Compiled BY KATTU KUTTY , CHENNAI
Post No. 10,928
Date uploaded in London – – 3 MAY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
ஞான மொழிகள் – 52
Compiled by Kattukutty
படித்ததில் சிரித்தது!
ஒருநாள் சித்திரகுப்தன் வருத்தமாக பிரம்மனிடம்
சொன்னார் ,
“பெண்கள் தொடர்ந்து ஆண்டு தோறும் வரலட்சுமி
பூஜை செய்து வந்தால், இப்பொழுது இருக்கும்
கணவனே , ஏழு ஜென்மத்துக்கும்
கணவனாக அவர்களுக்கு கிடைப்பான். ஆனால்
அதில் ஒரு சிக்கல் இருக்கிறது”.
என்ன சிக்கல் ..?? பிரம்மா வினவினார் .
“பெண்கள் அதே கணவன்தான் வேண்டும் என்கிறார்கள்.
ஆனால், ஆண்கள் வேறு பெண்தான் வேண்டும் என்கிறார்கள். அதுதான் சிக்கல். இருவரையும்
திருப்தி செய்ய, என்ன செய்ய வேண்டும் ..??”
இடையில் குறுக்கிட்ட நாரதர் சொன்னார் ,
பூமியில் எல்லாம் தெரிந்த ஞானி ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் சாணக்கியர், அவரைப் பாருங்கள், இதற்கு தீர்வு கிடைக்கும் என்றார் .
சித்திரகுப்தர், சாணக்கியரை சென்று பார்த்தார் .
சாணக்கியரும் எவ்வளவோ யோசனை செய்து பார்த்தார் , ஒன்றும் சரிவரவில்லை .
கடைசியாக , அந்த கணவன்களிடமே கேட்டு
விடுவோம் என்று முடிவு செய்து ,
அவர்களிடம் பேசினார்கள்.
கணவன்மார்களில் ஒருவர், ஒரு யோசனை
சொன்னார் . அதைக்கேட்டு சாணக்கியர்
அவரை கட்டிப்பிடித்து வாழ்த்து கூறிவிட்டு
இதை விட சிறந்த தீர்வு வேறு எதுவும்
இருக்க முடியாது என்று கூறிவிட்டு
இதை அந்த பெண்களிடமே கேட்டு விடுங்கள் என்று சொன்னார்.
இந்த தீர்வை, சித்திரகுப்தன் அந்த பெண்களிடம்
கூறினார் . அதற்கு அந்த பெண்கள்
சித்திரகுப்தனை கையெடுத்து கும்பிட்டு விட்டு எங்களுக்கு அடுத்த ஜென்மமே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் .
அப்படி என்னதான் தீர்வு *”அது”*..??
சித்திரகுப்தன் அந்த பெண்களிடம், பிரம்மா நீங்கள் கேட்ட அதே கணவன்தான் வேண்டும் என்ற
கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் , ஆனால்
ஒரு நிபந்தனை, ஏழு ஜென்மத்திற்கும்
*அதே மாமியார்* தான் இருப்பார், அதற்கு உங்களுக்கு சம்மதமா என்றார் ….
” வாழ்க வளமுடன் “
* |
*ஒரு டாக்டரின் புலம்பல்*
கண்ட எண்ணைலயும் பொரிச்ச வடையையும், சமோசவையும் சாப்பிடறானுவ..!
சாக்கடைக்கு பக்கத்தில உள்ள குழாயிலிருந்து எடுத்த தண்ணில முக்கிக் கொடுக்கற பானிபூரியை சாப்பிடறானுவ..!
பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலமே வளர்க்கப்பட்ட காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிடறானுவ..!
டாய்லட் நல்லா கிளீன் பண்ணும்னு நிரூபிக்கப்பட்ட கோக்கையும், பெப்ஸியையும் குடிக்கறானுவ..!
தண்ணியடிக்கறானுவ..!,
சிகரட் குடிக்கறானுவ..!,
குட்கா.., பான்னு புகையிலையைப் போட்டு மெல்றானுவ..!
ரோட்டில புகைக்கு நடுவே ரெண்டு மணிநேரம் காத்தை சுவாசிச்சு வீட்டுக்கு வரானுவ..!
இவ்வளவும் பண்ணிட்டு, உடம்பு சரியிலலைன்னு இங்க வந்து நான் ஒரு மருந்து எடுத்துக்கொடுத்தா,
*” இந்த மருந்தாலே ஏதாவது SIDE EFFECT இருக்கா”*-ன்னு கேக்கறாயங்க. . .
முடியல…..
xxxxx
*tags – டாக்டரின் புலம்பல், அதே கணவன்