நான் ஏன் எப்பொழுதும் சந்தோஷமாகவே இருக்கிறேன்? (Post No 2586)

happy 3

Written by S Nagarajan

 

Date: 1st March 2016

 

Post No. 2586

 

Time uploaded in London :–  8-06 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ஹிந்து வாழ்வியல்

 

நான் ஏன் எப்பொழுதும் சந்தோஷமாகவே இருக்கிறேன்!

.நாகராஜன்

 IMG_2726

ஹிந்து இலக்கியம் வெற்றி இலக்கியமே

ஹிந்து இலக்கியங்கள் கூறும் வாழ்வியல் ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குமான வாழ்வியலாகும்.

ஆனால் அவை பல லட்சக்கணக்கான ஸ்லோகங்களில் பொதிந்துள்ளபடியால் எளிதில் பெறுதல் சிறிது கடினம்! ஆகவே, அவற்றை அன்றாடம் அறவோர் மக்களுக்குக் கூறி வந்தனர்.

 

ஆனால் இன்றைய நடைமுறையில் அந்த பழைய கால குரு குல முறை மற்றும் கதா ப்ரவசனங்கள் இல்லை. காடுகளும் பாழ்பட்டுப் போயின; கதை சொல்லும் மண்டபங்களும் பாழாகி இடிந்து வீழ்ந்துள்ளன.

ஆகவே ஆர்வமுள்ளோர் தேடித் தேடி அவற்றைத் தாமே தொகுக்க வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

 

 

நான் ஏன் சந்தோஷமாகவே இருக்கிறேன்!

ஒரு சின்ன எடுத்துக் காட்டாக, ஒரே ஒரு பொருள் பற்றி சில அறிவுரைகளைஅறவுரைகளை இங்கு பார்ப்போம்.

நான் ஏன் எப்பொழுதும் சந்தோஷமாகவே இருக்கிறேன்?!

இது சாத்தியம் தானா? சாத்தியமே!

 

 happy4

நாரதர்ஸமங்கர் ஸம்வாதம்

பீஷ்மரிடம் தர்மர் ஏராளமான விஷயங்களை அவர் மரணப்படுக்கையில் இருக்கும் சமயம் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்.

அதில் சாந்தி பர்வத்தில் 292ஆம் அத்தியாயத்தில் வரும் ஒரு சிறிய பகுதி இது.

நாரதருக்கும் ஸமங்கருக்கும் நடந்த ஸம்வாதத்தில் (ஸம்வாதம் என்றால் அர்த்தமுள்ள உரையாடல்!) நாரதர், ஸமங்கரை நோக்கி, “எப்பொழுதும் மனதில் சந்தோஷமடைந்து சோகமற்றவர் போல இருக்கிறீர்என்று சொல்லவே அவர் பதிலாகச் சொல்வதில் ஒரு பகுதி:-

 

நான் சகலமான பிராணிகளிடமும் நடந்ததையும் நடக்கின்றதையும் நடக்கப் போகின்றதையும் அவைகளின் தத்துவங்களையும் அறிகின்றேன். அதனால் நான் மன வருத்தமில்லாதவனாக இருக்கின்றேன்.”

நான் உலகத்தில் காரியங்களின் ஆரம்பங்களையும், மறுபடி பயன்களின் உற்பத்திகளையும் நானாவிதமான பயன்களையும் அறிவேன். அதனால் நான் மன வருத்தமில்லாதவனாக இருக்கின்றேன்.”

அவருடைய பயன் தரும் விளக்கம் தொடர்கிறது.

 

 IMG_2750

ஹிந்து ஞானம்சந்தோஷமடையும் வழி பற்றி!

ஹிந்து இலக்கியங்களின் சாரத்தை மைசூரிலிருந்து வெளியான வாரப் பத்திரிகையான ரேஷனலிஸ்ட் (Rationalist) இதழில் ஜி.ஆர். ஜோஸ்யர் (G.R.Josyar) தொகுத்து வெளியிட்டு வந்தார். இதைப் படித்தவர்கள் வியந்தனர். இப்படி ஒரு ஹிந்து பொக்கிஷம் இருக்கிறதா என்று!

 

மைசூர் மஹாராஜா, சர் சி.பி.ராமஸ்வாமி ஐயர் போன்றோர் இதைப் புத்தகமாக வெளியிட ஆலோசனை கூறினர். அதை ஏற்று ஜி.ஆர், ஜோஸ்யர்சான்ஸ்க்ரீட் விஸ்டம்’ (Sanskrit Wisdom) என்ற சிறு நூலை (160 பக்கம்) வெளியிட்டார்.

அதில் இடம் பெறும் ஒரு விஷயம்நான் ஏன் எப்பொழுதும் சந்தோஷமாகவே இருக்கிறேன்?!

 

“I do not get feverishly concerned with what is happening to me now, or what may happen to me tomorrow. Therefore I live quite happily.”

“I do not fear the approach of old age or death, or rejoice over conquests and achievements. Therefore I live quite happily.”

“I look upon gains as they come and losses as they come as the same as my two hands. Therefore I live quite happily.”

 

“When I acquire some fresh knowledge from time to time, it brings me wisdom, and not conceit. Therefore I live quite happily.”

“Though I am powerful I do not forcefully defraud others. Though poor I do not cherish wants. Therefore I live quite happily.”

 

“I rejoice in the happiness of others, and sympathize with the miserable. The proud find in me a companion. Therefore I live quite happily.”

“I do not look on anyone as my own or any as aliens. Therefore I live quite happily.”

 

“I view all things with steadfast, genuine and friendly interest. Therefore I live quite happily.”

 the_laughing_buddha_by_mdhamka-d5qlx26

இதற்கான எமது தமிழாக்கம்:-

எனக்கு இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றியோ அல்லது நாளைக்கு என்ன நடக்கப் போகிறது என்பது பற்றியோ நான் பதட்டத்துடன் கவலைப்படுவதில்லை. ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

முதுமை அல்லது சாவு வருகிறதே என்று நான் பயப்படுவதும் இல்லை, அல்லது வெற்றிகளையும் சாதனைகளையும் பற்றி எண்ணி மகிழ்வதுமில்லை. ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

வருகின்ற லாபங்களையும் வருகின்ற நஷ்டங்களையும் என் இரு கைகளைப் போல நான் பார்க்கிறேன். ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

 

அவ்வப்பொழுது நான் புதிய விஷயம் பற்றிய அறிவைப் பெறும் போதெல்லாம் அது எனக்கு ஞானத்தை நல்குகிறது. இறுமாப்பை அல்ல. ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

 

நான் சக்தி வாய்ந்தவனாக இருந்தாலும் மற்றவர்களை ஏமாற்றுவதில்லை. நான் ஏழையாக இருந்த போதும் கூட தேவைகளை மனதில் வைப்பதில்லை. ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

நான் மற்றவர்களின் மகிழ்ச்சியில் சந்தோஷப்படுகிறேன். துன்பப்படுவோரின் மீது இரக்கமுறுகிறேன். ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

 

 

நான் யாரையும் எனக்குச் சொந்தமானவராகவோ அல்லது எனக்கு அன்னியராகவோ நினைப்பதில்லை. ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

நான் அனைத்தையும் நேர்மையுடனும், சுத்தமாகவும், நட்புடன் கூடிய ஆர்வத்துடனும் பார்க்கிறேன். ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

 happy2

சந்தோஷமாக வாழ வழி தெரிகிறதல்லவா!

வாழ்வோம்; வளர்வோம்; அனைவரையும் சந்தோஷமாக வாழ வைப்போம்!

****************

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: