சுமேரியாவும் பிராமணர்களும் – Z IGGURAT ஜிக்குராட் மர்மம் ! (Post No.9206)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9206

Date uploaded in London – –30 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுமேரியாவும் பிராமணர்களும் – Z IGGURAT ஜிக்குராட்  மர்மம் !

சுமேரியா என்றால் என்ன?

இராக் நாட்டின் ஒரு பகுதி. டைக்ரிஸ் – யூப்ரடீஸ் என்ற நதிகளின் சமவெளிப் பகுதி.

ஜிக்குராட் ZIGGURAT என்றால் என்ன?

படிப்படியாக அமைந்த சதுர கோபுரம். இந்துக் கோவில் போல இருக்கும்; ஆனால் படிப்படியாக – அதாவது கட்டம் கட்டம் ஆக சிறுத்துக் கொண்டே போகும் .  இந்துக் கோவில் முக்கோணம் போல உயரும். ZIGGURAT சிக்குராட் சதுரம், குட்டி சதுரம், குட்டி குட்டி சதுரம் என உயரும் .

இதற்கும் பிராமணர்களுக்கும் என்ன தொடர்பு?

பிராமணர்கள் நாள் தோறும் மூன்று முறை சூரியனை நோக்கி காயத்ரி மந்திரம் சொல்லுவார்கள். அந்த மந்திரம் நாலு வேதத்திலும் உள்ளது. உலகில் 8000 ஆண்டுகளாக பிராமணர்கள் சொல்லும், செய்யும் அற்புதம் இது. ஹெர்மன் ஜாகோபியும், பால கங்காதர திலகரும் ரிக் வேத காலத்தை ‘கி.மு. 6000 வரை’ என்று வான சாஸ்திர வழியில்- அடிப்படையில் நிரூபித்துள்ளனர். தள்ளிப்போன , தகிடுதத்தப் பேர்வழி மாக்ஸ்முல்லர் குத்து மதிப்பாக கி.மு 1200 என்று சொல்லிவிட்டு, பின்னர் வில்சன், விண்டர்நிட்ஸ் முதலிய அறிஞர்கள் கொடுத்த அடியில் அசந்து போய், ரிக்வேதம் கி.மு 1500 அல்லது அதற்கும் முன்னதாக இருக்கலாம்; எவரும் அதன் காலத்தைக் கணிக்க முடியாது என்று சொல்லி ‘ஜகா’ வாங்கினார்.

அப்பேற்பட்ட பெருமை மிகு  ரிக்வேத மந்திரத்தில் ZIGGURAT சிக்குராட் வருகிறது.

XXX

ZIGGURAT சிக்குராட் – சிகரம் ஏன் கட்டினார்கள்?

இந்த சதுர கோபுரம் பற்றி பைபிள் முதல் ஹெரோடோட்டஸ் (HERODOTUS) வரை பலரும் பல சுவையான விஷயங்களை நமக்கு விட்டுச் சென்றனர். பைபிளின் முதல்(GENESIS) அதிகாரத்தில் பேபல் கோபுரக் (TOWER OF BABEL) கதை வருகிறது. சொர்கத்துக்குப் போக மக்கள் செங்கல், சுண்ணாம்பு கொண்டு கோபுரம் அமைக்க முயன்றதால், கடவுளுக்கு கோபம் வந்தது. அவர்கள் நீங்கள் எல்லோரும் பல மொழிகளைப்ப பேசுவோராகி உலகெங்கும் ஓடிப்போங்கள் என்று சபித்துவிட்டார். இந்தக் கதையில் வரும் கோபுரம் சதுர சிக்குராட் கோபுரம். அது அழிந்து போகவே பின்னர் நெபொ போலசார் மகன் நெபுகட்னேஸார் ஒரு கோபுரம் கட்டினார்.

இதுதவிர சிக்குராட் பல கட்டப்பட்டு அவற்றினுச்சசியில் — சிகரத்தில் இறைவன் சிலைகள் வைக்கப்பட்டன. நாம் குன்றுதோறும் ஆடிவரும் குமரனை வழிபடுவது போல, பக்தர்கள் படி ஏறிச் சென்று கடவுளை வழிபட்டனர் .

இந்த ஜிக்குராட் ZIGGURAT= SIKHARA என்பது சிகரம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் சிதைவு ஆகும். ஐயர் தலையிலுள்ள சிகா – சிகை — என்னும் குடுமியும் இதே பொருளுடைத்தே !

ஹெரோடோட்டஸ் (HERODOTUS) என்னும் அறிஞர் சொன்ன விஷயத்துக்கு முன்னர், சுவையான பிராமண விஷயத்தைச் சொல்லிவிடுகிறேன் . பிராமணர்கள் தினமும் ‘காணாமல், கோணாமல், கண்டு’ — என்ற வகையில் மூன்று முறை சூரியனைத் தொழுவர். சூரியனைக் ‘காணாமல்’ – அதாவது சூர்யோதயத்துக்கு முன்னால் – நடுப்பகலில் – நிழல் ‘கோணாத’ நேரத்தில் – ‘கோணாமல்’ ஒரு முறை தொழுகை நடத்துவர். மாலையில் ‘கண்டு’- அதாவது சூரியன் மலைவாயில் விழுந்து மறைவதற்கு முன்னர் அவனைக் ‘கண்டு’ ஒரு முறை தொழுகை நடத்துவர். இது தவிர சமிதா தானம் (பிரம்மச்சாரிகளுக்கு), ஒளபாசனம் முதலிய தீ / அக்னீ  சடங்குகள் தனி.

பிராமணர்கள் உலக மஹா அதிசயங்கள்! ஏனெனில் இன்றும் 8000 வருஷமாக ஒரு சடங்கைச் செய்யும் அதிசயங்கள். அது மட்டுமல்ல; அதை வாய் மொழியாகவே பரப்பிவரும் மஹா அதிசயங்கள்!!! அவர்கள் மூன்று முறையும் சூரிய வெளிச்சத்தில் நின்று கொண்டு காயத்ரியை – தேவியை — இருதயத்துக்குள் அமர்த்துவர்- அதாவது ‘ஆவாஹனம்’ செய்வார்கள் . அது எப்படி?

கைகளை மூன்று முறை உடப்பக்கமாக காட்டி (INVOKING) வருக, வருக , வருக என்று மூன்று முறை அழைப்பர். நாம் சினிமா வசனங்களில் கேட்கும் ‘அலை மகள், கலை மகள் , மலை மகளை’ காயத்ரீம் ஆவாஹயாமி , ஸாவித்ரீம் ஆவாஹயாமி, ஸரஸ்வதீம் ஆவாஹயாமி  என்று அழைப்பர்.

இதில் சுவையான விஷயம் என்ன தெரியுமா?

அவள் Z ஜிக்குராட்டில் இருந்து — மேரு மலை ‘சிகரத்’தின் உச்சசியில் இருந்து வந்து பிராமணர் இதயத்துக்குள் அமர்வாள் ; பிராமணர்கள் தொழுகை முடித்தவுடன் அவளை திருப்பி அனுப்பும் மந்திரத்தில் ‘Z ஜிக்குராட்’ வருகிறது

தாயே! ரொம்ப THANKS தாங்க்ஸ் . திருப்பியும் சிகர உச்சிக்கே போய் விடு என்று GOOD BYE ‘குட் பை’ சொல்லுவார்கள்.

உத்தமே சிகரே தேவி பூம்யாம் பர்வத மூர்தனி

பிராம்மணோ ஹ்யணுக்ஞானம்

கச்ச தேவி யதா சுகம்”

என்ற மந்திரத்தைச் சொல்லி வழி அனுப்புவார்கள்.

மந்திரத்தின்  பொருள்

பிரகாசிக்கின்ற காயத்ரீ தேவியே, பூமியில் பிரம்மோபாசனம் செய்கின்ற எங்களுக்கு அனுக்கிரகத்தைச் செய்து , ‘மேரு மலை உச்சியில் உத்தமமான சிகர’த்திலுள்ள உனது ஆலயத்தில் ஆனந்தமாய் எழுந்தருள்வாய் “.

அவள் கடவுள் தானே !

பில்லியன் பிராமணர்கள் ட்ரில்லியன் தடவை கூப்பிட்டாலும் அலுப்பு சலிப்பில்லாமல் ஜிக்குராட் / சிகரத்தில் இருந்து இறங்கி வந்து இதயத்துள் அமர்ந்து அருள் புரியும் அற்புதமே அற்புதம் !!

ஹெரோடோடஸ் என்ற கிரேக்க அறிஞர் 2600  ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார். அவர் பல விஷயங்களை எழுதியதில் Z க்குராட்  விஷயமும் வருகிறது எட்டு அடுக்கு கோபுரம் பற்றி வருணிக்கையில் போகப் போக சதுரங்கள் சிறுத்துக் கொண்டே போவதாக எழுதியுள்ளார்.

இந்த சதுர கோபுரம் வானவியல் ஆராய்ச்சிக்கும் பயன்பட்டதாம். இந்துக்களைப் போலவே சுமேரியர்களும் நாள், நட்சத்திரம் பார்த்து விழா க்களைக் கொண்டாடினர்.

என்னுடைய முந்தைய கட்டுரைகளில் சுமேரியாவில் நம்மவர்கள் குடியேறியதைக் காட்டும் 30 சிந்து – ஸரஸ்வதி நதி தீர முத்திரைகள், தேக்கு மரத்துண்டுகள், சம்ஸ்க்ருத மன்னர் பெயர்கள் பற்றி எழுதியுள் ளேன் . சுமேரிய மன்னர்கள் பட்டியல் சுமார் 4500 ஆண்டுகள் பழமையானது

நரம் சின் NARAM SIN , அமர் சின் AMAR SIN  முதலிய பெயர்கள் நமக்கு நர சிம்மன் / நர சந்திரன் , அமர சிம்மன்/ அமர சேனன், அமர சந்திரன் முதலிய பெயர்களை நினைவு படுத்தும் . மேல் விவரங்களை 20, 30 தமிழ் ஆங்கிலக் கட்டுரைகளில் தந்து விட்டேன் ; கண்டு கொள்க .

