விவேக சிந்தாமணி பொன்மொழிகள் (Post 10,498)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,498

Date uploaded in London – –   28 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜனவரி 2022 நற்சிந்தனை காலண்டர்

31 விவேக சிந்தாமணி பொன்மொழிகள்

xxxx

பண்டிகை நாட்கள் – ஜனவரி 13 போகிப் பண்டிகை; 14- பொங்கல், மகர சங்கராந்தி; 15- மாட்டுப் பொங்கல்; 16- திருவள்ளுவர் தினம் ; 18 தைப்  பூசம், வடலூர் ஜோதி தரிசனம் ; 22- தியாகராஜ ஆராதனை ,23-சேஷாத்ரி சுவாமிகள் ஜெயந்தி;26 குடியரசு தினம்; 31- தை  அமாவாசை.

அமாவாசை-ஜனவரி 2,31; பெளர்ணமி – 17, ஏகாதசி விரத நாட்கள் -13, 28;

சுபமுஹுர்த்த  நாட்கள் – ஜனவரி 20

XXXX

ஜனவரி 1 சனிக் கிழமை

நன்மானம் வைத்தெந்த நாளுமவர் தங்களுக்கு நன்மை செய்வோர்
மன்மானி யடைந்தோரைக் காக்கின்ற வள்ளலென வழுத்த லாமே. (96)

xxx

ஜனவரி 2 ஞாயிற்றுக் கிழமை

கற்பூரப் பாத் திகட்டிக் கஸ்தூரி எருப்போட்டுக் கமழ்நீர் பாய்ச்சிப்
பொற்பூர வுள்ளியினை விதைத்தாலு மதன்குணத்தைப் பொருந்தக் காட்டும்

Xxxx

ஜனவரி 3 திங்கட் கிழமை

நோய்கொண்டா லுங்கொளலாம் நூறுவய தாமளவும்
பேய்கொண்டா லுங்கொளலாங் பெண்கொள்ள லாகாதே. (85)

Xxxx

ஜனவரி 4 செவ்வாய்க் கிழமை

மெய்யதைச் சொல்வ ராகில் விளங்கிடு மேலும் நன்மை
வையக மதனைக் கொள்வார் மனிதரிற் றேவ ராவார்

Xxx

ஜனவரி 5 புதன் கிழமை

நன்மனை தோறும் பெண்களைப் படைத்து நமனையு மென்செயப் படைத்தனையோ! (82)

Xxxx

ஜனவரி 6 வியாழக் கிழமை

பொய்யதைச் சொல்வா ராகில் போசன மற்ப மாகும்
நொய்யரி சியர்க ளென்று நோக்கிடா ரறிவுள் ளாரே. (67)

xxxxx

ஜனவரி 7 வெள்ளிக் கிழமை

அந்தணர் கருமங் குன்றில் யாவரே வாழ்வர் மண்ணில் – 125

Xxx

ஜனவரி 8 சனிக் கிழமை

வெட்டையிலே மதிமயங்கும் சிறுவருக்கு மணம்பேசி விரும்பித் தாலி
கட்டையிலே தொடுத்து நடுக் கட்டையிலே கிடத்துமட்டுங் கவலை தானே

Xxxx

ஜனவரி 9 ஞாயிற்றுக் கிழமை

மறையோர் மன்னர் வணிகர்நல் லுழவோ ரென்னுங்
குலங்கெடும் வேசை மாதர் குணங்களை விரும்பு வோர்க்கே. (122)

Xxx

ஜனவரி 10 திங்கட் கிழமை

பரிவிலாச் சகுனி போலப் பண்புகெட்டவர்கள் நட்பால்
ஒருமையி னரக மெய்து மேதுவே யுயரு மன்னோ. (119)

Xxx

ஜனவரி 11 செவ்வாய்க் கிழமை

மங்கை கைகேசி சொற்கேட்டு மன்னர்புகழ் தசரதனும் மரண மானான்
செங்கமலச் சீதைசொல் ஸ்ரீராமன் கேட்டவுடன் சென்றான் மான்பின்

xxxxx

ஜனவரி 12 புதன் கிழமை

நிலமதிற் குணவான் தோன்றி னீள்குடித் தனரும் வாழ்வார்
தலமெலாம் வாசந் தோன்றும் சந்தன மரத்திற் கொப்பாம்

xxx

ஜனவரி 13 வியாழக் கிழமை

தங்கையவள் சொற்கேட்ட ராவணனும் கிளையோடு தானு மாண்டான்
நங்கையர்சொற் கேட்பதெல்லாங் கேடுவரும் பேருலகோர் நகைப்பர் தாமே. (117)

xxxxx

ஜனவரி 14 வெள்ளிக் கிழமை

புலவர்கள் சபையில்கூடிப் புன்கவி யாளர் சார்ந்தால்
நலமென்றே கொள்வதல்லால் நவில்வரோ பெரியோர் குற்றம். (102)

Xxx

ஜனவரி 15 சனிக் கிழமை

நலமிலாக் கயவன் றோன்றின் குடித்தனம் தேசம் பாழாம்
குலமெலாம் பழுது செய்யுங் கோடரிக் காம்பு நேராம். (112)

xxxx

ஜனவரி 16 ஞாயிற்றுக் கிழமை

மின்னலைப்போல் மனையாளை வீட்டில்வைத்து வேசைசுகம் விரும்புவோரும்
அன்னைபிதா பாவலரைப் பகைப்போரு மறிவிலாக் கசடராமே. (97)

Xxx

ஜனவரி 17 திங்கட் கிழமை

நன்மானம் வைத்தெந்த நாளுமவர் தங்களுக்கு நன்மை செய்வோர்
மன்மானி யடைந்தோரைக் காக்கின்ற வள்ளலென வழுத்த லாமே. (96)

Xxxx

ஜனவரி 18 செவ்வாய்க் கிழமை

அறிவுளோர் தமக்கு நாளு மரசருந் தொழுது வாழ்வார்
நிறையொடு புவியிலுள்ளோர் நேசமாய் வணக்கஞ் செய்வார்–64

Xxxx

ஜனவரி 19 புதன் கிழமை

கோளினர் தமக்கு நன்மை செய்வது குற்ற மாமே.–63

Xxx

ஜனவரி 20 வியாழக் கிழமை

முடவனை மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை முனிதான் கொல்லும்
மடவனை வலியான் கொன்றால் மறலிதா னவனைக் கொல்லும்-59

Xxx

ஜனவரி 21 வெள்ளிக் கிழமை

வேம்புக்குத் தேன்வார்த் தாலும் வேப்பிலை கசப்பு மாரா
தாம்பல நூல்கற் றாலுந் துர்ச்சனர் தக்கோ ராகார். (61)

Xxx

ஜனவரி 22 சனிக் கிழமை

பொல்லார்க்குக் கல்விவரில் கெருவமுண்டா மதனோடு பொருளுஞ் சேர்ந்தால்
சொல்லாதுஞ் சொல்லவைக்குஞ் சொற்சென்றால் குடிகெடுக்கத் துணிவர் கண்டாய்- 99

Xxxx

ஜனவரி 23 ஞாயிற்றுக் கிழமை

சந்திர னில்லா வானந் தாமரை யில்லாப் பொய்கை
மந்திரி யில்லா வேந்தன் மதகரி யில்லாச் சேனை

Xxx

ஜனவரி 24 திங்கட் கிழமை

சுந்தரபு புலவ ரில்லாத் தொல்சபை சுதரில் லாவாழ்வு
தந்திக ளில்லா வீணை ஸ்தனமிலா மங்கை போலாம். (57)

Xxxx

ஜனவரி 25 செவ்வாய்க் கிழமை

ஆசாரஞ் செய்வா ராகி லறிவொடு புகழு முண்டாம்
ஆசாரம் நன்மை யானா லவனியிற் றேவ ராவார்

xxxx

ஜனவரி 26 புதன் கிழமை

ஆசாரஞ் செய்யா ராகி லறிவொடு புகழு மற்றுப்
பேசார்போற் பேச்சு மாகிப் பிணியொடு நரகில் வீழ்வார். (50)

xxxxx

ஜனவரி 27 வியாழக் கிழமை

புத்திமான் பலவா னாவான் பலமுளான் புத்தி யற்றால்
எத்தனை விதத்தினாலு மிடரது வந்தே தீரும்– 47

xxxx

ஜனவரி 28 வெள்ளிக் கிழமை

பொருளிலார்க் கின்ப மில்லை புண்ணிய மில்லை யென்று
மருவிய கீர்த்தி யில்லை மைந்தரிற் பெருமை யில்லை– 60

Xxx

ஜனவரி 29 சனிக் கிழமை

ஊழ்வினை வந்த தானால் ஒருவரால் விலக்கப் போமோ
ஏழையா யிருந்தோர் பல்லக் கேறுதல் கண்டி லீரோ. (41)

Xxxx

ஜனவரி 30 ஞாயிற்றுக் கிழமை

அத்தன்மால் பிர்ம தேவனா லளவிடப்பட் டாலுஞ்
சித்திர விழியார் நெஞ்சந் தெரிந்தவ ரில்லை கண்டீர்-44

Xxxxx

ஜனவரி 31 திங்கட் கிழமை

மதன லீலையில் மங்கையர் வையினும்
இதமுறச் செவிக் கின்பம் விளையுமே. (46)

xxxx

Bonus quote

அற்பர்தம் பொருள்க டாமு மவரம ரிறந்த பின்னே
பற்பலர் கொள்வா ரிந்தப் பாரினி லுண்மை தானே—32

–SUBHAM—

TAGS –விவேக சிந்தாமணி, பொன்மொழிகள் , ஜனவரி 2022, நற்சிந்தனை ,காலண்டர்

வள்ளலார் பொன் மொழிகள்- அக்டோபர் 2021 காலண்டர் (Post No.10,154)

compiled BY LONDON SWAMINATHAN

Post No. 10,154

Date uploaded in London – 29 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

விழா நாட்கள் – அக்டோபர் 2- காந்தி ஜயந்தி , 6-மஹாளய அமாவாசை ,7- நவராத்ரி ஆரம்பம், 14-சரஸ்வதி பூஜை ,15- விஜய தசமி,தசரா ; 19-மிலாடி நபி.

அமாவசை -அக்.6, பவுர்ணமி- 20; ஏகாதசி – அக்.2, 16.

சுப முஹுர்த்த நாட்கள் – அக்.25,27

xxx

மகாதேவமாலை , அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் அருளியது

xxx

அக்டோபர் 1 வெள்ளிக்கிழமை

36.ஏகாந்தப் பெருவெளிக்குள் இருந்த வாழ்வே

தெருளளவும் உளமுழுதுங் கலந்து கொண்டு

தித்திக்குஞ் செழுந்தேனே தேவ தேவே.

xxx

அக்டோபர்  2 சனிக்கிழமை

40. சுழியாத அருட்கருணைப் பெருக்கே என்றுந்

தூண்டாத மணிவிளக்கின் சோதி யே வான்

ஒழியாது கதிர்பரப்புஞ் சுடரே அன்பர்க்

கோவாத இன்பருளும் ஒன்றே

xxx

அக்டோபர்  3 ஞாயிற்றுக் கிழமை

41.நெல்லொழியப் பதர்கொள்வார் போல இன்ப

நிறைவொழியக் குறைகொண்மத நெறியோர் நெஞ்சக்

கல்லொழிய மெய்யடியர் இதய மெல்லாங்

கலந்துகலந் தினிக்கின்ற கருணைத் தேவே

xxx

அக்டோபர்  4 திங்கட் கிழமை

43.பழம்பழுத்த வான்தருவே பரம ஞானத்

திரம்பழுத்த யோகியர்தம் யோகத் துள்ளே

தினம்பழுத்துக் கனிந்தஅருட் செல்வத் தேவே.

