Post No. 10,396
Date uploaded in London – – 30 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உலகத்தில் ஈசாப் (Aesop)என்னும் கிரேக்கநாட்டு அடிமை எகிப்தில் இருந்தபோது இந்துக்கள் சொன்ன கதைகளை பிராணிகள், பட்சிகள் பற்றிய சிறுவர் கதைப் புஸ்தகமாக (Animal Fables) வெளியிட்டதை நாம் அறிவோம். அதற்கு முன்னரே மஹாபாரதத்தில் புறாக்கள், ஒரு அகதிக்காக, தீயில் விழுந்து தியாகம் செய்த கதை மஹாபாரதத்தில் உள்ளது . தர்ம புத்திரன் செய்த யாகத்தில் பாதிப் பொன்னிறத் தோலுடைய கீரிப்பிள்ளை (Mongoose) வந்து எல்லோரையும் அசத்தியதையும் நாம் அறிவோம். இலங்காபுரி ‘கிரிமினல்’ ராவணனை ஒழிக்க ஒரு அணிலும் மண் போட்டு அணை கட்டியதை ஆழ்வார் பாடல் மூலம் நாம் அறிவோம். அந்த .ராமாயணத்தில் பல பறவைகள், கரடி, குரங்குகள் அணை கட்ட உதவியதையும் நாம் அறிவோம். சிபிச் சக்ரவர்த்தியின் புகழை உலகிற்கு நிலை நாட்ட இந்திரனும் அக்கினியும் கழுகு , புறா வடிவில் வந்த கதையை நாம் சங்க இலக்கிய புறநானுற்றிலும், பிற்கால சிலப்பதிகாரத்திலும் பயிலுகிறோம். மனு நீதிச் சோழனிடம் நீதி கேட்ட பசுவின் கதையையும் அறிவோம். ஊருக்கு ஊர் யானையும் பசுவும் பாம்புகளும் சம்பந்தப்பட்ட கோவில்கள் இருப்பதையும் எல்லோரும் அறிவர். ஆனால் இதற்கெல்லாம் மூலம் வேதத்தில் இருப்பது பலருக்கும் தெரியாது.
பாகவத புராணத்தில் தத்தாத்ரேய மகரிஷி பறவை, பாம்பு முதல் பரத்தை ( Prostitute) வரையுள்ள ஒவ்வொருவரிடமும் தான் கற்ற பாடத்தைப் பற்றி ஏராளமான கட்டுரைகள் வந்துவிட்டன . நான் இதுவரை சொன்ன எல்லா விஷயங்களும் இந்த ‘பிளாக்’கிலேயே பத்து ஆண்டுகளாக வந்துள்ளன. இதுவரை யாரும் சொல்லாத ஒரு விஷயத்தை இன்று காண்போம்.
முதலில் இதில் குறிப்பிட்ட 22 பிராணிகள், பொருட்கள் பட்டியலைப் பாருங்கள்; பின்னர் இதை ஒரு பள்ளிக்கூட மாணவனிடம் கொடுத்து ஒவ்வொரு விஷயம் பற்றியும் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் ஒரு கட்டுரை எழுதுக என்று சொல்லுங்கள். அதே நேரத்தில் டாக்டர் பட்டம் பெறுவதற்கு பதிவு செய்துகொண்ட ஒரு இளைஞனிடம் ஒரு ஆராய்சசிப் புஸ்தகம் எழுதுக என்று சொல்லி 22 பேரிடம் கொடுங்கள். ஆனால் எல்லாம் இந்துமதம் சம்பந்தப்பட்ட சங்கத் தமிழ் இலக்கியத்திலிருந்து மட்டுமே, வேத இதிஹாச புராணங்களில் இருந்து மட்டுமே கதைக்க வேண்டும் என்று சொல்லுங்கள் . அதிசயப்படும் அளவுக்கு விஷயங்களைப் படிப்பீர்கள் .
