர் சைவ மதம் திரும்பியதும், புத்த மதத்தினரைத் திருப்தி செய்வதற்காக சிவலிங்கம் மீது கல்லெறிந்தார். வெளியில் இப்படி வன்முறை காட்டினாலும் மனத்தகத்தே சிவன் மீது அன்புகொண்டார். வில்லால் அடித்து பாசுபதம் பெற்றவன் அர்ஜுனன்.

கனிமதுரச் சொல்லால் துதித்தவர்கள் தேவார, திருவாசக நால்வர் ஆவர். பச்சிலை தூவி வழிபட்டவர் கண்ணப்பநாயனார்.

 

இவர்களுக்கு இணையான அன்பு எனக்கில்லையே என்று வருத்தப் படுகிறார் தாயுமானவர்.

 

பட்டினத்தாரும் ஒரு பாடலில்

 

வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன்

அல்லன்; மாது சொன்ன

சூளால் இளமை துறக்கவல்லேன்

அல்லன்; தொண்டுசெய்து

நாலாரில் கண்ணிடத்து அப்பவல்லேன்

அல்லன்; நானினிச் சென்று

ஆளாவது எப்படியோதிருக்

காளத்தி அப்பனுக்கே

–பட்டினத்தார்

சிறுத்தொண்ட நாயனார், சிவனடியாரைத் திருப்தி செய்ய தன் மகனையே அறுத்து கறி சமைத்தார். திருநீலகண்ட நாயனாரின் மனைவியின் சொல்லால், அவர் இன்பத்தைத் துறந்தார். கண்ணப்ப நாயனார் உலகிலேயே விரைவில் முக்தியடைந்த மாமனிதர் ஆவார். இப்படி எல்லாம் என்னால் செய்ய இயலாதே என்று பாடுகிறார் பட்டினத்தார்.

 

தாயுமானவருக்கும், பட்டினத்தாருக்கும் முன்னார் வாழ்ந்த சுந்தரர் தான் ஏன் சிவபெருமானிடம் வந்தார் என்று விளக்குகிறார்.

 

சம்பந்தன், அப்பர், நந்தனார், சாக்கியநாயனார், கண்ணப்பநாயனார், ஒரு சிலந்தி கணம்புல்லன் என்பவர் எல்லோரும் ஏதேனும் குற்றம் செய்தபோதும் அவர்களுக்கு உதவினாய். இதைப் பார்த்துதான் நானும் உன்னிடம் வந்தேன் என்பார் சுந்தரமூர்த்தி நாயனார்.

 

 

நற்றமிழ் வல்ல ஞான சம்பந்தன்

நாவினுக்கரையன் நாளைப் போவானும்

கற்றசூதன்நற் சாக்கியன் சிலந்தி

கண்ணப்பன் கனம்புல்லனென்றிவர்கள்

குற்றம்செய்யினுஞ் குணமெனக் கருதும்

கொள்கை கண்டு நின்குரை  கழல் அடைந்தேன்

பொற்றிரள்மணிக் கமலங்கள் மலரும்

பொய்கை சூழ் திருப்புன்கூருளானே

-சுந்தரர், ஏழாம் திருமுறை

இதில் எட்டு நாயன்மார்களைக் குற்றம் செய்தவராக சுந்தரர் பட்டியலிட்டார். ஆயினும் அப்பராவது வேறு மதம் சென்று திரும்பியவர். ஞானசம்பந்தர் ஒரு தவறும் செய்யவில்லை. இதற்கு இதுவரை சரியான விளக்கம் கிடைக்கவில்லை. பலர், பல விளக்கங்களைக் கொடுத்தாலும் அது திருப்தி தருவதாக இல்லை.

-suBham-

 

 

28 Beautiful Quotations of Sri Ramakrishna Paramahamsa—Post No. 3587

Compiled by London swaminathan

 

Date: 29th January 2017

 

Time uploaded in London:-  6-17 AM

 

Post No.3587

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

February 2017 Good Thoughts Calendar

 

Festival Days and Holidays:- February 3-Rata Saptami; 9-Thai Pusam;  24-Maha Shivaratri

 

Ekadasi- 7,22

New Moon Day-26

Full moon Day- 10

Auspicious Days-1, 2, 6, 9, 16, 17, 23.

