Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020; THIS SERIES STARTED ON NINTH DECEMBER 2020.
ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK .
XXX
2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -27
3-2-126
Laghu –Light
லகு – இலகுவான , லேசான
Lavate— Float/தெப்பம்
வல்லம் – படகு –
xxx
3-2-129
Vayas— Vayathu வயது
Vayas —V/age; Also AYUSH/Age ஆயுள்
Sakti –Skill, capacity to do
Sakti is used in most of the Indian languages.
சக்தி – விசை
Xxx
3-2-132
Suu– Juice, squeeze
Suu– chew, get the juice out of it.
சாறு பி ழி
Old English ceowan “to bite, gnaw, chew,” from West Germanic *keuwwan (source also of Middle Low German keuwen, Dutch kauwen, Old High German kiuwan, German kauen), perhaps from PIE *gyeu- “to chew” (source also of Old Church Slavonic živo “to chew,” Lithuanian žiaunos “jaws,” Persian javidan “to chew”).
இந்த வழியில் பார்த்தாலும் ஸம்ஸ்க்ருத தொடர்புடையதே ‘ஜம்ப’ என்றால் தாடை என்று பொருள்.
xxxxx
3-2-133
Arha — Fit to
In Tamil Arukathai
அருகதை
Xxx
3-2-136
Ishnu ending is interesting.
12 words are given as examples; few of them
Rosishnu, varthishnu, sarishnu
It sounds like Malayalam present tense
Atikkunnu/ beating, kazikkunnu/eating etc
But the meanings and grammar are different.
இஷ்ன்னு — வில் முடியும் 1 சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மலையாள த்தில் ‘ன்னு’ என்பது நிகழ்கால முடிவு. ஆனால் சம்ஸ்கிருதத்தில் ஒரு செயலைச் செய்கிறவன்
In Panini it meant one who does something – verbal noun
சப்த அளவில் மட்டுமே ஒற்றுமை
Xxx
3-2-138
In the commentary comes Lohita Chandana/ red sandal
L= r
Rohita= red
Chandana – saanthu, saantham in Tamil
ரோஹித சந்தன – செஞ்சந்தனம்
சந்தனம் தமிழ்ச் சொல்
xxxx
3-2-139
Glasnu – one who is tired
Kalaippu in Tamil is tiredness களைப்பு
Xxxx
DRUIDS IN STONEHENGE, ENGLAND
3-2-140
Grusnu- greedy man
Grus- greed
Dhrusnu – bold
It is related English names
Andrew -Drew
“Andrew” is frequently shortened to “Andy” or “Drew”. The word is derived from the Greek: Ἀνδρέας, Andreas, itself related to Ancient Greek: ἀνήρ/ἀνδρός aner/andros, “man” (as opposed to “woman”), thus meaning “manly” and, as consequence, “brave”, “strong”, “courageous”, and “warrior”.
ஆண்ட்ரு , ட்ரு என்பன தமிழும் சம்ஸ்கிருதமும் கலந்த பெயர்
ஆண் என்ற கிரேக்க மொழிச் சொல் தமிழில் இருந்து கிரேக்க நாட்டுக்குச் சென்றது. த்ருஷ்ணு என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு துணிச்சல் மிக்க என்று பொருள். ட்ருய்ட் என்ற மர்மம் மிக்க பழங்குடி மக்கள் துணிச்சல் மிக்கவர்கள் என்பதால் அவர்களுக்கும் காரணப் பெயராக அமைந்திருக்கலாம்.
ட்ருய்ட் என்பதை திராவிடர் என்போரும் உளர்
An – aan in tamil mean man, manly/aanmai
Drew in Irish mean descendant of Druids .
Druids are
Drew (/druː/) is both a surname and a given name. As a surname, it is derived from the Irish Ó Draoi, literally meaning “Descendant of the Druid”.[1] As a male given name, it is a shortened version of Andrew.
In short Drew and Andrew are Tamil- Sanskrit hybrid ords.
Bold man – An Drew
So neither greek is indo European nor tamil is Dravidian
நான் 50-க்கும் மேலான தமிழ்ச் சொற்களை இதுவரை பட்டியலிட்டு கிரேக்க மொழி தமிழ் மற்றும் சம்ஸ்கிருத மொழியில் இருந்து பிறந்தது என்று காட்டியுள்ளேன்.
So far I have listed over50 tamil words in ancient Greek; all other Greek words are from Sanskrit
DRUIDS IN STONE HENGE IN ENGLAND
Xxxx
3-2-142
There are 30 examples with 30 verbs to explain this sutra.
Out of the 30 erbs or verbal nouns, we get familiar words used throughout india
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இந்தப் பிரபஞ்சசத்தை உருவாக்கும் 118 மூலகங்களில் (ELEMENTS) இதுவரை 28 தனிமங்களைக் கண்டோம். இன்று 29ஆவது மூலகத்தை அறிவோம்.
