விவேக சிந்தாமணி பொன்மொழிகள் (Post 10,498)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,498

Date uploaded in London – –   28 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜனவரி 2022 நற்சிந்தனை காலண்டர்

31 விவேக சிந்தாமணி பொன்மொழிகள்

xxxx

பண்டிகை நாட்கள் – ஜனவரி 13 போகிப் பண்டிகை; 14- பொங்கல், மகர சங்கராந்தி; 15- மாட்டுப் பொங்கல்; 16- திருவள்ளுவர் தினம் ; 18 தைப்  பூசம், வடலூர் ஜோதி தரிசனம் ; 22- தியாகராஜ ஆராதனை ,23-சேஷாத்ரி சுவாமிகள் ஜெயந்தி;26 குடியரசு தினம்; 31- தை  அமாவாசை.

அமாவாசை-ஜனவரி 2,31; பெளர்ணமி – 17, ஏகாதசி விரத நாட்கள் -13, 28;

சுபமுஹுர்த்த  நாட்கள் – ஜனவரி 20

XXXX

ஜனவரி 1 சனிக் கிழமை

நன்மானம் வைத்தெந்த நாளுமவர் தங்களுக்கு நன்மை செய்வோர்
மன்மானி யடைந்தோரைக் காக்கின்ற வள்ளலென வழுத்த லாமே. (96)

xxx

ஜனவரி 2 ஞாயிற்றுக் கிழமை

கற்பூரப் பாத் திகட்டிக் கஸ்தூரி எருப்போட்டுக் கமழ்நீர் பாய்ச்சிப்
பொற்பூர வுள்ளியினை விதைத்தாலு மதன்குணத்தைப் பொருந்தக் காட்டும்

Xxxx

ஜனவரி 3 திங்கட் கிழமை

நோய்கொண்டா லுங்கொளலாம் நூறுவய தாமளவும்
பேய்கொண்டா லுங்கொளலாங் பெண்கொள்ள லாகாதே. (85)

Xxxx

ஜனவரி 4 செவ்வாய்க் கிழமை

மெய்யதைச் சொல்வ ராகில் விளங்கிடு மேலும் நன்மை
வையக மதனைக் கொள்வார் மனிதரிற் றேவ ராவார்

Xxx

ஜனவரி 5 புதன் கிழமை

நன்மனை தோறும் பெண்களைப் படைத்து நமனையு மென்செயப் படைத்தனையோ! (82)

Xxxx

ஜனவரி 6 வியாழக் கிழமை

பொய்யதைச் சொல்வா ராகில் போசன மற்ப மாகும்
நொய்யரி சியர்க ளென்று நோக்கிடா ரறிவுள் ளாரே. (67)

xxxxx

ஜனவரி 7 வெள்ளிக் கிழமை

அந்தணர் கருமங் குன்றில் யாவரே வாழ்வர் மண்ணில் – 125

Xxx

ஜனவரி 8 சனிக் கிழமை

வெட்டையிலே மதிமயங்கும் சிறுவருக்கு மணம்பேசி விரும்பித் தாலி
கட்டையிலே தொடுத்து நடுக் கட்டையிலே கிடத்துமட்டுங் கவலை தானே

Xxxx

ஜனவரி 9 ஞாயிற்றுக் கிழமை

மறையோர் மன்னர் வணிகர்நல் லுழவோ ரென்னுங்
குலங்கெடும் வேசை மாதர் குணங்களை விரும்பு வோர்க்கே. (122)

Xxx

ஜனவரி 10 திங்கட் கிழமை

பரிவிலாச் சகுனி போலப் பண்புகெட்டவர்கள் நட்பால்
ஒருமையி னரக மெய்து மேதுவே யுயரு மன்னோ. (119)

Xxx

ஜனவரி 11 செவ்வாய்க் கிழமை

மங்கை கைகேசி சொற்கேட்டு மன்னர்புகழ் தசரதனும் மரண மானான்
செங்கமலச் சீதைசொல் ஸ்ரீராமன் கேட்டவுடன் சென்றான் மான்பின்

xxxxx

ஜனவரி 12 புதன் கிழமை

நிலமதிற் குணவான் தோன்றி னீள்குடித் தனரும் வாழ்வார்
தலமெலாம் வாசந் தோன்றும் சந்தன மரத்திற் கொப்பாம்

xxx

ஜனவரி 13 வியாழக் கிழமை

தங்கையவள் சொற்கேட்ட ராவணனும் கிளையோடு தானு மாண்டான்
நங்கையர்சொற் கேட்பதெல்லாங் கேடுவரும் பேருலகோர் நகைப்பர் தாமே. (117)

xxxxx

ஜனவரி 14 வெள்ளிக் கிழமை

புலவர்கள் சபையில்கூடிப் புன்கவி யாளர் சார்ந்தால்
நலமென்றே கொள்வதல்லால் நவில்வரோ பெரியோர் குற்றம். (102)

Xxx

ஜனவரி 15 சனிக் கிழமை

நலமிலாக் கயவன் றோன்றின் குடித்தனம் தேசம் பாழாம்
குலமெலாம் பழுது செய்யுங் கோடரிக் காம்பு நேராம். (112)

xxxx

ஜனவரி 16 ஞாயிற்றுக் கிழமை

மின்னலைப்போல் மனையாளை வீட்டில்வைத்து வேசைசுகம் விரும்புவோரும்
அன்னைபிதா பாவலரைப் பகைப்போரு மறிவிலாக் கசடராமே. (97)

Xxx

ஜனவரி 17 திங்கட் கிழமை

நன்மானம் வைத்தெந்த நாளுமவர் தங்களுக்கு நன்மை செய்வோர்
மன்மானி யடைந்தோரைக் காக்கின்ற வள்ளலென வழுத்த லாமே. (96)

Xxxx

ஜனவரி 18 செவ்வாய்க் கிழமை

அறிவுளோர் தமக்கு நாளு மரசருந் தொழுது வாழ்வார்
நிறையொடு புவியிலுள்ளோர் நேசமாய் வணக்கஞ் செய்வார்–64

Xxxx

ஜனவரி 19 புதன் கிழமை

கோளினர் தமக்கு நன்மை செய்வது குற்ற மாமே.–63

Xxx

ஜனவரி 20 வியாழக் கிழமை

முடவனை மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை முனிதான் கொல்லும்
மடவனை வலியான் கொன்றால் மறலிதா னவனைக் கொல்லும்-59

Xxx

ஜனவரி 21 வெள்ளிக் கிழமை

வேம்புக்குத் தேன்வார்த் தாலும் வேப்பிலை கசப்பு மாரா
தாம்பல நூல்கற் றாலுந் துர்ச்சனர் தக்கோ ராகார். (61)

Xxx

ஜனவரி 22 சனிக் கிழமை

பொல்லார்க்குக் கல்விவரில் கெருவமுண்டா மதனோடு பொருளுஞ் சேர்ந்தால்
சொல்லாதுஞ் சொல்லவைக்குஞ் சொற்சென்றால் குடிகெடுக்கத் துணிவர் கண்டாய்- 99

Xxxx

ஜனவரி 23 ஞாயிற்றுக் கிழமை

சந்திர னில்லா வானந் தாமரை யில்லாப் பொய்கை
மந்திரி யில்லா வேந்தன் மதகரி யில்லாச் சேனை

Xxx

ஜனவரி 24 திங்கட் கிழமை

சுந்தரபு புலவ ரில்லாத் தொல்சபை சுதரில் லாவாழ்வு
தந்திக ளில்லா வீணை ஸ்தனமிலா மங்கை போலாம். (57)

Xxxx

ஜனவரி 25 செவ்வாய்க் கிழமை

ஆசாரஞ் செய்வா ராகி லறிவொடு புகழு முண்டாம்
ஆசாரம் நன்மை யானா லவனியிற் றேவ ராவார்

xxxx

ஜனவரி 26 புதன் கிழமை

ஆசாரஞ் செய்யா ராகி லறிவொடு புகழு மற்றுப்
பேசார்போற் பேச்சு மாகிப் பிணியொடு நரகில் வீழ்வார். (50)

xxxxx

ஜனவரி 27 வியாழக் கிழமை

புத்திமான் பலவா னாவான் பலமுளான் புத்தி யற்றால்
எத்தனை விதத்தினாலு மிடரது வந்தே தீரும்– 47

xxxx

ஜனவரி 28 வெள்ளிக் கிழமை

பொருளிலார்க் கின்ப மில்லை புண்ணிய மில்லை யென்று
மருவிய கீர்த்தி யில்லை மைந்தரிற் பெருமை யில்லை– 60

Xxx

ஜனவரி 29 சனிக் கிழமை

ஊழ்வினை வந்த தானால் ஒருவரால் விலக்கப் போமோ
ஏழையா யிருந்தோர் பல்லக் கேறுதல் கண்டி லீரோ. (41)

Xxxx

ஜனவரி 30 ஞாயிற்றுக் கிழமை

அத்தன்மால் பிர்ம தேவனா லளவிடப்பட் டாலுஞ்
சித்திர விழியார் நெஞ்சந் தெரிந்தவ ரில்லை கண்டீர்-44

Xxxxx

ஜனவரி 31 திங்கட் கிழமை

மதன லீலையில் மங்கையர் வையினும்
இதமுறச் செவிக் கின்பம் விளையுமே. (46)

xxxx

Bonus quote

அற்பர்தம் பொருள்க டாமு மவரம ரிறந்த பின்னே
பற்பலர் கொள்வா ரிந்தப் பாரினி லுண்மை தானே—32

–SUBHAM—

TAGS –விவேக சிந்தாமணி, பொன்மொழிகள் , ஜனவரி 2022, நற்சிந்தனை ,காலண்டர்

டிசம்பர் 2021 காலண்டர் – 31 வள்ளலார் பொன்மொழிகள் (Post No.10,386)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,386

Date uploaded in London – –   28 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பண்டிகை நாட்கள் – டிச. 4- சூரிய கிரஹணம் (இந்தியாவில் தெரியாது) ; 11- பாரதியார் பிறந்ததினம்; 16- மார்கழி மாதப் பிறப்பு ; 20-ஆருத்ரா தரிசனம்; 25- கிறிஸ்துமஸ்

அமாவாசை- 4; பெளர்ணமி – 18; ஏகாதசி விரத நாட்கள் -14, 29.

சுப முகூர்த்த நாட்கள் 1, 6,  8, 9, 10, 13

xxx

டிசம்பர் 2021 காலண்டர் – 31 வள்ளலார் பொன்மொழிகள் (Post No.10,386)

டிசம்பர் 1 புதன் கிழமை

வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி

மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி

ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி

ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி.

XXX

டிசம்பர் 2 வியாழக் கிழமை

ஐயன்அருள் வருகின்ற தருணம்இது கண்டீர்

ஐயமிலை ஐயமிலை ஐயன்அடி ஆணை

XXX

டிசம்பர் 3 வெள்ளிக் கிழமை

மெய்யன்எனை ஆட்கொண்ட வித்தகன்சிற் சபையில்

விளங்குகின்ற சித்தன்எலாம் வல்லஒரு விமலன்

XXX

டிசம்பர் 4 சனிக் கிழமை

தனித்தலைமைப் பெரும்பதிஎன் தந்தைவரு கின்ற

தருணம்இது சத்தியம்காண் சகதலத்தீர் கேண்மின்

XXX

டிசம்பர் 5 ஞாயிற்றுக் கிழமை

இனித்தநறுங் கனிபோன்றே என்னுளம்தித் திக்க

இன்னமுதம் அளித்தென்னை ஏழுலகும் போற்ற

மனித்தஉடம் பிதைஅழியா வாய்மைஉடம் பாக்கி

மன்னியசித் தெல்லாம்செய் வல்லபமும் கொடுத்தே

XXX

டிசம்பர் 6 திங்கட் கிழமை

சத்தியவான் வார்த்தை இது தான்உரைத்தேன் கண்டாய்

சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்

XXX

டிசம்பர் 7 செவ்வாய்க் கிழமை

இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்

இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்

சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்

தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்

XXX

டிசம்பர் 8 புதன் கிழமை

செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்

திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.

XXX

டிசம்பர் 9 வியாழக் கிழமை

என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார்

இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார்

பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனது

பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்

XXX

டிசம்பர் 10 வெள்ளிக் கிழமை

உருத்திரர்கள் ஒருகோடி நாரணர்பல் கோடி

உறுபிரமர் பலகோடி இந்திரர்பல் கோடி

பெருத்தமற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும்

பேசில்அனந் தங்கோடி ஆங்காங்கே கூடித்

XXX

டிசம்பர் 11 சனிக் கிழமை

திருத்தமுறு திருச்சபையின் படிப்புறத்தே நின்று

தியங்குகின்றார் நடங்காணும் சிந்தையராய் அந்தோ

வருத்தமொன்றும் காணாதே நான்ஒருத்தி ஏறி

மாநடங்காண் கின்றேன்என் மாதவந்தான் பெரிதே.

