Written by London Swaminathan
Date: 13 September 2017
Time uploaded in London- 6-54 am
Post No. 4208
Pictures are taken from various sources; thanks.
மனிதன் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்பது இந்துக்களின் தினசரி வழிபாட்டிலேயே இடம்பெற்றுள்ளது. எல்லா பூ ஜைகளும் முடிந்தபின்னர் யானிகானிச பாபானி… என்ற மந்திரத்தைச் சொல்லி ஆ த்ம ப்ரதக்ஷிணம் (தன்னையே சுற்றிக் கொள்ளல்) செய்வது வழக்கம். பிராமணர்கள் தினமும் 3 முறை செய்யும் சந்தியாவந்தனத்திலும் பாவ மன்னிப்பு கோரும் மந்திரம் வருகிறது. ஆண்டுதோறும் வரும் உபாகர்மா (ஆவணி அவிட்டம்-பூணூல் மாற்றும் நிகழ்வு) மந்திரத்தில் பாபங்களின் நீண்ட பட்டியல் வருகிறது; பெரிய பாவவங்கள், சின்ன பாவங்கள் முன் ஜன்மங்களில் செய்த பாவங்கள் ஆகிய எல்லாவற்றையும் சொல்லி மன்னிப்பு கேட்பர். இந்த மாதிரியான அற்புத மந்திரம் உலகில் வேறு எந்த நூலிலும் இல்லை.
கிறிஸ்தவமதம் போன்றவற்றில் பாவ மன்னிப்பு இருந்தாலும் அவை எல்லாம் ஒரு பெட்டிக்குள் ஒளிந்து கொண்டு பக்கத்துப் பெட்டியில் நிற்கும் பாதிரிமாரிடம் சொல்லுவதோடு நின்றுவிடும். இந்துமதத்தில் தினசரி பிரார்த்தனையில் இருப்பது அதன் சிறப்பு. எல்லோரும் சொல்லும் கந்த சஷ்டி கவசம் போன்றவற்றிலும் “எத்தனை குறைகள்,எத்தனை பிழைகள் எத்தனையடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்” என்று வேண்டுகிறோம்.
ஆனால் இந்தக் கட்டுரையில் உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் (கி.மு1500 முதல் கிமு.6000) உள்ள சில பாவ மன்னிப்பு துதிகளைக் காண்போம்.
“நாங்கள் எங்களை அன்பாக நேசிக்கும் மனிதனுக்கு எதிராகவோ சகோதரனுக்கு எதிராகவோ, நண்பனுக்கு எதிராகவோ, சகாவுக்கு (கூட்டாளி) எதிராகவோ, எங்களுக்குப் பக்கத்தில் வசிப்பவனுக்கு எதிராகவோ, முன்பின் தெரியாத ஒருவனுக்கு எதிராகவோ பாவம் (தீங்கு) செய்திருந்தால், ஓ வருண பகவானே அவைகளை நீக்கு வாயாக.
விளையாட்டில் யாரையாவது ஏமாற்றி இருந்தாலோ தெரிந்தோ தெரியாமலோ பாவம் செய்திருந்தாலோ அவற்றையும் நீக்குக
இந்த எல்லா பாவங்களையும், கட்டுகளை அவிழ்ப்பது போல அவிழ்த்துவிடு; ஓ வருண பகவானே என்றைக்கும் உன் அன்புக்குப் பாத்திரமானவர்களாக நாங்கள் இருக்க வேண்டும்- 5-85-7/8
“எங்கள் தந்தையர் செய்த பாவவங்களில் இருந்து எங்களை விடுவிப்பாயாக; எங்கள் தேகத்தினால் செய்த பாவங்களிலிருந்தும் விடுவி.
நாங்கள் திட்டமிட்டு செய்த பாவம் இல்லை; ஓ வருணா! நாங்கள் குடித்த பானமோ, உணர்ச்சிவசமோ, சூதாட்டமோ, சிந்திக்க மறந்ததாலோ தவறான வழியில் செலுத்தப்பட்டுவிட்டோம்; வலுவானவர், பலவீனமானவரை தீய வழிகளில் செலுத்துகின்றனர்; தூக்கம் கூட அதர்மத்துக்கு வழிகோலுகிறது – 7-86
“அதிதி, மித்ரா, வருணா எவ்வளவு பாவங்களை உங்களுக்கு எதிராகச் செய்தாலும் எங்களை மன்னித்து விடுக 2-27-14
அஸ்வினி தேவர்களே! எங்கள் வாழ்நாட்க ளை நீட்டியுங்கள் பாவங்களை துடைத்து அழியுங்கள் 1-157-4
அழகிய இளம் கடவுள் அக்னி தேவனே! இந்த மானுட உலகத்தில் அறிவீனத்தால் நாங்கள் இழைத்த பாவங்களை
பெருமைமிகு அதிதிக்கு முன்னால் அடியோடு அகற்றிவிடு; நாங்கள் செய்த கொடுமைகளைத் துடைத்தொழி 4-12-4
மற்றவர் செய்த பாவங்களுக்காக எங்க ளை வருத்தாதீர்கள் வசுக்களே: எங்க ளைத் தண்டிக்காதீர்கள் 6-51-7
மருத் தேவதைகளே! நாங்கள் ரஹசியமாகவோ பகிரங்கமாகவோ செய்த எந்த பாவச் செயல்கள் உங்கள் கோபத்தைத் தூண்டிவிட்டது? விரைவாக அவைகளை அழிப்பாயாக -7-58-5
அந்த எல்லையற்ற வ ளம்பெற்ற பிருஹஸ்பதி எங்களைப் பாவமற்றவர்களாகச் செய்யட்டும்; ஒரு தந்தை போல எங்களைக் கவனிக்கட்டும் 7-97-2
செய்த பாவவங்களில் இருந்தும் செய்யாத பாவங்களில் இருந்தும் எங்களைப் காப்பாற்றுங்கள் விஸ்வே தேவர்களே! இன்று எங்களை எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுவித்து மகிழ்ச்சியை அருளுக 10-63-8
எவ்வளவு நேர்மையான முறையீடுகள்!
எவ்வளவு அழகான சொற்கள்;
அடிமனத்தின் ஆழத்திலிருந்து வருந்தி வெளியிட்ட மனக்குமுறல்கள்!
உலகில் பாபிலோனிய, எகிப்திய கிரேக்க நாகரிகங்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பாவ மன்னிப்பு துதிகள் உண்டு.
ஆயினும் கி.மு 3100ல் வியாசரால் நான்காக வகுக்கப்பட்ட வேதங்களில் பழமையான ரிக் வேதத்தில் கோர்வையாக, தொகுப்பாக துதிகள் இருப்பது போல வேறு எங்கும் காணக்கிடைக்கில!
சுபம்
TAGS: வேதம், பாவ மன்னிப்பு, துதிகள்