‘பர்தா’ ஒழிக – பாரதியார் முழக்கம் (Post No.10,653)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,653

Date uploaded in London – –    12 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி! – பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;
வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் – இந்த
மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;
வல்லி யிடையினையும் மார்பிரண்டையும் – துணி
மறைத்தத னாலழகு மறைந்த தில்லை;
சொல்லித் தெரிவ தில்லை, மன்மதக்கலைமுகச்
சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ? 1

ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென் கிறாய் – பண்டை
ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ?
ஓரிரு முறைகண்டு பழகிய பின் – வெறும்
ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ?
யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார் – வலு
வாக முகத்திரையை அகற்றி விட்டால்?
காரிய மில்லையடி வீண் பசப்பிலே – கனி
கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பனோ? 2- பாரதியார்

தற்காலத்து தமிழ் உலகின் மிகப் பெரிய கவிஞன் பாரதியார் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. அவர் மாபெரும் தமிழ் அபிமானி, தேச பக்தர், சர்வ சமய புரவலர், இந்து மத போற்றுநர் என்பதிலும் எவருக்கும் ஐயமில்லை. ஏசுவையும், புத்தரையும், முகமது நபியையும் பாராட்டிப் பாடல்களும் இயற்றினார் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. அவருக்கு பர்தா , முகத்திரை பிடிக்காது. ஏனெனில் இது வேத காலப் பெண்களிடத்தில் கிடையாது. இது அவர் சொல்லும் செய்தி; நான் செய்யும் விமர்சனம் அல்ல.

வேத வாழ்வைக் கடைபிடிக்க வேண்டும்; பெண்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்று தற்காலத்தில் பாடிய முதல் கவிஞனும் பாரதிதான் .

பாரதியின் படலைப் படிப்பதற்கு முன்னர் இன்னொரு விஷயத்தையும் கவனிப்போம். இந்தியாவின் புராதனப் பெண்கள் சிலைகள் சாஞ்சி, பர்ஹுத் , அமராவதி முதிய இடங்களில் உள்ளன. அவைதான் பெண்களின் பழைய சிலைகள். அதாவது 2300 ஆண்டுகள் பழமையானவை. அதற்கு முன்னர் இலக்கிய வருணனைகளிலும் முகத்திரை கிடையாது. கல்யாண சடங்குகளின் போது முதல் தடவையாக பெண்ணைப் பார்க்கும்போது SUSPENSE சஸ்பென்ஸ், வியப்பு,வேடிக்கை, கேளிக்கை இருக்க வேண்டும் என்பதற்காக திரைக்குப் பின்னர் உட்கார வைத்து திரையைத் திறந்தனர்.

நமது வீட்டில் சின்னக் குழந்தைகளுடன் கண்ணாமூச்சி விளையாடும்போது கூட இப்படி ஒளிந்து கொண்டு முகத்தைக் காட்டினால் அது பெரிதாகச் சிரிக்கும்; ஆனந்தம் அடையும். அது போல பெண்ணை மஹத்தாக அலங்கரித்து திடீரென்று காட்டும்போது, முன்னர் பார்த்த பெண் இவள்தானா அல்லது புதிய தேவதையா என்று மணமகன் வியப்பான் . இந்த விஷயம் ரிக் வேத 10-85 கல்யாண மந்திரத்தில் தெளிவாக உள்ளது. நீயே மஹாராணி என்று அந்த மந்திரம் பெண்ணைப் புகழ்கிறது .

இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். உலகில் மிகப்பழமையான ஓவியங்கள் நமக்கு எகிப்தின் பிரமிடுகளில், ஏனைய கட்டிடங்களிலும் கிடைக்கின்றன. அவர்களும் பர்தா அணியவில்லை . சங்கத் தமிழ் நூல்களிலும், கோவில் சிலைகளிலும் பர்தா கிடையாது. அஜந்தா, சித்தன்னவாசல், தஞ்சசைக் கோவில் ஓவியங்களிலும் பெண்கள் பர்தா அணியவில்லை.

முஸ்லீம்கள்  ஏன் அணிந்தார்கள் என்றால் சவூதி அரேபியா போன்ற பாலைவனத்தில் (DESERT SAND STORMS) வாழ்ந்த பெண்கள் தங்களை மணற் புயல் காற்றிலிருந்து காப்பதற்காக அதை அணிந்தனர். முஸ்லீம்கள் வாழ்ந்த துருக்கியில் பர்தா கிடையாது.

பல இனத்தவரும் பர்தா அணிவதாக வைத்துக் கொள்வோம். ஒருவருடைய முகக் குறிப்பைவைத்தது அவர்களுடைய எண்ணங்களை அறிய வாய்ப்பே இல்லாமல் போய்விடும். இது பள்ளி ஆசிரியர்கள் , வாடிக்கையாளரை  சந்திக்கும் பொறுப்பில் உள்ளவர்களுக்கு பெரிய சங்கடத்தை விளைவிக்கும். ஆக PRACTICAL பிராக்டிகல் ஆகப் பார்த்தாலும், விஞ்ஞான SCIENTIFIC  முறையில் பார்த்தாலும் பர்தா  தேவை இல்லை.

இதை முஸ்லீம்களே முன்வந்து செய்தால் இன்னும் அழகாக இருக்கும். இதற்காக ஒரு கோர்ட், ஒரு இயக்கம், ஒரு சட்டம் தேவை இல்லை.

அவர்கள் சமய விழாக்களில் பங்கு கொள்ளும்போது அவர்கள் வழக்கப்படி செய்யலாம். அதற்குத் தடை ஏதுமில்லை. ஆக வரலாற்று ரீதியிலும் கிரேக்க, ரோமானிய, எகிப்திய , சீன, இந்து கலாசாரங்களில் பர்தா கிடையாது.

சிலர் ரிக் வேதத்தில் உள்ள 10,552 மந்திரங்களில் இரண்டே மந்திரங்களைக் காட்டி ஏதோ பர்தா இருந்ததாக சொல்ல முனை ன்றனர் . அந்த 8-33 மந்திரத்தின் அடிக்குறிப்பிலேயே கடைசி மூன்று மந்திரங்கள் புரியவில்லை ‘எசகு பிசகாக’ உள்ளது என்று எழுதிவைத்துள்ளனர்.

ரிக்வேதம் முழுதையும் மொழிபெயர்த்த ஜம்புநாத அய்யர் எழுதியுள்ளதை படியுங்கள் :–

8-33-17

ஸ்திரீயினுடைய மனம் கட்டுக்கடங்காதது ; அவளுடைய மனத்  திட்பம் அற்பமாயிருக்கிறது என்று இந்திரன் சொன்னான்.

8-33-18

(17க்கும் 19க்கும் சம்பந்தமில்லாத விஷயம் )

இந்திரனுடைய இரண்டு குதிரைகள் அவனுடைய ரதத்தை வேகமாக இழுக்கின்றன. தேரின் தண்டம் – இணைக்கும் கட்டை — இரண்டு குதிரைகளின் மீது உள்ளன.

8-33-19

உன்னுடைய கண்களைக் கீழே செலுத்தவும்; மேலே பார்க்காதே; கால்களை இருகச் சேர்த்துக் கொள்ளவும் உன் ஆடை மறைத்திருப்பதைக் காணாமல் இருப்பார்களாக.. ஏனெனில் நீ பிராமணனாய்  இருந்து — ஆணாக இருந்து — ஸ்திரியானாய்

இதற்கு ஜம்பு நாத அய்யர் எழுதிய அடிக்குறிப்பு :-

16 முதல் 19 வரையான பாடல் தெளிவாக இல்லை . முந்தைய பாடல்களுடன் தொடர்பும் தெரியவில்லை . 16, 18 இரண்டும் ஒரு பெண் படுவது. 17 ஒரு மனிதன் கூறுவது. 19 இந்திரன் ஆசங்கனிடம் கூறுவது. இந்த ஆசங்கன் கடவுளால் பெண்ணாக மாறுமாறு சபிக்கப்பட்டு பின் ஆணாக மாறினான் என்று ஒரு கதை உண்டு.

ஆக இது பர்தா பற்றியது அல்ல. ஒரு ஆண் பெண்ணாக மாறி மீண்டும் ஆணாக மாறும்போது உடை பற்றிச் சொன்ன விஷயம். இது பர்தாதான் என்று சாதிப்பார் ஆண் -பெண் – ஆண் ஆனதையும் நம்புகிறார்களா ? பகிரங்கமாகச் சொல்லட்டுமே. அது சரி இப்படி ஓவியமோ சிலையோ பர்தாவுடன் 2300 ஆண்டுகள்ளாக இல்லையே .

XXXXX

கண்ணம்மா என் காதலி –3

தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி ! பெண்கள்

திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்

வல்லி இடையினையும் – ஓங்கி முன்னிற்கும் – இந்த

மார்பையும் மூடுவது சாத்திரம் கண்டாய்

ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென்கிறாய்

ஆரியப் பெண்களுக்கு திரைகள் உண்டோ?

ஆக பாரதியார் சொல்லுவதே சரி. இது தில்லித் துலுக்கர் செய்த வழக்கம்

கண்ணம்மா ஏன் முத்திரையுடன் வந்தாள் ? என்று ஒரு கேள்வி எழலாம். ; துலுக்கர் படையெடுப்பின்போது அவர்கள் இந்துப் பெண்கள் மீது நடத்திய தாக்குதலை வீர சிவாஜி பாடலிலும், குரு கோவிந்த் சிம்மன் பாடல்களிலும் பாரதியார் விரிவாகப் பாடி சாடுகிறார். ஆகவே கண்ணம்மா (வடக்கத்திய ராஜபுதன பெண் அல்லது கோபியர் தலைவி ராதா) வை அவர் வடக்கத்திய பெண்ணாக கற்பனை செய்வதே “பர்தா முறை ஒழிக” என்ற கருத்தை விளக்கவே என்று சொன்னால் மிகையாகாது. பாடல் முழுதும் அவர் பிரஸ்தாபித்த ஒரே வழக்கம் பர்தா – முகத் திரைதான்!

-சுபம்-

பர்தா, முகத் திரை, பாரதியார், தில்லித் துருக்கர், வழக்கமடி,பெண்கள்

பார் போற்றும் மகாகவி பாரதியார்! – 1 (Post No.10083)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,083

Date uploaded in London – 12 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பாரெங்கும் பாரதியின் சிந்தனை! ஞான மயம் சார்பில் பாரதி நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சி சிறப்புற நடத்தப்பட்ட போது 11-9-2021 சனிக் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பான ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். (இந்த உரை மூன்று பகுதிகளாக வெளியிடப்படுகிறது.)

பார் போற்றும் மகாகவி பாரதியார்! – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். பாரதி நினைவு நூற்றாண்டு தினமானது இதோ இப்போது இன்று உலகளாவிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது.

எது கவிதை? இதற்கான இலக்கணத்தை நூற்றுக் கணக்கான அறிஞர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிக்ள் சொல்லி விட்டனர்.

இவர்கள் சொன்ன இலக்கணத்தின் படி இது தான் கவிதை என்பதோடு இதற்கு அப்பாலும் கவிதை இருக்கிறது என்பது தான் உண்மை!

எதார்த்தத்தைச் சொல்வது கவிதை என்பது ஒரு கட்சி; கற்பனையை அழகுறச் சொல்வது கவிதை என்பது இன்னொரு கட்சி.
எதார்த்தம் தான் கவிதை என்றால்.

பாக்காவது கமுகம் பழம் பருப்பாவது துவரை

மேற்காவது கிழக்கே நின்று பார்த்தால் அது தெரியும்

நாற்காதமும் முக்காதமும் நடந்தால் அது எழு காதம்

ராக்கா உண்மை சொன்னேன் இனி ரட்சிப்பயோ அல்லது பட்சிப்பயோ

என்ற இதுவும் கவிதை தானே என்கிறார் பேராசிரியர் முத்துசிவன் தனது அசோகவனம் என்ற புத்தகத்தில் கவிதை என்ற கட்டுரையில்.

வெறும் யதார்த்தம் மட்டும் கவிதை ஆகாது.

இது போலவே வெறும் கற்பனை மட்டும் கவிதை ஆகாது.

நிலவு போன்ற முகம், வீனஸ் போன்ற தேவதை என்று சொல்லிக் கொண்டே போவது மட்டும் கவிதை அல்ல.

பின்னர் கவிதை என்பது தான் என்ன?

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கூறுகிறார்:-

உள்ளத்துள்ளது கவிதை – இன்பம்

உருவெடுப்பது கவிதை

தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை

தெரிந்துரைப்பது கவிதை

கவிதைக்கான அழகான இலக்கணம் தான் இது!

ஆனால் கம்பனோ கவிதையில் ஒளி வேண்டும் என்கிறான்.

கோதாவரி ஆற்றின் பிரவாகத்தைப் பார்த்த அவனுக்கு அதை கவிதையுடன் ஒப்பிடத் தோன்றுகிறது.

புவியினுக்கு அணியாய், ஆன்ற  பொருள் தந்து, புலத்திற் றாகி,                               அவி அகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறி அளாவி,                                                     சவியுறத் தெளிந்து, தண்ணென் ஒழுக்கமும் தழுவிச் சான்றோர்                                    கவி எனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்.”

புவியினுக்கு அணியாய் அமைவது சான்றோரின் கவி. அது ஆன்ற பொருளைத் தரும்.

தேவர் தம் உணவுக்கொத்த சுவைப் புலங்களில் படிந்ததாக இருக்கும்

அவியகத் துறைகள் தாங்கி இருக்கும்,  அதில் ஒளி இருக்கும் (சவி – ஒளி)

தண்ணென குளிர்ந்த ஒழுக்கம் நிரம்பி இருக்கும்.

(கோதாவரியைப் போல) அகன்ற பிரவாகம் போலப் பெருக்கெடுத்து ஓடி இன்பம் தரும்  இது கம்பனின் வாக்கு.

வெய்யோனொளி தன் மேனியின் விரிஜோதியின் மறையப் பொய்யோவெனும் இடையாளுடன் இளையானொடும் போனான் மையோ மரகதமோ மறிகடலோ  மழைமுகிலோ ஐயோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்.

ஆஹா, இது அல்லவா கவிதை! இதை இயற்றியவன் கவிச் சக்கரவர்த்தி அல்லவா! ஆம் கம்பன் இயற்றியது தான் இது. இது தான் கவிதை!

இந்த இலக்கணத்திற்கெல்லாம் உட்பட்டு இதற்கு அப்பாலும் சென்று கவிதை படைத்த ஒரு அற்புதக் கவிஞன் தான் மகாகவி பாரதி!

காலத்தை வென்ற கவி மஹாகவி பாரதி தனக்குத் தொழிலே கவிதை தான் என்கிறான்!

நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்

இமைப்பொழுதும் சோராதிருத்தல்

இது தான் பாரதியின் தொழில்.

கம்பன் இசைத்த கவியெலாம் நான் என்பது தான் ‘கவிதைத் தொழில் மன்னனின்’ – நம் பாரதியின் – சுய சரிதைச் சுருக்கம்!

காலத்திற்குத் தக்கபடி பாழும் கலியில் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் அனைவரையும் மேலேற்றி, குருடரை எல்லாம் குருடு நீக்கி விழி கொடுத்துப் பதவி பெற வைப்பது கவிதை என்கிறான் அவன்.

கவிதையே தொழிலாகக் கொண்ட கவிஞன் கவிதா சக்தி பற்றி தரும் விளக்கம் இது தான்:-

உள்ளத்தில் ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்

வெள்ளத்தின் பெருக்கைப் போற் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவுமாயின்

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெலாம் விழிபெற்றுப் பதவி கொள்வார்

தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார்

இந்த கவிதா வரிகளில் கம்பனின் சவி என்னும் ஒளியை பாரதி முன் நிறுத்துகிறான். வாக்கினிலே ஒளி வந்து வெள்ளம் போல கலையும் கவிதையும் பெருகுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர் விழி பெற்று உன்னதமான நிலையை எய்துவர். அமிழ்தம் நிகர் தமிழின் சுவை கண்டார் தேவர் ஆகிடுவர்.

என்ன அழகிய வார்த்தைகள்! கவிதையின் மகத்தான் சக்தியை பளீரென்று சொல்கிறார் பாரதியார்.

இது தான் கவிதை! இதைத் தாண்டியும் இருப்பது கவிதை!

எது ஆன்மாவை உயரத்தில் ஏற்றுகிறதோ அது கவிதை! எது ஆன்மாவைப் போல அழியாமல் இருக்கிறதோ அது கவிதை! எது இறைவனின் விளக்க முடியா விந்தையை விளக்க முயன்று ஒளிர்கிறதோ அது கவிதை!

இது தான் கவிதையா! இது கவிதை; இதற்கு அப்பாலும் உள்ள விளக்கத்தைக் கொண்டிருப்பதும் கவிதை! விண்டுரைக்க முடியா விந்தையே கவிதை!

ஆனால் இந்தக் கவிதைக்கான இலக்கணத்தை அனுபவிக்க ஒரு எளிய வழி உண்டு.

அது பாரதியாரின் கவிதைகளைப் படிப்பது தான்; அனுபவிப்பது தான்; உணர்வது தான். அப்போது தேனின் சுவை என்ன என்பதை சொற்களால் விளக்க முயன்று தோற்றுப் போன ஒருவன் ஒரு துளி தேனை அருந்தியவுடன் விளக்கமே தேவையில்லை என்று சொல்வது போல பாரதியின் கவிதைகளைப் படித்து அனுபவிப்பவன் கவிதா இலக்கணத்தை நன்கு அறிந்து கொள்வான்.

****

சரி, ஒரு கவிஞன் அப்படி என்ன தான் செய்து விட முடியும்.? குடந்தை வேலன் என்னும் ஒரு கவிஞர் விடை தருகிறார். யார் இந்தக் குடந்தை வேலன் என்பதை இன்று வரை அறிய முயன்று வருகிறேன். தெரியவில்லை. இவர் பாடிய கவிதைச் சித்தன் கும்மாளத்தில் சில பகுதிகள் இதோ:

கவிதைச் சித்தன் கும்மாளம்!

எழுதியவர் குடந்தை வேலன்

கல்லொடு கல்லினைத் தட்டிக் களைத்திடுங்

    கற்றறி மூடர்களே – ஒரு

சொல்லொடு சொல்லினைத் தட்டி நெருப்பொடு

    சூளை கிளப்பிடுவோம்

ஆனையைப் பானையில் மூடி வைப்போமந்த

     அண்டப் பெருவெளியும் – மிகக்

கூனிக் குறுகியெம் சொல்லெனும் மாயக்

    குடுக்கையில் நின்றாடும்

வெண்ணெயை வைத்திட்டு நெய்க்கு அலைந்திடு

    வீணர்களே வாரும் – இந்த

மண்ணில் இருக்குது விண்ணுலகம் எங்கள்

    மந்திரத்தில் பாரும்

 வானத்தில் வில்லை வளைத்திடுவோம் அந்த

    மண்ணைச் சுருட்டிடுவோம் பர

மோனத்தை ஞானத்தளையில் பிடித்தே

        மூப்பில் ஆழ்த்திடுவோம்

வேதக்குயவன் வனைந்திட்ட மட்குடம்

    வீழ்ந்தே உடைந்ததடா –யாம்

நாதக்குழம்பில் புனைந்திட்ட சொற்கடம்

    ஞானம் முழங்குதடா

(சொற்கடம் என்பதை சொற்கள் தம் எனப் பிரிக்க வேண்டும்)

என்ன ஒரு அருமையான கவிதை! இது தான் கவிதை செய்யும் ஜாலம்! இந்த ஜாலத்தைத் தான் மஹாகவி பன்முகப் பரிமாணத்துடன் தன் கவிதைகள் மூலம் செய்தார் என்று சுருங்கச் சொல்லி விடலாம்!

         *       தொடரும்

tags பார் ,மகாகவி, பாரதியார்,

பாரதியாரின் ராகங்கள்! – 3 (POST No.9047)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 9047

Date uploaded in London – – 18 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

டிசம்பர் 11. பாரதியாரின் பிறந்த தினம். அதையொட்டிய சிறப்புக் குறுந்தொடர் இது!

பாரதியாரின் ராகங்கள்! – 3

ச.நாகராஜன்

மஹாகவி பாரதியாரின் வேதாந்தப் பாடல்கள் அரிய பெரிய உண்மைகளை மிகத் தெளிவாக இனிய சொற்களால தருபவை.

அவற்றிற்கு அவர் அமைத்த இசையைக் காண்போம்.

  1. மாயையைப் பழித்தல் – உண்மை யறிந்தவருன்னை

ராகம் – காம்போதி        தாளம் – ஆதி

  • அச்சமில்லை – பண்டாரப் பாட்டு
  • ஜீவன் முக்தி – ஜயமுண்டு பயமில்லை மனமே

ராகம் – கமாஸ்    தாளம் – ஆதி

  • நந்தலாலா – காக்கைச் சிறகினிலே

ராகம் – யதுகுல காம்போதி தாளம் – ஆதி

  • விடுதலை – வேண்டுமடி எப்போதும் விடுதல்

ராகம் – நாட்டை

குயில் பாட்டு

குயில் பாட்டில் இசையின் மகிமை பற்றி ஏராளமாகச் சொல்கிறார் பாரதியார்.