XXX

டிசம்பர் 12 ஞாயிற்றுக் கிழமை

அம்மாநான் சொன்மாலை தொடுக்கின்றேன் நீதான்

ஆர்க்கணிய என்கின்றாய் அறியாயோ தோழி

இம்மாலை அம்பலத்தே எம்மானுக் கன்றி

யார்க்கணிவேன் இதைஅணிவார் யாண்டைஉளார் புகல்நீ

XXX

டிசம்பர் 13 திங்கட் கிழமை

சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த

சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே

ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே

அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்

XXX

டிசம்பர் 14  செவ்வாய்க் கிழமை

தூய சதாகதியே நேய சதாசிவமே

சோம சிகாமணியே வாம உமாபதியே

XXX

டிசம்பர் 15 புதன் கிழமை

தருவளர் நிழலே நிழல்வளர் சுகமே

தடம்வளர் புனலே புனல்வளர் நலனே

XXX

டிசம்பர் 16 வியாழக் கிழமை

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே

அன்பெனும் குடில்புகும் அரசே

அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே

அன்பெனும் கரத்தமர் அமுதே

XXX

டிசம்பர் 17 வெள்ளிக் கிழமை

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே

எல்லாம்வல் லான்தனையே ஏத்து.

XXXX

டிசம்பர் 18 சனிக் கிழமை

இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற்

றென்றுவரு மோஅறியேன் எங்கோவே – துன்றுமல

வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து

சும்மா இருக்கும் சுகம்.

XXX

டிசம்பர் 19 ஞாயிற்றுக் கிழமை

கடியரில் கடியேன் கடையரில் கடையேன் கள்வரில் கள்வனேன் காமப்

பொடியரில் பொடியேன் புலையரில் புலையேன் பொய்யரில் பொய்யனேன் பொல்லாச்செடியரில் செடியேன் சினத்தரில் சினத்தேன் தீயரில் தீயனேன் பாபக்

கொடியரில் கொடியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.

XXX

டிசம்பர் 20 திங்கட் கிழமை

மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம்ஒன் றறியேன்

மதிஅறியேன் விதிஅறியேன் வாழ்க்கைநிலை அறியேன்

திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்

செய்தறியேன் மனமடங்கும் திறத்தினில்ஓர் இடத்தே

இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்

XXX

டிசம்பர் 21 செவ்வாய்க் கிழமை

தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால் தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்

பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப் பேசிய தந்தையும் தாயும்

பொடித்திரு மேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னை

அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மைஅப் பாஇனிஆற்றேன்

XXX

டிசம்பர் 22 புதன் கிழமை

திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே

திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ

உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்

ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ

XXX

டிசம்பர் 23 வியாழக் கிழமை

எண்ணிலா அண்டபகி ரண்டத்தின் முதலிலே

இடையிலே கடையிலேமேல்

ஏற்றத்தி லேஅவையுள் ஊற்றத்தி லேதிரண்

டெய்துவடி வந்தன்னிலே

XXX

டிசம்பர் 24 வெள்ளிக் கிழமை

வேதத்தின் முடிமிசை விளங்கும்ஓர் விளக்கே

மெய்ப்பொருள் ஆகம வியன்முடிச் சுடரே

நாதத்தின் முடிநடு நடமிடும் ஒளியே

நவைஅறும் உளத்திடை நண்ணிய நலமே

XXX

டிசம்பர் 25 சனிக் கிழமை

சந்திர சூரியர் ஒளிபெற விளங்கும்

தனிஅருட் பெருவெளித் தலத்தெழுஞ் சுடரே

XXXX

டிசம்பர் 26 ஞாயிற்றுக் கிழமை

அமரரும் முனிவரும் அதிசயித் திடவே

அருட்பெருஞ் சோதியை அன்புடன் அளித்தே

கமமுறு சிவநெறிக் கேற்றிஎன் றனையே

XXXX

டிசம்பர் 27 திங்கட் கிழமை

. ஐயர்அருட் சோதியர சாட்சிஎன தாச்சு

ஆரணமும் ஆகமமும் பேசுவதென் பேச்சு

எய்யுலக வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு

என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.

XXX

டிசம்பர் 28 செவ்வாய்க் கிழமை

ஈசன்அரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம்

ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம்

தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணி பீடம்

தீபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம்.

xxx

டிசம்பர் 29 புதன் கிழமை

சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு

தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு

இற்சமய வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு

என்பிறப்புத் துன்பமெலாம் இன்றோடே போச்சு.

xxx

டிசம்பர் 30 வியாழக் கிழமை

அம்பலத்தில் எங்கள்ஐயர் ஆடியநல் லாட்டம்

அன்பொடுது தித்தவருக் கானதுசொல் லாட்டம்

வம்புசொன்ன பேர்களுக்கு வந்ததுமல் லாட்டம்

வந்ததலை யாட்டமின்றி வந்ததுபல் லாட்டம்.

xxx

டிசம்பர் 31 வெள்ளிக் கிழமை

நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு

நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு

சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு

செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு.

–SUBHAM—

TAGS– டிசம்பர் 2021 காலண்டர், வள்ளலார், பொன்மொழிகள்,

வள்ளலார் பொன் மொழிகள்- அக்டோபர் 2021 காலண்டர் (Post No.10,154)

compiled BY LONDON SWAMINATHAN

Post No. 10,154

Date uploaded in London – 29 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

விழா நாட்கள் – அக்டோபர் 2- காந்தி ஜயந்தி , 6-மஹாளய அமாவாசை ,7- நவராத்ரி ஆரம்பம், 14-சரஸ்வதி பூஜை ,15- விஜய தசமி,தசரா ; 19-மிலாடி நபி.

அமாவசை -அக்.6, பவுர்ணமி- 20; ஏகாதசி – அக்.2, 16.

சுப முஹுர்த்த நாட்கள் – அக்.25,27

xxx

மகாதேவமாலை , அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் அருளியது

xxx

அக்டோபர் 1 வெள்ளிக்கிழமை

36.ஏகாந்தப் பெருவெளிக்குள் இருந்த வாழ்வே

தெருளளவும் உளமுழுதுங் கலந்து கொண்டு

தித்திக்குஞ் செழுந்தேனே தேவ தேவே.

xxx

அக்டோபர்  2 சனிக்கிழமை

40. சுழியாத அருட்கருணைப் பெருக்கே என்றுந்

தூண்டாத மணிவிளக்கின் சோதி யே வான்

ஒழியாது கதிர்பரப்புஞ் சுடரே அன்பர்க்

கோவாத இன்பருளும் ஒன்றே

xxx

அக்டோபர்  3 ஞாயிற்றுக் கிழமை

41.நெல்லொழியப் பதர்கொள்வார் போல இன்ப

நிறைவொழியக் குறைகொண்மத நெறியோர் நெஞ்சக்

கல்லொழிய மெய்யடியர் இதய மெல்லாங்

கலந்துகலந் தினிக்கின்ற கருணைத் தேவே

xxx

அக்டோபர்  4 திங்கட் கிழமை

43.பழம்பழுத்த வான்தருவே பரம ஞானத்

திரம்பழுத்த யோகியர்தம் யோகத் துள்ளே

தினம்பழுத்துக் கனிந்தஅருட் செல்வத் தேவே.

xxx

அக்டோபர்  5 செவ்வாய்க் கிழமை

44. அண்டமெலாம் கண்ணாகக் கொளினும் காண்டற்

கணுத்துணையும் கூடாவென் றனந்த வேதம்

விண்டலறி ஓலமிட்டுப் புலம்ப மோன

வெளிக்குள்வெளி யாய்நிறைந்து விளங்கும் ஒன்றே

xxx

அக்டோபர்  6 புதன் கிழமை

46. உடல்குளிர உயிர்தழைக்க உணர்ச்சி ஓங்க

உளங்கனிய மெய்யன்பர் உள்ளத் தூடே

கடலனைய பேரின்பம் துளும்ப நாளும்

கருணைமலர்த் தேன்பொழியும் கடவுட் காவே

xxx

அக்டோபர்  7 வியாழக் கிழமை

49. பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம்

புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்

கங்குகரை காணாத கடலே

xxx

அக்டோபர் 8 வெள்ளிக்கிழமை

50. வான்காணா மறைகாணா மலரோன் காணான்

மால்காணான் உருத்திரனும் மதித்துக் காணான்

நான்காணா இடத்ததனைக் காண்பேம் என்று

நல்லோர்கள் நவில்கின்ற நலமே

xxx

அக்டோபர்  9 சனிக்கிழமை

52. பற்றறியா முத்தர்தமை எல்லாம் வாழைப்

பழம்போல விழுங்குகின்ற பரமே மாசு

பெற்றறியாப் பெரும்பதமே

xxxx

அக்டோபர்  10 ஞாயிற்றுக் கிழமை

53. மெய்யுணர்ந்த வாதவூர் மலையைச் சுத்த

வெளியாக்கிக் கலந்துகொண்ட வெளியே முற்றும்

பொய்யுணர்ந்த எமைப்போல்வார் தமக்கும் இன்பம்

புரிந்தருளும் கருணைவெள்ளப் பொற்பே

xxx

அக்டோபர்  11 திங்கட் கிழமை

54.ஆண்பெண்

அலிவகையல் லாதவகை கடந்து நின்ற

அருட்சிவமே சிவபோகத் தமைந்த தேவே

xxx

அக்டோபர்  12 செவ்வாய்க் கிழமை

55.ஊராத வான்மீனும் அணுவும் மற்றை

உள்ளனவும் அளந்திடலாம் ஓகோ உன்னை

ஆராலும் அளப்பரிதென் றனந்த வேதம்

அறைந்திளைக்க அதிதூர மாகுந் தேவே.

xxx

அக்டோபர்  13 புதன் கிழமை

56. கற்பங்கள் பலகோடி செல்லத் தீய

கனலினடு ஊசியின்மேல் காலை ஊன்றிப்

பொற்பறமெய் உணவின்றி உறக்க மின்றிப்

புலர்ந்தெலும்பு புலப்படஐம் பொறியை ஓம்பி

நிற்பவருக் கொளித்துமறைக் கொளித்து

xxx

அக்டோபர்  14 வியாழக் கிழமை

58. உருநான்கும் அருநான்கும் நடுவே நின்ற

உருஅருவ மொன்றும்இவை உடன்மேல் உற்ற

ஒருநான்கும் இவைகடந்த ஒன்று மாய்அவ்

வொன்றினடு வாய்நடுவுள் ஒன்றாய் நின்றே

இருநான்கும் அமைந்தவரை நான்கி னோடும்

எண்ணான்கின் மேலிருத்தும் இறையே மாயைக்

கருநான்கும் பொருணான்கும் காட்டு முக்கட்

கடவுளே கடவுளர்கள் கருதுந் தேவே.

Xxx

அக்டோபர் 15 வெள்ளிக்கிழமை

61. உருத்திரர்நா ரணர்பிரமர் விண்ணோர் வேந்தர்

உறுகருடர் காந்தருவர் இயக்கர் பூதர்

மருத்துவர்யோ கியர்சித்தர் முனிவர் மற்றை

வானவர்கள் முதலோர்தம் மனத்தால் தேடிக்

கருத்தழிந்து தனித்தனியே சென்று வேதங்

களைவினவ மற்றவையுங் காணேம் என்று

வருத்தமுற்றாங் கவரோடு புலம்ப நின்ற

வஞ்சவெளி யேஇன்ப மயமாம் தேவே.

xxx

அக்டோபர் 16 சனிக்கிழமை

64.அதுகண்டோம் அப்பாலாம் அதுவும் கண்டோம்

ஏன்றஉப சாந்தநிலை கண்டோம் அப்பால்

இருந்தநினைக் காண்கிலோம் என்னே என்று

சான்றவுப நிடங்களெலாம் வழுத்த நின்ற

தன்மயமே சின்மயமே சகசத் தேவே.

xxx

அக்டோபர் 17 ஞாயிற்றுக் கிழமை

69.அன்னைநீ என்னுடைய அப்ப னீஎன்

அரும்பொருள்நீ என்னிதயத் தன்பு நீஎன்

நன்னெறிநீ எனக்குரிய உறவு நீஎன்

நற்குருநீ எனைக்கலந்த நட்பு நீ

xxx

அக்டோபர் 18 திங்கட் கிழமை

71. ஆனேறும் பெருமானே அரசே என்றன்

ஆருயிருக் கொருதுணையே அமுதே கொன்றைத்

தேனேறு மலர்ச்சடைஎஞ் சிவனே தில்லைச்

செழுஞ்சுடரே ஆனந்தத் தெய்வ மே

xxx

அக்டோபர் 19 செவ்வாய்க் கிழமை

73. அன்னையினும் பெரிதினிய கருணை ஊட்டும்

ஆரமுதே என்னுறவே அரசே

xxx

அக்டோபர் 20 புதன் கிழமை

74.பேதையேன் நின்னருளைப் பெற்றோர் போல

நடித்தேன்எம் பெருமான்ஈ தொன்றும் நானே

நடித்தேனோ அல்லதுநீ நடிப்பித் தாயோ.

