வள்ளுவரும் வானவரும்! (Post No.3260)

hy14-pushkar_2472025g-jpghindu-2

Written by S. NAGARAJAN

Date: 17 October 2016

Time uploaded in London: 5-21 AM

Post No.3260

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

 

திருக்குறளில் தேவர் உலகம்

வள்ளுவரும் வானவரும்!

By ச.நாகராஜன்

 

 

 img_5160-2

பாரத நாடெங்கும் தொன்று தொட்டு இருந்து வ்ரும் பண்பாடு ஒன்றே தான்!

 

மிகப் பழைய சங்க இலக்கிய  நூலான திருக்குறளில் இந்தப் பண்பாட்டை விளக்கும் நூற்றுக் கணக்கான குறட்பாக்களைக் காணலாம்.

 

தேவர் அல்லது வானவரைப் பற்றிய ஏராளமான செய்திகளை பாரத நாடெங்கும் உள்ள மக்கள் அறிவர். ஹிந்துப் பண்பாட்டை விளக்கும் ஏராளமான கதைகளும் அதைச் சார்ந்த சடங்குகளும், விழாக்களும், நம்பிக்கைகளும் தொன்மங்களும் வான உலகில் –விண்ணுலகில் – இருக்கும் வானவரைச் சார்ந்தே உள்ளன.

 

 

திருக்குறளை இயற்றிய வள்ளுவருக்கே தேவர் என்ற பெயரும் உண்டு. அவருக்குரிய பத்துப் பெயர்களும் அவரது உயரிய பண்பையும் அருமையையும் எண்ணி, போற்றித் தரப்பட்டு வழிவழியாக வழங்கப்பட்டு வருகின்றன.

 

 

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்                   

மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை                        

 திருவாசகமும் திருமூலர் சொல்லும்                        

ஒருவா சகமென் றுணர் 

 

–என்ற ஔவையாரின் பாடலில் தமிழ்ம்றையும் நான்மறையும் ஒன்றே என்று அறுதியிட்டு உறுதி கூறப்படுகிறது!

 

 img_5163-2

இனி, வள்ளுவரின் கிண்டல் குறள்கள் அவரது அரிய மேதைத் தனமையையும் அதில் இழைந்து ஊடாடி விளங்கும் நகைச்சுவையையும் காட்டுவன.

 

 

இந்த நகைச்சுவைக் குறள்களில் முக்கியமான குறள் ஒன்று தேவர் குறள்.

 

 

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுகலான்        –  குறள் 1073

 

“தேவர் அனையர் கயவர்”

தேவரும் கயவரும் ஒன்று போலத் தான் என்று வள்ளுவர் கூறியதைக் கேட்டவுடன் திடுக்கிடுகிறோம். தூக்கிவாரிப் போடுகிறது.

 

 

ஆனால் அவர் அடுத்து அதற்கான காரணத்தை விளக்கும் போது சிரிக்கிறோம். இருவரும் தம் மனம் போன போக்கிலேயே அனைத்தையும் செய்யும் தன்மை வாய்ந்தவர்கள் என்பதால் தேவர் அனையர் கயவர்!!

வையத்துள் புண்ணியச் செயல்களைச் செய்பவரே வானுறையும் பேறு பெற்றவர்கள். அவர்கள் மனம் போன போக்கில் நல்லதையே செய்வர்.

 

 img_5164-2

ஆனால் பூமியில் மனம் போன போக்கைச் செய்யும் கயவர் தீயவற்றையே செய்வர். உயர்ச்சியும் இழிவுமாகிய காரண வேறுபாட்டால் நகைச்சுவையை ஊட்டி நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார் வள்ளுவர்.

நகைச்சுவையுடன் கூடிய கருத்தால் மிகவும் ஈர்க்கப்படுகிறோம்.

 

அடுத்து வான் நாட்டை புத்தேள் நாடு என்றும் வானவரை புத்தேளிர் என்றும் வள்ளுவர் கூறி இருக்கும் குறட்பாக்கள் சுவையானவை.