February 1 Wednesday

There are pearls in the deep sea, but you must hazard all the perils to get them. If you fail to get at them  by a single dive, do not conclude that the sea is without them. So also in the quest for the Lord, if your first attempt to see him proves fruitless, do not lose heart. Persevere in the attempt, and you are sure to realise Him at last.

 

February 2 Thursday

As a lamp, does not burn without oil, so a man cannot live without God.

 

February 3 Friday

As the water of the ocean is now calm and next agitated into waves, so are Brahman and Maya. Th e ocean in the tranquil state is Brahman, and in the turbulent state, Maya.

February 4 Saturday

The snake itself is not affected by the poison in its fangs; but when it bites, the poison kills the creature bitten. Likewise, Maya is in the Lord but does not affect Him, while the same Maya deludes the whole world.

February 5 Sunday

Women and gold keep men immersed in worldliness. Woman is disarmed when you view her as the manifestation of the Divine Mother.

 

February 6 Monday

Snakes are venomous reptiles. But the man who has learnt the art of snake charming can play even with seven snakes coiled around his snake. Similarly a man of realisation is immune from the dangers of worldly life.

February 7 Tuesday

A Brahmana’s son is no doubt a Brahmana by birth; but some of these born Brahmanas grow up into great scholars, some become priests, others turn out cooks, and still others roll themselves in the dust before courtesans’ doors.

 

February 8 Wednesday

There are some who boast of their wealth and power, of their name and fame, and high status in society; but all these are for some time only. None of these will follow them after death.

February 9 Thursday

If  I hold this cloth before me you cannot see me anymore, though I am still as near you as ever. So also though God is nearer to you than anything else, because of the screen of egotism, you cannot see Him.

February 10 Friday

Hanuman was blessed with the vision of God both with form and without it. But he retained the ego of servant of a God.  Such was also the case of Narada, Sanaka, Sanandana and Sanatkumara.

 

February 11 Saturday

In the Kingdom of God, reason, intellect and learning are of no avail. There the dumb speak, the blind see, and the deaf hear.

February 12 Sunday

To explain God merely after reading the scriptures is explaining to a person the city of Banaras after seeing it only in a map.

 

February 13 Monday

Utter the word Gita, in quick succession, several times. It is then virtually pronounced as Tagi, Tagi, which means one who has renounced the world for the sake of God. Thus, in one word, Gita teaches, RENOUNCE. Renounce everything, and fix the mind on Lord.

February 14 Tuesday

As the water under a bridge enters from one side and passes out at the other, so religious advice given to the worldlings enters the mind thorough one ear and goes out by the other, without leaving any impression.

 

February 15Wednesday

Iron appears as red hot in the furnace, but becomes black soon after it is taken out. In the same way, worldly men are full of religious emotion if they are in a temple or in the society of the pious; but no sooner do they leave these associations the flood of devotion in them subsides.

 

February 16 Thursday

Out of the myriads of paper kites that are seen flying in the air, one or two get free by snapping of the string. So out of hundreds of aspirants practising spiritual disciples only one or two get free from worldly bondage.

 

February 17 Friday

When a certain quantity of milk is mixed with double the quantity of water it requires good deal of time and labour to condense it. The mind of a worldly man is diluted with the filthy water of impure thoughts and he has to work long and hard to purify it.

 

February 18 Saturday

Butter churned early in the morning is the best; that churned after sunrise is not so good. Addressing his young disciples, Master used to say, “You are like butter churned in the early morning; my householder disciples are like butter churned late in the day.

February 19 Sunday

The young bamboo can be bent easily , but the full-grown bamboo breaks when it is bent with force. It is easy to bend the young heart towards God.

February 20 Monday

The love in the heart of a boy is whole and undivided. When he gets married in time, half of his heart or more, is given away to his wife, and when children are born to him, he loses another quarter there off, while the remaining quarter is divided among father, mother, honour, fame, pride, dress and the rest; therefore, he has no love left to offer to God.

 

February 21 Tuesday

It is the nature of the winnowing basket to reject whatever is light and useless, and whatever is weighty and good. Such is the nature of all pious souls.

February 22 Wednesday

Wherein is the strength of a devotee? He is a child of God, and his devotional tears are his mightiest weapon.

February 23 Thursday

The man whose hair stands on end at the mere mention of the name of God, and from whose eyes flow tears of love – he has indeed reached his last birth.