xxx

அக்டோபர் 21  வியாழக் கிழமை

75. மத்தேறி அலைதயிர்போல் வஞ்ச வாழ்க்கை

மயலேறி விருப்பேறி மதத்தி னோடு

பித்தேறி உழல்கின்ற மனத்தால் அந்தோ

பேயேறி நலிகின்ற பேதை யானேன்

Xxxx

அக்டோபர் 22 வெள்ளிக்கிழமை

76.பொதியணிந்து திரிந்துழலும் ஏறு போலப்

பொய்யுலகில் பொய்சுமந்து புலம்பா நின்றேன்

துதியணிந்த நின்னருளென் றனக்கு முண்டோ

இன்றெனிலிப் பாவியேன் சொல்வ தென்னே.

xxxx

அக்டோபர் 23 சனிக்கிழமை

77. என்னரசே என்னுயிரே என்னை ஈன்ற

என்தாயே என்குருவே

xxxx

அக்டோபர் 24 ஞாயிற்றுக் கிழமை

83. அடிமைசெயப் புகுந்திடும்எம் போல்வார் குற்றம்

ஆயிரமும் பொறுத்தருளும் அரசே நாயேன்

கொடுமைசெயு மனத்தாலே வருந்தி அந்தோ

குரங்கின்கை மாலையெனக் குலையா நின்றேன்

xxx

அக்டோபர் 25 திங்கட் கிழமை

85.கள்ளமனக் குரங்காட்டும் ஆட்ட மெல்லாம்

கண்டிருந்தும் இரங்கிலையேல் கவலை யாலே

உள்ளமெலிந் துழல்கின்ற சிறியேன்

xxxx

அக்டோபர் 26 செவ்வாய்க் கிழமை

87. தீவினைநல் வினையெனும்வன் கயிற்றால் இந்தச்

சீவர்களை ஆட்டுகின்ற தேவே

xxx

அக்டோபர் 27 புதன் கிழமை

89.பன்னெறியில் எனைஇ ழுத்தே

பம்பரத்தின் ஆடியலைப் படுத்தும் இந்தப்

பாவிமனம் எனக்குவயப் படுவ தில்லை

xxx

அக்டோபர் 28  வியாழக் கிழமை

90. கண்ணுடைய நுதற்கரும்பே மன்றில் ஆடும்

காரணகா ரியங்கடந்த கடவு ளேநின்

தண்ணுடைய மலரடிக்கோர் சிறிதும் அன்பு

சார்ந்தேனோ செம்மரம்போல் தணிந்த நெஞ்சேன்

xxx

அக்டோபர் 29 வெள்ளிக்கிழமை

94.செறிஇரவு பகலொன்றும் தெரியா வண்ணம்

இம்மையிலே எம்மையினும் காணாச் சுத்த

இன்பநிலை அடைவேனோ ஏழை யேனே.

Xxx

அக்டோபர் 30 சனிக்கிழமை

95. அடியனேன் பிழையனைத்தும் பொறுத்தாட் கொண்ட

அருட்கடலே மன்றோங்கும் அரசே இந்நாள்

கொடியனேன் செய்பிழையைத் திருவுள் ளத்தே

கொள்ளுதியோ

xxx

அக்டோபர் 31 ஞாயிற்றுக் கிழமை

97.உற்றாயுஞ் சிவபெருமான் கருணை ஒன்றே

உறுபிழைகள் எத்துணையும் பொறுப்ப தென்றுன்

பொற்றாளை விரும்பியது மன்று ளாடும்

பொருளேஎன் பிழையனைத்தும் பொறுக்க வன்றே.

Xxxx subham xxxxx

Tags-  வள்ளலார் , பொன்மொழிகள், மகாதேவ மாலை , அக்டோபர் 2021, காலண்டர்

மேலும் 31 ரிக்வேதப் பொன்மொழிகள் (Post No.9912)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9912

Date uploaded in London –30 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆகஸ்ட் 2021 நற் சிந்தனை காலண்டர்

ஆகஸ்ட் மாத பண்டிகைகள் – 3 ஆடிப் பெருக்கு , 8 ஆடி அமாவாசை , 11- ஆடிப் பூரம், 15- சுதந்திர தினம், அரவிந்தர் பிறந்த தினம், 20- மொகரம், 21- வரலெட்சுமி விரதம், ஓணம் , 22- ஆவணி அவிட்டம், ரக்ஷா பந்தன், 23 காயத்ரி ஜபம், 30- கிருஷ்ண ஜெயந்தி .

அமாவாசை -8, பெளர்ணமி -22, ஏகாதசி விரத நாட்கள் – 4, 18

சுப முஹுர்த்த நாட்கள் -20, 26

முதல் எண் ரிக் வேத மண்டலத்தையும், அடுத்த எண் துதியையும் , மூன்றாவது எண் மந்திரத்தையும் குறிக்கும் .

xxxx

ஆகஸ்ட் 1 ஞாயிற்றுக் கிழமை

வருணனே!  எல்லா மக்களும் பிழை செய்கிறார்கள் நாங்களும் உன் விதியை மீறுகிறோம். கோபப்பட்டு எங்களை அழித்து விடாதே -1-25-1, 1-25-2

xxx

ஆகஸ்ட் 2 திங்கட்  கிழமை

கண்டேன், கண்டேன், கண்ணுக்கினியன கண்டேன்.அவனுடைய தேரையும் இந்த பூமியில் கண்டேன். என் துதிப்பாடலையும் அவன் ஏற்றுக்கொண்டான் – 1-25-18

xxx

ஆகஸ்ட் 3 செவ்வாய்க்  கிழமை

என் நினைவுகள் , மேய்ச்சல் நிலங்களுக்குச் செல்லும் பசு மாடுகளைப் போல, எல்லோரும் போற்றும் அவனையே நாடிச் செல்கிறது 1-25-16

xxx

ஆகஸ்ட் 4 புதன்  கிழமை

பேரறிஞனான வருணன் எங்களை நாள்தோறும் நன்னெறியில் செலுத்துவானாக ; எங்கள் ஆயுளை நீடிப்பானாக -1-25-12

xxx

ஆகஸ்ட் 5 வியாழக் கிழமை

நாங்கள் வாழ மேலேயுள்ள, நடுவிலுள்ள,கீழேயுள்ள பந்த பாசங்களிலிருந்து கட்டுக்களிலிருந்து, தளைகளிலிருந்து அவிழ்த்து விடுங்கள் – 1-24-21

Zxxx

ஆகஸ்ட் 6 வெள்ளிக் கிழமை

உணவின் தலைவனே ; நீ ஒளி ஆடைகளை அணிந்து கொள் ; எங்கள் வேள்வியை ஏற்றுக்கொள் – 1-26-1

Xxx

ஆகஸ்ட் 7  சனிக் கிழமை

அக்னியே , நீ தந்தை, நான் மகன்;நீயும்  நானும் உறவினர்கள் ; நான் உன் நண்பன்; நீ என் நண்பன் – 1-26-3

Xxx

ஆகஸ்ட் 8 ஞாயிற்றுக் கிழமை

அமிர்த சொரூபனே , எங்களுடைய துதிப்பாடல்கள் , நம் இருவருக்கும் இன்பம் தரட்டும் – 1-26-9

Xxx

ஆகஸ்ட் 9 திங்கட்  கிழமை

அக்னியே ,எங்கும் செல்லும் நீ, எங்களை அருகிலிருந்தோ தொலைவிலிருந்தோ துன்புறுத்த நினைப்பவர்களிடமிருந்து காத்தருள்க 1-27-3

Xxxx

ஆகஸ்ட்10 செவ்வாய்க் கிழமை

சித்திரபானுவே /அக்னியே , நீ நதியின் அலைகளைப் போல செல்வங்களை பகிர்ந்து கொடுக்கிறாய்; யாகம் செய்ப்பவனுக்குப் பொழிகிறாய் 1-27-6

xxx

ஆகஸ்ட் 11 புதன்  கிழமை

பெரிய தேவர்களுக்கு நமஸ்காரம் ; சிறிய தேவர்களுக்கு நமஸ்காரம் ; இளைஞர்களுக்கு நமஸ்காரம்; முதியோருக்கு நமஸ்காரம்; சக்திமிக்க  நாங்கள் எல்லா தேவர்களையும் போற்றுகிறோம் நான் பெரிய தேவர்களுக்கு மறக்காமல் துதி பாடுவேனாக 1-27-13

xxx

ஆகஸ்ட் 12 வியாழக் கிழமை

இந்திரனே ! உரலில் இடிக்கும்போது உலக்கை விழும் நேரத்தை சரியாக அறிந்து ,இடிப்பதற்கு உதவும் பெண்களைப் போல நீயும்,  இந்த உரலில் இடிக்கும்போது விழும் சோம ரஸத்துளிகளைப் பருகுவாயாக 1-28-3

Xxx

ஆகஸ்ட் 13 வெள்ளிக் கிழமை

இந்திரனே! கழுதை போலக்  கத்தி அபஸ்வரம் பாடும் எங்கள் எதிரிகளை வீழ்த்துவாயாக. எங்களுக்கு ஆயிரக் கணக் கில் குதிரைகளையும் பசுக்களையும் தருவாயாக- 1-29-5

Xxx

ஆகஸ்ட் 14  சனிக் கிழமை

இந்திரனே இந்த சோம ரசம் உனக்கானது. கருத்தரித்த பெட்டைப் புறா விடம் வரும் ஆண் புறா போல வருக்கிறாய்.      அப்போது எங்கள் தோத்திரங்களையும் ஏற்பாயாக  1-30-4

Xxx

ஆகஸ்ட் 15 ஞாயிற்றுக் கிழமை

அக்கினியே, பேரறிஞநான நீ, தீமையான செயல்புரிவோரை நற்பணியில் ஈடுபடுத்துகிறாய்  வீரர்கள் செய்யும் போரில் பரந்த செல்வமாக  இருக்கிறாய் . நீ போரிலே வலியோரைக் கொண்டு மெலிந்தவர்களை கொன்றாய்.1-31-6

Xxx

ஆகஸ்ட் 16 திங்கட்  கிழமை

ஏ நான்கு  கண்கள் உடைய அக்கினியே , புனிதர்களை நீ காக்கிறாய் உனக்கு அ வி அளிக்கும் மனிதனின் மந்திரத்தை நீ மனதில் இருத்திப் போற்றுகிறாய் 1-31-11

Xxx

ஆகஸ்ட் 17 செவ்வாய்க்  கிழமை

அக்கினியே , நீ எங்களுடைய அசட்டையை மன்னிக்கவும் . நாங்கள் தீய வழியில் சென்று விட்டோம்.. நீயே நண்பன்; நீயே தந்தை.எல்லோரையும் ஊக்கப் படுத்துகிறாய். எல்லோரையும் கவனித்துக் கொள்பவனும் நீயே -1-31-16

Xxxx

ஆகஸ்ட் 18 புதன்  கிழமை

நான் இந்திரன் செய்த வீரதீரத் செயல்களை சொல்கிறேன். வஜ்ராயுதனான அவன் மேகத்தைப் பிளந்தான்.தண்ணீரை பூமிக்குத் தள்ளினான்.மலைகளில் தண்ணீர் செல்ல வழிகளைக் கீறினான் 1-32-1

xxx

ஆகஸ்ட் 19 வியாழக் கிழமை

இந்திரனே, நீ அஹி என்னும் பாம்புகளிடையே தோன்றிய மேகத்தைப் பிளந்தாய்; பின்னர் மாயாவிகளின் மாயையை அழித்தாய்; அப்பால் சூரியனையும், வானத்தையும் உஷை என்னும் உதய காலத்தையும் தோற்றுவித்தாய். பின்னர் உன்னை எதிர்க்க எந்தப் பகைவனும் இல்லை 1-32-4

xxxx

ஆகஸ்ட் 20 வெள்ளிக் கிழமை

இந்திரனே நீ  அஹி  என்னும் பாம்பு அரக்கனைக் கொல்லும்போது உன் இதயத்தில் பயம் நுழைந்தபோது நீ யாரை நாடினாய் ? கலங்கிய நீயே 99 நதிகளை பருந்து போல விரைந்து கடந்தாயே 1-32-14

Xxxx

ஆகஸ்ட் 21  சனிக் கிழமை

வாருங்கள், நாம் திருடப்பட்ட பசுக்களை  மீட்க இந்திரனிடம் செல்லுவோம். பகைமையற்ற அவன் நம்முடைய பேரரறிவை அதிகப்படுத்துகிறான் ; பிறகு அவன் பசுக்களின் செல்வத்தைக் காணும் உத்தம ஞானத்தை அளிப்பான் 1-33-1

xxx

ஆகஸ்ட் 22 ஞாயிற்றுக் கிழமை

என் மனம் மரத்தின் உச்சியில் கட்டிய கூட்டுக்குப் பருந்து பாய்வது போல இந்திரனிடத்தில் பாய்கிறது . மறைந்திருக்கும் செல்வம் தரும் அவனைப் புகழ்மிகு கீதம் இசைத்துப் போற்றுகிறேன் 1-33-2

