Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – 5 (Post No.12,660)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,660

Date uploaded in London – –  –  31 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 PICTURES ARE FROM COLOMBO MUSEUM; TAKEN BY LONDON SWAMINATHAN

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 5

SLOKA 13

येषां न विद्या न तपो न दानं
ज्ञानं न शीलं न गुणो न धर्मः ।
ते मर्त्यलोके भुवि भारभूता
मनुष्यरूपेण मृगाश्चरन्ति ॥ 1.13 ॥

 13. Those without learning, penance, charity, awareness, good conduct and righteousness, are animals roaming in human garb, and are a burden to this earth.

யேஷாம் ந வித்யா ந தபோ ந தானம்

ஞானம் ந சீலம் ந குணோ ந தர்மஹ

தே மர்த்யலோகே புவிபார பூதா

மனுஷ்ய ரூபேண ம்ருகாஸ் சரந்தி

தவமோ தானமோ இல்லாமல்

கல்வியோ ஞானமோ இல்லாமல்

குணமும் ஒழுக்கமும் இல்லாமல்

வாழ்பவர்களின் உருவம் வேண்டுமானால்

மனிதன் போல இருக்கலாம்;

ஆனால் அவர்கள் மனித ரூபத்தில் உலவும் மாடுகளே.

வள்ளுவனும் பர்த்ருஹரியும் ஒரே பார்வையுடையவர்கள்:-

விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்

கற்றாரோடு ஏனையவர் – குறள் 410 

நல்ல நூல்களைக் கற்று விவேகம் அடைந்தோர் மக்கள்;

அவைகளைக் கல்லாதவர் விலங்குகள்.

அணிபொருள் சொல் கற்றானை ஆதரியான் தானே

திணி பேதை என்னத் தெரிக்கும் == கணிகொள்

மணிக்கு மதியில்லான்  மதிப்பைக்குறைத்தால்

மணிக்குத் தாழ்வுண்டோ —13

சம்ஸ்க்ருத ஸ்லோகத்துக்கும் இந்தப்பாடலுக்கும் பொருத்தமில்லை

Xxxx

SLOKA 14

वरं पर्वतदुर्गेषु
भ्रान्तं वनचरैः सह
न मूर्खजनसम्पर्कः
सुरेन्द्रभवनेष्वपि ॥ 1.14 ॥

14. Roaming in unapproachable mountains in the company of forest-dwellers, is superior to the company of fools even if in the palaces of Indra’s heaven.

வரம் பர்வத துர்கேஷு

ப்ராந்தம் வனசரை ஸஹ

ந மூர்க்க ஜன ஸம்பர்க்கஹ

ஸுரேந்த்ர பவனேஸ்வபி

 பொருள்

முட்டாள்களுடன் மன்னனின் அரண்மனையில் வாழ்வதைவிட

காடுகளில் குகைகளில் வன விலங்குகளுடன் வாழ்வதே மேல்.

 கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டிற்

கடும்புலி வாழும் காடு நன்றே- வெற்றி வேற்கை

கள்ளன் கொடுபோகான் கல்விச் செல்வத்தையது

கொள்ளை கொள்ள இன்பங் கொடுக்குமே –அள்ளக்

குறையாதழியாது  கூர்ந்தது பெற்றோரைத்

தறை யாளு வோனு மொவ்வான் சால்பு —14

சம்ஸ்க்ருத ஸ்லோகத்துக்கும் இந்தப்பாடலுக்கும் பொருத்தமில்லை

Xxxx

SLOKA 15

शास्त्रोपस्कृतशब्दसुन्दरगिरः शिष्यप्रदेयागमा
विख्याताः कवयो वसन्ति विषये यस्य प्रभोर्निर्धनाः ।

तज्जाड्यं वसुधादिपस्य कवयस्त्वर्थं विनापीश्वराः
कुत्स्याः स्युः कुपरीक्षका हि मणयो यैरर्घतः पातिताः ॥ 1.15 ॥

 15. The king, in whose territory well-known, learned people, whose words are embellished by the Shastras and hence pleasing, whose knowledge of sacred works is worthy of imparting to disciples, live in poverty – it speaks of the ruler’s ignorance indeed. Learned ones are masters even without wealth. The gem appraisers are to blame, and not the gems, if the latter are valued less than their real worth.

சாஸ்த்ரோபஸ்க்ருத சப்த ஸுந்தர கிரஹ சிஷ்யப்ரதேயாகமா

விக்யாதா ஹா கவயோ வசந்தி விஷயே யஸ்யப்ரபோநிர்தனாஹா

தஜ்ஜாட்யம் வஸுதாதிபஸ்ய கவயஸ்வர்தம் விநாபீஸ்வராஹா

குத்ஸ்யாஹா ஸ்யுஹு குபரீக்ஷகா ஹி மணயோ யைரர்கதஹ பதிதாஹா

 பொருள்

சீடர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும், புகழ்மிகு கற்றோரும் கவிஞர்களும் ஒரு நாட்டில் வறுமையில் வாடினால், ஏழ்மையில் உழன்றால், அந்த நாட்டு மன்னனே முட்டாள், உணர்ச்சியற்ற ஜடம்தான்;

பணமே இல்லாத போதும் கற்றோரும் அறிவாளிகளும் பெரியோரே, புகழுடையோரே. திறமையற்ற ஒருவன் ரத்தினக் கல்லுக்கு மட்டமாக விலையை மதிப்பிட்டால் அது ரத்தினத்தின்   பிழையன்று; பொற்கொல்லனின் பிழையே!

xxxx

குறள் 834835 

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்

பேதையின் பேதையார் இல்- 834 

நூல்களைக் கற்றும், அதிலுள்ள விஷயங்களை அறிந்தும், அதைப் பிறருக்கு எடுத்துரைத்தும் தான் மட்டும் பின்பற்றாத  முட்டாள் போல வேறு முட்டாள் உலகில் இல்லை. 

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்

தான் புக்கழுந்தும் அளறு-835 

ஏழு பிறவிகளில் செய்யும் தவறுகளைச் செய்தால் கிடைக்கும் நரகத்தை, முட்டாளானவன் ஒரு பிறவியிலேயே செய்ய வல்லவன். 

உண்மை வித்துவான்களை  நீ உல்லிங்கனஞ் செய்யேல்

எண் மையதன்னார்க்குன் இருநிதியம் — நண்ணு மதைக்

கண்டுன் பாற் சேரார் கரியையொரு தாமரை நூற் 

கொண்டே கட்டலாகுமோ கூறு –15

சம்ஸ்க்ருத ஸ்லோகத்துக்கும் இந்தப்பாடலுக்கும் பொருத்தமில்லை

–சுபம்–

Tags- நான்கு மொழிகளில், பர்த்ருஹரி, நீதிசதகம் , Nitisataka, Part 5, Bhartruhari

15 மூலிகைகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.12,659)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,659

Date uploaded in London – –  –  31 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

தமிழ் மொழியை வளர்ப்போம் 3102023 –Part 8 (Post No.12,659)

ஒவ்வொரு மூலிகைக்கும் உள்ள  வெவ்வேறு மாற்றுப்பெயர்களையும் 1935ம் ஆண்டு ஆனந்த விகடன் அகராதியில் காணலாம். நீங்கள் மூலிகைப் பிரியராக இருந்தால் பதினைந்து மூலிகைகளையும்  கண்டுபிடித்துவிடுவீர்கள்

This is Part 8

தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியர்களின் இரு கண்கள் என்பதால் எல்லா தமிழ் அகராதிகளிலும் அதிகமான ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கும் என்பதை நினைவிற்கொண்டு கட்டங்களைப் பூர்த்தி செய்யுங்கள். பிளஸ் + + + + அடையாளம் , அத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.

