ஒரு ராமாயண ஜோக் — குட்டிக் குரங்கினால் நேர்ந்த விநோதம்!!! (Post No. 2368)

Sundarakanda1

Compiled by London swaminathan

Date: 27 November 2015

Post No. 2368

 

Time uploaded in London :– 13-55

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

பழைய கால நகைச் சுவை நூலான  பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை.

 

 

நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை

 

ஸ்ரீ  ராமர், கிஷ்கிந்தை மஹாஜனங்களாகிய வானரக் கூட்டங்களுடன் ராவணனை ஜெயித்து, விபீஷணர்க்கும் பட்டங்கட்டி, சீதையை மீட்டுத் திரும்பி வருங்கால், பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் அனைவர்க்கும் விருந்து நடந்தது.

 

அதில் கறிவகைகளில் மொச்சக்கொட்டையும் போடப்பட்டிருந்தது. அப்போது சேஷ்டை மிக்க ஒரு குட்டிக் குரங்கு சும்மா இராமல், மொச்சக் கொட்டையைக் கையில் எடுத்து வைத்து அதைப் பிதுக்கிற்று. உடனே அதிலிருந்து பருப்பு விடுபட்டு மேலே எழும்பியது. அதனைப் பிடிக்க குட்டிக் குரங்கு மேலே பாய்ந்தது. அதனைப் பிடிக்க இன்னொரு குரங்கு பாய்ந்தது. அந்தக் குரங்கைப் பிடிக்க இன்னுமொரு குரங்கு பாய்ந்தது. இப்படியே வானர சைன்யங்கள் பூராவும் பாய்ந்தன.

 

தன்னினத்தார் எல்லாரும் பாய்வதைக் கண்ட அனுமார், ஏதோ அபாயம் வந்துவிட்டதென்று எண்ணி,  எல்லோருக்கும் மேலே எகிறி ஒரு குதி குதித்தார். இதனைக் கண்ட லெட்சுமணப் பெருமாள், அனுமாரே பாய்வதென்றால், பெரும் ஆபத்து வருகிறது என்று கணக்குப் போட்டு, வில்லை நாணேற்றி சங்கத்வனி செய்ய ஆரம்பித்தார். அதைப் பார்த்த ராமர், யாரோ புது பகைவர் வந்துவிட்டார்கள் என்று கருதி படபடப்புடன் வில்லை நானேற்றித் திரும்பித் திரும்பி நாலா புறமும் பார்த்தார். ஒருவரையும் காணோம். பிறகு சங்கதியை விசாரிக்க குட்டிக் குரங்கின் சேஷ்டையே இவ்வளவுக்கும் காரணம் என்று தெரிந்தது. எல்லோரும் சிரித்து மகிழ்ந்தனர்!!

IMG_2647

-சுபம்–

 

God is for the Humble (Post No. 2367)

567-Sri-Ramakrishna-Paramahamsa

Compiled by London swaminathan

Date: 27 November 2015

Post No. 2367

 

Time uploaded in London :– 9-54 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Sri Ramakrishna Paramahamsa was a humble devotee of Mother Kali. He was childlike in all his talks, actions and ways of life. Once Keshab Chandra Sen went to see him.  He heard about the fame of Sri Ramakrishna. In the course of his talk, Keshab Chandra Sen said he had recently enacted a religious drama in which he took the chief part. Sri Ramakrishna quietly listened. A disciple of Keshab Chandra Sen said that Keshab played his part very well and everybody applauded him they were planning to enact another drama. Keshab Chandra Sen jokingly asked Sri Ramakrishna if he would like to take part in it and if so what role. Without a moment’s hesitation, Sri Ramakrishna replied, “I shall take the part of the dust of your feet.”

 

What was the result of his reply? Sudden stillness and silence. By humbling themselves, saints humble others. When we reduce ourselves to dust, we realise the glory of the Spirit within.

 

–Swami Ramdas of Anandashram narrated this anecdote.

 

 

முட்டாள் யார்? (Post No: 2366)

horses

Compiled by London swaminathan

Date: 27 November 2015

Post No. 2366

 

Time uploaded in London :– 8-21 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

பழைய கால நகைச் சுவை நூலான  பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை.

 

 

நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை

 

சில வியாபாரிகள் ஓர் இராஜாவிடம் சென்று குதிரையைக் காட்டி விலை கூறினர். அரசன் அவற்றையேற்றுப் பின்னும் பல குதிரைகளைக் கொண்டுவரும்படி கூறி லக்ஷம் ரூபாய் கொடுத்தனுப்பினார். அப்படியே வியாபாரிகள் சென்றனர்.

 

மூன்றாம் நாள் அரசன் போதையாயிருக்கும் போது, “மந்திரி நம் தேசத்திலிருக்கும் முட்டாள்களின் பெயரை எழுதி ஒரு பட்டியல் கொண்டுவா “ என்றார்.

 

மந்திரி அவ்வாறே எழுதிக் கொண்டுவர அரசன் அதைப் பார்த்துக் கோபம் கொண்டான். என் பெயரை ஏன் முதலில் எழுதிவைத்தாய்? என்றான். அதற்கு மந்திரி, “யாதொரு ஆதாரமும் இல்லாமல் வழிப்போக்கர்களாகிய குதிரை வியாபாரிகளுக்கு லக்ஷம் ரூபய் கொடுத்தீர்களே! இது முட்டாள்தனமல்லவோ? ஆதலினால்தான் உமது திருநாமம் முதலில் வந்தது என்று சொன்னார்.

 

“அவர்கள் குதிரைகளைக் கொண்டுவந்துவிட்டால், என்ன செய்வாய்?”

என்று அரசன் கேட்டார்.

fool

உமது திருநாமத்தை எடுத்துவிட்டு, அவர்கள் பெயரைப் பதிந்துவிடுவேன்” என்றார் மந்திரி.