பட்டியல் இதோ:
சிங்கம் , புலி, பாம்பு, நெருப்பு,
பிராமணன், சூரியன், யானை, சிறுத்தை ,
தங்கம், தண்ணீர், பசு, ஆண்மகன்,
ரதத்தின் அச்சு, எருது, வாயு ,மழை
வருணன் , அரச குமாரன், முரசு ,அம்பு,
குதிரை, மன்னன் சூளுரை
இதில் சிலர் ரதம், அச்சு ஆகியவற்றை தனித்தனியேயும் பிரிப்பர். ஆயினும் 20க்கு மேலான விஷயங்களை சொல்லி அந்த பலம் அல்லது குணம், அல்லது புகழ் எனக்கு வரவேண்டும் என்று ஒரு ரிஷி பாடுகிறார்.
இதோ துதியும் அதிலுள்ள 4 மந்திரங்களும்
XXX
அதர்வண வேதம் ஆறாவது காண்டம் துதி 38 (சூக்தம் எண் 211); பாடல் தலைப்பு -பலம்
1.சிங்கம், புலி ,நெருப்பு, பாம்பு, பிராமணன், சூரியனில் எந்த பலமுண்டோ அந்த பலத்தோடு இந்திரனை பிறப்பித்த சுபகையான தேவி எங்களுக்கு வருக .
2.யானை, சிறுத்தை, பொன், புனல், பசு ,புருஷர்களில், எந்த பலமுண்டோ அந்த பலத்தோடு இந்திரனை பிறப்பித்த சுபகையான தேவி எங்களுக்கு வருக .
3.இரதம் , அச்சு, எருதின் பலம், வாயு, மழை வருணனது உக்கிரத்தில் எந்த பலமுண்டோ அந்த பலத்தோடு இந்திரனை பிறப்பித்த சுபகையான தேவி எங்களுக்கு வருக .
4.இராஜன்யன் துந்துபி சரம் அஸ்வ பலம் புருஷ கர்ஜனையில் எந்த பலமுண்டோ அந்த பலத்தோடு இந்திரனை பிறப்பித்த சுபகையான தேவி எங்களுக்கு வருக .
கருத்து- பலம், சக்தி ஆகியவற்றைப் பெற;
சுபகை யான தேவி – அதீதி
Xxx
எனது கருத்துக்கள்
முதலில் நாலு மந்திரங்களிலும் ‘பல்லவி’ (refrain) இருப்பதைக் காணுங்கள். ஆகையால் இது எல்லோரும் கூடி, கோஷ்டியாக (chorus) பாடிய பாடல் என்று தெரிகிறது. அதாவது எழுத்து வடிவில் இலக்கியங்கள் வருவதற்கு முன்னர் இருந்த வாய் மொழி (oral literature) இலக்கியம். அதர்வண வேதத்தை ‘தள்ளிப்போன, கோணல் பார்வை, காமாலைக் கண் உடைய’ வெள்ளைக்காரர்களும் கூட கி,மு 1000 என்று முத்திரை குத்தியுள்ளர். நாமோ கி.மு 3150ல் வியாசர் பிரித்த நாலு வேதத்தில் ஒன்று என்று நம்புகிறோம். எப்படியாகிலும் இப்படி 22 பொருட்கள் மூலம் பாடம் கற்பிப்பது உலகில், மனித வரலாற்றில் இதுவே முதல் தடவை .
இன்றும் கூட பஜனைப் பாடல்களிலும், கர்நாடக சங்கீதக் கச்சேரிகளிழும் ‘பல்லவி’ வருவதை பார்க்கிறோம்; வெள்ளைக்ககாரர்களுக்கு நோட்டு புஸ்தகம் இல்லாமல் பாட முடியாது. நம்மவரோ குரு -சிஷ்ய பாவத்தில் கற்றுக்கொண்டதை அப்படியே மனப்பாடமாக மேடையில் பாடுவதை இன்றும் காணலாம். அதாவது இது வாய் மொழி இலக்கியம்
மேலும் சாதாரணமாக “எனக்கு பலத்தைக் கொடு , புகழைக் கொடு , சக்தியைக் கொடு” என்று கேட்கும் பாடல்களும் வேதத்தில் நிறையவே உள்ளன. இந்தப் புலவர் மட்டும் சிங்கம், புலி, யானை, சிறுத்தை, தங்கம் தண்ணீர், குதிரை பசு தேர் என்றெல்லாம் பாடுகிறார் !!