இதைப் பல்வேறு கட்டுரைகளில் குறிப்பிட்டு விட்டோம்.

ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ என்கிறார் மஹாகவி.

“கானப் பறவை கலகலவெனும் ஓசையிலும்

காற்று மரங்களிடைக் காட்டு மிசைகளிலும்

ஆற்று நீரோசை அருவி ஒலியினிலும்

நீலப் பெருங்கல் எந்நேரமுமே தான் இசைக்கும்

ஓலத்திடையே உதிக்கும் இசையினிலும்

மானுடப் பெண்கள் வளரும் ஒரு காதலினால்

ஊன் உருகப் பாடுவதில் ஊறிடுந் தேன் வாரியிலும்

ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும் நெல் இடிக்கும்

கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்

சுண்ணம் இடிப்பார் தம் சுவை மிகுந்த பண்களிலும்

பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும்

வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாம் ஒலிக்கக்

கொட்டி இசைத்திடும் ஓர் கூட்டமுதப் பாட்டினிலும்

வேயின் குழலோடு வீணை முதலா மனிதர்

வாயினிலும் கையாலும் வாசிக்கும் பல் கருவி

நாட்டினிலும் காட்டினிலும் நாள் எல்லாம் நன்றொலிக்கும்

பாட்டினிலும் நெஞ்சைப் பறி கொடுத்தேன்.”  என இப்படி அடுக்கடுக்காக பதினோரு வகைப் பாடல்களைக் குயில் பாட்டில் சுட்டிக் காட்டுகிறார்.

காதல் காதல் காதல்

இந்தப் பாடலுக்கு பாரதியார் தரும் குறிப்பு இது:-

ராகம் – சங்கராபரணம் ஏக தாளம்

ஸ்வரம் :

“ஸா – ரிமா – காரீ

        பாபாபாபா – மாமாமாமா

ரீகா – ரிகமா – மாமா

(சந்த பேதங்களுக்குத் தக்கபடி மாற்றிக் கொள்க)

இதே பாடலில்,

“நாதம், நாதம், நாதம்,

நாதத்தேயோர் நலிவுண்டாயின்

சேதம், சேதம், சேதம்” என்றும்

“தாளம், தாளம், தாளம்,

தாளத்திற்கோர் தடையுண்டாயின்

கூளம், கூளம், கூளம்”     என்றும்

“பண்ணே, பண்ணே, பண்ணே,

பண்ணிற்கோர் பழுதுண்டாயின்,

மண்ணே, மண்ணே, மண்ணே.”    என்றும்

பாடி இசையமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்.

பாரதியாரின் சங்கீதத் திறனாய்வை அவர் எழுதியுள்ள சங்கீத விஷயம் என்ற கட்டுரையில் படித்து வியக்கலாம்.

இப்படி ஏராளமான ராகங்களைத் தன் பாடல்களுக்கு அமைத்துத் தந்த மஹாகவி ஸ்வர அமைப்பிலும் சிறந்தவர் என்பதை அவரது பல வாழ்க்கை நிகழ்ச்சிகள் சுட்டிக் காட்டுகின்றன.

அன்பர்கள் பாடல்களைப் படிக்கும் போதும், பாடும் போதும் அவரது இசை அமைப்பையும் மனதில் கொண்டால் பாடல்கள் இன்னும் அதிகச் சுவையுடன் தேனாகத் தித்திக்கும் என்பதில் ஐயமில்லை.

                        ***               இந்தக் குறுந்தொடர் முற்றும்

tags- ராகங்கள்! – 3,பாரதியார்

பாரதியார் பற்றி 150+++ கட்டுரைகள் !(Post 9022)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9022

Date uploaded in London – –11 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நானும் எனது சகோதரர் நாகராஜனும் எழுதிய 150-க்கும் மேலான பாரதியார் பற்றிய கட்டுரைகள் எங்களுடைய இரண்டு பிளாக்குகளிலும் உள்ளன. அன்பர்கள் அனைவரும் படித்துப் பயன்பெறவேண்டும் ; 150+ கட்டுரைகளையும் கொடுக்காமல் ஆங்காங்கே எடுத்த தலைப்புகளை மட்டும் கொடுத்துள்ளேன். பாரதியார் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளும் இந்த பிளாக்கில் உள்ளன.

tamilandvedas.com

swamiindology.blogspot.com

ஞானமயம் சார்பில் சென்ற மாதம் பாரதி நினைவு நூற்றாண்டு விழா துவக்கியுள்ளோம். அவருடைய நூற்றாண்டு (Bharati Centenary Memorial Celebrations) நினைவுதினம் 2021 செப்டம்பரில் வருவதற்குள் குறைந்தது 54 பாரதி பாடல்களுக்கு புதிய ராகத்தில், இசையமைத்து பாட வேண்டும் என்பது எங்கள் நோக்கம். லண்டன் திருமதி ஹரிணி ரகு இசையமைத்துக் கொடுத்த ‘வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி வாரம் தோறும் எங்கள் ஒலிபரப்பில்  இடம்பெற்றுவருகிறது அனைவரையும் இந்த திட்டத்தில் பங்கு கொண்டு புதிய ராகத்தில் பாரதியின் பயன்படுத்தாத பாடல்களை பயன்படுத்த அழைக்கிறோம்.

வாழ்க பாரதி! வளர்க தமிழ்!! 

பாரதியார் நூற்றாண்டு விழாவினை ஒட்டி பாரதியார் பா நலம் வழங்க வருகிறார் சந்தானம் நாகராஜன்.

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதியார் பற்றிய கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதி வரும் இவர் ஏராளமான கூட்டங்களில் பாரதியார் பற்றி விரிவுரை ஆற்றியுள்ளார்.

பாரதியார் பற்றிய புத்தகங்கள், அரிய கட்டுரைகள், பத்திரிகைகளை இவர் சேகரித்து வந்துள்ளார். பாரதியார் பற்றி எழுதப்பட்ட மிக முக்கியமான் அரிய நூல்களைப் பற்றி மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் என்ற தலைப்பில் 58 நூல்கள் பற்றிய கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். இவை அனைத்தும் www.tamilandvedas.com இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. செல்லம்மாள் பாரதி,  சகுந்தலா பாரதி, வ.ரா., அமுதன், யதுகிரி அம்மாள், வெ.சாமிநாத சர்மா, ரா.அ.பத்மநாபன், கு.ப.ரா. சிட்டி, கல்கி, பி.ஸ்ரீ. பெ.நா.அப்புசாமி உள்ளிட்ட பலரது புத்தகங்கள், வானொலி உரைகள் பற்றிய அரிய விவரங்களை இந்தக் கட்டுரைகளில் காணலாம்.

பாரதியாரைப் போற்றிப் பாடிய கவிஞர்களின் கவிதைகளில் சிறப்பான ஆயிரம் பாடல்களை பாரதி போற்றி ஆயிரம் என்ற தலைப்பில் தொகுத்து அவற்றை www.tamilandvedas.com இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். 

நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, சங்கு சுப்ரமணியன்,  பாரதி தாசன், கண்ணதாசன் உள்ளிட்ட ஏராளமான கவிஞர்கள் பாரதியைப் போற்றிப் பாடிய பாடல்களின் தொகுப்பாக இது அமைகிறது.

Beautiful Quotations on Bharati (Post No. 2379) | Tamil and …

tamilandvedas.com › 2015/12/11 › beautiful-quotations…

  1.  

11 Dec 2015 — Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. Beautiful Quotations on Bharati (Post No.



Poet Bharati’s Quotations in English (Post No.3303) | Tamil …

tamilandvedas.com › 2016/10/30 › poet-bharatis-quotat…

  1.  

30 Oct 2016 — Compiled by London Swaminathan Date: 30 October 2016 Time uploaded in London: 13-29 Post No.3303 Pictures are taken from various …

பாரதி நான் கண்டதும் கேட்டதும் …

tamilandvedas.com › 2015/11/10

  1.  

10 Nov 2015 — பாரதி நான் கண்டதும் கேட்டதும்:பி.ஸ்ரீ. ப்ஹரடி2. எழுதியவர்:– ச.நாகராஜன். Date: 10 November 2015. Post No:2316. Time uploaded in London :– காலை- 4-56.

Chellammal | Tamil and Vedas

tamilandvedas.com › tag › chellammal

  1.  

26 Aug 2015 — இத்தொகுப்பில் இடம் பெறும் இது புத்தகம் அல்ல. வானொலி உரை. மகாகவி பாரதியாரின் மனைவி திருமதி செல்லம்மா பாரதி 1951ஆம் …

சிட்டுக்குருவி … – Tamil and Vedas

tamilandvedas.com › 2012/06/17

  1.  

17 Jun 2012 — தேசிய கவி சுப்ரமண்ய பாரதி உயிர் வாழ்ந்த காலத்தில் மிகவும் வறுமையில் வாடினார். அவரது மனைவி சமைக்க அரிசி இல்லாமல் …

You’ve visited this page 2 times. Last visit: 08/12/20

பாரதி, திருவெம்பாவை பாடிய …

tamilandvedas.com › 2019/12/12

  1.  

12 Dec 2019 — பாரதிதிருவெம்பாவை பாடிய சுவையான சம்பவம் (Post No.7333). COMPILED BY LONDON SWAMINATHAN. swami_48@yahoo.com. Date: 12 DECEMBER 2019. Time in London – 13-27.


பாரதி நூல்கள்-4 | Tamil and Vedas

tamilandvedas.com › tag › பாரத…

  1.  

27 Aug 2015 — ஐயர், சுப்ரமணிய சிவா, பாரதியார் ஆகியோரிடையே நிலவிய நட்பை நன்கு உணர முடியும். திரு வி.க. ஆசிரியராக இருந்த தேசபக்தன் …

‘பாரதியும் திலகரும்’ (Post No.3428) | Tamil …

tamilandvedas.com › 2016/12/08

  1.  

8 Dec 2016 — மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் என்று இது வரை 12 நூல்கள், கட்டுரைகள், வானொலி உரைகள் … சிட்டி ஆகியோர் எழுதிய நூல்; பாரதி நான் கண்டதும்கேட்டதும் – பி.ஸ்ரீ எழுதிய நூல்; பாரதி பிறந்தார் – கல்கி எழுதிய நூல்.

பாரதி நினைவுகள் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › பாரத…

  1.  

