உலக இந்து சமய செய்தி மடல் 31-1-2021(Post No.9210-B)

SABARIMALAI TEMPLE

Compiled BY LONDON SWAMINATHAN

Post No. 9210-B

Date uploaded in London – –31 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று ஜனவரி 31 -ஆம் தேதி —  ஞாயிற்றுக் கிழமை ,2021

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI     ANAND 

 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கு விடைகளும் அளிக்கப்படுகிறது.

எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்

Xxx

குடியரசு தின அணிவகுப்பில் சரணம் அய்யப்பா கோஷம்

AYYAPPA TEMPLE IN SABARI MALAI

டில்லியில் விவசாயிகள் பேரணியில் வன்முறையில் ஈடுபட்டோர் மாநிலங்களின் சார்பில் அனுப்பப்பட்ட அலங்கார ஊர்திகளை செத்தபி படுத்தினர். ராமர் கோவில் அலங்கற உறுதி, கேதார் நாத் அலங்கற உறுதி ஆகியன குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்றன. விவசாயிகளின் வன்முறையில் இஅவைகள் சேதப்படுத்தப்பட்டன. இதை இந்துக்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

இது ஒரு புறமிருக்க அரசு தரப்பிலிருந்து வந்த நல்ல செய்தியும் உண்டு. ராணுவத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு வீர முழ க்கம் உண்டு. அதன்படி  பிரம்மோஸ் அணிவகுப்பின் கோஷம் சுவாமியே சரணம் அய்யப்பா என்பதாகும். ஏற்கனவே ஜனவரி 15ம் தேதி நடந்த ராணுவ தின அணிவகுப்பில் அதி பயங்கர ஏவுகணை தாங்கியான பிரம்மாஸ்திரம் சென்றபோது டில்லி விதிகளில் சுவாமியே சரணம் அய்யப்பா  என்ற கோஷம் விண்ணதிர முழக்கப்பட்டது குடியரசு தின அணிவகுப்பிலும் இதே பிரம்மோஸ் அணி சரண கோஷத்தை எழுப்பி மக்களை மகிழ்வித்தது பாரத் மாதா  கி ஜே , ஜெய  துர்கா மாதா என்பன வேறு சில ராணுவ வெற்றி வெற்றி முழக்கங்கள் ஆகும்

XXXX

விவசாயிகள் பேரணியில் வன்முறை –ஆர்எஸ்எஸ் கண்டனம்

டில்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறை நிகழ்ந்தது குறித்து ஆர்எஸ்எஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், ஜனநாயகத்தில் இதுபோன்ற அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமில்லை என ஆர்எஸ்எஸ் பொதுச்செயலர் சுரேஷ் பையாஜி தெரிவித்துள்ளார்.

டில்லியில் ஜன.,26 விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் அங்கு, தங்களது அமைப்பு கொடியை ஏற்றினர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசியப் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: குடியரசு தினத்தன்று டில்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் துரதிருஷ்டமானது, வருத்தத்திற்குரியது. வன்முறைகளும், அதைத் தொடர்ந்து செங்கோட்டையில் கொடியேற்றப்பட்டதும் கண்டனத்திற்குரியது. ஜனநாயகத்தில் இதுபோன்ற அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமில்லை.

டில்லி செங்கோட்டையில் நடந்த சம்பவங்கள் நமது தேசத்தின் ஒற்றுமைக்காக உயிர்தியாகம் செய்த தேசத்தலைவர்கள், சுதந்திரப்போராட்டத் தியாகிகளை அவமானப்படுத்துவதாகும். தேசத்தின் மக்கள் அரசியல், சித்தாந்த வேறுபாடுகளைக் கடந்து அமைதிக்காக ஒன்றுதிரள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Xxxx

சிதம்பரம் நடராஜர் கோவில் ராஜகோபுரத்தில் தேசியக்கொடி

குடியரசு தினத்தையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவில் ராஜ கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

ஆண்டுதோறும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று, கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். குடியரசு தினத்தையொட்டி , நடராஜர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின், கீழ வீதி ராஜகோபுரத்தில், தீட்சிதர்கள் ஜனவரி 26ம் தேதி காலை 8:00 மணிக்கு தேசியக் கொடியேற்றினர்

xxxx

தாண்டவ்வலைத் தொடர் சர்ச்சை; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  •  

தாண்டவ்  TANDAV வலைத் தொடர் சர்ச்சை தொடர்பாக, பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர்கள் மீதான கைது நடவடிக்கைக்கு தடையில்லை’ என, உச்ச நீதிமன்றம் SUPREME COURT உத்தரவிட்டது.


அமெரிக்காவைச் சேர்ந்த, ‘அமேசான் பிரைம்’ தளம், திரைப்படங்கள் மற்றும், ‘வெப் சீரிஸ்’ எனப்படும் வலைத் தொடர்களை, வாங்கியும், சொந்தமாக தயாரித்தும், வெளியிட்டு வருகிறது. இந்த வரிசையில், தாண்டவ் என்ற, ஹிந்தி வலைத் தொடரை, சமீபத்தில் தயாரித்து வெளியிட்டது. ‘பாலிவுட்’ நடிகர், சயீப் அலி கான், நடிகை டிம்பள் கபாடியா உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். இதில், பல காட்சிகள் மற்றும் வசனங்களில், ஹிந்துக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டு உள்ளதாக, பல்வேறு மாநிலங்களிலும், ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், வலைத் தொடர் தயாரிப்பு தரப்பில் இருந்து, உச்ச நீதிமன்றத்தில், மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.அதில், அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர்களை கைது செய்வதில் இருந்து, ஏழு நாட்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், கோரப்பட்டது.



இந்த மனு, SUPREME COUERT  நீதிபதிகள், அசோக் பூஷண், எம்.ஆர்.ஷா, சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.அப்போது, அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க, நீதிபதிகள் அனுமதி அளித்தனர். ‘கைது நடவடிக்கையில் இருந்து, விலக்கு அளிக்க முடியாது’ என தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக, உயர் நீதிமன்றங்களை நாடுமாறு உத்தரவிட்டனர்.

XXXX

குகையில் வாழும் சாமியார் அயோத்தி ராமர் கோயில் கட்ட ரூ.1 கோடி நன்கொடை

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.. சுமார் 161 அடி உயரத்தில் மூன்று தளங்களையும் 318 தூண்களையும் கொண்டிருக்கும் வகையில் இந்தக் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ராமர் கோயில் கட்டுமான பணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நிதி குவிந்து வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு என பல்வேறு பிரபலங்களும் நிதி வழங்கி வருகின்றனர்.

உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள குகையில் கடந்த 60 ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர் சுவாமி சங்கர்தாஸ். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நன்கொடை வசூலிக்கப்படுவதை அறிந்த அவர், தான் சேமித்து வைத்திருந்த ரூ.1 கோடி நிதியை கோயில் கட்ட நன்கொடையாக வழங்க தீர்மானித்தார். 

அவரது கணக்கில் போதிய நிதி இருப்பதை உறுதி செய்த வங்கி அதிகாரிகள், இதற்கான நிதி திரட்டும் உள்ளூர் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த அவர்களிடம் சுவாமி சங்கர் தாஸ் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

XXXXXXX

திருமலையில் இலவச தரிசன டிக்கெட் 20 ஆயிரமாக உயர்வு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட், 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, திருமலை திருப்பதி கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் வழக்கமான அனைத்து பூஜைகளும் நடைபெற்று வந்தன. கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. முதற்கட்டமாக அக்.,26ம் தேதி முதல் தினசரி 3 ஆயிரம் பேருக்கு இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

இப்போது இலவச தரிசன டிக்கெட், 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

XXXX

சபரிமலை வருமானம் ரூ. 248 கோடி சரிவு பக்தர்களிடம் உதவி கோர திட்டம்

சபரிமலை அய்யப்பன் கோவிலில், கடந்தாண்டு, 269 கோடி ரூபாயாக இருந்த வருமானம், இந்தாண்டு, 92 சதவீதம் சரிந்து, 21 கோடி ரூபாயாக குறைந்தது. இதையடுத்து, ‘இழப்பை சரிக்கட்ட வசதியான பக்தர்களிடம் உதவி கேட்கவும், வங்கிகளில் கடன் வாங்கவும் பரிசீலித்து வருகிறோம்’ என, தேவசம் போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு மண்டல, மகரவிளக்கு சீசனில் சபரிமலையின் வருமானம் 269.17 கோடி ரூபாயாக இருந்தது.
இந்தாண்டு, கொரோனாவால், பக்தர்கள் குறைவாகவே அனுமதிக்கப்பட்டனர். எனவே வருவாய் கடுமையாக சரிந்தது. வெறும், 21.17 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்தது. சபரிமலை தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள, 1248 கோவில்கள், சபரிமலை வருவாயை வைத்து தான் நிர்வாகம் செய்யப்படுகிறது. மாத சம்பளம் மற்றும் இதர கோவில்கள் பராமரிப்பிற்காக மட்டும், 40 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.