நியான் (NEON) என்ற வாயுவின் சரியான உச்சரிப்பு நீயான் (நியான்= NEENYON நீ- யோன்) . ‘நவ’ என்ற சம்ஸ்கிருத்த் சொல்லில் இருந்து வந்தது நியூ / NEW புதிய என்ற சொல். அதிலிருந்து உதித்தத்தே புதிய= நியான் வாயு.
இந்த வாயுவினால் மற்ற மூலகங்களுடன் இணைந்து பணிபுரிய முடியாது. ஆகையால் இவை மக்கள், பிராணிகள் விஷயத்தில் எந்தப் பங்கும் ஆற்றுவதில்லை இதை போலவுள்ள ஆர்கான், க்ரிப்டான் , ஸெனான் என்ற வாயுக்களும் நோபிள் NOBLE , அதாவது பிரபுக்கள் போன்றவை. அதிகம் மற்றவர்களுடம் கலவாத வகையின.
வில்லியம் ராம்ஸே , மாரிஸ் ட்ராவர்ஸ் (WILLIAM RAMSAY , MORRIS TRAVERS) என்ற 2 விஞ்ஞானிகள் லண்டனில் 1898ல் அபூர்வ வாயுக்கள் எனப்படும் பிரபுக்கள் வாயுக்கள் பற்றி ஆராய்ந்போது திடீரென அதிக ஒளிபடைத்த வாயுவைக் (CRIMSON RED LIGHT) கண்டனர் . ‘புதிய’ என்பதற்கான ‘நியாஸ்’ என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து நாமகரணம் செய்தனர்.
வாயு என்பது தமிழில் ‘வளி’ எனப்படும் ஆகையால் நியானை ‘புதுவளி’ என்றும் சொல்லலாம் என்பது என் கருத்து..
முதலில் நியான் பற்றிய சுவையான கதையைக் கேளுங்கள் .
ராம்சேயும் ட்ராவர்ஸும் இதைக் கண்டு பிடித்ததாக உலகம் நம்பினாலும் அதே லண்டன் யுனிவர்சிட்டி காலேஜில்UNIVERSITY COLLEGE, LONDON பணியாற்றிய விஞ்ஞானி NORMAN COLLIE தான்தான் நியானைக் கண்டுபிடித்தவர் என்று சொல்லிக்கொள்கிறார். அவர் ஹைட்ரஜன் வாயுவில் நிறமாலையைக் கண்டுபிடிக்குமாய்வில் ஈடுபட்டபோது சிவப்பு ஒளி வந்ததை வைத்து புதுவளி என்று அறிந்தார்.
1973ல் வெளியான ஒரு புஸ்தகம் (THE SNOWS OF YESTER YEAR- NORMAN COLLIE BY WILLIAM TAYLOR, 1973) இவரும் தன்னிச்சையாக கண்டுபிடித்திருக்கக்கூடும் என்று சொல்கிறது
ஜே .நார்மன் கோலி (1859-1942) ஆர்கானிக் கெமிஸ்ட்ரி பேராசிரியர் PROFESSOR OF ORGANIC CHEMISTRY, UNIVERSITY COLLEGE .அதுமட்டுமல்ல; அவரை முன் மாதிரியாகக் கொண்டு தான் ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற துப்பறியும் கதாபாத்திரத்தை உருவாக்கினார் சர் ஆர்தர் கானன்டாயில் .ஷெர்லாக் ஹோம்ஸும் பல துப்புகளை ரசாய ரீதியில் துலக்குவார்.நார்மன் கோலி சிறந்த ரசாயன நிபுணர். நல்ல மலையேறும் சாகசப் புலி.
நம்மைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் நியான் வளி 65 பில்லியன் டன் உளது. ஆகையால் காற்றைக் கறந்து நியானைப் பெறலாம் . அதிகமாக உள்ள தனிமப்பட்டியலில் இது ஐந்தாமிடத்தில் உளது.
XXXX
நியான் NEON வாயு விளக்குகள்
இதன் முக்கிய உபயோகம் விளம்பர போர்டுகள் ஆகும். நல்ல சிவப்பு வர்ண ஒளி தருவதால் விளம்பரம் செய்யும் விளக்குகளில் இது முதலிடம் வகிக்கிறது.
இது தவிர மூடுபனிக் காலத்தில் சாலைகளிலும், நீர் மூழ்கி சாதனங்களிலும், லேஸர் ஒளிக்கருவிகளிலும் பய படுகிறது. மிகவும் குறைந்த வெப்பத்தில் குளிர் ஊட்டும் திரவம் ஆகவும் இருக்கிறது.
மூவுலக அட்டவணையில் 18-ஆவது குழுவைச் சேர்ந்தது. அதில் மேலும் 6 தனிமங்கள் உண்டு. இவை அனைத்தும் மந்த வாயுக்கள். ஏனைய மூலகங்களுடன் எளிதில் சேரா.
இரசாயனத் தகவல்கள்
குறியீடு Ne என் ஈ
அணு எண் – 10
கொதி நிலை – மைனஸ் -249 Cசி
உருகு நிலை- மைனஸ் -246 Cசி
இதற்கு 3 ஐசடோப்புகள் இருக்கின்றன .
ஐசடோப் என்பது ஒரு தனிமத்தின் மற்றோர் அவதாரம் / பிறப்பு.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
VOICE RECORDING IS IN GNANAMAYAM PAGE; FACEBOOK, YOU TUBE
லண்டனிலிருந்து ஒவ்வொரு திங்கள்கிழமையன்றும் மாலை இந்திய நேரப்படி 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 18-1-2021 அன்று ஒளிபரப்பாகிய உரை!
அறிவியல் வியக்கும் ஸ்ரீசக்ர ரகசியம்
ச.நாகராஜன்
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். அறிவியல் வியக்கும் ஸ்ரீசக்ர ரகசியம் பற்றி இன்று காண்போம்.
மந்திரம், யந்திரம், தந்திரம் மூலமாக எதையும் அடைய முடியும் என்று ஹிந்து மத சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன; உரிய வழிகளைக் காட்டுகின்றன!
யந்திரம் என்பது பல்வேறு வடிவங்களை அமைத்து அதில் மந்திரங்களைப் பிரயோகித்து ஒரு சக்தியை உருவாக்கி விரும்புவதை அடைய வழி வகுப்பதாகும்.
உலகில் வாழும் மனிதர் அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற நோக்குடன் அருளாளர்கள் ஆலயத்தில் மூல விக்கிரகத்தின் – பீடத்திலோ அல்லது ஆலயத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியிலோ யந்திர பிரதிஷ்டை செய்து வந்தனர். திருப்பதியில் ஜன ஆகர்ஷண, தன ஆகர்ஷண யந்திரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதாலேயே அங்கு மக்கள் திரள் திரளாகக் குவிகிறார்கள், ஏராளமான செல்வமும் வந்து குவிகிறது என்று பெரியோர் கூறுவர். காஞ்சி காமாக்ஷி அம்மன் கோவில் யந்திரமும் பிரசித்தி பெற்றது.
யந்திரங்களுள் சிறந்தது அளப்பரிய ஆற்றல் கொண்டது ஸ்ரீயந்த்ரம்
இதை ஸ்ரீசக்ரம் என்று சொல்வது வழக்கம். இது இருக்கும் இடமே மங்களகரமானது.
இதன் மூலமே மஹா சக்தியை மக்கள் பெரிதும் போற்றுகின்றனர். அண்ட சராசரத்தின் அடையாளச் சின்னமே ஸ்ரீசக்ரமாகும். ஸ்ரீசக்ரம் உள்ளிட்ட பல்வேறு யந்திரங்கள் பிரக்ஞையின் பல்வேறு நிலைகளை எட்ட உதவுகின்றன. ஒரு சுவாரசியமான சம்பவத்தைப் பார்ப்போம்.
மந்திரத்திற்கு மஹிமை உண்டா என்று ஒலி அலைகளை அறிவியல் பூர்வமாக ஆராய, ஸ்விட்ஸர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஹான்ஸ் ஜென்னி (Hans Jenny) (1904-1972) முனைந்தார்.
பொறுமையாக ஒவ்வொரு ஒலி அலையையும் அவர் பத்து ஆண்டுக் காலம் பரிசோதித்தார். க்ளிசரின், பாதரஸம், ஜெல் பவுடர், இரும்பு போன்றவற்றில் ஒலி அலைகள் என்ன விளைவை ஏற்படுத்துகின்றன என்பதை அவர் உன்னிப்பாக ஆராய்ந்தார். குறைவான அதிர்வுள்ள ஒலி அலைகள் (Low Frequency Sound Waves) சாதாரணமான ஜியாமெட்ரி வரைபடங்களை உருவாக்குவது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது! ஒலி அதிர்வு அதிகமாக்கப்பட்டபோது இந்த சாதாரண படங்கள் சிக்கலான படங்களாக மாற ஆரம்பித்தன!
“ஓ” என்ற ஒலி அலை, ஒரு வட்டத்தை உருவாக்கியது. உடனே “ஓம்” என்ற ஒலி அலையை அவர் உருவாக்கினார். அதிலே ஸ்ரீசக்ரம் உருவானது!
ஹான்ஸ் ஜென்னி ஆச்சரியப்பட்டுப் போனார். பாரதத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஸ்ரீசக்ரம் வழிபடப்பட்டு வருகிறது. ஓம் உச்சரிக்கப்பட்டு வருகிறது!