 

–சுபம்–

 

ஓஸோன் உறை பாதுகாப்பின் அவசியம்(Post No: 2365)

ozone1

Radio Talk written by S NAGARAJAN

Date: 27 November 2015

Post No. 2365

 

Time uploaded in London :– 6-37 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

ozone2

ஓஸோன் உறை என்பது வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் உள்ள ட்ரோபோஸ்பியர் (Troposphere) என்று அழைக்கப்படும் முக்கிய பகுதியாகும். இதில் மாசு ஏற்பட்டால் தீவிரமான சுவாச சம்பந்தமான கோளாறுகள் மனிதர்களுக்கு ஏற்படும். விவசாய அறுவடைகள் பாதிக்கப்படும்,கட்டுமான வேலைகளும் பாதிக்கப்படும்.

 

 

இந்த ஒஸோன் உறையை ஐரோப்பிய விஞ்ஞானிகள் தங்கள் நாட்டைப் பொறுத்த வரையில் ஆராய முடிவு செய்து ஆராய ஆரம்பித்தனர். ஒஸோன் உறையைப் பாழ்படுத்துவது வாகனங்கள் வெளியேற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடும் கார்பன் டை ஆக்ஸைடுமே  என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர். தொடர் இரசாயன மாறுதல்கள் மூலம் இந்த நச்சுப்புகை ஓஸோனைத் துளைக்கிறது என்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

 

 

கடந்த 15 ஆண்டுகளாக லண்டன் மாநகரில் சேகரிக்கப்பட்டிருந்த தரவுகளிலிருந்து தங்கள் ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகளின் குழு இந்த மாசானது ஐரோப்பியப் பகுதியில் ஏற்படும் மாறுதல்களை மட்டுமே சார்ந்ததாக இல்லை; உலகளாவிய அளவில் ஏற்படும் மாறுதல்களும் இப்பகுதியை பாதிக்கின்றன என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

 

 

இதிலிருந்து நாம் அறிவது உலகின் ஒரு பகுதியில் ஏற்படும் மாசு அந்தப் பகுதியை மட்டும் சார்ந்ததாக இல்லை. அது உலகின் ஏனைய பகுதிகளையும் பாதிக்கிறது என்பது தான்.

 

 

ஆகவே ஒஸோனை பொருத்தவரையில் எல்லா நாடுகளும் கூடி மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை ஏற்படுத்தி அவற்றை தீவிரமாக அமுல்படுத்த வேண்டும் என்ற முடிவை அவர்கள் அறிவித்துள்ளனர்.

 

 

ஓஸோன் பாதிப்பு ஆயிரத்தி தொள்ளாயிரத்து தொண்ணூறுகளில் சற்றுக் குறைந்திருந்தது; ஆனால் இப்போது அது மீண்டும் அதிகரித்துள்ளது என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

ozone.3

 

ஓஸோன் பாதிப்பு என்பது உலகப் பிரச்சினையாக இருப்பதால் உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் அதில் பொறுப்பு உண்டு அதைத் தவிர்க்கவும் தடுக்கவும் எல்லா விதமான நடவடிக்கைகளையும் ஒவ்வொருவரும் எடுத்தல் இன்றியமையாதது!

 

***

Miracle Story: The Great Transformation (Post No: 2364)

Purandar stamp

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Compiled  by London swaminathan

Date: 26 November 2015

Post No: 2364

 

Time uploaded in London :–  15-24

(Thanks  for the pictures) 

 

Purandharadas was a rich jeweller, but very miserly. God in the form of Haridas came to him daily for six months begging for some help for the Upanayanam (sacred thread ceremony) of his son. The rich man refused to give him any help. He abused him and sent him away every day. This continued for six months.

 

At last, he threw a bad coin to him. Haridas then went to merchant’s wife and narrated that he had been going to merchant daily for six months and finally got a bad coin from him – a bad man. The wife knew whom he was referring to and did not like her to be called a bad man. She tried to send Haridas away by saying, “What do you want? I can give you some grain only.”

 

Haridas: No I want money

Woman: I have not got any money.

Hari: If you have a mind to give, you have enough to give. You have your diamond nose ring. That will quite serve my purpose. (She hesitated).If you do not like to give, I shall go somewhere else.

Wom: No, No. you are God himself. How can I allow you to go away without giving you what you want?

She then removed the nose ring and was about to give it to him.

Hari: What will your husband do when you hears about it?

Wom: what does it matter? I am prepared even to give my life for you.

Har: Then say and “Krishnarpanam” (dedicate it to Lord Krishna) and give.

 

FDC pf Purandhar

The woman said ‘Krishnarpanam’ and gave the nose ring to Haridas. He then straight went to the merchant (her husband) under the pretext of selling it. Seeing Haridas coming, the merchant in a contemptuous tone, asked, “Shameless fellow, have you come again?”

 

Hari: I have come here to do business, not to beg. Take this give me its price.

The merchant took the ornament from Haridas. He could recognise that it was his wife’s nose ring. He asked Haridas from where he got the jewel to which he replied a generous woman gave it to him as a present.

Merchant: You thief, is it true that you got it as a present?

Hari: Thief! Krishna also was a thief.

Mer: If Krishna was a thief, must you also be one? Come here tomorrow. I shall deal with you then.

 

Haridas left, and the merchant, in a fit of rage, came straight to his house and knocked at the door. Hearing the knocks, the wife thought that it was another devotee who had come for alms and asked, “Is it Gopaladasayya?”

Mer:Ha, Gopaladasayya, I shall show you Gopaladasayya by a slap on your cheek. Open the door.

The door was opened. The merchant asked his wife, “What did you give to that beggar?

Wife: I gave him alms.

Merc: What alms?

Wife: I gave him some maize.

Mer: You gave him your nose ornament with as big a diamond as maize. Where is your nose ornament, tell me?

 

 

liramdas

Wife: I have kept it in the Puja room.

Mer: Bring it here immediately.

Wife: I shall do Tulsipuja and then go to the Puja room to get it.

Mer: Now you have no other go but to take refuge in Tulsi (Holy Basil plant).

She was greatly agitated. She performed her usual puja to Tulsi, with folded hands, and prayed: “O, Mother, save me from this situation. If you are not going to help me now, I must commit suicide.”

With her eyes closed, she was standing still. There was a sudden ‘tuk’ noise. She opened her eyes. Lo! Her nose ornament had dropped down from somewhere near the Tulsi! She took it to her husband.

Mer: Ha, how could this come here? I had locked it in my box in the shop. He ran up to his shop and found it was not found in the box where he had kept it.

