EVERYBODY NEEDS A BREAK; HAPPY HOLIDAYS

HAPPY HOLIDAYS!

LET US MEET AGAIN ON 15TH JUNE 2022!!

LONDON SWAMINATHAN

யாரும் காணாத ஒரு அதிசய மூலகம் (Post No.11,009)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,009

Date uploaded in London – –    21 MAY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

அஸ்டடீன் ASTATINE என்ற மூலகம் (element) யாருமே காணமுடியாத மூலகம்/தனிமம் ; இந்தப் பூவுலகில் 118 தனிமங்கள் உண்டு என்பதை நம் அறிவோம். ஆனால் யாருமே காண முடியாத, மறைவான மூலகம் பற்றிப் பலரும் அறியார். இதன் பெயரை சம்ஸ்க்ருதம் அறிந்தவர் எளிதில் புரிந்து கொள்ளுவர் .அஸ்டடோஸ் (astatos) என்ற கிரேக்க சொல்லுக்கு நிலையற்ற, நீடித்திராரத என்று பொருள்; ஸம்ஸ்க்ருதத்தில் அ+ ஸ்தித .

அயோடின் என்னும் மூலகத்தை அடுத்து இப்படி ஒரு மூலகம் இருக்கவேண்டும் என்பதை அறிந்து இதைக் கண்டுபிடித்ததாக அல்லிசன் (F Allison) என்ற விஞ்ஞானி 1931ல் அறிவித்தார். அதற்கு அமெரிக்காவின் அலபாமா (Alabamine) பெயரையும் சூட்டினார். அவர் சொன்னதை உலகம் தவறாகப் புரிந்து கொண்டது ஆகையால் 1940-ல் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மூவர் இதை உற்பத்தி செய்து காட்டியவுடன் உலகம் ஒப்புக்கொண்டது

அவர்களும் ஆராய்ச்சியைத் தொடர முடியவில்லை. இரண்டாவது உலக யுத்தம் காரணமாக எல்லா விஞ்ஞானிகளும் அணுகுண்டு உற்பத்தியில் (Manhattan Project) முனைப்பு காட்டினார்கள் .

பூமியின் மேற்பரப்பில் 30 கிராம் மட்டுமே இந்த தனிமம் (element)  இருப்பதாக மதிப்பிடுகின்றனர். தோரியம், யுரேனியம் போன்ற மூலகங்கள் கதிரியக்கத்தில் தேயும் போது அஸ்டடீன் உற்பத்தியாகிறது. ஆனால் இது நிலைத்திராது .இதன் ஐசடோப்புகள் 215, 218, 219 ஆகும்  பிஸ்மத்  என்னும் மூலகத்தை ஆல்பா துகள்களால் தாக்கினால் ஐசடோப் Astatine 210, Astatine 211 ஆகியன கிடைக்கும்.

ரசாயன குணங்கள்

குறியீடு – At

அணு எண் – 85

உருகு நிலை – 300 டிகிரி C

கொதி நிலை  – 340 டிகிரி C

அஸ்டடீன் ஒரு உலோகம் அல்ல. அயோடின் போன்ற ஒரு உப்பு. அதே போல ஹாலோஜன் (Halogen Group) குழுவைச் சேர்ந்தது.

இதன் ஐசடோப்புகளில் நீண்ட காலம் வாழும் பொருள் அஸ்டடீன்- Astatine 210 ஆகும். அது எட்டு மணி நேரத்தில் பாதியாக (Half life) கரைந்துவிடும். அடுத்த எட்டு மணி நேரத்தில் அதில் பாதி போய்விடும். இதனால் இதை ஆராய்வது கடினம். சில கரைசல்களில் இது இருப்பதை வைத்து இதன் இருப்பு/ பிரசன்னம் அறியப்படுகிறது .

ஒரு கிராமில் ஒரு லட்சத்தில் ஒரு பகுதிதான்(Millionth of a Gram)  இதுவரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது!!!! அப்படி உற்பத்தியானதும் கதிரியக்கத் தேய்மானம் மூலம் மறைந்துவிட்டது. ஆகையால் இதை எவரும் கண்டதில்லை. கண்டுபிடிக்கும் அளவுக்கு உற்பத்தியும் செய்ய முடியாது. அப்படி எவரேனும்  உற்பத்தி செய்தாலும் அதன் கதிரியக்க (Radiation Heat) வெப்பம் அதை ஆவியாக மாற்றி விடும்

யார் அறிவார் ? பயனற்ற, கண்ணுக்குத் தெரியாத இந்த தனிமமும் ஒரு காலத்தில் மனித குலத்துக்கு ஏதேனும் நன்மை செய்யக்கூடும் .

–subham–

tags- Astatine, அஸ்டடீன் ,கண்ணுக்குத் தெரியாத, தனிமம்

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் 56 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் கற்போம் (Post.11,008)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,008

Date uploaded in London – –    21 MAY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் 56 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் கற்போம்

மேதாஹா 10-34 மேதை, அறிவு , புத்தி

மேதாவி 18-10 அறிவாளி

ம்ருத்யும் 13-25 மரணம் /ஸம்ஸாரத்தை

மேருஹு 10-23  மேரு மலை; கடவுளரின் இருப்பிடம்

மைத்ரஹ  12-13  நட்பு பாராட்டும் , சிநேகம் பூண்டவனாய்

மோக்ஷ காங்க்ஷிபிஹி  17-25 மோட்சத்தை நாடும்

மோக்ஷ பராயணஹ 5-28  மோட்சத்துக்காக முழு முயற்சி செய்யும்

மோக்ஷயிஷ்யாமி 18-66 நான் உன்னை விடுதலைபெறச் செய்வேன்

மோக்ஷம் -18-10 வீடு பேறு , விடுதலை

மோக்ஷ்யஸே 4-16 நீ விடுதலை பெறுவாயோ

MOGHA WORDS

மோக கர்மாணஹ  9-12 வீண் தொழில்கள்   உடையவர்களும்

மோக ஞானாஹா  9-12  வீண் அறிவு  உடையவர்களும்

மோகம் 3-16 MOGHAM

மோகாசாஹா 9-12  வீண் ஆசை உடையவர்களும்

மோதிஷ்யே 16-15 நான் மகிழ்வேன்

MOHA WORDS

மோஹ கலிலம் 2-52  மோகமாகிற கலக்கத்தை

மோஹ ஜால ஸமாவ்ருத்தகா 16-16 மோகமாகிய வலையில் அகப்பட்டு

மோஹனம் 14-8  மோகத்தை விளைவிக்கும்

மோஹ்யஸி  3-2  மயக்குகிறவன் போல

மோஹம்  4-35 MOHAM மோகத்தை

மோஹஹ  11-1  மோகமானது

மோஹாத் 16-10 மதி மயக்கத்திலிருந்து

மோஹிதம்  7-13  மோகத்தை (அடைந்திருக்கிறது)

மோஹிதாஹா  4-16 மயங்குகின்றனர்

மோஹினீம் 9-12 மதியை மயக்கும்

மெளனம் 17-16 பேசா விரதம்

மெளனி  12-19 பேசாமல் இருப்பவர்

ம்ரியதே 2-20 இறக்கிறான்

XXXX

ய சொற்கள் 

யக்ஷ ரக்ஷஸாம் 10-23 யக்ஷர், ராக்ஷஸர்களுக்குள்

யக்ஷ ரக்ஷஆம்சி 17-4  யக்ஷர்களையும் ராக்ஷஸர்களையும்

யக்ஷ் யே 16-15  யக்ஞம் செய்வேன்

யச் ரத்தஹ 17-3  எவ்வகை சிரத்தை உடையவனோ

யஜன்தஹ 9-15  பூஜிப்பவர்களாயும்

யஜந்தே  9-23 பூஜிக்கின்றார்களோ

யஜுஹு 9-17 யஜுர் வேதம்

யக்ஞ க்ஷபித கல்மஷாகா  4-30 யக்ஞத்தால் பாவம் தேயப்பெற்றவர்கள்

யக்ஞ தபஸாம் 5-29  யாகத்துக்கும்  தவத்துக்கும்

யக்ஞ தபஹ  க்ரியாஹா 17-25  வேள்வி, தவக் கிரியைகள்

யக்ஞ தான தபஹ  க்ரியாஹா 17-24 யக்ஞம், தானம், தவம் முதலிய கருமங்கள்

39 words added from part 56, Gita word index

TO BE CONTINUED………………………………….

TAGS – gita index 56, Bhagavd Gita, word indes in Tamil

தொழில்நுட்பத்தை ஒதுக்கினால், உலகம் ஒதுக்குபவரை ஒதுக்கி விடும்! (11,007)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,007

Date uploaded in London – –     21 MAY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

தொழில்நுட்பத்தை ஒதுக்கினால், உலகம் ஒதுக்குபவரை ஒதுக்கி விடும்!

ச.நாகராஜன்

உலகம் அதி வேகமாக முன்னேறி வருகிறது.

தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் நம்மை பிரமிக்க வைக்கிறது.

ஆனால் ,‘இதெல்லாம் நமக்கு இல்லை’, என்று எவர் ஒருவர் வளர்ந்து வரும் தொழில்நுட்பபத்தை மதிக்காமல் ஒதுக்கி வைக்கிறாரோ அவர் உலகத்தால் ஒதுக்கி வைக்கப்படுவார்.

எந்தத் தகவல் பரிமாற்றமும் ஒரு சில விநாடிகளில் கண்டம் விட்டு கண்டம் நடக்கிறது.