ஜென்னி தன் ஆய்வுகளின் மூலம் ஒலி அலைகள் உருவங்களை உருவாக்குகின்றன என்ற முடிவுக்கு வந்தார். அத்தோடு மனித உடலில் செல்கள், திசுக்கள், உறுப்புகள் அதற்கு உரித்தான ஒலியைக் கொண்டிருக்கிறது என்ற முடிவுக்கும் அவர் வந்தார். “ஓம்” என்று உச்சரிப்பதும் அதைப் போற்றி வழிபடுவதும், ஸ்ரீசக்ர வழிபாடும் உடலுக்கும் மனதிற்கும் எல்லையற்ற சக்திகளையும் இதர நலன்களையும் நல்குகிறது என்று அவரது ஆய்வு சிறப்பான முடிவைத் தெரிவிக்கிறது!
ஸ்ரீசக்ரத்தின் பெருமையைக் கேட்ட உலகெங்குமுள்ள விஞ்ஞானிகள் இதை ஆராய ஆரம்பித்து விட்டனர். மாஸ்கோ பல்கலைக் கழக இயற்பியல் விஞ்ஞானியான அலெக்ஸி குலைச்சேவ் (Alexie Kulaichev) மற்றும் ரஷிய நாட்டு விஞ்ஞான கழகத்தைச் சேர்ந்த கோவலான் சென்கோ என்ற இருவரும் ஸ்ரீசக்ரத்தை ஆராயப் புகுந்தனர். அவர்களது ஆராய்ச்சியின் முடிவு அவர்களுக்கு எல்லையற்ற பிரமிப்பையும் வியப்பையும் தந்தது,
கம்ப்யூட்டராலேயே ஸ்ரீசக்ர கோணங்களையும் அமைப்பையும் ஆராய முடியவில்லை என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
“இன்றைய கணினி தொழில்நுட்பத்தால் ஸ்ரீசக்ரத்தை ஆராய முடியவில்லை என்றும் அதை ஆராய்வதற்குச் சிக்கலான அல்ஜீப்ரா சமன்பாடுகள் உள்ளன; அது தற்போதைய கணினியின் செயல்திறனுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது” (Their analysis involved a complex system of algebraic equations and a complicated computations which are beyond the capability of the present generation of computers)என்று அவர்கள் ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்த சக்கரத்தை எப்படி முன்னோர்கள் அமைத்தனர், ஒன்பது முக்கோணங்கள் ஒன்றை ஒன்று வெட்டும் போது அதன் பல்வேறு வெட்டுப் புள்ளிகள் ஒரே இடத்தில் சேர்வதை எப்படி அவர்களால் அறிய முடிந்தது என்று அவர்கள் ஆச்சரியப்பட்டனர். இன்னும் விளங்கிக் கொள்ள முடியாத அநேக அறிவியல் விளக்கங்களும் இந்த யந்திரத்தில் பொதிந்துள்ளன என்கின்றனர் அந்த விஞ்ஞானிகள்!
“How did people come to know that nine triangles arranged in such a way intersect each other, their numerous crossing points coinciding!”
ஸ்ரீசக்ரத்தின் மஹிமையைப் பல்வேறு விதமாகவும் அவர்கள் ஆராய்ந்தனர். ஸ்ரீசக்ரம் உளவியல் சம்பந்தமான அனைத்து மனநோய்களையும் போக்க வல்லது என்று அவர்கள் அதிகாரபூர்வமாகக் கூறுகின்றனர், மிக மிக சரியான அளவுகளுடன் அதை எப்படி வரைவது என்று தெரிந்து கொண்டு அந்த முறையில் அமைக்கப்படும் ஸ்ரீசக்ரம் மட்டுமே இந்த விதமான சக்தியைப் பெறுகிறது. அலெக்ஸி குலைச்சேவ் தனது ஆராய்ச்சியில் ஸ்ரீசக்ரம் போன்ற ஒரு போலி யந்திரத்தைச் செய்து அதை ஆய்வு செய்த போது அது எந்த நோயையும் குணப்படுத்தவில்லை. ஆக உரிய அளவுகளுடன் உரிய முறையில் உள்ள ஸ்ரீசக்ரமே சக்தி வாய்ந்தது என்பதைத் தனது ஆய்வின் மூலமாக உறுதிப் படுத்தினார் அவர். அவரது ஆய்வுரையை அங்கீகரிக்க அவரது திட்டத் தலைவருக்கு அது சமர்ப்பிக்கப்பட்ட போது அவரும் இப்படிப்பட்ட பலன்களை உறுதி செய்து கொண்ட பின்னரேயே அந்த ஆய்வை அங்கீகரித்தார் என்பதும் குறிப்பிடத் தகுந்தது.
