A Strange Story about Yama and his Wife Vijaya! (Post No.4259)

Written by London Swaminathan

 

Date: 30 September 2017

 

Time uploaded in London- 15-19

 

 

Post No. 4259

 

Pictures are taken from various sources such as google, Facebook friends, newspapers and Wikipedia for non-commercial use; thanks.

 

In the Bhavishya Purana the following legend of Yama’s marriage is found:-

Yama was exceedingly pleased with a girl named Vijaya, a Brahmin’s daughter. When she first saw him she was greatly alarmed, alike at his appearance and on learning who he was. At length he allayed her fears and he consented to marry him.

 

On her arrival at Yama’s city, her husband cautioned her and assured her all would be well if she never visited the southern portion of kingdom. After a while curiosity overpowered her, and thinking that a rival wife may live in the Southern region and that is why Yama asked her never to visit that area, she visited the forbidden region.

 

There she saw the torments of the wicked, and alas! amongst these she recognised her own mother. Greatly distressed she appealed to Yama to release her mother but Yama told her that was impossible unless someone living on earth perform a certain sacrifice, and transfer the act of the merit of the act to this poor woman then suffering. After some difficulty, a woman was found willing to perform the sacrifice, and Vijaya obtained her release.

Bhavishya Purana included this story to inculcate certain values:

  1. Even if it is your own relative and you are very close to the ruling class, God wont change the rules out of favouritism. But there is an escape route, an exit strategy. That is prayer, Yaga or Yajna.
  2. The Southern region is Yama’s region according to Sangam Tamil literature, Tamil Veda Tirukkural and all the Sanskrit books. This is very strange and unique Hindu concept. In other cultures, such as Egyptian the direction of sunset, West, is the direction where the departed souls go. Thousands of such Hindu concepts, rules, rituals are absent in Europe or other parts of the world. This explodes the myth of Aryan migration. Hindus were the sons of the soil. Sangam Tamil literature supports whatever said in the older Sanskrit literature. Thousands of words that were found in ancient languages can be traced back to Sanskrit or Tamil. That explodes the fake linguistic theories and fake classification of the languages. There is Dravidian family. There is only one family of Indian languages. Tamil branched out 2500 years ago and still Tamil and Sanskrit are the two closest languages.
  3. There are several interesting stories about Yama’s defeat at the hands of human beings in Hinduism, such the little boy Nachiketas, Markandeyan and chaste wife Savitri. This gives hope and positive thoughts to the Hindus. Yama-Vijaya story is ne another story in this category.

Every story in the Puranas has a moral to teach.

 

–Subham–

 

தங்கக் கம்பளம், வெள்ளி ரதம்! சுனஸ்சேபன் கதை சொன்னால்! (Post No.4258)

Written by London Swaminathan

 

Date: 30 September 2017

 

Time uploaded in London- 8-06 am

 

 

Post No. 4258

 

Pictures are taken from various sources such as google, Facebook friends, newspapers and Wikipedia for non-commercial use; thanks.

 

தங்கக் கம்பளம், வெள்ளி ரதம்! சுனஸ்சேபன் கதை சொன்னால்! (Post No.4258)

சுனஸ்சேபன் கதையைக் கேட்டால் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறக்கும்; அதைச் சொன்னவர்களுக்கு மட்டக்குதிரை பூட்டிய வெள்ளி ரதத்தை பரிசாகக் கொடுக்க வேண்டும்; அதைச் சொல்லும் பிராமணர்களுக்கு உட்கார தங்க ஜரிகையால் நெய்யப்பட்ட கம்பளம் தரவேண்டும் — இப்படியெல்லாம் சொல்கிறது 3000 ஆண்டுகளுக்கு முந்தைய பிராமண நூல்கள்.

இது மாக்ஸ்முல்லர்கள், கால்டுவெல்கள் தலையில் போட்ட வெடிகுண்டு ஆகும்; ஏனெனில் இப்படி எழுதப்பட்ட பிராமண நூல்களை, “சுத்தக் குப்பை, பரிகசிக்கத்தக்கது, சிறு பிள்ளைத் தனமானது, ஒரே உளறல்”– என்று எழுதி வைத்தனர்.  இதைப் பாடிய ஆரியர்கள் எங்கள் ஜெர்மானியருக்கும் மூதாதையர்; அவர்கள் எங்கள் ஐரோப்பாவில் இருந்து இந்தியாவில் குடியேறினர்; நாடோடிகள்; மாடு மேய்க்கும் பயல்கள்; சொல்லப்போனால் வேதத்தில் முக்கால் வாசி சிறுபிள்ளைத் தனமான துதிகள்தான் — என்றெல்லாம் கிழக்கிந்தியக் கம்பெனியிடம் கூலி வாங்கிய மாக்ஸ்முல்லர் உளறிக்கொட்டிக் கிளறி மூடினார்.

 

 

அவர்கள் கைகளில் பிராமண நூல்கள் சிக்கியவுடன் ஒரே ஆனந்தம்; ஆளுக்கொன்றாக எடுத்துக்கொண்டு வெள்ளைக்காரப்          ரப் பயல்கள் மொழிபெயர்க்கத் துவங்கினார்கள். ஒரே சிரிப்பு; அட இந்த உளறல்களை வைத்துக் கொண்டு, இந்துமத்துக்கு சமாதி கட்டிவிடுவோம் என்று எழுத்தில் எழுதினார்கள்; பகிரங்கமாகக் கொக்கரித்தார்கள்; தேசத் துரோஹ, இந்து விரோத மார்கசீய  வாந்திகளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. எல்லாப் புத்தகங்களிலும் அதை எழுதி மனம் மகிழ்ந்தார்கள்; உளம் குளிர்ந்தார்கள். ஆனால் இன்று  துர்கா பூஜைக்கும் கணேஷ் சதுர்த்திக்கும் வரும் கூட்டத்தைப் பார்த்து தலையில் துண்டு போட்டு உட்கார்ந்து விட்டார்கள்.

 

வேதங்கள் நான்கு. அவைகளில் சம்ஹிதை, பிராமணம், ஆரண்யகம், உபநிஷத் என்று நான்கு பகுதிகள் உண்டு.

 

உலகிலேயே மிகப் பழைய நூல் ரிக்வேதம்; அது கவிதைத் தொகுப்பு. அதனுடன் எழுந்த உரைநடை நூல் ஐதரேய பிராமணம்; இது யஜுர்வேத பிராமணமாகிய சதபத பிராமணத்துக்கும் முந்தையது என்பது வெளிநாட்டர் கணிப்பு; அதாவது கிமு 1000 ஆண்டில் எழுந்தவை.

பிராமண நூல்களில் அடிக்கடி வரும் ஒரு மரபுச் சொற்றொடர் “கடவுளருக்கு மறைமொழிகளே பிடிக்கும்”; அதாவது எதையும் ரகசிய மொழியில் சங்கேத மொழியில் சொல்லுவோம் என்று ஆடிப்பாடிக் கூத்தாடினர் வேதகால ரிஷிக்கள்; இது தெரிந்தும் வெள்ளைக்காரப் பயல்கள் நேரடியாக இலக்கிய அர்த்தம் கற்பித்து சிரி சிரி என்று சிரித்தனர்.

 

ஆனால் பிராமண நூல்களில் சொல்லப்படாத விஷயமே இல்லை. மேலே சொன்ன தங்க கம்பளம், வெள்ளி ரதம் மந்திரமே நமக்குக் காட்டுகிறது அது ஒரு பணக்கார சமுதாயம். மேலும் பொருளாதர ‘சூப்பர் பவர்’ என்று. இவர்களைப் பார்த்துதான் மாடு மேய்க்கும் நாடோடிகள் என்று பரிகசித்தனர் ஆங்கிலம் தெரிந்த அறிஞர்களும் அசிங்கங்களும்!