Xxxx

பழனி முருகன் கோவில் தைப்பூசம்

 தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நாள் முதற்கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாரை, சாரையாக பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்தனர்.

* மலர்காவடி, மயில் காவடி, இளநீர் காவடி என பல்வேறு காவடிகளை எடுத்து வந்து பக்தர்கள் அசத்தினர். அலகு குத்தி சில பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

* குழந்தை வரம் வேண்டி பக்தர்கள் சிலர் கரும்பு தொட்டிலை சுமந்து வந்தனர்.


* விழாவின் சிகர நிகழ்ச்சியான  தைப்பூச தேரோட்டத்தையொட்டி பழனி ரதவீதிகளில் பெண் பக்தர்கள் கோலாட்டம், கும்மியாட்டம் ஆடியபடி வலம் வந்தனர்.

Xxxxx

தெலுங்கானா  மாநிலத்திலிருந்து வந்த ஒரு சுவையான செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்டுள்ளது .

தெலுங்கானா  மாநிலத்தில் வேமுலவாடாவில் ஸ்ரீ ராஜா ராஜேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இது ஒரு சிவன் கோவில். அங்கு இறைவனுக்கு காளை மாட்டு ஒன்றை கட்டும்சடங்குக்கு கொடை மொக்குலு என்று பெயர். இந்தக் கோவிலின் இன்னொரு புதுமை கோவில் வட்டத்துக்குள் ஒரு முஸ்லீம் தர்காவும் இருக்கிறது இதன் காரணமாக இந்துக்கள் அங்கு செல்வதும் முஸ்லிம்கள் இந்தக் கோவிலுக்கு வந்த்து வழிபடுவதும் வழக்கம். மந்தாணி என்னும் ஊரைச் சேர்ந்த அபிசார என்னும் முஸ்லீம் பெண்மணி இந்த மாட்டுக் கோட்டை செய்ய விரும்பினார். கோவில் நிர்வாகத்தினரும் அவரை கோவிலுக்குள் அனுமதித்து கொட மொக்குழு சடங்கை நிறைவேற்ற அனுமத்தித்தனர். இதை இந்தியன் எக்ஸ்பிரஸ் படத்துடன் வெளியிட்டுள்ளது .

XXX

மலேஷியாவில் தைப்பூசம்

மலேஷியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச ரத யாத்திரை பெரிய ஊர்வலம் இன்றி நடந்தது. குறிப்பிட்ட நேரத்தில் முருகன் சிலை தங்கிய புனித ரதம் பத்து குகை, என்றும் பாது குகைகள் (BATU CAVES) என்றும் அழைக்கப்படும் இடத்துக்குச் சென்றது.பல்லாயிரக் கணக்கான மக்கள் ஈடுபடும் ரத ஊர்வல பத்து பேர் மட்டுமே ரத்தத்துடன் வரலாம் என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது. வைரஸ் தாக்குதலைத் தடுக்கவே இந்த ஏற்பாடு என்றும் அறிவிக்கப்பட்டது.

xxxxx

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன…………………………..

செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

—SUBHAM—

TAGS- உலக இந்து சமய,  செய்தி மடல் 31-1-2021

31-1-2021 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH (Post No.9210-A)

RAM TEMPLE MODEL IN AYODHYA

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9210-A

Date uploaded in London – –31 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

31-1-2021 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH

Namaste , Namaskaram to Everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Read by SUJATHA RENGANATHAN .

XXX

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at

ONE pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.

Even if you miss our live broadcast on SUNDAYS

, you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day. 

Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’

– Read by SUJATHA RENGANATHAN .

XXX

‘Freedom of speech not absolute’: Supreme Court  tells makers of web series ‘Tandav’

The web series TANDAV  is facing criminal cases for hurting HINDU religious sentiments and insulting religion punishable under Sections 153A and 295 of Indian Penal Code.

The directors and actors of web series ‘Tandav’, and head of Amazon Prime India Aparna Purohit failed to get protection from arrest from Supreme Court on Wednesday.

The case was heard by a bench of justices Ashok Bhushan, RS Reddy and MR Shah.

“Your right to freedom of speech is not absolute. You cannot play the role of character that hurts the sentiments of a community,” the bench said.

The top court was hearing a bunch of petitions seeking quashing of criminal complaints lodged in various states against Ali Abbas Zafar, the Director of the web series, and others for allegedly hurting the religious sentiments.

Besides Zafar and Purohit, producer Himanshu Mehra, the show’s writer Gaurav Solanki and actor Mohammed Zeeshan Ayyub had filed three separate petitions against the registration of FIRs in Uttar Pradesh, Madhya Pradesh, Karnataka and Maharashtra.

THE SUPREME COURT REFUSED TO GIVE THEM PROTECTION FROM ARREST.

XXXX

Khalistani backed rioting farmers vandalises Ram Mandir and Kedarnath tableaux from Republic Day parade

Khalistani backed Rioting farmers on Tuesday last not  desecrated the Red Fort and vandalised the tableau from the Republic Day parade.

As can be seen in the video, the dome of the Ram Mandir tableau by Uttar Pradesh and Kedarnath temple of Uttarakhand were specifically targetted. The dome atop the Ram Mandir tableau was broken by the rioting mob. “This is the Ram Mandir tableau. It had come in proper condition. The protestors who had come yesterday specifically targetted the Kedarnath temple and dome at Ram Mandir,” a Delhi Police personnel told Aaj Tak reporter.

RSS condemns violence in Delhi on Republic Day

Hindu Organisation Rashtriya Swayamsevak Sangh  on Tuesday condemned the violence during the farmers’ tractor parade in Delhi and said the ‘unfortunate act’ at the Red Fort was an insult to those who sacrificed their lives for India’s freedom and National integrity.

The RSS appealed to all countrymen to rise above political and ideological differences and strive for peace as a priority.

“The violence that took place in Delhi on Republic Day is sad and condemnable,” RSS Sarkaryavah Suresh Bhaiyyaji Joshi said in a statement. “Especially what happened in Red Fort is an insult to the freedom fighters and those who laid down their lives for the integrity of the nation. There is no place for such anarchy in a democracy,” he added.

Xxxx

The sacred chants of ‘Swamiye Sharanam Ayyappa’  reverberated on Raj Path during Republic Day parade

The sacred chants of ‘Swamiye Saranam Ayyappa’ reverberated on Raj Path in New Delhi on the occasion of Republic Day parade.

The 861 Brahmos regiment, one of India’s most lethal forces, took part in the celebrations in the national capital.

The 861 Missile Regiment, a part of the Regiment of Artillery of the Indian Army, displayed the Brahmos missile during the Republic Day celebrations this year at Raj Path. The war cry of the regiment is ‘Swamiye Saranam Ayyappa’.

Recently, the 861 Missile Regiment and its Brahmos missile systems had participated in the 73rd Indian Army Day, that was observed on January 15, where the sacred chants to Lord Ayyappa were first heard.

Incidentally, the war cry is raised along with Durga Mata ki Jai and Bharat Mata Ki Jai by the regiment. The Brahmos regiment’s war cry is seen as a fitting tribute to Lord Ayyappa as the deity is symbolized to have defeated the evil forces by riding atop a tiger holding a bow and arrow.

 Xxxxx

CAVE SAINT GAVE ONE CRORE RUEES TO RAM TEMPLE

An 83-year-old seer has donated ₹1 crore to the Visva Hindu Parishad  for the construction of the Ram Mandir in Ayodhya. The seer has been living in a cave for over half a century. “I’ve been living in the cave for over half a century. As a seer, I live on donations from the devotees visiting the cave. When I came to know about the Parishad campaign, I decided to donate the amount for Ram Mandir for which we all have been dreaming for long,” said Swami Shankar Das while speaking to the media.

The bank officials were surprised when the seer offered the cheque for ₹1 crore. Upon checking, they found that his account had the requisite balance. The officials then contacted the local RSS functionaries who reached the bank and helped Das donate the amount in the Ram Mandir Trust.

According to Das, it was at the cave of his guru Taat wale Baba that he received donations from devotees that added up to the amount that he donated to Wednesday.