அக் + + + + + – சேம்பு

அக் + +  – நெருஞ்சி ,  நெருஞ்சில்

அக் + + + + + +  – சாமைப்பயிர்

அக் + + + + + + –  குங்கும மரம், குசும மரம், மஞ்சள்

அக் + + + + + +  – கோங்க மரம், , சமியாமை

அக்  + + + + +  – காட்டுப்பலா

அக்  + + +   – கடுக்காய்

அக்  + + + – தேற்றாங்கொட்டை , தேற்றாமரம்

அங்   + + – கற்றாழை

அங்   + + + + +  –  குறிஞ்சா

அங்   + + +  – நன்னாரி, கரும்பு

அங்+ + + – வாழை

அங்   + + + + +  – கொள்ளுப்பூண்டு

அங்  + + +  – குப்பைமேனி

அங்  + + +  – அழிஞ்சில் மரம்

XXXXXXXXXX

விடைகள்

அக்கிராந்தம் – சேம்பு

அக்கிலு – நெருஞ்சி ,  நெருஞ்சில்

அக்கினி கர்ப்பை – சாமைப்பயிர்

அக்கினிசேகரம் –  குங்கும மரம், குசும மரம், மஞ்சள்

அக்கினிமந்தம் – கோங்க மரம், , சமியாமை

அக்கினிமரம் – காட்டுப்பலா

அக்கோடம்  – கடுக்காய்

அக்கோலம் – தேற்றாங்கொட்டை , தேற்றாமரம்

அங்கணி – கற்றாழை

அங்கரவல்லி –  குறிஞ்சா

அங்காரிகை – நன்னாரி, கரும்பு

அங்கிஷம் – வாழை

அங்குசபிஷாரி – கொள்ளுப்பூண்டு

அங்குரம் – குப்பைமேனி

அங்கோலம் – அழிஞ்சில் மரம்

–SUBHAM—-

TAGS– 15 மூலிகை, தமிழ் மொழிவளர்ப்போம் , Part 8

மா ஆனந்தமயி பொன்மொழிகள்; நவம்பர் 2023 காலண்டர் (Post No.12,658)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,658

Date uploaded in London – –  –  31 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

நவம்பர் மாத பண்டிகைகள் – 12 –தீபாவளி; 13- கந்தசஷ்டி விரதம் ஆரம்பம் ; 18- சூர சம்ஹாரம் , 23- சத்திய சாயிபாபா பிறந்த தினம்; 26- திருக்கார்த்திகை;

நவம்பர் மாத முகூர்த்த தினங்கள் –  16, 19, 29.

அமாவாசை -நவம்பர்13; பெளர்ணமி – 27; ஏகாதசி -8, 23

(Sri Anandamayi Ma April 30, 1896 – August 27, 1982)

ஸ்ரீ ஆனந்தமயி  மா — பிறப்பு ஏப்ரல் 30, 1896 – சமாதி ஆகஸ்ட் 27, 1982

xxxxx

நவம்பர் 1 புதன் கிழமை

இன்பமும் துன்பமும் கால எல்லைக்குட்பட்டவை. அவை நீண்ட காலம் இராது ஆகையால் ஒருவர் அதனை எண்ணி கலங்க வேண்டியது இல்லை  கடவுள் பற்று அதிகரிக்க ,அதிகரிக்க  அடிமனத்திலிருந்து பிரார்த்தனையும் அதிகரிக்கும் . முதிர்ச்சி ஏற்படுகையில் , அந்த சக்தி உங்கள் வசப்பட்டுவிடும்.

xxx

நவம்பர் 2 வியாழக் கிழமை

ஆன்மீக வழியில் செல்லும்போது  உள்ளுக்குள்ளே சில அனுபவங்கள் தோன்றாமல் , அதில் நீடித்து இருக்கமுடியாது.

Xxxx 

நவம்பர் 3 வெள்ளிக் கிழமை

இங்கு தோன்றுவன எல்லாம் இறைவனின் தெய்வீக சக்தியின் காட்சிதான் — கடவுளே ஆக்க சக்திதான்.

Xxxx 

நவம்பர் 4 சனிக் கிழமை

இறைவன்தான் நம் காதலன் என்பதை மறக்கும்போது , ஏனைய புலன் இன்பத்தில் நாட்டம் ஏற்படுகிறது

xxxxx 

நவம்பர் 5 ஞாயிற்றுக் கிழமை

துன்பத்தை நீக்கும் ராம நாமத்தில்  அராம  ( அமைதியும் பதற்றமில்லாமையும்)  இருக்கிறது. ராமா இல்லாத இடத்தில் வ்யராம (நோயும், பதற்றமும் ) இருக்கிறது.

Xxxx

நவம்பர் 6 திங்கட் கிழமை

நமக்கு நாமே ஆத்ம சோதனை செய்துகொண்டால் , ஒரு விஷயத்தை அறியமுடியும்; பறவைகளும் மிருகங்களும் கூடத்தான் உண்டு களிக்கின்றன.குடும்ப வாழ்வு நடத்துகின்றன. ஆனால் மனிதன் மட்டுமே ஆத்மாவின் உண்மை நிலையை அறிய முடியும்.இந்த வாய்ப்பினை மனிதர்கள் நழுவ விடக்கூடாது.

xxxx

நவம்பர் 7 செவ்வாய்க் கிழமை

நாம் யார் என்பதை ஒவ்வொரு நாளும் சில வினாடிகளாவது சிந்தித்துப் பார்க்கவேண்டும்.மீண்டும் மீண்டும் ரிட்டர்ன் டிக்கெட் Return ticket வாங்கிக் கொண்டே இருக்கக் கூடாது; அதாவது ஜனன- மரணம் ; உண்மையில் இது நம்முடையது அல்ல ;அதை முதலில் உணரவேண்டும்.

Xxxx

நவம்பர் 8 புதன் கிழமை

பூமிக்கு அடியில் விலையுயர்ந்த ரத்தினங்கள் புதைந்து கிடக்கின்றன. ஆனாலும் கடின உழைப்பின் மூலமே அவைகளை அடைய முடியும்.

xxx

நவம்பர் 9 வியாழக் கிழமை

நீங்கள் எவ்வளவு பலவீனன் ஆனாலும்  எந்த அளவுக்கு உங்களால் அதிகமாக இயலுமோ அந்த அளவுக்கு முயற்சி செய்யுங்கள். மிச்சத்தை இறைவன் செய்துகொடுப்பான்.

Xxxxx

நவம்பர் 10 வெள்ளிக் கிழமை

இறைவனிடம் எந்த நிபந்தனையும் போடாது (பரிபூரண)  சரணாகதி அடைவதே மனிதனுக்கு ஆறுதல் தரும் அருமருந்து ஆகும்.

xxx

நவம்பர் 11 சனிக் கிழமை

இறைவனின் நாமமும், அவனும் ஒன்றே; அவன்தான் நாமம்.

Xxxx

நவம்பர் 12 ஞாயிற்றுக் கிழமை

ஒருவர் இஷ்ட தேவதையை அதிகமாக நினைக்க, நினைக்க,  அந்த அளவுக்கு தெய்வ நம்பிக்கையும் அதிகரிக்கும்.

xxxxx

நவம்பர் 13 திங்கட் கிழமை

உலக ஆசாபாசங்களுக்கும் மேலே சென்றால்தான் மன அமைதி கிட்டும்.

xxxx

நவம்பர் 14  செவ்வாய்க் கிழமை

மனிதன் என்பது ஆத்மா ; ஆனால் அதை அவன் தன்னுடனும், தன் பெயருடனும் தவறாக தொடர்புபடுத்திக் கொள்கிறான்.

xxxx

நவம்பர் 15 புதன் கிழமை

உங்களுடைய துணைவரையும் குழந்தைகளையும் தெய்வீக அம்சம் கொண்டவர்களாக நினைத்து செயல்படுங்கள் ; உங்கள் மனதை அங்குமிங்கும் சிதறவிடாதீர்கள்; ஒரே குறிக்கோளை வைத்துக்கொள்ளுங்கள்.

xxxx

நவம்பர் 16 வியாழக் கிழமை

ஒன்று இருக்கும் இடத்தில் இரண்டைக் காண்பதே எல்லாத்  துன்பங்களுக்கும் காரணம். இரண்டாகக் காண்பது வேதனை . ஒன்றாகக் காண்பதே காட்சி; அதை உணராத வரை  ஜனன- மரண சுழற்சி நீடிக்கும் .

xxxx

நவம்பர் 17 வெள்ளிக் கிழமை

நீங்கள் யாருடன் எல்லாம் தொடர்பில் இருக்கிறீர்களோ அவர்களிடத்தில் சமமான அன்பைக் செலுத்துங்கள்.அப்போதுதான் நான் என்பதற்கும் நீங்கள் என்பதற்கும் நடுவில்  உள்ள இடைவெளி  நிரப்பப்படும் . எல்லா சமய வழிபாடும் அதே லட்சியத்தை காட்டுகிறது.

xxxxx

நவம்பர் 18 சனிக் கிழமை

புலன் இன்பம் என்பது மெதுவாகக் கொல்லும் விஷம்; அது மரணத்தை நோக்கி நம்மைச் செல்ல வைக்கிறது ; ஆகையால் மரணமில்லாப்பெரு வாழ்வு நோக்கிச் செல்லும் வழியில் செல்லுவது மனிதனின் கடமை .

