‘மேலைச் சிதம்பரம்’ பேரூரில் தாண்டவமாடிய பட்டீசுரன்! (Post .7670)

Written  by  S NAGARAJAN

Post No.7670

Date uploaded in London – 9 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Big Thanks for your pictures.

மேலைச் சிதம்பரம் என்று புகழ் பெற்ற பேரூரில் தாண்டவமாடிய பட்டீசுரன்!

ச.நாகராஜன்

மேலைச் சிதம்பரம் என்று புகழ் பெற்றது பேரூர். அங்கு கோமுனி, பட்டி முனி காண மரகதவல்லி சமேதரான பட்டீசுரன் தாண்டவமாடினார். இப்படிப்பட்ட பெருமையைக் கொண்ட பேரூர் உள்ளது கொங்கு மண்டலத்திலேயாம் என்று கூறிப் பெருமைப் படுகிறது கொங்கு மண்டல சதகம்.

பாகான சொல்லிதென் பேரூர் மரகதப் பார்ப்பதிமா

நாகா பரணர்பட் டீசுரர் பாதத்தை நம்பியெங்கும்

போகாத கோமுனி பட்டி முனிக்குப் பொதுநடஞ்செய்

வாகான மேலைச் சிதம்பர முங்கொங்கு மண்டலமே

இது கொங்கு மண்டல சதகத்தில் வரும் 17வது பாடல்.

பேரூர் உள்ளது ஆறை நாடு. பேரூர்ப் புராணம் கூறும் செய்யுள் இது:

கோமுக முனியும்பட்டி முனிவனுங் குறுகியேத்த

வேமுறு பூதநாத ரிடனறத் துவன்றிப் போற்ற

காமுறு விசும்பிற் றேவர் கடிமலர் மாரி தூர்ப்பத்

தீமுழங் கங்கைவள்ள றிருநடன நவிற்றலோடும் (பேரூர்ப் புராணம்)

இந்த வரலாற்றைச் சுந்தர மூர்த்தி நாயனாரின் தேவாரத்திலும் காணலாம் :

ஏழாம் திருமுறையில் கோயில் பகுதியில் உள்ள பத்துப் பாடல்களில் பத்தாவது பாடலாக அமைவது இது:

பார் ஊரும் அரவு அல்குல் உமைநங்கை அவள் பங்கன் பைங்கண் ஏற்றன்

ஊர் ஊரான் தருமனார்தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்

ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீ கொங்கில் அணி காஞ்சிவாய்ப்

பேரூரர் பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தே பெற்றாம் அன்றே.

கொங்குமண்டல சதகத்தில் அடுத்த பாடலாக மலரும் 18வது பாடல் பட்டீசுரன் பள்ளனான வரலாறைக் கூறுகிறது இப்படி:

கடுவாள் விழியினைப் பாரூர்ப் பரவை கலவிவலைப்

படுவார் தமிழ்ச்சுந் தரர்பாடற் கீயப் பரிசின்மையால்

நெடுவாளை பாயும் வயலூடு போகி  நெடியபள்ள

வடிவாகி நின்றதும் பேரூர்ச் சிவன்கொங்கு மண்டலமே

இதன் பொருள் :- சுந்தரர் நம்மைப் பாடி வருவார்; அவருக்குக் கொடுக்கப் பரிசு (பொன்) இல்லையே என்று ஒளிந்தவர் போலப் பட்டிப் பெருமான், பள்ள வடிவு கொண்ட பேரூரும் கொங்குமண்டலத்தில் உள்ளதேயாம்.

இதைப் பேரூர்ப் புராணம் இப்படி விவரிக்கிறது:

உயர்ந்தவுந்தாமே யிழிந்தவுந்தாமே யெனமறையோல மிட்டுரைக்கும்

வியந்ததஞ்செய்கை யிரண்டினுளொன்று வேதியனாகிமுன் காட்டிப்

பயந்தரு றைவர் மற்றதுங்காட்டப் பள்ளனாய்த் திருவிளையாட்டால்

நயந்தபூம் பணையின் வினைசெய வன்பர் நண்ணிமுனண்ணிரம்மா

கொங்கு மண்டல சதகம் தனது நூறு பாடல்களில், பட்டீசுரத் திருவிளையாடலுக்கு மட்டும் மூன்று பாடல்களை ஒதுக்குகிறது. (பாடல்கள் 17,18,19). இந்த மூன்றையும் நமது கொங்கு மண்டல சதகத் தொடரில் விரிவாகப் பார்த்து விட்டோம்.

***

எதிரிகளை ஒழிக்க அதர்வண வேதத்தை பயன்படுத்து- மநு (Post 7645)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7645

Date uploaded in London – 3 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

 மநு நீதி நூல் – பகுதி 48

மானவ தர்ம சாஸ்திரம் என்னும் மனு நீதி நூலில் வெற்றிகரமாக  பத்து அத்தியாயங்களை முடித்து 11ஆவது அத்தியாயத்தில் நுழைகிறோம். முதல் நூறு ஸ்லோகங்களைக் காண்போம். இந்த அத்தியாயம் பிராயச்சித்தம்  என்னும் கழுவாய் பற்றிப் பேசுகிறது. முக்கியமான விஷயம் இதில் பெரும்பாலனவை பிராமணர்களுக்கானது .

முதலில் சுவையான விஷயங்கள் புல்லட் (bullet points)  பாயிண்டுகளில் :–

ஸ்லோகம் 11-76 TO 78

சரஸ்வதி நதியில் நீரோட்டத்துக்கு எதிராக நதி உற்பத்தியாகும் இடம் வரை நடக்கவேண்டும் என்பது ஒரு தண்டனை/ பிராயச் சித்தம். இதிலிருந்து இவர் சிந்து- சரஸ்வதி நாகரீக காலத்தவர் அல்லது அதற்கு முந்தியவர் என்பது தெளிவாகிறது. ஆகவே இவர் பாபிலோனிய ஹமுராபிக்கும் முந்தையவர். உலகத்தில் முதல் முழு நீள சட்டப் புஸ்தகத்தை எழுதிய நிபுணர். ஆனால் எல்லா புராணங்களையும் அப்டேட் UDATE  செய்தது போலவே மனு நீதியையும் புதுப்பித்திருக்கின்றனர். வேதம் சொல்லிக்கொண்டே நுறு யோஜனை / 1000 மைல் நடக்க வேண்டும் என்பது இன்னும் ஒரு பிராயச் சித்தம். இவை அனைத்தும் பிரமணர்களுக்கான கடும் தண்டனைகள். tamilandvedas.com, swamiindology.blogspot.com

தீவிர பிராமண ஆதரவு சுங்க வம்சம் (Sunga Dynasty) வரை அப்டேட் UPDATE ஆனதால் பிராமண ஆதரவு ஸ்லோகங்களையும் காண முடிகிறது. 

ஸ்லோகம் 11-91/99

குடிகார பிராமணர்களுக்கு கடும் தண் டனை விதிக்கிறார் மநு .

ஸ்லோகம் 11-33

பிராமணர்களின் ஆயுதம் வாக்கு தான் ; அவர்கள் அதர்வ வேதத்தைக் கொண்டு எதிரிகளை விழுத்தட்டலாம் என்கிறார் . எதிரிகளை ஒழிக்க அதர்வண வேதத்தைப் பயன்படுத்து என்று அறிவுறுத்துகிறார்.

ஸ்லோகம் 11-65 & 11-69

மரங்களை வெட்டுவது தவறு; ஒட்டகம் கழுதை போன்ற பிராணிகளைக் கொல்வது தவறு என்கிறார். இதிலிருந்து 3000 ஆண்டுகளுக்கு  முன்னரே புறச் சூழல் பற்றி கவலைப்பட்டதும், அஹிம்சையைப் பின்பற்றுவதே நல்லது என்ற உணர்வும் இருந்ததை அறியலாம்.

ஸ்லோகம் 11-15

திருவள்ளுவர் சொல்லுவது (குறள்  1077, 1078) போல மனுவும் கருமிகளின் கையை முறுக்கி முகவாய்க் கட்டையில் குத்து விட்டுப் பொருட்களை பறித்து நல்ல பணிகளுக்கு கொடுப்பதில் தவறு இல்லை என்கிறார் . அதாவது பணக்கரர்களைக் கொள்ளையிட்டு ஏழைகளுக்கு கொடுத்த ராபின்ஹுட் (Robin Hood) ஆக மாறலாம் என்பார் tamilandvedas.com, swamiindology.blogspot.com

 .

பாவ மன்னிப்பு (Confession) ஓ.கே. என்று ஆதரவு தருகிறார். பலர் முன்னிலையிலும் தவற்றை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டால் விட்டுவிடலாம் என்பது மனுவின் மனிதாபிமாதைக் காட்டுகிறது.

ஸ்லோகம் 11-1/2 ஒன்பது விதமான பிராமணர் களுக்கு உதவி செய்யவேண்டும் என்று ஆதரவு தருகிறார்.

ஸ்லோகம் 11-55 பஞ்ச மஹா பாதகங்கள் என்ன என்பதை விளக்குகிறார்.

ஸ்லோகம் 11-49 to 11-54 என்னென்ன பாவங்களுக்கு என்னென்ன நோய்கள் வரும் என்று பட்டியல் தருகிறார். தற்கால டாக்டர்கள் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இது சரஸ்வதி நதி தீர நாகரீக நம்பிக்கை என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும்.

பசுவைக் (11-60) கொன்றால் , பிரமணனைக் (11-55) கொன்றால், தங்கத்தைத் திருடினால் (11-49)  , தகாத முறையில் பாலியல் உறவு கொண்டால் என்ன தண்டனை என்றும் விளம்புகிறார் . ஒரு தண்டனை 12 ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும் மண்டை ஓட்டுக்(11-73)  கொடியுடன்!

11-36 யாருக்குப் புரோகிதம் செய்யும் தகுதி உண்டு என்றும் வரையறுக்கிறார். tamilandvedas.com, swamiindology.blogspot.com

11-25 பிராமணன் யாகத்துக்கான பொருளுதவியைத் தவறாகப் பயன்படுத்தினால் பிணம் தின்னும் கழுகாகவோ காகமாகவோ பிறப்பான் என்று எச்சரிக்கிறார்

subham

சரஸ்வதி தேவியை வணங்கத் துவங்கிய சுல்தான் இப்ராஹீம்!(Post 7644)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7644

Date uploaded in London – – 3 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

பீஜப்பூரை ஆண்ட சுல்தான் (இரண்டாம்) இப்ராஹீம் சிறந்த சரஸ்வதி பக்தன். சிறந்த கலைஞன். இசையில் தேர்ந்தவன்.

சுல்தான் இப்ராஹீம் அடில்ஷா II என்று வரலாற்றில் குறிப்பிடப்படுபவன். இவனது காலம் 1580-1627.

அவன் ஏன் சரஸ்வதி தேவியை வணங்கத் துவங்கினான் என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.

முக்கியமான காரணத்தை முதலில் பார்ப்போம்.

சுல்தான் இப்ராஹீம் (II) பீஜப்பூரை ஆண்ட காலத்தில் ஒரு யோகி வாழ்ந்து வந்தார். அவர் மீது சுல்தானுக்கும் மதிப்பும் மரியாதையும் நிரம்ப உண்டு. இதற்கான முக்கியமான காரணம் சுல்தானின் வாழ்க்கையில் நடந்த ஒரு சோக சம்பவத்தை அவர் சந்தோஷ சம்பவமாக மாற்றியது தான்!

pictures from metropolitan museum of art

சுல்தானுக்கு ஒரு  அருமை மகள் உண்டு. அந்த மகளின் மீது சுல்தானுக்கு அளவற்ற பாசம். ஒரு நாள் திடீரென்று அந்த அருமை மகள் இறந்து விட்டாள். சுல்தான் துக்கத்தால் கதறி அழுதான். இதைக் கேள்விப்பட்ட யோகி உடனடியாக அவனிடம் வந்தார். சுல்தானிடம் சரஸ்வதி தேவியின் உருவச்சிலை உடனடியாக அந்த அறைக்குள் கொண்டுவரப்பட்டு இறந்த மகளின் சவத்தையும் அந்த அறைக்குக் கொண்டுவர வேண்டும் என்றார். இப்படிச் செய்தால் சுல்தானின் மகள் உயிர் பிழைப்பாள் என்றார் அவர். உடனடியாக சுல்தான் அப்படியே செய்தான்.யோகி சிறந்த இசைக் கலைஞர்.  அவர் ஒரு ராகத்தைப் பாட ஆரம்பித்தார். அந்த ராகம் பாதி முடியும் முன்னரேயே இறந்த மகளின் உடலில் அசைவுகள் ஏற்பட ஆரம்பித்தன. ராகம் முடியும் போது  முற்றிலுமாக சுல்தானின் மகள் எழுந்து விட்டாள்.

சுல்தானும் அரசவையில் அங்கம் வகித்தோரும் பிரமித்தனர். யோகியின் ஆற்றலுக்கு அவர்கள் தலை வணங்கினர்.

அன்றே சரஸ்வதியின் திருவுருவச் சிலையை அரண்மனையில் பிரதிஷ்டை செய்த சுல்தான் ஹிந்துக்களின் பூஜை முறைப்படி சரஸ்வதிக்கு பூஜை செய்ய ஆரம்பித்தான்.

இப்ராஹீம் அனைத்து ராகங்களிலும் வல்லவன் என்பதால் அவன் சரஸ்வதியின் முன் பாடுவான்.

அரசவைக் கலைஞர்களும் பாடுவர்.

சுல்தானுக்கு போர், படையெடுப்பு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. ஒற்றுமையான அமைதியான வாழ்வையே அவன் விரும்பினான். அதை மக்களிடம் உறுதிப்படுத்தினான்.

விஜயபுரி என்ற நகரத்தின் பெயரை வித்யாபுரி என்று அவன் மாற்றினான்.

ஹிந்துக்களின் பழக்க வழக்கங்களை மதிக்க வேண்டும் என்று கூறிய அவன் அதைத் தன் வாழ்விலும் கடைப்பிடிக்க ஆரம்பித்தான்.

அவனது கவிஞரான ஜுஹாரி (Zuhari) இயற்றிய கிதாப்-இ-நௌரஸ் (‘Kitab-i-Naurs) என்ற நூல் பிஸ்ம் அல்லாவைத் (Bism Allah) தொழுது ஆரம்பிக்கவில்லை.

மாறாக, ஹிந்து கவிஞர்கள் நூலின் ஆரம்பத்தில் துதிக்கும் கணபதி துதியைக் கொண்டு ஆரம்பிக்கிறது!

சிவ பிரான், பார்வதி,பைரவர் உள்ளிட்ட தெய்வங்கள் நூலெங்கும் காணப்படுகின்றனர்.

என்றாலும் கூட சுல்தானுக்கு இஷ்ட தெய்வம் சரஸ்வதி தான்!

நா வன்மை, கவிதையின் தாய், அறிவுத் தெய்வம், கலைகளின் இருப்பிடம், சாஸ்திர புராண நாடக சஞ்சாரிணீ – ஆகிய சரஸ்வதி தேவியை அவன் ஆராதித்தான்.

இது அவனது தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டும் நடக்கவில்லை.

அரசாங்க ஆவணங்களிலும் பிரதிபலித்தது.

பெர்சிய மொழியிலும் மராத்திய மொழியிலும் எழுதப்படும் ஆவணங்கள், அஜ் பூஜா ஸ்ரீம் சரஸ்வதி (Ai puja shrim Saraswathi) என்று ஆரம்பிக்கப்பட்டது.

ஜுபைரி (Zubairi) என்ற வரலாற்று ஆசிரியன், தான் எழுதிய நூலான பசாசின் அல்-சுலாடின் (Basatib al-Sulatin) என்ற நூலில்,” சுல்தான் சிறந்த இசைக் கலைஞர்களுடன் நெருக்கமாகப் பழகி வந்தான். அவர்கள் அனைவரும் சரஸ்வதி தேவியை வழிபடுபவர்கள். ஆகவே சுல்தான் இப்ராஹிமும் சரஸ்வதி தேவி பால் ஈர்க்கப்பட்டான்” என்று எழுதியுள்ளான்.

இதற்கான இன்னும் பல காரணங்களைத் தங்கள் மனம் போல பல எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர்.

இன்னும் ஒரு விஷயம். சுல்தானின் மகளை உயிர்ப்பித்த ருக்மாங்கத பண்டிதர் பற்றிய விஷயம் அது.

சுல்தான் ஹிந்து தெய்வத்திற்கு கொடுத்த மரியாதையையும் பக்தியையும் கண்டு பொறாத அப்துல் ஹாஸன் (Abdul- Hasan) என்பவர், தான் பீஜப்பூருக்கு வந்தவுடன் இதை மாற்ற வேண்டுமென்று நினைத்தார். அவரிடம் ஏதாவது செய்ய வேண்டுமென்று பலரும் சொல்லவே, சுல்தானின் கவனம் யோகியிடமிருந்து தன் மீது திரும்பவேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்களா என்று அவர் கேட்க அவர்கள் ஆமாம், ஆமாம் என்றனர்.

 உடனே அப்துல் ஹாஸன் தன் உருவத்தை ஒரு மண் பாண்டத்தில் வரைந்து அவர்களில் ஒருவனிடம் கொடுத்து, மறுநாள் யோகியைப் பார்க்க சுல்தான் செல்லும் போது அதை அவனிடம் காண்பிக்குமாறு கூறினார். மறுநாள் சுல்தான் வரும் போது அவரிடம் ஹாஸனின் படத்தைக் காண்பிக்கவே அவர் யோகியிடம் செல்லாமல் ஹாஸன் இருக்குமிடம் நோக்கிச் சென்றார்.