ஸ்ரீசக்ரத்தில் ஏராளமான ரகசியங்கள் புதைந்துள்ளன. நடுவில் பிந்துவும் (புள்ளி), சுற்றி ஒன்பது முக்கோணங்களும் உள்ள அமைப்பு என்று ஒரு வரியில் சுலபமாக ஸ்ரீசக்ரத்தை விவரித்துச் சொல்லி விட்டாலும் எல்லையற்ற பிரபஞ்சத்தின் மர்மத்தை அது உள்ளடக்கி இருக்கிறது என்றே அதன் ஆற்றலை உணர்ந்தோர் கூறுவர்.
ஒன்பது முக்கோணங்களில் மேல் நோக்கிய நான்கும் சிவனையும் கீழ் நோக்கிய ஐந்து முக்கோணங்கள் சக்தியையும் குறிக்கின்றன,
மஹா திரிபுரசுந்தரியின் வழிபாடாக ஸ்ரீசக்ர வழிபாடு அமைகிறது. எல்லையற்ற சக்தி, ஆரோக்கியம், செல்வச் செழிப்பு, முக்திப் பேறு என இப்படி இக பர நலன்கள் அனைத்தையும் தரும் அற்புத யந்திரம் ஸ்ரீசக்ரமாகும்!
சௌந்தர்ய லஹரிக்கு விரிவுரை எழுதிய லக்ஷ்மிதரர் பதினொன்றாம் சுலோக விரிவுரையில் ஸ்ரீசக்ரத்தை மதம், இனம், வர்ணம், பால், வயது, அந்தஸ்து, கல்வி பாகுபாடின்றி அனைவரும் வழிபடலாம் என்று உரைக்கிறார்.
அகஸ்திய மாமுனிவர் அம்பாளின் அணுக்க பக்தையான தனது மனைவி லோபாமுத்ராவிடம் திரிபுரசுந்தரியின் அருளைப் பெற்றுத் தருமாறு வேண்டுகிறார். அப்படிப்பட்ட லோபாமுத்ராவை “லோபாமுத்ராவால் அர்ச்சிக்கப்படுபவள்” என்று லலிதா சஹஸ்ரநாமம் 648வது நாமத்தில் கூறி அவரின் சிறப்பை வெளிப்படுத்துகிறது!
பவிஷ்யோத்தர புராணத்தில் அவர், ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு காட்டிலும் சக்தி வழிபாட்டில் ஆர்வமுள்ளோர் இதை வழிபடலாம் என ஆணித்தரமாகக் கூறுவதால் அனைவருக்கும் ஏற்ற வழிபாடு ஸ்ரீசக்ர வழிபாடு என்பது பெறப்படுகிறது.
திருவானைக்காவலில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்மன் ஐந்தடி உயரம் உடையவள். அங்கே கோவிலில் அம்மனுக்கு அர்ச்சனை செய்யப் போன அர்ச்சகர்கள் வீடு திரும்பாமல் அன்றே இறந்து போவது வழக்கமாக இருந்தது. இதை எண்ணி அனைவரும் சொல்ல மாளாத துக்கம் அடைந்தனர். இதைக் கேள்விப்பட்ட ஆதி சங்கரர் அங்கே வந்து நான்கு அங்குலம் உள்ள பூப்ரஸ்தார சக்கரத்தைத் தங்கத்தில் செய்து அதில் வைரம் பதித்து அம்மனின் இரு காதுகளிலும் அணிவித்தார். அம்மனின் கடும் உக்கிரத்தைத் தணிவித்து அம்மனை அர்ச்சிக்க அனுமதியும் தந்தார். அம்மன் அர்ச்சனையை ஏற்றதுடன் அனைவருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியையும் இதர சௌபாக்கியங்களையும் அருள ஆரம்பித்தாள்.
ஸ்ரீசக்ர ஆராய்ச்சியில் தன் வாழ்நாளை ஈடுபடுத்திய பலருள்ளும் குறிப்பிடத் தகுந்தவர் ஸ்வாமி ப்ரணவானந்தர். (14-1-1896 அன்று பிறந்த இவர் தநனது 93ஆம் வயதில் 17-5-1989 அன்று இறைவனுடன் கலந்தார். 1976ஆம் குடியரசு தினத்தன்று பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர் அவர்.
பிரபல ஆங்கில எழுத்தாளரான பால் ப்ரண்டன் அவருடனான தனது அனுபவங்களை ‘ஹெர்மிட் இன் தி ஹிமாலயாஸ்’ என்ற தனது நூலில் எழுதியுள்ளார்.
சுமார் 180க்கும் மேலான ஸ்ரீசக்ர பிரதிஷ்டைகளை நேரில் கண்டு ப்ரணவானந்தர் அவற்றை ஆராய்ந்தார். ஸ்ரீசக்ரத்தின் அனைத்து அம்சங்களையும் நலங்களையும் விளக்கும் அவர் ஸ்ரீசக்ர வழிபாடு ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது என்கிறார்.