24 Aug 2015 — Time uploaded in London :– 10-10. ச.நாகராஜன். பாரதி நினைவுகள்பாரதி பற்றிய இந்த நூலை எழுதியவர் யதுகிரி அம்மாள். இதன் முதற் பதிப்பு …


மஹாகவி பாரதியார் பற்றிய …

tamilandvedas.com › 2016/12/09

  1.  

9 Dec 2016 — பாரதி இயல். மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 14. பாரதியை ஒட்டிய நினைவுகள் – பெ.நா.அப்புஸ்வாமியின் பல கட்டுரைத் …

பாரதி பாடல்களிலிருந்து 31 …

tamilandvedas.com › 2014/11/28

  1.  

28 Nov 2014 — பாரதி பாடல்களிலிருந்து 31 முக்கிய மேற்கோள்கள். கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன் ஆராய்ச்சிக் கட்டுரை எண்- …



பாரதியார் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › பாரத…

  1.  
  2.  

tamilandvedas.com, swamiindology.blogspot.com. சித்திர பாரதி என்ற நூலில் இருந்து கிடைத்த பாரதியார் ஜாதகம் –. ஹரித கோத்திரம் , மூல நட்சத்திரம், கடக …

பாரதியுடன் 60 வினாடி பேட்டி | Tamil …

tamilandvedas.com › 2014/09/10

  1.  

10 Sept 2014 — எழுதியவர் லண்டன் சுவாமிநாதன் Post No.1278; Dated 10th September 2014. September 11 is Bharati Memorial Day. (( நிலாசாரலில் வெளியிட்ட தேதி 16-1-2012 ) …



தீபாவளி பண்டிகை பற்றி … – Tamil and Vedas

tamilandvedas.com › 2020/09/04

  1.  

4 Sept 2020 — Thanks for your great pictures. பாரதியார் தீபாவளி பண்டிகை மற்றும் இதர பண்டிகைகளைப் பற்றி கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளாரா? – 2.

பாரதி தரிசனம் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › பாரத…

  1.  

12 Dec 2013 — ச.நாகராஜன். Post No 743 dated 12th December 2013. வினா: புண்ணியன் யார்? விடை: பக்கத்திலிருப்பவர் துன்பம் – தன்னைப் பார்க்கப் …

பாரதியார் பற்றிய நூல்கள் – 32 (Post …

tamilandvedas.com › 2017/06/02

  1.  

2 Jun 2017 — மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 32. ஸ்ரீ கபாலி சாஸ்திரி ஸ்ரீ அரவிந்தரை தரிசனம் செய்ய உதவிய மஹாகவி பாரதியார்!



ஆரிய பாரதி வாழ்க! | Tamil and Vedas

tamilandvedas.com › 2014/09/10

  1.  

10 Sept 2014 — கூரிய மதி படைத்த பாரதியின் ஆரியப் பாடல்களைக் காண்போமா? ஆரிய என்றால் … on 10-12-2013) 2.பாரதி தரிசனம்– பகுதி 2 ( Posted on 12-12-2013) …

பாரதி பாட்டில் பகவத்கீதை | Tamil and …

tamilandvedas.com › 2012/12/10

  1.  

10 Dec 2012 — 11th December is Bhrathy’s Birth Day பாரதி படிக்காத நூல்களே இல்லை என்று … ஆரிய தரிசனம் என்ற பாடலில் கிருஷ்ணார்ஜுன தரிசனம் என்ற …



வாழ்க்கையில் வெற்றி பெற பாரதி

tamilandvedas.com › tamil › page

  1.  

12 Dec 2013 — பாரதி தரிசனம் கேட்டீர்கள். மஹாகவி பாரதியாரின் கவிதை, கட்டுரைகளிலிருந்து எடுத்து இணைக்கப்பட்ட ஒரு தொகுப்பு.

–subham–

           

பாரதியார் பா நலம்! (Post No.9006)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 9006

Date uploaded in London – – 7 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

லண்டனிலிருந்து தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் 6-12-2020 அன்று ஒளிபரப்பப்பட்ட உரை!

VOICE RECORDING IS AVAILABLE ON  FACEBOOK.COM/GNANAMAYAM

பாரதியார் பா நலம்!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.

VOICE RECORDING IS AVAILABLE ON  FACEBOOK.COM/GNANAMAYAM

உலகப் பெருங்கவிஞனான பாரதியாரின் பாடல்களை பாரதி நூற்றாண்டிலே நினைப்பது, போற்றுவது நமது கடமை!

பாரதியாரைக் கற்று விட்டால் உலகக் கவிஞர்கள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்ட திருப்தி கிடைக்கும். அது மட்டுமின்றி அந்தக் கவிஞர்களையும் தாண்டிய புது கற்பனை ஒளியையும், சிறப்பையும், அவர்கள் சொல்லாத பல புது விஷயங்களையும் அதில் உள்ள நயங்களையும் நாம் காணலாம்.

ஒவ்வொரு பாடலும் ஒரு சுடர் விளக்கு. சில அமுதத் துளிகளை இங்கு பருகி மகிழ்வோம்.

முதலில் பாரதியாரின் ஒரிஜினல் கவித்திறனைப் பார்ப்போம்.

தேனை மறந்திருக்கும் வண்டும், ஒளிச்

சிறப்பை மறந்து விட்ட பூவும்

வானை மறந்திருக்கும் பயிரும் – இந்த

வையம் முழுதும் இல்லை தோழி!   ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி.

இதில் வந்திருக்கும் யாரும் சொல்லாத  சிறப்பான உவமைகள் அவரை கவிதை வானில் உச்சத்தில் ஏற்றி விடுகின்றன.

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என்று கொஞ்சி அழைக்கும் கவிஞர், உன் கண்ணில் நீர் வழிந்தால் – என்னெஞ்சில் உதிரம் கொட்டுதடி என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா, என்னுயிர் நின்னதன்றோ என்று சொல்லும் போது அதில் இருக்கும் உருக்கத்திற்கு உவமை உண்டா, என்ன?

காலைக் கதிரழகின் கற்பனைகள் பாட வந்த கவிஞன்,

தங்கம் உருக்கித் தழல் குறைத்து தேனாக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ என்கிறான். இது என்ன புது ரஸவாதம்! தங்கத்தை உருக்க வேண்டுமாம். பின்னர் அதன் வெப்பத்தை – சூட்டைத் தணிக்க வேண்டுமாம். அதைத் தேனாக்க வேண்டுமாம். பின்னர் எங்கும் பரப்ப வேண்டுமாம். அது காலைக் கதிரழகாம்! கற்பனையின் எல்லையையும் கடக்கிறான் கவிஞன். செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்றான் அவன். காதிலே தேன் வந்து பாயும் உவமை ஒரு புறம் இனிமையைத் தர ஆடி வரும் தேனே என்று பிள்ளைக் கனியமுதை அவன் அழைக்கும் பாங்கு உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது!

ராமன் சீதை இலக்குவன் நடந்து செல்லும் காட்சியை வர்ணிக்க வந்த கம்பன் பாடுகிறான் இப்படி:

வெய்யோன் ஒளி தன்  மேனியின் விரி ஜோதியின் மறையப்

பொய்யோவெனும் இடையாளொடும் இளையானுடன் போனான்

மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ

ஐயோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்

ஐயோ! இவன் அழகை வர்ணிக்க முடியாது என்கிறான் கம்பன். ஐயோ என்னா பந்து வீச்சுடா என்று கிரிக்கெட் மைதானத்தில் பரம ரசிகன் விளையாட்டில் ஒன்றிக் கூறும் ஐயோவில் எத்துணை அழகு இருக்கிறது.

பாரதியோ ஐயோவை விட்டு விட்டு புதுச் சுவையை புதுச் சொல்லில் தருகிறான் குயில் பாட்டில்!

கண் எடுக்காது என்னைக் கணப்பொழுது நோக்கினாள்

சற்றே தலை குனிந்தாள். சாமீ! இவளழகை

எற்றே தமிழில் இசைத்திடுவேன்.

மங்கை அவளின் ஒரு கணப் பார்வை. சற்றே தலை குனிந்த சமயம். சாமீ! இவளழகை எப்படிக் கூறுவேன் என்று கவிஞன் கூறும் போது கம்பனின் ஐயோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான் நம் முன் தோன்றுகிறது. ஐயோ, – சாமீ இதில் எது சிறப்பு மிக்க சொல் என்று யாரால் சொல்ல முடியும்?!

ஊழிக் கூத்தை பாரதி கண்டான், பாடினான்:

வெடிபடு மண்டத்திடிபல் தாளம் போட – வெறும்

வெளியில் இரத்தக் களியொடு பூதம் பாடப் – பாட்டின்

அடிபடு பொருள் உன் அடிபடும் ஒலியில் கூடக் களித்து

ஆடும் காளீ! சாமுண்டீ! கங்காளீ!

அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை!

எத்துணை அற்புதமான கூத்து! எத்துணை அற்புதமான வர்ணனை!

இப்படிப்பட்ட அரும் கவிஞனை எப்படிப் போற்றினாலும் தகும்!

இனி உலகக் கவிஞர்களின் வரிசையிலே சிறப்பான இடத்தைக் கொண்டவன் பாரதி என்பதற்கும் சில உதாரணங்களைச் சுட்டிக் காட்ட முடியும்!

ஷெல்லி தாசன் என்று தன் பெயரைச் சூட்டிக் கொண்ட கவிஞன் ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியிலே திளைத்தவன். To Sophia என்ற கவிதையில் ஷெல்லி

Thy Deep Eyes a Double Planet

என்று கூறுவதை சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ என்ற பாரதியின் அழியாத வரியிலே காண முடிகிறது. நமது பாரம்பரியத்திற்கு ஏற்றபடி டபிள் ப்ளானட் சூரிய சந்திரனாகிறது!

குரு கோவிந்த சிங்கின் கர்ஜனை உரையிலே,

சவா லாக் சே ஏக் லடாவூம் சிடியன் தே மை பாஜ துடாவூம் தபை குரு கோவிந்த சிம்ஹ நாம கஹாவூ (सवा लाख से एक लड़ाऊं, चिड़ियन ते मैं बाज तुड़ाऊं, तबै गुरु गोबिंद सिंह नाम कहाऊं“)

என்று கூறுகிறார். சிடியா என்றால் சிட்டுக் குருவிகள் பாஜ என்றால் ராஜாளி சிட்டுக்குருவிகள் ராஜாளிகளாகும்!

சவா லாக் -ஒன்றே கால் லட்சம் பேருடன்- ஏக்- ஒரே ஒருவன் சண்டையிடுவான். அப்போது குரு கோவிந்த சிங்கின் பெயரை கேளுங்கள் என்றார்.

