“சஹஸ்ரகோடி யுகதாரிணே நம:”–
உலகிற்கு கணிதத்தைக் கற்பித்தவர்கள் இந்துக்கள். எதையும் ஆதாரம் இல்லாமல் எழுதினால், நான் எழுதுவதையே படிப்பதை நிறுத்தி விடுவார்கள். ஆகையால் நான் ஆதாரத்துடன் தான் எழுதுவேன். கின்னஸ் சாதனைப் புத்தகத்தை எடுத்தால் பழங்காலத்தில் எழுதப்பட்ட பெரிய எண் ஒரு சமண நூலில் இருப்பதைக் காட்டுவார்கள்.
“சஹஸ்ரகோடி யுகதாரிணே நம:”–என்று விஷ்ணு சஹஸ்ரநாம தோத்திர பலஸ்ருதியில் ஒரு வரி வருகிறது. இதன் பொருள் ‘ஆயிரம் கோடி யுகங்களை இயக்குபவர்’. அதே துதியில் ஏராளமான இடங்களில் ‘சஹஸ்ரம்’ (ஆயிரம்) வருகிறது. வள்ளுவர் ஒரு குறளில் அடுக்கிய கோடி வரும் என்று சொல்வதும் ஆராய்ச்சிக்குரிய விஷயம். இன்னொரு குறளில் 70 கோடி (குறள் 639) என்று சொல்கிறார்.
ஆயிரம் என்ற சொல், ‘சஹஸ்ரம்’ என்பதிலிருந்து வந்தது என்பதை மொழிநூல் வல்லுநர்கள் அறிவர். கோடி என்பதும் சம்ஸ்கிருத் சொல்லே.
ஒரு யுகம் என்பது கிருத யுகம், த்ரேதா யுகம், த்வாபர யுகம், கலியுகம் என்ற நான்கு யுகங்களில் ஒன்றை மட்டும் குறிக்காமல் சதுர்யுகம் (4 யுகம்) என்ற பொருளிலேயே கையாளப்பட்டிருக்கவேண்டும்.
சதுர் யுகக் கணக்கு:
360 மனித ஆண்டுகள்= ஒரு தேவ ஆண்டு
12,000 தேவ ஆண்டுகள்= ஒரு சதுர் யுகம்=
4,32,000 ஆண்டுகள்
இதுபோல ஆயிரம் கோடி யுகங்கள்!! வெள்ளைக்காரர் கணக்கில் 10,000 மில்லியன் யுகங்கள்! (ஒரு கோடி என்பது பத்து மில்லியன்=நூறு லட்சம்).
அதாவது 4,32,000X 1000 கோடி.
அதாவது….
432000 X100000000000=43200000000000000 ஆண்டுகள்.
(இன்னும் ஒரு சுவையான விஷயம்:- 2000 சதுர்யுகம்= பிரம்மாவின் ஒரு நாள். இதுபோன்ற ஆண்டுகளில் பிரம்மாவின் ஆயுள் 100 வருஷம்; என்ன ஐயா! ஒரே கப்சாவாக இருக்கிறது என்று யாராவது சொன்னால் முதல் முதல் “சைன்ஸ் Fபிக்சன்” SCIENCE FICTION கதைகள் எழுதிய பெருமையையாவது இந்துக்களுக்குக் கொடுக்கவேண்டும். மற்ற மதத்தினர் உலகம் கி.மு.4100 வில் துவங்கியது என்று தெரு மூலைகளில் நின்று பிரசாரம் செய்த காலத்தில் இந்துக்கள் மட்டும் இன்றைய வான நூல் நிபுணர்கள் கூறுவதை அன்றே எழுதிவிட்டனர். காலம், கணிதம்— இவை இரண்டிலும் இந்துக்களுக்கிருந்த அறிவு வியப்பூட்டுகிறது. பகவத் கீதையின் விஸ்வரூபதரிசனப் பகுதியைப் படித்துவிட்டு கருந்துளைகள்=பிளாக் ஹோல் BLACK HOLES பற்றிப் படித்தால் நான் சொல்வது விளங்கும்).
இந்துக் குழந்தைகள் பிள்ளையாரை வணங்கும் சம்ஸ்கிருத ஸ்லோகத்தில் கூட ‘சூர்ய கோடி சமப்ரபா’ என்று கணபதியைப் புகழ்வர். இதில் இரண்டு விஷயங்கள் இருப்பதை முன்னரே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டேன். கோடி கோடி கோடி சூரியன்கள் இருப்பது இப்போதுதான் விஞ்ஞானிகளுக்கே தெரியும். ஆனால் அந்தக் காலத்திலேயே இது ஸ்லோக வடிவில் குழந்தைகளுக்குக் கூட சொல்லிக் கொடுக்கப் பட்டுள்ளது. ஒருவருக்கு கற்பனையில் இதுபோல ஒரு சொற்றொடர் வரக் கூட விஞ்ஞான அறிவு இருக்கவேண்டும். இரண்டாவது விஷயம் தசமஸ் ஸ்தானம். இந்த ‘டெசிமல் சிஸ்டத்தை’ DECIMAL SYSTEM எல்லா சம்ஸ்கிருத தமிழ் நூல்களிலும் ஆயிரக்கணக்கான இடங்களில் காணலாம்.