சென்னையில் திருவேற்காட்டிலும் மாங்காட்டிலும் உள்ள ஸ்ரீசக்ரம் மிக்க சக்தி வாய்ந்தவை. மாங்காட்டில் உள்ள கோயில் ஒன்றே பாரதம் முழுவதிலும் ஸ்ரீசக்ரத்திற்காக அமைந்துள்ள ஒரே கோவில் ஆகும். தஞ்சாவூர் அரண்மனையில் மரகதத்தால் ஆன ஸ்ரீசக்ரம் உள்ளது.சென்னையில், வேளச்சேரியில் தண்டீஸ்வரர் கோவிலில் அப்பைய தீக்ஷிதர் ஸ்தாபித்த பூப்ரஸ்தார யந்திரம் மிக்க சக்தி வாய்ந்தது.
தமிழகத்தில் சிதம்பரத்தில் கோகிலாம்பா கோவில், காஞ்சிபுரம் காமாக்ஷி அம்மன் கோவில் உள்ளிட்ட சுமார் 14 இடங்களில் சக்தி வாய்ந்த ஸ்ரீசக்ரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
யந்திரங்களிலேயே உன்னதமானது என்பதால் இதை ‘சர்வச் ரேஷ்ட யந்திரம் என்பர்.
ஸ்ரீசக்ரத்தை சுவரில் தொங்க விடக்கூடாது. கிடைமட்டமாக வைத்து வழிபட வேண்டும். சரியாக் இதை வழிபடும் முறையை குரு மூலமாகக் கற்று வழிபடுதலே சாலச் சிறந்தது. இதைத் தூய மனதுடன் வழிபடுவோர் செல்வச் செழிப்பு, ஆரோக்கியம், சகல துறைகளிலும் முன்னேற்றம் பெறுவர். தீய நோக்குடன் இதை வழிபட்டால் இது செயலிழப்பதோடு வழிபடுவோருக்குத் தீங்கையே விளைவிக்கும்.
காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ மஹா பெரியவாள் ஸ்ரீசக்ரத்தைப் பற்றி விரிவாக விளக்கியுள்ளார். அதில் அவர் கூறுகிறார்:-
“கோடுகள், வட்டங்கள், சதுரங்கள், அந்தக் கோடுகளாலான கோணங்கள் இவை எல்லாம் ஒரு சக்ர ரூபத்தில் அமைந்து, மத்ய பிந்துவோடு [நடுப் புள்ளியோடு] இருப்பதே யந்த்ரம் என்பது. இந்த மாதரி டிஸைனுக்கே ஒவ்வொரு தேவதையின் சக்தியை க்ரஹித்துக் கொடுக்கும் சக்தி – அபரிமிதமான சக்தி – இருக்கிறது. Divine Design! கெட்ட சக்திகளைத் துரத்தியடிக்கவும், திவ்ய சக்திகளை ஆகர்ஷித்துத் தருவதற்கும் சக்தி படைத்தவையாக அந்த டிஸைன்கள் இருக்கின்றன.” (தெய்வத்தின் குரல் ஆறாம் தொகுதியில் இந்த விளக்கத்தைப் பார்க்கலாம்). அவர் தரும் எச்சரிக்கையும் ஒன்று உண்டு! :- “இன்னொரு அம்சம், ஜாக்ரதை தேவைப்படும் அம்சம், என்னவென்றால், விக்ரஹம் வைத்துப் பூஜை செய்வதை விடவும் யந்திரத்திற்குச் செய்யும்போது சாஸ்திரோக்தமாகவும், மடி ஆசாரங்களோடும் செய்ய வேண்டும்.” என்கிறார் அவர். அனைத்து அதிர்ஷ்டங்களையும் நலன்களையும் ஒருங்கே அள்ளித் தரும் ஸ்ரீசக்ரத்தை அறிவியல் வியக்கும் அதிர்ஷ்ட சக்கரம் என்றே அழைக்கலாம்.ஸ்ரீசக்ரத்தை உரிய முறையில் வழிபடுவோமாக; இகபர நலன்களைப் பெறுவோமாக; உயர்வோமாக! நன்றி வணக்கம்!