இதை, பாரதியார் மிக எளிதாக ‘ஈயை கருட நிலை ஏற்றுவாய்’ என்கிறார்.

இலங்கையிலே தங்க மயமான இலங்கையைக் கண்ட ராமர் லட்சுமணனிடம் இது எனக்கு பெரிதாகத் தெரியவில்லை; ருசிக்கவில்லை; பெற்ற தாயும் எனது தாய்நாடும் சுவர்க்கத்தை விடச் சிறந்ததாகும் என்கிறார்.

‘அபி ஸ்வர்ணமயி லங்கா ந ரோசதே லக்ஷ்மணா! ஜனனீ ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்காதபி கரியஸி’       என்கிறார் இராமர்.

இதன் தமிழ் வடிவத்தை ‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்

நற்றவ வானிலும் நனி சிறந்தனவே’ என்று தருகிறான் நம் அருமைக் கவிஞன்.

வேத சூக்தங்களை அரவிந்தரிடமிருந்து கற்ற பாரதியார் அப்படியே அவற்றை தமிழ்க் கவிதைகளாகத் தந்துள்ளார்.

அக்னி ஸ்தோமம் என்ற கவிதையில் ரிஷிகள் எங்கள் வேள்விக் கூடமீதில் ஏறுதே தீ தீ தீ என்று வேள்வியைத் தொடங்குகின்றனர்.

இளையும் வந்தாள் கவிதை வந்தால் இரவி வந்தானே – இந்நேரம்

விளையும் எங்கள் தீயினாலே – மேன்மையுற்றோமே

என ரிஷிகள் ஆனந்தக் கூத்திடுகின்றனர்.

பிரெஞ்சு மொழியில் உள்ள தேசீய கீதத்தையும் கூட இரு விதமாக மொழி பெயர்த்துத் தந்திருக்கிறான் நம் கவிஞன்.

‘அன்னை நன்னாட்டின் மக்காள் ஏகுவம்

மன்னு புகழ் நாளிதுவே’ என ஆரம்பிக்கும் அந்த கீதம்!

ஏராளமான கவிஞர்கள் பாரதியை அண்ணாந்து பார்த்து வியக்கின்றனர்.

ஒரு பெரும் முயற்சியாக பாரதி போற்றி ஆயிரம் என்று ஆயிரம் பாடல்களைத் தொகுக்க ஆரம்பித்தேன். அந்த ஆயிரம் பாடல்களும் http://www.tamilandvedas.comஇல் பிரசுரிக்கப்பட்டன.

மரணத்தை வென்ற மகாகவியை கவியரசு கண்ணதாசன் பாடுகிறான் இப்படி;

சந்திரர் சூரியர் உள்ளவரையிலும்

   சாவினை வென்று விட்டான் – ஒரு

சாத்திரப் பாட்டினில் பாரததேசத்தின்

   தாய்மையை வார்த்து விட்டான்

இந்திர தேவரும் காலில் விழும்படி

  என்னென்ன பாடி விட்டான் – அவன்

இன்று நடப்பதை அன்று சொன்னான் புவி

   ஏற்றமுரைத்து விட்டான்

வங்கத்து நீரினை மையத்து நாட்டுக்கு

   வாரிக் கொணர் என்றான் – அந்த

வானம் அளந்து விஞ்ஞானம் படைத்திட

  வாரும் தமிழரென்றான்

சிங்க மராட்டியர் கற்பனைக்கீடொரு

  சேரத்துத் தந்தமென்றான் – இந்த

தேச பெருமைக்கு ஆரம்பம் செய்தவன்

   பாரதித் தேவன் என்பான்!

பாரதி எனும் பெயரைச் சொல்லு – கெட்ட

பயமெனும் பகைவனை வெல்லு

நேரினி உனக்கு நிகர் இல்லை – உடன்

நீங்கும் அடிமை மனத் தொல்லை என்கிறார் நாமக்கல் கவிஞர்.

பாரதிக்கு வாழ்நாள் முழுவதும் தாசனாக இருந்த பாரதிதாசன் பாரதியைப் பற்றி விரிவாகக் கூறுகிறார் இப்படி:

பைந்தமிழ் தேர்ப்பாகன் அவனொரு

செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை

குவிக்கும் கவிதைக் குயில்! இந்த நாட்டினைக்

கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு

நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா!

காடு கமழும் கற்பூரச் சொற்கோ

கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்

திறம் பாட வந்த மறவன் புதிய

அறம் பாட வந்த அறிஞன் நாட்டிற்

படரும் சாதிப் படைக்கு மருந்து

மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவ்ன்

அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்

என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்

என்கிறார்.

நான் தொகுத்த ஆயிரம் பாடல்களிலே ஒரு சிலவற்றைப் பார்த்தோம்.

பிரான்ஸென்னும் உயர்ந்த புகழ் நாட்டில் உயர் புலவோரும் பிறரும் ஆங்கே விராவு புகழ் ஆங்கிலத் தீம் கவியரசர் தாமும், சுவை புதிது நயம் புதிது, வளம் புதிது, சொற் புதிது, ஜோதி கொண்ட நவ கவிதை, எந்நாளும் அழியாத மஹா கவிதை என்று பாரதியார் கவிதையை வியந்து கூறியுள்ளனர். அதை இப்படி அவரே கூறி இருக்கிறார்.

இனி இதற்கு மேல் நாம் உரைக்க என்ன இருக்கிறது.

இந்தியர் தம் நெஞ்சினிலே தேசப்பற்றை ஊட்டினான்

வஞ்சக வெள்ளையரை நாட்டைவிட்டு ஓட்டினான்

தமிழர்க்குத் தமிழ் போற்றும் வழி காட்டினான்

புகழோங்கு பாரதத்தை நிலை நாட்டினான்

புதியதொரு பாதையைப் புவியினிலே காட்டினான்

புகழவோர் வார்த்தையிலை புகழுக்கே புகழ் ஊட்டினான்

புண்ணியன் சுப்பிரமணி பாரதியின் பெருமையினை

எண்ணியெண்ணி அவன்வழி நடப்போம் உயர்வோம்

கற்க கசடற பாரதி பாக்களை

நிற்க அதற்குத் தக

என்ற எனது இந்த அஞ்சலிச் சொற்களை பாரதியின் தாளில் சமர்ப்பித்து விடை பெறுகிறேன்.   நன்றி வணக்கம்!

 TAGS- பாரதியார்,  பா நலம், 

****

பாரதியார் பாடல்களில் ஆரிய என்ற சொல்- 2 (Post No.8833)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8833

Date uploaded in London – – –21 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

Broadcast and telecast at Faceboo.com/ gnanamayam on 19-10-20

First part was posted yesterday 20-10-20

பாரதியார் பாடல்களில் ஆரிய என்ற சொல், தேவாரம், சங்க இலக்கியம் போல நல்ல பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளதா? – 2

ச.நாகராஜன்

ஆரிய என்ற சொல் பாரதியாரின் தேசீய கீதங்களில் 24 இடங்களில் வருகிறது.

  ஜய வந்தே மாதரம் பாடல்:

ஆரிய பூமியில் நாரிய ரும் நர
சூரிய ரும்சொலும் வீரிய வாசகம் (வந்தே)

எங்கள் நாடு பாடல்:

உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஓதுவம் இஃதை எமக்கில்லை ஈடே.

பாரத மாதா பாடல்:

முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்தவில் யாருடை வில்? – எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவி நல்
ஆரிய ராணியின் வில்.

சித்த மயமிவ் உலகம் உறுதி நம்
சித்தத்தில் ஓங்கி விட்டால் – துன்பம்
அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல்
ஆரிய ராணியின் சொல்.

காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது
கல்லொத்த தோள்எவர் தோள்? – எம்மை
ஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள்
ஆரிய தேவியின் தோள்.

இங்கெல்லாம் ஆரிய தேவி என பாரத தேவியைக் குறிப்பிடுகிறார் பாரதியார்.

அடுத்து எது ஆரிய நாடு என்பதைத் தெள்ளத் தெளிவாக பாரத தேவியின் திருத் தசாங்கத்தில் குறிப்பிடுகிறார். பாரத நாட்டின் எல்லையையும் வகுத்துக் கூறும் அருமையான பாடல் இது.

தேனார் மொழிக்கிள்ளாய் தேவியெனக் கானந்த
மானாள் பொன் னாட்டை அறிவிப்பாய்! – வானாடு
பேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும்
ஆரியநா டென்றே அறி.

தாயின் மணிக்கொடி பாரீர் என்று பாடிய கவிஞர் அனைவரும் அணிவகுத்து நிற்கும் காட்சியை ஆரியக் காட்சி என்கிறார்.

அணியணி யாயவர் நிற்கும் – இந்த
ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ?

ஆரியம் என்பதை வடமொழி என்று குறிப்பிட்டு பாரதியார் சொல்லும் இடமும் உண்டு.

தமிழ்த்தாய் பாடலில்,

முன்று குலத்தமிழ் மன்னர் – என்னை
மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்,
ஆன்ற மொழிகளி னுள்ளே – உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்

 என்று இங்கு ஆரியத்தை வடமொழி என்ற பொருளில் குறிப்பிடுகிறார்.

தமிழச் சாதி பாடலில் பாரதத்தை ஆரிய நாடு என்று அறிவிக்கிறார்.

மற்றவை தழுவி வாழ்வீ ராயின்,
அச்சமொன்று இல்லை! ஆரிய நாட்டின்
அறிவும் பெருமையும் – … …

வாழிய செந்தமிழ்! பாடலில் ஆரியன் என இறைவனைக் குறிப்பிடுகிறார்.

ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே!

ஆரிய! நீயும்நின் அறம்மறந் தாயோ?

வீர சிகாமணி! ஆரியர் கோனே!

பஞ்சமும் நோயும்நின் மெய்யடி யார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்ச மடைந்தபின் கை விடலோமோ?
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
ஆரிய! நீயும்நின் அறம்மறந் தாயோ?
வீர சிகாமணி! ஆரியர் கோனே!

சத்ரபதி சிவாஜி பாட்டில் ஆரியன் என்பதற்கு ஒரு DEFENITION தருகிறார் இப்படி:

தாய்நாட்டு
அன்பிலா திருப்போன் ஆரிய னல்லன்.
மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி யாளும்

ஆட்சியி லடங்குவோன் ஆரிய னல்லன்.
ஆரியத் தன்மை அற்றிடுஞ் சிறியர்

ஆரியர் இருமின்! ஆண்கள்இங்கு இருமின்!