Xxxx

ஆகஸ்ட் 23 திங்கட்  கிழமை

அவன் பூமியின் எட்டு திசைகளையும், மூன்று வறண்ட பகுதிகளையும், ஏழு நதிகளையும் ஒளிமயமாக்கினான்.சவிதா தேவனின் கண் தங்க நிறமானது ; வழிபடுபவனுக்கு தேர்ந்து எடுத்த செல்வத்தை அவன் அளிக்கிறான் (சவிதா= சூரிய தேவன்)-1-35-8

Xxxx

ஆகஸ்ட் 24 செவ்வாய்க்  கிழமை

அக்கினியே ! உன்னுடைய எரிக்கும் சுவாலைகளால் தானம் அளிக்காத அத்தனை போரையும் மட்பாண்டங்களை தடிகளால் அடிப்பது போல அடித்து நொறுக்கு – 1-36-16

மருத்துக்கள் (காற்று தேவன்) புள்ளி மான்களோடும் ஈட்டிகளோடும் மின்னும்  நகைகளோடும், தாமே துலங்கும் ஒளியோடும் ஒருமித்துப் பிறந்தார்கள்- 1-37-2

xxxx

ஆகஸ்ட் 25 புதன்  கிழமை

மருத்துக்கள் மொழியைப் பிறப்பிக்கிறார்கள்; தண்ணீரை அவற்றின் வழிகளிலே செலுத்துகிறார்கள்; அவர்கள் கதறும் பசுக்களை முழங்கால் அளவு நீருள்ள இடத்தில் பருக அனுப்புகிறார்கள் 1-37-10

xxx

ஆகஸ்ட் 26 வியாழக் கிழமை

மருத்துக்களே எப்போது உங்கள் இரு கைகளாலும் எங்களை மகனைத் தந்தை தூக்குவது போல தூக்குவீர்கள்? 1-38-1

xxx

ஆகஸ்ட் 27 வெள்ளிக் கிழமை

பேரறிஞனான இந்திரனே ! எங் களுக்கு நிறைய செல்வத்தைக் கொடு ; ஆனால் வணிகனைப் போல செயல்படாதே – 1-33-4

Xxx

ஆகஸ்ட் 28  சனிக் கிழமை

அஸ்வினி தேவர்களே ! ஒரு நாளைக்கு மும்முறை வந்து குற்றங்களை நீக்கும் நீங்கள் இன்று எங்கள் வேள்வியை ன்று முறை தேனால் தெளியுங்கள்.; இனிமைப் படுத்துங்கள். காலையிலும் மாலையிலும் எங்களுக்கு வலிமை தரும் உணவைப் படையுங்கள் 1-34-3

Xxx

ஆகஸ்ட் 29 ஞாயிற்றுக் கிழமை

3 முறை எங்கள் மனைக்கு வாருங்கள்; நீதியுள்ள மனிதனிடம் 3 முறை செல்லுங்கள்; உங்கள் பாதுகாப்புக்கு உரியவர்களிடம் 3 முறை தோன்று ங்கள்; எங்களுக்கு 3 மடங்கான அறிவைக் கற்பியுங்கள்; உங்களுக்குத் திருப்தி தரும் பொருட்களை 3 முறை தாருங்கள்; மழையைப் பொழியும் இந்தி ரண் போல் 3 முறை உணவைப் பொழியுங்கள் 1-34-4

Xxxx

ஆகஸ்ட் 30 திங்கட்  கிழமை

ஒளியுள்ள உலகங்கள் மூன்று உண்டு; இரண்டு சவிதா அருகில் இருக்கிறது . ஒன்று மானிடர்களை எமலோகத்துக்கு கொண்டு செல்கிறது; தேரின் அச்சாணி போல அமிர்தர்கள் ஸவிதாவில் நிலைக்கிறார்கள்; சவீதாவின் சிறப்பை அறிபவன் எங்களுக்கு கூறட்டும். 1-35-6

xxx

ஆகஸ்ட் 31 செவ்வாய்க் கிழமை

உங்கள் வாயால் ஸ்லோகங்களை சொல்லுங்கள். மழையைபி பரவலாக்கும் மேகத்தைப் போல அதை பரத்துங்கள்;காயத்ரீ சூக்தத்தைப் பாடுங்கள் 1-38-14

–subham–

 tags — மேலும் ,ரிக்வேத, பொன்மொழிகள், ஆகஸ்ட் 2021, காலண்டர்

31 ரிக் வேதப் பொன்மொழிகள்– ஜூலை 2021 நற்சிந்தனை காலண்டர் (Post.9797)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 9797

Date uploaded in London – 30 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பண்டிகை நாட்கள் – ஜூலை 4- சுவாமி விவேகானந்தர் நினைவு தினம், 15-ஆனி  உத்தரம் , 17-தக்ஷிணாயன புண்யகாலம், 23-குரு  பூர்ணிமா.

சுப முகூர்த்த நாட்கள் – ஜூலை 7, 16

அமாவாசை – ஜூலை 9பவுர்ணமி – ஜூலை 23,

ஏகாதசி விரத நாட்கள் – ஜூலை 5, 20

ரிக்வேதத்தில் உள்ள முதல் எண் (Number) மண்டலத்தையும், இரண்டாவது எண் துதியையும் மூன்றாவது எண் அந்தத் துதியில் உள்ள மந்திரத்தையும் குறிக்கும் .

Xxxx

ஜூலை 1 வியாழக்கிழமை

அக்கினியே! உன்னை தினமும் அதிகாலையில் உஷா துயில் எழுப்புகிறாள் 10 தோழிகள் (5+5 விரல்கள் )அவிர் பலி கொடுக்கின்றனர். ஈட்டி முனை போலும், கோடரி முனை போலும் கூரான முனையுடையாய் ; மநு வம்சம் வந்த மக்களிடையே நீ உலவுகிறாய்  4-6-8

Xxx

ஜூலை  2 வெள்ளிக்கிழமை

அக்னீ , நீ பள்ளத்காக்கை நோக்கிப் பறக்கும் பருந்துகளைப் (Falcons) போலவும், குதிரைகளைப் போலவும், மருத் தேவர்களின் படையைப் போலும் உன் சுவாலைகளை பரப்புகிறாய் 4-6-10

xxx

ஜூலை  3 சனிக்கிழமை

இந்த செல்வத்தின் மதிப்பு என்ன?  லாபம் என்ன ? நீ அறிவாய், சொல், இந்த ரகசியமான வழியில் நாங்கள் குற்றம் இல்லாமல் செல்ல வழிகாட்டுவாயாக 4-5-9

Xxx

ஜூலை  4 ஞாயிற்றுக்கிழமை

அக்னியே , நீ சத்தியவான், பேரறிஞன், நட்சத்திரங்கள் போல பிரகாசமானவன், வேள்விகளைக் காப்பவன்; உன்னை ஒவ்வொரு வீட்டிலும் தியானம் செய்கிறார்கள் 4-7-3

xxx

ஜூலை  5 திங்கட்கிழமை

அக்னியே , நீ விறகில் தீயினன் (அப்பர் தேவாரம்) , அற்புதன், அணுக முடியாதவன், வனங்களில் வசிப்பவன், அறிவுள்ளவன், தாய் போன்ற நதி நீரில் இருப்பவன் , குகையில் மறைந்திருப்பவன் (குகன்=முருகன்) 4-7-6

xxx

ஜூலை  6 செவ்வாய்க்கிழமை

பறவை, பூமியின்  பிரியமான, மேலான இடத்தைக் காக்கிறது  4-5-8

xxx

ஜூலை  7 புதன் கிழமை

அக்னி பகவானுக்கு தேவர்களை எப்படி வணங்க வேண்டும் என்பது தெரியும். அவன் நாம் விரும்பும் செல்வங்களைத் தருகிறான் 4-8-3

xxx

ஜூலை 8 வியாழக்கிழமை

அக்னீ, மர்மத்தில் வைக்கப்பட்டிருக்கும் மகத்தான ஞானத்தை, உண்மையை , தோத்திரத்தை அறிவான். பசுவின் காலடி போல மறைந்திருந்த அறிவை எனக்குப் புலப்படுத்தினான் 4-5-2

ஜூலை  9 வெள்ளிக்கிழமை

அக்கினியே , அருகிலும் தூரத்திலும் உள்ள , பல விதமாகத் தூற்றும் இருவிதத் தீயோர்களை விலக்கவும் ; எங்கள் விருப்பங்களைக் கிரமமாய் நிறைவேற்றவும் – 4-3-14

xxx

ஜூலை  10 சனிக்கிழமை

அக்நியே , வேடர்கள் வலையைப் பரத்துவது போல உன் பலத்தைப் பரப்பு.  யானை மீது செல்லும் அரசனைப் போல பவனி வா ; உன்னுடைய உக்கிர சுவாலையால் அரக்கர்களை எரிக்கவும் 4-4-1

xxx

ஜூலை  11 ஞாயிற்றுக்கிழமை

எங்கள் பகைவர்களை, உறவினர் ஆனாலும் உறவினர் இல்லாவிட்டாலும் அழித்து விடு 4-4-5

xxx

ஜூலை  12 திங்கட்கிழமை

அக்நியே , உன்னுடைய பார்வையானது மமதாவின் குருட்டுப் புதல்வனை  – தீர்க்கதமஸை – துர்பாக்கியத்திலிருந்து காத்தது அவனை அழிக்க விரும்பியவர்கள் தீமை செயலற்றுப்போனது 4-4-13

xxx

ஜூலை  13 செவ்வாய்க்கிழமை

அக்நி தேவனே , கணவனின் பொருட்டு தன்னை அழகிய ஆடைகளால் அலங்காரம் செய்து கொள்ளும் மனைவியைப் போல இந்த வேதியை / அக்கினி குண்டத்தை உனக்காக அலங்கரித்து உள்ளோம் – 4-3-2

xxx

ஜூலை  14  புதன் கிழமை

கறப்பவர்கள் நீர் போல கறக்கும் பால், மர்மத்தில் வைக்கப்பட்டிடிருக்கிறது (விறகில் தீயினன் , பாலில் படு நெய் போல் பரவியவன்- அப்பர் தேவாரம்) 4 -5-8

xxx

ஜூலை 15 வியாழக்கிழமை

பசு கருப்பாக இருந்தாலும் பிரகாசமான, வெண்மையான , சத்துள்ள பாலால் மனிதர்களைக் காக்கிறது. வேள்விக்கு வேண்டிய பாலை அருளுக 4-3-9

xxx

ஜூலை  16 வெள்ளிக்கிழமை

அங்கீரசர்கள் ருதத்தால் / சத்தியத்தால் மலையைப் பிளந்தார்கள் பசுக்களோடு சேர்ந்து போற்றுகிறர்ர்கள் 4-3-11

xxx

ஜூலை  17 சனிக்கிழமை

அக்நி தேவனே, தேவியர் போன்ற நதிகள் , குதிரைகளைப்  போல , பாய்ந்து ஓடுகின்றன இதற்கும் ருதமே/ சாத்தியமே காரணம் – 4-3-12

xxxx

ஜூலை  18 ஞாயிற்றுக்கிழமை

அக்நி தேவனே, நீ எங்களைத் துன்புறுத்துவோரின் வேள்விக்கோ, அல்லது பக்கத்தில் வசிக்கும் வேள்விக்கோ போகாதே -3-13

xxx

ஜூலை  19 திங்கட்கிழமை

அக்நி தேவனே, நேர்மையற்ற என் உறவினர் வீடுகளுக்குப் போகாதே . கபடமுள்ள சகோதரனிடம் எதையும் விரும்பாதே. நாங்கள் நண்பனுடைய, பகைவனுடைய செல்வத்தை அனுபவிக்காமல் இருப்போமாகுக  4-3-13

xxxx

ஜூலை  20 செவ்வாய்க்கிழமை

பொன் மேனி அம்மானை , சத்தியவானை, பூமிக்கும் ஆகாசத்துக்கும் பரவி இருப்பவனை, ருத்திரனை புத்தி தடுமாறி இறப்பதற்குள் போற்றித் துதியுங்கள்  4-3-1

xxxx

ஜூலை  21  புதன் கிழமை

அக்கினியே, நீ அசுரன்!  மிக்க ஆற்றலுள்ளவன். பசுக்களையும் ஆடுகளையும், குதிரைகளையும் இந்த வேள்வி தோற்றுவிப்பதாகுக -4-2-5

xxx

ஜூலை 22 வியாழக்கிழமை

மித்திரனே , வருணனே , கடமையைச் செய்ப்பவனுக்கு சத்தியம் தோன்றுக (அவர்கள் பிரார்த்தனைகள் பலிக்கட்டும்) 4-1-18

xxx

ஜூலை 23 வெள்ளிக்கிழமை

இந்த உலகத்திலே எங்களுடைய முன்னோர்கள் மலையில் பாறைகள் இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த பால்தரும் பசுக்களை வெளிப்படுத்தினார்கள் . இதற்காக இருட்டை அழிக்கும் உஷா தேவியை அழைத்துச் சென்றனர் (காலைப்பொழுதில் பிரார்த்தனை மூலம் உண்மைப் பொருளை  அறிந்தார்கள்)

(பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்து உண்டு – திருமூலர் 4-1-13

xxx

ஜூலை 24 சனிக்கிழமை

அவர்கள் (எங்களுடைய முன்னோர்கள்) மலைகளைப் பிளந்து அக்கினியைப் போற்றினார்கள் ; மற்ற அறிஞர்கள் அவர்களுடைய வீரச் செயல்களை எங்கும் அறிவித்தார்கள்  4-1-14

xxx

ஜூலை 25 ஞாயிற்றுக்கிழமை

பசுக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த  மலை அடைப்பை தெய்வ வாக்கால் பலாத்காரமாகத் திறந்தார்கள் 4-1-15

xxxx

ஜூலை 26 திங்கட்கிழமை

அக்கினியே! தட்சனின் புதல்வியான இளை-யால் உலகத்தின் தந்தையாக ஏற்கப்பட்டாய்.3-27-9

xxx

ஜூலை 27 செவ்வாய்க்கிழமை

அவர்கள் பாற்பசுவின் பூர்வமான நாமத்தை அறிந்தார்கள் அவர்கள் தாயின் மூவேழு உத்தமச் சந் தங்களையும் அறிந்தார்கள் .பின்னர் உஷா தேவியைப் போற்றினார்கள். அவள் சூரியனோடு  புகழுடன்  தோன்றினாள் 4-1-16 (புறநானூறு 166, திருமூலர் திருமந்திரம்)

xxx

ஜூலை  28  புதன் கிழமை

வேள்விக்காக தன்  தலையில்  விறகுக் குச்சிகளைச் சுமந்து வந்து, வியர்வை சிந்த உழைக்கிறானே

 அவனுக்குத்தான் நீ செல்வம் தருகிறாய். அவனுக்குத் தீமை செய்ய விரும்பும் ஒவ்வொருவனிடமிருந்தும் அவனைக் காப்பாயாக 4-2-6

xxx

ஜூலை 29 வியாழக்கிழமை

இரும்பை நெருப்பால் சுத்தப்படுத்தும் கருமானைப்போல கடவுளை வழிபடும் தூயவர்கள் வேள்வித் தீயால் தங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டார்கள் 4-1-17

xxx

ஜூலை  30 வெள்ளிக்கிழமை

ஏழு  ரிஷிகளான நாங்கள் உஷத் காலத்தில் வேள்வித் தீயை உருவாக்குவோம்.அங்கீரசர்களான நாங்கள் ஒளி மயம் ஆவோம். நீர் நிறைந்திருக்கும் மேகத்தைப் பிளப்போம் 4-1-15

xxx

ஜூலை  31 சனிக்கிழமை

காலையிலும் மாலையிலும் உன்னைப்போற்றி உனக்கு அவிர் பலி கொடுப்பவனை தங்கக் கச்சை அணிந்த குதிரை போலுள்ள நீ துன்பத்திலிருந்து மீட்பாயாக .4-2-8

–subham–

tags – ரிக் வேத, பொன்மொழிகள், ஜூலை 2021,  காலண்டர், 

பெண்கள் வாழ்க- Part 20; பெண்களைப் பற்றிய பொன்மொழிகள் (Post.9547)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9547

Date uploaded in London – –29 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

பெண்களைப் பற்றிய பாரதி பொன்மொழிகள்

(தொடர் மார்ச் 22, 2021ல் துவங்கியது. முதல் கட்டுரை எண் 9410)

1.பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக்குள்ளே சிலமூடர் – நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்.

கண்கள் இரண்டினில் ஒன்றைக் – குத்தி
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் – வையம்
பேதமை யற்றிடும் காணீர்

Xxxx

2.கற்புநிலை என்று சொல்ல வந்தால் இரு

கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்

வற்புறுத்தி பெண்ணை கட்டிக் கொடுக்கும்

வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்

3.சாதம் படைக்கவும் செய்திடுவோம்; தெய்வச்

சாதி படைக்கவும் செய்திடுவோம்

xxxx

(பிஜிதீவு கரும்புத் தோட்ட்த்தில் ஹிந்து மாதர்க்கு நேர்ந்த கொடுமைகள்)

4.பெண் என்று சொல்லிடிலோ – ஒரு

பேயும் இரங்கும் என்பார்; தெய்வமே நினது

எண்ணம் இரங்காதோ? – அந்த

ஏழைகள் அங்கே சொரியும் கண்ணீர் வெறும்

மண்ணிற் கலந்திடுமோ – தெற்கு

மாகடலுக்கு நடுவினிலே அங்கோர்

கண்ணற்ற தீவினிலே – தனிக்

காட்டினிலே பெண்கள் நடுங்குகிறார் – அந்த

கரும்புத் தோட்டத்திலே

xxx

5.தில்லித் துருக்கர் செய்த வழக்கமடீ! – பெண்கள்

திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;

வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும்-இந்த

மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;

xxxx

6.புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்

பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்

சதுர் மறைப்படி மாந்தர் இருந்தநாள்

தன்னி லேபொது வான் வழக்கமாம்;

xxx

7.போற்றி,போற்றி! ஜயஜய போற்றி!இப்
புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!
மாற்றி வையம் புதுமை யுறச்செய்து
மனிதர் தம்மை அமர்க ளாக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னைநல்
அருளி நாலொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்

8.ஆதிசக்தி தனையுடம்பில் அரனும் கோத்தான்;
அயன்வாணி தனைநாவில் அமர்த்திக் கொண்டான்;
சோதிமணி முகத்தினளைச் செல்வ மெல்லாம்
சுரந்தருளும் விழியாளைத் திருவை மார்பில்
மாதவனும் ஏந்தினான்: வானோர்க் கேனும்
மாதரின்பம் போற்பிறிதோர் இன்பம் உண்டோ?
காதல்செயும் மனைவியே சதி கண்டீர்
கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும்.

சிவன் உடலிலே பாதி மலைமகள், அயன் (பிரம்மன்) நாவினிலே சரஸ்வதி, விஷ்ணுவின் மார்பில் திருமகள் ஆணில்லாமல் பெண் இயங்க முடியாது பெண்ணில்லாமல் ஆண் இயங்க முடியாது என்று இந்து மதம் உணர்த்துகிறது. இதைத்தான் பாரதி தனது பாடலில் அழகாக விளக்கியுள்ளார்.

8a.பாகத்தில் ஒருவன் வைத்தான்; பங்கயத் திருந்த பொன்னை

ஆகத்தில் ஒருவன் வைத்தான்; அந்தணன் நாவில் வைத்தான்

  • கம்பராமாயணம் ஆரண்ய 627
  •  

(சிவன் தனது உடலில் ஒரு பாகத்தில் உமை அம்மையை வைத்தான். தாமரையில் வீற்றிருக்கும் லெட்சுமியை விஷ்ணு தனது மார்பில் வைத்தான். பிரம்மனோ— சரஸ்வதியை தனது நாவில் வைத்தான்.)

xxxx

9.உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை

உமையவள் என்று அறியீரோ – உணர்ச்சி கெட்டீர்!

பண்டாய்ச்சி ஔவை அன்னையும் பிதாவும்

பாரிடை முன்னறி தெய்வம் என்றாள் அன்றோ?

xxxx

9a.O woman! lovely woman!

Nature made thee to temper man:

we had been beasts without you. – OTWAY

பெண்ணே அழகிய பெண்ணே

ஆணை கட்டுக்குள் வைக்க அல்லவோ

இயற்கை உன்னைப் படைத்தது

நீ இல்லாதபோது நாங்கள் மிருகமாகி இருந்தோம் – OTWAY

xxxx

10.சிங்கத்தில் ஏறி சிரிப்பாள் உலகழிப்பாள்

சிங்கத்தில் ஏறி சிரித்து எதையும் காத்திடுவாள்

11.வசிட்டருக்கும் இராமருக்கும் பின்னொரு

வள்ளு வர்க்கும்முன் வாய்த்திட்ட மாதர்போல்

பசித்தொ ராயிரம் ஆண்டு தவஞ்செய்து

பார்க்கினும் பெறல் சால அரிதுகாண்.

xxxx

12.பூட்டைத் திறப்பது கையாலே நல்ல

மனந்திறப்பது மதியாலே

பாட்டைத் திறப்பது பண்ணாலே இன்ப

வீட்டைத் திறப்பது பெண்ணாலே

xxxx

13.பெண் விடுதலை வேண்டும்

பெரிய கடவுள் காக்க வேண்டும்

மண் பயனுற வேண்டும்

வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்

ஓம் ஓம் ஓம் ஓம்

xxxx

14.நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி

நயம்புரி வாள்எங்கள் தாய் – அவர்

அல்லவ ராயின் அவரைவி ழுங்கிப்பின்

ஆனந்தக் கூத்தி டுவாள்.

xxxx

15.நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்,
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம்,இவள்
பார்வைக்கு நேர்பெருந்தீ
வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல் லாம்,
தஞ்சமென் றேயுரைப் பீர்அவள் பேர்,சக்தி
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்

xxxx

16.மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்
வைய வாழ்வு தன்னில்
எந்த வகையினும் நமக்குளே
தாதர் என்ற நிலைமை மாறி
ஆண்களோடு பெண்களும்
சரிநிகர் சமானமாக வாழ்வம்
இந்த நாட்டிலே

xxxx

17.ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்!
அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்

QUOTATIONS FROM POET BHARATIYAR

xxxx

TO BE CONTINUED………………………………………………

tags — பெண்கள் வாழ்க Part 20,   பொன்மொழிகள் , பாரதி 

ஏப்ரல் 2021 காலண்டர் ; நீதி வெண்பா பொன்மொழிகள் (Post No.9427)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9427

Date uploaded in London – –27 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

சார்வரி வருஷம் முடிந்து ஏப்ரல் 14-ம் தேதி ‘ப்லவ’ (பிலவ ) வருஷம் துவங்குகிறது

நீதி வெண்பா நூலிலிருந்து 30 பொன்மொழிகள்!! (இலவசமாக எல்லா நூல்களையும் வெளியிட்டுள்ள மதுரை பிராஜெக்ட் PROJECT MADURAI  வெப்சைட்டிற்கு நன்றி)இலவச காலண்டரை வழங்கும் தினமலருக்கு நன்றி.

 TAMIL APRIL 2021 CALENDAR

ஏப்ரல் 11-அமாவாசை ;26-சித்ரா பௌர்ணமி ; ஏகாதஸி  விரத நாட்கள் -7, 23

ஏப்ரல் மாத முகூர்த்த நாட்கள் -22, 25, 26, 29

  ஏப்ரல் 01 (வி) புதுக்கணக்கு (காலை 10:30 – 12.00 மணி)

  ஏப்ரல் 02 (வெ) புனித வெள்ளி GOOD FRIDAY

  ஏப்ரல் 04 (ஞா) ஈஸ்டர் EASTER

ஏப்ரல் 12- GUDI PADWA

  ஏப்ரல் 13 (செ) தெலுங்கு புத்தாண்டு UGADHI AND BAISAKHI

  ஏப்ரல் 14 (பு) தமிழ் புத்தாண்டு PLAVA YEAR, VISHU, CHETI CHAND

  ஏப்ரல் 17 (ச) வசந்த பஞ்சமி

  ஏப்ரல் 21 (பு) ஸ்ரீராம நவமி

  ஏப்ரல் 21 (பு) ஷீரடி சாய்பாபா பிறந்த நாள்

  ஏப்ரல் 22 (வி) மதுரை மீனாட்சி பட்டாபிஷேகம்

ஏப்ரல் 23 – THRISSUR POORAM FESTIVAL

  ஏப்ரல் 24 (ச) மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்

  ஏப்ரல் 24 (ச) சாய்பாபா ஸித்தி தினம்

  ஏப்ரல் 25 (ஞா) மகாவீர் ஜெயந்தி

  ஏப்ரல் 25 (ஞா) மதுரை மீனாட்சி தேர்

  ஏப்ரல் 26 (தி) சித்ரா பெளர்ணமி

  ஏப்ரல் 27 (செ) மதுரையில் கள்ளழகர் எழுந்தருளல்

ஏப்ரல் 1 வியாழக்கிழமை

எங்கே பிறந்தாலும் எள்ளாரே நல்லோர்கள்
எங்கே பிறந்தாலும் என் (நல்லோர் எங்கும் தோன்றலாம்)

***

ஏப்ரல்  2 வெள்ளி க்கிழமை

அறிவன் பகையேனும் அன்புசேர் நட்பாம் (அறிவடையோர் பகைவனாகினும் நண்பனே)

***

ஏப்ரல்  3 சனிக் கிழமை

உற்றபெருஞ் சுற்றம் உறநன் மனைவியுடன்
பற்றிமிக வாழ்க (இல்வாழ்தலே நல்வழி)

****

ஏப்ரல் 4  ஞாயிற்று க்கிழமை

தவத்தால் அருள்ஞானம் பெற்றோர்க்கு
அநந்தம் விழியென்று அறி.( எல்லாம் அறிவர் ஞானியர்)