 

 

இப்படி வரும் ஆறு குறள்களைப் பார்ப்போம்.

 

 

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே

ஒப்புரவின் நல்ல பிற              – குறள் 213

 

பிறர்க்கு உதவி செய்யும் நல்ல பிரதிபலன் பாராத உதவி செய்யும் தன்மை தேவர் உலகத்திலும் பூவுலகத்திலும் காண்பது அரிதாகும்.

 

ஈவாரும் இல்லை, ஏற்பாரும் இல்லை என்பதால் தேவருலகில் ஒப்புரவு அரிது. யாவருக்கும் ஒப்பது இது போல வேறு ஒன்று இல்லாமையால் பூவுலகில் இது அரிது.

 img_3203

 

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு           – குறள்  234

 

ஒருவன் நிலவுலகில் பொன்றாத புகழைச் செய்வானாயின் வான் உலகம் அவனை வரவேற்குமேயல்லால் தன்னை எய்தி இருக்கும் ஞானிகளைப் போற்றாது.         

 

                      

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்                     

தள்ளாது புத்தே ளுலகு                   குறள் 290

 

களவினைச் செய்வார்க்கு உடம்பில் உள்ள உயிர் தவறும். அந்தக் களவினைச் செய்யாதவர்க்கு வானுலகம் வாய்த்தல் தவறாது.

 

 

புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என்மற்று           

இகழ்வார் பின் சென்று நிலை              குறள் 966

 

மானத்தை விட்டுத் தன்னை அவமதிப்பவர்கள் பின்னே ஒருவன் சென்று நிற்கின்ற நிலை அவனுக்கு இவ்வுலகப் புகழைத் தராது. தேவர் உலகத்திலும் கொண்டு சேர்க்காது. இப்படி அவமதிப்பார் பின் செல்வதால் அவனுக்குப் பின் என்ன தான் பயன்?

 

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு                              

நீர் இயைந்து அன்னார் அகத்து             குறள் 1323

 

 

நிலத்தில் நீர் கலந்தாற் போல ஒன்று ப்ட்ட நெஞ்சம் உடைய காதலரிடத்தில் ஊடலில் காணப்படுவது போன்ற இன்பம் தேவருலகில் உண்டா?

 

 img_3425

பெற்றார் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்                புத்தேளிர் வாழும் உலகு                   குறள் 58

 

பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுவாராயின் தேவருலகில் அவரால் பெருஞ்சிறப்பினைப் பெறுவர்.

 

அடுத்து வரும் மூன்று குறள்களில் அமரர் என்ற வார்த்தையையும், வானவர் என்ற வார்த்தையையும் தேவர் பயன்படுத்துகிறார்.

 

 

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை                 

ஆரிருள் உய்த்து விடும்                  குறள் 121

 

ஒருவனை அடக்கம் ஆகிய அறம் பின் தேவர் உலகத்து உய்க்கும். அடங்காமையோ ஆர் இருள் கொண்ட நரகத்தில் செலுத்தும்.

 

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்                         

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு     (குறள் 18)

 

 

வானம் வறண்டு மழை இல்லாது போனால் இவ்வுலகில் வானவர்க்குச் செய்யும் பூஜை, திருவிழா எதுவும் நடைபெறாது.

 

 

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து  வானத்தவர்க்கு        (குறள் 86)

 

தேவர்கள் விரும்பி வரவேற்கும் விருந்தினர் யார் தெரியுமா? பூவுலகில் வந்திருந்த விருந்தினரை நன்கு  உபசரித்து அனுப்பி விட்டு அடுத்து வரும் விருந்தினருக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கின்றானே அந்த உத்தமன், அவனைத் தம் விருந்தினராக ஆவலோடு வரவேற்பார்களாம் தேவர்கள்!

 

 brahadeeswar-2

இன்னும் ஒரு குறளில் வானோர்க்கும் மேலான உலகத்தைப் பற்றிப் பேசுகிறார்.

