Written by London Swaminathan
Date: 28 October 2017
Time uploaded in London- 7-32 AM
Post No. 4343
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
1.நான் மறை என்றால் நான்கு வேதங்கள்: ருக், யஜூர், சாமம், அதர்வணம்.
2.நான் மறை என்றால் – சொல்ல வரும் விஷயங்களை நேரில் சொல்லாமல் மறை பொருளில் (SYMBOLIC LANGUAGE, CODED LANGUAGE, SECRET LANGUAGE) நவில்வது என்று பொருள்; மறை = மறைத்துச் சொல்லுதல்
3.நான் மறை என்றால் – உலகம் அறியாத- மறை பொருளை– இறைவனைப் பற்றிச் (OMNIPRESENT, OMNISCIENT, OMNIPOTENT FORCE) சொல்லும் நால் வேத மந்திரங்கள்.
4.நான் மறை என்றால்- இந்த மந்திரங்களை மூன்று ஜாதியினர் மட்டுமே — அந்தணர், அரசர், வணிகர்– ஆகிய மூன்று ஜாதியினர் மட்டுமே அறியலாம் பிறருக்கு அறிய முடியாதபடி– அதாவது மாக்ஸ்முல்லர், கால்டுவெல் போன்ற மிலேச்சர்களுக்குத் தெரிவிக்கக்கூடாததாக மறைத்து வைக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் பிராமணர்கள், வெள்ளைக்கார பறங்கித் தலையர்க்கு வேதம் கற்றுததர மறுத்தனர். பின்னர் பேரசைக்காரப் பார்ப்பனர்கள் சிலர் அவர்களுக்கு சம்ஸ்கிருதமும் வேதமும் கற்பித்தனர்.
5.நான் மறை என்றால் “நான்” என்னும் அஹம்காரம் “மறை”யும் பொருளைச் சொல்லும் உபநிஷதங்கள் அடங்கிய தொகுதி- அதாவது அதுவே வேதத்தின் அந்தம் (முடிபு, துணிவு)- வேதாந்தம்!
யான் எனது என்னும் செறுக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் (குறள் 346)
யான்= அஹம்+காரம் (அஹம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு தமிழில் நான்)
எனது= மம+காரம் ( மம என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு “என்”னுடையது என்று பொருள்.
நான் மறைகளும் புரிந்துவிட்டதா?
–சுபம்-