Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
1992ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி நான் எழுதிய கட்டுரை மாணவர்
அறிவு வளர வைட்டமின் (விட்டமின் என்றும் உச்சரிக்கலாம்) மாத்திரைகள் உதவுமா என்று
பிரிட்டனில் நடந்த ஒரு சுவையான வழக்கு பற்றியதாகும்.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
ஆடுகள்
பற்றிய 30 பழமொழிகள் இந்த மாத காலண்டரில் இடம்
பெறுகின்றன.
பண்டிகை
நாட்கள்:–
நவம்பர்
2- சூர
சம்ஹாரம்/ கந்த சஷ்டி; 9- துளசி விவாகம்; 12- குருநானக் ஜயந்தி, அன்னாபிஷேகம்
(வட நாட்டில் கார்த்திக் பௌர்ணமி; தென்னாட்டில் டிசம்பர் 10 கார்த்திகை பௌர்ணமி; 16 — கோபி அஷ்டமி; 18- சகல சிவாலயங்களிலும் சங்காபிஷேகம்; 23- சத்ய சாய் பாபா பிறந்த தினம்; 24- சீக்கிய குரு தேஜ் பஹாதூர் உயிர்நீத்த
தினம்.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
மாலைமலர் 28-10-2019 இதழில்
வெளியாகியுள்ள கட்டுரை
ரிஷிகள் தவம் புரியும் தலம்
ரிஷிகேசம்; மோட்சத்தின் வாயில் ஹரித்வார்!
ச.நாகராஜன்
கங்கோத்ரி
பாரத தேசத்தின் தெய்வீக மலை
இமாலயம்.
தெய்வ நதி கங்கை.
கங்கையை முதலில் தரிசிக்கும்
இடம் கோமுகி!
கங்கை பிரதேசத்தில் கங்கை எப்படித் தோன்றுகிறாள்
என்பதைத் துல்லியமாகக் கண்டவர் யாருமில்லை.
இமயமலையில் 14000 அடி உயரத்தில்
ஒரு குகை! இந்த குகையின் தோற்றம் பசுவின் வாய் போல் இருக்கிறது. இது கோமுகி என்று அழைக்கப்படுகிறது.
இதிலிருந்து கங்கை வெளிப்படுகிறாள். இந்த இடம் கங்கோத்ரி எனப்படுகிறது.
சுமார் இருபத்திரண்டடி உயரத்திலிருந்து
நான்கு அடி அகலம் உள்ள நீர்த்தாரை விழ அதுவே பொங்கிப் பல்கிப் பெருகும் மாபெரும் தெய்வீக
நதியாக மிளிர்கிறது.
கங்கை கங்கை என்று எவன் ஒருவன் சொல்கிறானோ அவனது பாவங்கள் அனைத்தும் நசிந்து அவன் விஷ்ணு லோகம் அடைகிறான் என்ற ஸ்லோகம் கங்கையை நினைத்தாலே பாவம் போகும் என்கிறது.
ஹரித்வார்
கங்கோத்ரியிலிருந்து கிளம்பும்
கங்கை உத்தரகாசி வழியே தேவப்ரயாக் என்னுமிடத்தை அடைந்து ஹரித்வாரத்தை அடைகிறாள்.
ஹரித்வார் என்றால் மோட்சத்தின்
வாயில் என்று பொருள்.
கங்கோத்ரியிலிருந்து 365 மைல்
தூரம் யாத்திரை செய்து பக்தர்கள் ஹரித்வாரை அடைவது பெரிதும் போற்றுதற்குரிய கங்கா யாத்ரா
என அழைக்கப்படுகிறது.
புண்ணியசாலிகளே இந்த யாத்திரையை
மேற்கொண்டு ஹரித்வாரை அடைகின்றனர்.
இரு மலைத் தொடர்களுக்கு இடையே கங்கை பாய்ந்து வருகிறாள்; பக்தர்களைப் பரவசம் அடையச் செய்கிறாள்.
ரிஷிகேசம்
இங்கிருந்து பதிநான்கு மைல்
தூரத்தில் உள்ளது ரிஷிகேசம். ஹரித்வாரிலிருந்து இறங்கி ரிஷிகேசம் வரும் போது கூடவே
கங்கையும் துணைக்கு வருவாள்.
ரிஷிகேசம் என்றால் ரிஷிகள் வசிக்கும்
இடம் என்று பொருள்.
இந்த இமயமலைப் பகுதி மட்டும்
ஆயிரக்கணக்கான ரிஷிகளால் அன்றும் இன்றும் சூழப்பட்டு தியானத்திற்குரிய தெய்வீக இடமாக
அமைகிறது.