–SUBHAM —-

Tags – சுமேரியா , பிராமணர் , ஜிக்குராட் , சிகரம், காயத்ரீ

பிராமணர், க்ஷத்ரியர், வைசியர் வேதம் படிக்க வேண்டும் – மநு கட்டளை (Post No.7353)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 17 December 2019

Time in London – 9-38 AM

Post No. 7353

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

மநு நீதி நூல் – Part 46

ஒன்பதாவது அத்தியாயத்தை 16-11-2019-ல் முடித்தோம் . இன்று பத்தாவது அத்தியாயத்தைத் துவங்குவோம் இணைப்பில் முழு சுலோகங்களின் பொருள் உளது. முதலில் சுவையான செய்திகளை புல்லட் (BULLET POINTS) பாயிண்டுகளில் தருகிறேன்.

please go to swamiindology.blogspot.com for an old Manu Smriti Tamil Book.

இந்த அத்தியாயத்தில் மிக முக்கியமான பொன்மொழி ஸ்லோகம் 63-ல் வருகிறது .

அஹிம்ஸை, உண்மை, பிறர் பொருள் திருடாமை, தூய்மை , புலன் அடக்கம் ஆகியன நான்கு ஜாதிகளுக்கும் பொது என்று அறிவிக்கிறார்.

அதற்கு அடுத்த முக்கியத்துவம் வாய்ந்தது ஸ்லோகம் 62 ஆகும் . பிராமணன், கோ மாதா ,பெண்கள், குழந்தைகளைக் காக்க உயிர்விடுவோர் உயர்நிலையை அடைவர். இது சிலப்பதிகாரத்திலும் வருகிறது. மதுரையை எரிப்பதற்கு முன்னர் இவர்களை மட்டும் வருத்தாதே , தீண்டாதே என்று அக்கினி தேவனுக்கு கண்ணகி கட்டளை இடுகிறார். திருவள்ளுவரும் பிராமணர்களையும் பசுவையும் முதலில் வைக்கிறார். குறள் 560, 1066.

ஸ்லோகம் 65-ல் ஏழே தலைமுறையில் சூத்திரன் பிராமணன் ஆகிவிடுவான் என்கிறார்.

ஸ்லோகம் 69 முதல் 73 வரை மநு ஒரு சுவையான பட்டிமன்றம் நடத்துகிறார் விதை/ஆண் முக்கியமா , நிலம்/பெண்  முக்கியமா என்று. இறுதியில் நல்ல நிலத்தில் நல்ல விதை விதைப்பதே சாலச்சிறந்தது என்று தீர்ப்பு வழங்குகிறார் .

இந்த அத்தியாயத்தில் முதல் 70 சுலோகங்களில் கலப்புத் திருமணம், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் பற்றி நிறைய ‘வகை’கள் வருகின்றன. அதில் விராத்யர் , திராவிடர், தஸ்யூ , யவனர் காம்போஜர், சகர் முதலியோர் யார் என்று விளக்கப்படுகின்றனர் . ஆயினும் இவையனைத்தும் இன்று நாம் வழங்கும் பொருளில் பயன்படுத்தப்படவில்லை . ஏனெனில் வேறு பல தேச பெயர்களும் கலப்புத் திருமண வகைகளில் வருகிறது.

இரண்டு விஷயங்கள் தெளிவாகத் தெரிகின்றன.

1.மனு நீதி நூலின் இந்த அத்தியாயம் எழுதப்பட்ட அல்லது சேர்க்கப்பட்ட காலத்தில் கலப்புத் திருமணம் பெருவாரியாக நிகழ்ந்தது. இதை நாம் மகாபாரதத்திலும் காண்கிறோம்.

2.யவனர், திராவிடர், காம்போஜர், சகரர் ஆகியோரும் இந்துக்களே.

முதல் இரண்டு ஸ்லோகங்களில் மூன்று வர்ணத்தினரும்  வேதம் படிக்க வேண்டுமென்பது எந்தக் காலம் வரை பின்பற்றப்பட்டது  என்பதை ஆராய வேண்டும்.

சுலோகம் 20, 22 –திராவிடர், விராத்யர் பற்றிப் பேசுகிறது. தமிழ்ச் சங்கத்தில் நக்கீரர் முதலிய பிராமணர்கள் விராத்தியர் எனப்படுவர். அவர் சங்கு அறுத்து வளையல் செய்யும் தொழிலில் இருந்தார்.

ஸ்லோகம் 25 முதல் கலப்புத் திருமண தம்பதிகளுக்குப் பிறந்த குழந்தைகள் பற்றிப் பேசப்படுகிறது. இவையெல்லாம் இக்காலத்தில் பொருத்தம ற்றதாகிவிட்டன.

ஸ்லோகம் 47 முதல் அவர்கள் செய்யவேண்டிய தொழில்கள் பற்றி வருகிறது.

ஸ்லோகம் 58-ல் ஆர்யன் (ARYAN)  அல்லாதான் குணம் பற்றி வருகிறது. இன்று இனப் பொருளில் பயன்படுத்தும் ஆர்யன் அல்ல இது . பண்பாடற்றவன் என்பதே பொருள்- அனார்யன் . என்றால் நாகரீகமற்றவன் என்று பொருள். கிரேக்கர்கள் மற்றவர்களை பார்பேரியன் (BARBARIAN) என்று அழைத்தது போல. இன்று அந்தச்சொல்லின் பொருள் காட்டுமிராண்டி

கம்போடியாவில் பிராமணர்களுக்குக் கோவில்! (Post No.5098)

ஜாகர்த்தா மியூஸியத்தில் உள்ள ஸம்ஸ்க்ருத கல்வெட்டு. 

இந்தோநேஷிய பாஷா லிபியில் உளது.

 

Written by London swaminathan

Date: 11 JUNE 2018

Time uploaded in London –  8-25 am  (British Summer Time)

Post No. 5098

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

கம்போடியாவில் பிராமணர்களுக்குக் கோவில்! (Post No.5098)

 

பிராஹ்மணத் தலைவர்களுக்கு கம்போடிய மன்னர்கள் கோவில்கள் கட்டிய சுவையான தகவல்கள் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகின்றன.

 

கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம், பர்மா, இந்தோநேஷியா ஆகிய நாடுகளில் உள்ள கல்வெட்டுகளில் அங்குள்ள பிராஹ்மணர்களின் செல்வாக்கு பற்றிய அரிய பெரிய தகவல்கள் கிடைக்கின்றன. யசோவர்மன் (கி.பி.889) என்னும் கம்போடிய மன்னனின் கல்வெட்டு பின்வரும் தகவலை அளிக்கிறது:-

 

‘மன்னன், கடமைகளில் தவறாதவன்; கோடி ஹோமமும் பல யக்ஞங்களும் செய்தான்; பிராஹ்மணர்களுக்கு தங்கமும் நகைகளும் வாரி வழங்கினான்’ — என்று கல்வெட்டு கூறுகிறது. அவனது காலத்தில் சைவ சமயம் தழைத்தோங்கியது.

 

 

கம்போடியாவில் ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பிராஹ்மணர்கள் பிரசன்னமாயிருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. இந்தியாவிலிருந்து தொடர்ந்து வந்த பிராஹ்மணர் எண்ணிக்கையால் அவர்களின் ஜனத்தொகை அதிகரித்தது.

 

மன்னனையே இறைவனாக கருதி கோவில் கட்டுவது இரண்டாவது ஜயவர்மன் (கி.பி.802) காலத்தில் ஆரம்பித்தது. அதற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அந்த வழக்கம் வளர்ந்தது. அங்கோர்வட் காலத்தில் வைஷ்ணவ மதம் செழித்தது.

 

பிராஹ்மணர்களின் செல்வாக்கு வளர, வளர மன்னர்களுக்கும் மேலாக அவர்கள் புகழ் பரவியது. குறிப்பாக சிவ கைவல்யர் என்னும் குடும்பத்தினர் பரம்பரையாக மன்னர்களுக்குப் புரோஹிதர்களாக விளங்கினர்.

 

நமது நாட்டில் பிரதம மந்திரிகள், முதல் மந்திரிகள், கவர்னர்கள் மாறினாலும் அவர்களிடம் வேலை பார்த்த சில அரசாங்க அதிகாரிகள் மற்றும் செயலர், டிரைவர், பியூன், சமையல்காரர் தொடர்ந்து வேலையில் நீட்டிப்பதால் அவர்கள் இல்லாமல் எதுவும் நடக்காது; அவர்களின் நீண்ட கால அனுபவம் பயன்படும். இதுபோல சில பிராஹ்மணக் குடும்பங்கள் பல    மன்னர்களை உருவாக்கின. அவர்களுடைய தயவு மன்னர்களுக்குத் தேவைப்பட்டது.

எகிப்திய மன்னன் அம்னோதேப்புக்கு (அமண தேவன்= ஸ்ரமண தேவன்)துருக்கி மன்னன் தசரதன் எழுதிய கடிதம்/ கல்வெட்டுக்யூனிபார்ம் லிபியில் உளது.

மேலும் அவர்களுடைய ஸம்ஸ்க்ருத அறிவு சட்டப் புத்தகங்களையும் வேத தர்மங்களையும் அறிய உதவியது. இதனால் வெறும் புரோகிதர் பதவியில் மட்டுமின்றி சட்ட ஆலோசகர்களாகவும், அமைச்சர்களாகவும் விளங்கினர். அங்கோர்வட் சிற்பங்களில் பிராஹ்மண ஆசிரியர் துரோணர், பிராஹ்மணராக மாறிய விஸ்வாமித்ரர் ஆகியோர் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கோடஸ் (COEDES) என்னும் அறிஞர் செப்புகிறார்.