அடுத்து ஆரிய நீதி என்பது அறநூல்கள் காட்டும் வழி செல்வதேயாம் என்பதை இப்படிக் கூறுகிறார்:

தம்மொடு பிறந்த சகோதரராயினும்
வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம்.
ஆரிய நீதிநீ அறிகிலை போலும்!

குரு கோவிந்தர் பாட்டில் ஆரியர் ஒரே ஜாதி அதாவது இந்த பாரத நாட்டில் வாழும் அனைவரும் ஆரிய ஜாதி என்றும் இதைப் பிளவு படுத்தி ஜாதிகள் பல பேசும் அனைவரும் மாய்க என்றும் கூறுகிறார்.

ஹிந்து இனம் ஒரே இனம் என்பது அவரது அடிப்படைக் கொள்கையாக அமைவதை இங்கு காண்கிறோம். பாடல் இது தான்:

சீடர்காள்! குலத்தினும் செயலினும் அனைத்தினும்
இக்கணந் தொட்டுநீர் யாவிரும் ஒன்றே
பிரிவுகள் துடைப்பீர்! பிரிதலே சாதல்
ஆரியர் சாதியுள் ஆயிரஞ் சாதி
வகுப்பவர் வகுத்து மாய்க, நீர் அனைவிரும்

லாஜபதியின் பிரலாபம் என்ற பாடலில் வரும் வரிகள் இவை:

ஆரியர்தம் தர்மநிலை ஆதரிப்பான் வீட்டுமனார்
நாரியர்தங் காதல் துறந்திருந்த நன்னாடு.

ஆரியர் பாழாகாது அருமறையின் உண்மைதந்த
சீரியர் மெய்ஞ்ஞான தயாநந்தர் திருநாடு.

இங்கெல்லாம் ஆரிய நாடு என்றால் பாரதம் ஆரிய தேவி என்றால் அன்னை பாரத தேவி என்ற பொருளையே காண்கிறோம்.

தெய்வப் பாடல்களில் 3 இடங்களில் வரும் ஆரிய என்ற சொல்லும் சுயசரிதையிலும் ஞானப்பாடல்களிலும் கண்ணன் பாட்டிலும் குயில் பாட்டிலும் வரும் ஆரியர் என்ற சொல்லும் பண்பாடுள்ளவர் என்ற பொருளில் வருகிறது. அதே போல பாஞ்சாலி சபதத்தில் வரும் 7 இடங்களிலும் இதே பொருளே அமைகிறது.

ஆக பாரதியார் அப்படியே அடி வழுவாது இந்த பாரத நாட்டை ஆரியர் நாடு என்றும் பண்பாளரை ஆரியர் என்றும் அறநூல்கள் வழி நடப்பவரை ஆரியர் என்றும் கூறி இருக்கிறார்.

ஆரியம் என்ற சொல்லை வடமொழி என்ற பொருளிலும் பயன்படுத்தியுள்ளார்.

ஆரியன் என்பதை ஹிந்துக்கள் வழிபடும் இறைவன் என்ற பொருளிலும் பயன்படுத்தியுள்ளார்.

தேவாரம், பண்டைய இலக்கியம் கூறியதற்கு ஒரு படி மேலே போய், காலத்தால் பின்னால் தோன்றியதால் தெளிவாக ஹிந்து தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட பாரத நாட்டை ஆரிய நாடு என்று அறிவிப்பதோடு தேசபக்தி இல்லாதோர் ஆரியர் அல்லர் என்றும் ஆரிய இனம் ஒரே இனம் என்றும் இதில் இன, ஜாதி போன்ற வேறுபாடுகளை வகுப்பவர் மாய்ந்து ஒழிக என்றும் கூறுகிறார்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் ஆரியன் திராவிடன் என்ற பொய்யான வாதங்கள் எல்லாம் அவர் பாடல்களால் பொடிப் பொடியாகிப் போகிறது. சங்க இலக்கியமும் தேவாரமும் சுட்டிக் காட்டும் நல்ல பொருளே அவர் பாடல்களிலும் அழுத்தமாக நிலைபெறுகிறது. வாழ்க பாரதி நாமம்!

***

tags- ஆரியன், திராவிடன், பாரதியார்

பாரதியின் ஜாதகம் (Post No.8665)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 8665

Date uploaded in London – –11 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சித்திர பாரதி என்ற நூலில் இருந்து கிடைத்த பாரதியார் ஜாதகம் –

ஹரித கோத்திரம் , மூல நட்சத்திரம், கடக லக்கினம், தனுர் ராசி, 11-12-1882, சித்திரபானு வருஷம், கார்த்திகை மா தம் 27, திங்கட்கிழமை, சுக்ல பக்ஷ பிரதமை

xxxx

பாரதியி ன் புனைப்பெயர் ஷெல்லிதாசன்!

tags – பாரதியார் ,ஜாதகம், பாரதி,  புனைப்பெயர் , ஷெல்லிதாசன் 

தீபாவளி பண்டிகை பற்றி பாரதியார்-Part 2(Post .8623)

Sculpture of Poet Bharati with his wife Chellamma

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8623

Date uploaded in London – – 4 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

பாரதியார் தீபாவளி பண்டிகை மற்றும் இதர பண்டிகைகளைப் பற்றி கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளாரா? – 2

ச.நாகராஜன்

ஒவ்வொரு திங்களன்றும் இந்திய நேரம் மாலை 6-30க்கு – லண்டன் நேரம் பகல் 1.30க்கு ஒளிபரப்பாகும் ஹிந்து மதம் பற்றிய கேள்வி- பதில் நிகழ்ச்சி மற்றும் ஹிந்து ஆலயச் சிறப்புச் செய்திகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதை www.tamilandvedas.com நேயர்கள் நன்கு அறிவர். இதற்கு உலகெங்குமுள்ள அன்பர்கள் கேள்விகளை அனுப்பி வருகின்றனர்.

31-8-2020 அன்று ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் வந்த கேள்வி ஒன்று இது:

பாரதியார் தீபாவளி பண்டிகை மற்றும் இதர பண்டிகைகளைப் பற்றி கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளாரா?

இதற்கு பதில் அளிக்கும் பொறுப்பு எனக்கு வந்தது.

அந்தப் பதிலின் (உரையின்) சாரத்தின் தொடர்ச்சி இதோ:-

மகர சங்கராந்தி எனக் கொண்டாடும் சூரியனின் வடக்கு நோக்கிய பயணம் முக்கியமான ஒன்று. சூரிய ஸ்தோத்திரம் என்ற தலைப்பில் கவிதை ஒன்றை பாரதியார் இயற்றியுள்ளார்.

அவர் மஹாசக்தி பஞ்சகத்தைப் பாடியுள்ளார்.

ஜென்மாஷ்டமி அல்லது கண்ணனது பிறப்பைப் பற்றிக் ‘கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்’ என்று துவங்கும் பாடலைப் படைத்துள்ளார். அவரது கண்ணன் பாட்டுக்கள் குறிப்பிடத் தகுந்தவை.

நவராத்திரி பண்டிகையின் உட்பொருளை விளக்கும் விதமாக இரு கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். இரு கவிதைகளையும் படைத்துள்ளார்.

அவரது கட்டுரையின் சில பகுதிகளை இங்கு பார்ப்போம்:

“ஒன்பதிரவு பராசக்தியைப் பூஜை செய்கிறோம். லக்ஷ்மி என்றும் ஸரஸ்வதி என்றும் பார்வதி என்றும் மூன்று மூர்த்தியாக நிற்பது பராசக்தி. இவ்வுலகத்தை ஆக்கல், அழித்தல், காத்தல் என மூன்று தொழில் நடத்துவது.

 ஹிமாசலந் தொடங்கிக் குமரி முனை வரை, வேதத்தை நம்பும் கூட்டத்தார் எல்லாம் இந்தப் பூஜை செய்கிறோம்.”

“சக்தி : நல்ல வல்லெழுத்துச் சேர்ந்த மொழி.”

“ஒவ்வொருவருக்கும் மூன்று விதச் சக்தி வேண்டும்,  1.அறிவு. 2. செல்வம். 3. தைரியம். இந்த மூன்றும் நமக்கு இஹலோகத்திலே கிடைக்கும் படியாகவும், இதனால் பரலோக இன்பங்களும் சாத்தியமாகும்படியாகவும் நாம் தெய்வத்தை வழிபடுகிறோம்.”

“விக்ரமாதித்யன் வணங்கிய தெய்வம். காளிதாஸனுக்குக் கவிதை காட்டிய தெய்வம்; பாரத நாட்டு மஹாஜனங்கள் இன்னும் தலைமையாகக் கொண்டாடும் தெய்வம்;  ஸ்ரீமந் நாராயண மூர்த்தியின் சக்தியாக விளங்கும் லக்ஷ்மி தேவதை; சிவபிரானுடைய வலிமையாகத் திகழும் பார்வதி; பிரமதேவன் தலைவியாகிய சரஸ்வதி. மூன்று மூர்த்திகள், மூன்று வடிவங்கள், பொருள் ஒன்று, அதன் சக்தி ஒன்று.”

நவராத்திரிப் பாட்டு என்ற தலைப்பில்,

“மாதா பராசக்தி வையம் எலாம் நீ நிறைந்தாய்!

ஆதாரம் உன்னை அல்லால் ஆர் எமக்குப் பாரினிலே”

என்று தொடங்கும் பாடலையும்,

“உஜ்ஜயினீ! நித்ய கல்யாணீ!” என்று துவங்கும் பாடலையும் அவர் படைத்துள்ளார்.

இன்னொரு முக்கியமான சம்பவத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

இந்தியா பத்திரிகை நடத்த ஆக்கமும் ஊக்கமும் பொருளுதவியும் தந்த மண்டயம்  ஸ்ரீநிவாஸாரியார் பாரதியார் புதுவை வந்ததைத் தொடர்ந்து அவரும் சென்னையிலிருந்து புதுவைக்கு வந்தார்.

அவருக்கு யதுகிரி என்ற புதல்வி உண்டு. அவர் அப்போது சிறுமி. பாரதியார் தனது கவிதைகளை எல்லாம அவரிடம் பாடிக் காண்பிப்பார்.

யதுகிரி அம்மாள், பாரதியார் பற்றிய தனது நினைவுகளை, “பாரதி நினைவுகள்” என்ற நூலாக எழுதி வெளியிட்டுள்ளார்.

அதில் வரும் சம்பவம் இது.

ஒரு முறை சிவராத்திரி கொண்டாடும் சிவபக்தர்கள் பாரதியாரை அணுகி, சிவராத்திரி அன்று பஜனை செய்தவாறே ஊர்வலமாகச் செல்லும் எங்களுக்காக ஒரு கவிதை எழுதித் தாருங்கள் என்று கேட்டனர்.