Whatsapp மஹிமை. ஒரு சந்தேகம் என்றால் அதை உடனே தகுந்த ஒருவர் அரை நிமிடத்தில் தீர்த்து வைக்கிறார்.

பழைய காலத்தில் இதற்கு ஆகும் காலமும் செலவும் அதிகம்.

Facebook, Tweet, Email ஆகியவற்றால் நண்பர்கள் குழு வலுவாகிறது; வளர்கிறது.

வீட்டிற்கு வருவோர் யார் என்பதை நம்மால் வீட்டிற்குள்ளிருந்தே பார்க்க முடிகிறது. பூட்டைத் திறந்து உள்ளே போக வேண்டாம். ரிமோட்டில் கதவு திறக்கிறது.

விளக்குகளை தூரத்திலிருந்தே ரிமோட் மூலம் ‘ஆன்’ செய்கிறோம்.

சுழலும் ஃபேனை தூரத்திலிருந்து ஆஃப் செய்கிறோம்.

வீட்டு அறைகளை சுழன்று கொண்டே சில நிமிடங்கள் சுத்தம் செய்து நீரால் கழுவி விடும் மெஷின்கள் அனேகமாக அனைவர் இல்லத்திற்கும் வர ஆரம்பித்து விட்டது!

Drivierless Car, Space Journey என்று எதிர்காலம் வழங்கவிருக்கும் புதுமைகள் ஆயிரம்.

மனிதன் அருவருப்புடன் செய்யக் கூடிய வேலைகளை – கழிவறை சுத்தம் போன்றவற்றை ரொபாட்டுகள் செய்ய முன் வருவதைப் பார்க்கிறோம்.

மனிதன் செய்ய முடியாததை அல்லது செய்யப் பயப்படுவதை ரொபாட்டுகள் செய்கின்றனர்.

கனமாக ஒரு பொருளை  உயரமான ஒரு இடத்திற்கு ரொபாட்டுகள் அனாயாசமாகத் தூக்குவதைப் பார்க்கிறோம்.

ஆக, செல் போனாகட்டும், ஈ மெயில் ஆகட்டும், வாட்ஸ் ஆப் ஆகட்டும் அனைத்து தொழில்நுட்பங்களும் இன்றைய வாழ்க்கை முறையில் அத்தியாவசிய தேவை.

பூக்காரி கூட நடந்து கொண்டே செல் போனில் பேசி வியாபாரத்தை முடிப்பது இன்றைய நடைமுறை.

இதை வேண்டாம், இது எனக்குத் தெரியாது என்று சொன்னால் அப்படிச் சொல்பவரை உலகம் ஒதுக்கி விடும்; முன்னே போய்க்கொண்டே இருக்கும்.

ஆனால் ஒரு எச்சரிக்கையும் தேவை.

இந்த தொழில்நுட்பங்களை நமது முன்னேற்றத்திற்காக ஆதாயத்திற்காகப் பயன்படுத்த வேண்டும் ; அப்போது நாம் தொழில்நுட்பத்தை விட புத்திசாலிகள் ஆவோம்.

ஆனால் வெட்டி அரட்டைக்கும், ஒவ்வொரு நாளும் தேவையற்று காலை வணக்கம் சொல்வதற்கும் பயன் படுத்தினால் நாம் முட்டாள் ஆவோம்.

ட்விட்டர் மூலமாக எவ்வளவு சண்டைகள்! ஃபேஸ் புக் மூலமாக எவ்வளவு அனாவசிய வம்பளப்புகள்.

க்ரூப் மூலமாக எவ்வளவு வெட்டி அரட்டைகள்!

தினசரி ஆயிரம் யோசனைகள்; இந்தக் கையை இங்கு அமுக்கு; அந்த விரலை அங்கு அமுக்கு – கான்சர் வராது வந்தால் போய் விடும் என்றெல்லாம் போலிச் செய்திகள்!

எதையும் யாரும் சரிபார்க்காமலேயே ஆயிரமாயிரம் பொய்ச் செய்திகள் பறக்கின்றன.

ஊடகங்களுக்கு ‘தர்மம்’ என்றே ஒன்று இல்லை. (குறிப்பாக தமிழகத்தைச் சுட்டிக் காட்டலாம்)

இதில் தவறான பழைய போட்டோக்களைப் போடுவது. மார்பிங் செய்து படங்களைத் தருவது – என்ன ஒரு அயோக்கியத்தனம்!

இவை ஒவ்வொன்றையும் சரிபார்க்கவா முடியும்!

ஒட்டு மொத்தமாக மக்கள் ஊடகங்களை அறவே புறக்கணித்து விடுவார்கள்.

இது பொய்யில்லை.

ஒவ்வொரு தொழில்நுட்ப முன்னேற்றத்திலும் அதைத் தவறாகப் பயன்படுத்துவோர் தான் முதல் அடி வாங்குவர்.

அவர்கள் சேமித்த அனைத்தும் கடலில் கரைத்த உப்பு போலக் கரைந்து விடும்.

ஏனெனில் இது அறநெறி.

அறநெறி எந்தக் காலத்திற்கும் பொருந்தும்; எல்லோருக்கும் பொருந்தும்.

ஆகவே தான் அற வழியில் தொழில் நுட்பத்தைத் தேவையான தேவையான அளவு தேவையான முறையில் தேவையானவர்கள் பயன்படுத்த வேண்டும்.

அப்படிப் பயன்படுத்தினால் பயனர்கள் புத்திசாலிகள்;

இல்லையேல் தொழில்நுட்ப சாதனங்கள் அவர்களை முட்டாளாக்கிப் புதைகுழியில் ஆழ்த்தி விடும்!

காலம் காலமாக உள்ள பல நூற்றாண்டு வரலாறுகள் நமக்குப் போதிக்கும் பாடம் இது தான்!

***

மூன்று வகையான வெற்றிகள் (Post No.11,006)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,006

Date uploaded in London – –    20 MAY 2022        

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

இந்து மத மன்னர்கள் போர் தொடுப்பதிலும் கூட சில கொள்கைகளைக் கடைப்பிடித்தனர். ‘அவன் இருந்தால் நம்மை வாழ விடமாட்டான்’ என்ற நிலையில் மட்டுமே எதிரியைக் கபளிகரம் செய்வார்கள். அல்லது தங்கள் குலத்தில் ஒருவனைக் கொன்று இருந்தால் வஞ்சம் தீர்க்க எதிரியையும் கொல்வார்கள் ; பெரும்பாலும் தர்ம யுத்தமே நடந்தது.

தேர் வீரன், தேர் வீரனுடனும் குதிரை வீரன், குதிரை வீரனுடனும் தான் சண்டையிட வேண்டும். மல் யுத்தம் போல இருந்தால் இருவரும் ஆயுதம் எடுக்காமல் வெற்றி தோல்வியை முடிவு செய்வார்கள். காலையில் துவங்கி மாலை சூரிய அஸ்தமனத்துடன் போரை முடித்த பின்னர் காயமடைந்தோருக்கு சிகிச்சை தருவார்கள் .அது மட்டும் அல்ல. ஊருக்கு ஒதுக்குப் புறமான இடத்தில் வீரர்கள் , மற்ற வீரர்களோடு மட்டுமே சண்டையிட்டனர். பொது மக்கள் பாதிக்கப்படவில்லை.

வாலியைக் கொன்றுவிட்டு சுக்ரீவனை முடிசூட்டிய ராமன், வாலியின் மகனுக்கு அடுத்த முக்கியத்துவம் கொடுத்தான். இந்திய மண்ணிலேயே விபீஷணனுக்கு முடி சூட்டி, ராவணன் இறந்த பின்னர், இலங்கையையே அவனிடம் ஒப்படைத்தான்.

மூன்று வகையான வெற்றி

‘உலக மஹா கவிஞன்’, ‘கவி குல குரு’ என்று போற்றப்படும் காளிதாசன், அவனது ரகு வம்ச காவியத்தின் முதல் அத்தியாயத்திலேயே சூரிய குல மன்னர்களின் குணாதிசயங்களை  வருணிக்கிறான்.

தானம் செய்வதற்காகவே சம்பாதிப்பார்கள்”

தப்பித்த தவறியும் வாயில் பொய் வரக்கூடாது என்பதற்காக அளந்து பேசுவார்கள்.”

செக்ஸ் SEX என்பதை விட்டு வம்ச விருத்திக்காக திருமணம் செய்து கொள்வர்”.

புகழ் பெற வேண்டும் என்பதற்காக போர் செய்வார்கள்”

யஸசே விஜிகீஷுணாம்”  என்பது காளிதாசன் வாக்கு .

2400 ஆண்டுகளுக்கு முன்னர் கெளடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் மூன்று வகையான வெற்றிகளை வருணிக்கிறார்.

அவை தர்ம விஜய , லோப விஜய, அசுர விஜய என்பதாகும் ; அற வெற்றி, பண வெற்றி, மூர்க்க குண வெற்றி என்று இவற்றைத் தமிழில்  சொல்லலாம்.

தர்ம வெற்றியில், தான் பிடித்த நாட்டை எதிரியிடமே மன்னன் கொடுத்துவிடுவான் ; அவனும் வெற்றி பெற்ற மன்னனை தனக்கும் மேலான வீரன் என்று போற்றுவான் . கப்பமும் கட்டவேண்டும் .