XXXXXX

நவம்பர் 19 ஞாயிற்றுக் கிழமை

நான் யார்? என்று சிந்த்தித்துப் பாருங்கள்; உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் ; விடை கிடைக்கும் .

XXXX

நவம்பர் 20 திங்கட் கிழமை

ஒரு பெரிய மரத்தைப் பாருங்கள் அதிலிருந்து வரும் விதைகள் மேலும் பல  மரங்களை உருவாக்குகின்றன. ஆனால் அவைகளில் தோன்றும் பழங்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை .ஆயினும் அவற்றில் துடிக்கும் உயிர் சக்தி ஒன்றுதான்; ஆகையால் ஒரே ஆத்மாதான் எங்கும் நிறைந்துள்ளது.

XXXX

நவம்பர் 21  செவ்வாய்க் கிழமை

ஒவ்வொரு நாளும் நல்ல எண்ணம்,  பேரன்புடன் உண்மையாக உழையுங்கள்;.உங்களை படிப்படியாக முன்னேற்றுங்கள் ; எல்லாப் பணிகளிலும் தெய்வீக இருக்கட்டும்.அப்போது உங்கள் பணியும் சிறக்கும்

xxxx

நவம்பர் 22 புதன் கிழமை

ஒரு தாயார் தன்  மகனை எப்படி பாலூட்டி, சீராட்டி வளர்த்து அவனை எல்லாப் புகழோடும் விளங்கும் இளைஞன் ஆக்குகிறாளோ அவ்வாறே தெய்வீக அன்னையும் ஒருவனுடைய ஆன்மீக வாழ்வில் ஒருவனை முழு வளர்ச்சி அடைய வைக்கிறாள் .

XXXX

நவம்பர் 23 வியாழக் கிழமை

துறவு என்பது பொருட்களைத் துறப்பது அல்ல; வேறு வேறு என்ற வேற்றுமையை/ பிரிவினையைத்  துறப்பதே துறவு

xxx

நவம்பர் 24 வெள்ளிக் கிழமை

உலக பாசங்களால் மனிதனின் மனது களங்கமுற்றுள்ளது ஆயினும் கவலை வேண்டாம்.தூய்மையுடனும், பேரார்வத்தோடும் , நம்பிக்கையுடனும் முயன்றால் உள்ளே உறையும் ஆன்மாவை அறிவீர்கள் .

xxx

நவம்பர் 25 சனிக் கிழமை

வெளியே உள்ள, அதாவது மனைவி, மக்கள், பணம், புகழ் இவற்றால் கிடைக்கும் இன்பம் நீடித்து நிற்காது ; ஆனால் எங்கும் நிறைந்த, உன்னுள்ளேயும் உறையும் இறைவனிடத்தில் இன்பம் பெற்றால் , அது உண்மையான இன்பமாக அமையும் .

xxxxx

நவம்பர் 26 ஞாயிற்றுக் கிழமை

எல்லோரும் அமைதி பெறத் துடிக்கிறார்கள். ஆனால் இறைவன் என்பவன் உள்ளுக்குள்ளே இருக்கிறான் என்பதை அறியும் வரை பரி பூரண அமைதி கிட்டாது என்பது சிலருக்கே தெரிகிறது.

xxx

நவம்பர் 27 திங்கட் கிழமை

மனிதனின் கடமை சத்திய வேட்கையுடன் இருப்பதும், சத்தியத்தைக் கடைப்பிடிப்பதும் ஆகும் ‘உண்மை’-யில் நங்கூரம் பாய்ச்சி நிற்க இயன்ற   அளவுக்கு முயலுங்கள் ; தனிமையான இடத்தில் இருந்து தியானம் செய்யுங்கள் .

xxxx

நவம்பர் 28 செவ்வாய்க் கிழமை

எல்லாம் ஜோதியிலிருந்து தோன்றுகிறது; எல்லாம் ஜோதிமயம் ; நீங்களும் கூடத்தான்.

xxxx

நவம்பர் 29 புதன் கிழமை

நீங்கள் மிக உயர்ந்த லட்சியத்துக்குக் குறைவான எதையும் நாடாதீர்கள்.

xxxx

நவம்பர் 30 வியாழக் கிழமை

நான் பிறந்த போதும் இப்போதும் ஒரே மாதிரிதான் இருக்கிறேன்;முடிவே இல்லாத மண்டபத்தில் நடக்கும் படைப்பு  நடனம் மாறிக்கொண்டே இருந்தாலும் , நான் அப்படியே சாஸ்வதமாகவே இருப்பேன் (வெளியில் நடக்கும் மாற்றங்கள் என்னைப் பாதிப்பது இல்லை.

—-SUBHAM—-

TAGS- மா ஆனந்தமயி, பொன்மொழிகள், நவம்பர் 2023,  காலண்டர்

வளமை குன்றா வாழ்வு தரும் அன்னாபிஷேக தரிசனம்!- Part 2 (Post 12,656)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,656

Date uploaded in London –  31 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

வளமை குன்றா வாழ்வு தரும் அன்னாபிஷேக தரிசனம்!

இரண்டாம் பகுதி

ச.நாகராஜன்

அப்பரின் அருள் வாக்கு

தலம் தலமாக சிவபிரானை தரிசித்து வந்த அப்பர்பெருமான் தில்லைக்கு வந்தார். அங்கு அவர் பெற்ற தரிசனம் அவருக்கு ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது.

அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்

பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை

என்னம் பாலிக்கும் ஆறு கண்டு இன்புற

இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே

என்று அவர் பாடி அருள்கிறார்.

இங்குள்ள ஸ்படிக லிங்கத்திற்கு தினம் தோறும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

ஆக தினம் தோறும் அன்னாபிஷேகம் செய்யும் பெருமையைப் பெறுகிறது தில்லைத் திருத்தலம்!

கண்ணனின் அருள் வாக்கு

கண்ணபிரான் கீதையில் (அத் 3 – 14) அன்னாத் பவந்தி பூதானி என்று கூறுகிறார். அன்னத்தினாலேயே பௌதிக உடல்கள் வளர்கின்றன என்பது இதன் பொருள்.

அறநெறிகளை  அறிந்து உணர்ந்த நமது பழம் பெரும் மன்னர்கள் ஆங்காங்கே அன்ன சத்திரங்களை அமைத்து பசிப்பிணி போக்கியதை நமது ஏடுகள் எடுத்துரைக்கின்றன.

நமது ஆலயங்களிலும் பண்டு தொட்டு இன்று வரை அன்னதானம் சிறப்பாக நடை பெற்று வருவது கண்கூடு.

ஆழாக்கு அரிசி அன்ன தானம்; போய் வருகிற வரைக்கும் புண்ணிய தானம் என்பது தமிழ்ப் பழமொழி.

இரு கதைகள்

அன்னதானத்தின் சிறப்பை விளக்கும் பல கதைகள் நமது இதிஹாஸ புராணங்களில் உண்டு. கர்ணபரம்பரைக் கதைகளும் பல உள்ளன.

இரு சம்பவங்களை இங்கு எடுத்துக் காட்டாகச் சொல்லலாம்.

இளம் வயது குருகுலத் தோழர்களாக விளங்கியவர்கள் ஏழை குசேலரும் மன்னர் பரம்பரையைச் சார்ந்த கண்ணபிரானும்.

குருகுல வாசம் முடிந்த பின்னர் ஏழை குசேலர் வறுமையால் வாடலானார். ஆனால் கண்ணனோ மன்னனாக ஆகி அரசாட்சி செய்ய ஆரம்பித்தான்.

ஒரு நாள் ஒரு சிறு மூட்டையில் அவலை எடுத்துக் கொண்டு சென்று தன் பால்ய கால நண்பனைப் பார்க்கச் சென்றார் குசேலர்.

குசேலர் அன்புடன் கொடுத்த ஒரு பிடி அவலை ஆசையுடன் ஏற்றுக் கொண்டு உண்டான் கண்ணன். பலன்? குசேலரின் ஏழைக் குடில் மாட மாளிகை கூட கோபுரம் கொண்ட பெரும் வீடாக ஆகியது.

இதுவே அன்ன தான பலன்.

அடுத்தது கர்ணனைப் பற்றிய சம்பவம்.

பெரும் தான வீரனாக விளங்கிய கர்ணன் இறந்த பின் சொர்க்கத்திற்குச் சென்றான். அங்கு அவனுக்கு பசி தீரவில்லை.

அதன் காரணத்தைக் கேட்ட போது கண்ணபிரான் பதிலாகக் கூறியது : “நீ அனைத்து தானங்களையும் செய்தாலும் அன்னதானம் செய்யவில்லை. உனது விரலை வாயில் வைத்துக் கொள்”

உடனே கர்ணன் விரலை வாயில் வைக்க அவனது பசி தீர்ந்தது.