****

ஏப்ரல்  5 திங்கட் கிழமை

ஓருபோது யோகியே ஓண்டளிர்க்கை மாதே
இதுபோது போகியே யென்ப – திரிபோது
ரோகியே நான்குபோது உண்பான் உடல்விட்டுப்
போகியே யென்று புகல் (நலமாகவாழ ஓர் பொழுதுண்க)

****

ஏப்ரல் 6  செவ்வாய்க்கிழமை

மென்மதுர வாக்கால் விரும்பும் சகம் கடின
வன்மொழியி னால்இகழும் மண்ணுலகம் (இன்சொல்லே யாவரும் கேட்பர்)

****

ஏப்ரல் 7  புதன் கிழமை

பகைவரிடம் மெய்யன்பு பாவித்து அவரால்
சுகமுறுதல் நல்லோர் தொழில் (அன்பினால் மாற்றோரிடமும் நன்மை)

****

ஏப்ரல் 8 வியாழக்கிழமை

காந்தன்இல் லாத கனங்குழலாள் பொற்புஅவமாம்
சாந்தகுணம் இல்லார் தவம்அவமாம் – அன்னைஇல்லாப் பிள்ளை இருப்பது அவம் (பயனற்றவை)

****

ஏப்ரல்  9 வெள்ளிக்கிழமை


ஆசை தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம்
தனையடிமை கொண்டவனே தான். (துறந்தோரே உலகம் ஆள்பவர்)

****

ஏப்ரல்  10 சனிக் கிழமை

ஆன்,அந்தணர்,மகளிர், அன்பாம் குழந்தைவதை,
மானம் தெறும்பிசி வார்த்தை,இவை பாவம்(பசு, பிராமணர், பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிராகப் பேசுவது பாவம் )

****

ஏப்ரல் 11  ஞாயிற்று க்கிழமை

நாவின் நுனியில் நயமிருக்கின் பூமாதும்
நாவினிய நல்லோரும் நுண்ணுவார் (நயமான சொல்லால் நன்மையே)

****

ஏப்ரல்  12 திங்கட் கிழமை

செய்யும் ஓருகருமம் தேர்ந்து புரிவதுஅன்றிச்
செய்யின் மனத்தாபம் சேருமே (செயலின் முன் எண்ணுக)

****

ஏப்ரல் 13  செவ்வாய்க்கிழமை

மானமிலா இல்லாளும் மானமுறு வேசியரும்
ஈன முறுவார் (மனைவிக்கு மானமும் , வேசிகளுக்கு மானம் இல்லாமையும் புகழ் தரும்)

*****

ஏப்ரல் 14  புதன் கிழமை

கற்றோர் கனம்அறிவர் கற்றோரே கற்றறியா
மற்றோர் அறியார்  (கல்விதன்மாண்பு கற்றோரே அறிவர்)

****

ஏப்ரல் 15 வியாழ க்கிழமை

 துர்ச்சனருக்கு
அங்கம்முழு தும்விடமே ஆம். (ஈக்கு தலையிலும், தேளுக்கு கொடுக்கிலும், பாம்புக்கு பல்லிலும் விஷம் ; கெட்டவர்களுக்கு உடம்பு முழுதும் விஷம் )

****

ஏப்ரல்  16 வெள்ளி க்கிழமை

துர்ச்சனர்தாம் எந்தவிதத்தாலும் இணங்காரே பாம்புமணி
மந்திரத்தால் ஆமே வசம். (பாம்பைக்கூட ரத்தினக்கல், மந்திரம், மூலிகை வேர் இவற்றால் அடக்கலாம்; கெட்டவர்களை எதனாலும் வசப்படுத்த முடியாது)

***

ஏப்ரல்  17 சனிக் கிழமை

துன்னும் இருமலும் துர்ச்சனரும் ஒக்குமே (இருமலும் புல்லோரும் நிகரே- nuisance for ever)

***

ஏப்ரல் 18 ஞாயிற்று க்கிழமை

கந்தம் பலவும் கலந்தாலும் உள்ளியது
கந்தம் கெடுமோ கரை. (எத்தனை வாசனை கலந்தாலும் உள்ளிப்பூண்டு மணம் போகாது. கெட்டவர்களும் அப்படித்தான் )

***

ஏப்ரல்  19 திங்கட் கிழமை

தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி. மாட்டுக்கு 5, குதிரைக்கு 10, யானைக்கு 1000 முழம் தள்ளி நில்; கெட்டவர்களைக் காணில் ஓடி ஒளிந்து கொள் )

***

ஏப்ரல் 20  செவ்வாய்க்கிழமை

புண்ணியரைப் போல இருந்தாலும் புல்லியர்தாம்
புண்ணியர்ஆ வாரோ புகல்.( அற்பர் நன்மை செய்யார்)

****

ஏப்ரல் 21   புதன் கிழமை

முற்றும் இறைசெயலே முற்றிடினும் தன்அருளைப்
பெற்றவர்தம் பாலே பெரிதாகும் (பக்தனே சக்தி வாய்ந்தவன் )

****

ஏப்ரல் 22 வியாழ க்கிழமை

ஈசன்எதிர் நின்றாலும் ஈசனருள் பெற்றுயர்ந்த
நேசர்எதிர் நிற்பது அரிதாமே (பக்தனுக்குத் தீங்கு செய்தால் கடவுளாலும் காப்பாற்ற முடியாது; பக்தனே சக்தி வாய்ந்தவன் )

****

ஏப்ரல் 23 வெள்ளிக்கிழமை

மந்திரமும் தேவும் மருந்தும் குருவருளும்
தந்திரமும் ஞானம் தரும்முறையும் – யந்திரமும்
மெய்யெனில் மெய்யாய் விளங்குமே மேதினியில்
பொய்யெனில் பொய்யாகிப் போம். (நம்பிக்கை இல்லாவிடில் பலன் கிடைக்காது |)

****

ஏப்ரல் 24 சனிக் கிழமை

பேதையரைக் கண்டால் பெரியோர் வழிவிலகி
நீதியொடு போதல் நெறியன்றோ (தீயவரின் சேய்மை நன்று)

****

ஏப்ரல் 25  ஞாயிற்றுக்கிழமை

சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர் ஆன்றமைந்த
முற்றுணர்வோர் ஒன்றும் மொழியாரே (குறைகுடம் கூத்தாடும்; நிறைகுடம் தழும்பாது)

****

ஏப்ரல் 26 திங்கட் கிழமை

பெண்ணொருத்தி பேசில் பெரும்பூமி தான்அதிரும்
பெண்ணிருவர் பேசில்விழும் வான்மீன்கள் – பெண்முவர்
பேசில் அலைசுவறும் பேதையே பெண்பலர்தாம்
பேசில்உலகு என்னாகுமோ பின். (பெண்கள் வம்பு பேசக்கூடாது)

****

ஏப்ரல் 27 செவ்வாய்க்கிழமை

அன்னை தயையும் அடியாள் பணியும்மலர்ப்
பொன்னின் அழகும் புவிப்பொறையும் – வன்னமுலை
வேசி துயிலும் விறல்மந் திரிமதியும்
பேசில் இவையுடையாள் பெண்.(நல்ல மனைவி கருணையில் அன்னை, வேலை செய்வதில் பணிப்பெண், தோற்றத்தில் அழகி, படுக்கையில் வேசி, பேச்சில் மந்திரி போல இடத்துக்குத் தக்கவாறு செயல்படுவாள் )

***

ஏப்ரல் 28  புதன் கிழமை

மெய்ஞ்ஞானி நின்றநிலை
வேறு படினும்சிறப்பாமே (ஞானியர்தம் சிறப்பு)

****

ஏப்ரல் 29 வியாழக்கிழமை

பிறந்தஇடத்து அன்றிப் பிறிதொருதேசத்தே
செறிந்தஇடத்து அன்றோ சிறப்பு. (இடத்தினால் தான் சீர் சிறப்பு)

****

ஏப்ரல் 30 வெள்ளிக்கிழமை

குணநன்கு உணராக் கொடியோர் இடத்தில்
குணநன் குடையார் குறுகார் (கொடியவரை நல்லோர் அணுகார்)

–subham–

tags- ஏப்ரல் 2021 காலண்டர் , நீதி வெண்பா, பொன்மொழிகள் ,

பிப்ரவரி 2021 காலண்டர்- ஆண்மை , வீரம் பற்றிய பொன்மொழிகள் (Post.9203)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9203

Date uploaded in London – –29 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிப்ரவரி 2021 காலண்டர்

பண்டிகை நாட்கள் -பிப்ரவரி .11- தை  அம்மாவாசை  ; 14- காதலர் தினம் ; 16- வசந்த பஞ்சமி ; 19 -ரத சப்தமி , சிவாஜி ஐயந்தி   ;  27- மாசி மகம் , கேரளத்தில் ஆட்டுக்கல் பொங்கல் விழா , குரு  ரவிதாஸ்  ஜயந்தி

அமாவாசை – 11; பவுர்ணமி -26/27; ஏகாதசி விரத நாட்கள்- 7/8, 23

சுப முகூர்த்த தினங்கள்- FEB.1, 3, 4, 8, 15, 24, 25

பிப்ரவரி 1 திங்கட்கிழமை

சம்பத்சு ஹி  சுசத்வானாம் ஏக ஹேதுஹு ஸ்வ பெளருஷம் – கதா சரித் சாகரம்

உயர்ந்தோர்க்கு அவர்களுடைய ஆண்மையே செழிப்பைக் கொண்டுவரும்

XXX

பிப்ரவரி 2 செவ்வாய்க் கிழமை

விக்ரமார்ஜித சத்வஸ்ய ஸ்வயமேவ ம்ருகேந்த்ரதா – ஹிதோபதேசம் 2-19

வீரமுள்ளோனுக்கு அரச பதவி இயல்பாகவே வந்து சேரும் .

XXXX

பிப்ரவரி 3 புதன் கிழமை

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்

கழல்யாப்புக் காரிகை நீர்த்து.   (திருக்குறள் – 777)

புகழை விரும்பி, உயிரை வெறுத்துப் போரிடும் ஆண்மையுள்ள வீர மறவரின் காலிலே, விளங்கும் கழல்களே அழகு உடையவாகும்

XXXX

பிப்ரவரி 4 வியாழக் கிழமை

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்

செறினும் சீர்குன்றல் இலர்.   (திருக்குறள் – 778)

போர்க்களத்திலே தம் உயிருக்கும் அஞ்சாமல் போரிடும் வீர மறவர்கள், தம் அரசனே கோபித்தாலும் , தம் மனவூக்கத்தில் சிறிதும் குறைய மாட்டார்கள்

XXXX

பிப்ரவரி 5 வெள்ளிக் கிழமை

அயுக்தமத்ருதித்வம் புருஷா ணாம் – அவிமார்கம் 2-33

ஊசலாடும் மனதுடையோன் மனிதன் அல்ல

XXX

பிப்ரவரி 6 சனிக் கிழமை

எததேவ பரம் சாதுர்யம் யத்பர ப்ராண ரக்ஷணம் — சம்ஸ்க்ருத பழமொழி

வீரத்தின் உச்ச கட்டம் மற்றோரு உயிரைக் காப்பதில்தான் உளது

XXX

பிப்ரவரி 7 ஞாயிற்றுக் கிழமை

கான முயலெய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது.   (திருக்குறள் – 772)

காட்டு முயலைக் குறிதவறாமல் எய்து வீழ்த்திக் கொன்ற அம்பினைக் காட்டிலும், யானைமேல் எறிந்து குறிதவறிய வேலினைத் தாங்குதலே வீரருக்கு இனிதாகும்

XXXX

பிப்ரவரி 8 திங்கட்கிழமை

பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்

ஊராண்மை மற்றதன் எஃகு.   (திருக்குறள் – 773)

‘பேராண்மை’ என்பது பகைவர்க்கு அஞ்சாமல் எதிர் நின்று போரிடும் ஆண்மையே; அவருக்கு ஒரு கேடு வந்தவிடத்து உதவிநிற்கும் ஆண்மையோ, அதனிலும் சிறந்ததாகும் .