 

Now came the great transformation. Haridas whom he hated and despised for six months daily, had gone away. The merchant was thirsting for a look at him. He started wailing, “Oh, Haridas, I must see you again. Without having a look at you, I cannot live for another minute. Come to me.”

 

Then came a voice from the Heaven: “Why do you want to see Haridas form. I shall come in my own form.” Suddenly there was a flash of light and there stood Lord Krishna, giving darshan (appearance) to the miserly merchant. He distributed all his wealth to the poor and with his wife left for Vijayanagar to serve in the temple of Vijaya Vithoba. There he came to be known as Purandhardas.

Hints to aspirants cover a

Purandharadasa is considered the Father of Carnatic Music. He composed lot of songs on Krishna (Vitobha).

 

Story narrated by Swami Ramdas of Anandashram in North Kerala.

–Subham–

டிசம்பர் 2015 காலண்டர் ( Post No. 2363 )

IMG_8421

(மன்மத வருஷம்,கார்த்திகை/மார்கழி)

இந்த மாதக் காலண்டரில், பலம், மானம் பற்றிய 31 அரிய சம்ஸ்கிருத பழமொழிள் இடம் பெறுகின்றன.

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Compiled  by London swaminathan

Date: 26 நவம்பர் 2015

Post No:2363

 

Time uploaded in London :–  8-36

(Thanks  for the pictures) 

 

முக்கிய நாட்கள்: டிசம்பர் 11- பாரதி பிறந்த நாள்,  17- மார்கழி மாதப் பிறப்பு,  21 வைகுண்ட ஏகாதசி, 24 மிலாடி நபி, 25 கிறிஸ்துமஸ் , 26 ஆருத்ரா தரிசனம் (திருவாதிரை)

 

 

 

அமாவாசை –  டிசம்பர் 11

ஏகாதசி – டிசம்பர் 7, 21 வைகுண்ட ஏகாதசி

பௌர்ணமி— டிசம்பர் 25

 

முகூர்த்த நாட்கள்: டிசம்பர் 6, 7.

IMG_8423

டிசம்பர் 1 செவ்வாய்க்கிழமை

துர்பலஸ்ய பலம் ராஜா – ஹிதோபதேசம்

பலமில்லாதவர்களுக்கு அரசனே துணை

(ஒப்பிடு: திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை)

 

டிசம்பர் 2 புதன்கிழமை

திக் பலம் க்ஷத்ரிய பலம்

ப்ரம்மதேஜோ பலம் பலம் – மஹாபாரதம்

அரசர்களுடைய பலம் பெயரளவுக்குதான்; ஆன்மீக பலமே பெரிய பலம்

(ஒப்பிடுக: புலனைந்தும் வென்றான் தன் வீரமே வீரம் – அவ்வையார்)

 

டிசம்பர் 3 வியாழக்கிழமை

நாஸ்தி ச ஆத்ம சமம் பலம் – சாணக்ய நீதி

தனக்குத்தானே பலம் (ஒருவன் மற்றவர்களைச் சார்ந்திருப்பதைவிட தன் சுய பலத்தையே நம்பியிருக்க வேண்டும்.

 

டிசம்பர் 4 வெள்ளிக்கிழமை

ப்ரக்ஞா நாம பலம் தஸ்மான் நிஷ்ப்ரஜஸ்ய பலேன கிம்? – கதா சரித் சாகர்

புத்திதான் உண்மையான பலம்; மற்றவற்றால் என்ன பயன்? (உடல் பலம் உண்மையான பலம் அல்ல).

 

டிசம்பர் 5 சனிக்கிழமை

பலம் மூர்கஸ்ய மௌனித்வம் – சுபாஷித ரத்ன பாண்டாகாரம் (சு.ர.பா)

முட்டாள்களுக்கு மௌனமே பலம்.

 

டிசம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை

பலீயசீ கேவலம் ஈஸ்வர இச்சா – மஹாபாரதம்

ஆசையில் பெரியது, இறைவன் மீதுள்ள ஆசையே!

ஒப்பிடு: பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு- குறள்

 vishnu

டிசம்பர் 7 திங்கட்கிழமை

சௌராணாம் அந்ருதம் பலம்  — சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

திருடர்களுக்கு பொய்தான் பலம்.

 

டிசம்பர் 8 செவ்வாய்க்கிழமை

துல்யே பலே து பலவான் பரிகோபமேதி – பஞ்ச தந்திரம்

சமமான பலமுள்ளவனிடத்தில்தான், பலசாலி

கோபத்தைக் காட்டுவான் (பலம் குறைந்தவர்களிடம் சண்டை போட மாட்டான்)

 

டிசம்பர் 9 புதன்கிழமை

பாலானாம் ரோதனம் பலம் — சு.ர.பா

சிறுவர்களுக்கு அழுகையே பிரதானம்

 

டிசம்பர் 10 வியாழக்கிழமை

பாஹூ மே பலமிந்த்ரியம் – யஜூர் வேதம்

தோள் வலிமையே பெரிய சொத்து.

mosquito-illustration_360x286

டிசம்பர் 11 வெள்ளிக்கிழமை

மசகஸ்ய பலம் கியத்?

கொசுவுக்கு என்ன பலம்?

 

டிசம்பர் 12 சனிக்கிழமை

யஸ்ய புத்திர்பலம் தஸ்ய நிர்புத்தேஸ்து குதோ பலம் – பஞ்ச தந்திரம்

யாரிடம் மூளை இருக்கிறதோ அவனிடம் பலம் உண்டு; புத்தியில்லாதவனிடம் பலம் எங்கே?

 

டிசம்பர் 13 ஞாயிற்றுக்கிழமை

ரூப யௌவன மாதுர்யம் ஸ்த்ரீணாம் பலம் அனுத்தமம் – (சாணக்ய)

பெண்களின் பெரிய பலம்: அழகு, இளமை, இனிமை.

 azaki tamil

டிசம்பர் 14 திங்கட்கிழமை

வீரபோக்யா வசுந்தரா

இந்த பூமியானது வீரர்களுக்கே சொந்தம்.