 

சிற்பங்களில் உயர்குடி மக்கள் உச்சுக் குடுமியுடனும் (தலையின் உச்சியில் தூக்கிக் கட்டிய குடுமி) CHINGON, தாழ்ந்த குல மக்கள் கீழே தொங்கும் தாழ் சடையுடனும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். சில ஊர்வல சிற்பங்களில் பிராஹ்மணர்கள் மட்டுமே அதைக் காண்பதாகவும் உள்ளன.

 

மன்னர்களுக்குத் தலை வணங்காத ஒரே இனம் பிராஹ்மணர்கள் என்பதாக சிற்பங்கள் காட்டும்; ஏனையோர் தாழ்ந்த தலையுடன் நிற்பர். இத இந்தியாவிலும் காணலாம். மன்னர்கள் இறைவனுக்கும் பிராஹ்மணர்களுக்கும் மட்டுமே தலை வணங்குவர், தலை தாழ்த்துவர் என்று மிகப் பழைய புற நானூற்றுப் பாடல்கள் போற்றுகின்றன.

 

தாய்லாந்து, கம்போடியாவில் புத்த மதம் ஆதிக்கம் பெற்றபோதும் பிராஹ்மணர்களுக்கே முதலிடம் தரப்பட்டது; தாய்லாந்தில் இன்று வரை இது நீடிக்கிறது.

 

கம்போடியாவில் பிராஹ்மணர்கள் க்ஷத்ரிய ஜாதியாருக்குப் பெண் கொடுத்து, பெண் எடுத்த செய்திகள்  உள. புராதன பிராஹ்மணர்களின் வழி வந்த பாகு (Bakus) என்போர் மன்னர் ஆட்சிக்கு வழி இல்லாத போது அரசு கட்டிலும் ஏறி முரசு கொட்டினர்.

 

அசோகர் கல்வெட்டுகளில் எப்படி புத்தமத ஸ்ரமணர்களுக்கும் முன்னர் பிராஹ்மண ஜாதி குறிப்பிடப்படுகிறதோ அதே போல பர்மா, தாய்லாந்து, கம்போடியா முதலிய நாடுகளில் புத்த மதத்தினருக்கும் முன்னதாக பிராஹ்மண குருக்களே இடம் பெற்றனர்.

 

 

ஐயருக்கும் கோவில்கள்

சில பிராஹ்மணத் தலைவர்கள் “புலன் அழுக்கற்ற அந்தணாளன்” என்று கபிலர் என்னும் புலவரை சங்கத் தமிழ் நூல்கள் போற்றுவது போல ஒழுக்க சீலர்களாகவும், அறநெறி தவறா பெருந்தகைகளாகவும் இருந்த காரணத்தால் அவர்களுக்குக் கோவில்களும் எழுப்பப்பட்டன.

 

எட்டாவது ஜயவர்மன் காலத்தில் ஜயமங்களார்த்த என்ற பிராஹ்மண புரோகிதருக்கு கோவில் கட்டப்பட்டது. இதே போல வித்யாவிசத் என்பவருக்கும் கோவில் இருந்தது. சீன யாத்ரீகர்கள் பூணுல் அணிந்த பிராஹ்மணர்களைப் பார்த்ததை குறிப்பிடத் தவறவில்லை.

 

 

ஒன்பதாம் நூற்றாண்டு முதலாவது இந்திரவர்மன் கால அங்கோர்வட்டில் சிவ சோமன் என்ற பேரறிஞரைப் பற்றிக் குறிப்பிட்டு, அவர் சங்கரரிடம் வேதாந்தம் கற்றவர் என்று சொல்லப்பட்டுள்ளது.

 

பிராஹ்மணர்கள் கடல் கடந்து போக க்கூடாது என்று மநு தர்ம சாஸ்திரம் புகலும். பெண்கள் கடல் கடந்து போகக் கூடாது என்று தமிழ் தொல்காப்பியம் நுவலும். ஆயினும் பணத்துக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு பலரும் சென்றதை கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம். இலங்கையின் முதல் மன்னனுக்கு – விஜயனுக்கு— அரச குல மங்கைகள் தேவைப்பட்டதால் மதுரை பாண்டிய நாட்டிலிருந்து பெண்கள் அனுப்பப்பட்டனர்; அவர்களில் ஷத்ரிய குல நங்கைகளும் அமைச்சர்களின் பிராஹ்மண குல மங்கைகளும் அடக்கம்.

 

இதே போல தென் கிழக்காசிய நாடுகளில் இந்தியப் பிராஹ்மணர்களின் வருகை பற்றிப் பகரும்  கல்வெட்டுகளும் உள.

 

1500 ஆண்டுகளுக்குக் கொடிகட்டிப் பறந்த  தென் கிழக்காஸிய நாடுகளின் இந்து சாம்ராஜ்யத்துக்கு விதை ஊன்றியவர்களும் அகஸ்த்யர், கௌண்டின்யர் என்ற இரண்டு பிராஹ்மணர்களே.

 

கம்போடியாவில் மட்டுமின்றி பர்மாவிலுள்ள பகான், தாய்லாந்திலுள்ள சுகோதை நகர அரச வம்சங்களுக்கும் பிராஹ்மண புரோகிதர்களே அபிஷேக ஆராதனைகளை செய்துவைத்தனர். அவர்களுக்குப் பின்னர் புத்த குருமார்கள் வந்தனர். பிராஹ்மண குருக்களை வேலைக்கு எடுத்தபோதே அவர்களுக்கு ஸம்ஸ்க்ருத நூல் அறிவோடு பௌத்த மத ஸம்ப்ரதாயங்களும் தெரிய வேண்டும் என்று புதிய தகுதிகள் வரையறை செய்யப்பட்டன.

 

சம்பா என்று அழைக்கபட்ட வியட்நாமில் பிராஹ்மணர் நிலை தாழ்ந்த அளவுக்கு ஏனைய நாடுகளில் தாழவில்லை. சம்பா தேசத்து போ நகர கல்வெட்டில் பிராஹ்மணர்களும் மன்னர் காலடியில் விழுந்து வணங்கியதாக எழுதப்பட்டுள்ளத்து. இத்தகைய  கல்வெட்டு வாசகத்தை இந்தியாவிலோ வேறு எங்கோ காண முடியாது.

 

தாய்லாந்தில்

தர்மராஜ (1361) என்ற மன்னன் வேத சாஸ்திர நூல்களிலும் வான சாஸ்திரத்திலும் வல்லவன் என்று ஒரு கல்வெட்டு விளம்பும். தர்மராஜ அசோக (1510) என்ற மன்னன் இந்து மதத்தையும் புத்தமததையும் ஒரு சேர ஆதரித்ததாக மற்றொரு கல்வெட்டு ;போற்றும். ஆக திருமாறன் என்னும் பாண்டிய மன்னன் வியட்நாமில் (சம்பா தேசம்) ஆளத் துவங்கியதிலிருந்து 1600-களில் முஸ்லீம் ஆக்ரமிப்பாளர்கள் வரும் வரை 1500 ஆண்டுகளுக்கு தென் கிழக்காஸிய நாடுகளில் இந்து மதம் கொடி பறந்தது என்பதைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன.

 

உலகிலேயே மிகப் பெரிய முஸ்லீம் நாடான இந்தொநேஷியாவில் பிராஹ்மணர் ஆதிக்கம் பற்றிய தகவல்கள் எனது நேற்றைய கட்டுரையில் (மூல வர்மன் கல்வெட்டு) உளது.

 

ஸம்ஸ்க்ருத ஆதிக்கத்தைப் பரவ விடாத  இலங்கையிலும் கூட ‘குண்ட மாலா’ என்ற ஸம்ஸ்க்ருத நூல் இயற்றப்பட்டதாக ஆராய்சியாளர் சிலர் உரைப்பர்.

-சுபம்-

காயத்ரீ மந்திரம் ஒன்றே போதும்- மநு அடித்துச் சொல்கிறார்! (Post No.4693)

Date: 2 FEBRUARY 2018

 

Time uploaded in London- 8-44 am

 

Written by London swaminathan

 

Post No. 4693

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

 

மானவ தர்ம சாஸ்திரம்- இரண்டாம் அத்தியாயம் தொடர்ச்சி

 

மநு நீதி நூல்- Part 12

 

SLOKA 175, SECOND CHAPTER CONTINUED………………….

2-58. வலது கையில் ஜலம் எடுத்து ஆசமனம் செய்வதில் 4 வகைகள் உண்டு. உள்ளங்கையில் பிரம்ம தீர்த்தம், காய தீர்த்தம், தேவ தீர்த்தம், பித்ரு தீர்த்தம் விடுவதற்காக 4 பகுதிகள் இருக்கின்றன. பிராமணர் ஆசமனத்துக்கு, முதல் மூன்றையே பயன்படுத்த வேண்டும் (175)

 

2-59. பெரு விரலின் நடுக்கணுவால் விடுவது பிரம்ம தீர்த்தம்; சுண்டு விரலின் அடிக்கணுவால் விடுவது காய தீர்த்தம்; விரல்களின் நுனிப்பகுதியால் விடுதல் தேவ தீர்த்தம்; பெருவிரலுக்கும் சுட்டு விரலுக்கும் இடையிலுள்ள பகுதியால் விடுதல் பித்ரு தீர்த்தம்.

 

2-60. ஆசமனம் எனப்படுவது நீரினால் செய்யும் தூய்மை. மூன்று முறை மந்திரம் சொல்லி நீர் உண்ட பின், இரு முறை வாயைத் துடைக்க வேண்டும். கண், காது, மூக்கு, தோள், மா ர்பு, தலை இவற்றையும் தொட்டுத் துடைப்பதாகும்.

 

2-61. தர்ம விதிகளை அறிந்தவன், சூடு இல்லாத நுரை இல்லாத தெளிந்த நீரால் கிழக்கு அல்லது வடக்கு முகமாகப் பார்த்து, நின்றவாறு ஆசமனம் செய்வது சிறந்தது.

 

2-62. ஆசமன ஜலத்தை உட்கொள்கையில், பிராமணன் மார்பு வரையிலும் க்ஷத்ரியன் கழுத்து வரையிலும், வைஸ்யன் உள்நாக்கு வரையிலும், ஏனையோர் (சூத்திரர்) நாவிலும் உதட்டிலும் ஜலம் படும்படியாக்ச் செய்யவேண்டும்

 

2-63. பூணூல் அல்லது மேலாடை இடது தோளில் இருந்து புறப்பட்டு கால் வரை செல்ல வேண்டும். இது உபவீதம் எனப்படும். இடது தோளில் மாற்றிப் போட்டால் அது பிராசீனா விதி எனப்படும். மாலையாகப் போடுதல் நிவிதம் என்றும் சொல்லப்படும். (180)

2-64. இவ்வாறு மூன்று வர்ணத்தார் அணியும் பூணூல், தோல், தண்டம், மேலாடை ஆகியன சேதம் அடைந்தாலோ, அழுக்கடைந்தாலோ பழையனவற்றை நீரில் போட்டுவிட்டு, புதியது தரிக்க வெண்டும்.

Brahmin boys; picture by P Swaminathan

 

2-65. இந்த மூன்று வருணத்தாரும் முறையே 16, 22, 24 வயதில் முடியிறக்க வேண்டும்

2-66. இத்தகைய சடங்குகள் ஏல்லாம் பெண் குழந்தைகளுக்கும் உண்டு. ஆனால் மந்திரம் இல்லாமல் வெறும் சடங்காக செய்தால் போதும்.

 

2-67. பெண்களுக்கு கல்யாணம்தான் உபநயனம் ; அதாவது பூணூல் போடுவது போல; கணவனுக்குப் பணிவிடை செய்தலே குருகுல வாசம்; இல்லறம் நடத்துவதே சமிதாதானம் ஆகும்.

 

கற்றுணர்ந்து செயல்படல்

 

2-68. இவ்வாறு உபநயனம் முதலியன மூலம் இரண்டாவது பிறப்பு எடுத்து புனித மார்கத்தில் செல்லுதலைக் கூறினேன். இனி அவரவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லுவேன். (185)

 

2-69. குரு தனது சீடனுக்கும், தந்தை தனது மகனுக்கும் தூய்மையாக இருத்தல், ஒழுக்கத்துடன் வாழ்தல், தீ வளர்த்து ஹோமம் செய்தல் ஆகியவற்றைக் கற்பிக்க வேண்டும். காலை, நண்பகல், மாலை ஆகிய சந்தி நேரங்களில் செய்யவேண்டிய வழிபாடுகளையும் சொல்லித் தர வேண்டும்.

 

2-70. வேதம் ஓதும் மாணவன் முதலில் ஆசமனம் செய்துவிட்டுக் கைகளைக் கட்டிக்கொண்டு கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டு புலன் அடக்கத்துடன் வேதம் ஓத வேண்டும்

 

2-71. வேதம் கற்பதற்கு முன்னரும் பின்னரும் குரு வணக்கம் செய்தலும் கைகட்டிக் கொண்டு வேதம் படித்தலும் பிரம்மாஞ்சலி எனப்படும்

 

2-72.குருவின் முன்னால் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வலது கையால் அவரது வலது பாதத்தையும் இடது கையால் இடப் பாதத்தையும் தொட்டு வணங்க வேண்டும் (190)

 

2-73. உபதேசிக்கும் குருவும் சோம்பலில்லாமல் மாணவர்களுக்கு ‘’துவங்குக’’ என்றும் ‘’நிறுத்துக’’ என்றும் கட்டளை இட வேண்டும்

 

பிரணவ மந்திரத்தின் பெருமை

2-74. வேதம் கற்கும்போது துவக்கத்தில் ஓம் என்னும் பிரணவ மந்திரம் சொல்லித் துவங்க வேண்டும்; இதே போல முடிக்கையிலும் ஓம் சொல்ல வேண்டும்; துவங்கும் போது ஓம் சொல்லாவிடில் வேதம் மனதில் பதியாது; இறுதியில் ஓம் சொல்லி முடிக்காவிடில் கற்ற வேதம் நினைவிற் நிற்காது.

 

2-75..பிரணவ (ஓம்) மந்திரத்தை உச்சரிக்கும் முன் தர்ப்பையைப் பரப்பி, கிழக்கு நோக்கி அமர்ந்து மூன்று முறை பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்தல் வேண்டும்; பின்னரே பாடம் கற்கலாம்.

 

2-76. பிரம்மா, மூன்று வேத சாரங்களான அகார, உகார, மகார, சப்தங்களினால் பிரணவத்தை உண்டாக்கினார். அவரே பூர், புவர், சுவர் ஆகிய புனித மந்திரங்களையும் உண்டாக்கினார்.

 

2-77. மேலும் ‘’தத்’’ என்ற துவக்கத்தை உடைய மூன்று அடி காயத்ரியையும் மூன்று வேதங்களில் இருந்தே உண்டாக்கினார். (195)

2-78. இந்த பிரணவத்தையும் ‘’பூர் புவர் சுவர்’’ மற்றும் காயத்ரியையும் சந்தியா காலங்களில் ஓதும் பிராமணன் மூன்று வேதங்களையும் ஓதிய புண்ணியத்தை அடைகிறான்.

 

2-79. இந்த காயத்ரீ மந்திரத்தை ஊருக்கு வெளியே காடு, மலை, நதி தீரத்தில் தினமும் ஆயிரம் முறை ஜபிப்பவன் ஒரு மாதம் ஜபித்தால் மஹா பாதகத்தில் இருந்து விடுபடுவான். பாம்பு அதன் தோலில் இருந்து எப்படி விடுபடுகிறதோ அது போல பாவங்கள் நீங்கும்.

 

2-80. இந்த ஜபம்- உபநயனம் ஆகிய இல்லாத மூன்று வருணத்தாரும் பெரியோர்களினால் நிந்திக்கப்படுவார்கள்

 

 

2-81. காயத்ரீயை மோட்சத்துக்கான வழியாகச் சொல்லுகிறார்கள்.

 

2-82. எவன் மூன்று வருடத்துக்குச் சோம்பல் இல்லாமல், தினமும் இடைவிடாது காயத்ரீயை ஜபிக்கிறானோ, அவன் வாயுவைப் போல ஆகாயத்தில் , தன் இஷ்டப்படி உருவம் எடுத்து  சஞ்சரிக்கிறான். இறைவனுடன் ஒன்றிவிடுகிறான் (200)

2-83. பிரணவம் பரப்பிரம்மம் ஆகவும், பிராணாயாமம், சாந்திராயனம் முதலியவற்றைக் காட்டிலும் மேலானதாகவும் சொல்லப்படுகிறது; காயத்ரீயைச் ஜபிப் பவனுக்குப் பாபம் இல்லை. காயத்ரிக்கு மேலான மந்திரம் இல்லை. அவன் சத்தியத்தையே சொல்லுவதால் இதைச் செய்பவனுக்கு மௌன விரதம் தேவை இல்லை.

 

2-84. வேதத்தில் உள்ள யாக யக்ஞாதி கருமங்கள் அழியக்கூடிய பலத்தையே தரும்; ஆனால் பிரணவம், பரமாத்ம ஸ்வரூபத்தைக் காட்டி மோட்சத்தைக் கொடுக்கிறபடியால், அதற்கு அழிவற்றது (அக்ஷரம் = அழியாதது)  என்றும் பிரம்மனால் (by Bahma) சொல்லப்பட்டிருக்கிறது

 

2-85. ஒரு பிராமணன் ‘’ஓம்’’ உடன் காயத்ரீயைச் சொன்னால் இந்த ஜப யக்ஞமாவது அமாவாசை, பௌர்ணமியில் செய்யும் யாகங்களைவிட பத்து படங்கு பலன் தரக்கூடியது. அதை யார் காதிலும் விழாமல் ரஹசியமாகச்  செய்தால் நூறு மடங்கு பலன் கிடைக்கும். மனதில் அதன் பொருளை அறிந்து சொன்னால் ஆயிரம் மடங்கு பலன் பெறுவர்.(203)

 

2-86. பஞ்ச மஹா யக்ஞங்களில் பிரம்ம யக்ஞம் ஒன்றைத்தவிர மற்ற நான்கும் காயத்ரீயை விட மதிப்புக் குறைந்தவையே. காயத்ரீயின் மஹிமையில் பதினாறில் ஒரு பங்கு கூட அவைகளுக்கு இல்லை.

 

2-87. காயத்ரீ ஜபத்தால் பிராஹ்மணன் நிச்சயமாக மோட்சத்தை அடைகிறான். அவன் வேறு எதையும் செய்தாலும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. அந்தணர் என்போர் அறவோர்; மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் (குறள் வரிகள்); அவன் எல்லோருடைய நண்பன் ஆகிறான்.