 

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு               

உயர்ந்த உலகம் புகும்           (குறள் 346)

 

 

யான் எனது என்ற மயக்கத்தை அறுப்பார்க்கு வானோரும் எய்தற்கு அரிதான வீட்டுலகம் கிடைக்கும்.

 

தேவர் உலகத்தைச் சேர்ந்தோர் இமைக்க மாட்டார்கள் என்பதை ஒரு குறள் சுட்டிக் காட்டுகிறது.

 

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லான்              

அமையார்தோள் அஞ்சு பவர்   (குறள்  906)                             

மனைவியின் அழகிய தோளுக்கு அஞ்சி நடக்கின்றவர் தேவரைப் போல இந்த உலகில் வாழ்ந்தாலும் கூட ஆண்மை இல்லாதவரே ஆவர்.

 

 

ஹிந்துக்களின் வேதம், உபநிடதம், புராணம் ஆகியவை கூறும் பெரும்பாலான செய்திகளை சங்க இலக்கியத்தில் பரக்கக் காணலாம்.

 

 

பாரதம் முழுவதற்குமான ஒரே பண்பாட்டைச் சேர்ந்தவரே வள்ளுவர் என்பதும் அதைத் தன் குறள் நெடுகிலும் சுட்டிக் காட்டுகிறார் என்பதற்கும் வேறு என்ன சான்றுகள் வேண்டும்.

 

கடைசியாக் ஒன்று. இமையவர் கோமானான இந்திரனையும் அவர் விட்டு விடவில்லை.

 

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்               

இந்திரனே சாலுங் கரி   (குறள் 25)

 

ஐந்து புலன்களின் ஆசையை ஒழித்தவர்க்குச் சான்று கூற விசும்புளார் கோமானான இந்திரனே வருவான்

 andal-krishnan

ஆஹா, பதிமூன்று குறள்களில் பண்பாட்டைத் தெள்ளென விளக்கும அனைத்தையும் வள்ளுவர் தரும் பாங்கிற்கு ஈடு இணை உண்டோ!

 

 

ஏராளமான செய்திகளைப் பெறுகிறோம்.

 

வானவர் உலகம் உண்டு.

 

அதற்கும்  மேலான உலகமும் உண்டு.

 

வானவர்க்கு பூவுலகினர் பூஜையும் திருவிழாவும் எடுப்பர். மழை இல்லையேல் அவை நடைபெறா. (இந்திரவிழா உள்ளிட்ட பழைய செய்திகளையும், மழை தரும் பொறுப்பு இந்திரனுக்கு உண்டு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.)

 

 

அடக்கம் தேவ லோகத்தையும் அடங்காமை நரகத்தையும் தரும். மனைவி கணவனைப் போற்றல் வேண்டும். அது அரிய வானுலக வரத்தைத் தரும்.

 

தாம்பத்ய இன்ப உறவில் ஏற்படும் இன்பம் தேவலோகத்திலும் கிடைக்காது.

 

புகழுடைச் செயல்களைப் புரிபவன் பொன்னுலகம் போவான்.

களவுத் தொழில் செய்தலும், தன்னை அவமதிப்போரின் பின்னால் செல்லுதலும் தேவர் உலகை அடைய முடியாமல் தடுக்கும் தீமைகளாகும்

 

.

இன்னும் தேவாமிர்தத்தைச் சொல்லாமல் வள்ளுவரால் சும்மா இருக்க முடியுமா?

 

நான்கு குறள்களில் சாவா மருந்தான தேவாமிர்தத்தையும் குறிப்பிட்டு விடுகிறார்.

 

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று     – (குறள் 11)

 

 ambaji-temple-gujarat

மழையை உலகம் அமிழ்தம் எனப் போற்றுவதை இங்கு வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

 

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்            (குறள் 64)

 

தன் குழந்தையின் சிறுகை அளாவிய கூழை விட தேவாமிர்தம் சிறந்ததா, என்ன? இல்லை என்று ஓங்கிச் சொல்வோம் நாம். உலகியல்பு இது!