A 10-year-old girl in Nainital donated ₹2,500 for the temple from savings in her piggy bank.

xxxxx

SABARIMALAI TEMPLE INCOME DROPPED 92%

 Landing  the finances of the Travancore Devaswom Board  in the doldrums, the annual income generated by the Sabarimala Lord Ayyappa temple has dropped by a whopping 92.2 per cent in the wake of the Covid pandemic. The hill shrine’s revenue — which stood at Rs 269 crore in 2019-20 — has nosedived to a meagre Rs 21 crore this year.

The Board, which relies on the temple’s two-month annual pilgrimage to meet administrative expenses of the 1,248 temples under its ambit, has resorted to knocking on the doors of devotees and neighbouring states to salvage the situation. Including the staff’s salary, the Board needs at least `40 crore a month to run all 1,248 temples.

“The Board is planning to approach the rich devotees and governments of these states for support. There are also plans to retrench around 200 temporary employees as a cost-cutting measure,” Vasu said. 

Pilgrims’ offerings to be mortgaged

Another plan is to mortgage the gold offered by devotees with the Reserve Bank of India to avail a loan. Bronze utensils and lamps will be auctioned to raise funds.

XXXXX

Muslim woman performs age-old ritual at temple in Vemulawada

New Indian Express news paper has published an interesting news item

From Telangana. It was about a Muslim woman performing Hindu ritual in a temple.

 Setting an example of communal harmony, Sri Raja Rajeshwara Swamy temple in Vemulawada  in Telangana permitted a Muslim woman named Apsar, who hails from Manthani, enter the temple premises and perform Kode Mokkulu (an age-old ox-tying ritual) for Lord Shiva on Tuesday.

Temple authorities said that this was the first time in the history of the temple that a Muslim woman was allowed to perform Kode Mokkulu. It may be mentioned that unlike other Hindu temples, the Vemulawada temple houses a dargah on its premises.

Devotees usually visit the dargah after having a darshan of Lord Shiva and Goddess Raja Rajeshwari. 

xxxx

Attukal Pongal Festival to be restricted within temple premises

With the Covid-19 threat continuing to loom large, the Kerala state government has decided to hold the Attukal Pongal festival in a low-key manner this year strictly adhering to Covid-19 protocols.

A high-level meeting chaired by Kerala Devaswom Minister Kadakampally Surendran in THIRUVANANTHAPURAM  decided to declare only the ward surrounding the Attukal Temple as festival zone. 

The plan is to confine the pongal to the temple premises and admissions to the temple compound will be given through online registration like on the lines of Sabarimala model. The meeting has also decided NOT to allow people to offer pongal on public roads or other public places

The minister also directed the officials to complete the preparations on a war-footing ahead of the festival which would be held on February 27.

Xxxx

THAIPUSAM IN MALAYSIA

The National Security Council IN MALAYSIA allowed the chariot carrying the statue of Lord Murugan to travel to Batu Caves without a procession in conjunction with this year’s Thaipusam celebrations.

The Federal Territories Minister said this was done as a mark of respect for Hindus celebrating Thaipusam.

“The NSC has discussed in detailed and agreed to allow the chariot to travel to Batu Caves at a stipulated time, which is either at midnight or early morning, with no procession and for the return journey to be carried out in a similar manner.

“Only 10 temple personnel were allowed to accompany the chariot, with no music or procession, and with no stops anywhere

The function was streamed live on the official Facebook page of the Federal Territories Ministry.

xxxxx

THAT IS THE END OF ‘AAKAASA DHWANI ’ HINDU NEWS BULLETIN BROADCAST FROM LONDON –

READ BY SUJATHA RENGANATHAN.

Please Wait for our Tamil News Bulletin

Now I pass it on to VAISHNAVI ANAND

–SUBHAM–

TAGS – HINDU NEWS,  ROUNDUP, 31121

வைத்தீஸ்வரன் கோவில்- ஆலயம் அறிவோம்! (Post No.9209)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9209

Date uploaded in London – –31 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் 31-1-2021 அன்று ஒளிபரப்பாகிய உரை.

ஆலயம் அறிவோம்!     வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

“செடியாய உடல் தீர்ப்பான் தீ வினைக்கு ஓர் மருந்தாவான்

பொடி ஆடிக்கு அடிமை செய்த புள்ளிருக்கு வேளூரைக்

கடி ஆர்ந்த பொழில் காழிக் கவுணியன் சம்பந்தன் சொல்

மடியாது சொல்ல வல்லார்க்கு  இல்லையாம் மறுபிறப்பே”

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 

வைத்தீஸ்வரன் கோவில் என்று இன்று அழைக்கப்படும் திருப்புள்ளிருக்கு வேளூர்  ஆகும். இது சென்னையிலிருந்து 246 கிலோமீட்டர் தூரத்திலும் மாயவரத்திலிருந்து 12 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது.

இத்தலம் கிருத யுகத்தில் கதம்ப வனம் என்றும் திரேதா யுகத்தில் வில்வ வனம் என்றும் துவாபர யுகத்தில் வகுள வனம் என்றும்  கலியுகத்தில் நிம்ப வனம் என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் யுகம் கடந்த பல்லாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவில் இது என்பதை அறியலாம். இங்குள்ள வைத்யநாதர் ஸ்வயம்பு லிங்கமாகத் தோன்றி அருள் பாலிக்கிறார். அம்மன் பெயர் தையல் நாயகி. திருப்புள்ளிருக்கு வேளூர் என்று இது அழைக்கப்படுவதன் காரணம் முன்பு புள் எனப்படும் ஜடாயுவும் இருக்கு எனப்படும் ரிக் வேதமும் வேள் எனப்படும் முருகப்பிரானும் ஊர் எனப்படும் சூரியனும்  இங்கு சிவனை பூஜித்ததால் இது அப்படி அழைக்கப்படுகிறது.

ஜடாயு பூஜித்ததால் ஜடாயு புரி என்றும் ரிக் வேதம் பூஜித்ததால் வேதபுரி என்றும் கந்தன் பூஜித்ததால் கந்தபுரி என்றும் சூரியன் பூஜித்ததால் சூரியபுரி என்றும் அங்காரகன் பூஜித்ததால் அங்காரகபுரி என்றும்  அம்பிகை பூஜித்ததால் அம்பிகாபுரி என்றும் பல்வேறு பெயர்களைக் கொண்டிருக்கிறது.வினைதீர்த்தான் கோயில், தையல்நாயகி கோயில் என்ற பெயர்களும் இதற்கு உண்டு.

ஸ்ரீ வைத்யநாத ஸ்வாமி மேற்கு பார்த்து அருள் பாலிக்க வாலாம்பிகா எனப்படும் தையல்நாயகி தெற்கு நோக்கி அருள் பாலிக்கும் தலம் இது.

கீழ் புறமும் மேல் புறமும் இராஜகோபுரங்கள் அமைந்திருக்க, பின்பக்கம் கட்டை கோபுரம் உள்ளது. ஆலயத்தின் கீழ் திசையில் வீ ரபத்திரரும், மேல் திசையில் வைரவரும், தென் திசையில் கற்பக விநாயகரும் வடதிசையில் காளியும் அமர்ந்து காவல் புரிகின்றனர்.

இங்குள்ள முருகப்பெருமானின் நாமம் ஸ்ரீ செல்வமுத்துக்குமரர். குமரகுருபரருக்கு ‘பொன் பூத்த குடுமி’ என்று அடி எடுத்துக் கொடுத்த பிரான் இவர். முருகன் சூரனின் மார்பைப் பிளக்க வேல் வாங்கியது இந்தத் தலத்தில் தான்.

இராமர் ஜடாயுவைத் தகனம் செய்த இடம் இது தான். ஜடாயு குண்டம் என்ற குண்டத்தை இங்கு காணலாம்.

நவகிரகங்கள் ஒரே வரிசையில் அமைந்திருக்கும் அதிசயத் தலமும் இதுவே.

முன்னொரு காலத்தில் செவ்வாய் சரும நோயால் பீடிக்கப்பட்டு வருந்த இங்குள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் 45 நாட்கள் நீராடி வைத்யநாதரை வழிபட அவர் நோய் தீர்ந்தது.

ஆகவே இந்த சித்தாமிர்த தீர்த்தம் மிகவும் விசேஷமான தீர்த்தமாக ஆகி அனைவரின் நோயையும் இன்றளவும் குணப்படுத்துகிறது. இங்கு செவ்வாய் கிரகத்திற்குத் தனி சந்நிதி உண்டு. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட இங்கு அங்காரகனை வழிபடுதல் மரபு. குளத்தைச் சுற்றி எட்டு திக்குகளிலும் எட்டு தீர்த்தங்கள் உள்ளன.ஒருமுறை சதானந்த முனிவர் என்பவர் இங்கு நீராடித் தவம் செய்து வரும்போது பாம்பால் துரத்தப்பட்ட தவளை ஒன்று அவர் மீது பாய்ந்து அவர் தவத்தைக் கலைத்தது. முனிவர் வெகுண்டு இனி இந்த தீர்த்தத்தில் எந்தக் காலமும் தவளையும் பாம்பும் இல்லாமல் போகட்டும் என்று சாபமிட, இன்று வரை இந்தக் குளத்தில் தவளையும் பாம்பும் இருப்பதில்லை!