February 24 Friday

A boat may stay in the water, but water should not stay in the boat. An aspirant may live in the world, but the world should not live within him.

February 25 Saturday

When you are engaged in devotional practices, keep aloof from those who scoff at them, and from those who ridicule the piety and the pious.

 

February 26 Sunday

If a white cloth is stained even with a small spot, the stain appears very ugly indeed. So the smallest fault of a holy man becomes painfully prominent.

February 27 Monday

Trust not a Sanyasin (ascetic) who practises medicine, uses spells and incantations, receives money and displays his piety with sign boards of elaborate external marks.

February 28 Tuesday

The oyster that contains the precious pearl is of very little value, but it is essential for the growth of the pearl. The shell is of no use after securing the pearl. So, ceremonies and rites may not be necessary for him who has attained the highest truth, namely, God.

–Subham–

 

 

சிம்பல் SYMBOL மயம் உலகம்!(Post No.3586)

Germany Stamps with Swastika

Written by S NAGARAJAN

 

Date: 29 January 2017

 

Time uploaded in London:-  5-29 am

 

 

Post No.3586

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

பாக்யா 20-1-2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

சிம்பல் மயம் உலகம்!

 

ச.நாகராஜன்

 

சிம்பல் (Symbol) எனப்படும் அடையாளக் குறியீடு அல்லது சின்னம் இன்று உலகில் பெற்றுள்ள முக்கியத்துவம் மனித சரித்திரத்தின் பரிணாம வளர்ச்சியையே சுட்டிக் காட்டுகிறது.

ஆயிரம் மொழிகள் உலகில் இருந்தாலும் சுருங்கி விட்ட உலகத்தில் எந்த ஒரு மொழி பேசுபவருக்கும் ஒரு மௌன மொழியாக, பல இடங்களில் உயிர் காக்கும் கருவியாக, சிம்பல் விளங்குகிறது.

 

 

எதிரிலே ஒரு பாலம் வருகிறது, பாதை வளைகிறது, மெதுவாகப் போ, ஆபத்தான ஹேர் பின் பெண்ட் என்றெல்லாம் இந்த சிம்பல்கள் சுட்டிக் காட்டுவதால் அல்லவா மனிதன் உயிரிழப்பு இல்லாமல் நிம்மதியாக ஒரு இடத்தைச் சென்று சேர முடிகிறது!

மொழிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு உலகத்தை சிம்பல்களினால் படைக்க முடியும் என்று இந்த அடையாளக் குறியீட்டில் ஆர்வம் உள்ளவர்கள்  சொல்கின்றனர்.

 

 

ஹென்றி ட்ரைஃபஸ் (Henry Dreyfuss )   என்பவர் இந்த அடையாளங்களைத் தொகுப்பதில் முன்னோடி. சுமார் இருபதினாயிரம் சிம்பல்களை அவர் உலகெங்குமிலிருந்து பல்வேறு நாகரிகங்கள், நாடுகளிலிருந்து தொகுத்திருக்கிறார். சிம்பல் சோர்ஸ்புக் (Symbol Sourcebook) என்ற அவரது புத்தகம் ஆயிரக்கணக்கான சிம்பல்களைச் சித்தரித்து அவற்றின் அர்த்தத்தையும் விளக்குகிறது; பார்ப்போருக்குப் பிரமிப்பையும் தருகிறது.

 

 

வரலாறில் சிம்பல்களின் தாக்கம் மகத்தானது.

இரண்டாம் உலகப்போரில் அசுர சக்தியாக விளங்கிய ஹிட்லர் பல நாடுகளுக்கும் சிம்ம சொப்ப்னமாக இருந்தான். அவனது கொடியில் ஸ்வஸ்திகா பொறிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் முடிவில் அவன் வீழ்ச்சியையே அடைந்தான்; தற்கொலை செய்து கொண்டான்.

ஹிந்துக்களின் நலச் சின்னமாகவும் புனித அடையாளக் குறியீடாகவும் காலமெல்லாம் விளங்கி வருவது ஸ்வஸ்திகா. கோவில்களில் தவ்றாமல் இடம் பெறும் சின்னமும் இதுவே.