 

 

நம் முகத்தைச் சுளிக்க வைக்கும் ஒரு உவமையையும் அவர் தந்து விடுகிறார்.ஏனெனில் அப்படிச் சொன்னால் தான் அவர் சொல்ல வரும் பொருளுக்கு வலிமை சேரும்! அதனால் தான்!

நல்ல கற்றறிந்தோர் கூடிப் பேசும் அவையில் ஒன்றுமே படிக்காத ஒரு  முட்டாள் உளற ஆரம்பித்தால், ஐயகோ, அது தூய்மை இல்லாத முற்றத்தில் படைக்கப்பட்ட நல்ல அமிர்ததிற்கு ஒப்பாகும். (‘அசுத்தம்’ உள்ள இலையில் அமிழ்தம் வைக்கப்பட்டால்….?!)

 

அங்கணத்துள் உக்க அமிழ்தத்தால் தங்கணத்தார்          அல்லார் முன் கோட்டி கொளல்        (குறள் 720)

 

இன்னும் ஒரு குறள்- தலைவியின் தோள் அமிர்தத்தினால் ஆனது!

 

 

உறுதோறு உயிர்தளிப்பத் தீண்டலால் பேதைக்கு          

அமிழ்தின் இயன்றன தோள்           (குறள் 1106) 

 

தலைவியின் தோளைத் தீண்டும் போதெல்லாம் (போக இருக்கும்) உயிர் தளிர்ப்பதால் இவள் தோள் அமிர்தத்தினால் செய்யப்பட்

டிருக்க வேண்டும்!

 

எப்படி இருக்கிறது நான்கு குறள்கள்.

 

1330 குறள்களில் சுமார் 17 குறள்களில் தேவலோகத்தைக் காட்டுகிறார் தேவர்! அதாவது ஒரு சதவிகிதத்திற்கும் மேலாக!

 

இதுவே அவர் தன் கருத்துக்களுக்கு வானுலகைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.

 ganga-shiva

என்ன இருந்தாலும் அவரும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வான் உறையும் தெய்வத்துள் சேர்ந்தவர் தானே

‘தனது இனத்தை’ விட்டுக் கொடுப்பாரா என்ன?

 

கருத்துக்களைப் பெற்று மகிழ்கிறோம். அமிழ்தம் உண்டது போல இருக்கிறது!

**********

 

 

 

இந்துக்களின் 18 பிரிவுகள் : பதினெண் கணங்கள்

Samudra manthan
சமுத்ர மந்தனம், பாங்காக், தாய்லாந்து

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1399; தேதி 9 நவம்பர், 2014.

வெளிநாட்டுக்காரர்கள் தங்கள் ஆட்சியை நிலைநாட்டவும் மதத்தைப் பரப்பவும் இந்தியாவுக்குள் நுழைந்தனர் —– பைபிளிலும் குரானிலும் செய்ய பயப்படும் ஆராய்ச்சிகளை, துணிந்து இந்துமத நூல்களில் மட்டும் செய்தனர் —– “இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்” என்ற பழமொழிக்கு இணங்க இந்துக்கள் என்னும் இளிச்சவாயன்களைக் கண்டனர். ரிக்வேதம் பற்றியும், சிவலிங்கம் பற்றியும் கைக்கு வந்த படியும் வாய்க்கு வந்தபடியும் எழுதித் தள்ளினர். “ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி: என்ற பழமொழியும், இந்துக்கள் விஷயத்தில் உண்மை ஆயிற்று—– அவர்கள் குனியக் குனியக் குட்டு வாங்கினார்கள். “இந்தியர்கள் எல்லாம் ஓரினம் அல்ல; அவர்கள் ஆரியர்கள், திராவிடர்கள், கிராடர்கள், முண்டாக்கள் என்னும் நான்கு பிரிவினர்” — என்று சொல்லி வெள்ளைக் காரர்கள், கதைத்தனர்; நகைத்தனர்.