ஹிந்து மன்னன் போரஸ் என்னும் புருஷோத்தமனை வெற்றி கொண்ட

அலெக்ஸ்சாண்டர் , போரஸிடமே நாட்டை ஒப்படைத்தார். அசுவ மேத யாகத்தில் குதிரை சென்ற இடமெல்லாம் வெற்றி பெற்ற மன்னனுக்கு சொந்தமாயினும் அந்த மன்னர்கள் கொல்லப்படவில்லை இது தர்ம விஜயம். த்ரேதாயுகமான ராமாயண கால யுத்தங்கள் இவ்வகைத்தே.

லோப விஜயத்தில், தோற்றுப்போன மன்னன் கட்டாயம் கப்பம் கட்டவேண்டும். ஆனால் தோல்வி அடைந்த மன்னனே அந்த நாட்டை ஆள்வான். வெற்றி பெற்ற மன்னர்கள் எதிரி  நாட்டின் பெரும்பகுதியை தங்கள் நாட்டுடன் சேர்த்துக் கொள்ளுவர்

அசுரர் விஜய வெற்றியில், எதிரி மன்னன் கொல்லப்படுவான். அவன் நாடு தரை மட்டம் ஆக்கப்படும். அவன் நாட்டை வெற்றி வீரர்கள் சூறையாடுவர். கலியுகத்தில் நடைபெற்ற யுத்தங்கள் இவ்வகைத்தே. வெற்றி கொண்ட அரசன், முழு நாட்டையும் தன் நாட்டுடன் சேர்த்துக்கொள்ளுவான்.

துவாபர யுக முடிவில் கலியுகம் துவங்குவதற்கு 36 ஆண்டுகள் மட்டுமே இருந்த காலத்தில் மஹாபாரத யுத்தம் நடந்ததால் லோப + அசுர விஜய குணங்களைக் காண்கிறோம்.

கி.பி. 150ல் இந்தியாவின் மேற்கு பக்கத்தை ஆண்ட ருத்ரதாமனை வருணிக்கும் கிர்னார் – ஜூனாகட் கல்வெட்டு “பிரஷ்ட ராஜ பிரதிஷ்டாபக” என்று விளம்பும். அதாவது தட்சிண பத பேரரசர்களான சதகர்ணியை  இரு முறை தோற்கடித்த போதும் அவனிடமே நாட்டைத் திருப்பிக்கொடுத்தானாம். இது தர்ம விஜயம்

-subham —

-tags- மூன்று வகை , வெற்றிகள் , தர்ம, லோப, அசுர , விஜய , அர்த்தசாஸ்திரம், கெளடில்யர்

“சூதாட்டப் போரை நடக்க விடாமல் நீ தடுத்திருக்கலாமே,கிருஷ்ணா! (Post.11,005)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,005

Date uploaded in London – –     20 MAY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

“சூதாட்டப் போரை நடக்க விடாமல் நீ தடுத்திருக்கலாமே கிருஷ்ணா!” – உதங்கரின் கேள்வி!

ச.நாகராஜன்

மஹாபாரதப் போர் நடந்து முடிந்து விட்டது. கிருஷ்ணரின் இளமைப் பருவ நண்பரான உதங்கர் அவரைச் சந்தித்தார்.

கௌரவருக்கும் பாண்டவருக்கும் நடந்த போரில் ஏற்பட்ட இழப்பைக் கேட்டு வருந்தினார்.

கிருஷ்ணரிடம் அவர், “நீ உரிய காரணத்தைச் சொல்லவில்லை எனில் உன்னை சபிப்பேன்”, என்று சற்று கோபத்துடன் சொன்னார்.

கிருஷ்ணர் உடனே, “பெரும் தவத்தைச் செய்திருக்கிறீர். அனாவசியமாக என்னைச் சபித்து அதை வீணாக்க வேண்டாம்” என்று கூறியதோடு தாம் போரைத் தடுத்து நிறுத்த தூது சென்ற விவரத்தையும் கூறி, போர் தவிர்க்க முடியாததாக ஆகி விட்டது என்று விளக்கினார்.

விளக்கத்தைக் கேட்டு சாந்தமடைந்த உதங்கர் கிருஷ்ணரிடமிருந்து விடை பெற்றார்.

உதங்கர் நினைத்த இடத்தில் நீர் வருமாறு அவர் கேட்டபடி வரத்தையும் தந்தார் கிருஷ்ணர்.

அவதார காரியம் முடியும் சமயம்; கிருஷ்ணர் உதங்கரை அழைத்தார்.

தான் வந்த காரியம் முடிந்து விட்டது என்றும் புறப்படத் தயாராகி விட்டதாகவும் கூறிய கிருஷ்ணர் விடை பெறும் சமயம் உதங்கருக்கு ஏதேனும் தர விரும்புவதாகக் கூறினார்.

உதங்கருக்கு அற்புதமான கீதோபதேசம் ஒன்றை அவர் செய்தார்.

ஸ்ரீமத் பாகவதத்தில் பதினோறாம் ஸ்கந்தத்தில் இடம் பெறும் இந்த கீதை உத்தவ கீதை என அழியாப் பெயர் பெற்றது.

விடை பெற்றுச் ‘செல்லும்’ கிருஷ்ணரிடம் உதங்கர் சில கேள்விகளுக்கு  மட்டும் விடை பெற வேண்டும் என்று விரும்பினார். கிருஷ்ணர் அவரைக் கேள்விகளைக் கேட்க அனுமதித்தார்.

“கிருஷ்ணா, நீ சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்று இருப்பது போல எனக்குத் தோன்றுகிறது. மஹாபாரதம் என்ற நாடகத்தை அழகுற நடத்தி முடித்து விட்டாய். ‘செல்லவும்’ தயாராகி விட்டாய்! ஆனால் என் கேள்வி என்னவெனில் “யார் உண்மை நண்பன் என்பதே!” என்று உத்தவர் கேட்டார்.

அவர் என்ன கேட்க வருகிறார் என்பதை அறிந்த கிருஷ்ணர்,புன்சிரிப்பு தவழ, “தேவைப்படும் போது அழைக்கும் நண்பனுக்கு உதவுபவன் எவனோ, அவனைக் காப்பாற்றுபவன் எவனோ அவனே உண்மை நண்பன்” என்றார்.

“அப்படியானால் எனது அடுத்த கேள்வி இது தான். பாண்டவர்கள் உன்னை உற்ற நண்பனாக எண்ணினார்கள். உன்னை ஆபத்பாந்தவனாகக் கருதினார்கள். அப்படி இருக்கும் போது மூன்று காலமும் உணர்ந்த பெரிய ஞானியான நீ ஏன் தர்மபுத்திரர் சூதாட ஒப்புக் கொண்ட போதே சூதாடுவதைத் தடுக்கவில்லை? அப்படித் தடுத்திருந்தால் போர் நடக்க வாய்ப்பே ஏற்பட்டிருக்காதே” என்றார். மேலும் அவர் தொடர்ந்தார் :

“சரி அது போகட்டும் அவரை ஜெயிக்குமாறாவது நீ அருள் புரிந்திருக்கக் கூடாதா? சரி, அதுவும் இல்லையெனில் அவர் தன் தம்பிமாரைப் பணயம் வைக்கும் போதாவது சூதாட்ட களத்தில் நீ நுழைந்து தடுத்திருக்கலாம், அதையும் நீ செய்யவில்லை. திரௌபதியைப் பணயம் வைத்திருப்பதையாவது நீ தடுத்திருக்கக் கூடாதா? அவள் ஆடையை துச்சாதனன் அவிழ்க்கும் வரை பேசாமல் இருந்து விட்டாயே, பின்னர் அல்லவா நீ அவளைக் காப்பாற்றினாய், இது தான் ஏன் என எனக்கு விளங்கவில்லை. பதிலைச் சொல்லு” என்றார்.

இப்படிக் கேட்ட உத்தவர் அழத் தொடங்கினார்.

கிருஷ்ணர் அவரை தழுவி ஆறுதல் கூறினார். பின்னர் பதில் சொல்லத் தொடங்கினார்.

“உத்தவரே! உலக நியதி உமக்குத் தெரியாதா, என்ன? விவேகம் உள்ளவனே

எப்போதும் ஜெயிக்கிறான். ‘இது சரி, இது சரியில்லை’ என்பதை ஒருவன் எப்போதும் அறிந்த பின்னரே காரியத்தில் இறங்க வேண்டும். சூதாட்ட சமயத்தில் துரியோதனனுக்கு விவேகம் இருந்தது. அந்தச் சமயத்தில் தர்மபுத்திரருக்கு அது இல்லை.

ஏராளமான பணமும் பொருளும் இருந்தால் கூட துரியோதனனுக்கு சூதாட்டத்தில் எப்படி விளையாடுவது என்பது தெரியாது. தனக்குத் தெரியாது என்பது அவனுக்குத் தெரியும். ஆகவே அவன் விவேகத்துடன், “தன் பங்கிற்கு தனது மாமன் சகுனி ஆடுவான்” என்று சொல்லி பாண்டவரைச் சம்மதிக்க வைத்தான். ஆனால் அப்போது தர்மர் என்ன செய்திருக்க வேண்டும். சகுனியை எதிர்க்கத் தன்னால் முடியாது என்று அறிந்து, எங்கள் பங்கிற்கு எங்கள் கிருஷ்ணர் விளையாடுவார் என்று சொல்லி இருக்க வேண்டாமா?