இதில் இரு வகை உண்டு. வலப்பக்க சுழற்சி உடைய ஸ்வஸ்திகா தைவிக் ஸ்வஸ்திகா என்று குறிப்பிடப்பட்டு நல்லனவற்றைத் தரும் அடையாளமாகச் சொல்லப்படுகிறது. இதையே ஹிந்து ஆலயங்களில் காணலாம்,

 

 

ஆனால் உலகின் அதிர்ஷ்டத்தின் காரணமாக ஹிட்லர் ஸ்வஸ்திகாவின் சுழற்சியை இடப்பக்கமாக மாற்றி அதை 45 டிகிரி கோணத்தில் வேறு வளைத்து தீமையைத் தரும் ஆசுரிக் ஸ்வஸ்திகாவைத் தேர்ந்தெடுத்தான். விளைவு, அசுர வேகத்தில் முன்னேறிய அவன் அதல பாதாளத்தில் வீழ்ந்தான்.

பண்டைய ரோமில் பாதாளக் கல்லறைகளிலும் இந்த ஸ்வஸ்திகா சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது ஒரு அதிசய செய்தி. திபெத்திய சுவடிகள், குகைகள் மற்றும் ஆலயங்களிலும் ஸ்வஸ்திகா இடம் பெற்றுள்ளது.

 

 

 

இரண்டாம் உலகப் போரில் வி (V) என்ற வெற்றிச் சின்னத்தை தன் இரு விரல்களில் மூலம் காட்டினார் வின்ஸ்டன் சர்ச்சில். கையின் பின்புறம் தன்னை நோக்கி இருந்து ‘வி’-ஐப் பார்ப்போருக்குக் காண்பித்தால்,அது வெற்றி.

 

 

காண்பிப்பவரை நோக்கி உள்ளங்கை இருந்து இரு விரல்களைக் காண்பித்தால் அது அடுத்தவரை அவமானப்படுத்தும் சைகை.  சர்ச்சில் வெற்றிக்கான சைகையை வடிவமைத்து 1941, ஜூலை,20 ஆம் தேதி பிபிசி மூலம் பிரிட்டனில் அதை பிரபலப் படுத்தினார்.

மக்கள் திலகம் எம் ஜி ஆரும் இந்த வி சைகையையும் இரட்டை இலையையும் மக்களிடையே உற்சாகமாகப் பரப்பி தொடர் வெற்றி கண்டதும் இங்கு குறிப்பிடத் தகுந்தது.

ஆக உலக தலைவர்கள் அனைவருமே சிம்பல்களில் தனிக் கவனம் செலுத்துவது அதன் மூலம் மக்களை உத்வேகமூட்டி ஒரு பெரிய வெற்றிக்கு அழைத்துச் செல்வதற்கே.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 2008ஆம் ஆண்டு தனது தேர்தல் பிர்ச்சாரத்தின் போது தவறாமல் கையில் எடுத்துச் சென்றது ஹனுமானின் படத்தையே. இதை அப்போதைய எகனாமிக்ஸ் டைம்ஸ் (10-6-2008இதழ்) வெளியிட்டது.

 

 

இஸ்ரேலில் புனிதமாகக் கொண்டாடப்படும் ஸ்டார் ஆஃப் டேவிட் தென்னிந்தியக் கோவில்களில் தவறாமல் இடம் பெறுகிறது. முருகனின் அருளைப் பெற ஷட் கோணத்தை முருக பக்தர்கள் வீட்டில் வைத்து வழி படுகின்றனர்.

ஸ்ரீ சக்ரத்தின் பெருமையை அலெக்ஸி குலைச்சேவ் என்ற ரஷியர் பிரம்மாண்டமான் ஆய்வு செய்து பிரமிக்க வைக்கும் உண்மகளை ஆய்வு முடிவாகத் தந்திருக்கிறார்.ஸ்ரீ சக்ரத்தில் உள்ள ஒன்பது முக்கோணங்கள் ஒன்றை ஒன்று வெட்டினால் ஏற்படும் சந்திப்புப் புள்ளிகள் எவ்வாறு பல்வேறு புள்ளிகளுடன் ஒன்றோடு ஒன்று இணையும் என்ற கண்டுபிடிப்பும், அத்துடன் கூட இன்னும் விளங்கிக் கொள்ள் முடியாத விடை காண இயலாத அநேக அறிவியல் விளக்கங்களும் இந்த யந்திரத்தில் உள்ளன என்கிறார் அவர். ஸ்ரீ சக்ரத்தில் உள்ள சிக்கலான கணிதத்தை நவீன தலைமுறை கம்ப்யூட்டர்கள் கூட விடுவிக்க முடியவில்லை என்ற அவரது கூற்று நம்மை பிரமிக்க வைக்கிறது!