XXXX

பிப்ரவரி 9 செவ்வாய்க் கிழமை

இந்தக் கடினமான உலகத்தை ஆண்மையுடையோரே அனுபவிக்க முடியும்

தீக்ஷ்ணா ணுவர்த்தி  லோகோயம் பவுருஷேணை வ புஜ்யதே – ராமாயண மஞ்சரி

XXX

பிப்ரவரி 10 புதன் கிழமை

மடியில் தலை வைத்து உறங்குவோரை வீழ்த்துவது ஆண்மையா – ஹிதோபதேசம்

அங்கமாருஹ்ய ஸுப் தானா ம் வதே கிம் நாம பவுருஷம்

XXX

பிப்ரவரி 11 வியாழக் கிழமை

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை

முன்நின்று கல்நின் றவர்.   ( திருக்குறள் – 771)

பகைவரே! என் தலைவனின் முன்னே எதிர்த்து வந்து நில்லாதீர்; அவன் முன்னர் எதிர்த்து வந்து நின்று, களத்தில் வீழ்ந்துபட்டு, நடுகற்களாக (HERO STONES FOR DEAD SOLDIERS) நிற்பவர் மிகப் பலர்

XXXX

பிப்ரவரி 12 வெள்ளிக் கிழமை

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்

வைக்கும்தன் நாளை எடுத்து.   (திருக்குறள் – 776)

கழிந்து போன தன் வாழ்நாட்களைக் கணக்கிட்டுப் பார்த்து, விழுப்புண் படாத நாட்களை எல்லாம், தான் தவறவிட்ட நாட்களுள் சேர்ப்பவனே  வீரனாவான்

XXXX

பிப்ரவரி 13 சனிக் கிழமை

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே

பிழைத்தது ஒறுக்கிற் பவர்.   ( திருக்குறள் – 779)

தாம் உரைத்த சூளுரையிலிருந்து தப்பாமல் போரினைச் செய்து, சாகிற வீரரை,  சூளுரை பிழைத்ததற்காக யாரும் தண்டிக்கமாட்டார்கள்

XXX

பிப்ரவரி 14 ஞாயிற்றுக் கிழமை

புஜே  வீ ர்யம் நிவசதி  ந வாசி – சம்ஸ்க்ருத பழமொழி

வாய்ச்  சொல்லில் வீரம் இல்லை; புஜ பலத்தில் இருக்கிறது.

XXX

பிப்ரவரி 15 திங்கட்கிழமை

பிரதாப சஹாயா  ஹி சத்வவன்தஹ- சம்ஸ்க்ருத பழமொழி

விரமுள்ளவனுக்கு ஆண்மையே துணை

XXX

பிப்ரவரி 16 செவ்வாய்க் கிழமை

புவு ருஷேன  வினா மூல்யம் புருஷஸ்ய எ கிஞ்சன

வீரமில்லாதவனுக்கு மதிப்பு எதுவுமில்லை – கஹா வத் ரத்னாகர்

XXX

பிப்ரவரி 17 புதன் கிழமை

புவுருஷேண து யோ யுக்தஹ  ச து சூர இதி ஸ்ம்ருதஹ

ஆண்மையுடையவனையே சூரன் என்பர் மக்கள்

வால்மீகி ராமாயணம் 6-71-59

XXX

பிப்ரவரி 18 வியாழக் கிழமை

ஆண்மையை கைவிடாதீர் — சம்ஸ்க்ருத பழமொழி

பவுருஷம் ந பரித்யஜேத்

XXXX

பிப்ரவரி 19 வெள்ளிக் கிழமை

புருஷகாரேண வினா தெய்வம் ந சித்யதி – யாக்ஞ வாக்ய ஸ்மிருதி 1-351; ஹிதோபதேசம் 32

மனிதன் முயற்சி செய்யாவிடில் இறைவன் அருள்புரிய மாட்டான்

XXX

பிப்ரவரி 20 சனிக் கிழமை

துணிச்சல்மிக்கவர் சவடால் விடுவதில்லை – செயலில் காட்டுவர்

ந ஹி சூரா விகத்தந்தே தர்ஷயந்த்யேவ பவுருஷம் – சம்ஸ்க்ருத பழமொழி

XXX

பிப்ரவரி 21  ஞாயிற்றுக் கிழமை

ந ஸூர்யோ தீ பேனாந்தகாரம் பிரவிசதி – பத்மப் ராப் ராந்தக

சூரியன் விளக்கை வைத்து இருளை விரட்டுவதில்லை

XXX

பிப்ரவரி 22 திங்கட்கிழமை

ந சத்வவன்தஹ ஸக்யந்தே பயா தப்யகதிம் கமயிதும் – ஜாதகமாலை

துணிச்சல் மிக்கவர் பயந்தும் கூட தவறான வழியில் செல்லார்

XXX

பிப்ரவரி 23 செவ்வாய்க் கிழமை

வீரர்கள் மற்றவர்களுக்கு துரோகத்தனமாக தீங்கிழைக்க மாட்டார்கள் – சிசுபாலவதம்

ந பரேஷு மஹவ் ஜஸ ஸ் சலா தபகுர் வந்தி மலிம் லுசா இவ

XXX

பிப்ரவரி 24 புதன் கிழமை

ந பரேணா ஹ்ருதம் பக்ஷ்யம் வ்யாக்ரஹ காதிதுமிச்சதி – வால்மீகி ராமாயணம் 2-61-16

மற்றவை விட்டுச் சென்ற மிச்சம் மீதியை புலி சாப்பிடுவதில்லை

XXX

பிப்ரவரி 25 வியாழக் கிழமை

ததாதி தீவ்ர சத்வானாமிஷ்டமீச்வர ஏவ ஹி – – கதா சரித் சாகரம்

தீவிர முயற்சி உடையோருக்கு கடவுளே அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றுகிறான்

XXX

பிப்ரவரி 26 வெள்ளிக் கிழமை

திட உறுதி பூண்டவர்கள் விரைவில் முழு வெற்றி அடைகின்றனர் – – கதா சரித் சாகரம்

தீவ்ர சத்வஸ்ய ந சிராத் பவந்த்யத்யேவ ஹாய் சித்தயஹ

XXX

பிப்ரவரி 27 சனிக் கிழமை

முதுகெலும்பில்லாதவரை விட்டு ஆண்மை ஓடிவிடும் – ராமாயண மஞ்சரி

அதைர்யலு ப்த சித்தானாம் பவுருஷம் பரி ஹீயதே

XXX

பிப்ரவரி 28 ஞாயிற்றுக் கிழமை

பீ டும் பெருமையும்  உடைய சிங்கம் புல்லைத் தின்று உயிர்வாழ உடன்படுமா -நீதி சதகம் 21

கிம் ஜீர்ணம் த்ருணமதி மான மஹதாமக்ரேசரஹ கேசரி 

XXX  SUBHAM XXXXX

tags– பிப்ரவரி 2021 காலண்டர், ஆண்மை , வீரம் ,  பொன்மொழிகள்

லக்ஷ்மீ – செல்வம் – பற்றி 31 பொன்மொழிகள் (Post No.8974)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8974

Date uploaded in London – –27 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

டிசம்பர் 2020 ‘நற்சிந்தனை’ காலண்டர்

பண்டிகை நாட்கள் –  டிசம்பர் 16- மார்கழி மாதப் பிறப்பு; 25-வைகுண்ட ஏகாதசி, கிறிஸ்துமஸ்  ; 30-ஆருத்ரா தரிசனம்

அமாவாசை- 14பௌர்ணமி-29ஏகாதஸி-11,25

சுபமுகூர்த்த தினங்கள்—4, 10, 11

Xxx

டிசம்பர் 1 செவ்வாய்க் கிழமை

துணிவுள்ளவனுக்கே செல்வம் சேரும்

சத்வமநுதாவந்தி சம்பதஹ – கதா சரித் சாகரம்

xxxx

டிசம்பர் 2 புதன் கிழமை

நல்ல காலம் வந்துவிட்டால் எல்லா ரத்தினங்களும் , முயற்சி செய்யாமலே கிடைத்து விடும் – ராமாயண மஞ்சரி

விபவே சர்வரத்னானாமயத்னேனைவ  சங்கமஹ

xxxx

டிசம்பர் 3 வியாழக் கிழமை

சம்பாதித்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக  அனுபவிக்க வேண்டும் – பஞ்ச தந்திரம் 2-81

சநைஹி சனைஸ் ச போக்த்வயம் ஸ்வயம் வித்தமுபார்ஜிதம்

xxx

டிசம்பர் 4 வெள்ளிக் கிழமை

ஹேமம் போஜன பாஜனம் பவதி சேத் ப்ருச்சயேத் கிம் வ்யஞ்ஜனம்

சாப்பாட்டுத் தட்டே தங்கம் ; அதில் போடப்படும் கறி கூட்டு வகை பற்றி என்ன கேள்வி? – சம்ஸ்க்ருத பழமொழி

xxx

டிசம்பர் 5 சனிக் கிழமை

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயக்கும் நற்பாலவை – குறள் -659

பிறரை அழச் செய்து சேர்த்த பொருள் அவரை அழவிட்டு ஓடி விடும்.நல்ல வழியில் வந்த செல்வம் போனாலும்  அது பின்னர் நல்லதையே செய்யும் –

xxx 

டிசம்பர் 6 ஞாயிற்றுக் கிழமை

சலத்தால்  பொருள் செய்தே மார்த்தல் பசுமட்

கலத்துள் நீர் பெய்திரீ இ  யற்று -குறள் -660

கெட்ட வழியில் பொருள் சேர்த்து காப்பாற்ற எண்ணுவது பச் சை  மட்பாண்டத்தில் தண்ணீரை  சேகரிக்க முயல்வது போன்றதாகும்

xxxx

டிசம்பர் 7 திங்கட் கிழமை

அதிக செல்வம் இருக்குமிடத்தில் தீமையும் இருக்கும் -பாதகாதிதக 56-1

ஸர்வதா நாஸ்த் யபி சா சமைஸ்வர்ய ம்

xxx

டிசம்பர் 8 செவ்வாய்க் கிழமை

யாருடைய செல்வம் நிலையாக நின்றது ?- ராஜ தரங்கிணி

ஸ்திராஹா  கஸ்ய விபுதய

xxxx

டிசம்பர் 9 புதன் கிழமை

சர்வே குணாஹா காஞ்சனம்  ஆச்ரயந்தே – நீதி சதகம்

நல்ல குணங்களே தங்க கட்டிகள் ஆகும்

xxxx

டிசம்பர் 10 வியாழக் கிழமை

ஹரதி தனிநாம் வித்தன்யாஹோ  டாம்பிகாஹா — சுபாஷிதாவலி

ஏமாற்றுக்காரர்கள் பணக்காரர்களைக் கொள்ளை அடிக்கிறார்கள்

xxxx

டிசம்பர் 11 வெள்ளிக் கிழமை

அந்தி நேரமும் , மின்னலும், செல்வமும் எங்கே எப்போது நிலையாக நின்றது -கதாசரித் சாகரம்

சந்த்யா வித்யுச்ச  லக்ஷ்மிஸ் ச த்ருஷ்டா  குத்ர  கதா ஸ்திரா

xxxxx

டிசம்பர் 12 சனிக் கிழமை

ஒருவருக்குப் பணம் இல்லாவிடினும் அவருடைய செல்வாக்கே பெருஞ் செல்வமாகும் – கஹாவத் ரத்னாகர்

xxxx

டிசம்பர் 13 ஞாயிற்றுக் கிழமை

ஒருகாலத்தில் செல்வ ச்  செழிப்புடன் இருந்தவன் பணக்காரனிடத்தில் கைகட்டி நிற்பானா – வால்மீகி  ராமாயணம் 2-8-35

சம்ருத்த்தார்த்தஸ்ய நாஷ்டார்த்தோ ஜிவிஷ்யதி காதம் வஸே

xxxxx

டிசம்பர் 14 திங்கட் கிழமை

செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு- குறள் 752

ஒரு ஆளுக்கு பணம் இருந்தால் எல்லாரும் அவரை இந்திரனே சந்திரனே என்று தலை மேல் வைத்துக் கூத்தாடுவர்.