 இந்தத் தலத்தின் பெருமையில் முக்கியமானது, இங்குள்ள இறைவன் நாலாயிரத்து நானூற்று நாற்பத்தெட்டு வியாதிகளையும் தீர்க்கத் திருவுள்ளம் கொண்டு தையல்நாயகி அம்மன் தைல பாத்திரம், சஞ்சீவி, வில்வமரத்து அடிமண் ஆகியவற்றை எடுத்து வர,  சிவபிரான் தானே வைத்தியராகி அடியார்களுக்கு நோய் தீர்க்க அருள் செய்யப் பெற்ற அரும் செயலாகும்.

இந்தக் குளத்தில் நோய் தீர பக்தர்கள் வெல்லத்தைக் கரைப்பது மரபு. உப்பையும் மிளகையும் கலந்து பக்தர்கள் பிரகாரத்தில் உள்ள மரப்பெட்டி ஒன்றில் கொட்டி பிரார்த்தனை செய்கின்றனர். தங்கள் தங்களின் நோயைத் தீர்க்க வைத்யநாதரிடமிருந்து சிறிய திருச்சாந்துருண்டையைப் பெற்று சித்தாமிர்த தீர்த்தத்துடன் அதை உண்ண தீராத நோய்களும் தீர்கின்றன.

மேற்குத் திசை கோபுர வாயிலாகச் சென்றால் வெள்ளியாலும் தங்கத்தாலும் உள்ள இரு துவஜ ஸ்தம்பங்களைக் காணலாம்.

பிரம்மாண்டமான பிரகாரங்கள் இந்த ஆலயத்தில் உள்ளன. உட்பிரகாரத்தில்  சுவாமி சந்நிதிக்கு மேற்புறம் ஸ்ரீ செல்வ முத்துகுமாரசாமி உற்சவர், வள்ளி, தெய்வானையோடும் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். துர்க்கை, தன்வந்திரி உள்ளிட்ட ஏராளமான விக்ரஹங்களை இங்கு தரிசித்து வழிபடலாம். அற்புதமான சிற்பங்களும், கல்வெட்டுக்களும் இந்த ஆலயத்தில் உள்ளன.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகத்தையும் திருநாவுக்கரசர் இரு பதிகங்களையும் அருளியுள்ள தலம் இது. இங்கு அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் பாடல்கள் 14. வடுகநாத தேசிகர், குமர குருபரர், சிவஞான தேசிகர், சிதம்பரநாத முனிவர், வடலூர் வள்ளலார், படிக்காசுத் தம்பிரான், காளமேகப் புலவர் உள்ளிட்ட ஏராளமானோர் இங்கு இறைவனைத் துதித்துப் பாடல்களைப் பாடியுள்ளனர்.

காலம் காலமாக கோடானு கோடி பக்தர்கள் வழிபடும் வாலாம்பிகா சமேத வைத்யநாதஸ்வாமி அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திகிறோம்.

அப்பரின் அருள் வாக்கு:-

குற்றமில்லியைக் கோலச் சிலையினால், செற்றவர் புரம் செந்தழல் ஆக்கியை

புற்று அரவணைப் புள்ளிருக்கு வேளூர், பற்ற வல்லவர் பாவம் பறையுமே!

நன்றி வணக்கம்.

tags — வைத்தீஸ்வரன் கோவில், ஆலயம் அறிவோம்

Food shortage – What is it? Honesty, What is it? (Post. 9208)

COMPILED BY S NAGARAJAN

Post No. 9208

Date uploaded in London – –31 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Food shortage – What is it? Honesty, What is it?

Recently, a worldwide survey was conducted and the only question asked was: “Would you please give your honest opinion about the solution to the food shortage in the rest of the world?”

The survey was, not surprisingly, a huge failure. Because:

In Africa they didn’t know what “food” meant.

In Eastern Europe they didn’t know what “honest” meant.

In Western Europe they didn’t know what “shortage” meant.

In China they didn’t know what “opinion” meant.

In the Middle East they didn’t know what “solution” meant.

In South America they didn’t know what “please” meant.

And, in the USA they didn’t know what “the rest of the world” meant.

Xxxx

Punishment for Englishmen

There have been many definitions of hell, but for the English the best definition is that it is the place where the Germans are the police, the Swedish are the comedians, the Italians are the defense force, Frenchmen dig the roads, the Belgians are the pop singers, the Spanish run the railways, the Turks cook the food, the Irish are the waiters, the Greeks run the government, and the common language is Dutch.
– – – David Frost and Anthony Jay

Xxx

Politicians are the same all over. They promise to build a bridge even where there is no river.

 (Nikita Khrushchev)

–subham–

tags- food shortage, survey, honesty 

நடந்தவை தான் நம்புங்கள் – 5 (Post No.9207)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9207

Date uploaded in London – –31 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள் – 4 வெளியான தேதி : 25-1-2021; கட்டுரை எண் : 9184

நடந்தவை தான் நம்புங்கள் – 5

ச.நாகராஜன்

1

சமீபத்தில் உலகெங்கும் ஒரு பிரம்மாண்டமான சர்வே எடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது எதிர்பார்த்தபடியே மாபெரும் தோல்வியை அடைந்தது. அப்படி என்ன சர்வே என்கிறீர்களா? சர்வேயில் இருந்த கேள்வி ஒன்றே ஒன்று தான். அது இது தான்:- தயவுசெய்து நீங்கள் உலகின் மற்ற பகுதிகளில் உள்ள உணவு பற்றாக்குறைக்கான தீர்வு பற்றிய உங்கள் நேர்மையான கருத்தைத் தருகிறீர்களா?

ஏன் இந்த சர்வே உலகெங்கும் தோல்வி அடைந்தது? காரணம் இது தான்:

ஆப்பிரிக்காவில் அவர்களுக்கு “உணவு” என்றால் என்ன என்று தெரியவில்லை.

கிழக்கு ஐரோப்பாவில் அவர்களுக்கு “நேர்மையான” என்றால் என்ன என்று தெரியவில்லை.

மேற்கு ஐரோப்பாவில் அவர்களுக்கு “பற்றாக்குறை” என்றால் என்ன என்று தெரியவில்லை.

சீனாவில் அவர்களுக்கு “கருத்து” என்றால் என்ன என்று தெரியவில்லை.

மத்திய கிழக்கில் அவர்களுக்கு “தீர்வு” என்றால் என்ன என்று தெரியவில்லை.

தென்னமெரிக்காவில் அவர்களுக்கு “தயவுசெய்து” என்றால் என்ன என்று தெரியவில்லை.

அமெரிக்காவில் அவர்களுக்கு “உலகின் மற்ற பகுதிகள்” என்றால் என்ன என்று தெரியவில்லை.

ஆக மொத்தம், சர்வே மாபெரும் தோல்வியை அடைந்தது.

2

சோவியத் யூனியனின் செல்வாக்கு மிக்க தலைவராகவும் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராகவும் (1953 முதல் 1964 முடிய) நிகிதா குருஷேவ் (பிறப்பு 15-4-1894 மறைவு 11-9-1971) இருந்த போது அவரிடம் அரசியல்வாதிகள் பற்றிய கருத்து கேட்கப்பட்டது. தயங்காமல் உடனே தன் பதிலை அவர் கூறினார். பதில் இது தான்:-

அரசியல்வாதிகள் உலகெங்கும் ஒரே மாதிரி தான். அவர்கள் நதியே இல்லாத இடத்தில் கூட பாலம் கட்டித் தருவதாக சத்தியம் செய்து கூறுவார்கள்.

