Date uploaded in London – – 29 FEBRUARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
இந்துக்களின் தெய்வ வடிவங்களுக்கு கணக்கே இல்லை ; தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார் ; எறும்பிலும் இருப்பார் ; யானையிலும் இருப்பார் ; தேனீக்களிலும் இருப்பார் ; வண்டுகளிலும் இருப்பார் .
ஆந்திர பிரதேசத்தில் ஸ்ரீ சைலத்திலுள்ள கோவில் உலகப் பிரசித்திபெற்றது அங்கே உறையும் தேவிக்கு தேனீ தேவி , அதாவது பிரமராம்பா என்று பெயர்.; சம்ஸ்க்ருத மொழியில் பிரமரி என்றால் தேனீ. அங்குள்ள மல்லிகார்ஜுன சிவன் கோவில் 12 ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் ஒன்று என்பதால் அதை அறியாத சிவ பக்தன் இந்தியாவில் இல்லை ; இதே போல மேற்கு வங்க கிராமம் ஒன்றிலும் பிரமரி அம்மன் உறைகிறார்.
பிரமராம்பா பற்றி சுவையான கதை உண்டு .
அருணன் என்பவன் ஒரு அசுரன் ; இந்துக்களில் அசுரர்களும் இந்து தெய்வங்களையே வணங்குவர் ; கிறிஸ்தவ மதத்தை பரப்ப வந்த வெள்ளைக்காரன் மட்டும் இந்துக்களை பிரித்தாள்வதற்காக அசுரர்கள் என்பவர்கள் பழங்குடி மக்கள் என்றும் மற்றவர்கள் ஆரியர்கள் என்றும் கதை கட்டினான்.
அந்த அருணன் என்ற அரக்கன் பிரம்மாவை நோக்கி கடும் தவம் புரிந்து வெற்றியும் கண்டான் ; அசுரர்கள் எல்லோரும் புத்திசாலி போல வரம் கேட்பார்கள்; ஆனால் அதில் ஏதேனும் ஒரு ஓட்டை இருக்கும்; அதனாலேயே அழிவார்கள். அருணன் சொன்னான் ; என்னை ஆணோ பெண்ணோ கொல்லக்கூடாது; இருகால் பிராணியோ நாற்கால் பிராணியோ கொல்லக்கூடாது. போரிலோ ஆயுதங்களினாலோ கொல்லக்கூடாது; அப்படிப்பட்ட வரம் வேண்டும் என்றான் ; பிரம்மாவும் ததாஸ்து / அப்படியே ஆகட்டும் என்றார் . அதிகாரம் வந்தால் ஆணவம் வரும் ; இரண்டும் சேர்ந்தால் மற்றவர்களை அழிக்கும் எண்ணம் வரும் ; அருணனும் அளவில்லாத அக்கிரமங்களை செய்தான் ; தேவர்களுக்கு / அதாவது நல்லோருக்குக் கட்டுக்கடங்காத துன்பம் நேரிட்டது ; எல்லாம் வல்ல சக்தியிடம் , குறை நீக்குமாறு முறையிட்டார்கள் ; அவளும் அப்படியே ஆகட்டும் என்றாள்.
அந்த முட்டாளுக்கு புழுப்பூச்சிகள் பற்றி அறிவே இல்லை ; இறைவி , சக்தியாக உருவெடுத்து அருணனின் அட்டகாசக் கும்பலை அடியோடு அழித்தாள்; இறுதியில் அருணன் மட்டும் மிஞ்சினான்; அப்போது தேவி தன் உடம்பு முழுவதும் தேனீக்களாகும்படி செய்தாள்; அவனைத் தாக்கி அவன் உடல் முழுதும் தேனீக்கள் ஆக்கிரமிக்கும்படி செய்தாள் ; அவனும் மூச்சுத் திணறி அழிந்த்தான். அசுரர் குணம் படைத்தோர் அந்த குணத்தினாலேயே அழிவர் என்பதே நீதி.
உலகம் முழுதும் ஒரு காலத்தில் இந்துமதம் இருந்தது; ஆனால் இப்போது அதன் எச்ச சொச்சங்களே இருக்கின்றன; இந்து மதத்தில் என்னென்ன சொல்கிறோமோ அதன் ஒரு அம்சத்தையாவது உலக கலாசாரங்களில் காணலாம் ; எகிப்தீய , கிரேக்க , மாயன் நாகரிகங்களிலும் தேனீ தெய்வங்கள் உண்டு. கிரேக்க நாட்டிலும் தேனீ மாதாதான் ஒரு தெய்வம்
மேற்கு வங்கத்தில் ஒரு பிரமரி தேவி கோவில்
ஜல்பய்குரி நகரிலிருந்து 19 கி.மீ தொலைவில் சல்பரி கிராமத்தில் ஒரு பிரமரி தேவி கோவில் இருக்கிறது; இதை 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் கருதுவார்கள்; சதி தேவியின் இடது கால் விழுந்த இடம் இது என்பது ஐதீகம் ( Trisotra, Salbari village, Bodaganj, Jalpaiguri, West Bengal).
