WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,533
Date uploaded in London – – 6 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நேற்று “தமிழர்கள் சொன்ன அதிசய முனிவர்கள் பற்றி புதிய தகவல் ? TIME TRAVEL காலப் பயணம் செய்யலாம்! ” என்ற தலைப்பில் வெளியேயான கட்டுரையின் இரண்டாவது பகுதி இது.
அதர்வண வேத (அ .வே ) 19ஆவது காண்ட 53, 54 ஆவது மந்திரங்கள் அளிக்கும் மேலும் வியப்பான அறிவியல் செய்திகள் இதோ:-
ஏழு என்ற எண்ணை பல்வேறு பொருள்களில் புலவர் பயன்படுத்துகிறார்.; 700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சாயனர் திணறுவது போலவே வெள்ளைக்கார வியாக்கி யானக்காரர்களும் மூச்சு முட்டித் திணறுகிறார்கள்.
நான் கண்ட விஞ்ஞானக் கருத்துக்களை மட்டும் சொல்கிறேன்.
வான சாஸ்திரம் (ASTRONOMY AND PHYSICS) படித்தவர்களுக்கும் பெளதீக சாஸ்திரம் படித்தவர்களுக்கும் ஒரு வியப்பான செய்தி தெரியும். உலகில் எல்லாப் பொருட்களும் செயல்பட்டுக்கொண்டே இருக்கும். நகர்ந்து கொண்டே இருக்கும் இதை பாரதியார், மாணிக்க வாசகர் முதலியோர் அழகாக பாடியுள்ளனர் . நம் பூமி தன்னைச் சுற்றுவதோடு, சூரியனைச் சுற்றுவதோடு சூரியனுடன் ஓடிக்கொண்டே இருக்கிறது. சூரியனோவெனில் எல்லாக் கிரகங்களையும் இழுத்துக்கொண்டு ஓடிக்கொண்டு இருக்கிறது . அதாவது பிரபஞ்சம பலூன் போல ஊ
திக் கொண்டே இருக்கிறது. இதை உணர்ந்த இந்துக்கள் பூமிக்கும் பிரபஞ்சசத்துக்கும் அண்டம் = EGG SHAPED,GLOBULAR பிரம்மாண்டம் BIG EGG என்றெல்லாம் பெயர் சூட்டி வெள்ளைக்காரர்களை முந்திச் சென்றனர். உலகிலுள்ள எல்லாப் பொருட்களுக்கும் ஈர்ப்பு விசை GRAVITY உண்டு; வானிலுள்ள பிரமாண்டப் பொருட்களுக்கு அதைவிட அதிகம் ஈர்ப்பு விசை உண்டு என்று அவைகளுக்கு கிரஹம் GRAHA என்று அறிவியல் பெயர் சூட்டினார்கள். கிரக என்றால் பிடித்தல், பற்றுதல், ஈர்த்தல் ; ஆங்கிலத்தில் உள்ள கிராவிடி, கிரிப், கிராப் GRAVITY, GRIP, GRAB= GRAHA எல்லாம் ஸம்ஸ்க்ருதச் சொற்களே.
முதல் மந்திரத்தில் முனிவர்கள் சூரியனுடன் பயணம் செய்வதை, முதல் கட்டுரையில் சொன்னேன். சூரியனை வருணிக்கும் புலவன், ” எல்லா புவனங்களும் அவனுடைய சக்கரங்கள் என்கிறான். ஆக அவர்களுக்கு வட்ட வடிவ (WHEEL LIKE) கிரகங்களும் தெரியும். அது பால்வெளி MILKY WAY மண்டலத்தில் ஒடிக் கொண்டு இருப்பதும் தெரியும் . அவைகள் தன்னைத் தானே சுற்றுவதும் தெரியும். இதனால் சுற்றும் சக்கரத்தை உவமையாயாக்கினார்கள் !!!!
அவை எல்லாம் எங்கே செல்கின்றன? இதற்கும் மந்திரம் பதில் சொல்கிறது ” இந்த புவனங்களை எல்லாம் ஒன்று சேர்த்து முதற் தேவனுக்குச் செல்கிறான் ; இந்த வரிகள் சூரியன், பிரம்ம லோகத்தையோ, சத்திய லோகத்ததையோ நோக்கி ஒடிக்கொண்டு இருக்கிறான் என்று பொருள்படும் .
உலகில் இந்துக்கள் சொல்லும் கால அளவு மட்டுமே விஞ்ஞான கருத்துக்களுடன் பொருந்தி நிற்கினறன ; நாம் மட்டுமே பிரம்மாவுக்கு கோடிக்கணக்காண ஆண்டுகளை ஆயுளாகக் கற்பித்துள்ளோம். பிரம்மாவும் கல்பம் தோறும் மாறுவார் என்கிறோம். இவை எல்லாம் ஊன்றி ஆராயப்படவேண்டிய விஷயங்கள்.
மூன்றாவது மந்திரத்தில் ஒரு அற்புதமான வரி வருகிறது பூரண கும்பம் என்பதை வெள்ளைக்காரர்கள் பீக்கர் என்று மொழி பெயர்த்துள்ளனர். இது பொங்கி வழிவதாக மந்திரம் பேசுகிறது. இதைக் காலம் பொங்கி வழிகிறது என்று கொண்டால் , பல விதமாகக் கருத்து சொல்லலாம். சூரியன் என்று கொண்டால் , மிகவும் பொருத்தமாக இருக்கும். சூரியனில் ஒவ்வொரு நொடியிலும் பல கோடி ஹைட்ரஜன் குண்டுகள் வெடித்தவண்ணம் இருக்கின்றன. ஹைட்ராஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் என்னும் மூலகமமாக மாறிக்கொண்டே இருக்கின்றன. அப்போது வீசும் சுவாலைகளின் உயரமே பல மில்லியன் மைல்கள் . இதை பொங்கி வழியும் பூரண கும்பம் என்று புலவர் வருணிக்கிறார் போலும்.