xxx

அக்டோபர்  5 செவ்வாய்க் கிழமை

44. அண்டமெலாம் கண்ணாகக் கொளினும் காண்டற்

கணுத்துணையும் கூடாவென் றனந்த வேதம்

விண்டலறி ஓலமிட்டுப் புலம்ப மோன

வெளிக்குள்வெளி யாய்நிறைந்து விளங்கும் ஒன்றே

xxx

அக்டோபர்  6 புதன் கிழமை

46. உடல்குளிர உயிர்தழைக்க உணர்ச்சி ஓங்க

உளங்கனிய மெய்யன்பர் உள்ளத் தூடே

கடலனைய பேரின்பம் துளும்ப நாளும்

கருணைமலர்த் தேன்பொழியும் கடவுட் காவே

xxx

அக்டோபர்  7 வியாழக் கிழமை

49. பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம்

புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்

கங்குகரை காணாத கடலே

xxx

அக்டோபர் 8 வெள்ளிக்கிழமை

50. வான்காணா மறைகாணா மலரோன் காணான்

மால்காணான் உருத்திரனும் மதித்துக் காணான்

நான்காணா இடத்ததனைக் காண்பேம் என்று

நல்லோர்கள் நவில்கின்ற நலமே

xxx

அக்டோபர்  9 சனிக்கிழமை

52. பற்றறியா முத்தர்தமை எல்லாம் வாழைப்

பழம்போல விழுங்குகின்ற பரமே மாசு

பெற்றறியாப் பெரும்பதமே

xxxx

அக்டோபர்  10 ஞாயிற்றுக் கிழமை

53. மெய்யுணர்ந்த வாதவூர் மலையைச் சுத்த

வெளியாக்கிக் கலந்துகொண்ட வெளியே முற்றும்

பொய்யுணர்ந்த எமைப்போல்வார் தமக்கும் இன்பம்

புரிந்தருளும் கருணைவெள்ளப் பொற்பே

xxx

அக்டோபர்  11 திங்கட் கிழமை

54.ஆண்பெண்

அலிவகையல் லாதவகை கடந்து நின்ற

அருட்சிவமே சிவபோகத் தமைந்த தேவே

xxx

அக்டோபர்  12 செவ்வாய்க் கிழமை

55.ஊராத வான்மீனும் அணுவும் மற்றை

உள்ளனவும் அளந்திடலாம் ஓகோ உன்னை

ஆராலும் அளப்பரிதென் றனந்த வேதம்

அறைந்திளைக்க அதிதூர மாகுந் தேவே.

xxx

அக்டோபர்  13 புதன் கிழமை

56. கற்பங்கள் பலகோடி செல்லத் தீய

கனலினடு ஊசியின்மேல் காலை ஊன்றிப்

பொற்பறமெய் உணவின்றி உறக்க மின்றிப்

புலர்ந்தெலும்பு புலப்படஐம் பொறியை ஓம்பி

நிற்பவருக் கொளித்துமறைக் கொளித்து

xxx

அக்டோபர்  14 வியாழக் கிழமை

58. உருநான்கும் அருநான்கும் நடுவே நின்ற

உருஅருவ மொன்றும்இவை உடன்மேல் உற்ற

ஒருநான்கும் இவைகடந்த ஒன்று மாய்அவ்

வொன்றினடு வாய்நடுவுள் ஒன்றாய் நின்றே

இருநான்கும் அமைந்தவரை நான்கி னோடும்

எண்ணான்கின் மேலிருத்தும் இறையே மாயைக்

கருநான்கும் பொருணான்கும் காட்டு முக்கட்

கடவுளே கடவுளர்கள் கருதுந் தேவே.

Xxx

அக்டோபர் 15 வெள்ளிக்கிழமை

61. உருத்திரர்நா ரணர்பிரமர் விண்ணோர் வேந்தர்

உறுகருடர் காந்தருவர் இயக்கர் பூதர்

மருத்துவர்யோ கியர்சித்தர் முனிவர் மற்றை

வானவர்கள் முதலோர்தம் மனத்தால் தேடிக்

கருத்தழிந்து தனித்தனியே சென்று வேதங்

களைவினவ மற்றவையுங் காணேம் என்று

வருத்தமுற்றாங் கவரோடு புலம்ப நின்ற

வஞ்சவெளி யேஇன்ப மயமாம் தேவே.

xxx

அக்டோபர் 16 சனிக்கிழமை

64.அதுகண்டோம் அப்பாலாம் அதுவும் கண்டோம்

ஏன்றஉப சாந்தநிலை கண்டோம் அப்பால்

இருந்தநினைக் காண்கிலோம் என்னே என்று

சான்றவுப நிடங்களெலாம் வழுத்த நின்ற

தன்மயமே சின்மயமே சகசத் தேவே.

xxx

அக்டோபர் 17 ஞாயிற்றுக் கிழமை

69.அன்னைநீ என்னுடைய அப்ப னீஎன்

அரும்பொருள்நீ என்னிதயத் தன்பு நீஎன்

நன்னெறிநீ எனக்குரிய உறவு நீஎன்

நற்குருநீ எனைக்கலந்த நட்பு நீ

xxx

அக்டோபர் 18 திங்கட் கிழமை

71. ஆனேறும் பெருமானே அரசே என்றன்

ஆருயிருக் கொருதுணையே அமுதே கொன்றைத்

தேனேறு மலர்ச்சடைஎஞ் சிவனே தில்லைச்

செழுஞ்சுடரே ஆனந்தத் தெய்வ மே

xxx

அக்டோபர் 19 செவ்வாய்க் கிழமை

73. அன்னையினும் பெரிதினிய கருணை ஊட்டும்

ஆரமுதே என்னுறவே அரசே

xxx

அக்டோபர் 20 புதன் கிழமை

74.பேதையேன் நின்னருளைப் பெற்றோர் போல

நடித்தேன்எம் பெருமான்ஈ தொன்றும் நானே

நடித்தேனோ அல்லதுநீ நடிப்பித் தாயோ.

xxx

அக்டோபர் 21  வியாழக் கிழமை

75. மத்தேறி அலைதயிர்போல் வஞ்ச வாழ்க்கை

மயலேறி விருப்பேறி மதத்தி னோடு

பித்தேறி உழல்கின்ற மனத்தால் அந்தோ

பேயேறி நலிகின்ற பேதை யானேன்

Xxxx

அக்டோபர் 22 வெள்ளிக்கிழமை

76.பொதியணிந்து திரிந்துழலும் ஏறு போலப்

பொய்யுலகில் பொய்சுமந்து புலம்பா நின்றேன்

துதியணிந்த நின்னருளென் றனக்கு முண்டோ

இன்றெனிலிப் பாவியேன் சொல்வ தென்னே.

xxxx

அக்டோபர் 23 சனிக்கிழமை

77. என்னரசே என்னுயிரே என்னை ஈன்ற

என்தாயே என்குருவே

xxxx

அக்டோபர் 24 ஞாயிற்றுக் கிழமை

83. அடிமைசெயப் புகுந்திடும்எம் போல்வார் குற்றம்

ஆயிரமும் பொறுத்தருளும் அரசே நாயேன்

கொடுமைசெயு மனத்தாலே வருந்தி அந்தோ

குரங்கின்கை மாலையெனக் குலையா நின்றேன்

xxx

அக்டோபர் 25 திங்கட் கிழமை

85.கள்ளமனக் குரங்காட்டும் ஆட்ட மெல்லாம்

கண்டிருந்தும் இரங்கிலையேல் கவலை யாலே

உள்ளமெலிந் துழல்கின்ற சிறியேன்

xxxx

அக்டோபர் 26 செவ்வாய்க் கிழமை

87. தீவினைநல் வினையெனும்வன் கயிற்றால் இந்தச்

சீவர்களை ஆட்டுகின்ற தேவே

xxx

அக்டோபர் 27 புதன் கிழமை

89.பன்னெறியில் எனைஇ ழுத்தே

பம்பரத்தின் ஆடியலைப் படுத்தும் இந்தப்

பாவிமனம் எனக்குவயப் படுவ தில்லை

xxx

அக்டோபர் 28  வியாழக் கிழமை

90. கண்ணுடைய நுதற்கரும்பே மன்றில் ஆடும்

காரணகா ரியங்கடந்த கடவு ளேநின்

தண்ணுடைய மலரடிக்கோர் சிறிதும் அன்பு

சார்ந்தேனோ செம்மரம்போல் தணிந்த நெஞ்சேன்

xxx

அக்டோபர் 29 வெள்ளிக்கிழமை

94.செறிஇரவு பகலொன்றும் தெரியா வண்ணம்

இம்மையிலே எம்மையினும் காணாச் சுத்த

இன்பநிலை அடைவேனோ ஏழை யேனே.

Xxx

அக்டோபர் 30 சனிக்கிழமை

95. அடியனேன் பிழையனைத்தும் பொறுத்தாட் கொண்ட

அருட்கடலே மன்றோங்கும் அரசே இந்நாள்

கொடியனேன் செய்பிழையைத் திருவுள் ளத்தே

கொள்ளுதியோ

xxx

அக்டோபர் 31 ஞாயிற்றுக் கிழமை

97.உற்றாயுஞ் சிவபெருமான் கருணை ஒன்றே

உறுபிழைகள் எத்துணையும் பொறுப்ப தென்றுன்

பொற்றாளை விரும்பியது மன்று ளாடும்

பொருளேஎன் பிழையனைத்தும் பொறுக்க வன்றே.

Xxxx subham xxxxx

Tags-  வள்ளலார் , பொன்மொழிகள், மகாதேவ மாலை , அக்டோபர் 2021, காலண்டர்

செப்டம்பர் 2021 காலண்டர்; ரிக் வேத பொன்மொழிகள்- (Post.10036)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,036

Date uploaded in London – 31 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

செப்டம்பர் 2021 காலண்டர்; ரிக் வேத பொன்மொழிகள்- 3 வது மண்டலம்(Post.10036)

பண்டிகை நாட்கள் – செப்.5 ஆசிரியர் தினம்; 8- சாம வேத உபாகர்மா ;10- கணேஷ் சதுர்த்தி; 11- பாரதி நூற்றா ண்டு நினைவு தினம் , ரிஷி பஞ்சமி; 21- மாலையை பட்சம் ஆரம்பம்;

செப்.6 – அமாவாசை ; செப்.20 பவுர்ணமி ;

ஏகாதஸி விரத நாட்கள் – 2,16;

சுபமுஹூர்த நாட்கள் – 1,3,8,9

xxx

செப்டம்பர் 1 புதன் கிழமை

தண்ணீரில் கருவாக இருப்பவன்/ அக்னீ ; தன் ஒளியால் பிரகாசிப்பவன்; மக்களின் நன்மைக்காக தண்ணீரை உண்டாக்கினான் RV 3-1-12

XXX

செப்டம்பர்  2 வியாழக் கிழமை

சாணையால் கத்தியைத் தீட்டிக் கூராக்குவது போல, மனிதர்கள் கவிதைகளால் அக்கினியை பிரகாசிக்கச் செய்கின்றனர் 3-2-9

XXX

செப்டம்பர்  3 வெள்ளிக் கிழமை

அக்னீ , பிறக்கும்போது வெள்ளை; பலமானபோது சிவப்பு; ஏழு மகத்தான நதிகள் அவனை வளர்த்தன 3-1-4

XXX

செப்டம்பர்  4 சனிக் கிழமை

வீடுகளின் நண்பன்; தீர்க்கதரிசி; தேவர்களின் புரோகிதன், சத்திய விதிகள்/சட்டம் என்னும் தேரைச் செலுத்துகிறான்; அவனைப் போற்றுங்கள் RV 3-2-8

XXX

செப்டம்பர்  5 ஞாயிற்றுக் கிழமை

மனிதர்களின் நண்பன்; மனிதர்களின் நலனை நாடுபவன்; வடிவில் அழகன் ; உத்தமன்; பல வர்ணங்களில் ஒளிர்வோன், மாசு மருவற்றவன் ; தூயவன் ஆன அக்கினியிடம் வேண்டுகிறோம் 3-2-15

XXX

செப்டம்பர்  6 திங்கட் கிழமை

அமிர்தனான அக்கினி தேவர்களைப் போற்றுகிறான் ; அதனால் அவன் சனாதன தர்மத்துக்கு ஊறு விளைவிப்பதில்லை 3-2-15

XXX

செப்டம்பர்  7  செவ்வாய்க் கிழமை

அக்கினி சிங்கத்தைப் போல கர்ஜித்து வயிற்றில் வளர்கிறான் ; ஆவி கொடுப்போருக்கு செல்வத்தை வழங்குகிறான் RV 3-2-11

XXX

செப்டம்பர் 8 புதன் கிழமை

நல்லோரின் நண்பன்; கவிஞன்; வேள்விகளின்  தந்தை; அறிஞர்களை ஊக்குவிப்பவன்/அக்கினி  3-2-4

XXX

செப்டம்பர்  9 வியாழக் கிழமை

அக்கினியை வழிபடுவோர் சுகத்தையும் இன்பத்தையும் நாடுகிறார்கள் ; அவன் வேள்வியின் கொடி ;பாடுவோர் புனிதத் சடங்குகளை அவனிடம் சேமிக்கிறார்கள்; குவித்துவைக்கிறார்கள் RV.3-3-3

XXX

செப்டம்பர்  10 வெள்ளிக் கிழமை

நல்ல புதல்வர்களைப் பெறவும், நீண்ட ஆயுளுக்காகவும் அக்கினியைப் போற்றுங்கள்; வினைத் திட்பனான உன்னை தேவர்களும் மனிதர்களும் விரும்புகிறார்கள்; நீ எப்போதும் விழித்திருப்பவன் 3-3-7

XXX

செப்டம்பர்  11 சனிக் கிழமை

பாடல்களால் அக்கினி தேவனைப் போ ற்றுவோம் ; அவன் பேரின்பத்தை அளிப்பவன் மங்கலமான தேரில் ஏறி தன பலத்தால் எல்லா பிரஜைகளை பற்றினான் 3-3-9