பட்டத்துக்காகவும் பதவிக்காகவும் நம்மூர் அறிஞர்கள் “ஆமாம்சாமி” போட்டனர். இன்னும் சிலர், பிராமணர்களின் மேலாதிக்கததையும் அடாவடித்தனத்தையும் பொறுக்கமாட்டாமல் வெள்ளைக்கரன் சொன்னது உண்மையே என்று எண்ணி கட்சி துவக்கினர். இப்போது தூசிப் புயல் அடங்கி புதிய சிந்தனை மலர்ந்து வருகிறது.

“அட, வெள்ளைக்காரன் சொன்னது இருக்கட்டும். வெள்ளைகாரன் காட்டுமிராண்டியாகத் திரிந்த நாட்களுக்கு முன்னரே நம்மூர் தமிழ் ,வடமொழி இலக்கியங்கள், நாகரீகத்துடன் எழுதப்பட்டு விட்டனவே, அவை என்ன சொல்கின்றன?” என்று பார்ப்போம் என்று பார்க்கத் துவங்கிவிட்டனர்.

அரக்கர்கள், அசுரர்கள், இயக்கர்கள், தைத்யர், தானவர் அனைவரும் வானவர் புதல்வர். எல்லோரும் ரிஷி முனிவர்கள் வழி வந்தவர்கள் என்று நம் இலக்கியங்கள் பகர்வதைக் கண்டு கண் திறந்தனர்— விழிப்புற்றனர்.

பகச் சொல்லி கேளிர் பிரிக்கும் பாங்குடைய வெளி நாட்டுக்கார அறிஞர்கள் சொன்னதெல்லாம் பொய் என்று நகச் சொல்லத் துவங்கிவிட்டனர்.
devasura

ஆரியனுக்கு கூரிய, வீரிய, நேரிய, பாரிய, சீரிய மூக்கு, திராவிடனுக்கு போண்டா மூக்கு என்று வெள்ளைக்காரன் எழுதியதெல்லாம் இப்பொழுது குப்பைத் தொட்டியில் விழுந்து வருகின்றன. விழித் தெழுந்த தமிழன் கேட்கிறான்:–

விஷ்ணு என்பவன் கறுப்பன்
வியாசன் என்பவன் கறுப்பன்
இராமன் என்பவன் கறுப்பன்
கிருஷ்ணன் என்பவன் கறுப்பன்
அகத்தியன் என்பவன் கறுப்பன்
தீர்க்கதமஸ் என்பவன் கறுப்பன்
காளி என்பவள் கறுப்பாயீ
திரவுபதி என்பவள் கறுப்பாயீ
எல்லாம் ஒரே கறுப்பு மயம்!!

எங்கள் ஊர் திராவிடக் கழக சட்டைகளில் கூட இவ்வளவு கறுப்பு கண்டதில்லை. இந்துக்கள் என்றாலே கறுப்பண சாமி மதம் என்று சொல்லிவிடலாம் போல இருக்கிறதே என்று திருப்பித் தாக்கத் துவங்கி விட்டனர். போண்டா மூக்கு அகத்தியனுடன் படுக்க வரமட்டேன் என்று லோபாமுத்திரை போட்ட கண்டிஷன் ( நிபந்தனை ) எல்லோருக்கும் தெரியும். மஹா அசிங்கமான உடலுடைய கறுப்பு வியாசனைக் கண்ட பெண்களுக்கு பிறந்த அங்கஹீன திருதராஷ்ட்ரன், பாண்டு கதையும் நம்க்குத் தெரியும். அகத்தியனும், வியாசனும் அவ்வளவு கறுப்பு, அவ்வளவு அவலட்சணம். ஆனால் நாம் வணங்கும் கடவுளர் – மாமுனிவர்கள் அவர்களே!