 

ஐதரேய பிராமணத்தில் மிகப்பெரிய கதை சுனஸ்சேபன் கதை; இது மனிதனை யாகத் தீயில் காவு கொடுக்கும் கதை. இந்துக்களைக் காட்டுமிராண்டிகள் என்று காட்ட இது ஒன்றே போதுமே என்று கருதிய மாக்ஸ்முல்லர்கள் மண்டையில் அடிவிழுந்தது போல அதையே பிராமணர்கள் புனித காவியமாக்கி எல்லோரும் இதைப் படிக்க வேண்டும் என்று விதித்தனர். கால்டுவெல்களின் ‘பாச்சா’ பலிக்காமல் போனது. ஏனெனில் மனிதனைக் காவு கொடுக்கும் யாக யக்ஞங்கள் எதுவுமே நடக்க வில்லை. அப்படி நடக்கவிருந்த சுனஸ்சேபனும் உயிர் பிழைத்தான். மேலும் அவனுக்கு முந்தி 100 அரசர்கள் இருந்தனர். அவர்கள் காலத்திலோ மனித பலி கொடுக்கும் புருஷமேத யக்ஞம் நடைபெற்றதாக சான்று இல்லை. அது மட்டுமா? புரட்சி வீரன், வேதகால புரட்சித் தலைவர் விசுவாமித்திரர் அந்த சுனஸ்சேபனைக் காப்பாற்றிய கதை பிரசித்தமாகி புனிதம் பெற்றது.

புருஷமேதம் எனப்படும் யாகத்தில் 179 ஆட்களைத் தீயில் பலிகொடுக்க வேண்டும்; முதல் பலி பிராமணன்! அந்தப் பட்டியலை வெளியிட்டால் வேத கால மக்கள் மிகப்பெரிய விஞ்ஞானிகள், உழைப்பாளிகள், தொழிலாளிகள், நாகரீக முதிர்ச்சி பெற்ற சமுதாயம் என்பதும் தெரிந்து விடும்; ஏனெனில் அதில் நட்சத்திர தர்ஷக் எனப்படும் வானவியல் அறிஞர், கொல்லன், பொற்கொல்லன், தேர் செய்யும் தச்சன், போர் வீரன், வணிகன் என்று பெரிய பட்டியல் உள்ளது இப்படி 179 வகைத் தொழிலாளிகள் உள்ள சமுதாயத்தை நாடோடிகள், மாடு மேய்க்கும் இடையர்கள் என்று சொன்ன ஆங்கில எழுத்தர்கள் முகத்தில் கரிபூசியது போலப் போனது. நிற்க.

 

 

யார் அந்த சுனஸ்சேபன்? அவன் கதை என்ன?

இது ராமாயண, மஹாபரத புராணங்களில் சிறிது மாறுபட்டு எழுதப்பட்டாலும் ஒரிஜினல் (Original) என்று கருதப்படும் ஐதரேய பிராமணக் கதையைச் சுருக்கமாகக் காண்போம்.

 

ஹரிச்சந்திர மஹா ராஜாவை எல்லோருக்கும் தெரியும்; உண்மை விளம்பி; சத்திய சீலன்; அவருக்கு பிள்ளையே இல்லை. ‘கடவுளே! எனக்கு மட்டும் குழந்தை பிறக்கட்டும்; முதல் குழந்தையை வருண பகவானே! உனக்கே கொடுத்து விடுகிறேன்’ – என்று சத்தியம் செய்தார்.

 

இப்படி தலைப் பிள்ளையை கடவுளுக்குப் பலி கொடுக்கும் வழக்கம் எல்லாக் கலாசாரங்களிலும் இருந்ததை எல்லா மத நூல்களும் செப்பும்; மேலும் பஹ்ரைன் போன்ற இடங்களில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் சமாதி இருப்பது ஆராய்ச்சியாளருக்கு புதிராகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. (இது பற்றிய விஷயங்களை பஹ்ரைன் அதிசயங்கள் என்ற எனது கட்டுரையில் காண்க)

 

 

ஹரிசந்திரனுக்குக் குழந்தையும் பிறந்தது; ரோஹிதன் என்று நாமகரணம் செய்தார்; பிள்ளை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது. ‘மகனே உன்னை நான் ‘பிராமிஸ்’ (promise) செய்தபடி புருஷமேத யக்ஞம் வளர்த்து ஆகுதி தரவேண்டும்; ஆகையால் தயாராக இரு என்றார். பையன் அதைகேட்டு காட்டிற்கு ஓடிப்போய் ஆறு ஆண்டுகள் மறைந்திருந்தான். அப்போது அந்தப் பக்கம் ஒரு ஏழைப் பிராமணர் வந்தார். அவர் பெயர் அஜீகர்த்தா; அவருக்கு மூன்று மகன்கள். அதில் ஒருவர்தான் சுனஸ்சேபன் (அவன் பெயர் நாய் வால்= சுனஸ்சேபன்)

 

இதோ பார் ஒரு ‘டீல்’ (Deal) போடுவோம்; ரோஹிதா, நீ போய்விடு சுனஸ்சேபனை யாக கம்பத்தில் கட்டுகிறேன்; நூறு பசுக்கள் கொடு; யாகத்துக்கு நானே அழைத்துப் போகிறேன்; அப்போது இன்னும் 100 பசு கொடு; நானே தீயில் ஆகுதியும் தருகிறேன்; இன்னும் 100 பசு கொடு; சரிதானே? என்றார். ரோஹிதனுக்கும் சந்தோஷம்; அப்படியே ஆகட்டும் என்றான்.

இவர்களின் கெட்ட காலமோ, சுனஸ்சேபனின் நல்ல காலமோ அந்தப் பக்கம் ரிஷிகளின் புரட்சித் தலைவர் விசுவாமித்திரர் வந்தார். திரிசங்கு மஹாராஜனை உடம்போடு சொர்கத்துக்கு அனுப்புவேன் என்று சொல்லி தோற்றுப் போனார். ஹரிசந்திரனை பொய் சொல்ல வைப்பேன் என்று சொல்லி தோற்றுப் போனார்; மண், பெண், அஹங்காரம் என்பதில் மூன்று முறை சிக்கி தவ வலிமை எல்லாம் இழந்து பிராமணன் ஆக முடியாமல் தவித்தார். இறுதியில் எல்லாவற்றையும் கடந்து வசிட்டர் வாயினால் பிராமணன் (பிரம்ம ரிஷி) என்று பட்டம் வாங்கினார் புரட்சித் தலவர்– மஹாராஜன் —விசுவாமித்திரர்.

 

அவர் சுனஸ்சேபன், ஒரு கம்பத்தில் கட்டி இருப்பதைக் கண்டார். அட ஹரிச்சந்திரனை மடக்க, கிடுக்கிப் பிடி போட நல்ல சந்தர்ப்பம் என்று கருதி ‘’டேய் பையா! நீ இன்று முதல் என் மகனடா; உன் பெயர் நாய் வால் அல்ல. உன் பெயர் தேவ ராதன் நீ வேதக் கவிகளைப் பாடலாம்; கண்டுபிடிக்கலாம் (சுனஸ்சேபன் பெயரில் பல துதிகள் ரிக் வேதத்தில் உளது) என்றார் .கடைசியில் அந்த யாகம்  நடக்கவில்லை.

 

ஆக உப்புச் சப்பு இல்லாமல் கதை முடிந்தது.