1400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் பிரபஞ்ச வெடிப்பு BIG BANG ஏற்பட்டது. இது நிறைய இடங்களில் தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் வருகிறது . என்ன முடிவு என்பதும் அறிவியல் அறிஞர்கள் ஊகத்தில் மட்டுமே உளது. இந்துக்கள் இதை ஸ்வயம்பூ (தானாகவே உருவான) தெய்வீக சக்தி என்கின்றனர். இது ஒன்பதாவது பத்தாவது மந்திரத்தில் வருகிறது ; வேத கால இந்துக்களுக்கு எவ்வளவு விஞ்ஞான சிந்தனை, அணுகுமுறை இருந்தது என்பதை அறியும் போது வியப்பாக இருக்கிறது.
காஸ்மாலஜி COSMOLOGY எனப்படும் அண்டப் பிறப்பியல் தொடர்பான ரி.வே.(RV, அ .வே. (AV) துதிகள் அனைத்தும் கேள்வி வடிவத்தில் இருக்கும். இது ஒரு பாணி, ஸ்டைல் STYLE, GENRE என்பதை அறியாத வெள்ளைக்காரர் கள், ‘பார்த்தீர்களா, ரிஷிகளுக்கு அந்தக் காலத்திலேயே சந்தேகம் எவ்வளவு இருந்தது! என்று எழுதி உளறித் தள்ளிவிட்டார்கள் . சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் கவிதை பாடிய தாயுமானவ சுவாமிகள் கூட
அங்கிங் கெனாதபடி யெங்கும் பிரகாசமா
யானந்த பூர்த்தியாகி
யருளொடு நிறைந்ததெது? தன்னருள் வெளிக்குளே
யகிலாண்ட கோடி யெல்லாந்
தங்கும்படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
தழைத்ததெது? மனவாக்கினிற்
றட்டாம னின்றதெது சமய கோடிகளெலாந்
தந்தெய்வ மெந்தெய்வ மென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவு நின்றதெது?
எங்கணும் பெருவழக்காய்
யாதினும் வல்லவொரு சித்தாகி யின்பமா
யென்றைக்கு முள்ள தெது? மேற்
கங்குல் பகலற நின்ற வெல்லை யுள தெது?வது
கருத்திற்கிசைந்த ததுவே
கண்டன எல்லாம் மோன உருவெளியது ஆகவும்
கருதி அஞ்சலி செய்குவாம்
என்று எது ? , எது ? என்று கேள்வி கேட்டு நம்மை சிந்திக்க வைத்து, இறைவனே அது என்பார்; க (யார்) என்று பல்லவி உடைய ஒரு ரி.வே.(RV) பாடல் உளது. அது கூட மாக்ஸ் முல்லருக்குப் புரியவில்லை! ரிஷிகள் ‘சந்தேகப் பேர்வழிகள்’ என்று விமர்சித்துள்ளார்.
ஆங்கிலத்தில் விரிவான கட்டுரை உளது. இரண்டாவது துதியில் (AV .LIV .BOOK 19) உள்ள அறிவியல் விஷயங்கள் இதோ:-
மாபெரும் பிரபஞ்ச வெடிப்பில் BIG BANG 1400 கோடி ஆண்டு சித்திரத்தில் – வரை படத்தில் – எதற்குப் பின்னர் எது தோன்றியது? என்று கால அட்டவணை கொடுத்து இருக்கிறார்கள் அறிஞர்கள். அதே போல இந்த துதியானது , டைம் டேபிள் கொடுக்கிறது.
பத்தொன்பதாவது காண்டம், பாடல் 53, 54 ( சூக்தங்கள் 569 , 570 ; தலைப்பு-காலன் )
“Sages inspired with holy knowledge mount him” (SAGES CAN DO TIME TRAVEL)
“Kāla created yonder heaven, and Kāla made these realms of
earth. (BILLIONS OF EARTHS)
By Kāla, stirred to motion, both what is and what shall be
expand.” (EXPANDING UNIVERSE)
“He made, he stirred this universe to motion” (BIG BANG )
“In Kāla erst the text produced what is and what is yet to be.”
“On Time is laid an overflowing beaker” (Boiling Sun?)
நிலம், நீர், நெருப்பு , வளி , அண்ட வெளி, பல உலகங்கள் , பிரம்மம் என்று அடுக்கிக்கொண்டே போகிறார் புலவர் . ஆங்கில மொழி பெயர்ப்பாளர்களும் கூட தெய்வீக சக்தி என்று எழுதியுள்ளனர் இது எல்லாம் 100 ஆண்டுகளுக்கு முந்தைய மொழி பெயர்ப்பு. அப்போது வான சாஸ்திரம், அண்டத்தின் தோற்றம், கருந்துளைகள் பற்றி அதிகம் தெரியாது.வேதங்களுக்குப் பின்னர் வந்த பகவத் கீதை முதலியவற்றில் உள்ள காலம் TIME, கருந்துளைகள் BLACK HOLES ஆகியவற்றையும் பின்னணியாகக் கொண்டு பார்க்கையில் நமக்கு முழு சித்திரம் கிடைக்கிறது!
–SUBAHAM—
சூரியன், வாலகில்யர் , சுடர்கொடு, திரிதரும், முனிவர்