18 குடி மக்களை துவாரகையில் இருந்து அழைத்து வந்து தமிழுக்கு இலக்கணம் செய்தவன் அகத்தியன் ((தொல்காப்பியம், புறம் 201 நச்சி. உரை , புறம். கடவுள் வாழ்த்து காண்க)). “ தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்தவன்” – என்று கம்பனால் புகழப்பட்டான். தென் கிழக்காசிய நாடுகள் அனைத்துக்கும் தமிழனைக் கடல் கடந்து அழைத்துச் சென்றவன் அகத்தியன். வியாசரோ உலக மகா சாதனை செய்தார். கங்கு கரை காண முடியாத வேதங்களைப் பகுத்தார். பல லட்சம் பாக்களைக் கொண்ட புராணங்களைத் தொகுத்தார். உலகிலேயே மிக நீண்ட மதப் புத்தகமான மஹாபரதத்தை எழுதிச் சலித்தார்; ஒரு சவாலும் விட்டார். இதில் இல்லாத பொருள் உலகில் இல்லை என்றார். இன்று வரை அது முற்றிலும் உண்மை.

churning3

இந்து மஹா ஜனங்களோவெனில் விழித்தெழுந்து நேற்று கூட அமெரிக்க பெண்மணி வெண்டி டோனேகர் எழுதிய அவதூறு புத்தகததை பெங்குவின் நிறுவனத்தினரை வாபஸ் வாங்க வைத்துவீட்டனர். இந்துக்கள் விழித்தெழுந்ததைக் கண்ட பெங்குவின் புத்தக நிறுவனம் இப்பொழுது நடு நடுங்குகிறது. இவர்களும் மாற்று மதத்தினர் போல பொங்கி எழுந்து நமது உடைமைகளைத் தீக்கிரையாக்கிவிடுவர் என்று அஞ்சி நடுங்குகின்றனர்.

மஹாமாயா என்பவள் மகமாயீ
காத்யாயனி என்பவள் காத்தாயீ
மூகாம்பிகை என்பவள் மூக்காயீ
ராகா தேவி என்பவள் ராக்காயீ

அடப் பாவி மகனே!! எங்களிடம் பொய் சொல்லி இவை எல்லாம் திராவிட தெய்வம்,தமிழர்களின் கிராமீய தெய்வங்கள், வெள்ளைத்தோல் ஆரியன் வணங்குவதெலாம் வேறு தெய்வம் என்று சொன்னாயே என்று “அது”களைக் கேள்வி கேட்கத் துவங்கி விட்டனர் இந்துக்கள்.

வேத நூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பளோ பாரத தேவி!!

மாட்சி தீர் மிலேச்சர் மனப்படி ஆளும்
ஆட்சியில் அடங்குவோன் ஆரியன் அல்லன்

என்ற பாரதி வாக்குப்படி இந்துக்களும் சீறி எழத் துவங்கிவிட்டனர்.

வெள்ளைத் தோல் வெளி நாட்டினன் வந்து ஆரிய—திராவிட விஷ விதை தூவுவதற்கு முன், புற நானூற்றில் (கடவுள் வாழ்த்து மற்றும் புறம் 201), இன்ன பிற சங்க இலக்கிய நூல்கள் ஆகியவற்றிலும் ராமாயண மஹா பாரத நூல்களிலும் என்னதான் சொல்லி இருக்கிறது என்று பார்த்தால் அங்கு ஆரிய திராவிட என்னும் சொற்கள் இனத் துவேஷ பொருளில் எங்கேயுமே காணோம்.
பாரதி என்னும் தூய தமிழ்ப் புலவன் – சொற்தேரின் சாரதி —தனது பாடல்களில் நூற்றுக் கணக்கான இடங்களில் “ஆரிய” என்ற சொல்லை எந்த நற்பொருளில் பயன் படுத்தினானோ அதே பொருளில்தான் புற நானூற்றுப் பதிற்றுபத்துப் புலவர்களும் பயன்படுத்தினர் எனக் கண்டு மகிழ்ந்தனர் தமிழர்கள்.
நம்முடைய இதிஹாச, புராண செந்தமிழ் பைந்தமிழ் இலக்கியங்கள் எல்லாம் செப்புவது யாதெனின், லோகவாசிகள் 18 கணத்தினர்.