 

வேத கால ரிஷிகள் 100, 1000, 100,000 என்று டெஸிமல் சிஸ்டத்தில்தான் பேசுவர். மிகப்பெரிய கணிதப் புலிகள்; குதிரை பசுமாடு ஆகியவற்றை கண்டு பிடித்து உலகை நாகரீக மயமாக்கினர். எகிப்து மீது படை எடுத்து குதிரை– யானைப் படை பற்றிச் சொல்லிக் கொடுத்தனர். கி.மு 1380-ல் துருக்கியில் குதிரைப் பயிற்சி பள்ளிக்கூடம் நடத்தி சம்ஸ்கிருத மொழிமூலம் அவர்களுக்குப் பாடம் நடத்திய புத்தகம் கிடைத்து இருக்கிறது. இப்பேற்பட்ட நாகரீகவாதிகளைப் பார்த்து தங்கதில் புழங்கிய பணக்காரர்களைப் பார்த்து சிலதுகள் ‘நாடோடிகள்’, ‘மாடு மேய்க்கும் அநாகரீகக் கும்பல்’ என்றெல்லாம் ‘சிலதுகள்’ பிதற்றியது— இன்று நாம் அவர்களைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கலாம்.

 

TAGS:–சுனஸ்சேபன், ஐதரேய பிராமணம், புருஷமேதம், மனித பலி

–SUBHAM–

வளையல் ஓசையால் வரவேற்கவில்லையா? (Post No.4257)

Written by S.NAGARAJAN

 

 

Date: 30 September 2017

 

Time uploaded in London- 6-20 am

 

Post No. 4257

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

வளையல் ஓசையால் உன்னை என் தலைவி வரவேற்கவில்லையா நளனே!

ச.நாகராஜன்

 

 

நள தமயந்தி கதை புராதனமான ஒன்று. வேதத்திலேயே நள- தமயந்தி கதை கூறப்படுகிறதென்றால் அதன் பழமை பற்றியும் பெருமை பற்றியும் அதிகம் பேசத் தேவையே இல்லை!

தேவர்களும் விரும்பிய ஒப்பற்ற அழகியின் அழகை எப்படித் தான் வர்ணிப்பது? முடியாத காரியம்.

 

அசோக வனத்தில் சீதை இருந்த போது நள தமயந்தியை நினைத்துப் பார்த்தது குறிப்பிடத் தகுந்தது.

அப்படி ஒரு ஆதர்ஸ தம்பதியாக நள- தமயந்தி திகழ்ந்தனர்.

 

நள-தமயந்தி சரிதத்தை பல்வேறு கவிஞர்கள் தங்கள் கவிதா சக்திக்குத் தக்கபடி அருமையாக தங்கள் தங்கள் மொழிகளில் பாடியுள்ளனர்.

நளவெண்பா தமிழில் அமைந்த அழகிய நூல்களுள் ஒன்று.வெண்பாப் பாடல்களால் அமையப பெற்ற இந்த நூலை இயற்றியவர் புகழேந்திப் புலவர்.

 

நள சம்பூ சம்ஸ்கிருதத்தில் அமைந்த அற்புதமான நூல்.

இதை திரிவிக்கிரம பட்டர் என்பவர் இயற்றியுள்ளார்.

சம்பு காவ்யம் என்றால் உரைநடையும் கவிதையும் இணைந்த ஒன்று.

 

 

நூலை உரைநடையாக அமைத்து அதில் முக்கியமான சாரத்தைக் கவிதையாகத் தந்தது பஞ்ச தந்திரக் கதை.

 

ஆனால் சம்பு இலக்கியமோ நூலைக் கவிதை வடிவில் தந்து சாரத்தை உரைநடையாகத் தந்து புது பாணியை வகுத்தது.

சம்பு என்ற இந்த ஒரு புதிய பாணியை சம்ஸ்க்ருத கவிதா இலக்கியத்தில் திரிவிக்கிரம பட்டர் ஆரம்பித்து வைத்தார்.

இவரது கவிதா சாமர்த்தியம் அபாரமானது. அழகிய ஒரு தனி நடையை இவர் கொண்டிருந்தார்.

 

 

கி.பி. 915ஆம் ஆண்டு ராஷ்டிரகூட மன்னனான மூன்றாம் இந்திரன் (Nausari Inscription of Rastrakuta Kind Indra III of 915 A.D.) காலத்திய நௌசாரி கல்வெட்டில் உள்ளதை எழுதியவர் இவரே.

பத்தாம் நூற்றாண்டில் பிரபலமான காவியமாக நள சம்பு திகழ்ந்தது.

 

அதில் ஒரு பாடல் இது:

 

கிஞ்சித்கம்பிதபாணிகங்கணரவை: ப்ருஷ்டம் நனு ஸ்வாகதம்

வ்ரீடானம்ரமுகாப்ஜயா சரணயோன்யர்ஸ்தே ச நேத்ரோத்பலே I

த்வாரஸ்தஸ்தனயுக்மமங்கலகடே தத்த: ப்ரவேஷோ ஹ்ருதி

ஸ்வாமின் கிம் ந தவாதிதே: சமுசித்தம் சக்யா நயானுஷ்டிதம் II

 

இந்த அருமையான பாடல் இது. சார்தூலவிக்ரிதா சந்தத்தில் அமைந்துள்ளது.

 

இதன் பொருளைப் பார்ப்போம்.

 

“எனது தலைவி தனது கையைச் சிறிதே அசைத்து தனது வளையோசையால் உன்னை வரவேற்கவில்லையா? வெட்கம் மீதூற தன் தலையைக் குனியச் செய்து அல்லி மலர் போன்ற தன் கண்களை உன் பாதங்களை நோக்கிச் செலுத்தவில்லையா? மார்பகம் என்ற இரண்டு புனிதமான கலசங்களைக் கொண்டு அலங்கரிக்கும்  தனது இதய வாயில் கதவை அவள் உனக்காகத் திறந்து வைக்கவில்லையா?

 

ஓ, அரசே! (நளனே)

 

மிகுந்த கௌரவம் பொருந்திய விருந்தாளியான உனக்கு எந்தப் பொருத்தமான ஒரு வரவேற்பு தான் அளிக்கப்படவில்லை, சொல் பார்ப்போம்!”

இதை அழகுற ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார் ஏ.ஏ,ராமநாதன்.

 

Has not my mistress (Damayanti) bidden you welcome by the jingle of her armlets, even as her hand shook a little? Has she not directed her lily-like eyes at your feet when she bent down her face, overcome by shyness? Has she not given entrance to you in her heart  which has furnished at its gate two auspicious pot in the form of her breasts? O, Master (Nala), what befitting welcome has not been offered by my friend to you, an honoured guest?

 

(Translation by A.A.Ramanathan A.A.R)

 

இந்த ஒரு கவிதையைப்  படித்தவுடன் முழு காவியத்தையும் படிக்கத் தோன்றுகிறதல்லவா?

 

அது தான் திரிவிக்கிரம பட்டரின்- நள சம்பு காவியத்தின் -வெற்றியாகும்!

***

RECITE STORY OF SUNASHEPA: YOU WILL GET GOLDEN CARPET AND SILVER CHARIOT! (Post No.4256)

 

Written by London Swaminathan

 

Date: 29 September 2017

 

Time uploaded in London- 15-56

 

 

Post No. 4256

 

Pictures are taken from various sources such as google, Facebook friends, newspapers and Wikipedia for non-commercial use; thanks.

 

RECITE STORY OF SUNASHEPA: YOU WILL GET GOLDEN CARPET AND SILVER CHARIOT! (Post No.4256)

Rig Vedic society was well advanced and highly civilized. They were an economic super power in the ancient world. Every prize is given only in big decimal numbers such as 10,000 or 100,000 and  gold is freely distributed as dakshina (fees for the priests). Half baked, white skinned “scholars” and their Marxist sycophants described the Rig Vedic Hindus as nomads, pastoral, silly, ridiculous, childish, gibberish, obscure etc. But the biggest wonder is there were 179 different jobs they were doing. One of them is Nakshatra Darshak (Star gazer= astronomer); Jyotish is different. It dealt with auspicious time and the 27+1 stars. India was the oldest civilization to teach jyotisha (astrology) as part of Veda Patasala syllabus. The Vedic youths must study six more subjects such as grammar, linguistics, astrology along with the Vedas. These 179 jobs are in Yajur Veda. White skinned scholars never give the list of 179 professions such as doctors engineers in the Vedic society but they always add one line “victim of Purushameda Yajna’ when such words occur. What is it?