இந்த யந்திரத்தின் பல்வேறு ம்ஹிமைகளைப் பட்டியலிடும் அவர் எப்படி இந்த யந்திரம் பண்டைய காலத்திலேயே அமைக்கப்பட்டிருக்கிறது என்று வியக்கிறார்!

 

புத்த மதத்தினரின் தர்ம சக்கரம் உள்ளிட்ட நல்ல அடையாளக் குறியீடுகள் காலம் காலமாக பலன் அளித்து வருவதை பௌத்தர்கள் உணர்ந்து இன்றும் அவற்றை விடாமல் பயன்படுத்தி வருகின்றனர். இந்த அதிர்ஷ்ட சிம்பல்களை இனம் காட்டி உலகெங்கும் விற்பனை செய்யும் பல்வேறு நிறுவனங்கள் பணத்தில் கொழிப்பது கண்கூடாக நாம் இன்று பார்க்கும் உண்மை.

 

அமெரிக்க டாலர் இன்றும் உலகின் செல்வாக்கு மிக்க கரன்ஸியாக விளங்குவதற்கான காரணம் அதில் உள்ள பிரமிடும் கண்ணுமே என்பதை சிம்பல் ஆய்வாளர்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றனர் (பாக்யா இதழில் அமெரிக்க டாலர் மர்மம் பற்றி ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது). அமெரிக்காவை நிறுவும் போது அதை ஸ்தாபித்த தலைவர்கள் செல்வாக்கு மிக்க சக்தியாக அமெரிக்காவை நீடுழி காலம் இருக்குமாறு செய்ய  இப்படிப்பட்ட பல இரகசிய சிம்பல்களை அமெரிக்க வாழ்க்கை முறையில் புகுத்தி விட்டிருக்கின்றனர் என்பதை வரலாறு தெரிவிக்கிறது.


 

உலகியல் வாழ்க்கைக்கு இன்று இன்றியமையாதது சிம்பலே. கணிதத்தின் சமன்பாடுகள், தொழிற்சாலையில் பல விஷயங்களை எளிதில் சுட்டிக் காட்டும் வழிகாட்டிகள், அறிவியலில் பலவற்றையும் விளக்கும் விளக்கக் குறியீடுகள், நெடுஞ்சாலைகள், விமானதளங்கள், கடல் வழிகள் என அங்கிங்கெனாதபடி எங்கும் வழிகாட்ட உதவும் அடையாளச் சின்னங்கள் ஆகியவை மட்டும் இல்லையெனில் இன்று வாழ்க்கை முறையாக நடைபெறாது. சிம்பல் இல்லாத உலகம் விபத்துள்ள உலகமாக ஆகி விடும்.

நமது அன்றாட வாழ்க்கை முறையில் ஒவ்வொருவரும் அவரவர் தேவைக்கேற்ப ஒரு சிம்பலைத் தேர்ந்தெடுக்க அவரவர் வாழ்க்கை முறை, தேசீயம், மதம் வழி வகுக்கிறது.

இந்த சிம்பல்களில் வெவ்வேறு வண்ணங்களும் சேர்க்கப்படும் போது அதன் மகத்துவம் பன்மடங்கு பெருகி விடுகிறது. கலர் தெராபி என்பது இன்றைய உலகில் பெரும் சிகிச்சை முறையாக உருவெடுத்து வரும் நிலையில் வண்ணங்களை இடம் அறிந்து பாரம்பரியமாக உள்ள சிம்பல்களில் நமது முன்னோர் இணைத்திருப்பது ஒரு பிரமிப்பூட்டும் செய்தியே!

சரியான சிம்பலை ஒருவர் நாடி அதை உரிய அளவின் படி செய்து நிர்ணயிக்கப்பட்ட வண்ணங்களையும் சேர்த்து வைத்துக் கொண்டால் அது அவருக்கு வேண்டியதைத் தந்து விடும். இதன் உண்மையை அனுபவத்தில் அறியலாம்!

மொத்தத்தில் சிம்பல்  மயம் உலகம்!