 

டிசம்பர் 15 செவ்வாய்க்கிழமை

ஹிம்சா பலம் அசாதூனாம் – மஹாபாரதம்

கெட்டவர்களின் பலம் மற்றவர்களுக்கு தொல்லை கொடுப்பதே

 

டிசம்பர் 16 புதன்கிழமை

அப்ரகடீக்ருதசக்தி: சக்தோபி ஜனஸ்திரஸ்க்ரியாம் லபதே– பஞ்ச தந்திரம்

தன்னுடைய சக்தியைப் பயன்படுத்தாத சக்திமான், பழிச்சொல்லுக்கு ஆளாவான்.

 

டிசம்பர் 17 வியாழக்கிழமை

அவக்ஞாத்ருடிதம் ப்ரேம நவீகர்தும் க ஈஸ்வர:

அவமரியாதையில் உடைந்த அன்பை எந்தக் கடவுள்தான் ஒட்ட வைப்பான்?

(கடவுளினாலும் முடியாது)

 

டிசம்பர் 18 வெள்ளிக்கிழமை

உன்னதோ ந சஹதே திரஸ்க்ரியாம் – கிராதர்ஜுனீயம்

உயர்ந்த மனிதன், வசவுகளைப் பொறுக்கமாட்டான்

 

டிசம்பர் 19 சனிக்கிழமை

பரிபவோரரிபவோ ஹி சுது: சஹ: – சிசுபாலவதம்

எதிரியினிடம் அடையும் தோல்வி பொறுத்துக் கொள்ள முடியாததே

 

டிசம்பர் 20 ஞாயிற்றுக்கிழமை

மோன ஹானி: குத: சுகம்?

மானம் போன பின்னால் சுகம் எங்கே?

 Vishnu_1

டிசம்பர் 21 திங்கட்கிழமை

வரம் ம்ருத்யுர்ன புனரபமான:

அவமானத்தை விட சாவே சிறந்தது

 

டிசம்பர் 22 செவ்வாய்க்கிழமை

சந்தத கமனாதனாதரோ பவதி – சு.ர.பா.

அடிக்கடி செல்வது மரியாதைக் குறைவு

(பழகப் பழகப் பாலும் புளிக்கும்)

ஒப்பிடு: முதல் நாள் தலை வாழை இலையில்

இரண்டாம் நாள் தையல் இலையில்

மூன்றாம் நாள் கையில் (சாப்பாடு கிடைக்கும்).

 

டிசம்பர் 23 புதன்கிழமை

கஜானாம் பங்கமக்னானாம் கஜா ஏவ துரந்தரா: – ஹிதோபதேசம்

யானைகள் சகதியில் சிக்கினால் யானைகள் தான் அவைகளைக் காப்பாற்றமுடியும்

(ஒப்பிடுக: யானையால் யானை யாத்தற்று)

 

 

டிசம்பர் 24 வியாழக்கிழமை

தாரு சஸ்த்ர ப்ரஹாரேண ம்ருகேந்த்ரோ நைவ ஹன்யதே- கஹாவத்ரத்னாகர்

மரக் கத்தியை வைத்து சண்டை போட்டு சிங்கத்தைக் கொல்ல முடியாது

 

டிசம்பர் 25 வெள்ளிக்கிழமை

ந நிர்பலா பாத்ரபதோ ஹி ஸ்ராவணாத்- கஹாவத்ரத்னாகர்

ஆவணிக்கு சளைத்தது அல்ல புரட்டாசி!

(இரண்டும் பருவ மழை கொட்டும் மாதங்கள். புரட்டாசியில் கல்யாணம் செய்ய மாட்டார்கள்; ஆவணியில் நல்ல காரியங்களைச் செய்வார்கள்)

 Nataraja atom

டிசம்பர் 26 சனிக்கிழமை

ந வ்யாக்ரம் ம்ருகசிசவ: ப்ரதர்ஷயந்தி- ப்ரதிமா நாடகம்)

மான்குட்டிகள் புலிகளைத் தாக்காது.

 

டிசம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை

ந ஹி துல்யம் பலம் சௌம்ய ஸ்த்ரியாஸ் ச புருஷஸ்ய ஹி – வால்மீகி ராமாயணம்

அன்பரே! ஆணும் பெண்ணும் சம பலம் படைத்தவர் அல்ல

 

டிசம்பர் 28 திங்கட்கிழமை

ப்ரபலே துர்பலே ஜாதே துர்பல: ப்ரபலாயதே – கஹாவத்ரத்னாகர்

பலவான், பலவீனம் அடையும் போது, பலமற்றவன் வலிமையுள்ளவனாகிறான்

(ஒப்பிடு: ஆனைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வரும்)

 

டிசம்பர் 29 செவ்வாய்க்கிழமை

பக்னாதி மசகமேவ லூதாதந்துர்ன மாதங்கம் —விக்ரம சரித

சிலந்தி வலையில் கொசுதான் சிக்கும், யானை சிக்காது!

spider

டிசம்பர் 30 புதன்கிழமை

பலம் ஹி சித்தம் விகரோதி – சாணக்கியர்/கௌடில்யர் அர்த்தசாஸ்திரம்

உடல் பலம், உள்ளத்துக்கு உரமூட்டும்

(ஒப்பிடுக: இளைஞர்கள், பகவத் கீதை படிப்பதைவிட கால்பந்து ஆடுவதையே நான் விரும்புகிறேன். பலவீனனால் இந்த ஆத்மாவை ஆடைய முடியாது என்று உபநிஷதம் கூறுகிறது:- சுவாமி விவேகாநந்தர்)

 

டிசம்பர் 31 வியாழக்கிழமை

வஜ்ரம் வஜ்ரேண பித்யதே- சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 2-45

வைரத்தை வைரத்தால்தான் அறுக்கமுடியும்

(ஒப்பிடுக: முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்).

 _diamonds_

ஜனவரி 1 வெள்ளிக்கிழமை (2016)

அனைவர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! மங்களம்! சுப மங்களம்!!