 

Purushameda Yajna was sacrificing human beings and they should throw 179 different people into fire. The foreign scholars were very happy to read such passages in the Satapata Brahmana (of Yajur veda) Even Arya Samajists disowned the Brahmana literature saying that they were not part of the Vedas. They did it because of the bad atmosphere created by the Christian preachers.

The Brahmana literature was a huge mass with full of mysteries. The language is a secret language. Neither Tamil, Greek nor Latin had any literature. If anyone reads it, it wouldn’t make any sense. But the subjects it covers is very vast from astronomy to Zoology. At first the foreigners wrote Hinduism won’t survive even for 100 years with such materials. But those foreigners never said what professions existed at the Vedic period. If they give the full list everybody would know that they were highly civilized. Hindus describe even God as doctor and his advice as medicine ( In Rudram of Yajur Veda).

 

The fact of the matter is that nobody has any proof for Purushameda Yajna (Human Sacrifice). The only anecdote is Sunashepa Anecdote. The brief account is as follows:-

 

It is from the Aitareya Brahmana: King Harischandra of the race of Ikshwaku, being childless, made a vow that if he obtained a son he would sacrifice him to Varuna. A son was born who was named Rohita, but his father postponed, under various pretexts, the fulfilment of his vow (sacrificing children is in every religious book all around globe; thousands of mysterious children’s graves are in Bahrain; read my article about Mysteries of Bahrain).

 

When he was ready to perform the sacrifice, Rohita refused to be the victim and he ran into the forest. He lived there for six years. He then met a poor Brahmin Rishi Ajigerta, who had three sons. He gave his second son Sunashepa (meaning Dog’s tail)  for an exchange of 100 cows. Sunashsepa was tied to a pole. Viswamitra was passing that way and found Sunashepa and released him. He thought it was barbaric to sacrifice a human being. Ramayana and Mahabharata gave different versions where Viswamitra’s two divine mantras released Sunashepa. He was adopted as a son by Viswamitra and changed his name as Devavarta.

A series of seven hymns in the Rig Veda is attributed to Sunashepa.

 

This clearly shows that there was no such human sacrifice nor any custom before Harischandra, one of the long list of kings. Vedic literature was very huge and most of them came before Greeks started writing.

 

Foreigners thought they could use it against Hinduism; but they couldn’t because there was no sacrifice even in this episode.

 

But on the contrary Hindus, particularly Brahmins, used it in a positive way. This is the longest and most interesting story in Aitareya Brahmana. The mere telling of the story saves one from sin.

 

“If a sinful king has the story of Sunashepa told him, not the slightest trace of sin and its consequences will remain in him. He must therefore give a 1000 cows to the teller of this story and a 100 to him who makes the responses required; and to each of them the gold embroidered carpet on which he was sitting; to the priest, besides a silver decked carriage drawn by mules. Those who wish for children should also have this story told them; then they certainly will be blessed with children”.

 

Foreign “scholars” looked like idiots when this is known to the world. Golden carpet! Silver decked chariot! to the priests for telling a story!! How wealthy they must be! Before the Sumerians did the Tulabharam (weight equal to one’s body weight) of gold was given by the Hindus! Tamil King Cheran Senguttuvan gave 55 kilos of gold to a Brahmin just for advising him to do Vedic yajnas and stop killing people in the wars! It happened 2000 years ago in Tamil Nadu.

 

Now you can laugh very loudly when you read some silly things about Vedic Hindus written by Marxist idiots and white skinned fools.

 

–Subham–

 

கரும்பு பிடிக்குமா? இரும்பு பிடிக்குமா? சிவனிடம் அப்பர் கேள்வி (Post No.4255)

Written by London Swaminathan

 

Date: 29 September 2017

 

Time uploaded in London- 7-49 am

 

 

Post No. 4255

 

Pictures are taken from various sources such as google, Facebook friends, newspapers and Wikipedia for non-commercial use; thanks.

கரும்பு பிடிக்குமா? இரும்பு பிடிக்குமா?அப்பர் கேள்வி

 

 

கரும்பு பிடித்தவர் காயப்பட்  டாரங்கொர் கோடலியால்

இரும்பு பிடித்தவ  ரின் புறப்பட்டா  ரிவர்கணிற்க

அரும்பவிழ் தண்பொழில் சூழணி  யா ரூமர்ந்தபெம்மான் 

விரும்பு மனத்தினை யாதென்று நானுன்னை வேண்டுவதே

 

–நாலாம் திருமுறை- தேவாரம், அப்பர்

 

மூவர் அருளிய தேவாரத்தைப் பல கோணங்களில் படிக்கலாம்.

சம்பந்தர் தன்னைப் பாடினார்

அப்பர் என்னைப் பாடினார்

சுந்தரர் பெண்ணைப் பாடினார்

 

என்று சிவன் சொல்லுவதாக சிலர் சொல்லுவர்; இது ஒரு கோணம்

 

தேவாரத்தில் வரும் இயற்கை வருணனை, சிவ பெருமானின் லீலைகள் வருணனை, திருத்தலங்களின் சிறப்பு, அவர்கள் செய்த அதிசயங்கள பற்றிய பாடல்கள், வரலாற்று உண்மைகள், சம்பவங்கள், திருநீறு முதலிய சின்னங்களின் மகிமை, தமிழ் மொழி அழகு, எதுகை, மோனை, பழமொழிகள், அக்காலத் திருவிழாக்கள் — என்று நாம் விரும்பும் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

 

 

நான் படித்தவரை, அதிசய நிகழ்ச்சிகளுக்கு சம்பந்தர் தேவாரமும் வரலாற்று நிகழ்ச்சிகளுக்கு அப்பர் தேவாரமும் மிக உதவும் என்று கண்டேன்.

 

சங்கம் பற்றியும், தருமி பற்றியும் அப்பர் பாடியதால், 1400 ஆண்டுகளுக்கு முன்னர்– சங்க காலத்தில் தமிழ்நாட்டில் நடந்த ஒரு புகழ்பெற்ற காட்சி நம் கண்களுக்கு முன்னே வருகிறது (திருவிளையாடல் சினிமாவிலும் காணலாம்)

 

நரியைப் பரியாக்கிய சம்பவத்தை அப்பர் என்னும் திருநாவுக்கரசர் சொன்னதால், மாணிக்க வாசகப் பெருமான் , அப்பருக்கும் சம்பந்தருக்கும் சற்று முன்னர் வாழ்ந்தவர் என்பதையும் அறிகிறோம்.

 

 

மூவர் தேவாரமும் மணிவாசகப்   பெருமானின்   திருவாசகமும், 12 ஆழ்வார்களின் திவ்வியப் பிரபந்தமும், திருமூலரின் திருமந்திரமும் படிக்கப் படிக்கத் தெவிட்டாதவை . பல அதிசயச் செய்திகள் நிறைந்தவை; பாஸிட்டிவ் எண்ணங்களை உருவாக்குபவை.

 

‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம், வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை ‘ — என்று சம்பந்தர் பாடியதைப் படிக்கையில் தற்காலத்தில் ராஜாஜி எழுதி எம்.எஸ். பாடிய “குறையொன்றுமில்லை, கோவிந்தா” என்ற பாடல் நினைவுக்கு வரும்.

சுருங்கச் சொன்னால் ரிக் வேதம், யஜூர் வேதம் போல எங்கே பார்க்கினும் பாஸிட்டிவ் எண்ணங்கள்! வீட்டில் ஒலித்தால் துன்பங்கள் யாவும் கரைந்துபோகும்.