நான் உருட்டிப் போடும் எனது பகடைக்காய்களின் எண்களை சகுனியால் எப்படியாவது அறிய முடியுமா என்ன, அல்லது அவன் உருட்டும் காய்களின் எண்களை என்னால் அறிய முடியாதா என்ன? ஒரு சில நிமிடங்களில் ஆட்டம் முடிந்து துரியோதனன் ஆட்டம் போடுவது முழுவதுமாக முடிந்திருக்குமே! ஆனால் விவேகம் இன்றி நான் சூதாட்ட அரங்கினுள் வரக்கூடாது என்றல்லவா தர்மன் எண்ணினான். அவன் விதி அவனை விடவில்லை. தனது பிரார்த்தனையால் என்னைக் கட்டிப் போட்டு அங்கு வர விடவில்லை. பீமன், அர்ஜுனன், நகுல, சகாதேவன் தோற்ற போது கூட அவர்கள் துரியோதனனைதத் திட்டுவதிலேயே குறியாக இருந்தார்களே தவிர என்னை அழைக்க யாருக்கும் தோன்றவில்லையே! திரௌபதி கூட துச்சாதனன் அவள் கேசத்தைப் பிடித்து இழுத்து வந்த போதோ ஆடையைத் துகில் உரிக்கத் தொட்ட போதோ என்னை அழைக்கவில்லை. அவன் துகில் உரிக்க ஆரம்பித்தவுடன் தன்னை மறந்து என்னைச் சரண் அடைந்தாள். அந்தக் கணமே நான் வஸ்த்ராவதாரம் எடுத்து அவள் மானத்தைக் காப்பாற்றினேன். ஒரு கணத்தில் ஓடி வந்தேனே”

கிருஷ்ணரின் இந்தப் பதிலைக் கேட்ட உத்தவர் பிரமித்துப் போனார்.

“ஐயனே! அப்படியானால் எப்போதும் நீ அழைத்தால் தான் வருவாயா? நீயாக உனக்கு உற்றவரிடம் வர மாட்டாயா? எனக்கு பதிலைச் சொல்லு” என்று கேட்டார்.

கிருஷ்ணர் சிரித்தவாறே, “உத்தவரே! இந்தப் பூவுலகில் ஒவ்வொருவரும் அவரது கர்மாவின் படியே வாழ்க்கையை நடத்துவர். நான் எதையும் நடத்துவதுமில்லை. எவர் காரியத்திலும் புகுவதுமில்லை. நான் சாட்சி பூதமாக மட்டுமே விளங்குகிறேன். புரிந்து கொள்ளும்” என்றார்.

உத்தவர் உடனே, “அப்படியானால் நீ எங்கள் அருகிலேயே சாட்சியாய் இருப்பாய். ஆனால் நாங்கள் பாவம் செய்தாலும் அதைச் செய்து கொண்டே இருக்க விடுவாயா, என்ன? இப்படிப் பாவச் சுமையைக் கூட்டி நாங்கள் துன்பப்படுவதைத் தான் நீ அனுமதிக்கிறாயா? என்று கேட்டார்.

“உத்தவரே! உமது வார்த்தைகளை நன்கு கவனியும்! நான் சாட்சியாய் உங்கள் அருகே இருக்கும் போது, அதை நீங்கள் உணரும் போது, எப்படி நீங்கள் தப்பு செய்ய முடியும்? என்னை மறந்து தன்னால் செய்ய முடியும் என்று நினைக்கும் போது தான் பிரச்சினையே ஆரம்பமாகிறது. தர்மராஜர் எனக்குத் தெரியாமல் தானே விளையாடி ஜெயிக்க முடியும் என்று எண்ணியதில் தான் அபாயம் ஆரம்பித்தது. சாட்சியாய் நான் அருகில் இருப்பதாக அவர் எண்ணியிருந்தால் சூதாட்டத்தின் முடிவு வேறாக அல்லவா இருந்திருக்கும்” என்று முடித்தார் கிருஷ்ணர்.

உத்தவர் பிரமித்து நின்றார். நன்கு சிந்திக்கத் தொடங்கினார்!

மஹாபாரதப் போரிலே கூட கிருஷ்ணர் சண்டையிடவில்லை. அர்ஜுனனையே போரிடச் செய்தார்.

சாட்சியாக எல்லோரிடமும் இருக்கும் கிருஷ்ணரிடம் நமது சர்வத்தையும் அர்ப்பணித்து பயனை எண்ணாமல் காரியங்களைச் செய்து கொண்டே போனால் பொறுப்பு அவனுடையது அல்லவா?

உத்தவருக்கு சர்வமும் புரிந்தது! கிருஷ்ணருக்கு விடை கொடுத்தார்.

உத்தவருக்கு கிருஷ்ணர் உபதேசித்த கீதை அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று! ஏனெனில் அது தான் கிருஷ்ண பகவானின் கடைசி உபதேசம்!

கிருஷ்ணர் அர்ஜுனனனுக்கு உபதேசித்த பகவத் கீதை அனைவரும் அறிந்த ஒன்றே!

பகவத் கீதையின் சாரத்தை பாரதியார் இரு வரிகளில் இப்படித் தருகிறார்:

“பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான்

பலனை எண்ணாமல் உழைக்கச் சொன்னான்”

“மாம் அனுஸ்மர, யுத்த ச” (என்னை நினை; யுத்தம் செய்)

வாழ்க்கை என்னும் போரில் வெல்வதற்கு ‘மாம் அனுஸ்மர’ என்பதே கண்ணன் கொடுத்த சரியான ஆயுதமாகும்!

***

tags–  மஹாபாரதப் போர், . கிருஷ்ணன், உதங்கர் , கீதை

RUDRA DAMAN- THE GREATEST ENGINEER OF INDIA (Post No.11,004)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,004

Date uploaded in London – –    19 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

Rudra daman is a name which no Indian can forget for three reasons.

  1. He has documented India’s great engineering skills
  2. He has shown the great development of Sanskrit language in India
  3. Indians have historical sense.

Earlier I wrote many articles in my two blogs to show that Indians had advance engineering skills. But all my previous articles were based on literature. So there may be some exaggeration. But Rudra daman who ruled the western parts of India around 150 CE has left us a beautiful record in history in the form of inscriptions in Girnar in Gujarat.

Girnar hill itself is a historical wonder where we find inscriptions of Asoka and others covering 500 years of Indian history. Probably that’s the only place in the world where we find 500 year inscriptions in one place. We may call it the Rosetta Sone of Indian History.

So far, we know that Bhagiratha was the greatest civil engineer who diverted River Ganga into the plains of Uttarakhand, Uttar Pradesh, Bihar and West Bengal. His forefathers also tried it, but in vain. Bhagiratha succeeded in diverting the river. Earlier some of the river water was wasted.

Agastya of Rigveda followed Bhagiratha and diverted River Kaveri in Karnataka towards Tamil Nadu. Thanks to Agastya now Thanjavur area became fertile land.

Same Agastya beat Bhagiratha in three more feats.

He was the one who laid Road Route in the middle of thick forest on top of Vindhya hills. Rama was able to cross the Vindhyas along the road route. Earlier kings were using coastal routes and boats.

Agastya also took the Tamils and others to South East Asia to establish Hindu kingdoms which survived for 1500 years. (Read my article Pandya King who ruled Vietnam)

Tamils were great navigators because of their proximity to sea. They knew the secret of South West Monsoon. Karikal cholza’s forefathers were praised in Tamil Sangam literature as the ones who ruled over Wind. One Tamil idiot by name Hippalus revealed this secret of monsoon to Westerners in Alexandria in Egypt. Then came disaster via Vasgoda cama of Portugal. British, French and Dutch invaded India and plundered all the wealth.

Earlier Ravana used South West Monsoon for his sexual adventures. He used to come to Godavari region to enjoy sex there. Mahavamsa clearly shows how Asoka and his contemporary used South West Monsoon to go to Patna and waited there for the returning monsoon to bring them back to Sri Lanka.

Without spending a Penny they travelled thousands of miles using Wind Power according to Tamil book Purananuru and Pali book Mahavamsa. But all these are literary evidence.

Rudra daman in his beautiful Sanskrit language inscription gave us historical inscription in Girnar. Girnar’s original name was Girinagara

That showed Sanskrit was highly developed at that time in the western parts of India. Kovalan’s reading of a Sanskrit letter in the hands of a crying Brahmin woman in the street, showed us Sanskrit was known even to a business man like Kovalan in Tamil Nadu. The anecdote is in Tamil epic Silappadikaram. So Sanskrit was known to all literate people at that time throughout the length and breadth of India and Asia. Gatha Sapta Sati also confirmed it through King Hala’s Prakrit book. Prakrit is the colloquial form of Sanskrit, used by common man.

xxx

What does Rudra daman said in his epigraph at Girnar rocks?

From Arvind sharma’s book Hinduism and Its Sense of History, I give some information.

Language Sanskrit, script Brahmi

Location Junagadh

Shortly before 150-151 CE, a terrible cyclone caused a serious breach, as a result of which the Sudarsana lake ceased to exist. When the peasants were fearing the failure of crops, Rudradaman sent his councillors and executive officers for the repair of the dam and the reconstruction of the lake. All the officials have been unsuccessful in the task Pahlava Suvisaka,son of Kulaipa, was appointed as the Governor of Anarta and Saurashtra. The efforts of this Parthian official in the employment of Rudra daman were crowned with success and the reservoir was again brought in to being.