ஆதி சங்கரர் விவேக சூடாமணியில்:
அரிது அரிது மனிதப் பிறவி, அதிலும் அரிது பிரம்மத்தை நாடும் பிறவி
அதனிலும் அரிது வேத அறிவு, அதனிலும் அரிது ஆத்ம ஞானம்
முக்தி பெறுவதோ நூறு கோடியில் ஒன்றே!—என்கிறார். எவ்வளவு பெரிய எண்களைச் சொன்னாலும் அவைகளைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு பொது மக்களிடையே கணித அறிவு இருந்ததை இது காட்டுகிறது. தமிழ் கல்வெட்டுகளில் நூறாயிரம் (லக்ஷம்) என்ற அழகிய சொல்லைக் காண்கிறோம்.
Year 1583 in an inscription Rome
ரிக்வேதத்தைக் கையில் எடுத்துக்கொண்டு எங்கெங்கெல்லாம் எண்கள் வருகிறதோ அங்கெங்லாம் ஒரு ‘ஹைலைட்டர் HIghlighter ‘பேனாவால் கலர் இட்டால் 100, 1000, 100000 என்பனவற்றை நிறைய இடங்களில் காணலாம். இதற்கு 2000 ஆண்டுகளுக்குப் பின்னர் திருக்குறள் எழுதிய வள்ளுவனும் கோடி, ஆயிரம் என்ற சம்ஸ்கிருத சொற்களையும் பல இடங்களில் பயன் படுத்தி இருப்பதைக் காணலாம். விக்ரமாதித்தன் கதைகளிலும் உன் தலை சுக்கு “நூறாக” வெடித்துவிடும் என்று சாபம் கூட டெசிமல் Decimal எண்ணில்தான் வரும்!
Year 1606 in Roman letters
மேலை நாட்டில் இந்த தசமஸ் ஸ்தான முறையையும் இந்து எண்களையும் பயன்படுத்துவது கடந்த பல நூற்றாண்டுகளாகத்தான். அதற்கு முன் அவர்கள் எண்களை எழுதுவதற்கு ஆங்கில (ரோமன் Roman) எழுத்துக்களையே பயனபடுத்தினர். இது அதி பயங்கர குழப்பத்தையும் கஷ்டத்தையும் கொடுத்தது. இன்றும் கூட லண்டனில் பல கட்டிடங்களில் இப்படிப் பழங்கால முறையில் எழுதப்பட்ட ஆண்டுகளைக் காணலாம். இப்போது வெள்ளைக்கார குழந்தைகளுக்குக் கூட அது என்ன என்று படிக்கத் தெரியாது. அராபியர் மூலம் இந்துக்கள உலகிற்குக் கொடுத்த இந்து (1,2,3,4,5………..) எண்களே உலகம் முழுதும் பயன்படுத்தப்படுகிறது.
ஏனைய மத நூல்களில் வரும் எண்கள் மிகவும் சிறியவை. காலத்தைப் பற்றியும் கணிதத்தைப் பற்றியும் இந்து சாத்திரங்களில் இருக்கும் விஷயங்கள் மிகவும் அபூர்வமான கருத்துக்கள். ஐன்ஸ்டைன் போன்ற அறிஞர்கள் அறிந்ததைவிட நம்மவர்களுக்கு கூடுதல் ஞானம் இருப்பதை “எதிர்காலக் கண்டுபிடிப்புகள் பற்றி இந்துக்களின் ஆரூடம்” Hindus’ Future Predictions Part 1, Part 2 என்ற இரண்டு பகுதிக் கட்டுரைகளில் ஏற்கனவே கொடுத்திருக்கிறேன்.
எனது முந்தைய 625 கட்டுரைகள் பற்றி அறிய தொடர்பு கொள்ளவும்:
Contact London Swaminathan:– swami_48@yahoo.com
Please read my earlier articles on Numbers:
1)Hindu’s Magic Numbers 18, 108, 1008 (Posted on 26 November 2011)
2)MOST HATED NUMBERS 666 and 13 (Posted on 29 July 2012)
3)Amazing TAMIL Mathematics (Posted on 8 August 2012)
4)தமிழர்கள் கணித மேதைகள் (Posted on 8 August 2012)
Ramachandran Guruswamy Iyer
/ October 27, 2013The notation of v, x L C etc., is known as katapayathi system in
Sanskrit i.e., indicating numerals by numbers. I still wonder how
ancient Babylonians/Greeks etc., with katapayathi system formed
complicated maths. In Tamilnadu we have system of memorizing tables
and unique word suzhi for zero. I wonder the concept of squares and
circles to indicate Devas and Pithrus. Where is the missing link?
Whether the table system evolved in tens and thousands of years
travelled to Babylonia adopted and perfected in their own way of
numerals travelled to Phonecia/Egypt/Greece? How can the mystery
unrevelled?