***
குறிப்பு:-
ஸ்வாமி ப்ரணவானந்தரின் புத்தகம் கிடைக்குமிடம்:-
A Treatise on Sri Chakra
By Swami Pravananda F.R.G.S (Of Holy Kailas Manasarovar)
240 Pages
Publishers : Sri Swami Pranavananda Trust
Yenuulamahal, East Godavari Dt, Andhra Pradesh Pincode: 533233
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
GNANA MAYAM BROADCAST
18TH JANUARY 2021 MONDAY
Maitrim bhajata – SIGNATURE SONG
THE HIGHLIGHT OF TODAY’S BROACAST WAS DR CHITRA’S TALK ON THE IMPACT OF TAMIL CULTURE IN THAILAND. SHE USED PICTURES FROM BOTH TAMIL ANDU AND THAILAND TO SHOW HOW THE FESTIVALS, THE GODS, RITUALS, RELIGIOUS LITERATURE LIKE TIRUVEMBAVAI WERE SIMILAR. THOUGH IT WAS A BUDDHIST COUNTRY STILL BRAHMINS CROWN THE KING BY RECITING TAMIL VERSES. SHE TOLD THAT NOT ONLY THAILAND BUT ALSO KOREA HAS MANY SIMILARITIES. HER COLLECTION OF PICTURES PROVED HER STATEMENTS BEYOND DOUBT
EARLIER PRODUCER LONDON SWAMINATHAN, WHILE INTRODUCING DR CHITRA FROM HONG KONG UNIVERSITY, TOLD THAT THOUGH SHE WAS A COMPUTER PERSONNEL, SHE IS WELL VERSED IN TAMIL AND HELPING TO SPREAD TAMIL CULTURE OVERSEAS.
XXX
Prayer BY MRS SWARNALATHA FROM TIRUPPUR
S Swaminathan’s Tamil Article ‘DOCTOR MURUGAN AND PATIENT ARUNAGIRINATHAR’ –read by MRS VAISHNAVI ANAND
MRS DAYA NARAYAN SANG A SHIVA HYMN
PRODUCER LONDON SWAMINATHAN INTRODUCED DR CHITRA.
Dr. CHITRA FROM HONGKONG SPOKE ON “IMPACT OF TAMIL CULTURE IN THAILAND”.
MRS LAKSHMI RAMASWAMY — SONG – UNNAI ALLAAL BY PAPANASAM SIVAN IN KALYANI RAGA.
Mr . S NAGARAJAN’S TALK ON “MYSTERIES OF SRI CHAKRA”
MRS SARASWATHY CHANDRASEKARAN SANG FIRST ASHTAPATHY
Mrs SRI VIDHYA from Dubai –Bharatiyar Episode-5-
DR KANNAN spoke on ALVARS
XXXXXX
INTRODUCTION TO GNANAMAYAM
WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.
LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.
BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.
WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.
IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.
TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME
DAYS- MONDAYS AND SUNDAYS
MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)
SUNDAYS FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)
(After Pongal 2021, we do Tamil and Hinduism on both days)
XXX
WHO IS THE PRODUCER?
LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.
SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM
IS ANOTHER PRODUCER
AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER , PART OF GNANAMAYAM CHANNEL, BROADCAST THE FOLLOWING PROGRAMS ON 17TH JANUARY 2021 FROM LONDON.
THE HIGHIGHT OF THE BROADCAST WAS A TALK BY TAMIL WRITER B. KANNAN OF DELHI. HE SPOKE ABOUT THE TIRUVALLUVAR TEMPLE, WITH WHICH HE WAS ASSOCIATED FROM HIS BOYHOOD DAYS. HE GAVE VERY RARE INFORMATION ABOUT THE FESTIVALS, THE VALLUVAR IDOL AND THE PROMINENT VISITORS TO THE TEMPLE IN MYLAPORE, CHENNAI. HE ALSO TOUCHED BREFLY THE HISTORY OF VALLUVAR, HIS FRIEND ELELASINGAN AND THE RARE TREES INSIDE THE TEMPE COMPLEX.
7-1-2021 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பாகிய தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் திரு பா.கண்ணன் அவர்கள் மயிலை திருவள்ளுவர் கோவிலைப் பற்றிச் சிறப்புரை ஆற்றினார்.
அவரை திரு ச.நாகராஜன் அறிமுகப்படுத்தினார். அந்த அறிமுக உரையைக் கீழே காணலாம்.
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.
இன்று நம்மிடையே உரையாற்ற பிரபல எழுத்தாளர் திரு பா.கண்ணன் அவர்கள் வந்துள்ளார்.
சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் இப்போது புது டில்லியில் வசித்து வருகிறார்.
இவர் எனது இனிய நண்பர். வயதால் மூத்த குடிமகன் என்றாலும் மனதால் ஊக்கமும் உற்சாகமும் கொண்ட இளைஞர்.
மயிலாப்பூரிலே பி.எஸ். உயர்நிலைப்பள்ளியிலும் பின்னர் விவேகாநந்தா மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பையும் முடித்த இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் புள்ளியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.
பின் புனே வந்து அங்கு ஒரு கனரகத் தொழிற்சாலையில் 11 ஆண்டுகள்
வேலை பார்த்தார். பின்னர் ஜாம்ஜெட்பூர் சென்று அங்கு டாடா ஸ்டீல் கம்பெனியில் 16 ஆண்டுகள் பணியாற்றினார். 2002ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்று தனது மகனுடன் புதுடெல்லியில் துவாரகா பகுதியில் வசித்து வருகிறார்.