மிக முக்கியமான விஷயம் வெள்ளைக்காரர்கள் (male chauvinists) ஆண் ஆதிக்க வெறி பிடித்தவர்கள். அவர்களுடைய மதங்களில் பெண்களுக்கு இடமே இல்லை. ஆனால் நாமோ பெரிய மனிதர்களைப் பெற்றெடுத்த தாயைத்தான் முதலில் வணங்குவோம். எல்லா கடவுளையும் பெ றெடுத்த அதிதி தேவியை வணங்கும் பாடல் இது. உலகின் மிகப்பழைய நூலான ரிக் வேதம் முழுதும் ‘கடவுளரின் தாய்’ என்று அதிதி பாடப்படுகிறாள் .
இன்னும் ஒரு விந்தை, பழங்கால எகிப்திய, கிரேக்க, பாபிலோனிய மதங்களில் இருந்த அன்னைத் தெய்வங்களை இப்பொழுது மியூசியங்களில் மட்டுமே காணலாம். ஆனால் ‘அதிதி’ பெயரை எங்கள் லண்டனில் உள்ள பெண்களிடமும் காணலாம். அதாவது இந்து மதம் பெண்களை வணங்கும் மதம்; வாழும் மதம்!. அதிதியை மியூசியத்துக்கு அனுப்பாத மதம்!
இப்பொழுது ‘சப்ஜெக்’டுக்கு வருகிறேன் ; ஒவ்வொரு தலைப்புக்கும் ஒரு சில எடுத்துக் காட்டுகளைத் தொட்டுக் காட்டுவேன் வள்ளுவர் காப்பி அடித்த தேர் ‘அச்சு’ உவமையும் பின்னே வருகிறது !
xxxx
சிங்கம் Lion
1.சிங்கம் – ஸ்வயமேவ ம்ருகேந்திரதா – என்பது ஸம்ஸ்க்ருதப் பழமொழி. ‘மிருகங்களின் இந்திரன் (ராஜா) நீயேதான்’ என்பது இதன் பொருள். காட்டுக்கு ராஜா சிங்கம் என்பது இந்துக்களின் கண்டுபிடிப்பு. சிம்மாசனம்= அரியணை என்பது நமது சொற்றொடர் . கேஸ் +அரி கேசரி= ‘மயிர் மிருகம்’ என்பதை ரோமானியர் சீசர் என்று பயன்படுத்தினர் (கே =சே சர் ). நான் ரோம் நகரிலுள்ள வத்திக்கான் மியூசியத்தில் கல்லாலான மிகப்பெரிய சிம்மாசனத்தைக் கண்டேன். ‘அரிமா நோக்கு’ என்பதும் ஸம்ஸ்க்ருதப் பழ மொழி . அப்படித் திரும்பி ஒரு கம்பீரமான LOOK ‘லுக்’ விடுமாம் !அது போல எனக்கு பலம் தா என்று புலவர் வேண்டுகிறார்.