The inscription is in prose running to twenty long lines.

The lake was constructed in the period of Chandra Gupta Maurya

It speaks about the history of the lake for about five hundred years.

xxxx

I am copying the inscription from Wikipedia

(Be it) accomplished!

(Line l.) This lake Sudarshana, from Girinagara [even a long distance?] …….. of a structure so well joined as to rival the spur of a mountain, because all its embankments are strong, in breadth, length and height constructed without gaps as they are of stone, [clay], …………. furnished with a natural dam, [formed by?]………………………….., and with well-provided conduits, drains and means to guard against foul matter,……………………three sections……………by……………….and other favours is (now) in an excellent condition.

(L. 3.) This same (lake) -on the first of the dark half of Margashirsha in the seventy-second -72nd – year of the king, the Mahakshatrapa Rudradaman whose name is repeated by the venerable, the son of . . . . . . . . . . . . , (and) son’s son of the king, the Mahakshatrapa Lord Chashtana the taking of whose name is auspicious,…………. when by the clouds pouring with rain the earth had been converted as it were into one ocean, by the excessively swollen floods of the Suvarnasikata, Palasini and other streams of mount Urjayat the dam ………………, though proper precautions [were taken], the water- churned by a storm which, of a most tremendous fury befitting the end of a mundane period, tore down hill-tops, trees, banks, turrets, upper stories, gates and raised places of shelter – scattered, broke to pieces, [tore apart]…………………….. ……., -with stones, trees, bushes and creeping plants scattered about, was thus laid open down to the bottom of the river:-

(L. 7.) By a breach four hundred and twenty cubits long, just as many broad, (and) seventy-five cubits deep, all the water escaped, so that (the lake), almost like a sandy desert, [became] extremely ugly [to look at].

(L.8)……… for the sake of…………/ ordered to be made by the Vaishya Pushyagupta, the provincial governor of the Maurya king Chandragupta; adorned with conduits for Ashoka the Maurya by the Yavana king Tushaspha while governing; and by the conduit ordered to be made by him, constructed in a manner worthy of a king (and) seen in that breach, the extensive dam…………

(L. 9.) ………..he who, because from the womb he was distinguished by the possession of undisturbed consummate Royal Fortune, was resorted to by all castes and chosen their lord to protect them; who made, and is true to, the vow to the latest breath of his life to abstain from slaying men, except in battles; who [showed] compassion …………… not failing to deal blows to equal antagonists meeting him face to face; who grants protection of life to people repairing to him of their own accord and those prostrating themselves before him;

…who is the lord of the whole of eastern and western Akaravanti (Akara: East Malwa and Avanti: West Malwa), the Anupa country, AnartaSurashtra, Svabhra (northern Gujarat) Maru (Marwar), Kachchha (Cutch), SindhuSauvira (Sindh and Multan districts), Kukura (Eastern Rajputana), Aparanta (“Western Border” – Northern Konkan), Nishada (an aboriginal tribe, Malwa and parts of Central India) and other territories gained by his own valour, the towns, marts and rural parts of which are never troubled by robbers, snakes, wild beasts, diseases and the like, where all subjects are attached to him, (and) where through his might the objects of [religion], wealth and pleasure [are duly attained];

…who by force destroyed the Yaudheyas who were loath to submit, rendered proud as they were by having manifested their’ title of’ heroes among all Kshatriyas; who obtained good report because he, in spite of having twice in fair fight completely defeated Satakarni, the lord of Dakshinapatha, on account of the nearness of their connection did not destroy him; who [obtained] victory . . . . . . . .; who reinstates deposed kings;

…who by the right raising of his hand has earned the strong attachment of Dharma; who has attained wide fame by studying and remembering, by the knowledge and practice of, grammar, music, logic and other great sciences; who …… the management of horses, elephants and chariots, (the use of) sword and shield, pugilistic combat and other . … .. . . …. the acts of quickness and efficiency of opposing forces; who day by day is in the habit of bestowing presents and honours and eschewing disrespectful treatment; who is bounteous; whose treasury by the tribute, tolls and shares rightfully obtained overflows with an accumulation of gold, silver, diamonds, beryl stones and (other) precious things; who………..… prose and verse, which are clear, agreeable, sweet, charming, beautiful, excelling by the proper use of words and adorned; whose beautiful frame owns the most excellent marks and signs, such as (auspicious) length, dimension and height, voice, gait, colour, vigour and strength; who himself has acquired the name of Mahakshatrapa; who has been wreathed with many garlands at the svayamvaras of kings’ daughters; -he, the Mahakshatrapa Rudradaman, in order to . . . . . . . . . . . cows and Brahmans for a thousand of years, and to increase his religious merit and fame, -without oppressing the inhabitants of the towns and country by taxes, forced labour and acts of affection -by (the expenditure of) a vast amount of money from his own treasury and in not too long a time made the dam three times as strong in breadth and length . . . . . . . . [on] all [banks] . . . . . . (and so) had (this lake) made (even) more beautiful to look at.

(L. 16.) When in this matter the Mahakshatrapa’s counsellors and executive officers, who though fully endowed with the qualifications of ministers, were averse to a task (regarded as) futile on account of the enormous extent of the breach, opposed the commencement (of the work), (and) when the people in their despair of having the dam rebuilt were loudly lamenting, (the work) was carried out by the minister Suvishakha, the son of Kulaipa, a Pahlava, who for the benefit of the inhabitants of the towns and country bad been appointed by the king in this government to rule the whole of Anarta and Surashtra, (a minister) who by his proper dealings and views in things temporal and spiritual increased the attachment (of the people), who was able, patient, not wavering, not arrogant, upright (and) not to be bribed, (and) who by his good government increased the spiritual merit, fame and glory of his master.

— Junagadh rock inscription of Rudradaman[5][6]

Xxx

MY COMMENTS

The above inscription gives us a lot of other information about the Varna/caste system, the types of victory as found in Artha shastra, Rudradaman’s victorious march and defeating Satakarni kings of South India, the political divisions from Afghanistan to South India.

Only with the help of Satakarnis (Nootruvar Kannar in Silappadikaram ) Tamil kings were able to go up to the Himalayas. They never conquered any  part of North India. But they went with their army and defeated who were preventing their advance. The Tamil kings announced that they were going to Himalayas for certain purpose and conquering a territory is not their motive. So no king obstructed their Himalayan ventures. Only some unknown chieftains like Kanaka, Vijaya acted like inexperienced fools (See Silappadikaram)

Rudradaman Inscription is a mile stone in Indian history.

Though we have one lakh inscriptions in India, very rarely we get 500 year history in one inscription!

Long Live Rudradaman.

Xxx Subham xxx

தமிழில் பிரேளிகை கவிதைகள் (Post No.11,003)

WRITTEN BY B. KANNAN

Post No. 11,003

Date uploaded in London – –    19 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பிரஹேலிகா–பிரகேளிகை -பகுதி 2

Written By B.Kannan,Delhi

இந்தி மொழி இலக்கியத்தில் வழங்கும் சொல், பொருள் பிரகேளிகை ஒன்றிரண்டைப் பார்த்துவிட்டு மேலே செல்வோம்……

काली है पर काग नहीं, लंबी है पर नाग नहीं;

बलखाती है पर डोर नहीं, बांधते हैं पर डोर नहीं,

बताओ क्या?

கறுப்பு நிறம் ஆனால் காக்கை அல்ல, நீண்டு இருக்கும், பாம்பு அல்ல

சுருக்கம், செடுக்கை நீக்கலாம், நூல் இழை அல்ல

சுருட்டிக் கட்டி முடிக்கலாம், கயிறு அல்ல, அப்படியானால் நான் யார்?

விடை: சிகை, குடுமி, பின்னல் (அ) ஜடை= சோடீ என்று சொல்வது

छोटी सी छोकरी लालबाई नाम है;

पहने है घाघरा, एक पैसा दाम है।

சின்ன அழகிய பெண், செல்லமாக “சிவப்பி” எனக் கூப்பிடுவோம்

அணிந்திருப்பாள் ஒரு பைசா பெறுமானமுள்ளக் குட்டிப் பாவாடை!, அது யார்?

விடை: சிவப்பு மிளகாய் வற்றல்

தமிழகப் புலவர்களுள் மதுரை மேலூர் கொட்டம்பட்டி கருப்பையா பாவலர் பாடிய கடைச்சரக்குப் பெயர்கள், பாத்திரப் பெயர்கள் போன்றவை வரும் வண்ணம் இயற்றிய நாமாந்தரிதைப் பாடல்களும் குறிப்பிடத் தக்கவை. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்…..

கடைச்சரக்குப் பொருட்களின் பெயர்கள் அடங்கியப் பாடல்:

பலசரக்குப் பையெடுத்தான் வேளிராஉயப் புரியாள்

        படந்தேனென் றாளரிசி வசம்போவென் றழுதாள்

மலர்சூடன் சாம்பிராணி யானேன்னென் றாணீ

        வரக்காண மென்றழுதி துவரையெதிர் பார்த்தா

ளலைகடலை வைகின்றா ளென்னாமா யக்கா

        யான்பிழைப்பே நென்றாள்பேச் சுக்குமதி மதுரா

கலமுத்துச் சாமீ ரகமிளகன் பக்கு

        கடுகவா விதில்வெகு சகாயமுண்டு குணமே!

இதையே பதம் பிரித்து வேறுமாதிரியாகப் பார்த்தால் கிடைக்கும் அர்த்தமே வேறு.