காற்றில் மாசை ஏற்படுத்துவது வாகன நச்சுப் புகையே! ( Post No. 2362 )

smoke1

Radio Talk written by S NAGARAJAN

Date: 26 November 2015

Post No. 2362

 

Time uploaded in London :– 6-26 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

emissions-smoke

பெரு நகரங்களில் 50 விழுக்காட்டிற்கும் மேம்பட்ட அளவில் காற்றை மாசுபடுத்துவது வாகனங்கள் வெளியேற்றும் நச்சுப்புகையே! சென்ற பத்தாண்டுகளில் உலகளாவிய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் டீஸல் வாகனங்கள் வெளியேற்றும் நச்சுப்புகையை சுவாசிப்பவர்கள் பல்வேறு வியாதிகளுக்கு ஆளாவதைச் சுட்டிக் காட்டுகின்றன. இதனால் இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது.

 

 

டீஸல் எரிபொருளைப் பயன்படுத்தி  இயக்கப்படும் லாரிகள் வெளியேற்றும் புகை நச்சுப்புகை என்று 1998ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட்து. 2012ஆம் ஆண்டு  ஜூன் மாதம் உலக சுகாதார நிறுவனம் (WORLD HEALTH ORGANISATION) டீஸல் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது (Carcinogenic) என்று அறிவித்துள்ளது.Particulate Matter எனப்படும் துகள்மப் பொருளையும் நைட்ரஜன் ஆக்ஸைடையும் அதிக அளவில் டீஸல் வாகனங்கள் வெளியேற்றுகின்றன. பெட்ரோலால் இயக்கப்படும் வாகனங்களோ கார்பன் மானாக்ஸைடையும் ஹைட்ரோகார்பன்களையும் வெளியேற்றி காற்றை மாசுபடுத்துகின்றன.

 

 

வாகனங்களில் மாசைக் கட்டுப்படுத்தும் அதி நவீன எஞ்சின்களைப் பொருத்துவது, வாகனங்களைச் சரியான முறையில் பராமரிப்பது, அவ்வப்பொழுது வாகனங்களைச் சோதனைக்குட்படுத்தி நச்சுப்புகை கட்டுப்பாட்டிற்கான சான்றிதழை புதுப்பிப்பது போன்ற வழிகளை வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.

 

 

இது ஒருபுறமிருக்க மாசு என்றாலேயே வெளிப்புறத்தில் ஏற்படும் மாசைப் பற்றியே நாம் பொதுவாக நினைக்கிறோம். ஆனால் வீட்டிற்குள் ஏற்படுத்தப்படும் காற்று மாசைப் பற்றி யாரும் நினைப்பதில்லை. கிராமங்களையே அதிகமாகக் கொண்டுள்ள நம் நாட்டில் அன்றாட சமையலுக்காக வீடுகளில் விறகுகள் அதிகமாக எரிக்கப்படுகின்றன. இதனால் குழந்தைகளுக்கு தொடர் இருமலும் நுரையீரலில் புற்று வியாதியும் நியுமோனியாவும் வர அதிக வாய்ப்புள்ளது. ஆகவே இவற்றைப் பயன்படுத்துவோர் எல் பி ஜி போன்ற மாற்று எரிபொருளுக்கு மாற வேண்டும்.

 

 

இது இன்றைய நாட்களில் அவசியத் தேவை அவசரத் தேவையும் கூட!

 

***

 

 

 

DECEMBER 2015 ‘GOOD THOUGHTS’ CALENDAR (Post No. 2361)

nataraja abishekam

Compiled by London swaminathan

Date: 25 November 2015

Post No. 2361

Time uploaded in London :– 16-51

( Thanks for the Pictures  ) 

 

Sanskrit Proverbs and sayings are taken from Suuktisudhaa, Publication of Chinmaya International Foundation.

Festival days: December 11- Poet Bharati’s Birth Day, 21 Vaikunda Ekadasi, 24- Miladi Nabhi, 25 Christmas, 26 Arudra Darsan.

Full moon – 25

New moon-11

Ekadasi: 7, 21 (Vaikunda Ekadasi)

Auspicious days: 6,7.

 

SRIRANGAM WITH TREES

DECEMBER 1 TUESDAY

The words of a powerful orator are in vain if he is hazy about the task at hand – Sisupalavadha 2-27

 

DECEMBER 2 WEDNESDAY

Words loaded with meaning can achieve all sorts of wealth — Subhasitaratna khandamanjuusaaa

 

DECEMBER 3 THURSDAY

Though insignificant, words spoken at the right time are indeed valuable — Subhasita ratna bhaandaagaara 3-758

 

DECEMBER 4 FRIDAY

The one whose speech is brief yet bewitching is alone a true orator –Subhasita ratna bhaandaagaara 2-8

 

DECEMBER 5 SATURDAY

The voice of the crowd – be they true or false – can tarnish one’s glory- Sanskrit Proverb

 

DECEMBER 6 SUNDAY

Avoid unpleasant arguments. So what if one is wicked?

 

DECEMBER 7 MONDAY

 

To the noble hearted, abuses are more astringent than arrows –Kahavatratnakar

 

DECEMBER 8 TUESDAY

Generally people are carried away by mere flowery eloquence Bharat Manjari 2-9-199

 

DECEMBER 9 WEDNESDAY

Sages maintain that the speech of the deluded and the arrogant are barbaric – Uttama Rama Carita

 

DECEMBER 10 THURSDAY

Soft speech is more cooling than even sandalwood and moonlight- Sanskrit Proverb

 

 

bharati photo (2)

DECEMBER 11 FRIDAY

Language identifies the region (desamaahyaati bhaasanam) Canakya Neeti 3-34

DECEMBER 12 SATURDAY

Of what use is the spoken after everything is put in black and white word? –Sisupalavadha 2-70

 

DECEMBER 13 SUNDAY

Competence and integrity are gleaned from the conversation – Hitopadesa 1-99 , SRB 3-452

 

DECEMBER 14 MONDAY

Prosperity and downfall are writ on one’s tongue (jihvaayattau vrddhi vinaasau)—Sanskrit Proverb

 

DECEMBER 15 TUESDAY

Well-wishers should be wary of provocative language –Kahavatratnakar

 

DECEMBER 16 WEDNESDAY

Words – minimal and meaningful – constitute eloquence –Kahavatratnakar and Naidadiyacarita

 

DECEMBER 17 THURSDAY

Words once ejected from one’s mouth spread rapidly everywhere – Kahavatratnakar

 

DECEMBER 18 FRIDAY

Use your words, only where they are honoured – Pancatantra

 