வியப்புடன் காரணத்தைக் கேட்க கண்ணன் கூறினான்: “ஒரு நாள் ஏழை ஒருவன் பசியினால் வாடி உன்னிடம் வந்து அன்ன சத்திரம் எங்கே இருக்கிறது என்று கேட்க நீ உன் விரலால் அதோ அங்கே இருக்கிறது என்று அன்ன சத்திரம் இருக்கும் திசையை நோக்கி உன் விரலைக் காட்டினாய். அந்த நற்பயனால் உனக்கு அந்த விரலை வாயிலே இட்டவுடன் உன் பசி போயிற்று. அன்ன தானத்தின் மகிமை அப்படிப்பட்டது!” என்று பதில் கூறினான்.

இன்று அன்னதானம் உலகின் இன்றியமையாத தேவையாகி விட்டது.

ஏனெனில் வறுமைக்கோட்டிற்கு கீழே வாடி வதங்குவோரின் எண்ணிக்கை 53 நாடுகளில்  மட்டும் முப்பத்திஐந்து கோடி என்ற எண்ணிக்கையைத் தாண்டி விட்டது.

ஆகவே இந்த ஐப்பசி பௌர்ணமி நன்னாளில் உலகில் உள்ள  அனைவருக்கும் அன்னம் கிடைக்க நமது சிவாலயங்களில் வேண்டிக் கொள்வோம்..

தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவன்;

அனைவருக்கும் அன்னம் தந்து அவன் அருள் பாலிப்பானாக!

***

November 2023 Calendar- Ma Ananda Mayee Quotes (Post No.12,655)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,655

Date uploaded in London – –  –  30 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

November Festivals – 12 –Deepavali/ Diwali; 13- Kantha Sashti Vrata begins;  18- Skanda Vrat ends , 23- Sathya Sai Baba Birth Day; 26- Kartikai Lamp Festival in Tamil Nadu;

November Auspicious Days –  16, 19, 29.

New moon day -13; Full moon day – 27; Ekadasi Hindu Fasting Days -8, 23

(Quotations of Sri Anandamayi Ma; April 30, 1896 – August 27, 1982)

November 1 Wednesday

Joys and sorrows are time-born and cannot last. Therefore, do not be perturbed by these. The greater the difficulties and obstructions, the more intense will be your endeavour to cling to His feet and the more will your prayer increase from within. And when the time is ripe, you will gain mastery over this power.

xxxx

November 2 Thursday

In RAMA (GOD), who is the dispeller of all sorrow, there is arama — rest and ease; where RAMA is not, there is vyarama — discomfort and disease

xxxx

November 3 Friday

It is impossible to continue on the spiritual path without some inner experience occurring.

xxxx

November 4 Saturday

The whole of manifestation is but a display of GOD’s divine power — GOD Itself as vibhuti (creative power).

xxxx

November 5 Sunday

Forgetting that GOD is the sole Beloved, one has come to love sense objects.

xxxx

November 6 Monday

If you examine yourself, you will see. There is beauty in the birds and in the animals. They too eat and drink like us, mate and multiply; but there is this difference: we can realize our true nature, the Atman. Having been born as human beings, we must not waste this opportunity.

xxxx

November 7 Tuesday

At least for a few seconds every day, we must enquire as to who we are. It is no use taking a return ticket over and over again. From birth to death, and death to birth is ‘samsara.’ But really we have no birth and death. We must realize that.

xxxx

November 8 Wednesday

Precious gems are profoundly buried in the earth and can only be extracted at the expense of great labour.

xxxx

November 9 Thursday

Exert yourself to the limits of your power, however feeble. He is there to fulfill what has been left undone.

xxxx

November 10 Friday

Unconditional surrender to Him is the best solace for man.

xxxx

November 11 Saturday

God’s name is He Himself – The name and the named are identical.

xxxx

November 12 Sunday

The more one thinks of one’s Ishta (beloved Deity), the firmer will one’s faith in Him grow.

xxxx

November 13 Monday

You will have peace only if you rise above worldly desires.

xxx

November 14 Tuesday

There is nothing in this world, yet everyone is madly pursuing this nothing – some more, some less.

xxxx

November 15 Wednesday

Man is no other than the Self; but he wrongly thinks of himself as a separate individual centered in his body and identified by a particular name.

xxxx

November 16 Thursday

Love and serve your consort and children as Divine manifestations. Perform all work as God’s service. Do not allow your mind to wander here and there. Endeavor to make it one pointed. Have one single end in view.

Xxxx

November 17 Friday

All sorrow is due to the fact that many are seen where there is only one. Duality is pain. So long as man does not wake up to his identity with the one, the round of birth and death continues for him.

xxxx

November 18 Saturday

Try to treat with equal love all the people with whom you have relations. Thus the abyss between ‘myself’ and ‘yourself’ will be filled in, which is the goal of all religious worship.

xxxx

November 19 Sunday

Ever afterward, though the dance of creation change around me in the hall of eternity, I shall be the same.

xxxx

November 20 Monday

Do not set your hopes on anything less than supreme beatitude.

xxxx

November 21 Tuesday

Everything originates from light and everything in its essence is light, even You.

 xxx

November 22 Wednesday

The quest after truth and to be Truthful is a human beings duty. Do your utmost to become anchored in Truth and spend much time in the contemplation of the Lord in a quiet secluded place.

xxxx

November 23 Thursday

The life in the world is to be on the way to Self- Realization.

xxxx

November 24 Friday

Everyone thirsts for peace, but few people understand that perfect peace cannot be obtained as long as the inner soul is not filled with the presence of God.

Xxxx

November 25 Saturday

Man’s mind is clouded by worldly ties. But there is no cause for despair. With purity, unflinching faith and burning eagerness go ahead and you will realize your true Self.

xxxx

November 26 Sunday

Happiness that depends on anything outside of you, be it a wife, a child, money, fame, friends cannot last. But if you find happiness in God who is everywhere, all pervading, who is your own self, that is real happiness.

Xxx

November 27 Monday

Renunciation is the giving up of the idea of separateness, not the giving up of things.

xxxx

November 28  Tuesday

With earnestness, love and goodwill carry out life’s everyday duties and try to elevate yourself step by step. In all human activities let there be a live contact with the Divine and you will not have to leave off anything. Your work will then be done well and you will be on the right track to find the Master.

xxxx

November 29 Wednesday

Just as a mother nourishes her child with all possible care and affection and makes him grow up into a healthy boy and a handsome youth, so you will find the subtle touches of the Divine Mother shaping your inner life and making you reach your full height and stature.

xxxx

November 30 Thursday

Sense enjoyment acts like slow poison. You are driven thereby towards death. Therefore, it is man’s duty as a human being to get into the current that leads to immortality.

–subham—

Tags- November 2023, calendar, Ma Anada mayee, quotations

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – 4 (Post No.12,654)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,654

Date uploaded in London – –  –  30 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – 4

நான்கு மொழிகளில் பர்த்ருஹரியின் நீதிசதகம் – 4

பர்த்ருஹரி ஸ்லோகம் 10

Slokam 10

शिरः शार्वं स्वर्गात्पशुपतिशिरस्तः क्षितिधरं

म्हीध्रादुत्तुङ्गादवनिम् अवनेश्चापि जलधिम् ।

अधो‌உधो गङ्गेयं पदम् उपगता स्तोकम्

अथवाविवेकभ्रष्टानां भवति विनिपातः शतमुखः ॥ 1.10 ॥

சிரஹ சார்வம் ஸ்வர்காத் பசுபதி சிரஸ்தஹ க்ஷிதிதரம்

மஹீத்ராத்துங்காத் அவனேஸ்சாபி ஜலதிம்

அதோ அதோ கங்கா ஸேயம் பதம் உபகதா ஸ்தோயம்

விவேக ப்ரஷ்டானாம் பவதி விநிபாதஹ சதமுகஹ 1-10

கங்கை நதி ஆகாயத்திலிருந்து சிவன் தலையில் விழுந்து, பின்னர் மலையில் விழுந்து, பூமியில் விழுகிறத்து. கடலில் கலப்பதற்காக கங்கை நதி மேலும் மேலும் இறங்கி வருகிறது; அத்தோடு அதன் பெயர் மறைந்து ‘கடல்’ என்று ஆகிவிடும். இது போலவே ஒருவர் விவேகத்தை இழக்க, இழக்க நூறு வழிகளில்  கீழே விழுவார்.(1-10)

அதாவது புத்தி தடுமாறினால் 100 வழிகளில் வீழ்ச்சி நிச்சயம் என்பது பர்த்ருஹரியின் கூற்று.