 

2-88. தேரை ஓட்டும் சாரதி குதிரைகளை கடிவாளம் போட்டு அடக்குவது போல, அறிவுடையார்,  மனம் என்னும் குதிரைகளை அடக்க வேண்டும். புலன் இன்பங்களை நாடி ஓடும் மனது, கட்டுக்கடங்காத குதிரைகளுக்கு உவமை.(206)

 

எனது கருத்து:-

 

பூணூல், தண்டம், மேலாடை, குருகுல வாசம், பிக்ஷை  எடுத்தல் முதலியவற்றை மூன்று வருணத்தாருக்கும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத் தக்கது. இப்போது பிராமணர் தவிர மற்ற எல்லோரும் சூத்திரர்கள் என்ற அரசியல் பிரசாரத்தால் மக்கள் குழம்பிக் கிடக்கின்றனர். ஆளும் அரசியல்வாதிகள், வணிகப் பெருமக்கள், விவசாயிகள் முதலியோரும் பூணூல் அணிந்து வேதம் கற்ற காலம் ஒன்று இருந்தது. ஆனால் இதை நடத்திக் கொடுக்கும் பணிக்கு பிராஹ்மணர் தலைமை வகித்தனர்.

 

மேலும் பெண்களுக்கும் மந்திரம் இல்லாமல் எல்லாச் சடங்குகளையும் செய்க என்று மநு கூறுவதிலிருந்து அவர் மிக மிகப் பழங்காலத்தில் வாழ்ந்தவர் என்பது தெரிகிறது. ஏனெனில் கதைகளில் கூட மூன்று வருணத்தார் இவற்றைச் செய்ததாகப் படிப்பதில்லை. ஆகவே அவர் ஸரஸ்வதி நதி பாய்ந்த காலத்தில் இதை எழுதினார் என்பது தெளிவாகிறது. பிற்காலத்தில் இடைச் செருகல்கள், குறிப்பாக சூத்திரர்களுக்கு எதிரான விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

 

தற்காலத்தில் வேதம் படிப்பதையும், காயத்ரீ சொல்லுவதையும் எல்லோருக்கும் பொதுவாக்கினார் சத்ய சாய் பாபா போன்ற மஹான்கள். இது ஜனகர் காலத்திலும் அவருக்கு முந்தியும் இருந்ததை நாம் உபநிஷத்து மூலம் அறிகிறோம். அப்பொழுது கார்க்கி போன்ற பெண்கள் பெரிய சபைகளில் வாதம் செய்ததைப் பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் பார்க்கிறோம். ஆகவே பெண்களும் , மற்ற ஜாதியினரும் வேதம் அறிந்தவர்களாக இருந்த காலம் ஒன்று இருந்தது.

 

 

‘’ஓம்’’ என்னும் பிரணவ மந்திரத்தையும், காயத்ரீ மந்திரத்தையும் மிக உச்சாணிக் கொம்பில் வைக்கிறார் மநு. பிராஹ்மணர்கள், காயத்ரீ மந்திரத்தைப் பிடித்துக் கொண்டால் போதும்,  வேறு யாக யக்ஞங்கள் இல்லாவிட்டாலும் ஒன்றும் தவறில்லை என்று அடித்துக் கூறுகிறார் மநு.

 

மேலும், மாநசீகமாகச் செய்யும் (மனதுக்குள்) காயத்ரீக்கு ஆயிரம் மடங்கு பலன் என்று மநு செப்புவதும் குறிப்பிடத்தக்கது.

 

 

குருவுக்கு எப்படி வணக்கம் செலுத்த வேண்டும் என்று மநு கூறுவதும், குருவானவர் இப்போது ‘சொல்’, இப்போது ‘நிறுத்து’ என்று சொல்ல வேண்டும் என்று மநு கட்டளையிடுவது நோக்கற்பாலது. ஆசிரியர் என்பவர், மாணவர்களை வகுப்பறையில் உட்கார வைத்துவிட்டு மற்ற அலுவல்களைச் செய்ய முடியாது; முழுக் கவனமும் மாணவர் மீது இருக்க வேண்டும் என்பதும் பெறப்படுகிறது.

மநு  தனது நூல் முழுதும்— துவக்கம் முதல், இறுதி வரை — புலன் அடக்கத்தையும் ஸத்தியத்தையும் வலியுறுத்துவதை நன்கு கவனிக்கவும். இவை இரண்டும் இருக்கும் எல்லோரும் பிராஹ்மணர்களே;  வேதம், காயத்ரீ எல்லாம் இதற்குப் பின்னரே. அதனால்தான் வள்ளுவனும் மநு சொன்னதை அப்படியே சொன்னான்—

மறப்பினும் ஒத்துக்கொளல் ஆகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் (134)

 

மநு சொன்ன முதல் 200 ஸ்லோகங்களிலேயே பல அதிசய விஷயங்களைக் கண்டு வருகிறோம்; இன்னும் 2400 ஸ்லோகங்களில் பல அதிசயங்களைக் காண்போம்.

 

-தொடரும்……………………….

 

பெண்கள் அழிவது எதனாலே? பிராமணர் அழிவது எதனாலே? (Post No.3546)

3be97-brahmin2

Written by London swaminathan

 

Date: 15 January 2017

 

Time uploaded in London:- 11-55 am

 

Post No.3546

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

அந்தக் காலத்தில் அனுபவ அறிவு மூலம் பழமொழிகளையும் பாடல்களையும் எழுதி எதிர்காலச் சந்ததியினருக்கு விட்டுச் சென்றனர். அவைகளில் சில:-

ஸ்த்ரீ ரூபம் = அழகினால் பெண்களுக்கு ஆபத்து

பிராமண ராஜ சேவா= அரசர்களிடத்தில் பணிபுரிவதால் அந்தணர்களுக்கு ஆபத்து

காவஹ தூரப்ப்ரசாரண = தொலைவில் மேய்வதால் பசுக்களுக்கு ஆபத்து

ஹிரண்ய லோபலிப்சா = பேராசையினால் தங்கத்துக்கு அழிவு

 

 

சில எடுத்துக்காட்டுகள்:

 

உலகப் பேரழகி சித்தூர் ராணி பத்மினியால் அவள் மீது ஆசைகொண்ட அலாவுதீன் கில்ஜி ரஜபுத்ர ராஜ்யத்தை அழித்தான்.

பிராமணர்களுக்கும் நவநந்தர்களுக்கும் மோதல் வலுத்து, சாணக்கியனை நந்த வம்சம் அவமானப்படுத்தியது. இறுதியில் நந்த வம்சத்தை வேருடன் கலைந்தார் சாணக்கியர்.

பசுக்கள் வேறு நிலத்தில் மேய்வதால் கிராமங்களில் கோஷ்டி மோதல் ஏற்படுகிறது. அல்லது புலி சிங்கம் முதலிய மிருகங்களால் கொல்லப்படுகிறது.

தங்கத்தின் (செல்வத்தின்) மீது ஆசை கொண்டு சிறைக் கம்பிகளை எண்ணியோர் உலகம் முழுதும் உண்டு

 

இது போன்ற ஏராளமான எடுத்துக் காட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

 

ஸ்த்ரீ விநஸ்யதி ரூபேண ப்ராஹ்மணோ ராஜசேவயா

காவோ தூரப்ரசாரேண ஹிரண்யம் லோபலிப்சயா

–சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 153/19

xxx

2feaa-beauty2blong2bhair2bbaack

கருட புராணம் (115-7) இதைக் கொஞ்சம் மாற்றிச் சொல்லும்:

 

ஸ்த்ரியோ நஸ்யந்தி ரூபேண தபஹ க்ரோதேன நஸ்யதி

காவோ தூரப்ரசாரேண க்ஷுத்ரான்னேன த்விஜோத்தமாஹா

பொருள்:-

ரூபேண ஸ்த்ரி = அழகினால் பெண்களுக்கு ஆபத்து

 

க்ரோதேன தபஹ = கோபத்தினால் தவத்துக்கு அழிவு (விஸ்வாமித்ரரும் துர்வாசரும்  சிறந்த எடுத்துக்காட்டுகள்)

 

க்ஷுத்ரான்னேன திவிஜோத்தமாஹா= ஆரோக்கியமற்ற, சுத்தமில்லாத உணவைச் சாப்பிடுவதால் அந்தணர்களுக்கு ஆபத்து.

காவஹ தூரப்ப்ரசாரண = தொலைவில் மேய்வதால் பசுக்களுக்கு ஆபத்து

xxx

 

பிராமணர்கள் பற்றி மனு தர்ம சாஸ்திரம் சொல்வதும் முக்கியமானது:-

 

அனப்யாஸேன வேதானாமாசரஸ்ய ச வர்ஜனாத்

ஆலஸ்யாதன்னதோஷாச்ச ம்ருத்யுர் விப்ராஞ்சிதாம்சதி

மனு 5-4

 

 

பொருள்:-

வேத அனப்யாசேன = வேதங்களைக் கற்காததாலும்

ஆசாரவர்ஜன = ஆசார விதிகளைப் பின்பற்றாததாலும்

ஆலஸ்ய = சோம்பேறித்தனத்தாலும்

அன்னதோஷ = சாப்பிடக்கூடாத உணவைச் சாப்பிடுவதாலும்

 

பிராமணர்களுக்கு விரைவில் மரணம் சம்பவிக்கிறது.

 

எல்லோரும் விதி முறைகளைப் பின்பற்றி நூறாண்டுக்காலம் வாழ்க! நோய் நொடி இல்லாமல் வாழ்க!!

 

–subham–

 

பிராமணர்களில் குருடன் யார்? (Post No.2947)

brahmin4

Written by London swaminathan

Date: 6 July 2016

Post No. 2947

Time uploaded in London :– 14-41

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

அந்தணர்களாகப் பிறந்து சாஸ்திர அறிவில்லாதவனை, கண்ணிருந்தும் குருடன் என்று கருதுவர் சான்றோர். இதை அழகாகச் சொல்லும் ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம்:–

 

 

ஸ்ருதிஸ்ம்ருதீ து விப்ராணாம் சக்ஷுஷீ த்வே வினிர்மிதே

கானஸ்தத்ரைகயாஹீனோ த்வாப்யாம் அந்த: ப்ரகீர்தித:

 

அந்தணர்களின் இரண்டு கண்கள் வேதமும் தர்ம சாஸ்திரங்களும் (சுருதி, ஸ்ம்ருதி) ஆகும்.