XXX

செப்டம்பர்  12 ஞாயிற்றுக் கிழமை

2 முக்கிய பாடகர்களும், 7 வேள்விப் பாடகர்களும் அக்கினியே சத்யம் என்று செப்புகின்றனர். அவர்கள் உண்மையைப் போற்றுபவர்கள்; விரதங்களைப் பின்பற்றுவோர்; அக்கினியை ஒளிப்படுத்துவோர்

3-4-7

XXX

செப்டம்பர்  13 திங்கட் கிழமை

பாரதி, இளா , சரஸ்வதி ஆகிய மூன்று தேவியரும் இங்கே வந்து தர்ப்பைப்புல் ஆசனத்தில் அமருங்கள் RV. 3-4-8

XXX

செப்டம்பர்  14 செவ்வாய்க் கிழமை

போற்றத்தக்க அக்நி , மொழிகளாலும் , துதிகளாலும் , தோத்திரங்களாலும் வளர்கிறான் 3-5-2

XXX

செப்டம்பர் 15 புதன் கிழமை

அக்கினியை நதிகள் பலப்படுத்தி ஏந்திச் செல்லுகின்றன. அக்கினி ஒரு மனைவியுடன் இருக்கும் கணவனைப் போல வானம் – பூமியுடன் இருக்கிறான் 3-4-7

XXX

செப்டம்பர்  16 வியாழக் கிழமை

எங்களுக்கு நித்தியமாக வசிக்க  நிலத்தை அளிக்கவும்; எங்கள் வம்சத்தில் புதல்வர்களும் பேரர்களும் தோன்றுவார்களாகுக ; உன் கருணை எங்கள் பால் இருக்கட்டும் 3-6-11

XXX

செப்டம்பர்  17 வெள்ளிக் கிழமை

சோம பானத்தைக் கொடுக்கும் செடிகள் தோல் போன்ற சவ்வினால் போர்த்தப்பட்டுள்ளது; அவன் அதைக் காக்கிறான்; கொழுப்புச் சத்து நிறைந்த பறவைகளின் இடத்தையும் காக்கிறான்.3-5-6

XXX

செப்டம்பர்  18 சனிக் கிழமை

அக்கினி தன்  பெற்றோர்களான வானத்தையும் பூமியையும்  அடிக்கடி புதுப்பிக்கிறான் 3-4-7

XXX

செப்டம்பர்  19 ஞாயிற்றுக் கிழமை

அக்னீ அழகன்; பூமியை,  பறவைகளின் உயர்ந்த இடத்தைக்  காக்கிறான் ; 7 தலை உள்ள மருத்துக்களைக் காப்பவன்; சூரியனின் வழியைக் காப்பவன் 3-5-5

XXX

செப்டம்பர்  20 திங்கட் கிழமை

அக்கினியை தூண்டும்போது அவனே மித்ரன், வருணன், வாயுவாகிறான் மனைகளின் நண்பன்; ஓடும் நதிகளுக்கும், மலைகளுக்கும் அவனே மித்திரன் 3-5-4

XXX

செப்டம்பர்  21  செவ்வாய்க் கிழமை

நீரின் கரு; நண்பன் ; சத்தியத்தால் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவன் ; நம் பாடல்களின் கதாநாயகன் ; உச்சத்தில் அமர்ந்து இருக்கிறான்  3-5-3

XXX

செப்டம்பர்   22 புதன் கிழமை

மனிதர்காளால் வெட்டப்பட்டு, கோடரியால் செதுக்கப்பட்டு ,  பிரகாசமாக நிற்கும் யூப நெடும் தூண்கள் எங்களுக்குச் செல்வத்தை அளிக்கட்டும் 3-8-6

XXX

செப்டம்பர்  23 வியாழக் கிழமை

யூப நெடுந் தூணே ! கிழக்கில் நில், வீரர்களைக்  கொடு ; வறுமையையும் பஞ்சத்தையும் விரட்டு ; பெரும் அதிர்ஷ்ட்டதை எங்களுக்கு கொணர்க .3-8-2

XXX

செப்டம்பர்  24 வெள்ளிக் கிழமை

வனஸ்பதியே ! பூமியின் உயர்ந்த இடத்தில் நிமிர்ந்து நிற்கவும் ? வேள்வியை நடத்துபவனுக்கு உணவு அளிக்கவும் 3-8-3

XXX

செப்டம்பர்  25 சனிக் கிழமை

நல்லாடை அணிந்தவன்; மாலைகள் உடையவன் யாகத் தூண் (யூபம்) ; அவன் பிறந்தவுடன் புகழ் அடைகிறான்.; அவனை அறிஞர்களும், கவிகளும் தியானிப்பவர்களும் உயர்த்துகிறார்கள் 3-8-4

XXX

செப்டம்பர்  26 ஞாயிற்றுக் கிழமை

வனஸ்பதியே! கடவுளை வணங்குவோர் உனக்கு நெய் பூசி காப்பிடுகிறார்கள் ; நீ உயர்ந்து நின்றாலும், உன் தாயான பூமியில் சாய்ந்து படுத்திருந்தாலும் எங்களுக்குச் செல்வத்தைக்  கொடு RV.3-8-1

XXX

செப்டம்பர்  27 திங்கட் கிழமை

3399 தேவர்கள் அக்கினியைப் போற்றினார்கள்; அவனுக்கு நெய்க் காப்பிட்டார்கள் அவனுக்கு அவனுக்குத் தர்ப்பையைப் பரத்தி அமர்த்தினார்கள் 3-9-9

xxx

செப்டம்பர்  28  செவ்வாய்க் கிழமை

அக்கினியே உன் பரவும் சுவாலையின் சக்தியால் எங்கள் பாவங்களை நீக்கவும் 3-6-10

XXX

 செப்டம்பர் 29 புதன் கிழமை

வனஸ்பதியே ; நீ 100 கிளைகளோடு பெருக வேண்டும்; நாங்கள் ஆயிரம் கிளைகளோடு உயர்வோமாக.3-8-11

xxx

செப்டம்பர் 30 வியாழக் கிழமை

அழகான காப்புகளோடுள்ள அந்த யூபங்கள் , காண்பதற்கு பிராணிகளின் கொம்புகள் போலத் தோன்றுகின்றன. துதிகளைக் கேட்கின்றன; அவை போர்களிலே எங்களைக் காக்கட்டும் RV 3-8-10

xxx

BONUS GOLDEN SAYINGS

உன்னை (அக்கினியே) நண்பன் என்ற முறையில்  எங்களுக்கு உதவ அழைக்கிறோம். தண்ணீரின் பேரனே !துன்பமற்றவனே; ஒளி மயமானவனே ! ஒப்பற்ற வெற்றியுடையவனே RV 3-9-1

xxx

அக்கினியே நீ மரங்களை விரும்பி, தாய் போன்ற தண்ணீரிடம் சென்றாய்; ஆனால் தாமதத்தைதை சகிக்காமல் எங்களிடமே ஒரு நொடியில் திரும்பி வந்துவிட்டாய் .3-9-2

Xxx

வேள்வித் தலைவர்கள், ஆதித்யர்கள், ருத்திரர்கள், வசுக்கள், வானமும் பூமியும் ஒன்றுபட்டு நிற்கும் எல்லா தேவர்களும் எங்கள் வேள்விகளைக் காப்பார்களாகுக; வேள்விக் கொடியை உயர்த்தட்டும் RV 3-8-8

— subham —

TAGS. செப்டம்பர் 2021, காலண்டர்,  ரிக் வேத பொன்மொழிகள்,  3 வது மண்டலம்

மேலும் 31 ரிக்வேதப் பொன்மொழிகள் (Post No.9912)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9912

Date uploaded in London –30 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆகஸ்ட் 2021 நற் சிந்தனை காலண்டர்

ஆகஸ்ட் மாத பண்டிகைகள் – 3 ஆடிப் பெருக்கு , 8 ஆடி அமாவாசை , 11- ஆடிப் பூரம், 15- சுதந்திர தினம், அரவிந்தர் பிறந்த தினம், 20- மொகரம், 21- வரலெட்சுமி விரதம், ஓணம் , 22- ஆவணி அவிட்டம், ரக்ஷா பந்தன், 23 காயத்ரி ஜபம், 30- கிருஷ்ண ஜெயந்தி .

அமாவாசை -8, பெளர்ணமி -22, ஏகாதசி விரத நாட்கள் – 4, 18

சுப முஹுர்த்த நாட்கள் -20, 26

முதல் எண் ரிக் வேத மண்டலத்தையும், அடுத்த எண் துதியையும் , மூன்றாவது எண் மந்திரத்தையும் குறிக்கும் .

xxxx

ஆகஸ்ட் 1 ஞாயிற்றுக் கிழமை

வருணனே!  எல்லா மக்களும் பிழை செய்கிறார்கள் நாங்களும் உன் விதியை மீறுகிறோம். கோபப்பட்டு எங்களை அழித்து விடாதே -1-25-1, 1-25-2

xxx

ஆகஸ்ட் 2 திங்கட்  கிழமை

கண்டேன், கண்டேன், கண்ணுக்கினியன கண்டேன்.அவனுடைய தேரையும் இந்த பூமியில் கண்டேன். என் துதிப்பாடலையும் அவன் ஏற்றுக்கொண்டான் – 1-25-18

xxx

ஆகஸ்ட் 3 செவ்வாய்க்  கிழமை

என் நினைவுகள் , மேய்ச்சல் நிலங்களுக்குச் செல்லும் பசு மாடுகளைப் போல, எல்லோரும் போற்றும் அவனையே நாடிச் செல்கிறது 1-25-16

xxx

ஆகஸ்ட் 4 புதன்  கிழமை

பேரறிஞனான வருணன் எங்களை நாள்தோறும் நன்னெறியில் செலுத்துவானாக ; எங்கள் ஆயுளை நீடிப்பானாக -1-25-12

xxx

ஆகஸ்ட் 5 வியாழக் கிழமை

நாங்கள் வாழ மேலேயுள்ள, நடுவிலுள்ள,கீழேயுள்ள பந்த பாசங்களிலிருந்து கட்டுக்களிலிருந்து, தளைகளிலிருந்து அவிழ்த்து விடுங்கள் – 1-24-21

Zxxx

ஆகஸ்ட் 6 வெள்ளிக் கிழமை

உணவின் தலைவனே ; நீ ஒளி ஆடைகளை அணிந்து கொள் ; எங்கள் வேள்வியை ஏற்றுக்கொள் – 1-26-1

Xxx

ஆகஸ்ட் 7  சனிக் கிழமை

அக்னியே , நீ தந்தை, நான் மகன்;நீயும்  நானும் உறவினர்கள் ; நான் உன் நண்பன்; நீ என் நண்பன் – 1-26-3

Xxx

ஆகஸ்ட் 8 ஞாயிற்றுக் கிழமை

அமிர்த சொரூபனே , எங்களுடைய துதிப்பாடல்கள் , நம் இருவருக்கும் இன்பம் தரட்டும் – 1-26-9

Xxx

ஆகஸ்ட் 9 திங்கட்  கிழமை

அக்னியே ,எங்கும் செல்லும் நீ, எங்களை அருகிலிருந்தோ தொலைவிலிருந்தோ துன்புறுத்த நினைப்பவர்களிடமிருந்து காத்தருள்க 1-27-3

Xxxx

ஆகஸ்ட்10 செவ்வாய்க் கிழமை

சித்திரபானுவே /அக்னியே , நீ நதியின் அலைகளைப் போல செல்வங்களை பகிர்ந்து கொடுக்கிறாய்; யாகம் செய்ப்பவனுக்குப் பொழிகிறாய் 1-27-6

xxx

ஆகஸ்ட் 11 புதன்  கிழமை

பெரிய தேவர்களுக்கு நமஸ்காரம் ; சிறிய தேவர்களுக்கு நமஸ்காரம் ; இளைஞர்களுக்கு நமஸ்காரம்; முதியோருக்கு நமஸ்காரம்; சக்திமிக்க  நாங்கள் எல்லா தேவர்களையும் போற்றுகிறோம் நான் பெரிய தேவர்களுக்கு மறக்காமல் துதி பாடுவேனாக 1-27-13

xxx

ஆகஸ்ட் 12 வியாழக் கிழமை

இந்திரனே ! உரலில் இடிக்கும்போது உலக்கை விழும் நேரத்தை சரியாக அறிந்து ,இடிப்பதற்கு உதவும் பெண்களைப் போல நீயும்,  இந்த உரலில் இடிக்கும்போது விழும் சோம ரஸத்துளிகளைப் பருகுவாயாக 1-28-3

Xxx

ஆகஸ்ட் 13 வெள்ளிக் கிழமை

இந்திரனே! கழுதை போலக்  கத்தி அபஸ்வரம் பாடும் எங்கள் எதிரிகளை வீழ்த்துவாயாக. எங்களுக்கு ஆயிரக் கணக் கில் குதிரைகளையும் பசுக்களையும் தருவாயாக- 1-29-5