வள்ளுவன் மனம் போன போக்கில் போகாதவனே அறிவாளி என்பார்:-

சென்ற இடத்தில் செலவிடா தீதொரீ இ

நன்றின் பால் உய்ப்பதறிவு – 422

பொருள்

மனம் போன போக்கில் போகாமல் தீயதிலிருந்து விலகி நின்று, நல்ல விஷயங்களில்  ஈடுபடுவதே அறிவு/ விவேகம்.

ஆகாயகங்கை அரண் முடியில் வந்ததன்பின்

வாகா யிமயமலையிடத்தில் — ஓகோவித் 

தொல்லுலகில் பாதலத்தில் தோய்ந்தது தம் வாய்ப்பிழந்தோர்

பல்விதமாம் பாடுபடுவர் -10

xxxxx

Slokam 11

மூர்க்கர்கள் முட்டாள்கள்முட்டாள்கள் மூர்க்கர்கள். 

பர்த்ருஹரி சொல்கிறார்—
शक्यो वारयितुं जलेन हुतभुक्च्छत्रेण सूर्यातपो
नागेन्द्रो निशिताग्कुशेन समदो दण्डेन गोगर्दभौ ।
व्याधिर्भेषजसङ्ग्रहैश्च विविधैर्मन्त्रप्रयोगैर्विषं
सर्वस्यौषधम् अस्ति शास्त्रविहितं मूर्खस्य नस्त्यौषधिम् ॥ 1.11 ॥ 

சக்யோ வாரயிதும் ஜலேன ஹுதபுக் ச்சத்ரேண சூர்யாதபோ

நாகேந்த்ரோ நிசிதாங்குசேனஸம்தா தண்டேன கோ கர்தபௌ

வ்யாதிர் பேஷஜ ஸங்க்ரஹைர்ஸ்ச விவிதைர் மந்த்ரப் ப்ரயோகைர் விஷம்

ஸர்வஸ்யௌஷதம் அஸ்தி சாஸ்த்ரவிஹிதம் மூர்க்கஸ்ய

நஸ்த்யௌஷதிம் 1-11

shakyo vaarayitum jalena hutabhuk chchhatrena sooryaatapo

Naagendro nishitaankushena samado dandena gourgardabhah

Vyaadhirbheshajasangrahaishcha vividhaih mantraprayogairvisham

Sarvasyaushadhamasti shaastravihitam moorkhasya naastyaushadham 1.11

Fire can be put out by water. An umbrella can be used as protection from the sun. The rutty elephant can be controlled with an ankush (a weapon with a sharp hook at one end used by a mahout). A cow or donkey can be herded with a stick. A disease can be treated with medicines. Poison can be counteracted by chanting mantras. There is a remedy for everything prescribed in the shaastras. But there is no remedy for the fool.-11

பொருள்

நெருப்பை நீரால் அணைக்கலாம்;

சூரிய ஒளியை குடையால் மறைக்கலாம்;

அங்குசத்தால் யானையை அடக்கலாம்;

மாடு, கழுதையை குச்சியால் அடக்கலாம்;

நோய்களை மருந்தால் தீர்க்கலாம்;

விஷக்கடிகளை மந்திரம் மூலம் நீக்கலாம்;

இவை எல்லாவற்ரையும் நூல்கள் செப்புகின்றன.

ஆனால் முட்டாள்தனத்துக்கு மருந்தே இல்லை.

அங்கிக்குத் தண்ணீர் அருக்கற்குக் கைக்குடையாம்

பொங்குகரிக் கங்குசமாம் போரேற்றுக் – கிங்கொருகோல்

நோயரவுக் கோடதியாம் நொய்யமன  மூர்க்கரை நாம்

தூய்மை செயற்கில்லை மருந்து –11

Xxxx

Slokam 12

साहित्यसङ्गीतकलाविहीनः
साक्षात्पशुः पुच्छविषाणहीनः ।
तृणं न खादन्नपि जीवमानस्
तद्भागधेयं परमं पशूनाम् ॥ 1.12 ॥

ஸாஹித்ய சங்கீத கலா விஹீனஹ

ஸாக்ஷஆ த் பசூ ஹு புச்சவிஷாண ஹீனஹ 

த்ருணம் ந காதன்னபி ஜீவமானம்

தத் பாகதேயம் பரமம் பசூ னாம் –12

இலக்கியத்தையும் இசையையும் விரும்பாதவன் மிருகம்தான்;

அவனுக்கு கொம்பும் வாலும் இல்லை;

புல்லைத் தின்னாவிட்டாலும் அவனுக்கும் மாட்டுக்கும்

வித்தியாசம் இல்லை.

மணியருமை யோரான் மதிப்பைக் குறைத்தால்

மணிக்குக்குறைவு வருமோ-  அணி பொருள் யாப்

பாசிரியன் தான் வருந்த யார் மதியா னேனுமந்த

ஆசிரியற்  கேது குறையாம் – 12

(தமிழ்ப் பாடல் இங்குள்ள சம்ஸ்க்ருத ஸ்லோக த்தின்  மொழி பெயர்ப்பு அல்ல.)

-FOR SLOKA TEN GO TO SWAMIINDOLOGY.BLOGSPOT.COM

–subham—

Bhartruhari’s ,Nitisataka, in Tamil, Hindi, English and Sanskrit , part- 4,

திரவுபதி அம்மன் கோவில்- இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற ……..Part 43 (Post No.12,653)

Temple at Pandiruppu

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,653

Date uploaded in London – –  –  30 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 43

93. முத்துமாரி அம்மன் கோவில் , கொழும்பு

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில்  சுமார் 170 வருடங்களாக முத்துமாரி அம்மன் கோவில், இயங்கி வருகிறது  தமிழ்நாட்டிலுள்ள கோவில்பட்டி தாலுகா,  எருக்கன்குடி அம்மன் கோவில் நிலத்தின் மண்ணை  இங்கு கொண்டு வந்து  கோவில் கட்டினர்; சைவப்பெரியார் காளியன் செட்டி குப்பமுத்து என்பவர் முயற்சியில் கோவில் நிறுவப்பட்டது . அரச சுவடிகள் திணைக்கள ஆவணங்கள் இதைத் தெரிவிக்கின்றன..திருவிளங்க நகரத்தார் எனப்படும் வணிக வைசிக செட்டியார் சமூகத்தவர்களின் பரிபாலனத்தின் கீழ் 1864 ஆம் ஆண்டு முதல் இவ்வாலயம் இயங்கி வருகின்றது. 1954 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

1963 ஆம் ஆண்டு முதல் தைப்பூசத் திருவிழாவை ஆடிவேல் போன்று ஐந்து தினங்கள் கொண்டாடி வந்தனர். அம்பிகை ரதத்தில் எழுந்தருளி கப்பிகாவத்தை சிவன் ஆலயத்தில் மூன்று மூன்று தினங்கள் எழுந்தருளி மீண்டும் கொட்டாஞ்சேனைப் பதியை வந்தடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து 1967 முதல் மாசிமக உற்சவத்தையும் சிறப்பாக ஆரம்பித்துள்ளனர்.

அண்மையில் புதிய கோபுரங்கள் கட்டப்பட்டு 2022ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

கருவறையில் முத்துமாரி அம்மனும் பிரகாரங்களில் விநாயகர், விஷ்ணு, நடராஜர், கண்ணகை அம்மன், சிவன், பார்வதி, சுப்ரமண்யர் சந்நிதிகளும் உள்ளன . ரங்கநாத மூர்த்தியின் சயன கோல சுதை உருவத்தையும் தரிசிக்கலாம் இவை தவிர  நாகர், பைரவர் , நவக்கிரக தேவைதைகளும் இருக்கிறார்கள்.

ஆகம விதிகளின்படி நித்திய பூஜைகள் நடைபெறுகின்றன. தினமும் பக்தர்கள் வந்தாலும் வெள்ளிக்கிழமைகளில்  மிகப்பெரிய கூட்டம் சேருகிறது.

XXXXX

94.மட்டக்களப்பு திரவுபதி அம்மன் கோவில்

பாண்டவர்களுடன் தொடர்புடைய கதைகள் இலங்கையிலும்  பிரபலமாகியுள்ளன .

