Post No. 10,825
Date uploaded in London – – 9 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
உலகப் புகழ் பெற்ற கவிஞன் காளிதாசன் 2100 ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் சக்கரவர்த்தியான விக்ரமத்தித்தன் அரசவையில் கவிஞனாக இருந்தான். அவன் எழுதிய ஏழு நூல்களையும் படிக்காதவன் இந்தியனே இல்லை. அவன் பயன்படுத்திய 1500 உவமைகளில் 200 உவமைகளை சங்கத் தமிழ்ப் புலவர்கள் பயன்படுத்தயுள்ளனர். தமிழ் மொழியைக் கிண்டல் அடித்த யாழ் பிரம்மதத்தனுக்கு கபிலர் என்ற பிராமணப் புலவர் சம்ஸ்க்ருதம் மூலமாக தமிழ் சொல்லிக்கொடுத்து அவனுக்காக குறிஞ்சிப் பாட்டு என்னும் நூலை எழுதி கின்னஸ் சாதனை புரிந்தார். 99 மலர்ப் பெயர்களை ஒரே மூச்சில் அடுக்கிப் பாடினார். அதைப் படித்த ரெவரென்ட் ஜி .யு . போப் REV. G U POPE , இது காளிதாசன் நூலின் தாக்கத்தில் பிறந்தது என்று கருத்து தெரிவித்தார்.
காளிதாசன் எழுதிய ரகு வம்ச காவியத்தில் ஒரு புதிர் போட்டார். எல்லா உரைகாரர்களும் அர்த்தம் புரியாமல் தவியாய்த் தவிக்கின்றனர். அதற்கு அதர்வண வேதம், எகிப்தின் 3400 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியத்தில் விடை கிடைத்துள்ளது.
முதலில் புதிர் என்ன என்று பார்ப்போம். பாரதியார் பாட்டிலும், காஞ்சி புராணத்திலும், திருவிளையாடற் புராணத்திலும் தமிழுக்கு அகத்தியர் செய்த சேவையும் சிவ பெருமான் அவரை தமிழ் இலக்கணம் எழுத இமயமலையில் இருந்து அனுப்பிய செய்தியையும் படிக்கிறோம். இது பல பாண்டியர் கால செப்பேடுகளிலும் உள்ள செய்தி. ஆனாலும் அவர்களுக்கு எல்லாம் முன்னதாக ரகு வம்ச காவியத்தின் ஆறாவது அத்தியாயத்தில் காளிதாசன் பாண்டியருக்கும் அகத்தியருக்கும் உள்ள தொடர்பை முதல்தடவையாகப் பாடியுள்ளான் அது மட்டுமல்ல புறநானூற்று மன்னன் முதுகுடுமிப் பெருவழுதி செய்த அஸ்வமேத யாகம் பற்றியும் பாடியுள்ளான்; நமக்கு பெருவழுதியின் அஸ்வம்/ குதிரை பொறி த்த நாணயம் கிடைத்ததால் இது உறுதியாகிறது. அந்தப் பகுதியில் காளிதாசன் போட்ட புதிர் “உரகம் என்னும் பெயரை உடைய நகரத்தை ஆளும் பாண்டியர்” என்று அறிமுகம் செய்வதாகும். அதாவது ஒவ்வொரு மன்னரையம் இந்துமதிக்கு அவளது தோழி சுநந்தை அறிமுகம் செய்யும் சுயம்வர காட்சி அது. உரக URAGA/ SNAKE என்றால் பாம்பு. உரகபுரம் என்று காளிதாசன் சொல்லும் நகரம் எது? அது எப்போது பாண்டியருக்கு தலைநகராக இருந்தது என்பதே புதிர்.