அங்கு ஹாஸன் சுல்தானை நோக்கி, “உன் மனம் இறைவனிடம் நிலை பெறட்டும் “ என்று பல்வேறு விதமாக உபதேசித்தார்.

யோகியை வரவழைத்த அப்துல் ஹாஸன் அவர் முன்னர் மழை நீரை பாலும் நெய்யுமாக மாற்றிக் காண்பிக்க ருக்மாங்கத பண்டிதர் ருக் அல் டின் (Rukn al-Din) என்று தன் பெயரை மாற்றிக் கொண்டு இஸ்லாமுக்கு மாறினார்.

இப்படி ஒரு கதை உண்மையா என்று வரலாற்று ஆசிரியர்கள் சந்தேகப்படுகின்றனர். அப்துல் ஹாஸன் யோகியை விட உயர்ந்தவர் என்ற அபிப்ராயத்தை உருவாக்க இப்படி ஒரு கதை உருவாக்கப்பட்டது என்பது அவர்கள் கருத்து.

சிந்தித்துப் பார்த்தால், இறந்த உயிரை எழுப்பிய யோகி பெரியவரா, மழை நீரை பாலாக மாற்றிக் காண்பித்த ஹாஸன் பெரியவரா என்று கேட்டால் சிறு குழந்தை கூட என்ன பதிலைச் சொல்லும் என்பது புலப்படும்.

தனது இறுதி வரை சரஸ்வதி தேவியின் பக்தனாக சுல்தான் இப்ராஹீம் திகழ்ந்தான் என்பதும் குறிப்பிடத் தகுந்தது.

*

சரஸ்வதி தேவியை வணங்கிய சுல்தான் இப்ராஹீம் போன்ற ஏராளமான வரலாறுகள் இந்திய சரித்திரத்தில் உண்டு. அதிகாரபூர்வமான நூல்கள் தரும் வரலாறுகள் இவை.

இவற்றை நாம் கேள்விப்படுவதே இல்லை.

காரணம் செகுலரிஸம்.

செகுலரிஸம் என்றால் இன்றைய செகுலரிஸ்டுகளின் உபதேசப்படி, ‘ஹிந்து மதத்தை இழிவு படுத்தும் எதையும் உடனடியாகப் பரப்புவது; அதற்குப் பெருமை சேர்க்கும் எதையும் மறைத்து விடுவது; இஸ்லாமிய, கிறிஸ்தவர்களை உண்மைக்கு மாறாகக் கூடப் புகழலாம்; ஆனால் ஒரு போதும் உண்மையான விஷயமாக இருந்தால் கூட இகழக் கூடாது’ என்பது தான்!

இது மாற வேண்டும் இல்லையா, சுல்தான் இரண்டாம் இப்ராஹீம் வாழ்க்கைச் சம்பவம் போல உள்ளவற்றை ஹிந்துக்கள் உணர வேண்டும்; பரப்ப வேண்டும்!

****

ஆதார நூல் : Sufi’s of Bijapur 1300-1700 by Richard Maxwell Eaton, 1978 publication

நன்றி : Richard Maxwell Eaton சுல்தான்படம் – நன்றி – ரிச்சர்ட் மாக்ஸ்வெல் ஈடன்

tags சுல்தான் இப் ராஹிம் , அடில்ஷா,பீஜப்பூர், சரஸ்வதி

31 முக்கிய சித்தர் பாடல்கள் (Post No.7634)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7634

Date uploaded in London – 29 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

மார்ச் 2020 காலண்டர்

(மாசி மாதம் -விகாரி வருஷம்)

பண்டிகை நாட்கள் – மார்ச் 8 உலக மகளிர் தினம்; 8 மாசி மகம் 9 ஹோலி/காம தஹனம்; 14-காரடையான் நோன்பு; 25-யுகாதி புத்தாண்டு தினம்.

அமாவாசை-24; பௌர்ணமி-9; ஏகாதசி -5/6, 20

முகூர்த்த தினங்கள்– மார்ச் 5, 6, 12, 13, 22, 30

நந்த வனத்திலோர் ஆண்டி –  – அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி

கொண்டு வந்தானொரு தோண்டி- அதைக்

கூத்தாடிக்  கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி

—கடுவெளிச் சித்தர்

மார்ச் 1 ஞாயிற்றுக் கிழமை

நெளிந்து நெளிந்து  நெளிந்து   ஆடு பாம்பே சிவன்

சீர்பாதங் கண்டு தெளிந்து ஆடு பாம்பே!

–பாம்பாட்டிச் சித்தர்

XXX

மார்ச் 2 திங்கட்  கிழமை

நாதர் முடிமேல் இருக்கும் நாகப் பாம்பே

நச்சுப் பையை வைத்திருக்கும் நல்ல  பாம்பே

பாதலத்திற் குடிபுகும் பைங்கொள்  பாம்பே

பாடிப்பாடி நின்று விளையாடு பாம்பே !

XXx

மார்ச் 3 செவ்வாய்க் கிழமை

எட்டு மலைகளைப்  பந்தாய் எடுத்து எறி குவோம்

 ஏழு கடலையும் குடித்து ஏப்பமி டுவோம்

மட்டுப்படா மணலையும் மதித்து விடுவோம்

மகராசன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே!

XXX

மார்ச் 4 புதன் கிழமை

மூண்டெரியும் அக்கினிக்குள் மூழ்கி வருவோம்

முந் நீருள் இருப்பினும் மூச்சடக்குவோம்

தாண்டி வரும் வன்புலியைத் தாக்கி விடுவோம்

தார் வேந்தன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே!

XXX

மார்ச் 5 வியாழக் கிழமை

வேந்தன் செய்த சிருட்டிகள் போல வேறு செய்குவோம்

வேதனையும் எங்கள் கீழே மேவச் செய்குவோம்

நாதனுடன் சமமாக நாங்களும் வாழ்வோம்

நாங்கள் செய்யும்  செய்கை இதென்று ஆடுபாம்பே!

XXX

மார்ச் 6 வெள்ளிக் கிழமை

அறுபத்து நாலு கலையாவும் அறிந்தோம்

அதற்கு மேல் ஒரு கலையான தறிந்தோம்

மறுப்பற்றுச் சற்றுமில்லா மனமும் உடையோம்

மன்னனே ஆசான் என்று ஆடுபாம்பே !

XXX

மார்ச் 7 சனிக் கிழமை

சீறுபு லி யானை யாளி சிங்க முதலாய்ச்

சிற்றடிக்குக் குற்றேவல் செய்யச் சொல்லுவோம்

வீறு பெருங் கடவுளை எங்களுடனே

விளையாடச்  செய்குவோம் என்று ஆடுபாம்பே !

XXX

மார்ச் 8 ஞாயிற்றுக் கிழமை

யானை சேனை தேர் பரியாவும் அணியாய்

யமன் வரும்போது துணை யாமோ அறிவாய்

XXX

மார்ச் 9 திங்கட் கிழமை

முக்கனியும் சர்க்கரையும் மோதகங்களும்

முதிர் சுவைப் பண்டங்களும் முந்தி உண்டவாய்

மிக்க உயிர் போன பின்பு  மண்ணை விழுங்க

மெய்யாகக் கண்டோம் என்று ஆடுபாம்பே !

XXX

மார்ச் 10 செவ்வாய்க் கிழமை

வெயில் கண்ட மஞ்சள் போன்ற மாதர் அழகை

விரும்பியே மேல் விழுந்து மேவு மாந்தர்

ஒயில் கண்டே இலவு காத்து ஓடும்  கிளி போல்

உடல் போனால் ஓடுவாரென்று என்று ஆடுபாம்பே !

XXX

மார்ச் 11 புதன் கிழமை

மயில் என்றும் குயில் என்றும் மாணிக்கம் என்றும்

மானே என்றும் தேனே என்றும்  வான் அமுதென்றும்

ஒயிலான வன்ன மயிற் கொத்தவளென்றும்

ஓதாமற் கடிந்தோம் என்று ஆடுபாம்பே !

XXX

மார்ச் 12 வியாழக் கிழமை

நாறு மீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்

நாளும்  கழுவினும் அதன் நாற்றம் போமோ

கூறும் உடல் பல நதியாடிக் கொண்டதால்

கொண்ட மலம் நீங்கா தென்று ஆடுபாம்பே !

XXX

மார்ச் 13 வெள்ளிக் கிழமை

கோபம் என்னும் மதயானை கொண்ட மதத்தைக்

கூர்கொள் யுத்தி அங்குசத்தால் கொன்று விட்டேங்காண் 

தீபமென்னுஞ் சிற்சொரூபச் செய்ய பொருளை

சேர்ந்துறவு கொண்டோம் என்று ஆடுபாம்பே !