 

ஒரு பாடலில் அப்பர் பெருமான கரும்பு பிடித்தவனுக்கும் இரும்பு பிடித்தவனுக்கும் என்ன நேர்ந்தது என்று பாடி,  “ஏ, சிவ பெருமானே உனக்கு கரும்பு பிடிக்காதா? இரும்புதான் பிடிக்குமா?” என்று வியக்கிறார்.

 

சிவ பெருமானைப் பாடுகையிலும் கூட அரைத்த மாவையே அரைக்காமல் பல உண்மைச் சம்பவங்களைச் சொல்லி விடுகதை போடுகிறார் திருநாவுக்கரசர்! நாவுக்கு அரசன் அல்லவா?

 

இதோ பாடலின் முழுப்பொருள்:–

 

கரும்பு பிடித்தவர்= மன்மதன்; சிவனால் எரிக்கப்பட்டவர்

இரும்பு பிடித்தவர் = சண்டேசுவர நாயனார்; சிவன் அருள் பெற்றவர்

 

சுவையான கரும்பாகிய வில்லை உடைய மன்மதனை எரித்து, இரும்பாகிய கோடலியைக் கொண்ட சண்டேசுவரருக்கு அருள்பாலித்த – மகிழ்வித்த — பெருமான் ஈசன் — பொழில் சூழ்ந்த ஆரூரில் வீற்றிருப்பவனே! எனக்கும் உம்மைப் பிடிக்கும்; யாது வேண்டுவது? உமக்கு கரும்பு பிடிக்குமா? இரும்பு பிடிக்குமா?

 

–subam–

உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர் மீட்கப்படுமா? – 1 (Post No.4254)

Written by S.NAGARAJAN

 

Date: 29 September 2017

 

Time uploaded in London- 6-10 am

 

Post No. 4254

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பாக்யா 28-9-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் (ஏழாம் ஆண்டு 32வது கட்டுரை)  வெளியாகியுள்ள கட்டுரை

 

 

உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர், மீட்கப்படுமா? – 1

 

 

 ச.நாகராஜன்

 

 

“இயற்கையில் கிடைப்பதில் மிகவும் கடினமானது வைரமே. வைரத்தை வைரத்தால் மட்டுமே அறுக்க முடியும் – அறிவியல் தகவல்

      இயற்கை நமக்கு அளிக்கும் செல்வத்தில் தங்கத்திற்கு அடுத்தபடியாக அனைவரும் விரும்புவது வைரத்தையே. இதில் மதம், ஜாதி, மொழி, நாடு, இனம், பால் என்ற பாகுபாடே இல்லை.

அனைவரும் விரும்பும் ஜொலிக்கும் வைரத்தைக் கண்டு அறிவியல் கூட வியக்கிறது.

வைரம் பல பில்லியன் ( ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி) ஆண்டுகள் பழமையானவை. சில சமயம் 300 கோடி ஆண்டுகள் பழமையான வைரங்கள் கிடைக்கின்றன.

நூறு மைல் ஆழத்தில் பூமியில் புதைந்து கிடைக்கும் வைரம் எரிமலை வெடிப்புகளினால் மேலே வருகிறது.

வைரத்தில் இருப்பது ஒரே ஒரு பொருள் தான் – கார்பன் தான் அது. நூறு சதவிகிதம் கார்பன்!!

பூமியின் கீழே உள்ள அதீத வெப்பத்தினாலும் அழுத்தத்தினாலும் கார்பன் அணுக்கள் தனித்தன்மையினால் ஒன்றிணைகின்றன. அதிசயமான வைரமாக ஆகின்றன.

அடமாஸ் (adamas) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து உருவான ஆங்கில வார்த்தை தான் டயமண்ட். இதன் பொருள் அழிக்க முடியாதது, ஜெயிக்க முடியாதது என்பதாகும். வைரத்தை முதன் முதலில் உலகில் கொண்டிருந்த ஒரே நாடு இந்தியா தான்.

கிறிஸ்துவுக்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே வைரத்தை இந்திய மக்கள் அணிந்திருந்தனர். தாங்கள் வணங்கும் தெய்வச் சிலைகளிலும் அதை அணிவித்திருந்தனர்.

      வைரத்தை அணியாத பெரிய மன்னனே கிடையாது. ஆடைக்கும் மேலாக வைரத்தை மன்னர்கள் மதித்து அதை அணிந்து வந்தனர். அரசவைகளில் எந்த அந்தஸ்து உள்ளவர் எப்படிப்பட்ட நவரத்ன மணியை எந்த விதத்தில் பதித்து அணிய வேண்டும் என்பதற்கு கடுமையான விதி முறைகள் இருந்தன.

   வைரத்தைப் பற்றி அக்னி புராணம் உள்ளிட்ட பல நூல்கள் பல அரிய, இரகசியமான கருத்துக்களைத் தெரிவிக்கின்றன.

     இந்திய வைரங்களை உலகினர் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர். வைர நாடு என்றே இந்தியா அழைக்கப்பட்டது. வெனிஸ் நகரிலும் ஐரோப்பாவில் பல நகரங்களிலும் இந்திய வைரங்களை விற்கும் வைரச் சந்தைகள் இருந்தன.

1725ஆம் ஆண்டு தான் பிரேஜிலில் ஒரு வைரச் சுரங்கம் கண்டு பிடிக்கப்பட்டது.

ஆயிரத்தி எண்ணூறுகளில் தான் தென் ஆப்பிரிக்காவில் வைரம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இப்போது கனடா, போட்ஸ்வானா, நமீபியா, ரஷியா உள்ளிட்ட நாடுகளிலும் வைரம் கிடைக்கிறது.

     உலக வைரங்களில் பெரிய வைரம் தென் ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட கல்லினன் வைரம் தான். இதன் எடை 3106 காரட், (ஒரு காரட் என்பது 0.2 கிராம்). இது எட்வர்ட் மன்னனுக்கு அளிக்கப்பட்டது. பின்னர் இது ஒன்பது பெரிய துண்டுகளாகவும் நூறு சிறிய துண்டுகளாகவும் வெட்டப்பட்டது. மூன்று பெரிய துண்டுகளை டவர் அஃப் லண்டனில் உள்ள கண்காட்சியில் காணலாம்.

    ஆனால் இந்த வைரங்களில் எல்லாம் மிகச் சிறந்த வைரமாக இந்தியர்களின் உரிமைச் சொத்தாகக் கருதப்படுவது கோஹினூர் வைரம் தான்.

அதன் கதையே விசித்திரமானது; சுவையுடன் சோகம் கலந்த ஒன்று.

கோஹினூர் வைரம் இந்தியாவின் பரம்பரைச் சொத்து. அது இன்று இங்கிலாந்தில் இருக்கிறது.

வெள்ளையர் அடித்த கொள்ளையில் கோஹினூரும் ஒன்று. அதை மீட்டு இந்தியாவிற்குக் கொண்டு வர வேண்டும் என்று நீண்ட காலமாகப் பெரும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

 

கோஹினூர் என்றால் பாரசீக மொழியில் ஒளி மலை என்று பொருள்.

இது எவ்வளவு பழமையானது என்பது யாருக்கும் தெரியாது.

இதன் பழைய காலப் பெயர் ஸ்மயந்தக மணி.சம்ஸ்கிருத நூல்கள் பலவற்றிலும் இதன் புகழ் மற்றும் அருமை பெருமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பகவான் கிருஷ்ணர் உள்ளிட்டோரால் இந்த மணி மதிக்கப்பட்டது என்பது பரம்பரையாக வழங்கி வரும் ஐதீகம்.

   அத்துடன் இந்த கோஹினூருடன் கூடவே ஒரு சாபமும் உண்டு என்று நம்பப்படுகிறது.

   ஆண்களிடம் இது இருந்தால் அது அவர்களுக்கு ஆபத்தையே தரும். பெண்கள் இதை அணியலாம். இது தான் சாபம்.