பியர்ஸ் ஜெர்விஸ் என்ற மேலைநாட்டு
எழுத்தாளர் கங்கைக்கு இடையில் அமைந்துள்ள தீவிற்கு (பூர்வ புண்ணியவசமாக) சென்று பல
ரிஷிகளைப் பார்த்ததையும் அவர்களின் வயது நூறிலிருந்து ஆயிரம் வருஷங்கள் வரை இருக்கும்
என்றும் தனது நூலான நேகட் தே ப்ரே
நிர்வாணமாகவே அவர்கள் பிரார்த்திக்கிறார்கள் – (Naked They Pray) – என்ற புத்தகத்தில் எழுதி அதிசயிக்கிறார்.
ரிஷிக்கு இலக்கணம் என்ன?
ரிஷி என்றால் யார்?
சுயநலமின்றி பிறருக்காக வாழ்பவரே
ரிஷி. சத்தியத்தின் வழி நடந்து சத்தியமே உருவாக ஆகி இருப்பவர் ரிஷி!
ரிஷி என்பவர் சூட்சும திருஷ்டியின்
மூலம் ஒருவரின் வாழ்க்கையின் நுட்பங்களைக் காண்கிறார்.
அந்தர் திருஷ்டி மூலம் ஒருவரின் அந்தக்கரணத்தை அறிந்து
அவரது நடத்தையை அறிந்து அதற்கான ஆதி காரணத்தை அறிகிறார்.
திவ்ய திருஷ்டி மூலம் ஒருவரின்
இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகியவற்றை அறிகிறார்.
இப்படிப்பட்ட ரிஷிகளின் இருப்பிடம்
தான் ரிஷிகேசம்.
வெளிப்படையாகவும், பெரும்பாலான
சமயம் தங்களை மறைத்துக் கொண்டும் இன்றும் இவர்கள்
ரிஷிகேசம் சார்ந்த பகுதியில் தவம் புரிந்து வருகின்றனர்.
எடுத்துக்காட்டாக திருக்கடையூரில் அபிராமி பட்டர் தியானத்தில் மூழ்கி இருந்த போது அமாவாசையை பௌர்ணமி என்று அரசனிடம் கூற அன்று இரவு முழு நிலா எழுந்த உண்மை வரலாறை இங்கு நினைவு கூரலாம்.
லட்சுமண ஜூலாவும் ராமர் பாலமும்
சலசலத்து ஓடும் கங்கை நதியைக்
கடந்து செல்ல இங்கு அற்புதமான ஒரு பாலம் அமைந்துள்ளது.
அதன் பெயர் லட்சுமண ஜூலா. ஜூலா
என்றால் ஊஞ்சல் என்று பொருள்.
இலேசாக அசைந்து ஆடும் இந்தப்
பாலத்தில் நடந்து மட்டும் போகலாம்; அக்கரை சேரலாம். கீழே பொங்கிப் பிரவாகித்து ஓடும்
கங்கை நதியை ஆச்சரியத்துடனும் பக்தியுடனும் பயத்துடனும் தரிசித்து அக்கரை செல்வோர்
படகில் மீண்டும் இக்கரை வருவது வழக்கம்.
இந்தப் பகுதியில் தான் லட்சுமணர்
தவம் செய்தார்.
லட்சுமணருக்காகத் தனிக் கோவில்
அமைந்துள்ள இடம் இது ஒன்று தான்.
இங்கு வந்து இந்த இடத்தில் பூஜை
செய்த சூரத்மல்தாஸ் என்ற அரசன் இங்கு ஒரு கயிற்றுப் பாலத்தை அமைத்தான். ஆனால் கும்பமேளா
சமயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் இதைப் பயன்படுத்தியதால் அது அறுந்து போயிற்று. ஆகவே
பிரிட்டிஷ் அரசை வேண்டிக் கொள்ள 1927ஆம் ஆண்டு கான்க்ரீட் அமைப்புள்ள ஒரு தொங்கு பாலம்
அமைக்கப்பட்டது.
1986ஆம் ஆண்டு கும்பமேளா நடந்த
சமயம் இன்னொரு பாலம் இங்கு அமைக்கப்பட்டது.
இதை ராமர் பாலம் என்கின்றனர்.
இந்த இரு பாலங்களின் மீது நடப்பதை பாவம் தீர்க்கும் புண்ணிய நடையாக பக்தர்கள் கருதுகின்றனர்.
ரிஷிகேசத்தில் உள்ள கோவில்கள்
இராமாயணத்துடன் தொடர்பு கொண்டுள்ள
இந்தத் தலத்தில் தான் ராமரும் லட்சுமணரும் ராவணனை வதம் செய்த பின்னர் வந்து தவம் செய்து
தங்கள் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிக் கொண்டனர்.