Xxx

ஆகஸ்ட் 14  சனிக் கிழமை

இந்திரனே இந்த சோம ரசம் உனக்கானது. கருத்தரித்த பெட்டைப் புறா விடம் வரும் ஆண் புறா போல வருக்கிறாய்.      அப்போது எங்கள் தோத்திரங்களையும் ஏற்பாயாக  1-30-4

Xxx

ஆகஸ்ட் 15 ஞாயிற்றுக் கிழமை

அக்கினியே, பேரறிஞநான நீ, தீமையான செயல்புரிவோரை நற்பணியில் ஈடுபடுத்துகிறாய்  வீரர்கள் செய்யும் போரில் பரந்த செல்வமாக  இருக்கிறாய் . நீ போரிலே வலியோரைக் கொண்டு மெலிந்தவர்களை கொன்றாய்.1-31-6

Xxx

ஆகஸ்ட் 16 திங்கட்  கிழமை

ஏ நான்கு  கண்கள் உடைய அக்கினியே , புனிதர்களை நீ காக்கிறாய் உனக்கு அ வி அளிக்கும் மனிதனின் மந்திரத்தை நீ மனதில் இருத்திப் போற்றுகிறாய் 1-31-11

Xxx

ஆகஸ்ட் 17 செவ்வாய்க்  கிழமை

அக்கினியே , நீ எங்களுடைய அசட்டையை மன்னிக்கவும் . நாங்கள் தீய வழியில் சென்று விட்டோம்.. நீயே நண்பன்; நீயே தந்தை.எல்லோரையும் ஊக்கப் படுத்துகிறாய். எல்லோரையும் கவனித்துக் கொள்பவனும் நீயே -1-31-16

Xxxx

ஆகஸ்ட் 18 புதன்  கிழமை

நான் இந்திரன் செய்த வீரதீரத் செயல்களை சொல்கிறேன். வஜ்ராயுதனான அவன் மேகத்தைப் பிளந்தான்.தண்ணீரை பூமிக்குத் தள்ளினான்.மலைகளில் தண்ணீர் செல்ல வழிகளைக் கீறினான் 1-32-1

xxx

ஆகஸ்ட் 19 வியாழக் கிழமை

இந்திரனே, நீ அஹி என்னும் பாம்புகளிடையே தோன்றிய மேகத்தைப் பிளந்தாய்; பின்னர் மாயாவிகளின் மாயையை அழித்தாய்; அப்பால் சூரியனையும், வானத்தையும் உஷை என்னும் உதய காலத்தையும் தோற்றுவித்தாய். பின்னர் உன்னை எதிர்க்க எந்தப் பகைவனும் இல்லை 1-32-4

xxxx

ஆகஸ்ட் 20 வெள்ளிக் கிழமை

இந்திரனே நீ  அஹி  என்னும் பாம்பு அரக்கனைக் கொல்லும்போது உன் இதயத்தில் பயம் நுழைந்தபோது நீ யாரை நாடினாய் ? கலங்கிய நீயே 99 நதிகளை பருந்து போல விரைந்து கடந்தாயே 1-32-14

Xxxx

ஆகஸ்ட் 21  சனிக் கிழமை

வாருங்கள், நாம் திருடப்பட்ட பசுக்களை  மீட்க இந்திரனிடம் செல்லுவோம். பகைமையற்ற அவன் நம்முடைய பேரரறிவை அதிகப்படுத்துகிறான் ; பிறகு அவன் பசுக்களின் செல்வத்தைக் காணும் உத்தம ஞானத்தை அளிப்பான் 1-33-1

xxx

ஆகஸ்ட் 22 ஞாயிற்றுக் கிழமை

என் மனம் மரத்தின் உச்சியில் கட்டிய கூட்டுக்குப் பருந்து பாய்வது போல இந்திரனிடத்தில் பாய்கிறது . மறைந்திருக்கும் செல்வம் தரும் அவனைப் புகழ்மிகு கீதம் இசைத்துப் போற்றுகிறேன் 1-33-2

Xxxx

ஆகஸ்ட் 23 திங்கட்  கிழமை

அவன் பூமியின் எட்டு திசைகளையும், மூன்று வறண்ட பகுதிகளையும், ஏழு நதிகளையும் ஒளிமயமாக்கினான்.சவிதா தேவனின் கண் தங்க நிறமானது ; வழிபடுபவனுக்கு தேர்ந்து எடுத்த செல்வத்தை அவன் அளிக்கிறான் (சவிதா= சூரிய தேவன்)-1-35-8

Xxxx

ஆகஸ்ட் 24 செவ்வாய்க்  கிழமை

அக்கினியே ! உன்னுடைய எரிக்கும் சுவாலைகளால் தானம் அளிக்காத அத்தனை போரையும் மட்பாண்டங்களை தடிகளால் அடிப்பது போல அடித்து நொறுக்கு – 1-36-16

மருத்துக்கள் (காற்று தேவன்) புள்ளி மான்களோடும் ஈட்டிகளோடும் மின்னும்  நகைகளோடும், தாமே துலங்கும் ஒளியோடும் ஒருமித்துப் பிறந்தார்கள்- 1-37-2

xxxx

ஆகஸ்ட் 25 புதன்  கிழமை

மருத்துக்கள் மொழியைப் பிறப்பிக்கிறார்கள்; தண்ணீரை அவற்றின் வழிகளிலே செலுத்துகிறார்கள்; அவர்கள் கதறும் பசுக்களை முழங்கால் அளவு நீருள்ள இடத்தில் பருக அனுப்புகிறார்கள் 1-37-10

xxx

ஆகஸ்ட் 26 வியாழக் கிழமை

மருத்துக்களே எப்போது உங்கள் இரு கைகளாலும் எங்களை மகனைத் தந்தை தூக்குவது போல தூக்குவீர்கள்? 1-38-1

xxx

ஆகஸ்ட் 27 வெள்ளிக் கிழமை

பேரறிஞனான இந்திரனே ! எங் களுக்கு நிறைய செல்வத்தைக் கொடு ; ஆனால் வணிகனைப் போல செயல்படாதே – 1-33-4

Xxx

ஆகஸ்ட் 28  சனிக் கிழமை

அஸ்வினி தேவர்களே ! ஒரு நாளைக்கு மும்முறை வந்து குற்றங்களை நீக்கும் நீங்கள் இன்று எங்கள் வேள்வியை ன்று முறை தேனால் தெளியுங்கள்.; இனிமைப் படுத்துங்கள். காலையிலும் மாலையிலும் எங்களுக்கு வலிமை தரும் உணவைப் படையுங்கள் 1-34-3

Xxx

ஆகஸ்ட் 29 ஞாயிற்றுக் கிழமை

3 முறை எங்கள் மனைக்கு வாருங்கள்; நீதியுள்ள மனிதனிடம் 3 முறை செல்லுங்கள்; உங்கள் பாதுகாப்புக்கு உரியவர்களிடம் 3 முறை தோன்று ங்கள்; எங்களுக்கு 3 மடங்கான அறிவைக் கற்பியுங்கள்; உங்களுக்குத் திருப்தி தரும் பொருட்களை 3 முறை தாருங்கள்; மழையைப் பொழியும் இந்தி ரண் போல் 3 முறை உணவைப் பொழியுங்கள் 1-34-4

Xxxx

ஆகஸ்ட் 30 திங்கட்  கிழமை

ஒளியுள்ள உலகங்கள் மூன்று உண்டு; இரண்டு சவிதா அருகில் இருக்கிறது . ஒன்று மானிடர்களை எமலோகத்துக்கு கொண்டு செல்கிறது; தேரின் அச்சாணி போல அமிர்தர்கள் ஸவிதாவில் நிலைக்கிறார்கள்; சவீதாவின் சிறப்பை அறிபவன் எங்களுக்கு கூறட்டும். 1-35-6

xxx

ஆகஸ்ட் 31 செவ்வாய்க் கிழமை

உங்கள் வாயால் ஸ்லோகங்களை சொல்லுங்கள். மழையைபி பரவலாக்கும் மேகத்தைப் போல அதை பரத்துங்கள்;காயத்ரீ சூக்தத்தைப் பாடுங்கள் 1-38-14

–subham–

 tags — மேலும் ,ரிக்வேத, பொன்மொழிகள், ஆகஸ்ட் 2021, காலண்டர்

31 ரிக் வேதப் பொன்மொழிகள்– ஜூலை 2021 நற்சிந்தனை காலண்டர் (Post.9797)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 9797

Date uploaded in London – 30 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பண்டிகை நாட்கள் – ஜூலை 4- சுவாமி விவேகானந்தர் நினைவு தினம், 15-ஆனி  உத்தரம் , 17-தக்ஷிணாயன புண்யகாலம், 23-குரு  பூர்ணிமா.

சுப முகூர்த்த நாட்கள் – ஜூலை 7, 16

அமாவாசை – ஜூலை 9பவுர்ணமி – ஜூலை 23,

ஏகாதசி விரத நாட்கள் – ஜூலை 5, 20

ரிக்வேதத்தில் உள்ள முதல் எண் (Number) மண்டலத்தையும், இரண்டாவது எண் துதியையும் மூன்றாவது எண் அந்தத் துதியில் உள்ள மந்திரத்தையும் குறிக்கும் .

Xxxx

ஜூலை 1 வியாழக்கிழமை

அக்கினியே! உன்னை தினமும் அதிகாலையில் உஷா துயில் எழுப்புகிறாள் 10 தோழிகள் (5+5 விரல்கள் )அவிர் பலி கொடுக்கின்றனர். ஈட்டி முனை போலும், கோடரி முனை போலும் கூரான முனையுடையாய் ; மநு வம்சம் வந்த மக்களிடையே நீ உலவுகிறாய்  4-6-8

Xxx

ஜூலை  2 வெள்ளிக்கிழமை

அக்னீ , நீ பள்ளத்காக்கை நோக்கிப் பறக்கும் பருந்துகளைப் (Falcons) போலவும், குதிரைகளைப் போலவும், மருத் தேவர்களின் படையைப் போலும் உன் சுவாலைகளை பரப்புகிறாய் 4-6-10

xxx

ஜூலை  3 சனிக்கிழமை

இந்த செல்வத்தின் மதிப்பு என்ன?  லாபம் என்ன ? நீ அறிவாய், சொல், இந்த ரகசியமான வழியில் நாங்கள் குற்றம் இல்லாமல் செல்ல வழிகாட்டுவாயாக 4-5-9

Xxx

ஜூலை  4 ஞாயிற்றுக்கிழமை

அக்னியே , நீ சத்தியவான், பேரறிஞன், நட்சத்திரங்கள் போல பிரகாசமானவன், வேள்விகளைக் காப்பவன்; உன்னை ஒவ்வொரு வீட்டிலும் தியானம் செய்கிறார்கள் 4-7-3

xxx

ஜூலை  5 திங்கட்கிழமை

அக்னியே , நீ விறகில் தீயினன் (அப்பர் தேவாரம்) , அற்புதன், அணுக முடியாதவன், வனங்களில் வசிப்பவன், அறிவுள்ளவன், தாய் போன்ற நதி நீரில் இருப்பவன் , குகையில் மறைந்திருப்பவன் (குகன்=முருகன்) 4-7-6

xxx

ஜூலை  6 செவ்வாய்க்கிழமை

பறவை, பூமியின்  பிரியமான, மேலான இடத்தைக் காக்கிறது  4-5-8

xxx

ஜூலை  7 புதன் கிழமை

அக்னி பகவானுக்கு தேவர்களை எப்படி வணங்க வேண்டும் என்பது தெரியும். அவன் நாம் விரும்பும் செல்வங்களைத் தருகிறான் 4-8-3

xxx

ஜூலை 8 வியாழக்கிழமை

அக்னீ, மர்மத்தில் வைக்கப்பட்டிருக்கும் மகத்தான ஞானத்தை, உண்மையை , தோத்திரத்தை அறிவான். பசுவின் காலடி போல மறைந்திருந்த அறிவை எனக்குப் புலப்படுத்தினான் 4-5-2