3

ஆங்கிலேயர்களை எப்படித் தான் தண்டிப்பது என்பது யாருக்கும் புரியவில்லை. இதற்கு முடிவு கட்ட நினைத்த டேவிட் ஃப்ராஸ்டும் அந்தோணி ஜேயும் இப்படிக் கூறினார்கள் : “நரகம் பற்றிய ஏராளமான வரையறுப்புகள் உள்ளன. ஆனால் நரகம் பற்றிய ஆங்கிலேயர்களுக்கான அருமையான விளக்கம் இது தான் : அங்கே ஜெர்மானியர்கள் தான் போலீஸ். ஸ்வீடன் நாட்டுக்காரர்கள் தான் காமெடியன்கள். இத்தாலியர்கள் தான் பாதுகாப்பு ராணுவம். பிரெஞ்சுக்காரகள் தான் அங்கே சாலையைத் தோண்டுவர். பெல்ஜியக்காரர்கள் தான் அங்கே பாப் பாடல்களைப் பாடுவார்கள். ஸ்பானியர்கள் தான் ரயிலை இயக்குவார்கள். துருக்கியர்கள் தான் உணவைச் சமைப்பார்கள். அயர்லாந்துக்காரர்கள் தான் உணவைப் பரிமாறுவார்கள். கிரேக்கர்கள் அரசை நிர்வகிப்பார்கள். பொதுமொழியோ அங்கு டச்சு மொழி!”

***

tags- நடந்தவை , நம்புங்கள் – 5

PLEASE JOIN US TODAY SUNDAY 31-1-2021

PLEASE JOIN US TODAY SUNDAY 31-1-2021

31 JANUARY SUNDAY -PROGRAMME

THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER BROADCAST

xxxx

PRAYER- BY – Sri Bhairava Kurukkal

NEWS 20 MINUTES IN ENGLISH AND TAMIL

READ BY MRS SUJATHA RENGANATHAN

AND  MRS VAISHNAVI ANAND

MRS BRHANNAYAKI SATHYA NARAYANAN SPEAKS  ON HINDU TEMPLES

THIRUPPUGAZ BY MRS JAYANTHI SUNDAR AND GROUP

TIRUPPUGAZ BY LAKSHMI RAMASWAMI’s STUDENTS-

London Swaminathan’s essay on Thiruppugaz read BY MRS VAISHNAVI ANAND

Deepika’s  Thaippusam Songs

RAMESH IYANGAR SONG ON LORD KANDSWAMY

Aapr.60 MINUTES

Xxxx

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

(After Pongal 2021, we do Tamil and Hinduism on both days)

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

(FORMER BBC BROADCASTER, SENIOR SUB EDITOR, DINAMANI, FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL)

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM / GNANAMAYAM

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

TAGS- PUBLICITY31121

சுமேரியாவும் பிராமணர்களும் – Z IGGURAT ஜிக்குராட் மர்மம் ! (Post No.9206)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9206

Date uploaded in London – –30 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுமேரியாவும் பிராமணர்களும் – Z IGGURAT ஜிக்குராட்  மர்மம் !

சுமேரியா என்றால் என்ன?

இராக் நாட்டின் ஒரு பகுதி. டைக்ரிஸ் – யூப்ரடீஸ் என்ற நதிகளின் சமவெளிப் பகுதி.

ஜிக்குராட் ZIGGURAT என்றால் என்ன?

படிப்படியாக அமைந்த சதுர கோபுரம். இந்துக் கோவில் போல இருக்கும்; ஆனால் படிப்படியாக – அதாவது கட்டம் கட்டம் ஆக சிறுத்துக் கொண்டே போகும் .  இந்துக் கோவில் முக்கோணம் போல உயரும். ZIGGURAT சிக்குராட் சதுரம், குட்டி சதுரம், குட்டி குட்டி சதுரம் என உயரும் .

இதற்கும் பிராமணர்களுக்கும் என்ன தொடர்பு?

பிராமணர்கள் நாள் தோறும் மூன்று முறை சூரியனை நோக்கி காயத்ரி மந்திரம் சொல்லுவார்கள். அந்த மந்திரம் நாலு வேதத்திலும் உள்ளது. உலகில் 8000 ஆண்டுகளாக பிராமணர்கள் சொல்லும், செய்யும் அற்புதம் இது. ஹெர்மன் ஜாகோபியும், பால கங்காதர திலகரும் ரிக் வேத காலத்தை ‘கி.மு. 6000 வரை’ என்று வான சாஸ்திர வழியில்- அடிப்படையில் நிரூபித்துள்ளனர். தள்ளிப்போன , தகிடுதத்தப் பேர்வழி மாக்ஸ்முல்லர் குத்து மதிப்பாக கி.மு 1200 என்று சொல்லிவிட்டு, பின்னர் வில்சன், விண்டர்நிட்ஸ் முதலிய அறிஞர்கள் கொடுத்த அடியில் அசந்து போய், ரிக்வேதம் கி.மு 1500 அல்லது அதற்கும் முன்னதாக இருக்கலாம்; எவரும் அதன் காலத்தைக் கணிக்க முடியாது என்று சொல்லி ‘ஜகா’ வாங்கினார்.

அப்பேற்பட்ட பெருமை மிகு  ரிக்வேத மந்திரத்தில் ZIGGURAT சிக்குராட் வருகிறது.

XXX

ZIGGURAT சிக்குராட் – சிகரம் ஏன் கட்டினார்கள்?

இந்த சதுர கோபுரம் பற்றி பைபிள் முதல் ஹெரோடோட்டஸ் (HERODOTUS) வரை பலரும் பல சுவையான விஷயங்களை நமக்கு விட்டுச் சென்றனர். பைபிளின் முதல்(GENESIS) அதிகாரத்தில் பேபல் கோபுரக் (TOWER OF BABEL) கதை வருகிறது. சொர்கத்துக்குப் போக மக்கள் செங்கல், சுண்ணாம்பு கொண்டு கோபுரம் அமைக்க முயன்றதால், கடவுளுக்கு கோபம் வந்தது. அவர்கள் நீங்கள் எல்லோரும் பல மொழிகளைப்ப பேசுவோராகி உலகெங்கும் ஓடிப்போங்கள் என்று சபித்துவிட்டார். இந்தக் கதையில் வரும் கோபுரம் சதுர சிக்குராட் கோபுரம். அது அழிந்து போகவே பின்னர் நெபொ போலசார் மகன் நெபுகட்னேஸார் ஒரு கோபுரம் கட்டினார்.

இதுதவிர சிக்குராட் பல கட்டப்பட்டு அவற்றினுச்சசியில் — சிகரத்தில் இறைவன் சிலைகள் வைக்கப்பட்டன. நாம் குன்றுதோறும் ஆடிவரும் குமரனை வழிபடுவது போல, பக்தர்கள் படி ஏறிச் சென்று கடவுளை வழிபட்டனர் .

இந்த ஜிக்குராட் ZIGGURAT= SIKHARA என்பது சிகரம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் சிதைவு ஆகும். ஐயர் தலையிலுள்ள சிகா – சிகை — என்னும் குடுமியும் இதே பொருளுடைத்தே !

ஹெரோடோட்டஸ் (HERODOTUS) என்னும் அறிஞர் சொன்ன விஷயத்துக்கு முன்னர், சுவையான பிராமண விஷயத்தைச் சொல்லிவிடுகிறேன் . பிராமணர்கள் தினமும் ‘காணாமல், கோணாமல், கண்டு’ — என்ற வகையில் மூன்று முறை சூரியனைத் தொழுவர். சூரியனைக் ‘காணாமல்’ – அதாவது சூர்யோதயத்துக்கு முன்னால் – நடுப்பகலில் – நிழல் ‘கோணாத’ நேரத்தில் – ‘கோணாமல்’ ஒரு முறை தொழுகை நடத்துவர். மாலையில் ‘கண்டு’- அதாவது சூரியன் மலைவாயில் விழுந்து மறைவதற்கு முன்னர் அவனைக் ‘கண்டு’ ஒரு முறை தொழுகை நடத்துவர். இது தவிர சமிதா தானம் (பிரம்மச்சாரிகளுக்கு), ஒளபாசனம் முதலிய தீ / அக்னீ  சடங்குகள் தனி.

பிராமணர்கள் உலக மஹா அதிசயங்கள்! ஏனெனில் இன்றும் 8000 வருஷமாக ஒரு சடங்கைச் செய்யும் அதிசயங்கள். அது மட்டுமல்ல; அதை வாய் மொழியாகவே பரப்பிவரும் மஹா அதிசயங்கள்!!! அவர்கள் மூன்று முறையும் சூரிய வெளிச்சத்தில் நின்று கொண்டு காயத்ரியை – தேவியை — இருதயத்துக்குள் அமர்த்துவர்- அதாவது ‘ஆவாஹனம்’ செய்வார்கள் . அது எப்படி?

கைகளை மூன்று முறை உடப்பக்கமாக காட்டி (INVOKING) வருக, வருக , வருக என்று மூன்று முறை அழைப்பர். நாம் சினிமா வசனங்களில் கேட்கும் ‘அலை மகள், கலை மகள் , மலை மகளை’ காயத்ரீம் ஆவாஹயாமி , ஸாவித்ரீம் ஆவாஹயாமி, ஸரஸ்வதீம் ஆவாஹயாமி  என்று அழைப்பர்.