அத்துடன் பரதரும், சத்ருக்னரும்
கூட இங்கு தான் வந்து தவம் செய்தனர்.
ரிஷிகேசத்தில் உள்ள பரதர் ஆலயம்
மிகவும் புகழ் பெற்றது. இது ரிஷிகேஷ் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. சத்ருக்னர் ஆலயம்
ராமர் பாலத்தின் அருகில் உள்ளது.
லட்சுமண்ஜூலாவைக் கடந்து சென்றவுடன்
அமைந்து இருப்பது கைலாச நாதர் ஆலயம்.
இந்த ஆலயத்தில் திரிபுரசுந்தரி,
மஹிஷாசுரமர்த்தனி, காயத்ரிதேவி ஆகிய மூன்று தேவியரின் சந்நிதிகள் உள்ளன. தத்தாத்ரேயர்,
விநாயகர் சந்நிதிகளும் இங்கு உள்ளன.
இந்த ஆலயத்தை அடுத்துள்ள சுவர்க்கநிவாஸ்
மந்திரில் உள்ள பத்ரிநாதரை வழிபட்டால் சுவர்க்க பதவி உண்டு என அனைவரும் நம்புகின்றனர்.
சுற்றிலும் அழகிய சாந்தி தவழும்
மலைப் பகுதி; பிரவாகம் எடுத்து ஓடும் தெய்வீக கங்கை நதி; தியானத்திற்கும் யோகப் பயிற்சிகளுக்கும்,
ஆன்மீக முன்னேற்றத்திற்கும் உகந்த இடம்! இங்கு இந்த ஆலயத்தை பாபா காளிகம்லிவாலா என்ற
மகான் அமைத்தார் என்று கூறப்படுகிறது.
பகவத் கீதையைப் பரப்பும் பெரும்
நிறுவனமான கீதா பவனும் லட்சுமண் ஜூலாவை அடுத்து அமைந்துள்ளது.
ரிஷிகேசத்தின் உள்ளேயே அமைந்துள்ள
இன்னொரு ஆலயம் பத்ரிநாதர் ஆலயம். பத்ரிநாத்திற்குப் போக முடியாதவர்கள் இங்கு வந்து
தரிசித்தால் அதே பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
ரிஷிகேசத்தில் சிவானந்த ஆசிரமம்,
ஸ்வர்க்காசிரமம், காஞ்சி மஹாபெரியவர் அமைத்த சங்கர மடம் உள்ளிட்ட 72 ஆசிரமங்கள் உள்ளன.
ரிஷிகேசம் யோகாவின் உலகத் தலைநகரம்
என்று
கொண்டாடப்படுகிறது.
ரிஷிகேசம் டில்லியிலிருந்து
சுமார் 150 மைல் தூரத்தில் உள்ளது. யாத்ரிகர்களின் பயணத்திற்காக ஏராளமான பஸ்கள் உள்ளன.
ரயில் வசதியும் உண்டு. டேராடூனுக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து ரிஷிகேஷை அடையலாம்.நவம்பர்
முதல் மே வரை கடும் குளிர் காலம் என்பதால் யாத்ரீகர்கள் மே முதல் வரத் தொடங்குகின்றனர்.
ஏராளமான தர்மசாலாக்களும், ஆயிரம் அறைகள் கொண்ட இலவச தங்குமிட வசதியும் பக்தர்களுக்கென இங்கு உண்டு; ஏராளமான ஹோட்டல்களும் உள்ளன.
ஏழு மோக்ஷபுரிகளில் ஒன்று ஹரித்வார்
அயோத்யா, மதுரா, மாயா, காசீ,
காஞ்சி, அவந்திகா, புரீ, த்வாராவதீ ஆகிய ஏழு தலங்களும் மோக்ஷபுரிகள் என்று அழைக்கப்படுகின்றன.
ஹரித்வார் என்பது மோட்சம் தரும்
இந்த ஏழு மோக்ஷபுரிகளில் ஒன்று. பழைய காலத்தில் மாயாபுரி என்று அழைக்கப்பட்ட திவ்ய
பூமியே இன்றைய ஹரித்வார்.
இது தான் தக்ஷப்பிரஜாபதி யாகம்
செய்த இடம்.மாயையின் வசமாகி அவன் அகம்பாவம் தலைக்கேறி சிவபிரானை அவமதித்தான். இதனால்
கோபமுற்ற தாக்ஷாயணி தேவி அங்கேயே உயிரை மாய்த்துக் கொண்டாள்.
இதனால் கோபமுற்ற சிவபிரான் தட்சனை
மாய்த்து தாக்ஷாயணியைக் கையில் தூக்கிக் கொண்டு தாண்டவமாடினார். இப்படி தாக்ஷாயணி உயிர்
நீத்த இடமாதலால் தேவிக்கு இங்கு ஒரு கோவில் உண்டு. அது கனகல் கோவில் என்று புகழ் பெற்று
விளங்குகிறது.
தட்சன் செய்த வேள்வியின் பலனாக அவன் நற்கதியே
பெற்றதால், அவனுக்கென ஒரு கட்டமும் கோவிலும் இங்கு உள்ளன.
ஹரித்வார் கோவில்கள்
ஹரித்வாரில் இன்னும் பல முக்கியமான
கோவில்கள் உள்ளன.
மன்சா தேவி ஆலயத்தில் உள்ள மரத்தை
தரிசித்து தங்கள் பிரார்த்தனையைச் சொன்னால் இஷ்டங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின்
அனுபவம்.
கங்கா மாதாவிற்கென உள்ள கோவில்,பிரம்ம
குண்டத்தைச் சுற்றி இராமர் கோவில்,விநாயகர் கோவில், ரங்கநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்கள்
உள்ளன.
பஞ்ச பாண்டவர்கள் இங்கு வந்ததாக
வரலாறு உண்டு. ஆகவே அவர்களுக்கும் திரௌபதிக்கும் இங்கு கோவில்கள் உண்டு.
இங்குள்ள குளத்தில் பீமன் தன்
காலை ஊன்ற உடனே அதிலிருந்து நீர் சுரந்ததாக வரலாறு கூறுகிறது.
ஹரித்வாரிலிருந்து சுமார் இரண்டு
கிலோ மீட்டர் தூரத்தில் கங்கை ஏழு பிரிவுகளாகப் பிரிகிறது. இது சாத் சரோவர் – ஏழு துவாரங்கள்
– என்று சொல்லப்படுகிறது.
கண்வ ஆசிரமம்
ஹரித்வாரிலிருந்து சுமார் 42 கிலோமீட்டர் தொலைவில் மாலினி நதிக் கரையில் அமைந்துள்ளது கண்வ ஆசிரமம்.
கோட்துவா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள இந்த இடத்தில் தான் கண்வ மஹரிஷி வாழ்ந்து வந்தார்.
அவர் வளர்த்த சகுந்தலையால் எழுந்த
மஹா காவியம் தான் காளிதாசர் இயற்றிய சாகுந்தலம்.
சகுந்தலை வளர்ந்த இடம், சகுந்தலை
துஷ்யந்தனைச் சந்தித்த இடம் உள்ளிட்ட அனைத்தையும் இங்கு பார்த்து மகிழலாம்; பயபக்தியுடன்
வணங்கலாம்.
ஹரித்வார் கும்பமேளா
ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு
ஒரு முறை நடக்கும் கும்ப மேளா உலகில் மிக அதிகமாக பக்தர்கள் கூடும் ஒரே உலகத் திருவிழாவாகும்.
சூரியன் மேஷ ராசியிலும் குரு பகவான் கும்பராசியிலும் இருக்கும்போது ஹரித்வாரில் கும்பமேளா
நடக்கும்.
அமிர்தத்தைப் பெற வேண்டி பாற்கடலை
தேவர்களும் அசுரர்களும் கடையும் போது கலசத்திலிருந்து சில துளிகள் நான்கு இடத்தில்
விழுந்தன.
பிரயாகை, ஹரித்வார், உஜ்ஜயினி,
நாசிக் ஆகியவையே அந்த நான்கு இடங்கள்.
இந்த நான்கு இடங்களில் அமிர்தத்
துளிகள் விழுந்த புனித சம்பவத்தை நினைவு கூர்ந்து புண்ணியம் அடைய கும்பமேளாவில் பக்தர்கள்
கூடுகின்றனர்;
1903இல் நான்கு லட்சம் பேர்
இந்தத் திருவிழாவில் கூடினர். 2010இல் நடந்த கும்பமேளாவில் நான்கு கோடி பேர் கலந்து
கொண்டு நீராடி புண்ணியம் அடைந்தனர்.
சாமான்யனில் ஆரம்பித்து காடுகளில்
தவம் செய்யும் முனிவர்கள் ரிஷிகள் மகான்கள் முடிய கும்பமேளாவிற்கென அனைவரும் வருகின்றனர்.
பக்தர்கள் நீராடுவதோடு இப்படிப்பட்ட ரிஷிகளை ஒருசேர தரிசிப்பதால் இரட்டை புண்ணியத்தை
அடைகின்றனர்..
இன்னும் இமயமலைக் காடுகளிலும்
கங்கை நதிக் கரையோரப் பகுதிகளிலும் ஆங்காங்கே அமைந்துள்ள நகர்களிலும் ஏராளமான அதிசயக்
கோவில்கள் உள்ளன; அந்தப் பகுதியில்
நிஜமாக நடந்த ஆயிரக்கணக்கான பிரமிக்க வைக்கும் வரலாறுகளும்
உள்ளன!.
இப்போதும் தொடரும் பல அதிசய
சம்பவங்கள் ஊடகங்கள் வழியே உடனுக்குடன் பரவி உலகினரை பிரமிக்க வைக்கின்றன.
ரிஷிகள் தவம் புரியும் ரிஷிகேசமே
மோட்சத்திற்கு வழி காண்பிக்கும் ஹரித்வாரை அடையச் செய்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல!
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
NOVEMBER
2019 ‘GOOD THOUGHTS’ CALENDAR
Festival days:- November 2- Sura Samharam in Skanda/ Kartikeya Temples; 9 Tulsi Vivah; 12 Guru Nanak Jayanti & Annabishekam (Kartik Purnima in North India; in Tamil Nadu it is on 10th December) ; 16 Gopi Ashtami;18- Sangabishekam in Shiva Temples (Bathing Shiva with holy water from Conch shells); 24 Guru Tej Bahadur martyrdom day.
Muhurta/
auspicious days- November 1,3, 10, 15,
22, 24
New moon/
Amavasyai – 26.
Full
moon/ Purnima day- 12
Hindu
Fasting /Ekadasi Days- 8 and 22/23
I have
chosen 30 Sumerian Proverbs which are similar to Indian Proverbs in Tamil and
Sanskrit. Great men think alike!
November
1 Friday
Dharma:- Who can
compete with righteousness It creates life
November
2 Saturday
Hindu Yudhdha Dharma- You should not cut the throat of that which has already had its throat cut.
November
3 Sunday
Hindu Wedding Mantras- Marrying
is human. Having children is divine
November
4 Monday
Arajaka in Valmiki Ramayana- In a city that has no
watch dogs,
the fox is the overseer.
November
5 Tuesday
Who possesses much silver may be happy;
who possesses much barley may be glad;
but he who has nothing at all may sleep.
November
6 Wednesday
Writing is the mother of eloquence and the father
of artists.
November
7 Thursday
Flatter a young man, he give you anything;
Throw a scrap to a dog, he’ll wag his tail.
November
8 Friday
Mata Pita Guru Deivam- Pay heed to the word of your
mother as though it were the word of a god.
November
9 Saturday
A sweet word is everybody’s friend.
November
10 Sunday
For a man’s pleasure there is marriage;
on thinking it over, there is divorce.
November
11 Monday
Conceiving is nice; pregnancy is irksome.
November
12 Tuesday
The wife is a man’s future; the son is a man’s refuge; the daughter is a man’s salvation; the daughter-in-law is a man’s devil.
November
13 Wednesday
Less Luggage, More Happiness-Who builds like a
lord, lives like a slave.
Who builds like a slave, lives like a lord.
November
14 Thursday
Vidura Neeti and Tirukkural – Do not return evil to
your adversary; maintain justice for your enemy, do good things, be kind all
your days. What you say in haste you may regret later.
November
15 Friday
Making loans is as [easy] as making love, but
repaying them is as hard as bearing a child.
November
16 Saturday
Hindu View- Go up to the ancient ruin heaps and
walk around; look at the skulls of the lowly and the great. Which belongs to
someone who did evil and which to someone who did good?
November
17 Sunday
Fear of ‘Papa’/ Sin- Commit no crime, and fear [of
your god] will not consume you.
November
18 Monday
Karma Theory- Has she become pregnant without intercourse? Has she become fat without eating?
November
19 Tuesday
Kalidas Advice – Bride, [as] you treat your
mother-in-law, so will women [later] treat you.
November
20 Wednesday
Against Drinking- If the beer mash is sour, how can
the beer be sweet?
November
21 Thursday
Anityam – The gods alone live forever under the
divine sun; but as for mankind, their days are numbered, all their activities
will be nothing but wind.
November
22 Friday
Be Perfect- If
a singer knows only one song but makes
the sound pleasant, he is indeed a singer!
November
23 Saturday
He who knows how to move around
becomes strong.
November
24 Sunday
You can have a lord, you can have a king, but the
man to fear is the tax collector!
November
25 Monday
Don’t be Aggressive- If you take the field of an enemy, the enemy will come and take your field.
November
26 Tuesday
He who possesses many things is
constantly on guard.
November
27 Wednesday
Be careful about your Speech-A
heart never created hatred; speech created hatred.
November
28 Thursday
Family comes First- He who does not support
a wife, he who does not support a child, has no cause for celebration.
November
29 Friday
Vidhi – Fate is a dog, well able
to bite.
November
30 Saturday
Be Perfect- If a scribe knows only a
single line but his handwriting is good, he is indeed a scribe!
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
போரில் பிறந்த புஸ்தகங்கள் என்ற
என்னுடைய கட்டுரை 1992 பிப்ரவரி 9-ல் தினமணிப் பத்திரிக்கையில் வெளியானது.
அந்தக்காலத்தில் அரசியல் என்பது
சாக்கடையென்றும் அதுதான் அயோக்கியர்களின் கடைசி புகலிடம் (Politics is the last refuge of a scoundrel என்றும் சொல்லுவர். இப்பொழுது அதை பத்திரிக்கை, டெலிவிஷன், திரைப்படம் போன்ற மாஸ் மீடியா (Mass Media people ) பேர்வழிகளுக்குச்
சூட்டலாம். எப்படி ஒரு போரில் அதிகமான பேர் இறக்க, இறக்க
தாக்கியவனுகு சந்தோஷம் வருமோ அது போல அதிகம் பேர் இறக்க, இறக்க
பத்திரிக்கைக் கா ரனுக்குக் கொண்டாட்டம். ஊர் இரண்டுபட்டால் அவர்களுக்கு அதிக Sales ஸேல்ஸ்.
வெளிநாடுகளைத் தாக்கும்போது
பத்திரிக்கையாளர்கள் ஒரு படி மேலே சென்று கூடுதலாகப் பொய் சொல்லுவார்கள்.
இல்லாததையும் பொல்லாததையும் போட்டி போட்டுக் கொண்டு ஜோடித்து எழுதுவார்கள்.
போர் தொடுக்கும் நாடு பொருளாதார
லாபத்துக்காகவும், அந்த நாட்டு வணிக கான்ட்
ராக்டுகளுக்கும், அங்கேயுள்ள பெட் ரோ லியம், யுரேனியம், தங்கம், வைரம்
ஆகியவற்றைக் கொள்ளையடிக்கவும் திட்டம் போடும். மாஸ் மீடியாவுக்கு இதில் பங்கு
கிடைக்காது. ஆனால் அரசு விளம்பரங்கள் கிடைக்கும். அவர்கள் புஸ்தகமும் கட்டுரைகளும்
எழுதி காசு சம்பாதிப்பர். சுருக்கமாகச் சொல்லபோனால் பிணம் தின்னிக் கழுகுகள். இதோ 1992ல் குவையத் – இராக் போர் நடந்த பின்னர் எழுந்த புஸ்தகங்களைப்
பாருங்கள்:–
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
கட்டுரை எண் : 7131 வெளியான
தேதி : 26-10-2019 – கீதையின் ஆறாவது கட்டளை-யைத் தொடர்ந்து வருவது இந்தக் கட்டுரை. இந்தத் தொடரில் இதுவே கடைசிக் கட்டுரை
ஜே.பி.வாஸ்வானி அவர்கள் கீதை
தருவதாகக் கூறும் ஏழு கட்டளைகளுள் கடைசிக் கட்டளை இது:
ஏழாவது கட்டளை :
Thou
Shalt Rejoice in Everything That the Will of God Brings to Thee
கடவுள் உனக்கெனக் கொண்டு வரும் எதிலும் சந்தோஷப்படு
இதைப் பற்றி அவர் தரும் விளக்க
உரையில் சில முக்கியமான கருத்துக்களை இங்கே பார்ப்போம்:
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம்
சரணம் வ்ரஜ|
அஹம் த்வாம் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி
மா சுச:||
-கீதை அத்தியாயம் 18 – ஸ்லோகம்
66
அனைத்து அறங்களையும் துறந்து
விட்டு என் ஒருவனையே சரண் அடை; நான் உன்னை சகல பாவங்களிலிருந்தும் விடுவிப்பேன். வருந்தாதே.
இது கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக்
கூறிய அருளுரை.
இதை ராமானுஜர் கீதையின் சரம
ஸ்லோகம் – கடைசியான – முத்தாய்ப்பான ஸ்லோகம் என்று கூறியுள்ளார்.
அனைத்தையும் கடவுளிடம் விட்டு
விடு. அவரை முழுமையாக நம்பு. அவர் உனக்கு மிகவும் சிறந்ததையே அருள்வார் என்பதை அறிவாயாக.
இதைப் பற்றி, சில முக்கியமான
ஆலோசனைகள் உங்களுக்கு உதவக் கூடும்.
அவை இவை தான்:
இடையூறுகளை புன்னகையுடன் எதிர்
கொள்க. சோதனைகளையும் தற்காலிக தோல்விகளையும் அன்புடன் சந்தியுங்கள்.
பிரார்த்தனை என்பது உங்களுடைய
பழக்கமாகவே ஆகட்டும்.
இன்னும் அதிகம், அதிக நம்பிக்கைக்காக
பிரார்த்தியுங்கள்.
உலகியல் ரீதி, மன ரீதி, ஆன்மீக
ரீதியாக உள்ள அனைத்து வியாதிகளும் குணமடைவது ஆண்டவனின் தொடர்பினால் தான் என்பதில் உறுதி
கொள்ளுங்கள்.
வருவதை ஏற்றுக் கொள்ளுங்கள்.
ராமகிருஷ்ண பரமஹம்ஸர் அடிக்கடி
சொல்வது இது தான்: இறை நம்பிக்கை கொண்டவன் ஒரு மலைப்பாம்பு போல. அவன் இரைக்காக அலைய
மாட்டான். இரை அவனைத் தேடி வரும்.
ஒரு முறை பெரிய சக்ரவர்த்தி ஒருவன் புத்தரிடம் சரணடைய
நினைத்தான்.
தன் ராஜ்யம் மக்கள், அரண்மனை
அனைத்தையும் துறந்து துவராடை பூண்டான்.
புத்தரிடம் அவன் உபதேசம் பெறுவதைப்
பார்க்க அனைத்து பிட்சுக்களும் திரண்டனர்.
புத்தரிடம் சமர்ப்பிக்க தன்
வலது கையில் விலை உயர்ந்த வைரம் ஒன்றை அவன் வைத்திருந்தான்.
ஒரு வேளை வைரத்தை அவர் வாங்க
மறுத்தால் அவருக்கு சமர்ப்பிக்க ஒரு தாமரையைத் தன் இடது கையில் வைத்திருந்தான்.
புத்தரை அவன் நெருங்கி நடந்த
போது புத்தர் அவனை நோக்கி, “ அதைக் கீழே போடு” என்றார்.
உடனே மன்னன் வலது கையிலிருந்த
வைரத்தைக் கீழே போட்டான்.
பின்னர் நடக்க ஆரம்பித்தான்.
இப்போது புத்தர் கூறினார் :
“அதைக் கீழே போடு”
இந்த முறை மன்னன் தன் இடது கையிலிருந்த
தாமரை மலரைக் கீழே போட்டான்.
பின்னர் நடக்க ஆரம்பித்தான்.
இப்போது புத்தர் கூறினார் :
“அதைக் கீழே போடு”
மன்னன் ஒரு கணம் திகைத்தான்.
பின்னர் புரிந்து கொண்டான்.
எல்லாவற்றிற்கும் காரணமான ‘நான்’ என்னும் எண்ணம் ஒரு போதும் இருக்கக் கூடாது என்று அவர் கூறிய போதனையை நினைவு கூர்ந்தான்.
தனது ‘தான்’ என்ற எண்ணத்தையும் விட்டான்.
புத்தர் அவனை அருள் கூர்ந்து
நோக்கினார்.
முழுவதும் சரணடைந்த அவனை ஏற்றுக்
கொண்டார்.
***
சாது வாஸ்வானியை பத்திரிகையாளர்
ஒருவர் சந்தித்தார்.
ஏராளமான அலுவல்களால் உங்கள்
டயரி நிரம்பி வழிந்திருக்குமே என்றார் அவர்.
அதற்கு சாது வாஸ்வானி, “எதையும்
நான் திட்டமிடுவதே இல்லை. இறைவன் என்னை வழி நடத்த விட்டு விடுகிறேன்” என்றார்,
***
சாது வாஸ்வானி மூன்று “கொல்லிகளை” (Killers) மனித குலத்தின் கொல்லிகள் என்றார்.
கடிகாரம், காலண்டர், டெலிபோன்
( The
Clock, The Calender and the Telephone) ஆகிய மூன்று தான் அவர் கூறிய் கொல்லிகள்!
அனைத்தையும் இறைவனிடம் விட்டு
விடுங்கள் என்பதே அவரது அருளுரை!
***
அருமையான ஏழு கட்டளைகளை இப்படி
விளக்கியுள்ள சாது வாஸ்வானி அவர்களின் உரைகள் The Seven
Commandments of the Bhagavad Gita புத்தகத்தில் 417 பக்கங்களில் இன்னும் ஏராளமான கதைகள், சம்பவங்கள், உவமைகள், செய்யுள்கள்,
ஸ்லோகங்கள், கருத்துக்கள் ஆகியவற்றுடன் உள்ளன.
அன்பர்கள் படித்து மகிழலாம்.
அவர் எழுதிய ஒரு புத்தகத்தில்
உள்ள சில கருத்துக்களையே நாம் இந்தத் தொடரில் பார்த்தோம்.