xxxx
உலகில் முதல் முதலில் தேனீக்களைப் பாடியவர்கள் ரிக் வேத ரிஷிகள் ஆவார்கள் . மது என்றாலே தேன்; மதுவும் பாலும்தான் ரிஷிகளின் முக்கிய உணவு; யார் வந்தாலும் இவை இரண்டும் கலந்த மதுபர்க்கத்தையே கொடுத்து விருந்துபசாரம் செய்வார்கள் ; அதுவும் காட்டிலிருந்து கிடைக்கும் இயற்கையான தேனையே அவர்கள் பயன்படுத்தினார்கள் . ரிக்வேதத்தில் வெள்ளைக்காரனுக்கும் புரியாத தெய்வங்கள் அஸ்வினி தேவர்கள் என்னும் இரட்டையர் ஆவார்கள்; அவர்களைத் தேனுடன் தொடர்பு படுத்தியே துதிகள் இருக்கின்றன. தேனீக்கு மட்டுமே வேதத்தில் பல பெயர்கள் இருக்கின்றன இதோ அந்த குறிப்புகள் :
Aarangara Rig Veda 10-106-10; ஆரங்கரா/ ரிக் வேதம்
Bhrngaa ப்ருங்க / அதர்வ வேதம் Atharva Veda 9-2-22; யஜுர் வேதம் Yajur Veda- Maitraayani Samhitaa 3-14-8; Vaajasaneyi Samhitaa 24-29; it is one of the sacrificed creatures in Asvamedha yaga. அஸ்வ மேத யக்ஞத்தில் அக்கினியில் போடப்பட்ட 200++++ பொருட்கள் / பலிகளில் தேனீயும் ஒன்று .
Maksaa / Maksikaa – மக்ஷ மகிஷிகா fly or bee – Rig Veda 1-162-9; 10-40-6; 1-119-9; later Upanishads also use these words .Atharva Veda 11-1-2; 9, 10
மதுக்க்ருத் Madhukara -Prasna Upanishad 2-4 madhukara rajan= king bee .மதுகர
Madhukrt – honey maker- Taittriya Samhita; Taittriya brahmana ; Satapata Brahmana use this word; also Chandogya Upanishad
சரக் Saragh – Rig Veda 1-112-2 Taittriya Samhita v.3.12.12; Satapata Brahmana 13-3-1-4; Panini also mentioned it.
தேனீக்களைப் பாடாத கவிஞர்கள் இல்லை ; காளிதாசன் முதல் கம்பன் வரை பாடியுள்ளனர் ; சங்க இலக்கிய நூல்களில் நிறைய குறிப்புகள் உள்ளன ; காளிதாசனின் மேக தூதத்தை பார்த்து இயற்கையிலுள்ள எல்லாப்பொருட்களையும் காதலன், காதலிக்குத் தூது விடுவதற்கு பயன்படுத்தினர் சங்கப் புலவர்கள் ; தேனீக்களையம் இப்படி பயன்படுத்தினர்.
xxxx
சங்க இலக்கியத்தில் தேனீக்கள்
Akananuru -4-10; 46 அக நானூறு
Ainkurunuru – 90 ஐங்குறு நூறு
Narrinai 290 men are like bees visiting many women , 277
நற்றிணை
Kuruntokai 2, 392 குறுந்தொகை
Purananuru – 70; narrinai -55; akam 332 -six legged புறநானூறு
xxxx
காளிதாஸ காவியத்தில்
Kalidasa – Sakuntala; 3-23; 4-7; 5-1, 8; shadpata 1-23; 3-23; 5-19; சாகுந்தலம்
Kumarasambhava – 3-36; shadpata 5-9 குமார சம்பவம்
Vikramaorvaseeyam 4-22, 21; 2-23 விக்கிரமோர்வசீயம்,
Raghuvamsa – shadpata – 6-59; 8-55; 9-26; 11-27, ரகுவம்சம் ,
Raghuvamsa- elephant rut/ beetle – 5-43; 6-7; 30-57; 12-102, ரகுவம்சம் ,
தேனீக்களை சம்ஸ்க்ருத, தமிழ் கவிஞர்கள் ஆகியோர் அறுகால் பறவை என்றும் அழைத்தனர் ; இது தேனீ , வண்டு முதலிய பல பூச்சிகளைக் குறிக்கும் ; அவற்றுக்கு ஆறு கால்கள் .
காளிதாசனுக்கும் முன்னர் வாழ்ந்த பாஷா எழுதிய நாடகங்களில் தேனீக்கள் உள்ளன .
ஆண்களும் தேனீக்களைப் போல மலர் மேயும் வண்டுகள் என்று தமிழ்ப்புலவர்( நற்றிணை 290)n சாடுகிறார் ; பிற்காலத்தில் கண்ணனைப் பாடிய ராதா ராணியும் இதைக் குறிப்பிடுகிறார்.
“ஷட் பத” என்றால் ஆறு கால்கள் ; மத யானைகளை மொய்க்கும் வண்டுகள் , மலர் மேயும் ஆறு கால்கள்/ தேனீக்கள் , காட்டில் இசை பாடும் தேனீக்கள் என்று காளிதாசனும் சங்கப் புலவர்களும் பாடுவது இந்தியப் பண்பாடு இமயம் முதல் குமரி வரை ஒன்றே என்பதைக் காட்டுகின்றது.
To be continued………………………………….
TAGS- தேனீ , பிரமரி , பிரமராம்பா , ஸ்ரீ சைலம் காளிதாசன், வேதம் அறுகால் பறவை , ஷட்பத , சங்க இலக்கியம்