1962இல் எழுத ஆரம்பித்த இவர் குமுதம் வார இதழ் நடத்திய கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியில் கலந்து கொண்டார்; இவரது ஒரு பக்கக் கதை தேர்வு பெற்று பிரசுரிக்கப்பட்டது. கல்கியில் நவராத்திரி திரைப்படம் பற்றி இவர் எழுதிய
விமரிசனம் தேர்வாயிற்று. ஆனந்தவிகடன் இதழில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார்.
பணி ஓய்வு பெற்ற பின்னர் நிறைய ஆன்மீக இதழ்களில் இவர் கட்டுரைகள் பிரசுரமாயின; தொடர்ந்து ஞான ஆலயம் உள்ளிட்ட ஆன்மீக இதழ்களில் பிரசுரமாகி வருகின்றன.
78 வயதில் அடி எடுத்து வைத்துள்ள இவர் தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருத புத்தகங்களை ஊன்றிப் படிக்கும் ஒரு புத்தகப் புழு. தான் படித்து அறிந்து கொண்டதை உலகிற்கு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இவர் இதுவே தனது எழுத்தின் நோக்கம் என்கிறார்.
உடலையும் உள்ளத்தையும் சுறுசுறுப்பாக வைத்துப் புத்துணர்ச்சி ஊட்டுவது இந்த எழுத்துப் பணியும் அதற்கு உந்து கோலாக விளங்கும் ஆன்மீகப் பயணங்களும் தான் என்பது இவரது முடிவார்ந்த முடிவு.
எதையும் ஊன்றிப் படித்து ஆய்வு செய்து பின்னரே, ஆய்வுக் கட்டுரைகள் படைப்பது இவரது தனிச் சிறப்பு.
அந்த வகையில் மயிலையில் திருவள்ளுவர் கோவில் தெருவிலேயே வசித்த இவர் பொய்யாமொழிப் புலவரைப் பற்றி நன்கு ஆராய்ந்தார். அந்த ஆய்வின் முடிவாக இவர் கண்ட உண்மைகளையே இப்போது நாம் கேட்கப் போகிறோம். இவரை ஞானமயம் சார்பில் வருக வருக என மனமுவந்து வரவேற்கிறோம். இதோ திரு கண்ணன் அவர்கள்
உரையைக் கேட்போம்..
Vaalka thamil mozi – signature tune
Prayer by Ms Pavithra Prabhu
Mrs Brhannayaki Sathyanarayanan – Talk on Suryanar Koil Temple –
TIRUPPUGAZ by Mrs Jayanthi Sundar and Mr Natarajan and Mrs Nirmala Natarajan
WORLD HINDU NEWS ROUNDUP in English and Tamil –
BY MRS SUJATHA RENGANATHAN &
MRS VAISHNAVI ANAND
Pongal song by MRS DAYA NARAYANAN –
Mr B Kannan from Delhi spoke on the topic “Tiruvalluvar Temple, in Mylapore”
Bengaluru Nagarajan introduced the speaker.
Tiruppavai – Notru swargam- BY CHENNAI MRS LAKSHMI RAMASWAMY-
XXXXXX
INTRODUCTION TO GNANAMAYAM
WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.
LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.
BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.
WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.
IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.
TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME
DAYS- MONDAYS AND SUNDAYS
MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)
SUNDAYS FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)
(After Pongal 2021, we do Tamil and Hinduism on both days)
XXX
WHO IS THE PRODUCER? tamil thunder 17121
LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.
SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM
IS ANOTHER PRODUCER
AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
திரு ப்பாவையில் உள்ள 30 பாடல்களையும் எத்தனையோ முறை கேட்டு இருக்கிறோம். ஆயினும் அப்பாடல்களில் விஷ்ணுவுக்கு 56 நாமங்கள் வருவதைக் கவனித்து இருக்க மாட்டோம். இதே போல நப்பின்னைக்கு என்ன அடைமொழி கள் , யசோதைக்கு என்ன பெயர்கள் என்பதையும் திருப்பாவை மாலை என்ற 1957ம் ஆண்டு நூலில் கண்டேன். ஆனந்தம் கொண்டேன். இதோ நீங்களும் படித்து மகிழுங்கள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
காணும் பொங்கல், கணுப்பிடி, கனுப் பிடி என்று அழைக்கப்படும் பண்டிகை பொங்கலுக்கு மறுநாள் பெண்களால் கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக ஞானமயம் ஒளிபரப்பில் அறிவித்தோம். ஸ்வர்ணலதா என்பவர் ஒரு பாடலை ணைப்பியிருக்கிறார். நமது நிகழ்ச்சி தயாரிப்பாளர் தமிழ்நாட்டில் கிடைத்த கணேச சாஸ்திரிகள் பிரசுரத்தையும் அனுப்பி இருக்கிறார். இவைகளைப் படலாகப் பாடி எங்களுக்கு அனுப்ப வேண்டுகிறோம்