இன்னும் சுமார் 78 புத்தகங்களை
அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அனைத்தையும் படித்தால் ஆன்மீக ஞானம் மிகவும் பெற்றவர்களாக
ஆவோம் என்பதில் ஐயமில்லை.
பகவத் கீதையைப் படிப்போம்; அதன்
வழி நடப்போம்; உயர்வோம்!
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
CHARAKA and
SUSHRUTA lived at least 2300 years ago.
Kautilya, author of Athasastra also lived 2300 years before our time. It is
amazing that they described various types of fermented drinks.
Charaka lists
nine sources of spirituous liquor or fermented drinks. These are- cereals, fruits, roots, wood, flowers,
stems/stalks, leaves, barks of plants and sugar -yielding canes. From these,
the preparation of 84 different kinds of ‘asava’(wine) has been described.
The nine
main classes of liquors from the nine sources, mentioned above, are named respectively
as-
Dhania asava
Phalasava,
Mulasava
Sarasava,
Pushpasava,
Patrasava,
Kandasava,
Tvagasava,
Sarkasrasava
xxx
In Arthasastra
In a chapter
defining the duties of the Superintendent of Liquor, Kautilya writes,
By employing
such men as are acquainted with the manufacture of liquor and ferments 9kinva),
the superintendent of liquor shall carry on liquor traffic not only in forts
and county part (shops), but also in camps…………….
Various kinds of liquors described are-
Medaka
Prasanna
Asava
Arista
Maireya
Madhu
Medaka is
prepared from the fermentation of rice;
Prasanna from
the fermentation of flour with addition of spices and the fruits of Putraka (a
species of tree in the country of Kamarup/Assam).
Asava is the
liquor derived from the fermentation of sugar mixed with honey.
Jaggery mixed
with powder of long and black pepper or with the powder of triphala (mixture of
Terminalia chebula, Terminalia balerica, and Phyllanthus emblica), when
fermented , forms Maireya.
Fermented
grape juice is Madhu. The preparation of different kinds of arista for different
diseases can be learnt from the physicians.
Kinva or
ferment is prepared from boiled or unboiled paste of ‘masha’ (Phaseolus radiatus),
rice and Morata (Alanium salvifolium) and the like.
The liquor
that is manufactured from mango fruits may contain a greater proportion of
mango essence or of spices. It is called maha sura when it contains sambhara
(spices).
It is
interesting to note that Kautilya writes that all varieties of liquor other than that used for
the king are taxable with 5 percent as toll. These include acid drinks prepared
from fruits (phalamla) and spirit distilled from molasses (amla sidhu). But on
the occasion of festivals, fairs (samaja) and pilgrimage it is permissible to
manufacture liquor for four days (chaturahassaurikah) – liberty to drink liquor
without limit
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
இப்பொழுது இந்திய கலைப் பொக்கிஷங்கள் , கோவில் சிலைகள் ஆகியன திருடு போவதும், பெரும்பாலானவை வெளிநாட்டுத் தனியார் வீடுகளிலும் மியூஸியங்களிலும் இருப்பதும் புதுப் புதுச் செய்தியாக தினமும் வெளியாகின்றன. புகழ் பெற்ற ஏல நிறுவனமான ஸதபிஸ்ஸின் ஒரு அதிகாரி மட்டும் 1992ல் மாட்டிக் கொண்டு சிறைக்குச் சென்றார். ஆயிரம் களவாணிகளில் அகப்பட்ட ஒரே களவாணி அவர். ஆனால் தப்பித்தோரோ லட்சம் பேர். ஏனெனில் பிரிட்டிஷ் சுங்க இலாகாவினர் கடத்தல் பொருட்களைப் பிடிக்க சட்டம் இல்லை. இந்தியக் கலைப் பொக்கிஷம் என்று தெரிந்தே அவர்கள் உள்ளே விட்டனர். இதோ நான் 1992ல் தினமணியில் எழுதிய கட்டுரை.
29-10-19 news
தங்கம் விலை உயரும்!!
Sunday February 9, 1992 (Dinamani Newspaper)
அவ்வப்பொழுது தங்கம் விலை பற்றியும் எழுதி வந்தேன். செட்டியார் போல புத்திசாலியாக வீட்டு மனைகளிலும் தங்கத்திலும் மட்டும் முதலீடு செய்தால் காலமோ, ஷேர் மார்க்கெட்டோ, பருவமோ அவைகளை அழிக்கவே முடியாது. வாழ்க செட்டியார் பாலிஸி.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
22 Jun 2013 – Picture shows Prof. Bin He pf Minnesota University with his thought powered helicopter. Those who use this article in other blogs must name the author London Swaminathan and Blog name. (English version of this article is …