Xxx

மார்ச் 14 சனிக் கிழமை

மனமென்னும் குதிரையை வாகனமாக்கி

மதியென்னும் கடிவாளம் வாயிற் பூட்டி

சினமென்னும் சீனியின் மேற் சீராய் ஏறித்

தெளிவிடம் சாரி விட்டு ஆடுபாம்பே

Xxx

மார்ச் 15 ஞாயிற்றுக் கிழமை

உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி ?

உலகத்தின் மூடர்களுக்கு உண்டோ உணர்ச்சி ?

புளியிட்ட செம்பிற் குற்றம் போமோ ?அஞ்ஞா னம்?

போகாது மூடருக்கென்று ஆடுபாம்பே !

xxx

மார்ச் 16 திங்கட்  கிழமை

சதுர் வேதம் ஆறுவகை சாத்திரம் பல

தந்திரம் புராணங்களை சாற்றும்  ஆகமம்

விதம் விதமானவான  வேறு நூல்களும்

வீணான நூல்களே என்று ஆடுபாம்பே !

Xxx

மார்ச் 17 செவ்வாய்க் கிழமை

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கிங் கெய்திடாது போல்

எண்திசை திரி  ந்துங் கதி எய்தல் இல்லையே

நாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்தே

நாதன் பாதம் காணார்கள் என்று ஆடுபாம்பே !

xxxx

மார்ச் 18 புதன்  கிழமை

ஆயிரத்தெட்டித ழ் வீட் டில்  அமர்ந்த சித்தன்

அண்டமெல்லாம்  நிறைந்திடும் அன்புதச் சித்தன்

காயமில்லாது ஓங்கி வளர் காரண ச் சித்தன்

கண்ணுள் ஒளியாயினான் என்று ஆடுபாம்பே !

Xxx

மார்ச் 19 வியாழக் கிழமை

கண்டவர்கள் ஒருக்காலும் விண்டிடார்களே

விண்டவர்கள் ஒருகாலும் கண்டிடார்களே

கொண்டகோலம் உள்ள வர்கள்  கோள் நிலை காணார்

கூத்தாடி கூத்தா டியே நீ ஆடுபாம்பே !

Xxx

மார்ச் 20 வெள்ளிக் கிழமை

தந்திரம் சொல்லுவார் தம்மை அறியார்

தனி மந்திரஞ் சொல்லுவார் பொருளை அறியார்

Xxx

மார்ச் 21 சனிக் கிழமை

ஓம்காரக்  கம்பத்தின் உச்சி மேலே

உள்ளும் புறம்பையும் அறிய வேண்டும்

ஆங்காரக் கோபத்தை அறுத்து விட்டே

ஆனந்த வெள்ளத்தைத் தேக்கிக்கொண்டே

Xxxx

மார்ச் 22 ஞாயிற்றுக் கிழமை

சூத்திரக் குடத்திலே பாம்பை அடைப்போம்

சுழுமுனைக் குள்ளேயே சுகித்திருப்போம்

Xxxx

மார்ச் 23 திங்கட் கிழமை

பஞ்ச கருவியைப் பலி கொடுப்போம்

சிவ்வுருவாகியே  நின்றோம் என்றே

சீர் பாதங் கண்டு தெளிந்து

Xxx

மார்ச் 24 செவ்வாய்க் கிழமை

தா ந்திமி திமி தந்தக் கோனாரே

தீந்திமி திமி திந்தக் கோனாரே

ஆனந்தக் கோனாரே – அருள்

ஆனந்தக் கோனாரே

–இடைக்காட்டுச் சித்தர்

Xxx

மார்ச் 25 புதன் கிழமை

மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே – முத்தி

வாய்த்ததென்று என்ணேடா தாண்டவக்கோனே

சி னமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே – முத்தி

சித்தியென்றே நினையேடா தாண்டவக்கோனே

Xxxx

மார்ச் 26 வியாழக் கிழமை

ஆறாதாரத் தெய்வங்களை நாடு

அவர்க்கும் மேலான ஆதியைத் தேடு

Xxxx

மார்ச் 27 வெள்ளிக் கிழமை

ஆதி பகவனையே பசுவே !

அன்பராய் நினைப்பாயேல்

சோதி  பரகதிதான் பசுவே !

சொந்தமது ஆகாதோ?

Xxx

மார்ச் 28 சனிக் கிழமை

மனம், வாக்கு, காயம் எனும் வாய்த்த பொறிக்கு எட்டாத

தினகரனை நெஞ்சசமத்தில் சேவித்துப் போற்றீரே

xxx

மார்ச் 29 ஞாயிற்றுக் கிழமை

பாலிற்  சுவை போலும் பழத்தில் மது போலும்

நூலிற் பொருள் போலும் நுண் பொருளைப் போற்றீரே

Xxxx

மார்ச் 30 திங்கட்  கிழமை

கை  விளக்குக் கொண்டு கடலில் வீழ்வார் போல்

மெய் விளக்குன்னுளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே

Xxx

மார்ச் 31 செவ்வாய்க் கிழமை

அன்னையைப் போல் எவ்வுயிரும் அன்புடனே காத்துவரும்

முன்னவனைக் கண்டு முக்தியடை புல்லறிவே

Xxxx subham xxxx

பணம் எங்கே நிலைத்து நிற்கும் ? (Post No.7604)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7604

Date uploaded in London – 22 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

சம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் உள்ள எல்லா நீதி நூல்களிலும் லெட்சுமி வசிக்கும் இடமும் அவளுடைய அக்காள் வசிக்கும் இடமும் சொல்லப்பட்டுள்ளன. திருவள்ளுவரும் கூட இந்த இரண்டு இந்து தெய்வங்களைப் பலமுறை சொல்கிறார். அதற்கு முன்பாக, நமக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அம்பலவாணக்கவிராயர் அறப்பளீச்சுர சதகத்தில் செப்புவதைக் காண்போம் tamilandvedas.com, swamiindology.blogspot.com

நீண்ட பட்டியலைப்  படியுங்கள் –

நல்ல லட்சணமுள்ள குதிரையின் முகத்தில், அரசனிடத்தில் , பண்பாடு உடையவர் இல்ல த்தில், தாமரை மலரிடத்தில் , வில்வ மரத்தில், துளசியில், கற்புடைய பெண்கள் இடத்தில், கடலில், கொடியில், கல்யாண வீட்டு வாசலில், நல்ல நகரத்தில்,நல்ல நெற்பயிரில், ஒளி உமிழும் விளக்கில்,வலம்புரிச் சங்கில், நல்லோர் சொல்லும் வாக்கில் (சொல்லில்),பொய் பேசாதவர் இடத்தில் , புஷ்பங்கள் மலர்ந்த குளத்தில் , பால் குடத்தில் , யானையின் தலையில் மலர் மங்கை அதாவது செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் லெட்சுமி தேவி உறைவாள் (வசிக்கிறாள்).

இதில் மனிதர்களைத் தவிர மிருகங்களும் செடிகொடிகளும் , பால்குடம் போன்ற பொருட்களும் வருகின்றன. இந்துக்கள் இவைகளை சுப சின்னங்களாகக் காண்பர். மேலும் அத்தகைய இடங்களில் பாஸிட்டிவ் அலைகளை (Positive vibrations) அதிகம் இருக்கும். எடுத்துக் காட்டாக ஒரு கல்யாண வீட்டில்  என்னதான் செலவானாலும், உள்ளுக்குள் என்னதான் கசமுசா இருந்தாலும், அங்கே உள்ள மேள தாள முழக்கமும், மந்திர கோஷமும், அறுசுவை உண்டியின் மணமும் நல்ல உணர்வு அலைகளைப் பரப்புகின்றன. வில்வம் , துளசி போன்றவை மருத்துவ குணம் உள்ள மரம், செடிகள்; தாமரை மலரோ இந்தியாவின் தேசீய மலர். லெட்சுமியும், சரஸ்வதியும் காயத்ரியும், பிரம்மாவும் அமரும் மலர்.

இனி லட்சுமியின் அக்காள் / தமக்கை /மூ தேவி / முகடி/ஜேஷ்டா தேவி/ தெவ்வை  (திருக்குறள் 617,936) வசிக்கும் இடங்களை அம்பல வாணர் பட்டியலில் உள்ளவாறு படிப்போம்:-

சாப்பாட்டு ராமன்கள் , வாயாடிகள், பொய் பேசித் திரியும் பாவிகள் , ஆதரவற்ற அநாதைகள் , அழுக்கும் கந்தலும் உடைய ஆடைகளை அணிவோர் நாய் போலச் சீறும் பேய் மகள்கள் (துஷ்டைகள்) வாழும் வீடுகள் , தயிர்க்குடம் ,கழுதை , ஆட்டுமந்தை, பிணம் ஆகியன tamilandvedas.com, swamiindology.blogspot.com .