 பல சர குப்பை எடுத்தான் வேள்; இராய புரியாள்

  பயந்தேன் என்றாள், அரி சிவ சம்போ என்று அழுதாள்

மலர்சூடன் சாம் பிராணி ஆனேன் என்றால்

 வரக் காணம் என்று அழுது இதுவரை எதிர்பார்த்தாள்

அலைகடலை வைகின்றாள், “ஏன்னமாய் அக்கா

 யான் பிழைப்பேன்?” என்றாள்-பேச்சுக்கும் அதிமதுரா

கல, முத்துச் சாமி! சீர், அகம், இளகு அன்பு ஆக்கு

 கடுகவா, இதில்வெகு சகாயம் உண்டு, குணமே!

உரை: வேள் சர குப்பை எடுத்தான்- மன்மதன் வலிய அம்புகளின் கூட்டத்தை மலர்க்கணைகளால் தலைவியின் மீது எய்வதற்காகக் கைகளில் எடுத்தான்

இராயபுரியாள் பயந்தேன் என்றாள்- இராயபுரி ஊரைச் சேர்ந்த தலைவி நான்

அஞ்சுகிறேன் என்றாள்

அரி சிவசம்போ என்று அழுதாள்- நாராயணா, சிவா சம்புவே என அரற்றினாள்

மலர் சூடன் சாம் பிராணி ஆனேன் என்றாள்- பூக்கள் சூடமாட்டேன், சாகும் நிலையிலிருக்கும் உயிரினமாக ஆகிவிட்டேன் எனப் புலம்பினாள்

நீ வரக்காணம் என்று அழுது இதுவரை எதிர்பார்த்தாள்- இந்நேரம் வரை உன்னை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்

அலை கடலை வைகின்றாள்- அலையோசை பிரிவுத் துயரை அதிகப்படுத்துவதால் அதைத் திட்டுகிறாள்

அக்கா யான் என்னமாய்ப் பிழைப்பேன் என்றாள்- தோழி! அதனால் எப்படி உயிர் வாழ்வேன் என ஏங்குகிறாள்

பேச்சுக்கும் அதிமதுரா- எண்ணம்,செயல் மட்டுமின்றி இனிமையாகவும் பேசுபவளே

முத்துச்சாமி- இந்த இயற்பெயருடையக் கந்தனே

சீர் அகம் இளகு- நல்லதையே எண்ணும் சிறந்த உள்ளத்தில் இரக்கம் காட்டு

அன்பு ஆக்கு- அன்பைப் பொழிவாய்

கடுகவா- விரைந்து வா, கல-அவளுடன் சேருவாயாக

இதில் வெகு சகாயமுண்டு- இதனால் உனக்குப் பல நன்மைகள் விளையும்

குணமே- இக் காரியம் சரியானதே ஆகும்.

இச்செய்யுளில் பலசரக்குப்பை, தேன், அரிசி, வசம்பு, சூடன்(கற்பூரம்), சாம்பிராணி, காணம்(கொள்ளு), துவரை, கடலை, சுக்கு, அதிமதுரம், சீரகம், மிளகு, பாக்கு,

கடுகு, காயம்(பெருங்காயம்) ஆகிய கடைச்சரக்குகளின் பெயர்கள் வேறு பொருளில் கையாளப்பட்டுள்ளன.

பட்சணங்கள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? அவற்றை வைத்து வார்த்தை ஜாலம் காட்டுகிறார் கொட்டாம்பட்டியார்!

தேங்குழலப் பந்தோசை யித்தியமா வுடலிற்

 றிகழ்வடையப் பழம்பணியா ரங்கெளலா நீத்தே

யோங்கியழு தலட்டுபல காரமுள வனைமார்க்

 கொடிங்கிப்பா யசநிகர்த்த வுற்றார்க்கு மஞ்சி

வீங்கிபக்கோ டாமுலையிற் பூந்தினவு கொண்டுன்

 விரகத்தி லதிரசமுற் றன்பிட்டு வந்தா

டாங்குதனின் கடன்செந்தில் வேலரசே யவணின்

 றன்பாலா யடைதலெழில் தறுமுறுக்குத் தானே!

இச்செய்யுளைப் பதம் பிரித்துப் பொருள் கண்டோமானால் பிரமித்துப் போவோம்!

தேங்குழல் அ பந்தோ சைத்தியம் ஆ உடலில்

 திகழ்வு அடை அ பழம் பணி ஆரங்கள் எலாம் நீத்தே

ஓங்கி அழுது அலட்டு பல காரம் உள அனைமார்க்கு

 ஒடுங்கி பாய்அசம் நிகர்த்த உற்றார்க்கும் அஞ்சி

வீங்கி இப கோடு ஆம் முலையில் பூம் தினவு கொண்டுஉன்

 விரகத்தில் அதி ரசம் உற்று அன்பு இட்டு வந்தாள்

தாங்குதல் நின் கடன், செந்தில் வேல் அரசே! அவள்நின்

 தன்பாலாய் அடைதல் எழில் தரும் முறுக்குதான் ஏ!

உரை: செந்தில் வேல் அரசே- திருச்செந்தூரில் கோயில் கொண்டுள்ள வேலாயுதப் பெருமானே

தேன்குழல்- மணம் வீசும் கூந்தலையுடையப் பெண்

அ பந்தோ-பார்வையில்படும் பந்துகள் (மிருதுவான அப்பம்) போன்ற ஸ்தனங்களில் மட்டுமின்றி பிற உறுப்புகளிலும்

சைத்தியம் ஆ உடலில் நிகழ்வு அடை-குளிர்ச்சியான உடலில் அழகுபெற்று விளங்குகின்ற

அ பழம் பணி ஆரங்கள் எலாம் நீத்து- பழைய அணிகலன்கள், முத்துமாலை ஆகியவற்றைக் களைந்து

ஓங்கி அழுது………..அனைமார்க்கு ஒடுங்கி- மேன்மேலும் அழுது புலம்புகிறவர்களும், தன்மேல் கோபம் கொண்டவர்களும்,செவிலித்தாய், நற்றாய் பார்வையில் படாமல் பதுங்கி

பாய் அசம்………..உற்றார்க்கும் அஞ்சி-கடாப்போரில் வீறுகொண்டு சண்டையிடும் கிடாக்கள் போன்ற உறவினர்களுக்குப் பயந்து

வீங்கு இப……….முலையில்- வளர்ந்துக் கொண்டே இருப்பதும், யானைத் தந்தங்களைப் போன்று கூறிய மார்பகங்களில்

பூம் நினைவு கொண்டு- இனிய நமைச்சலைப் பெற்று

உன் விரகத்தில்…….உற்று- உன்மீதுள்ளக் காதலில் மிகுந்த சுவையைப் பெற்று

அன்பு இட்டு வந்தாள்- நேசம் கொண்டு வந்திருக்கிறாள்

தாங்குதல் நின் கடன்- அவளை ஏற்றுக் காப்பது உன் கடமையாகும்

அவள் நின்தன்……அடைதல்-அம்மங்கை உன்னிடம் சேரும் இச்செயல்

எழில் தரும் முறுக்குதான் ஏ- இழிவு ஏதுமில்லை, அழகியக் கம்பீரமானதாகும்.

இப்பாடலில் தேங்குழல், அப்பம், தோசை, வடை, அப்பழ(ள)ம், பணியாரங்கள் லட்டு, பலகாரம், பாயசம், பக்கோடா, பூந்தி அதிரசம், பிட்டு, அடை, முறுக்கு எனும் தின்பண்டங்களின் பெயர்க ளும், பழம், பால் சொற்களும், உணவுப் பொருட்களின் பெயராக அமையாமல்,வெவ்வேறு பொருள்களில் எடுத்தாளப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

இதைப்போல் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த ஈழக் கவிஞர் மயிலிட்டி மயில் வாகனப் பிள்ளை அவர்கள் இவ்வணியில் பல ருசிகரமானப் பாடல்களை இயற்றியுள்ளார். அவற்றில் ஓரிரண்டை இப்போது ரசிப்போம்….

எழுத்துகள், எண்களாக மறைதல்:

ஆறுடனே சிகரமுதற் றளிக ளன்றி

  யணிநகுலை நகரிடத்து மமரு மீசா

வீ று றுமெண் பானைந்து வடிவ மாகி

  மிளிருமிரு பானைந்து வடிவ மாகிக்

கூறுமவை யிரண்டொடுகால் வடிவ மாகிக்

  குலவுமர பன்னைந்து வடிவ மாகி

நாறுமுடற் சுமைநீக்கி நயந்த பேறு

  நமக்கருள்வ தென்றுகொன்மெய்ஞ் ஞான தேவே!