xxx
புலி Tiger
புலியைப் பற்றி இந்துக்கள் பாடியது போல வேறு எவரும் பாடவில்லை . வெங்கடேஸ்வர சுப்ரபாதத்தின் முதல் ஸ்லோகம் வால்மீகி ராமாயணத்திலிருந்து எடுக்கப்பட்டது. அதில் “புலி போன்ற வீரம் உடைய சின்னப் பையா! ராமா! எழுந்திருடா! என்று விசுவாமித்திரர் பாடுகிறார்- உத்திஷ்ட ! ‘நர’ ‘சார்தூல’ = ஆண்களில் புலி போன்றவனே! எழுந்திரடா மகனே! என்பது பொருள். புறநானூற்றிலும் புலி , வலப்பக்கம் விழுந்த உணவை மட்டுமே சாப்பிடும் என்று புலவர்கள் பாடுகின்றனர் ( இது உண்மையா என்று இயற்கை சம்பந்தப்பட்ட டாக்குமெண்டரிகளைப் பார்த்து ஆராய்ச்சி செய்துவருகிறேன் ); புலியின் வீரத்தை உணர்ந்த இந்துக்கள் குழந்தைகளுக்கு ‘புலிப்பல் தாலி’ அணிவித்தனர். கடவுளருக்கு புலியை வாகனமாகக் கொடுத்தனர் . சிந்து வெளி முத்திரைகளில் புலி தேவதை டான்ஸ் (dancing tigress in Indus valley Seals )ஆடுவதையும் பார்க்கிறோம்.
xxx
பாம்பு Snake
பாம்பு பற்றி பத்து புஸ்தகம் எழுதும் அளவுக்கு இந்துமதத்தில், தல புராணங்களில் கதைகள் உள்ளன. நல்லதற்கும் பாம்பு; கெட்டதற்கும் பாம்பு உவமை வரும்; குண்டலினி சக்தியை எழுப்புவதைக் கூட பாம்பை சுருண்ட நிலையில் இருந்து எழுப்புவது என்ற உவமை மூலம் விளக்குவார்கள். அந்த பாம்பினை எழுப்பிவிட்டாலோ பத்து ‘பாபா’ அளவுக்கு அற்புதங்கள் செய்து காட்டலாம்.
ராமகிருஷ்ண பரமஹம்சர் கதையில் கூட பாம்பினை நல்ல உதாரணத்துக்குப் பயன்படுத்துவார். காளீயன் போல ஒரு பாம்பு அட்டஹாசம் செய்துவந்தது . ஒரு முனிவர் அதை ‘அடங்கி ந’ட என்று அதட்டினார். அதுவும் அப்படியே வாழ்ந்தது. அடுத்த முறை அதே முனிவர் அந்தப் பாம்பினைக் கண்டபோது அது குற்றுயிரும் கொலையுசிருமாக கிடந்தது. ஏ பாம்பே ! என்ன ஆயிற்று உனக்கு? என்று வினவினார் முனிவர். “அட போங்க முனிவரே; எல்லாம் உம்மால் வந்ததுதான் ; நீங்கதான் ‘அ டங்கி இரு’ என்று சொன்னீங்க; இந்தப் பாவிப்பயங்க போற வரும்போதெல்லாம் என் மீது கற்களை வீசி அடிக்கிறாங்க”.
முனிவர் சொன்னார்- நான் உன்னை கடிக்காமல் அடங்கி இரு என்றுதான் சொன்னேன். உனது குணமான சீற்றத்தைக் காட்டி உன்னைப் பாதுகாத்துக்கொள்ளாதது உன் தவறு என்றார் முனிவர். ஆக பாம்பு போல எதிரிகளைப் பயமுறுத்தும் குணத்தை எனக்குத் தா என்கிறார் இந்த மந்திரத்தில் . அதுமட்டுமல்ல ‘பாம்பு என்றால் படையும் நடுங்கும்’ என்பது பழமொழி. ‘நல்லார் அவையில் புகுந்த பாம்பினைக் கூட நல்லோர் கொல்ல மாட்டார்கள்’ என்ற சங்க இலக்கியப் பாடல் , ரிக் வேதத்தின் கடைசி மண்டலத்திலுள்ள ‘பாம்பு ராணி’ பற்றி எல்லாம் இந்த பிளாக்கில் ஏராளமான கட்டுரைகள் உள ; படித்து மகிழ்க
To be continued…..
Tags- அதர்வண வேதம், பிராணிகள், கற்பிக்கும் பாடம்,