 

இதில் ஒன்று தெரியாதவன் ஒற்றைக் கண்ணுடையோன்.

இரண்டும் தெரியாதவன் குருடன் என்று அறியப்படும்.

 

திருவள்ளுவர் இதையே வேறுவிதமாகச்   சொல்லுவார்

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லாதவர் (திருக்குறள் 393)

 

நல்ல நூல்களைக் கற்று, ஞானத்தைப் பெற்றவர்களையே கண்கள் உடையவர் என்று சொல்லுவார்கள்; கல்வி அறிவு பெறாதவர்களை, முகத்தில் இரண்டு புண்களை உடையவர் என்று இகழ்வார்கள்.

brahmin3

xxxxx

 

 

கர்ம சண்டாளர்கள் யார்?

 

பிறப்பினால் சண்டாளர்கள் யார் என்பதை நாம் அறிவோம்.

தொழில் ரீதியில் , தாங்கள் செய்யும் செயல்களால், சண்டாளர் நிலைக்குத் தாழ்பவர் யார் என்று ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம் விளக்குகிறது:–

 

தூஷகஸ்ச க்ரியாசூன்யோ நிகஷ்டோ தீர்ககோபன:

சத்வார கர்ம சண்டாலா ஜாதிசண்டால உத்தம:

 

பிறரைக் காரணமில்லாமல் திட்டுபவன் (பொறாமை காரணமாகவோ,வெறுப்பு காரணமாகவோ)

 

சாத்திரப்படி விதிக்கப்பட்ட வழிபாடுகளை விட்டவன்

 

பேராசைக்காரன்

 

நீண்ட காலத்துக்கு கோபத்தைத்  தக்கவைப்பவன்

 

ஆகிய நால்வரும் செய்ய்யும் தொழிலால்ல் சண்டாளர் நிலைக்குத் தாழ்ந்து விடுவர்.

 

 

///////////////// SUBHAM////////////////////

 

தள்ளி வைக்கப்பட்ட ஜாதிகள் யார் எவர்?

Written by London swaminathan

Research Article No. 1796; 13th  April 2015

Uploaded from London at   9-12

(இந்தக் கட்டுரையை ஏற்கனவே ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளேன்)

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு தமிழ்ப் பார்ப்பனன், சிவ பெருமானுடன் சண்டை போட்டார்: ஏய், சிவா உனக்கு குலம் கோத்திரம் ஏதாவது உண்டா? பிச்சை எடுப்பது தானே உன் தொழில்? என்று ஏசினார்:

சங்கு அறுப்பது எங்கள் குலம்

சங்கரர்க்கு ஏது குலம்

— என்று சொல்லி எள்ளி நகை ஆடினார். சிவ பெருமானுக்கு மஹா கோபம்; நெற்றிக் கண்ணைத் திறந்தார். அப்போதும் அந்த மதுரை ஆசாமி (நக்கீரர்) விடுவதாக இல்லை:–

நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே

–என்று கொக்கரித்தார். உடல் எல்லாம் பற்றி எரிந்தது இவ்வாறு சண்டை போட்ட சங்கப் புலவன் நக்கீரனுக்கு! இதற்குப் பின்னர் அவர் சிவனுடைய தாள் பணிந்து போற்றிப் புகழ் பாடியதை திருவிளையாடல் புராணம் திரைப் படத்தில் கண்டு களித்திருப்பீர்கள்.

(சங்கறுப்பது எங்கள்குலம் சங்கரர்க்கு அங்கு ஏதுகுலம்
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ – சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டு வாழோமினி  — நக்கீரர்;ஆதாரம்—தனிப்பாற்றிரட்டு, ஆண்டு 1897)

நக்கீரன் எனும் பார்ப்பனர் ஒரு பெரும்புலவர். கபிலர் பரணர் என்ற வேறு இரண்டு புகழ்பெற்ற பார்ப்பனர்களுக்குச் சமமாக வைத்து எண்ணப்பட்டவர். அவர் செய்த தொழில் சங்கு அறுத்து வளையல்களை விற்பது ஆகும். புலமை வேறு; தொழில் வேறு.

அது எப்படி பார்ப்பனர்கள் இப்படி வளையல் தொழிலில் இறங்கினர்? குஜராத்தில் ஜேஷ்டிப் பிராமணர்கள் என்பவர்கள் புகழ் பெற்ற மல்யுத்த வீரர்கள். கேரளத்தில் நாடகம் நடிக்கும் (சாக்கைக்கூத்து) பிராமண ஜாதி உண்டு. அவர்களால்தான் புகழ்பெற்ற சம்ஸ்கிருத நாடகங்கள் உலகிற்குக் கிடைத்தன.

இப்படி தனது குலத்தொழிலை செய்யாமல் வேறு தொழில்களைச் செய்யும் மூன்று வருணத்தாரை விராத்யர்கள் என்று மனு சொல்கிறார். பிராமணர்களுக்குக் குலத்தொழில் என்ன என்பதை வள்ளுவரும், சங்கப் புலவர்களும் தெள்ளிதின் புகன்றனர்: “அறுதொழிலோர்” என்று குறளும் சங்க இலக்கியமும் பல இடங்களில் பகரும்:

வேட்டல், வேட்பித்தல் (யாகம்)

கற்றல், கற்பித்தல் ( வேத அத்யயனம்)

கொடுத்தல், வாங்குதல் (தானம்)

இந்த அறுதொழில் போலவே க்ஷத்ரியர்கள், வைஸ்யர்கள் ஆகியோருக்கும் மனு ஸ்மிருதி என்ன என்ன தொழில்கள் என்று சொல்லும். இந்த மூன்று வருணத்தாரும் குறிப்பிட்ட வயதுக்குள் பூணூல் அணிந்து காயத்ரி மந்திரம்( Rig Veda 3-62-10).  சொல்ல வேண்டும். அப்படி பூணூல் அணிந்து காயத்ரி சொல்லாதவர்கள் எல்லாம் தள்ளிப்போனவர்கள் – தள்ளி வைக்கப்பட்டவர்கள் அவர்கள் எல்லோரும் விராத்தியர்கள் (Manu 10-20) என்று மனு நீதி நூல் புகலும்.

வேத காலத்தில் இந்து மத விதிகளைப் பின்பற்றாதவர்களை இப்படி விராத்தியர்கள் என்றனர். இன்று அனுதினமும் முறைப்படி மூன்று முறை காயத்ரி ஜபம் செய்பவர்கள்தான் பிராமணர்கள் என்றால், விரல் விட்டு எண்ணக் கூடிய பிராமணர்களே இருப்பார்கள். பிராமணர்களே இப்படி என்றால், மற்றவர்களைக் கேட்பானேன்!!

தமிழ் நாட்டிலும் சித்தர்கள் என்போர் மஹா மேதாவிகள், தத்துவ வித்தகர்கள்; இந்துமதத்தின் காவலர்கள். ஆயினும் இவர்கள் ஆகம விதிகளைப் பின்பற்றி சடங்குகளைச் செய்யாததால், சைவர்கள் இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. தள்ளியே வைத்தனர். இது போலத்தான் விராத்தியர்களும்.

ஆயினும் விராத்தியர்கள், மனம் திருந்தி மீண்டும் சடங்குகளைச் செய்ய முன்வந்த போது, அவர்களைத் தூய்மையாக்க சுத்திகரிப்பு சடங்கு ஒன்றையும் வேத நூல்கள் இயம்புகின்றன. அதன் பெயர் விராத்யஸ்டோம.

மூன்று வருணத்தாரும் எவ்வளவு காலத்துக்கு பூணூல் போடுவதை ஒத்திப் போடலாம் என்றும் மனு சொல்கிறார்:

பிராமணர் (புரோகிதர்கள்) -16 வயது

க்ஷத்ரியர் (ஆட்சியாளர்கள்)- 22 வயது

வைஸ்யர் (வணிகப் பெருங்குடி) -24 வயது

இது உச்சபட்ச வயது. மூவருணத்தாரும் 7, 9, 11 வயதிலேயே

பூணுல் போட்டுக் கொண்டனர்.

விராத்தியர் பற்றிய குறிப்புகள் வரும் நூல்கள்:

வேதம்  Atharva Veda (15-1-1); VS 30-8, TB; 3-4-5-1

மனு ஸ்ம்ருதி :Manu 2—38 and 39

பிராமணங்கள் Panchavimsa Brahmana (17-1-4)

.

மனு ஸ்மிருதி, ரிக் வேதம், பிராமணங்கள், பல வகை கிருஹ்ய சூத்திரங்களில் இருந்து வேத காலம் பற்றி பல அரிய பெரிய தகவல்கள் கிடைக்கின்றன:

1.வேத காலத்தில் ஜனநாயகம் தழைத்தோங்கியது. மக்களில் பலர் குலத்தொழிலை விட்டு விலகிச் சென்ர போதும் அவர்களை, ஒரேயடியாக விலக்கிவிடாமல் கர் வாபஸி (தாய் வீட்டுக்குத் திரும்பி வரும்) சடங்கு வைத்து அவர்கலை ஏற்றுக் கொண்டனர்.

2.பிராமணர், க்ஷத்ரியர், வைஸ்யர் எல்லோரும் பூணுல் போட்டுக் கொண்டு சந்தியா வந்தனம் செய்து, காயத்ரீ ஜபித்தனர். (ராமாயணத்தில் கூட ராமன் செய்த சடங்குகள் உள்ளன).