தளி= கோயில் / க்ஷேத்திரம். இங்குச் சொல்லப்பட்டுள்ள தமிழ் எண்கள்– ஆறு=௬=கா, இதனுடன் சிகரத்தின் முதல் எழுத்து சேர்ந்தால்=காசி

எண்பானைந்து=85=அ+ரு=அருவடிவம், இருபானைந்து=25=உ+ரு=உருவடிவம், இரண்டொடு கால்= அரு+உரு(முதலிரண்டு)+வ(1/4)=அருவுருவ வடிவம்,

பன்னைந்து=15=க+ரு= கருவடிவம் (கருப்பை)

உரை: ஆறுடனே……..தளிகள் அன்றி–காசி முதலிய தலங்களுடன் கூட,

அணி நகுலை……..ஈசா–அழகிய நகுலேச்சரத்தும் உறையும் ஈஸ்வரனே

வீறு உறும் எண்பான ஐந்து வடிவம் ஆகி– பெருமை மிக்க அருவடிவமாகியும்,

மிளிரும் இருபானைந்து வடிவமாகி– பிரகாசிக்கும் உருவடிவமாகியும்,

கூறும் அவை…..குலவும் அர– அருவுருவ வடிவமாகவும் திகழ்கின்ற ஈசனே,

மெய் ஞான தேவே– மெய்ஞ்ஞானக் கடவுளே

பன்னைந்து வடிவமாகி……சுமை நீக்கி– கருவடிவமாய்த் தோன்றும் சரீர பாரத்தைக் களைந்து

நயந்த பேறு……..அருள்வது என்று கொன்?– நமக்கு நல்ல பேற்றை அளிப்பது எப்போது?

புலவர் மயில்வாகனப் பிள்ளை, தமிழ்த் தோகை விரித்து ஆனந்த நடனமாடுவதை என்னென்பது! அவரது உடுப்பிலிருந்துப் பிரிந்து விழுந்த மற்றொரு மயிற்தோகை இதோ….

அவர் வாழ்ந்தக் காலகட்டத்தில் சாதி பாகுபாடு மிகுந்திருந்தது. அதைக் கருத்தில் கொண்டு, சாதிஜனத்தின் பெயரில் வேறு பொருளை மறைத்து வைத்து ஓர் அழகான நாமாந்தரிதைப் பாடலை ஶ்ரீநகுலேச்சரர் மீது இயற்றியுள்ளார்.

செம்மான்கைக் கொண்டவ னம்பட்டன் வண்ணான் செலுத்துமள்ளன்

றம்மான் குயவன்பி னான்கச் சிடையன் றபக்கரையா

னம்மாண் டுடிநற் பறையணொர் வேட னணிநகுலைப்

பெம்மா னெனத்துதி யாய்நமைப் பார்ப்பான் பெரி துவந்தே

உரை: செம்மான் கைக்கொண்டவன்–சிறந்த சிவப்பு மானைத் திருகரத்தில் ஏந்தியவர்,

அம் பட்டன்– அழகிய பட்டு ஆடையைத் தரித்தவர்,

வண ஆன் செலுத்து மள்ளன்–அழகிய ரிஷப வாகனத்தின் மீதேறி வருபவர், (காளைமாட்டை வைத்திருக்கும் உழவர்)

தம் மான் குய அன்பினான்– தமது தேவியின் தனங்களிடத்தே அன்புடையவர்,

கச்சு இடையன்– இடையில் உடையணிந்தவர்,

தபக் கரையான்– தீவிரத் தவத்தில் ஆழ்ந்திருப்பவர்,

அம் மாண் துடி நல் பறையன்– அழகிய மாட்சிமைப் பொருந்திய நீள உடுக்கையாகிய வாத்தியக் கருவியை உடையவர்,

வேடன்- வேடங்களைத் தாங்குபவர்,

அணி நகுலைப்…….துதியாய்– அழகிய நகுலேச்சரத்துப் பெருமான் எனப் போற்றித் துதிப்பாயாக,

பெரிது உவந்து நமைப் பார்ப்பான்– ஈசன் மிகவும் மகிழ்ந்து நம்மைப் பார்த்துத் தன் அருட் பார்வையை வீசுவார்.

செம்மான்–சக்கிலியன், மள்ளன்– உழவர், விவசாயி குயவன்-மண்பாண்டம் செய்பவர், கரையான்–நீர்நிலைக்கருகில் வாழும் வலைஞன் (செம்படவர்)

இந்தப் புலவர்கள் ரொம்ப எமகாதகப் பேர்வழிகள். தமிழ் மொழியைத் தான் எப்படியெல்லாம் தங்கள் இஷ்டத்துக்குச் சாதுரியமாக வளைத்துக் கொள்கிறார்கள்?

அவர்களால் தமிழ் புடமிட்டத் தங்கம் போல் ஆகிறதா அல்லது நேர்மாறாகவா? எப்படியிருந்தால் என்ன, நம் கண்ணுக்கும், கருத்துக்கும் ஒரு சிறந்த “விலையில்லா”

அருமையான “சப்பன்போக்”, கல்யாணச் சமையலையே அளித்து விடுகிறார்கள், அல்லவா?

*************************************************

Tags- பிரஹேலிகா–பிரகேளிகை -பகுதி 2

நோய்களைக் குணமாக்கும் பகவத் கீதை ஸ்லோகங்கள்! (Post No.11,002)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,002

Date uploaded in London – –     19 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

நோய்களைக் குணமாக்கும் பகவத் கீதை ஸ்லோகங்கள்!

ச.நாகராஜன்;

மஹாபாரதத்தில் வரும் பகவத் கீதை 18 அத்தியாயங்களைக் கொண்டது. கீதையில் 700 ஸ்லோகங்கள் உள்ளன. இதில் திருதராஷ்டிரன் கூறிய ஸ்லோகம் 1; ஸ்ரீ கிருஷ்ணர் கூறிய ஸ்லோகங்கள் 569; அர்ஜுனன் கூறிய ஸ்லோகங்கள் 89; ஸஞ்ஜயன் கூறிய ஸ்லோகங்கள் 41.

கீதை அபாரமான சக்தி கொண்ட அதிசய திவ்ய நூல். இதில் உள்ள 18 அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலனைத் தரும். பத்ம புராணத்தில் உத்தரகண்டத்தில் 176வது அத்தியாயத்தில் கீதையின் பலனைக் காணலாம். ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒரு சம்பவம் விவரிக்கப்படுகிறது; அதன் அபூர்வ பலனும் கதை மூலம் விளக்கப்படுகிறது. ஒவ்வொரு அத்தியாயத்தையும் பாராயணம் செய்து வர இறுதிப் பலனாக மோக்ஷம் சித்திக்கும் என்பது தான் திரண்ட சாரம்.

எந்த விதத் தீங்கும் கீதை பாராயணம் செய்பவரை அண்டாது; எப்படி குளத்தில் இருந்தாலும் தாமரை மலர் நீரினால் தொடப்படாமல் இருக்கிறதோ அது போல அவனை எந்த விதத் தீமையும் அண்டாது என்று கூறுகிறது வராஹ புராணம்.

கீதை 1500 பதிப்புகளைக் கண்டு 40க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 2 கோடி பிரதிகளுக்கும் மேலாக இந்தியாவில் மட்டும் விற்கப்பட்டுள்ளது என்றால் உலகெங்கும் இது எத்தனை மொழிகளில் எத்தனை கோடி பிரதிகள் விற்கப்பட்டிருக்கும் என்பதை ஊகித்து அறிந்து கொள்ளலாம்!

2  

கீதை ஓதுவதால் பரலோகத்தில் முக்தி கிடைப்பது ஒரு புறம் இருக்கட்டும்; இகலோகத்தில் என்ன பயன் என்று கேட்போருக்கு, செல்வம் சேரும் ; நோய்கள் தீரும்; இன்னும் நன்மை அனைத்தும் சேரும் என்று சொல்லி விடலாம்.

பக்தி யோகம், ஞான யோகம், கர்ம யோகம் என யோகங்களைக் கூறும் யோக நூலான கீதையின் ஒவ்வொரு ஸ்லோகமும் ஒரு வித பலனைத் தர வல்லது.

பல்வேறு நோய்களைத் தீர்க்க வல்ல கீதா ஸ்லோகங்கள் 66ஐத் தன் ஆய்வின் மூலம் கண்டு, அவற்றை விளக்கி டாக்டர் டி.ஆர். சேஷாத்ரி, ‘தி க்யூரேடிவ் ஃபவர்ஸ் ஆஃப் தி ஹோலி கீதா’ (The Curative Powers of Holy Gita) என்ற நூலை வெளியிட்டுள்ளார். (1997ஆம் ஆண்டு வெளியீடு)

அதில் உள்ள சில ஸ்லோகங்களின் பயனை இங்கே காணலாம்:

இரண்டாம் அத்தியாயம் இரண்டாம் ஸ்லோகம்:

 குதஸ்த்வா  கஸ்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம் |

அநார்யஜுஷ்டமஸ்வர்க்யமகீர்த்திகரமார்ஜுன ||

இதைக் கூறினால் இரத்த அழுத்தம் சீராகும்; மனக் கோளாறுகள் நீங்கும்; மனக் கட்டுப்பாடு அதிகரிக்கும்; மன இறுக்கம் போகும்.

*

இரண்டாம் அத்தியாயம் பதிநான்காம் ஸ்லோகம்:

மாத்ராஸ்பர்ஸாஸ்து கௌந்தேய சீதோஷ்ண சுக துக்கதா |

ஆகமாபாயிநோநித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பாரத ||

மது மற்றும் போதை மருந்துப் பழக்கத்திலிருந்து விடுபடலாம், ஜூரம் தீரும், ஆண்மைக் குறைவு நீங்கும், செக்ஸ் உறவு சீர்படும், செக்ஸ் சம்பந்தமான நோய்கள் தீரும்.

*

மூன்றாம் அத்தியாயம் 21ஆம் ஸ்லோகம்

யத்யதாசரதி ஸ்ரேஷ்டஸ்தத்தததேவேதரோ ஜந: |

ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ்ததநுவர்த்ததே ||

இதைக் கூறி வந்தால் போதைப் பழக்கம் நீங்கும்; கான்ஸர் தீரும்; தீராத நோய்கள் தீரும்.

