English New Year is Hindu New Year! (Post No. 2445)

SL ganesh stamp

Research Article written by London swaminathan

 

Date: 31  December 2015

 

Post No. 2445

 

Time uploaded in London :– 12-56

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

This article is uploaded in TAMIL as well.

 

Every year we hear a debate, sometimes becoming a raging controversy, whether we can celebrate English New Year or not on 1st January. Actually there is more ‘Hinduism’ in English New Year than any other religion.

So please celebrate Hindu New Year on First January! But it should be a ‘no drinks’, no ‘hanky-panky’ celebration.

ganesh nepal

Calendars have been changed continuously from the dawn of history. Hindus have more calendar systems than any other culture in the world. The whole world is celebrating New Year based on one or the other of the Hindu calendars. Most of the countries follow either a New Year calendar as March or April as the first month.

 

January Ganapathy! Ganapathy January!!

 

January, the first month of English calendar is named after Lord Ganesh. Romans called Ganesh as Janus and worshipped him for 800 years between 400 BCE and 400 CE. Anyone who reads about Janus will find it is nothing but the corruption of Hindu God Ganesh! J and G are interchangeable.

 

Here are the similarities:

1.Romans worshipped him with two faces facing opposite direction, looking at future and past

2.They installed Janus temples on road sides, entrances and gates.

3.They named the first month after him.

 

4.Janus is connected with war.

 

5.Janus temples were constructed in square shapes.

gold ganesh

All these are based on Hindu beliefs. Hindus begin any work with the worship of Ganesh. That is why Romans made it as the first month after calendar reformation.

Hindus install Ganesh at the gates or entrances of the temples. Most of the Tamil Ganesh temples are on road sides and in square shaped buildings or platforms. Ganesh is in charge of our future and that is why he is worshipped first. Bhuta Ganas under the leadership of Ganesh serve the army of Lord Shiva.

 

Romans had Janus temples all over Italy and Nero and other kings issued coins with Janus temples pictures. Even today Janus is displayed in all the museums from Vatican to Louvre. Romans had a city in the name of Janus, ‘Janiculum’ on the banks of River Tiber. Even today, Hindus install Ganesh under a tree mostly on river banks.

So the reformed English calendar is actually Hindu calendar.

Janus-Vatican

Janus in Vatican City.

January 9th was celebrated as the Birth day of Janus/Ganesh in Italy 2000 years ago!

So we can even sing a Bhajan song in the name of January!

 

January Ganapathy, Ganapathy January Paahimaam

Ganapthay January, January Ganapathy Rakshamaam

 

(Paahimaam, Rakshamaam= Protect me, bless me)

 

Sesterce_temple_janus.JPGNERO

Janus Temple in a coin of Emperor Nero

 

Hindu Sanskrit Months in English!

Sapta = 7= September

Ashta = 8 = October

Nava = 9 = November

Dasa = 10 = December

 

Sanskrit words for 7, 8, 9, 10 are still used in the names of English months. The entire world was following Hindu calendar beginning in March at one time and so the names for 7,8,9, 10 for September, October, November and December. The latest calendar was called Julian calendar after his reformation. Romans also made lot of changes in the calendar naming certain months after the Roman emperors Julius (July) and Augustus (August) Caesars.

So long as we have these months we will be remembering the Sanskrit numbers.

Even today the Saka year of the Government of India begins around March.

janus

Hindus followed both solar (Tamil, Singhalese, Nepalese, Bengalis, South East Asian countries) and Lunar ( National year, Telugus, Kannadigas etc) calendars. Since it was the largest country in the ancient world each king or region followed different systems.

 

Hinduism is a religion which will digest everything alien to it and absorb or adapt it to suit it. Tamils have started going to temples like Tirupati, Tiruttani, Palani etc on Pada Yatra ( by foot ) on the English New Year day. This is a typical example how Hindus take everything to their advantage.

 

Muslim and Christian invaders were so ruthless and killed several thousand before converting them to their religion. They converted the whole of South America and most of Africa. But they could not do such a thing in India even after 1000 years! This is the secret of adaptation and absorption. Hindu religion is an ever changing religion. But it will never sacrifice its basic values such as Truth, Peace, Love, Kindness, Charity, fear of God, Respect for culture, Respect for Elders etc. They don’t bother about superficial forms. They digested and absorbed all that is good from the Greeks, Romans, Sakas and Huns. They boldly adapted certain systems from the Christians and Muslims. The world also took all that is useful from the Hindus such as the numbers, value of zero, domestication of cow and horse etc. Without these Hindu contributions the world would never have seen computers or space rockets! Or a civilization.

ijanus0001p1

ijanus0001p1

Let us celebrate “English” New Year as Hindu New Year on 1st January in addition to our traditional new years’ celebrations!

Wish you all a Very Happy New Year!

–subham-

 

 

ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடலாமா? (Post No. 2444)

SL ganesh stamp

Research Article written by London swaminathan

 

Date: 31  December 2015

 

Post No. 2444

 

Time uploaded in London :– 9-37 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

This article is uploaded in English as well.

ganesh nepal

ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாட வேண்டும். ஆனால் குடித்துவிட்டுக் கும்மாளம் போடக்கூடாது. அதே நேரத்தில் தமிழ் புத்தாண்டையும் மறக்கலாகாது.

ஆங்கிலப் புத்தாண்டை ஏன் கொண்டாட வேண்டும்?

ஏனெனில்,அதைக் கொண்டாடும்வரை சம்ஸ்கிருதம் வாழும். இந்துமதம் வாழும். அது எப்படி?

 

கணபதி=ஜனவரி; ஜனவரி=கணபதி!!

நீங்கள் ஒரு பஜனைப் பாடலே பாடலாம்!

கணபதி=ஜனவரி; ஜனவரி=கணபதி! பாஹிமாம்!

ஜனவரி=கணபதி!! கணபதி=ஜனவரி!! ரக்ஷமாம்!!

 

ஏனெனில் ஜனவரி என்ற மாதப் பெயர் ‘ஜேனஸ்’ என்ற ரோமானிய கடவுள் பெயரிலிருந்து வந்தது என்பர். உண்மையில் ‘ஜேனஸ்’ என்பது ‘கணேஷ்’ என்பதன் திரிபு!

Janus-Vatican

Janus/Ganesh  in Vatican

ஆங்கிலத்தில் ‘ஜி’ என்ற எழுத்தும் ‘ஜே’என்ற எழுத்தும் இடம் மாறுவது சர்வ சாதாரண விஷயம்!

 

ஜேனஸ்=கணேஸ் யார்?

ஜேனஸ் என்ற ரோம் நகர தெய்வத்துக்கு இரண்டு முகங்கள்: ஒன்று கடந்த காலத்தைப் பார்க்கும்; மற்றொன்று எதிர்காலத்தைப் பார்க்கும். இதை வாசல்படிகளில், நுழைவாயில்களில் வைப்பர். நமது இந்துக் கோவில்களில் நுழைவாயிலில் கணபதி/கணேஷ் இருப்பதைப் பார்த்தே அவர்களும் இப்படி வைத்தனர்.