இதோ அந்த ஸ்லோகம்
அத உரகாக் யஸ்ய புரஸ்ய நாதம் தெளவாரிகீ தேவசரூப்யமேத்வ
இத சகோராக்ஷி விலோகயே பூர்வானுசிஷ்டாம் நிஜகாத போஜ்யாம்
–ரகு வம்சம் 6-59
பொருள்
பிறகு வாயிற் காப்பாளரான ஸுனந்தை , தேவதைக்கு ஒப்பான வடிவு உடையவனும் பாம்பின் பெயரை தன் பெயராக உடைய பட்டணத்திற்கு அரசனுமான (பாண்டியனை) வனை அடைந்து, சகோர பக்ஷியின் கண்களைப்ப போன்ற கண்களை உடையவளே! இங்கு பார் ! என்று முதலில் சொல்லப்பட்ட இந்துமதியிடம் சொன்னாள் (போஜ்யாம் – இந்துமதி)
अथोरगाख्यस्य पुरस्य नाथम् दौवारिकी देवसरूपमेत्य|
इतश्चकोराक्षि विलोकयेति पूर्वानुशिष्टाम् निजगाद भोज्याम्॥ ६-५९
|| Raghu vamsa 6-59
atha uraga Akhyasya purasya nAtha.m dauvArikI deva sa rUpam etya itaH cakora akShi vilokaya iti pUrva anushiShTA.m nijagAda bhojyAm
இதில் பாம்பின் பெயரில் உள்ள = உரக புரம் என்பது பற்றி மல்லி நாதர், அருணகிரிநாதர் முதலிய உரைகாரர்கள் நாகப்பட்டிணம் அல்லது கன்யாகுப்ஜ நதிக்கரையில் உள்ள நாகபுரம் என்றெல்லாம் எழுதினார்கள் ஆனால் மதுரை மாநகருக்கே ‘நாகபுரம்’ SNAKE CITY என்ற பெயர் இருப்பதை நம்பி எழுதிய திருவிளையாடற் புராணம் மூலமா அறிகிறோம். இதை லிப்கோ வெளியிட்ட ரகுவம்ச உரையில் வேங்கட ராகவாசாரியார் எழுதியுள்ளார். மதுரைக்கு ஆலவாய் என்றும் பெயர். இது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் உண்டான பெயர் என்பது சங்க காலப் புலவர் மதுரைப் பேரால வாயார் என்ற பெயரிலிருந்து அறியலாம்.
ஆலவாய் என்றால் வட்டமான பாம்பு. ஒரு பாம்பு தன் உடலை வட்டமாக்கி வாலை தன் தலையால் கவ்வும் காட்சி. பாண்டிய மன்னன் ஒருவன் சிவபெருமானிடம் மதுரையின் எல்லையைக் காட்டுங்கள் என்று மன்றாடியபோது சிவ பெருமான் தன் கழுத்தில் இருந்த பாம்பை விட்டு எறிந்தார். அது வட்டவடிவமாக சுழன்று மதுரை எல்லையைக் காட்டியது என்பது திருவிளையாடற் புராணம், ஹாலாஸ்ய மஹாத்ம்யத்தில் உள்ள கதை. ஹாலாஸ்ய என்பது ஆலவாய் ஆகும். ஆலவாய் SNAKE HEAD EATING ITS OWN TAIL என்பது வட்டமான பாம்பு ஆகும் . உரக என்ற சொல் சிலப்பதிகாரம், மணி மேகலை காவியங்களில் இருக்கிறது ஆனந்த விகடன் அகராதியில் பாம்பைக் குறிக்கும் சொற்களில் வருகிறது.
இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் அந்த உரக கிரேக்க மொழிச் சித்திரத்திலும் உள்ளது. ஒரு பாம்பு வட்ட வடிவத்தில் தனது தலையால் தனது வாலையே விழுங்கும் காட்சிக்கு UROBOROS உரோ பரோ என்று பெயர். இதற்கு பல பொருள் கூறப் பட்டாலும் ‘உரக’ சப்தம் இருப்பதைக் காண முடிகிறது இது கிரேக்கத்திற்கும் முன்னால் எகிப்தில் கி.மு 1400 ல் சூரியக் கடவுளைச் சுற்றியும் காணப்படுகிறது . சீனாவில் கிமு. 1200 சித்திரத்திலும் இக்காட்சி உள்ளது.