3.விராத்தியர்கள் என்போர் தாங்களாகவே ஒரு குழுவை ஏற்படுத்திக் கொண்டு பல இடங்களில் குடியேறினர். அவர்கள் கருப்பு உடை , தலைப் பாகை அணிந்து மாட்டு வண்டிகளில் பாணர், கூத்தர் போல இசைக் கருவிகளுடன் உல்லாசப் பயணம் செய்தனர் – நாடோடி வாழ்க்கை நடத்தினர்.

4.மொத்தம் நாலு வையான விராத்தியர்கள் இருந்ததாக பஞ்சவிம்ச பிராமணம் சொல்லுகிறது

5.அதர்வவேதம் விராத்தியர்கள் பற்றி புதிய சித்திரம் தருகிறது.

பழங்காலத்தில் விராத்தியர்கள் பற்றி எழுதியவர்கள்,  இதிலும் ஆரிய திராவிட இனவெறி வாதத்தைப் புகுத்திப் பார்த்தனர். ஆனால் அவர்கள் வாதம் பலிக்கவில்லை. மனு திட்டவட்டமாகப் பேசியிருப்பதும், விராத்யஸ்டோம என்னும் “கர் வாபஸி” (தாய் மதம் திரும்பும் சடங்கு) இருப்பதும் அவர்கள வாதங்களைத் தூள் தூளாக்கிவிட்டது. அவர்களுக்குச் சார்பாக ஆதாரமே இல்லாமல் கட்டுரை எழுதிய இந்துக்களும் இருந்த இடம் தெரியாமல் போனார்கள்.

சுருக்கமாகச் சொன்னால் விராத்தியர்களும், நம் நாட்டு இந்துக்களே. இப்பொழுதும் கூட இந்து என்ற பெயருடைய கோடிக்கணக்கான பேர் பல சடங்குகளே தெரியாமல் வாழ்கின்றனர். மோரீஸ், பிஜி தீவுகள், கயானா, தென் ஆப்பிரிக்காவில் வாழும் இளம் தலைமுறையினர் ஓரளவே மதம் பற்றி அறிந்துள்ளனர். நாளும் தூரமும் அதிகரிக்க, அதிகரிக்க, மதமும் சடங்குகளும் தளர்துகொண்டே வரும். இந்தத் தாக்கத்தை எல்லா மதங்களிலும் காண முடிகிறது. இப்படி இருப்பவர்களை விராத்தியர் என்று வேதகாலத்தில் அழைத்தனர்.

–சுபம்–

மகாவம்சத்தில் ஜோதிடச் செய்திகள்

soothsayer-1a

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1281; தேதி: 11 செப்டம்பர் 2014

மகாவம்சம் என்றால் என்ன?

இது பாலி மொழியில் எழுதப்பட்ட இலங்கையின் வரலாறு. இலங்கையின் வரலாறு என்பதைவிட இலங்கையில் புத்தமதம் பரவிய வரலாறு என்பது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் இலங்கை என்னும் நாடு இராமாயண காலத்தில் இருந்தே வாழும் நாடு. இந்தியாவின் வங்காளப் பகுதியில் இருந்து நாடுகடத்தப்பட்ட விஜயன் என்னும் மன்னன் இலங்கையில் வந்து இறங்கிய நாள் முதல் மஹாசேனன் (கி.மு. 543 முதல் கி.பி. 361 முடிய) என்ற மன்னனின் ஆட்சி முடியும் வரையுள்ள இலங்கையின் வரலாற்றை இன்னூல் இயம்புகிறது.

காளிதாசன் எழுதிய புகழ்பெற்ற ரகுவம்சம் என்னும் காவியம் சூரியவம்ச அரசர்களின் அருமை பெருமைகளைப் போற்றிப் பாடுகிறது. அதை மனதிற்கொண்டு மஹாவம்சம் என்று பெயரிட்டனர் போலும்.

அக்கால சோதிட, ஆரூட நம்பிக்கைகளைச் சுருக்கித் தருகிறேன்.

சங்க காலத் தமிழரின் ஜோதிட நம்பிக்கைகள், கிளி ஜோதிடம் பற்றி எல்லாம் ஏற்கனவே எழுதிவிட்டேன். மஹாவம்சத்தில் குறிப்பிடப்படும் ஆருடக்காரர்கள் எப்படி அதைச் சொன்னார்கள் என்று எழுதப்படவில்லை. குஷ்டரோகிகளும் குருடர்களும் கூட ஆரூடம் சொன்னதை அது எடுத்துரைக்கிறது. ஒருவேளை உள்ளுணர்வால் (இன் ட்யூஷன்) அல்லது சாமுத்ரிகா லட்சணத்தால் இப்படிச் சொல்லி இருக்கலாம். இந்தியாவில் ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனைப் பார்த்துக்கூட மந்திரி ஆவாய், அரசன் ஆவாய் என்று சொன்ன சம்பவங்கள் உண்டு.

adilabad kili
ஆரூடம் 1

பாண்டு அபயன் பட்டாபிஷேகம் என்பது பத்தாவது அத்தியாயத்தின் பெயர். அவனைக் கொல்ல பல சதிகள் நடந்ததால் ஒளிந்துவாழ வேண்டிய நிலை. அப்போது பண்டுலா என்னும் பணக்கார, வேதம் கற்ற பிராமணன் அவனைச் சந்தித்து நீ தான் பாண்டு அபயனா என்று கேட்கிறார். அவன் ஆம் என்றவுடன் நீ அரசன் ஆகப் போகிறாய், எழுபது ஆண்டுகள் அரசாட்சி புரிவாய். இப்போதே ராஜ தர்மங்களைக் கற்றுக் கொள் என்கிறார். அவனும் அவருடைய மகன் சந்தனும் அவருக்கு அரசாளும் கலையைக் கற்றுத் தருகின்றனர்.

இதில் வேறு சில உண்மைகளையும் உய்த்தறியலாம். 2600 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் ஒரு கிராமத்தில்கூட வேதம் கற்ற பிராமணன் இருந்தான். அவன் பணக்காரன். அவன் முக்காலமும் உணர வல்லவன். அவன் மாற்றானுக்கு பிரதிபலனை எதிர்பார்க்காமல் நன்மை செய்தான். அவனும் அவன் மகனும் போர்க்கலையிலும் ராஜ தந்திரத்திலும் வல்லவர்கள்.
அர்த்தசாஸ்திரம் என்னும் உலகப் புகழ்பெற்ற நூலை எழுதிய சாணக்கியன் என்ற பிராமணன நாம் எல்லோரும் அறிவோம்

மஹாபாரத காலத்தில் துரோணன் என்னும் பிராமணன் தான் பாண்டவ ,கௌரவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார் எனபது நமக்குத் தெரிந்த விஷயமே. இலங்கையில் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் கற்றறிந்த பிரமணன் இருந்தான் என்றால் தமிழ்நாடு என்ன சளைத்ததா?

ஒல்காப்புகழ் தொல்காப்பியனுக்கே, நான்மறை முற்றிய அதங்கோட்டாசான் தான் ‘சர்ட்டிபிகேட்’ கொடுத்தார். அவருக்கு முன்னால் அகத்தியன் என்னும் வேதியன் என்பான் தமிழுக்கு இலக்கணம் வகுத்தான்.

1.தமிழ்த் தாய் பாடலில்……………..
ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தெ – நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான் (பாரதியார் பாடல்)

ஆரூடம் 2

மகாவிகாரை என்னும் 15-ஆவது அத்தியாயத்தில் மன்னனிடம் தேரர் கூறுகிறார்: உன்னுடைய சகோதரன் மகாநாமனுடைய மைந்தன் யத்தாலாயகதீசன் இனிமேல் அரசன் ஆவான். அவன் மகன் கோத அபயன், அவன் மகன் காகவனதீசன், அவன் மகன் அபயன் ஆகியோர் அடுத்தடுத்து அரசன் ஆவர். அபயன் என்பவன் துட்டகாமனி என்னும் பெயருடன் புகழ்பெற்று விளங்குவான் என்பது ஆருடம்.

புண்ய புருஷர்கள், சாது சந்யாசிகள் ஆகியோர், எதிர்காலத்தை உணர்ந்தவர்கள் என்ற நம்பிக்கை இந்தியாவில் உண்டு. மக்கள் அவர்கள் சொல்வதை நம்பினர் என்பதை மஹாவம்ச சரிதம் காட்டுகிறது. இது போன்ற விஷயங்கள் பவிஷ்ய புராணத்திலும் இருக்கிறது.

Congress Yagna

Congress leaders Sonia Gandhi and Rahul Gandhi doing Yagas as instructed by their astrologers. Individually they won the elections, but their party failed miserably!

ஆரூடம் 3

12 அரசர்கள் என்ற 35-ஆவது அத்தியாயத்தில் வசபன் என்ற லம்பகர்ணன் அரசன் ஆவான் என்று ஒரு ஆருடம் இருந்தது. அவனைப் பார்த்த ஒரு குஷ்டரோகியும் கூட இதை அவனிடம் சொல்கிறான். முன்னரே வசபன் என்ற பெயருள்ளவன் அரசன் ஆவான் என்று ஜோதிடர்கள் சொன்னதால் வசபன் பெயர்கொண்ட எல்லா வாலிபர்களியும் தீர்த்துக் கட்டினான் மன்னன். அப்படியும் ஆருடப் படியே ஒரு வசபன் அரசன் ஆனான். உடனே தனது ஆயுட்காலம் பற்றி ஜோதிடரைக் கலந்தாலோசித்தான். அவன் இவனுக்கு 12 வருடமே ஆயுள் என்றவுடன் புத்தமத தேரர்களைச் சந்தித்து ஆயுளை நீட்டிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிகிறான். அதன்படி தான தருமங்களைச் செய்கிறான்.