DECEMBER 19 SATURDAY

Who indeed is wretched when the veritable Goddess of Speech resides on one’s tongue?  –Subhasita ratna bhaandaagaara  (SRB)2-15

DECEMBER 20 SUNDAY

Eloquence makes for excellence (Vaagmitaa sreyasii mataa)—Sanskrit Proverb

 IMG_1143

DECEMBER 21 MONDAY

Who indeed can block the fluency of the eloquent? – Raja Tarangini 4-261

 

DECEMBER 22 TUESDAY

Who is not scorched by the painful hostility born of verbal duels? Katha Sarit Sagara

 

DECEMBER 23 WEDNESDAY

Embellished speech is the best ornament ever (Satatam Vaagbhuusanam bhuusanam) – Niti Sataka 16

 

DECEMBER 24 THURSDAY

It is considered that all ties originate in talks –Ragu Vamsa 2-58

 

DECEMBER 25 FRIDAY

Respect or disrespect is accorded according to one’s speech –Kahavatratnakar

 IMG_2988

DECEMBER 26 SATURDAY

Rare is that speech that appeals to one and all (sudurlabhaa sarva manoramaa girah)–  Kiratarjuniiya 14-5

 

DECEMBER 27 SUNDAY

Few syllabled pithy statements are supreme – Kahavatratnakar

 

DECEMBER 28 MONDAY

Rare is speech which is both salutary and charming – Kiratarjuniiya 1-4

 

DECEMBER 29 TUESDAY

Engaging, effortless conversation is the best travel snack – Brhat katha manajari

 

DECEMBER 30 WEDNESDAY

Utter not words of melancholy (maa bruuhi diinam vacah)—Sanskrit Proverb

 

DECEMBER 31 THURSDAY

Honey is in the tongue of bad people, but their heart is full of poison – Hitopadesam

 

dussehra-14

JANUARY 1 FRIDAY (2016)

 

HAPPY NEW YEAR.

 

சம்ஸ்கிருதம் பேச்சு மொழியே! அசைக்க முடியாத சான்றுகள்!! Post No. 2360

IMG_9008 (2)

Already posted in English

Research Article written  by London swaminathan

Date: 25 November 2015

Post No. 2360

Time uploaded in London :– 8-24 AM

( Thanks for the Pictures  ) 

ஆராய்ச்சிக்கட்டுரை எழுதியவர்- லண்டன் சுவாமிநாதன்

 

சம்ஸ்கிருதம் பேச்சு மொழியே என்பதற்கு 3000 ஆண்டுகளாக நமது இலக்கியத்தில் ஏராளமான சான்றுகள் உள்ளன. இந்தப் பதிவில் நான் மேற்கோள் காட்டும் எல்லா கதைகளும் எனது பிளாக்குகளில் உள்ள 2300 கட்டுரைகளில் ஏற்கனவே உள்ளதால் மீண்டும் கதைகளைச் சொல்லாமல் தலைப்புகளை மட்டும் காட்டுவேன்.

 

முன் காலத்தில் குருகுலத்துக்குச் சென்ற சிறுவர்களுக்கு முதல் நாள் கற்றுக் கொடுத்த பாடம், “சத்யம் வத” (உண்மையே பேசு). ரிக் வேதத்தின் ஆணி வேறே சத்தியம்தான். அதுதான் இந்தியாவின் தேசிய சின்னத்திலும் இருக்கிறது (சத்யமேவ ஜயதே).எதற்காக இவ்வளவு பீடிகை என்றால் நமது வேத, இதிஹாசக் கதைகள் எல்லாம் உண்மையே. அவை அத்தனையிலும் சம்ஸ்கிருதம் பேசியது பற்றி எண்ணற்ற குறிப்புகள் வருகின்றன.

 

வேதத்தில்

இந்திரனைக் கொல்லக்கூடிய ஒரு புத்திரன் வேண்டுமென்று வேண்டப்போய், இந்திரனால் கொல்லப்படக்கூடிய ஒரு மகன் வேண்டும் என்று தவறாகக் கூறிய பின்னர், விருத்ராசுரன் பிறந்தான்; இறந்தான்.

IMG_9007 (2)

உபநிஷதத்தில்

அசுரர்கள், தேவர்கள், மனிதர்கள் ஆகிய மூவரும் சம்ஸ்கிருதம் பேசினார்கள். உடனே மூவரும் இடி முழக்கத்தை சம்ஸ்கிருதச் சொற்களாக எடுத்துக்கொண்டனர் (இந்தக் கதையை மட்டும் பின்னால் இணைத்துள்ளேன்)

இதிஹாசத்தில்

ராமாயணத்தில் கும்பகர்ணனுக்கு நீண்ட நித்திரை வந்ததற்கும் காரணம் அவன் சம்ஸ்கிருதத்தில் தவறாக வேண்டியதே என்பதை நாம் அறிவோம்.

அஸ்வத்தாமா ஹத: என்ற தர்மனின் வாசகம்தான் மஹாபாரதப் போரின் போக்கையே மாற்றியது. இதனால் துரோணர் மனமுடைந்து இறக்க நேரிட்டது. போர்க்களத்திலும் சம்ஸ்கிருதமே பேசப்பட்டது. அர்ஜுன- கிருஷ்ண உரையாடல் சம்ஸ்கிருதத்தில் நடந்ததால்தான் நாம் இன்று பகவத் கீதையைப் படிக்க முடிகிறது.