இதில் சுவையான விஷயம் என்ன தெரியுமா?

அவள் Z ஜிக்குராட்டில் இருந்து — மேரு மலை ‘சிகரத்’தின் உச்சசியில் இருந்து வந்து பிராமணர் இதயத்துக்குள் அமர்வாள் ; பிராமணர்கள் தொழுகை முடித்தவுடன் அவளை திருப்பி அனுப்பும் மந்திரத்தில் ‘Z ஜிக்குராட்’ வருகிறது

தாயே! ரொம்ப THANKS தாங்க்ஸ் . திருப்பியும் சிகர உச்சிக்கே போய் விடு என்று GOOD BYE ‘குட் பை’ சொல்லுவார்கள்.

உத்தமே சிகரே தேவி பூம்யாம் பர்வத மூர்தனி

பிராம்மணோ ஹ்யணுக்ஞானம்

கச்ச தேவி யதா சுகம்”

என்ற மந்திரத்தைச் சொல்லி வழி அனுப்புவார்கள்.

மந்திரத்தின்  பொருள்

பிரகாசிக்கின்ற காயத்ரீ தேவியே, பூமியில் பிரம்மோபாசனம் செய்கின்ற எங்களுக்கு அனுக்கிரகத்தைச் செய்து , ‘மேரு மலை உச்சியில் உத்தமமான சிகர’த்திலுள்ள உனது ஆலயத்தில் ஆனந்தமாய் எழுந்தருள்வாய் “.

அவள் கடவுள் தானே !

பில்லியன் பிராமணர்கள் ட்ரில்லியன் தடவை கூப்பிட்டாலும் அலுப்பு சலிப்பில்லாமல் ஜிக்குராட் / சிகரத்தில் இருந்து இறங்கி வந்து இதயத்துள் அமர்ந்து அருள் புரியும் அற்புதமே அற்புதம் !!

ஹெரோடோடஸ் என்ற கிரேக்க அறிஞர் 2600  ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார். அவர் பல விஷயங்களை எழுதியதில் Z க்குராட்  விஷயமும் வருகிறது எட்டு அடுக்கு கோபுரம் பற்றி வருணிக்கையில் போகப் போக சதுரங்கள் சிறுத்துக் கொண்டே போவதாக எழுதியுள்ளார்.

இந்த சதுர கோபுரம் வானவியல் ஆராய்ச்சிக்கும் பயன்பட்டதாம். இந்துக்களைப் போலவே சுமேரியர்களும் நாள், நட்சத்திரம் பார்த்து விழா க்களைக் கொண்டாடினர்.

என்னுடைய முந்தைய கட்டுரைகளில் சுமேரியாவில் நம்மவர்கள் குடியேறியதைக் காட்டும் 30 சிந்து – ஸரஸ்வதி நதி தீர முத்திரைகள், தேக்கு மரத்துண்டுகள், சம்ஸ்க்ருத மன்னர் பெயர்கள் பற்றி எழுதியுள் ளேன் . சுமேரிய மன்னர்கள் பட்டியல் சுமார் 4500 ஆண்டுகள் பழமையானது

நரம் சின் NARAM SIN , அமர் சின் AMAR SIN  முதலிய பெயர்கள் நமக்கு நர சிம்மன் / நர சந்திரன் , அமர சிம்மன்/ அமர சேனன், அமர சந்திரன் முதலிய பெயர்களை நினைவு படுத்தும் . மேல் விவரங்களை 20, 30 தமிழ் ஆங்கிலக் கட்டுரைகளில் தந்து விட்டேன் ; கண்டு கொள்க .

–SUBHAM —-

Tags – சுமேரியா , பிராமணர் , ஜிக்குராட் , சிகரம், காயத்ரீ

மூளைக்கு வேலை : 5 நிமிடத்தில் விடை தர முடியுமா?!(Post No.9205)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9205

Date uploaded in London – – 30 January 2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மூளைக்கு வேலை : 5 நிமிடத்தில் விடை தர முடியுமா?!

Kattukutty

கீழே ஐந்து குட்டிக் கணக்குகள் உள்ளன.சுலபமானவைதான்.

என்றாலும் தவறான விடையே பலருக்கு தோன்றும்.சிறிது யோசித்தால் பளிச்சிடும் விடை. 5 நிமிடங்களில் விடை தர முடியுமா, பாருங்கள்!

லாபமா , நஷ்டமா, எவ்வளவு ???

ஒரு மெக்கானிக் ரூபாய் 300/-க்கு ஒரு மெஷின் வாங்கி 400

ரூபாய்க்கு விற்றான். அடுத்த நாளே அதே மிஷினை 400 ரூபாய்க்கு

வாங்கி 500 ரூபாய்க்கு விற்றான்.அவனுக்கு லாபமா? அல்லது நஷ்டமா? எவ்வளவு?

எத்தனை???

ஒரு சைக்கிள் சக்கரத்தில் 16 “ஸ்போக்” கம்பிகள் உள்ளன. இந்த

கம்பிகளுக்கிடையே எத்தனை இடை வெளிகள் உள்ளன?

15 ஆ, 16 ஆ, அல்லது 17 ஆ. ???

ஓடியது எவ்வளவு ???

ஒரு ஸ்கூட்டரில் 3000 மைல்கள் பயணம் செய்தார் ஒருவர். அதன்

(ஸ்பேர் டயர் உள்பட) 3 டயரகளையும் சரி சமமான அளவு தூரத்திற்கு உபயோகப்படுத்தியிருந்தால் ஒவ்வொரு டயரும்

எத்தனை மைல்களுக்கு ஓடியிருக்கும்?

எத்தனை பேர் தேவை ???

மூன்று தையற்காரர்கள் மூன்று நாட்களில் மூன்று “கோட்” தைப்பார்கள் என்றால், 30 நாட்களில் 30 கோட் தைக்க எத்தனை

பேர் தேவைப் படுவார்கள்?

எத்தனை “போர்???

ஓரிடத்தில் 3 வைக்கோல் போர் இருக்கிறது.இன்னொரு இடத்தில்

ஒன்றரை வைக்கோல் போர் இருந்ததையும, மற்றோரு இடத்தில்

இரண்டரை வைக்கோல் போர் இருந்ததையும் எல்லாவற்றையும்

ஒன்றாக சேர்த்தால் எத்தனை வைக்கோல் போர் ஆகும்?

விடைகள்

1.லாபம் 200 ரூபாய். முதல்தடவை விற்ற போது நூறும், இரண்டாவது

தடவை விற்ற போது நூறும் ஆக மொத்தம் லாபம் இருநாறு ரூபாய்

2.16 தான்! நன்றாக யோசித்து பாருங்கள்

3.ஒரு சமயத்தில இரண்டு டயர்கள் உபயோகத்தில் இருக்கும். வண்டி

3000 மைல் சென்றதென்றால், ஒவ்வொரு டயரும் 2000 மைல்

போயிருக்க வேண்டும். ஆக மொத்தம் 6000 மைலகள். இதை மூன்ற

டயர்களுக்கும் பிரித்தால் ஒவ்வொரு டயரும் ஓடிய தூரம் 2000 மைலகள்.

4.அதே 3 தையல்காரர்கள் போதுமே!!!

5.எல்லாவற்றையும் சேர்த்தால் வைக்கோல் போர் ஒன்று தானே!!!

tags -மூளைக்கு வேலை

ஹிந்துக்களின் எண்ணிக்கை! – 6 (Post No.9204)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9204

Date uploaded in London – –30 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஹிந்துக்களின் எண்ணிக்கை! – 6

ச.நாகராஜன்

9. இந்தியா:

இந்தியர்கள் பழங்காலத்திலேயே ஹிந்துக்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த இரண்டு வார்த்தைகளும் ஒரே அர்த்தத்தைத் தருபவையே. என்ற போதிலும் இந்தியாவின் பெரும் பகுதி இஸ்லாமியர்ன் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது; பின்னர் போர்த்துகீசியர், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், மற்றும் ஆங்கிலேயர் ஆகியோரது ஆளுகைக்கு உட்பட்டது. லட்சக்கணக்கான ஹிந்துக்கள் இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் மதம் மாற்றப்பட்டனர். 1947ஆம் ஆண்டு முடிய இந்திய ஜனத்தொகையில் சுமார் 25% இஸ்லாமுக்கும் 1.5% கிறிஸ்தவத்திற்கும் மாற்றப்பட்டனர். ஹிந்துக்கள் இதர மதங்களுக்கு மாற்றப்பட்ட போது அவர்களோ மற்றவர்களை மதம் மாற்றி ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். இப்படியாக, இந்திய முஸ்லீம்கள் மற்றும் இந்திய கிறிஸ்தவர்கள் ஹிந்து மற்றும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களையே தங்கள் முன்னோராகக் கொண்டிருந்தனர். ஹிந்துக்கள் இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் மதம் மாறியதற்கு கீழே உள்ள காரணங்களைச் சொல்லலாம்:

  1. ஹிந்து மதத்தின் ஜாதி முறை:

ஹிந்து சமூகத்தின் அமைப்பு சில சமூகங்களை/ ஜாதிகளைக் கொண்டிருந்தது உலகியல் சார்ந்த விஷயங்களில் தீவிரமான குறைபாட்டைத் தந்தது. இஸ்லாமும் கிறிஸ்தவமும் இந்த சமூகங்களுக்கு சமூகத்தில் சம அந்தஸ்தைத் தந்தது. ஆகவே கீழ் ஜாதி ஹிந்துக்களும் பழங்குடியினரும் தங்களது பழைய நம்பிக்கைகளை விட்டனர். உதாரணமாக, (இப்போது பாகிஸ்தானில் உள்ள) பெஹாவல்பூரைச் சேர்ந்த, சமூக ரீதியில் கீழாக இருந்த லோஹானா ராஜபுத்திரர்கள் முஸ்லீம் சூபி பரிதால் இஸ்லாமுக்கு மாற சில சலுகைகளைத் தந்த போது,  இஸ்லாமுக்கு மாற்றப்பட்டனர். கிறிஸ்தவர்களில் சுமார் 80%, கீழ் ஜாதி பழங்குடியினர் ஆவர்.

1. இங்கு ஒரு விஷயம் குறிப்பிடத்தகுந்த ஒன்று – தேச பிரிவினை ஏற்பட்டு பஞ்சாப் பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் ஏற்படுத்தப்பட்டவுடன் 10000க்கும் மேற்பட்ட (துப்புரவுத் தொழிலாளர்கள்) மெஹ்தார்கள் தங்கள் தர்மத்தைக் காத்துக் கொள்ளவும் தங்கள் பெண்களின் கௌரவத்தைக் காக்கவும் இந்தியாவிற்கு பத்திரமாக வந்து சேர்ந்தனர். துரதிர்ஷ்டவசமாகஅவர்கள் திருப்பித் திருப்பி வேண்டிய கோரிக்கைகளுக்கு  நேரு  செவி சாய்க்கவில்லை. இஸ்லாமிற்கு மாற்றப்படுகையில், அவர்களது பெண்மணிகள் தங்கள் தர்மத்தைக்  காக்கவும்  தங்களது சொந்த நம்பிக்கைகளில் ஊன்றி நிற்கவும்

எதிர்மறை விளைவுகளைத் தொடர்ந்து பொறுத்து வந்தனர். அவர்கள் திருப்பித் திருப்பி வைத்த கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்ட போது கிறிஸ்தவ மிஷனரிகள்  முன் வந்து குறுக்கிட்டு, தங்களது உதவிக்கரங்களை நீட்டினர். இதுவே காலகிரமத்தில் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட மெஹ்தார் ஜனத்தொகை கிறிஸ்தவத்திற்கு மாற்றப்பட்டதில் முடிந்தது. பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்கள் படும் அவலமும் துயரங்களும் ஒருபோதும் உணரப்பட்டதில்லை. பாரதத்தை வந்து அடைந்த பின்னரும் சமூக ரீதியாக, தாங்கள் துப்புரவுத் தொழிலாளர்களாகவே தான் நடத்தப்படுவர் என்பதை மெஹ்தார் மக்கள் நன்கு அறிவர். ஆனால் தொடர்ந்து தங்கள் தர்மத்தைக் காப்பாற்றும் முயற்சியில் அப்போது ஆண்டு வந்த போலி செக்குலர்வாதிகளான (ஹிந்து விரோத) அரசினால் இறுதியாக அவர்கள் புறக்கணிக்கப்பட்ட போது தோல்வி அடைந்தனர்.

ஆதாரம், நன்றி  : Truth Vol 88 No 21 dated 11-12-2020

{Critical Podium Dewanand writes on March, 25,2009 under the caption ‘Preserving Hinduisam – Sanatan Dharma’ – Preserving Hinduism as a world Religion down the ages. Hindus around the World, as follows (http://www.shopumust.com/hindus) }

இதன் ஆங்கில மூலம் கீழே தரப்படுகிறது:

Preserving Hinduism – Sanatan Dharma  

9. India: 

Indians were referred to as ‘Hindus’ in ancient times and the two terms were fairly synonymous. However, large parts of the country passed under Islamic rule and subsequently under Portuguese, French, Dutch and British rule. Millions of Hindus were converted to Islam and Christianity till; by 1947 C.E. approximately 25% and 1.5% of the population of the Indian Subcontinent had converted to Islam and Christianity respectively. While Hindus converted to other religions, they themselves refused to accept any converts. Thus, most indigenous Muslims(26) and Christians are descended from Hindu and Buddhist Indian ancestors. We may summarize the following causes for the conversion of Hindus to Islam and Christianity: 

a. Hindu Caste System: 

The social structure of the Hindu society put some communities/castes at a severe disadvantage in all temporal matters. Islam and Christianity offered these communities social equality and so several Low Caste Hindus and tribals left their ancestral beliefs. For instance, the socially inferior Lohana Rajputs of Bahawalpur (now in Pakistan) converted to Islam when the Muslim Sufi Farid offered them sops for converting to Islam. About 80% Christians in India have Low Caste or Tribal origins.

[1. It deserves mention that after the partition of Punjab and creation of Pakistan, more than 10,000 Mehtars (Sanitary Workers) sought safe passage to India to save their Dharma and honour of their women. Unfortunately Nehru lent a deaf air to their repeated prayers. Their women continued to bear the brunt of the rabid proselytising Moslems, to protect their Dharma and continued to remain anchored to their moorings. After their repeated appeals were ignored, Christian Missionaries came forward and extended their helpful hands to intervene. This ultimately resulted in the conversion of the tormented Mehtar population to Christianity over years. The woes and sorrows of those Hindus in Pakistan was never recognised. The Mehtars knew that socially they will continue to remain sweepers only after reaching Bharat, but failed in their persistent effort to save their Dharma till being finally ignored by the then ruling pseudo-secular (anti-Hindu) ruling dispensation. 

***               தொடரும்

ஹிந்து, எண்ணிக்கை! – 6, Hindu census 6

பிப்ரவரி 2021 காலண்டர்- ஆண்மை , வீரம் பற்றிய பொன்மொழிகள் (Post.9203)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9203

Date uploaded in London – –29 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிப்ரவரி 2021 காலண்டர்

பண்டிகை நாட்கள் -பிப்ரவரி .11- தை  அம்மாவாசை  ; 14- காதலர் தினம் ; 16- வசந்த பஞ்சமி ; 19 -ரத சப்தமி , சிவாஜி ஐயந்தி   ;  27- மாசி மகம் , கேரளத்தில் ஆட்டுக்கல் பொங்கல் விழா , குரு  ரவிதாஸ்  ஜயந்தி

அமாவாசை – 11; பவுர்ணமி -26/27; ஏகாதசி விரத நாட்கள்- 7/8, 23

சுப முகூர்த்த தினங்கள்- FEB.1, 3, 4, 8, 15, 24, 25

பிப்ரவரி 1 திங்கட்கிழமை

சம்பத்சு ஹி  சுசத்வானாம் ஏக ஹேதுஹு ஸ்வ பெளருஷம் – கதா சரித் சாகரம்

உயர்ந்தோர்க்கு அவர்களுடைய ஆண்மையே செழிப்பைக் கொண்டுவரும்

XXX

பிப்ரவரி 2 செவ்வாய்க் கிழமை

விக்ரமார்ஜித சத்வஸ்ய ஸ்வயமேவ ம்ருகேந்த்ரதா – ஹிதோபதேசம் 2-19

வீரமுள்ளோனுக்கு அரச பதவி இயல்பாகவே வந்து சேரும் .