ஆரூடம் 4

13 அரசர்கள் என்ற 36-ஆவது அத்தியாயத்தில் ஒரு அந்தகன் ஆரூடம் சொன்ன அதிசய சம்பவம் வருகிறது. சங்கதீசன், சங்கபோதி, கோதகாபயன் என்ற மூன்று லம்பகர்ணர்கள் நடந்துவரும் காலடி சப்தத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே ஒரு கண்பார்வையற்ற ஆள், மூன்று மன்னர்களை இந்த மண் தாங்கிநிற்கிறது என்றான். அவர்கள் மூவரும் விஜயகுமரன் என்ற அரசனிடம் சேவகம் செய்து பின்னர் அவனைக் கொன்றுவிடுகின்றனர். சங்கதீசன் என்ற லம்பகர்ணனை மற்ற இருவரும் சேர்ந்து முடி சூட்டுகின்றனர்.

இந்த சம்பவங்கள் அக்காலத்தில் ஜோதிடர்கள் இருந்ததையும் அவர்களை மன்னர்கள் அல்லது எதிர்கால மன்னர்கள் கலந்தாலோசித்தனர் என்பதையும் காட்டுகின்றன.

அடுத்தாற்போல “மகாவம்சத்தில் அற்புதச் செய்திகள்”, “மகாவம்சத்தில் படுகொலைகள்”, “மகாவம்சத்தில் தமிழ் வரலாற்றுச் செய்திகள்” என்ற ஆய்வுக் கட்டுரைகள் வெளிவரும்.

( கட்டுரைக்கு உதவிய மூல நூல்: மகாவம்சம், தமிழாக்கம் எஸ்.சங்கரன், சென்னை, 1962)

இளங்கோ அடிகள் சமணரா? பிராமணரா?

ilango adigal

ஆராய்ச்சிக் கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:— 1199; தேதி 28 ஜூலை 2014.

எல்லோரும் ஏற்றுக் கொண்ட ஒரு விஷயத்தை மறுதலித்து காரசாரமான விவாதத்தைத் தோற்றுவிப்பதோ, இதன் மூலம் பிஎச்.டி பட்டம் பெறுவதோ என் நோக்கம் அல்ல. சிலப்பதிகாரம் என்னும் இளங்கோ அடிகளின் அற்புதமான காவியத்தை சிறு வயது முதலே படித்து ரசிப்பவன் நான். இப்போது திடீரென ஒரு உண்மை புலப்பட்டது. ஏராளமான இடங்களில் பிராமண கதா பாத்திரங்களை நுழைத்தும், அவர்களை வானளாவப் புகழ்வதும் எனக்கு பெரு வியப்பை ஏற்படுத்தியது. அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசை பற்றி அறையலுற்றேன்

எல்லோரும் நம்பும் கொள்கைகள்

1.சிலப்பதிகாரத்தை எழுதியவர் இளங்கோ. அவர் சேரன் செங்குட்டுவனின் சகோதரர். அவர் சமண மதத்தைத் தழுவினார்.
2.சிலப்பதிகாரம் இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த காவியம்.

நான் இதை மறுப்பதற்கான காரணங்கள்:
1.இளங்கோ என்பவர் இதனுடைய கருப்பொருளைக் கொடுத்திருக்கலாம். ஆயினும் காவியம் எழுந்தது இரண்டாம் நூற்றாண்டில் அல்ல. நிகழ்ச்சி நடந்தது இரண்டாம் நூற்றாண்டில்தான் என்பது மறுக்க முடியாத விஷயம். ஆனால் மொழி நடையும் காவியத்தில் காணப்படும் விஷயங்களும் சங்க காலத்துக்கு மிகவும் பிற்பட்டது. ‘அதிகாரம்’ — என்னும் சம்ஸ்கிருதச் சொல் வரும் திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் ஆகிய மூன்றும் நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் எழுந்தவை என்பது என் கணிப்பு. வேத, உபநிஷத நூல்களுக்கு மாக்ஸ்முல்லர் கையாண்ட உத்தியை நாம் இதற்கும் பின்பற்றலாம். மொழி மாற்றத்துக்கு அவர் 200 ஆண்டுகள் ஒதுக்கி வேதத்தின் காலத்தை கி.மு 1200 க்கு முந்தியது என்று சொன்னார்.

2. சிலப்பதிகாரம் இந்துமதக் கலைக் களஞ்சியம். ஒரு வேளை நாளைக்கே சம்ஸ்கிருதத்தில் உள்ள எல்லா நூல்களும் மறைந்து போனாலும், திருக்குறளும், சிலப்பதிகாரமும் இந்து மதத்தைக் காப்பாற்றும் அளவுக்கு அவற்றில் விஷயங்கள் உள்ளன.

3. சிலப்பதிகாரம் 95% இந்துமதமும், 4% சமண மதமும் 1% புத்த மதமும் உள்ள காவியம். இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் பிராமண ஆதிக்கம் மேலோங்கி இருப்பதாகும். காவியத்துக்குள் எங்குமே இளங்கோவின் சமயம் எது என்பது பிரஸ்தாபிக்கப் படவில்லை. சில உரை அசிரியர்கள் செவிவழிச் செய்தியை எழுதியதில் இப்படி ஒரு விஷயம் வந்தது. உரைகாரர்கள் சொன்ன எல்லாவற்றையும் எல்லோரும் ஏற்பதில்லை. ஆகையால் ஒதுக்கும் உரிமை எமக்குளது.

4.சமண மதத்தினரும் புத்த மதத்தினரும் தெய்வ நம்பிக்கை உடையவர்கள் அல்ல. அவற்றைத் தோற்றுவித்தவர்கள் தெய்வங்களைக் கும்பிடு என்றோ, வேதங்களை ஆதரி என்றோ எழுத மாட்டார்கள். ஆனால் இளங்கோவோ வரந்தரு காதையில் தன் கருத்துக்களை முன் வைக்கையில் தெய்வத்தைக் கும்பிடுங்கள் என்கிறார். (காண்க எனது சிலப்பதிகாரப் பொன்மொழிகள்). யாக யக்ஞங்களைப் போற்றுகிறார்.

5. சமண நாமாவளி, புத்த விஹாரம், சமணர் பள்ளிகளை இளங்கோ விதந்து ஓதி இருப்பதை மறுக்க முடியாது. இது அக்காலத்தில் பூம்புகாரில் நிலவிய உண்மை நிலையை உணர்த்த எழுதி இருக்கலாம். காவியத்தில் வரும் கவுந்தி அடிகள் என்ற சமணப் பெண் துறவி உண்மையிலேயே கோவலன், கண்ணகிக்கு உதவி செய்ததாலும் இப்படி எழுதி இருக்கலாம்.கதைப் போக்கை மாற்ற யாருக்கும் உரிமை இல்லையே!!

6. இனி இளங்கோ அடிகள் நுழைத்த பத்துப் பதினைந்து பிராமண கதா பாத்திரங்களையும் மதுரையை எரிக்கும்போது பிராமண ஜாதியினரை மட்டும் எரிக்காதே என்று அக்னி தேவனுக்கு கண்ணகி உத்தரவு போட்டதையும், இமயமலைக்குப் போனவுடன் செங்குட்டுவன், பிராமணர்களுடைய யாகங்களுக்கு எந்த ஊறும் செய்யக்கூடாது என்று படைகளுக்கு உத்தரவு போட்டதையும் ஒவ்வொன்றாகக் காண்போம். இவர் மட்டும் சமணராக இருந்திருந்தால் பிராமண என்னும் இடத்தில் எல்லாம் ஸ்ரமண (சமண) என்று நுழைத்திருப்பார்.

kannagi

7. சிலப்பதிகாரத்தில் வரும் பிராமணர்கள்:
1)மா முதுபார்ப்பான் மறைவழி காட்டிட கண்ணகி கல்யாணம்
2)தெய்வ மால்வரைத் திருமுனி அருள (அகத்தியர், பிராமணர்)
3)தூய மறையோன் பாசண்டச் சாத்தன்
4)தேவந்தி என்னும் பார்ப்பனி
5)வழிகாட்டும் மாமுது மறையோன் (காடுகாண் காதை)
6)கோசிகன் (கௌசிகன்) தூது
7)நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை மாமறை முதல்வன் மாடலன்
8) வளைந்த யாக்கை மறையோன் தன்னை- யானையிடமிந்து கோவலன் காப்பாற்றிய பிராமணன்
9) கீரிப்பிள்ளை- பார்ப்பனி கதை/ கோவலன் சம்ஸ்கிருதக் கடிதத்தைப் படித்து உதவி
10) பார்ப்பன கோலத்தில் அக்னி பகவான்
11)பிராமணர்களை எரிக்காதே: கண்ணகி உத்தரவு
12)மறை நாஓசை அல்லது மணி நா ஓசை கேளா பாண்டியன்
13)பார்ப்பன கீரந்தை மனைவிக்கு பொற்கைப் பாண்டியன் உதவி
14)வலவைப் பார்ர்பான் பராசரன் வைத்த போட்டி
15)வார்த்திகன்/கார்த்திகை/தட்சிணாமூர்த்தி கதை
16)மாடனுக்கு துலாபாரம்: எடைக்கு எடை தங்கம்!!!
17)வடதிசை மருங்கின் மறைகாத்து ஓம்புநர்…போற்றிக்காமின்
18)சாக்கையர் (பிராமண நடனக் குழு) நடனம்
19)மாடலன் சொற்படி மாபெரும் வேள்வி
பிராமணர்களின் புகழும் சோழ நாட்டின் புகழும் சிலப்பதிகார காவியத்தில் தூக்கலாக இருகிறது. இளங்கோ பெயரில் எழுதியது சோழிய பிராமணனா?

((கட்டுரையின் இரண்டாம் பகுதியில் மேற்கண்ட 19 விஷயங்களையும் சுருக்கமாக வரைவேன்)

contact swami_48@yahoo.com
தொடர்பு முகவரி: சுவாமி_48 @ யாஹூ.காம்