பஞ்ச கன்யா என்று  இந்துக்கள் வழிபடும் பத்தினிகளில் திரௌபதியும் ஒருவர். இந்துக்கள் தினமும் காலைல சொல்லும் பிராத ஸ்மரண ஸ்லோகத்தில்

அஹல்யா, த்ரௌபதீ,சீதா,தாரா மண்டோதரி ததா

பஞ்சகன்யா ஸ்மரேன் நித்யம் சர்வ பாப விநாசனம்  –

என்று சொல்லி வழிபடுகின்றனர் . இலங்கையில் திரௌபதை அம்மன் வழிபாடு கிழக்கு இலங்கையில் மட்டக்களப்பு வட்டாரத்தில் பரவலாகக் காணப்படுகிறது . இதை கொங்கு நாட்டிலிருந்து வந்த தாத்தன் என்ற முனிவர் அறிமுகப்படுத்தினார். முதலில் மட்டக்களப்பு வட்டார பாண்டிருப்பு கிராமத்தில் த்ரௌபதீ வழிபாடு துவங்கியது. இப்போது ஆரையம்பதி, பழுகாமம், மட்டக்குழி , புதூர், புளியந்தீவு  ஆகிய இடங்களில் ஆலயங்கள் இருக்கின்றன . இவை தவிர புத்தளம் மாவட்டத்திலுள்ள உடப்பு திரவுபதி அம்மன் கோவிலு ம் பிரசித்திபெற்ற  ஆலயங்களில்  ஒன்றாகும்.

கல் முனைக்கு வடக்கில்  பாண்டிருப்பு கிராமம் இருக்கிறது ;தாதன் என்ற முனிவர் வந்து இறங்கியதை அறிந்து , எதிர்மன்ன சிங்கம் என்ற குறுநில மன்னர் அவரைச் சந்தித்தார். மஹாபாரதக் கதையை அவர் சொல்லக்கேட்டு, அவர் சொற்படி , கொக்கட்டிமரம் சூழ்ந்த சோலையில் அம்மனுக்கு ஆலயத்தை எழுப்பினார். ஆகஸ்ட் மாதத்தில் 18 நாட்களுக்கு நடக்கும் விழாவில் தீக்குழி இறங்கும் சடங்கும் உண்டு. 18 பர்வங்களின் கதை பாராயணம் செய்து முடிக்கும் கடைசி நாளில்  20 அ டி நீள தீக்குழியில் பக்தர்கள் இறங்கி நடப்பார்கள்.  பஞ்ச பாண்டவர்கள் ஐவர் மற்றும் திரவுபதி போல வேடம் தரித்த 6 பெரும் தீ மிதித்து நடந்த பின்னர் ஏனைய பக்தர்களும் தீ மிதிப்பர். கடலில் ஸ்நானம் செய்வது, தீக்குளித்தோரிடம் புனித சாம்பல் வாங்குவது ஆகியனவும் இந்த வைபவத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் ஆகும்.

மகாபாரதத்தில்  திரெளபதி தேவியே  தீ யிலிருந்து வந்ததாகவே சொல்லப்பட்டுள்ளது. அவள்  யாக குண்டத்தில் தோன்றியவள் கற்புக்கரசிகளில் அருந்ததிக்கு நிகரானவர்.

கண்டி மன்னன் விமல தரும சூரியன் 1594-1604 , இந்த தீ மிதி வைபவத்தைக் கண்டு வியந்து, கோவிலுக்கு நிலபுலங்களையும் தானம் செய்தான் இதிலிருந்து 500 ஆண்டுகளுக்கு முன்னரே கோவில் இருந்ததை அறிகிறோம்.

XXXXX

95.உடப்பு திரெளபதி அம்மன்- விஷ்ணு கோவில்

Draupadi Templt at Sri Lanka

இலங்கையின் வடமேற்கில் புத்தளம் இடம்பெறுகிறது. அந்த

மாவட்டத்தில் உள்ள சிற்றூர் உடப்பு கிராமம்; இங்கு  திரெளபதி அம்மன் ஆலயம், ஸ்ரீ வீரபத்ர காளியம்மன் கோயில், ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில், குளத்தடி ஐயனார் கோவில், கந்தசுவாமி கோவில்,  ஐயப்ப சுவாமி கோவில் ஆகிய கோவில்கள் இருக்கின்றன.

இந்த ஊரிலுள்ள திரெளபதி அம்மன் கோவிலின் சிறப்பு என்னவென்றால் மகாபாரதம் தொடர்பான வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளும் நடை பெறுவதாகும் . அத்தோடு தீ மிதிப்பு, தீக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இது ஜூலை- ஆகஸ்ட் மாதத்தில் நடக்கும் 18 நாள் உற்சவத்தின் முத்ததாய்ப்பாக அமைகிறது .

உடப்பு கிராம மக்களின் முன்னோர்கள் இந்தியாவிலிருந்து வந்தனர் . மன்னாரில் தரை இறங்கிய அவர்கள் தென் திசை நோக்கி நடந்து வந்து இந்த இடத்தில் குடியேறினர்.. இது புவனேக பாஹு மன்னனின் காலத்தில் நடந்தது.

முதலில் சந்தன மரத்தால் ஆன திரவுபதி உருவம் பூஜிக்கப்பட்டது.1907ம் ஆண்டில் அதற்குப்பதிலாக அம்மனின் கற்சிலையை பிரதிஷ்டை செய்தனர். பின்னர் மகாபாரதம் போற்றும் கிருஷ்ண பரமாத்மாவின் சிலைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று செல்லப்பா குருக்கள் ஆலோசனை வழங்கினார். 1912 முதல் கிருஷ்ணனை மூலஸ்தானத்தில் வைத்துவிட்டு திரெளபதி அம்மனை அர்த்த மண்டபத்தில் விஷேச ந்நிதியில் வைத்து வணங்கி வருகின்றனர் . அங்கே விநாயகர், முருகன் ஆகியோரும் பிரதிஷ்டை செய்யப்பட்டனர்.

ராஜ கோபுரமும், கலை வேலைப்பாடுமிக்க தூண்களும் கோவிலுக்கு மெருகூட்டுகின்றன. கோபுரத்தில் கிருஷ்ண லீலைகளை விளக்கும்

சிற்பங்கள்  காணப்படுகின்றன. ஆகஸ்ட் மாதம் நடக்கும் உற்சவத்தின் கடைசி நாளில் நடக்கும் பூக்குழி (தீ மிதி) வைபவத்தைக் காண அந்த வட்டார மக்கள் எல்லோரும் உடப்பு கிராமத்துக்கு வந்துவிடுவார்கள் .

–subham—

Tags- திரவுபதி, திரெளபதி, கோவில், பூக்குழி, தீக்குழி , தீமிதி வைபவம், பாண்டிருப்பு, உடப்பு

வளமை குன்றா வாழ்வு தரும் அன்னாபிஷேக தரிசனம்! – 1 (Post No.12,652)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,652

Date uploaded in London –  30 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

 இந்த 2023 ஆண்டு ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் அக்டோபர் 28ஆம் நாள் நிகழ்வதை ஒட்டிய சிறப்புக் கட்டுரை! 27-10-23 மாலைமலர் இதழில் வெளி வந்த கட்டுரை இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.

வளமை குன்றா வாழ்வு தரும் அன்னாபிஷேக தரிசனம்!

முதல் பகுதி

ச.நாகராஜன்

தானத்தில் சிறந்த தானம் அன்னதானமே என புராணங்களும் மஹாபாரத இதிஹாஸமும் கூறுவதோடு அந்த தானத்தின் எல்லையற்ற மகிமையையும் எடுத்துக் கூறுகின்றன.

ஐப்பசி பௌர்ணமியின் சிறப்பு

ஐப்பசி பௌர்ணமியன்று சிவாலயங்களில் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் நடத்தப்படுகிறது.

முதலில் சம்பிரதாய முறைப்படி நடத்தப்படும் புனித தீர்த்தம், பசும் பால், நெய், இளநீர், கரும்புச் சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாங்காய்ச் சாறு, சாதம், மஞ்சள் ஆகியவற்றால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெறும். இதில் அன்னாபிஷேகம் சிறப்பாகக் கருதப்படுகிறது.

சிவலிங்கம் முழுவதும் அன்னாபிஷேகத்தால் மூடப்பட்டு உச்சியில் காய்கறிகளால் அலங்கரிக்கப்படுகிறது.

 பௌர்ணமியன்று இது நடத்தப்படுவதன் காரணம் என்ன?

அதற்கு ஒரு புராண வரலாறு உண்டு.

முன்பொரு காலத்தில் பிரம்மன் தன்னை சிவனுக்கு நிகராக நினைத்து கர்வம் கொண்டான். அந்தக் கர்வத்தைப் போக்க சிவபிரான் பிரமனின் ஒரு தலையைக் கிள்ள, அந்தக் கபாலம் அவர் கையில் ஓடாக ஒட்டிக் கொண்டது.