 

மேலும் இந்துக்கள் எல்லா காரியங்களையும் துவங்குவதற்கு முன் கணேஷை வணங்குவர். ஆகவே அவர்களும் ஜனவரியை ஆண்டுக்கு முதல் மாதமாக வைத்தனர். ஆகையால் இது ஆங்கிலப் புத்தாண்டு இல்லை. இந்துப் புத்தாண்டே!

 

ரோமானியர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9ஆம் தேதி கணேஷ் சதுர்த்தி கொண்டாடினர். இன்றைக்கு அல்ல. 2000 ஆண்டுகளுக்கு முன்பு!

 

Sesterce_temple_janus.JPGNERO

Janus Temple coin issued by Roman Emperor Nero

 

ஜேனஸ் கோவில்கள் கி.மு.400 முதல் கி.பி.400 வரை 800 ஆண்டுகளுக்கு இத்தாலி முழுதும் இருந்தன. அவருடைய கோவில்கள் சதுர வடிவில் – 4 பருவங்களைக் குறிக்க—அமைக்கப்பட்டிருந்தன. இதையும் இந்துக்களைப் பார்த்தே செய்தனர். கணபதியின் தனிக் கோவில்கள் தமிழ்நாடு முழுதும் சதுர வடிவிலே இருக்கும்.

 

இத்தாலியில், டைபர் நதிக்கரையில் ஜனிகுலம் என்ற இடத்தில் கணபதி நகரமே அமைக்கப்பட்டது!

 

ஜேனஸ் கையில் ஒரு சாவியும் மற்றொரு கையில் ஒரு தண்டமும் இருக்கும். நாம் அங்குசம், பாசக் கயிற்றைக் கைகளில் காட்டினோம். அவர்கள் சிறிது மாற்றி வைத்தனர். ஜேனஸுக்கும், போருக்கும் தொடர்பு உண்டு. இந்து புராணக் கதைகளிலும் அவர்தான் பூதகணத் தலைவர்.

janus

கணபதி கோவில்களை சாலை ஓரங்களிலும் ரோமானியர் கட்டினர். இன்றும் தமிழ் நாட்டின் சாலை ஓரங்களில் கணபதியைக் காணலாம். இதையெல்லாம் பார்க்கும்போது தமிழ் நாட்டிலிருந்துதான் ரோமுக்கு இவர் போனாரோ என்று என்ன வேண்டியிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிலுள்ள பிள்ளையார்பட்டி, திருப்பரங்குன்ற குகையிலுள்ள பிள்ளையார் சிற்பங்கள் ரோமானிய ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னால் எழுந்தவை.

மாதங்களில் சம்ஸ்கிருதம்!!!!!!!!!!

சப்த- ம்பர்= செப்டெம்பர்= சப்த =7

அஷ்ட- ஓபர்= அக்டோபர்= 8

நவ- ம்பர்= நவம்பர் = 9

தச- ம்பர் = டிசம்பர்= 10

முன்காலத்தில் மார்ச் மாதம்தான் ஆண்டின் முதல் மாதம். பின்னால் வந்தவர்கள் இதை மாற்றி வைத்தனர். அதற்கும் பின்னர், ஜூலியன் என்ற போப்பாண்டவர் இன்னும் சில காலண்டர் சீர்திருத்தங்களைச் செய்தார். மார்ச் மாதம் முத்லாவது மாதம் என்றால் சப்த, அஷ்ட, நவ, தச= 7,8,9,10 என்பது பொருந்தும். ஆகவே இதுவும் இந்து ஆண்டே. இன்றும் இந்தியவின் தேசிய வருடமான சக வருடம் (தெலுங்கு, கன்னட, மகாராஷ்டிர புத்தாண்டு) மார்ச் மாதத்தை ஒட்டியே துவங்கும். அதுதான் நமது உண்மையான புத்தாண்டு. ஆனால் தமிழ் புத்தாண்டு சூரிய இயக்கத்தின் (சோலார்) அடிப்படையிலும், மற்ற இந்திய புத்தாண்டுகள் சந்திர இயக்க (லூனார்) அடிப்படையிலும் அமைந்தன. ஆகவே இரண்டும் சரியே.

ஆக ஆங்கிலப் புத்தாண்டு ஆங்கிலப் புத்தாண்டல்ல. இந்துப் புத்தாண்டே!! அது வாழும் வரை சம்ஸ்கிருத எண்கள் நினைவில் நிற்கும்.

 

மேலும் இந்துமதம் எதையும் ஜீரணம் செய்துவிடும். ஆங்கிலப் புத்தாண்டன்று பலர், திருத்தணி, பழநி, திருப்பதிக்குப் பாதயாத்திரை செல்வது பெரிய இயக்கமாக வளர்ந்து வருகிறது. சகரர், ஹூணர், கிரேக்கர், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களை ஜீரணம் செய்த நாடு பாரதம். அகாவே இந்து மதம் எதையும் ஜீரண செய்து தனதாக்கிக் கொண்டுவிடும். அஞ்சற்க.

gold ganesh

உலகில் கிறிஸ்தவ, முஸ்லீம் படையெடுப்பாளர்கள் சென்ற அவ்வளவு நாடுகளும் அவர்கள் மயமாய்விட்டன. தென் அமெரிக்கா முழுவதையும் ஸ்பானியர்களும் போர்ச்சுகீசியர்களும், ரோமன் கத்தோலிக்க நாடுகளாக்கினர். ஆப்ரிக்க நாடுகளை முஸ்லீகளும் கிறிஸ்தவர்களும் தமதாக்கினர். அனல் இந்தியாவில் “ஆயிரம் ஆண்டு அன்பிலா அந்நியர் ஆட்சி”க்கும் (பாரதியாரின் வரி) பின்னர், பத்து சதவீதமே மதம் மாற்றப்பட்டனர். அவர்களும் பெரும்பாலும் நம்பிக்கையிலும், கலாசாரத்திலும் இந்துக்களே!

-சுபம்–

(இது போன்ற 2400 ஆராய்ச்சிக் கட்டுரைகள், எனது பிளாக்குகளில் உள. படித்து மகிழ்க)

 

ijanus0001p1

ijanus0001p1

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

 

பிரார்த்தனை செய்வது எப்படி? (Post No. 2443)

Saint-Vallalar-Ramalinga-Adigalar

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 31  December 2015

 

Post No. 2443

 

Time uploaded in London :– 5-50 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

ஆன்மீக இரகசியம்

 

பிரார்த்தனை செய்வது எப்படி?

 

ச.நாகராஜன்

 

 kutty namaskar

மனிதனுக்கே உரித்தானது பிரார்த்தனை

 

பிரார்த்தனை செய்வது என்பது ஹிந்து, கிறிஸ்தவம், முஸ்லீம், புத்தம், சமணம், யூதம் உள்ளிட்ட அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் புரியும் ஒன்று.

 

மானிட குலம் முழுமைக்கும் பொதுவாக அமைந்த சிறப்பியல்புகளில் பிரார்த்தனையும் ஒன்று; முக்கியமானதும் கூட.

 

ஆனால் பிரார்த்தனையை எப்படிச் செய்தல் வேண்டும் என்பது மாபெரும் இரகசியம்.

 

எனக்குச் செல்வம் வேண்டும்; நான் புகழ் பெற வேண்டும்; எனக்கு அதிகாரம் வேண்டும்; நான் அமைச்சராக வேண்டும், எனக்கு பிள்ளை பிறக்க வேண்டும், எனக்கு நோய் நீங்க வேண்டும் என்றெல்லாம் பலரும் கோவில் உள்ளிட்ட பிரார்த்தனை ஸ்தலங்களில் பிரார்த்தனை புரிவதை அறிவோம்.

 

அவர்களின் நம்பிக்கைக்கும் பூர்வ கர்மவினைகளுக்கும் தக்கபடியும் வேண்டுகின்ற் ஸ்தலத்தில் அருள் பாலிக்கும் தெய்வத்தின் அருளுக்கும் ஏற்ப பெரும்பாலானோரது பிரார்த்தனை நிறைவேறி விடுகிறது.

 

இதனாலேயே பிரார்த்தனைக்கு மகத்துவம் அதிகமாகிறது.

 

 

எப்படிப் பிரார்த்திப்பது

 

ஆனால் அருளாளர்களும் மகான்களூம் பிரார்த்தனையை சரியாகச் செய்வது எப்படி என்று கூறி அருளி இருக்கின்றனர்.

தாயுமானவர் மிக அழகாகச் சொல்லி இருக்கிறார்:-

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!

 

மக்கள் அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும் அதுவே அவரது நிரந்தர பிரார்த்தனை.

 

அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டு விட்டால் இன்பநிலை தானே எய்தும் பராபரமே

என்றும் அவர் அருளி இருக்கிறார்.

 

மாபெரும் ரகசியங்கள் இரண்டை மிக எளிமையாகச் சொல்லி விட்டார் அருளாளர்.

 

அனைவரின் நலனையும் வேண்டு; அனைவருக்கும் தொண்டு செய் – இதுவே நீ நலம் பெற வழி; உனக்கு நன்மை தரும் வழி.

 

vallalar2

 

வள்ளலார் கூறும் பிரார்த்தனை இரகசியம்

 

இராமலிங்க வள்ளலார் சுவாமிகள் ஏராளமான இரகசியங்களை நூல் வடிவிலும் பா வடிவிலும் அருளியுள்ளார். பிரார்த்தனை இரகசியம் பற்றியும அவர் கூறியுள்ளார்.

பிரார்த்தனை என்ற தலைப்பில் அவரது அருள் மொழிகள் இதோ:-

 

“ஒருவன் பிரார்த்தனை செய்வதில் அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெலாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிச் செய்வதால், அதில் ஒருவனுக்கு வேண்டியவை எல்லாம் அடங்கி விடுகின்றன. பிரார்த்தனை செய்ய வேண்டுமாகில் இப்படித்தான் செய்ய வேண்டும்:

 

 

“பாதி இரவி லெழுந்தருளிப் பாவியேனை யெழுப்பியருட்  ஜோதி யளித்தென் னுள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய் நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை  ஓதிமுடியா தென்போலிவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே

        (6ஆம் திருமுறை  – பக்கம் 129)

என்பதே பிரார்த்தனையாகும்.

 

 

தான் பெற்ற பெரும் பேற்றை நெடும் பேறு என்று கூறும் அவர் அதை அனைத்து மக்களும் பெற வேண்டுவேனே என்கிறார்.

 

இது தான் உண்மையான பிரார்த்தனை என்னும் மாபெரும் இரகசியத்தையும் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றார்.

“சர்வே ஜனா சுகிநோ பவந்து                       

“லோகாஸ் ஸமஸ்தா சுகிநோ பவந்து

 

என்று காலம் காலமாக மகான்கள் சொல்லி வருகின்றனர்.

அனைவரின் நலனுக்குமாக அருள் வேண்டுவதே பிரார்த்தனை; அதைச் செய்யும் போது நமது நலன்களும் தாமாகவே கூடி விடும்.

 

இறைவனின் இந்த அருள் ‘மெக்கானிஸம் இரகசியமான ஒன்று.

 

அதைத் தாயுமானவர், வள்ளலார் போன்றோர் நமக்காக எளிய தமிழில் “உடைத்துப் போட்டுத் தருகின்றனர்.

ஆக உண்மையான பிரார்த்தனை எது என்பதை அறிந்த சந்தோஷத்தில் கூறுவோம்:

 

 

சர்வே ஜனா சுகிநோ பவந்து

 

லோகாஸ் ஸமஸ்தா சுகிநோ பவந்து

 

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!

 

********

 

 

‘DONKEY AND ITS SHADOW’ STORY!( Post No. 2442)

demosthenes

‘DONKEY AND ITS SHADOW’ STORY!( Post No. 2442)

 

Compiled  by London swaminathan

Date: 30 December 2015

 

Post No. 2442

 

Time uploaded in London :– 9-28 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

Speech Anecdotes

An Athenian crowd demonstrated impatience at a public assembly one day and hissed the orator Demosthenes (384- 322 BCE, Greece), refusing to hear him. He said that he had a short story to tell them and began,

“A certain youth hired an ass, in the summer time, to go from his home to Megara. At noon, when the sun was very hot, both who he hired the ass and the owner of the animal were desirous of sitting at the shade in the shade of the ass, and fell to thrusting one another away. The owner insisted that he had hired out only the ass and not the shadow. The other insisted as he had hired the ass, all that belonged to the ass was his.

 

Turning away, Demosthenes made as though to depart, but the mob, which had been piqued by the story, would not allow him to leave and insisted that he continue. He then turned upon them and demanded, “How is that you insist upon hearing the story of the shadow of the ass, and will not give an ear to the matters of great moment?” He was permitted to deliver the speech for which he had come. And the fine point of the ass and his shadow remains unsettled to this day.

Xxx

Mark_Twain,_

Mark Twain lost!

Chauncey Depew once played a trick on Mark Twain (1835—1910, American author, humourist)  on an occasion when they were both to speak at a banquet. Twain spoke first for 20 minutes and was received with great enthusiasm. When Depew’s turn came, immediately afterwards, he said, “Mr Toastmaster, Ladies and Gentlemen, before this dinner, Mark Twain and I made an agreement to trade speeches. He has just delivered mine and I am grateful for the reception you have accorded it. I regret that I have lost his speech and cannot remember a thing he had to say.”

 

He sat down with much applause.

 

—-SUBHAM—-

 

விகடன் பள்ளியிற் படித்த விநோதம் (Post No. 2441)

IMG_9805 (2)

Compiled  by London swaminathan

Date: 30 December 2015

 

Post No. 2441

 

Time uploaded in London :– காலை 8-58

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

விநோத விகட சிந்தாமணி- என்ற பழைய நூலிலிருந்து; (நூல் கொடுத்துதவியர்- ச.சீனிவாசன், சென்னை).

 

பழைய தமிழ்நடை; பழைய நகைச்சுவை!!

 

“ஐயா! நான் பள்ளியிற் வாசித்த வைபவத்தைக் கூறுகிறேன் கேளும். நான் பிறந்தது வெயிலடிச்சான்பட்டி. என் தகப்பனாருக்கு நான் ஒருவனே ஏகபுத்திரன். எங்கள் ஜாதியோ துடைதட்டி வெள்ளாளர். என் தகப்பனார் சுத்த கர்நாடகம். ஒருநாள் என் தகப்பன் வழக்கம்போல் அதிகாலையிலெழுந்து ஆற்றில் ஸ்நானம் செய்துவிட்டுக் கரையில் வந்து வேஷ்டி கட்டிக்கொள்ள மடிசஞ்சியைப் பார்க்க, எவனோ அப்பிக்கொண்டு போய்விட்டான். அங்கு தோட்டக்காரனின் வெள்ளை நாயொன்று படுத்திருந்தது.

மையிருட்டாயிருந்தமையாலும்,கண்பார்வை மத்தியமாதலாலும் மடிசஞ்சியென்றெண்ணி நாயைப் பலமாய்த் தூக்கினார். அப்போது வயிரவர் தீர விசாரித்துவிட்டார். சிலநாளைக்கெல்லாம் அவர் வெறிநாய் கடித்த கிறுக்கால் வலி பொறுக்கமாட்டாமல் நாய் போல் ஊளையிட்டே இறந்தார்.

 

அதன்பின் என் தாய் என்னைப் பள்ளியில் வைக்கத் தொடங்கினாள். நான், “ஆனகுலத்திற் பிறந்து ஆடுமாடு மேய்க்காமல் ஓலைவாரிக் கழுதையாய்ப் போகிறதா?” என்றெண்ணிப் படிப்பும் வேண்டாம், பிடிப்பும் வேண்டாம்” என்றேன். அது என் தாயாருக்கு மனம் பொறாமல் நான்கு ஐந்து புளியமரங்களும், பத்துப் பதினைந்து வீடுகளுமுள்ள பெரியபட்டணமாகிய ஆடுசாபட்டியில் ஓர் உபாத்தியரிடம் கொண்டுபோய் என்னை ஒப்புவித்தார். நான் அங்கேயே உபாத்தியாயர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டும் படித்துக்கொண்டும் இருந்தேன்.

 

என் வாத்தியார் சம்சாரமோ வெகு வக்கணைக்காரி. அவள் அழகோ சொல்லவேண்டியதில்லை; வர்ணிக்கத்தான் வேண்டும்

 

(சிந்து)

“இளிச்ச பல்லுக்காரி

இடிபோல் சொல்லுக்காரி

வெளிச்ச மூஞ்சிக்காரி

வெட்கங்கெட்ட நாரி

டொக்கு கன்னக்காரி

டக்குக் கண்ணுக்காரி

ஈன நடைக்காரி

ஆனைக் கழற்காரி

IMG_9805 (3)

இப்பேற்பட்ட அற்புதம் வாய்ந்து சுப்ரதீபமாய் விளங்கும் வல்லாளகண்டி என்பவள் அனுதினமும் உபாத்தியாயர் தலையில் ஒரு சட்டி அல்லது ஒரு பானை உருட்டமலிருக்கமாள். அப்படி சட்டிப்பனைகளை அவர் தலையில் உருட்டும்போது நான் பசுமூத்திரம் குடித்த காளைபோல் பல்லை யிளித்துக்கொண்டிருப்பேன். அப்போதவர், “அடே பையா! இவளைக் காட்டிலும் பட்டிமுண்டையாய் உனக்கு வாய்க்கவேணும். அப்போது இளிக்கமாட்டாய் என்பார். இப்படியிருக்க ஒரு நாள் கிணற்றில் தண்ணீர் இறைத்துவிடவேண்டுமென்று எனது வாத்தியார் மனைவி என்னை ஏவினார். அப்போது,

 

நெடுமால் திருமுருகா

நித்த நித்தமிந்தெழவா

வாத்தியாரும் சாகாரோ

வயிற்றெரிச்சல் தீராதா”

என்று ஓயாமல் கடவுளைப் பிரார்த்திக்கொண்டிருக்கும்போது, ‘போதாக்குறைக்கு பொன்னியம்மன் குறை’ என்பதுபோல வாத்திச்சியும் மோட்டுத் தவளைபோற் கட்டளையிடவே நான் கிணற்றண்டை சென்று ஒரு கூர்மையான கல்லொன்றெடுத்து அந்தத் தோண்டியை ஆயிரம் பொத்தலாக்கி ஒரு குடம் தண்ணீர் எடுத்துவந்தேன். அதற்கவள், ‘அடிமாண்டு போக’, கரியாய்ப் போக என்று தனது வசவு அரிச்சுவடியை வரிசையாயொப்பிவித்தாள்.

மற்றொரு நாள் அவள் நெல்லுக் குத்திக்கொண்டிருக்கையில் என்னையும் ஒரு உலக்கை எடுத்து வந்து குந்தாணியில் குத்தும்படி சொன்னாள். நான் இதுதான் சமயமென்று  என் பலமெல்லாம் சேர்த்து அவள் கைவிரல் நசுங்கும்படி ஒரு போடு போட்டேன். அம்மாடி, அப்பாடி, நான் சாகலாச்சு, போகாச்சு என்று அவள் தாய் தந்தை பாட்டன் பூட்டன் இறந்த துக்கத்தையெல்லாம் எண்ணி ஒப்பாரி வைத்தாள். பின்னர் வாத்தியார் வந்து சமாதானம் பண்ணப்பட்ட பாடு ‘மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பது’ போலாயிற்று.

 

வேறொரு நாள் குரு என்னைப் பார்த்து, வெந்நீர் போடும்படி சொன்னார். ஆகட்டும் குருபராக்கென்று வெகு வணக்கத்துடனும், விரைவுடனும், வாத்தியார் பாட்டன் பூட்டென்களெல்லாம் அருமையாய்க் கைபாடுபட்ட மூளை பிறள, எழுத்தாணி முனைதேய வறட்டு வறட்டென்று எழுதிய  ஏட்டுச் சுவடிகளாகிய பாகவத, பாரத இதிஹாச புராணங்களையெல்லாம் தூக்கிவந்து அடுப்பில் உருவியும், உருவாமலும் போட்டு வெந்நீர் காய வைத்துக் குருவை வணக்கத்துடன் ஸ்நானம் செய்ய அழைத்தேன்.

 

குருவும் முப்பத்திரண்டு பற்கள் தெரியும்படி தன் மனைவியைக் கூப்பிட்டு, பார்த்தாயடி! சீஷப் பிள்ளை விரைவில் வெந்நீர் போட்டுவிட்டான். நீ வெந்நீர் போட ஊரடங்கிவிடும் என்று சொல்லி வெந்நீர் ஸ்நானஞ் செய்து, மடி வஸ்திரம் தரித்துப் பலகைமீதமர்ந்து பாராயணஞ் செய்ய ராமாயணம் கொண்டுவா” என்று தன் மனைவியையேவ அவள் பரணெல்லாம் தேடியும் ஒரு ஏட்டுத் துணுக்குங்கூட கிடைக்கவில்லை. அப்போது பரண்மீது அந்த அம்மாள் கையில் ஒரு கொள்ளித்தேளிருந்து கொட்டிவிடவே அலறியடித்துக்கொண்டு, “ஏட்டுக் கட்டையும் காணோம், சுடுகாட்டையும் காணோம். உமது ராமாயணம் பாழாய்ப்ப் போக, நீர் அடிமாண்டு போக” என்று வைய ஆரம்பித்தாள். உடனே வாத்தியார் எழுந்து, துஷ்டை, பிரிஷ்டை என்று வைதுகொண்டு தேடிப் பார்த்தார். அது அங்கே ஏனிருக்கும்?

 

பின்பு என்னைப் பார்த்து, சிஷ்யா! ஏடுகளெல்லாமெங்கே? என்றார். உடனே பரமானந்த சீஷனான நான், “ஒரு அண்டா வெந்நீர்  ஐந்து நிமிஷத்திலெப்படிக் காய்ந்ததென்றெண்ணுகிறீர் என்றேன். அதற்கவர், சபாஷ்! பிள்ளையாண்டான், கெட்டிக்கரனென்று மெச்சி என்னை ஊருக்கனுப்பிவிட்டார். பின்பு சிறிது நாளைக்கெல்லாம் எனக்கு விவாகம் நடந்தேறி, துபாஷ் வேலியிலிருந்தேன். அப்போது மனைவியால் பட்ட பாட்டைக் கேளும்.

 

சூத்ரதாரர்:- நண்பா! உன் அன்பார்ந்த கதைகளைக் கேட்கக் கேட்க ஆனந்தமாயிருக்கிறது. விளம்புவாய்

–சுபம்—

நகைச் சுவைக் கதைகள் தொடரும்………………………………………….

 

ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை (Post No. 2440)

KRISHNA MUSLIM

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 30  December 2015

 

Post No. 2440

 

Time uploaded in London :– 6-20 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

உலகப்போக்கு

 

ஹிந்து முஸ்லீம் ஒற்றுமையைக் குலைக்கச் சதி செய்யும் முஸ்லீம் தீவிரவாதிகள்!

 

ச.நாகராஜன்

 

ஹிந்து முஸ்லீம் ஒற்றுமையைக் குலைக்கச் சதி செய்யும் முஸ்லீம் தீவிரவாதிகள் இப்போது அகலக்கால் வைத்துள்ளனர். கிறிஸ்தவ மதம் சார்ந்த மேலை நாடுகளையும் தீவிரவாதத்தால் நடுநடுங்கச் செய்ய வேண்டும் என்ற ‘பரந்த நோக்கத்தை’ இப்போது அவர்கள் கொண்டுள்ளதால் அவர்கள் அடையப் போவது என்ன?

 

இஸ்லாமே அழிந்து போக அல்லது செல்வாக்கு இழந்து போக வழிவகை செய்தவர்கள் ஆகப்போகின்றனர்.

இந்தியாவின் சகிப்புத்தன்மை எல்லையற்றது. உலக சரித்திரத்தில் இதற்கு உவமையாக இன்னொரு நாட்டைக் காண்பிக்க முடியாது.

 

ஹிந்து மதத்தின் பரந்த நோக்கம் ஒப்பற்ற தனி இலக்கணம் கொண்ட ஒன்று. இதற்கு ஒப்பான சர்வமத சமரஸம் என்னும் பரந்த நோக்கத்தைக் கொண்ட இன்னொரு மதம் இல்லை என்பதே உண்மை.

 

இதை ஆர்னால்ட் டாய்ன்பி போன்ற உலக சர்த்திர வல்லுநர்கள் முத்தாய்ப்பாக தங்கள் நூலின் இறுதி உரையில் எழுதி வைத்துள்ளனர்.

 

பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சி, தாங்கள் நாட்டை விட்டு வெளியேறப் போகிறோம் என்று தெரிந்தவுடன் முழு முனைப்பு கொண்ட ஒன்றாக் ஆனது. இதன் விளைவே பாகிஸ்தான்.

அந்த பாகிஸ்தானில் வாழும் முஸ்லீம்களும் கூட   இஸ்லாம் கூறும் சுவர்க்கத்தைக் காணவில்லை. மாறாக தீராத வறுமையையும் ஓயாத சண்டையையும் எப்போதும் திகில கலந்த வாழ்க்கையையுமே கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவில் ஹிந்துக்களுடன் வாழ்ந்த முஸ்லீம்களின் நல்ல போக்கிற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. அந்த நல்லை போக்கை பிரிட்டிஷார் கெடுத்தது உண்மை. அதைத் தீவிரப்படுத்தியது முஸ்லீம் தீவிரவாதிகள்.

 

diparadana muslims

சரித்திரத்தைப் புரட்டிப் பார்ப்போம்.

 

 

கல்கத்தாவிலிருந்து வெளிவரும் ஆங்கில வார இதழான ட்ரூத் (TRUTH) அதன் பத்தாம் தொகுதியில் 11-12-1942 தேதியிட்ட இதழில் தரும் செய்தி இது:

 

 

ஒரு முஸ்லீம் டெபுடி மாஜிஸ்ட்ரேட் இஸ்லாமை தீவிரமாக பின்பற்றும் நல்லவர். மாமிசத்தை அவர் தொட்டதே இல்லை. கல்கத்தாவில் நடந்த துர்கா பூஜைக்கு அவரும் மற்றவர்க்ளுடன் அழைக்கப்பட்டார்.

 

“நீங்கள் அனைவரும் துர்க்கையின் அருளை வேண்டுகிறீர்கள். அதற்காக இந்த பூஜையை நடத்தி அதற்குத் தங்களால் இயன்ற அளவு உதவி செய்கிறீர்கள். என்னையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். நானும் துர்க்காதேவியின் அருளைப் பெறுகிறேன்” என்று கூறிய அவர் பத்து ரூபாயை நன்கொடையாக அளித்தார்.

(1942இல் பத்து ரூபாய் என்பது பெரிய தொகை!)

 

கிருஷ்ணர் பிறந்த ஜன்மாஷ்டமி அன்று அழைப்பு ஏதுமின்றி விழாவிற்குச் சென்ற அவர் கீர்த்தனையில் கலந்து கொண்டார். கடைசியில் கரமயோகம் பற்றி கீதை உபநிடதங்களை மேற்கோள் காட்டி அரிய சொற்பொழிவு ஒன்றையும் நிகழ்த்தினார்.

இப்படிப்பட்ட சம்பவங்கள் தனித்த ஒன்றாக அந்தக் காலத்தில் அமையவில்லை.ஊருக்கு ஒன்றிரண்டு இது போன்ற எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.

 

பிரிட்டிஷாரின் திட்டமிட்ட சதி வேலையே தீவிரவாதத்தை விதைத்தது. அது இப்போது வளர்ந்து அவர்களையே தாக்குகிறது.

வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக!

 

ஹிந்துக்களும் முஸ்லீம்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்ததை ‘தி இல்லஸ்ட்ரேடட் வீக்லி’ என்ற பிரபல ஆங்கில வாரப் பத்திரிகை ஒரு கட்டுரையாக வெளியிட்டது. இதை  மேலே கூறிய கல்கத்தாவிலிருந்து வெளிவரும் ஆங்கில வார இதழான ட்ரூத் (TRUTH) அதன் ஆறாம் தொகுதியில் 16-12-1938 தேதியிட்ட இதழில் வெளியிட்டது

 

அந்தக் கட்டுரை தரும் செய்தி இது:-

 

மைசூர் மாநிலத்தில் சித்ரதுர்க் மாவட்டத்தில் தவளப்பன குட்டா மலை என்ற செங்குத்தான மலை ஒன்று உள்ளது. இது ஹிந்துக்களாலும் முஸ்லீம்களாலும் போற்றி வணங்கப்படும் ஒரு இடம். தவளப்பா என்ற சிவ பக்தர் கடைசியில் இங்கு வாழ்ந்த இடம் என்பதாலும் அவர் தவளப்ப லிங்கத்தை வழி பட்டு வந்ததாலும் இந்த இடம் ஹிந்துக்களுக்குப் புனித இடமானது. முஸ்லீம்களுக்கோ சியாதுல்லா என்ற முஸ்லீம் சாதுவின் இடமாக அமைந்ததால் வழிபடும் இடமானது.

அடுத்து அனந்தப்பூர் மாவட்டத்தில் ஹிந்துக்களும் முஸ்லீம்களும் இணக்கமாக உள்ள ஒரு ஹிந்துக் கோவிலும் மசூதியும் உள்ளது. மொஹரம் மாதத்தில் ஹிந்துக் கோவிலிலிருந்து அதிகாரிகள் சுண்ணாமபுடன் பிரஷ்களை எடுத்துக் கொண்டு கொஞ்சம் பணத்துடன் மசூதிக்குச் சென்று அதை வெள்ளை அடித்துக் கொடுப்பது வழக்கம். மசூதியில் உள்ளோர் அனைவரும் அன்புடன் அவர்களை வரவேற்று உபசரிப்பதும் வழக்கமானது.

 

 

அதே அனந்தப்பூர் மாவட்டத்தில் சந்த்ரவதன மொஹியார் என்பவரது சமாதி உள்ளது. அதை ஹிந்துக்களும் முஸ்லீம்களும் வழிபடுகின்றனர்.

 

மதுரையின் அருகில் உள்ள முருகனின் ஆறுபடை வீடுகளில்    ஒன்றான திருப்பரங்குன்றத்தில் மலை மீது காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. அதன் அருகிலேயே சிக்கந்தர் என்ற முஸ்லீம் பெரியாரின் சமாதியும் உள்ளது. இங்கும் ஹிந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து வழிபடுகின்றனர்.

 

பெனுகொண்டா மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்பாருக்கு இரு குருமார்கள் உள்ளனர்., ஒரு குரு ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். இந்த வகுப்பினர் “ஹொன்னூர் ஃபகீர்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர்.

இப்படி ஏராளமான உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

 

இந்த இணக்கத்தை மாற்றியது பிரிட்டிஷாரின் சூழ்ச்சி. அதனால் ஏற்பட்டது பாகிஸ்தான்!

 

தவறான வழிகாட்டுதலால் முஸ்லீம் இளைஞர்கள் தங்களின் ஒற்றுமை வழியை மறந்தனர். தீவிரவாதிகளோ அவர்களை மூளைச் சலவை செய்து தங்க்ள் வலையில் “அகப்பட்டவர்களை” இழுத்து நாசகார வேலைகளில் ஈடுபடுத்துகின்றனர்.

அனைத்து ஹிந்துக்களும் எளிய முஸ்லீம்களும் பெரும்பாலும் ஒற்றுமையுடனேயே இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர். இதை எந்த கிராமத்திலும் நகரத்திலும் நேரடியாகச் சென்று எவரும் காணலாம்.

 

இவர்களைப் பிளவுபடுத்துவது இஸ்லாம் கொள்கைகளைத் தவறாகச் சித்தரிக்கும் கெடுமதியாளர்களே!

 

இவர்களால் இஸ்லாம் தன் பெருமையை இழப்பது தான் வருத்தப்பட வேண்டிய விஷயம்.

 

இழந்து வரும் இந்தப் பெருமையை மீட்பது யார் கையில் உள்ளது?

 

நல்ல இஸ்லாமியர்களின் கையிலேயே உள்ளது.

இழந்த பெருமையை மீட்பார்களா? அல்லது இருப்பதையும்  இழப்பார்களா?

 

காலம் பதில் சொல்லும்!

*****

 

 

 

2015 in review

THANKS FOR  560,000 VISITS.

The WordPress.com stats helper monkeys prepared a 2015 annual report for this blog.

Here’s an excerpt:

The Louvre Museum has 8.5 million visitors per year. This blog was viewed about 560,000 times in 2015. If it were an exhibit at the Louvre Museum, it would take about 24 days for that many people to see it.

Click here to see the complete report.

ஆத்திச்சூடி படித்த அதிகப் பிரசங்கி! (Post No. 2439)

IMG_9826

Compiled  by London swaminathan

Date: 29 December 2015

 

Post No. 2439

 

Time uploaded in London :– 13-39

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

விநோத விகட சிந்தாமணி- என்ற பழைய நூலிலிருந்து; (நூல் கொடுத்துதவியர்- ச.சீனிவாசன்,சென்னை).

 

ஒரு வைத்தியர் மருந்து கொடுக்க ஒரு வீட்டுக்குச் சென்றார். அதுசமயம் நோயாளி வாசல் நிலை (படி)யில் உட்கார்ந்தான். அப்போது…………………….

வைத்தியர்:– அப்பா! படியிலுட்காராதே; தோஷம்.

பையன்:என்னங்காணும்! “நிலையிற் பிரியேல்” என்று அவ்வை கூறியிருக்க நீர் அதிலிருக்கபடாதென்கிறீர்?

வைத்தியர்: சரி, எதற்காக உன் அம்மா கூப்பிட்டார். உடம்பின் நிலை என்ன? உள்ளதைச் சொல்.

பையன்: என்னய்யா? “உடையது விளம்பேல்” என்று அவ்வை கூறியிருப்பதை உணராமல் உள்ளது கூறென்கிறீர்?

வைத்தியர்: சரி, கையையாவது நீட்டு பார்ப்போம்.

பையன்: அட போமையா! நீர் ஆத்திச்சூடி படியாமல் என்ன வைத்தியர்காணும்? “ஏற்பது இகழ்ச்சி: என்று அவ்வை கூறியிருப்பதையறிந்தும் யாசகன் போல கையை நீட்டச் சொல்கிறீர். நான் என்ன பைத்தியமா?

வைத்தியர்: சரி, அது போகட்டும்;இந்த மருந்தையாவது சாப்பிடு

 

பையன்: ஐயா, இதில் பாதி நீர் சாப்பிடும்

வைத்தியர்: பையா, நான் எதற்காக………………….?

பையன்:ஐயமிட்டுண் – என்று அவ்வைப்பாட்டி கூறியிருப்பதால் உமக்குப் பாதி கொடுத்துவிட்டு, மீதியை நான் உண்ணுவேன்.

வைத்தியர்: பையா, இன்று மருந்து சாப்பிடாவிடினும், ராத்திரி கொள்ளைக் கஷாயம் போட்டு அதிலிந்த பஸ்பத்தைக் கலந்து சாப்பிடு.

பையன்: ஐயா, கொள்ளை விரும்பேல் –என்று ஆத்திச் சூடி சொல்கிறது. நீர் கொள்ளைக் கஷாயம் போடச் சொல்கிறீர். ஆத்திச் சூடியை அடியோடு மறந்துவிட்டீர் போலும்?

 

வைத்தியர்: சரி, சரி, நாளைக்கு நோன்பு என்பதால், கண்டதைக் கடியதைத் தின்னாமலாவது இரு; எல்லாம் சரியாகப் போகும்

பையன்: சீ, சீ, நீர் போங்காணும்; ஆத்திச் சூடி சுத்தமாகத் தெரியவில்லையே. “நோன்பென்பது கொன்று தின்னாமை”  (கொன்று+ தின்னு+ ஆமை) என்பதை அறியீரோ?

நோன்பென்பது- விரதமாவது

ஆ- பசுவையும்

மை-ஆட்டுக் கடாவையும்

கொன்று- வதைத்து

தின்னு- சாப்பிடு

என்று அர்த்தமாகிறது. இன்னொரு அர்த்தம் ஆமையைக் கொன்று தின்னு (கொன்று+தின்னு+ ஆமை)! உமது வைத்தியமும் பைத்தியமும் எனக்கு வேண்டாங்காணும்.

வைத்தியர்: தம்பி, உனக்கு ஆத்திச்சூடி நல்ல பாடமென்று தெரிகிறது. இனி இந்த நோய் அதிகப்படும் முன்னால், தயவு செய்து கொன்றை வேந்தனையும் பாடம் பண்ணிவிடு!!நான் வருகிறேன்!!

–சுபம்–

 

 

 

 

 

Preach what you Practise! Practise what you Preach!! (Post No. 2438)

bengali rasgulla

Picture of Bengali Rasgullas

 

Compiled  by London swaminathan

Date: 29 December 2015

 

Post No. 2438

 

Time uploaded in London :– 9-35 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

pig-350px

The wife of Tseng Tze was going to the market with her infant son, who cried on the way. Hoping to stop him crying, she told him that on reaching home she would kill a pig for dinner. When they reached home, Tseng Tze, who heard of this, proceeded to seize the pig. The wife stopped him, saying she had only joked with the child.

 

To this he replied: you cannot joke with a child in this way. A child has no knowledge of his own, but depends for it on his parents and follows their instructions. If you deceive him, you will be teaching him to practise deceptions. This will not do. Accordingly they had the pig killed for dinner.

—Anecdote from China

xxx

 

rk paramahamsa

Following is the anecdote I posted here, five years ago, on 5th November 2011

 

Ramakrishna Paramahamsa and Rasgulla

Practise what you preach and preach what you practise. Then you develop magical powers. One day a lady came to see Sri Ramakrishna Paramahamsa. Having heard many stories about Ramakrishna’s greatness she came for a very simple thing- just to stop her son eating Rasgulla – the milk sweet! She begged and prayed to Paramahamsa to stop his son eating them. Bengalis are very fond of these sweets. Her son was eating them uncontrollably. Wherever she hides them he can find and gobble them up at an amazing speed. When she became frustrated she brought him to Paramahamsa. He smiled at them and asked them to come another day.

 

 

She came back after a week or so and the same old story happened. After listening to all her complaints he asked them to come after some time. Again when they went to Paramahamsa, it was the same old story. The woman was very angry but she wanted to give Paramahamsa one last chance. When she went for the last time she determined in her mind to shout at him if he sent them home without a solution. But to her surprise Paramahamsa asked them to wait. He told the boy firmly,” Hey little boy, don’t eat sweets any more”. The boy nodded his head to say yes. The woman thought that Paramahamsa just dodged them. When she went home, the boy did not show any interest in the sweets. She wanted to test her son. Now she put them openly so that he can easily see them. He didn’t even care.

 

 

Wonder struck woman went to Paramahamsa with her son and paid her respects. With a lot of hesitation she asked Paramahamsa, “Swamiji ! you asked us to go back home and come back here several times. At the end of the session you just told him a few words and it worked miracles. Till this day he never touched the sweets again. What is the secret?”

 

Ramakrishna Paramahamsa smiled and said to her, “Madam, when you came for the first time I was also very fond of the same Rasgullas like your son. With very great difficulty I consumed them little by little. When I completely stopped eating Rasgullas and got full control over my tongue, I told your son not to eat it. I am very glad to know that he completely stopped it.”

 

This anecdote has a very big lesson for us. If you preach what you practise then your words get magical powers and can do wonders.

 

–Subham–

 

 

சிவ பக்தன் அர்ஜுனன் (Post No. 2437)

siva, jabalpur

WRITTEN BY S NAGARAJAN

Date: 29 December 2015

 

Post No. 2437

 

Time uploaded in London :– 5-34 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

வில்லிபாரதம்

சிவ பக்தன் அர்ஜுனன்

ச.நாகராஜன்

 

 

 shiva cloud

Shiva seen in cloud (from face book friends)

 

அற்புதக் கவிஞர் வில்லிப்புத்தூரார்

 

வில்லிப்புத்தூரார் வைஷ்ணவத்தையும் சைவத்தையும் எப்படி சரிநிகர் சமானமாகப் போற்றி வந்துள்ளார் என்பதை வில்லி பாரதத்தைப் படிப்பவர் எளிதில் உணர்வர்.

சிவனைப் பற்றிச் சொல்லும் போதெல்லாம் பரவசமடைகிறார் வில்லிப்புத்தூரார்.