உடனே பாரதியார் தந்த கவிதை தான் ‘முருகா முருகா முருகா’ என்ற அற்புதமான கவிதை.

‘முருகா முருகா முருகா

வருவாய் மயில் மீதினிலே

வடிவேலுடனே வருவாய்

தருவாய் நலமும் தகவும் புகழும்

தவமும் திறனும் தனமும் கனமும்’

என்ற பாடலைப் பாடிய பாரதியார், ‘20 பேர் கூட்டாகச் சேர்ந்து இதைப் பாடினால் பெரும் சக்தி பிறக்கும்’ என்றார்.

யதுகிரி அம்மாள் கூறும் இன்னொரு சம்பவம் மூன்று காதல் பாடல் பிறந்தது எப்படி என்பதை விவரிக்கிறது.

ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் புதுவை கடற்கரையில் பேண்ட் வாத்தியக்காரர்கள் பேண்ட் வாசிப்பது வழக்கம். ஒரு மணி நேரம் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் அவர்களைச் சுற்றி அனைவரும் கூடுவர். குழந்தைகள் கும்மாளம் போடும்.

ஒரு வியாழக்கிழமை பாரதியார், அவரது புதல்வி தங்கம்மாள் பாரதி, அவர் மனைவி செல்லம்மாள் பாரதி, யதுகிரி ஆகிய நால்வரும் கடற்கரைக்குச் சென்றனர்.

அந்த பேண்ட் வாத்திய சத்தம் பெரிதாக இருக்கவே பாரதியார், ‘சற்று அந்தப் பக்கம் போவோம்’ என்றார்.

உடனே தங்கம்மாள் பாரதி, “இந்த இசை எனக்குப் பிடித்திருக்கிறது, இது  போல் நம்மால் பாட முடியுமா?” என்றார்.

பாரதியார், “ஏன் முடியாது, இதை நமக்குத் தக பாடிக் கொள்ளலாம்!” என்றார்.

உடனே தங்கம்மாள், “அப்படியானால் இந்த  மெட்டில் எனக்கு சரஸ்வதி மேல் ஒரு பாட்டுப் பாடித் தாருங்கள்” என்றார்.

அப்போது உச்ச ஸ்தாயி முடிந்து இசை சற்று கீழ் ஸ்தாயிக்கு வந்தது.

உடனே, யதுகிரி, “இது எனக்குப் பிடித்திருக்கிறது. இது போல எனக்கு லக்ஷ்மி மீது ஒரு பாடல் பாடித் தாருங்கள்” என்றார்.

பாரதியார் உடனே, ‘லக்ஷ்மி மீது பாடல் தருகிறேன்’ என்றார்.

இதைக் கேட்ட செல்லம்மாள் பாரதி, “காசி, கல்கத்தாவில் எல்லாம் துர்க்கையை வலிமைக்காக வழி படுவது வழக்கம். நமது சங்கடங்கள் எல்லாம் தீரும். எனக்கு ஒரு பாடலை துர்க்கை  மீது பாடுங்கள்” என்றார்.

பாரதியார் உடனே ‘சரி’ என்றார்.

மறுநாள் மாலை கொலுவில் யதுகிரி ஆரத்தி எடுக்கும் சமயம் உள்ளே நுழைந்த பாரதியார், “நீங்கள் கேட்ட பாடலை கொண்டு வந்திருக்கிறேன். பாடலாமா?” என்றார்.

பின்னர் பாட ஆரம்பித்த்தார்.

ஸரஸ்வதி மீது,

“பிள்ளைப் பிராயத்திலே -அவள்

பெண்மையைக் கண்டு மயங்கி விட்டேன்”

என்று தொடங்கும் பாடலையும்,

லக்ஷ்மி மீது

“இந்த நிலையினிலே- அங்கோர்

இன்பப் பொழிலின் இடையில் வேறொரு

சுந்தரி வந்து நின்றாள்”

என்ற பாடலையும்,

காளி மீது,

“பின்னோர் இராவினிலே – கரும்

பெண்மை அழகொன்று வந்தது கண் முன்பு”

என்ற பாடலையும் பாடினார்.

ஸரஸ்வதி மீதான பாடலை ஸரஸ்வதி மனோஹரி ராகத்திலும், லக்ஷ்மி மீதான பாடலை ஸ்ரீ ராகத்திலும் காளி மீதான பாடலை புன்னாகவராளி ராகத்திலும் அவர் அமைத்திருந்தார். பாடலைக் கேட்டோர் மெய் சிலிர்த்தனர்.

இப்படி பாரதியார் தொடாத பொருள் இல்லை;பாடாத தெய்வம் இல்லை.

அவர் பாடல்களையும் கட்டுரைகளையும் படித்தால் ஹிந்து பண்டிகைகளின் உட்பொருளை அறிந்து கொள்ளலாம்.

 “வீரக் கனல் பொங்கும் வெற்றி மணிச் சிங்கம்

     விண்ணாடு மண்ணாடு வியந்து பணி தங்கம்

கோரப் பகை அடிக்கும் கொடிய மணிக் கதிர்வேல்

     கொடியவர்கள் கொட்டமழி நெடிய மணி நேமி

ஆருக்கும் அஞ்சாத ஆரமர் செல்வன்

     அன்புக்கு என்பு தரும் அருளாளன் அண்ணல்

போருக்கு ரகுராமன் புலமைக்கு வாணி

    பொற்புக்கும் நட்புக்கும் புண்ணியக் கண்ணன்

என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்

 சுப்ரமண்ய பாரதியின் பெருமையை

என்னென்று சொல்வேன்” என்று ஹா.கி.வாலம் அம்மையார் பாரதியைப் போற்றிப் புகழ்கிறார்.

பாரதியார் நாமம் வாழ்க!

 ஹிந்து தர்மம் வாழ்க!

என்று கூறி வாய்ப்பினை நல்கிய அனைவருக்கும் நன்றி கூறி,

அடுத்து இன்னுமொரு உரையில் உங்களைச் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடை பெறுவது சந்தானம் நாகராஜன்!

*

இந்த கேள்வி பதில் நிகழ்ச்சி வாரந்தோறும் திங்களன்று இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும். தமிழ் நெஞ்சங்கள் மகிழ்ச்சியுடன் இதில் பங்கேற்க வேண்டுகிறேன்.

உங்கள் கேள்விகளையும் கருத்துக்களையும் பதிவு செய்யவும் வேண்டுகிறேன்.

tags — தீபாவளி-Part 2 ,பண்டிகை, பாரதியார்

***

தீபாவளி பற்றி பாரதியார் (Post No. 8617)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8617

Date uploaded in London – – 3 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

பாரதியார் தீபாவளி பண்டிகை மற்றும் இதர பண்டிகைகளைப் பற்றி கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளாரா?

ச.நாகராஜன்

ஒவ்வொரு திங்களன்றும் இந்திய நேரம் மாலை 6-30க்கு – லண்டன் நேரம் பகல் 1.30க்கு ஒளிபரப்பாகும் ஹிந்து மதம் பற்றிய கேள்வி- பதில் நிகழ்ச்சி மற்றும் ஹிந்து ஆலயச் சிறப்புச் செய்திகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதை www.tamilandvedas.com நேயர்கள் நன்கு அறிவர். இதற்கு உலகெங்குமுள்ள அன்பர்கள் கேள்விகளை அனுப்பி வருகின்றனர்.

31-8-2020 அன்று ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் வந்த கேள்வி ஒன்று இது:

பாரதியார் தீபாவளி பண்டிகை மற்றும் இதர பண்டிகைகளைப் பற்றி கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளாரா?

இதற்கு பதில் அளிக்கும் பொறுப்பு எனக்கு வந்தது.

அந்தப் பதிலின் (உரையின்) சாரம் இதோ:-

பாரதியார் தீபாவளி பண்டிகை பற்றியும் இதர ஹிந்து பண்டிகைகளைப் பற்றியும் நிறைய கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். அநேகமாக ஒவ்வொரு சிறப்புப் பண்டிகைக்கும் உரிய கவிதையை அவரிடமிருந்து கற்கலாம்; உட்பொருளை விளக்கும் கட்டுரைகளையும் காணலாம்.

சில பண்டிகைகளைப் பற்றி மட்டும் இங்கு நாம் காணலாம்.

உலகில் பல்வேறு பழைய நாகரிகங்கள் தோன்றிய காலமும் அவை மறைந்த காலத்தையும் துல்லியமாக வரலாற்று அறிஞர்கள் சொல்கின்றனர். இப்படி பாபிலோனிய நாகரிகம், அஸிரிய நாகரிகம், எகிப்திய நாகரிகம், ரோமானிய நாகரிகம் தோன்றிய காலமும் மறைந்த காலமும் நமக்குத் தெரியும். ஆனால் ஹிந்து நாகரிகம் என்று பிறந்தது என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய நாகரிகம் இது.

மஹாகவி பாரதியார் மிக அழகுற இதைச் சொல்கிறார்:

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு

    சூழ்கலை வாணர்களும் இவள்

என்று பிறந்தவள் என்று ணராத

   இயல்பினளாம் எங்கள் தாய்.

இப்படி இந்தியத் தாயை – ஹிந்துத் தாயை – அவள் என்று பிறந்தவள் என்று யாராலும் கணிக்க முடியாத சிறப்பைக் கூறுகிறார்.

ஹிந்து மதம் ஒரு மதம் மட்டுமல்ல, ஒரு தத்துவமும் கூட, மதமும் தத்துவமும் மட்டுமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை என சாமர்செட்மாம் என்னும் மேலை நாட்டு எழுத்தாளர் தனது ‘Points of View” என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

(The Hindu Religion is not only a Religion but also a Philosophy, not only a religion and philosopy but it is a Way of Life.)

உண்மை. இதை மஹாகவி பாரதியார் வலியுறுத்தியதோடு அந்த வாழ்க்கை முறையைப் பண்டிகைகளின் வாயிலாகப் படம் பிடித்துக் காண்பித்தார்.

தீபாவளி பற்றிய அவரது கட்டுரை முக்கியமான ஒன்று.

பாரதியார் நடத்திவந்த ‘இந்தியா’ பத்திரிகையில், 1906-இல் அக்டோபர் 20-ஆம் தேதி இதழில் தலையங்கமாக வெளிவந்தது இந்தக் கட்டுரை. பின் ‘கலைமகள்’ பத்திரிகையில் 1941-இல் அக்டோபர் மாதம் வெளியாயிற்று.