 

 

சிலப்பதிகாரத்தில்

ஒரு பார்ப்பனப் பெண், தண்ணீர் குடத்தை எடுத்துக்கொண்டு, வீட்டில் நுழைகையில், அவளை வாசலில் வரவேற்க வந்த கீர்ப் பிள்ளையின் வாயில் ரத்தம் இருப்பதைக் கண்டு அவசரப்பட்டு அதன் தலையில் தண்ணீர் குடத்தைப் போட்டு அதைக் கொன்றவுடன் அவளது கணவன் ஓலைச் சுவடியில் சம்ஸ்கிருத வாசகத்தை எழுதிக் கொடுத்துவிட்டு யாத்திரை சென்றபோது, ரோட்டில் நின்று கதறிய அந்தப் பாப்பாத்திக்கு கோவலந்தான் சம்ஸ்கிருத வாசகத்தைப் படித்து வழிகாட்டுகிறான். வைஸ்யனாகிய கோவலனுக்கும் சம்ஸ்கிருதம் தெரியும்.(கீரிப் பிள்ளை கொன்றது குழந்தையை அல்ல; குழந்தை அருகே வந்த பாம்பைக் கொன்றது)

 

ஊர்ப் பெயர்கள், தெருப்பெயர்கள், அப்பா, அம்மா பெயர்கள்

இந்தப் பெயர்கள் எல்லாம் எல்லா குடும்பங்களிலும் இன்றுவரை சம்ஸ்கிருத்த்திலேயே இருப்பதும் சம்ஸ்கிருதம் பேச்சுவழக்கில் இருந்ததைக் காட்டுகிறது.சங்க இலக்கியத்தில் நிறைய புலவர்களின் பெயர்களும் சம்ஸ்கிருதத்தில் இருப்பதையும் முன்னரே பட்டியல் போட்டுக் காட்டிவிட்டேன்.

புராணத்தில்

நகுஷன் இந்திர பதவி வகித்த காலத்தில் குள்ளமான அகத்திய முனிவர் பல்லக்குச் சுமக்கையில் ஒரு பக்கம் சய்ய்ந்து இருப்பதைக் கண்டு “சர்ப்ப, சர்ப்ப” என்று சம்ஸ்கிருதத்தில் கட்டளையிடவே அவனை சர்ப்பமாக(பாம்பாக)ப் போகும்படி சபித்த கதையை நாம் அறிவோம். அங்கும் மன்னனும், முனிவரும் சம்ஸ்கிருதமே பேசினர்.

அகத்தியருக்கு நர மாமிசம் சமைத்துப் போட்ட இல்வலனிடம் “வாதாபி ஜீர்ணோ பவ” என்று சொல்லி வாதாபியை வயிற்றில் கரைத்தபோது அகத்தியர் சொன்னதும் சம்ஸ்கிருதமே.

 

காதா சப்த சதி தோன்றக் காரணம்

 

காதா சப்த சதி என்னும் அருமையான பிராக்ருத நூல் தோன்றக் காரணமும் ராணியின் ஒரு சம்ஸ்கிருதக் கட்டளையைத் தவறாகப் புரிந்த ராஜா வெட்கப்பட்டு படிக்கத் துவங்கியதே என்பதையும் முன்னரே எழுதிவிட்டேன். (சம்ஸ்கிருதமும் பிராக்ருதமும் வேறு வேறு மொழிகளல்ல; ஒன்று இலக்கிய வழக்கு, மற்றொன்று பேச்சு வழக்கு; இதையும் முன்னரே எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிவிட்டேன்)

 

எனது பிளாக்கில் நான் முன்னர் எழுதிய ஒரே ஒரு கட்டுரையை மட்டும் கீழே இணைத்துள்ளேன்:

தண்டர், இடி மின்னல்

த………………….த…………………..த……………………. கதை

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண் 850 தேதி 19 பிப்ரவரி 2014

Translation of my Post posted in English on 19th February 2014 in this blog.

த…..த…..த….. என்ற மூன்று எழுத்துக்களை (சொற்களை) பிரபலமாக்கியோர் மூவர். ஒருவர் நமது காலத்தில் வாழ்ந்து, நமக்கு எல்லாம் அருள் புரிந்து சிவமயமாகிவிட்டவர்-காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994). மற்றொருவர் ஆங்கில இலக்கிய பாடம் படிக்கும் எல்லோருக்கும் தெரிந்த அமெரிக்க ஆங்கில மொழிக் கவிஞர்– நாடக ஆசிரியர் டி.எஸ்.எலியட் (1888—1965). மூன்றாவது மனிதர் , 3000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வாழ்ந்த ஒரு ரிஷி. பிருஹத் ஆரண்யக (பிருஹத்= பெரிய, ஆரண்யக= காடு) உபநிஷத்தில் த….த…த…..கதையை முதலில் நமக்குச் சொன்னவர். அதாவது வேத கால ரிஷிகள்.

முதலில் நமது காலத்தில் வாழ்ந்து மறைந்த காஞ்சிப் பெரியவர் எழுதிய சம்ஸ்கிருதப்பாடலும் அதன் மொழி பெயர்ப்பும். இதை 1966 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையில் பாடுவதற்காக அவர் எம்.எஸ்.சுப்புலெட்சுமிக்கு எழுதிக் கொடுத்தார்:

மைத்ரீம் பஜத, அகில ஹ்ருஜ்-ஜேத்ரீம்!
ஆத்மவதேவ பராநபி பச்யத!
யுத்தம் த்யஜத! ஸ்பர்தாம் த்யஜத!
த்யஜத பரேஷ்வக்ரமம்-ஆக்ரமணம்!
ஜநநீ ப்ருதிவீ காமதுகாஸ்தே,
ஜநகோ தேவ: ஸகல தயாளு:!
தாம்யத! தத்த! தயத்வம் ஜநதா:!

ச்ரேயோ பூயாத் ஸகல ஜநாநாம்!
ச்ரேயோ பூயாத் ஸகல ஜநாநாம்!
ச்ரேயோ பூயாத் ஸகல ஜநாநாம்!

 

இந்த கீதத்தின் தமிழாக்கம்:

அனைத்துளம் வெல்லும் அன்பு பயில்க!
அன்னியர் தமையும் தன்னிகர் காண்க!
போரினை விடுக! போட்டியை விடுக!
பிறனதைப் பறிக்கும் பிழை புரிந்தற்க!
அருள்வாள் புவித்தாய், காமதேநுவாய்!
அப்பன் ஈசனோ அகிலதயாபரன்!
அடக்கம் – கொடை – அருள் பயிலுக, மக்காள்!

உலகினரெல்லாம் உயர்நலம் உறுக!
உலகினரெல்லாம் உயர்நலம் உறுக!
உலகினரெல்லாம் உயர்நலம் உறுக! – என்பதுதான்.

கதை என்ன?