*

எட்டாம் அத்தியாயம் எட்டாம் ஸ்லோகம்

அப்யாஸயோகயுக்தேந சேதஸா நாந்யகாமிநா |

பரமம் புருஷம் திவ்யம் யாதி பார்த்தானுசிந்தயந் ||

இதைக் கூறி வந்தால் இரத்த அழுத்தம் சீராகும்; மூளைக் கோளாறுகள் நீங்கும்; மனத்தளர்ச்சி போகும்; மனக் கட்டுப்பாடு வரும்; பக்கவாதம் தீரும்.

*

பத்தாம் அத்தியாயம் 32வது ஸ்லோகம்

ஸர்காணாமாதிரந்தஸ்ச மத்யம் சைவாஹமர்ஜுந |

அத்யாத்மவித்யா வித்யாநாம் வாத: ப்ரவததாமஹம் ||

இதைக் கூறினால்  இருமல், ஆஸ்த்மா போகும்;  செவிட்டுத் தன்மை நீங்கும்; திக்கித் திக்கிப் பேசுவது (திக்கு வாய்) போகும்; தொடர் இருமல் நிற்கும்; டான்ஸில் போகும்.

*

பத்தாம் அத்தியாயம் 34வது ஸ்லோகம்

ம்ருத்யு: ஸர்வஹரஸ்சாஹமுத்பவஸ்ச பவிஷ்யதாம் |

கீர்த்தி: ஸ்ரீர்வாக்ச நாரீணாம் ஸ்ம்ருதிர் மேதா த்ருதி: க்ஷமா ||

இதைக் கூறி வந்தால் பிள்ளைப் பேறு சுகமாகக் கிடைக்கும்; கர்ப்ப சம்பந்தமான நோய்கள் தீரும்; மாதவிலக்கு சம்பந்தமான சங்கடங்கள் தீரும்; கர்ப்பம் உண்டாகும்.

*

பதினேழாவது அத்தியாயம் எட்டாம் ஸ்லோகம்

ஆயு: ஸத்வபலாரோக்ய சுகப்ரீதி விவர்தநா: |

ரஸ்யா: ஸ்நிக்தா ஸ்திரா ஹ்ருத்யா ஆஹாரா: ஸாத்விகப்ரியா: ||

இதைக் கூறி வந்தால் அஜீரணம், அமிலத்தன்மை, கல்லீரல் கோளாறுகள், டயரியா, மூலம், சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும். நீரிழிவு நோய் போகும். அல்ஸர் போகும்.

3

ஸ்ரீ தேசிகனின் கீதார்த்த சங்கிரகத்தில் பலச்ருதியாக வருகிறது இந்தப் பாடல் :

வன்பற்றறுக்கும் மருந்தென்று மாயவன் தான் உரைத்த

இன்பக் கடல் அமுதாம் என நின்ற இக்கீதை தனை

அன்பர்க்குரைப்பவர் கேட்பவர் ஆதரித்தோதுமவர்

துன்பக் கடலுள் துலங்குகை நீங்கித் துலங்குவரே

பொருள் : சம்சார பந்தத்தை விடுவிக்கும் மருந்தாக மாயவனான கிருஷ்ணன் தானே உரைத்தது இந்தக் கீதை; இது பாரதமாகிய பாற்கடலில் எழுந்தது. இதை உபதேசிக்கும் ஆசாரியர், அதைக் கேட்போர், படிப்போர் உள்ளிட்ட அனைவரும் துன்பக் கடலில் துயர் உறுவது நீங்கி இன்பமடைவர்.

கீதையின் பெருமையைக் கூறும் ஸ்லோகங்கள் ஆயிரமாயிரம் உண்டு. அவற்றில் சுபாஷித ஸ்லோகம் ஒன்று கீதையின் பெருமையை இப்படிக் கூறுகிறது:

கீதா சுகீதா கர்தவ்யா கிமன்யை: சாஸ்த்ரசிந்ததே:   |

யா ஸ்வயம் பத்மநாபஸ்ய முகபத்யாத் வினி:ஸ்ருதா:  ||

இதன் பொருள்:- கீதை திருப்பித் திருப்பி நன்றாகப் படிக்கப் பட வேண்டும். மற்ற சாஸ்திரங்களை எண்ணி என்ன பிரயோஜனம்? ஏனெனில் இது பதமநாபனின்  முக கமலத்தினின்றே வந்த ஒன்றல்லவா?

ஆதி சங்கரர் பகவத் கீதா ; கிஞ்சித தீதா – கீதையைக் கொஞ்சமாவது படியுங்கள் – என பஜகோவிந்தத்தில் கூறி அருள்கிறார்.

நம்பிக்கையுடன் கீதையை ஓதுவோருக்கு இகபரசௌபாக்யம் கைகூடுவது இயல்பு தானே!

***

Tags — நோய், குணம், பகவத் கீதை, ஸ்லோகங்கள்,

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் 55 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் கற்போம் (Post.11,001)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,001

Date uploaded in London – –    18 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் 55 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் கற்போம்

மஹேஸ்வரஹ 13-22 பெரிய கடவுள் 

மஹேஸ்வாஸாஹா 1-4 பெரும் வில் வீரர்கள்

மம்ஸ் யந்தே  2-35 நினைப்பார்கள்

மா 2-3 செய்யாதே

மாதா 9-17 அம்மா, தாய்

மாதுலாஹா  1-34 அம்மான்மார்கள்  மாமன்மார்கள்

மாத் ராஸ்பர்சஹ 2-14 புலன்கள் தத்தம் விஷயங்களுடன் கூடும் நிலை

மாதவ – 1-37 கிருஷ்ணன் – விஷ்ணுவின் பெயர்

மான வாஹா  3-31 மனிதர்கள்

மானஸம் 17-16  மனம்/மனத்தால்     10 words

மானஸாஹா  10-6 மனத்திலிருந்து

மானாப மான யோஹா  6-7 மானத்திலும் அவமானத்திலும்

மானுஷம் 11-51 மனித

மானுஷீம் 9-11 மனித

மானுஷே லோகே 16-2 மனிதர் உலகில்

மாமகம்  15-12 எனது

மாமகாஹா 1-1 என்னுடைய புத்திரர்களும்

மாமிகாம் 9-7 என்னுடைய

மாயயா 7-15 மாயையால்

மாயா 7-14 மாயை; பொய்த் தோற்றம்

மாருதஹ 2-23 காற்று

மார்க சீர்ஷஹ 10-35 மார்கழி மாதம்

மார்தவம்  16-2 மிருதுத்தன்மை , மென்மை

மாஸானாம் 10-35 மாதங்களில்

மாஹாத் ம்யம்  11-2 பெருமை, மஹிமை புகழ்             25 words

மித்ர த்ரோஹே 1-38 நண்பர்களுக்கு தீங்கிழைத்தல்

மித்ராரிபக்ஷ யோஹோ 14-25

மித்ரே 12-18 நண்பனுக்கு

மித்யா 18-59 பொய்யானது / வீண்

மித்யாசாரஹ 3-6  கபட வேஷதாரி – 30

மிஸ்ரம் 18-12 கலப்படம்

முக்த சங்கஹ 3-9 பற்றற்றவனாய்

முக்தஸ்ய 4-23 முக்தனாக

முக்தம் 18-40 விடுபட்டது

முக்தஹ 5-28   முக்தன்   35 words

முக்த்வா 8-5 விட்டு

முகம்  1-28 வாய்

முகானி 11-25 வாய்கள்

முகே 4-32 வாயிலாக

முக்யம் 10-24  மிகவும் முக்கியமானது

முச்யந்தே 3-13 விடுபடுகின்றனர்

முனயஹ 14-1 முனிவர்கள்

முனிஹி 2-56 முனிவர்

முனீனாம் 10-37 முனிவர்களுள்

முநேஹே 2-69 முனிவனுக்கு

முமுக்ஷு பிஹி 4-15  மோக்ஷ இச்சை உடைய

 முஹுர் முஹுஹு 18-76 மேலும் மேலும்

முஹ்யதி 2-13  மயங்குதல்

முஹ்யந்தி 5-15 மோகத்தை அடைகின்றன

மூட க்ராஹேண 17-19 முரட்டுப் பிடிவாதத்தால்        50 words

மூட யோனிஷு 14-15 பகுத்தறிவில்லாத யோனிகளில்

மூடஹ 7-25  மதியிழந்த

மூடாஹா 7-15 அறிவீனர்

மூர்த்தயஹ 14-4 உருவங்கள், ரூபங்கள்

மூர்த்னி 8-12 தலையில்

மூலானி 15-2 வேர்கள்

ம்ருகாணாம் 10-30 மிருகங்களில்

ம்ருகேந்த்ரஹ 10-30 மிருக ராஜா/ சிங்கம்

ம்ருதஸ்ய 2-27 இறந்தவர்களுடைய

ம்ருதம் 2-26 மரணம்       60 words

ம்ருத்யு ஸம்ஸார வர்த்மனி 9-3

ம்ருத்யு ஸம்ஸார ஸாகராத் 12-7 மரணத்துடன் கூடிய பிறவிப் பெருங்கடலில் இருந்து

To be continued ………………..

62 words added from part 55 of Gita word index

Gita Index 55, Tamil index 55