  இதன் பழைய கால எடை 793 கிராம். இன்றோ வெட்டப்பட்டு வெட்டப்பட்டு சுமார் 105 கிராமாகச் சுருங்கி விட்டது.

   காகதீய வம்சம் இந்தியாவில் ஆட்சி புரிந்த போது ஆந்திர பிரதேச்த்தில் கோல்கொண்டா பிரதேசத்தில் இது மீண்டும் கிடைத்ததாக ஒரு வரலாறும் உண்டு.

மத்திய ஆசியாவிலிருந்து கைபர் கண்வாய் (இன்றைய ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ளது இது) வழியே இந்தியாவினுள் 1526ஆம் ஆண்டு நுழைந்த பாபர் முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவினார். அதிலிருந்து சுமார் 300 ஆண்டுகள் இந்த முகலாய ஆட்சி தொடர்ந்தது.

    முகலாய அரசரான ஷாஜஹான் 1628ஆம் ஆண்டு தனது சிம்மாசனத்தில் வைரங்களைப் பதித்தார். இதைச் செய்ய சுமார் ஏழு ஆண்டுகள் பிடித்தது.

இதன் விலையோ தாஜ்மஹாலுக்கு ஆன செலவைப் போல நான்கு ம்டங்கு அதிகம்! தாஜ்மஹால் கட்டப்பட்டு வந்த அதே காலகட்டத்தில் தான் இந்த சிம்மாசனமும் உருவாகிக் கொண்டிருந்தது. இந்தச் செய்தியை அரசவை குறிப்புகளை எழுதி வந்த அஹ்மத் ஷா லாகூர் எழுதி வைத்துள்ளார்.

                        (கோஹினூரின் கதை தொடரும்)

அறிவியல் அறிஞர் வாழ்வில் . ..

பிரபல கணித மேதையான் ஆட்ண்ரூ வைல்ஸ் (Andrew Wiles)  358 ஆண்டுகளாக யாராலும் தீர்க்கப்பட முடியாமல் இருந்த ஃப்ரெமெட்டின் லாஸ்ட் தியரம் (Fermet’s Last Theorem) என்ற கணிதப் புதிரை விடுவித்தது உலகையே வியப்பில் ஆழ்த்திய ஒரு சம்பவம்.

1637ஆம் ஆண்டு  பிரான்ஸை சேர்ந்த சட்ட வல்லுநரும் கணிதத்தைப் பொழுதுபோக்காகக் கொண்டவருமான ஃபெர்மெட் ஒரு சாதாரணப் புதிர் கணிதத்தை கணித மேதைகள் முன்னர்  சவாலாக தீர்வுக்காக வைத்தார். அதை யாராலும் தீர்க்க முடியவில்லை.

ஆண்ட் ரூ வைல்ஸ் பத்து வயதில் சிறுவனாக இருந்த போதே இந்த தீர்க்கப்பட முடியாமல் இருந்த புதிர் மீது ஒரு கண்ணை வைத்தார். அதற்கான விடையை எப்படியாவது கண்டு பிடித்து விடுவது என்று தணியாத வெறியைக் கொண்டார். 1986ஆம் ஆண்டு பிரின்ஸ்டனில் கணிதத்துறையில் சேர்ந்தவுடன் மிகவும் இரகசியமாக இந்தப் புதிரை ஆராய ஆரம்பித்தார்.ஏழு வருடங்கள் ஓடின.

இங்கிலாந்தில் 1993இல் நடந்த ஒரு கணித மாநாட்டில் திடீரென்று தனது உரையின் மூன்றாவ்து பகுதியில் இந்தக் கணிதப் புதிரை தான் விடுவித்து விட்டதாகக் கூறவே உலகமே பரபரப்படைந்தது. மறு நாளே நியூயார்க் டைம்ஸ் இதைப் பெரிதாக வெளியிட்டது.

தனது 200 பக்க உரையை அவர் வெளியிடவே அது சரிதானா என்று ஆராய ஆறு மதிப்பீட்டாளர்கள் நியமிக்கப்பட்டனர். அனைவரின் சந்தேகங்களுக்கும் பொறுமையாக் விடையளித்தார் வைல்ஸ். உலகமே அவரைக் கொண்டாட ஆரம்பித்தது. எந்த ஒரு விஷயத்தையும் தணியாத ஏகாக்கிர சிந்தையுடன் அணுகினால் அதில் வெற்றி பெறலாம் என்பதை நிரூபித்து விட்ட மாமேதையாக இலங்குகிறார் வைல்ஸ்

***

‘WOMEN ARE STARS’ says SATAPATA BRAHMANA (Post No.4253)

Picture of Saptarishi mandala (Great Bear/ Ursa Major/ Great Dipper)

Written by London Swaminathan

 

Date: 28 September 2017

 

Time uploaded in London- 14-37

 

 

Post No. 4253

 

Satapata Brahmana, part of Shukla Yajur Veda, says that women are stars. They mean that women become stars in the sky and lead their husbands to heaven.

 

Many cultures believe that dead people, ancestors, departed souls become stars. But Hindus say that good souls become stars. Hindus even gave the star status to Seven Seers (sapta Rishis/ Ursa Major), a little boy name Dhurva (Pole star) , Agastya (Canopus), chaste women Arundhati (alcol) and Trishanku (Southern cross).

Satapata Brahmana says:

“Of old the divine women, with unclipped wings, dear to all the gods, did bake it (the fire pan), like Angiras, in the lap of the earth; and with their help, he (the priest) now bakes it. but surely these are the stars – the women (jani) and indeed the stars, for these are the lights of those righteous men (jana) who go to the celestial world; it is by means of the stars that he thus bakes it.”

 

“When one has thus ascended these worlds, that is the goal, that the safe refuge; the rays of the sun who burns there, are the righteous departed and what highest light, there is, that is Prajapati or the heavenly world. Having then in this way ascended these worlds, he reaches that goal, that safe refuge”

–Satapata Brahmana 1-9-3/10

Seven Seers ( Sapta Rishis) constellation

In 4-3-4-8 we read the statement that the stars are the lights of righteous me who go the heavenly world. In another passage, we read that they are divine women. There is no contradiction; both the statements are right.

 

Vanaparvam of Mahabharata also confirms that the stars are holy souls.

 

Stars like Rohini attains importance during marriages.

Stars like Krittikas attains importance during long fire sacrifices.

 

In fact, all the 27 stars are important in one way or other.

Arudra star is identified with Lord Shiva

Sravana is identified with Lord Vishnu

Krittikas are identified with Lord Skanda and the six women who raised him.

Every star has a story!

 

Tamil books and Sanskrit books give several names for each star and each one has some explanation. A scientific study will help us to understand these better.

 

I have illustrated the significance of the stars in four or five of my articles.

 

–Subham–

 

 

முடிச்சோதி, முகச்சோதி, அடிச்சோதி: நம்மாழ்வார் பாசுரம் (Post No.4252)

Picture  by Lalgudi Veda

Written by London Swaminathan

 

Date: 28 September 2017

 

Time uploaded in London- 6-34 am

 

 

Post No. 4252

 

Pictures are taken from various sources such as google, Facebook friends, newspapers and Wikipedia for non-commercial use; thanks.

 

முடிச்சோதி, முகச்சோதி, அடிச்சோதி: நம்மாழ்வார் பாசுரம் (Post No.4252)

கடவுளை ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடிப் பரவிப் பரவசப்படும் அழகே தனி; ஆழ்வார்களில் பாரதியாருக்கு மிகவும் பிடித்தவர் நம்மாழ்வார். அவரது பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டதை இதே பிளாக்கில் எனது பழைய கட்டுரைகளில் படித்து மகிழலாம்.

 

 

கடவுளை ஒளி ரூபத்தில் வணங்குவதுதான் இந்துக்களின் மிகப்பெரிய மந்திரமான காயத்ரீ மந்திரம். மூன்று வேதங்களில் உள்ளது.

 

தமிழில் வேதக் கருத்துகளைப் பரப்பியவர்கள் ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஆவர். நம்மாழ்வார், எல்லோருக்கும் பிடித்தவர் என்பதால் ‘நம்ம+ ஆழ்வார்’ என்று புகழப்படுகிறார். அவர் பாடிய ஒரு பாடல் திவ்வியப் பிரபந்தத்தின் 4000 பாடல்களில் தனித்து நிற்கிறது. நாமும் படித்துப் பெருமாளின் அருளுக்குப் பாத்திரர் ஆவோம்:

 

 

முடிச் சோதி யாயுனது முகச்சோதி மலர்ந்ததுவோ?

அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?

படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்

கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே கட்டுரையே.

–நம்மாழ்வார், திருவாய்மொழி, பாடல் 2897

 

திருமாலைப் பார்த்தார் நம்மாழ்வார்; எங்கும் ஒளிமயம்; ஜோதி ஸ்வரூபம்; இந்த ஒளிக்கு என்ன காரணம்? உன்னால்தான் நீ அணிந்திருக்கும் ரத்தின முடி ஒளி பெற்றதோ? உன்னுடைய காலின் ஒளிதான் தாமரையாக மலர்ந்துவிட்டதோ? நீ அணிந்திருக்கும் ஆடைகள் கூட பளபள என்று தங்க வெள்ளி ஜரிகைகளால் ஒளிவீசுகிறதே? அதுவும் உன் ஒளி பரவியதால்தானோ?

 

உண்மையில் தங்க ஜரிகை, ரத்தினக் கற்கள், சூரியனைக் கண்டு மலரும் தாமரை ஆகியவற்றுக்கு இயற்கை ஒளி உண்டு. ஆனால் அவை நம் கண்களில் புலப்பட கட்டாயம் வெளிச்சம் வேண்டும். சூரிய ஒளிபடும்போது நாம் அவற்றின் பளபளப்பால் அறிகிறோம். இங்கு அந்த சூரியன்தான் பெருமாள்; இறைவனின் அருள் ஒளி இல்லாவிடில் எதுவும் பிரகாசிக்காது; அதை விளக்க வந்த பாசுரம்தான் இது.

Tamarind Tree under which Nammalvar got inspiration

 

இதோ பாடலின் பொருள்:

 

திருமகள் தங்கும் மார்பை உடைய திருமாலே, பெருமாளே! உன் திருமுகத்தின் அழகுதான் உன் தலை மீதுள்ள கிரீடத்தின் — திரு முடியின்- அழகு ஒளியாக பரவி இருக்கிறதோ?

 

உன் பாதாரவிந்தங்களின் ஒளி பரவிதான் தாமரையும் பிரகாசிக்கிறதோ?

 

(தாமரைதான் அதிகமான, பிரசித்தமான மலர்; அதனால்தான் இந்துப் பெண்கள் மலர், தாமரை, அம்புஜம், பங்கஜம், கமலம், அரவிந்தம் என்று தாமரையின் பெயர் சூட்டிக்கொண்டு பவனி வருகிறர்கள்)

 

உன் திருமேனியின் ஒளிதான் உனது ஆடைகளிலும், ஆபரணங்களிலும் பரவி பட்டொளி வீசுகிறதோ? இவ்வாறு உன்பால் ஒளிரும் அழகின் தன்மையை எனக்கு எடுத்துச் சொல்வாயாக” என்று நம்மாழ்வார் பாடுகிறார்.

 

நம்மாழ்வார், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். ஆழ்வார் திருநகரியில் அவதரித்தார்; அதன் மற்றொரு பெயர் திருக்குருகூர். இவருக்கு சடகோபன், மாறன், பராங்குசன் என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு. இவர் இயற்றிய நூல்கள்– திருவாய்மொழி, திரு விருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி.

 

மதுரகவி ஆழ்வார், இவரை வழிபட்டே பேரருள் பெற்றார்.

‘வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்’ என்பது பெரியோர் வாக்கு. திருவாய் மொழியில் ஆயிரம் பாசுரங்கள் உண்டு

 

இதற்கு ஐந்து உரைகள் இருக்கின்றன:

திருக்குருகை பிரான் பிள்ளை அருளிய ஆறாயிரப்படி,

நஞ்சீயர் அருளிய ஒன்பதினாயிரப்படி,

வாதி கேசரி அழகிய மணவாளச் சீயர் அருளிய பன்னீராயிரப்படி,

பெரியவாச்சான் பிள்ளை அருளிய இருபத்து நாலாயிரப்படி,

வடக்குத் திருவீதிப்பிள்ளை அருளிய முப்பதாறாயிரப்படி.

 

கம்பனும் சடகோபர் அந்தாதியில் நம்மாழ்வாரைப் பாடிக் கொண்டாடுகிறார்.

 

சேரா தனவுள வோ? பெருஞ்செல்வர்க்குவே தம் செப்பும்

பேராயிரம்திண் பெரும்புயமாயிரம் பெய்துளவத்

தாரார் முடியா யிரங்குருகூர்ச்சடகோபன் சொன்ன

ஆரா அமுதக் கவியாயிரமவ் வரியனுக்கே!

-கம்பர் பாடிய சடகோபர் அந்தாதி

திரு மறை என்று போற்றப்படும். திருவாய்மொழியைப் பாராட்டி மணவாள மாமுனிகள் ஒரு அந்தாதி பாடியுள்ளார்.

 

தகவல் தந்து உதவிய நூல்:- ஞானத் தமிழ், ரெ.முத்துக் கணேசன், காரைக்குடி, 1970

TAGS: நம்மாழ்வார், முகச் சோதி, திருவாய்மொழி

  1. Nammalvar | Tamil and Vedas

tamilandvedas.com/tag/nammalvar

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com) … later known as Nammazvar, … Bharati used it for political freedom as well.

 

–SUBHAM–

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 39 (Post No.4251)

Written by S.NAGARAJAN

 

 

Date: 28 September 2017

 

Time uploaded in London- 5-18 am

 

Post No. 4251

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பாரதி இயல்

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 39

 

 

சீனி.விசுவநாதன் பதிப்பித்த காலவரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்!

 

ச.நாகராஜன்

 

 

பாரதி இயலில் ஒரு அரிய பணியாக பாரதி அன்பர் சீனி.விசுவநாதன் பல ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார். முதலிடம் பெறும் நூலாக நாம் கருதும் ஒரு சிறந்த நூல் கால வரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் என்ற நூல்.

பாரதியாரின் 123ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி கால வரிசையிலான ஐந்தாம் தொகுதியை வெளியிட்டிருப்பதாக ‘என்னுரையில்’ கூறும் அன்பர், இந்த ஐந்தாம் தொகுதியில் 3-7-1909 முதல் 25-9-1909 முடிய உள்ள மூன்று மாதக் காலப் பகுதியில் இந்தியா பத்திரிகை இதழ்களில் பாரதி எழுதிய கருத்தோவியங்கள் இடம் பெற்றுள்ளன என்கிறார்.

 

நல்ல சீரிய முயற்சி.

 

432 பக்கங்கள். விலை ரூ 150/ 11-12-2004 வெளியீடு. மொத்தம் ̀116 கட்டுரைகள் உள்ளன.

 

பாரதி பொக்கிஷம் இது.

 

ஏனெனில் தம் காலத்திய வரலாற்று நிகழ்ச்சிகளை எல்லாம அழகுற பாரதியார் இந்த மூன்று மாத காலத்தில் பதிவு செய்துள்ளார்.

 

பதிப்பாசிரியராக வெறும் கட்டுரைகளை வெளியிட்டதோடு தன் பணி முடிந்து விட்டது என்று கருதாமல் ஆங்காங்கு விளக்க உரையாக  அவசியமான வரலாற்றுச் செய்திகளையும் தருகிறார் சீனி.விசுவநாதன்.