இவற்றில் பல சுகாதாரக் கேடானவை என்பது எல்லோரும் அறிந்ததே . இன்னும் சில, வெறி நாய் போன்ற பெண்கள் வசிக்கும் வீடுகள் முதலியன எதிர்மறை / நெகட்டிவ் (Negative vibrations) அலைகளைப் பரப்பும் இடங்கள் என்பதும் அனுபவத்தில் காணும் உண்மைகள். அங்கெல்லாம் போகக்கூடாது . போனால் குளிக்க வேண்டும். நெகட்டிவ் அலைகள் கரைந்து, நமக்கு ப்ரெஷ்னஸ் Freshness  / புத்துணர்வு பிறக்கும்

இறுதியாக இலக்குமி பற்றி தமிழ் இலக்கியக் குறிப்புகளைக் காண்போம்.

திருக்குறளில் லக்ஷ்மி – 179, 519, 617, 920, 1101.இது தவிர பத்து குறட் பாக்களில் செல்வம், அழகு என்றும் பாடுகிறார் அவையும் லெட்சுமிகரமானவை என்பதை மேலே அம்பலவாணர் விளக்கிவிட்டார் .

சங்கத் தமிழ் இலக்கியத்தில் லக்ஷ்மி வரும் tamilandvedas.com, swamiindology.blogspot.com இடங்கள் —

புறம் 358, 395, 7. பரிபாடல், கலித்தொகை மற்றும் பத்துப்பாட்டின் 10 நூல்களில் நிறைய இடங்கள்.

Tags  —  லெட்சுமி, மூதேவி,வசிக்கும் , இடங்கள்

–subham–

ஸ்வாமி ராமதீர்த்தரின் வாழ்வில் சில சம்பவங்கள்! – 2 (Post No.7594)

This image has an empty alt attribute; its file name is cb5f7-swami2brama2bstamp.jpg

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7594

Date uploaded in London – – 20 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஸ்வாமி ராமதீர்த்தரின் வாழ்வில் சில சம்பவங்கள்! – 2

ச.நாகராஜன்

ஸ்வாமி ராமதீர்த்தரின் வாழ்க்கையில் நடந்த ஏராளமான சம்பவங்களில் இன்னும் சில:

ஓ, இருக்கிறாரே, நீங்கள் தான் அது!

அமெரிக்காவிற்குக் கப்பலில் கிளம்பினார் ஸ்வாமி ராமதீர்த்தர்.  ஆனந்த அலையில் அவர் மிதந்தார். பரந்து விரிந்திருந்த பசிபிக் மாகடல் போல அவரது அன்பும் பரந்து விரிந்திருந்தது. கப்பல் சான்பிரான்ஸிஸ்கோவை அடைந்த போது ராமதீர்த்தர் மேல் தளத்தில் சந்தோஷத்தால் உருண்டு புரண்டார். இதைப் பார்த்த அமெரிக்கர் ஒருவர் வியந்தார். இந்த மனிதர் ஏன் எல்லோரையும் போல அவசரம் அவசரமாக பரபரப்புடன் இறங்கவில்லை?

இந்த எண்ணம் அவர் மனதில் மேலிட.”சார், உங்கள் பயணப்பெட்டி எங்கே?” என்று கேட்டார்.

“நான் எந்த லக்கேஜையும் கொண்டு செல்வதில்லை. நான் மட்டும் தான்”

‘உங்கள் பணத்தை எங்கே வைப்பீர்கள்?”

“நான் பணத்தை வைத்துக் கொள்வதே இல்லை”

“அப்படியென்றால் எப்படி நீங்கள் வாழ்கிறீர்கள்?”

“எல்லோரிடமும் அன்பு செலுத்தி நான் வாழ்ந்து வருகிறேன். எனக்கு தாகமென்றால் எப்போதும் ஒருவர் எனக்கு ஒரு கப் தண்ணீர் கொடுக்கத் தயாராக இருக்கிறார். எனக்குப் பசி என்றால் எப்போதுமே ஒருவர் ரொட்டி கொடுக்கத் தயாராக இருக்கிறார்.”

“உங்களுக்கு அமெரிக்காவில் யாராவது நண்பர்கள் இருக்கிறார்களா?”

“ஓ, இருக்கிறாரே, ஒருவர் இருக்கிறார், அது நீங்கள் தான்!” என்று அவர் தோளைத் தொட்டவாறே ஸ்வாமி ராமதீர்த்தர் கூறினார்.

அவ்வளவு தான், அந்த அமெரிக்கர் அவரது அத்யந்த பக்தரானார்.

அமெரிக்காவில் அவர் காலடி வைத்த முதல் நாளிலிருந்தே அமெரிக்கர்களும், பத்திரிகைகளும் எல்லையற்ற அன்பை அவர் மீது பொழிய ஆரம்பித்தன.

ராமதீர்த்தரின் உரைகள் புத்தகங்களானது எப்படி?

திருமதி பி.விட்மேன் (Mrs. P. Whitman) என்ற பெண்மணி ஸ்வாமியின் அத்யந்த பக்தை. அவர் ஸ்வாமியின் உரைகளை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே ஷார்ட்- ஹாண்டில் எடுக்க ஏற்பாடு செய்தார். அமெரிக்காவில் அவர் ஆற்றிய உரைகள் அனைத்தும்  Rama Tirtha Publication League நிறுவனத்தால் பிரசுரிக்கப்பட்டன. ஒவ்வொன்றும் 400 பக்கங்கள் கொண்ட எட்டுத் தொகுதிகளாக அவை ‘In Woods of God-realisation’ என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டன.

இவை இன்றும் புதிய பதிப்பில் படிக்கக் கிடைக்கின்றன.

ஒரு நடிகையின் துயரம்

அமெரிக்காவில் ஒரு இளம் அழகி ஸ்வாமி ராமதீர்த்தரைப் பார்க்க வந்தாள். அவள் ஒரு நடிகை. தனியே பார்க்க வேண்டும் என்றாள் அவள். அவளை வரச்சொன்னார் ஸ்வாமிஜி. அவள் உடல் முழுதும் அழகிய முத்துமாலைகளும் வைர நகைகளும் ஜொலித்தன. அவள் தடவிய வாசனை திரவியங்கள் அவள் உடலிலிருந்து வீச வெகு தூரம் வரை மணத்தது. அவள் உடலே ஒரு வாசனைக் கூடமோ என்ற பிரமையை ஏற்படுத்தியது. அவள் இதழோரம் நெளிந்த புன்னகை அவள் மகிழ்ச்சியின் கூடாரமோ என்ற உணர்வை ஏற்படுத்தியது.

உள்ளே நுழைந்ததும் அவர் ஸ்வாமிஜியின் காலடியில் வீழ்ந்தாள்; ஓவென்று அழத் தொடங்கினாள்.

“ஸ்வாமி! எனது துன்பம் கட்டுக்கடங்காதது. எனது முத்துமாலையையும் என் புன்சிரிப்பையும் பார்க்காதீர்கள். வெளியே தோற்றம் அப்படி. உள்ளே நான் ஒரு நோயாளி.

அவள் தனது ஒரே குழந்தையை இழந்திருந்தாள்.

ஸ்வாமிஜி சொன்னார்: “ நான் சந்தோஷத்தை விற்பனை செய்பவன். அதை வாங்க அதற்குரிய விலையை நீ தர வேண்டும்.

அவள் கூறினாள் :உடனே தருகிறேன்.

ஸ்வாமி : “எதானாலும் தருவாயா?

அவள் : “என்ன வேண்டுமானாலும் தருகிறேன்.எவ்வளவு என்று சொல்லுங்கள்

ஸ்வாமி : “சந்தோஷ சாம்ராஜ்யத்தில் நாணயம் வேறாக இருக்கிறது. ராமாவின் நாட்டில் அந்த நாட்டுக்குரிய நாணயத்தை நீ தர வேண்டும்.

அவள் : “சரி, ஸ்வாமிஜி! எதானாலும் தருகிறேன்

ஸ்வாமி : “சரி, சின்ன நீக்ரோ பையனை உன் குழந்தையாகத் தத்து எடுத்து அவனை உன் குழந்தையாக வளர்த்து வா. இது தான் நீ தர வேண்டிய விலை.

அவள் : “ஐயோ! அது ரொம்ப கஷ்டமாச்சே

ஸ்வாமி : “அப்படியானால் சந்தோஷம் அடைவதும் கஷ்டம் தான்

அந்த நடிகை ஸ்வாமிஜி சொன்னபடியே ஒரு நீக்ரோ குழந்தையை தத்து எடுத்தாள்.

ஆறுதலையும் பெரும் மன நிம்மதியையும் பெற்றாள்.

இது போல அன்றாடம் பலரும் ஸ்வாமிஜியைப் பார்க்க வந்தனர்.

மன நிம்மதியையும் ஆன்மீக உயர்வையும் அடைந்தனர்.

*

இந்த சம்பவங்கள் ஆதாரபூர்வமானவை. Swami Rama : His Life & Legacy என்ற புத்தகத்தில் In the Land of Dollars (1902-1904) என்ற அத்தியாயத்தில் தரப்பட்டிருப்பவை.

அடுத்து தொடர்ந்து, ஸ்வாமி ராமதீர்த்தரின் வாழ்வில் நடந்த இன்னும் சில சம்பவங்களையும் உபதேச அருளுரைகள் சிலவற்றையும் அவர் இறுதியையும் பார்ப்போம்

***

ஸ்வாமி ராமதீர்த்தரின் வாழ்வில் சில சம்பவங்கள்! – 1 (Post No.7591)

WRITTEN BY S NAGARAJAN

Post No.7591

Date uploaded in London – 19 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஸ்வாமி ராமதீர்த்தரின் வாழ்வில் சில சம்பவங்கள்! – 1

ச.நாகராஜன்

ஸ்வாமி ராமதீர்த்தரின் வாழ்க்கையில் ஏராளமான சுவையான சம்பவங்கள் உண்டு.

அவற்றில் சில:

நாத்திகப் பெண்மணி மாறினார்

அமெரிக்காவில் இருந்த போது ஒவ்வொரு நாள் மாலையும் அமெரிக்கர் அவர் இருந்த இடத்தில் குழுமி அவரது உரைகளைக் கேட்பது வழக்கம்.

நாத்திக சங்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி அவரை நாத்திகராக மாற்றி தனது பக்கம் சேர்க்க நினைத்தார்.

அவரைச் சந்திக்கச் சென்ற போது அவர் சமாதி நிலையில் இருந்தார். அவருக்கு முன்னால் அந்தப் பெண்மணி அமைதியாக உட்கார்ந்திருந்தார்.

சிறிது நேரம் கழிந்தது. ராமதீர்த்தர் கண் விழித்தார்.

அந்தப் பெண்மணி, “அட, கடவுளே! நான் இனி நாத்திகவாதி இல்லை. உங்களது ஒரு சின்ன பார்வை என்னை மாற்றி விட்டது” என்று கூவினார்.

அந்தப் பெண்மணி அன்றிலிருந்து ஆத்திகவாதியாக மாறினார்.

விறகு வெட்டி உழைத்த சம்பவம்

சாஸ்தா நீரூற்றில் (Shasta Springs) என்ற இடத்தில் அவர் தங்கி இருந்த போது அவர் தான் தங்கி இருந்த வீட்டாருக்கு ஒரு சுமையாக இருக்க விரும்பவில்லை. தனது பங்கிற்குச் சிறிது உழைப்பையும் தர வேண்டும் என்று எண்ணினார். ஆகவே மலையிலிருந்து விறகுகளை வெட்டிக் கொண்டு வந்து வீட்டிற்குத் தருவார். அவர் தங்கி இருந்த இடம் டாக்டர் ஹில்லர், திருமதி ஹில்லர் (Dr Hiller and Mrs Hiller) ஆகியோருக்குச் சொந்தமான வீடு. அவர்கள் ராமதீர்த்தரைத் தங்களுடனேயே அமெரிக்காவிலேயே வசித்து விடுமாறு வேண்டினர்.

சாஸ்தா நதியில் தவம்!

ஸ்வாமி ராமதீர்த்தர் எப்போதுமே தனிமையையே விரும்பினார்.

சாஸ்தா நதிக்கரையோரம் அவருக்கென ஒரு சிறிய தொங்கு படுக்கை (Hammock) அமைக்கப்பட்டது. பெரும்பாலும் அங்கு அமர்ந்து அவர் தவம் புரிந்து கொண்டிருந்தார். வேதாந்த பிரசாரம் என்றால் மட்டும் உற்சாகமாக அதிலிருந்து வெளியே கிளம்பி கூட்டங்களுக்குச் சென்று உரையாற்றுவார். பொங்கி வரும் சாஸ்தா நதிக்கரையோரம் அமைந்த தொங்குபடுக்கையில் இருந்ததைப் பற்றி அவர் கூறினார் இப்படி :- ‘அமெரிக்க ஜனாதிபதியை விட பறவைகளுடன் இருந்த அவருக்கு அதிக சந்தோஷம் இருந்ததாம்’ (‘In tune with his birdies, feeling happier than the President of all the United States’)

சாஸ்தா மலை சிகரம் ஏறும் போட்டி!

ஒரு முறை சில அமெரிக்கர்கள் சாஸ்தா மலை சிகரத்தில் யார் முதலில் ஏறுவது என்ற போட்டியை அமைத்து அவரையும் பங்கு கொள்ள அழைத்தனர். சாஸ்தா மலை கடல் மட்டத்திலிருந்து 14,444 அடி உயரம் கொண்டது. உற்சாகமாக அதில் கலந்துகொண்ட ஸ்வாமி முதல் பரிசை வென்றார். என்றாலும் கூட பரிசைப் பெற அவர் மறுத்து விட்டார். இதைப் பற்றி எழுதிய பத்திரிகளைகள் பெரும் விற்பனைக்குள்ளாயின. அந்தப் பத்திரிகைகள் அவர் முதல் பரிசை வென்றும் கூட அதை வாங்க மறுத்ததை விவரமாக எழுதி வெளியிட்டன.

30 மைல் மாரதான் ரேஸ்!

இன்னொரு சமயம் 30 மைல் தூரம் ஓடும் மாரதான் ரேஸ் (30 mile Marathon race) ஒன்று நடந்தது. அந்த ஓட்டப் பந்தயத்தில்  கலந்து கொண்ட ராமதீர்த்தர் முதலாவதாக வந்தார். அனைவரும் அதிசயித்தனர்!

கங்கா தந்த செல்வத்தை ஏற்கவில்லை

அமெரிக்க பெண்மணி ஒருவருக்கு ஸ்வாமி ராமதீர்த்தர் கங்கா என்று பெயர் சூட்டியிருந்தார். அந்த கங்கா என்ற பெண்மணி ஸ்வாமி ராமதீர்த்தரிடம் வந்து தனது வீடு, செல்வம், பெயர், புகழ் அனைத்தையும் அர்ப்பணித்ததோடு தன்னையும் அர்ப்பணித்தார். சந்யாசம் மேற்கொள்வதாகச் சொன்னார்.

ஆனால் ஸ்வாமியோ அவரது பரந்த உள்ளத்தைப் பாராட்டி விட்டு அதை ஏற்கவில்லை.

வேதாந்தா காலனியை இந்தியாவிலேயே அமைக்க விரும்புவதாகவும் அமெரிக்காவில் அல்ல அவர் தெரிவித்தார்.

*

ஸ்வாமி ராமதீர்த்தரைப் பற்றி விரிவாக விளக்கி எழுதிய நூல் தமிழில் இல்லாதது ஒரு பெரும் குறை.

ஆங்கிலத்தில் பூரண் சிங் (Puran singh) எழுதிய வரலாறு அதிகாரபூர்வமான வரலாறு.

அடுத்து லக்னௌ பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பி.பிரிஜ்நாத் சர்கா (P.Brijnath Sharga M.A., LL.B) எழுதிய Swami Rama His Life & Legacy என்ற நூல் ஏராளமான சம்பவங்களைத் தருகிறது. 720 பக்கங்கள் கொண்ட இந்த நூல் 1936ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.

அடுத்து பாரதீய வித்யா பவன் வெளியிட்ட வாழ்க்கை வரலாறும் குறிப்பிடத் தகுந்தது.

சுப்ரமண்ய சிவா ராமதீர்த்தரின் உரைகளைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பதாக (அதைத் தமிழில் பற்பல ஆண்டுகளுக்கு முன்னம் படித்திருப்பதாக) ஒரு நினைவு இருக்கிறது.  