XXX

டிசம்பர் 15 செவ்வாய்க் கிழமை

பொருள் என்னும் பொய்யா விளக்கு -குறள் 753

பணம் என்பது நந்தா விளக்கு- அணையாத விளக்கு

xxxx

டிசம்பர் 16 புதன் கிழமை MAARKAZI MONTH BEGINS

அறன்  ஈனும் இன்பமும் ஈனும் …… தீதின்றி வந்த பொருள் –குறள் 754

நல்ல வாயில் சம்பாதித்த பணம் இன்பத்தையும் அறத்தின் பயனையும் கொடுக்கும்

xxx

டிசம்பர் 17 வியாழக் கிழமை

அரசனுக்கு கிடைக்கும் செல்வம் – 1.வரிகள், 2.திறை .3.சுங்கம் -குறள் 756

xxxx

டிசம்பர் 18 வெள்ளிக் கிழமை

அன்பு பெற்று எடுத்த குழந்தையின் பெயர் அருள்; அதை வார்ப்பது பணம் என்னும் செவிலித் தாய் ஆவாள் -குறள் 757

xxx

டிசம்பர் 19 சனிக் கிழமை

நிறைய பணம் சம்பாதித்தல் அறமும் இன்பமும் எளிதில் கிடை க்கும் – குறள்  760

xxx

டிசம்பர் 20 ஞாயிற்றுக் கிழமை

கையில் பொருள் இருந்து காரியத்தைத் தொடங்கினால் , மலை மீது ஏறிக்கொண்டு யானைகள் சண்டை இடுவதை பார்ப்பது போல ஜாலியாக இருக்கலாம் – குறள் 758

xxx

டிசம்பர் 21 திங்கட் கிழமை

பொருள் அல்லவரை பொருளாகச் செய்யும் பொருள் – குறள் 751

மதிக்க முடி யாத ஆளையும் மதிக்கவைத்துவிடும் செல்வம்

xxx

டிசம்பர் 22 செவ்வாய்க் கிழமை

துணிவும் திறமையும் உள்ளவரிடத்தில் லக்ஷ்மீ வசிக்கிறாள் – ஹிதோபதேசம் 3-116

நயே  ச சவுர்யம் ச  வசந்தி சம்பதஹ

xxx

டிசம்பர் 23 புதன் கிழமை

அதிர்ஷ்டமோ துரதிர்ஷ்டமோ நீண்ட  காலம் நீடிக்காது – ஹனுமான் நாடகம்

ந பவந்தி  சிரம் ப்ராயஹ சம்பதோ விபதோபி வா

xxx

டிசம்பர் 24 வியாழக் கிழமை

தனேன வர்த்ததே த்ருஷ்ணா – பாரத மஞ்சரி

பணம் பேராசையை வளர்க்கிறது

xxx

டிசம்பர் 25 வெள்ளிக் கிழமை VAIKUNDA EKADASI

அலிகளிடத்தில் செல்வம் சேராது –பாரத மஞ்சரி

ந க்லீ பாஹா  ஸம்பதாம் பதம்

xxx

டிசம்பர் 26 சனிக் கிழமை

பணம் இருந்தால் குணம் இருப்பது அரிது – பழமொழி

தனவத்சு குணா ந த்ருஷ்யந்தே

xxx

டிசம்பர் 27 ஞாயிற்றுக் கிழமை

பணம் பணத்தோடு சேரும் – கஹாவத் ரத்னாகர்

தனாதேவ தனம் பவேத்

xxx

டிசம்பர் 28 திங்கட் கிழமை

அருள், அன்பு ஆகிய இரண்டுடன் வராத செல்வத்தை உடனே நீக்கி விட்டு- குறள் 755

xxx

டிசம்பர் 29 செவ்வாய்க் கிழமை

லக்ஷ்மீ ம்  வினா நாதரஹ – பழமொழி

பணம் இல்லாவிடில் மதிப்பும் இல்லை

xxxx

டிசம்பர் 30 புதன் கிழமை ARUDRA DARISANAM

லக்ஷ்மியை தேடிச் சென்றால் அவள் கிடைக்க மாட்டாள்; அவள்

நம்மை நாடிவந் தால் கிடைப்பாள் – சாகுந்தலம் 3-12

லபேத வா ப்ரார்த்தயிதா ந வா ஸ்ரியம் ஸ் ரியா  துராபஹ கதமீப் சிதோ பவேத் 

xxxx

டிசம்பர் 31 வியாழக் கிழமை

செறுநர் செருக்கறுக்கும்  எ ஃகதனிற்  கூ ரியது இல் – குறள்  759

பொருள் என் பது பகைவரின் செறுக்கை வெட்டி முறிக்கும் வாள் ஆகும் .

xxx

ஜனவரி 1 வெள்ளிக் கிழமை ,2021

 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்  

tags- லக்ஷ்மீ , செல்வம் , பொன்மொழிகள், டிசம்பர் 2020

தகுதி, திறமை பற்றிய 31 பொன்மொழிகள் (Post No.8755)

அக்டோபர் 2020 நற்சிந்தனை காலண்டர்

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 8755

Date uploaded in London – –30 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பண்டிகை நாட்கள் – 2-காந்தி ஜெயந்தி , 17-நவராத்ரி ஆரம்பம், துலா விசு புண்ய காலம்; 

25-சரஸ்வதி பூஜை,  26-விஜய  தசமி, தசரா .

பவுர்ணமி -1, 31;  அமாவாசை -16; ஏகாதசி விரதம் – 13, 27

முகூர்த்த தினங்கள் – 18, 26, 29, 31

கடந்த எட்டு ஆண்டுகளில் 3000 தமிழ் பொன்மொழிகளையும் 3000 ஆங்கிலப் பொன்மொழிகளையும் ஸப்ஜெக்ட் -வாரியாக SUJECT WISE தமிழ், ஸம்ஸ்க்ருத புஸ்தகங்களிலிருந்து கொடுத்துள்ளேன். எனக்கே வியப்பு; எல்லாம் இறைவன் செயல்.

அக்டோபர் 1 வியாழக்கிழமை

அயோக்ய புருஷோ நாஸ்தி , யோஜகஸ் தத்ர துர்லபஹ – சுபாஷித ரத்ன பாண்டா காரம்

உலகில் உதவாக்கரை என்று எவருமிலர் ; அவரவர் திறமையைக் கண்டு உபயோகிக்கும் ஆட்கள் தான் இல்லை .

***

அக்டோபர் 2 வெள்ளிக்கிழமை- GANDHI JAYANTI

அதி ப்ரவ்ருத்தா சால்மலி வாரணஸ்தம்போ  ந பவதி – சாணக்கிய நீதி சாஸ்திரம்

இலவம் பஞ்சு மரம் எவ்வளவு உயர வளர்ந்தாலும் யானையைக் கட்டிப்போட உதவாது.

****

அக்டோபர் 3 சனிக்கிழமை

அயோக்யாய பதம் தத்தம் ஸர்வதா ஹானிக்ருத் பவேத் – கே ஆர்

தகுதியற்றவனிடம் பொறுப்பை ஒப்படைப்பது எல்லாவகையிலும் ஆபத்து

***

அக்டோபர் 4 ஞாயிற்றுக்கிழமை

குருட்டுப் பூனை விட்டத்தில் பாயும்

***

அக்டோபர் 5 திங்கட்  கிழமை

தக்கார் தக்கவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப்படும் – திருக்குறள் 114

ஒருவன் இறந்தபின்னர் நிற்கும் புகழோ வசையோ அவரைக் காட்டிக்கொடுத்துவிடும் .

***

அக்டோபர் 6 செவ்வாய்க்கிழமை

இதனை இதனால் இவன் முடிக்கும்  என்றாய்ந்து

அதனை அவன் கண் விடல் – திருக்குறள் 517

யார் எதை திறமையாக செய்வார் என்று சிந்தித்து அந்த வேலையை அவனுக்குக் கொடு.

***

அக்டோபர் 7 புதன்  கிழமை

அங்கணம் சம்ஸ தே வக்ரம் நர் தனே குசலோ ஜனஹ

ஆடத் தெரியாத தேவடியாள் தெருக்கோணல் என்றாளாம்

***

அக்டோபர் 8  வியாழக்கிழமை

யோக்யம் யோக்யாய தாதவ்யம் – ஸதோபதேச ப்ரபந்த

தகுதியுள்ளவருக்கு தகுதியானதைத் தாருங்கள்

***

அக்டோபர் 9 வெள்ளிக்கிழமை

யோக்யேனார்த்தஹ  கஸ்ய ந ஸ்யாஜ்ஜனேன – சிசுபால வதம்

தகுதியுள்ள மனிதர்களால் பயன் அடையாதோர் உண்டா

***

அக்டோபர் 10 சனிக்கிழமை

யோ யஸ்மின் கர்மணி குசலஹ ஸ தஸ்மின் நியோக் தவ்யஹ- சாணக்கிய நீதி

யாருக்கு எந்த வேலையில் திறமை இருக்கிறதோ  அவரிடம் அந்த வேலையை ஒப்படை

***

அக்டோபர் 11 ஞாயிற்றுக்கிழமை

சகடம் ச்வா ந கர்ஷதி – கே ஆர் கஹாவத் ரத்னாகர்

வண்டியை இழுக்க நாய் உதவாது

***

அக்டோபர் 12 திங்கட்  கிழமை

மந்தார மாலா மாலோக்ய மாலத்யாம் கோ ஹி  சாதரஹ –  ப்ருஹத் கதா மஞ்சரி

தேவ லோக மந்தார மலர் மாலை கிடைத்த பின்னர் , மல்லிகையை நாடுவோமா

****

அக்டோபர் 13 செவ்வாய்க்கிழமை

கையில் வெண்ணெய் இருக்கையில் நெய்க்கு அலைவாருண்டா ?- தமிழ் பழமொழி

****

அக்டோபர் 14 புதன்  கிழமை

சிறு துரும்பும் பல்குத்த உதவும் (யாரையும் ஒதுக்காதீர்கள் )

****

அக்டோபர் 15  வியாழக்கிழமை

ஹேம் நஹ சம்லக்ஷ்யதே ஹயக்நெள விசுத்திஹி ஸ்யாமிகாபி – ரகு வம்சம் 1-10

தங்கத்தின் தூய்மையை நெருப்பில் பரிசோதிப்போம்

(ஒருவரின் தன்மை/தகுதி  கஷ்டம் வரும்போது தெரிந்து விடும்)

அக்டோபர் 16 வெள்ளிக்கிழமை

பாரிஜாத லதாபருங்கொ ந ஹி  ஜாதிஷு சாதராக -ப்ருஹத் கதா மஞ்ச ரி

பாரிஜாத மலரை மொய்க்கும் வண்டு, மல்லிகைப்  பூவுக்கு மதிப்பு தராது

அக்டோபர் 17 சனிக்கிழமை- NAVARATRI BEGINS- DOLL DISPLAY IN SOUTH INDIAN HOMES

தன்  முதுகு தனக்குத் தெரியாது (தன்னைப் பற்றி மற்றவர் கருத்தைக் கேட்கவேண்டும் )

அக்டோபர் 18 ஞாயிற்றுக்கிழமை

வெளவிய கருமம் எண்ணித் துணி – தமிழ்ப் பழமொழி

அக்டோபர் 19 திங்கட்  கிழமை

வீர சூரனானாலும் முன்படை வேண்டும் (டீம் ஒர்க் team work அவசியம்) தமிழ்ப் பழமொழி

அக்டோபர் 20 செவ்வாய்க்கிழமை

அடிக்க அடிக்க அம்மியும் நகரும் ; முயற்சி திருவினை ஆக்கும் —தமிழ்ப் பழமொழி

அக்டோபர் 21 புதன்  கிழமை

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும்
செய்தி அறியாயோ—நன்னெஞ்சே!
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
கொடி வளராதோ?– பாரதி பாடல் (Good Things/People are available from unexpected places)

XXX

அக்டோபர் 22 வியாழக்கிழமை

“முயல்விட்டுக் காக்கைப் பின் போனவாறே-

அப்பர் தேவாரம் – பழமொழிப்பதிகம்

அக்டோபர் 23 வெள்ளிக்கிழமை

“கரும்பிருக்க இரும்பு கடித்து எய்த்தவாறே-

அப்பர் தேவாரம் – பழமொழிப்பதிகம்

அக்டோபர் 24 சனிக்கிழமை

சுகஹ ஸ்லோகான் வக்தும் ப்ரபவதி ந காகஹ க்வசிதபி – ஸுபாஷித ரத்னாவளி

கிளிதான் ஸ்லோகங்களைத் திரும்பச் சொல்லும்   காகத்தினால் ஒருபோதும் செய்ய முடியாது

அக்டோபர் 25 ஞாயிற்றுக்கிழமை- Sarasvati Puja

தலைவனை நம்பாதே ; தத்துவத்தை நம்பு –தமிழ்ப் பழமொழி (YOU DON’T NEED TO IMITATE YOUR BOSS; BUT STICK TO PRINCIPLES/ RULES)

அக்டோபர் 26 திங்கட்  கிழமை- Vijaya Dasami

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்- தமிழ்ப் பழமொழி

பாடப்பாட ராகம், மூட மூட ரோகம் PRACTICE MAKES PERFECT

அக்டோபர் 27 செவ்வாய்க்கிழமை

புராண மித்யேச்வ ந சாது சர்வம் –மாளவிகாக்னி  மித்ரம்

பழமை என்பதால் மட்டும் பெருமை சேர்ந்துவிடா து

அக்டோபர் 28 புதன்  கிழமை

வ் ருதா வ்ருஷ்டிஹி ஸமுத்ரேஷு – சாணக்கிய நீதி 11-12

கடலில் பெய்யும் மழை எல்லாம் வீண் (தகுதியற்றவருக்கு பதவி கொடுப்பது வீண் )

*****

அக்டோபர் 29 வியாழக்கிழமை

ந பேகஹ கோகநதிநீ கிஞ்சல்கா வாத கோவிதஹ – கதா சரித் சாகரம்

செந்தாமரையின் மகரந்தத் தாதுக்களை அனுபவிக்க தவலைக்குத் தகுதி இல்லை

****

அக்டோபர் 30  வெள்ளிக்கிழமை

ந ஹி  தாபயிதும் சக்யம் சாகராம்ப ஸ் த்ருனோ நுகயா – ஹிதோபதேசம்

கடல் நீரை வைக்கோல் தீப்பந்தத்தைக் கொண்டு  சூடுபடுத்த முடியாது

அக்டோபர் 31 சனிக்கிழமை

வினைக்கண் வினையுடையான்  கேண்மை வேறாக

நினைப்பானை நீங்கும் திரு – Tirukkural 519

நன்றாக வேலை செய்பவனின் நட்பை இழந்தால் , உள்ளதும் போய்விடும்

TAGS– தகுதி, திறமை, பொன்மொழிகள் ,அக்டோபர் 2020 காலண்டர்

—SUBHAM–