இவற்றையெல்லாம் தொடர்புபடுத்தும் சொல் எகிப்துக்கும் முந்திய அதர்வண வேதத்திலும் உள்ளது
வியாச மகரிஷியின் காலம் கலியுகத்துக்கு 100 ஆண்டுகள் முந்தியது. சுமார் கிமு 3150. அதாவது 5200 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் வேதங்களை நான்காகப் பிரித்து நான்கு சீடர்களிடம் அவற்றைப் பரப்பும் பணியை ஒப்படைத்தார். அந்த நான்கு வேதங்களில் கடைசி வேதம் அதர்வண வேதம். அதில் ஐந்தாவது காண்டத்தில் ஒரு துதியில் பாம்புகளின் விநோதப் பெயர்கள் வருகின்றன. இவற்றை இனம் தெரியாத பாம்புகள் என்று வெள்ளைக்காரர்கள் உரை எழுதிவிட்டனர் . தற்கால ஆராய்சசி, இவை எல்லாம் சுமேரிய மொழியிலும் இருப்பதைக் காட்டின. தியமத = தைமாத என்ற பாம்பு சம்ஸ்க்ருதம், சுமேரிய, அக்கடியன் மொழிகளில் இருப்பதை முன்னொரு கட்டுரையில் கண்டோம்.
XXX
அதே மந்திரத்தில் வரும் மற்றொரு பாம்பு URUUGULAA உருகுலா.
அதர்வண வேதம் ஐந்தாம் காண்டம் எட்டாவது மந்திரம் ,
“உருகுலாவின் பெண், கரும் பாம்பினின்று தோன்றும் தாஸிப் பாம்பு அசிகின்யா – இந்தப் பெண் பாம்புகளின் விஷமும் சக்தி இழக்கட்டும் “
இதில் உருகுலா என்பதை ‘உரகத்தின் பெண்’ என்று கொள்ளளாம் . மேலும் சுமேரியாவில் உரு குலா என்ற ஒரு இடம் உள்ளது. துருக்கியில் 1982ம் ஆண்டில் கடலுக்கு அடியில் பழங்கால கப்பல் கண் டுபிடிக்கப்பட்ட துறைமுகத்தின் பெயரும் உருபலன். இதில் எல்லாவற்றிலும் உரக / பாம்பு சப்தம் வருகிறது. இந்தியாவில் நாகாலாந்து, நாகபுரி, நாகர்கோவில் என்ற நூற்றுக் கணக்கான பாம்பு ஊர்கள் , இமயம் முதல் குமரி வரை இருக்கின்றன அந்தக் காலத்தில் எகிப்திலும் பாபிலோனியாவிலும் பாம்பு ஊர்கள் இருந்திருக்கும்.
சுமேரிய உருகுலா என்ற ஊர்பெயருக்கு நேரடியாக பாம்பு தொடர்பு கா ட்டப் படாவிடிலும் இதை பாதாள உலக நகர் என்பர். அதற்கு AKKADIAAN அக்கடிய மொழியில் நெர்கள் NERGAL என்று பெயர். அதிலும் நாக அல்லது நரக சப்தம் வருகிறது ஆக உரிகல் , நெரி கல் ஆகியன பாதாள/ நாக லோக தொடர்பைக் காட்டுகின்றன. பாம்பின் வாய்க்குள் அதன் வால் இருக்கும் படம், சித்திரம் மதுரை ஆலவாய் முதல் எகிப்து வரை இருப்பதும், பாண்டியர் தலை நகரை காளிதாசன் உரகபுரம் / பாம்பூர் என்று சொல்லுவதும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன என்பதில் ஐயமில்லை.
XXX SUBHAM XXX
TAGS- உரகபுரம், உரகம் , பாம்பு, சுமேரிய, உருகுலா , கிரேக்க, உரோ பரோ , ஆலவாய், ஹாலாஸ்ய