*

அடுத்து இன்னும் சில சம்பவங்களைக் காண்போம்

பரிபாடல், சிலம்பில் ரிக்வேத வரிகள் ! (Post No.7588)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7588

Date uploaded in London – 18 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

பரி பாடல் என்னும் நூல், சங்க இலக்கியத்தி ல் எட் டுத் தொகையில் ஒரு நூல்  ஆகும்  . அதில் நாலாவது பாடல் கடுவன் இளவெயினனார் பாடியது. அவர் திருமாலைப் புகழ்கையில் சொல்கிறார் tamilandvedas.com, swamiindology.blogspot.com

 —

நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள

நின் குளிர்ச்சியும் தண்மையும் சாயலும் திங்கள் உள

நின் கரத்தலும் வண்மையும் மாரி  உள

நின் புரத்தலும் நோன்மையும்  ஞாலத்து உள

நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள

நின் தோற்றமும் அகலமும் நீரின் உள

நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள

நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள

பொருள்

உன்னுடைய வெம்மையும் ஒளியும் சூரியனிடத்தில் உளது;

உன்னுடைய குளிர்ச்சியும் மென்மையும் சந்திரனிடத்தில் உளது;

உன்னுடைய அருட் பெருக்கும் கொடையும் மேகத்திடம்  உளது

உன்னுடைய பாதுகாப்பும் பொறுமையும் நிலத்தின்பால் உளது;

உன்னுடைய நறுமணமும் ஒளியும் காயாம் பூவிடத்தில் உளது

உன்னுடைய தோற்றமும் விரிவும் கடலில் உளது

உன்னுடைய உருவமும் ஒலியும் வானில் உளது

உன்னுடைய பிறப்பும் மறைவும் காற்றில் உளது

ஆகையால் இவை அனைத்தும் உன்னிடத்திலிருந்து பிரிந்து

உன்னைத் தழுவியே உள்ளன என்று திருமாலை (விஷ்ணுவை)ப் போற்றுகிறார் . அதாவது எல்லாம் ‘இறைவன் படைப்பு, எல்லாவற்றிலும் இறைவன் இருக்கிறான்’ என்ற மாபெரும் தத்துவம் , வேதத்தில் உள்ளதை போல இந்தப் பாடலிலும் காணப்படுகிறது

இவ்வாறு இயற்கைச் சக்திகளின் உருவத்தில் இறைவனைக் காண்பதை  உலகின் மிகப்பழைய சமய நூலான ரிக் வேதத்தில் தான் முதன்முதலில் காண்கிறோம். ஏனைய சுமேரிய, எகிப்திய கிரேக்க நாகரீகங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இயற்கை பற்றிய குறிப்புகள் வரத்தான் செய்கின்றன. ஆயினும் வேதத்தில் கோர்வையாக இதே வரிசையில் கடவுளைப்  போற்றுவதை ரிக் வேதத்தின் 8-29 பாடலில் வருவதை நேற்று இங்கே  கொடுத்தேன் tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

சிலப்பதிகாரத்தில் வரும் மங்கல வாழ்த்துப் பாடல்

சங்க இலக்கியத்தில் இல்லாத, திருக்குறளில் இல்லாத, ஒரு புதுமையை சிலப்பதிகாரத்தில் காண்கிறோம். பரிபாடலைப் பாடிய கடுவன் இளவெயினனார் போலவே, இளங்கோ அடிகளும் ரிக் வேதத்தைப் பின்பற்றுகிறார். ரிக் வேதம் 8-29 பாடலைப் போல சந்திரனை முதலில் வாழ்த்துகிறார்.. ரிக் வேதம் 8-29ல் இந்திரன்/மழை , மித்ரன்/சூரியன், வருணன்/கடல் நீர் ஆகியனவும் போற்றப்படுகின்றன. இளங்கோ அதை அப்படியே, கொஞ்சம் வரிசை மாற்றிப், பாடுகிறார். அவ்வளவுதான். வேதங்களையும், பிராமணர்களையும் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் இளங்கோ அடிகள், வானளாவப் புகழ்வதையும் பார்க்கிறோம். (சிலப்பதிகாரம் பிராமண காவியமா? என்ற எனது ஆராய்ச் சிக் கட்டுரையை இதே பிளாக்கில் படியுங்கள்; முழு விவரமும் தந்துள்ளேன் )

மங்கல வாழ்த்துப் பாடல் tamilandvedas.com, swamiindology.blogspot.com

திங்களைப் போற்றுதும்!  திங்களைப் போற்றுதும்!

கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெங்குடை போன்று இவ்

அம் கண் உலகு அளித்த லான்

ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!

காவிரி நாடன் திகிரி போல் பொற்கோட்டு

மேரு வலம் திரிதலான் 

மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!

நாமநீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்

மேல்நின்று தான் சுரத்தலான்

பூம்புகார் போற்றுதும்! பூம்புகார் போற்றுதும்!

வீங்குநீர் வேலி உலகிற்கு அவன் குலத்தோடு

ஓங்கிப் பரந்து ஒழுகலான்

சிலப்பதிகாரத்தில் சந்திரன், சூரியன், இந்திரன் (மழை ), ஊர் (நிலம்/பூமாதேவி) என்ற வரிசையில் போற்றுதல் வருகிறது

ஆக மொத்தத்தில் இப்படி இயற்கைச் சக்திகளை போற்றும் வழக்கம் ரிக் வேதத்தில் துவங்கி, கிட்டத்தட்ட அதே வரிசையில்,  சிலம்பு வரை வருகிறது. இமயம் முதல் குமரி வரை ஒரே வேத மரபு என்பது தெளிவாகிறது. tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx

கீழ்கண்ட பத்து கடவுளர் அல்லது ரிஷிக்கள் ரிக் வேதம் 8-29ல் வருகிறது.

1.சோமன்/சந்திரன் 2.அக்நி (தீ), 3.துவஷ்டா , 4.இந்திரன், 5.ருத்ரன் 6. பூஷன் , 7.விஷ்ணு , 8.அஸ்வினி தேவர்கள், சூரியை என்னும் பெண், 9. மித்திரன், வருணன், 10.அத்ரி ரிஷி குடும்பத்தினர்.

மேலே குறிப்பிட்ட மூன்று நூல்களிலும் திங்கள்/சோமன் , ஞாயிறு/மித்திரன், மழை /இந்திரன் என்பன பொதுவாக உள்ளதைக் காணலாம்.. tamilandvedas.com, swamiindology.blogspot.com

சங்க இலக்கியத்திலும் மநு நீதி நூலிலும்  அரசர்களின் ஆற்றலை விளக்கும்போதும் இதே வருணனையைக் காணலாம்..

Tags  –  பரிபாடல்,  ரிக்வேத,  வரிகள், சிலப்பதிகாரம்,

–subham–

வள்ளி கொண்டான் மயில் ஏறிக் கொண்டான் – ஏன்? (Post No7587)

WRITTEN BY S NAGARAJAN

Post No.7587

Date uploaded in London – 18 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

வள்ளி கொண்டான் மயில் ஏறிக் கொண்டான் – ஏன்?

ச.நாகராஜன்

பள்ளிகொண்டான் என்று ஒரு பெரும் வள்ளல் இருந்தார். புலவர்களைப் பெரிதும் மதிப்பவர்; பரிசுகளை அள்ளிக் கொடுப்பவர்.

இவரைப் பாடாமல் இருக்க முடியுமா?

நையாண்டிப் புலவர் இவரைப் பற்றிப் பாடிய இரு பாடல்களைப் பார்ப்போம் tamilandvedas.com, swamiindology.blogspot.com

 :

சிவபிரான் சூரியனையும் சந்திரனையும் தினமும் பூமியைச் சுற்றிச் சுற்றிக் காவல் காக்கச் செய்து விட்டாராம். ஏன்?

செங்கை வரிச்சிலை தங்கம தைச்சம்பு தீவுதன்னில்

எங்குவைத் தாலும் பள்ளிகொண் டான்றமிழ்க் கீவனென்றே

திங்க ளிரவி தினஞ்சுற்றிக் காக்கத் திரை சுருட்டும்

கங்கைக்கு முத்தரத் தேயொளித் தானுமை காதலனே

உமைகாதலன் – உமாதேவிக்குப் பிரியமான சிவபிரான்

செங்கை – தனது சிவந்த கையில் ஏந்துதற்கு உரிய

வரிசிலை – கட்டமைத்த வில்லானது tamilandvedas.com, swamiindology.blogspot.com

தங்கம் – தங்கமாயிருக்கிறது என்று

அதை – அந்த வில்லை

சம்புத்தீவு தன்னில் – ஜம்புத் தீபத்தில்

எங்கு வைத்தாலும் – எந்த இடத்தில் வைத்தாலும் கூட

அ – அந்த

பள்ளிகொண்டான் – பள்ளிகொண்டான் (என்னும் பிரபு)

தமிழ்க்கு – தமிழ்ப் பாடல்களுக்கு

ஈவன் என்றே – பரிசாகத் தந்து விடுவான் என்றே

திங்கள் இரவி – சந்திர சூரியரை

தினம் – நாள் தோறும்

சுற்றிக் காக்க – வலம் வந்து காக்கும்படி செய்ததோடு

திரை சுருட்டும் – அலைகள் சுருட்டப்படுகின்ற

கங்கைக்கும் உத்தரத்தே – கங்கை நதிக்கு வடபுறத்தில்

ஒளித்தான் – அந்தச் சிலையை ஒளித்து வைத்தான்

பள்ளி கொண்டான் தமிழ்ப் பாடல்களுக்குப் பரிசு அளிக்க வேண்டும் என்று விரும்புபவன். சிவபிரானின் சிலையோ தங்கமாகும் அதாவது மேருமலை தங்கம் போல் ஒளிர்வதால் அதைப் புலவர் தங்கம் என்கிறார். திரிபுர சங்கார காலத்தில் இறைவனுக்கு மேருமலை வில்லாக அமைந்தது. ஆகவே அது செங்கை வரிச்சிலைத் தங்கம் எனப்படுகிறது. அந்த வில்லைக் காக்க நினைத்த சிவபிரான் அதை கங்கைக்கு வடபுறத்தில் ஒளித்து வைதததோடு சூரிய சந்திரரை தினமும் சுற்றிச் சுற்றி வந்து அதைக் காவல் காக்குமாறு பணித்தார்.