ஆ.சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி (தமிழ் கலைக் களஞ்சியம்) தரும் பட்டியல்:

அமரர்
சித்தர்
அசுரர்
தைத்தியர்
கருடர்
கின்னரர்
நிருதர்
கிம்புருடர்
கந்தர்வர்
இயக்கர் (யக்ஷர்)
விஞ்ஞையர் (வித்யாதரர்)
பூதர்
பைசாசர்
அந்தரர்
முனிவர்
உரகர்
ஆகாயவாசியர்
போகபூமியர் — (பிங்கலம்)

இந்த பிங்கலந்தை நிகண்டு கூறும் செய்தி பல பொருள் உடைத்து. சிலர் பூலோக வாசிகள்; சிலர் மேல் லோக வாசிகள். சிலர் காற்றில் சஞ்சரிப்போர். அவர்களை திரிகூட ராசப்ப கவிராயர், திருவண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகள் போன்றோர் வானில் கண்டு அழகுபட தெள்ளு தமிழில் அள்ளித் தெளித்திருக்கின்றனர்.

Assurbanipal_op_jacht
அஸீரிய மன்னன் அசுர பானிபால்

வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பர்
கமன சித்தர் வந்து வந்து காய சித்தி விளைப்பார்
தேன் அருவி திரை எழும்பி வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக் காலும் தேர்க் காலும் வழுகும்
கூனல் இளம் பிறை முடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே

சித்தர்கள் ஆகாய மார்க்கமாக வந்து அருள் புரிவர். இதுபோல பல விஷயங்கள் 18 கணங்களில் உள.
18 கணங்களையும் பொதுவான குழுக்களாகவும் பிரிப்பர்:
1.அமரர், சித்தர், கிம்புருடர், கந்தர்வர், விஞ்ஞையர் (வித்யாதரர்), ஆகாயவாசியர், போகபூமியர் , முனிவர், கின்னரர்
2.இயக்கர் (யக்ஷர்), நாகர்( உரகர்), கருடர்
3.அசுரர், தைத்தியர், பூதர், பசாசர், நிருதர் (ராக்ஷசர்)
இந்தப் பட்டியல் சில மாறுதல்களுடன் ஏனைய நூல்களில் இடம்பெறும்.

எனது முந்தைய கட்டுரைகளில் மேல் விவரம் காண்க.
எனது முந்தைய கட்டுரைகள்:
அரக்கர்கள்,அசுரர்கள் யார்? (நவம்பர் 7, 2014)
அசுரர்கள், அரக்கர்கள் அகராதி (அக்டோபர் 23, 2014)
திராவிடர்கள் யார்?
அகத்தியரை நியூசிலாந்து மக்கள் வணங்குவது ஏன்?

இந்தியாவில் இருந்து அசீரீயா, பாரசீகம் (ஈரான்) முதலிய நாடுகளுக்குச் சென்ற வேத கால இந்துக்களில் ஒரு பிரிவினர் தங்களை அசுரர் என்று அழைத்துக் கொண்டனர். ரிக்வேதத்தில் இந்திரன், அக்னி, வருணன் என்போர் அசுரன் என்று போற்றப்படுகின்றனர். பிற்காலத்தில் பாரசீகம் சென்ற கோஷ்டியால் இப்பெயர் பொலிவிழந்தது. அவர்கள் வருணன் போன்ற வேத கால தெய்வங்களை அசுரன் என்று போற்றினர். சௌராஸ்ட்ரத்தில் (குஜராத்) இருந்து சென்ற சௌரஷ்ட்ரர் (ஜொராஷ்ட்ரர்) என்ற பெயரில் ஒரு மதமும் துவங்கினர். அஸீரிய மன்னர்கள் அசுர என்ற பெயரை தங்கள் பட்டங்களில் சேர்த்துக் கொண்டனர்.

–சுபம்–