 பிரம்மனின் சிரத்தைக் கொய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் சிவனைப் பற்றிக் கொண்டது.

எப்போது அவர் கையில் உள்ள கபால ஓடு அன்னத்தால் நிரம்புகிறதோ அப்போது தோஷம் நீங்கும் என்று தோஷ நிவர்த்தி ஏற்பட ஈசன் காசிக்குச் சென்று அன்னபூரணி கையால் அன்னத்தைப் பெற்று தோஷம் நீங்கப் பெற்றான்.

 சிவபிரான் அன்னபூரணியிடமிருந்து அன்னம் பெற்ற நாள் ஐப்பசி பௌர்ணமி ஆகும். ஆகவே அந்த நாளில் யார் ஒருவர் ஈசனின் அன்னாபிஷேகத்தைத் தரிசிக்கிறாரோ, யார் ஒருவர் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்கிறாரோ அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அன்னம் கிடைக்கும்; கர்மவினைகளும் அகலும் என்பது உள்ளிட்ட பல நற்பயன்களும் சித்திக்கும் என்று ஆனது.

அன்னாபிஷேக பலன்கள்

அன்னாபிஷேகத்தில் சிவனுக்கு இடப்படும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு சிவலிங்கமே.

தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர், கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரம்மாண்டமாக நடக்கும் இந்தத் திருநாள் அபிஷேகம் பக்தர்களைப் பரவசப்படுத்தும். திருநாள் பிரசாதத்தை உட்கொள்வதால் அனைத்து நற்பலன்களும் கிட்டும்.

நற்பலன்களில் சில:

1) ஆயுள் முழுவதும் இல்லத்தில் அன்னம் இருக்கும்.

2) கர்மவினைகள் கழியும்.

3) சிறுவர்களுக்கு நினைவாற்றல் கூடும்.

4) வணிக சம்பந்தமான பிரச்சினைகள் தீரும்.

5) மகப்பேறு இல்லாதோர்க்கு மகப்பேறு கிடைக்கும்.

6) உழவு செழிப்பதோடு அனைத்து தானியங்களும் கிடைக்கும்.

உழவர்கள் தங்கள் இல்லத்தில் அன்னாபிஷேகம் செய்யும் பிள்ளைகள் இருந்தால் பல தலைமுறைகளுக்கு அன்னத்திற்கு பஞ்சமே இருக்காது என்று நம்புவது நமது மரபாகும். நல்ல மழையை எதிர்பார்ப்பது போல அப்படிப்பட்ட பிள்ளைகள் தமக்குப் பிறக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகின்றனர்.

அன்னம் என்பது உயிர் வாழும் மனிதருக்கு அடிப்படைத் தேவையாகும்.

இதன் அதிபதி சிவபிரானே.  இயற்கையின் பஞ்ச பூதங்களுக்கும் அதிபதி அவரே. இந்த இயற்கையின் பஞ்ச பூதங்களினால் தான் நெல்மணி நமக்குக் கிடைக்கிறது. நிலத்தில் விதை விதையிடப்பட, வானம் நீர் பொழிய, அங்கு நீர் பாய்ச்ச, சூரிய ஒளி (வெப்பம்) பயிர்களின் மேல் பட, வாயுவின் சேர்க்கையால் நெல் மணி நமக்குப் பூரணமாகக் கிடைக்கிறது.

இந்த அன்னமே உலகில் வாழ் உயிர்களுக்கு உணவாக ஆகி ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் ஆயுளையும் தருகிறது.

ஆகவே தான் அன்னாபிஷேகத்தின் மகிமையை அனைத்து அறநூல்களும் போற்றிப் புகழ்கின்றன.

அன்ன தானத்தின் சிறப்பு பற்றி நாரதர் கூறியது

பீஷ்மரிடம் தர்மபுத்திரர் தானங்களுள் சிறந்த தானம் எது என்ற தன் சந்தேகத்தைக் கேட்க அதற்கு பீஷ்மர் தான் நாரதரிடம் இது பற்றிக் கேட்டு தக்க பதிலைப் பெற்றதாகக் கூறி அந்தப் பதிலை விரிவாகக் கூறுகிறார் (அநுசாஸன பர்வம் 98வது அத்தியாயம்).

அதில் உள்ள சில முக்கிய கருத்துக்களை இங்கு பார்க்கலாம்:

 “உலக வாழ்க்கை என்பது அன்னத்தைப் பொறுத்ததே. அன்னதானத்திற்கு ஒப்பான தானம் முன்னுமில்லை; பின்னுமில்லை.

அன்னத்திலே தான் உயிர் இருக்கிறது. ஆகவே யார் ஒருவன் அன்னத்தை தருகிறானோ அவன் மறுமைக்கான புதையலைப் புதைத்து வைத்தவனாகிறான்.

தானம் பெற வந்த அனைவருக்கும் பேதம் பார்க்காது அன்னதானம் செய்தல் வேண்டும். அன்னமிடும் போது அதை ஏற்பவரின் ஊர், குலம், ஓதல், ஆசாரம், பெயர் உள்ளிட்ட எதையும் கேட்கக் கூடாது.

அறம்,பொருள், இன்பம் ஆகிய அனைத்தும் அன்னத்தினாலேயே வருகின்றன. பூலோகமும் தேவலோகமும் அன்னத்தினாலேயே தான்.  அன்னம் ஒழிந்தால் தேகத்திலுள்ள ஐம்பூதங்களும் பிரிந்து போகின்றன. பலசாலியும் கூட அன்னமில்லாவிட்டால் பலத்தை இழக்கிறான்.” – என்று இப்படி மிக விரிவாக அன்னதானப் பெருமையை நாரதர் விவரிக்கிறார்.

***

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit -3 (Post No.12,651)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,651

Date uploaded in London – –  –  29 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நான்கு மொழிகளில் பர்த்ருஹரியின் நீதி சதகம் – 3 ; Part 3

Slokam 7

பர்த்ருஹரி எழுதிய நீதி சதகத்தில் முட்டாள்கள் வாய் திறக்காமல் இருப்பது நலம் பயக்கும் என்று மொழிகிறார்.

வான் புகழ் வள்ளுவமுனும்  தமிழ் வேதம் என்று புகழப்படும் திருக்குறளிலும் அதையே செப்புவார்:-

கல்லாதவரும் நனிநல்லர் கற்றார் முன்

சொல்லாதிருக்கப் பெறின் (குறள் 403)

கற்றறிந்த மக்கள் முன்னிலையில், கல்லாத முட்டாள்கள் வாய் திறவாமல் மவுனம் காத்தால் அந்த இடத்தில் அவர்களும் நல்லவர்களாகத் தோன்றுவார்கள்.

स्वायत्तम् एकान्तगुणं विधात्रा
विनिर्मितं छादनम् अज्ञतायाः ।
विशेषा‌अतः सर्वविदां समाजे
विभूषणं मौनम् अपण्डितानाम् ॥ 1.7 ॥

ஸ்வாயத்தம் ஏகாந்த்ஹிதம் (குணம்) விதாத்ரா

விநிர்மிதம் சாதனமக்ஞதாயாஹா

விஷேஷதஹ ஸர்வவிதாம் ஸமாஜே

விபூஷணம் மௌனம் அபண்டிதானாம்

—பர்த்ருஹரி நீதி சதகம்1-7

ஒருவனுடைய அறியாமையை மறைப்பதற்காக மூடர்களுக்கு மௌனம் என்னும் வரத்தை பிரம்மா அருளியிருக்கிறார். விஷயம் தெரிந்த அறிஞர்களிடையே முட்டாள்களின் அணிகலன் (ஆபரணம்) இந்த மௌனம்தான் (1-7).

முட்டாள் கள் பேசினால் அவர்கள் குட்டு வெளிப்படும் ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்று சொன்ன கதை ஆகிவிடும்.