கட்டுரை இது தான்:-

“நம் நேயர்களுக்கெல்லாம் கங்கா ஸ்நான பலன் கிடைத்தது பற்றி மகிழ்ச்சி அறிவிக்கின்றோம்.
சரீர சுத்தியுடன் மனோசுத்தியும் ஆத்மசுத்தியும் அவர்களுக்குப் பிராப்தியாக வேண்டுமென்று விரும்புகிறோம்

தற்காலத்திலே இந்து ஜனங்களின் ஆத்மாவைப் பற்றியிருக்கும் அழுக்குகளாகிய பயம், அதைரியம் முதலியவையெல்லாம் அகன்று போய், அவர்கள் ஒளி மிகுந்த உள்ளத்தவர்களாகி விளங்க வேண்டுமென்பதே நமது கோரிக்கை.

நமது நாட்டைப் பற்றிய நரகாசுரன் இறந்து போய்விட்டான்.
பகவானுடைய சக்தியும் எல்லா ஐசுவரியங்களுக்கும் ஆதாரமும் ஆகிய லட்சுமிதேவி நம்மீது கருணை
கொண்டவளாகி நரகாசுரனை வதைத்துவிட்டாள்.

நாமெல்லோரும் அது பற்றிச் சந்தோஷமடைந்து மங்கள ஸ்நானம் செய்து, நல்லாடைகள் புனைந்து ஆனந்தவசமாகி இருக்கின்றோம்.

ஆனால் சிறுகுழந்தைகளைப் போல் விளையாட்டுக்கு ஸ்நானம் செய்தும், தீபங்கள் கொளுத்தியும் சும்மா இருந்துவிடாமல் நாம் செய்யும் செய்கையினது பொருளை நன்றாக அறிந்து காரியங்கள் செய்ய வேண்டும்.

எத்தனை தரம் கொன்றபோதிலும் மறுபடியும் மறுபடியும் உயிர் தளிர்ப்பது ராட்சதர்களுடைய சுபாவம். அவர்களுடைய மர்ம ஸ்தலத்தை அழித்த பிறகுதான் மடிவார்கள்.

அதுபோலவே லட்சுமிதேவி நரகாசுரனை வதைத்தவுடனேயே நாம் அவனுடைய மர்ம ஸ்தானத்தை அழித்து விடாமையால் அவன் மறுபடியும் தளிர்க்கத் தொடங்குகிறான். ஆதலால் நாம் இனியேனும் நரகாசுரனுடைய மர்ம ஸ்தலத்தை நன்றாக அறிந்து அதைத் தாக்காமல் இருப்போமானால் யாதொரு பிரயோஜனமும் கிடையாது.

தீபாவளி தினத்திலேகூட அந்நிய தேசத் துணிகள் வாங்கும் ஈசுவரத் துரோகிகள் நமது நாட்டிலே இருப்பார்களானால் நரகாசுரன் எவ்வாறு ஒழிவான்? லட்சுமிதேவி எப்படி ஜயமடைவாள்?

ஆரிய குமாரர்களே! ராட்சதர், அசுரர், பிசாசர் முதலான துர்க்குணங்களுடைய ஜன்ம விரோதிகளே! உங்களுடைய உண்மையான சுபாவத்தை அறிந்து கொள்ளுங்கள்.

மஹா வீரத்தன்மை பெற்று அஷ்ட லட்சுமிகளுக்கும் இருப்பிடமாகி விளங்குதற்குரிய வழிகளைத் தேடுங்கள். உங்களுக்கெல்லாம் பரிபூர்ணமான ஆரியத்தன்மையும் சர்வாபீஷ்டங்களும் சித்தியடைவதாக. ஓம் தத் ஸத். வந்தேமாதரம்.”

வந்தேமாதரத்துடன் கட்டுரை முடிவடைகிறது.

பழம்பெரும் பண்டிகையான தீபாவளியின் சிறப்பைக் கூறிய பாரதியார் காலத்திற்குத் தக அந்நிய தேசத் துணிகளை வாங்கி அணிவோரை ஈஸ்வர துரோகிகள் என்கிறார்.

இப்படி தேசபக்தியை தெய்வப் பண்டிகை மூலம் அவர் ஊட்டினார்.

1908ஆம் ஆண்டிலிருந்து 1918ஆம் ஆண்டு வரை பாரதியார் புதுவையில் வாசம் செய்தார்.

புதுவையில் உள்ள மணக்குள விநாயகர் மீது 40 பாடல்கள் கொண்ட விநாயகர் நான்மணி மாலை -யை அவர் பாடியுள்ளார்.

                    *** (உரை தொடர்கிறது, அடுத்த கட்டுரையுடன் முடியும்)

tags- பாரதியார், தீபாவளி , பண்டிகை,

AUSPICIOUS DAYS ARE AHEAD ! Happy New Year 2020 (Post No.2446)

Complied by  London Swaminathan

Uploaded in London on  – 31 December 2019

Post No.2446 posted again with new matter

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

Posted by me on 1-1-2016 (now posted with a different format and new pictures and additional matter)

Who is a Kududupai man?

A fortune teller as well as a bogey man; a magician cum beggar.

Kudukudu is the sound made by a kettle drum in the hands of a fortune teller in Tamil Nadu and other places of South India. They (always men) are fearsome and roam the streets at the dead of night. If they are not given food or money they curse the people. And the belief is that it will come true like a Gipsy’s curse. They worship the fearsome goddesses like Durga, Chandi, Suli, Veeri, Malayala Bjagavati. It is believed that they can do evil by invoking the powers of those goddesses. Mothers used to frighten the naughty children with the name of this person like a bogey man in the west. But Bharati, the greatest of the modern Tamil poets, use this man  as a positive figure. But here also that there is a curse that if the learned do something wrong they will be utterly destroyed.

A NOVEL FORTUNE TELLER – POEM BY TAMIL  POET SUBRAHMANYA BHARATI (1882-1921)

1.KUDUKUDU KUDUKUDU KUDUKUDU KUDUKUDU

Auspicious days are ahead;

Castes combine; conflicts cease

Speak up, speak up , Sakti, Durga

Predict, predict, propitious days for Vedapura

2.Destitution disappears; affluence is attained

Learning spreads apace; sin ceases to be;

If the learned take to trickery and commit crimes

They ‘ll be ruined, alas, utterly ruined.

குடு குடு குடு குடு குடு குடு குடு குடு;

நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது;

சாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது;

சொல்லடி, சொல்லடி, சக்தி, மாகாளீ!

வேதபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு.

தரித்திரம்போகுது; செல்வம் வருகுது;

படிப்பு வளருது; பாவம் தொலையுது;

படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்

போவான், போவான் ஐயோவென்று போவான்!

3.Commerce expands in Vedapura ;

Industry grows; workers prosper;

Sciences flourish; secrets come to light;

Power plants multiply; know-how develops;

Fertile ideas arise in abundance.

4.KUDUKUDU KUDUKUDU

Speak up, speak up, Malayala Bhagavati

Antari , Veeri, Chandika, Sulini

KUDUKUDU KUDUKUDU

வேதபுரத்திலே வியபாரம் பெருகுது;

தொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான்

சாத்திரம் வளருது; சூத்திரம் தெரியுது’

யந்திரம் பெருகுது; தந்திரம் வளருது

மந்திரமெல்லாம் வளருது, வளருது;

குடு குடு குடு குடு குடு குடு குடு குடு;

சொல்லடி, சொல்லடி, மலையாள பகவதீ!

அந்தரி, வீரி, சண்டிகை, சூலி

குடு குடு குடு குடு

5. KUDUKUDU  KUDUKUDU

Masters are becoming brave;

Paunch shrinks; diligence spreads;

All forms of wealth grow apace;

Fear dies; sin perishes;

Sciences grow; castes declines;

Eyes  open; justice is perceived;

Old madness vanishes all of a sudden;

Heroism is attained so is honour.

Speak up Sakti, Malayala Bhagavati

Virtue flourishes, virtue thrives.

குடு குடு குடு குடு குடு குடு குடு குடு;

சாமிமார்க்கெல்லாம் தைரியம் வளருது;

தொப்பை சுருங்குது, சுறுசுறுப்பு விளையுது;

எட்டு லட்சுமியும் ஏறி வளருது;

சாத்திரம் வளருது, சாதி குறையுது;

நேத்திரம் திறக்குது, நியாயம் தெரியுது;

பழைய பைத்தியம் படீலென்று தெளியுது;

வீரம் வளருது, மேன்மை கிடைக்குது;

சொல்லடி சக்தி, மலையாள பகவதி;

தர்மம் பெருகுது, தர்மம் பெருகுது.

பாரதியார்

Tamil original is from Kathai-k-Kothu, year 1939.

English Translation is done by Prof. S Ramakrishnanan ( S R K )

Source book- BHARATI PATALKAL,

TAMIL UNIVERSITY, THANJAVUR, 1989

EDITOR- SEKKIZAR ADIPPODI Dr T N RAMACHANDRAN

நல்ல காலம் வருகுது ( அச்சே தின் ஆனே வாலே ஹைன்) — பாரதியார்

புதிய கோணங்கி

 குடு குடு குடு குடு குடு குடு குடு குடு;

நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது;

சாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது;

சொல்லடி, சொல்லடி, சக்தி, மாகாளீ!

வேதபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு.

தரித்திரம்போகுது; செல்வம் வருகுது;

படிப்பு வளருது; பாவம் தொலையுது;

படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்

போவான், போவான் ஐயோவென்று போவான்!

வேதபுரத்திலே வியபாரம் பெருகுது;

தொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான்

சாத்திரம் வளருது; சூத்திரம் தெரியுது’

யந்திரம் பெருகுது; தந்திரம் வளருது

மந்திரமெல்லாம் வளருது, வளருது;

குடு குடு குடு குடு குடு குடு குடு குடு;

சொல்லடி, சொல்லடி, மலையாள பகவதீ!

அந்தரி, வீரி, சண்டிகை, சூலி

குடு குடு குடு குடு

குடு குடு குடு குடு குடு குடு குடு குடு;

சாமிமார்க்கெல்லாம் தைரியம் வளருது;

தொப்பை சுருங்குது, சுறுசுறுப்பு விளையுது;

எட்டு லட்சுமியும் ஏறி வளருது;

சாத்திரம் வளருது, சாதி குறையுது;

நேத்திரம் திறக்குது, நியாயம் தெரியுது;

பழைய பைத்தியம் படீலென்று தெளியுது;

வீரம் வளருது, மேன்மை கிடைக்குது;

சொல்லடி சக்தி, மலையாள பகவதி;

தர்மம் பெருகுது, தர்மம் பெருகுது.

பாரதியார்

Tags  குடு குடுப்பைக்காரன் ,நல்ல காலம் வருகுது, பாரதியார்

–Subham–