*****

 

ஆண்டவா! என்னால் பிரயோசனம் உனக்கு ஏதுண்டு? பட்டினத்தார் கேள்வி (Post No.3585)

Written by London swaminathan

 

Date: 28 January 2017

 

Time uploaded in London:-9-50 am

 

Post No.3585

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

 

contact: swami_48@yahoo.com

 

 

கடவுளிடம் பட்டினத்தார் ஒரு கேள்வி கேட்கிறார்:

 

ஆண்டவா! தங்கம் வைத்திருப்பவர்களுக்கு அந்தத் தங்கத்தினால் கொஞ்சம் பிரயோசனம் உண்டு; ஆனால் அவர்களால் தங்கத்துக்குப் பிரயோஜனம் உண்டா? அது போல நீ அருள் மழை பொழிவதால் என்னைப் போன்றவர்களுக்கு நல்ல பலன் உண்டு. ஆனால் என்னைப் போன்றவர்களால் உனக்கு ஏதேனும் பலன் உண்டா?

 

பொன்னாற் பிரயோசனம் பொன்படைத் தார்க்

குண்டு பொன்படைத்தோன்

தன்னாற் பிரயோசனம் பொன்னுக்கங்

கேதுண்டத் தனமையைப் போல்

உன்னாற் பிரயோசனம் வேணதெல்

லாம் உண்டு உனைப் பணியும்

என்னாற் பிரயோசனம் ஏதுண்டு?

காளத்தீயீச்சுரனே! —- பட்டினத்தார்

 

 

பட்டினத்தாராவது கொஞ்சம் மரியாதையுடன் ஒரு கேள்வி கேட்டார். திருவாசகம் எழுதிய மாணிக்க வாசகரோ சிவ பெருமானைக் கிண்டலே செய்கிறார்!

யார் கொலோ சதுரர்?

 

இதோ பார்! சல்லிக்காசுக்குப் பிரயோசனமில்லாத என்னை நான் உனக்கு தந்தேன். என்னை நீ ஏற்றுக் கொண்டு, உன்னையே எனக்குத் தந்து விட்டாயே! யார் புத்தி சாலி? நீயே சொல் — என்று சிவ பெருமானை நக்கல் செய்கிறார்.

 

தந்தது  உன் தன்னைக் கொண்டதுஎன் தன்னைச்

சங்கரா ஆர்கொலோ சதுரர்?

அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்

யாது நீ பெற்றதொன்று என்பால்!

 

சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்

திருப்பெருந்துறையுறை சிவனே

எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்

யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே

–திருவாசகம், மாணிக்கவாசகர்

 

(சதுரர்= புத்திசாலி, கெட்டிக்காரர்)

ஆதிசங்கரர்

ஆதி சங்கரரோவெனில் வேறு பாணியில் இதே கருத்தைத் தெரிவிக்கிறார்; நீயோ சூரியன் சந்திரன் முதலிய எல்லா ஜோதிகளுக்கும் ஒளியூட்டுபவள்; பார்! உன்னை ஒரு தீவாரதனை என்னும் சிறிய தீபத்தைக் காட்டி திருப்தி செய்கிறேன்! (அதாவது சின்ன விளக்கைக் காட்டி உன்னை ஏமாற்றுகிறேன்; நீயோ வெள்ளமென அருள் மழை பொழிகிறாய்)

 

ப்ரதீப ஜ்வாலாபிர் திவசகர நீராஜன விதி:

சூதாச்ஸூதேச் சந்த்ரோபல ஜலலவை ரர்க்யரசனா

ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநித சௌஹித்யகரணம்

த்வதீயபிர் வாக்பிஸ் தவ ஜனநி வாசாம் ஸ்துதிரியம்

–நூறாவது பாடல், சௌந்தர்யலஹரி

 

பொருள்:-

வாக்கிற்குப் பிறப்பிடமாகிய தாயே! உன்னுடைய வாக்குகளால் அமைந்த இந்த உனது பாமாலையானது, தீவட்டி கொண்டு சூரியனுக்குக் கற்பூரம் காட்டுவது போலவும், அமுதம் பொழியும் சந்திரனுக்கு சந்திரகாந்தக் கல்லில் கசியும் நீர்த்துளிகளால் தாரை வார்த்துக் கொடுப்பது போலவும், கடலுக்குச் சொந்தமான நீரால் கடலுக்கே தர்ப்பணம் செய்வது போலவும் இருக்கிறது.

 

–Subham–