ஜூலை  9 வெள்ளிக்கிழமை

அக்கினியே , அருகிலும் தூரத்திலும் உள்ள , பல விதமாகத் தூற்றும் இருவிதத் தீயோர்களை விலக்கவும் ; எங்கள் விருப்பங்களைக் கிரமமாய் நிறைவேற்றவும் – 4-3-14

xxx

ஜூலை  10 சனிக்கிழமை

அக்நியே , வேடர்கள் வலையைப் பரத்துவது போல உன் பலத்தைப் பரப்பு.  யானை மீது செல்லும் அரசனைப் போல பவனி வா ; உன்னுடைய உக்கிர சுவாலையால் அரக்கர்களை எரிக்கவும் 4-4-1

xxx

ஜூலை  11 ஞாயிற்றுக்கிழமை

எங்கள் பகைவர்களை, உறவினர் ஆனாலும் உறவினர் இல்லாவிட்டாலும் அழித்து விடு 4-4-5

xxx

ஜூலை  12 திங்கட்கிழமை

அக்நியே , உன்னுடைய பார்வையானது மமதாவின் குருட்டுப் புதல்வனை  – தீர்க்கதமஸை – துர்பாக்கியத்திலிருந்து காத்தது அவனை அழிக்க விரும்பியவர்கள் தீமை செயலற்றுப்போனது 4-4-13

xxx

ஜூலை  13 செவ்வாய்க்கிழமை

அக்நி தேவனே , கணவனின் பொருட்டு தன்னை அழகிய ஆடைகளால் அலங்காரம் செய்து கொள்ளும் மனைவியைப் போல இந்த வேதியை / அக்கினி குண்டத்தை உனக்காக அலங்கரித்து உள்ளோம் – 4-3-2

xxx

ஜூலை  14  புதன் கிழமை

கறப்பவர்கள் நீர் போல கறக்கும் பால், மர்மத்தில் வைக்கப்பட்டிடிருக்கிறது (விறகில் தீயினன் , பாலில் படு நெய் போல் பரவியவன்- அப்பர் தேவாரம்) 4 -5-8

xxx

ஜூலை 15 வியாழக்கிழமை

பசு கருப்பாக இருந்தாலும் பிரகாசமான, வெண்மையான , சத்துள்ள பாலால் மனிதர்களைக் காக்கிறது. வேள்விக்கு வேண்டிய பாலை அருளுக 4-3-9

xxx

ஜூலை  16 வெள்ளிக்கிழமை

அங்கீரசர்கள் ருதத்தால் / சத்தியத்தால் மலையைப் பிளந்தார்கள் பசுக்களோடு சேர்ந்து போற்றுகிறர்ர்கள் 4-3-11

xxx

ஜூலை  17 சனிக்கிழமை

அக்நி தேவனே, தேவியர் போன்ற நதிகள் , குதிரைகளைப்  போல , பாய்ந்து ஓடுகின்றன இதற்கும் ருதமே/ சாத்தியமே காரணம் – 4-3-12

xxxx

ஜூலை  18 ஞாயிற்றுக்கிழமை

அக்நி தேவனே, நீ எங்களைத் துன்புறுத்துவோரின் வேள்விக்கோ, அல்லது பக்கத்தில் வசிக்கும் வேள்விக்கோ போகாதே -3-13

xxx

ஜூலை  19 திங்கட்கிழமை

அக்நி தேவனே, நேர்மையற்ற என் உறவினர் வீடுகளுக்குப் போகாதே . கபடமுள்ள சகோதரனிடம் எதையும் விரும்பாதே. நாங்கள் நண்பனுடைய, பகைவனுடைய செல்வத்தை அனுபவிக்காமல் இருப்போமாகுக  4-3-13

xxxx

ஜூலை  20 செவ்வாய்க்கிழமை

பொன் மேனி அம்மானை , சத்தியவானை, பூமிக்கும் ஆகாசத்துக்கும் பரவி இருப்பவனை, ருத்திரனை புத்தி தடுமாறி இறப்பதற்குள் போற்றித் துதியுங்கள்  4-3-1

xxxx

ஜூலை  21  புதன் கிழமை

அக்கினியே, நீ அசுரன்!  மிக்க ஆற்றலுள்ளவன். பசுக்களையும் ஆடுகளையும், குதிரைகளையும் இந்த வேள்வி தோற்றுவிப்பதாகுக -4-2-5

xxx

ஜூலை 22 வியாழக்கிழமை

மித்திரனே , வருணனே , கடமையைச் செய்ப்பவனுக்கு சத்தியம் தோன்றுக (அவர்கள் பிரார்த்தனைகள் பலிக்கட்டும்) 4-1-18

xxx

ஜூலை 23 வெள்ளிக்கிழமை

இந்த உலகத்திலே எங்களுடைய முன்னோர்கள் மலையில் பாறைகள் இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த பால்தரும் பசுக்களை வெளிப்படுத்தினார்கள் . இதற்காக இருட்டை அழிக்கும் உஷா தேவியை அழைத்துச் சென்றனர் (காலைப்பொழுதில் பிரார்த்தனை மூலம் உண்மைப் பொருளை  அறிந்தார்கள்)

(பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்து உண்டு – திருமூலர் 4-1-13

xxx

ஜூலை 24 சனிக்கிழமை

அவர்கள் (எங்களுடைய முன்னோர்கள்) மலைகளைப் பிளந்து அக்கினியைப் போற்றினார்கள் ; மற்ற அறிஞர்கள் அவர்களுடைய வீரச் செயல்களை எங்கும் அறிவித்தார்கள்  4-1-14

xxx

ஜூலை 25 ஞாயிற்றுக்கிழமை

பசுக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த  மலை அடைப்பை தெய்வ வாக்கால் பலாத்காரமாகத் திறந்தார்கள் 4-1-15

xxxx

ஜூலை 26 திங்கட்கிழமை

அக்கினியே! தட்சனின் புதல்வியான இளை-யால் உலகத்தின் தந்தையாக ஏற்கப்பட்டாய்.3-27-9

xxx

ஜூலை 27 செவ்வாய்க்கிழமை

அவர்கள் பாற்பசுவின் பூர்வமான நாமத்தை அறிந்தார்கள் அவர்கள் தாயின் மூவேழு உத்தமச் சந் தங்களையும் அறிந்தார்கள் .பின்னர் உஷா தேவியைப் போற்றினார்கள். அவள் சூரியனோடு  புகழுடன்  தோன்றினாள் 4-1-16 (புறநானூறு 166, திருமூலர் திருமந்திரம்)

xxx

ஜூலை  28  புதன் கிழமை

வேள்விக்காக தன்  தலையில்  விறகுக் குச்சிகளைச் சுமந்து வந்து, வியர்வை சிந்த உழைக்கிறானே

 அவனுக்குத்தான் நீ செல்வம் தருகிறாய். அவனுக்குத் தீமை செய்ய விரும்பும் ஒவ்வொருவனிடமிருந்தும் அவனைக் காப்பாயாக 4-2-6

xxx

ஜூலை 29 வியாழக்கிழமை

இரும்பை நெருப்பால் சுத்தப்படுத்தும் கருமானைப்போல கடவுளை வழிபடும் தூயவர்கள் வேள்வித் தீயால் தங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டார்கள் 4-1-17

xxx

ஜூலை  30 வெள்ளிக்கிழமை

ஏழு  ரிஷிகளான நாங்கள் உஷத் காலத்தில் வேள்வித் தீயை உருவாக்குவோம்.அங்கீரசர்களான நாங்கள் ஒளி மயம் ஆவோம். நீர் நிறைந்திருக்கும் மேகத்தைப் பிளப்போம் 4-1-15

xxx

ஜூலை  31 சனிக்கிழமை

காலையிலும் மாலையிலும் உன்னைப்போற்றி உனக்கு அவிர் பலி கொடுப்பவனை தங்கக் கச்சை அணிந்த குதிரை போலுள்ள நீ துன்பத்திலிருந்து மீட்பாயாக .4-2-8

–subham–

tags – ரிக் வேத, பொன்மொழிகள், ஜூலை 2021,  காலண்டர், 

மே மாத (2021) நற்சிந்தனை காலண்டர் (Post.9543)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9543

Date uploaded in London – –28 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

ப்லவ வருஷம் சித்திரை/வைகாசி  மாதம்

31 நீதி வெண்பா மேற்கோள்கள் /பொன்மொழிகள்

பண்டிகை/ விடுமுறை தினங்கள் – மே 1- மே தினம் , 14- அட்சய திருதியை, பரசுராம ஜெயந்தி, ரம்ஜான் , 17-சங்கர ஜெயந்தி,

25-வைகாசி விசாகம், 26-புத்த பூர்ணிமா, காஞ்சி மஹா பெரியவா ஜெயந்தி, சந்திர கிரஹணம்  (அக்கினி நட்சத்திரம் ஆரம்பம்- மே 4, முடிவு-28)

XXXX

ஏகாதசி மே 7, 22/23; அமாவாசை மே 11; பெளர்ணமி 26;

முஹுர்த்த தினங்கள் – 9,14,17, 23,24,28

XxxX

xxx

மே 1 சனிக்கிழமை

மந்திரங்கள் ஐந்தெழுத்துக்கு ஓப்பாகா–

ஆமந்திரம் எவையும் ஐந்தெழுத்தை ஒவ்வாவே

சோமசுந்த ரற்கு என்றே சொல்.

xxx

மே 2 ஞாயிற்று க்கிழமை

பெரியோரைச் சேரின் துன்பம் நீங்கும்; சத் சங்க மஹிமை-‘பெரியோ ரிடம்சேரில் அக்கணமே போமென்று அறி’

xxx

மே 3 திங்கட் கிழமை

நீற்றின் பெருமை-  சீராம் வெண்ணீற்றுத் திரிபுண்டரம் விடுத்தே

பேரான முத்தி பெறவிரும்பல்

xxx

மே 4 செவ்வாய் க்கிழமை

அடியார்கள் தியானத்தில் ஆண்டவர்களை எதிர்பார்ப்பர்–

கந்தமிகும் பூவலரப் பார்க்கும் பொறிவண்டு அரனன்பர்

தேவரவைப் பார்ப்பர் தௌிந்து.

xxx

மே 5 புதன் கிழமை

கற்றவர்க்கு நிகரில்லை–‘கல்லார் பலர்கூடிக் காதலித்து வாழினும்நூல்

வல்லான் ஒருவனையே மானுவரோ’

xxx

மே 6 வியாழ க்கிழமை

சேர்ந்த இடத்தின் பயன்- ‘சந்தனத்தைச் சேர்தருவும் தக்கமணம் கமழும்’

xxx

மே 7 வெள்ளி க்கிழமை

இனிய சொல்லே இன்பம் பயக்கும்–

அன்பறிவு சாந்தம் அருளுடையார் நல்வசனம்

இன்பமிகும் சீதள மாமே

xxx

xxx

மே 8 சனிக்கிழமை

. தீயோர் சொல் மிகவும் வருத்தம்- வெய்யகதிர்

எல்லோன் கிரணத் தெரியினிலும் எண்ணமிலார்

சொல்லே மிகவும் சுடும்.

xxx

மே 9 ஞாயிற்று க்கிழமை

தானம் மூவகை–

தானறிந்தோருக் குதவி தன்னால் அமையும்எனில்

தானுவந்து ஈதல் தலையாமே – ஆனதனால்

சொன்னால் புரிதலிடை சொல்லியும் பன்னாள்மறுத்துப்

பின்னாள் புரிவதுவே பின்.

xxx

மே 10 திங்கட் கிழமை

உயர்ந்தோர் கைம்மாறு கருதார்–

எல்லோர் தமக்கும் இனிதுதவல் அன்றியே

நல்லோர் தமக்குதவி நாடாரே

xxx

மே 11 செவ்வாய் க்கிழமை

நல்லோரை அறிய வாக்கு– வாக்குநயத் தாலன்றி கற்றவரை மற்றவரை

ஆக்கைநயத் தால்அறியல் ஆகாதே

xxx

மே 12 புதன் கிழமை

தீயோர் நண்ணிய நல்லோர்க்கும் தீமையே–

நல்லொழுக்கம் இல்லார் இடம்சேர்ந்த நல்லோர்க்கும்

நல்லொழுக்க மில்லாச்சொல் நண்ணுமே

xxx

மே 13 வியாழ க்கிழமை

உண்மையை சிலரே விரும்புவர்–

சத்தி யம் எக்காலும் சனவிருத்த மாகுமே

எத்தயபொய் யார்க்கும் இதமாகும்

xxx

மே 14 வெள்ளி க்கிழமை

துயருண்டு இல்லத்தில்– மாசுபுரி

மாயா மனைவியராம் மாக்கள் மகவென்னும்

நாயால் கடிப்பித்தல் நாடு.

xxx  

மே 15 சனிக்கிழமை

விருப்பு பல்வகைத்தது–

கல்லார் பகைசேர் கலகம் விரும்புவர்

நல்லார் விரும்புவர் நட்பு.

xxx

மே 16 ஞாயிற்று க்கிழமை

. நீத்தார் நுகர்ப்பொருள் நண்ணலாகாது– கற்றருளை

வேட்ட பெரியோர்  பெருமையெலாம் வேறொன்றைக்

கேட்ட பொழுதே கெடும்.

xxx

மே 17 திங்கட் கிழமை

தீயொழுக்கம் தீமையே நல்கும்–

சீலம் குலம்அடியாள் தீண்டின்கெடும் கணிகை

ஆலிங்கனம் தனநா சமாகும்

xxx

மே 18 செவ்வாய் க்கிழமை

மணமகன் இவனாவான்-

பெண்ணுதவுங் காலைப் பிதாவிரும்பும் வித்தையே

எண்ணில் தனம்விரும்பும் ஈன்றதாய் – நண்ணிடையில்

கூரியநல் சுற்றமும் குலம் விரும்பும் காந்தனது

பேரழுகு தான்விரும்பும் கண்.