பள்ளிகொண்டான் நையாண்டிப்புலவருக்கு பரிசளிக்காமல் விடுவாரா என்ன? tamilandvedas.com, swamiindology.blogspot.com

அதே பள்ளிகொண்டானைப் பற்றி நையாண்டிப்புலவர் பாடிய இன்னொரு பாடல் இது :-

வள்ளிகொண் டான்மயி லேறிக்கொண் டான்மதி போலுமலை

வெள்ளிகொண் டான்விடை யேறிகொண் டான்விண் ணவர்க்கமுதம்

துள்ளிகொண் டான்புள்ளி லேறிக்கொண் டான்சுப சோபனஞ்சேர்

பள்ளிகொண் டான்புகழே றிக்கொண் டானென்று பார்க்கவென்றே tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுப சோபகம் சேர் – சுப சோபகம் பொருந்திய

பள்ளிகொண்டான் – பள்ளிகொண்டான் என்ற வள்ளல்

புகழ் ஏறிக் கொண்டான் என்று – புகழ் மீது ஏறிக் கொண்டான் என்று

பார்க்க என்றே – அதனைப் பார்க்க வேண்டும் என்றே

வள்ளிகொண்டான் – வள்ளியை மணம்புரிந்து கொண்ட முருகப்பிரான்

மயில் ஏறிக் கொண்டான் – மயில் மீது ஏறிக் கொண்டான்

மதி போலும் வெள்ளிமலை கொண்டான் – சந்திரன் போன்ற வெள்ளி மலையாகிய கைலாயத்தை தனது இருப்பிடமாகக் கொண்ட சிவபிரான்

விடை ஏறிக்கொண்டான் – ரிஷபத்தின் மீது ஏறிக் கொண்டான்

விண்ணவர்க்கு – தேவர்களின் பொருட்டு

அமுதம் துள்ளிக் கொண்டான் – அமுதத்தைத் துளித்தவனாகிய திருமால் tamilandvedas.com, swamiindology.blogspot.com

புள்ளில் ஏறிக் கொண்டான் – கருடன் மீது ஏறிக் கொண்டான்.

அருமையான பாடல்களை அள்ளிக் கொண்டோம் என்று மகிழலாம் இல்லையா, நாமும்!

***

Tags பள்ளி கொண்டான், நையாண்டிப்புலவர், மயில் 

டாக்டர் கடவுள் யார்? புதையல் கடவுள் யார்? ரிக் வேதப் புலவர் புதிர் ! (Post No.7585)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7585

Date uploaded in London – 17 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ரிக் வேதப்  புலவர்கள் மகா மேதாவிகள்; அவர்கள் எதையும் நேரடியாகச் சொல்ல மாட்டார்கள். மறை பொருளில் பகர்வர். உலகிலேயே ரிக் வேதத்தை சரியாகப் புரிந்து கொண்டவன் தமிழன் ஒருவன்தான். வேதத்துக்கு மறை  (ரகசிய மொழி)  என்ற அழகான பெயரைக் கொடுத்தான். சங்கத் தமிழ் நூல்களில் இந்த அழகான சொல் பயிலப்படுகிறது. அது மட்டுமல்ல. ரிக் வேதத்தையே தமிழர்கள்தான் கண்டுபிடித்தார்களோ என்றும் எண்ண வேண்டி இருக்கிறது. ஏனனில் தமிழர்களின் கடல் தெய்வம் வருணன் என்றும், மருத நிலக் கடவுள் இந்திரன் என்றும் தொல்காப்பியர் செப்புகிறார். இவ்வளவு தெளிவாக, ரத்தினச்  சுருக்கமாக எந்த சம்ஸ்கிருத நூலிலும் இல்லை. ரிக் வேதத்திலுள்ள பத்தாயிரத்துக்கும் மேலான மந்திரங்களை படித்தால்  இந்திரனுக்கும் வருணனுக்கும் மாயோனுக்கும் (விஷ்ணு) 1008 அடை மொழிகள் கொடுத்து இருப்பர். அதைப்  படிக்கும் வெளிநாட்டினர் வருணன் வான் தெய்வமா, கடல் தெய்வமா, சந்திரனா, இருளைக் குறிக்கும் ராத்திரி தெய்வமா என்று காரசார விவாதம் நடத்தினர். இன்னும் கதைக்கின்றனர். தமிழனோ பொட்டில் அடித்தாற்போல புகன்று விட்டான்.

இதே போல யாக, யக்ஞ, ஹோம, ஹவனுக்கு ‘வேள்வி’ என்ற ஒரே சொல்லைப்  போட்டு அசத்திவிட்டான் தமிழன். இந்த ‘வேள்வி’ என்ற சொல், தமிழத்தில் வேத மதம், சங்க காலத்துக்கு வெகு காலம் முன்னரே தழைத்து ஓங்கி விட்டதற்குச்  சான்று என்று காஞ்சி முனிவரும், பரமாசார்யாருமான ஸ்ரீ சந்திர சேகர இந்திர சரஸ்வதி  (1894-1994)  சுவாமிகளும் விளம்புவார் .

ரிக் வேதப் புலவர்கள், மறை பொருளில் கவி படுவதை உலகோர்  அறிவர். சில கவிதைகள் முழுக்க முழுக்க விடுகதையாக அமைந்துள்ளன. குறிப்பாக எட்டாவது மண்டலத்திலுள்ள 29-ஆவது கவிதையைப் படித்து ரசிக்கலாம். ஒவ்வொரு கடவுளின் சிறப்பையும் சொல்லிவிட்டு கடவுளின் பெயரை நாமே கண்டுகொள்ளும்படி புதிர் போடுகிறார் புலவர் . இதோ இந்தக் கவிதையின் மொழி பெயர்ப்பைப் படியுங்கள்.. விடை கடைசியில் உளது. அதைப்  பார்க்காமலேயே எத்தனை கடவுளரை நீங்கள் கண்டுபிடிக்க முடிகிறது என்றும் பாருங்கள்:–

1.ஒருவன் பழுப்பு நிறமுள்ளவன் . எங்கும் பரவுபவன்; இரவுகளின் தலைவன், யுவன்; போன் ஆபரங்களால் தன்னை அலங்கரித்துக் கொள்பவன் (அவன் யார்?)

2.ஒருவன் அறிஞன்- தேவர்களின் நடுவே பிரகாசிப்பவன் – தன்னுடைய இடமான  வேதியிலே அமர்ந்துள்ளான் .

3.ஒருவன் தேவர்களிடையே இரும்புக் கோடாலியைச் சுழற்றிக் கொண்டிருக்கிறான்.

4.ஒருவன் தன கையில் இயங்கும் வஜ்ராயுதத்தை பற்றுகின்றான். அதனால் அவன் விருத்திரனைக் கொல்கிறான்.

5.ஒருவன் ஒளி வீசுகிறான்- உக்கிரமானவன் –  கையில் கூரிய ஆயுதத்தை வைத்து இருக்கிறான் . அவன் குணப் படுத்தும் மருந்துகளைத் தருகிறான்.

6.ஒருவன் கள்ளர்களைப் போல வழிகளை, பாதைகளைக் கவனிக்கிறான். அவனுக்கு மறைந்து கிடக்கும் புதையல் செல்வங்கள் தெரியும் .

7.ஒருவன் கம்பிர நடையுள்ளவன் மூவடியால் ஓங்கி உலகளந்தவன்

8.இருவர் சிட்டாகப் பறந்து செல்லும் குதிரைகளில் ஒரு பெண்ணோடு போகின்றனர். அவர்கள் அந்நிய நாடுகளுக்குச் செல்லும் பயணிகளைப் போல விரைகிறார்கள்.

9.இருவர் வானத்தின் உயரே அமர்ந்து இருக்கிறார்கள் ; வணங்கப்படும் அவர்கள் நெய் ஆகுதிகளை ஏற்கிறார்கள்.

10.சிலர் சாம கீதம் இசைத்து , புகழ் பாடி , சூரியனையே பிரகாசிக்க வைக்கிறார்கள் (யார் இவர்கள்)

புதிர்களுக்கு விடை –

1.சோமன்/சந்திரன் 2.அக்நி (தீ), 3.துவஷ்டா , 4.இந்திரன், 5.ருத்ரன் 6. பூ ஷன் , 7.விஷ்ணு , 8.அஸ்வினி தேவர்கள், சூரியை என்னும் பெண், 9. மித்திரன், வருணன், 10.அத்ரி ரிஷி குடும்பத்தினர்.

இது வைவஸ்வத மநு பாடியது அல்லது மரீசி காஸ்யபன் பாடியது என்று பாடலின் அடிக்குறிப்பு கூறுகிறது.

–subham–