XXXX

பிப்ரவரி 3 புதன் கிழமை

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்

கழல்யாப்புக் காரிகை நீர்த்து.   (திருக்குறள் – 777)

புகழை விரும்பி, உயிரை வெறுத்துப் போரிடும் ஆண்மையுள்ள வீர மறவரின் காலிலே, விளங்கும் கழல்களே அழகு உடையவாகும்

XXXX

பிப்ரவரி 4 வியாழக் கிழமை

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்

செறினும் சீர்குன்றல் இலர்.   (திருக்குறள் – 778)

போர்க்களத்திலே தம் உயிருக்கும் அஞ்சாமல் போரிடும் வீர மறவர்கள், தம் அரசனே கோபித்தாலும் , தம் மனவூக்கத்தில் சிறிதும் குறைய மாட்டார்கள்

XXXX

பிப்ரவரி 5 வெள்ளிக் கிழமை

அயுக்தமத்ருதித்வம் புருஷா ணாம் – அவிமார்கம் 2-33

ஊசலாடும் மனதுடையோன் மனிதன் அல்ல

XXX

பிப்ரவரி 6 சனிக் கிழமை

எததேவ பரம் சாதுர்யம் யத்பர ப்ராண ரக்ஷணம் — சம்ஸ்க்ருத பழமொழி

வீரத்தின் உச்ச கட்டம் மற்றோரு உயிரைக் காப்பதில்தான் உளது

XXX

பிப்ரவரி 7 ஞாயிற்றுக் கிழமை

கான முயலெய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது.   (திருக்குறள் – 772)

காட்டு முயலைக் குறிதவறாமல் எய்து வீழ்த்திக் கொன்ற அம்பினைக் காட்டிலும், யானைமேல் எறிந்து குறிதவறிய வேலினைத் தாங்குதலே வீரருக்கு இனிதாகும்

XXXX

பிப்ரவரி 8 திங்கட்கிழமை

பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்

ஊராண்மை மற்றதன் எஃகு.   (திருக்குறள் – 773)

‘பேராண்மை’ என்பது பகைவர்க்கு அஞ்சாமல் எதிர் நின்று போரிடும் ஆண்மையே; அவருக்கு ஒரு கேடு வந்தவிடத்து உதவிநிற்கும் ஆண்மையோ, அதனிலும் சிறந்ததாகும் .

XXXX

பிப்ரவரி 9 செவ்வாய்க் கிழமை

இந்தக் கடினமான உலகத்தை ஆண்மையுடையோரே அனுபவிக்க முடியும்

தீக்ஷ்ணா ணுவர்த்தி  லோகோயம் பவுருஷேணை வ புஜ்யதே – ராமாயண மஞ்சரி

XXX

பிப்ரவரி 10 புதன் கிழமை

மடியில் தலை வைத்து உறங்குவோரை வீழ்த்துவது ஆண்மையா – ஹிதோபதேசம்

அங்கமாருஹ்ய ஸுப் தானா ம் வதே கிம் நாம பவுருஷம்

XXX

பிப்ரவரி 11 வியாழக் கிழமை

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை

முன்நின்று கல்நின் றவர்.   ( திருக்குறள் – 771)

பகைவரே! என் தலைவனின் முன்னே எதிர்த்து வந்து நில்லாதீர்; அவன் முன்னர் எதிர்த்து வந்து நின்று, களத்தில் வீழ்ந்துபட்டு, நடுகற்களாக (HERO STONES FOR DEAD SOLDIERS) நிற்பவர் மிகப் பலர்

XXXX

பிப்ரவரி 12 வெள்ளிக் கிழமை

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்

வைக்கும்தன் நாளை எடுத்து.   (திருக்குறள் – 776)

கழிந்து போன தன் வாழ்நாட்களைக் கணக்கிட்டுப் பார்த்து, விழுப்புண் படாத நாட்களை எல்லாம், தான் தவறவிட்ட நாட்களுள் சேர்ப்பவனே  வீரனாவான்

XXXX

பிப்ரவரி 13 சனிக் கிழமை

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே

பிழைத்தது ஒறுக்கிற் பவர்.   ( திருக்குறள் – 779)

தாம் உரைத்த சூளுரையிலிருந்து தப்பாமல் போரினைச் செய்து, சாகிற வீரரை,  சூளுரை பிழைத்ததற்காக யாரும் தண்டிக்கமாட்டார்கள்

XXX

பிப்ரவரி 14 ஞாயிற்றுக் கிழமை

புஜே  வீ ர்யம் நிவசதி  ந வாசி – சம்ஸ்க்ருத பழமொழி

வாய்ச்  சொல்லில் வீரம் இல்லை; புஜ பலத்தில் இருக்கிறது.

XXX

பிப்ரவரி 15 திங்கட்கிழமை

பிரதாப சஹாயா  ஹி சத்வவன்தஹ- சம்ஸ்க்ருத பழமொழி

விரமுள்ளவனுக்கு ஆண்மையே துணை

XXX

பிப்ரவரி 16 செவ்வாய்க் கிழமை

புவு ருஷேன  வினா மூல்யம் புருஷஸ்ய எ கிஞ்சன

வீரமில்லாதவனுக்கு மதிப்பு எதுவுமில்லை – கஹா வத் ரத்னாகர்

XXX

பிப்ரவரி 17 புதன் கிழமை

புவுருஷேண து யோ யுக்தஹ  ச து சூர இதி ஸ்ம்ருதஹ

ஆண்மையுடையவனையே சூரன் என்பர் மக்கள்

வால்மீகி ராமாயணம் 6-71-59

XXX

பிப்ரவரி 18 வியாழக் கிழமை

ஆண்மையை கைவிடாதீர் — சம்ஸ்க்ருத பழமொழி

பவுருஷம் ந பரித்யஜேத்

XXXX

பிப்ரவரி 19 வெள்ளிக் கிழமை

புருஷகாரேண வினா தெய்வம் ந சித்யதி – யாக்ஞ வாக்ய ஸ்மிருதி 1-351; ஹிதோபதேசம் 32

மனிதன் முயற்சி செய்யாவிடில் இறைவன் அருள்புரிய மாட்டான்

XXX

பிப்ரவரி 20 சனிக் கிழமை

துணிச்சல்மிக்கவர் சவடால் விடுவதில்லை – செயலில் காட்டுவர்

ந ஹி சூரா விகத்தந்தே தர்ஷயந்த்யேவ பவுருஷம் – சம்ஸ்க்ருத பழமொழி

XXX

பிப்ரவரி 21  ஞாயிற்றுக் கிழமை

ந ஸூர்யோ தீ பேனாந்தகாரம் பிரவிசதி – பத்மப் ராப் ராந்தக

சூரியன் விளக்கை வைத்து இருளை விரட்டுவதில்லை

XXX

பிப்ரவரி 22 திங்கட்கிழமை

ந சத்வவன்தஹ ஸக்யந்தே பயா தப்யகதிம் கமயிதும் – ஜாதகமாலை

துணிச்சல் மிக்கவர் பயந்தும் கூட தவறான வழியில் செல்லார்

XXX

பிப்ரவரி 23 செவ்வாய்க் கிழமை

வீரர்கள் மற்றவர்களுக்கு துரோகத்தனமாக தீங்கிழைக்க மாட்டார்கள் – சிசுபாலவதம்

ந பரேஷு மஹவ் ஜஸ ஸ் சலா தபகுர் வந்தி மலிம் லுசா இவ

XXX

பிப்ரவரி 24 புதன் கிழமை

ந பரேணா ஹ்ருதம் பக்ஷ்யம் வ்யாக்ரஹ காதிதுமிச்சதி – வால்மீகி ராமாயணம் 2-61-16

மற்றவை விட்டுச் சென்ற மிச்சம் மீதியை புலி சாப்பிடுவதில்லை

XXX

பிப்ரவரி 25 வியாழக் கிழமை

ததாதி தீவ்ர சத்வானாமிஷ்டமீச்வர ஏவ ஹி – – கதா சரித் சாகரம்

தீவிர முயற்சி உடையோருக்கு கடவுளே அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றுகிறான்

XXX

பிப்ரவரி 26 வெள்ளிக் கிழமை

திட உறுதி பூண்டவர்கள் விரைவில் முழு வெற்றி அடைகின்றனர் – – கதா சரித் சாகரம்

தீவ்ர சத்வஸ்ய ந சிராத் பவந்த்யத்யேவ ஹாய் சித்தயஹ

XXX

பிப்ரவரி 27 சனிக் கிழமை

முதுகெலும்பில்லாதவரை விட்டு ஆண்மை ஓடிவிடும் – ராமாயண மஞ்சரி

அதைர்யலு ப்த சித்தானாம் பவுருஷம் பரி ஹீயதே

XXX

பிப்ரவரி 28 ஞாயிற்றுக் கிழமை

பீ டும் பெருமையும்  உடைய சிங்கம் புல்லைத் தின்று உயிர்வாழ உடன்படுமா -நீதி சதகம் 21

கிம் ஜீர்ணம் த்ருணமதி மான மஹதாமக்ரேசரஹ கேசரி 

XXX  SUBHAM XXXXX

tags– பிப்ரவரி 2021 காலண்டர், ஆண்மை , வீரம் ,  பொன்மொழிகள்