xxx

மே 19 புதன் கிழமை

. அடிய வர்பொருள் கவர்தலாகாது–

அந்தோ புரமெரித்த அண்ணலடி யார்பொருள்கள்

செந்தீயினும் கொடிய தீக்கண்டாய்

xxx

மே 20 வியாழ க்கிழமை

தீயோர் கேண்மை தீயவே பயக்கும்–

நிந்தையிலாத் துயர் வரும் நிந்தையரைச் சேரிலவர்

நிந்தையது தம்மிடத்தே நிற்குமே

xxx

மே 21 வெள்ளி க்கிழமை

தீயவர் நற்சொல் ஏற்கார்–

கன்மமே பூரித்த காயத்தோர் தம்செவியில்

தன்மநூல் புக்காலும் தங்காதே

xxx

மே 22 சனிக்கிழமை

நல்லோர் நண்ணம்பற்கு உயிருமளிப்பர்– நூலின் நெறி

உற்றோர் இடுக்கண் உயிர்கொடுத்தும் மாற்றுவரே

மற்றோர் புகல மதித்து

xxx

மே 23 ஞாயிற்று க்கிழமை

இவர்களுக்கு இவையில்லை–

ஆசைக்கில்லையாம் மானம்.

xxx

மே 24 திங்கட் கிழமை

தீயவருக்கு இடம்கொடுக்கக் கூடாது–

நன்றறியாத் தீயோர்க் கிடமளித்த நல்லோர்க்கும்

துன்று கிளைக்கும் துயர்சேரும்

xxx

மே 25 செவ்வாய் க்கிழமை

இதற்கு இதுவழகு–

கண்ணுக்கு இனிய சபைக்குமணி கற்றோனே

xxx

மே 26 புதன் கிழமை

நல்லவர் தீயவர் கல்வியின் பயன் —

வல்லவர்பால் கல்வி மதம்ஆ ணவம்போக்கும்

அல்லவர்பால் கல்வி அவையாக்கும்

xxx

மே 27 வியாழ க்கிழமை

நல்லதாயினும் எண்ணிச்சொல்லுக–

இதமகித வார்த்தை எவர்கேனும் மேலாம்

இதமெனவே கூறிலிதமன்றே

xxx

மே 28 வெள்ளி க்கிழமை

மூவகையினர் ஈகைத்தன்மை—

உத்தமர்தாம் ஈயுமிடத்து ஓங்குபனை போல்வரே

மத்திமர்தாம் தெங்குதனை மானுவரே – முத்தலரும்

ஆம்கமுகு போல்வர் அதமர் அவர்களே

தேம்கதலியும் போல்வார் தேர்ந்து.

xxx

மே 29 சனிக்கிழமை

மூவகையார் தன்மைகள்—

உற்ற மறையகத்தின் உய்க்குமவன் உத்தமனே

மற்றம் மறைபகர்வோன் மத்திமனே – முற்றிழையே

அத்தம் உறலால் புகல்வான் அதமனென

வித்தக நூலோதும் விரித்து

மே 30 ஞாயிற்று க்கிழமை

நல்லதாயினும் எண்ணிச்சொல்லுக–

இதமகித வார்த்தை எவர்கேனும் மேலாம்

இதமெனவே கூறிலிதமன்றே

xxx

மே 31 திங்கட் கிழமை

கற்றவராயினும் தீயோர் தீயவரே–

தீயவர்பால் கல்வி சிறந்தாலும் மற்றவரைத்

துயவரேன்று எண்ணியே துன்னற்க

xxx

BONUS VERSES…………………………………..

அழகைக்கொடுப்பன—

அன்னமனையாய் குயிலுக்கு ஆனவழகு யின்னிசையே

கன்னல் மொழியார்க்கு கற்பாமே – மன்னுகலை

கற்றோர்க்கு அழகு கருணையே ஆசைமயக்கு

அற்றோர்க்கு அழகு பொறையாம்.

xxx

துன்பத்திலும் நல்லவர் நல்லவராவார்–

 நலிந்தாலும் உத்தமர்பால்

நற்குணமே தோன்றும் நயந்து

xxx

tags–  மே மாத,  நற்சிந்தனை,  காலண்டர், 

31 பெரிய புராணப் பொன்மொழிகள் (Post No.8426)

THE ‘GREAT’ FOUR ‘ IN TAMIL WORLD

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8426

Date uploaded in London – 30 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆகஸ்ட் மாத காலண்டர் 2020 (ஆடி -ஆவணி,சார்வரி வருடம்)

திரு ஞான சம்பந்தர் பிறந்தது முதல்,  மூன்றே வயதில் ஞானப் பால் உண்டு, ‘தோடுடைய செவியன்என்று பாடியது வரை, உள்ள நிகழ்வுகளை சேக்கிழார் பெருமான் அழகிய எளிய தமிழில் கவி பாடியுள்ளார். இதோ 31 எடுத்துக் காட்டுகள்

xxx

பண்டிகை தினங்கள்- ஆகஸ்ட் 2 பதினெட்டாம் பெ ருக்கு, ஆடித்தபசு  3- ஆவணி அவிட்டம்,யஜுர் உபா கர்மா , ரக்ஷா பந்தன்; 4- காயத்ரீ ஜபம், ரிக் உபா கர்மா ; 11- கிருஷ்ணன் பிறப்பு; ஜன்மாஷ்டமி ; 15- சுதந்திர தினம்; 22 விநாயக சதுர்த்தி, 31 ஓணம் பண்டிகை

பவுர்ணமி -3, அமாவாசை -18; ஏகாதசி விரத ம் – 15, 29

சுப முகூர்த்த தினங்கள் – ஆகஸ்ட் 21, 23,24, 28,30,31

TAMIL BOY WONDER, MIRACLE BOY, WHO COMPOSED POEMS AT THE AGE OF THREE

ஆகஸ்ட் 1 சனிக்கிழமை

உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவு உலாவிய நீர்மலி வேணியன்

அழகு இல் சோதியன் அம்பலத்து ஆடுவான்

மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்

ஆகஸ்ட் 2 ஞாயிற்றுக் கிழமை

வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்கப்

பூத பரம்பரை பொலியய் புனித வாய் மலர்ந்தழுத

சீதவள வயல் புகலித் திருஞான சம்பந்தர்

பாத மலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம் -1904

ஆகஸ்ட் 3 திங்கட் கிழமை

உளம்கொள் மறை வேதியர்தம் ஓம தூமத்து இரவும்

கிளர்ந்த திருநீற்று ஒளியின் கெழுமிய நண்பகலும்  மலர்ந்து -1909

XXX

ஆகஸ்ட் 4 செவ்வாய்க் கிழமை

மரங்களும் ஆகுதிவேட்கும் தகையஎன மணந்துளதால்  –1911

XXX

ஆகஸ்ட் 5 புதன் கிழமை

தேமருமென் சுரும்பு இசையால் செழும் சாமம் பாடுமால் -1912

XXX

JAINS AND BUDDHISTS WERE SUBDUED BY THE WONDER BOY SAMBANDAR

ஆகஸ்ட் 6 வியாழக் கிழமை

வானமுகில் கூந்தல் கதிர்செய்  வடமீன் கற்பின்

மனை வாழ்க்கைக் குலமகளிர் வளம்பொலிவ மாடங்கள்

XXX

ஆகஸ்ட் 7 வெள்ளிக் கிழமை

மடை எங்கும் மணிக்குப்பை, வயல் எங்கும் கயல் வெள்ளம்

புடை எங்கும் மலர்ப்பிறங்கல், புறம் எங்கும் மகப்பொலிவு

(மணிக்குப்பை- ரத்தினங்கள், கயல் – மீன் , பிறங்கல் – மலை, மகம் – யாகம்)

XXX

ஆகஸ்ட் 8 சனிக்கிழமை

பிரமபுரம், வேணுபுரம் புகலி பெரு  வெங்குரு நீர்

பொரு  இல் திருத் தோணிபுரம்  பூந்தராய்  சிரபுரம்  முன்

வரு புறவம் சண்பை  நகர்  வளர் காழி கொச்சை வயம்

பரவு திரு கழுமலம்  ஆம் பன்னிரண்டு திருப்பெயர்த்தால் -1917

(சீர்காழிக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னரே 12 பெயர்கள்!)

XXX

ஆகஸ்ட் 9 ஞாயிற்றுக் கிழமை

கவுணியர் கோத்திரம்  விளங்கச்

செப்புநெறி வழிவந்தார்  சிவபாத இருதயர் -1918                                                 

XXX

ஆகஸ்ட் 10 திங்கட் கிழமை

பகவதியார் எனப்போற்றும்  பெயருடையார்

கற்பு மேம்படு சிறப்பால் கணவனார் கருத்து அமைந்தார் -1919

XXX

ஆகஸ்ட் 11 செவ்வாய்க் கிழமை

அருக்கன் முதல்  கோள் அனைத்தும் அழகிய  உச்சங்களிலே

……..

திருக் கிளரும் ஆதிரை நாள் திசை விளங்க – 1925

XXX

ஆகஸ்ட் 12 புதன் கிழமை

அண்டர் குலம் அதிசயிப்ப , அந்தணர் ஆகுதி பெருக

வண் தமிழ்செய்  தவம் நிரம்ப மாதவத்தோர் செயல் வாய்ப்ப – 1926

XXX

ஆகஸ்ட் 13 வியாழக் கிழமை

அசைவு இல் செழும் தமிழ் வழக்கே  அயல் வழக்கின் துறை வெல்ல -1927

XXX

ஆகஸ்ட்  14  வெள்ளிக் கிழமை

தவம் பெருக்கும் சண்பையிலே  தா இல் சராசரங்கள் எல்லாம்

சிவம் பெருக்கும் பிள்ளையார்  திரு அவதாரம் செய்தார் -1929

XXX

ஆகஸ்ட் 15 சனிக்கிழமை

சேய பொருள் திருமறையும்  தீந்தமிழும் சிறக்க வரும்

நாயகனைத் தாலாட்டு  நலம் பல பாராட்டினார் – 1947

XXXX

ஆகஸ்ட் 16 ஞாயிற்றுக் கிழமை

‘நாம் அறியோம் பரசமயம்  உலகிற் எதிர் நாடாது

போம் அகல’ என்று அங்கை தட்டுவதும் – 1949

XXX

GODDESS UMA FED HIM WITH HER MILK IN GOLDEN CUP

ஆகஸ்ட் 17 திங்கட் கிழமை

விதி தவறு படும் வேற்றுச் சமயங்கள்  இடை விழுந்து கதி தவழ – 1950

XXX

ஆகஸ்ட் 18 செவ்வாய்க் கிழமை

கிளர் ஒலி கிங்கிணி எடுப்பக் கீழ்மை நெறிச் சமயங்கள்

தளர் நடையிட்டு அறத்  தாமும்  தளர் நடையிட்டு அருளினார் -1953

XXX                                                                              

ஆகஸ்ட் 19 புதன் கிழமை

நீதி முறைச் சடங்கு நெறி  முடிப்பதற்கு நீராடத்

தாதையார் போம் பொழுது  தம் பெருமான் அருள் கூடச்

சோதி  மணி மனை முன்றில்  தொடர்ந்து அழுது  பின் சென்றார் -1959

XXXX

ஆகஸ்ட் 20 வியாழக் கிழமை

பிள்ளையார் தமைக் கரையில் வைத்துத் தாம் பிரிவு அஞ்சித்

தெள்ளுநீர் புகமாட்டார் – 1962

xxx

GOD SIVA SENT THE LITTLE BOY A PALANQUIN FULLY MADE UP OF PEARLS

ஆகஸ்ட் 21  வெள்ளிக் கிழமை

செம்மேனி வெண்நீற்றார்  திருத்தோணி சிகரம் பார்த்து

‘அம்மே அப்பா’ என்று என்று அழைத்தருளி  அழுதருள –1966

XXX

ஆகஸ்ட் 22 சனிக்கிழமை

தொழுகின்ற மலைக்கொடியைப்  பார்த்தருளித் துணை முலைகள்

பொழிகின்ற ‘பல் அடிசில் பொன் வள்ளத்து ஊட்டு’ – என்ன – 1969

XXX

ஆகஸ்ட் 23 ஞாயிற்றுக் கிழமை

உமை அம்மை எதிர் நோக்கும்

கண்மலர் நீர்த் துடைத்தருளி கையில் பொன் கிண்ணம்  அளித்து

அண்ணலை அங்கு அழுகை தீர்த்து அங்கணனார் அருள் புரிந்தார் – 1971

XXX

ஆகஸ்ட் 24 திங்கட் கிழமை

யாவருக்கும் தந்தைத்தாய் எனும் இவர் இப்படி அளித்தார்

ஆவதனால் ஆளுடைய பிள்ளையாராய்  அகில

தேவருக்கும் முனிவருக்கும் தெரிவு  அரிய பொருளாகும்

தாவு இல் தனிச் சிவ ஞான சம்பந்தர் ஆயினார் – 1972

XXX

ஆகஸ்ட் 25 செவ்வாய்க் கிழமை

‘எப்பொருளும் ஆக்குவான் ஈசனே’  எனும் உணர்வும்

அப்பொருள்தான் ஆளுடையார் அடியார்கள் எனும் அறிவும் – 1974

XXX

Miracle Boy Sambandar does Time Travel and brings back a dead girl with 13 year growth from Parallel Universe

ஆகஸ்ட் 26 புதன் கிழமை

சிவபாத இருதயரும்  சிறு பொழுதில் …….