இப்பாடலில் வரும் தாம்யத – தத்த – தயத்வம் என்ற சொற்றொடர் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் வருவதாகும். அது குறித்த கதை: ஒரு சமயம் தேவர்கள், மானுடர்கள், அசுரர்கள் ஆகிய மூன்று இனத்தாரும் ப்ரஜாபதி (ப்ரஹ்மா) யிடம் உபதேசம் வேண்டினர். அவர் தமது உபதேசத்தை த-த-த என்ற இடியின் ஒலியாகக் கூறி அருளினார். ‘த ‘ என்பதை தேவர்கள், ‘தாம்யத’ எனப் பொருள் கொண்டனர். அப்பதத்துக்குப் ‘புலன்களைக் கட்டுப்படுத்துங்கள்’ என்று அர்த்தம். தேவர்கள் புலனின்பம் துய்ப்பதிலேயே ஈடுபட்டவர்கள். ஆதலால் தங்களுக்கு இந்த உபதேசம் எனக் கொண்டனர்.

 
மானுடரோ ‘த’ என்பதை ‘தத்த’ எனப் பொருள் கொண்டனர். ‘தத்த’ என்பதற்கு ஈகை உடையவர் ஆக இருங்கள் என அர்த்தம். மானுடர்களுக்கு ஈகை குணம் மிகவும் குறைவாக இருப்பதாலேயே இப்படி உபதேசம். அசுரர்கள் ‘த’ என்பதை ‘தயத்வம்’ – அதாவது, தயையுடன் இருங்கள் – எனப்பொருள் கொண்டனர்.

 

ஆதிசங்கரர் இதற்கு உரை எழுதுகையில், மானுடரிலேயே தெய்விக குணமும், அசுர குணமும் உடையவர்கள் இருப்பதால் இம்மூன்று உபதேசங்களுமே மானுடர்களுக்கானவை எனத் தெளிவு செய்துள்ளார். –(பாடலின் தமிழ் வடிவம் கல்கி பத்திரிக்கையிலிருந்து எடுக்கப்பட்டது;நன்றி)

 

அமெரிக்க கவிஞர் டி.எஸ்.எலியட்டுக்கு இந்துமதத்தில் பேரார்வம் உண்டு. அவர் கீழை—மேலை நாட்டு கருத்தொற்றுமை காணும் முகத்தான் அவரது நீண்ட தத்துவக் கவிதையான தி வேஸ்ட்லாண்டின் இறுதிப் பகுதியில் இந்த தாம்யத, தத்த, தயத்வ என்ற சம்ஸ்கிருதச் சொற்களை அப்படியே சேர்த்து சாந்தி, சாந்தி, சாந்தி, என்று சொல்லி கவிதையை முடிக்கிறார்.
எனது ஆங்கிலக் கட்டுரையில் முழு விவரம் காண்க.

(இந்தக் கதையானது அக்காலத்தில் சம்ஸ்கிருதம் பேச்சு வழக்கில் இருந்ததையும், அதை அரக்கர், மானுடர், தேவர் மூவரும் பேசினர் என்பதையும் காட்டும் என்பது எனது துணிபு.)

 

 

 

ஒளியீரி (LED) விளக்குகளுக்கு மாறுவோம்! Post No. 2359

LED 1

Radio Talk written by S NAGARAJAN

Date: 25 November 2015

Post No. 2359

 

Time uploaded in London :– 6-00 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

LED – LIGHT EMITTING DIODE- எல்.ஈ.டி அல்லது லைட் எமிட்டிங் டையோட் என்று அழைக்கப்படும் ஒளியீரி அல்லது ஒளியுமிழ் இரு முனைய விளக்குகள் நீண்ட காலம் உழைக்கும் வல்லமை பெற்றவை. அன்றாடம் நாம் வழக்கமாக உபயோகிக்கும் incandescent bulb எனப்படும் வெப்பத்தால் ஒளி விடும் கனலொளிர் விளக்குகளை ஒப்பிடும் போது காம்பாக்ட் ப்ளோரெஸெண்ட் விளக்குகள் 35000 மணி நேரங்கள் அதிக பட்சமாகவும் 10000 மணி நேரம் குறைந்தபட்சமாகவும் வடிவமைப்புக்குத் தக்கபடி ஒளிர்கின்றன. இது சம்பிரதாயமான பல்புகள் அதிகமாக எரியும் 2000 மணி நேரம் அல்லது குறைந்தபட்சமாக எரியும் 750 மணி நேரத்துடன் ஒப்பிடும் போது பல மடங்கு அதிகம் என்பது தெளிவாகப் புலப்படும்.

 

 

சாமான்யனுக்கான எளிமையான விளக்கமாக இதைக் கூற வேண்டுமெனில் ஒளியுமிழ் இரு முனைய விளக்குகள் அதாவது உரிய வடிவமைப்புடன் கூடிய எல்.ஈ.டி விளக்குகளை ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் ஒருவர் பயன்படுத்தினால் அதை இருபது வருடங்களுக்குப் பின்னால் மாற்றினால்  போதும். ஒரு ஒளியுமிழ் இரு முனைய விளக்கானது காலப் போக்கில் அதன் பிரகாசத்தை இழக்கிறது. அதன் ஆரம்பகால பிரகாசத்தில் 70 விழுக்காடு குறைந்து விட்ட நிலையில் அதை மாற்றினால் மட்டுமே போதும். இதனால் பராமரிப்புச் செலவும் குறையும்.

 

 

சம்பிரதாயமான பல்புகளை ஒப்பிடும் போது இந்த ஒளியுமிழ்  இரு முனைய விளக்கானது 80 முதல் 90 விழுக்காடு ஆற்றல் திறனை உடையது. சம்பிரதாயமான பல்புகள் 20 விழுக்காடு ஆற்றல் திறனையே உடையது.

 

 

அத்தோடு ஒரு சிறிய ஒளியுமிழ் இரு முனைய விளக்கு 25 கனலொளிர் விளக்கை ஈடு செய்வதால் மாசில்லா சூழ்நிலை ஏற்படுத்துகிறது. அனைத்து இல்லங்களிலும் தொழிலகங்களிலும் இந்த விளக்குகள் பயன்பாட்டிற்கு வந்து விட்டால் பூமி எவ்வளவு பசுமையாக ஆகி விடும்! சிந்திப்போம் செயல்படுவோம். ஒளியீரி விளக்குகளுக்கு உடனடியாக மாறுவோம்!

 

***