மூடறியாமை தனை மூடுவதற்கே பிரமன்

பீடுபெறு மோனம் பிறப்பித்தான் மூடரெலாம்

மூதுணர்ந்தோர் முன்னிலையில் மோனஞ் சாதித்தலே

தீதிலழ காகுஞ் சிறந்து — 7

xxxxxxxx

Slokam 8


यदा किञ्चिज्ज्ञो‌உहं द्विप इव मदान्धः समभवं
तदा सर्वज्ञो‌உस्मीत्यभवदवलिप्तं मम मनः
यदा किञ्चित्किञ्चिद्बुधजनसकाशादवगतं
तदा मूर्खो‌உस्मीति ज्वर इव मदो मे व्यपगतः ॥ 1.8 ॥

யதா கிஞ்சிஜ்ஜோஹம் கஜ (த்விப) இவ மதாந்தஹ ஸமபவம்

ததா ஸர்வஞோஸ்மீத்யபவதவலிப்தம் ம்ம மனஹ

யதா கிஞ்சித்கிஞ்சித்புதஜன ஸகாசாதவகதம்

ததா மூர்க்கோஸ்மீதி ஜ்வர இவ மதோ மே வ்யபகதஹ

–பர்த்ருஹரி நீதி சதகம் 1-8

எனக்கு கொஞ்சம் அறிவு இருந்த போது நான் யானை போல மதம் பிடித்து அலைந்தேன்; அந்த நேரத்தில் நான் அனைத்தும் அறிந்தவன் என்று நினைத்தேன்; ஆனால் அறிஞர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விஷயத்தைக் கிரஹித்தபோது, நான் அறிவிலி என்பது விளங்கியது; காய்ச்சல் விலகுவது போல எனது கர்வமும் விலகி ஓடியது (1-8).

இதோ வள்ளுவரின் கூற்று

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு — குறள் 1110

நல்ல அணிகளை அணிந்த இந்தப் பெண்ணை பொருந்தும் தோறும்,

அந்த இன்பத்தின் மஹிமை தெரிவது எப்படி இருக்கிறதென்றால், நூல்களை படிக்கப் படிக்க இவ்வளவு காலம் நம் அறியாமையைக் காண்பது போல இருக்கிறது.

கொஞ்ச மதியானான் குஞ்சரம் போலேமாந்து

விஞ்சும் விவேகியென மேவினேன் — மிஞ்சு மதி

உத்தமற் பால் பெற்றபின்னர் உள்ளகந்தை விட்டறிந்தேன்

எத்தனை நாள் மூடனாமென்று -8

Xxxxxx

Slokam 9

कृमिकुलचित्तं लालाक्लिन्नं विगन्धिजुगुप्सितं
निरुपमरसं प्रीत्या खादन्नरास्थि निरामिषम् ।
सुरपतिम् अपि श्वा पार्श्वस्थं विलोक्य न शङ्कते
न हि गणयति क्षुद्रो जन्तुः परिग्रहफल्गुताम् ॥ 1.9 ॥

க்ருமிகுலசிதம் லாலாக்லின்னம் விக்ன்ந்திஜுகுப்ஸிதம்

நிருபமரஸ்ம்ப்ரீத்யா காதன்னராஸ்திநிராமிஷம்

ஸுரபதிம் அபி ஸ்வா பார்ஸ்வத்வம்  விலோக்ய ந சங்க்தே

ந ஹி கணயதி க்ஷுதோ ஜந்துஹு பரிக்ரஹFபலகுதாம் 1-9

கிருமிகள் உடைய , சதைப் பற்றில்லாத, காய்ந்த நாற்றமுள்ள அழுக்கான எலும்புத் துண்டை நக்கும் நாய் தனது எச்சிலை அதில் ருசித்துவிட்டு, எலும்புதான் சுவை தருகிறது என்று நினைப்பது போல(1-9).

புழுத்த கழுதையின் புல்லெலும்பை நாய்தன்

கழுத்தை மிகநீட்டிக் கடிக்கும் – வழுத்துஞ் சீர்த்

தேவேந்திரன் வரினும் தேராது கீழுயிர்கள்

ஆவா வா புன்மையுணரா – 9

  Tags – Bhartruhari , Nitisataka , part-3 ,முட்டாள்கள் , மவுனம்கர்வம்,

New Tamil Lesson 11 Verb Kel கேள் Ask or Listen (Post No.12,650)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,650

Date uploaded in London – –  –  29 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

picture line

இது வகுப்பு அறை= Ithu Vakuppu Arai = This (is) a Class Room
அவர் கணக்கு/ கணித ஆசிரியர் = Avar Kanakku Aasiriyar= He (is a ) Maths Teacher
அவர் போர்டில் எழுதுகிறார்.= avar Bordil Ezuthukiraar = Avar, in the board, writes
குழந்தைகள் படிக்கிறார்கள் = Kuzanthaikal Padikkiraarkal = Chikdren Studying (learning)

 xxxxx

கேள்= KEL has got two meanings in Tamil.ASK and LISTEN TO

1.            நான் தினமும் ரேடியோவில் செய்தி கேட்பேன்.

Naan dinamum radiovil seythi ketpen

I, every day/ daily, radio in (on the radio), News, listen.

Everyday I listen to news on the radio.

தினமும் Sanskrit word, so Dinamum;

ரேடியோவில்-  Radio + in; but in English we say on radio;

கேட்பேன்.= KETPEN = will listen to in Tamil future form; but in Tamil it is equivalent to present tense, because anything you do habitually is put is future in Tamil; but in English you only present tense I listen to

2.            அவன் உன்னைக் கேட்டால் நீ சொல்

Avan Unnaik Kettaal, Nee Sol

He , you, if ask, you, tell;

If he asks you you tell;

கேட்டால் KETTAAL Conditional; Kett+ AAL  = Kettaal

உன்னை= You in Accusative form UNN+ AI = UNNAI;

3.            அவன் தமிழ் புஸ்தகம் வேண்டும் என்று கேட்டிருந்தான்

Avan, thamiz pusthakam, Vendum Endru Kettu Irunthaan

He, Tamil Pustakam, want ,  that , had asked/told

He had asked/told  me  that he wanted a Tamil book.

4.            கடன் கேட்பது கெட்ட பழக்கம்

Kadan, ketpathu, ketta , pazakkam

Loan asking bad habit .

Borrowing is a bad habit.

கடன் = kadan.

கேட்பது Ketpathu = asking for = verbal noun.

5.            நீ நல்ல கேள்விகளைக் கேட்டாய்.

Nee, nalla, kelvikalaik, kettay.

You, good, questions, asked .

You asked good questions .

6.            நான் சொன்னால் அவன் கேட்க மாட்டான்

Naan , sonnaal, avan, ketkamaattaan

I, if say, he, wouldn’t listen .

He wouldn’t listen (to me), if I say (it).

If I say it , he wont listen (to me).

7.            அவன் கட்டாயம் உன்னைக் கேட்பான்.

Avan , Kattaayan, unnaik, ketpaan.

He, certainly / definitely / surely/ you will  ask.

He would certainly ask you.

He would certainly question / challenge you (is also possible)

8.            யார் கடன் கேட்டாலும் கொடுக்காதே.

Yaar , kadan, kettaalum, kodukkaathe.

Who(ever) ask loan, don’t give.

Whoever it may be, never give loan (to anyone)

கேட்டாலும் = even ask.

Kettaal = conditional +um= and or even or too

Whenever you use WHATEVER,WHOEVER, WHEREVER,HOWEVER you use this form;  that is conditional form of that verb+UM

Vanthaalum = even if come

Sonnaalum = even if say

Saappittaalum = even if eat

9.            ஒரு நிமிடம் இருங்கள். இதைக் கேட்டுவிட்டுப் போங்கள்.

Oru, nimidam, irungal; ithaik kettuvittup Pongal.

One , minute, wait; this, after listening go .

Wait a minute (please); listen to it and then go.

Kettuvittu = converbial form; meaning is after doing ……..

10.          அவர்கள் மூன்று புஸ்தகம்தான் கேட்டார்கள்.

Avarkal, moondru, pustakam only, asked.

They asked for only  three books.

புஸ்தகம்தான்= emphatic or only = thaan

11.          அது கேட்கிற பொம்மையைக் கொடு

Athu, ketkira, bommaiyaik , kodu

That, asking, toy, give.

Athu = that; though it is used only for lower things, Indian Tamils call children THIS, THAT.

But it is quite opposite in Sri Lanka. They give respect AVAR (he with respect or she with respect)

கேட்கிற= ketkira = present participle,

கேட்ட = ketta = past participle,

கேட்கும் = ketkum = future participle,

12.          நீ அப்பா பேச்சைக் கேட்டகாவிட்டால் அவருக்கு கோபம் வரும்.

Nee, appaa, pechchaik, ketkaavittaal, avarukku, kopam, varum .

You, father , saying, if not listen, to him, anger, would come.

If you don’t listen to what father says, he would be angry.

london swaminathan pesukiraar; ellorum ketkiraarkal = london swaminathan speaks; all listen (to him)

To be continued…………………………………………….

Tags- New, Tamil lesson, part 11, listen, ask