‘யார் அளித்த அடிசில் பால்  உண்டது நீ’ – என வெகுளா 1975

xxxx

ஆகஸ்ட் 27 வியாழக் கிழமை

‘எச்சில் மயங்கிட உனக்கு ஈது இட்டாரைக் காட்டு’ என்று

….

உச்சியினில் எடுத்தருளும் ஒரு திருக்கை விறல் சுட்டி -1976

XXX

ஆகஸ்ட் 28  வெள்ளிக் கிழமை

எல்லை இலா மறை முதல் மெய்யுடன் எடுத்த எழுது மறை

மல்லல் நெடுந்தமிழால்  இம்மாநிலத்தோர்க்கு உரை சிறப்பப் – 1978

XXX

ஆகஸ்ட் 29 சனிக்கிழமை

செம்மை பெற எடுத்த திருத் ‘தோடுடைய செவியன்’  எனும்

மெய்மை மொழித் திருப்பதிகம் பிரமபுரம் மேவினார்

தம்மை அடையாளங்களுடன் சாற்றித் தாதையார்க்கு

‘எம்மை இது செய்த பிரான் இவன் அன்றே’ என இசைத்தார் -1979

xxx

ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக் கிழமை

அருள் கருணைத் திருவாளன்  ஆர் அருள் கண்டு அமரர் எலாம்

பெருக்கவிசும் பினில்ஆ ர்த்துப் பிரசமலர் மலை பொழிந்தார் -1983

XXX

ஆகஸ்ட் 31 திங்கட் கிழமை

கந்தருவர் கின்னரர்கள் கான ஒலிக் கடல் முழக்கும்

இந்திரனே முதல் தேவர் எடுத்து ஏத்தும்  இசை முழக்கும்

அந்தம் இல் பல் கணநாதர்  அர எனும் ஓசையின் அடங்க -1984

Sambandar cures Pandya King

tags— பெரிய புராண, பொன்மொழிகள், ஆகஸ்ட் 2020, மாத, காலண்டர்

–SUBHAM–

மன்மத லீலை பற்றிய 31 பொன்மொழிகள் (Post 8253)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8253

Date uploaded in London – 28 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜூலை 2020 நற்சிந்தனை காலண்டர்; சார்வரி வருடம் ஆனி -ஆடி மாதம்

பண்டிகை தினங்கள் – ஜூலை 4 வியாச பூஜை, குரு பூர்ணிமா , சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம் ; 20-ஆடி அமாவாசை; 24- திரு ஆடிப் பூரம் /ஆண்டாள் ஜெயந்தி; 25- கருட பஞ்சமி; 31- வரலெட்சுமி விரதம்

முகூர்த்த நாட்கள் – ஜூலை 2, 12 ;அமாவாசை – 20, பௌர்ணமி – 4;

ஏகாதஸி விரத நாட்கள் –  1, 16, 30;

ஜூலை 1 புதன் கிழமை

பகட்டான ஆடைகள் காதலர்களைக்  கவரும்.

உஜ்வல வேஷ ரசனா  காமிஜானாக்ருஷ்டயே – சம்ஸ்கிருத பொன்மொழி

Xxxx

ஜூலை 2 வியாழக் கிழமை

மன்மதனின் பாணங்களால் தாக்கப்படாதவர் யார் ?

கம் விடம்பயதி நோ குசுமேஷு ஹு – சுபாஷிதாவளி

Xxxx

ஜூலை 3 வெள்ளிக் கிழமை

மன்மதனை வெல்ல எவராலும் இயலாது

கந்தர்ப்ப தர்ப்பதலனே  ந து கஸ்ஸித் ஈஷஹ – ப்ருஹத் கதா மஞ்சரி

Xxxx

ஜூலை 4 சனிக் கிழமை

மன்மதனை வெல்ல ஒரு சிலரால்  இயலும்

கந்தர்ப்ப தர்ப்பதலனே விரலா மனுஷ்யாஹா- Kahavatratnakaar

xxx

ஜூலை 5 ஞாயிற்றுக் கிழமை

ஊடுதல் காமத்திற் கின்பம் – குறள் 1330

xxx

ஜூலை 6  திங்கட் கிழமை

நீடுக மன்னோ இரா –குறள் 1329

இரவுப் பொழுது நீடிக்கட்டும்

xxxx

ஜூலை 7 செவ்வாய்க் கிழமை

ஊடலில் தோற்றவர் வென்றார் -குறள் 1327

Xxxx

ஜூலை 8 புதன் கிழமை

புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ -குறள் 1323

Xxxx

ஜூலை 9 வியாழக் கிழமை

அறம் , பொருள் ஆகிய இரண்டை விட  ஆசையின் /காமத்தின் பிடியே

வலியது என்பது என் கருத்து – வால்மீகி ராமாயணம் 2-53-9

காம ஏவா ர்த்த தர்மாப்யாம் கரீயாநிதி மே

Xxxx

ஜூலை 10 வெள்ளிக் கிழமை

எவரிடத்தில், எங்கே, காமம் துளிர் விடாமல் இருந்தது?

காமஹ கஸ்ய குதிரை ந ஜாயதே– கதா சரித சாகரம்

Xxxx

ஜூலை 11 சனிக் கிழமை

காமத்தை திருப்தி செய்ய முடியாது

காமம் மன்யேத துஷ்பூரம் – சதோபதேச பிரபந்தம்

Xxxx

ஜூலை 12 ஞாயிற்றுக் கிழமை

ஆசை என்பது வெல்லுதற்கரிய எதிரி

காமாஹா கஷ்டா  ஹி சத்ரவஹ  – கிராதார்ஜுனிய 11-35

Xxxx

ஜூலை 13  திங்கட் கிழமை

காமம் கணிச்சி உடைக்கும் (பெண்மைக் குணங்களை) -குறள்1251

காமம் கோடரி போல உடைத்தெறியும்

Xxxx

ஜூலை 14 செவ்வாய்க் கிழமை

காம நோய் உற்றார் அறிவதொன்று அன்று -குறள் 1255

காமம் வந்தால் அறிவு மழுங்கிவிடும் (Love is Blind)

Xxxx

ஜூலை 15 புதன் கிழமை

யாமத்தும் ஆளும் தொழில் -குறள் 1252

நள்ளிரவிலும் என்னை ஆட்டும் தொழில் காமம்

Xxxxx

ஜூலை 16 வியாழக் கிழமை

பெண்மை உடைக்கும் படை -குறள் 1258

பெண்மைக் குணங்களை அழித்து விடும் படை

Xxxx

ஜூலை 17 வெள்ளிக் கிழமை

இனிது கொல் தாமரைக் கண்ணன் உலகு?

பெண்ணை விட வைகுண்டம் இன்பம் தர முடியுமா?-குறள் 1103

XXX

ஜூலை 18 சனிக் கிழமை

காமம் பிடித்தால் பயமும் போகும், வெட்கமும் போகும்

காமா துராணாம்  ந பயம் ந லஜ்ஜா– விக்ரம சரித 132

Xxx

ஜூலை 19 ஞாயிற்றுக் கிழமை

ஆசையுடையவன் தன்னைப் பற்றியே சிந்திப்பான்

காமி ஸ்வதாம் பஸ்யதி – சாகுந்தலம் 2-2

XXX

ஜூலை 20  திங்கட் கிழமை

காமக் கறை படியாதார் யார்? –  ப்ருஹத் கதா மஞ்சரி

கோ ஹி காமேன ந கலீ க்ருதஹ

XXX

ஜூலை 21 செவ்வாய்க் கிழமை

காமத்தால் எரிச்சல் (Frustration) அடையாதோர் உண்டா ?- கதா ஸைத் சாகரம்

கோ ஹி காமேன ந விடம்ப்யதே

XXX

ஜூலை 22 புதன் கிழமை

காமம் தனது பலனைப் பெற , மக்களைப் பைத்தியமாக்கி விடும்

த்வரயதி ரத்து மஹோ ஜனம் மனோ பூ ஹு – சிசுபாலவாதம்

XXX

ஜூலை 23 வியாழக் கிழமை

காமத்தை வெல்ல முடியாது

துர்நிவாரோ ஹி மன்மதஹ-  ப்ருஹத் கதா மஞ்சரி

XXX

ஜூலை 24 வெள்ளிக் கிழமை

காமத்  தீயை அணைக்க முடியாது – ப்ருஹத் கதா மஞ்சரி

துஷ் சிகித்யஹ ஸ்மரா நலஹ

XXX

ஜூலை 25 சனிக் கிழமை

காமம் போல் எதிரி கிடையாது

ந காம சத்ருசோ ரிபுஹு – யோக வாசிஷ்டம்

XXX

ஜூலை 26 ஞாயிற்றுக் கிழமை

காமமுள்ள பெண் இரு முறை சிந்திக்கமாட்டாள்

ந சைவம் க்ஷமதே நாரீ விசாரம் மார மோஹிதா – கதா ஸைத் சாகரம்

XXX

ஜூலை 27  திங்கட் கிழமை

காமத்தால் தகிப்பவர்க்கு காலம், இடம், குணம் தெரியாது

ந தேச காலவ் ஹி  யதார்த்த  தர்மாவ வேக்ஷதே காமரதிர் மனுஷ்யஹ- வால்மீகி ராமாயணம் 4-33-55

XXX

ஜூலை 28 செவ்வாய்க் கிழமை

வெல்ல முடியாத காமம் பற்றி எச்சரிக்கையாக இருங்கள் – சதோபதேச பிரபந்தம்

பேதவ்யம் துர்ஜயாத் காமா த்

Xxx

ஜூலை 29 புதன் கிழமை

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்

கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு -குறள் 1281

Xxxxx

ஜூலை 30 வியாழக் கிழமை

மலரினும் மெல்லிது காமம் – குறள் 1289

Xxxx

ஜூலை 31 வெள்ளிக் கிழமை

கொண்கன் பழிகாணேன் கண்டவிடத்து -குறள் 1285

கணவனைக் கண்டவுடன் குற்றமெல்லாம் பறந்தோடிப் போய்விடுகிறது

xxxx

ஒரு நாள் ஏழு நாள் போல் செல்லும் – குறள் 1269, 1278

காதலர் இல்லாவிடில் ஒரு நாள் 7 நாள் போல தோன்றுகிறது

Tags —  மன்மதன், லீலை, காமம், ஆசை ஜூலை 2020, காலண்டர்

–subham–

சூரியனுக்கு மகன் சனி! விளக்கிற்கு மகன் கருப்பு மை!! (Post No.7890)

மே மாத 2020  நற்சிந்தனை   காலண்டர் –

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7890

Date uploaded in London – 27 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

வேற்றுமைகள் நிறைந்த, வினோதமான உலகம் பற்றிய 31 பழ மொழிகள்  மே  மாத காலண்டரை அலங்கரிக்கின்றன

ஏகாதசி -3, 18; பௌர்ணமி–7; அமாவாசை–22;

சுப முகூர்த்த தினங்கள் – மே  4,6,13,18,24,27

பண்டிகை/ விடுமுறை நாட்கள் – மே 1 தொழிலாளர் தினம், 4–அக்கினி நட்சத்திர ஆரம்பம், 7 -சித்ரா பௌர்ணமி,  17-தத்தாத்ரேய ஜயந்தி , 28- அக்கினி நட்சத்திர முடிவு.

மே  1 வெள்ளிக் கிழமை

ஸர்வம் பதம் ஹஸ்தி பதே  நிமக்நம் —

ஒரு யானையின் காலடிச்  சுவட்டில்  எல்லா விலங்குகளின் சுவடுகளும் அடங்கி விடும்.

**

மே  2 சனிக் கிழமை

ஸத் க்ருத்ய பூர்வம் பரதோபி பூயதே –  முதலில் உபசரிப்பு , பின்னர் அவமதிப்பு .

**

மே  3 ஞாயிற்றுக் கிழமை

முதல் நாள் தலை வாழை இலை , இரண்டாம் நாள் தையல் இல்லை, மூன்றாம் நாள் கையில , நாலாம்  நாள் தரையில சாப்பாடு

**

மே  4 திங்கட் கிழமை

சிலாயாம்  கமலலோத்பவ  — பாறையில் முளைத்த தாமரை                  

**

மே  5 செவ்வாய்க் கிழமை

சேற்றில் முளைத்த அழகான செந்தாமரை

**

மே  6 புதன் கிழமை

ரோஜாவில் முள்

**

மே  7  வியாழக் கிழமை

ஹஸ்தி ஸந்தே  பிபீலிகா — யானைக் கூ ட்டத்தில்  ஒரே ஒரு எறும்பு

**

மே  8 வெள்ளிக் கிழமை

சூர்யா  பத்யம் சனிர்ஹந்த தீப பத்யம் து  கஜ்ஜலம் — சூரியனுக்கு மகன் சனி!  விளக்கிற்கு மகன் கருப்பு மை!!

**

மே  9 சனிக் கிழமை

சிரோ வேஷ்டனே  நாசிகா ஸ்பர்சஹ –தலையைச் சுற்றி கையை வளைத்து மூக்கைத் தொட்டானாம் .

**

மே  10 ஞாயிற்றுக் கிழமை

தும்பை விட்டு வாலைப் பிடித்தானாம்

**

மே  11 திங்கட் கிழமை

ப்ராதர்சோ க்ருஹே நாஸ்தி, பிராஹ்மணானாம் நிமந்த்ரணம்

–காலைச் சோற்றுக்கே வழியில்லை ; பிராமணர்களை விருந்துக்கு அழைத்தானாம்

**

மே  12 செவ்வாய்க் கிழமை

வாத்தியார் பிள்ளை மக்கு; வைத்தியர் பிள்ளை சீக்கு sick/ நோயாளி .

** 

மே  13 புதன் கிழமை

மாதா தாசி , பித்த தாஸஹ , புத்ரஹ சம்ராட் சிரோமணிஹி

அப்பாவும் அம்மாவும் வேலைக்காரர்கள் , மகனோ மகா ராஜன்

**

மே  14  வியாழக் கிழமை

ராமோ வாசி, ஹ்யசிகி  பார்ஸ்வே

அருமையான பேச்சு, கையிலே வாள் வீச்சு

**

மே  15 வெள்ளிக் கிழமை

அரசனை நம்பி புருஷனைக்  கைவிட்டாளாம்

**

மே  16 சனிக் கிழமை

க்ருஹஸ்தாம் தேவதாம் ஹித்வா பஹிர் சே த்யஸ்ய பூஜனம்

வீட்டிலுள்ள தேவதையை விட்டு விட்டு இடுகாட்டில் பூஜை செய்தனானாம் 

**

மே  17 ஞாயிற்றுக் கிழமை

இடம் வலம் தெரியாதவன் இரண்டாயிரம் பேருக்கு உடற்பயிற்சி கற்றுக்கொடுக்கிறான்

**

மே  18 திங்கட் கிழமை

இடப ராசி கொடுக்கிறது, மேட ராசி கெடுக்கிறது

**

மே  19 செவ்வாய்க் கிழமை

இடித்தவள், புடைத்தவள் இங்கேயிருக்க எட்டிப்பார்த்தவள் கொட்டிக்கொண்டு போனாளாம்.

**

மே  20 புதன் கிழமை

தாய் தவிட்டுக்கு  அழுகையில் பிள்ளை இஞ்சிப் பச்சடி கேட்கின்றது.

**

மே  21  வியாழக் கிழமை

பழுத்த ஓலையைப் பார்த்து குருத்து ஓலை சிரிக்கிறதாம்

**

மே  22 வெள்ளிக் கிழமை

வாய் சர்க்கரை ,கை  கொக்கரை

கொக்கரை = கைத்தாளம்

**

மே  23 சனிக் கிழமை

பேர் பெரிய பேர், குடிக்கப் போனால் நீர் கிடையாது .

**

மே  24 ஞாயிற்றுக் கிழமை

பழி ஓரிடம் , பாவம் வேறிடம்

**

மே  25 திங்கட் கிழமை

அஹாரி  ஸீதா தசகண்டரேன , பத்தஹ பயோதி ரகுநந்தனேன

சீதையைக் கடத்தியது ராவணன் , ராமன் கோபத்தில்  அணைபோட்டது கடலுக்கு.

**

மே  26 செவ்வாய்க் கிழமை

அசாரு சாறுசுக்கினாம் ,  சாரு  துக்காய துக்கினா ம்  —

மகிழ்ச்சியாக இருப்பவனுக்கு கெட்டதும் இன்பமானதாகவே தோன்றும் , அழுமூஞ்சிகளுக்கோ  நல்லதும் துக்கம் தருவதாகவே தோன்றும்.

**

மே  27 புதன் கிழமை

சித்திரைக்கு சித்தப்பா, பெரியப்பா ; வைகாசிக்கு வாங்காணும் , போங்காணும்

**

மே  28  வியாழக் கிழமை

காலில் முள் குத்தினாலும் கண்ணில்தான் வரும் கண்ணீர்.

**

மே  29 வெள்ளிக் கிழமை

கையிலே காசு இல்லை, வாசலில் நாட்டியக்காரி .

நாஸ்தே கபர்திகா கேஹே , த்வாரே ந்ருத்யதி நிருத்திகா.

**

மே  30 சனிக் கிழமை

தோஷம் ததாதி  லேகன்யாயசமர்த்தோ அஸ்தி லேகனே .

எழுத முடியாதவன் பேனாவில் கோளாறு என்றானாம்.

**

மே  31 ஞாயிற்றுக் கிழமை

தாட்தோட்டக்காரனுக்கு தயிரும் சோறும், விசுவாசக்காரனுக்கு வெந்நீரும் பருக்கையும்

tags – சூரியன் , மகன், சனி, மே 2020,, காலண்டர்

Xxxx subham xxxx

டிசம்பர் மாத 2019 ‘நற்சிந்தனை’ காலண்டர் (Post No.7278)

BHARATI AND HIS WIFE CHELLAMMA
GREATEST OF THE MODERN TAMIL POETS- BHARATI

Written by LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 30  NOVEMBER 2019

Time  in London – 6-57 am

Post No. 7278

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

பண்டிகை  நாட்கள்

டிசம்பர் 8- கீதா ஜயந்தி ; 10- கார்த்திகை தீபம் ; 11- பாரதியார் பிறந்த தினம் 12- பாஞ்சராத்ர தீபம் ; 17 –திருப்பாவை, திருவெம்பாவை விழா துவக்கம் ; 25- கிறிஸ்துமஸ்

அமாவாசை -25; பவுர்ணமி -11; ஏகாதசி –8,22

முகூர்த்த நாட்கள் 1, 2, 6,  11, 15.

பாரதியார் பிறந்த மாதமாதலால் 31 பாரதி மேற்கோள்களைக்  காண்போம்

தமிழ் வாழ்க , பாரதி வாழ்க

xxx

டிசம்பர் 1 ஞாயிற்றுக் கிழமை

நம்பினார் கெடுவதில்லை, இது நான்கு மறை தீர்ப்பு

டிசம்பர் 2 திங்கட் கிழமை

ஒன்று பரம்பொருள்  நாம் அதன்மக்கள் , உலகு இன்பக்கேணி

டிசம்பர் 3 செவ்வாய்க் கிழமை

வாழிய செந்தமிழ் , வாழ்க நற்றமிழர்

டிசம்பர் 4 புதன் கிழமை

பன்னரும் உபநிடத நூல் எங்கள் நூலே

பார்மிசை ஏதொரு நூல் இது போலே?

டிசம்பர் 5 வியாழக் கிழமை

இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க

டிசம்பர் 6 வெள்ளிக் கிழமை

தெள்ளு கலைத் தமிழ் வாணி நினக்கு ஒரு விண்ணப்பம் செய்திடுவேன்

எள்ளத்தனைப்பொழுதும் பயனின்றி இராதென் நாவினிலே வெள்ளமெனப் பொழிவாய்

டிசம்பர் 7 சனிக் கிழமை

பாரதநாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்

WORLD BHAGAVAD GITA DAY -8TH DECEMBER

டிசம்பர் 8 ஞாயிற்றுக் கிழமை

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு

டிசம்பர் 9 திங்கட் கிழமை

ஊனம்  ஒன்றும் அறியா ஞான மெய்ப்பூமி

வானவர் விழையும் மாட்சியார்  தேயம்

டிசம்பர் 10 செவ்வாய்க் கிழமை

வெற்றியேயன்றி வேறேதும் பெறுகிலேம்

டிசம்பர் 11 புதன் கிழமை

முன்னர் நமது இச்சையால் பிறந்தோமில்லை

முதல் இறுதி இடை  நமது வசத்தில் இல்லை

டிசம்பர் 12 வியாழக் கிழமை

பொய்க்கும் கலியை நான் கொன்று பூ லோகத்தார்  கண்முன்னே

மெய்க்கும் கிருதயுகத்தினையே கொணர்வேன் தெய்வ விஃதியிதே

டிசம்பர் 13 வெள்ளிக் கிழமை

தர்மமே வெல்லும் எனும் சான்றோர் சொல்லும் பொய்யாமோ

டிசம்பர் 14  சனிக் கிழமை

நமக்குத் தொழில் கவிதை , நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்

டிசம்பர் 15 ஞாயிற்றுக் கிழமை

தனி ஒருவனுக்கு  உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்

டிசம்பர் 16 திங்கட் கிழமை

ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம்  இந்த நாட்டினிலே

AS MINISTER – MANIKKAVASAGAR

AS AN ASCETIC – MANIKKAVASAGAR

டிசம்பர் 17 செவ்வாய்க் கிழமை

எண்ணிய முடிதல் வேண்டும் ,நல்லவே எண்ணல்  வேண்டும்

TIRUPPAVAI, TIRUVEMBAVAI FESTIVAL FROM 17-12-2019

டிசம்பர் 18 புதன் கிழமை

வல்லமை தாராயோ இந்த மாநிலம்  பயனுற வாழ்வதற்கே

டிசம்பர் 19 வியாழக் கிழமை

சாதி இரண்டொழிய வேறில்லை என்றே தமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம்

டிசம்பர் 20 வெள்ளிக் கிழமை

அன்பு  சிவம் உலகத்துயர் யாவும் அன்பினில் போகும்

டிசம்பர் 21 சனிக் கிழமை

மூர்த்திகள்  மூன்று  பொருள் ஒன்று – அந்த மூலப்   பொருள்

ஒளியின் குன்று ; நேர்த்தி திகழும் அந்த ஒளி யை – எந்த நேரமும் போற்று சக்தி என்று

டிசம்பர் 22 ஞாயிற்றுக் கிழமை

வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே

டிசம்பர் 23 திங்கட் கிழமை

வேத நூல்  பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்

பாதமும் பொறுப்பளோ பாரத தேவி

டிசம்பர் 24 செவ்வாய்க் கிழமை

பூமியில் இனி எவர்க்கும் அடிமை செய்யோம்- பரி

பூரணனுக்கே யடிமை செய்து வாழ்வோம்

டிசம்பர் 25 புதன் கிழமை

வாழ்வுமுற்றும் கனவெனக் கூறிய

மறை வலோர்தம் உரை பிழையன்று காண்

டிசம்பர் 26 வியாழக் கிழமை

சாமி நீ சாமி நீ கடவுள் நீயே

தத்வமஸி தத்வமஸி நீயே அஃதாம்

டிசம்பர் 27 வெள்ளிக் கிழமை

அறம் வளர்ந்திடுக மறம் மடிவுறுக

டிசம்பர் 28 சனிக் கிழமை

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்

இனிதாவது எங்கும் காணோம்

டிசம்பர் 29 ஞாயிற்றுக் கிழமை

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்

தமிழ் முழக்கம் செழிக்கச்  செய்வீர்

தேமதுரத்  தமிழோசை உலகமெலாம்

பரவும்வகை  செய்தல் வேண்டும்

டிசம்பர் 30 திங்கட் கிழமை

பண்டைச் சிறுமைகள் போக்கி  என் நாவில் பழுத்த சுவைத்

தெண் தமிழ் பாடல் ஒரு கோடி மேவிடச் செய்குவையே

டிசம்பர் 31 செவ்வாய்க் கிழமை

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்

Xxxx  subham xxxxx

Bonus Quotes

நோவு வேண்டேன், நூறாண்டு வேண்டினேன்,அச்சம்  வேண்டேன் அமைதி வேண்டினேன்

xxx

மனத்திற்  சலனம் இல்லாமல் , மதியில் இருளே தோன்றாமல் .

நினைக்கும்பொழுது  நின் மவுன நிலை வந்திட நீ செ யல்வேண்டும்

xxx

கனக்கும் செல்வம்  நுறு வயது  இவையும் தர

நீ கடவாயே

xxxx

தோகைமேல் உலவும் கந்தன் சுடர்க்கரத்து இருக்கும் வெற்றி

வாகையே சுமக்கும் வேலை வணங்குவது  எமக்கு வேலை

xxx

சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை

xxx

ஓம்சக்தி அருளால் உலகில் ஏறு , ஒரு சங்கடம் வந்தால் இரண்டு கூறு

xxxx

இன்னும் ஒரு முறை சொல்வேன் பேதை நெஞ்சே

எதற்கும் இனி உலைவதிலே பயன் ஒன்றில்லை

xxxx

ஆயிர வருடம்  அன்பிலா அந்நியர் ஆட்சியின் விளைந்த

அல்லல்கள் எண்ணில

–subham