 

 

சிவபூஜைக்குப் பின்னரே உணவு

 

சிறந்த சிவ பக்தனான அர்ஜுனன் சிவ பூஜை செய்யாமல் உணவருந்த மாட்டான்.

இதை பதின்மூன்றாம் போர்ச் சருக்கத்தில் ஒரு அருமையான பாடலில் காணலாம்.

 

 

அபிமன்யுவைச் சூழ்ந்து நின்று கௌரவர்கள் அனைவரும் வஞ்சகமாக அவனைக் கொல்ல, அதை அறிந்த அர்ஜுனன் புலம்பித் தவிக்கிறான்.

 

 

“வா, என்னுடன் கைலாயம் சென்று காலைக்குள் திரும்பி விடலாம் என்று கண்ணன் அவனை அழைத்துச் செல்கிறான்.

அங்கே செல்லும் வழியில் பசி தாகத்தினால் அர்ஜுனன் வருத்தமுற, கண்ணன், மாம்பழம் உள்ளிட்ட கனிகள், கரும்புச் சாறை உண்ணுமாறு அன்புடன் கூறுகிறான் இப்படி:-

 

 

“மாங்கனி, வாதையின் கனி, வருக்கையின்                  

தீம் கனி, கன்னலின் செய்ய நீர், உள;                 

வேம் கனல் பசியும், நின் விடாயும் ஆறவே             

ஈங்கு இனிது அருந்துதி, ஏந்தல்!

 

இதைக் கேட்ட அர்ஜுனன் சிவ பூஜை இன்னும் செய்யவில்லையே என்கிறான்.

 

 

 

சரிந்தவர் சரிவு அறத் தாங்கும் நாயகன்               

பரிந்து, இவை உரைத்தலும் ‘பாவை புங்கன் மேல்        

புரிந்திலன், இன்னமும் பூஜை! என்றனன்,                    

வரிந்த வெஞ்சிலைக்கு மண் மதிக்கும் வீரனே

 

(பாவை பங்கன் – சிவ பெருமான்)

 

சரிந்தவர்களின் மெலிவு நீங்குமாறு காப்பாற்றும் கண்ணன், அன்போடு இப்படிக் கூற, “ சிவபூஜை இன்னும் செய்யவில்லையே என்கிறான் அர்ஜுனன்.

 

 shiva uma on kailas

 

கண்ணனே சிவன்

 

இப்போது அடுத்த பாடலில் மாபெரும் உண்மையை விளக்குகிறார் வில்லிப் புத்தூரார்.

கண்ணன் உடனே அர்ஜுனனை நோக்கி, “என்னை பூஜை செய்! நானும் சிவனும் ஒருவரேஎன்கிறான்.

அற்புதமான இந்தப் பாடல் இதோ:-

 

 

மரு வரு கானக மலரினால் எமைப்                   

பொரு அரு பூசனை புரிதி, ஐய நீ.                       

இருவரும் ஒருவரே என்பது இன்று போய்                 

அருவரை அவன் அடி அடைந்து காண்டியே

 

 

அரியும் சிவனும் ஒண்ணு                             

அறியாதவன் வாயிலே மண்ணு                             

என்று பாமரனும் அறியும் பெரிய உண்மையை பண்டிதர்களும் கூடச் சில சமயம் அறிவதில்லை.

அந்த மாபெரும் உண்மையைக் கண்ணனே பிரகடனம் செய்கிறான்.

 

 

அர்ஜுனனின் சிவ துதி

 

இதற்கு முன்னர் ஆரணிய பர்வத்தில், அர்ஜுனன் கைலை சென்று சிவ தியானத்துடன் தவ விரதம் பூண்டு சிவனை நோக்கித் தவம் செய்யும் சிறப்பை அருச்சுனன் தவநிலைச் சருக்கத்தில் வில்லிப்புத்தூரார் அற்புதமாக அழகுற விளக்குகிறார்.

 

 

தன்னைச் சுற்றி நான்கு புறங்களிலும் அக்கினியை மூட்டித் தவம் செய்யும் போது அக்நி தேவன் அவனைச் சுடவில்லை. சிவ தியானத்தால் அவன் உடல் எங்கும் புளகம் கொள்கிறது.

பின்னர் வேடனாக வந்த சிவபிரானுடன் அவன் போர் செய்ய, இறுதியில் சிவ தரிசனம் கிடைக்கிறது.

 

 

அப்போது அவன் சிவனைத் துதிக்கும் பாடல்கள் அருமையான பாடல்கள். அவற்றில் ஒன்று:-

 

 

ஆதியே அண்டமும் அனைத்துமாய் ஒளிர்                   சோதியே கொன்றை அம் தொங்கல் மௌலியாய்             வாதியே மரகதவல்லியாள் ஒரு                        

பாதியே பவளம் ஆம் பரம ரூபியே

 

 

 

இதன் பொருள் எளிதில் விளங்கக் கூடியதே.

அனைத்திற்கும் முதன்மை ஆனவனே!

 

உலக உருண்டைகள் அனைத்துமாய் விளங்கி ஒளிர்கின்ற ஜோதியே!

கொன்றை மலர் அணிந்த முடியை உடையவனே

பேச வல்லவனே

மரகதவல்லியான உமையை இட பாகத்தில் கொண்டுள்ளவனே

வலப்பாகம் பவழ மயமான சிறந்த வடிவுடையவனே

 

 

 

இப்படி சிவனைப் போற்றித் துதித்து அர்ஜுனன் கூறுவதாக அமையும் ஐந்து பாடல்களும் வில்லிப்புத்தூராரை சிறந்த சிவ பக்தராகவே காட்டுவதைக் கண்டு பிரமிப்பை அடைகிறோம்.

ஒவ்வொரு சருக்கத்திலும் கடவுள் வாழ்த்து பாடுவது அவர் வழக்கம். (சில சருக்கங்களில் மட்டும் இல்லை; மானசீகமாக வாழ்த்தினாரா அல்லது ஏடு எழுதியவர்கள் விட்டு விட்டார்களா, தெரியவில்லை)

 

 

கடவுள் வாழ்த்தில் திருமாலை வணங்கும் அவர் பல இடங்களில் சிவபிரானைப் போற்றுவது அரியும் சிவனும் ஒண்ணு என்பதை அவர் அனுபவபூர்வமாக உணர்ந்ததினால் என்பதை விளங்கிக் கொள்கிறோம்.

 

 

உண்மை ஒன்றே!

 

இராமாயணமும் மஹாபாரதமும் விளக்கும் பல உண்மைகளில் முக்கியமான ஒன்று : பல்வேறு தோற்றங்களில் வருவது ஒரே பரம்பொருளே என்பது தான்!

ஏகம் ஸத்; விப்ரா: பஹுதா வதந்தி

 

(உண்மை ஒன்றே; அதை அறிஞர்கள் பலவாறாகக் கூறுகின்றனர்)

 

வில்லியை ஆழ்ந்து கற்போம்; உண்மைகளை நன்கு உணர்வோம்!

********