 

இந்த நூலின் இன்னொரு சிறப்பு. அழகாக அமைந்துள்ள பொருள் அட்டவணை.

 

அகோரநாத ச்ட்டோபாத்தியாயர், அசுதோஷ் விச்வாஸ், அசோக் நந்தி, அசோக் நந்தி, அசோக் சந்திர நந்தி, அநாத பால மடம், அப்துல் ஹ்மீது, அப்துல் ஹமீத், அப்பர் சுவாமிகள், அமலோக்ராம், அமீர், அரவிந்த கோஷ் என்று இப்படி அகரவரிசைப் பட்டியலாக சுமார் 324 பொருள் விவரங்கள் வரிசையாக இடம் பெற்றுள்ளன.

ஆய்வாளர்களுக்கு கோலாகலம் தான்!

 

Bharati Statue at Setupati High School, Madurai.

 

எந்தப் பொருளைப் பற்றி வேண்டுமானாலும் பாரதியார் என்ன எழுதியுள்ளார் என்று உடனடியாகத் தெரிந்து கொள்ள முடியும்.

அரவிந்த மஹரிஷி பற்றியும் அவரது கருத்துக்கள் பலவற்றையும் இந்தத் தொகுதியில் நாம் காணலாம்.

 

 

லண்டனில் நடந்த கொலை, மதன்லால் திங்க்ராவின் வாக்கு மூலம், ஹிந்து முஸ்லீம்களின் ஐக்கியம், மத த்வேஷம், ஐரோப்பியனாகப் பிறந்த புண்ணியம், இந்தியனாகப் பிறந்த பாபம்,உருட்சிக்கு நீட்சி, புளிப்புக்கு வளப்பன் பாரத ஜாதி என்பன சில கட்டுரைத் தலைப்புகள்.

 

 

காலவரிசைப் படுத்தப்பட்ட பாரதியின் படைப்புகளில் இதற்கு முந்தைய நான்கு தொகுதிகளில் 3-7-1909க்கு முற்பட்டதான பாரதியின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.

இவற்றைத் தொகுப்பதே ஒரு பெரிய பணி. அதை அழகுற முடித்து அச்சிடுவது அதை விடப் பெரிய பணி.

அந்த வகையில் பாரதி அன்பர்களின் மிகப் பெரும் போற்றுதலுக்கு ஆய்வாளர் சீன் விசுவநாதன் உரியவ்ர் ஆகிறார்.

 

 

பாரதியார் பற்றிய ஏராளமான ஆய்வு நூல்களை எழுதியுள்ள இவரது உண்மை சார்ந்த அணுகுமுறை போற்றப்பட வேண்டிய ஒன்று.

 

தான் எப்படி பல சூழ்ச்சியாளர்களின் வலையில் சிக்க நேர்ந்தது என்பதை வேறு ஒரு நூலில் இவர் விவரித்துள்ளார்.

இயல்பு தான்.

 

நல்லவரை எப்படி விட்டு வைப்பார்கள்?

சுயநலத்திற்காக உபயோகித்து விட்டுத் தங்கள் பெயரைப் போட்டுக் கொள்வார்கள்.

அன்பர்கள் இவரது நூல்களை வாங்கிப் படித்தால் பாரதி இயலில் தெளிவு பெறுதல் நிச்சயம்.

 

ஏராளமான முரண்பட்ட செய்திகளுக்கு இவரது ஆய்வு முத்தாய்ப்பான விடையைத் தரும்.

 

எடுத்துக் காட்டாக இன்னொரு நூலை அடுத்துப் பார்ப்போம்.

***

 

STAR MYSTERIES IN THE RIG VEDA- PART 2 (Post No.4250)

Written by London Swaminathan

 

Date: 27 September 2017

 

Time uploaded in London- 14-55

 

 

Post No. 4250

 

Pictures are taken from various sources such as google, Facebook friends, newspapers and Wikipedia for non-commercial use; thanks.

 

 

I posted the first part of this article yesterday.

 

Part 2

Atharva Veda added more names to the Nakshatra list.

Punarvasu is recommended by all authorities as suitable for ‘relaying of sacred fires (Punar aadheya); Kathaka Samhita allows Anuradha (star) also.

One Year

In the ceremony of Agnicayana (piling of the fire altar),the bricks are assumed to be equal in number to the Naksatrasa. The bricks number 756 and they are equated to 27 stars multiplied by 27 secondary stars (nakshatras), reckoned as 720 (instead of 729) with addition of 36 days, the length of intercalary month.

Taiitiriya, Maitrayani and Kathaka samhitas give a list of 28 stars.

 

Taittiriya Samhita divided the stars into two categories:

1.Deva naksatras 1-14 i.e. Krittika to  Visakhe

2.Yama Naksatras- 15-27 i.e. Anuradha to Apabharani (Abijit with No 20 is not included)

 

In Krittika group (Pleiades) the names of the seven stars in the constellation include : Abhrayantii, Meghayantii, Vajrayantii (all connected with rain and clouds)

.

Next to Rohini comes Mrgasiirsa  ( also called Invakaa) and Arudraa (moist), Punarvasu, Tishya (also known as Pushya), Aslesa, Maghas (also known as Anaghaa). They are followed by Phalguni (also Arjuni), Hasta, Citra, Svati (also known as Nistyaa), Visakhe, Anuradha, Rohini (Jyestagni or Jyesta—two stars have the name ROHINI),Vicratu (Mula), Ashadas (Uttara, Purva), Abhijit (in the Lyrae constellation), Srona (Sravana), Sravisthas (also Dhanista), Satabhisaj (having 100 physicians), Prosthapadas, Revati, Asva-yujau (Asvini), Apabharani (Bharani).

 

In the Brahmanas , Nakshatras are joined with the moon such as Tisya- Paurnamasa, Phalghuni paurnamasa etc

The Nakshatras and the Chronology

Sravana always marked the Summer Solstice.

Now we list the stars from Asvini, Bharani, krittika………….; but in Vedic days all the lists of the Naksatras (stars) begin with Kritika. The reason is vernal equinox coincided with it. It happened in 3000 BCE, according to Weber.

 

Jacobi’s argument

German scholar Herman Jacobi contended that in the Rig Veda (RV 7-103 frog hymn; 10-85 marriage hymn) , the commencement of the rains and the summer solstice mark the beginning of the new year and the new year began with summer solstice in Phalguni. He has also referred to the distinction of the two sets of Deva and Yama nakshatras in the Taittiriya Brahmana as supporting his view of the connexion of the sun and the nakshatras.

 

The Winter Solstice in Magha (Regulus)

William Jones calculated it happened in 1181 BCE, taking the starting point at 499 CE given by Varaha mihira; but Davis and Colebrook arrived at 1391 BCE.

Year Beginning in Phalghuni:

Since it is called the mouth of the year, Phalghuni was considered the beginning of the year. Jacobi calculated and said that it happened in 4000 BCE.

 

B G Tilak, on the other hand, holds that the winter solstice coincided with the Magha full moon at the time of the Taitiriya Samhita (2350BCE) and coincided with Phalguni and Caitri  in early periods – i.e. 4000 – 2500 BCE, and 6000-4000 BCE.

 

I am Margasirsha among the months: Krishna said in the Bhagavad Gita. Why?

 

Markazi (in Tamil) or Maargairsha was called Aagrahaayana (belonging to the beginning of the year. Spring commenced in Caitra). This means the Vedas older than these calculations.

 

Pole Star

Jacobi pointed out Dhruva means fixed star and this pole star could have happened only in third millennium BCE.

 

All these point out to a very old date for the Rig Veda. If Margasirsa was the first month (as we find in the Bhagavad Gita) it will give us an older date to the Vedas!

Source Book: Vedic Index by Keith and Macdonell

 

Tomorrow I will tell you about Yajur Veda’s statement “STARS ARE WOMEN!”

–Subham-